ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 14, 2026

நாம் எடுக்க வேண்டிய “பிரதிக்ஞை…”

நாம் எடுக்க வேண்டிய “பிரதிக்ஞை…”


ராமன் மனதைக் குவித்து எப்படிச் சிவலிங்கமாகப் பூஜித்தானோ இதே போன்று நாம் எண்ணம் கொண்டு உணர்வின் தன்மைகளை ஒன்று சேர்க்கும் போது “இராமலிங்கம்…” என்று உயிரின் தன்மை எண்ணத்தால் உணர்வை ஒளியாக மாற்றியது என்று சொல்வார்கள்.
 
ஏனென்றால் எல்லாவற்றிற்கும் காரணப் பெயர் வைத்துத் தான் ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள்.
1.இராமலிங்கம் என்று சொன்னாலே நம் எண்ணங்கள் ஒன்று சேர்த்து வாழ வேண்டும் என்ற இந்த எண்ணம் தான் ராமன்…”
2.அந்த மகிழ்ச்சி பெறும் உணர்வின் தன்மை நாம் பெறும் பொழுது தான் ராமன்.
 
ராமனின் பக்தன் யார்…? ஆஞ்சநேயன். தனை நாம் எண்ணுகின்றோமோ இந்தச் சொல்லைச் சொல்லும் பொழுது அதை நீங்கள் நுகர்ந்தால் உங்களுக்குள் வாயுவாகப் புகுகின்றது.
 
இராமனின் பக்தன் வாயு புத்திரன் அவன் ஒரு மந்திரி என்ற நிலைகளில் இந்த உணர்வின் தன்மை நீங்கள் சொல்லும் பொழுது பிறருடைய உடலில் இதைப் புகச் செய்தால் அவருடைய அறியாமையைச் நீக்கச் செய்யும்… சிந்திக்கச் செய்யும்.
 
1.இவ்வாறு நம் சொல்லுக்குள் தியானம் எடுத்த உணர்வுகள் கேட்போர் செவிகளில் பட்டபின்
2.கண் கவர்கின்றது அவருடைய ஆன்மாவாக மாற்றுகின்றது
3.உயிரில் உள்ள காந்தம் கவர்கின்றது. இந்த உணர்ச்சி உடல் முழுவதும் படர்கின்றது.
 
ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் தீமையை நீக்கும் உணர்வுகளைப் பரவச் செய்யும் பொழுது இந்த உணர்வின் தன்மை நமக்குள் ஞானமாக அந்த எண்ணங்கள் வருகின்றது.
 
அந்த எண்ணமும் சரி நமக்குள் எடுத்துக் கொண்ட அணுக்களும் சரி நம் உடலும் சரிஅந்த உணர்வுக்கொப்பத் தான் நம்முடைய செயல்களாகும் சொல்லும் வரும்.
 
ஆகையினால்
1.இந்த வழியில் நாம் அனைவரும் உலகுக்கே வழிகாட்டியாக
2.குரு வழியில் அகஸ்தியன் சென்ற பாதையில் நாம் சென்று இருளை அகற்றி
3.அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் பெருக்கி நாம் ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக மாற வேண்டும்.
 
நமது பேச்சும் மூச்சும் பார்வையும் பிறருடைய தீமைகளை அகற்றச் செய்ய வேண்டும். நம் பேச்சும் மூச்சும் பிறரை நல்ல சிந்தனைகளைச் சிந்திக்கும்படி நல்ல உணர்வுகள் வளரும்படிச் செய்ய வேண்டும்.
 
நாம் பார்க்கும் பார்வை அவர்களை நலம் பெறச் செய்யும் சக்தியாக வர வேண்டும். அவர் வாழ்க்கையில் வளம் பெறும் நிலையாகச் செயல்பட வேண்டும்.
 
நமது பார்வை பிறருடைய தீமைகளையும் நோய்களையும் போக்கும் சக்தியாகப் பெற வேண்டும்.
1.அவருடைய நோயின் உணர்வு சங்கடத்தின் உணர்வு நமக்குள் புகாது
2.”தடுத்து நிறுத்தும்…” அந்த அருள் சக்தியாக நீங்கள் மாற வேண்டும்.
 
