ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 22, 2026

ஐவர் மலையில் வைத்து குருநாதர் எமக்குக் கொடுத்த முழுமையான சக்தி

ஐவர் மலையில் வைத்து குருநாதர் எமக்குக் கொடுத்த முழுமையான சக்தி


என்னை வேலையை விட்டு நிற்கச் சொன்னார் குருநாதர்:-
என்னை மில்லில் இருந்து வேலையை விட்டுப் (நிற்க) போகச் சொன்னார் குருநாதர். இங்கு வீட்டில் சாமி அம்மாவுக்கு (ஞானகுருவின் மனைவி) இது தெரியாது.
 
அப்பொழுதுதான் அவர் நோயில் இருந்து எழுந்திருக்கின்றார். சாமி வேலையை விட்டு நின்று விட்டார்…” என்று இங்கு வீட்டில் வந்து சொல்லி இருக்கின்றார்கள்.
 
அங்கு யாம் வேலைக்குச் சென்றாலும் குருநாதர் என்ன செய்தார்? அவனை உடனே ரிசைன் (ராஜினாமா) பண்ணச் சொல் என்று ஆபீசில் போன் அடிக்கின்றது. 
 
ஆனால் இங்கே மில்லில் மேனேஜர் என்னை ரிசைன் செய்ய விட மாட்டேன் என்கிறார். உனக்கு என்னப்பா வேண்டும்? செலவுக்குப் பணம் வேண்டுமென்றாலும் தருகிறேன்நீ வேலையைப் பார் என்கிறார்கள்.
 
அதற்குள் போனில் குருநாதர்… “அவனை உடனே நீ வெளியே அனுப்புகிறாயா இல்லையா…!என்று அங்கே கேட்கிறார்.
 
1.அந்த மேனேஜருக்கு அதைக் கேட்டவுடனே
2.ஒரு அதிர்ச்சி மாதிரி ஆகிக்கிடு கிடு கிடு” என்று மயக்கமாக வந்து விட்டது.
 
என்னப்பா இது…? யாரோ உன்னை ரிசைன் பண்ணச் சொல்லி அவனுக்குப் பணத்தைக் கொடுத்து வேலையை விட்டுப் போகச் சொல் என்று சொல்கிறார்கள். என்னைப் போட்டு வெளுக்கின்றார்கள்…! என்கிறார்.
 
இப்படி இதைக் கேட்ட பின் அவரும் பயந்து கொண்டு நீ எப்பொழுது வேண்டுமானாலும் வேலைக்கு வரலாம் என்று சொல்லி எம்மிடம் அந்த மேனேஜர் 700 ரூபாய் கொடுத்தார்.
 
யாம் அதைக் கொண்டு போகவும் உடனே குருநாதர் நடு ரோட்டில் எம்மை மடக்கி இங்கே பார்…! எத்தனை பேர் பட்டினியாக இருக்கிறர்கள்? அவர்களுக்கு எல்லாம் வாங்கிக் கொடு…! என்றார்.
 
அந்தப் பணத்தை நான் வீட்டிலே கூடக் கொடுக்க முடியவில்லை
 
1.நீ வீட்டில் கொடுத்தால் வேலையை ராஜினாமா பண்ணியது தெரிந்துவிடும். நிச்சயம் அழுகத்தான் போகிறார்கள்.
2.ஆகையால் அந்தப் பணத்தை இங்கே அழுகிறவர்களுக்கெல்லாம் கொடுக்கலாம் என்று சொல்லி வாங்கிக் கொண்டார் குருநாதர்.
 
இந்த மாதிரியெல்லாம் சில சிரமங்களை ஏற்படுத்தித்தான் அனுபவத்தைக் கொடுத்தார் குருநாதர். பின் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் பேசாமல் உட்கார்ந்து விட்டேன்.
 
பிறகு குருநாதர் என் பொண்ணு மீராவுக்குக் காட்சி கொடுக்கிறார். ஆனால் என் பையன் தண்டபானி சிறிய பையன். சாமி அம்மாவுக்கும் குருநாதர் காட்சி கொடுக்கவில்லை.
 
என் பொண்ணுகள் இருவருக்கும் காட்சி கொடுக்கவும் எனக்குச் சாப்பாடு எடுத்து வைத்தார்கள். அந்தச் சாப்பாட்டுத் தட்டு அங்கு போய் நிற்கிறது, போட்டுவிட்டு இங்கே வைத்தால் நான் கையை வைக்கப் போனால் தட்டு நகர்ந்து அங்கே போகிறது.
 
இப்படியே மாற்றி மாற்றி வந்தவுடன் என் பிள்ளைக்குச் சந்தேகம் வருகின்றது. என்னமோ ஏதோ நடக்கிறது என்று அழுகின்றார்கள்.
 
அப்பொழுது சாமி படத்தின் மூலம் குருநாதர் காட்சி கொடுத்து உங்கள் அப்பாவுக்கு ஒன்றும் தெரியாது. நான் தான் வேலையை விட்டு நிற்கச் சொன்னேன், அவர் வேலையை விட்டார் இதை யாரிடமும் சொல்லக் கூடாது. சொன்னால்உனக்குத் தலைவலி வரும் என்று சொன்னவுடன் அந்தப் பொண்ணும் எதுவும் சொல்லவில்லை.
 
பிறகு இப்படியெல்லாம் ஆகிவிட்டதே…! சாமி அம்மாவும் இப்பொழுதுதான் நோயில் இருந்து எழுந்தார்கள் அவரிடமும் சொல்லவில்லையே என்று எண்ணி எனக்கு மனதுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
 
மலைக்குச் சென்று, முருகனிடம் என்ன கேட்க வேண்டும்? என்று சொன்னார் குருநாதர்:-
அப்பொழுது இந்த உணர்வை எடுத்து… “நீ நேராகப் பழனி மலைக்குப் போ…!என்று சொல்கிறார்.
 
அப்படி அந்த மலைக்குப் போவதற்கு முன்னாடிமுருகன் உனக்குக் காட்சி கொடுக்கும் பொழுதுநீ என்ன கேட்க வேண்டும்…?என்றும் சொல்கிறார் குருநாதர்.
 
செல்வம் வேண்டும்செல்வாக்கு வேண்டும் சொல்வாக்கு வேண்டும்…! என்று முருகனிடம் நீ கேட்க வேண்டும் என்று சொல்லி இதற்கு விளக்கமும் கொடுத்தார் குருநாதர்.
 
1.செல்வம் இருந்தாலும் செல்வாக்கு வேண்டும், அது இல்லாமல் போனால் அந்தச் செல்வத்திற்குள் எதிரிகள் வரும். ஆகவே செல்வாக்கு வேண்டும்,
2.இரண்டாவது சொல்வாக்கு வேண்டும். இதைச் சொன்னால் அந்த உணர்வை அவன் கிரகிக்கும் தன்மை.
3.இந்த மூன்று நிலையும் ஒரு மனிதனுக்குத் தேவை என்று குருநாதர் சொல்கின்றார்.
 
முருகன் உனக்குக் காட்சி கொடுப்பான் நீ இதைக் கேட்க வேண்டும் என்று சொன்னார். இதே மாதிரிப் பல உணர்வின் உண்மையின் நிலைகளை இயக்கிக் காட்டினார்.
 
முருகன் என்றால் சாதாரணமாக இப்படித்தான் இருப்பார் என்று நமக்குத் தெரியும். வேறு ஒன்றும் தெரியாது. நானும் படி ஏறிப் போனேன்சாப்பிடவும் முடியவில்லை கிரக்கமும் அதிகமாகின்றது. என்னுடைய சிந்தனை எங்கெங்கேயோ போகிறது.
 
சாமி அம்மா உடல் நிலை இப்பொழுது தான் சரியாகி உள்ளது. பிள்ளைகள் எல்லாம் இந்த மாதிரி இருக்கின்றது. மாமனார் இறந்து விட்டார் பார்ப்பதற்கும் வழி இல்லை என்ற வகையில் திகைத்துப் போய் மிகவும் கவலையில் இருந்தேன்.
 
இப்படி ரொம்பக் கவலையாக இருக்கும் பொழுதுதான் திடீரென்று மலைக்கு போ…! என்ற இந்த உணர்வு வந்து மலைக்குப் போய்க் கொண்டிருந்தேன்
 
முருகனின் காட்சி:-
அங்கு போனவுடன் நான் போன நேரத்தில் கூட்டம் குறைவாக இருந்தது. ஒரு ஏழெட்டுப் பேர் தான் இருந்தார்கள். அப்பொழுது என் உடலில் கம..கமஎன்று வாசனை வருகிறது.
 
