ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 27, 2026

ஞானியரின் அருள் உணர்வுகள் தீமைகளை விழுங்கிவிடும்

ஞானியரின் அருள் உணர்வுகள் தீமைகளை விழுங்கிவிடும்


இப்பொழுது உங்களுக்கு எது எதுஎதை எதை விழுங்குகிறது…? என்ற நிலையை உணர்த்துகின்றோம். அதாவது
1.உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை அந்த ஞானியர்களுடைய உணர்வுகளுடன் கலந்தவுடன்
2.அது விழுங்கி அந்தத் தீமையை அடக்குகின்றது.
 
அதை அடக்கிய நிலைகள் கொண்டு உணவாக அந்த உணவு தேவைதான். ஆனால் இதனுடைய தன்மை அதற்குத் தேவை. 
 
ஒரு மரக் கட்டை எரிகிறதென்றால் பல உணர்வுகள் சேர்த்து எண்ணெய்ப் பசை இருந்தால்தான் அது எரியும். எண்ணெய்ப் பசை இல்லை என்றால் கருகிவிடும்.
 
இதைப் போலத்தான் நாம் வைக்கும் குழம்பிற்குள் சுவை தேவை என்றால் காரம் தேவை. அந்தக் காரத்தை எந்த அளவு சேர்க்கின்றோமோ அதற்குத் தக்கவாறுதான் அந்த உணர்ச்சிகள் உந்தும்.
 
இதைப் போல
1.நமக்குள் எத்தகைய தீய குணம் இருப்பினும் அருள் ஞானிகளின் உணர்வைச் சேர்த்து விழுங்கிடல் வேண்டும்.
2.அருள் ஞானிகளின் உணர்வை நாம் விழுங்கினால் அது தீமைகளை விழுங்கும்.
3.எனவே நாம் மகரிஷிகளின் உணர்வுகளை அதிகமாகச் சேர்க்க வேண்டும்.
 
ஞானத்தை அறிய வேண்டும் என்றால் இப்பொழுது நீங்கள் கேட்டறிந்த உணர்வுகள் உங்களுக்குள் எத்தனை கோடி குணங்கள் இருப்பினும் அவை அனைத்திலும்…” எண்ணத்தால் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலக்க வேண்டும்.
 
அவ்வாறு கலக்கும் பொழுது இது உங்களுக்குள் பால்வெளி மண்டலமாகத் துகள்களாகச் சேர்கின்றது. இவ்வாறு சேர்த்துக் கொண்ட இந்தத் துகள்கள் இந்த உணர்வுகள் நுகர நுகர எண்ணங்களாக விரிவடைகின்றது.
 
எண்ணங்களின் தன்மை விரிவடையப்படும் பொழுது இங்கே பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் ஏற்படுகின்றது. அந்தத் திறன் இல்லையென்றால் நாம் செயலாக்க முடியாது.
 
1.அந்தத் திறன் நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த உணர்வைப் பதிவு செய்வதும்
2.அந்த உணர்வின் துணை கொண்டு தீமைகளை அகற்றும் வல்லமை நீங்கள் பெற வேண்டும் என்றும்
3.அதே சமயத்தில் அருள் ஞானிகளின் உணர்வை அடிக்கடி எண்ணும் பொழுது நுகர வேண்டுமென்பதற்கும் இதை உபதேசிப்பது.
 
நம் உடல் நாம் உணவாக உட்கொள்ளும் நிலைகளில் உணவில் கலந்துள்ள நஞ்சினை மலமாக மாற்றிடும் திறன் பெற்றது. அதே போன்று நமக்குள் உணர்வின் தன்மை பதிவு செய்த நிலைகள் கொண்டு கேள்விப்பட்ட தீமையான நஞ்சுகளையும்  அது நீக்கி நல்ல உணர்வைப் படைத்திடும் ஆற்றல் பெற்றது.
 
ஆனால் மனித வாழ்க்கையில் வந்த நஞ்சினை எல்லாம் நீக்கியவன் மகரிஷி.
1.அந்த மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து எடுத்து நமக்குள் இணைத்திட வேண்டும் என்பதற்குத் தான் பல வட்டங்களை இங்கு எழுப்பி
2.உங்கள் உணர்வின் நினைவாற்றலை இணைத்து அதனுடன் மகரிஷிகளின் அருள் உணர்வை இணைத்து
3.உங்களுக்குள் அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்தியது.
 
மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களை நுகரும்படி செய்யும் பொழுது உங்களுக்கு அது பால்வெளி மண்டலங்களாக வருகின்றது. ஆனால் நீங்கள் இதை நினைவு கொள்ள வேண்டும்.
 
குறைகளை எவர் சொன்னாலும் அதை எண்ணத்தால் பதிவு செய்யக்கூடாது. உடனடியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற நினைவை
1.“அங்கேயே அதிகமாக்கி…” இந்த கணக்கைக் கூட்ட வேண்டும்.
2.எந்த அளவிற்கு நீங்கள் இந்த கணக்கை அளவு கோல் கூட்டுகின்றீர்களோ அந்தத் தீமைகளின் நிலைகள் நமக்குள் வராது.
 
ஆனால் அவர் தீமை செய்தார் என்ற கணக்கினைக் கூட்டினால் நன்மை செய்யும் கணக்குகள் குறைந்துவிடும். ஆகவே நீங்கள் இதை மாற்றுதல் வேண்டும்.
 
நன்மை நன்மை, என்று நாம் சொன்னாலும் இந்த நன்மை நன்மையாகாது.
1.நல்லது நல்லதும் ஆகாது
2.கெட்டது கெட்டதும் ஆகாது.
 
தீமை என்ற காரத்தினுடன் நன்மை என்ற நல்ல பொருளை அதிகமாகக் கூட்டினால் அந்தத் தீமையின் நிலைகள் இதுக்குள் உள்ளடங்கி நன்மை பயக்கும் நிலையாக இணைந்தே இயக்கும்.
 
இதைப் போலத்தான் மகரிஷிகளின் அருள் வட்டத்தை நமக்குள் இணைத்துப் பழக வேண்டும்.
 
இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் என்னிலே பெற வேண்டும் என்று இதைப் பெருக்கிக் கொண்டிருக்க வேண்டும். 
1.தீமை என்ற கணக்கை இங்கே தள்ளிவிட வேண்டும்.
2.இது சரியில்லை தப்பான கணக்கு என்று அதை நீக்கிப் பழக வேண்டும். 
 
இது இல்லையென்றால் நாம் இந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்று தான் பொருள்.
 
ஆறாவது அறிவு தெளிந்திடும் நிலைகள் பெற்றவன் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன், மனிதனான பின் நாம் சிருஷ்டிக்கும் வலிமை பெற்றவர்கள்.
 
மகரிஷிகள் சென்ற பாதையில் நாமும் பிறவியில்லா நிலைகளை அடைவோம். உணர்வுகளை உயிரோடு ஒன்றி உயிரைப் போன்று ஒளியாக மாற்றிடுவோம்.
1.பேரொளியாக மாற்றிப் பெரு வீடு என்ற நிலையாக
2.நாம் அனைவரும் சப்தரிஷி மண்டல எல்லையை அடைவோம்
3.மெய் உலகைச் சிருஷ்டி செய்வோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் 


திருச்சபையின்யுள் மெம்பராக நாம் சேர்ந்திருக்கின்றோம்.
1.குருதேவர் துருவ நட்சத்திரத்துடன் ஈர்ப்பு வட்ட்த்தில் அவர் ஆயுள் மெம்பராக இருக்கின்றார்.
2.அதன் வழி வளர்ச்சி பெற்று இன்றும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
3.அவர் காட்டிய அருள் வழியில் நான் அவருடன் ஆயுள் மெம்பராக இணைந்து இருக்கின்றேன்.
4.அது போல் நாம் அனைவரும் குரு வழியில் அங்கே அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைந்திருக்கின்றோம்.
 
துருவ நட்சத்திரம் என்பதே பல மனிதர்களுடன் ஒன்றி ர்வின் தன்மை தெளிவாக்கித் தெளிந்த உணர்வுடன் ஒன்றி… ஒன்றி நிலைகள் கொண்டு “எல்லோருடைய உணர்வும்கைமையற்ற உணர்வு கொண்டு…” ஒளிச் சரீரம் பெற்றது.
 
பலவிதமான பல கோடிக்கணக்கான நச்சுத்தன்மைகள் இருந்தாலும் அதையெல்லாம் ஒளியாக மாற்றிடும் அருள் சக்தி பெற்றுத் துருவ நட்சத்திரம் வாழ்ந்து வருகின்றது.
 
