ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 31, 2021

அருள் ஒளி கொண்டு அனைத்தையும் அரவணைத்துச் சென்றால் தான் பேரானந்தப் பெரு நிலை பெற முடியும்

 

ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். அதற்கு மத்தியிலே இடைப்பட்ட நிலைகள் வரப்படும் பொழுது ஒருவர் வந்து அவன் மோசமான ஆள்... உதவி செய்யாதீர்கள்...!” என்று நம்மிடம் சொல்கிறார்.

அப்போது நமக்கு வெறுப்பின் தன்மை வருகிறது.

ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணும் போது மற்றவர்கள் செய்ய வேண்டாம் என்று சொன்னால் நாம் எண்ணிய எண்ணங்களுக்கு அது எதிரியாகிறது. நமக்குள்ளே போர் வருகிறது.

சந்தர்ப்பத்தில் இதைப் போன்று தான் நமக்குள் அந்த எதிரியின் தன்மைகள் உருவாகி விடுகிறது. இப்படி உருவாகும் அந்தச் சக்திகள் எப்படிச் செயல்படுகிறது...? என்பதைத்தான் இராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது.

கைகேயி இராமன் மீது வெறுப்பு காட்டுகிறது... ஏனென்றால்
1.தன் பையன் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்று தனக்குள் வளர்த்துக் கொண்ட அந்தச் சக்தி
2.இது தன்னிலே வளர்ந்த உணர்வு.... அந்த அணுக்கள் அதை எண்ணுகின்றது
3.அந்த உணர்வின் தன்மை இங்கே உருவாக்குகின்றது

தசரதனுடைய ஆசையோ இராமன் மீது இருக்கின்றது. அதே சமயத்தில் தனக்குள் இருக்கும் சக்தி (தசரதனுக்கு எண்ணிலடங்காத மனைவி) அதனுடைய பாசத்தால் ஓங்கி வளர்க்கப்படும் பொழுது அதிலிருந்து அவனால் மீள முடியவில்லை. அதாவது தசரதன் அவன் மனைவியின் நிலையை மீற முடியவில்லை.

அன்பு கொண்ட மனைவி கோசலை தியாகம் செய்கிறது...! மூத்த மகன் இராமன்... சீதாராமா ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலைகள் இருக்கின்றான்.

சுவைக்கொப்பத் தான் எண்ணங்கள் (சீதா என்றால் சுவை – இராமன் என்றால் எண்ணம்) என்று அவனுடைய எண்ண அலைகள் இருப்பினும் தூண்டிய உணர்ச்சிகள் தன் சகோதரனாக இலட்சுமணனாக இருக்கின்றான்.

நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு எந்த உணர்வின் தன்மை எண்ணி எடுக்கின்றோமோ அதன் சக்தியாக இயக்குகிறது. ஆனால் அதிலே இந்த விஷத்தின் தன்மை கலந்தால் எதிலே இது கலக்கின்றதோ அந்த வேகத்தின் தன்மை கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.

இது எல்லாம்
1.ஒரு அணுவுக்குள் இருக்கும் நிலையும்... அது கவர்ந்து கொண்ட உணர்வின் சக்தியும்
2.அது எவ்வாறு இயக்குகிறது...? என்று தான் இராமாயணம் காட்டுகிறது.

இராமன் காட்டிற்குள் செல்கின்றான். அங்கே புலியும் இருக்கிறது கரடியும் இருக்கிறது. இருந்தாலும் அதைச் சீராக்கிக் கொண்டு வரும் நிலையாக இராமன் என்ன செய்கிறான்...?

1.இந்த உடலுக்குள் வரும் மற்ற ஆசைகளை விடுத்து அமைதியாகச் செல்கிறான்...
2.எல்லாவற்றையும் இவன் சகோதரனாக ஆக்குகின்றான் என்று காட்டுகிறார்கள்.

அதாவது இந்த மனித வாழ்க்கையில் அந்த அருள் உணர்வின் துணை கொண்டு அனைத்தையும் நம் உடலுக்குள் சகோதரனாக ஆக்க வேண்டும்...!
1.எதையுமே பகைமை ஆக்காது...
2.எதிரியாக உருவாக்காது...
3.இணைந்து வாழச் செய்யும் அரும் பெரும் சக்திகளை நாம் எடுக்க வேண்டும்
4.உடலுக்குள் அதை உருவாக்க வேண்டும் என்று இராமாயணம் காட்டுகிறது.

நடந்ததைச் சொல்வார்கள்… நடக்கப் போவதை அவர்களால் சொல்ல முடியாது…! - ஈஸ்வரபட்டர்

 

பல சாமியார்கள்… பல வழிச் சாமியார்கள்…! இந்த உலகம் முழுவதுமே ஒவ்வொரு கொள்கையுடன் கடவுளின் அருளைப் பெற உள்ளார்கள் “சாமியார்கள்” என்ற பெயரில்.

அந்தச் சாமியார்களின் நிலை எல்லாம் ஆண்டவனை அடைவதற்கு.. ஆண்டவனை அடிபணிவதற்கு… ஆண்டவனைத் தான் அடிபணிந்து வணங்கி விட்டால்… “தானே ஆண்டவன்…” என்ற எண்ணத்தில் வாழ்கிறார்கள்.

பல வழிகளில் அவர்களுக்குப் பொருளும் புகழும் வருகிறது. பல ஜெபங்களைச் சொல்கிறார்கள். பல வழிகளில் மக்களை அடிபணிய வைக்கிறார்கள் ஆண்டவனை வணங்க…!

அவர்கள் நிலை எல்லாம் என்னப்பா…?

இந்த உலகம் முழுவதுமே இந்த நிலை உள்ளதப்பா…! இந்தச் சாமியார்கள் நிலையில் அவர்கள் பூஜிக்கும் பொழுது
1.உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்லை.
2.கடவுளை வணங்குவதையே மக்களின் மனதில் பெரும் கஷ்டத்தை உண்டு பண்ணுகிறார்கள்.

அவர்கள் நிலையில் இருப்பதெல்லாம் கரு வித்தை என்ற ஆவி தான்..! அவர்கள் நினைத்து ஜெபமிருக்கும் பொழுது அந்த ஆவி காட்சி தருகிறது.

அந்த ஆவியின் உருவத்திற்குப் பல பூஜைகளும் பல உணவுகளும் அளித்துவிட்டு இவர்கள் நினைத்த நினைவுகளுக்கு வரும்படி அந்த ஆவிகளை இவர்கள் வசப்படுத்தி இவர்கள் என்ன எண்ணுகின்றார்களோ… என்ன வேண்டுகிறார்களோ… அவைகளை எல்லாம் அந்த ஆவிகள் எடுத்துச் செப்பி விடுகின்றன.

அவற்றை வைத்துத்தான் இவர்கள் தன்னிடம் வருபவர்களுக்கெல்லாம் அவர்கள் நிலையை உணர்த்தி அவர்கள் ரூபமாகப் பொருள் சம்பாதித்து வருகிறார்கள்.

1.நடந்த நிலையைத்தான் இந்த ஆவிகளால் செப்பிட முடிந்திடும்.
2.நடக்க இருப்பவைகளை அறிந்திட முடிந்திடாது அந்த ஆவிகளின் நிலைக்கு.
3.எந்த ஜோசியனும்… எந்தச் சாமியாரும்… நடக்க இருப்பவைகளைச் செப்பிட முடிந்திடாதப்பா…!

நடந்தவைகளை முழுமையாகச் சொல்லிவிடுவார்கள். அது எல்லாம் கரு வித்தை வேலை தான்..! பல கோவில்களில் அருள் வருவதெல்லாம் இந்த ஆவிகளின் நிலை தான். அருள் அல்லப்பா.. மருள் அது.

1.ஆண்டவனின் அருள் வருபவன் தன்னையும் தன் நிலையையும் மறந்து ஆடிட மாட்டான்.
2.பெரும் அமைதியில் அமர்ந்திருப்பான்.
3.நடக்க இருப்பவைகளை நல்ல முறையில் நடத்திட அருளைத் தான் செப்பிடுவான்.

மருள் வந்தவன் வேலை எல்லாம் குட்டிச் சாத்தான் வேலையப்பா. இந்தக் குட்டிச் சாத்தான் வேலையில் தான் இந்த உலகமே உள்ளதப்பா…! நாட்டை ஆள்பவனே வைத்துள்ளான் குட்டிச்சாத்தானை…!

இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே உரைக்கின்றேன்.

குரு காட்டிய அருள் வழியில் வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கியமான நெறிகள்

 

நமது குருவின் (ஈஸ்வரபட்டர்) அனுபவங்களையும் அவர் எனக்குக் கொடுத்த அனுபவங்களையும் தொடர்ந்து இந்த உபதேச வாயிலாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

குருனாதர் எனக்குச் சொன்னது...
1.ஒவ்வொரு உயிரைக் கடவுளாகவும்... அந்த உடலைக் கோவிலாகவும் மதித்து நீ செயல்பட்டாய் என்றால்
2.அப்பொழுது அவரிடமிருந்து வரும் பகைமை உனக்குள் மறைகிறது
3.அவர் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்ற நினைவு வருகிறது.
4.அப்படி எண்ணும் போது உன் உடலான ஆலயத்தையும் பரிசுத்தப்படுத்திக் கொள்கிறாய் என்றார்.

குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படி... நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால் அது எனக்குள் நல்லதாகிறது.

ஆகவே... நமக்குள் உள்ள தீமைகள் போக வேண்டும் என்றால் யார் நமக்குத் தீமை செய்தார்களோ... “அவர்களுக்கு நல்லது செய்யக்கூடிய எண்ணங்கள் வர வேண்டும்...” என்று சொன்னால் அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் வராது.

எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் அவர்களுக்கு வர வேண்டும். என்று சொன்னோம் என்றால் அவர்களைப் பற்றி வெறுப்பான உணர்வுகள் நம் உடலுக்குள் வளர்வதில்லை.

1.ஆனால் அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று சும்மா சொன்னால் அந்தக் கெட்டது தான் நல்லதாகும்.
2.அவர் செய்யக்கூடிய கெட்டதற்கு ஊக்கம் கொடுத்த மாதிரி ஆகும்.

ஆகையினால்... நல்லது செய்யக் கூடிய எண்ணங்கள் அவருக்குள் வர வேண்டும்... எல்லோருக்கும் பண்பும் பரிவும் காட்டக்கூடிய அருள் ஞானம் அவருக்குள் வர வேண்டும் என்று சொன்னால் அந்தக் கெட்டதை வளர விடுவதில்லை. ஆக அதை வெறுமனே சொல்ல முடியாது.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்று
2.நம் உடலில் அது படர வேண்டும் என்று இதைக் கலந்து
3.நம் எண்ணங்களுக்கு நல்ல வலு கொடுக்க வேண்டும்.

அந்த வலுவின் துணை கொண்டு அந்த அருள் உணர்வுகளை மற்றவருக்குப் பாய்ச்ச வேண்டும். இப்படிச் செய்தால் குடும்பத்தில் எத்தகைய சங்கடங்கள் வந்தாலும் மாற்றி விடலாம்.

திடீரென்று எதிர்பாராது விபத்துக்களோ மற்றதுகளோ உற்றுப் பார்த்தால்... “அடப் பாவமே... இப்படி ஆகிவிட்டதே...!” என்று எண்ணக்கூடாது.

உடனே ஈஸ்வரா... என்று சொல்லி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று நமக்குள் இந்த வலுவைக் கூட்ட வேண்டும்.

விபத்தில் ஆன்மா பிரிந்திருந்தால் அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து அவர் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை உந்தித் தள்ளி அங்கே விண்ணுக்குச் செலுத்த வேண்டும்.

உடலில் அடிபட்டிருந்தால் அவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று பூரண குணமாகி அவர்கள் சீக்கிரம் எழுந்து நடக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் இப்படித் தான் நினைக்க வேண்டும்.

பொதுவாக நம் செயல்கள் அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் போகிறது.
1.ஆனால் மேலே சொன்னபடி எண்ணாமல் அவர்களின் வேதனையை எடுத்தால்
2.கிடு கிடு... என்று உடலில் நமக்கு நடுக்கமாகும்.
3.நம் நல்ல குணங்கள் செயல் இழந்து... அவர்கள் அடிபட்ட உணர்வுகள் இரண்யனாகி அதைக் கொல்லும்.

அதனால் தான் அத்தகைய நஞ்சான உணர்வுகளுக்கு இரண்யன் என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் எப்படி வாழ வேண்டும்...? என்று தான் அதை எல்லாம் காவியங்களாகப் படைத்தனர். ஏனென்றால் இது இயற்கை.

அதை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி இப்படிக் கருத்தினைத் தெளிவாக்கிக் கொண்டு வந்தார்கள் ஞானிகள்.

அந்த இரண்யனைப் பிளக்க வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற பயிற்சி கொடுக்கின்றோம். அதை எடுத்து உங்கள் நல்ல குணங்களைக் காத்து மற்றவருக்கும் அதே நல் உணர்வை ஊட்ட முடியும்.

May 30, 2021

ஈசனின் சக்தியைப் பெற வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

சாமியார் ஒருவன்… நானே கடவுள்…! நானே தெய்வம்…! என்கிறான். அவ்விடம் உள்ள கருவின் வேலை வரைக்கும் தான்… அவன் வேலை எல்லாம்…!

ஆண்டவனின் சக்தியை அறிந்திடாமல் “அவனே கடவுள்..” என்கிறான். ஆண்டவன் என்றால் யார் என்றே அவனுக்குத் தெரிந்திடாது. அந்தக் கருவையே ஆண்டவன் என்கிறான்.

பல பூஜைகள் செய்து வருபவர்களின் எண்ணத்தையும் அவர்களின் கடந்த கால நிலையையும் கண்டிடலாம். இதைப் போன்ற நிலையை வைத்துத்தான் பல ஜோசியங்கள் கோவில்களில் உடுக்கை அடித்துச் சாமி கேட்பது எல்லாமே…!

இவ்வாவிகள் அறிந்து வந்து சொல்வது தான் இவை எல்லாம். மை போட்டுக் கேட்கிறார்கள். ஆண்டவனிடம் பூ கேட்கிறார்கள் என்பதெல்லாம் என்னப்பா…? இவ்வாவிகளின் வேலை தான்.

அருளுடன் தெய்வ நம்பிக்கையும் தன் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகள் எல்லாமே இந்நிலைக்கு வருகிறது. இதைப் போல உள்ள ஆவிகள் அனைத்துமே உடலை விட்டுப் பிரிந்தவுடன் மறு ஜென்மம் எடுப்பதில்லை. ஆயிரத்தில் கோடியில் ஒன்று தான் உடனே மறு ஜென்மம் எய்துகிறது.

அவசரத்தினால் எடுக்கும் ஜென்மத்தினால் அங்ககீனமுடன் குறையாகப் பிறப்பது குறைப்பிரசவம் குறையுடன் பிறக்கும் குழந்தைகள் நிலை எல்லாமே இது தான்…!
1.முன் ஜென்மத்தில் விட்ட குறையை
2.ஆவி உலகில் இருந்து அறிந்திட “அவகாசம் இல்லாமல்” வந்து குறையுடன் பிறக்கின்றது.

ஆனால் நல்ல நிலையில் ஆவி உலகில் சுற்றும் மறு ஜென்மம் எடுக்கும் வரை உள்ள ஆவிகள் தன் நிலை உணர்ந்து தன் நிலைக்கு ஏற்ற இடமாகத்தான் பிறக்கும்.

குழந்தை பிறப்பதற்கு முதல் ஆவி உலகில் உள்ள வரை அவரவருக்கு முன் ஜென்மம் தெரியும் என்றேன்.
1.ஆவி உலகில் உள்ள பொழுது எந்த நிலையில் பிறக்கலாம்…? என்று தான் தெரியும்.
2.பிறந்த பின் தன் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும்…? என்பது தெரிந்திடாது.
3.பிறந்த பின் முன் ஜென்மமும் ஆவி உலகமும் அறிந்திட முடியாது. இப்பிறவிக்கு எல்லாமே மறைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் ஈசனின் சக்தியே விளையாடுகிறது.

பிறப்பு இறப்பு ஆவி உலகம் எல்லாம் அறிந்த மனிதனால் அந்த ஈசனின் சக்தியை மட்டும் அறிந்திட முடிவதில்லை. பல கோணங்களில் ஆண்டவன் என்று வணங்குகிறான்.

அந்த ஈசனின் சக்தியை உணர்ந்த மகா தவ முனிவர்களும் இந்த மனிதர்களுக்குப் புகட்டிடவில்லை. அந்தச் சக்தி நிலையைப் பற்றித் தெரிந்திருந்தாலும்
1.இக்கலியில் வந்த மனிதர்கள்
2.அதையும் தன் வழிக்கு உண்ணக் காசாக்கி இருப்பார்கள்.

அதனால் தான் முனிவர்கள் நிலையில் தன்னையே தன் உடலையே அச்சக்தியின் அருளுக்கு அடிபணிய வைத்து அச்சக்தியின் அருள் எப்படி உள்ளது…? எந்த நிலையில் அந்தச் சக்தியின் அருளைப் பெற்று மக்களுக்கு அருளிடலாம் என்று செயல்படுத்தினர். போகரின் நிலை எல்லாம் அப்படித் தான் வந்ததப்பா…!

உன் நிலையில் ஜெபமிருக்கின்றாய். அஜ்ஜெபத்தின் நிலையில் ஈசனின் சக்தியை உன் நிலைக்கு ஈர்த்திடப்பா…!

எப்படி ஈர்ப்பது என்கிறாய்…?

கண்ணில் இல்லையப்பா ஒளி எல்லாம்.
1.இவ்வெண்ணத்தில்… உன் உயிரில்.. புருவத்தின் மேல்…
2.நெற்றியில் இந்நிலையில் தான் ஒளியப்பா…!

