ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 30, 2026

துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு தீமைகளை அடக்க வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு தீமைகளை அடக்க வேண்டும்


சந்தர்ப்பத்தினால் வீட்டிற்குள் சிறு குறைகள் வந்துவிடும். அது ஏன்…? என்று சிந்திக்க முடியவில்லை. அதனுடைய பொருளை அறிய விரும்பினால்
1.நமது ஆறாவது அறிவு கொண்டு சிந்தித்து சரி ஏதோ சந்தர்ப்பம்…!” என்று விட்டுவிட்டு
2.அடுத்த சந்தர்ப்பம் வரும் பொழுது சொல்லித் திருத்த முடியும்.
 
பையன் படிக்க வேண்டுமென்று விரும்புகின்றோம். மற்ற பையன்களோடு சேர்ந்து விளையாடுகின்றான்… இருள் சூழ்ந்து விடுகின்றது. அவன் எங்கோ சுற்றிக் கொண்டேயுள்ளான் என்ற உணர்வைச் செலுத்தி வேதனைப்படுத்தும் உணர்வையே நமக்குள் எடுத்துப் பேசிக் கொண்டேயுள்ளோம்.
 
நாம் நினைத்த நேரத்திற்கு வீட்டிற்கு வராமல் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்தால் நாம் எண்ணும் வேதனை உணர்வுகள் அங்கு சென்று அவனைச் சிந்திக்க விடாது செய்து கீழே விழுந்து அடிபடும் நிலையை உருவாக்கி விடுகின்றது.
 
சாமி சொன்னார் உபதேசம் நன்றாக இருக்கின்றது. ஆனால் அடுத்தபடியாகப் பையனைப் பார்க்கும் பொழுது இவ்வாறு செய்து கொண்டிருக்கின்றானே…!” என்ற உணர்வுகள் தூண்டுகின்றது. பத்தாவது நிலை அடையக்கூடிய இந்த உயிர் நாம் எண்ணுவதை உருவாக்கி விடுகின்றது.
 
இதைப் போன்ற நிலைகளை அறிவதற்காக
1.“நாங்கள் பொருளறிந்து செயல்படும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
2.என் பையன் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ண வேண்டும்.
 
இது போன்ற சுவையான உணர்வுகளை உங்களுக்குள் நுகர வேண்டும். நுகர்ந்தால் வசிஷ்டர் பிரம்மகுரு... பிரம்மகுருவின் மனைவி அருந்ததி. நாம் நுகர்ந்ததுதான் வசிஷ்டர். அந்தச் சக்தி அவருடன் இணைந்து இயக்குகின்றது என்ற இந்தத் தத்துவம் தெளிவாகக் கூறப்படுகின்றது.
 
தங்கத்தைப் போல மனம் மங்காத நிலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! ஒருவர் ஒரு குறையைச் சொன்னாலும் நம் மனம் மங்காதபடி ஏன் என்று சிந்திக்க வேண்டும். வைரத்தைப் போல எங்கள் சொல்லும் செயலும் வாழ்க்கையும் ஜொலிக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
குடும்பத்தில் எத்தனையோ நிலைகள். மாமியார் ஒன்று சொல்லி விட்டால், நாம் கோபித்துக் கொள்கிறோம். நாம் கோபித்தால் நாம் எதைச் சொன்னாலும் அவர்கள் நம் மேல் கோபித்துக் கொள்வார்கள். இதைத் துடைக்கின்றோமா?
 
இரண்டு பேரும் ஒருவர் மேல் மற்றொருவர் குறை சொல்லிக் கணவனும் இருவர் கூறுவதையும் கேட்டுக் கேட்டு அவரும் கோபப்படுகிறார். என் அம்மா இப்படிஎன் மனைவி இப்படி…! என்று கோபப்படுகிறார்.
 
1.இதே கோபத்துடன் போய்த் தொழில் செய்யும் பொழுது அங்கே தொழிலும் நஷ்டம் அடைகின்றது.
2.கடைசியில் என்ன ஆகின்றது? தொழில் செய்யும் இடங்களில் பகைமையாகின்றது.
 
அதனாலே நல்ல நேரம் கெட்ட நேரம்
 எல்லாம் பார்க்கின்றோம். ஜாதகம் ஜோசியம் பார்த்து சனி உட்கார்ந்திருக்கிறான் என்ற நிலையில் நாம் சனீஸ்வரனின் கோவிலில் போய் இன்னும் கொஞ்சம் காசைச் செலவு செய்து விட்டு அதை வளர்த்துக் கொண்டுதான் வருகிறோம்.
 