அந்த மலையில் உள்ளவர்களில் இதற்கு முன் என்னுடன் பழகிய வாட்ச்மேன் வந்து நைனாநைனாவாங்க..!என்று அங்கு தாம்பாத்தில் யாரோ அர்ச்சனை செய்த மாலையை எடுத்து என் கழுத்தில் போட்டார்.
 
அய்ய..! என் கழுத்தில் ஏன் மாலையைப் போடுகிறீர்கள்…? என்று நான் அவரிடம் கேட்டேன்.
 
அவர்… “இல்லை நைனாஉனக்குப் போட வேண்டும் என்று தோன்றியது, போடுகிறேன்…!என்றார்.
 
அடஎனக்குப் போட வேண்டும் என்று என்னப்பா வந்தது…? நானே கஷ்டப்பட்டு வருகிறேன்…! என்றேன்
 
என்னமோ மாலையை உனக்குப் போட வேண்டும் என்று எனக்குத் தோன்றியதுநான் போடுகிறேன்…! என்கிறார் அந்த வாட்ச்மேன்.
 
முதலில் அங்கே அந்த வரவேற்பு.
 
அந்த மாலையைப் போட்டவுடனே என்ன நடக்கின்றது? அந்தச் சிலையில் இருந்து முருகன் அப்படியே எழுந்திருந்து வருகின்றார். அது அந்த உணர்வு, முருகன் அந்தக் குழந்தைப் பருவமாக வருவது தெரிந்தது.
 
நான் முன்னே பின்னே முருகனைப் பார்த்ததும் இல்லை, அப்பொழுது காட்சியாகச் சிலையிலிருந்து முருகன் வந்தால் எப்படி இருக்கும்? எனக்கு ஒரே அதிசயம் பொங்குகின்றது!
 
நான் நல்லவனாக ஆகவேண்டும்என்றுதான் முருகனிடம் கேட்டேன்:-
முருகன் வந்தவுடன்எனக்கு என்ன ஆனது? செல்வாக்கு சொல்வாக்கு தனம் இந்தப் பொருள் வேண்டும் என்ற வகையில் செல்வம் வேண்டும் என்று கேட்பதற்கே எனக்கு மனம் வர வில்லை,
 
வாழ்கையில் முருகனையே நாம் பார்த்து விட்டோம். இனிமேல் இதைக் காட்டிலும் நமக்கு வேறு என்ன வேண்டும்?
1.நான் நல்லது செய்ய வேண்டும்,
2.நல்லதைச் செயல்படுத்த வேண்டும்,
3,நல்ல வழியில் நடத்த வேண்டும்,
4,என்னை அறியாது தீயது வந்தால் அது வராது தடுக்கக்கூடிய சக்தி எனக்கு வேண்டும்.
 
எனக்குள் ஆசை என்ற நிலைகளோ தவறான உணர்வுகள் வந்தாலோ அவைகளை வராது தடுக்கும் அந்தச் சக்தியை நீங்கள் கொடுக்க வேண்டும் என்று, வேண்டினேன். அவ்வளவுதான்…!
 
போகர் சமாதியில், போகருடைய அருளைப் பெற்றேன்:-
 அதைக் கேட்டுவிட்டு அங்கிருந்து நேராகப் போகர் சமாதிக்குப் போனேன். அங்கேயும் ஆள் இல்லை. போய் நின்றவுடன் போகரைப் பற்றித் தெரிந்தவுடனே சேகண்டிச் சத்தம் கேட்கின்றது.
 
கேட்கவும் உடனே பூஜை செய்து கொண்டிருக்கின்ற மாதிரி சப்தம் கேட்டவுடன்அங்கு உள்ளவர்நைனாநைனா…” இது என்ன வேலை செய்கிறீர்கள்? என்று கேட்டுக் கொண்டு அவரும் உள்ளே வருகின்றார். வந்தால் அவருக்கும் சேகண்டிச் சத்தம் கேட்கிறது.
 
1.அப்படியே நானும் தரையிலிருந்து ஒரு அடிக்கு மேலே இருக்கின்ற மாதிரி இருக்கிறது. எனக்கே தெரிகின்றது.
2.அப்பொழுது பல அற்புதமான வாசனைகளெல்லாம் அங்கே வருகின்றது.
3.அது என்னை எங்கேயோ அழைத்துப் போகின்ற மாதிரி இருக்கிறது.
 
அப்பொழுது இவர் வந்து பார்த்துவிட்டுச் சிறிது நேரம் கழித்து… “என்ன நைனா…? பெரிய சித்து வேலை எல்லாம் விளையாடுவது போல் இருக்கின்றது…! தரைக்கு மேல் இருக்கிறீர்கள்சேகண்டி சப்தம் எல்லாம் கேட்கின்றது போகனுடைய அருளையே பெற்று விட்டீர்கள் போல் இருக்கின்றதே…! என்று சொல்கிறார்.
 
நான் வழக்கமாக அங்கு போய் வருவதால் அவர் இப்படிக் கேட்கிறார். அங்கே உள்ள பெரியவர் அப்படிக் கேட்கின்றார். போகர் சமாதியில் இது நடந்த நிகழ்ச்சி.
 
இப்படி நடந்தவுடன் எனக்கு ஒரு பெரிய தனி உற்காகமே வந்தது. நான் சாப்பிடாமல் வந்த நிலையெல்லாம் இங்கே மாறிவிட்டது.
 
அங்கே முருகனிடம் நான் கேட்டது என்ன? எனக்குச் செல்வம் வேண்டும், செல்வாக்கு வேண்டும் என்று கேட்பதை விடுத்து நான் நல்லவனாக இருக்க வேண்டும் நல்லதைச் செய்ய வேண்டும் என்றுதான் கேட்டேன்.
 
எனென்றால் நாம் தப்பித் தவறி தவறு ஏதும் செய்து விட்டால் என்ன ஆகும்…?
1.இவர்கள் எல்லாம் பெரிய மகான்களாகத் தெரிகிறது.
2.ஏதாவது தவறாக ஆகிவிட்டால் இவர்களின் சாபத்துக்கு ஆளாகி விடுவோம் என்ற பயத்திலேதான் நான் அதை அப்படிக் கேட்டேன்.
 
அங்கிருந்து கீழே இறங்கி வந்தேன். வந்தவுடன் என்னை அறியாமலேயே பெரிய உற்காகம் வந்தது.
 
ஆவி பிடித்த ஒரு பெண் நலமடைந்தார்:-
இறங்கும் வழியில் சின்ன சேலத்தில் இருந்து வந்த ஒரு ஆவி பிடித்த ஒரு பெண் உடல் பூராவும் பல தாயத்துக்கள். ஆனால் அழகான பெண்.
 
அவர்கள் எங்கெங்கோ சுற்றி ஒன்றும் முடியவில்லை. ஒரு படையே இவரைக் கூட்டி கொண்டு பழனி மலைக்கு வந்து கொண்டிருக்கின்றார்கள். படி மேல் நின்று கொண்டு ஏறுஏறுஎன்று, மேள தாளங்களோடு சொல்கின்றார்கள். ஆனால் அந்தப் பெண்ணால் ஏற முடியவில்லை.
 
அப்பொழுது நான் என்ன செய்தேன்…?
 
போகர் சமாதியில் இருந்து எடுத்த விபூதியை
1.நான் கீழே போகும் பொழுது படி மேல் நின்று கொண்டிருந்த அந்தப் பெண் மேல் வீசி எறிந்துவிட்டுப் போய்விட்டேன்.
2.உடனே… “அரோகரா முருகா…!என்று சொல்லிக் கொண்டு அந்தப் பெண் படியில் ஏறிப் போகின்றது. எல்லோரும் மேலே போகின்றார்கள்.
 
ஆனால் அந்தக் கூட்டதில் இருந்த ஒரு ஆள் என்னைத் துரத்திக் கொண்டு வந்துஐயாநீ முருகனேதான் நீ என் கூட வரவேண்டும்…!” என்று சொல்கிறார்.
 
அடநான் முருகனும் அல்ல கத்தரிக்காயும் இல்லை…! என்றேன் நான்.
 
இல்லைஇல்லைநீங்கள் முருகன் தான்மாறு வேடத்தில் வந்திருக்கின்றீர்கள்…! என்கிறார் அவர். நாங்கள் இத்தனை பேரும் என்னென்னமோ செய்தோம். எத்தனையோ தாயத்துக்களைக் கட்டினோம் ஒன்றும் செய்ய முடியவில்லை.
 
