ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 31, 2014

மனிதனானபின் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பைவிட்டு நாம் அகலவேண்டும்.

எத்தனையோ பேர் பக்தியின் நிலைகள் கொண்டு தெய்வத்தின் மேல் பாசத்தைக் கொண்டிருந்தாலும், அதே தெய்வ உணர்வு கொண்டு ஒரு மனிதன் இருந்தால், இந்த உயிராத்மா அந்த உடலுக்குள் போய் அருளாடச் செய்யும்.

ஆனால் இந்த உடலிலிருக்கும்போது எந்த வேதனையைக் கொண்டு எந்த தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்ததோ, இதே உணர்வுகள் அந்த உடலில் சேர்ந்து
நான்தான் முருகன் என்ற நிலையில் அங்கே ஆடச் செய்து,
துன்பத்தை விளைவிக்கச் செய்யும்
குடும்பத்தில் பல இன்னல்கள் வரும்.

ஆனால் அந்த உடலுக்குள் சென்றாலும், அந்த உணர்வின் தன்மை அந்த உடலுக்குள் சென்று இந்த விஷத்தைச் சேர்த்து அதிலும் விஷத்தை சேர்த்து, இரண்டும் இறந்தபின் இந்த வாசனையினுடைய நிலைகள் வேதனை என்ற வியாதியினுடைய நிலைகளை மாற்றிக்கொள்ளுகின்றது.

அப்பொழுது, இந்த உயிராத்மா வெளியிலே வந்தவுடன் அதாவது ஒரு பொருளுக்குள் விஷம் பட்டால், நம்மைத் தேள் கொட்டிவிட்டால் நம் சிந்தனையெல்லாம் இழந்துவிடுவது போன்று வேதனை, வேதனை என்று விஷத்தை அதிகமாக எடுத்துக்கொண்டால் இந்த மனிதனுடைய நினைவலைகள் அனைத்துமே அழிக்கப்படுகின்றது. அழிந்தபின்தான் ஒரு உடலுக்குள் செல்கின்றது.

ஆனால் மனிதன் எண்ண அலைகளை வளர்த்துக்கொண்ட பின், ஒரு உடலுக்குள் சென்றுவிட்டால் இந்த உணர்வுகள் அவனை இயக்கி, இவன் நிலைக்கு அவனை இட்டுச்செல்லும்,

மந்திரமோ, தந்திரமோ கற்றவருடைய நிலைகள் இப்படித்தான்.

அந்த மந்திரத்தின் மேல் ஆசைப்பட்டுக் கொண்டு அந்த உணர்வின் தன்மை ஏங்கிக் கொண்டிருக்கும்போது, மந்திரம் செய்துகொண்ட ஒரு ஆத்மா இவன் உடலுக்குள் புகுந்துவிட்டால் அந்த மந்திரத்தின் செயலே அங்கு ஆக்கச் செய்யும்.

ஆனால் அது சென்ற வழிகளில் இட்டுச்சென்று, அதன் வழிகளில் பல வியாதிகளைச் சேர்க்கச் செய்து இதே மாதிரி விஷத்தின் தன்மை அதிகமானவுடன் இந்த மனித உடலில் சேர்த்துக்கொண்ட உணர்வுகளெல்லாம் ஒடுங்கிவிடும்.
அப்படி ஒடுங்கிவிட்டால்
மீண்டும் மனித வாசனையை இழந்துவிடும்.

ஆனால், மிருகங்கள் விஷத்தின் தன்மையை தனக்குள் எப்படிச் சேர்த்துக் கொண்டிருக்கின்றதோ, மிருகத்தின் ஈர்ப்புக்குள் இந்த உயிராத்மா சென்று அந்த உடலுக்குள் புகுந்து அந்த உடலின் தன்மையைப் பெறச் செய்துவிடும்.

உதாரணமாக கொசு நம்மைக் கடிக்கிறதென்றால், அந்தக் கொசுவின் உயிராத்மாவில் மனிதனுடைய வாசனை இருக்கிறது. கொசு இறந்து விட்டால் அது மனிதனின் ஈர்ப்புக்குள் வந்துவிடுகின்றது.

