ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 28, 2014

வேகா நிலை என்றால் என்ன?

உடலின் தன்மை மறைந்திடும் நிலை கொண்டது.
ஆனால், மறையா அழியா நிலை கொண்டது உயிரின் உணர்வுகள்.

ஆக, உயிருடன் ஒன்றிய உணர்வுகளை இன்று நாம் இந்த உடலிலே எதையெல்லாம் சேர்க்கின்றோமோ அவை அழியா நிலைகள் பெறுகின்றது.

இந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றப்படும் பொழுது சேர்த்திட்ட உணர்வுகள் அடுத்த நிலைகள் அதுவாக விளைகின்றது. ஆனால், இந்த உயிர் என்றுமே எந்த நெருப்பிலுமே சிக்காது, வேகா நிலை பெற்றது.

ஆகவே, எந்தத் தீயசக்திகளிலும் நஞ்சான உணர்வுகளிலும் நாம் சிக்காது வேகா நிலை என்ற நிலையை அடைய வேண்டும்.

ஓர் நஞ்சின் இயக்கத் தொடர்பே ஒரு உயிரணுவின் தோற்றம்

நஞ்சின் தன்மை ஒரு அணுவிற்குள் இணைந்தால் எதனுடன் இணைந்தாலும் அதனின் உணர்வை இயக்கிக் காட்டி இயக்கச் செய்வது இந்த நஞ்சுதான்.

ஒரு நஞ்சின் தாக்குதல் அதிகரிக்கப்படும் பொழுதுதான் நெருப்பு. ஆக, நெருப்பாக உருவாகின்றது.

ஆதியிலே அந்த நெருப்பிலே இந்த நஞ்சினைக் கலந்தால் நஞ்சின் சக்தி இழக்கப்படுகின்றது.

ஆகவே, நஞ்சால் உலகம் உருவானாலும் இயக்கச் சக்தியானாலும்
நஞ்சின் தன்மை அதிகரிக்கப்படும்போது
இயக்கத்தைத் தணித்து நஞ்சின் ஆற்றலாக
இருண்ட நிலைக்கே மாற்றிவிடுகின்றது.

நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் நஞ்சுக்குள் சிக்கி நம் சிந்தனைய மறைத்திடும் நிலை வரும். அதிலிருந்து நாம் மீண்டிட வேண்டும்.

அவ்வாறு மீளவேண்டுமென்றால் வேகா நிலை பெற்ற அருள் மகரிஷிகளுடைய உணர்வுகளை நாம் பருகவேண்டும்.

அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து, அறியாது சேர்ந்த அறியாது சேரும் தீமைகளைக் கரைத்திடல் வேண்டும்.

December 27, 2014

குரு அருளை உங்களிடமிருந்து நான் பெறுகின்றேன் - ஞானகுரு

மெய்ஞானியின் உணர்வை - குருவை நீங்கள் எண்ணும் பொழுது
இந்த உணர்வு குருவாக வந்து
உங்கள் வாழ்க்கையில் எத்தகைய இடையூறு வந்தாலும்
அதைப் பிளக்கும் நிலை உங்களுக்குள் வரவேண்டும்
என்பதற்குத்தான் யாம் உபதேசிக்கின்றோம்.

குருநாதர் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) எவ்வாறு தீமைகளிலிருந்து அந்த இருளைப் போக்கி, உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிச் சென்றாரோ அந்த குரு அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று யாம் பிரார்த்திக்கின்றோம்.

குருநாதர் எனக்குள் எவ்வாறு தெளியச் செய்தாரோ, அதைப் போல உங்கள் வாழ்க்கையில் உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து நீங்கள் மீள்வதற்கும்
தீமைகள் விளைய வைக்கும் நிலைகளிலிருந்து
நீங்களே அறிந்திடும் நிலையாகவும்,
நீங்களே அந்தத் தீமைகளை அகற்றிடும் நிலையாகவும்
நீங்கள் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும் உங்களையறியாது வரும் தீமைகளை நீங்கள் நீக்கிடும் நிலை வலு பெருகும் பொழுது, உங்களில் எமது குருவை (ஈஸ்வராய குருதேவரை) நான் காணமுடியும்.

ஏனென்றால், தீமைய அகற்றிய அந்த உணர்வின் ஆற்றல் உங்களுக்குள் விளைகின்றது.

