ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 25, 2026

தீமைகளைத் தடைப்படுத்தும் வழி

தீமைகளைத் தடைப்படுத்தும் வழி


தீய உணர்வுகளைத் தடைப்படுத்தும் பொழுது நம்மிடத்தில் சிந்தித்துச் செயல்படும் தன்மை வருகின்றது. அப்படிச் சிந்திக்கும் தன்மை இல்லையென்றால் பிழை என்ற நிலை உருவாகும்.
 
பிழை என்ற நிலையில் நண்பர்களுக்குள் சிறிது குறையாகி விட்டதென்றால் பிறகு நீங்கள் குறையத்தான் வளர்க்க முடியுமே தவிர அங்கே நல் உணர்வை எடுக்க முடியாது.
 
நண்பர்களுக்குள் தவறு என்று யார் செய்திருந்தாலும் சந்தர்ப்பங்கள் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
1.சந்தர்ப்பங்களால் நம்மை பிறிதொரு தீமை இயக்கி விடாதபடி
2.நாம் நம்மை முதலில் பாதுகாக்கும் நிலை பெற வேண்டும்.
 
எப்படிப் பாதுகாக்க வேண்டுமென்றால் ஈஸ்வராஎன்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வினை எண்ணி நுகர்ந்து தீமைகளைத் தடைப்படுத்துதல் வேண்டும்.
 
யாம் நிறைய அருள் உபதேசங்களை உங்களுக்குக் கொடுத்திருக்கிறோம். அருள் உணர்வுகளை எப்படி உங்களிடத்தில் இயக்கமாக்க வேண்டும்? எப்படித் தீமைகளைத் தடுக்க வேண்டும்? என்று யாம் அடிக்கடி உங்களுக்கு உபதேசித்திருக்கின்றோம்.
 
1.“சாமி சொன்னார்கள் மறந்து விட்டது என்று இருக்கக்கூடாது. 
2.அருள் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். 
3.இந்த விளக்கங்களை நாம் தெரிந்து கொண்டால் ஒவ்வொரு நிமிடமும் தீமைகள் வராதபடி தடுக்கலாம்.
 
நாம் எதை எண்ணுகின்றோமோ அவைகளை நம்முள் சேர்க்கின்றோம். நம்மிடம் ஒருவர் கஷ்டத்தைக் கூறும் பொழுது அதை  நாம் உற்றுக் கேட்கும் பொழுது அவ்வுணர்வுகள் நம்மில் பதிவாகின்றது.
 
ஆனால் பிறர் தான் சொல்லும் கஷ்டத்தைக் கேட்கவில்லை என்றால்
1.“என்னவோ பெரிய பிகு பண்ணுகின்றான் பார்…!
2.நாம் சொல்கிறோம் காது கூடக் கேட்க மாட்டேன் என்கிறது என்று நம்மைப் பற்றிக் குறை கூற ஆரம்பித்து விடுவார்கள்.
 
ஆகையினால் வேதனையின் உணர்வுகளைக் கேட்டால் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அதனைச் செவியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்… உள்ளே கவரும் தன்மையாக எடுக்கக் கூடாது. 
 
நம்முடைய எண்ணங்கள் துருவ நட்சத்திரத்தின்பால் சேர்க்கப்படும் பொழுது பிறர் சொல்லும் வேதனை உணர்வுகளைத் தன்னுள்ளே கவராது.
 
இப்பொழுது யாம் உங்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சமயம் நீங்கள்
1.நம்முடைய வீட்டில் செய்ய வேண்டிய வேலை என்ன…?
2.வீட்டில் மகன் என்ன செய்து கொண்டிருக்கின்றானோ…?
3.ஏதாவது செய்து விட்டால் என்னவாகும்?” என்று எண்ணிக் கொண்டிருப்பீர்கள் என்றால்
4.யாம் சொல்லும் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகாது.
 
