ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 28, 2015

பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன...?

பிரம்ம முகூர்த்தம் என்று ஞானிகள் கூறியுள்ளார்கள். ஒன்றை ஒன்று உருவாக்கி மாற்றி அமைக்கும் சக்தி, அதாவது இன்று நாம் மனிதனாக இருக்கும் நிலையை
ஒளியின் தன்மையாக நாம் இணைத்திடும்
அத்தருணம் தான் பிரம்ம முகூர்த்தம்.

ஆக இன்று திருமணமாகி இருமனமும் ஒரு மனமாக ஆகும்போது இந்த மனிதர்களுக்குள் இருந்து அதை இருவரும் ஒன்றாகச் சேர்ககப்படும்போது இரு எண்ணங்கள் உருவாக்கி அந்த உணர்வின் தன்மை கருவாக்கப்படும்போது அது தன் இனக்குழந்தைகளாக உருவாக்க முடிகின்றது.

அருள் ஞானிகள்  வாழ்க்கையில் வரும் நஞ்சினை வென்று விட்டு
கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து
உணர்வின் தன்மை தனக்குள் ஒன்றாக்கி
உணர்வின் தன்மை ஒளியின் அணுக்களாக மாற்றி
இன்றும் துருவ நட்சத்திரமாகவும் அதனைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழ்ந்து வந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவைகளிலிருந்து வரும் சக்திகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் அலைகளாக மாற்றப்படும்போது அதனின் உணர்வை கணவனும் மனைவி இருவரும் நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

துருவ மகரிஷியின் அருள் சக்தியைத் தனக்குள் பெறவேண்டும் என்று இந்த உணர்வினை மனைவி தன் உடலாக சிவமாக்கி அதன் உணர்வின் தன்மை தனக்குள் அணுக்கருவாக்கிடல் வேண்டும்.

அந்தக் கருவின் உணர்வை தனக்குள் சேர்த்து, கணவன்பால் பற்று கொண்டு அந்த மகரிஷியின் உணர்வுகள் தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை எடுக்க வேண்டும்.

அதே போல கணவன் அந்த துருவ மகரிஷியின் அருள் சக்தி தனக்குள் பெறவேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினை தனக்குள் அணுக்கருவாக்கி, அது தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று உணர்வினை இருவரும் ஒன்றாகச் சேர்த்து,
இந்த உணர்வின் தன்மையை உடலில் உள்ள அந்த அணுக்களுக்கு
அருள் மகரிஷியின் உணர்வுகளை இணைத்திட வேண்டும்.

இரு இணைப்பும் ஒன்றாகி இந்த உணர்வின் தன்மை வலுப்பெறப்படும்போது தீமை என்ற நிலைகளை தனக்குள் அணுகாது அந்த தீமையை அகற்றும் உணர்வின் கருவாக அது உருப்பெறுகின்றது. ஆகவே தான் இதை பிரம்ம முகூர்த்தம் என்பது,

கணவனும் மனைவியும் முகூர்த்த நாளாக அதன் வழிகளில் இவர்கள் எண்ணங்கள் ஒன்றாகி இணைப்பின் தன்மைகள் வரப்படும்போதுதான், அதிலே கருவுறும் உணர்வுகள் அந்த மனிதனாக உருவாக்குகிறது.

அதைப் போன்று கணவனும் மனைவியும் அருள் மகரிஷிகளின் ஆற்றலை நுகர்ந்து அதன் உணர்வின் தன்மையை தமக்குள் கருவாக்கி இருவருமே ஒன்றாக இணைத்திடல் வேண்டும். ஏனென்றால் மீண்டும் மீண்டும் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.

கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இணைத்து இந்த உணர்வின் தன்மை இணைந்த அணுக்களாக தனக்குள் உருவாக்குவதும் அவ்வாறு உருவாக்க இந்த உணர்வுகள் இந்த உடலில் உள்ள அணுக்களில் தீமை செய்யும் அணுக்களை நன்மை செய்யும் அணுக்களாக மாற்றி அமைக்கும் சக்தியாக உருப்பெறும்.

ஆகவே இத்தகைய உணர்வை தனக்குள் இணைத்து உருவாக்கும் ஆற்றல் பெற்றது நமக்குள் இருக்கும் இந்த ஆறாவது அறிவு.

இன்று ஒருவன் தீமை செய்கின்றான், அவனை அழித்து விடுகிறேன் என்று உணர்வினை நுகர்ந்து விட்டால் அதன் உணர்வை தனக்குள் வளர்த்து தீமை செய்யும் உடலாக மாற்றுகின்றான்.