எங்கே செல்கிறோம்? நாம் சனீஸ்வரனின் கோவிலில் போய் யாருக்கோ காசைக் கொடுத்து அவர்கள் சொல்லும் முறைப்படி செய்தால் எல்லாத் தோஷமும் போய்விடும். அங்கிருக்கும் குளத்திலே குளித்துவிட்டு வந்தால் தோஷம் போய்விடும் என்று நம்புகிறோம்.
 
ஆனால் அங்கே குளித்துவிட்டு, மேலும் கொஞ்சம் அழுக்கைச் சேர்த்துக் கொண்டுதான் வருவார்கள். இது போன்ற தவறான வழிகளில்தான் நாம் சென்று கொண்டிருக்கின்றோம். ஆக நாம் செய்ய வேண்டியது என்ன?
 
1.எங்கள் சொல்லைக் கேட்போர் அனைவரது வாழ்வும் வைரத்தைப் போன்று ஜொலிக்க வேண்டும்.
2.என் வாழ்வு ஜொலிக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
அடுத்து மலரைப் போன்ற மணம் நாங்கள் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும், எங்கள் குடும்பத்தில் உள்ள அனவரும் அந்த நிலை பெற வேண்டும்.
 
ஏனென்றால் கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ்ந்த உணர்வுகள் இங்கே இருக்கின்றது. அதை எளிதாக எடுத்து நமக்குள் வளர்த்துத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி எண்ணுதல் வேண்டும்.
 
இதைத்தான் ஆதிமூலம் என்ற உயிர்… மிருக நிலையிலிருந்து இன்று மனிதனாக உருவாக்கியது, அதாவது முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது… கணங்களுக்கெல்லாம் ஈசா கணேசா என்று நம் உயிரை வணங்கச் சொன்னார்கள் ஞானியர்கள்.
 
நாம் தீமையிலிருந்து நீங்க வேண்டும் என்பதற்காகக் கணங்களுக்கு அதிபதியாகி உடலில் உள்ள நஞ்சை மலமாக மாற்றுகின்றதுஅங்குசபாசவா, யானை பெரியது ஆனாலும் அதை அங்குசத்தால் அடக்கிவிடலாம்.
 
1.அதே போன்று விஷம் அனைத்திலும் வலிமையானது.
2.அந்த விஷத்தைத் துருவ நட்சத்திரத்தின் துணை கொண்டு அடக்குதல் வேண்டும்.
3.அங்குசபாசவா தீமைகளை அடக்கும் நிலை.

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்ற ஒலிக்குள் இருக்கும் உட்பொருள்

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்ற ஒலிக்குள் இருக்கும் உட்பொருள்


ஒருவர் திட்டுகின்றார் அதைக் கூர்மையாகக் கேட்டால் அவர் திட்டக்கூடிய எண்ணம் நமக்குள் பட்ட உடனே வேதனையான உணர்ச்சியைத் தூண்டுகின்றது.
 
வேதனையைத் தூண்டும் போது அதன் வழி தான் நாம் நடக்கின்றோம். இதைப் போன்ற நிலையில் இருந்து அடுத்து அந்த வேதனைப்படும் உணர்ச்சிகள் நம் உடலில் மற்ற உணர்வுடன் அது பரவும் பொழுது நமது நல்ல எண்ணங்கள் சரியாக இயக்க முடியாதபடி தடைப்படுத்துகின்றது.
 
1.நல்லதை இயக்கவிடாமல் தடுக்கும் அந்தச் சக்தியைத் தடைப்படுத்த வேண்டுமல்லவா…!
2.அதற்கு என்ன வழி…?
 
ம் ஈஸ்வரா குருதேவா…” என்று நாம் அடிக்கடி சொல்கின்றோம். நாம் அனைவரும் அப்படி கமாகச் சொல்லும் பொழுது சிலருடைய குரல்கள் வித்தியாசப்பட்டாலும் மற்றவர்களுடன் அது இணைந்து தனித்துப் பிரித்துக் காட்டாது.
 
ஒருவருக்கு சப்தம் அதிகமாக இருந்தது ஒருவருடைய குரல் வீச்சாக இருந்தது என்றாலும் தொனியைக் குறைத்து விட்டால் ஒன்று போல் இனிமையாக இருக்கும்.
 
உதாரணமாக வாத்தியங்கள் வாசிக்கப்படும் பொழுது அதிலே ஒருவர் பாடுகின்றார். அதிலே பல விதமான நாதங்கள் உண்டு. அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து இனிமையாகக் கேட்க வைக்கின்றார்கள்.
 
தைப் போல பல விதமான எண்ணங்கள் கொண்டு நாம் வந்திருந்தாலும் ஒருமித்த எண்ணங்கள் கொண்டு ஒன்று போல ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுது நாம் எழுப்பும் குரல் எல்லோருடைய குரலும் ஒன்றி இருக்க வேண்டும்.
 