கனவில் பார்க்கின்றாய் பல நிலைகளை.. கண்களை மூடிக் கொண்டு…! அந்நிலை எப்படித் தெரிகின்றது…? கடும் இருட்டில் பல பிராணிகள் பூனை எலியைப் பிடிக்கின்றது. எலி பூனையைக் கண்டு தப்பி ஓடுகின்றது. நாய்க்கும் நரிக்கும் பாம்புக்கும் எப்படியப்பா இருட்டில் கண் தெரிகின்றது…?

சூரிய ஒளியில் இருந்துதான் கண் தெரிகிறது… கண் பார்வையினால்… என்று எண்ணுகிறாய்…!

தவ யோக முனிவர்கள் எல்லாம் அவர்கள் அமர்ந்த இடத்திலிருந்தே அனைத்தையும் அறிந்திட்டார்களே…! அது எப்படியப்பா…? ஒவ்வொரு மனிதருக்கும் அவ் ஈசனின் சக்தியில் எல்லா அருளும் உண்டப்பா..!
1.அவரவர்கள் எடுத்து அவர்களின் நிலையை அறிந்திட்டால்
2,கண்ணும் வேண்டாம்… உண்ண உணவும் வேண்டாம்…!
3.அவ் ஈசனின் சக்தியையே தன் உடல் முழுவதும் ஈர்க்கச் செய்திடலாம் புரிந்ததா…?

ஒவ்வொருவரும் அவ் ஈசனின் சக்தியில் இருந்து பெற்றிருப்பதால் அவரவர்கள் வழியிலிருந்தே அருள் புரிகிறார்கள். இந்நிலை தான் கொங்கணவருக்கும் போகருக்கும் அகஸ்தியருக்கும் கோலமாமகரிஷிக்கும் ஐயப்பனுக்கும் இன்னும் பல மகரிஷிகளுக்கும்…!

1.ஆண்டவன் என்றால் இப்பொழுது யார் என்று புரிந்ததா…?
2.பல வழிச் சாமியார்களின் நிலையும் கோவில்களின் நிலையும் புரிகிறதா…?
3.ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் நிலையும் புரிகிறதா..?

இந்தப் பாட நிலையை வைத்து நான் யார்…? நீ யார் என்னும் நிலை புரிந்திருக்கும்.
1.உன்னையே நீ வணங்கு.
2.உன்னுள்ளே ஈசன் உள்ள பொழுது உன்னுள்ளே அவ் ஈசனின் சக்தியை ஈர்த்திடப்பா..!

இந்த நிலையில் அறிந்திடுவாய் எல்லாமே…!

May 29, 2021

வேண்டியவருக்கு ஒரு நியாயமும் வேண்டாதவருக்கு ஒரு நியாயமும் என்று தான் உணர்வுகள் இயக்குகிறது

 

வேண்டாதவரைப் பார்க்கும் பொழுது எதிரி என்ற நிலையில் அவர் செய்வது தப்பு என்று நினைக்கின்றோம்... அடுத்தவரிடத்திலும் அதைத் தான் சொல்வோம்.

அவன் நல்லதையே செய்தாலும் கூட...
1.அவனை எந்தக் குறிக்கோளுடன் நாம் முதலில் பதிவு செய்திருக்கின்றோமோ
2.பார்த்தவுடனே ஊரை “ஏமாற்றுவதற்கு என்னவோ... அதைச் செய்கின்றான்...” என்று சொல்கிறோம்.

அவன் நல்லதைச் செய்வான். அவன் செய்வதை நம் மனது ஏற்றுக் கொள்வதில்லை. அவனைப் பற்றிய தவறான உணர்வுகளையே நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

அதே சமயம் நமக்கு வேண்டியவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தப்பு செய்து விட்டால்... அது எப்படியோ தெரியாமல் நடந்து விட்டது... “அவர் தப்பே செய்ய மாட்டார்...!” என்று தான் நாம் சொல்கிறோம்.

1.இங்கே பாசத்தால் தவறை மறைக்கின்றோம்... தப்பை வளர்க்கின்றோம்
2.அங்கே வெறுப்பால் நியாயத்தையே மறைக்கின்றோம்... ஆனால் தவறை வளர்க்கின்றோம்

இதைப் போன்று நம்மை அறியாது வரக்கூடிய உணர்வுகள் அந்தந்தச் சந்தர்ப்பத்தில் வந்து நமக்குள் இயக்குவதைத் தான் கூனி என்றும் சகுனி என்றும் காவியங்களில் காட்டுகிறார்கள்.

ஒருவர் மீது பற்று இல்லை என்றால் அந்த வெறுப்பின் தன்மை வரும் பொழுது கூனி... பழி தீர்க்கும் உணர்வு கொண்டு அது இணைத்து விடுகின்றது.

இவ்வாறு நமக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் அவர்கள் நல்லது செய்திருந்தாலும் கூட...
1.என்ன பெரிதாகச் செய்து விட்டார்...!
2.ஏமாற்றுவதற்குத் தான் இதைச் செய்கிறார்..! என்ற இந்த உணர்வுகளை வளர்த்துக் கொள்கின்றோம்

இராமாயணத்தில் கூனி என்ன செய்கிறது...?

இராமன் உயர்ந்தவனாக இருந்தாலும் அது பிடிக்காதபடி அவனைப் பகைமையாக ஊட்டுவதற்கு சிற்றன்னையான கைகேயியிடம் அதை உருவாக்குகின்றது.

தசரதன் உன்னுடைய கணவன் தானே... அவனுக்குப் பிறந்த மகன் தானே பரதனும்...! அவனுக்கு ஏன் அந்த அரசில் உரிமை கிடையாது...? என்ற உணர்வை ஊட்டுகிறது.

இராமன் இருந்தால்தான் சாம்ராஜ்யத்தை ஆள முடியும். இங்கிருந்து அவனை அனுப்பி விட்டால் “பரதன் எளிதாக ஆட்சிக்கு வரலாம்...” என்று இந்த ஆசையின் உணர்வுகளைத் தூண்டுகிறது கூனி.

இராமனைப் பிடிக்கவில்லை... அதனால் பகைமையை ஊட்டி அவ்வாறு செயல்படுகிறது. ஏனென்றால்
1.நமக்குள் எதிரியான உணர்வுகள் சந்தர்ப்பத்தில் உடலுக்குள் அணுக்களாக விளைந்து விட்டால் அது எதைச் செய்கிறது..?
2.ஆசையினால் குற்றவாளிகளை எப்படி உருவாக்குகின்றது...? என்ற உணர்வைத்தான் இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.

காவியங்களில் மகரிஷிகளால் காட்டப்பட்ட மூலக் கருத்துக்களை நாம் உணர்ந்து கொண்டால் இந்த வாழ்க்கையில் நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் எளிதில் விடுபட முடியும்.

பகைமைகளை அகற்றி ஒன்றி வாழும் உணர்வை நமக்குள் பெருக்கி உயிருடன் ஒன்றி என்றும் ஏகாந்தமாக வாழும் வழியைத் தான் காவியங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

தென்றலும் ஆண்டவன் தான்… சூறாவளியும் ஆண்டவன் தான்..! - ஈஸ்வரபட்டர்

 

ஆண்டவன் என்பவன் கருணைஸ்வரூபன் மட்டும் தானா…? ஆண்டவன் என்பவன் எங்குள்ளான்…? என்றெல்லாம் சொல்லியுள்ளேன். ஆண்டவனின் நிலை என்ன…?

இயற்கையில் கலந்துள்ள ஒளி… காற்று… தண்ணீர்… இந்நிலையில் கலந்துள்ளவன்தான் ஆண்டவன்… என்று நான் செப்பியுள்ளேன்.

அப்படி இருக்கும் பொழுது ஆண்டவனால் ஏனப்பா “ஒரே நிலையில்” ஒளி பாய்ச்சவும்… மழை பெய்யவும்… காற்று அடிக்கவும் முடியவில்லை…?
1.இடி இடித்து மழை பெய்கிறது… அதி மழையும் பெய்கிறது
2.பெரும் காற்றும் சூறாவளிக் காற்றும் வீசுகிறது
3.குளிர்ந்த ஒளியும் கடும் வெப்பமும் வருகிறது.

ஆண்டவனின் நிலையில் ஏனப்பா இவ்வளவு மாற்றங்கள்…?

கருணைஸ்வரூபா…! என்று ஆண்டவனை என் சிஷ்யன் (ஞானகுரு) பாடுகின்றான். “கருணைஸ்வரூபா…!” என்று பாடும் பொழுது அவன் மனமும் கருணையுடன் சுற்றுகின்றது.

1.கருணையுடன் வேண்டும் பொழுது
2.அந்தக் கருணை நிலை வேண்டுபவர்களின் மனதிலேயே வருகிறது.
3.எண்ணத்திலும் அந்த நிலையே அப்பொழுது சுற்றுகிறது.

அந்நிலையில் இயற்கைத் தன்மையில் கலந்துள்ள ஆண்டவனும் அதை வேண்டுபவர்களுக்கு அந்நிலையில் ஒளி பாய்ச்சி அருள் புரிகின்றான்.

1.அவன் நிலையிலேயே “கருணை நிலை வேண்டினால் தான்…” அந்நிலையே வருகிறது.
2.அந்நிலை இவன் நிலைக்குப் பெற முடிகிறது.

அந்நிலையில் பூஜை செய்வது தான் நீ வணங்கும் முருகனின் மூலமாக அருள் கொடுக்கும் போகரின் நிலை எல்லாம். பழனி ஸ்தலத்தின் நிலையும் அதுவே தான்…!

சில நிலையில் பூகம்பம் வந்து அடங்காத காற்றும் அடங்காத மழையும் அதி உஷ்ணமும் வரும் பொழுது கருணைஸ்வரூபமான ஆண்டவன் ஏனப்பா அந்நிலையை அளிக்கின்றான்…?

பழனி ஸ்தலத்தின் வழியைச் சொல்கிறேன். ஆனால் கல்கத்தா காளியின் நிலை என்ன..? தென்றல் காற்றப்பா போகர் பெற்ற நிலை. பெரும் சுழல் காற்றப்பா கல்கத்தா காளியின் நிலை.

1.போகரும் அந்த ஆண்டவனின் அருளைப் பெற்றுத்தான் முருகனாக அருள் புரிகின்றார்.
2.கல்கத்தா காளியும் ஆண்டவனின் அருளைப் பெற்றுத்தான் பெரும் ஆவேச நிலையில் அருள் புரிகின்றாள்.

கல்கத்தா காளியின் நிலை என்னப்பா…? காளி என்பவள் யாரப்பா…?

இடி மின்னலையும் பூகம்பத்தையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டு பெரும் ஆவேசத்துடன் அடங்காத நிலையில் அமர்ந்துள்ளவள் தான் கல்கத்தா காளியாக அமர்ந்துள்ள கடும் தவம் புரிந்த பெண் ஒருத்தியப்பா அவள்.

அக்காளியின் நிலை ஆவேச நிலையப்பா. அடங்காத ஆவேசமான நிலையப்பா…! ஆணவத்தையும் ஏமாற்றுத் தன்மையையும் எரிக்கும் குணம் உடையவள்.

நல்லோர்க்குக் கருணை புரிவதில் பெரும் நாட்டம் கொண்டவள். தவறும் நிலையைக் கண்டு விட்டால் எரிமலையும் பூகம்பமும் தானப்பா அவள்…!

அவன் தந்த ஒளியை அவனதாக்கி அவனுடன் ஐக்கியமாகுவது தான் மெய் ஒளி பெறும் ஆண்டவனின் சக்தி…!

May 28, 2021

வெளியிலிருக்கும் எதிரிகளைக் காட்டிலும் நமக்குள் உருவாகும் எதிரிகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

 

நாம் தவறே செய்யவில்லை என்றாலும் கூட அடுத்தவர்கள் நம் மீது ஏதாவது குறையாகச் சொல்லி விட்டால் அவர்கள் உணர்வுக்கொப்ப அது ஆழமாகப் பதிந்து விடுகின்றது.

நமக்குள் பதிவாகி விட்டால் “என்னை இப்படிச் சொன்னானே... செய்தானே...!” என்ற இந்த உணர்வுகள் நமக்குள் எதிரியை வளர்த்துக் கொண்டே இருக்கின்றது. அப்பொழுது
1.நம் நல்ல குணங்களுக்கு இரையே கொடுப்பதில்லை... அதை வளர்ப்பதும் இல்லை
2.நம் நல்ல குணங்களை ஒடுக்க நாமே காரணமாகின்றோம்

அந்த நல்லதைக் காப்பதற்காகச் சாதாரண நிலைகளில் கொடுக்கப்பட்டது தான் விநாயகர் தத்துவம். அன்று மெய் ஞானியான அகஸ்தியனால் இது உருவாக்கப்பட்டது.

அவன் தனக்குள் கண்டுணர்ந்ததைத் தன் இன மக்கள் அனைவரும் பெறுவதற்காக இந்த முறையை வகுத்துக் கொடுத்தான்.
1.துருவ நட்சத்திரமாக இருக்கும் அவனின் ஆற்றலை நாம் பருகினோம் என்றால்
2.எத்தகைய தீமைகளையும் அகற்ற முடியும்... ஒடுக்க முடியும்... அதைப் பழக்கப்படுத்த வேண்டும்.

உதாரணமாக ஒருவர் நம்மைத் திட்டி விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரை உற்றுப் பார்த்த பின் நமது உயிர் அதை இழுத்து அந்த உணர்வின் தன்மையை உணர்ச்சிகளாக இயக்கிச் செயலுக்குக் கொண்டு வருகின்றது.

அடுத்து உடலுக்குள் அதை அணுவாகவும் இதே உயிர் தான் உருவாக்குகின்றது. எவ்வளவு வேதனைப்படும்படி அவன் சொன்னானோ அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக இங்கே விளைந்து விடுகின்றது.

இதைத்தான் உயிரான விஷ்ணு வரம் கொடுக்கின்றான் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. விஷ்ணுவுக்குப் பிறந்த குழந்தை (பிரம்மா) அந்த விஷத்தின் தன்மையாக உருவாகி விடுகின்றது.

ஆகவே பிரம்மா உருவாக்குகின்றான்... அது மீண்டும் தன் இனத்தை உருவாக்கும் தன்மை பெறுகின்றது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி... அந்த ஞானமாக வேதனையாக இயக்கும்.

எந்த வேதனையை உருவாக்கும்படி முதலிலே சொன்னானோ அதனால் உருவான அந்த உணர்வுகள் பிரம்மமாகத் தன் இனத்தை மீண்டும் சிருஷ்டிக்கும் வன்மை பெற்றது.

1.வேதனைப்படச் செய்த அந்த அணு மீண்டும் அதே வேதனையை இங்கே உருவாக்குகிறது.
2.அந்த ஞானத்தின் வழிகளிலேயே அது செயல்படும் என்று
3.இவ்வளவு கருத்துடன் அந்த இயற்கையின் நிலைகளை நாம் கண்டுணர இதைக் கொடுத்திருக்கின்றார்கள் ஞானிகள்.

ஒரு விஷமான வித்து காற்றில் இருந்து தன் விஷமான உணர்வின் சத்தை நுகர்ந்து தான் அது விஷச் செடியாக வளர்கின்றது.

அதே போல் தான்
1.எந்த மனிதன் நம்மை வேதனைப்படச் செய்தானோ
2.அவனின்று வரும் இந்த உணர்வை அந்த அணு நமக்குள் அது கிளர்ந்து... சுவாசித்து
3.அதனின் மலத்தை உடலிலே இடும் பொழுது நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அந்த வேதனை தாங்காது
4.அதனுடய செயலைக் குறைக்கச் செய்கின்றது..
5.நம் உடலில் அது நோயாக வருகின்றது

ஆனால் நாம் என்ன நினைக்கின்றோம்...!

நம்மை வேதனைப்படச் செய்தான்... அவனைச் சும்மா விடுவேனா...? என்று கோபத்துடன் எண்ணும் போது இந்த விஷத் தன்மையான அணுக்கள் நமக்குள் பெருக ஆரம்பிக்கிறது.

மீண்டும் அவர்களை எண்ண... எண்ண... நமக்குள் நோயாகவே விளைகின்றது... எதிரியாகின்றது...!
1.எதிரிக்கு நாம் இடம் கொடுத்து விடுகிறோம்...
2.நம்மை நாம் மறந்து விட்டோம்...! என்ற நிலைதான் இங்கே வருகின்றது.

குருநாதர் ஒவ்வொரு நிமிடமும் இதை எல்லாம் எனக்கு (ஞானகுரு) அனுபவபூர்வமாகக் கொடுத்தார். அவர் கொடுத்த அதே வழியில் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்குள்ளும் அந்த ஞானிகளின் அருள் உணர்வைப் பதிவு செய்கின்றோம். ஆகவே அந்த மெய் ஞானியின் உணர்வைப் பெற நாம் தியானித்தல் வேண்டும்.

பிறர் நம்மை வேதனைப்படச் செய்தாலும் அடுத்த கணமே ஈஸ்வரா... என்று உயிரை எண்ணி அவனிடம் வேண்டி... அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்... அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் பல முறை செலுத்துதல் வேண்டும்.

எத்தகைய நஞ்சான உணர்வும் நம் உடலுக்குள் உருவாகாதபடி நாம் தடுத்துக் கொள்ள வேண்டும்.

என் வழிக்கு நீங்கள் வாருங்கள் - ஈஸ்வரபட்டர்

 

ஒரு கொசு எப்படித் தனக்குகந்த ஆகாரம் உள்ள இடத்தில் சுற்றிக் கொண்டுள்ளதோ அப்படித்தானப்பா இந்த மனித மனங்களும் எண்ணங்களும் பிறவிப் பயனை வைத்து அடுத்த பிறவிக்கு வர முற்படுகிறது.

ஒரு அரசனின் வயிற்றில் அவதரிக்கின்றான் அரச குமாரன். தன் நிலைக்கு உகந்த இடமாகத்தான் ஆவி நிலையிலிருந்து அவதரிக்கின்றான் அந்தக் குமாரன்.

ஆனால் ஆயிரம் ஆயிரமாக அந்த அரசன் செல்வத்தைத் தேடி வைத்திருந்தாலும் இந்த அரச குமாரன் அந்தச் செல்வத்தை அவன் வழியில் அழித்துவிடுவதில்லையா…? அப்பொழுது அரசனும் ஆண்டியாகிவிடுகின்றான்.