ஆகையால் ஒருவர் நம்மிடம் தீமை தரும் உணர்வுகளையோ வேதனை தரும் உணர்வுகளையோ சொல்வாரே என்றால் அது சமயம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம்முள் இணைப்போம் என்றால் அத்தீய உணர்வுகளை நம்முள் புகாது தடுக்கலாம்.
 
அவர்கள் சொல்லும் உணர்வுகள் செவிகளில் கேட்கும்ஆனால் ஈர்க்காது. இதனை ஒரு பயிற்சிக்குக் கொண்டு வரவேண்டும்.
 
எத்தனையோ பேர் எம்மிடம் கஷ்டங்களை நிவர்த்திக்க வருகின்றார்கள். அவர்களுடைய வேதனைகளைச் சொல்கின்றார்கள். யாம் அதை ஈர்ப்பதில்லை.
1.யாம் எம்மைத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளுக்குள் இணைத்துக் கொள்வதால்
2.அவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வோம்.
3.அதன் பிறகு யாம் கோபமாக போங்கள் உங்களுக்கு ஒன்றுமில்லை போங்கள்…” என்று சொல்வோம்.
 
 அப்படி யாம் சொன்னால் சாமி திடீரென்று நம்மைக் கோபிக்கின்றாரே…!என்று எண்ணினால் என்னவாகும். ஏனென்றால் அவர்கள் சொல்லும் வேதனையின் உணர்ச்சிகளை உடனே தாங்கி மடக்கி அனுப்புகின்றோம்.
 
சாமி நம்மைக் கோபித்துக் கொண்டார் என்று நீங்கள் சொன்னால், யாம் என்ன பண்ணுவது…? அப்படியானால் அவர்கள் சொல்லும் கஷ்டத்தை யாம் ஈர்க்க வெண்டுமா?
 
யாம் உங்கள் கஷ்டத்தை நீக்குவதற்குத்தான் அப்படிச் சொல்கின்றோம்.
 
அதைப் போல் மற்றவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தையெல்லாம் நீங்கள் உற்றுக் கேட்பீர்கள் என்றால் என்னவாகும்? அந்த உணர்வுகள் உங்களுக்குள் இந்திரீகமாக… இரத்தத்தில் அணுவின் கருவாக மாறும்.
 
ஆகையால் இந்தத் தீய உணர்வுகளை நீங்கள் உங்களிடத்தில் வராது தடைப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு தீமைகள் தமக்குள் வராது தடைப்படுத்தத் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் எமது அருளாசிகள்.

தீமைகள் வராது தடுக்க ஞானகுரு நமக்குக் கொடுக்கும் பாதுகாப்புக் கவசம்

தீமைகள் வராது தடுக்க ஞானகுரு நமக்குக் கொடுக்கும் பாதுகாப்புக் கவசம்


மெய் ஞானிகள் காண்பித்த அருள் வழியில் மக்கள் அனைவரும் ஏகோபித்த நிலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளைத் தம்முள் கவர்ந்து வலுவாக்கும் பொழுது நம்மிடத்தில் தீமை என்ற நிலைகள் அணுகுவதைத் தடுத்து விலக்கிவிடும்.
 
1.நாம் கவராது விட்டுவிட்ட தீமையின் உணர்வுகள் அனைத்தையும்
2.காலையில் ஆறு மணிக்கெல்லாம் சூரியன் கவர்ந்து மேலே கொண்டு சென்றுவிடும்.
3.இதனால் நமது பூமியில் பரமாத்மாவாக இருப்பது சுத்தமாகின்றது... நமது ஆன்மாவும் சுத்தமாகின்றது.
4.நமது ஆன்மா சுத்தமாகும் பொழுது நமது உடலில் உள்ள ஜீவான்மாவும் சுத்தமாகின்றது.
5.நமது உயிரான்மா அது ஒளியின் தன்மை பெறுகின்றது.
 