இப்பொழுது நமது இரத்தத்தை குடிக்கின்றது. அதனுடைய உயிராத்மாவில் அது சேர்கின்றது.
ஆனால் கொசு இறந்தபின் அந்த உயிராத்மாவில் மனிதனுடைய வாசனை அதிகமாக இருக்கின்றது. அப்பொழுது அந்த கொசுவின் உயிராத்மாவை நம் உடல் ஈர்த்துக்கொள்ளும்.

நம் உடல் ஈர்த்துக்கொண்டு, நம் சுவாசத்துக்குள் சென்று உடலுக்குள் சென்றவுடன், அது உடலுடன் இருக்கும்போது, நம் இரத்தத்தைக் குடித்து, அந்த உயிரின் அணுவாக சுவாசத்திற்குள் உடலுடன் போனால் கொசு மனிதனாகப் பிறக்கும் தகுதியைப் பெறுகின்றது.

ஆனால், மனிதனோ ஒரு உடலுக்குள் புகுந்து அவனை இயக்கக்கூடிய சக்தியாக மாறுகின்றது. அங்கே குழந்தையாகப் பிறக்கும் தன்மையை இழக்கின்றது.

இதைப் போன்று அந்த இயற்கையினுடைய செயல்களில் இருக்கப்படும்பொழுது, மனிதனானபின் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பைவிட்டு நாம் அகலவேண்டும்.

அப்படி அகல்வதற்குத்தான் யாம் சொல்லும் இந்த பேருண்மையுடைய நிலைகளில் அந்த தாய், தந்தையினுடைய பாசத்துடன் நாம் வளரவேண்டும்.

வாரத்தில் ஒரு நாள் கூட்டுக் குடும்ப தியானங்கள் இருந்து, முறைப்படி தியானத்தை எடுத்து மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று விண்ணை நோக்கி ஏங்கிப் பழகவேண்டும்.

மகரிஷிகளி அருள் சக்திகளை வளர்க்க வளர்க்க, இந்த உடலை விட்டு எந்த நேரம் நாம் பிரிந்தாலும் அந்த சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து பிறவியில்லா நிலையை அடைய முடியும்.
பேரானந்த பெரு நிலை என்ற நிலை அடைந்து
அழியா ஒளி சரீரம் பெறமுடியும்.

October 30, 2014

நமக்கு வேண்டியவர்கள் இறந்துவிட்டால் மிகுந்த வேதனைப்படுகின்றோம்...! அதனால் வரும் விளைவுகள் என்ன...?

சொந்தக்காரர் என்று ஒருவர் மேல் ரொம்பவும் பிரியமாக இருப்பார்கள். அப்படி இருக்கப்படும்போது அவர் உடலில் நோய் வந்து வேதனைப்படுகின்றார்.

அந்த வேதனையினாலே, அந்தப் பாசத்தாலே பார்க்கும் பொழுது அவர்படும் வேதனையான உணர்வுகளையெல்லாம் பாசத்தினால் இழுத்துக் கொள்கிறார்கள்.

அந்த வேதனையான உணர்வுகள் இவர் உடலிலும் விளைந்து,
அவர் உடலிலே என்னென்ன சத்தின் தன்மைகள் இருந்ததோ
அதெல்லாம் இவர் ஈர்ப்புக்குள் வந்து
பாசத்துடன் இருப்பவருடைய உடலுக்குள் புகுந்துவிடுகிறது.

ஆனால், இவ்வாறு புகுந்து விளைந்தவுடனே அவரை எண்ணியே இவரும் சதா வேதனைப்படுகிறார்.

வேதனை என்பது விஷம். விஷமான சத்துகளை இவ்வாறு வளர்த்து அந்த வேதனை கொண்டு,
“ஐயோ., உனக்கு இப்படி இருக்கிறதே,
எல்லோருக்கும் நல்லது செய்தாயே.,
உனக்கு இப்படி வந்துவிட்டதே” என்று இந்த உணர்வுகள்
இந்தப் பாசத்தை மீண்டும் செலுத்த செலுத்த, இந்தப் பாசத்தினால் வேதனைகளைச் சொன்னபடி அங்கே துக்கம் தாளாதபடி இன்னும் அதிகமாகும்.