எனக்கு குரு கொடுத்த அருள் சக்தியை உங்களுக்கும் பெறச் செய்கின்றேன். ஒவ்வொரு நாளும் நீங்கள் இந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
அவ்வாறு வளர்ந்து என்றென்றும் ஏகாந்தமாக எந்த எதிர்ப்பும் இல்லாது உணர்வின் தன்மை ஒளியாக மாற்றுதல் வேண்டும்.
 
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளி அருள் வழிப்படி
1.எனக்குள் அந்த ஞான வித்தை வளர்த்து
2.அந்த ஞானத்தின் வித்தைத் தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்தது.
3.நாம் அனைவரும் அதன் வழி நாம் செல்லும் போது பேரருளாக மாறுகின்றோம்.
4.பேரருளாக மாறும் பொழுது பேரொளியாக மாறுகின்றது.
5.பேரொளி என்ற நிலை வரும் போது பேரிருளையும் மாற்றும் சக்தி வருகிறது.
 
இதை நாம் தொடர்ந்து வழிப்படுவோம் அருள் ஞானத்தைப் பெருக்குவோம் அருள் வழி வாழ்வோம் என்ற இந்தப் பிரதிக்ஞையை…” நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.
 
ஒவ்வொரு குடும்பத்திலும் அமைதி பெறச் செய்யக்கூடிய உணர்வுகளை நாம் பெருக்குதல் வேண்டும்.
1.ஒவ்வொரு தெருவிலும் அமைதி பெறச் செய்ய வேண்டும் சொல்லால் அல்ல
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி
3.அந்த உணர்வலைகளை நாம் மூச்சலைகளாகப் பரப்ப வேண்டும்.

பாச உணர்வின் இயக்கத்தைக் காட்டினார் குருநாதர்

பாச உணர்வின் இயக்கத்தைக் காட்டினார் குருநாதர்


ஒரு சமயம் யாம் வசித்த ஊரில் காலரா எனும் வியாதி பரவியது. ஊரில் உள்ள பலர் காலரா வியாதியால் தாக்கப்பட்டு இறந்தனர். அது சமயம் எமக்குத் தைரியம் அதிகம் இருந்தது.
 
அதனால் காலரா வியாதியால் தாக்கப்பட்டு இறந்த பலரைஅதாவது சுமார் 20 அல்லது 30 பிணங்களைத் தூக்கிச் சுடுகாட்டில் போட்டு வந்தோம். ஆனால் அது சமயம் இது போன்ற பணிக்கு பயந்து யாரும் வரவில்லை.
 
ப்போது எமது தந்தையைப் பெற்ற அம்மாவிற்கு அதாவது எம்முடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டது. உறவினர்கள் சிலர் அவரைத் தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு போய்விட்டார்கள்.
 
பாட்டிக்கு காலரா நோய் வந்துவிட்டது அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள் என்று யாம் கேள்விப்பட்டதும் எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்படத் தொடங்கியது.
 
காலராவில் இறந்த 30 பிணங்களைத் தூக்கிப் போட்டோம்… அப்பொழுது எமக்கு ஒன்றும் ஆகவில்லை. எம்முடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்து விட்டதே…! என்று எமது உணர்வில் சிறிது இடம் கொடுத்தவுடனே எமக்கும் காலரா வந்துவிட்டது.
 
குருநாதர் இந்தச் சம்பவத்தைப் பின்னாட்களில் எமக்கு நினைவுபடுத்தி
1.நீ தைரியத்துடனும் வலிமையுடனும் காலராவில் இறந்தவர்களைத் தூக்கிக் கொண்டு போய்ப் போட்டாய்உனக்கு ஒன்றும் ஆகவில்லை…!
2.ஆனால் உன்னுடைய பாட்டிக்குக் காலரா நோய் வந்துவிட்டது என்று எண்ணியவுடனேஉனக்கும் காலரா நோய் வந்துவிட்டது…
3.மனிதரிடத்தில் உணர்வு என்ன வேகமாக வேலை செய்கின்றது என்று பார்த்தாயா? என்று கேட்டார்.
 
ஆனால் காலராவால் தாக்கப்பட்ட பாட்டியின் மீதான எண்ணம் வந்தபின் தான்…” எமக்கும் காலரா நோய் வந்தது என்று குருநாதர் சொன்ன பின் தான் யாம் தெரிந்து கொண்டோம்.
 
