
வினை… வினைப்பயன் என்று சொல்வதன் பொருள்
இன்று கசாப்புக் கடையில் பார்க்கலாம்… அங்கே உயிருடன் அறுக்கின்றார்கள்… சூடாக இருக்கும் தண்ணீரில் “டபக்” என்று முக்குகின்றார்கள்… அது வேதனைப்படுகிறது.
ஆனால் அந்த மாமிசங்களைத் தான் உட்கொள்கின்றோம்.
சுடு தண்ணீரில் முக்கும்பொழுது அவன் பாவத்தைச் செய்கின்றான்… அதை நாம் உற்று நோக்குகின்றோம். ஆனால் அதற்காக அதை உட்கொள்ளாமல் இருப்பதில்லை.
1.சுடு தண்ணீரில் முக்கும் பொழுது கஷ்டமாக
இருக்கின்றது.
2.அந்தப் பாவ நிலைகள் நமக்குள் பாவ வினையாகச்
சேருகின்றது.
ஏனென்றால் கண்ணிலே உற்றுப் பார்த்தோம்… சுடு தண்ணீரில் அது எப்படி எரிகின்றதோ அந்த
உணர்வை நுகர்கின்றோம்… நம் ரத்தத்தில் அது கலக்கின்றது.
1.ஒரு நான்கு ஐந்து தடவை இவ்வாறு கோழிகளை
உயிருடன் சுடு தண்ணீரில் அமுக்கும் போது பார்த்தோம் என்றால்
2.அந்த எரிச்சல் நிச்சயம் நம் உடலில் உருவாகும்.
அந்தக் கோழியைத் தான் சாப்பிடுகின்றோம். அதனுடன் சேர்ந்து அது எப்படி எரிச்சல் அடைந்ததோ
அந்த எரிச்சல் நம் உடலில் நிச்சயம் வரும்.
கடைக்காரன் காசுக்காக அவ்வாறு செய்கிறான். பாவமே…! என்று
பார்க்கின்றோம். உணவாக உட்கொள்வதற்காக நாம் இதை நுகர வேண்டி
இருக்கின்றது. இருந்தாலும் உட்கொள்ளும் போது ருசித்து
உட்கொள்கின்றோம்.
ஆகவே இந்த உணர்வின் இயக்கங்கள் எப்படி இருக்கும்…? சற்று சிந்தித்துப் பாருங்கள். இது எல்லாம் பாவ வினைகள்.
ஒருவன் தீய செயலைச் செய்கின்றான். “இப்படிச் செய்கின்றானே…” என்று நாம் கூர்மையாக உற்று நோக்கிப் பார்க்கின்றோம்… அது தீய அலைகள்…!
1.அந்த உணர்வை நுகர்கின்றோம்.
2.நம் ரத்தத்திலே கலந்து அணுவாக மாறுகின்றது.
இது தீய வினை.
ரோட்டில் ஒருவன் எவனையோ பார்த்து நாசமாகப் போ…! என்று சாபமிடுகின்றான்.
அது சாப அலைகள்.
1.நாம் அதைப் பார்க்க நேர்ந்தால் அவன் விடும்
சாபத்தை நுகர்ந்து விடுகின்றோம்.
2.உடலுக்குள் சென்ற பின் அது தீய செயல்களையே செய்கின்றது.
ஆரம்பத்தில் தாய் கருவிலே சிசுவாக இருக்கின்றோம். தாய் இது போன்று எத்தனையோ அதிர்ச்சியான
நிலைகளையோ தவறு செய்பவர்களையோ உற்றுப் பார்த்து நுகர்ந்திருக்கும்.
1.தாயின் இரத்தத்தின் வழியாக அந்த உணர்வுகள்
கருவிலேயும் சேர்ந்து விடுகிறது
2.இது பூர்வத்தில் வரும் வினை.
இப்படிப் பல விதமான உணர்வுகள் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு எது
எதை நுகர்கிறோமோ அவை எல்லாம் நமக்குள் வந்து சேருகின்றது.
பாவத்தைப் பார்க்கும் பொழுது “அடப் பாவமே…” என்று எண்ணுகிறோம்… அந்தப் பாவத்தை வளர்க்கின்றோம். தீய செயல்கள்
செய்பவனை உற்றுப் பார்க்கும் பொழுது தீய வினைகளை நமக்குள் வளர்க்கின்றோம். அந்தந்த
அணுக்கள் உருவான பின் அதனதன் ருசியையேத் தேடுகின்றது.
இந்த வினைகளை எல்லாம் போக்க வேண்டுமல்லவா…!
வினை என்றால் வித்து. செடி கொடிகள் வளரும் பொழுது அதில் வித்துக்கள் உருவாவது போல்
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் வினையாகி உணர்ச்சியாக
இயக்கி
2.உடலில் விளையும் பொழுது அணுக்களாக மாறுகின்றது…
வித்தாக மாறுகின்றது…!
சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா…! இவை அனைத்தையும் நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கொடுத்துள்ளது.