இந்தப் பெண் இப்பொழுது வேகமாக ஓடுகின்றது. முருகன் ஏதோ பண்ணியிருக்கின்றார். நாங்கள் வேண்டிக் கொண்டிருந்தோம்… அவர் தான் வந்திருக்கிறார் என்கிறார் அவர்.
 
 ஐயா நான் சாதாரண ஆள்…! மில்லில் வேலை பார்க்கின்ற ஆள் என்று சொன்னாலும் என்னை அவர் விடவில்லை. அப்புறம் நான் எவ்வளவு சொன்னாலும் விடவில்லை.
 
அந்த இடத்தில் எமக்கு அவ்வளவு உற்சாகம் ஊட்டுகின்றார் குருநாதர். எனக்கு ஓரே குஷி. ஐயாநீங்கள் இந்த விபூதியை வேண்டுமென்றால் கொண்டு போங்கள். ஏதாவது ஆனால் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன்.
 
இல்லை நீங்கள் வந்து தான் ஆக வேண்டும் என்று அவரும் சொல்கின்றார்.
 
ஐயா நான் வருவதற்கு இல்லை நான் போக வேண்டும்…! என்று சொன்ன பின்பு போய் விட்டார்.
 
சூட்டையும் கோட்டையும் என்னைப் போடச் சொன்னார் குருநாதர்:-
இங்கே கீழே நான் வந்தவுடன் பஸ்டாண்டில் வைத்து என்னைப் பயங்கரமாக அடிக்கிறார் குருநாதர். உன்னை முருகனிடம் நான் எதைக் கேட்கச் சொன்னேன்? நீ எதைக் கேட்டாய்?
 
பணம் இல்லை என்றால் எதாவது நடக்குமா? செல்வம் வேண்டும் சொல்வாக்கு வேண்டும் என்று கேட்கச் சொன்னால் நீ என்ன கேட்டாய்? என்னிடம் இவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது…! ஆனால் என்னை எவன்டா மதிக்கிறான்? நீ அதைப் பெற வேண்டும் என்பதற்காகத் தான் இதைச் செய்கிறேன் என்று குருநாதர் சொன்னார்.
 
குருநாதர் என்னை அடிக்கும் பொழுதுஅந்த மூலைக் கடைக்காரர் மஜீத் வந்துமாமாவசமாக மாட்டிக் கொண்டாயா?” நான் குருநாதரிடம் தைலத்தை வாங்கி என் உடல் சரியான பின்பு என்னைப் போட்டு அவர் உதைத்தார். இப்பொழுது நீ சிக்கிக் கொண்டாய்…! என்றார்.
 
அதைக் கேட்டவுடன் எனக்கு இன்னும் கொஞ்சம் பயமாகப் போய்விட்டது. ஆனால் உண்மைகள் அனைத்தும் குருநாதருக்கும் நமக்கும் தான் தெரியும்… எப்படி நடந்தது…? எப்படி நடந்து கொண்டிருக்கிறது…! என்று.
 
இருந்தாலும் எம்மை அடித்து என் சட்டையெல்லாம் கிழித்து விட்டார் அந்தப் பேருந்து நிலையத்தில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு டாக்சி டிரைவர் இந்தக் கிழவனை அடிடா…!என்கிறார்,
 
ஐயாநீங்கள் பேசாமல் விட்டுவிட்டுப் போங்கள். எங்களுக்குள் எதுவும் இருக்கும், நீங்கள் எதுவும் அவரைத் தொடாதீர்கள்…! என்று நான் சொன்னேன்.
 
அவர்… “இல்லை இல்லை.. இது பைத்தியம்தான்இருக்க இருக்க ரொம்ப முத்திப் போய்விட்டது அதனால் எல்லாரையும் அடிக்கிறார்…! என்றார்.
 
குருநாதர் அப்புறமும் என்னை விடவில்லை சட்டையெல்லாம் கிழிந்து விட்டது. வேஷ்டியையும் கிழித்து விட்டார். ஜட்டி இல்லையென்றால் அதுவுமில்லை. இப்படி டார் பார்என்று கிழித்து விட்டார்.
 
அப்புறம் திண்டுக்கல் ரோட்டில் அந்த ஸ்கூல் பக்கம் அழைத்துப் போய் குருநாதர் எம்மிடம் சொல்கின்றார்.
 
நான் இவ்வளவு பெரிய சக்தி பெற்றேன் என்னை எவனும் மதிக்கவில்லை. அதற்காக வேண்டித்தான் முருகனிடம் செல்வம் வேண்டும் செல்வாக்கு வேண்டும் சொல்வாக்கு வேண்டும் என்று உன்னைக் கேட்கும்படிச் சொன்னேன். நான் சொன்னதை நீ கேட்கவில்லை உனக்கு யார் பணம் தரப் போகின்றார்கள்…? என்றார் குருநாதர்.
 
அப்பொழுது நான் சொன்னேன்.
1.முருகனையே எனக்குக் காண்பித்துக் கொடுத்தீர்கள்.
2.இதனுடைய சக்தியைநீங்கள் குருவாக இருந்து எனக்கு வழி காட்டுகின்றீர்கள்.
3.நீங்கள் இருவரும் இருந்தால்எனக்குப் போதாதா சாமி…?என்றேன்
 
அவ்வளவுதான்…! உடனே அங்கு பக்கதில் இருந்த கேன்டீனுக்கு அழைத்துப் போய் லட்டு ஜிலேபி வாங்கிக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.
 
ஆனால் குருநாதர் இதை மட்டுமா செய்தார்? பல நிலைகளில் சக்தி வந்தவுடன் ஒரு வார்த்தை கேட்கிறார். நீ நல்ல சூட்டையும் கோட்டையும் போட்டுக் கொள்…!என்று ஆசையைத் தூண்டுகின்றார்.
 
ஜவுளிக் கடைக்குப் போய் நல்ல சூட்டை வாங்கிக் கொள்நல்ல சட்டையைப் போட்டுக் கொள்நன்றாக ஜம்என்று வரவேண்டும் என்றார் குருநாதர்.
 
நான்… “எனக்கு இந்தச் சூட்டும் வேண்டாம் சர்ட்டும் வேண்டாம் சாமி…!இந்த அவஸ்தைப்பட்டது போதும்.
 
நீ வாங்கிக் கொள்கிறாயா இல்லையாடா?” என்று திரும்பவும் கேட்கின்றார்.
 
எனக்கு வேண்டவே வேண்டாம் என்றேன் நான்..!
 
நீ சூட்டைப் போட்டுக் கொண்டு நீட்டா (NEAT) இருக்க வேண்டும். உனக்குச் சக்தி நிறையக் கொடுத்திருக்கின்றேன் நீ செய் என்றார். அதிலும் ஆசையைத் தூண்டுகிறார்.
 
அப்பொழுது அங்கிருந்தவர்கள் எல்லாம் குருநாதர் என்னமோ சூட்டும் சர்ட்டும் வாங்கித் தருகிறேன் என்று சொல்கின்றார்.. “நீ வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே..என்றனர்.
 
1.“எனக்கு இந்தச் சூட்டும் வேண்டாம் சர்ட்டும் வேண்டாம் என்னை ஆளை விடுங்கள் போதும்என்றேன்.
2.அதிலே அவர் சந்தோஷப்பட்டுஅந்தச் சந்தோஷத்திலேயே நானும் வந்தேன்.
 
என் சைக்கிள் கடையில் வேலை செய்த சின்னத்தம்பி என்ற பையன் அவன் கடைக்கு வந்தேன். அவனுக்கு ஏற்கனவே சைக்கிள் எல்லாம் கொடுத்திருக்கின்றேன்.
 
அங்கே வந்தவுடன் அவன் என்னை ஓய்பைத்தியம் பிடித்தவன் நீ அந்தப் பக்கம் போயா… இங்கு கடையில் உட்காராதே தரித்திரம் பிடித்தவன்…! என்று என்னைத் திட்டுகின்றான்.
 
வேலையையும் விட்டு விட்டுப் பிள்ளைகுட்டி எல்லாம் விட்டு விட்டு ஒரு பைத்தியக்காரன் கூடப் போய்ச் சுற்றிக் கொண்டிருக்கின்றாய்…! இங்கே வராதே என்கிறான்.
 