ஆனால் ஏழ்மை நிலையில் பிறக்கும் சில குழந்தைகள் தன் ஏழ்மையை எண்ணிடாமல் எப்படியும் உயர்ந்த நிலை அடைந்திடலாம் என்று எண்ணும் பொழுது தன் எண்ணத்திலேயே செல்வ நிலைக்கும் உயருகிறது.
1.அந்த நிலையிலிருந்து உயரும் குழந்தையின் நிலைக்கும்
2.பூர்வ புண்ணிய நிலையிருந்தால் தான் உயர முடியும்.
3.எண்ணமே அப்பொழுது தான் தோன்றிட முடியும்.

உங்கள் எண்ணத்தில் சில சந்தேகங்கள் தோன்றியிருக்கும். ஏன் ஆவி நிலையில் இருந்து கொண்டே எல்லோரும் செல்வம் உள்ளவரின் வயிற்றில் அவதரிக்கலாமே….! என்று எண்ணலாம். இதிலே தானப்பா அந்த ஆண்டவனின் சக்தி உள்ளது.

உடலிலிருந்து ஆவி பிரியும் பொழுது அந்த ஆவியின் ஆசை நிலையை வைத்துத்தான் பிறக்கின்றது… “மறு பிறப்பு” என்றேன் முதலிலேயே.

அந்த ஆசை நிலை என்பது பல ரூபத்தில் உள்ளது. பணம் காசு மட்டுமல்ல…! பந்தபாசம் கோபதாபம் எல்லா நிலைகளிலுமே அந்த ஆசை நிலைகள் உள்ளன. ஆவி நிலையில் இருந்து கொண்டு அந்த ஏழ்மை நிலையை அறிந்து தான் அந்தக் குழந்தை பிறக்கின்றது.

தன் நிலையில் உயர்ந்திடலாம் என்ற எண்ணத்திலும் தன்னால் அந்தக் குடும்பத்தை உயர்த்திடலாம் என்ற நிலையிலும் எண்ணிப் பிறக்கிறது.
1.ஆனால் பிறந்தவுடன் தான் எல்லாமே மறைக்கப்படுகிறதே…!
2.அச்சக்தியின் நிலையிலிருந்து அங்கு தான் இருக்கிறதப்பா ஆண்டவனின் சக்தி.

அந்தச் சக்தி நிலையைப் பெறத்தான் சித்தர்கள் தவமிருந்து பல பேறுகளைப் பெற்றார்கள். ஆனாலும் அந்த ஆதி சக்தியின் அண்ட கோடிகளில் அடங்கி உள்ள அந்த முழுச் சக்தி நிலையையும் இன்னும் எந்தச் சித்தனாலும் பெற முடியவில்லையப்பா…!

சித்தர்கள் மகரிஷிகள் எல்லோருமே அந்தச் சக்தியின் நிலையைப் பெறத்தான் இன்னும் தவமிருந்து ஜெபமிருந்து கொண்டுள்ளார்கள்.

இப்பொழுது தான் நீங்கள் கடுகளவிலிருந்து மிளகளவு வந்துள்ளீர்கள்.
1.இன்னும் உலக நிலையையே என்ன…? என்று தெரிந்திடாமல் குடும்ப நிலையிலேயே கலங்கியுள்ளீர்கள்.
2.ஜெப நிலையைக் கூடிய விரைவில் உயர்த்திக் கொள்ளுங்கள்.
3.இந்தப் பாட நிலையிலிருந்து பலவும் பல வழியிலும் புரிய வைக்கின்றேன்.

நான் (ஈஸ்வரபட்டர்) பெற்ற ஜெப அருளிலிருந்து என் வழிக்குத் தெரிந்ததை உங்கள் வழிக்கும் புகட்டுகின்றேன். என் வழிக்கு நீங்களும் மேலும் வந்திடலாம்.

May 27, 2021

மகரிஷிகள் வெளிப்படுத்திய சக்திகள் அனைத்தும் இங்கே சுழன்று கொண்டுள்ளது... அதைப் பெற நாம் முயற்சிக்க வேண்டும்

  

நாம் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்... அவர்கள் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும்... அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்... அவர்கள் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்சுதல் வேண்டும்.
1.இப்படிச் செய்தால் அது உண்மையான தவமாக மாறுகின்றது
2.ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த முறையைக் கையாண்டு பழக வேண்டும்.

வெளியிலே எல்லோருக்கும் சொல்லி விடலாம். தன் குடும்பம் என்று வரும் போது தான் இதிலே பெரிய சிக்கலே வரும்.

ஏனென்றால் அடிக்கடி சந்திக்கும் நிலையும்... வெறுப்பு உணர்வை வளர்த்துக் கொள்வதாலும்... உடனே அந்த உணர்வைத் தூண்டிக் கோபமாகப் பேசச் சொல்லும்.

ஆகவே.... முதலில் வாரத்தில் ஒரு நாளாவது நம் குடும்பத்தில் எல்லோரும் ஒருங்கிணைந்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எண்ணிக் கூட்டுக் குடும்ப தியானம் செய்ய வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும். எங்கள் குடும்பம் ஒன்றுபட்டு வாழ வேண்டும். எங்கள் பார்வையால் அனைவரும் நலமாக இருக்க வேண்டும். பொருளறிந்து செயல்படும் திறன் அனைவரும் பெற வேண்டும் என்ற இந்த எண்ணத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இது வளர வளர குடும்பத்திலே மகிழ்ச்சி பெருகும். நம் பார்வையும் சொல்லும் உலக மக்களின் தீமைகளை அகற்றும். நாம் இவ்வாறு எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் நாம் வாழும் பூமியிலேயும் படருகின்றது.

எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்கு முன்...
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக அணுக்களாக இருப்பினும்
2.அதைப் பருகி தனக்குள் வளர்க்கும் நிலை இல்லை.

நம் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு தான் இப்பொழுது அதைக் கவர்ந்து வளர்ப்பதற்குண்டான வழிகளை ஏற்படுத்துகின்றோம்.

அன்று அகஸ்தியனும் அவரைப் பின்பற்றிய வியாசரும் மற்ற ஏனைய ரிஷிகளும் எடுத்து அவர்கள் விளைய வைத்த ஒளியான உணர்வுகள் இங்கே மறைந்துள்ளது.

அதை நுகர்ந்து நமக்குள் விளைய வைத்துக் கொண்டால் மீண்டும் அதைப் பெருக்கும் நிலை வருகின்றது.
1.ஆனால் இதற்கு முன் அதைப் பெருக்கும் நிலை இல்லை
2.மகரிஷிகள் விண்ணிலே ஒளியின் சரீரமாக இருந்தாலும் அவர்கள் உமிழ்த்தும் உணர்வின் தன்மையை இங்கே பருகும் நிலை இல்லை

நாம் விண்ணை நோக்கி ஏங்கித் தியானித்து அந்த மகரிஷிகளின் அருளைப் பருகி எல்லோருக்குள்ளும் அது பெருக வேண்டும் என்று அந்த அலைகளை நாம் பரப்ப வேண்டும்.
1.முன்னாடி அந்த நிலை இல்லை
2.ஆனால் அதை இப்பொழுது நாம் உருவாக்குகின்றோம்

ஒவ்வொரு உணர்வுகளிலும் அதைப் பதிவு செய்யப்படும் பொழுது எத்தனையே லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு விளைய வைத்த அந்த அருள் உணர்வுகள் நமக்குள் விளைந்து
1.ஞானத்தையும் மெய்ப்பொருளைக் கண்டுணரும் உணர்வுகளும் நமக்குள் கருவாக உருப்பெறும்.
2.அதை குரு அருளால் உரு பெறச் செய்ய வேண்டும்
3.இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் அவசியம் இதைச் செயல்படுத்த வேண்டும்.

விட்ட குறைய இப்பொழுது முடிக்க வேண்டியதன் அவசியம் - ஈஸ்வரபட்டர்

 

எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…!

இந்தச் சொல்லைப் பாட நிலையின் முதலிலிருந்தே இன்று வரை சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ
2.அதற்குத் தக்கவாறான சுவாச நிலையில் வருவது தான் எல்லாமே என்று பல முறை செப்பியுள்ளேன்.

பூர்வ ஜென்மப் பயனை வைத்து… முதல் ஜென்மத்தில் விட்ட குறையை முடிக்க.. ஆவி நிலையிலிருந்து தன் நிலைக்கு ஒத்த சுவாச நிலையை ஈர்த்துத் தான் “குழந்தைகள் பிறக்கின்றது…” என்று கூறியுள்ளேன்.

ஆண்டவனின் அருளில் பூர்வ ஜென்மத்தின் பலனை அவரவர்கள் நிலைக்கு எடுத்துக் கொண்டால் தான் அந்தப் பலனையே பெற்றிட முடியுமப்பா…!

போன ஜென்மத்தில் நீ செய்த பயனாக… பூர்வ ஜென்மத்தின் பலனால் பல புண்ணியங்கள் செய்தும்.. அந்நிலைக்கு சூட்சம நிலைக்கு ஆண்டவன் என்னும் நிலையின் ரிஷியின் நிலைக்கே வரும் தன்மையைச் சிறிதளவு தவற விட்டதனால் தான் “இந்த ஜென்மமே எடுத்துள்ளாய்…!”

இந்த ஜென்மத்திலும் பிறவி நிலையிலேயே உன் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருந்தால் உன் நிலையும் வேறாகத் தான் இருந்திருக்குமப்பா…!

1.போன ஜென்மத்தில் நீ வைத்திருந்த ரிஷியின் தொடர்பினால்
2.இந்த ஜென்மத்திலும் உன்னை… உன் எண்ணத்தை… அவன் ஒரு நிலைப்படுத்தி வழி நடத்திச் செல்கின்றான்.

ஆகவே கால நிலையைத் தவற விட்டு விடாதே...!

இந்த ஜென்மத்தில் உன் எண்ணமெல்லாம் உயர் நிலையில் செல்வ நிலையில் இருந்ததனால் தான் உன் பூர்வ ஜென்மத்தின் பயனால் இந்த மெய் ஞானத்தைப் பெறும் பேற்றையே பெற்றாயப்பா…!

படிக்கும் ஒவ்வொருவருக்கும் புரிவதற்காக இந்த நிலையைப் புகட்டியுள்ளேன். பெற்ற சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள்.
1.மகரிஷிகளுடன் ஐக்கியமாகுங்கள்.
2.அவர்கள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முற்படுங்கள்.

May 26, 2021

மகரிஷிகளின் கலாச்சாரத்தைக் கொண்டு வந்து உலகில் பரவிக் கொண்டிருக்கும் நச்சுத் தன்மையை அகற்றுங்கள்

 

உலகம் முழுவதும் நஞ்சாகப் பரவி இருக்கும் இந்த வேளையில்
1.எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மகரிஷிகள் பெற்ற உணர்வின் தன்மையை
2.அந்தக் கலாச்சாரத்தை இங்கே கொண்டு வர வேண்டும்.

சகோதர உணர்வுடன் வாழ வேண்டும்... எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்... என்ற அந்த மகரிஷிகளின் கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும்.

காரணம்... சிந்தனையற்ற நிலையில் மனிதன் இன்று அசுரனாகின்றான். அந்த அசுர சக்தியை மாற்றுவதற்கு நாம் நம் குருநாதர் காட்டிய நிலைகளில் அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்துப் பரப்பியே ஆக வேண்டும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..! என்று நாம் சொல்லும் அந்த அகஸ்தியன் நமது நாட்டில் ஆதியிலே தோன்றிய மனிதன் தான் முதன் முதலிலே விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்தவன்.

அகஸ்தியன் தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி நம் பூமியின் வடக்குத் திசையில் துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டுள்ளான்.

1.இருளைப் போக்கி ஒளியின் சிகரமாக என்றுமே வாழச் செய்யும் கலாச்சாரம்
2.தென்னாட்டிலே தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவானது
3.நம் தென்னாட்டில் மீண்டும் இது தழைக்கின்றது... வேறு எந்த நாட்டிலும் இல்லை.

தெற்கிலே உருவான அந்தக் கலாச்சார அடிப்படையில்தான் கருவில் வளரும் குழந்தைகளுக்கு அகஸ்தியன் உணர்வை இப்பொழுது உணர்த்துவதும் உணரச் செய்வதும்.

அத்தகைய சிசுக்கள் வளர்ந்தால் மெய்ப் பொருளின் ஆற்றலை நாமும் பெறலாம். அந்த உணர்வின் தன்மையை எடுத்து உலகம் முழுவதற்கும் பரவும்படிச் செய்யலாம். அதை நாம் வளர்த்தல் வேண்டும்.

தியானத்தில் இருப்பவர்கள் எந்தக் குடும்பத்துடன் தொடர்பு கொண்டாலும் அந்தக் குடும்பத்திலே கர்ப்பம் என்று தெரிந்தால் கருவிலிருக்கும் குழந்தைகள் அந்த அகஸ்தியன் உணர்வுகளைப் பெற்று ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.குடும்பத்தை ஒற்றுமையாக்கும் சக்தி கருவிலேயே விளைய வேண்டும்
3.இருளைப் போக்கிடும் அருள் சக்தி பெற வேண்டும்
4.உலகம் ஒன்றி வாழும் அந்த உணர்வின் சக்தி இந்த கருவிலேயே விளைய வேண்டும் என்று எண்ணிச் சொல்லுங்கள்.

அகஸ்தியன் உணர்வைப் பெற்றுத் தென்னாட்டிலே வளரும் அத்தகைய குழந்தைகள் எந்த நாட்டவரையும் காத்திடும் சக்தியாக வளரும்.

விண்ணுலக ஆற்றலை அகஸ்தியன் என்று கண்டுணர்ந்தானோ அதைப் போல எந்நாட்டவரும் விண்ணுலகை ஆற்றலைப் பெறும் தன்மையும்... மண்ணுலகில் வரும் நஞ்சினை வெல்லும் சக்தியும் பின் வரும்.
1.நாம் முன் செல்கின்றோம்.
2.பின் வருவோருடைய நிலைகளும் அதன் வழி செல்லும்.

இனம் இனத்தைத் தான் வளர்க்கும். எதை எடுத்துக் கொண்டாலும் ஒரு செடி வளர்ந்தால் தன் இனத்தை வளர்க்கிறது. தன் இனத்தின் சக்தியைத் தன் வித்திற்கே கொடுக்கின்றது.

இதைப் போலத் தான் தீமையான வினைகள் மனிதனுக்குள் விளைய வைத்து விட்டால் அந்த உணர்வின் தன்மை தன் இனத்திற்கு அதை ஊட்டி அந்தத் தீமையின் விளைவையே மனிதனுக்குள் இயக்கச் செய்கின்றது “இன்றைய நிலைக்குக் காரணம் இது தான்...!”.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டும்... மக்களை மீட்டுதல் வேண்டும். சிறிது பேர் தான் இருக்கிறோம் என்று எண்ண வேண்டாம். இது வளர வளர பல லட்சங்கள் ஆகும்.. பல கோடிகளாகவும் உருவாக்க முடியும்.

இரவில் தூங்கச் செல்லும் போதும் சரி... காலையில் எழுந்தவுடனும் சரி... ஆத்ம சுத்தியை எடுத்து
1.உங்களால் முடிந்த மட்டும் இந்த உலகம் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும்
2.அருள் வழியில் இப்படித்தான் இருக்க வேண்டும்... என்று தியானம் செய்யுங்கள்.
3.அதையே எழுத்தாக எழுதுங்கள்.

யாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வுகளைக் கருத்தில் கொள்ளுங்கள். அதைக் கடைப்பிடித்து வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றுங்கள்.

எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று தவமிருங்கள். அந்த அருளை உலகெங்கிலும் பாய்ச்சுங்கள்.

சுவாசக்கண் மிகவும் முக்கியமானது - ஈஸ்வரபட்டர்

  

அகக்கண் மனக்கண் ஞானக்கண் இப்படி நம்முள்ளே மூன்று வகைத் தன்மைகள் உள்ள நிலைகளைக் கண்களாகக் காட்டினார் பலர் பல நிலைகளில்.

அகக்கண்ணும் மனக்கண்ணும் ஞானக்கண்ணும் இவை எல்லாமே சுவாசக் கண்ணிலிருந்து தான் வருகின்றன.

நம் உடலிலே பல கோடிக் கண்கள் உள்ளன. அக்கண்கள் வழியாகத்தான் இந்த உடலுக்குச் சூரியனிலிருந்து வரும் ஒளிக் கதிர்களை இந்தப் பூமித் தாய் தன்னுள் ஈர்த்து அதை நம்முள் ஈர்த்திடும் செயல் நடக்கின்றது.

1.அகக்கண் மனக்கண் ஞானக்கண் என்பவை
2.நம் மன நிலையை வைத்து ஒவ்வொருவரின் குண நிலையைச் சுட்டிக் காட்ட
3.இந்நிலையில் உள்ள குணக்கண்களுக்குப் பல முன்னோர்கள் இந்த நாமத்தைச் சூட்டினார்கள்.

இந்த மூன்று வகைக் குணக்கண்களுக்குமே முதற்கண் இந்தச் சுவாசக்கண் ஒன்று தான்.

அந்தச் சுவாசக் கண்ணினால் நம் உடலுக்கு நாம் எந்தெந்த நிலைகளை ஈர்க்கின்றோமோ அந்த நிலை கொண்டுதான் நம் வாழ்க்கை முறையில்… விழிப்பு நிலையில்… சுவாச நிலை கொண்டு ஈர்க்கும் தன்மையை வைத்து… நம் கனவில் வரும் நிலைகளும் ஒன்று சேர்ந்தே கலந்து வருகின்றது.

இந்த மூன்று வகைக் குணக்கண்களை வைத்து ஒவ்வொரு மனிதனின் நிலையையும் தெளிவாக அறிந்திட முடியும்.

