ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 5, 2026

உங்களை எல்லாம் அருள் ஞானியாக ஆக்கும்படி சொன்னார் குருநாதர்

உங்களை எல்லாம் அருள் ஞானியாக ஆக்கும்படி சொன்னார் குருநாதர்


நம் வாழ்க்கையில் நஞ்சான நிலைகள் வேதனை என்ற நிலைகள் வந்தாலும் அதைத் துடைக்க துடைத்திட்ட அருள் ஞானிகளின் உணர்வை நாம் பருக வேண்டும் என்ற இந்த நிலையைத்தான் அன்றைய ஞானிகள் தெளிவுறக் காட்டியுள்ளார்கள்.
 
1.எந்த உயிர் நம்மை சிருஷ்டித்ததோ அந்த உயிரிடமே வேண்டி
2.என்னை அறியாத பிழைகளை நீக்கி
3.அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று எந்த மனிதன் ஏங்குகின்றானோ
4.அந்த உணர்வின் துணை கொண்டு அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்.
 
நம்மை ஆண்டு கொண்டிருக்கும் இந்த உயிரை ஈசனாக மதித்து நடக்க வேண்டும். நாம் எண்ணியது அனைத்தையும் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றது நமது உயிர் என்ற இந்த நிலையை உணர்த்துவதற்குத்தான் இராமாயாணம் மகாபாரதம் கந்தபுராணம் என்ற காவியங்களைச் சாதாரண மக்கள் புரிந்து கொள்வதற்குத் தீட்டினர் ஞானிகள்.
 
நம் முன் சூட்சமத்தில் காற்றலைகளுக்குள் படர்ந்திருக்கும் நிலையும் நாம் எண்ணிய உணர்வுகள் சூட்சமமாக மறைந்திருக்கும் நிலையும் உயிருக்குள் பட்டு …” என்று ஜீவனாகின்றது.
 
அந்த உணர்வின் சத்து ம்…” என்று நம் சரீரமாகி நம் சரீரத்திற்குள் நின்று நாம் எந்தெந்த குணங்களை எண்ணினோமோ அதனின் சக்தியாக நமக்குள் இயங்குகின்றது.
 
பின் அதே உணர்வு நமக்குள் இயக்கப்பட்டு அதன் துணை கொண்டு நாம் உயர்ந்த குணங்களை எடுத்தால் உடல் ஆரோக்கிய நிலை பெறுகின்றோம்.
 
1.ஆனாலும் உயர்ந்த குணங்களை எடுத்துக் கொண்டாலும் வேதனை என்ற உணர்வினை ஒரு துளி எடுத்தாலும்
2.இந்த உடல் அனைத்தும் சோர்வடைந்து நல்ல குணங்கள் அனைத்தும் மறைந்து விடுகின்றது.
 
இதையெல்லாம் நாம் அறிந்து கொள்வதற்காகப் பல காவியங்களை எழுதி மனிதன் இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் அதைத் தீமைகளை நீக்கிட முடியும் என்று காட்டினார்கள் ஞானிகள்.
 
ஆறாவது அறிவைத் தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது. முருகு என்பது மாற்றியமைக்கும் நிலை. முருகா என்பது அழகுபடுத்தும் நிலை.
 
இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு நமக்குள் நம்மை அறியாது புகுந்த தீமைகளை அகற்றிடும் நிலையாகத்தான் இந்த நிலையைத் தெளிவுற எடுத்து உணர்த்தினார் குருநாதர்.
 
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக ஈசனாக மதி என்றார்.
2.அவர்கள் உடலை ஆலயமாக மதி என்றார்.
3.அந்த ஆலயங்களில் அமைந்துள்ள உயர்ந்த குணங்கள் அனைத்தும்
4.மனிதனாக உருவாக்க உதவிய அந்த நற்குணங்களைத் தெய்வமாக மதி என்றார்.
 
ஒவ்வொரு மனிதனையும் தீமைகளிலிருந்து அகற்றிடவும் மனிதன் என்ற புனிதத் தன்மை பெறவும் மனித நிலையிலிருந்து விடுபட்டு ஒளியின் சரீரமாக என்றும் நிலையாக நிலைத்திருக்கும் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நீ பிரார்த்தனை செய்என்றார்.
 
