
துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராகச் சேர வேண்டும்
நம் உயிர் எப்போது
உருவானதோ என்றுமே இருள் சூழாது ஒளி என்ற நிலையாக மாற்றிக் கொண்டே இருக்கும். இந்த உணர்வை மனித
உடலில் தான் சேர்க்க முடியும். அதைத்தான் குரு எனக்குக் கொடுத்தார்.
துருவ நட்சத்திரத்துடன் என்னை ஆயுள் மெம்பராகச் சேர்த்தார். அதன்வழி உங்களையும் சேர்த்து விடுகின்றோம்.
1.அந்த மெம்பர் பதவியை நீங்கள் கூடுமான வரையிலும் ஊக்குவித்து
2.உங்கள் உணர்வுகள் இங்கே படரப்படும் பொழுது “விஞ்ஞான அறிவால் வரும்
விஷத் தன்மைகளை அடக்க முடியும்…”
நியூட்ரான் என்ற நிலையில்
ஒரு பக்கம் வந்தாலும் அணுக்கதிரியக்கங்கள் என்று
இந்த இரண்டும் கசிவாகி இருக்கின்றது. இரண்டும் மோதலாகும் இடங்களில் தான் புயலாக… சூறாவளியாக மாறுகின்றது.
கதிரியக்கப் பொறி அதற்குள் இருக்கக்கூடிய நிலைகளில் மோதுகின்றது.
1.நியூட்ரான் என்ற காற்றின் அழுத்தத்தைக் கொடுத்த பின் சுழற்சியின் தன்மை அடைந்து
2.அலாக்காகக் கட்டிடங்களை எல்லாம் தூக்கி எறிகின்றது. எவ்வளவு பெரிய காங்கிரீட் கட்டிடமாக இருந்தாலும் தூசியாக மாற்றித் தூக்கி எறிகின்றது.
ஏனென்றால் விஞ்ஞானிகள் செய்த கொடுமை இது…!
அவனை அறியாமலே மற்ற
நாட்டை அழிக்க வேண்டும் என்ற நிலையில் அவனே அழிந்து போகும் நிலைகளுக்குச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. எங்கே உருவாக்கினானோ இன்று அங்கெல்லாம் இது நடக்கின்றது.
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற அகஸ்தியன்… அவன் தாய் கருவிலே பெற்ற உணர்வுகள் தன் வளர்ச்சியிலே தீமைகளை நீக்கி… திருமணமான பின் கணவன்
மனைவி இருவருக்குள்ளும் அருள் உணர்வைக் கருவாக்கி… உணர்வின் தன்மை ஒளியாக்கி ஒளியின் சரீரமாகத்
துருவ நட்சத்திரமாக இருவரும் இருக்கின்றார்கள்.
உடலை விட்டு என் கணவர் பிரிந்து விட்டார் என்று ஒரு சிலர் இருந்தாலும் “அவருடைய
உணர்வுகள் உங்கள் உடலில் உண்டு…” என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.
இந்த உணர்வின் தன்மை எப்பொழுதுமே இணைந்து வாழும் தன்மை. நாம்
எதன் பருவத்தைக் கொள்கின்றோமோ அவர் ஒளி நிலை பெற வேண்டும்
என்று எண்ணினால் நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் ஒளியாகின்றது.
1.அந்த உயிரின் தன்மை ஒளியாகும் நிலையில்
எங்கே சென்றாலும் கவர்ந்து இழுத்துக் கொள்ளும்… ஒளியாக மாறும்…
2.இரு உணர்வும் என்றுமே அந்த அருளைப் பெருக்கும் நிலையாக
மாறும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
இது யாம் அனுபவ ரீதியிலே தெரிந்து கொண்ட நிலை.
ஆகவே உயிரை நாம் சொந்தமாக வேண்டும். அவனுடன் ஒன்றி வாழ வேண்டும் என்றால் உயிரோடு
இணைந்து ஒளியின் சரீரம் பெறலாம்.
இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர் நீங்கள் ஒவ்வொருவரும் உலகிற்கு எடுத்துக்காட்டாக வர வேண்டும். நமது
கடமைகளில் தவறக் கூடாது.
அருள் ஒளியின் உணர்வைக் கொடுத்து
1.நம் உடலில் உள்ள அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் குரு வழியில் பாய்ச்சி
2.அது கடமையாக அமைந்து அந்த அருள் ஒளியாக மாற்றும் இந்த உணர்வைப் பெற வேண்டும்.
இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உயிர் தான் சொந்தம்…! அவன் உணர்வை
எடுத்து எல்லாவற்றையுமே ஒளியாக மாற்றினோம்
என்றால் தனுசுக் கோடி. கோடி என்று ஆகும் பொழுது அனைத்தும் ஒன்றாகின்றது.
லட்சம் அந்த லட்சம் இந்த லட்சம் என்று சொன்னால்
மாறுகின்றது. ஒன்று இரண்டு மூன்று என்று நிலைகள் வருகின்றது… பல லட்சம் என்ற நிலையில் “எல்லாம் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது கோடி…!”
எவ்வளவு அழகாக இராமாயணத்தில் கொடுத்துள்ளார்கள்…?
நாம் அனைவரும் துருவ
நட்சத்திரத்தின் ஈர்ப்பில் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து
1.அதனுடன் சேர்த்து… உணர்வின் தன்மை ஒன்றாக இணைந்து நீங்கள் விடும் மூச்சலைகளால்
2.விஞ்ஞான அறிவில் வரும் விஷ உணர்வுகளிலிருந்து காக்கப்பட வேண்டும்.