என்னடா இது வம்பாகப் போய்விட்டது…? என்னை எதிர்த்துப் பேசாதவன் இப்படிப் பேசுகின்றானே…! என்று அதை விட்டு விட்டுப் போனேன்.
 
அங்கிருந்து போனால் என் வீட்டுக்கு முன்னாடி உள்ள கடைக்காரர் இப்ராஹிம்… “ஓய் நைனா…! உனக்கு நன்றாகப் பைத்தியம் பிடித்து விட்டது, நல்லய்யா நாயக்கர் சம்பாதித்து வைத்திருகின்றார். நீ சொத்தையெல்லாம் தொலைத்து விட்டாய்என்று சொல்கிறார்.
 
நீ இந்தக் கடையில் உட்காராதேஎனக்கும் தரித்திரம் பிடிக்கும் போய்யா…! என்று சொல்கின்றார். எங்கே போனாலும் இதே மாதிரி எம்மைப் பேசுகின்றார்கள்.
 
என் பொண்ணு மீராவும் எம்மிடம்நீ வீட்டிற்குள் வராதே தரித்திரம் பிடித்தவர்…! என்று எல்லோரும் பேசுகின்றார்கள் என்று என்னிடம் சொல்கின்றது.
 
ந்தத் தெருவிற்குள் வரும் போது அங்கிருக்கும் ஒவ்வொருத்தரும் எம்மை மிகவும் மோசமாகப் பேசுகின்றனர். இந்த மாதிரி எதிர்ப்பின் உணர்வுகள் வருகிறது. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
 
கேன்சர் நோயை நீக்கச் செய்தார் குருநாதர்
அப்படி ரொம்பக் கஷ்டமாக இருக்கும் பொழுது தான் பாப்பம்பட்டியில் இருக்கும் நண்பர் இராமசாமியின் தோட்டத்துக்குப் போனேன். அவரிடம்… “எனக்குப் பெரிய அவஸ்தையாக இருக்கின்றது, எல்லோரும் கேவலமாகப் பேசுகிறார்கள்…!என்று சொன்னேன்.
 
அங்கேயும் எம்மைச் சும்மா விடவில்லைகுருநாதர். பல நிலைகளை ஏற்படுத்துகின்றார். என்னமோ செய்யப் போகிறாய் என்கிறார் குருநாதர்.
 
அந்தச் சமயத்தில் அங்கே சிலருடைய உடலில் டெங்குக் காய்ச்சல் மூட்டுக்கு மூட்டு வலிக்கிறது…! என்று சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.
 
அப்பொழுது… வெறும் மண்ணைத் தூக்கிப் போட்டு இது சரியாகும்என்று சொன்னால் அந்த நோய் போகின்றது. அதனால் அங்கே ஒரே கூட்டமாகக் கூடுகின்றது. இப்படியெல்லாம் பல நிலைகள் ஆகின்றது. இப்படியும் செய்கிறார் குருநாதர். எனக்கு என்ன செய்வது? என்று ஒன்றும் தெரியவில்லை.
 
அப்பொழுது அங்கிருந்து மகாலிங்கம் என்ற ஜாதகம் பார்க்கிறவர் வீட்டில் போய்த் தங்கி இருந்தேன். அங்கும் பல அற்புதங்கள் நடக்கிறது. கூட்டங்கள் வருகின்றது.
 
அங்கே மகாலிங்கத்தின் அண்ணன் பையனுக்கு வயிற்று வலி என்று சொல்லி இராமசாமி நாயுடுவின் ரைஸ் மில்லுக்கு என்னை வரச்சொல்லிச் சொன்னார்கள்.
 
அங்கு போய்ப் பார்க்கும் போது அவன் வயிற்று வலியுடன் வேதனைப்படுகிறான். நான் அங்கு சென்றவுடன் ஹாஸ்பிட்டலுக்கு போவதற்குப் பணம் இருந்தால் பரவாயில்லை. பையனுக்குக் கேன்சர் என்று டாக்டர் சொல்லி விட்டார். கேன்சரை நீக்குவதற்குச் சென்னைக்குப் போக வேண்டும் என்று சொல்கிறார்கள்.
 
இராமசாமி எம்மிடம் உன் குருநாதரை நினைத்து ஏதாவது செய்…!” என்கிறார்.
 
1.குருநாதரை எண்ணி அங்கிருந்த விபூதியை எடுத்து அந்தப் பையனுக்குக் கொடுத்தேன். ஆனால் என்ன ஆனது?
2.விபூதியைக் கொடுத்தவுடன் அவனுக்கு இரத்த இரத்தமாக வெளியில் போக ஆரம்பித்துவிட்டது.
 
இராமசாமி என்ன செய்தார்? நான் தான் ந்த விபூதியை, உன்னிடம் கொடுத்தேன். நீ என்னிடம் இருந்த விபூதியைத் தான் நீ அந்தப் பையனுக்குக் கொடுத்தாய். ஒரு வேளை இந்த விபூதியில் யாராவது பாலிடாலைக் (பூச்சி மருந்தை) கலந்து வைத்திருப்பார்களோ என்னமோ தெரியவில்லையே…? என்கிறார் எம்மிடம்.
 
யாரும் இதைத் தொடாதீர்கள்…! என்று இராமசாமி சொல்கிறார்.
 
ஏனென்றால் இரத்தமாக அவனுக்கு வெளியிலே போகவும் அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. இப்படிப் பல குழப்பங்களில் எல்லோரும் இருக்கின்றனர். நானும் திகைத்துப் போய் இருந்தேன். எனக்கும் காட்சி கொடுக்கவில்லை.
 
மகாலிங்கத்தினுடைய பையனுக்கு உடனே அருள் மாதிரி வந்து குருநாதர் காட்சி கொடுத்து நான் தான் வந்துள்ளேன்அவனுடைய கேன்சரை ஆபரேசன் பண்ணியுள்ளேன் அதுதான் இப்பொழுது வெளியிலே வந்திருக்கின்றது…!என்று சொன்னதும் எல்லோருக்கும் ஒரு ஜீவன் வந்தது.
 
இது நடந்த நிகழ்ச்சி.
 
நான் ஆபரேசன் செய்த அந்தக் கேன்சர் கட்டி இப்பொழுது வெளியே வந்துள்ளது. இரத்தத்தின் மத்தியில் உள்ளது. அதை எடுத்துத் தண்ணீர் ஊற்றிக் கழுவிப் பார் என்றார் குருநாதர்.
 
கழுவிப் பார்த்தால் கட்டி இருக்கின்றது.
 
அந்தப் பையனுக்குச் சாப்பாடு எட்டு நாள் எட்டு மணி நேரம் எட்டு நாழிகை வரையிலும் கொடுக்க வேண்டும். அது இன்னார் வீட்டில் கஞ்சி வடித்திருக்கின்றார்கள் நீ போய்ப் பார்…! என்று சொல்கின்றார் குருநாதர்.
 
போய்ப் பார்த்தால் அதே மாதிரி கஞ்சி வடித்திருந்தார்கள்.
 
அந்தக் கஞ்சித் தண்ணீரைக் கொண்டு வா. அதில் இந்த விபூதியைப் போடு. அந்தக் கஞ்சியைத் தான் அவன் இத்தனை நாளைக்குச் சாப்பிட வேண்டும் என்றார் குருநாதர்.
 
அப்புறம் அதே மாதிரி அவனைச் சாப்பிடச் செய்தேன். அந்த எட்டு நாள் எட்டு மணி நேரம், எட்டு நாழிகை வரையிலும் அந்தக் கஞ்சியைச் சாப்பிட்டவுடன் அந்தப் பையன் எழுந்து குஷியாக விளையாட ஆரம்பித்து விட்டான்.
 
அங்கேதான் முதன் முதலில் ஆபரேசன் செய்து கேன்சரை நிவர்த்தி பண்ணியது. இப்படிச் சில அதிசயங்கள் அங்கே நடந்து கொண்டே இருந்தது.
 
டெங்கு காய்ச்சலை நீக்கச் செய்தார் குருநாதர்:-
அப்புறம் ஊரில் உள்ளவர்களுக்குக் கேட்கவா வேண்டும்…! அந்த அற்புதமான நிலைகள் அங்கே பரவுகின்றது. அந்த சமயத்தில் அங்கே எல்லோருக்கும் டெங்குக் காய்ச்சல் பரவிக் கொண்டிருந்தது. அனைவருக்கும் யாம் அந்த விபூதியைக் கொடுக்கவும் உடனடியாகக் குணமானது.
 
