ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 3, 2026

பூர்வ புண்ணியம்

பூர்வ புண்ணியம்


ஆடு மாடுகளுக்கு அந்தந்தக் காலங்களில் இரை போடுகின்றோம். 3 மணிக்கு இரை போட்டுப் பழக்கினால் மணி 3 என்று தெரிந்து கொள்ளும்.
1.அந்த உணர்வுப்படி அது சத்தம் போட ஆரம்பித்துவிடும்.
2.யார் இரை போட்டாரோ அவர்களை எண்ணி உணர்வை வெளிப்படுத்துகின்றது.
 
இரை போடும் பொழுது சொல்வதையெல்லாம் ஆழமாகப் பதிவு செய்து கொள்கின்றது. அவர்களை அணுகி வருகின்றது. ஆனால் ஒருவர் இதை மிரட்டி இருந்தார்களென்றால் அவர்கள் வரும் பொழுதே இது மிரளுகின்றது. இந்த உணர்வுகள் அவர்களை இயக்குகின்றது. யார் மேல் பாசமாக இருக்கின்றதோ அந்த உடலுக்குள் பரிணாம வளர்ச்சிக்கு அது வருகின்றது.
 
ஆனால் மனிதனாகி இருக்கும் நாம் ஒரு மனிதனின் நிலைகளில் பாசமாக இருக்கின்றோமென்றால் இந்த உடலை விட்டுச் சென்றபின் அவர்கள் உணர்வை நாம் வளர்த்துக் கொண்டால் இந்த உடலை விட்டுச் சென்றபின் யார் மேல் பாசமாக உள்ளோமோ அவர்கள் உடலுக்குள் தான் செல்லும்.
 
மனித உடலில் இருக்கும் போது எந்த நோய் இருந்ததோ அந்த நோயை அங்கே உருவாக்கத் தொடங்கிவிடும். மனிதனின் முதிர்ச்சி பெற்ற இயக்கங்கள் அதை இயக்கி அதை மாற்றியமைக்கச் செய்கின்றது. ஏனென்றால் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் இந்த நிலை அடைந்தவர்கள்.
 
ஆடு மாடுகளுக்கு எப்படி நாம் சொல்லும் போது உணர்வின் தன்மை பதிவாகின்றதோ அதைப் போல
1.தாய் கருவிலே இருக்கப்படும் போது பாசத்தால் அன்பால் பிறர் படும் கஷ்டங்களை
2.நோய்வாய்ப்பட்டவர்கள் உணர்வுகளை சண்டை போடுகின்றவர்கள் உணர்வுகளை வெறுப்பான உணர்வுகளை
3.ஒன்றிலிருந்து தொண்ணூறு நாள் அந்தக் கரு வளர்ச்சியாகும் பொழுது தாய் கண்ணால் பார்க்கப்படும் பொழுது
4.கருவின் உயிரணு தாய் எதை உற்றுப் பார்த்ததோ அதனின் ரூபமாக அது கவரத் தொடங்கிவிடும்.
 
அது அதனுடன் இணைந்து விட்டால் அதில் ஒருவருக்குப் புற்று நோய் இருந்ததென்றால் அவருக்கு 40 வயது இருந்தது என்றால் அதிலே விளைந்த இந்த செல்…” கருவிலே இருக்கும். குழந்தைக்கு அதே 40வது வயதில் புற்று நோய் வரும்.
 
ஆஸ்துமா நோயை உள்ளவரைத் தாய் பார்த்திருந்தால் அந்த உணர்வின் தன்மை கருவிலே பதிவாகி 40 வயது வரையிலும் ஆஸ்துமா இருக்காது. 40 வயதுக்கு மேல் ஆஸ்துமா வரும்.
 
அதே மாதிரிக் குடும்பத்தில் என்னென்ன சண்டை போட்டார்களோ அதைக் கேட்டிருந்தால் இந்தக் குழந்தையின் கருவிலே பதிந்து அதனுடைய உணர்ச்சிகள் தூண்டப்பட்டு அதனுடைய வளர்ச்சியில் அதே சண்டை போடும் உணர்வுகள் வரும்.
 
ஒரு கண்ணில்லாத குழந்தையை அதனுடைய உணர்வுகளை நுகர்ந்து குறைகளைச் சொல்லிக் கொண்டிருந்தால் அதே உணர்வுகள் குழந்தையின் உடலிலே கருவிலே இருக்கும் போது விளையாடப்படும் போது அதன் வளர்ச்சியைத் தடைப்படுத்திக் கண்ணுக்குண்டான சத்தைத் தடைப்படுத்தும்.
 