இப்படி அகம் புறம் ஞானம் என்ற நிலைகளைக் கண்களாக்கி நம் நிலைக்கு வழி கொண்டு வர வழி வகுத்துத் தந்தனர் நம் முன்னோர்கள்.
1.அகத்தில் எண்ணிப் புறத்தில் வாழ்பவர்கள் தான் இன்று உள்ளார்கள்.
2.தான் பெற வேண்டிய ஞானத்தையே மறந்து விட்டார்கள்.

ஞானம் பெற வேண்டியதன் அவசியத்தைத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்.

May 25, 2021

தீமைகள் வந்து மோதும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியை வைத்து அதை இடைமறிக்க வேண்டும்

 

ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த உலகத்துடன் ஒத்துத் தான் வாழுகிறோம். இதிலே பிரிந்து வாழ முடியாது.

1.நன்மை தீமைகளைக் கேட்டுணர்ந்து தான் செயல்படுகின்றோம்.
2.தீமையை நுகர்ந்து தீமை என்று அறிந்து கொள்கின்றோம்... ஆனால் அந்தத் தீமை நமக்குள் விளையாது தடுக்க வேண்டும்.

உங்களுக்குக் கொடுத்த சக்தியின் துணை கொண்டு ஈஸ்வரா... என்று உயிரிடம் வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை இணைத்து அந்தத் தீமையை நமக்குள் குறைத்துப் பழக வேண்டும்.

மிளகாயைத் தனியாகக் கடித்தால் காரமாகத் தான் இருக்கின்றது. விஷத்தைத் தனியாக உட்கொண்டால் மயக்கம் வருகிறது.

1.ஆனால் அந்த விஷமான சக்தியை ஒரு மருந்துடன் சேர்த்து
2.அதனின் கலவையைச் சிறுக்கப் போகும் போது அந்த உணர்வுகள் மருந்தை நன்மையாக்குகின்றது.
3.உடலுக்குள் வேகமாக மருந்தை எடுத்துச் சென்று நோயை நீக்குகிறது.

இதைப் போன்று தான் தீமைகளை நாம் பார்த்தாலும் அல்லது கேட்டுணர்ந்தாலும் நுகர்ந்த பின் அது நம்மை இயக்குகின்றது. அந்த நேரத்தில் “அதை இடைமறித்து” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைக்க வேண்டும். நமக்குள் அது அணுவாக மாறும்.

மகரிஷிகளின் அருள் சக்தியைக் கலந்த அணுவாக மாறும் போது நமக்குள் அது தீமையை அடக்கும் சக்தியாக உருப் பெறுகின்றது... அப்படி வலுப் பெறும் போது தீமைகளைப் பிளக்கின்றது.

பார்த்துணர்ந்த உணர்வுகள் (எதுவாக இருந்தாலும்) கண்ணின் கரு விழி நமக்குள் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ ஆன்மாவாக மாற்றி அந்த உண்மையைச் சொல்லும்.

ஏனென்றால்...
1.நம் கண்கள் அது வழி காட்டும்.
2.நம் உயிரோ அதை இயக்கிக் காட்டும்.
3.உடலோ தனக்குள் இணைத்துக் காட்டும்.
4.மீண்டும் அதனின் நினைவு வரப்படும் போது அந்த அலைகளே நமக்கு உணர்த்தும்.

இப்படி மற்ற தீமைகளை நாம் எப்படிப் பதிவு செய்கின்றோமோ அதே போன்று தான் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எடுத்துப் பதிவாக்க வேண்டும். உடலில் உள்ள எல்லாவற்றிலும் இதைக் கலக்க வேண்டும்.

இதற்கு முன்னாடி இந்த மாதிரி நமக்குத் தூய்மைப்படுத்தத் தெரியாது. ஆகையினால் எத்தனையோ உணர்வுகள் பதிவாகி இருக்கின்றது.

ஒரு எதிரி நமக்கு எப்பொழுதோ இடைஞ்சல் செய்திருப்பான். திடீரென்று அவனைப் பார்க்கும் சந்தர்ப்பம் வரும். பார்த்தவுடன் என்ன நடக்கிறது...?

1.அவனைப் பற்றிய பதிவு ஏற்கனவே நமக்குள் இருக்கிறது.
2.அந்த நினைவு வந்த பின் “அயோக்கியப் பயல்... போகின்றான் பார்...! என்ற எண்ணம் டக்... என்று அங்கே வரும்.

அந்தச் சமயத்தில் அவன் மீது வரும் வெறுப்போ கோபமோ பயமோ அந்தத் தவறின் உணர்வுகள் நமக்குள் விளையும். உடலில் ஏற்கனவே இதன் வழியில் ஏற்பட்ட அணுக்கள் தனக்கு வேண்டிய இரையை எடுக்கும்.

அதே போல் அடுத்தவர்கள் மற்றவர்களுடைய குறைகளைப் பற்றிப் பேசும் போது அதை நாம் கேட்க நேர்ந்தால் அவர்கள் செய்த தவறின் உணர்வை நினைக்கும் போது அந்தத் தவறின் உணர்வை இந்த அணு சாப்பிட்டு வளர ஆரம்பிக்கும்.

1.இப்படி எந்தெந்தச் சந்தர்ப்பத்தில் இது வளரத் தொடங்கினாலும்
2.நாம் அவ்வப்போது ஈஸ்வரா... என்று உயிரிடமே வேண்ட வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் எதைப் பார்த்தோமோ அது ஆன்மாவாகி சுவாசித்து அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்று அணுவாக அது வளர்க்கப்பட்ட பின் அதற்கு இது உணவாகக் கொடுப்பது உயிரின் வேலை தான். நாம் எண்ணியதை ஜீவ அணுவாக மாற்றுவதும் உயிரின் வேலை தான்.

தாவர இனங்களுக்கு சூரியன் எப்படி அதனதன் சத்துகளைக் கொடுத்துச் செழித்து வளரச் செய்கிறதோ அதே மாதிரித் தான்
1.நம் உயிரும் சூரியனாக இருந்து உடலில் அணுக்களை உருவாக்குவதும்
2.அதற்கு வேண்டிய இரைகளைக் கொடுப்பதும்
3.அந்த நினைவைக் கவர்ந்து தனக்குள் அதைச் செயலாக்குவதும் போன்ற வேலையைச் செய்கிறது.

ஆனால் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை அகற்றிய உணர்வுகள் விளைந்து மனித உடலுக்குள் வரும் போது ஆறாவது அறிவாக வருகிறது... கார்த்திகேயா.

ஒவ்வொரு சரீரத்திலும் தனக்குள் அறிந்து உணர்ந்த உணர்வுக்கொப்ப அந்தந்த உடல்கள் மாற்றி இன்று மனித உடலாக உருவாக்கியது இந்த உயிர்.

நம் ஆறாவது அறிவால் எதனையும் அறிந்திடும் நிலைகள் வருகின்றது. ஆகவே அதை வைத்து இருளைப் போக்கிய அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து நமக்குள் இணைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை இணைக்க இணைக்கத் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கூடும். அதற்காக வேண்டித் தான் திரும்பத் திரும்பச் சொல்லி உங்களுக்குள் அதை வளர்க்கச் செய்கின்றேன் (ஞானகுரு).

1.உங்கள் எண்ணங்களும் உணர்வுகளும் மாறும் போது அதைத் திருப்பி
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைக் கவரும் சக்தியாக மாற்ற வேண்டும்.

இரவு உறக்கத்தின் போது வரும் கனவுகள் பற்றிய உண்மை நிலைகள் - ஈஸ்வரபட்டர்

 

நாம் நினைவில் உள்ள பொழுது நடப்பதற்கும்… உறக்கத்தில் காணும் கனவிற்கும்.. என்னப்பா மாற்றம் உள்ளது…?

1.அதிகாலை கனவு பலிக்கும்…!
2.நினைவில் நிற்காத கனவினால் பலன் ஒன்றும் இல்லை...! என்றெல்லாம்
3.கனவின் சகுனங்களையும் பலர் பல விதத்தில் கனவின் உருவம் கண்டு சொல்கிறார்கள்.

நாம் உறக்கத்தில் இல்லாத பொழுது செய்யும் வேலைகளும்… நாம் பேசும் சொற்களும்.. நாம் படிப்பது… பார்ப்பது… இப்படிப் பல நிலைகளில் நம் எண்ணத்துடன் அச்சுவாச நிலை நாம் எடுக்கும் பொழுது நாம் நினைவில் வாழும் நிலையாக உள்ளது.

நாம் உறக்கத்தில் உள்ள பொழுது நம் எண்ணங்கள் உறங்கினாலும்
1.நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டு
2.இந்த உலகில் கலந்துள்ள பல அணுக்களின் சுவாச நிலையும் நம் சுவாசத்தில் வந்து கொண்டே உள்ளது.

அந்த நிலையில் நம் ஆத்மா அச்சுவாச நிலையுடன் செயல்படும் பொழுது பல நிலைகளில் உள்ள சுவாசங்கள் நம் சுவாசத்துடன் கலப்பதால்
1.பல விபரீதக் கனவுகளும்
2.நாம் எண்ணியே பார்த்திடாத சில நிலை கொண்ட கனவுகளும்
3.சிதறுண்ட நிலையிலும்
4.நம் உணர்வையே நாம் உணர்ந்திடாத சில பயங்கர நிலையில் நம் உடல் சிதையுண்ட நிலையிலும் கனவுகளாக வருவதைக் காணுகின்றோம்.

இப்படிப்பட்ட கனவெல்லாம் எந்த நிலையில் இருந்து வருகின்றது…?

பல சிதறுண்ட கனவுகள் அடிக்கடி நம் கனவில் காண்பதனால் அவை நம் ஆத்மாவிற்குச் சில தீங்குகள் விளைவிக்கின்றன.

கனவில் வருபவை எல்லாமே இந்த உலகில் கலந்துள்ள பல கோடி அணுக்களில் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் இப்படிப் பல உயிரணுக்களின் சுவாச நிலையின் உந்துதலினால்தான்
1.நம் எண்ணத்தை (தூக்கத்தில்) நாம் மறந்திருக்கும் பொழுது
2.நம் சுவாச நிலையிலும் அந்த உந்துதலுக்கு நாம் ஆளாகின்றோம்.

இறந்தவர்கள் கனவில் வருவதுவும் நம் சுவாச நிலையைக் கொண்டு தான்…! அவர்கள் ஜீவனுடன் இருந்த காலத்தில் அவர்கள் விட்ட சுவாச நிலையைக் கொண்டு நம் சுவாச நிலைக்கேற்ப ஈர்ப்பு நிலை கொண்டு தான் கனவுகளில் வருகிறார்கள்.

இப்படிக் காணும் கனவெல்லாம் நம் ஆத்மாவைப் பாதிக்காமல்… கனவிலேயே பல உண்மை நிலைகளைக் காணும் வண்ணம் “நம் சுவாச நிலையை ஒருநிலைப்படுத்தி…” ஒழுங்குபடுத்த வேண்டும்.

நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கை நிலையிலிருந்தே நம் சுவாச நிலைக்குப் பல உன்னத நிலையை எடுத்துக் கொண்டு வரும் பொழுது
1.எப்படி நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்குத் தியானத்தின் மூலம் உரம் அளிக்கின்றோமோ
2.அதைப் போல் நாம் கனவில் காணும் நிலையில் நல்ல நிலையுடன் கூடிய கனவுகளாக
3.நம் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்கு உரம் தேடி வைக்க முடியும்.

நாம் உறங்கும் பொழுது பல எண்ணங்களை எண்ணிக் கொண்டே இருப்பதால் அப்படிப் பல எண்ணங்களை எண்ணும் பொழுதே நம் சுவாசநிலை கொண்டு அதற்கொத்த நிலைகளும் வந்து மோதத்தான் செய்யும்.

ஆகவே அத்தகையை எண்ணங்களுக்கு நாம் அடிமையாகாமல்
1.ஜெப நிலையிலேயே நாம் உறங்கும் பொழுது
2.நம் சுவாசமும் நம் உயிரணுவும் ஒரே நிலையில் அவ்வாண்டவனின் சக்தியை ஈர்க்கின்றது.

அந்த நிலையில் இருக்கும் பொழுது நமக்குப் பல அணுக்களின் நிலைகள் நம் சுவாசத்திற்கு வந்திடாமல் ஒரே அமைதி கொண்ட நிலையில் நாம் உறங்கி எழுந்திடலாம்.

கனவும் நினைவும் கலந்தது தான் இந்த வாழ்க்கையே…! விழிப்பில் உள்ள பொழுது தீய அணுக்கள்.. நல்ல அணுக்கள்… என்று நம் சுவாச நிலைக்கு எப்படி வருகின்றனவோ அதே போல் தான் கனவிலும் நடக்கின்றது.

நம் ஆத்மாவிற்கு இரண்டு நிலைகளுமே ஒரே நிலை கொண்ட உணர்வுகளைத்தான் ஈர்க்கின்றது.
1.இது எல்லாமே கனவான வாழ்க்கையின் – “கனவு…நினைவு…” என்று நாம் புரிந்து கொண்டு
2.எல்லாவற்றிலும் ஒரே நிலை கொண்ட அவ்வீசனின் சக்தியை ஒரே நிலையில் ஈர்த்து
3.நம் ஆத்மாவிற்கு நல்ல நிலையைத் தேடிக் கொள்வது ஒன்று தான்
4.நாம் எடுத்திடும் பெரும் முயற்சியாக இருக்க வேண்டும்.

May 24, 2021

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் சக்தியை நாம் பயன்படுத்த வேண்டிய நெறி

 

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சக்தி கொடுத்தாலும்... நமக்குச் சும்மா கொடுக்கவில்லை. அவர் கொடுத்த பவரை என்னென்ன செய்யலாம்...? என்று கொடுத்திருக்கின்றார்.

நெருப்பை உபயோக்கின்றோம் என்றால்
1.வெளிச்சத்திற்குத் தீபமாக வைக்கின்றோம்...
2.சமையல் செய்யவும் அந்த நெருப்பை வைத்துக் கொள்கிறோம்...
3.அதே நெருப்பை வைத்து இரும்பையும் உருக்குகின்றோம்.

அதைப் போன்று தான் குருநாதர் கொடுத்த சக்தியை ஆக்கச் சக்தியாக மாற்றலாம்... அழிக்கும் சக்தியாகவும் மாற்றலாம். அந்த சக்தியின் உணர்வின் செயல்கள் எப்படி...? என்கிற வகையில்தான் குருநாதர் உணர்த்தினார்.

காரணம்... மனிதனுடைய ஆசையின் உணர்வுகள் பல நிலைகளிலும் தூண்டுகின்றது...
1.முதலில் இதை அழிக்கப் பழக வேண்டும்...
2.அந்த மெய் ஒளியை வளர்த்து பழக வேண்டும்

அதைக் காட்டுவதற்காகத் தான் பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று குரு அனுபவமாகக் கொடுத்தார். அதைத் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகிறேன்.

இந்த வாழ்க்கையில் எத்தனையோ சங்கடங்கள் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடியிலேயும் நீங்கள் எண்ணி எடுக்க வேண்டும்.

கஷ்டமோ நஷ்டமோ அல்லது மற்றொருவர் தவறு செய்வதையோ அன்றாடம் நாம் பார்க்க நேர்கிறது... அதை நுகர்ந்து அறிகின்றோம்.

இருந்தாலும் அது எல்லாம் நம்மை இயக்காது தடுக்க அடுத்த கணமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். அந்தப் பவர் (சக்தி) உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.

உதாரணமாக ஒருவர் கெடுதல் செய்கிறார் என்றால் அவர் குடும்பம் தொலைந்து போக வேண்டும்... என்று சொன்னால் அவர்கள் கெட்டுப் போய்விடுவார்கள்.

1.ஆனால் அந்தத் தொலைந்து போகும் உணர்வு முதலில் நம்மிடம் தான் விளைகின்றது.
2.அப்போது நம் நல்ல குணங்கள் கெடுகின்றது... அவனும் கெடுகின்றான்... நாமும் கெடுகின்றோம்.

அதற்குப் பதிலாக அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா...! என்று எண்ணி அந்த அருள் உணர்வின் தன்மையை இங்கே விளையச் செய்ய வேண்டும். அறியாது வரும் இருளை நீக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு போக்கிரி தவறு செய்கின்றான்... நமக்கு இடைஞ்சல் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

நம்மிடம் சக்தி இருக்கிறது என்ற வகைகளில் அவனுக்கு ஏதாவது கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கடும் ஆயுதமாக எடுத்து நாம் பயன்படுத்தும் பொழுது அது நம் நல்ல குணங்களை எல்லாம் அடக்கிவிடும்.

அவனை அடக்கும் உணர்வை எடுத்துத் தான் அங்கே பாய்ச்சுகின்றோம். அதனால் அவனுக்கு அந்தக் கெடுதல் வருகின்றது... ஆக இங்கே விளைந்து தான் அங்கே போகின்றது. நம்மிடம் முதலில் அது விளையாது தடுக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் உணர்வுகளை இங்கே வளர்த்து... அந்தத் தீமைகளை... அந்தக் களைகளை நீக்க வேண்டும்.
1.எப்பொழுதுமே அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று
2.இதைத்தான் பாடமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டிலே எல்லாம் செய்து கொண்டே வருவோம். குடும்பத்தில் ஒற்றுமையாகவும் இருப்போம். அதிலே ஒரே ஒரு பையன் நம் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுவோம்.

நாம் எடுக்கும் வேதனை உணர்வுகள் வீடு முழுவதும் பரவும். அப்படிப் பரவும் போது நம் எண்ணங்களும் மாறுபட்டு விடுகின்றது. அந்த நேரத்தில்
1.“சடார்... என்று அவன் தொலைந்து போக வேண்டும்...” என்ற எண்ணம் தான் வரும்
2.ஆனால் அவனிடம் இருக்கும் கெடுமதி தொலைய வேண்டும் என்ற எண்ணம் வராது.

நானே (ஞானகுரு) திடீரென்று உங்களிடம் கோபிக்கிறேன் என்றால் உங்களிடம் இருக்கும் கெட்ட புத்தி போக வேண்டும் என்று தான் கோபித்துச் சொல்வது.