மெய் ஞானிகளின் அருள் உணர்வைப் பெறுகின்ற பொழுது அது நமக்கு சொர்க்கவாசலாக அமைகின்றது. இதை விடுத்துக் கோவிலுக்குச் சென்று தெய்வத்தைத் தரிசிக்கின்றேன் என்று சொல்லி ஒருவர் மீது ஒருவர் விழுந்து ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு செல்லும் பொழுது நமக்கு வெறுப்பு தான் வரும்.
 
ஆகவே இது மனிதருக்குகந்த நிலையல்லஅசுர உணர்வுதான் வரும்.
 
அதே போன்று கோவிலில் பிரசாதம் கொடுக்கும் பொழுது பாருங்கள். நான் முதலில் பெற வேண்டும் என்று தான் எண்ணுவார்களே தவிர அனைவரும் ஒன்றுபட்ட உணர்வு கொண்டு மனதைக் கட்டுப்படுத்தி அங்கே நிற்கிறார்களா என்றால் இல்லை.
 
மற்றவர்கள் முதலில் பெறட்டும் என்று நாம் எண்ணும் பொழுது நமது மனம் கொண்டு நாம் இருந்த இடத்திலிருந்தே பெற முடியும். 
 
அவர்கள் அருகிலே சென்று பெறுகின்றனர். ஆனால்
1.அவர்கள் அருகில் செல்வதற்கு முன்னால் நாம் இருந்த இடத்திலிருந்து உடனடியாகப் பெறுகின்றோம். 
2.இந்த உண்மையை அறிந்து கொள்தல் வேண்டும்.
 
ஆகவே நமது மனம் பண்பட்டால்தான் நமது குணங்கள் பண்படும். நமது குணங்கள் பண்பட்டால்தான் நமது வாழ்க்கையினைப் பண்படுத்தும் நிலை வரும்.
 
இவைகளை எல்லாம் யாம் பெற வேண்டும் என்றுதான் எமது குருநாதர் மலை காடு என்று பல இடங்களுக்கு எம்மை அழைத்துச் சென்றார்.
 
அப்படி அழைத்துச் செல்லும் காலத்தில் ஒரு முறை எமக்கு ஒரு பச்சிலையைக் காண்பித்துக் கொடுத்தார். அந்தப் பச்சிலையைக் கையில் கொடுத்து
1.“அதில் உன் உணர்வின் மணத்தை ஓது
2.எண்ணத்தால் எண்ணி அங்கே போட்டு விட்டு வா…!என்றார் குருநாதர்.
 
குருநாதர் சொன்ன முறைப்படி உணர்வின் மணத்தை ஓதிப் போட்டு விட்டு வந்த பின் அந்த பக்கம் புலி ஒன்று வருகின்றது. யாம் அங்கு போட்டிருந்த பச்சிலையை அந்தப் புலி நுகர்ந்த பின் அப்படியே அசையாமல் நிற்கின்றது.
 
அதே சமயத்தில் மலைக் காட்டுக்குள் மறதிப் பூடுஎன்பதை குருநாதர் எமக்கு காண்பித்தார்.
 
இந்த மறதிப் பூட்டினை இலேசாகக் கிள்ளி யாராவது ஒருவரது வீட்டில் போட்டு விட்டு வந்து விட்டால் அல்லது அவர்களது வீட்டின் கதவிடுக்குகளில் வைத்து விட்டாலோ போதும்.
 
வர்கள் வீட்டிற்கு வெளியே என்னென்ன செயல்கள் வேலைகள் செய்து விட்டு வீட்டிற்கு வந்தாலும் அவைகளெல்லாம் ஞாபகத்தில் இருக்காது.
 
இந்நிலையை நாம் ஒருவருக்குச் செய்தால் என்னவாகும்…? நாம் பெரிய மனிதர் ஆகிவிடலாம். இது போன்ற நிலைகள் நாட்டில் நிறைய உண்டு.
 