தீமையின் நிலைகளை தனக்குள் செயலாக்கும் உணர்வாக வளர்த்து தீமை செய்யும் எண்ணங்கள் கொண்டு தீமை செய்யும் உடலாக மாற்றி விடுகின்றது.

தீமையை அகற்றிடும் அருள் ஞானியின் உணர்வுகளைப் பெற்று  கணவனும் மனைவியும் இந்த இணைந்த உணர்வுகள் சேர்க்கப்படும்போது இந்த உடலுக்குள் தீமையை உருவாக்கும் அத்தகைய அணுக்களைச் செயலற்றதாக மாற்றிவிடும்.

உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி
ஒளியின் சரீரமாக நிலை கொண்டிருக்கும் அந்த நிலையைப் பெறும்
இணைந்திடும், இணை சேர்க்கும் உணர்வுகள்தான்
பிரம்ம முகூர்த்தம் என்பது.

May 27, 2015

தீமைகளை அகற்றும் சிவக்குழந்தை சிங்காரவேலன்...!

ஆறாவது அறிவின் தன்மை கொண்டுதான் முருகன் என்றும் குழந்தை என்று இப்பொழுது நாம் பல கோணங்களில் காரணப் பெயரைச் சூட்டி முருகன் ஆலயங்களை வைக்கின்றார்கள்.

ஆறாவது அறிவின் தன்மை - முருகு என்றால் மாற்றி அமைக்கும் சக்தி, தீமைகளை அகற்றி விட்டு மகிழ்ச்சி பெறும் சக்தியை உருவாக்குவது.

சிவக்குழந்தை சிங்காரவேலன் முருகன். அதாவது சிவன் என்ற நிலையில் இந்த உடலில் உருவான ஆறாவது அறிவின் தன்மையைத்தான் சிவக்குழந்தை என்று சொல்வது

இந்த உடலான சிவத்திற்குள் நாம் எண்ணிய உணர்வுகள் அது குழந்தையாக வருகின்றது. தீமைகளை அகற்றும் நிலையாக
அருள் மகரிஷியின் உணர்வுகளை
இந்த உடலான சிவத்துக்குள் நாம் உருவாக்கினால்
நுகரும் மகரிஷிகளின் உணர்வுகள்
சிவக்குழந்தையாக நமக்குள் விளைகின்றது.

ஆறாவது தன்மை கொண்டு இன்று துருவ நட்சத்திரமாக அகஸ்தியனும் அவன் மனைவியும் சிவக்குழந்தையாக வளர்த்து அந்த உணர்வின் தன்மை இன்று ஒளியின் சுடராக இருப்பது போன்று சிவக்குழந்தை என்ற இந்த ஆலயத்தில் நாமும் துருவ மகரிஷியின் ஆற்றலை நமக்குள் பெருக்கும் அந்த ஆற்றலைப் பெறுகின்றோம்.

அதைப் பெறச் செய்வதற்கு இந்த உணர்வினை செவி வழி கொண்டு உணர்சிகளைத் தூண்டி உங்களின் நினைவின் ஆற்றலை விண்ணுக்குக் கொண்டு செல்கிறோம்.

துருவ மகரிஷியின் ஆற்றலையும் துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதையும் அவர்களைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகளையும் நாம் நுகரப்படும்போது சிவமாகி அந்த உணர்வுகள் அணுக்களாக மாறும்போது நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் குழந்தையாக உருவாகின்றது.

இதன்வழி கொண்டு நாம் நுகரும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள்
தீமைகள் அகற்றும் அருள் குழந்தையாக
அருள் சக்தியை வளர்க்கும் குழந்தையாக
சிவக்குழந்தையாக நமக்குள் வளரச்செய்யும்.

சிவக்குழந்தை என்றால் நாம் காரணப் பெயரைத்தான் தெரிந்து கொள்ள முடிந்ததே தவிர ஆனால் சிவக்குழந்தை என்பது நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் ஓ என்று ஜீவ அணுவாகி இந்த உடலின் தன்மை தன்னுடன் அது உறையப்படும்போது சிவம் என்றும் அதிலிருந்து இயக்கும் அணுக்களை அதனுடைய குழந்தைகள் என்றும் காரணப் பெயரை வைக்கின்றார்கள் அன்றைய ஞானிகள்.