இப்படி அதிகமானாலும் வியாதியானவர்களின் உணர்வுகள் இங்கே கலந்திருப்பதால், அவர்கள் உணர்வுகள் இங்கே பட்டு கடுமையாக இருந்ததனால் அந்த உயிராத்மாவை இங்கே இழுத்துக்கொள்ளும்.

அதாவது அந்த உயிராத்மா வெளியில் வந்தவுடன், இந்தப் பாசத்தினாலே எங்கும் செல்லாது இவர் உடலுக்குள் வந்துவிடும்.

வந்தவுடன், அந்த உடலில் என்னென்ன வியாதிகள் இருந்ததோ, அது உருபெறும். வெளியிலே இருக்கும்போது நாம் என்னென்ன வேதனைப்பட்டோமோ அதே எண்ணத்தை அதிகமாகத் தூண்டி அழகையும் சிந்தனையற்ற நிலையும் உருவாக்கிவிடும்.

பின், உடலில் விஷத்தை அதிகமாக வளர்த்து அந்த உயிராத்மா இந்த உடலுக்குள் வந்தாலும் குழந்தையாகப் பிறக்காதபடி அதையும் கொன்று
இது விஷத்தின் தன்மை கொண்டு
விஷமான அலைகளைப் பரப்பிச் செல்கின்றது.

இதைப்போல அடிக்கடி நாம் வேதனையான உணர்வுகளை எடுத்தால், பாசமான உயிராத்மா உடலுக்குள் வந்தவுடன் இந்த உடலுக்குள் வேதனையை வளர்த்து, இந்த உயிராத்மாவும் அந்த உடலிலுள்ள உயிராத்மாவும் இரண்டும் கலந்து
இரண்டு ஆத்மாவும் இந்த உடலைவிட்டுச் சென்றபின்,
இது இரண்டுமே மிருகமாகத்தான் போய்ப் பிறக்கும்.

ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு வாசனை உண்டு. ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு குணம் உண்டு. அந்த குணத்திற்குத்தக்க அந்த வாசனை உண்டு.

ஆக இந்த விஷத்தின் தன்மை வரப்படுபோது, மனிதனுடைய வாசனையை இழக்கச் செய்து, மிருகத்திற்கொப்பான வாசனையை ஏற்கச் செய்துவிடுகின்றது.

பின் நாம் எங்கே போவோம்?

புவியின் ஈர்ப்பினுடைய நிலைகள் மனிதனுடைய அங்கங்களை இழந்து சிந்தனையற்ற நிலைகள் பெற்று, மிருகங்களாகத் தான் பிறக்கின்றோம்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

October 29, 2014

ஜீவ நீரை உற்பத்தி செய்யும் அகஸ்திய மாமகரிஷியின் ஆற்றல்

 இன்று காவேரி நதி பிறப்பது எங்கே? மலை உச்சியிலே. அப்படி நீர்ப் பொங்கி எழும்போது அங்கே வேறு எந்த விதமான நிலையும் கிடையாது.

இப்போது தலைக் காவேரியில், மேலே எடுத்துக் கொண்டால் அந்த பாகமண்டலத்தில்தான் நீர் உற்பத்தியாகின்றது. அங்கே உற்பத்தியாவது தான் இப்போது நம் காவேரி நதிக்கு வருகின்றது.

உற்பத்தி ஆகக்கூடிய தன்மை என்ன?

அங்கே அகஸ்திய மாமகரிஷி ஜெபமிருந்த இடம். அப்போது அவர் எடுத்துக்கொண்ட அந்த சக்தியின் தன்மையை அங்கே இருக்கக்கூடிய பாறையும் மண்ணும் இழுத்துக் கொள்கிறது.

