ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 26, 2026

ஒவ்வொரு குணத்திலும்… உணர்விலும்… செயலிலும்… துருவ நட்சத்திரத்தை இணைக்க வேண்டும்

ஒவ்வொரு குணத்திலும்… உணர்விலும்… செயலிலும்… துருவ நட்சத்திரத்தை இணைக்க வேண்டும்


வீட்டில் ஏதாவது சலிப்பு சஞ்சலம் வந்து விட்டால் ஈஸ்வரா…” (நமது உயிரை) என்று சொல்லுங்கள். அந்த உணர்வை மாற்றுங்கள். என் பிள்ளை ஞானியாக வேண்டும். அவன் கல்வியில் உயர்ந்தவனாக வேண்டும், உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
 
யாராவது எதிரியாகப் பேசுகிறார்கள் என்றால் உடனே ஈஸ்வரா…” என்று எண்ணி அதைத் தடுத்து விடுங்கள். அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அவர்கள் செய்வது யாருக்கும் தொல்லையில்லாத நிலை பெற வேண்டும். அவர்களது பகைமையூட்டும் இந்த நிலைகள் மாற வேண்டும் என்று எண்ணுங்கள். இவ்வாறு நாம் எண்ணும் பொழுது அவர்கள் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.
 
ஏனென்றால்
1.“ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்திகளை நம் உடலுக்குள் செலுத்தும் போது
2.நாம் எடுக்கும் அருள் உணர்வுகள் இரத்தத்தில் கலந்து செல்லும்… இந்த அருள் உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறுகின்றது.
3.அப்பொழுது நம்மை வர் திட்டினாரோ இது கொஞ்சம் கொஞ்சமாக அங்கே போய்ச் சேரும்… அவர் திருந்தும் நிலை வரும்.
 
அவன் எடுத்துக் கொண்ட உணர்வு திருந்த எண்ணினால் வருகின்றது.  ஆனால் நம்மைத் திட்டும்போது நம் உடலுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.  சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா.
 
இதே மாதிரி வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிமிடத்திலும்
1.ஒவ்வொரு குணங்களிலும்
2.ஒவ்வொரு உணர்விலும்
3.ஒவ்வொரு செயல்களிலும் 
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலந்து கொண்டே வரவேண்டும்.
 
பல விதமான குழம்பு வைக்கிறோம்பல விதமான பலகாரம் செய்கின்றோம். இதே மாதிரி நமக்குள் அந்தத் தீமை செய்யும் உணர்வை  மாற்றிச் சுவை மிக்கதாக மாற்றி விடுகிறோம். இப்படி நம் இரத்தத்தில் கலக்கும் பொழுது நம் உடலிலுள்ள அணுக்களுக்கு எல்லாம் சேர்கின்றது.
 
கொஞ்சம் இதில் பொறுமை தேவை.
 
ஏனென்றால் மனிதனுடைய உணர்வுகள் ஒருவர் மேல் வெறுப்பாகி விட்டால் ரோட்டில் போகும் பொழுது பார்த்தால் போகின்றான் பார்…” என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொள்கின்றோம்.
 
இதே மாதிரி ஒருவன் யாருக்கோ தவறு செய்கின்றான். அதை நாம் பார்க்கின்றோம். பார்த்தவுடன் அவனின் நினைவு வருகின்றது. அவன் உணர்வை எடுத்துத் தவறு செய்யும் அணுக்களைத்தான் நாம் வளர்க்கின்றோம்.
 
ஒருவன் சாபம் விடுகின்றான்அவனைப் பார்த்தவுடன் பதிவு செய்து விடுகின்றோம். அவன் எதைப் பார்த்தாலும் சாபம் விட்டுக் கொண்டே இருப்பான். சாப அலைகள் என்று நமக்குள் எதை எடுத்தாலும் அந்தத் தீமை செய்யும் அணுக்கள் வளர்ச்சி பெறுகின்றது.
 
1.அந்த மாதிரி உணர்வுகள் வரும் பொழுதெல்லாம் அந்தக் கணமே
2.“ஈஸ்வரா…” என்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புருவ மத்தியில் கொண்டு வரவேண்டும். 
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
நம் வாழ்க்கையில் இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.
 
இவ்வாறு செய்துஅந்தத் தீமையான உணர்வுகளை நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து வெளியே தள்ளிப் பழக வேண்டும்… எமது அருளாசிகள்.

“அவரவர்கள் வீட்டில்…” குடும்பமாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்

“அவரவர்கள் வீட்டில்…” குடும்பமாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்


வீட்டில் உள்ள தரை சுவர் கல் மண் அனைத்திலும் காந்தப்புலன் உண்டு. நாம் பேசுவது அனைத்துமே அதிலே பதிவாகின்றது.
 