மனிதரான பின் பிறவி இல்லாத நிலை அடைவதே கடைசி நிலை.
 
அதாவது இந்த உடலில் கோடிக் கரையில் இருக்கின்றோம். தனுசுக்கோடி ராமேஸ்வரத்தில் ராமன் நேரமாகி விட்டது என்று எண்ணி மனதைக் குவித்து அவர் பூஜிக்த் தொடங்குகின்றார்.
 
1.ஏனென்றால் இந்த மனித உடலில் ரொம்ப நாள் நாம் நீடித்து இருப்பதில்லை.
2.அதற்குள் எல்லோருடைய எண்ணங்களையும் ஒன்றாக்கி புவியின் ஈர்ப்பிற்குள் மற்றவர்கள் நம்மை இழுத்து விடாது
3.பேரருள் என்ற உணர்வின் தன்மை எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று நமக்குள் அதை ஒன்றாக்க வேண்டும்.
 
அருள் உணர்வுகள் மற்றவர்கள் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
1.அந்த உணர்வு தான் ங்கே கிடைக்கின்றது.
2.நம் மீது அவருக்குப் பற்று வருவதில்லை.
 
இப்படி ஒவ்வொரு மனிதனும் நாம் செயல்படுத்தும் போது கடைசி நிலையில் நாம் துருவ நட்சத்திரத்துடன் ஐக்கியமாகின்றோம்.
 
ஆனால் என் குடும்பம் இப்படி இருக்கின்றது பிள்ளைகளுக்கு நாளை என்ன செய்வேன்…? என்ற எண்ணம் வந்தால் புவியின் பற்று வந்து விடுகின்றது. இங்கே யார் மீது பற்று கொண்டுள்ளோமோ அவர் உடலுக்குள் தான் செல்ல நேரும்.
 
வர் உடலுக்குள் சேர்ந்து தன் உடலில் ஏற்கனவே சேர்த்துக் கொண்ட உணர்வுகளை அங்கே பாய்ச்சி அந்த உடலையும் வீழ்த்திவிட்டு மனிதனல்லாத உடலுக்குள் தான் அடுத்து செல்ல முடியும்.
 
ஆனால் இந்த உயிர் என்றுமே நிலையானது. தீயிலே மனிதன் குதித்தால் உயிர் வேகாது. டல் கருகும். அந்த நெருப்பின் தன்மை கொண்டு கருகிய உணர்வு தான் எல்லா அணுக்களிலும் பெருகும்.
 
1.உடல் கருகி இந்த உயிரான்மா வெளியே சென்றால் அடுத்து ஏரி பூச்சியாகத் தான் பிறக்கும்.
2.ஏனென்றால் எல்லா சிந்தனைகளும் எரிந்தது... கருகிய உணர்வுக்கொப்ப அத்தகைய பூச்சியாக மாறுகின்றது.
 
மனித உடல் மீது இந்தப் பூச்சி பட்டால் சூடு போட்டது மாதிரி ஆகிவிடும். தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டவர்கள் எல்லாம் இப்படித்தான் ஏரி பூச்சியாக மாறுகின்றார்கள்.
 
திலிருந்தெல்லாம் விடுபட்டு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் செல்ல வேண்டும்.
1.அவர் பேரருளைப் பெற்றார்… நமக்கு அந்த பேரருள் பெறும் முறையைக் கொடுத்தார்.
2.என்னை எப்பொழுதுமே அந்த துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து விடு என்றார்.
3.அதே வழியில் தான் உங்களையும் அங்கே இணைத்து நாம் அதன் வழியில் துருவ நட்சத்திரத்தின் கிளைகளாக இருக்கின்றோம்…”
 
ற்றும் பாசமும் கொண்டு அது வரும் பொழுது அவர்களுக்கு இதை உபதேசிப்பதும் அதை ஏற்றுக் கொள்ளச் செய்வதும்… ஏற்றுக் கொண்டவருக்கு அந்த அருள் உணர்வுகளைக் கொடுப்பதும் என்று செயல்படுத்தி வருகிறோம்..
 
பேருக்கு ஆயுள் மெம்பர் என்று சொல்லிக் கொள்வதில் பிரயோஜனம் இல்லை.
1.யுள் மெம்பராக இருப்பவர்கள் அனைவருமே குடும்பத்தில் ஒவ்வொரு நொடியிலும் ஒன்றுபட்டு வாழும் உணர்வைச் சேர்த்து பழக வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.