
விஷத்தை ஒளியாக மாற்றும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமா…!
1.உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அந்தச் சுவைக்கொப்ப ஜீவ அணுவாக மாறி
2.அதனதன் எண்ணங்களை இயக்குகின்றது என்பது காவியத்தின் முக்கியத்
தொகுப்பு.
3.அதாவது
எந்தச் சுவையோ “அதைப்
போல் ஜீவ அணுக்களாக” உயிர் உருவாக்குகின்றது என்பதை
நாம் அறிந்திடல் வேண்டும்.
நட்சத்திரங்களுடைய சக்திகள் பூமியில் மண்ணுடன் கலந்து புவியின் ஈர்ப்பால் சிறுகச் சிறுக விளைந்து வைரமான பின் வெடித்துத்
தனித்தன்மையாக வெளிவந்து விடுகிறது.
அதைப் போல்
நம் உயிரால் உருவாக்கப்பட்ட ஜீவ அணுக்கள் நாளுக்கு நாள் அது
வெளிப்படும் பொழுது
1.அறிவின் வளர்ச்சி அறிந்திடும் வளர்ச்சி இங்கே
வருகின்றது.
2.ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் அதற்குள் பொருள் தெரிவது
போல நமது ஜீவணுக்களின் துணை கொண்டு
3.நம் கண்ணின் வளர்ச்சி கொண்டு அதன் உணர்வின் அறிவை
அறிந்திடும் ஞானமாக வளர்கின்றது.
நட்சத்திரங்களுடைய துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாக மாறி பூமியிலே
பட்டபின் சிறுகச் சிறுக வைரமாக விளைகிறது. அது ஜீவ அணு அல்ல… ஒளியின் உடலாகப் பெறுகின்றது… நட்சத்திரம் எப்படி மின்னுகின்றதோ அதைப் போல.
நமது உயிரோ “மின்னணு” போன்று அது இயங்கிக் கொண்டே இருக்கின்றது அந்த உயிரின் இயக்கத்தைக் கொண்டு நமது ஜீவ அணுக்கள் மின்னணுவின் துணை கொண்டு இயங்குகின்றது.
எப்படி மின் நிலையத்திலிருந்து வரும் மின்சாரத்தை நம் வீட்டிற்குள் எந்தெந்த இணைப்புகளுடன் சேர்க்கின்றோமோ அந்த மின் அணுக்கள் அதை இயக்கி
அதன்வழி நாம் பயன்படுத்துகின்றோமோ இதைப் போல
1.சூரியன் இயக்கத் தொடரில் நாம் வளர்ந்தாலும் நம் உயிரே சூரியனின் தொடர்பு கொண்டு தான் அதுவும் இயங்குகின்றது.
2.நாம்
எப்படி ஊருக்கு ஒரு சப்ஸ்டேசனை வைத்திருக்கின்றோமோ அதைப் போன்று நமது உயிரும் அந்த
நிலை பெறுகின்றது.
3.சூரியன் துணை கொண்டு அந்த மின் கதிர்கள் உடலில் உள்ள
அணுக்களை அது இயக்குகின்றது.
இருப்பினும் பல உணர்வின் தன்மையை அனைத்தையும் அறிந்திடும் உணர்வு கொண்டு மனித
உடலில் வந்த விஷத்தை
வென்றவன் அகஸ்தியன்.
அவன் திருமணமாகி கணவனும் மனைவியும் இரு மனமும் ஒரு மனதாகி
அருள் மணம் பெற்று… உயிரைப் போன்றே
உயிரணுக்களை வளர்த்து “விஷத்தை ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்று” ஒளி உடலாகத் துருவ
நட்சத்திரமாக ஆனார்கள்.
27 நட்சத்திரங்களும் கடும் விஷத் தன்மை கொண்டது, அதனுடைய துகள்கள் பூமியிலே பட்டால் அதன் இனத்தின்
தன்மை கொண்டு அந்த விஷங்கள் வளர்ந்து வைரங்களாக விளைகிறது.
அந்த வைரத்தை நாம் உட்கொண்டால் மனிதனை உடனடியாகச் சுருட்டி விடும்…
அவ்வளவு கடுமையான விஷம்.
1.ஆனால்
அந்த விஷத்தின் உணர்வை ஒளியாகக் காண முடிகிறது… வெளிச்சமாகத் தெரிகின்றது.
2.இதைப் போன்று தான் விஷத்தை ஒளியாக மாற்றி ஒளியின்
சுடராக துருவ நட்சத்திரம் இருக்கின்றது.
விஷமே உலகை இயக்குகின்றது. சூரியன் இயங்குகிறது என்றால் விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பத்தின்
தன்மை கொண்டு அது இயக்குகின்றது.
நமது உயிரும் விஷத்தின் தாக்குதலால் தான் துடிப்பின் தன்மை ஏற்பட்டுக் கொண்டுள்ளது. இதைப்
போல் ஒவ்வொரு அணுக்களிலும் விஷத்தன்மை
கலந்திருப்பதால் தான் அது இயக்க அணுக்களாகவும்
ஜீவ அணுக்களாகவும் மாறிக் கொண்டுள்ளது
என்பதனை நாம் அறிதல் வேண்டும்.
1.ஆறாவது அறிவால் ஒளியின் உடல் பெற்றது துருவ நட்சத்திரம்.
2.அந்தப் பேரருள் பேரொளியை
நமக்குள் சேர்த்துக் கொண்டால் நாமும் இந்த விஷத்தை ஒளியாக
மாற்ற முடியும்.
இருந்தாலும்…
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை யாரும் பெறுவது என்றால் மிகவும் கடினம். “குருவின் துணை…” இல்லாமல் எடுப்பதென்றால் மிக மிகக்
கடினம்.
1.நமது குருவின் மூலம் எத்தகைய கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் அந்த்த்
துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற முடிந்தது.
2.நமது குரு அந்த விஷத்தையும் தாங்கி அதை ஏற்றுக்
கொள்ளும் பருவத்தினை ஏற்படுத்தினார்.
3.ஆகவே தான் உங்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படிச்
செய்து…
4.விஷத்தை ஒளியாக மாற்றும் பருவத்தை ஏற்படுத்துகின்றோம்..
நாம் ஒவ்வொரு நாளும் ”உயிரின்
முகப்பில்” ஈர்க்கப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் உடல் முழுவதும் பரவுகின்றது.
இதைப் போன்று உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களின் முகப்பில்… உயிரின் துணை கொண்டு துருவ
நட்சத்திரத்தின் உணர்வினை ஈர்க்கச் செய்யும் பொழுது… அதாவது
1.என் குரு எப்படிச் செய்தாரோ அதைப் போன்று உங்களில் ஈர்க்கச் செய்யும்
பொழுது
2.நாம் அனைவரும் “ஒளியின் சரீரம்” பெறும் தகுதி பெறுகின்றோம்.