ஒரு வீட்டிலிருப்போர் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள் ஒருவரை ஒருவர் கொடூரமான நிலையில் தாக்கிக் கொள்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
 
அவர்கள் அந்த வீட்டைக் காலி செய்த பின் அந்த வீட்டிற்குப் புதிதாக குடி புகுந்தார்கள் என்றால்
1.ந்த உணர்வுகளை இழுக்கப்பட்டு இவர்களும் சண்டை போட ஆரம்பிப்பார்கள்.
2.மோசமான உணர்வின் செயல்கள் அந்த வீட்டிலே பதிவாகி இருந்தால்
3.புதிதாக வந்தவர்களையும் அந்த உணர்வுகள் தாக்கி அவர்களையும் சண்டை போட வைக்கும்.
4.அவர்களை அங்கே குடி இருக்க விடாது ஒற்றுமையில்லாது சண்டையிடச் செய்து வெளியேற்றிவிடும்.
 
காரணம் அதில் உள்ள மேக்னெட் ழுத்துக் கவர்ந்து அவ்வாறு இயக்கச் சக்தியாக் கொண்டு வருகின்றது. அதை மாற்ற வேண்டும் அல்லவா…! என்ன செய்ய வேண்டும்…?
 
1.உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி ஒவ்வொரு அணுக்களுக்கும்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கப் பழக்க வேண்டும்.
 
எனக்கு குருநாதர் வானியல் புவியியல் தாவரயில் அகண்ட அண்டத்தின் உண்மைகளை உபதேசத்தின் மூலமாக உணர்த்தினார். அதே போல் தான் உங்களுக்கும் உபதேசிக்கின்றேன்.
 
குருநாதர் கொடுத்ததை ஈர்க்கும் சக்தியாக அந்த உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டச் செய்து தியானிக்கும் போது உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அதைப் பெறக்கூடிய தகுதியைக் கொடுக்கின்றோம்.
 
அந்தத் தகுதியை ஏற்படுத்தி
1.அதன் வழி கொண்டு உயர்ந்த உணர்வுகள் உங்கள் வீட்டில் பரவப்படும் பொழுது
2.உயர்ந்த சக்திகள் தரைகளிலும் சுவர்களிலும் பதிவாகிறது.
 
த்தகைய அருள் உணர்வுகளை வீட்டிலே ஆழமாகப் பதிவு செய்யப்படும் பொழுது சிந்திக்கும் ஆற்றலும் தன்னை அறிதலும் பகைமையிலிருந்து விடுபடச் செய்யவும்கைமையற்ற உணர்வைச் சேர்த்துக் கொள்ளவும் இது உதவி செய்யும்.
 
ஏனென்றால் இது மிக மிகச் சக்தி வாய்ந்த நிலைகள். அந்த அருள் உணர்வை வீட்டில் நாம் பரவச் செய்ய வேண்டும்.
 
உங்கள் வீட்டிலே தியானிக்கும் போது அந்த இடங்களில் திவாகிறது.
1.அதே சமயத்தில் அந்த அலைகள் படர்கின்றது பதிவாக்கும் பொழுது அந்த உணர்வு இழுக்கும் நல்ல நறுமணத்தை உண்டாக்கும்…”
2.மகரிஷிகள் கொடுத்த வானஇயல் புவியியல் தத்துவங்களை வீட்டிலே பதிவு செய்ய வேண்டும்.
 
உலக இருளை நீக்க நம் உணர்வின் தன்மையைத் தெளிவாக்கும் அந்த உணர்வின் அறிவை நாம் பெறுவதற்குத் தான் நாம் அனைவரும் அவரவர்கள் வீட்டிலே குடும்ப தியானத்தை அவசியம் அமைக்க வேண்டும். கூட்டமைப்பாக நாம் ந்த மூச்சலைகளைப் பதிவு செய்தல் வேண்டும்.
 
உதாரணமாக எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் மடிந்த டைனோசார் மண்ணுடன் மண்ணாகிக் கல்லாகி விட்டது.
 
அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது. விஞ்ஞானிகள் அதை எலெக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற உணர்வின் அதிர்வுகளைக் கொண்டு இன்ன இடத்திலே இப்படித்தான் வாழ்ந்தது என்று கண்டுபிடிக்கின்றார்கள்.
 
அதில் உள்ள செல்களை எடுத்து அதே டைனோசாரைப் போன்று ஜீவ அணுக்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானி சொல்கின்றான்.
 
இதே போன்றுதான் எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்கு முன்
1.அன்று வாழ்ந்த அகஸ்தியன் வெளியிட்ட மூச்சலைகள்… உணர்வலைகள்… நம் பூமியிலே உண்டு…”
2.அதன் தொடர் கொண்டு வளர்ச்சி அடைந்த துருவ நட்சத்திரம் உண்டு.
3.அதை ரிசைப்படுத்தி எடுத்து இந்த உணர்வை உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்கப்படும் பொழுது இந்த நினைவு உங்களைக் காக்கும்…”
 
இந்த அருளை ஒவ்வொரு நிமிடமும் உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வளர்க்கச் செய்து வாழ்க்கையில் அறியாது வரும் இருளை நீக்கித் தெளிந்து தெளிவான வாழ்ந்திட உதவும்.
 
இதைக் கேட்போர் அவரவர்கள் வீட்டிலே இந்த உயர்ந்த சக்திகளைப் பதிவு செய்தல் வேண்டும்.
 
வீட்டில் உள்ள அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மலரைப் போன்ற மம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும். இந்த வீட்டிற்கு வரும் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் தியானிப்போம் தவமிருப்போம்…!