சாதாரண வாழ்க்கையில் பார்த்தால் “தொலைந்து போகிறவன் இப்படிச் செய்கின்றானே...!” என்ற இந்த உணர்வு தான் இங்கே வரும்.

இப்படி நாம் எடுக்கும் இந்த எண்ணத்தில் “இரண்டு பிரிவாக” இருக்கின்றது.
1.கெட்டது தொலைய வேண்டும் என்று எண்ணினால் அது நல்லது
2.கெடுதல் செய்பவர்கள் தொலைந்து போக வேண்டும் என்று எண்ணினால் அது கெட்டதாகிறது.

ஆகவே... எந்த நேரம் எந்தச் சந்தர்ப்பத்தில் யார் மீது நமக்கு வெறுப்பு வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் வலுவாக்க வேண்டும்.

அதை வலுவாக்கிக் கொண்ட பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடல்களில் படர்ந்து அவரின் தீமையான செயல்கள் மறைய வேண்டும்... அதிலிருந்து அவர்கள் காக்கப்பட வேண்டும்... என்று நாம் எண்ண வேண்டும்.

இப்படி நாம் தியானித்து அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சும் போது
1.அவரின் தீமைகள் நமக்குள் வருவதில்லை
2.அதே சமயத்தில் அவரையும் நாம் தீமையிலிருந்து விடுபடச் செய்கின்றோம்.

இத்தகைய பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

கெட்டதைச் செய்பவன் நல்ல நேரம் பார்ப்பதில்லை… நல்லதைச் செய்ய “நல்ல நேரம்” தேவையா…? - ஈஸ்வரபட்டர்

 

ஆதியில் ஆண்டவனை எந்த ரூபத்தில் வணங்கினார்கள்..?

உதய காலத்தில் ஆற்றுப் படுகையிலும் குளங்கள் கடல் இப்படி உள்ள இடங்களில் நீரில் நின்று அந்தச் சூரியனின் சக்தியை சூரிய உதய காலத்தில் எண்ணி வணங்கினார்கள்.

அந்த நிலையில் வருண பகவான்… வாயு பகவான்… சூரிய பகவான்… என்று அந்தப் பகவானையே இந்நிலையில் கண்டு வணங்கி ஜெபித்தார்கள்.

1.காற்றும் மழையும் அவ்வொளியும் இல்லாவிட்டால் ஜீவனே இல்லை.
2.ஜீவனைத் தந்த சக்தி இந்த மூன்றுக்கும் தான் உள்ளது என்ற நிலையில்
3.இந்த மூன்றையுமே தெய்வமாக்கி வணங்கினார்கள்.

வணங்கினார்கள் என்ன…? அந்த நிலை கொண்டுதான் நாமும் வணங்க வேண்டும்.

அந்த நிலையிலிருந்து தான் நம் உயிர்ணுவிற்கு நம் ஆத்மாவிற்கே உயிர்த் துடிப்பு வந்தது. அந்நிலையில் அருள் பெற்ற நம் ஆத்மா அவற்றைத் தான் “ஆதி முதல் தெய்வமாக” வணங்கிப் போற்ற வேண்டும்.

ஆதியில் வந்த ஆண்டவனையே தன் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்ட மனிதனப்பா இன்றைய மனிதன்.

இன்றைய மனிதன் நம்பும் நிலை எல்லாம்.. அவன் போடும் கணக்குப்படி தேதியிலும்… கைரேகைகளிலும்… ஜாதகத்திலும்… பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

தன்னுள் இருக்கும் அந்த ஆண்டவனின் சக்தியை மறந்த நிலையில் தான் உள்ளார்கள். உலகம் முழுவதுமே நேரத்தையும் ஜாதகத்தையும் தான் நம்பி வாழ்கிறது.

நாளும் நட்சத்திரமும் தேதியும் இவன் வைத்த கணக்கு தான்...!

ஆதியில் வாழ்ந்த மனிதன் அந்தச் சூரியனின் சக்தி கொண்டு ஒளி நம் நிலத்தில் படும் நிலை கொண்டு “நேரமும் காலமும்” அறிந்து செயல்பட்டான்.

அன்று பல பெரியவர்கள் இந்த இந்த நாட்கள் மழை பெய்யும்.. வெயில் அதிகமாக இருக்கும்… என்றெல்லாம் தான் அந்த ஞானத்தை வைத்து மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இன்றைய வளர்ந்த விஞ்ஞான மனிதன் தன் அறிவைக் கொண்டு பல செயல் ரூபங்களையும் பல உபயோக நிலை கொண்ட பல உன்னதப் பொருள்களையும் கண்டு கொண்டான்.

அவ்வாறு தான் கண்ட நிலையை ஒன்றுடன் ஒன்று பொருத்தி வாழ்பவன்
1.உத்தம நிலையில் வாழ்ந்திடாமல்
2.பேராசை நிலை கொண்டு அழிவு நிலைக்கு ஏனப்பா செல்ல வேண்டும்..?

இன்று மனித மனங்களில் சுவாச நிலையே ஒருவரைப் போற்றியும்… ஒருவரைத் தூற்றியுமே… வாழ்வதாக உள்ளது. நம் மனித ஜென்மத்தில் தான் இந்தப் போற்றலும் தூற்றலும்.

போற்றலுக்கும் தூற்றலுக்குமா நாம் பிறவி எடுத்தோம்…!

ஆண்டவன் சக்தியிலிருந்து மகத்தான உன்னத நிலையில் ஆறறிவு படைத்து மனிதனாகப் பிறவி எடுத்துள்ளோம். அந்த நிலைக்கு அந்த ஆண்டவனின் சக்தியை நாம் உபயோகப்படுத்தாமல் அவன் தந்த சக்தி கொண்டு நம்மை நாம் அழித்து வாழ்கின்றோம்.

அதற்காகத்தான் இச்சக்தியை ஆண்டவன் நமக்கு அளித்தானா…?

மிருக ஜெந்துக்கு ஐந்தறிவு படைத்தான் ஆண்டவன் என்கிறோம். அந்த மிருக ஜெந்து போற்றலுக்கும் தூற்றலுக்கும் ஏங்குவதில்லை. பொருளுக்கும் ஆடை ஆபரணங்களுக்கும் அவைகளிடம் ஆசை இல்லை.

1.அவைகளின் நிலை தான் மனிதன் சொல்வது போல் ஐந்து அறிவு ஆயிற்றே..!
2.அவைகளின் நிலைக்கு எப்படியப்பா இந்த நிலைகளைக் கண்டிட முடியும்…?

அம்மிருகத்தின் நிலையில் உள்ள உயர்ந்த குணம் ஒற்றுமையான குணம் அதன் அறிவுத் தன்மை இன்றைய ஆறறிவு படைத்த மனிதனுக்கு எங்கப்பா உள்ளது…?

மிருகங்களும் பறவைகளும் எந்தக் கடிகாரத்தை வைத்து எந்தத் தேதியை வைத்து நாளும் மணியும் கணக்கிட்டன…?

நாம் நினைக்கின்றோம்… மனிதனுக்குத் தான் எல்லா நிலையும் தெரியும் என்று…! பறவைகள் வாழும் பரிபக்குவமான வாழ்க்கை நிலையை மனிதர்கள் பார்த்து வாழ வேண்டுமப்பா…!

மிருகங்கள் நிலைக்கு என்ன தெரியும்…! நம்மைப் போல் அதற்குத்தான் ஆறறிவு இல்லையே…! என்கின்றான் மனிதன். அனால் இவன் பெற்ற பொக்கிஷத்தைத்தான் இவன் சிதற விடுகின்றான் என்பதை அறியவில்லை.

இது தான் இன்றைய உலக நிலை…!

May 23, 2021

வழி அறிந்து செயல்படக்கூடிய அருள் ஞானம் (TECHNIQUES) கொடுக்கின்றோம்

 

ஒவ்வொரு நிமிடத்திலும் அருள் உணர்வுகளை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் வரிசைப்படுத்தி
1.எந்தெந்தச் சந்தர்ப்பத்தில் எது வருகிறது என்ற வகையிலும்
2,குருநாதர் எனக்குக் கொடுத்த சக்தியை இந்த உபதேச வாயிலாக உங்களுக்குள் பதியச் செய்கின்றேன் (ஞானகுரு).

சண்டை போட்டவர்கள் கஷ்டப்படுபவர்களை எல்லாம் பதிவு செய்து கொண்டால் அவர்களின் எண்ணங்கள் வந்து உங்களைத் துயரபப்டச் செய்கிறது... சங்கடப்படச் செய்கிறது… சோர்வடையச் செய்கிறது… வேதனை அடையச் செய்கிறது.

இதைப் போல் தான்…
1.குருநாதர் கொடுத்த உணர்வின் சத்து எனக்குள் பதிவானதை
2.அந்தந்தச் சந்தர்ப்பம் இணைக்கப்பட்டதையும் மாற்றப்பட்ட உணர்வுகளையும்
3.உங்களுக்குள் இணைத்துக் கொண்டே வருகின்றேன்.

சங்கடமான உணர்வு உங்களுக்கு வரும் பொழுதெல்லாம் நான் (ஞானகுரு) இணைக்கும் நல்லதாக மாற்றும் உணர்வுகள வைத்து மாற்றினீர்கள் என்றால் அவ்வப்பொழுது உங்களால் எந்தத் தீமையும் மாற்றிக் கொள்ள முடியும்.

அந்த நிலையை உருவாக்குவதற்குத் தான் இந்த உபதேச வாயிலாக அருள் உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சுவது.

எனக்கு ஒன்றும் தெரியவில்லையே… தெரியவில்லையே…! என்று எண்ண வேண்டியதில்லை. அடிக்கடி இந்த அருள் உணர்வுகளைப் பெற்றுப் பாருங்கள்.
1.இரவெல்லாம் உங்கள் எண்ணங்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் மிதப்பதை காணலாம்
2.அதனுடன் உங்கள் உணர்வுகள் தொடர்பு கொண்டு உங்கள் உடலிலே வளர்ச்சி ஆவதைப் பார்க்கலாம்.

ஆனால் வாழ்க்கையில் சங்கடமும் சலிப்பும் ஆகி யார் யார் மீது வெறுப்புடன் இருந்தீர்களோ அந்த நினைவுகள் சுற்றிக் கொண்டிருந்தால் இரவில் திடீரென்று முழிப்பு வரும்... எழுந்து உட்கார்வீர்கள்.

பகலிலே இந்த உணர்வு அதிகமாக வந்து விட்டால் நம் உணர்வுகள் இங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கும்… அதையும் பார்க்கலாம்.

அதே சமயத்தில் சில நேரங்களில் நாம் வலுவான எண்ணங்கள் எடுக்கும் பொழுது இந்த வலுவின் தன்மை கொண்டு பிறருடைய கஷ்டங்களையும் அறியச் செய்யும்.

ஆனால் நாம் போகும் பாதையில் அதை அறியச் செய்தாலும் அடுத்த நிமிடமே அந்த கனவு வந்து முழித்தவுடன்
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அந்தத் தீமையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வை மாற்ற வேண்டும்
3.கனவு தான் என்று மட்டும் நினைத்து விடக்கூடாது

காரணம்… பகலிலே கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் வந்து இதை இயக்குகின்றது
1.நமக்குள் பதிவானால் தான் அது கவரும்
2.நாம் நுகர்ந்தால் தான் உயிர் அதை இயக்கும்.

இப்படிக் கண்ட அனுபவங்கள் உங்களுக்குள் வந்தால் தான் உங்களைக் காத்துக் கொள்ள அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் நினைவுக்கு வரும்.

உதாரணமாக ஒரு இயந்திரத்தை ஓட்டுகிறோம். சில நேரங்களில் அதில் பழுது வந்துவிடுகிறது.

அந்தப் பழுது எதனால்…? என்றும் எந்த இடத்திலே…? என்றும் அதை விபரம் தெரிந்தவர்கள் (TECHNICIAN) சீராக்கினால் அது மீண்டும் சரியாக ஓடும். ஆக தெரிந்தவர்கள் அதைச் செயல்படுத்துவார்கள்,

அப்படித் தெரிந்து கற்றுக் கொண்டவர்களிடம் நாமும் கற்றுக் கொண்டால் நாமும் அந்தப் பழுதைச் சீராக்க முடியும்.

அதைப் போன்று தான்
1.வாழ்க்கையில் வரும் இன்னல்களை அகற்றும் அரும் பெரும் சக்தியாக
2.தெரிந்து செயல்படக்கூடிய அந்த அருள் ஞானத்தைக் உங்களுக்குக் கொடுக்கின்றோம்..!

எமது அருளாசிகள்.

உயிருடன் ஒன்றினால் நிஜம்… இல்லை என்றால் கனவு தான்…! ஈஸ்வரபட்டர்

 

நாம் வாழும் வாழ்க்கை கனவான வாழ்க்கை…!

நாம் உறங்கும் பொழுது வருவது தான் கனவு… நாம் விழித்திருக்கும் பொழுது வாழ்வது “நினைவு..!” என்கின்றோம். கனவும் நினைவும் எல்லாமே ஒன்று தான்…!

1.இன்று நடப்பது நாளை கனவு தான்.
2.நாம் உறக்கத்தில் உள்ள பொழுதும் கனவு தான்.
3.சில நாட்கள் பொறுத்து எண்ணிப் பார்ப்பது எல்லாமே கனவு தான்,
4.முன் ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
5.இந்த ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
6.இனி நமக்கு நடப்பதுவும் கனவு தான்,

அவ் ஈஸ்வரனின் நினைவு ஒன்றே… அவ் ஈசனின் சக்தி ஒன்றே தான் ஒரே நிலை கொண்ட “என்றும் நிலைத்து நிற்கும் நினைவு…!”

கனவுக்கும் நினைவுக்கும் நாம் மாறுபட்டு எண்ணுகின்றோம்.

நடப்பது எல்லாமே கனவு தான் என்ற நினைவு எல்லோருக்கும் வந்தால் இன்றைய உலகில் பகவானைப் பல ரூபமாக்கி பல ஜாதியாக்கி இருக்க மாட்டார்கள்.

இன்று பல மதங்களின் நாமத்தைச் சூட்டி வட கலை… தென் கலை.. என்றெல்லாம் சொல்லி தன்னையே தான் தாழ்த்தி வாழ்கின்றான் மனிதன்.

இதிலிருந்து விடுபட வேண்டும்.

May 22, 2021

சாதாரண வாழ்க்கையில் இருப்பது போல் இல்லாமல் ஒவ்வொரு நொடியும் நம் சுவாசம் உயிர் வழியாக இருக்க வேண்டும்

 

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும் பொழுது
1.நம் நினைவுகளை அவசியம் புருவ மத்திக்குக் கொண்டு போய்ப் பழக வேண்டும்.
2.அப்படிச் செய்தோம் என்றால் நம் உயிரே நமக்குக் குருவாக இருப்பதையும்
3.நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்கக் கூடிய ஈசனாக நம் உயிரே இருப்பதையும் உணர முடியும்.

இந்த அடிப்படையில் நாம் எண்ணும் பொழுது எதை எண்ணுகின்றோமோ நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் ஊடுருவுவதும் நமக்குத் தெளிவாகத் தெரிய வரும்.

சாதாரணமாக இந்த வாழ்க்கையின் நிலையில் மூக்கின் வழி வருவதைச் சுவாசிக்கின்றோம்… நம் கண்கள் உற்றுப் பார்க்கின்றது… அதன் வழி தான் வெளியிலிருந்து மற்ற உணர்வுகளை எல்லாம் எடுக்கின்றோம். அது நம் ஆன்மாவாக மாறுகின்றது.

ஆன்மாவிலிருந்து முக்கின் வழியாகச் சுவாசிக்கும் போது உயிரில் பட்டு அந்த உணர்வுகளைப் பின் (பின்னாடி தான்) அறிகின்றோம்.

அதற்காக வேண்டித் தான் ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று அடிக்கடி புருவ மத்தியில் எண்ணச் சொல்கிறோம்.
1.அப்படிச் சொல்லும் பொழுது உயிரை எண்ணி அவனுடன் ஒன்றிடும் நிலையாக ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.
2.அடிக்கடி அதன் வழி கூடி அருள் உணர்வுகளை உள்ளே செலுத்த வேண்டும்.

வாழ்க்கையில் பயன்படுத்துவது கண் வழி கூடி எடுத்து அதை அறிந்து கொண்டாலும் கூட தீமையான உணர்வுகள் நமக்குள் வராதபடி
1.அடுத்த நிமிடம் ஈஸ்வரா… என்று இதை இடை மறித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
2.அந்த அருள் உணர்வோடு நாம் ஒன்றும் போது தீமைகளை அது பிளக்கிறது.

நாம் எவ்வளவு நல்லவர்களாக இருந்து எவ்வளவோ நல்லதைப் பேசினாலும் கூட அடுத்தவர்களிடம் பழகும் போது அவர்களிடம் ஒரு சில குறைபாடுகளோ… குடும்பக் கஷ்டங்களோ இருக்கும் அல்லது நோயோ இருக்கும்.

அவர்கள் நம்மிடம் பேசும் போது சொல்லிலே அது எல்லாம் கலந்து வரும். அவரை நாம் கண்ணிலே பார்க்கும் போது அது எல்லாம் நம் ஆன்மாவில் வரும். அப்பொழுது நாம் சுவாசித்து உயிரிலே பட்ட பின் அதை உணர முடிகின்றது.

அந்தக் கஷ்டத்துடன் அவர்கள் வரும்போது “எனக்கு இந்த மாதிரி இருக்கின்றது…” என்று சொல்லும் பொழுது இந்த உணர்வுகள் நம்முடன் கலக்கின்றது.

இருந்தாலும்… அந்த நேரத்தில் சுதாரித்து
1.ஈஸ்வரா… என்று இந்த உணர்வை வைத்து இடைமறித்து அதைப் பலவீனப்படுத்த வேண்டும்.
2.இந்த உணர்வை வலுப் பெறச் செய்யும் பொழுது அவரிடம் கேட்டறிந்த தீமைகளை மாற்றுகின்றது.

