
நல்லது கெட்டது என்ற நிலை உயிருக்கு இல்லை... அது யாருக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை
நாம் ரத்தப் பரிசோதனைக்குச் செல்கிறோம். பார்த்த நிலையில் ரத்தங்கள் அனைத்தும் சீராக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
தொழிலின் நிமித்தம் செயல்படும் போது அதில் மிகவும் நஷ்டமாகின்றது. கடன் வாங்கியிருக்கின்றோம்... அதைத் திரும்பக் கொடுக்க வேண்டி வருகிறது. குடும்பத்திலோ பிள்ளைகள் சொன்னபடி கேட்கவில்லை... வருமானமும் வருவதில்லை.
இப்படி எல்லாம் எதிர்மறையாக நடக்கப்படும் பொழுது
1.அந்த அதிர்ச்சி தரும் உணர்வுகளைச் சுவாசித்து எடுத்துக் கொண்ட பின் அடுத்த ரத்தப் பரிசோதனைக்குச் சென்றால்
2.சிவப்பு அணுக்கள் குறைந்திருக்கும்... வெள்ளை அணுக்கள் அதிகமாக உருவாகி இருக்கும்.
3.ரத்தம் காணாமல் போகின்றது... சிவப்பு அணுக்களை உருவாக்கும் சக்தி குறைந்து விடுகின்றது...
4.அந்த அணுக்கள் மடிந்து விடுகின்றது... ரத்த சோகை வருகின்றது... பலவீனம் அடைகின்றது... ரத்தக் கொதிப்பு ஆகிறது.
தீமையான உணர்வுகள் அதிகமாகும் பொழுது ரத்தக் கொதிப்பாகி உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அதற்குரிய உணவு இல்லாது போய் விடுகின்றது. சரியான உணவு கொடுக்கவில்லை என்றால் சுருங்கத் தொடங்கும். கை கால்களைச் சுருங்க வைத்துவிடும்.
நேற்று வரை நன்றாக இருந்தோம்...! என்றாலும் இப்படி எல்லாம் உடலுக்குள் ஆவதைப் பார்க்கலாம்.
வேறு ஒன்றும் வேண்டாம். சப்... என்று இருக்கக்கூடிய பொருளைச் சாப்பிட்டாலும் சர்க்கரைச் சத்து உள்ளவருக்கு திடீரென்று கவலையோ சோர்வையோ நுகர்ந்து விட்டால் இந்த உணர்வுகள் அதிகரித்து சர்க்கரைச் சத்து கூடி விடும். சர்க்கரையை உருவாக்கும் அணுக்கள் அதிகமாகின்றது.
அதே சமயத்தில் அதிகமாகச் சந்தோஷப்பட்டாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடி விடுகின்றது.
இப்படி... சோர்வு சஞ்சலம் சலிப்பு என்று நாம் எண்ணும் போதெல்லாம் அது அணுக்கருக்களாக ரத்தத்திலே உருப்பெற்றுச் சுழலத் தொடங்குகிறது.
உதாரணமாக... நாம் பூமியில் காற்று மண்டலததில் கலந்து வரும் சக்திகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவருமே என்றால் அது அலைகளாக மாறும். அலைகளாக வரப்படும் பொழுது தாவர இனங்கள் அதனதன் இனமான சக்தியை அதிலிருந்து கவர்ந்து தன் இனமாக வளர்கின்றது.
இதைப் போன்று
1.நாம் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட வேதனை சஞ்சலம் சலிப்பு என்ற உணர்வுகள் அணுக்களாக உடலில் வளர்ந்து விடடால்
2.தன் உணவுக்காக ஏங்கப்படும் பொழுது உயிர் அந்தந்த உணர்வைக் கவர்ந்து உணவாகக் கொடுக்கின்றது.
சூரியன் தாவரங்களின் சத்தினை எடுத்துக் கொண்டால்... தாவர இனத்தில் விளைந்த வித்தைப் பூமியிலே ஊன்றி விட்டால் பூமியின் துணை கொண்டு அதை ஈர்க்கும் போது அதனாதான் இனமாக வளர்ந்து விளைகின்றது. அது அது தன் இன வித்தை மீண்டும் வளர்க்கின்றது.
இது இயற்கையின் நிலைகள்.
இதைப் போல
1.வேதனைப்பட்ட மனிதரின் உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால் நமது உயிர் உடலில் அணுக்களாக மாற்றுகின்றது.
2.அணுக்கள் ஆன பின் அதனுடைய பசிக்கு... எந்த குணத்தால் அது உருவானதோ அந்த உணர்வுகள் கிளர்ச்சிகளை உண்டாக்கும்.
அதே உணர்வின் தன்மையை உயிர்
1.நம் முன் பாகம் கண்கள் வழியாகவோ தசைகள் வழியாகவோ செவிப் புலன் வழியாகவோ எடுத்து நம் ஆன்மாவாக மாற்றி
2.உயிர் வழி நுகரப்பட்டு உடலுக்குள் பரப்பச் செய்கின்றது.
3.எந்த வழியிலும் அதற்கு உணவைக் கொடுத்து அதைக் காக்கும்.
சூரியன் தாவரங்களுக்கு உதவுவது போன்று நமது உயிர் உடலில் விளையும் அணுக்களுக்கு ஆகாரமாகக் கொடுத்தே தீரும்.
1.அது யாருக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை.
2.நல்லது கெட்டது என்ற நிலை உயிருக்கு இல்லை.
உணர்வுக்கொப்ப உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. சுவாசத்திற்கொப்ப நம் எண்ணங்கள் இயங்குகிறது. அந்தச் சத்து ஈர்க்கப்பட்டு அணுக்கள் விளைகின்றது... இயக்குகின்றது. ஆக இந்த வாழ்க்கையில் எந்தக் குணததை அதிகரிக்கின்றோமோ அதன் வழி ரத்தத்தில் கருக்களாக உருவாக்கிக் கொண்டே உள்ளது.
இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்... உயிரை ஈசனாக மதிக்க வேண்டும். உடலை அவனால் உருவாக்கப்பட்ட ஆலயம் என்று மதிக்க வேண்டும்.
ஒவ்வொரு நொடிப்பொழுதும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கி
1.தீமைகள் புகாது... தீமையான அணுக்களாக உருவாகாது
2.அருள் ஒளியின் அணுக்களாக நாம் நமக்குள் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.