அப்பொழுது இராமசாமிக்கு ஓரே குஷியாகப் போய்விட்டது. பரவாயில்லை நீ கிழவன் கூடச் சேர்ந்து சுற்றியதற்கு உனக்கு நல்ல சக்தி கிடைத்தது…! என்று எம்மிடம் சொல்கிறார்.
 
நோய்கள் குணமாவதைக் கேள்விப்பட்டு எல்லா ஊர்களிலிருந்தும் மக்கள் வண்டியைப் போட்டுக் கொண்டு அங்கு வருகின்றனர். கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது.
 
கை கால் முடமான நிலையில், குருநாதர் ஆஸ்பத்திரியில் செய்த செயல்கள்:-
 அந்த சமயத்தில் இங்கு பழனியில் கங்கா பைண்டிங் அச்சாபீஸில்  உட்கார்ந்து இருந்த குருநாதர்தெலுங்கு ராஜ்ஜியம்…” என்னமோ பண்ணிவிட்டான்அவன்தான் எனக்குக் கை கால் வராமல் பண்ணிவிட்டான்…! என்று சொல்லிக் கொண்டு ரோடு பூராம் கத்திக் கொண்டே இருந்திருக்கின்றார்.
 
இப்படிச் செய்தவுடன் உடனே நீ புறப்பட்டு வர வேண்டும் என்று என்னிடம் சொல்லி விட்டார் குருநாதர்.
 
டெலிபோன் ஆபீஸில் வேலை பார்க்கும் நடராஜன் என்ன செய்தான்…? கை கால் வராமல் பண்ணிவிட்டான் அதனால் இவரை எங்கேயோ கொண்டு போங்கள்…! என்று சொல்லிவிட்டான்.
 
ஏனென்றால் நான் தான் ஐவர் மலைக்கு குருநாதரைக் கூட்டிக் கொண்டு போயிருந்தேன். சில அற்புதங்களைப் பார்த்தவுடன்எல்லாம் அவருக்குத் தானே காட்டினார் குருநாதர் எனக்கு ஒன்றும் காட்டவில்லையே…! இவரை நான் எதற்குப் பார்க்க வேண்டும்…? என்று இது நடராஜனுடைய எண்ணம்.
 
இங்கு திண்ணையில் படுக்க வேண்டாம்…! என்று சொல்லவும் இராமசாமி என்ன செய்தான்…? குருநாதரை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்து விட்டார்.
 
எவ்வளவு கூட்டம் இருந்தாலும் நீ உடனடியாக பாப்பம்பட்டியிலிருந்து வர வேண்டும் என்று என்னைச் சொல்லி விட்டார். ஆனால் இங்கு ஹாஸ்பிட்டலில் இருந்தாலும் குருநாதர் சும்மா இல்லை.
 
அங்கு ஒவ்வொரு பெட்டில் இருப்பவர்களையும் இழுத்து இழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார். கடைசியில் அவரைக் கொண்டு போய் சவக்கிடங்கு பக்கத்தில் போட்டு விட்டார்கள்.
 
அப்பொழுது நான் அங்கு போகவும் டாக்டர் என்ன சொல்கின்றார்?
 
எப்படியாவது நீங்கள் இவரை வெளியே எடுத்துக் கொண்டு போங்கள், இங்கு பெட்டில் இருக்கின்றவர்களை எல்லாம் இழுத்து இழுத்துப் போடுகிறார் என்கிறார்.
 
சாவுக் கிடங்கு பக்கத்தில் போட்டவுடன் அங்கு போனாலும் இதே போல கட்டிலில் தீயை வைக்கின்றார். பிறகு நான் குருநாதரைச் சந்தித்தவுடன்அங்கு இருக்கும் தட்டியை எல்லாம் எடுத்துக் கொண்டு வாடாதீயை வைத்துக் கொளுத்துடாஎன்றார்.
 
சாமி…! தீயை வைத்துக் கொளுத்தினால், எல்லாம் என்ன ஆகும்..,.? என்றேன் நான்.
 
நான் சொல்வதைச் செய்கிறேன் என்றாய் அல்லவாகொளுத்து…” என்கிறார் குருநாதர்.
 
அப்படிக் கொளுத்தக்கூடிய நிலை வரும் பொழுது நான் மறுத்துக் கொண்டே இருந்தேன்.
 
இந்த நிலையில் அங்கு ஆஸ்பத்திரியில் சேர்ந்த ஒருவருக்கு எலும்புக்குள் ஏவல் செய்து அவருடைய காலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எலும்புகள் துண்டு துண்டாக வந்து கொண்டிருந்தது. எலும்பெல்லாம் கருகி அப்படியே அழுகிக் கொண்டிருக்கின்றது. அதை டாக்டரினால் சரி செய்ய முடியவில்லை.
 
குருநாதர் என்னிடம்… “நீ இதைச் செய்ய வேண்டியதுதானடா…!என்கிறார்.
 
செய்கிறேன் என்று நானும் குருநாதர் சொன்ன முறைப்படி சில நிலைகளைச் செய்தவுடன் அந்தக் கறுப்பு இரத்தம் நின்று நல்ல இரத்தம் வந்தது.
 
உடனேடாக்டரைக் கூப்பிடுடா…! அவனை அழைத்துப் பான்டேஜ் போட்டுக் கட்டுடா சரியாகிப் போகும்…!என்றார் குருநாதர்.
 
அப்பொழுது நான் சென்று நல்ல இரத்தம் வருகிறது என்று டாக்டரிடம் சொன்னவுடன் அவருக்கு மிகவும் குஷியாகிவிட்டது.
 
இது என்னால் முடியாதது, இப்பொழுது சரி ஆகிவிட்டது என்றார் டாக்டர்.
 
1.அதிலிருந்து வெளி வந்தது ஒரு தாயத்து.
2.அவர் உடலில் எலும்புக்கு நடுவில் இதை வைத்து ஏவல் பண்ணி வைத்திருக்கிறார்கள்.
 
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். சொத்தைப் பறிப்பதற்கு அவன் மேல் இருக்கும் பொறாமையில் ஏவல் செய்து விட்டார்கள். இந்த நிலையில் சொத்தையும் இழந்தான். இப்பொழுது அனாதையாக நிற்கிறான் யாரும் அவனைக் கவனிக்கவில்லை என்று சொல்லி இவனை எல்லாம் யார் காப்பாற்றுவது? என்று கேட்டார் குருநாதர்.
 
அவருக்கு நன்றாக ஆனவுடன் டாக்டருக்கும் ஒரே சந்தோஷம். இப்படி எல்லோரும் சந்தோஷமாக இருக்கும்போது என்ன செய்கின்றார் குருநாதர்?
 
குருநாதர் என்னிடம்அந்த தட்டியெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து தீயை வைத்துக் கொளுத்தச் சொல்கிறார். தீயை வைத்துக் கொளுத்தச் சொன்னால் அங்கிருப்பவர்கள் எல்லாம் சும்மாவா இருப்பார்கள்?
 
உடனே டாக்டர்நாயுடு நீ இந்த மாதிரி எல்லாம் இங்கே செய்யக்கூடாது, உங்கள் குருநாதரை உடனே இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள்…! என்று சொல்கிறார்.
 
ஆனால் குருநாதர் என்ன சொல்கின்றார்? “ஏன்டா…? என்னைக் கூட்டிக் கொண்டு போவதற்காகவா இதைச் சொல்கிறேன்…! என்றார்.
 
ஓடாத ஆட்டோவை ஓட வைத்தார் குருநாதர்:-
அப்பொழுது பாட்ஷா என்ற ஆட்டோ ஓட்டுபவரிடம் சென்றேன். அவர் எனக்கு நண்பர். கொஞ்சம் ஆட்டோ கொண்டாப்பா. குருநாதரைப் பாப்பம்பட்டியில் ரைஸ் மில் வைத்திருக்கும் ராமசாமியின் தோட்டத்தில் கொண்டு போய் வைத்துக் கொள்கிறேன் என்றேன்.
 
ஆட்டோ ரிப்பேராக இருக்கின்றது என்றார் அவர். சரி செய்தால் தான் எடுக்க முடியும். கொஞ்சம் காசு கொடுத்தால் சரி செய்யலாம் என்கிறார்.
 
என்னிடம் ஒரு காசும் இல்லைநீ பாப்பம்பட்டி வரை கொண்டு வந்து விட்டால் நான் அங்கு வந்து காசு வாங்கித் தருகிறேன் என்றேன்.
 