நமது குருநாதர் எமக்கு அன்று காட்டிய நிலைகளை உங்களிடம் நான் காணும் பொழுது, உங்கள் எண்ணத்தால் தீமைகளை அகற்ற முடிந்தது என்ற எண்ணங்கள் வந்து
தீமைகளை அகற்றிய மகிழ்ச்சியான சொல்களை
நீங்கள் சொல்லும் பொழுது
குரு அருளை நான் அங்கே பெறுகின்றேன்.

மகிழ்ச்சி பொங்கும் உணர்வைக் கொண்டு, என்னையறியாது வந்த தீமைகளை அகற்றினேன் என்ற அந்த உணர்வின் தன்மையை என்று நீங்கள் சொல்கின்றீர்களோ அங்கே குரு அருளை உங்களிடமிருந்து நான் பெறுகின்றேன்.

ஏனென்றால், குருவின் அருள் உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகின்றது. பதிந்த உணர்வுகள் உங்களை அறியாது வந்த தீமைகளை நீக்குகின்றது. உங்களுக்குள் இருக்கும் நல்ல உணர்வை வெளிப்படுத்துகின்றது.

குருநாதர் கண்ட பேரான்ந்த நிலையான ஒளியின் சரீரத்தை இருளைப் போக்கிடும் உணர்வு அவருக்குள் விளைந்தது. அதைப் போன்று, எனக்குள்ளும் அந்தத் தெளிந்திடும் நிலையாக உருவாகும் என்று அவர் அன்று அதைக் காட்டினார்.

அந்த நிலைகளை உங்களிலே காண இந்தத் தெளிந்திடும் நிலையை
அந்த ஆற்றல்கள் நீங்கள் அனைவரும் பெறவேண்டும் என்று
மகரிஷிகள் கண்ட பேருண்மைகளை
யாம் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

December 26, 2014

நாம் எந்த ஆயுள் மெம்பராக இருக்க வேண்டும்?

பிறருக்கு தர்மம் செய்கின்றேன் என்று சொல்வார்கள். அவர்கள் வேதனைகளில் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து அவர்களைக் காப்பாற்றப் போகின்றேன் என்று சொல்வார்கள்.

அந்த வேதனைகளில் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து, அந்த வேதனைகள் எல்லாம் இவருக்குள் விளைந்து யார் மேல் பற்று கொண்டாரோ அவரின் உடலுக்குள் செல்வார். அந்த உடலுக்குள் சென்று அந்த ஆயுள் மெம்பராகிவிடுவார்.

நாம் எந்த ஆயுள் மெம்பராக இருக்க வேண்டும்? துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராகச் சேர்ந்தால் தீமையை நீக்கிவிடும்.

தர்மம் செய்வது தப்பா? என்று கேள்வி கேட்காதீர்கள். 

தர்மம் செய்யவேண்டும். அதே சமயத்தில் தீமை நமக்குள் வராதபடி துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பர்களின் கூட்டத்துடன் இருக்க வேண்டும்.

நீங்கள் காசு கொடுத்து தர்மம் செய்தாலும், அவனுக்கு நல்ல ஒழுக்கம் இல்லையென்றால் அவன் சாப்பிட்டுவிட்டு குறும்புத்தனம் செய்வான். பார்த்தால் நமக்கு வேதனை வரும்.

நல்லது செய்தாலும், அதில் ஒருவர் தவறு செய்யும் பொழுது, “இப்படிச் செய்கின்றார்களே” என்று இரண்டு மடங்கு நாம் வேதனைப்படுவோம்.

அப்பொழுது வேதனையின் உணர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஆயுள் மெம்பராகச் சேர்கின்றார்கள். ஆகவே, எந்தத் தர்மத்தைச் செய்தாலும் வேதனை என்ற உணர்வுகளைச் சுத்தப்படுத்தும் உணர்வுகள் நமக்குள் வரவேண்டும்.

நாம் பரிவு கொண்டு பண்பு கொண்டு
பிறரைக் காக்கும் நிலை இருந்தாலும்
வெறுப்படையும் வேதனைப்படும் உணர்வுகளை எடுத்து
நம்மைப் படுபாதாளத்திற்குத் தள்ளும் நிலையிலிருந்து விடுபடவேண்டும்.