மதுரை சுப்பிரமணியபுரத்தில் ஒரு வாய்க்கால் இருக்கும். இப்பொழுது அந்த இடத்தில் மேம்பாலம் கட்டியிருக்கின்றார்கள். அந்த வாய்க்காலில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதுமே யாம் அந்த வாய்க்காலுக்குச் சென்று விட்டோம்.
 
வாய்க்காலில் கால் கழுவி விட்டு வரலாம் என்று நினைத்தால், அது நடக்காத காரியமாக இருந்தது. ஏனென்றால் வயிற்றுப் போக்கு நிற்காமல் போய்க் கொண்டிருந்தது.
 
பிறகு ஒருவாறாகச் சமாளித்து ஹோட்டலுக்குச் சென்று தயிர் சாதம் கொடுங்கள்என்று சொல்லித் தயிர் சாதம் வாங்கிச் சாப்பிட்டோம். மனதில் யாம் ஒரு பயில்வான் என்று எண்ணித் தயிர் சாதத்தை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தோம்.
 
ஆனால் தயிர் சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே எமக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு விட்டது. ஹோட்டலுக்குள்ளேயே நடந்து விட்டது, பிறகு மறுபடியும் வாய்க்காலுக்கு வந்து அமர்ந்து அலசிக் கொண்டிருந்தோம்.
 
ஒரு சந்தர்ப்பத்தில் எமக்குத் தைரியம் சிறிது குறைந்து. ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என்ன பண்ணிவிடும் பார்க்கலாம்என்று இருந்தோம்.
 
பசித்தால் இன்னும் கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிடலாம் என்று எண்ணினோம். ஏனென்றால் தயிர் குளிர்ச்சி…! தயிர் சாதம் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று இருந்தோம்.
 
அதனால் தயிர் சாதம் வாங்கிச் சாப்பிட்டோம். ஆனால் சாப்பிட்ட சாதம் வயிற்றுப் போக்கால் முழுது முழுதாக வெளியே சென்றது.
 
எமது கண் முழியெல்லாம் உள்ளே சென்று விட்டது. சரி நாம் இந்தத் தண்ணீரிலேயே உள்ளே சென்று விடுவோம் போலிருக்கின்றது. பாட்டியையும் பார்க்க முடியாது போலிருக்கின்றதுஎன்று எண்ணினோம். நடந்த நிகழ்ச்சி இது.
 
காலரா வியாதி பரவியதால் ஊரை விட்டே நிறையப் பேர் ஓடிவிட்டனர். பண்டம் பாத்திரங்களை அப்படி அப்படியே போட்டுவிட்டு தாம் தப்ப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டனர்.
 
வாய்க்காலை ஒட்டி ஒரு பாலம் இருந்தது. அதில் போய் அமர்ந்து கொண்டோம். அப்பொழுது அந்தப் பாலத்தின் வழியாக வண்டி ஓட்டிக் கொண்டு ஒருவர் வந்தார்.
 
அவர் எம்மைப் பார்த்து… “என்னய்யாஇப்படி உட்கார்ந்திருக்கின்றாய்...?” என்று கேட்டார்.
 
காலராவில் இறந்தவர்களைத் தூக்கிப் போட்டு வந்தேன் இப்பொழுது எனக்கே காலரா வியாதி வந்துவிட்டது…! என்று அவரிடம் கூறினோம்.
 
அட.. நீ என் வண்டியில் ஏறி உட்கார்…” என்று கூறி எம்மை அவருடைய வண்டியின் பின் சீட்டில் அமரச் செய்து அவருடைய கரும்புக் காட்டிற்கு அழைத்து சென்றார். கரும்பைப் பிழிந்து ஜூஸ் எடுத்துக் கொடுத்து நன்றாக மூக்குப் பிடிக்கச் சாப்பிடுஎன்று கூறினார்.
 
அவர் கொடுத்த கரும்புச் சாறைக் குடித்தபின் எமக்கிருந்த காலரா நோய், எங்கே போனதென்றே தெரியவில்லை. யாம் பூரண குணம் அடைந்தோம். காலராவிற்கு மருந்து கரும்புச் சாறு. இன்னும் கரும்புச் சாறு கொடுக்கச் சொல்லிக் குடித்து விட்டு அங்கிருந்து வந்தோம்.
 