குருநாதர் இன்னும் சில வேர்களைக் காண்பித்தார். அந்த வேர்களைக் கையில் வைத்துக் கொண்டால் விஷப் பூச்சிகள் மட்டுமல்ல புலியும் கூட ஒடுங்கி நிற்கின்றது.
 
ஏனென்றால் மனித உடலுக்குள் அந்த மணத்தின் தன்மை கொண்டபின் விஷம் கொண்டவைகள் பயப்படுகின்றன. அவைகளுடைய விஷம் ஒடுங்குவதினால் அவைகள் தங்களுடைய வலுவையும் இழந்து விடுகின்றன.
 
குருநாதர் ஒவ்வொன்றாகக் காண்பித்து இயற்கையின் உண்மையின் நிலைகளை உணர்த்தி எமக்குச் சில ஆசைகளை ஊட்டுகின்றார்.
 
இவைகளைக் காணும் பொழுது எமக்குள் உடனே அகந்தை வருகின்றது. எவராவது வம்புக்கு வரட்டும்அவர்களை ஒரு கை பார்ப்போம்…! என்ற எண்ணம்தான் வருகின்றது.
 
ஆனால் தீமைகள் நமக்குள் வராது தடுக்கும் பாதுகாப்புக் கவசமாக வைத்துக் கொள்வோம் என்ற எண்ணம் இல்லை.
 
அப்பொழுது  குருநாதர் தீமைகள் உடலுக்குள் புகாது தடுக்கும் நிலைகள் கொண்டு நல்லுணர்வின் தன்மையை உனக்குள் வலுவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
1.பிறரை வீழ்த்துவது எளிது. 
2.வீழ்த்தும் உணர்வு, திருட்டுத்தனமாக உனக்குள் சென்று விடுகின்றது.
3.வீழ்த்தும் உணர்வை உனக்குள் எடுக்கும் பொழுது இந்த உணர்வுகள் உள் நின்று என்ன செய்யும்…?
4.அதே தவறைத்தான் செய்ய வைக்கும்.
5.ஆகவே நான் கொடுத்த சக்தியை நீ இழக்கத்தான் நேருமே தவிர அதை வளர்க்க முடியாது. 
 
ஒருவர் தீமை செய்கிறார் என்றால் அவரைத் தீமையின் உணர்வுகளிலிருந்து மீள வைக்க வேண்டும். அவருக்குத் தெளிந்த உணர்வை ஊட்ட வேண்டும்
 
"நீ ஏன் அவர்களுக்கு தெளிந்த உணர்வை ஊட்ட வேண்டும்?" என்று குருநாதர் கேட்டார்.
 
1.“ம் நமச்சிவாயஎன்று அவருக்குள் தவறின் உணர்வுகள் இயங்குகின்றது.
2.அவர் செய்யும் தவறின் உணர்வுகளை நீ நுகர்ந்தால்சிவாய நம ஓம்என்று அவருடைய தவறின் உணர்வுகள் உனக்குள் வந்து
3.அவர் செய்த தவறையே உன்னையும் செய்யத் தூண்டும் என்று தெளிவாக்கினார்.
 
ஒவ்வொரு மனிதருடைய உயிரையும் கடவுளாக மதித்தால் அவர்களுடைய உடலைக் கோவிலாக மதித்தால் அவர்கள் செய்யும் தவறின் உணர்வுகள் உனக்குள் வராது என்று எனக்கு உபதேசித்தார்.
 
இதன் வழி கொண்டு
1.உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் தவம் இருப்போம். 
2.அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்று பிரார்த்திப்போம். 
 
இந்த உடலுக்குப்பின் பிறவி இல்லா நிலை என்ற அழியா ஒளிச் சரீரம்நாம் அனைவரும் பெறுவோம்.