அதற்காகத்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். பதிவு செய்ததை நீங்கள் மீண்டும் எண்ண வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் நினைவைச் செலுத்திப் பழக வேண்டும்.

இவ்வாறு செய்தோம் என்றால் யாரால் நமக்குக் கோபம் வந்ததோ அவர்களுக்குச் சிந்திக்கும் தன்மை வரும்.

நாங்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மை பெறவேண்டும், எங்கள் பார்வை எல்லோருக்கும் நன்மை பயக்க வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் எடுத்துக் கொண்டோம் என்றால்
நமக்குள் வரும் வேதனை, கோபம், ஆத்திரம்
போன்ற உணர்ச்சிகளைத் தடைப்படுத்தி
நோய் வராது நம்மைக் காக்கும்.

December 24, 2014

தீமைகளை நீக்குவதற்குத்தான் நீங்கள் ஆயுள் மெம்பராகச் சேருகின்றீர்கள்

இப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு T.V. ரேடியோ அலைகளை ஒளிபரப்பு செய்கின்றார்கள். எந்த அலைவரிசையில் ஒளிபரப்பு செய்கின்றார்களோ அதே அலைவரிசையை வைத்து நம் வீட்டில் பார்க்கின்றோம்.

அதே மாதிரி நீங்கள் கோபமாக இருக்கக்கூடிய நிலையை எடுத்துக் கொண்டால்,
நாம் அமைதியாக அமர்ந்திருந்தாலும்,
நாம் சோர்வுடன் இருக்கும்பொழுது
இந்தக் கார உணர்ச்சிகள் முன் வந்தவுடன்
நமக்கு இப்படியெல்லாம் இடைஞ்சல் செய்தார்கள் என்ற எண்ணம் வரும்.

நமக்கு இடைஞ்சல் செய்தவன் எங்கோ இருப்பான். அதை எண்ணும்பொழுது நமது பல் கடுகடுப்பாகிவிடும். இது மாதிரி நேரங்களில் நாம் தியானத்தில் அமர்ந்தால் அந்த எண்ணம் தான் வரும். தியானம் வராது.
நான் தியானமிருந்தேன்
எனக்கு வரவே மாட்டேன் என்கிறது என்பீர்கள்.
காரணம் அந்த உணர்வுகள்தான் நம்மை இயக்குகின்றது.

அந்த நேரங்களில் நமக்கு இடைஞ்சல் செய்தவன் எங்கிருந்தாலும், அவன் உணர்வு வந்தவுடன் அவன் உருவம் நமக்கு நிழற்படமாகத் தெரியும்.

T.V ஐ எந்த அலைவரிசையில் வைக்கின்றோமோ அந்தப் படம் தெரியும். அந்த உணர்ச்சியின் தன்மை நமக்குள் எண்ணமாக வரும். இதே மாதிரி அருள்சக்தி உங்களுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

நீங்கள் நினைத்தவுடன் அதை எடுத்து
இந்த உணர்வுகளை மாற்றமுடியும்.
அந்த மாதிரி மாற்றுவதற்குண்டான சக்தி நீங்கள் பெறுவதற்குத்தான்
துருவ நட்சத்திரத்தை உங்களுக்குள் பதிவு செய்வது.

நம் குருநாதர் துருவ நட்சத்திரத்தை எடுத்தார். அவரை எண்ணி எடுக்கும்பொழுது அந்த அருளை நான் பெற முடிகின்றது. அதே சமயத்தில் அவர் குருவழியில் ஒளியின் சரீரமாக இருக்கின்றார். அதன் உணர்வை எடுத்து ஆயுள் மெம்பராகச் சேருகின்றீர்கள்.

தீமைகளை நீக்கக்கூடிய ஆயுள் மெம்பராகச் சேருகின்றீர்களேயொழிய தீமைகளை வளர்த்துக் கொள்ளும் ஆயுள் மெம்பராக அல்ல.

December 23, 2014

கேலி பேசுவதோ கிண்டல் செய்வதோ... விளையாட்டு வினையாகிவிடும்...!

சினேகிதரிடம் அதிகமாகப் பழகி இருப்பார்கள். அவரிடம் நட்பாக இருக்கும் பொழுது வீட்டிலோ அல்லது வேறொரு இடத்திலோ வெறுப்பாக இருந்தது என்றால் இரண்டு பேருக்கும் கடுமையான சண்டை ஆகிவிடும்.