எமது உடல்நிலை குணமானவுடனே… “சும்மா இருக்கவில்லை… ஊர் முழுவதும் சுற்றி மக்களிடம் யாசகம் கேட்டுப் பெற்றுக் காசு சேர்த்துக் கரும்புச் சாற்றை வாங்கி காலராவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொடுத்தோம்.
 
ஏனென்றால் யாம் அப்பொழுது தேசிய இயக்கத்தில் இருந்ததால் பொது சேவையில் ஆர்வமுடன் ஈடுபட்டு நீ குடிநீ குடிஎன்று எல்லோருக்கும் கரும்புச் சாறு வாங்கிக் கொடுத்தோம்.
 
அதன் பின் காலரா நோயும் ஊரை விட்டே ஓடிப்போயிற்று.
 
இது ஒரு சந்தர்ப்பம்…! அப்பொழுது தான் சொன்னார் குருநாதர்.
1.“டேய்…! உன்னைக் காப்பாற்றுவதற்கு அப்பொழுது நான் தான்டா வண்டியில் வந்தேன்…
2.நீ செத்துப் போவாய்என்று எண்ணினாய், ஆனால் நீ சாகக் கூடாது என்று நான் வந்தேன்…!  என்று கூறினார்.
 
எமக்கிருந்த காலரா நோய் நீங்கிய பின் ஆசனம் செய்வது பயில்வான் தனம் செய்வது என்பதெல்லாம் எம்மால் முடியாமல் போய்விட்டது.
 
யாம் சாதரணமாக மதுரையில் ஆண்டாள்புரத்திலிருந்து திருப்பரங்குன்றம் வரை உடல் பயிற்சிக்காக ஓடுவோம். ஓடியபடியே திருப்பரங்குன்றத்திலிருந்து ஆண்டாள்புரம் வரை திரும்பி வருவோம்.
 
ஆண்டாள்புரத்திலிருந்து திருப்பரங்குன்றம் 6 மைல் இருக்கும். அதன் பிறகு காலை 6 மணிக்கு மில்லிற்கு வேலைக்குப் போவோம்.
 
இது போன்று இருந்த யாம் காலரா நோய் தாக்கியவுடனே எமக்கும் காலரா நோய் வந்துவிட்டது.
 
பாட்டியை எண்ணினாய்என்ன ஆனது உனக்கு? என்று கேட்டார் குருநாதர்.
 
1.குருநாதர் சொன்ன பின் தான் உணர்வின் இயக்கத்தை யாம் அறிந்தோம்.  பிறகு தான் எமக்குத் தெரிந்தது.
2.குருநாதர் சொல்லவில்லை என்றால் எமக்கு ஒன்றும் தெரியாது.
 
இறந்தவர்களை எல்லாம் தைரியமாகத் தூக்கிக் கொண்டு போய்ப் போட்டாய். ஆனால் உன்னுடைய பாட்டிக்குக் காலரா நோய் தாக்கிவிட்டதே…! என்று ஏங்கினாய், உடனே இதன் உணர்வு உன்னிடத்தில் என்ன வேலை செய்தது…? என்று தெரிந்து கொண்டாயல்லவா…! என்று கேட்டார் குருநாதர். 
 
இது போன்ற உணர்வுகள் ஒவ்வொன்றையும் எமக்கு அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராகச் சேர வேண்டும்

துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராகச் சேர வேண்டும்

         
நம் உயிர் எப்போது உருவானதோ என்றுமே இருள் சூழாது ஒளி என்ற நிலையாக மாற்றிக் கொண்டே இருக்கும். இந்த உணர்வை மனித உடலில் தான் சேர்க்க முடியும். அதைத்தான் குரு எனக்குக் கொடுத்தார்.
 
துருவ நட்சத்திரத்துடன் என்னை ஆயுள் மெம்பராகச் சேர்த்தார். அதன்வழி உங்களையும் சேர்த்து விடுகின்றோம்.
1.அந்த மெம்பர் பதவியை நீங்கள் கூடுமான வரையிலும் ஊக்குவித்து
2.உங்கள் உணர்வுகள் இங்கே பரப்படும் பொழுது விஞ்ஞான அறிவால் வரும் விஷத் தன்மைகளை அடக்க முடியும்…”
 
நியூட்ரான் என்ற நிலையில் ஒரு பக்கம் வந்தாலும் அணுக்கதிரியக்கங்கள் என்று இந்த இரண்டும் கசிவாகி இருக்கின்றது. இரண்டும் மோதலாகும் இடங்களில் தான் புயலாக சூறாவளியாக மாறுகின்றது.
 