அதைத்தான் நாம் நுகரும் உணர்வுகள் எக்குணமோ அது உணர்வின் தன் உடலாக்கப்படும்போது சிவன் என்றும் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மையை அந்த அணுக்களை வினை என்றும் விநாயகா என்றும் காரணப் பெயரைச் சூட்டி பல கோணங்களிலும் நாம் இந்த உணர்வின் உண்மையின் தன்மையை நாம் அறிந்து அதன் அறிவாக இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்றிடும் நிலைகள் பெறத்தான் இதைச் செய்தது.

ஆகவே ஆறாவது அறிவு கொண்ட நாம் ஆறாவது அறிவின் துணை கொண்டு நம்மைக் காத்திட தீமையை வென்று இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டிருக்கும் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையைச் சிவமாக்கி அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் குழந்தையாக்கிட வேண்டும்.

குழந்தைக்கு மீண்டும் மீண்டும் நாம் உணவு ஊட்டி அதை வளர்ப்பது போல் இந்த சிவக்குழந்தையை வளர்த்திட
அருள் மகரிஷியின் உணர்வுகளை
நாம் மீண்டும் மீண்டும் நுகர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.

அப்படி அந்த அருள் ஞானத்தை நமக்குள் பெருக்கி வளர்த்திடும்போது இந்த உடலை விட்டு நாம் எப்பொழுது சென்றாலும் என்றும் பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷியின் அருள் வட்டத்தில் நம்மை இணைக்கச் செய்யும்.

May 26, 2015

துருவத்தின் வழியாக வரும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைச் சுவாசிப்பதே துருவ தியானம்

அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்தறிந்தனால் துருவ நட்சத்திரமானான். இன்று நம் பூமிக்கு வருவதனைத்தையும்
அகஸ்தியனும் அவன் மனைவியும் ஒளிச்சுடராக மாற்றி,
ஒளியின் சுடராக உருவாக்கிக் கொண்டே உள்ளார்கள்.

துருவ நட்சத்திரம் தன் இனப் பெருக்கத்தை ஒளிச் சுடராக மாற்றி இன்றும் நமது பூமியில் பரவிக் கொண்டுள்ளது.

அந்தத் துருவப் பகுதியில் இருந்து வரும் அந்தச் சக்தியை நாம் பருகும் நிலைக்குத்தான் இந்த உபதேசமே.

அவர்கள் இருவரும் நஞ்சினை வென்று இந்த உடலிலேயே ஒளி அதாவது ஒளியாக மாற்றும் உணர்வுகள் பெற்றார்கள்.

அதை நாம் நுகர்ந்தோமென்றால் இந்த வாழ்க்கையில் நம்மையறியாது எத்தனையோ விஷத்தன்மைகள் நாம் நுகர நேர்ந்து விஷ அணுக்கள் நமக்குள் உருவாகி
இந்த மனிதனின் உடலைக் கரையச் செய்யும்
அல்லது மாற்றி அமைக்கும் நிலைகளிலிருந்து நாம் தப்ப முடியும்.

எப்படி வராகன், தீமைகளை வென்றிடும் உணர்வு பெற்று மனிதனாக உருவாக்கியதோ, இதைப் போல மனிதனான பின் தீமையை வென்றிடும் அந்த உணர்வின் எண்ணம் கொண்டு நாம் அந்த்த் தீமையை வென்றிட்ட அருள் மகரிஷியின் உணர்வை நாம் நுகரவேண்டும்.

துருவ மகரிஷியின் ஆற்றலை நாம் பெற்று விட்டால் நமக்குள் அதை உருவாக்கி நம் உடலிலே வளர்த்துக் கொண்டபின், இந்த உடலை விட்டு நாம் செல்லும்போது இந்தப் புவியின் பிடிப்பை அகற்றி விட்டு விண் உலகில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் ஏழாவது நிலைகள் கொண்ட சப்தரிஷி மண்டலத்துடன் நாம் ஐக்கியமாக முடியும்.

இன்று சூரியனின் காந்த சக்தி துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளைக் கவர்ந்து துருவப்பகுதியின் வழியாக நம் பூமிக்குள் பரவச்செய்து கொண்டிருக்கின்றது.