தமாஷாக விளையாடுபவர்கள் கதி, கடைசியில் பெரும் எதிரியாக மாறிவிடுவார்கள்.

விளையாட்டு என்றைக்குமே கூடாது. கிண்டல் பேசுவதோ கேலி பேசுவதோ கூடாது.

ஒரு அர்த்தத்துடன் இந்த மாதிரி நன்றாக இருக்கும் என்று சொன்னோம் என்றால் எதையும் மாற்றி அமைக்கலாம்.

எப்பொழுதுமே நமது தியானவழி அன்பர்கள் கேலி பேசுவதோ, கிண்டல் செய்வதோ, சிரிக்க வைக்கவோ, அந்த வழிக்குப் போகக் கூடாது.

ஏனென்றால் இதே உணர்வுகள் மற்றவர்களிடம் பேசும்பொழுது எதிரியாக மாற்றிவிடும். இதே உணர்வுகள் சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்துவிடும்.

யாராவது வேதனையாக இருப்பார்கள் நாம் அவர்களைக் கிண்டல் செய்வோம். உடனே நம்மிடம் சீறிப் பாய்வார்கள்.
1.இப்படி நம்மை அறியாமலேயே
2.நம் உணர்வுகளை நமக்குள் எதிரியாக மாற்றி,
3.கடும் பகையை உண்டாக்கி சிந்தனையைக் குறையச் செய்து
4.அசுர உணர்வுகளை வளர்க்கச் செய்து,
5.உடலில் கடுமையான நோயாகி உடலைவிட்டுப் போகின்றோம்.

இந்த மாதிரி நேரங்களில் அது வளராது தடுக்க வேண்டும். அதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்வது. எந்த நிமிடத்திலும் இந்த ஆயுதத்தைக் கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் ஆழமாக உபதேசித்து
அந்த துருவ நட்சத்திரத்துடன் இணையச் செய்து
உங்களுக்குள் ஊழ்வினையாக பதிவு செய்வது.

December 22, 2014

விஷம் வலுவானது - விஷத்தைக் கழிக்கக்கூடிய உடல்தான் மனித சரீரம்

கடவுளின் அவதாரத்தில் வராக அவதாரம் மிக முக்கியமானது. புழுவிலிருந்து தான் சுவாசிக்கும் ஒவ்வொரு தீமையிலிருந்தும் விடுபட வேண்டும் என்ற உணர்வைச் சேர்க்கின்றது.

அப்படி சேர்க்கும்பொழுது தீமையை நீக்கும் வலிமையான அணுக்கள் விளைகின்றது. அப்படி விளைந்த பின்தான் பன்றியாக உருவாகின்றது. அதற்குத் தகுந்த உறுப்புகள், அதற்குண்டான நிலைகளை உருவாக்குகின்றது உயிர்.

பன்றியான பின் சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தை இழந்துவிடுகின்றது. சாக்கடைக்குள் மறைந்துள்ள நல்ல மணத்தைத்தான் நுகருகின்றது.

நுகர்ந்தபின் அதன் வாழ்நாளில் நாற்றத்தை இழக்கக்கூடிய சக்தி அதன் உடலில் விளைகின்றது. அந்த உடலை இழந்து உயிர் வெளியில் வந்தவுடன் மனிதனாகப் பிறக்கச்செய்கின்றது.

பன்றியின் சிறுநீரகமும் நம்முடைய சிறுநீரகமும் ஒன்றாக இருக்கின்றது. பன்றியின் இதயமும் நம் இதயமும் ஒன்றாக இருக்கின்றது. சில உறுப்புகள்தான் மாற்றமாக இருக்கின்றது.

பன்றியின் உணர்வுகளுக்கு மனிதனையொத்த நிலைகள் உள்ளது. அதனின் உறுப்புகளுக்கு சில மாற்றங்கள் கொடுத்தார்கள் என்றால் அதை மனிதனுக்குப் பயன்படுத்தலாம்.