நம்மிடம் அவர் பலவீனமாகச் சொல்லும்போது மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலிலே படர வேண்டும்… அவர் உடல் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வலுவாகப் பாய்ச்ச வேண்டும்

ஏனென்றால் ஒரு பாத்திரத்தில் பொருள்களை எடுத்துப் போட்டு அதைச் சமைத்து… அதற்கப்புறம் எடுத்துக் கொடுத்தால் அது ருசியாக இருக்கும். சமைக்காமல் கொடுத்தால் ருசி வராது.

அதைப் போன்று தான் அவர் கஷ்டம்…! என்று சொன்னபின்… அடடா கஷ்டமாக இருக்கின்றதா…! என்று நாம் சொன்னோம் என்றால்
1.அதைத் தான் திரும்பவும் நமக்குள் சமைத்து
2.அதையே தான் (கஷ்டம்) அவருக்கும் கொடுக்கின்றோம்.

இதிலே ரொம்பவும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அடிக்கடி நாம் அந்த அருள் சக்தியை எடுத்துச் சமைத்து நமக்குள் நல்லதாக்கிக் கொண்டே வர வேண்டும். நாம் பார்க்கும்… பழகும் அனைவருக்கும்… அந்த மகரிஷிகளின் அருள் ஒளியையே இணைத்துப் பழக வேண்டும்.

குருவின் துணை இருந்தால் தான் எதுவுமே நிலைத்து இருக்கும் - ஈஸ்வரபட்டர்

 

நமக்கு முன்னே பல கோடிச் சித்தர்கள் வாழ்ந்தார்கள் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். திருவள்ளுவர் தோன்றி திகட்டாத பொக்கிஷத்தை நமக்களித்தார்…! என்றெல்லாம் இன்றும் சொல்லி வருகின்றார்கள்.

திருவள்ளுவரும் போகரும் கொங்கணவரும் ஏனைய எத்தனையோ சித்தர்களும் ஞானிகளும் நம்மைப் பொல் மனிதனாகத்தான் பிறந்தார்கள்.
1.அவர்கள் எல்லாம் இன்றும் உலகம் போற்றும் நிலையில் தன் ஞானத்தை வளர்த்து
2.தன் நினைவில் அவ் ஈஸ்வரனையே ஈசனாக்கி வாழ்ந்து காட்டினார்கள்.

அந்த நிலைகளை எல்லாம் இன்றையக் கலியில் நாம் விஞ்ஞானம் என்னும் ரூபத்தில் நமக்கு ஆண்டவன் அளித்த சக்தியைக் கொண்டுவந்து வீண் விரயமாக்கி விட்டோம்.

1.அன்றிலிருந்து இன்று வரை மனிதப் பிறவியில் மாற்றமில்லை.
2.ஆனால் மனித எண்ணத்தில் தான் பல கோடி மாற்றங்கள் வந்துள்ளன.

இன்றுள்ள நிலையில் ஆண்டவனை ஜெபிக்கும் நிலையிலும் உண்மை நிலைகளைச் சொல்பவர்களை எள்ளி நகையாடும் நிலையில் தான் உள்ளார்கள்.

இந்தக் கலியில் வந்த பல மேதைகள் இராமகிருஷ்ண பரமகம்சர்… விவேகாநந்தர்…! அவர்கள் நமக்களித்த உண்மை நிலைகளையும் “கருத்தில் ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றி வாழ்கின்றோம்…!”

இன்று பிறவி எடுத்த நாமும் ஆசையின் உந்தலுக்கு அடிபணியாமல் வாழ்ந்திட்டால் அன்றையக் கால சித்தர்களைப் போல் வாழ்ந்து காட்ட முடியும்.

1.வளரும் முறையிலிருந்து தான் இந்த நிலை எல்லாமே வருகின்றது
2.வளர்ந்த பின் நாம் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் “தியான நிலை ஒன்று தான் உண்டப்பா…!”

ஒவ்வொருவருவரும் தன் நிலையிலேயே ஏற்றுக் கொள்வதையும் இப்பொழுது வெளியிடும் நிலையில் இல்லாமல் தனக்குத் தெரிந்த உண்மை நிலைகளையும் வெளியிடும் பொழுது அதில் தவறுகள் உள்ளனவா…! என்ற பயத்தில் மறைத்து வாழ்கிறார்கள்.

இந்நிலையைப் போக்க நம் நிலைக்கு நாம் இந்த வழிக்கு வந்தமைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு குருவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தக் குருவின் சக்தியிலிருந்து பல உண்மை நிலைகளைப் பெற முடியுமப்பா…! நீங்கள் இப்பொழுது போற்றிடும் திருவள்ளுவரின் நிலைக்கும் ஒரு மாபெரும் ரிஷி இருந்தார்.

இப்படி ஒவ்வொருவரின் நிலைக்கும் ஒவ்வொரு குருவின் நிலை கொண்டு தான் ஆரம்பப் பாடநிலை அறிந்திட முடியுமப்பா…!

அந்தக் குருவின் நிலை நாம் தியானத்தில் அமர்ந்து அந்தக் குருவை எண்ணி வணங்கிடும் காலத்தில் அவர் பெற்ற சக்தி நிலை கொண்டு நமக்குப் பல உன்னத நிலைகளை ஈர்த்து அளித்திட முடியும்.

1.இந்தக் கலி காலத்தில் ஒரு போகராகவோ திருவள்ளுவராகவோ…
2.நாம் ஏன் வாழ்ந்து காட்டிட முடியாது…?

அவர்களுக்கும் மேல் உயர்ந்த நிலையை அவர்களை எண்ணி ஜெபமிருக்கும் பொழுதே அவர்கள் நமக்களிக்கும் உன்னத நிலை பெற்று வாழ்ந்திடலாம்.

நம்மிடமுள்ள பயத்தைப் போக்கி “நாம் பிறவி எடுத்த பயனைப் பெற்றுக் காட்ட வேண்டும்…!” என்ற வைராக்கிய எண்ணம் கொண்டு வாழ்ந்திட வேண்டும்.

May 21, 2021

மாய ரூபங்கள் வேண்டாம்… ஒளியான உணர்வுகளுக்கு மட்டும் ஆசைப்படுங்கள்

 

தியானத்தில் உள்ளோர் ஒரு சிலர் எனக்குக் காட்சி கிடைத்தது… நல்லதானது…! என்றெல்லாம் சொல்வார்கள்.
1.காட்சி கொடுத்து நல்லதாகும் என்ற நிலை வந்தாலும்
2.அது சில நாளைக்குத் தான் இருக்கும்.

நானும் (ஞானகுரு) ஆரம்பத்தில் நிறைய இது போன்று காட்சி கொடுத்துக் கொண்டுதான் இருந்தேன். பிற்பாடு இதையெல்லாம் கூடாது என்பதற்காக வேண்டி நிறுத்தி விட்டேன்.

தியானத்தின் மூலம்..
1.அந்த மெய் ஒளியை நீங்கள் பெற வேண்டுமே தவிர
2.இந்த உடலில் விளைந்த உணர்வினை யாரும் தேடாதீர்கள்… நாடாதீர்கள்…!

நம் குருநாதர் காட்டிய வழிகள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து இங்கே வளர்க்க வேண்டுமே தவிர அதைப் பார்க்க வேண்டும்… இதைப் பார்க்க வேண்டும்… என்று ஆசைப்படக் கூடாது.

இந்த உடல் மடியக் கூடியது தான். உடலில் உருவான நிலைகளில் அருளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்க்தில் அந்த மெய் ஞானிகள் பெற்ற ஒளி உணர்வுகளைப் பெற ஆசைப்பட வேண்டும்.

குருநாதர் வந்தார்… தெய்வங்களின் காட்சி கிடைத்தது என்ற நிலைக்குப் போய் விட்டோம் என்றால் மீண்டும் மீண்டும் இந்த உடலில் விளைந்த உணர்வுகள் தான் நமக்குள் வளரும். அதே தொடருக்குத் தான் நம்மையும் இழுக்கும். கடைசியில் இந்தப் புவியின் ஆசை தான் வரும்.

ஆகவே உருவங்களாகக் காட்சி கிடைத்தாலும்…
1.குருநாதர் காட்டிய வழியில் உடனே அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்
2.அந்த ஒளியான உணர்வுகள் உடலிலே விளைய வேண்டும் என்று
3.மெய் வழியில் சென்று அந்த வலுவைத் தான் கூட்ட வேண்டும்.

அப்படி இல்லாதபடி சாமி (ஞானகுரு) வந்தார்… காட்சி கொடுத்தார் எனக்கு நல்லதானது… காட்சி கொடுத்தார் உடல் நல்லாதனது…! என்று சொல்வதெல்லாம் உடல் இச்சைக்குத் தான் மாறும்.

அதைத்தான் யாம் வன்மையாக கண்டிப்பது. இந்த நிலையிலிருந்து எல்லாம் நாம் மாறுபட வேண்டும்.

1.மெய் ஒளியை நமக்குள் பெற வேண்டும்
2.நம்முடைய பார்வையால் பிறருடைய தீமைகள் நீங்க வேண்டும்
3.சாமி செய்தார் என்பதற்குப் பதில் சாமி பார்வை பட்டு பிறருடைய தீமைகள் எப்படிப் போனதோ
4.அதே போல் நம் பார்வையால் பிறருடைய தீமைகளை அகற்ற வேண்டும்
5.ஒளியான உணர்வுகள் பேரருள் பேரொளியாக வளர வேண்டும்
6.அத்தகைய சக்தியை நாம் பெற வேண்டும்… அது தான் முக்கியம்.

வாழும் வரை இப்படியே வாழலாம் என்ற எண்ணத்தில் தான் இன்று உள்ளார்கள் - ஈஸ்வரபட்டர்

 

இந்த மனிதப் பிறவி எடுக்க ஆண்டவனின் சக்தியில் பல நாள் தவமிருந்து நாம் பெற்றதே இப்பாக்கியம்.

ஆனால் நாம் எடுத்த மனிதப் பிறவியையே பெரும் பயத்துடனும் கலக்கத்துடனும் வாழ் நாட்களை வீணடித்துக் கொண்டு வாழ்கின்றோம்.

1.நாம் எடுத்த பிறப்பின் பயனைப் பெறுவது என்பது
2.நம் வாழ் நாட்களை வீண் விரயம் செய்யாமல் வாழ்ந்து காட்டுவது தான்…!

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு குணாதிசயத்தைப் பெற்றுள்ளான். மனிதப் பிறவி எப்பொழுது எடுத்துள்ளோமோ அப்பொழுதே அந்த ஆண்டவனின் “பரிபூரண சக்தி” பெற்றவர்களாகத்தான் தாயின் கருவுக்கே வந்து உதிக்கின்றோம்.

இந்த நல்ல நிலையில் வந்தவர்கள் எல்லாம் நல்ல நிலையில் வாழ்ந்திடாமல்
1.பெரும் பேராசை நிலை கொண்டு பல விஞ்ஞான ரூபங்கள் எடுத்து
2.கடைசியில் தன்னைத் தானே அழிக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள்
3.இன்றைய உலக நிலை இது தான்.

விஞ்ஞான ரூபத்தில் வந்த மனிதர்கள் எல்லாம் தன்னுள் இருக்கும் சக்தியை ஒவ்வொருவரும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டால் விஞ்ஞானத்தையே வெல்லும் மெய் ஞானத்தைக் கண்டிடலாம்.

கூடுவிட்டுக் கூடு பாய்கின்றார்கள் சித்தர்கள்… என்றெல்லாம் கதைகளாகவும் காலப்போக்கிற்காகவும் படிக்கின்றார்கள். ஆக இன்றைய மனிதர்களின் குண நிலையெல்லாம்… பெரும் உல்லாசத்தைக் காணும் குணமாகவே உள்ளது…!

கனவும் நினைவும் உள்ள காலமாக உள்ளதப்பா இந்தக் காலம்.
1.கருத்துடன் நமக்குப் பல பெரியோர்கள் போதித்த கருத்தையெல்லாம்
2.தன் உல்லாச வாழ்க்கைக்காக வியாபாரமாக்கத்தான் தெரிந்திருக்கின்றது
3.தன்னுள் இருக்கும் உண்மை நிலைகளை வீண் விரயமாக்கி வாழ்கிறார்கள்.

“வாழும் வரை வாழலாம்…!” என்ற எண்ணம் தான் மக்களின் மனதிலே பதிந்துள்ளது. இந்த உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகு “அழியாத ஆத்மா” எப்படியெல்லாம் வட்டமிட்டுக் கொண்டுள்ளது…? என்று யாருமே எண்ணிப் பார்ப்பதில்லை.
1.எண்ணிப் பார்ப்பதில்லை என்றால்
2.எண்ணத்தில் பயம் வருவதால் தான் எண்ணிப் பார்ப்பதில்லை…!

இன்றுள்ள நிலையில் நாம் நமக்குத் தெரிந்த ஒரே வழி… அச்சக்தியின் நிலை கொண்டு சகல ஜீவராசிகளையும் காத்து வாழ்ந்திட… அவ் ஈஸ்வர தியானம் இருப்பது ஒன்றே தான்.

அச்சக்தியின் நிலை கொண்டு ஒவ்வொருவரும் இந்த உலகில் உள்ள பல கோடி உண்மை நிலைகளைத் தன்னுள் ஈர்க்க முடியும்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்…! என்று நம் முன்னோர்கள் சொல்லவில்லையா…! எந்நிலையையும் ஜெயம் கொண்டு வாழ்ந்து காட்டிட வேண்டுமப்பா…!

May 20, 2021

நன்மைகள் செய்யத் துணிவு வேண்டும் என்று நம் குருநாதர் சொன்னதன் உட்பொருள் என்ன...?

 

நாம் ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் கூட ஒரு சிலர் நம்மிடம் பகைமை கொண்டு பேசுவார்கள். நல்லதைச் செய்தாலும் கூட இந்த மாதிரி வரும்.

காரணம் என்ன என்றால்...
1.கெடுதல் செய்த உணர்வு கொண்ட ஆவி அவர் உடலிலே இருந்தால்
2.நீங்கள் நல்லது செய்வதைப் பார்த்தாலே அவருக்குப் பிடிக்காது.
3.எதிரி என்ற நிலைகளில் உங்களைக் கண்டாலே இல்லாததை எல்லாம் சொல்லும்.

ஒரு உடலுக்குள் இந்த மாதிரி ஆவி இருந்தாலே நாம் தியானம் செய்கிறோம் என்று சொன்னாலே போதும். நம்மைப் பார்த்ததும்...
1.என்னை ஏதோ செய்கின்றான்... இதைச் செய்கின்றான்.. அதைச் செய்கின்றான்...! என்று சொல்ல ஆரம்பிக்கும்
2.நாம் ஒன்றுமே செய்யவில்லையே... இப்படிச் சொல்கிறதே...! என்று நினைப்பீர்கள்.

அந்த உணர்வை நுகர்ந்தாலே “நான் ஒன்றுமே சொல்லவில்லை இந்த மாதிரித் தவறாகச் சொல்கிறான்... பாவிப்பயல்...!” என்ற இந்த அலைகளில் சிக்கிவிடுவோம்.

அந்த மாதிரி நேரத்தில் எல்லாம்...
1.உடனே மகரிஷியின் அருள் உணர்வை நமக்குள் எடுத்து வலுவாக்கிக் கொண்டு
2.அவருக்குள் இருக்கும் அந்த ஆவி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.அவருக்குள் இருந்து நன்மை செய்யும் செயல்கள் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இதிலே நமக்கு அந்தத் துணிவு அவசியம் வேண்டும். அதனால் தான் நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும் என்று சொல்வது. அந்த இடத்திலே துணிவு இருந்தால் தான் அதைச் செய்ய முடியும்.

1.நமது குருநாதர் கொடுத்த நிலைகளை ஒவ்வொன்றையும் நீங்கள் வரிசைப்படுத்திப் பாருங்கள்
2.நன்மை செய்ய வேண்டும் நமக்குள் அது வளர வேண்டும் என்றால் அதற்குத் துணிவு வேண்டும்.

உடலில் ஆவி உள்ளவருக்கு அவர் கஷ்டப்படுகிறார் உதவி செய்ய வேண்டும் என்று நாம் சொன்னால் போதும்...!

ஐய்யய்யோ பாவிப் பயல்...! எனக்கு ஏதோ செய்கின்றான்... விஷம் வைக்கின்றான்... மருந்து வைக்கின்றான்...! என்று சொல்லும்... பார்க்கலாம் இதை எல்லாம்...!

அவர்கள் உடலில் இருக்கும் அந்த ஜீவான்மா (ஆவி) மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அந்த உடலிலிருந்து நன்மை செய்யும் நிலைக்கு வர வேண்டும் என்று நாம் எண்ணி எடுக்க வேண்டும்.

ஏனென்றால் இதையெல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் நல்லது செய்கின்றோம் என்றாலும் கூட அடுத்த வீட்டுக்காரர் நம்மைப் பற்றி இல்லாததை எல்லாம் சும்மா சொல்லிக் கொண்டே இருப்பார். காரணம் அவர் உடலில் ஒரு ஆன்மா இருக்கும்.

ஆக... ஆன்மா இல்லாதவர்களே இல்லை.

ஆனால் நம்மைக் கண்டவுடனே அதற்கு வெறுப்பாக இருக்கும்... உடலில் எரிச்சல் ஆகும்...! அப்படி நம்மை எரிச்சலுடன் பார்க்கும்போது நம் ஆன்மாவில் முன்னாடி அது அதிகமாகப் பெருகிவிடும். இது பெருகி விட்டால் அதைத்தான் நாம் சுவாசிப்போம். அந்த உணர்வுகள் தான் நம்மை இயக்கும்.