1.ஓ…ம் என்பது நமக்குள் ஜீவனாக இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் உயிர்.
2.நாம் எண்ணியதை ஜீவனாக்கச் செய்வது உயிர்.
3.ஜீவன் ஆனபின் உடலாக இணையச் செய்வதும் உயிர். அதனால் தான் ஓம் ஈஸ்வரா…!
4.ஈஸ்வரா என்றால் இயக்கச் சக்தி.
5.குருதேவா…! நம் உடலில் உள்ள அனைத்து உணர்வுகளுக்கும் உயிர் குருவாக இருக்கின்றது.
 
எல்லோரும் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.
 
ஒவ்வொரு சமயமும் இதைத் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம். இதைக் கேட்டாலும் கூட ஓம் என்ற பிரணவத்திற்கு என்ன பொருள்…? என்று திரும்பியும் கேட்பார்கள்.
 
ம் என்றால் எங்கேயோ பிரணவம் இருக்கிறது என்று எண்ணியே பழக்கப்பட்டு விட்டோம். ஆகவே தெளிவாகத் தெரிந்து மனதில் பதிய வைக்கத் தான் திரும்பவும் ஞாபகப்படுத்துகின்றோம்.
 
உபதேசம் ஆரம்பிப்பதற்கு முன் இந்த மைக்கை எப்படிச் சரி செய்து கொள்கின்றோமோ இதைப் போன்று
1.ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போது
2.நம் உயிரின் இயக்கம் மற்ற இந்த உலகத் தொடர்பு கொண்ட உணர்வுகள் நம் ஆன்மாவாக இருக்கப்படும் பொழுது
3.அந்த நிலைகள் நமக்குள் இயங்காத வண்ணம் அதைத் தடுத்து நிறுத்தவும்
4.நம்முடைய எண்ண க்க அலைகள் இப்போது உபதேசிப்பதை அது ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கும் உதவியாக இருக்கும்.
 
எண்ணிலடங்காத உணர்வின் சுழற்சிகள்நம் ஆன்மாவில் உண்டு. அதையெல்லாம் நம் சுவாசத்திற்குள் வராதபடி தடுத்துவிட்டு மெய் ஞானிகளின் உணர்வை உள் புகுத்துவதற்காகத்தான் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரே உணர்வாக ஓ..ம் ஈஸ்வராகுருதேவா…” என்று சொல்கிறோம்.
 
விண்ணுலகில் உள்ள ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் உயிரிலே புருவ மத்தியிலே எண்ணும் போது
1.அவர்கள் ஈர்ப்புக்குள் நாம் செல்கிறோம்… அதைக் கவரும் ஆற்றலும் பெறுகின்றோம்.
2.புருவ மத்தியில் அடிக்கடி எண்ண எண்ண நம் இயக்கம் உயிர் வழி சுவாசமாக அமையும்.

இயற்கையில் உருவாகும் சுழிக் காற்றும்… அதனின் விளைவுகளும்

இயற்கையில் உருவாகும் சுழிக் காற்றும்… அதனின் விளைவுகளும்


வாழ்க்கையில் ஓரளவுக்கு நான் மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் காட்டுக்குள் என்னை அழைத்துச் சென்றார் குருநாதர்.
 
அங்கே பல பல தாவர இனங்களின் சத்துக்களை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்தாலும் கவர்ந்த உணர்வலைகள் அலைகளாகத் தொடரப்படும் பொழுது அந்த ஒவ்வொரு உணர்வுகளும் எப்படித் தனக்குள் எடுத்து வளர்த்து தனது சக்தியாக பல பல செடிகள் உருவாகி அது எப்படி வந்தது…?
 
ஒவ்வொரு செடியாக உருவாகி அதனின் ங்கள் உணர்வலைகளாக வெளிப்பட்டதைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்திருந்தாலும்
1.எந்தச் செடியாக உருவானதோ அந்தச் செடியில் இருந்து வெளிப்பட்ட இந்த உணர்வின் வித்து இன்னொரு பக்கம் பட்ட பின்
2.தன் தாய்ச் செடியில் இருந்து வந்ததைத் தன் இனமாகக் கவர்ந்து செடிகள் எவ்வாறு உருவாகிறது…? என்று நீ பார் என்று காட்டினார்.
 
அந்தச் செடிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து அப்படி இணையப்படும் பொழுது சுழிக்காற்று உருவாகின்றது நாம் பார்க்கலாம்.
 