இன்று விஞ்ஞானிகள் இதையெல்லாம் கண்டுபிடித்துக் கொண்டு தான் வருகின்றார்கள். பன்றி நல்லணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து பன்றியின் உடலை விட்டு உயிர் வெளியில் வந்தபின், அந்த உணர்வு கொண்டு மனித ஈர்ப்பிற்குக் கொண்டு வருகின்றது.

முதல் காலத்தில் மனிதனாகப் பிறப்பதற்கு முன் அந்த உணர்வுகள் அதற்குகந்த உறுப்புகளாக மாறுகின்றது. அப்படி மனிதனாகும் பொழுது முதல் மனிதனாக மாறுகின்றது.

குரங்கின் மலம்கூட நாறாது. அதுவும் விஷத்தின் தன்மை கொணடது. அதற்கு வலுவின் தன்மை அதிகம். அதற்கு வலு இல்லைன்றால் மேலிருந்து குதித்தால் கை, கால் எலும்பு முறிந்துவிடும்.

அதன் நரம்பு மண்டலங்களில் விஷத்தன்மை இருப்பதால் தாங்கக்கூடிய சக்தி இருக்கின்றது. அதனுடைய உடலில் விஷத்தன்மை இருப்பதால் பாறைகளில் அவைகள் பட்டவுடன் இழுத்துப் பிடித்துக் கொள்கின்றது.

இதே மாதிரித்தான் விஷத்தன்மை கொண்ட கேளை ஆடுகள் வழுவழுப்பான பாறைகளில் மலைகளில் நடந்து செல்வதைப் பார்க்கலாம்.
நாம் காலை வைத்தால் வழுக்கும்.
ஆனால் அவைகள் அப்படியே நிற்கும்.
ஏனென்றால், அதில் உள்ள காந்தப்புலன் அப்படி இருக்கின்றது.

இதே மாதிரி விஷத்தின் தன்மை கொண்ட பல்லி சுவரில் ஒட்டிக்கொண்டு வேகமாக ஓடுகின்றது. பல்லியிலுள்ள விஷத்தின் தன்மையும் சுவரில் உள்ள உணர்வும் இரண்டும் வலுவாக இழுத்துப் பிடித்துக் கொள்கின்றது.
விஷத்தின் ஆற்றல் பாய்ச்சப்படும் பொழுது ஒட்டிக் கொள்கின்றது.
அந்த உணர்வின் தன்மை வலு கொடுக்கின்றது.

விஷம் குறைந்த பூச்சிகள் சுவரில் ஏற முடியாது. விஷத்திற்கு அவ்வளவு வலு உண்டு.

ஆனால், நாம் புழுவிலிருந்து மனிதராக வரும் வரையிலும், விஷத்தைக் கழித்துக் கழித்து இன்று விஷத்தைக் கழித்திடும் உடலைப் பெற்றிருக்கின்றோம்.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

December 21, 2014

தியானத்தின் வலுவால் தீமைகளைச் சலித்து நம் உடலுக்குள் சேராதவண்ணம் வடிகட்ட முடியும்

நாம் தப்பு செய்யாமல் வேதனைப்படுகின்றவர்கள், வெறுப்படைகின்றவர்களைப் பார்க்கின்றோம். அந்த உணர்வுகளை நுகருகின்றோம். நுகர்ந்த உணர்வுகள் நம் அணுக்களில் சேருகின்றது.

பிறகு தலை வலிக்கின்றது. கை வலிக்கின்றது, கால் வலிக்கின்றது, கண் வலிக்கின்றது என்று சொல்ல ஆரம்பித்து விடுகின்றோம்.

எதனால் இந்த வலி வருகின்றது?

பிறர் செய்யும் தவறுகளை நம் ரத்தத்தில் சேர்க்கும் பொழுது
நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கிடைப்பதில்லை.

நமது வாழ்க்கையில் பிறருடைய சிரமமான நிலைகளில் நாம் சிக்கிக் கொண்டால் அதை நாம் நுகர்ந்துதான் ஆக வேண்டும். அந்த உணர்வை நாம் மாற்ற வேண்டும். என்ன இருந்தாலும் அதை நாம் நுகராதபடி மாற்ற வேண்டும்.

உதாரணமாக ஒரு சாக்கடை இருக்கின்றது, அதற்கு அருகில் நமது தியானவழி அன்பர்கள் சென்றால் அந்த சாக்கடை நாற்றம் வராது.

