
குருநாதர் எனக்கு அனுபவம் கொடுத்த முறை
நான் ரெஸ்ட்
இல்லாமல் சொல்லிக் கொண்டு வருகின்றேன்… இதை எதற்காகச் சொல்கின்றேன்…?
1.எனக்கு
ரெஸ்ட் எது…? என்றால்
2.நீங்கள்
சந்தோஷமாக இருக்க வேண்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கும் போது
தான்
3.அது எனக்கு
ரெஸ்ட் ஆகின்றது.
நீங்கள் அந்த மகரிஷிகளின்
அருள் சக்தி பெற வேண்டும் உங்களுக்குள் இருக்கும் துன்பங்கள் அகல
வேண்டும் உங்கள் மூச்சலைகள் இந்த நாட்டிலே படர வேண்டும் நல்லதாக நினைப்பது அனைத்தும் இந்த நாட்டிலே நடக்க வேண்டும். அது உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் எண்ணிக்
கொண்டே இருக்கின்றேன்… அந்தச் சொத்தைப் பெறுகின்றேன்…! வேறு ஒன்றும் இல்லை.
உங்களுக்குள்
நல்லதாக வேண்டும் என்று நான் சொல்வதை நீங்களும் கொஞ்சம் மனது வைத்துச்
செயல்படுத்த வேண்டும்.
யாம் உங்களுக்குக் கொடுக்கும்
வாக்கு சாதாரணமானதல்ல.
1.ஒரு
வார்த்தையை நான் சொல்ல வேண்டும் என்றால் எத்தனையோ கஷ்டப்பட்டு விளைய வைத்து
2.அதிலே
வளர்த்ததைத் தான் சொல் வடிவில் கொண்டு வருகின்றேன்.
வாக்கு என்பது
நல்ல வித்து. அதைக் காப்பாற்றிக் கொள்ளும் நிலைக்கு நீங்கள்
வரவேண்டும்.
யாரும் தவறு
செய்யவில்லை.
நல்லதைத் தான் எண்ணுகின்றீர்கள். ரோட்டிலே சண்டை போடுபவரை
வேடிக்கை பார்க்கின்றீர்கள்… வேதனைப்படுவரைப் பார்க்கின்றீர்கள்… உங்களுக்குள் அந்த உணர்வுகள் வந்து விடுகின்றது.
அதையெல்லாம்
நீங்கள் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்குத்தான் குருநாதர் எனக்குக்
காட்டிய நிலைகளை உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.
எத்தனையோ
வகைகளில் குருநாதர் எம்மைக்
கஷ்டப்படுத்தினார். மூன்று லட்சம் பேரைச் சந்திக்கும்படி செய்தார்.
1.அவர்களுடைய கஷ்டங்களை எல்லாம் பார்க்கச் சொன்னார்… அந்தக் கஷ்டத்தை எனக்குள் உண்டாக்கினார்.
2.அந்தக்
கஷ்டம் எப்படி வருகின்றது…?
3.அந்தக் கஷ்டம் எப்படி உனக்குள் உண்டாகிறது…?
நீ ஒன்றும் செய்யவில்லை உதவி தான் செய்கின்றாய்.
4.ஏனென்றால் இரக்கமாகப் பார்க்கச்
சொல்வார்… அப்பொழுது அது எனக்குள்
வந்து விடுகின்றது.
5.இரவு
பூராம் அந்த நினைவுகள் வரும்…! சண்டை போட்டதைப் பார்த்த்து
அனைத்தும் இரவிலே கெட்ட கனவுகளாக வரும்.
திடீரென்று விபத்துகளை நேரடியாக பார்க்கச் சொல்வார். அதிலே
ஒருவருக்கொருவர் அடிபட்டு இறந்திருப்பார்கள்.
அப்படி இறந்த ஆவிகளைக் காண்பிப்பார்.
எமக்கு முதன் முதலில் எப்படி அனுபவம் கொடுத்தார்…?
என்றால் தற்கொலை செய்து கொண்டது… அடித்துக் கொன்றது… பயந்து கொண்டு ஓடியவர்கள்… போன்ற அது அனைத்தையும் எனக்குக் காட்டுகின்றார்.
இதையெல்லாம்
பார்த்த பின்
1.இரவிலே
என்னை எங்கேயோ இழுத்துக் கொண்டு போகிற மாதிரி இருக்கும்.
2.அடிக்கிற
மாதிரி இருக்கும்... உதைக்கிற மாதிரி இருக்கும்… எனக்குத் தூக்கமே வருவதில்லை.
இந்த
உணர்வுகள் எனக்குள் வந்தபின் என்ன செய்கிறது…? என்பதைத் தெளியச் செய்வார்.
இதையெல்லாம்
மாற்றி மந்திரங்களைச் சொல்லி அக்காலங்களில் இந்த உணர்வை எடுத்து அவன் எப்படி இயக்கினான்…? அந்த மந்திர சக்தி கொண்டு அரசர்கள் எப்படி எல்லாம் அதைப் பயன்படுத்திக்
கொண்டார்கள்…? என்று வரிசைப்படுத்திக்
காண்பிக்கின்றார்.
அதை
எடுத்தாலும் கூட அதை மாற்றி அமைக்கும் சக்தியும் கொடுக்கின்றார்.
அதற்குப் பின்
அரசர்களால் செய்யப்பட்ட சில வினைகள் ஏவல் பில்லி சூனியம்
அதை எப்படி அவர்கள் செய்தார்கள்…? என்றும் அது எதிலிருந்து வருகின்றது…? இந்த உணர்வின் சக்தி
எப்படி இருக்கின்றது…? கூடு விட்டுக் கூடு எப்படிப் பாய்வது…?
இதையெல்லாம் கொடுக்கின்றார்.
இதையெல்லாம் அந்த
நினைவைக் கொடுத்து எண்ணச் சொல்லும் பொழுது குவித்து கொண்டு
வருகின்றது. பல நிலைகள் என் உடலிலே செய்கின்றது. இப்படித்தான் எனக்கு அனுபவம் கொடுத்தார்.
1.அதையெல்லாம் நான் மாற்றி அமைத்த சக்தி வாய்ந்த உணர்வுகளைத் தான்
2.அருள் ஞான சக்தியாக உங்களுக்குள் போதித்துக் கொண்டு
வருகின்றேன்.