மனிதனின் வளர்ச்சியில் இப்படியெல்லாம் பல உண்டு.
 
முடமாக இருப்பவனை அதிகமாக நேசித்தாரென்றால் அதே உணர்வுகள் கருவிலே சேர்ந்து அணுக்கள் விளையத் தொடங்கி அந்தக் காலம் வரும் போது உணர்ச்சியைத் தூண்டும்.
 
நாம் செடி கொடிகளுக்கு உரமிடும் போது அதனுடன் இணைந்து எவ்வாறு விளைகின்றதோ இதைப் போலத்தான் கருவிலே வளரும் குழந்தைகளுக்கு வருகின்றது.
 
குடும்பத்தில் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள் என்றால் அந்தக் குடும்பத்தில் சண்டையும் சச்சரவும் அதிகமாக இருக்கும். இருந்தாலும்
1.கர்ப்பமாக இருக்கப்படும் பொழுது யாராவது ஒருவர் உயர்ந்த குணங்கள் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் பொழுது
2.கடைவீதிகளிலோ மற்றவைகளிலோ வேடிக்கை பார்க்கச் செல்கின்றது.
3.அந்த உயர்ந்த சொல்களைக் கர்ப்பமாக இருக்கும் தாய் கேட்டது என்றால் அந்தக் குழந்தை கருவிலே விளைந்த பின்
4.வீட்டிலே மிகவும் தரித்திரமாக இருப்பார்கள்… ஆனால் இது ஞானக் குழந்தையாக வளரும்.
 
சில குடும்பங்களில் மிகவும் ஏழையாக இருப்பார்கள். ஆனால் சந்தர்ப்பம் உயர்ந்த உணர்வுகள் அதற்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து அந்தக் குழந்தை ஞானியாக உருவாகும்.
 
1.நமது வாழ்க்கையில் இன்றைக்கு எவ்வளவு திறமை உள்ளவராக நாம் இருந்தாலும்
2.தாய் கருவிலிருக்கும் போது பெற்ற பூர்வபுண்ணியமும் இணைந்தே வருகின்றது.
 
இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

பிரபஞ்சத்தின் சக்திகள் அனைத்தும் பூமிக்குள் பெருக்காகப் பெருகுவதே “ஆடி பதினெட்டு…”

பிரபஞ்சத்தின் சக்திகள் அனைத்தும் பூமிக்குள் பெருக்காகப் பெருகுவதே “ஆடி பதினெட்டு…”


1.ஒவ்வொரு வருடத்திலும் ஒவ்வொரு மாதத்திலும் மனிதன் எவ்வாறு தன் நினைவுகளைக் கூட்டிக் கொள்ள வேண்டும்…?
2.தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்…? உயர் ஞானத்தை எப்படித் தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்…? என்பதற்குத் தான் ஆடிப் பெருக்கு.
 
வருடத்திற்கு 12 மாதம் என்றால் அந்த 12 மாதத்திலும் 12 ராசிகள் என்று சொல்வார்கள். 12 மாதங்களையும் 12 ராசிகளாகப் பிரித்தனர் ஞானிகள்.
 
 ஒவ்வொரு மாதத்திலும் அந்த மாதத்தில் சூரியனிலிருந்து வெளிப்படும் கதிரியக்கங்கள் மற்ற கோள்களில் இருந்து வெளிப்படுத்தும் உணர்வுகளையும் மற்ற நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் உர்வுகளையும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் தொகுதி தொகுப்பு…” என்ற நிலையில் கொண்டு வருகிறது.
 
12 மாதங்களிலும் இதே போன்று தான்.
 
1.எந்தெந்த நட்சத்திரங்கள் அந்தந்த மாதங்களில் அருகிலே ஒன்றாகக் கலந்து
2.அது கவர்ந்து கொண்ட சக்திகளை மற்ற கோள்கள் கவர்ந்து அது நமது பூமிக்கு எவ்வாறு கிடைக்கின்றது…? என்ற நிலையும்
3.அதே உணர்வின் சக்தியை நாம் எவ்வாறு நமக்குள் பெருக்கிக் கொள்ள வேண்டும்…? என்ற நிலைப்படுத்தித் தான் மாதங்களை 12 ராசிகளாகப் பிரித்தனர்.
 