மற்றவர்கள் பார்த்தால், சாக்கடை அருகில் நிற்கின்றான் பார், புத்தி இருக்கின்றதா? என்று சொல்லுவார்கள். அந்தச் சாக்கடை நாற்றம் நமக்குத் தெரியாது.

காரணம், நமது உணர்வுகள் சாக்கடை நாற்றத்தை இழுக்காது.

தென்காசியில் நம் தியானவழி அன்பர் வீட்டில் கழிவறை சுத்தம் செய்தார்கள். பக்கத்து வீட்டுக்காரர்களால் நாற்றத்தைத் தாங்க முடியவில்லை. ஆனால் நம் அன்பர்கள் ஆனந்தமாக இருக்கின்றார்கள்.

அங்கு இருந்தவர்கள் எல்லோரும், என்ன இவர்கள் நாற்றத்தில் நின்று கொண்டிருக்கின்றார்கள்? என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நாற்றமாக இல்லையா என்று அவர்கள் கேட்டார்கள்.

நல்ல மணமாக இருக்கின்றது என்று நம் அன்பர்கள் சொன்னார்கள். நாங்கள் எடுக்கும் தியானம் நாற்றத்தை பக்கத்தில் விடுவதில்லை. நல்ல உணர்வாக எங்களுக்கு வருகின்றது என்று சொன்னார்கள்.

இதெல்லாம் நாம் எடுத்துக்கொண்ட தியானத்தின் வலுவால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இதை வடிகட்டி விடுகின்றது.

அது என்ன என்று உற்றுப்பார்த்தோம் என்றால் நிச்சயம் அறிய முடியும். ஆனால் சாதாரணமாக இருக்கும்பொழுது அது நம்மைத் தாக்காது. தியானவழி அன்பர்கள் நல்ல முழு அருள் சக்தியை எடுத்தார்களென்றால் இது தெரியவே தெரியாது.

ஆனால் விபரீதமான நிலைகள் ஏற்படுகின்றது என்றால்
அந்த உணர்வுகள் நமக்குள் ரிமோட் செய்யும்.
அதை என்னவென்று தெரிய வைக்கும்.

அப்பொழுது சுதாரித்து துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து இந்த உணர்வுகளை மாற்றி அமைக்கக்கூடிய நிலை வர வேண்டும்.

December 19, 2014

நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள் - 10

சாமி செய்வார், சாமியார் செய்வார் ஜோதிடம் செய்யும் என்ற நம்பிக்கையில்தான் இன்னமும் இருக்கின்றோம். யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் இன்னமும் இருக்கின்றோம்

நமது உயிர் நெருப்பாக இருக்கின்றது.
துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை
உயிர் என்ற யாகத்தீயில் போட்டவுடன்
அதனின் உணர்ச்சிகள் நமக்குள் வருகின்றது.

புற யாகத்தில் பல பொருள்களை யாகத்தீயில் போட்டவுடன் புகை வருகின்றது. அதை அடக்குவதற்கு நெய்யை ஊற்றுகின்றோம்.

அதைப் போன்று, வேகமான உணர்வு வந்ததென்றால்,
அந்த நெடியான உணர்வு இயக்கும் பொழுது,
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை இயக்கினால் அந்த நெடியை அடக்கும். அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் மகிழ்ச்சியூட்டும்.

புற யாகத்தில் பல சரக்குகளைப் போடுவதால் ஏற்படும் விஷத்தை அடக்குவதற்குத்தான் யாகத்தீயில் நெய்யை ஊற்றுகின்றார்கள்.
அந்த நெய் விடாமல் இருக்கட்டும்,
உங்களால் உட்காரவே முடியாது.

ஆகவே, உங்களை தீமையான உணர்வுகள் இயக்கிவிடக் கூடாது. அந்தத்ச் சந்தர்ப்பத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்தால் நெடியை அடக்கிவிடும் தன்னிலை அடையலாம்.

இப்படி எந்த நேரத்திலும் நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து, சர்வ தீமைகளைலிருந்தும் விடுபட முடியும். எமது அருளாசிகள். 

December 18, 2014

துருவ நட்சத்திரத்திற்குப் போகின்ற வழியை உங்களுக்குச் சொல்கின்றோம் - ஞானகுரு

நாம் பிறவியில்லா நிலை அடையும் இந்த மனித உடலில் இருக்கின்றோம். அதுதான் கோடிக்கரை.