நாம் தெரிய வேண்டியதும்… தெரிந்து கொண்ட நிலையில் “நடந்து கொள்ள வேண்டிய முறையும்…”

நாம் தெரிய வேண்டியதும்… தெரிந்து கொண்ட நிலையில் “நடந்து கொள்ள வேண்டிய முறையும்…”


நம் குருநாதர் பித்தரைப் போன்று ருந்து தான் எல்லா உலகத்தையும் அறிந்தார். அதே போல அவர் காட்டிய அருள் வழியில் ஒன்றும் தெரியாதவனைப் போன்று…” எல்லாவற்றையும் நான் தெரிந்து கொள்கின்றேன்.
 
ஆனால் உங்கள் உணர்வைத் தெரிந்து அதற்குத் தக்க
1.இங்கே வந்தோருக்கு குரு காட்டி அருள் வழியினை உபதேசிக்கும் பொழுது
2.நீங்கள் எந்த நிலையில் வந்தாலும் உங்களுக்கு நல்ல சிந்தனையைத் தூண்டி
3.தன் தன் தவறுகளை உணர்ந்து தீமைகளை நீக்கும் அருள் உணர்வுகளைப் பெறச் செய்கின்றேன்.
 
குருநாதர் பித்தரைப் போல் இருந்துதான் எனக்கு வழி காட்டினார். ஆக நானும் தெரியாதவனைப் போல் தான் இருக்கின்றேன் தெரிந்து கொண்டவனாக நான் நடப்பதில்லை.
 
ஆனால் நான் தெரிந்து கொண்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் பெற வேண்டும். பொருளறியும் சக்தி பெற வேண்டும் அருள் உணர்வுகள் நீங்கள் பெற வேண்டும்…! என்ற உணர்வைத் தான் எடுத்துக் கொள்கின்றேன்.
 
ஆனால் நீங்கள் சொல்வதை எல்லாம் நான் உம்… கொடுத்துக் கேட்டால் வீட்டில் இப்படி இருக்கின்றது தொழில் இப்படி இருக்கின்றது பையன் இப்படி இருக்கின்றான் என்ற குறைகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால் என்ன ஆகும்…?
 
1.ஆக நான் அதைத் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எனக்குள் நான் மாற்றிக் கொள்கின்றேன்.
3.அதன் வழி உங்களுக்குள் அந்த அருள் சக்திகளைப் பாய்ச்சுகிறேன்.
4.அதே போல் நீங்கள் ஒவ்வொருவரும் தீமை புகாது தடுக்கும் நிலையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
 
உலகில் விஷத்தன்மைகள் உருவாகிக் கொண்டுள்ளது. எங்கே பார்த்தாலும் இனம் மதம் என்ற நிலையில் வெறி கொண்டு தாக்கிடும் நிலையாக தன் இனத்தையே அழித்திடும் நிலையாகச் செயல்படுகின்றார்கள்.
 
தன் உயிர் போனாலும் பரவாயில்லை என்று அப்படிப்பட்ட வீரிய உணர்வு தான் வருகின்றதே தவிர இருளை நீக்கி ஒளியான நிலை பெற வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் வருவதில்லை.
 
அசுர உணர்வுகள் பாயும் போது நல்ல உணர்வுகள் செயல்பட முடியாது போகின்றது. இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்ற வேண்டும்.
 
1.இந்தத் தியானத்தைத் கடைப்பிடிக்கும் ஒவ்வொருவரும் அருள் உணர்வைப் பெற்று அதையே வளர்த்து
2.மற்றவர்களுக்கும் அருள் ஞானத்தைப் போதியுங்கள் அதை எடுத்துச் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள்.
 
கேட்டுணர்ந்தோர் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று ஏங்கினால் உங்களுக்குள் இந்த வளர்ச்சி வருகின்றது. அவரும் அதைப் பெருக்கத் தொடங்கினால் அவரும் நல் வழி பெறுகின்றார். அவருக்கும் வாழ்வதற்கு நல்ல வழி கிடைக்கின்றது.
 
இதைப் போன்று தொடர்ந்து நம் வாழ்க்கையையே தியானமாக்குதல் வேண்டும். தீமைகள் புகாது தடுத்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.