ரிப்பேர் செய்து தான் எடுத்து வர முடியும் என்று சொல்லிக் கொண்டிருந்த அவருக்குத் திடீரென்று ஒரு அசரீரி போல் வந்தது. 
1.அடஆட்டோ ஓடும்…! என்று நான் அவனிடம் சொன்னேன்.
2.ஓடும்… ஓடும்… ஓடும்…! என்று விசித்திரமாகச் சப்தம் வருகின்றது.
3.அவன் காதிலேயே ஓடும் ஓடும் ஓடும்என்று கேட்டவுடன்
4.சரி நான் ஓட்டித்தான் பார்க்கிறேன் என்று சொல்லிப் பெட்ரோல் வாங்கிப் போட்டவுடன், ஆட்டோவும் ஸ்டார்ட் ஆகியது.
 
நானும் அவனுமாகச் சேர்ந்து குருநாதரை ஆஸ்பத்திரியில் இருந்து தூக்கிக் கொண்டு ஆட்டோவில் ராமசாமியின் தோட்டதுக்கு வந்தோம். அவரது தோட்டம், ஒரு பத்து ஏக்கர் இருக்கும் வெறும் கரும்புத் தோட்டம்.
 
அந்தத் தோட்டத்திற்குள் குருநாதரைப் படுக்கச் சொல்லி வைத்தவுடன், குருநாதர் என்ன செய்கிறார்?
 
கரும்புக் காட்டில் தீ வைத்தார் குருநாதர்:-
அந்தக் கரும்பு ஆலையில் வைத்திருக்கும் பொருள்களை எல்லாம் எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டு திருடன் திருடன்எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டான். பூராவற்றையும் திருடி விட்டான் என்று பேசுகிறார், குருநாதர்.
 
நான் எங்கே திருடினேன்? ஏதாவது மறந்தால் போல இங்கு வைதிருப்பேன் என்று நான் சொன்னேன்.
 
குருநாதர்இல்லை…! இவன்தான் எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டான் என்கிறார்.
 
இப்படிச் செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று என்ன ஆகிவிட்டது? அந்தக் கரும்புச் சோகை எல்லாம் தீ பிடித்தது. இந்த மாதிரி ஆனவுடன் குருநாதர்தீயை வைத்து விட்டான் தீயை வைத்து விட்டான் என்று என்னைச் சொல்கின்றார்.
 
பார்த்தோம் என்றால் பத்து ஏக்கரும் பொசுங்கிப் போகும் என்ற நிலையில் ஆகிவிட்டது. இவன் தான் எல்லாவற்றிற்கும் காரணம்…! என்கிறார் குருநாதர்.
 
என்ன இது வம்பாகப் போய்விட்டது…? சும்மா இருக்கும் போது இப்படி எல்லாம் சொள்கிறார். சுற்றி எல்லாம் நெருப்பாகிப் போனதுவேறு வழி இல்லை.
 
இவன் தான் செய்கிறான்இவன் தான் எரிக்கிறான்இவன் தான்…! என்று என்னைச் சொல்கிறார்.
 
எனக்கு எப்படி எரிகின்றது…? என்றே தெரியவில்லை என்றேன். அப்பொழுது அங்கு இருந்தவர்கள் எல்லாம் கூட்டமாகக் கூடி விட்டார்கள்..
 
குருநாதர் என்னைப் பார்த்துநீ இதை அவிடா…! என்றார். அவிடாஎன்று சொன்னவுடன்
1.குருநாதர் என்னை அழைத்துக் காதில் ஓதுகிறார்.
2.ஓதியவுடன் இதை அவித்து விடுடா…! என்று சத்தமாகச் சொன்னவுடன் எல்லாம் அப்படியேகப்என்று அடங்கி விடுகிறது.
 
அவன் தான் வைத்தான் அவன் தான் தீயை வைத்திருக்கிறான் என்று சொல்கிறார். எல்லாம் இவன் செய்த வேலைதான் என்கிறார் குருநாதர்
 
இந்தக் கல்யாணம் நடக்காது…! என்று சொன்னார் குருநாதர்:-
இப்படி இருக்கவும் நான் குருநாதரை ஐவர் மலைக்குக் கொண்டு போகலாம் என்று சொன்னேன். அங்கு ஒரு முருகன் கோவில் இருக்கிறது. அருகில் இராமலிங்க அடிகள் மண்டபத்திற்குப் பக்கத்தில் ரூம் இருக்கின்றது. அங்கு இருங்கள் என்றார் ராமசாமி. சாப்பாடெல்லாம் கொடுக்கிறேன் என்று சொல்லிக் கூட இரண்டு பேரையும் அனுப்பி வைத்தார்.
 
ஐவர் மலையில் ஏறும் போது என்னால் எப்படிடா ஏற முடியும்? நான் கை கால் வராமல் இருக்கிறேன். நான் எப்படிடா ஏறுவேன்? என்று கேட்கின்றார், குருநாதர்.
 
குருநாதர் எம்மிடம் கையை வைடா என்றார். கையைக் கீழே வைத்தவுடன் கையில் ஏறி உட்கார்ந்து கொண்டு எழுந்திரிடா…” என்கிறார்.
 
எப்படி சாமி இந்தக் கையில்? என்று கேட்டேன்.
 
நான் தான் சொல்கிறேன் அல்லவா? எழுந்திரிடா… உனக்குச் சக்தி கொடுத்திருக்கின்றேன்…! என்று சொல்லிக் கொண்டு கையில் உட்கார்ந்து தை.. தை தை…” என்று குதிக்கின்றார். மேலே மலையில் ஏறச் சொல்கிறார்.
 
கொஞ்ச தூரம் சென்றதும்நான் சாமி கை வலிக்கின்றது…!என்றேன்.
 
சொன்னவுடன் கீழே இறக்கி விடு என்று சொன்னார். கூட இரண்டு பேர் வந்தவர்களிடம் தூக்கச் சொல்கின்றார். ஆனால் அவர்களால் குருநாதரைத் தூக்கவும் முடியவில்லைமேலே ஏறவும் முடியவில்லை..
 
ஏன்டா? அவன் ஒரு கையில் தூக்கினான். நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து என்னைத் தூக்க முடியாதா? என்று வழியில் ஒரே கலாட்டா பண்ணுகின்றார் குருநாதர்…!”
 
அப்புறம் ஒரு வழியாக மேலே ஏறிப் போகவும் படி மேலே ஏறினால்அந்தப் படியில் போகாதே நீ என்னைக் கீழே உருட்டிவிடுவாய்இந்த வழியில் போடா…!என்கிறார் குருநாதர்.
 
பெரிய வம்பு பண்ணி எல்லாம் மேலே ஏறிப் போனோம். மேலே போனவுடன் அங்கு ஒரு கல்யாணக் கூட்டம் வந்தது. குருநாதர் அவர்களிடம் இந்தக் கல்யாணம் நடக்காது…” என்று அங்கேயும் பெரிய தகராறு செய்கிறார்.
 
அவர்கள் எல்லோரும் சேர்ந்து குருநாதரை உதைக்க வருகிறார்கள்.
 
உடனே நான்… “ஐயா…! அவர் ஏதோ சொல்கிறார் நீங்கள் குற்றமாக நினைக்காதீர்கள்…!என்றேன் நான்.
 
அதற்கு குருநாதர்ஏன்…? யாருடா…! என்னடா தெரியாமல் சொன்னது? என்று சொல்லி மீண்டும் இந்தக் கல்யாணம் நடக்காதுஎன்கிறார்.
 
ஏனென்றால் ஏற்கனவே பெண்ணைக் கூப்பிட்டு வரும் இடத்தில் தகராறு. அங்கே சொந்த மாமன்காரன் விடமாட்டேன் என்கிறான். கல்யாணம் செய்ய அவர்கள் வந்தார்கள் என்றால் வெட்டி விடுவேன் என்று சொல்கிறான்.
 
இந்த அளவில் அங்கு தகராறு நடக்கின்றது. இதைச் சொல்கிறார் குருநாதர்.
 
இவர்கள் அது எப்படிக் கல்யாணம் நடக்காது? மாப்பிள்ளை எல்லாம் வந்தாகி விட்டது, பொண்ணு எப்படி வராமல் போகும்…? அது வந்து கொண்டிருக்கின்றது…! என்கின்றார்கள்.
 