தனுசுகோடி என்றால்
எல்லா உணர்வையும் ஒன்றாகச் சேர்த்து
உயிர் எப்படி இருக்கின்றதோ
அதுபோன்று ஒளியாக மாற்றிவிடுவது.

கோடிக்கரையில் இருக்கும் நாம் தனுசுகோடி என்ற உணர்வை அந்த துருவ நட்சத்திரத்துடன் இணைத்துப் பழகவேண்டும்.

இராமேஸ்வரத்தில் இராமன் நேரமாகிவிட்டது என்று மணலைக் கூட்டி, சிவலிங்கத்தைப் பூஜிக்கத் தொடங்கிவிட்டான் என்று சாஸ்திரங்களில் சொல்வார்கள்.

அப்படியென்றால் எல்லாவற்றையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று பொருள். நமக்குள் பல தீமைகள் இருந்தாலும்,
எல்லோரும் இந்த அருளுணர்வுகள் பெறவேண்டும்
என்று இணைத்துக் கொண்டே இருக்கவேண்டும்.

அப்படிப் பழகும்பொழுது தனுசுகோடி. எல்லாவற்றையும் ஒளியாக மாற்றி நாம் போகவேண்டும்,

நமது வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்பட்டாலும், நஷ்டங்கள். ஏற்பட்டலும், வேதனை உணர்வுகளைப் பார்த்து அறிய நேர்ந்தாலும் நம் உடலில் சேராதபடி துடைத்துப் பழகவேண்டும்.

அதைத் துடைத்துப் பழகுவதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் எடுத்து உள்ளுக்குள் சேர்த்து தீமையை வலுவிழக்கச் செய்து, நம் அணுக்களில் சிறிது சிறிதாகக் கலக்க வேண்டும்.

நம் இரத்தத்தில் கலக்கும் பொழுது, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அணுக்களில் சிறிது சிறிதாகச் சேர்ந்துவிடுகின்றது.
அப்படிக் கலக்கும் பொழுது
தீமையை மாற்றிக் கொண்டே இருக்கும்.

அதைச் செய்வதற்குத்தான் பிறவியில்லா நிலை அடைந்த துருவ நட்சத்திரத்துடன் சேர்த்து அந்த ஆயுள் மெம்பராகச் சேர்த்திருக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்திற்குப் போகின்ற வழியையும் உங்களுக்குச் சொல்கின்றோம்.
எனக்கு குருநாதர் அந்த வழியைச் சொல்லிக் கொடுத்தார்.
போன்று, உங்களையும் பக்குவப்படுத்தி
இந்த நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.

உங்களை அந்த நிலைக்குக் கொண்டு வந்து ஆயுள் மெம்பராக இணைத்துவிட்டு விடுகின்றோம். இனி ஒரு பிறவிக்கு வராதபடி, உங்களை துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் செல்கின்றோம்.

December 17, 2014

சிறுநீரகத்தைப் (KIDNEY) பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் வழி முறைகளும்

வேதனைப்படுபவர்களின் உணர்வை நுகர்ந்தால் இந்த உடலென்ற இந்திரலோகத்திற்குள் இரத்தத்தில் கலந்துவிடுகின்றது.

கார உணர்வுகளை நுகர்ந்தால் இரத்தக் கொதிப்பின் தன்மை வந்துவிடுகின்றது. வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் வாத நோய் வந்துவிடுகின்றது.

இது மாதிரி ரத்தங்களில் உருவாகும் பொழுது அணுக்களை அது மாற்றுகின்றது. நரகலோகத்திற்கு நாம் போகின்றோம்.

சந்தோசமாக இருக்கும்பொழுது அணுக்களின் தன்மை உடலென்ற இந்திரலோகத்திற்குள் மாறுகின்றது.

இதையெல்லாம் தெரிந்துகொள்வதற்குத்தான் கதைகளாக வடித்து சிவன் என்ன செய்கிறான்? விஷ்ணு என்ன செய்கிறான்? என்று ஒவ்வொரு உணர்வுகளும் உறுப்புகளும் ஒவ்வொரு நிலைகளில் எப்படி இயங்குகின்றது? என்று காரணப் பெயர் வைத்துத் தெளிவாக விளக்குகின்றார்கள்.

