
பிறரைத் துன்புறுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகள்
குமாரபாளையத்தில் யாம் சுற்றுப்பயணம்
செய்யும் போது பண்டரி கோவிலில் இருக்கும் பொழுது ஒரு அம்மா வரும். அந்த அம்மா “ஐய்யய்யோ
எனக்கு உடம்பெல்லாம் எரியுதே…!” என்று விழுந்தடித்து ஓடி
வரும்.
சாப்பிடப் போய் உட்கார்ந்தால் போதும் உடம்பெல்லாம்
எரியும். அந்த அம்மாவின் வீட்டுக்காரர் இந்த அம்மா சொன்னபடியெல்லாம் கேட்பார்.
ஆனால் இந்த அம்மா தன் மாமியாருக்குச் சாப்பாடு போடாதபடி உதை… உதை… என்று உதைத்துச் சாகப்போகும் பொழுது இந்த நிலைகளிலே
இறந்தது.
அந்த அம்மாவிற்குக் கப…கப… என்று எரியும்.
அங்கிருந்து விழுந்து எழுந்து ஓடும். பிறகு யாம் நீ வீட்டில் போய் உன் மாமியாரை
நினைத்து அவர் உயிராத்மா நல்ல நிலைகள் பெற வேண்டும். எல்லா
மகரிஷிகளின் அருள் சக்தி அந்த உயிராத்மா பெற வேண்டும். வீட்டில் வைத்து இதைப்
போன்று எண்ணுங்கள் என்று சொன்னோம்.
1.அவ்வாறு செய்து வந்த பத்து
நாட்களுக்குள் நன்றாக இருக்கும்.
2.யாம் சொன்ன மாதிரிச் செய்தவதை அடுத்து விட்டு விட்டால்
மறுபடியும் விழுந்தடித்து ஓடி வரும்.
3.இது யாம் கண்ட அனுபவம். விட்டுவிட்டால்,
மறுபடியும் வரும்.
அனுபவத்திற்காக வேண்டி யாம் உலகம்
முழுவதற்கும் சுற்றி ஒவ்வொரு மனிதனுடைய உணர்வும் எப்படி இயங்குகின்றது…?
என்று ஒவ்வொரு ஊரில் தங்கியிருந்து கண்டறிந்த உண்மையைச்
சொல்கின்றோம்.
அதே குமாரபாளையத்தில் எமக்குப் பல எதிர்ப்புகளும் துன்பங்களும் எப்படியெல்லாம் வந்தது…? என்று அங்கிருந்தோருக்குத் தெரியும்.
ஏனென்றால்
1.தன்னையறியாது ஒரு மனிதனுக்குள் உணர்வின் செயல்கள் எவ்வாறு இயங்குகின்றது…? என்று
அறிந்து உணர்வதற்குத்தான்
2.யாம் மூன்று இலட்சம் பேரைச்
சந்திக்க வேண்டியிருந்தது.
3.ஒரு மனிதனுக்குள் இருக்கும்
உணர்வலைகள் எவ்வாறு இயங்குகின்றது…?
4.அதை எப்படியெல்லாம் நாம்
கண்டறிவது…? என்ற
நிலைகளை
5.குருநாதர் காட்டிய அருள் வழி
கொண்டு யாம் அறிந்துணர்ந்தோம்.
இதே மாதிரித்தான் ஒவ்வொரு அனுபவமும்…! ஒவ்வொரு
மனித உடலுக்குள் இயங்கும் நிலைகளை அறிந்தோம்.
நாம் யாரும் தவறு செய்யவில்லை.
சந்தர்ப்பங்கள் அந்த நிகழ்ச்சியை நடத்திவிடும். அதிலிருந்து மீட்டுக் கொள்ளும்
வழியைப் பின்பற்ற வேண்டும்.
ஒவ்வொரு மனிதரும் தங்களை அறியாமல் இயக்கக்கூடிய ஆற்றலிலிருந்து தன்னைத் தானே மீட்டுக் கொள்வதற்குத்
தான் இதைச் சொல்கிறோம். மெய் ஞானியின் அருள்
சக்தியை நீங்கள் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.
எப்பொழுதெல்லாம் துன்பங்கள் வந்து உங்களைத்
துன்புறுத்துகின்றதோ அப்பொழுது ஆத்ம சுத்தி என்ற இந்த ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள்.
அப்படி ஆத்ம சுத்தி செய்யும் போது
1.உங்களைத் துன்புறுத்தும்
உணர்வின் ஆற்றலை மாய்த்து உங்கள் சொல்லுக்குள் மனவலிமை பெற்று
2.யார் உங்களைத் துன்புறுத்துகின்றார்களோ
நீங்கள் எடுக்கும் இந்த அருள் உணர்வுகள் அவருக்குள் ஊடுருவி
3.துன்புறுத்தும் ஆற்றலை அங்கு
குறைத்து உங்களுக்குள் இன்புறச் செய்யும்.
அந்த நல்ல உணர்வின் ஆற்றலை நீங்கள்
உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
இதை நீங்கள் ஒவ்வொருவரும்
பின்பற்றுங்கள். உங்களை நீங்கள் நம்புங்கள் தாய் தந்தையைத் தெய்வமாகக் கருதுங்கள்.
உங்கள் உயிரை ஈசனாக மதியுங்கள். உங்கள் உடலைக் கோவிலாக மதியுங்கள்.
ஒவ்வொரு நிமிடமும் ஈஸ்வரா என்று உயிரை
எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று நீங்கள்
எண்ணினால் உங்களுக்குள் மகிழ்ச்சியும் மனவளமும் பெருகி இந்த வாழ்க்கையின் புனிதத்
தன்மையை உங்களுக்குள் நீங்கள் காணலாம்.