நமது குருநாதர் எந்தத் தருணத்தில் எனக்குள் அதை உபதேசித்து அந்த உணர்வைக் கவரும்படி செய்தாரோ அதைப் போல் இப்பொழுது உங்களுக்குள் அந்த துருவ மகரிஷி துருவ நட்சத்திரமானபின் அதிலிருந்து வெளிப்படும் உணர்வை சூரியன் காந்த சக்தி கவர்ந்த அலைகளாக மாற்றி,
நம் பூமிக்கு வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில்
அந்த அருள் ஞானியின் உணர்வை
உங்களுக்குள் அந்த உணர்ச்சியைத் தூண்டச்செய்து
செவி வழி இந்த உணர்வின் தன்மை உணர்ச்சிகளை ஊட்டி,
உங்கள்  நினைவின் ஆற்றலைக் கவரும்
கண்களால் ஈர்க்கச் செய்வதும்,
இப்போது யாம் உபதேசிக்கும் இந்த நேரத்தில்
உங்கள் நினைவுகள் உணர்வுகள் அனைத்தும்
துருவப் பகுதியில் துருவ நட்சத்திரத்தின் நினைவுடன்
உங்கள் எண்ணங்களைச் செலுத்தச் செய்வதும்
இந்த உணர்வுகளைத் தூண்டச்செய்வதும்
அதை உங்கள் கண்களில் நினைவாக்கப்படும்போது
கண்களின் கருவிழி அந்த நினைவின் ஆற்றலை
உங்கள் உடலுக்குள் இருக்கும்
ஊனுக்குள் துருவநட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்குகின்றது.


பதிவாகும் இதே உணர்வின் தன்மையை விண்ணை நோக்கி நீங்கள் ஏகும்போது உங்கள் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன்கள் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நம் பூமிக்கு வரும் துருவ மகரிஷியின் உணர்வுகளைக் கவர்ந்து உயிரின் தன்மை கொண்டு உயிர் வழியாக உங்களை சுவாசிக்கச் செய்து நஞ்சினை வென்றிடும் உணர்வின் அணுக்களாக உங்களுக்குள் அது உருவாக்கச் செய்வதற்கே இந்தத் துருவ தியானம்.

ஏனென்றால், எமது குருநாதர் இத்தருணத்தில் தியானிக்கும்படி எமக்குள் எப்படி உருவாக்கினாரோ, அதே போன்று உங்களுக்குள்ளும் இது உருவாக்கப்பட்டு அந்தச் சக்திகளை நீங்களும் பெறுவதற்குத்தான் இந்தத் துருவ தியானத்தை அமைத்திருக்கிறோம்.

May 25, 2015

உங்களை உற்சாகப்படுத்துவதற்கு யாம் கொடுக்கும் அருள் பிரசாதம்

“சாமியிடம் (ஞானகுரு) சென்றால் தலைவலி நீங்கிவிடும்” – யாரோ சொன்னார்கள் என்று. இங்கே தபோவனத்திற்கு என்னைத் தேடி வருகிறார்கள்.

நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சுவாசியுங்கள். தியானத்தில் அதை  எடுத்தீர்களென்றால் எல்லாம் நன்றாகிவிடும் என்று இங்கே யாம் சொல்கிறோம்.

ஆனால் அவர்களோ, “இல்லைங்க., சாமியிடம் சென்றால் அவரைப் பார்த்தால் தலைவலி நீங்கிவிடும்” என்று சொன்னார்கள். அதனால் வந்தேன்; சொன்னார்கள்.., அதனால் வந்தேன் என்கிறார்கள்.

இங்கே இருந்து தீமையை நீக்கக்கூடிய சக்தியாக துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை தியானித்தில் எடுக்கப் பழகிக் கொண்டு நாளைக்குச் செல்லுங்கள் என்று யாம் சொல்கிறோம்.

"நேரமாகின்றது உடனே போக வேண்டும்" என்கின்றார்கள்.

ஆனால், உடல் சரியில்லை என்று இங்கிருந்து டாக்டரிடம் சென்றால் இருந்து நாளைக்கு பார்த்துவிட்டுப் போங்கள் என்று சொன்னால் என்ன செய்வார்கள்?

நாளைக்கு APPOINTMENT கொடுக்க மாட்டார்கள் என்றால் கிளம்பிச் செல்வார்களா? போகமாட்டார்கள். இருந்து பார்த்துவிட்டுத்தான் போவார்கள்.

ஆனால், இங்கே யாம் உபதேசிக்கும் மெய்ஞானிகளின் உணர்வுகள் தீமையை நீக்கக்கூடிய சக்தி எளிதாகக் கிடைப்பதால் லேசாகச் சொல்லிவிட்டுச் சென்று விடுகின்றார்கள்.