இந்த மாதிரி அந்த உணர்வுகள் நமது உடலுகுள் ஆனவுடன் சிறிது சிறிதாக நமது உடல்களில் உடல் உறுப்புகளின் அணுக்களின் தன்மை மாறுகின்றது.

பலவிதமான நோய்கள் தோன்றி பலவிதமன விஷத்தன்மை கொண்ட அணுக்களாக மாறும். இதை அதிகமாக நுகர்ந்து ரத்தத்தைச் சுத்திகரிக்கும் சிறுநீரகத்தில் விஷம் அதிமாகப் பெருகிவிட்டால் அது இயங்காது.

சிறுநீரகம் இயங்கவில்லை என்றால் ரத்தத்தை வடிகட்டும் தன்மை இழந்துவிடும்.  ரத்தம் வடிகட்டப்படவில்லை என்றால் எல்லா இடத்திலும் கெட்ட அணுக்களின் பெருக்கம் அதிகமாகச் சேர்ந்துவிடும்.

இதனால் நம் உடல் பலவீனமாகி உணர்வுகளிலும் மாற்றமாகி இந்த உடலைவிட்டுப் பிரிய நேரும்.

சிறுநீரகம் சுத்திகரிக்கும் தன்மை இழக்கப்படும்போது உயிரின் தன்மை விஷத்தின் தன்மையைத் தான் ஏற்றுக் கொண்டு வலுகொண்டு மாற்றும் தன்மை வருகின்றது.

ஆடு மாடுகள் எல்லாம் விஷத்தினை உடலாக்கி
நல்லவைகளைக் கழிவாக்கிவிடுகின்றது.
மாட்டு கோமியம் நாறுவதில்லை. மனிதனின் சிறுநீரகம் விஷத்தைப் பிரித்துவிடுவதால் மனிதனின் சிறுநீர் நாறுகின்றது.

ஆகவே, சிறுநீரகம் அத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் உறுப்புகளாக நம்மை ஆடாகவோ மாடாகவோ மாற்றிவிடும்.

ஒவ்வொரு உறுப்புகளும் புழுவிலிருந்து மனிதனாக மாறி வரும் வரையிலும் மாறி மாறி தெளிவாக மனிதனாக வந்திருக்கின்றோம்.
அதற்குப்பின் நுகரும் உணர்வுகளில் உள்ள
நஞ்சினை நாம் பிரிக்க வேண்டும்.

நஞ்சினைப் பிரிக்க வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்?

அவ்வாறு நஞ்சினைப் பிரித்து உணர்வினை ஒளியாக்கியவர் அகஸ்தியர். அகஸ்தியர் துருவனாகி, கணவன் மனைவி இருவரும் ஒன்றென இணைந்து துருவ மகரிஷியாக ஆனார்கள்.

அவ்வாறு இணைந்து கொண்டபின், ஒளியின் உணர்வாகப் பெற்றனர். இன்று துருவ நட்சத்திரமாக ஒளியின் சரீரமாக இருக்கின்றனர். அதைத்தான் நமது குருநாதர் நுகரச் செய்தார்.

அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியைத்தான் யாம் உங்களையும் நுகரும்படி செய்கின்றோம்.


அதை நுகர்ந்து சிறுநீரகங்களை உருவாக்கிய அணுக்களை வீரியமடையச் செய்யும் பொழுது, சர்க்கரைச் சத்து, உப்புச் சத்து, விஷத் தன்மை போன்ற நிலைகளை அது பலவீனப்படுத்தும்.

குப்பையில் பல கழிவுகள் இருப்பினும் அதன் சத்தினை மாற்றி செடி கொடி மரங்கள் நல்ல சக்திகளக மாற்றிக் கொள்கின்றதோ அதைப் போல நமக்குள் பல முநதைய தீமைகள் இருப்பினும் இதைப் போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைக்கப்படும் பொழுது விஷத்தன்மைகளைப் பிரித்துவிடும்.

ஒளியின் சுடராக மாற்றிட முடியும். இனி வரும் எத்தகைய தீமைகளையும் ஒளியின் நிலையாக மாற்றும் அருள் சக்தியும் பெறுகின்றோம்.


எமது அருளாசிகள்