மற்ற செடிகளின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று இணையப்படும் பொழுது சுழிக் காற்றுகளாக உருவாகி அதிலே எந்த உணர்வின் சத்து அதிகமாகின்றதோ அது மற்றதைக் கவர்ந்து அதற்குள் சேர்த்து ஒரு உணர்வின் கருவாக உருவாகிப் புவியின் ஈர்ப்புக்குள் சென்று ஒரு புதுச் செடியாக உருவாகின்றது…”
 
இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் நாம் உயர்ந்த குணங்கள் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தாலும்
1.பிறரிடமிருந்து வரும் எண்ணத்தின் உணர்வுகளை நாம் சுவாசித்து
2.நம் உயிருக்குள் பட்ட உடனே சுழிக் காற்று போல நமக்குள் அந்த சுழலும் தன்மை அடைகிறது.
 
நாம் ஒன்றைப் பார்த்த உணர்வினைப் பொறுமையாகக் கண் எடுத்துப் பதிவு செய்தாலும்
1.அதனால் சுழலின் தன்மை ஆகி இரண்டும் ஒன்றாகி இது விளையும் கருவாக வித்தாக
2.தான் ஈர்க்கும் சக்தியாக உருவாவதை நீ பார் என்று உணர்த்தினார்.
 
இவ்வாறு உணர்த்தியபின் வாழ்க்கையில் மனிதர்கள் தவறு செய்யாமலேயே தன்னை அறியாமலே பல வேதனைகளை எவ்வாறு படுகின்றனர்…? என்ற நிலையினைக் காட்டுகிறார்.
 
பிறருடைய எண்ணங்களை நமக்குள் எண்ணிய பின் இந்த உணர்வின் ஆற்றல் மறைந்து உடலில் புதுப்புது கருவித்துகளாக ஊன்றி இந்தக் காற்றிலே படர்ந்து வெளிப்பட்ட உணர்வுகளை அது தன்னிச்சையாகக் கவர்ந்து எப்படி வளர்கிறது…?
1.மனிதனுடைய நிலைகளே சீர்கெடும் நிலைகளுக்கு எப்படி உருவாகிறது…? என்று காட்டுக்குள்ளும் ஊரிலும் சுற்றிக் காண்பித்து
2.இதிலிருந்து மீளும் வழி என்ன…? என்ற நிலையையும் காட்டுகின்றார்.
 
அன்றைய மெய் ஞானியான அகஸ்தியன் தனக்குள் தீமையை வென்றிட தன் எண்ணத்தால் மேகத்தை உற்றுப் பார்க்கப்படும் பொழுது அந்த மேகங்களைத் தனக்குள் கவர்ந்து தன் உடலுக்குள் வரும் பொழுது நீராகச் சுரந்து தன் ஜீவித நிலைகளை உருவாக்குகின்றான்.
 
அதே போல் மற்ற தாவர இனச் சத்தை அவன் நுகர்ந்தறிந்து தன் உடலிலே பதிந்து கொள்கின்றான்.
1.ங்கே நின்று இதையெல்லாம் அவன் கவர்ந்தானோ அந்தப் பகுதிகளுக்கு எல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்றார்.
2.அந்தப் பகுதிகளில் வனின் உணர்வலைகள் பூமியிலே பரப்பட்டு இன்றும் பல பல நீர் சத்துக்களை அது கவர்ந்து
3.அந்தப் பாறைகள் உணவாக எடுத்துத் தன் சத்தின் தன்மையாக அதை எப்படி மாற்றிக் கொண்டிருக்கின்றது…? என்று நீ பார் என்றார்.
 
பல பல தாவர இனங்களின் சத்தை உணவாக எடுத்து வளர்ச்சிக்கு வந்தாலும் அவனுக்குள் வளர்ந்த உணர்வின் சத்து எண்ணங்கள் ஆக மாறி அந்த எண்ணத்தின் வலு தொடர் கொண்டு விண்ணின் ஆற்றலை நுகர்ந்து தனக்குள் பெறுகின்றான் அகஸ்தியன்.
 
ஒவ்வொரு செடியும் நஞ்சின் தன்மை கொண்டு இயங்கினாலும் அந்தச் செடிக்குள் கலந்த ஞ்சின் சத்தை அகஸ்தியர் முறியடிக்கின்றார்.
 
அதாவது
1.ஒரு நஞ்சு கொண்ட பாம்பு தனக்குள் இருக்கும் சத்தை
2.மற்ற உயிரின்ங்களில் நஞ்சைப் பாய்ச்சி அதனைக் கரையச் செய்து தனக்குள் உணவாக எப்படி எடுத்ததோ
3.இதைப் போல மனிதனின் உணர்வுக்குள் இருக்கும் நஞ்சினை உணர்ந்து அதனைக் கரைக்கச் செய்து
4.அதைத் தனக்குள் செயலற்றதாக ஆக்கித் தன் உடலில் உள்ள அனைத்தையும் ஒளியின் உணர்வாக மாற்றினார்.