ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 29, 2026

குருநாதர் கொடுத்த இன்னல்களைத் தாங்க முடியாதபடி பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன்

குருநாதர் கொடுத்த இன்னல்களைத் தாங்க முடியாதபடி பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன்


எனது குருநாதர் அடிக்கடி எம்மைத் துயரத்தில் ஆழ்த்தி துயரப் படும்படியாக வாழச் செய்தார் அதிலேயே உழலச் செய்தார். பல இன்னல்களைக் கொடுத்தார்.
1.அந்த இன்னல்களைச் சந்தித்த பின் குருநாதரிடமே வெறுப்பு கொண்டேன்.
2.என்னை இப்படி எல்லாம் தொல்லைப்படுத்துகின்றாயே கஷ்டப்படுத்துகின்றாயே…!
3.இது எதுவும் எனக்கு வேண்டாம் நான் பேசாமல் போகின்றேன்…! என்றேன்.
4.இன்னல்களைத் தாங்க முடியாது தற்கொலை செய்யவும் கூட முயற்சி எடுத்தேன்... ஒரு முறை அல்ல பல முறை...!
 
அவர் கொடுக்கும் இம்சைகளிலிருந்து மீள முடியாத நிலைகள் கொண்டு என்ன வாழ்க்கை…? என்று எண்ணினேன்.
 
மனைவியைக் காப்பாற்றினார் சில மகிழ்ச்சியான செயல்களும் நடந்தது. ஆனால் அதற்குப்பின் ஒவ்வொரு நொடியிலும் பல பல இன்னல்கள் வருகின்றதே…! என்ன வாழ்க்கை…? என்று எண்ணிய பின் பல முறை தற்கொலை செய்யும் உணர்வுக்கே அது என்னை அழைத்துச் சென்றது.
 
ப்பொழுது தான் குருநாதர் சுட்டிக் காட்டுகின்றார்.
 
உன்னுடைய உணர்வு கொண்டு பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றாய். ஆனாலும்ந்தத் தீமையின் உணர்வுகளை உனக்குள் நீ நுகரும் பொழுது
1.உன் நன்மையின் நிலைகளை அது எவ்வாறு செயலற்றதாக மாற்றுகின்றது…?
2.உன் உடலை அழித்திட வேண்டும் என்று இந்த உணர்ச்சிகள் உன்னை எப்படித் தூண்டுகின்றது.
 
எத்தனையோ உடல்களில் உன்னைக் காத்திட வேண்டும்…” என்ற உணர்வை நினைவு கொண்டாய் பரிணாம வளர்ச்சியில் இன்று மனிதனாக ஆனாய்.
 
ஆனால் மனிதரான பின் சிறு குறைகளை உன்னால் தாங்க முடியாது இந்த உணர்வின் தன்மை வளர்க்கப்படும் பொழுது இதே எண்ணம் இந்த உடலை அழிக்கச் செய்கின்றது.
 
இந்த உடலை அழித்து விட்டால்
1.உடலை அழித்திடும் உணர்வு கொண்டு இன்னொரு உடலை அந்த உடலையும் அழித்துவிடும் நிலைகளுக்குச் சென்று
2.இது போன்று உடலை அழித்துப் புசித்திடும் உணர்வின் தன்மை கொண்ட மிருகமாக நீ பிறப்பாய் போ…! என்று சாபமிடும் நிலையாக உணர்த்தினார்.
 
அதைச் சிந்தித்துப் பார் என்றார். அந்த உணர்வின் அலைகள் உனக்குள் எவ்வாறு செயல்படுகின்றது…? எதனை நீ அறிய வேண்டும்…? என்ற நிலைகளைத் தெளிவுபடுத்திக் காட்டினார்.
 
ஆகவே நாம் எதைக் கருத்தில் கொள்ள வேண்டும்…? எதனை நமக்குள் பருக வேண்டும்…? என்ற பேருண்மையை குருநாதர் அருளினார். அந்த உணர்வின் தன்மையை இன்று பாட நூல்களில் காட்டுவது போல அனுபவ ரீதியிலே எனக்குக் கொடுத்தார்.
 
1.நீங்கள் அனைவரும் தைப் பெற முடியும்
2.உங்களால் தீமைகளை அகற்றும் சக்தி பெற முடியும்
3.தீமையற்ற உடலாக மாற்ற முடியும்
4.தீமையற்ற நிலைகளை உங்களுக்குள் விளைய வைத்துப் பிறவா நிலை என்ற பெருநிலை அடைய முடியும்.
5.உங்கள் பார்வையால் பேச்சால் பிறருடைய தீமைகளைப் போக்க முடியும்
6.உங்கள் குடும்பத்தில் வரும் சிக்கலை அகற்ற முடியும்
7.உங்கள் வாழ்க்கையில் மன நிம்மதி பெற முடியும் என்று
8.குருநாதர் எனக்கு உணர்த்தியதை உங்களுக்குத் தெளிவாகக் காட்டுகின்றோம்… அதைப் போதிக்கின்றோம்.
 
ஆகவே எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த அருள் சக்திகளை அனைவரும் எளிதில் பெற முடியும் குடும்பத்தில் வரும் சிக்கல்களை நீங்கள் மாற்ற முடியும்.
 
உங்களை நீங்கள் நம்புங்கள்…!