1.உனக்குக் கிடைக்க வேண்டும் என்று எதை நான் பிரார்த்தித்தேனோ
2.எதை உபதேசித்தேனோ
3.அதை நீ எவ்வாறு கூர்ந்து கவனித்தாயோ
4.இந்த உணர்வுகள் உனக்குள் பதிவாகின்றது
 
அந்தப் பதிவை மீண்டும் நீ நினைவாக்கப்படும் பொழுது நான் கூறிய உணர்வும் நான் உணர்த்திய உணர்வும் நீ பெறும் தகுதியைப் பெறுகின்றாய்.
 
நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்…”
 
பிறருடைய தீமைகளை அகற்றி அதன் வழியில் மெய் வழி பெறவேண்டும் என்று ஏங்கி அதனை நீ ஒவ்வொரு உயிரையும் ஈசனாக மதித்து நீ செயல்படு என்றார்.
 
நான் உனக்குக் காட்டிய அருள் வழிப்படி அந்த ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலைப் பருக நீ எண்ணு.
 
எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்…” என்ற ஏக்க உணர்வுடன் நீ பெறுவாய் என்றால்
1.எல்லோருடைய வலுவும் உனக்குக் கிடைக்கின்றது.
2.அவர்களின் துணை கொண்டு மெய் ஒளியினைப் பெறுகின்றாய்.
3.அது உனக்குள் விளைந்து உன் சொல்லைக் கேட்போர் உடலுக்குள்ளும் விளையும்.
 
அவ்வாறு விளையச் செய்ய அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை ஆழப் பதியச் செய் என்றார். அவர்களை மீண்டும் நினைவு கொள்ளும்படிச் செய். அவர்கள் நினைவு கொள்ளும் பொழுது அவர்களும் தீமைகளிலிருந்து விடுபடுகின்றனர். 
 
அவர்கள் அறியாது சேர்ந்த தீமைகளிலிருந்து விடுபட
1.நீ கண்டறிந்த உபாயத்தை
2.உனக்கு உணர்த்திய இந்த உணர்வை
3.உணர்த்திய வழியில் நீ கண்டறிந்த அறிவினை
4.எல்லா மக்களுக்கும் உபதேசி என்றார்.
 
குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படித்தான் இதைச் செய்து கொண்டிருக்கின்றேன்.

எலெக்ட்ரானிக்கின் இயக்கம் – முகப்பு பற்றிய உண்மை

எலெக்ட்ரானிக்கின் இயக்கம் – முகப்பு பற்றிய உண்மை


சூரியனிலிருந்து வரக்கூடியது எலக்ட்ரிக். அதைக் கடந்து வரும் பொழுது காந்தம் இழுத்துக் கொண்டால் நியூட்ரான். அது ஓடும் ஓட்டத்தில் இரண்ட இணைந்து உணர்வின் தன்மை ஒரு அணுவாக மாறப்படும் பொழுது புரோட்டான்த்தாக மாறுகின்றது… விஞ்ஞானிகள் சொல்வது.
 
ஞானிகள் சொல்வது… சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்குகின்றது.
1.அது ஒரு செடியின் சத்தைக் கவர்ந்தால் எலக்ட்ரானிக். அதை நாம் நுகர்ந்தால் அதே எலக்ட்ரானிக் நம்மை இயக்கும்.
2.நம் உயிர் எலக்ட்ரிக் அதே சமயத்தில் நாம் உருவாக்கும் உணர்வலைகள் வெளிப்படும் பொழுது
3.சூரியன் எடுத்துக் கொண்டால் எலக்ட்ரானிக் ஆக மாறுகிறது.
4.இவ்வாறு வெளிப்படுவதை இன்னொருவர் நுகர்ந்தால் அதே எலக்ட்ரானிக் அங்கேயும் இயக்குகின்றது.
 
இப்படித்தான் எலக்ட்ரானிக் என்பது மனித உணர்வின் தன்மை எடுத்து மனித உணர்வை விஷத்தன்மை கொண்ட நாடாக்களில் பதிவு செய்கின்றார்கள்.
 
இந்த உணர்வின் அழுத்தம் வரும் பொழுது எதனுடன் கலக்கப்படுகின்றதோ அந்த அறிவே அதிலே இணைகிறது.
1.நோயாகி விட்டால் அது கம்ப்யூட்டரில் உள்ள நாடாவில் இணைந்து விட்டால் அடுத்தவருக்கும் இந்த நோய் வரும்.
2.குடும்பத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அதே உணர்வுகள் இணைந்து
4.அந்த நாடாவின் மூலமாக அடுத்த குடும்பத்திலும் இந்தச் சண்டை வரும்.
 