அப்படி இழுத்து சேமித்துக் கொண்ட அந்த சக்தி அகஸ்திய மாமகரிஷியினுடைய அருள்சக்தி எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டது.
இப்போதும் அவர்கள் எங்கெல்லாம் அமர்ந்திருந்தார்களோ, அங்கெல்லாம் நீர் சக்தி இருக்கும்.

காரணம், அவர் உடலிலிருந்த நீர்சக்தி. அங்கெல்லாம் நீரை இழுக்கக்கூடிய சக்தியினுடைய நிலைகள் அந்த பாறைகளிலே பதிந்து இருக்கின்றது.

பதிந்திருக்கக்கூடிய அந்தச் சக்திதான் இப்போது வான மண்டலத்தில் மேகங்களாகச் செல்லும்போது அந்த மேகத்தின் தன்மையை அது தனக்குள் ஈர்த்துக் கவர்ந்து மேகங்களை நீராக மலை பாகங்களில் அது உற்பத்தி செய்கிறது.

மலையின் உச்சியிலே நீர் வருவதற்கு அதுதான் காரணம். அதிலிருந்து வடித்துத்தான் கீழ்நோக்கி வருகின்றது.

பூமி நிலம் மலைக்கு கீழே எவ்வளவோ ஆழத்தில் இருக்கின்றது. எத்தனை ஆழமாக தோண்டினாலும் நீர் நிலை 100, 200, 300 அடி தோண்டினாலும் அங்கே நீர் இருப்பதில்லை.

ஒரு சில பகுதிகளிலேதான் அவ்வாறு இருக்கும். எல்லாப் பகுதிகளிலும் அவ்வாறு இருப்பதில்லை.

காரணம், இதைப்போன்ற ரிஷிகள் அவர்கள் எடுத்துக்கொண்ட ஆற்றலின் சக்தியை அவர் உடலுக்குள் இயக்கச் சக்தியாக மாற்றி அவர்கள் எங்கிருந்து ஜெபித்தார்களோ அங்கு பூமியின் ஈர்ப்பலைகளுக்குள் அவரின் சக்தியை அங்கே பதியச் செய்து,
பதிந்த சக்தியினுடைய உணர்வின் ஆற்றல்தான்
மேகங்களாகப் போவதை தன் வசம் இழுத்து
அந்த மலைப்பாங்கிலே உராய்ந்தபின்
அதனுடைய நீராக அது வடிகின்றது;

மற்ற பாறைகளில் பார்த்தால் லேசாக பனித்துளி போலத்தான் இருக்குமே தவிர, அதன் அருகில் பட்டவுடன் அது அத்துடன் நின்று போய்விடும்.

இந்த மேகக் காலங்களில் சில இடங்களில் அவ்வாறு இருக்காது. ஆனால் அந்த மகரிஷியினுடைய தன்மையில் எங்கே அமர்ந்தார்களோ, அதை சுருக்கி நீராக மாற்றும் சக்தி பெற்றது.

இதைப் போன்று அவர்கள் ஆவியாக இருப்பதை நீராக மாற்றியதைப் போன்று,
அணுக்களாக இருக்கக்கூடிய கடும் விஷத்தையும்
தனக்குள் ஜீவ சக்தியாக மாற்றி
ஒளியாக மாற்றிச் சென்றவர்கள் மாமகரிஷிகள்.

October 28, 2014

விஞ்ஞான அறிவில் ELECTRONIC உணர்ச்சிகளால் ஏற்படும் தீமைகளிலிருந்து விடுபடுங்கள்

இன்றைய விஞ்ஞான அறிவில் இயற்கையில் விளைந்த சூரியனின் ஒளிக்கதிர்களில் எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் என்ற உணர்வுகளை மாற்றி அமைத்து அதே உணர்வுகளை T.V திரைகளில் பார்க்கச் செய்து, அந்த எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் என்ற உணர்ச்சிகள் நம்மை இயக்கச் செய்து, இதையே நம்முள் விளையச் செய்து,
இயற்கையில் விளைந்த உணர்வின் தன்மையை மாற்றி,
செயற்கையில் விளைந்த உணர்வுகள்
நம்மை இயக்கும்படி செய்கிறார்கள்.