அதாவது, எனக்கு என்னமோ அவர்களால் ஏதோ இலாபம் வருகின்ற மாதிரியும், நான் இருக்கச் சொன்னவுடன் “என்னால் இருக்க முடியாது” என்று சொல்லிவிட்டுப் போய்விடுகின்றார்கள்.

இப்பொழுது யாம் என்ன செய்கின்றோம்? உங்களுக்கு உற்சாகம் ஊட்டுவதற்குச் சில வேலைகளைச் செய்கிறோம்.

யாரோ நான்கு பேர் நல்ல மனதுடன் தபோவன வளர்ச்சிக்காகப் பணம் கொடுக்கின்றார்கள். இங்கே தேடி வந்து அந்த நல்ல மனதுடன் பணத்தை அவர்கள் கொடுக்கின்றார்கள்.

தபோவனத்திற்கு வரும் அனைவரும் உயர்ந்த நிலை பெறவேண்டும்.
அனைவரும் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும்.
அருள்ஞானம் அனைவருக்குள்ளும் ஓங்கி வளரவேண்டும்
என்ற இந்த ஆசையுடன் அந்தக் காசை எம்மிடம் கொடுக்கின்றார்கள்.

அந்தக் காசைத்தான் யாம் உங்கள் கையில் கொடுக்கிறோம்.

ஏனென்றால், அந்த எண்ணம் அந்த மாக்னட் (MAGNET) அதன் வழி உங்களுக்குக் கிடைக்க வேண்டும். பணம் உங்களுக்குக் கிடைக்கவேண்டும்.  அந்த உற்சாகம் வர வேண்டும் என்று செய்கிறோம்.

இதை நாம் குருநாதர் சொன்ன வழியில் "உங்களை மனிதனுடைய மனோநிலைக்குத் தக்கவாறு நாம் எப்படி இந்த காலத்திற்குத் தக்கவாறு மாற்ற வேண்டும்" என்று உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றோம்.

வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்குவதற்கு அந்த மகரிஷிகளின் அருள்சக்தி ஒவ்வொருவரும் பெறவேண்டும். தியானத்தின் மூலம் அதை எடுக்கப் பழகவேண்டும் என்ற அந்த ஆசையில்தான் இதைச் செய்கிறோம். அலட்சியப்படுத்திவிடாதீர்கள்.

உங்களை நீங்கள் நம்புங்கள்.

May 23, 2015

அகஸ்தியரும் அவர் மனைவியும் இன்றும் எங்கு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்...?

அகண்ட அண்டமும் இந்த பிண்டத்திற்குள் எப்படி வந்தது என்று
மின்னல்கள், உயிர் இனங்களாக கடல்வாழ் நிலைகள் பெற்று
சனிக்கோளால் ஈர்க்கப்பட்டு புயலில் ஈர்க்கப்பட்டு
அதன் உணர்வுகள் மேகங்களில் பரவப்பட்டு,
மேகங்களில் பரவியபின் மழையாகப் பெய்யும்போது
தரையிலும் உயிரினங்களின் தோற்றம் வருகிறது.

கடல்வாழ் உணர்வின் நிலைகள் வேறு, தரைவாழ் நிலைகளில் அது வரப்படும்போது, இதைப்போல பார்க்கின்றோம், சிறு சிறு சங்குகள், நத்தைகள் பல நிலைகள். நீர் நிலைகளிலும் பார்க்கின்றோம்

கடலில் வாழும் நத்தையை போன்று. நாம் நிலங்களில் உள்ள மற்ற குளம் குட்டைகளிலும் பார்க்கின்றோம். இதேபோல நத்தைகளும், தவளைகளும், நீர்ப்பாம்பும் வருகின்றது. தரை வாழ் பாம்பும் நீரில் கலக்க அந்த பாம்பினங்களும் உருவாகின்றது.

அதனதன் உணர்வுக்கொப்ப அதனதன் வாழ்க்கையின் தன்மை அமைகின்றது என்பதனை இவன் தன்னை அறிகின்றான் அகஸ்தியன்.

ஆகவே விஷத்தின் தன்மையை ஒடுக்கியபின் வான்வீதியில் தோன்றிய உயிர் முதலிலே கடல்வாழ் நிலைகள் பெற்று பின் அதிலிருந்து சனிக் கோளால் கவரப்பட்டு அதன் உணர்வின் தன்மை மேகங்களில் படர்ப்பட்டு அதன் வழி கொண்டு தரையில் வாழும் புழு பூச்சிகளாக உருப்பெற்று பரிணாம வளர்ச்சியில் மனிதனாக விளைந்தோம் என்பதை உணர்ந்தான் அகஸ்தியன்.