ஆனாலும் உயிரிலே பட்டபின் இந்த உணர்வை வெளிப்படுத்துவது நம் உயிரே தான். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்கள் வந்தாலும்
1.உடனே இடைமறித்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.இங்கே புருவ மத்திக்கு நினைவைக் கொண்டு வர வேண்டும்.
3.இப்படிப் பல முறை கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி உணர்வின் சக்தியை தனக்குள் எடுக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் எந்த உடலில் எப்படிப்பட்ட ஆன்மா இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அந்த நன்மை செய்யும் சக்தியாக வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதைச் செய்தால் அவர்கள் உணர்வு நம்மை எதிர்மறையான உணர்வுடன் இயக்காது. அதே சமயத்தில் அவர்களுக்குள்ளும் இந்த அருள் உணர்வுகள் சென்று ஊடுருவி இயக்கும். விலகிச் சென்றாலும் சென்று விடுவார்கள். நமக்குத் தொல்லை தர மாட்டார்கள்.

1.துணிவுடன் செய்து நமக்குள் இருக்கும் நல்ல குணத்தைக் காக்க வேண்டும்.
2.அவர்களுக்குள்ளும் இந்த அருள் உணர்வை நாம் பாய்ச்சும் போது
3.அங்கேயும் உண்மையை உணர்த்தும் சக்தியாக அவர்களை இயக்கும்.

செயற்கையில் உருவாக்கப்பட்ட நஞ்சை இயற்கையாலும் இன்று வடிகட்ட முடியவில்லை - ஈஸ்வரபட்டர்

 

இன்று உலகினிலே பல வகையான ஜீவராசிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தன் நிலைக்கு ஏற்பச் சுவாச நிலையை எடுக்கின்றது.
1.மனிதரின் சுவாச நிலை தான்
2.எல்லாத் தன்மையையுமே தன் சுவாசத்தில் ஈர்க்கும் நிலையில் உள்ளது.

மனிதனின் சுவாச நிலை அவன் ஒவ்வொரு எண்ணம் கொண்டும் எண்ணிடும் பொழுது அந்நிலையில் அவன் எடுக்கும் சுவாச நிலையைப் பொறுத்து அவன் வாழ்கின்றான்.

இவ்வுலகினிலே நாகப்பாம்பைப் போல்
1.நச்சுத் தன்மையுள்ள கொடிய விஷத்தைத் தன்னுள் ஈர்த்து எடுத்திடும் ஜீவராசிகள் இல்லாவிட்டால்
2.இந்தக் காற்றில் கலந்துள்ள கொடிய விஷங்கள் எல்லாம் பெரும் தீங்கைத் தான் விளைவித்திருக்கும்.

அவ் ஈசனின் சக்தியிலிருந்து நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் தெரிந்திடாமல் பல வகை உண்மை நிலைகள் உள்ளன. எல்லாமே அவ்வீசனின் சக்தியில் வந்தவை தான்.

ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு நிலையில் உற்பத்தியாகி வளர்ந்திருக்கின்றன. தாவரங்கள் எல்லாம் அதனதன் சுவாச நிலை மேல் நோக்கி அந்தச் சூரியனின் சக்தியை நேராக ஈர்க்கும் நிலையில் உள்ளன.

பல வகைத் தாவரங்களிலும் பல வகை நல்ல உணவாகவும் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் அமையப் பெற்றுள்ளன.

நாம் எண்ணுகின்றோம். உபயோகமில்லாமல் இப்படி ஏன் பல வகைத் தாவரங்கள் உள்ளன என்று…? அச்சக்தியின் அருள் பெற்றுத் தான் அவையும் வளர்கின்றன… நல்ல கனி கொடுக்கும் தாவரங்களும் வளர்கின்றன.

அந்தக் கொடிய விஷமுள்ள தாவரங்கள் எல்லாம் இல்லாவிட்டால் இந்தக் காற்றிலிருந்து இன்னும் பல தீய நஞ்சு கலந்த அணுக்கள் தான் சுற்றிக் கொண்டிருக்கும்.
1.அந்த விஷ அணுக்களையே உண்டு உயிர் வாழும் தாவரங்கள் இருப்பதால் தான்
2.நம்மைச் சுற்றியுள்ள இந்தக் காற்றையே சுத்தமாக்கி நாம் சுவாச நிலைக்கு ஈர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த உலகில் தோன்றியவை எதுவுமே வீணாகவும் உபயோகமற்றதாகவும் தோன்றவில்லை.
1.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தன் சுவாச நிலையைக் கொண்டு தோன்றி
2.இந்த உன்னதமான உலகத்தைப் பல கோடி ஆண்டுகள் காத்து வருகின்றது.

இன்றைய உலகத்தில் விஞ்ஞானம் என்ற பெயரால் பல வினைகளைச் செய்து… தன்னையே தான் அழித்துக் கொள்ளும் இந்த மனிதரின் நிலைகள் எல்லாம்… இன்னும் ஜீவனுடன் உயிர் வாழ்கிறதென்றால் எந்த நிலையில்…?

நச்சுத் தன்மையைத் தானே உண்டு வாழும் நாகப் பாம்புகளும்… நச்சுடன் நச்சாக வளர்ந்து பெரும் விஷத் தன்மையுள்ள நாம் சொல்லும் செடி கொடிகளும் இல்லாவிட்டால்…
1.இன்று வீசும் காற்றே பெரும் விஷமுள்ளதாக வீசி
2.எந்த ஜீவராசிகளுமே உடலுடன் வாழ்ந்திட முடிந்திருக்காதப்பா…!

இந்த நச்சுத் தன்மை பாம்பிலும் தாவரங்களிலும் தான் உண்டு என்று இம்மனிதர்கள் எண்ணுகின்றார்கள். இவை எல்லாம் நமக்கு நன்மையைத்தான் அளிக்கின்றன.

இம்மனிதனாக வாழ்வதற்கு மாபெரும் தவமிருந்து நமக்கு அந்தச் சூரியனிலிருந்து பல ஜென்மங்கள் எடுத்து பெரும் வாழ்க்கையை வாழும் பாக்கியம் பெற்ற நாம் “நம் மனைதையே விஷமாக்கி வாழ்கின்றோம்…!”

இந்த மனித உடலைப் பெற்று வாழ்வதே நாம் செய்த பாக்கியம் தான். இந்தப் பாக்கியம் பெற்ற நாம் இந்த மனித உடல் உள்ள பொழுதே நாம் பிறவி எடுத்த பயனைப் புரிந்து “நம் மனதையே நல் மனதாக்கி வாழ்ந்திட வேண்டும்…!”

பிறவி எடுத்த புனிதத் தன்மையைப் போற்றிக் காத்து எவன் ஒருவன் வாழ்கின்றானோ… அவனெல்லாம் அச்சக்தியின் சக்தி பெற்ற… நம்முள் கலந்துள்ள பல தேவர்களின் தேவர்களைக் கண்டிடலாம்.

1.அந்தத் தேவர்களின் தேவர்களாகவும் நாம் ஐக்கியப்பட்டு
2.உடலை விட்டு நம் ஆத்மா செல்லும் நிலைக்குள் சகல நிலையையும் பெற்றிடும் பாக்கியம் பெறத்தான்
3.இந்தப் பாட நிலையெல்லாம் அளிக்கின்றேன்.

May 19, 2021

நம் ஆன்மாவில் வரும் தீமைகளை உடனே கட் (CUT) பண்ணப் பழக வேண்டும் - ஞானகுரு

 

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா... என்று உயிரிடம் வேண்டி இதை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் இணைத்துக் கொண்டே வரவேண்டும்.

இதை நினைப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகின்றது...!
1.எத்தகைய எதிர்மறையான உணர்வு வந்தாலும்
2.நம் ஆன்மாவில் வரும் அந்தத் தீமைகளைக் “கட்” பண்ணப் (CUT – நிறுத்தி) பழக வேண்டும்.

இதைத்தான் நரசிம்மன் வாசல்படி மீது அமர்ந்து மடி மீது வைத்து இரண்யனைப் பிளந்தான் என்று சாஸ்திரம் சொல்கிறது.
நரசிம்மன் என்றால் உயிர்...
வாசல்படி என்பது நம் மூக்கு..
மடி என்பது ஆன்மா...
இரண்யன் என்பது விஷமான (தீமையான) உணர்வு...!

நமது ஆறாவது அறிவு கார்த்திகேயனாக இருக்கின்றது. அந்த அறிவின் தன்மை கொண்டு ஒளியின் தன்மை பெற்ற மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் கொண்டு வரப்படும் பொழுது அறியாது உள் புகும் இருளை மாயக்கின்றது.

இந்த வழியில் நாம் செல்ல வேண்டும் என்று தான் எத்தனையோ காவியங்களையும் சாஸ்திரங்களையும் ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.

ஆறாவது அறிவு கொண்டு அந்த அருள் ஒளியை எடுத்து உடலுக்குள் செலுத்தி அந்த உணர்வுகள் உள்ளே (நமக்குள்) வலுப்பெற்ற பின் தீமைகளை அகற்றுகின்றது.

முன் வழி கூடி நீக்க முடியுமா...? என்றால் முடியாது. அதாவது...
1.தீமைகளை அப்படியே நேருக்கு நேர் நாம் தள்ள முடியாது.
2.உயிர் வழியாக மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உடலுக்குள் பெருக்கி வலுவாக்கி
3.அதிலே கொதித்து வரும் அந்த அலைகள் மூலம் ஆன்மாவிலிருக்கும் தீமைகளைப் பிளந்து தள்ள வேண்டும்.

எப்படித்தான் இருந்தாலும் ஒரு சங்கடமான எண்ணத்துடன் தியானத்தில் நீங்கள் உட்கார்ந்து பாருங்கள்.
1.உட்கார்ந்தால் எழுந்து போகச் சொல்லிக் கொண்டுதான் இருக்கும்...
2.உட்கார முடியாது... ஆட்டம் கட்டும்... எப்படியோ வரும்...
3.யார் யார் என்னென்ன சொன்னார்களோ அந்த நினைவு வந்து அவர்கள் மீதெல்லாம் வெறுப்பு அதிகமாக வரும்
4.கடைசியில் தியானத்தைச் செய்வதை விட்டுவிட்டு வெறுப்பான உணர்வுகள் கூடிய பின் எழுந்து விடுவோம்.

தியானத்தில் உட்கார்ந்து இருந்தீர்கள்...! என்ன இப்பொழுது எழுந்து விட்டீர்கள்...! என்று வீட்டிலே கேட்டால் அவர்களிடம் சண்டைக்குச் செல்ல ஆரம்பிப்போம்.

கணவனாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும் கேட்டவர்கள் மீது கோபம் வந்து விடும். ஏனென்றால் வெறுப்பின் உணர்வுகள் அதிகமானபின் இத்தகைய சொல்தான் வரும்.

அடிக்கடி உங்களிடம் ஆத்ம சுத்தி செய்யச் சொல்வதன் நோக்கமே ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்குள் இப்படி வரும் தீமைகளை வலு இழக்கச் செய்வதற்குத் தான்.

அவ்வாறு ஆத்ம சுத்தி செய்து கொண்டே வந்து
1.வரிசைப்படுத்தி எல்லா குணங்களிலும் எல்லா உணர்வுகளும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைத்துக் கொண்டே வரவேண்டும்.

அந்த அருள் ஒளியை நாம் உருவாக்கத் தெரிந்து கொண்டால் “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்...” என்ற நிலைக்கு வருகின்றோம்.

ஆகவே கார்த்திகேயா...! நாம் அறிந்திடும் அறிவு பெற்றவர்கள். அருள் ஒளியின் தன்மை கொண்டு எதையுமே நல்லதாக உருவாக்கும் திறன் பெற்றவர்கள். நீங்கள் சீராகப் பயன்படுத்த வேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

எண்ணம் போல் தான் நம் வாழ்வு - ஈஸ்வரபட்டர்

 

1.நம் எண்ணத்தில் பல நினைவுகளைச் சிதறடித்துக் கொண்டு நாம் சுவாசம் எடுக்கும் பொழுது
2.அந்த நிலையே நம் எண்ணத்தையும் சுவாசத்தையும் மாற்றி அமைத்து
3.அதனால் பல அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகி
4.மீண்டும் மீண்டும் பல பல எண்ணங்களை எண்ணியே
5.நம் சுவாச நிலையைக் கெடுத்துக் கொள்கின்றோம்.

நாம் எந்த நிலையில்… எந்த நினைவில் இருக்கின்றோமோ… அந்நிலையில் எண்ணும் எண்ணத்தை வைத்து நாம் சுவாசம் எடுக்கும் பொழுது “அந்நிலையேதான்…” வாழ் நாட்களில் நம்முடன் கூடவே வருகின்றது.

1.ஆண்டவனை நினைத்துச் சுவாசம் விடும் பொழுது
2.அந்தச் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்குப் பெரும் உன்னத நிலை கிட்டுகின்றது.

ஆனால் அதை நாம் புரிந்திடாமல்…
1.நம் வாழ்க்கையையே…
2.நம்மையே நாம் அடிமையாக்கிக் கொள்கின்றோம்.
3.அசுத்த சுவாச நிலை என்பதன் பொருளும் இது தான்.

நம் எண்ணத்தைக் கொண்டு தான் நம் சுவாச நிலையில் பலவித நறுமணங்கள் பெற முடிகிறது. நல்ல மணமுடைய சுவாச நிலையில் உள்ள பொழுது நம் உயிர் நிலைக்குப் பெரும் ஊட்டம் கிடைக்கின்றது.

நாம் வாழ்வதுவும் மடிவதுவும் நம் எண்ணத்தைக் கொண்டு தான்…!

இதைப் புரிந்து கொண்டு அந்த நிலையில் இருந்து தான் பல கோடிச் சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள்.

1.வாழும் வாழ்க்கையில் நிறைவு பெற்று வாழும் பொழுது
2.அந்தச் சித்தர்களின் நிலையைப் போல இந்த மனித உடலைப் பெற்ற நாம் எல்லோருமே பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்.

நம் உயிராத்மாவிற்கு உயர்ந்த நிலையைத் தேடிக் கொள்ளலாம்.

May 18, 2021

மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் உருவாக்கச் செய்வது தான் இந்தத் தியானப் பயிற்சியின் முக்கிய நோக்கம் - ஞானகுரு

 

அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து நம் உடலுக்குள் உருவாக்கிக் கொண்டே வர வேண்டும். அதைத் தான் “பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்...” என்று சொல்வது.

சந்தர்ப்பத்தால் இணைவது எதுவாக இருந்தாலும் அது பிரம்மம் தான். ஆனால் அந்த மெய் ஞானியின் உணர்வை நமக்குள் இணைத்து அதை உருவாக்க தெரிந்து கொண்டால் கார்த்திகேயா...!

அதாவது புறத்திலே பார்க்கும் போது
1.தீமை என்று ஒன்றைத் தெரிந்து கொள்கின்றோம்...
2.அந்தத் தீமையை அகற்றத் தெரிந்து கொள்கின்றோம்...
3.ஆனால் தீமையை அகற்றும் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் உருவாக்க வேண்டும்...
4.அது நம்மால் முடியும் என்ற நிலைக்கு வரவேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் இணைத்து இணைத்து தீமையை அகற்றும் சக்தியாக நமக்குள் உருவாக்கிக் கொண்டே வர வேண்டும். இது மிகவும் முக்கியமானது.

அதனால்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகிறாய்...! என்று தெளிவாகக் காட்டுகிறார்கள்.

சந்தர்ப்பத்தால் தீமைகளைக் கேட்க நேர்ந்தாலும்... அது நம் ஆன்மாவில் மோதி இயக்கினாலும்... அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று இதை இணைத்து உருவாக்க வேண்டும்.

1.பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிரினங்கள் எல்லாம் தன்னைக் காட்டிலும் வலுக்கொண்ட நிலைகளை எண்ணிப் பார்க்கின்றது.
2.அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற உணர்வினைத் தான் தனக்குள் உருப் பெறச் செய்கின்றது.

அதனுடைய சந்தர்ப்பம் இப்படி உருப்பெறும் பொழுது அது வளர்ச்சியாகி அந்த உடலை விட்டு அகன்ற பின் அந்த வலிமையான உடலுக்குள் சென்று பரிணாம வளர்ச்சி அடைகின்றது.

ஆனால் நாம் தீமை செய்வோரின் உணர்வை எடுத்துக் கொண்ட பின்... தீமை செய்வோரையே எண்ணி... அந்தத் தீமை நமக்குள் வலிமையாக வளர்ந்து விட்டால் அது நம்மைத் தேய் பிறையாக மாறுகின்றது.

அப்படித் தேய்பிறையாக மாறாதடி நாம் மாற்ற வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை மாற்றி நமக்குள் உருவாக்க வேண்டும்.

ஏனென்றால்...
1.நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ அதன் வழி தான் நம் உயிர் அதை உருவாக்குகின்றது...
2.அணுவாக உருவாக்குகின்றது உணர்வின் சத்தைப் பதியச் செய்கின்றது.
3.அதையே மீண்டும் எண்ணும் பொழுது கடவுளாக நின்று அந்த வழியிலேயே நமக்குள் உருவாக்குகின்றது.

ஆகவே நாம் எண்ணியது எதுவோ உயிர் அது உருவாக்குகின்றது. உருவாக்கியதை... மீண்டும் அந்த எண்ணத்தை வலு சேர்க்கும் போது அந்த வளர்ச்சி நமக்குள் பெறுகின்றது. இது எல்லாவற்றுக்கும் பொதுவானது தான்.

அதே போல் தான் யாம் கொடுக்கும் அருள் உபதேசங்களை ஒரு தடவைப் பதிவாக்கி விட்டு அதற்குப் பின் அப்படியே விட்டு விட்டால் மீண்டும் அதற்கு உணவு கிடைக்க வேண்டுமல்லவா...!

1.நேற்று சாப்பிட்டால் இன்று ஏன் சாப்பிட வேண்டும் இன்று விட்டு விட்டால் என்ன ஆகும்...?
2.அது போல் தான் தியானம் இருந்தோம்... ஆத்ம சுத்தியும் செய்தோம்...
3.மீண்டும் மீண்டும் அதை எல்லாம் எதற்குச் செய்ய வேண்டும்...? என்று விட்டுவிட்டால்
4.சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் தீமை நமக்குள் வலுவாகி விடும்.
5.கொடுத்த சக்தியை வளர்ப்பது தடையாகிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத்தான் மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து எமக்கு (ஞானகுரு) அனுபவமாகக் கொடுத்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

உங்களுக்கு மீண்டும் மீண்டும் அந்த அருள் ஞான உணர்வுகளை இங்கே ஊட்டிக் கொண்டிருப்பதன் நோக்கமே... உங்களை நீங்கள் காத்து... இந்த உலகையும் காத்திடும் அரும் பெரும் சக்திகளாக வளர வேண்டும் என்பதற்குத் தான்…!