இப்போது நாம் மிளகாயை வறுக்கிறோம் என்றால் நெடி வருகின்றது. இந்த செயல். அந்த உணர்வின் தன்மை ஆனபின் நமக்குத் தொல்லை வருகிறது.

ஆகவே, மனிதன் நாம் மகிழ்ச்சி பெறும் திரைக் கதைகளைக் காட்டினாலும், அந்த உணர்வு விஷத்தன்மையுடன் கலந்த உணர்வே நாம் சுவாசிக்கின்றோம்.

அருள் உணர்வைப் பெற்ற அருள்ஞானியின் உணர்வை நாம் பெற்றிருந்தாலும், திரைப்பட நிலைகளிலோ மற்ற நாடாக்களில் நாம் பார்க்கும்போது,
அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கி,
விஷத்தன்மை கொண்ட
உணர்ச்சிகளைத் தூண்டும் உணர்வலைகளைப் பரப்பி,
அதை நுகரப்படும்போது அதன் உணர்ச்சிகளே நம்மை இயக்குகின்றது.

மனிதனுக்குள் மகிழ்ச்சி பெறும் அந்த உணர்வின் தன்மை தனித்தன்மை வாய்ந்தது. அது செவிகளில் வரப்படும்போது செவிகளின் தசைகளில் சேர்ந்துவிடுகின்றது.

ஆக மகிழ்ச்சியானாலும், விஞ்ஞான அறிவு கொண்டு விஷத்தன்மைகள் அதன் உணர்வுகளில் சேர்ந்து பெருகி விடுகின்றது.

விஞ்ஞான உலகில் வாழ்கிறோம். இவற்றையெல்லாம் நம்மால் கேட்காமல் இருக்க முடியாது. உணர்வுகள் படர்ந்துள்ளதால் அதன்வழி வரப்படும்போது அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

ஆனாலும், இவை நம்மை இயக்காத நிலைகளில் அருள் ஒளி என்ற உணர்வினை நமது குரு காட்டிய வழியில் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளை நினைக்கும் பொழுதெல்லாம் அது நமக்குக் கிடைக்கும்.

தொலைக்காட்சி அலைகளை நாம் எப்படி ஒளிபரப்பு செய்கின்றோம்? அதில் நாம் எந்தச் சேனல் வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்கின்றோம்.

அதே மாதிரி ஒரு சேனல் அழுத்தம் அதிகமாகி, விஷத்தன்மை கொண்ட நிலைகளில், அடுத்த சேனல் ஒளிபரப்பு செய்யும்போது அதைத் தெளிவாக வைக்க முடியாது.

யுத்த காலங்களில் அடுத்தவர் சொல்வது கேட்காதபடி எதிர்மறையான அலைகளைப் பரப்பி விடுவார்கள்.

அதாவது, ஒளிபரப்பும் போது யுத்த நிலைகளில் சில உணர்வுகளை எடுத்து அவன் நிலைகளைத் தெளிவாகத் தெரிந்து, எதிர்மறையான அலைகளைப் பரப்பி அவனுடைய செய்திகளை மற்றவர்கள் அறிய முடியாதபடி இதை மாற்றி விடுகிறார்கள்.

இதைப் போல, விஞ்ஞான அறிவால் உலகைக் காக்கவேண்டும் என்ற நிலை இல்லாமல்,
தன்னைக் காக்க, தன் நாட்டைக் காக்க என்று
பிழை கொண்ட உணர்வுகளைத்தான்  இன்று செய்கின்றார்கள்.

ஆகவே, இப்போது நாம் உலக மக்களின் உணர்வுகளை எடுத்துக் கொண்டாலும், நமக்குள் வீரிய உணர்வின் தன்மை இருந்தாலும், நாம் நல்லதை எண்ணும் போது, இதனுடைய (விஷத் தன்மைகளின்) அழுத்தம்
நல்ல குணங்களைச் சிந்திக்கும்படி செய்வதோ,
நல்ல குணங்களைச் செயல்படுத்தும் நிலையோ இல்லாது போகும்.