அகஸ்தியன் காட்டில் விளையும் தாவர இனங்களை நுகர்ந்தறிந்தான். அதன் இயக்கங்கள் எவ்வாறு என்று அவன் அறிந்த உணர்வைத்தான் நானும் நுகர்ந்து உனக்குள் சொல்ல முடிகின்றது என்று குருநாதர் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) கூறினார்
அகஸ்தியன் முதலில் துன்பப்பட்டான், உணர்ந்தான்.
அவனுக்குள் அது விளைந்தது.

அகஸ்தியன் கண்ட உண்மையின் உணர்வுகளை எனது சந்தர்ப்பம். அதை நுகரும் அறிவும் எனக்குள் வந்தது. அறிந்த உணர்வுகள் எனக்குள் வலுப்பெறும் தன்மையும் வந்தது என்றார் குருநாதர்.

அகஸ்தியன் வானை நோக்கி துருவத்தின் ஆற்றலை அறியத் தொடங்கி துருவனாகின்றான். தாவர இனங்கள் இங்கே பூமிக்குள் எப்படி விளைகின்றது. விளைந்த நிலைகள் எவ்வாறு பரவுகின்றது என்பதனை அறிந்தான்.

துருவன் ஆனபின், திருமணம் செய்யும்போது தன் மனைவிக்கு அதையெல்லாம் போதித்தான். இந்த உணர்வின் வலிமையைத் தன் மனைவிக்கு செருகேற்றி இருவரும் சமம் என்ற உணர்வுகள் பெற்றனர்.

27 நட்சத்திரங்கள் அது நுகரும் உணர்வுகளை இருவருமே  நுகர்ந்து இரு உயிரிலும் உணர்வுகளை ஒன்றாக்கினார்கள்.

நட்சத்திரங்கள் தாக்குதலால் உயிரணு தோன்றியது போன்று, பல பல நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் உணர்வினை அது உற்று நோக்கி தன் கணவன் பெற வேண்டுமென்றும் கணவன் மனைவி பெற வேண்டும் என்றும் ஒருவருக்கொருவர் இணைத்துக் கொண்டார்கள்.

நட்சத்திரங்களிலிருந்து வரும் விஷத் தன்மைகளை அடக்கிப் பழகிய அவர்கள் இருவர் உணர்வுகளும் ஒன்றாக்கப்படும்போது
அத்தகைய அணுத்தன்மை உருவாகும் கருவாக உருவாகி
அவர்கள் உடல்களில் விளைகின்றது.

இருவர் உடல்களிலும் அணுக்களாக உருவாகியதால் அந்த நட்சத்திரங்களில் வந்த சிதைவுகளை உற்றுநோக்கி அந்த உணர்வின் தன்மை கவர்ந்து அது (உருவான அணுக்கள்) உணவாக எடுத்துக்கொள்ளும் நிலை வருகின்றது.

உயிர் துடிப்பின் நிலைகள் பெற்றது. 27 நட்சத்திரங்களை சமப்படுத்தி ஒன்றென இணைத்து சூரியன் தனக்குள் பாதரசங்களை எடுத்து வெளிப்படுத்தும்போது உலகையே ஒளிக்கற்றைகளாக மாற்றுகின்றது.

அதைப்போன்று உயிரின் தன்மை கொண்டு 27 நட்சத்திரங்களின் உணர்வின் அணு செல்கள் இருவருக்குள்ளும் விளைந்து
உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
ஒளியின் தன்மையாகப் பெற்றதுதான் துருவ நட்சத்திரம்.

நட்சத்திரங்களின் உணர்வால் உயிர் உருவானது போன்று
உடலிலுள்ள அணுக்களின் தன்மையும்
ஒவ்வொரு நட்சத்திரத்தின் உணர்வுகளையும்
அதிலிருந்து வெளிப்படும் ஒளிக் கற்றைகளையும்
தனக்குள் இணைத்து உயிருடன் ஒன்றி
ஒரே ஒளித்தன்மையாக
கணவனும் மனைவியும் இதைக் கருவுற்று
கருவின் நிலையாக ஒளியின் அணுவாக உருவாக்கி
அவர்கள் இருவரும் எதை உற்று நோக்கினார்களோ
துருவப்பகுதியை எல்லையாக வைத்து இன்றும் இரு உயிரும் ஒன்றி வாழ்கின்றது.

அதுதான் துருவ நட்சத்திரம்.