12 ராசிகள் என்றாலும் அதிலே ஒவ்வொரு ராசிக்கும்… ரண்டு நட்சத்திரம் மூன்று நட்சத்திரம் நான்கு நட்சத்திரம் என்ற அந்த அலைவரிசைகளில் அது கலந்து அது மற்றொரு நிலைகளில் கலந்து ஒவ்வொரு கோள்களும் தனக்குள் அதை கவர்ந்து வரும்.
 
அப்படித் தனித்தனியாக (தொகுப்பு) வரும் நேரத்தில் நமது பூமி அந்தந்த மாதத்தில் 12 மாதங்களிலும் தை எவ்வாறு கவர்கிறது…? என்ற நிலையைத் தான் ராசி என்று பிரித்தனர்.
 
அவ்வாறு பூமிக்குள் வரும் அந்த அணுக்களின் தன்மையை தாவர இனங்கள் தனக்குள் எதைச் சேர்த்துக் கொண்டதோ
1.அதனதன் வளர்ச்சிகள் ந்த மாதங்களில் வரும் பொழுது அதனுடைய பெருக்குகள் பெருகி வருகின்றது.
2.தான் கவர்ந்து கொண்ட சக்திகளைப் பெருக்கிக் கொள்கிறது என்ற நிலையை நிலைப்படுத்துவதற்குத் தான்
3.12 விதமான ராசிகளாகப் பிரித்து காட்டினார்கள்.
 
27 நட்சத்திரங்களும் அதற்குள் ஒன்பது கோளின் நிலைகளையும் இப்படிப் 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டு நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளும் ஒன்பது கோள்களும் அதை எடுத்து வெளிப்படுத்தும் போது சூரியன் தனக்குள் கவர்ந்து அதனுடைய ஒளிக்கதிர்களை வெளிப்படுத்துகிறது.
 
அவ்வாறு கலந்து து வெளிப்படுத்தியதை
1.நமது பூமி சுழலும் போது பூமியின் துருவப் பகுதி (வடக்கு) எந்தெந்த நட்சத்திரத்திற்கு நேர்முகமாக இருக்கின்றதோ
2.ந்தச் சக்திகளை அதன்வழி கவர்ந்து நம் பூமிக்குள் கொண்டு வருகிறது.
 
அதிலே வளர்த்துக் கொண்ட நிலைகள் தான் தாவர இனங்களுக்கு ராசியாகப் பெறுகின்றது.
 
நட்சத்திரங்களின் சத்தை மற்ற கோள்கள் எடுத்தது ஒவ்வொரு தொகுதியும் தொகுப்புகளுக்கு எவ்வாறு…
1.அதாவது எல்லை வகுப்பு மத்திய கோடு என்ற கோடு வரிசையில் வைத்து
2.இன்னென்ன பகுதிகளில் இன்னென்ன ராசிகள் இவ்வளவு வருகின்றது
3.இன்னென்ன வகைகளில் இன்னன்ன நட்சத்திரங்களின் சக்திகளும் கோள்களின் சக்திகளும் இந்த அளவுக்குப் பெறும் தகுதியாகப் பரவுகின்றது என்று
4.கோள்களின் சக்தியும் நட்சத்திரங்கள் சக்தியும் அது கலந்து வந்து நமது பூமியில் தாவர இனங்களில் கலவை ஆகி
5.அதே சமயத்தில் பூமிக்குள் கலவைகளாகி பாறைளும் மற்ற கல்களும் உருவாகிபற்பல உலோகங்களாகி
6.உலோக சக்தியிலிருந்து பூமியிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஆவியாக வெளியாகி
7.ப்படி வெளிப்படும் உணர்வுகளை மீண்டும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
8.நமது பூமியில் எவ்வாறு அதனுடைய பெருக்கங்கள் வருகிறது…? என்ற நிலையே ஆடி பதினெட்டு…”
 
இப்படி பூமி முழுவதிலுமே எல்லா வகைகளிலும் இசைந்து ஆடி வருகின்றது.
 
ஆக… இயக்கத்தின் தன்மைகள் ஒன்றுடன் ஒன்று அசைந்து சென்று ஒன்றுடன் ஒன்று மோதி மோதலுக்குத் தக்க இசைகள் ஒவ்வொன்றும் மாறுகின்றது.