அப்போது, நமக்குள் இந்த எதிர்மறையான உணர்வுகளால் நல்ல உணர்வுகளை தூண்டும் அந்த அணுக்களின் தன்மையை தடைபடுத்தும். 

இதை மாற்ற வேண்டுமென்றால், திசை திருப்புவது போல சக்தி வாய்ந்த நிலைகளில் நமது குருநாதர் எமக்கு கொடுத்த அரும்பெரும் அருள் சக்தியை  அப்படியே உங்களுக்குக் கொடுக்கிறோம்.

ஆகவே, ஒவ்வொரு நொடியிலும் நீங்கள் இதை வளர்த்து தீமைகள் புகாது தடுத்துக் கொள்ளுங்கள். எமது அருளாசிகள்.

October 27, 2014

பேரருளைப் பெற்று பேரொளியாக மாற்றுங்கள் - ஞானகுரு

குறுகிய காலமே இந்த உடல் வாழ்கின்றது. நீடித்த காலம் வாழ்வதில்லை.

இந்தக் குறுகிய காலத்திற்குள் அருள் ஒளி பெற்றால் என்றும் நீடித்த நிலையில் ஏகாந்த காலமாக என்றென்றும் ஏகாந்த வாழ்வு பெற்று, எதிர்ப்பே இல்லாத நிலையில் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றலாம்.

இந்த நிலை பெறுவதற்காகத்தான் இன்று நாம் எல்லோரும் சேர்ந்து,
மாமகரிஷி குருதேவர் எமக்கு அருளிய அருள் வழிப்படி
ஞானவித்தை எமக்குள் வளர்த்து,
அந்த ஞானத்தின் வித்தை
உங்களுக்குள் உபதேசம் மூலமாகப் பதிவுசெய்கிறோம்.

நாம் எல்லோரும் அதன் வழியில் சென்றோம் என்றால் பேரருளாக மாறுகின்றது. பெரும் அருளாக மாறுகின்றது. அப்படிப் பேரருளாக மாறும்போது, உயிர் ஒளியாக நமக்குள் மாறுகின்றது.

ஆக, பேரொளி என்ற நிலை வரும்போது இருளையும் மாற்றும் சக்தி வருகின்றது.

இதைப்போன்ற நிலைகளில் அருள் ஞானத்தைப் பெருக்குவோம். அருள் வழி வாழ்வோம் என்ற நிலைகளில் இந்த உணர்வை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த அமைதி பெறச் செய்யக்கூடிய உணர்வுகள் நாம் பெறுதல் வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் அமைதி பெறச் செய்யக்கூடிய நிலை பெறுதல் வேண்டும்.

உங்கள் உணர்வை துருவ நட்சத்திரத்துடன் இணைத்து, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டுமென்று உங்கள் ஆன்மாவை சுத்தப்படுத்தி, இந்த உணர்வுகளை பரப்பச் செய்யுங்கள்.

அதுசமயம், நமக்குள் பேருண்மையின் நிலைகளை நாம் உணரலாம்.

October 24, 2014

கர்ப்பமானவர்கள் ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்...?

கர்ப்பத்தில் இருக்கும்போது, ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள்
நாம் வெளியே ரோட்டில் போகும்போது,
ஒருவர் “காக்கா வலிப்பு” வந்து கீழே விழுவதைப் பார்த்து,
“ஐயோ பாவமே!” என்று எண்ணினால் போதும்.

நாம் தவறு செய்யவில்லை.

ஆனால் நுகர்ந்த உணர்வு இரத்தத்தில் கலந்துவிடுகிறது. காரணம், பரிவுடனும் பண்புடனும் இருக்கின்றோம். இது வசிஷ்டர் கவர்ந்து கொண்ட சக்தி. நம் உடலில் அந்த அணுவின் தன்மை ஆகின்றது.

அதே சமயத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கு இதை இணைத்தவுடன் அது இணைந்து நம் உடலில் இரத்தத்தில்தான் கலக்கின்றது.