ஆகவே… கம்ப்யூட்டர் இயக்குபவர்கள் தவறான பாதையில் செல்வது… தவறான நிலைகள் செயல்படுவது இதற்கும் அதற்கும் சம்பந்தம் உண்டு.
 
ஏனென்றால் இந்த உணர்வு எலெக்ட்ரானிக்காக மாறப்படும் பொழுது இதே உணர்வுகள் நாடாக்களில் பதிவாகும். பல நோய்கள் வருவதற்கும் சில வைரஸ் என்று இவர்கள் சொல்வார்கள் அதெல்லாம் உருவாவதற்கும் காரணமாகின்றது.
 
இதே போன்று தான் கம்ப்யூட்டரின் பயன்பாட்டால் கோள்களின் உணர்வின் தன்மையை முகப்பில் இணைக்கின்றான். இவர்கள் விண்வெளிக்கு அனுப்பும் சாதனங்களிலே அதைப் பொருத்துகின்றார்கள்.
 
அவ்வாறு முகப்பில் வைத்து இணைத்து அனுப்பப்படும் பொழுது எதைப் படமெடுத்து இந்த உணர்வைப் பதிவாக்கினானோதனின் இடத்திற்கு அழைத்துச் செல்கின்றது.
 
எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் வரப்படும் பொழுது குறிப்பிட்ட எல்லைக்கு ராக்கெட் மூலமாக அனுப்பும் பொழுது கம்ப்யூட்டர் பதிவு செய்த நிலையில் அந்த எல்லைக்குச் செல்கின்றது.
 
இதே போன்று தான்
1.நல்ல குணங்கள் கொண்டிருக்கும் பொழுது ஒரு தீயவனின் உணர்வு பதிவான பின்
2.அந்த எல்லைக்கு ந்த உணர்வு நம்மை அழைத்துச் செல்கின்றது.
 
பிற உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம். இந்த உடலுக்குள் பதிவாகி அது முகப்பான பின் உடலை விட்டுச் சென்றால் அங்கே அழைத்துச் செல்கின்றது.
 
அதே சமயத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களின் ஒவ்வொரு முகப்பிலும் இணைத்து விட்டால்
2.உடலை விட்டுச் செல்லும் பொழுது நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்கின்றோம்.
3.கணவன் மனைவி இருவரும் அதை எடுத்து ஒன்றாக்கி விட்டால் சிருஷ்டிக்கும் ஆற்றல் பெறுகின்றோம்.
 
விஞ்ஞான அறிவுப் பிரகாரம் உங்களுக்கு இதை நிரூபித்துச் சொல்கிறேன்.
 
தை எல்லாம் குருநாதர் எமக்குத் தெளிவாகக் காட்டினார். விஞ்ஞானிகள் எப்படிச் செயல்படுத்துகின்றார்கள்…? புதிதாக எப்படிக் கண்டுபிடிக்கிறான்…? எப்படி எல்லாம் அதை இணைக்கிறார்கள்…? எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலை வரும் பொழுது எப்படியெல்லாம் உருவாகின்றது…?
 
படிக்காததனால் தான் இந்த அளவிற்குச் சொல்கின்றேன். ஆங்கில அறிவு எனக்கு இல்லை இருந்திருந்தால் தூள் கிளப்பி இருக்கலாம்…” ஆனால் குருநாதர் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
 
குருநாதர் எல்லா பாஷைகளும் பேசுவார். எனக்கு அது வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
 
பாஷைகள் கற்றவர் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். பற்று கொண்டோர் வரும் பொழுது அதன் வழிகளில் தைக் கொண்டு செல்லலாம். உன் நேரத்தை வீணாக்காதே நீ இதைச் செயல்படுத்து…! என்று சொல்லிவிட்டார். அதன் வழியில் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
 
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை முகப்பில் நீங்கள் வைத்துக் கொண்டால் அது உங்களை அங்கு அழைத்துச் செல்லும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை பெருக்கும்பொழுது அது வளர்ச்சி அடையும்.
 
இதிலே வித்தையும் இல்லை ஒன்றும் இல்லை…!