ஆனால் குருநாதர் சொன்ன மாதிரியே நடந்தவுடன் அவர்களுக்கு என்ன ஆனது? இது பெரிய சமாச்சாரம்…! அங்கே நடக்கின்ற நிகழ்ச்சிகளையெல்லாம், அப்படியே சொல்கிறார். அவரைப் பைத்தியமாகத்தான் நினைத்தோம்…! என்று அடிக்க வந்தவர்களெல்லாம் குருநாதர் காலில் விழுந்து கும்பிட ஆரம்பித்தார்கள்.
 
என்னைக் காப்பாற்றுடாஎன்கிறார் குருநாதர்:-
அங்கு மேலே போனவுடன் படுத்துக் கொண்டோம். எனக்குப் பயமாக இருக்கிறது நீ என் பக்கத்தில் படுத்துக்கொள்…! என்றார் குருநாதர். இரவு பனிரெண்டு மணி இருக்கும்.
1.கை கால் வராமல் முடமாக இருந்தவர் எழுந்து நடக்கிறார்... சாதாரணமாக நடக்கின்றார்…!
2.நடந்து போய் அங்கு ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும் அங்கு போய் உட்கார்ந்து கொண்டார்.
3.அவர் செய்வதை நான் முழித்துப் பார்த்து கொண்டே இருந்தேன்.
 
அங்கே போனவுடன்… “தெலுங்கு ராஜ்ஜியம் இங்கே வாடா…! என்னை எவனோ தூக்கிக் கொண்டு வந்து இங்கே வைத்துவிட்டான் வந்து தூக்குடா…! என்கிறார்.
 
இரவு நேரத்தில் அங்கே போய் என்ன செய்வது? றுக்கலான பாறை…! அப்பொழுது காலையில் விடிகின்றது. அந்த நேரம் அங்கே பார்த்தால், றுக்கலான இடத்தில் கோயிலில் சென்று உட்கார்ந்திருக்கிறார்.
 
அந்த இடத்தில் இருந்து கொண்டு என்னைக் காப்பாற்றுடாஎன்னைக் காப்பாற்றுடாஎன்கிறார். சறுக்கலான பாறையில் பிடிக்க முடியாத இடத்தில் இருக்கின்றார்.
 
இன்னும் அந்த வழுக்குப் பாறை அங்கே இருக்கின்றது. நான் எப்படி சாமி வர முடியும்? என்று கேட்டேன். பின் வேஷ்டியைக் கட்டி இதைப் பிடித்து கொள்ளுங்கள் என்று சொன்னேன்.
 
ஆனால் அதைப் பிடித்துக் கொண்டு கீழே போய்க் கொண்டே இருக்கின்றார். நீ வந்து என்னைக் காப்பாற்றுடா…! துண்டு வேஷ்டி எல்லாம் என்னைக் காப்பாற்றாது..! என்கிறார் குருநாதர்.
 
சாமி…! வேஷ்டியையும் பிடித்துக் கொள்ளுங்கள்நானும் பிடித்துக் கொள்கிறேன் என்றாலும் பிடிக்க முடியவில்லை. அப்பொழுது நான் ஒரு பக்கம் இருந்தாலும் என்னை வழுக்கிவிட்டு இந்தப் பக்கம் கொண்டு போகின்றது..
 
குருநாதர்என்னை காப்பாற்றுடா…!என்கிறார்.
 
சாமிநான் கீழே போய்த்தான் காப்பாற்ற வேண்டும். கீழே விழுந்தால் நொறுங்கித் தூள் ஆகிப்போகும். அங்கு போய்த்தான் காப்பாற்ற வேண்டும் என்றேன்.
 
இது நடந்த நிகழ்ச்சி.
 
ஏறு சிங், இறங்கு சிங் பார்த்திருக்கிறாயாடா? என்று கேட்டார் குருநாதர்
அப்பொழுதுதான் அதிகாலை விடிகின்றது. கீழே ஒரு பஸ் போய்க் கொண்டிருந்தது.
1.உடனே குருநாதர்… “ஏறு சிங்.. இறங்கு சிங்…என்று நீ பார்த்திருக்கிறாயாடா…? என்றார்.
2.சாமிஇப்பொழுது நான் இறங்கு சிங்கில் கீழே போய்க் கொண்டு இருக்கிறேன்.
3.செத்த பிற்பாடு உடலிருந்து உயிர் ஏறு சிங்காக மாறிவிடும். அதிலே வேண்டுமென்றால் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் சாமி…! என்றேன்.
 
ஏன்டா நான் சொல்கிறேன்நீ எதிர்த்துப் பேசுகின்றாயா? என்றார் குருநாதர்.
 
பார்த்தால் அந்த இடத்தில் வைத்துக் குருநாதர் பல நிலைகளில் பல அற்புதங்களைக் காட்டுகின்றார். இந்த உலக நிலைகளையும் மற்ற நிலைகளையும் எல்லாவற்றையும் காட்டுகின்றார்.
 
இப்பொழுது நீ இந்த உலகத்தைப் பாருடா…!என்கிறார்.
 
எங்க சாமி பார்ப்பது? இன்னும் கொஞ்ச நேரத்தில் போய் எல்லாம் அடங்கிவிடும் போல் இருக்கின்றது…! என்றேன் நான்.
 
நீ உலகத்தைப் பாருடா என்றால்எங்கடா நீ அடங்கிவிடும்? என்று சொல்கின்றாய் என்று இப்படி வாதம் பண்ணிக் கொண்டே இருக்கின்றார் குருநாதர்.
 
அப்படியே பாறையில் நெஞ்சோடு தேய்த்து இரத்தம் வடிகின்றது. வழுக்குப் பாறையாக இருப்பதால் அப்படியே என்னைக் கீழே கொண்டு போகின்றது. இன்னும் கொஞ்ச நேரத்தில் போய் விடுவோம்…” போலத் தெரிகின்றது.
 
நீ இதைப் பார் உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்என்று என்னென்னமோ அதிசயங்களை எல்லாம் காட்டுகின்றார் குருநாதர்.
 
சாமி…! இன்னும் கொஞ்சம் நேரத்தில் நீங்கள் சொல்வது எல்லாவற்றையும் போய்ப் பார்க்கப் போகின்றேன்அது வரைக்கும் கொஞ்சம் அமைதியாக இருங்கள்…! என்றேன் நான்.
 
ஐவர் மலையில் வைத்துத்தான் முழுமையான சக்தியைக் கொடுத்தார் குருநாதர்:-
அதற்குப்பின் எத்தனையோ உணர்வுகளை ஊட்டுகிறார்உலக நிலைகளைக் காட்டுகின்றார். இந்த மரண நிலைகளில் வைத்துத் தான் கொடுக்கிறார்.
 
முழுமையான சக்தியை அங்கே ஐவர் மலையில் வைத்துத் தான் கொடுத்தார் நமது குருநாதர்.
 
அந்தக் காலையில் அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். குருநாதர் அங்கிருந்து எழுந்து வந்து என்ன செய்தார்?
 
1.சிவ தாண்டவம் ஆடுகிறார்…!
2.ஒரு பெரு விரலில் நின்று கொண்டு அப்படியே கிறுகிறுகிறுஎன்று பம்பரம் போல் சுற்றி அவ்வளவு அற்புதமாக ஆடுகிறார்.
3.எல்லா வேலைகளையும் செய்கின்றார் குருநாதர்.
 
நீ பல உண்மைகளை அறிவாய்பல நிலைகளைப் பெறுவாய்…! இந்த உலகம் எப்படி இருக்கிறது…? என்று நீ அறியும் தன்மை பெறுவாய், அதை எப்படிக் காக்க வேண்டும்? என்று இந்த இடத்தில் வைத்து மரண வாயிலில் வைத்து இந்தச் சக்திகளைக் கொடுக்கிறார்.
 
1.யாராவது தப்பு செய்தால் கூட என்னிடம் இருக்கும் சக்தியைக் கொண்டு ஒன்றும் செய்வதில்லை.
2.அதைச் செய்தால் இந்தச் சக்தி விரயம் ஆகும்.
3.அந்த விரயம் ஆகும் நிலைக்குக் கொண்டு செல்லாமல் உருவாக்கும் நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று சொன்னார் குருநாதர்.
 
இப்படித்தான் ஏதேதோ செய்யும்படி பல நிலைகளைச் செய்து
1.“அது சொல்வதற்கில்லை…!இப்படி எண்ணிலடங்காத நிலைகளைச் செய்து தான் எனக்கு இந்த வாக்குகளைக் கொடுத்தார் குருநாதர்.
2.நமது அகண்ட அண்டமும் பேரண்டமும் ப்படி இயங்குகிறது? என்ற உண்மைகளை எல்லாம் கொடுக்கிறார்.
3.நமது பிரபஞ்சமும், 27 நட்சத்திரங்களும் எப்படி எல்லாம் இயங்குகிறது…? என்பதை நேரடியாகப் பார்த்தால் எப்படி இருக்கும்!
 