கதிரியக்கப் பொறி தற்குள் இருக்கக்கூடிய நிலைகளில் மோதுகின்றது.
1.நியூட்ரான் என்ற காற்றின் அழுத்தத்தைக் கொடுத்த பின் சுழற்சியின் தன்மை அடைந்து
2.லாக்காகக் கட்டிடங்களை எல்லாம் தூக்கி எறிகின்றது. எவ்வளவு பெரிய காங்கிரீட் கட்டிடமாக இருந்தாலும் தூசியாக மாற்றித் தூக்கி எறிகின்றது.
 
ஏனென்றால் விஞ்ஞானிகள் செய்த கொடுமை து…!
 
அவனை அறியாமலே மற்ற நாட்டை அழிக்க வேண்டும் என்ற நிலையில் அவனே அழிந்து போகும் நிலைகளுக்குச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. எங்கே உருவாக்கினானோ இன்று அங்கெல்லாம் இது நடக்கின்றது.
 
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற அகஸ்தியன்… அவன் தாய் கருவிலே பெற்ற உணர்வுகள் ன் வளர்ச்சியிலே தீமைகளை நீக்கி திருமணமான பின் கணவன் மனைவி இருவருக்குள்ளும் அருள் உணர்வைக் கருவாக்கிணர்வின் தன்மை ஒளியாக்கி ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருவரும் இருக்கின்றார்கள்.
 
உடலை விட்டு என் கணவர் பிரிந்து விட்டார் என்று ஒரு சிலர் இருந்தாலும் அவருடைய உணர்வுகள் உங்கள் உடலில் உண்டு…” என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.
 
இந்த உணர்வின் தன்மை எப்பொழுதுமே இணைந்து வாழும் தன்மை. நாம் எதன் பருவத்தைக் கொள்கின்றோமோ அவர் ஒளி நிலை பெற வேண்டும் என்று எண்ணினால் நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் ஒளியாகின்றது.
1.அந்த உயிரின் தன்மை ஒளியாகும் நிலையில் எங்கே சென்றாலும் கவர்ந்து இழுத்துக் கொள்ளும்… ஒளியாக மாறும்…
2.இரு உணர்வும் என்றுமே அந்த அருளைப் பெருக்கும் நிலையாக மாறும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
 
இது யாம் அனுபவ ரீதியிலே தெரிந்து கொண்ட நிலை.
 
ஆகவே உயிரை நாம் சொந்தமாக வேண்டும். அவனுடன் ஒன்றி வாழ வேண்டும் என்றால் உயிரோடு இணைந்து ஒளியின் சரீரம் பெறலாம்.
 
இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர் நீங்கள் ஒவ்வொருவரும் உலகிற்கு எடுத்துக்காட்டாக வர வேண்டும். நமது கடமைகளில் தவறக் கூடாது.
 
அருள் ஒளியின் உணர்வைக் கொடுத்து
1.நம் உடலில் உள்ள அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் குரு வழியில் பாய்ச்சி
2.அது கடமையாக அமைந்து அந்த அருள் ஒளியாக மாற்றும் இந்த உணர்வைப் பெற வேண்டும்.
 
இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல உயிர் தான் சொந்தம்…! அவன் உணர்வை எடுத்து எல்லாவற்றையுமே ஒளியாக மாற்றினோம் என்றால் தனுசுக் கோடி. கோடி என்று ஆகும் பொழுது அனைத்தும் ஒன்றாகின்றது.
 
லட்சம் அந்த லட்சம் இந்த லட்சம் என்று சொன்னால் மாறுகின்றது. ஒன்று இரண்டு மூன்று என்று நிலைகள் வருகின்றது… பல லட்சம் என்ற நிலையில் “எல்லாம் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது கோடி…!”
 
எவ்வளவு அழகாக ராமாயணத்தில் கொடுத்துள்ளார்கள்…?
 
நாம் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து
1.அதனுடன் சேர்த்துணர்வின் தன்மை ஒன்றாக இணைந்து நீங்கள் விடும் மூச்சலைகளால்
2.விஞ்ஞான அறிவில் வரும் விஷ உணர்வுகளிலிருந்து காக்கப்பட வேண்டும்.