பிறந்த நேரம் காலம் முக்கியம் இல்லை… இன்றைய வாழ்க்கையில் நல்லது பெற வேண்டியது தான் முக்கியம் - ஈஸ்வரபட்டர் சொன்னது

பிறவி எடுத்து நம் பிறவியில் நமக்கு வரும் குணாதிசயங்கள் எல்லாம் ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் சொல்வதைப் போல்

1.நாம் பிறக்கும் நாளைக் கொண்டோ…
2.பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டோ… வருவதல்ல..!

இந்தக் குண நிலைகளின் உண்மை நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் வருவது அவன் முதல் பிறவியில் செய்ததின் தொடர்ச்சி தான்… இந்தப் பிறப்பில் நாம் சாந்தமாக உள்ளதும்… கோப நிலையில் உள்ளதும்… மற்ற எல்லாமே…!

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குண நிலையில் வாழ்கின்றோம். எல்லோரும் ஒன்றாக நினைப்பது அந்த ஆண்டவனின் சக்தி ஒன்றைத்தான்.

குண நிலையில் பல மாற்றங்கள் இருந்தாலும் அந்த ஆண்டவனின் சக்தியை ஒரே நிலையில் எப்படி வணங்குகின்றோமோ அந்த நிலையிலேயே எல்லோரும் வாழ்ந்திடலாம்.

1.ஒருவர் கோபக்காரராக இருந்தால் அந்தக் கோப நிலை முதல் ஜென்மத்தின் தொடர்ச்சி தான்.
2.சாந்தமுள்ளவராக இருப்பதும் முன் ஜென்மத்தின் எண்ணத்தை வைத்துத்தான் அமைகிறது.

முன் ஜென்மத்தின் தொடரிலேயே இப்பொழுது பிறவிக்கு வந்தாலும் இந்த ஜென்மத்தில் நாம் வாழும் வாழ் நாட்களை வீண் விரயமாக்கிடாமல் வாழ வேண்டும்.

அந்த வினைப்பயன்கள் எல்லாம்
1.நாம் பிறந்த நேரம்…
2.நாம் செய்த பாவ புண்ணியங்கள்… என்று
3.தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

இப்பொழுது வாழ்ந்திடும் வாழ் நாட்களில் நம் எண்ணத்திலும்… நம் சுவாசத்திலும் அந்த மகரிஷிகள் ஞானிகளின் அருள் சக்திகளை எடுத்து வாழ்ந்து சுவாசத்தைச் சீராக்கி அருள் மணங்களை நம் சுவாச நிலைக்குக் கொண்டு வந்து வாழ்ந்திட வேண்டும்.

இந்தப் பிறவியில் இதை அதிகமாக வளர்க்கும் பொழுது நம்முடைய நாளைய சரீரம் அது ஒளியின் சரீரமாக அமையும்.

May 17, 2021

மெய் ஞானிகள் மக்களுக்குக் கொடுத்த ஆலயத்தின் முக்கியமான தெய்வீகப் பண்பு

 

1.நாம் கவர்வது (சுவாசிப்பது) எல்லாம் மணமாக மாறுகின்றது.
2.அந்த மணத்தை நுகரும் பொழுது அது உணர்வாக ஆகின்றது
3.அந்த உணர்வின் தன்மை தான் இயக்கம் ஆகின்றது
4.அந்த உணர்வின் தன்மை தான் செயலாகின்றது
5.அந்த உணர்வின் தன்மை தான் உடலாகின்றது என்ற நிலையைத் தெளிவாக்குவதற்குத்தான்
6.ஆலயத்திலிலுள்ள தெய்வத்திற்குத் தங்க ஆபரணங்களையும் வைரக் கிரீடத்தையும் வைத்து
7.மலர் மாலைகளையும் பல ஔஷதங்களையும் வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

தெய்வத்திற்குத் தங்க ஆபரணங்களை மார்பில் அணிந்து காட்டி உள்ளார்கள் என்றால் அந்தத் தங்கம் எப்படி மங்காது இருக்கின்றதோ
1.அந்தத் தங்கத்தை போல என் மனம் மங்காது இருக்க வேண்டும்
2.இந்த ஆலயம் வருவோருக்கெல்லாம் அவர்கள் மனம் மங்காத நிலை பெற வேண்டும்
3.நாம் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் மனம் மங்காத நிலையில் வரவேண்டும்...
4.தங்கத்தைப் போல அவர்கள் மனங்கள் வளர வேண்டும் என்று எல்லோரையும் எண்ணும்படி செய்கிறார்கள்.

ரோட்டில் செல்லும் பொழுது ஒருவன் அடிபட்டுக் கீழே விழுகின்றான். அடப் பாவமே யார் பெற்ற பிள்ளயோ...? என்று உற்றுப் பார்க்கின்றோம். வேதனையான உணர்வை நுகர்கின்றோம்.

ஆனால் அவன் அடிபட்டிருந்தாலும் அவனை எண்ணும் பொழுது நம்மை அறியாமலே “அவன் உடல் நலம் பெற வேண்டும்” என்று எண்ணத்தை நமக்குள் தோற்றுவிக்க வேண்டும்...
1.உடனடியாக நல்ல உணர்வை எடுக்க வேண்டும் என்பதற்குத்தான் ஆலயங்களை அமைத்தனர்...
2.உயர்ந்த பண்புகளையும் எண்ணி எடுக்கும்படி செய்தனர் ஞானிகள்.

ஆலயத்தில் கனிகளை வைத்துக் காட்டியிருக்கின்றார்கள். கனிகளைப் பார்த்த பின் அதனின் சுவையை எண்ணி... அதை உட்கொள்ள வேண்டும் என்று எப்படி விரும்புகிறோமோ அதே போன்று அந்தக் கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஆண்டவனுக்குச் சுவை கொண்ட பொங்கலையும் படைத்து வைத்திருக்கின்றார்கள். பலவற்றையும் சேர்த்துச் சமைத்துச் சுவைமிக்க நிலையாக அந்தப் பொங்கலை உருவாக்கியது போன்று
1.வாழ்க்கையில் வரும் அனைத்து உணர்வுகளும் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளாக நமக்குள் விளைய வேண்டும்
2.எங்கள் சொல்லைக் கேட்போர் அனைவரும் சுவை கொண்ட வாழ்க்கையாக வாழ வேண்டும் என்றும்.
3,இப்படி உயர்ந்த பண்புகளை எண்ணி எடுப்பதற்குத் தான் அங்கே பொங்கலை வைக்கும்படி காட்டுகின்றார்கள்.
4.பல பல சுவை கொண்ட பதார்த்தங்களையும் அங்கே வைக்கின்றார்கள்.

இது எல்லாம் துவைதம்... கண்ணுக்குப் புலப்படக் கூடியது. இதை வைத்துக் கண்ணுக்குப் புலப்படாத உயர்ந்த சக்திகளை எண்ணி எடுக்கும்படி செய்கிறார்கள் ஞானிகள்.

ஆகவே...
1.இபபடி ஆலயத்தில் ஞானிகளால் உருவாக்கப்பட்ட தெய்வீக நிலையை எண்ணி
2.நமக்குள் அந்தத் தெய்வ குணத்தை உருவாக்கக் கூடிய நிலையும்
3.நமக்குள் அதை உருபெறச் செய்யக்கூடிய நிலையையும்
4.நம் உடலுடன் இணைக்கக் கூடிய நிலையையும்
5.நம் சொல்லால் பிறருடைய நிலைகளை அருள் வழியில் இயக்கக்கூடிய சக்தியையும் பெறச் செய்வதற்குத்தான் ஆலயம்...!

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா...! (ஞானகுரு).

உயிர் விண்ணின் அங்கம்… உடல் மண்ணின் அங்கம்... மண்ணாகப் போகும் நிலையை விடுத்து உயிருடன் ஒன்றி ஜோதி நிலை பெறுவோம் - ஈஸ்வரபட்டர்

 

சூரியனின் சக்தியிலிருந்து ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா ஜீவ அணுக்கள் தோன்றித் தோன்றி மறைகின்றன.
1.ஒவொரு ஜீவராசியும் எந்த நிலை கொண்டு ஜீவன் பெற்றதோ
2.அந்நிலையில் அந்த ஜீவராசிகள் எண்ணம் ஈடேறியவுடன்
3.அதனுடைய ஜீவ உடலைப் பெற்ற நிலையும் மாறிவிடுகின்றது.

அதே போல் தான் பறவைகள் மிருகங்கள் மனிதர்கள் எல்லோருடைய நிலையும் உள்ளன.

மனிதர்களுக்கு… மனிதன் ஜீவன் பெற்ற நாளிலிருந்து தாயின் கருவில் எப்படிப் பத்து மாதங்கள் இருந்து பிறக்கின்றதோ அந்நிலை வைத்து மனிதனின் சராசரி ஆயுட்காலமும் உள்ளது.

யானையின் ஆயுட்காலம் கருவில் இருபது மாதங்கள் இருப்பதால் அதனுடைய சராசரி ஆயுட்காலமும் கூடி இருக்கின்றது.

இப்படி ஒவ்வொரு மிருகத்தின் நிலையும் கழுதைக்கு ஏழு ஆண்டுகள் கோழிக்கு இரண்டு ஆண்டுகள் நாய்க்கு பதினாறு ஆண்டுகள் இப்படிப் பறவைகள் நிலையிலும்
1.அவை அவை எத்தனை நாட்கள் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றனவோ
2.அந்நிலை கொண்டு தான் அதனதன் ஆயுட்காலமும் உள்ளன.

உங்கள் எண்ணத்தில் மனிதர்கள் ஏன் ஆறு ஆண்டுகளும் வாழ்கிறார்கள்… அறுபது ஆண்டுகளும் வாழ்கின்றார்கள்…? என்று எண்ணக்கூடும்.

அற்ப ஆயுளில் ஜீவன் பிரிவதெல்லாம் அவரவர்கள் எண்ணத்தைக் கொண்டு தான்…!

ஆனால் இந்த மனித உடல்களுக்கு மட்டும் தான் அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து அழியா உடலையும் அழியா உயிரையும் உருவாக்கும் சக்தியாக அவ்வாண்டவனின் சக்தியில் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்நிலை பெற்ற நாம் எல்லோரும்
1.அந்த ஆண்டவனின் சக்தியை அந்த நிலையில் நாம் பேணிக் காத்து
2.இந்த உலகில் நாம் உதித்ததையே அழியாச் செல்வமாக்கி
3.நாம் சேர்த்திடும் ஒரே சொத்து… உன்னதமான சொத்து… நம் உயிராத்மாவுக்கு அளிப்பது தான்…!

அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து பல ஒளிக்கதிர்கள் நம் பூமியைத் தாக்கிப் பெற்ற செல்வங்கள் தான் இன்றைய உலகில் உள்ள எல்லாமுமே…!

அந்த இயற்கையிலிருந்து தான் செயற்கையையும் செய்கின்றோம். அந்தச் செயற்கை அழிந்தாலும் இயற்கையுடன் தான் கலக்கின்றது.

இந்தப் பூமியில் உள்ள
1.இயற்கைத் தன்மையும்…
2.செயற்கைத் தன்மையும்…
3.நம் உடல்..
4.நாம் சேர்த்த பொருள் எல்லாமுமே…
5.மண்ணுடன் மண்ணாகத் தான் ஆகின்றது.

அழியாச் செல்வமான நம் ஆத்மா மட்டும் தான் ஆண்டவனிடம் ஐக்கியமாக முடியும். ஆகவே
1.மண்ணுடன் மண்ணாகும் இந்த உடலுக்காகவும் பொருளுக்காகவும் வாழாமல்
2.வாழ்வாங்கு வாழச் செய்யும் உயிராத்மாவை ஆத்ம ஜோதியாக்குவோம்…!

May 16, 2021

தீமை எந்த வழியாக நமக்குள் வருகிறது...? அதைத் தடுக்க நாம் போட வேண்டிய பாதுகாப்பு வேலி எது...?

 

உதாரணமாக ஒருவர் கடுமையான நிலைகளில் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அந்த நோயின் தன்மை கொண்டு உடலில் விளைந்த அந்த உணர்வுகளை...
1.அவர் சொல்வதைக் கேட்கும் பொழுது
2.நம் காதின் புலனறிவுக்குள் அவர் வேதனயாக இட்ட குரலின் உணர்வுகள் நம்மை இயக்கச் செய்கின்றது.
3.இந்த உணர்வுகள் நம் உடல் முழுவதும் பரவி கண்ணின் நினைவலைகளுக்கு வருகின்றது.

அப்பொழுது அது எந்தத் திசை...? என்று பார்க்கின்றது.

நமது கண் யார் வேதனையுடன் சொல்லுகின்றாரோ அவரைப் படம் எடுக்கின்றது. அப்படிப் படம் எடுத்த இந்த உணர்வுகள் ஊழ்வினையாக நம் எலும்புக்குள் பதிவாகின்றது.

1.ஒரு லேசர் (LASER) இயக்கத்தைப் பாய்ச்சி X-Ray படம் எடுப்பது போல
2.நமது கண்ணின் பார்வை லேசரைப் போன்று படம் எடுத்து
3.அந்த உணர்வின் காந்தப் புலன்கள் நமக்குள் ஊடுருவி உணர்வின் தன்மையை ஊழ்வினையாகப் பதிவு செய்கின்றது.

அதே சமயம் கண்ணின் நினைவலைகள் கொண்டு இயக்கப்படும் பொழுது அந்த உணர்வால் கண்ணுக்குள் இருக்கக்கூடிய புலனறிவும்... உடலுக்குள் இருக்கக்கூடிய புலனறிவும் இணைகின்றது.

அதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தால் நுகர்ந்து பார்க்கச் செய்கின்றது. அது நமது ஆன்மாவாக மாறுகின்றது.

நமது ஆன்மா என்பது என்ன...?

நமது ஆன்மா என்பது, நம்மை சுற்றி இருக்கும் நம் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள காற்று மண்டலம்தான்.

இன்று ரேடியோ அலைகள் எப்படிப் படர்கின்றது...? எப்படி ஈர்க்கப்படுகின்றது...? எப்படி வேலை செய்கின்றது...? அதே மாதிரித்தான்
1.நம் ஆன்மாவில் நாம் எண்ணிய சுவாசித்த உணர்வலைகள்
2.பூமியைச் சுற்றி இருக்கும் காற்று மண்டலத்தைப் போன்று நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.

நம் கண்கள் வேதனைப்பட்டவரை எலும்புக்குள் பதிவாக்கியபின் “மேக்னட்” போன்று பதிவான உணர்வலைகள் இழுக்கப்பட்டு நம் ஈர்ப்பு வட்டத்திற்குள் (ஆன்மாவாக) வந்து சேரும்.

நமக்குள் ஆன்மாவாக மாறியபின் நம் உடலிலிருந்து நஞ்சினை நீக்கும் நமது நல்ல ஆன்மாவுக்குள் அவர்பட்ட வேதனையான நஞ்சு கலந்து விடுகின்றது.

ஆன்மாவில் வருவதைத்தான் நாம் மூக்கின் வழியாகச் சுவாசிக்கின்றோம்.
1.ஆகவே நஞ்சான உணர்வுகள் கலந்து கொண்டபின்
2.நாம் சுவாசிக்கும் பொழுது உயிருக்குள் பட்டவுடனே
3.பாலில் துளி விஷம் கலந்து குடிக்கும் பொழுது எப்படி மயக்கம் வருமோ
4.அதைப் போல நமக்கும் வேதனை உண்டாகின்றது.

அதாவது பரமாத்மாவிலிருந்து நமது ஆன்மாவாக மாறுகின்றது. எப்படி...?

அந்த நோய்வாய்ப்பட்டவர் வேதனை தாங்காது சொல்வதை அந்த வேதனையான மணம் வெளிப்படும் பொழுது அந்த மணத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றது.

நமது பூமி ஒரு பரம்... அதாவது எல்லை. இந்த எல்லைக்குள் அவர் பேசிய வேதனையான குரலின் தன்மையை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பரத்துக்கு ஆத்மாவாக... பரமாத்மாவாக (இந்தக் காற்று மண்டலத்தில்) மாற்றிவிடுகின்றது.

1.நாம் கண் கொண்டு அவரைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது
2.;அவர் சொல்லும் உணர்வுகளை அந்த உடலிலிருந்து வெளிப்படுவதை
3.நம் கண்ணுக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் இழுத்துப் பராமாத்மாவில் இருப்பதை நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

இப்படி வந்தவுடன் நம் நல்ல ஆன்மாவில் தீமையான உணர்வு உரிமை கொண்டாட ஆரம்பிக்கின்றது. நம் நல்ல எண்ணத்தையும் நல்ல மனதையும் பலவீனப்படுத்துகின்றது.

அதை மாற்றத் தான் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

ஆகவே தான்
1.நம்முடைய ஆன்மாவில் (நமக்குள்) தீமைகள் புகும் வழியைத் தெரிந்து கொண்டால்
2.அதை மாற்ற அடுத்த கணமே அருள் ஞானிகளின் நினைவாற்றலை நம் கண்ணான புலனறிவுக்குக் கொண்டு வந்து
3.அதைப் பதிவாக்கி... ஊழ்வினை என்ற வித்தாக்கி...
4.அதன் வழி கொண்டு நம் ஆன்மாவிலே மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெருக்க வேண்டும்.

இந்த முறைப்படி செய்தால் பிறிதொரு தீமை செய்யும் உணர்வு நம் ஆன்மாவிலிருப்பதை அது பிளந்து அதைச் செயலற்றதாக்கும். நம் ஆன்மா தூய்மை ஆகும்.

அருள் உணர்வுகள் “கவசம் போன்று...” நம்மைக் காக்கும் சக்தியாக வரும்.