மரண வாயிலில் வைத்துத்தான் இந்த அற்புதங்களை பார்க்காத காட்சிகளை எல்லாம் காட்டுகிறார் குருநாதர். ஏறு சிங் இறங்கு சிங் என்று சொல்லி இந்த ஆட்டங்களைக் காட்டி அப்புறம் என்னை எழுப்பி விடுகிறார் குருநாதர்.
 
மற்றவர்கள் பார்க்கும் போது கால் முடமாக இருப்பது போல இருக்கிறார். அவரைப் பைத்தியம் என்று தான் நினைத்தார்கள். அதனால் காலை முடக்கிக் கொன்டார். ஆனால் அந்த உண்மையின் தன்மையை எமக்குக் கொடுத்து இங்கு நடனம் ஆடுகிறார்.
 
குருநாதர் ரசமணி செய்வார்தங்கத்தைச் செய்வார். இந்தச் சரக்குகளைச் செய்தால் அது சரியாகும். தங்கத்திற்காக என்று குருநாதரிடம் ஆசைப்பட்டு அணுகியவர்கள் ஏராளமானோர்.
 
ஆனால் இதிலிருந்து ஒடுங்கப்பட்டுத் தனித்தன்மையாக எனக்கு ஐவர் மலையில் வைத்துத்தான் அந்தச் சக்தியைக் கொடுத்தார்.
 
அப்புறம் அங்கிருந்து புறப்பட்டு இன்றைக்கு வரையிலும் அவர் சொன்ன உண்மையின் நிலைகளைச் செய்கிறேன். அவர் இருக்கும் பொழுதே பல காடுகள் பல மேடுகள் எல்லாம் அலைந்து பார்த்தேன். இருந்தாலும் உண்மையெல்லாம் எமக்குத் தெளிவாகத் தெரிந்த்து இந்த ஐவர் மலையில் தான்.
 
அந்த உண்மையின் உணர்வு வந்தபின் குருநாதர் என்ன செய்வார்?
 
சில இடங்களில் சில மரங்களை கற்களை எடுத்து… “இப்படிச் சொன்னால் அது தூக்கி மேலே போகும்…? அந்தப் பக்கம் தூக்கி வீசுவது என்ற இந்த மாதிரி உணர்வுகளையும் குருநாதர் காட்டுவார்.
 
அப்பொழுது இந்தச் சக்தி வரும் போது எனக்கு ஒரு திமிர் ஏற்படுகிறது.
 
ஒரு மரத்தைத் தூக்கி வீசும் பொழுது நம்மால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். ஓர் எதிரி இருந்தால் அவனை வீழ்த்தக்கூடிய சக்தி நமக்கு இருக்கிறது என்று இப்படித்தான் எனக்குச் சிந்தனை வருகிறது.
 
அதை எப்படி நல்ல வழிக்குப் பயன்படுத்த வேண்டும்…? என்று அந்தந்தச் சமயங்களிலெல்லாம் குருநாதர் ஒவ்வொரு உணர்வின் நிலைகளையும் உபதேசித்தார்.
 
இன்று வரையிலும் எம்மை குருநாதர் எப்படிக் கொண்டு வந்தாரோ அதே போல மற்றவர்களையும் கொண்டு வர வேண்டும் என்றுதான் விரும்புகின்றேன்.
 
இத்தனை பெரிய சிரமங்களைக் கடந்து, இந்த உலகம் எப்படி இருக்கிறது…? என்ற நிலையும் இந்த உடலுக்குப்பின் என்ன…? என்ற நிலையும் பிறவி இல்லா நிலைகள் எப்படி அடைய வேண்டும்? என்ற உண்மைகளை எனக்கு உணர்த்தினார் குருநாதர்.
 
1.அந்த நிலையில் எது எது உன்னைச் சந்திக்கும்?
2.அந்த ஆசையின் நிலைகள் உனக்கு எப்படித் திரும்பும்?
3.அல்லது ஆசையின் நிலைகள் உனக்குள் திரும்பும் போது உன்னை எதிரி என்ற நிலையில் உன்னைத் தாக்கும் உணர்ச்சி வரும்.
 
ந்தக் கடுமையான உணர்வை ஏற்றினால் உன்னையும் ஆட்கொண்டு உனது நல்ல குணங்களைக் கொல்லும். அவனையும் காக்க முடியாது. இப்படிக் கடுமையான சோதனைகள்.
 
போகும் பக்கம் எல்லாம் எதிர்ப்புகள் வரும். நாய் கூடக் கடிக்க வரும், அப்பொழுது என்னென்ன செய்வது? என்று முதல் அனுபவத்தைக் கொடுத்தார்.
 
இப்படித்தான் இருபது வருடம் அனுபவம் பெற்று உலகம் எப்படி இருக்கிறது…? என்ற நிலையைக் காடு மேடெல்லாம் சென்று நான் அறிந்தேன்.
 
உங்களுக்கு இந்தச் சக்தியைக் கொடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன். இன்னும் சொல்லப் போனால், ஒவ்வொரு நேரத்திலும் நான் பட்ட அவஸ்தைகள் இன்னதென்று சொல்ல முடியாது.
 
நீங்கள் அனைவரும் அகஸ்தியனைப் போன்று அருள் ஞானிகளாக உருவாக வேண்டும்:-
 நீங்கள் இதைப் பேணிக் காத்து எல்லோருக்கும் இந்த உன்மையை உணரும் தன்மை பெறச் செய்ய வேண்டும். நீங்கள் எடுத்துக் கொண்ட மூச்சலைகள் பிறருடைய தீமைகளை அகற்றும் சக்தியாக வளர வேண்டும்.
 
அதே சமயத்தில்
1.என்னுடைய ஆசைநீங்கள் அனைவரும் என்னைப் போல் பெரும் ஞானிகளாக மாற வேண்டும்.
2.பிறருடைய தீமைகளைப் போக்கும் மகான்களாகத் தான் நீங்கள் மாற வேண்டுமே தவிர
3.இந்த உடலின் இச்சைக்கு மாறி விடாது உங்களைக் காத்து நல் வழியில் கொண்டு வருவது தான் என்னுடைய முழுமையான தியானம்.
 
நீங்கள் முழுமை பெற்றால்தான் இதைச் செயல்படுத்த முடியும்.
 
ஏனென்றால் அதைத்தான் இப்பொழுது மிகவும் வலுப்படுத்துகின்றேன்.
1.இந்தச் சக்தி பெற்ற நீங்கள் யாம் இப்பொழுது உபதேசித்த உணர்வுகள் கொண்டு
2.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையிலும் வழி காட்டுதல் வேண்டும்.
3.உங்களை அறியாது உணர்வுகள் எப்படி இயக்குகின்றது? அதில் இருந்து நீங்கள் எப்படி மீள வேண்டும் என்று உபாயத்தைக் கூறி
4.அந்தப் பதிவின் நிலைகளை அவர்களுக்குப் பதிவு செய்ய வேண்டும்.
 
அந்தப் பதிவின் நிலைகள் அவர்களுக்குள் வளர்ந்து அந்த எண்ணத்தால் தீமையிலிருந்து அவர்கள் விடுபடுவதும் தீமை செய்தவர்கள் திருத்திக் கொள்வதும் நன்மை செய்யும் உணர்வு உள்ள மக்களாக அவர்களை மாற்றும் திறன் நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத் தான் யாம் இதைச் சொல்வது.
 
அந்த முழுமையின் தன்மைகளை நாம் எல்லோரும் அடைதல் வேண்டும். இதுதான் நமது லட்சியமே. இந்த லட்சியத்தின் நிலைக்கு வரும் போது
1.செல்வத்தை நாம் தேடிப் போக வேண்டாம் செல்வம் தன்னாலே வந்து சேரும்.
2.செல்வத்தைக் குறிக்கோளாக வைத்தால் தனுடைய ஆசையின் நிலைகள் உடல் பற்று தான் வரும்.
3.ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் எல்லோரும் அந்த அகஸ்தியனைப் போன்று
4.உலகைக் காக்கும் அருள் ஞானிகளாக வளர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன்.
 
எமது அருளாசிகள்.