இது சிறுகச் சிறுக போகும். ஆனால், கருவில் வளரும் குழந்தைக்கு கருவுறும் தன்மையிலேயே இணைந்து விடும்.

இப்போது விவசாயத்தில் என்ன செய்கிறார்கள். ஒரு விதையினுடைய தன்மையை இளமையில் இருக்கும்போதே மாற்றுவார்கள்.

அதுபோன்று நாம் கருத்தன்மையிலேயே இணைக்கும்போது அந்தக் குழந்தை தவறு செய்வதில்லை. ஆக இரத்தத்தில் கலந்தவுடன் இந்தக் குழந்தைக்கும் தே காக்கா வலிப்பு நோய் வந்துவிடுகிறது.

இப்படி ஆகிவிட்டதே என்று அந்தத் தாய் வேதனையை எடுக்கிறது. அதனுடைய வளர்ச்சியை எண்ணும்போது வேதனையைப் பார்த்தார்கள். அதனால் வேதனை பலவிதமான வேதனைகள் வருகின்றது.

எல்லாம் நன்றாக இருப்பார்கள். ஆனால், என் குழந்தை இப்படி இருக்கிறதே என்ற உணர்வுகளை எண்ணி எடுப்பார்கள்.

அந்த நேரத்தில் உடனே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்றும், குழந்தைக்குக் கிடைக்க வேண்டும், அருள்ஞானம் பெறவேண்டும் என்று இதையெடுத்து எண்ணிப் பாருங்கள்.

கருவில் இருக்கும் குழந்தைக்கும் அது நிச்சயம் மாற்றியமைக்கும். நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.

ஆனால் “இப்படி ஆகிவிட்டதே” என்று திருப்பி வளர்த்தீர்கள் என்றால் எல்லாம் கலந்து குழந்தைக்குத் தான் கொடுக்கின்றோம்.

சில குடும்பங்களில் மிகவும் ஏழையாக இருப்பார்கள். மெய் ஞானிகளைப் பற்றிய ஞான உணர்வுகளைக் கர்ப்பாமான தாய் அந்தத் தொண்ணூறு நாட்களுக்குள் கேட்க நேர்ந்தால் அந்தச் சந்தர்ப்பம் பூர்வ புண்ணியமாக அமைந்து, அந்தக் குழந்தை ஞானியாக உருவாகும்.

இதே மாதிரி நமது வாழ்க்கையில் இன்றைக்கு
எவ்வளவு திறமை உள்ளவராக இருந்தாலும்,
தாய் கருவிலே இருந்தபோது வந்த
பூர்வ புண்ணியமும் இணைந்தே வருகின்றது.

ஆகவேபிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும் ஞானமாகவும் இருக்க வேண்டுமென்றால் எந்த அசம்பாவிதங்களையும் கருவுற்ற தாய் பார்க்கக் கூடாது.

அதாவதுஇன்றைய சினிமாடி.வி. மற்றும் பத்திரிக்கைகளில் வரும் அதிர்ச்சியான செய்திகளையும், உணர்ச்சிகளைத் தூண்டும் நிலைகளையும், முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

அதற்குப் பதிலாகதீமைகளிலிருந்து விடுபட்ட உயர்ந்த குணங்கள் கொண்ட ஞானிகளைப் பற்றியும்நல்ல தெய்வீகக் கருத்துக்களையும் தாய் எண்ணிப் பதிவாக்கினால் அந்தக் கருவில் இருக்கும் குழந்தை எத்தகைய தீமைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடும். 

அந்தக் குழந்தையை எதுவும் அதைப் பாதிக்காது.

அவன் பிறந்தபின் தன்னையும் அறிவான், 
இந்த உலகத்தையும் அறிவான். 
நம் குடும்பத்தையும் காப்பான்,  
இந்த ஊரையும் உலகையும் காப்பான். 
அவனால் நாம் எல்லோருமே நலமடைய முடியும். 


இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது, மிகவும் அவசியம்.