ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 31, 2026

“மற்றவர்களை உயர்த்தும் பொழுதுதான்…” நீ உயர முடியும் என்றார் குருநாதர்

“மற்றவர்களை உயர்த்தும் பொழுதுதான்…” நீ உயர முடியும் என்றார் குருநாதர்


இயற்கையின் உண்மைகள் எவ்வாறு இயங்குகின்றது…? என்று அறிந்து கொள்வதற்காக குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று பல அனுபவங்களைக் கொடுத்தார்.
 
மேலும்
1.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் எப்பகுதியில் எந்தெந்த இடங்களில்
2.அவன் உணர்வுகளும் மூச்சலைகளும் பதிவாகியுள்ளதோ அங்கெல்லாம் குருநாதர் அழைத்துச் சென்றார்.
 
அவன் கண்டுணர்ந்த அகண்ட அண்டத்தின் பேருண்மைகளை என்னை அறியச் செய்தார். அவர் காட்டிய வழியில் உண்மைகளை அறிய முடிந்தது, உணரவும் முடிந்தது.
 
அறிந்து கொண்ட பின் எனக்குள் மட்டும் வளர்ந்தால் போதுமா..,? “நீங்களும்… அதைப் பெறவேண்டும் அல்லவா…”
 
ஆகவே.. “எல்லோரையும்… அதைப் பெறச் செய்…என்றார் குருநாதர்.
 
ஆனால். நீ சுயநலம் கொண்டு நான் வளர்த்துக் கொண்டேன்.., “நான் பெரிய மகான்நான் அதைச் செய்வேன்.., இதைச் செய்வேன்.., என்று உனது பெருமையைக் காட்டினால் உனக்குச் சிறுமையே வரும்.
 
1.ஒவ்வொருவரும் பெருமைப்படும்படி அவர்களை உயர்த்தும்படி…நீ இதைப் பெறச் செய்தால் நீ உயர்கின்றாய்..,.
2.அவர்களை உயர்த்துகின்றாய்… அந்த உயர்ந்த நிலைகளை நீ நுகர்கின்றாய்.
3.அவர்களும் உயர்கின்றனர்… அப்பொழுது நீயும் உயர்கின்றாய்…
 
இதைத்தான் நான் உன்னைச் செய்யச் சொல்கின்றேன்.
 
நீ இத்தனையும் கற்றுணர்ந்தபின் எல்லாம் செய்த பின்…நான் தான் இதையெல்லாம் செய்தேன்…என்ற அகம்எப்பொழுது உனக்குத் தோன்றுகின்றதோ அப்பொழுது உண்மையை அறியும் தன்மையினை இழக்கின்றாய்.
 
1.“ஒருவர் உயர வேண்டும்என்ற உணர்வினை எப்பொழுது நீ ஊட்டுகின்றாயோ
2.அவர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எப்போது ஆசைப்படுகின்றாயோ
3.அவர்களைக் கேட்க வைக்கின்றாயோ அந்த அருள் ஞானத்தை உருவாக்குகின்றாயோ உருவான அந்த உணர்வு உன்னை… வலுவாக்கும்…”
 
அதே சமயத்தில் உன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் அவர்களையும் காக்கும் நிலை வருகின்றது.
 
நீ இதை எவ்வாறு செய்யப் போகின்றாய்…? எவ்வாறு வெளிப்படுத்தப் போகின்றாய்…? கடும் தீமைகள் எதிர்த்துத் தாக்கும் உணர்வின் உலகில் நீ வாழ்கின்றாய். இதிலிருந்து நீ மீளும் மார்க்கம் என்ன…?
 
இப்படி அடிக்கடி எனக்குள் வினாக்களை எழுப்பி அந்த உண்மைகளை உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
 
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன அந்த ஆற்றல்களை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று அவர் காட்டிய அருள் வழியில் தான் உங்களுக்குள் இதைத் திரும்பத் திரும்பப் பதிவாக்குகின்றோம், நினைவு படுத்துகின்றோம்.
 
1.அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.அவன் தீமையை நீக்கி உணர்வை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக துருவ நட்சத்திரமாக வாழ்வது போல் நீங்களும் அந்த நிலை பெறுங்கள்.
 
மனிதரால் இது சாத்தியமானதே.

நாம் பெற்று வளர்க்க வேண்டிய அழியாச் சொத்து

நாம் பெற்று வளர்க்க வேண்டிய அழியாச் சொத்து


தீவிரவாதம் என்ற நிலையாகி மனிதனுக்கு மனிதன் கொன்று ரசித்து வாழ்வதும் அதே போல மனிதனையே புசித்திடும் நிலைகளும் வந்து விடுகின்றது,
 
தீவிரவாதிகளும் கொன்றவர்களைச் சும்மா விடுவதில்லை. பழி தீர்த்து அவனைக் கொன்று அவனை உணவாக உட்கொண்டு வாழ்கிறேன்…” என்று சொல்கிறார்கள்.
 
1.அன்று ஒரு காலத்தில் ஆசியக் கண்டத்தில் இஸ்ரவேல் என்ற நாட்டில் யூதர்கள் இப்படிச் செயல்படுத்தி வந்தாலும்
2.அவர்களுக்குள் போர் ந்தால் பெண்களும் சரி ஆண்களும் சரி
3.உன்னைக் கொன்று உன் ஈரலை நான் விழுங்கப் போகின்றேன் என்பார்கள்.
4.சொல்வதோடு மட்டுமல்ல…! கொன்று அந்த ஈரலைப் பச்சையாகவே சாப்பிடுவார்கள்.
 
இதைப் போல வெறித்தனமான உணர்வுகள் கொண்டு ன்று செயல்படுத்தப்பட்ட நிலைகள் தான்.
 
ஆக… அந்த வம்சமே மற்றவர்களைக் கொன்று முழுமையாக அவர்களைத் தின்பது தான்.
1.அங்கே பரவிய அந்த உணர்வு தான்
2.உலகம் முழுவதற்கும் இப்பொழுது பரவிக் கொண்டிருப்பது.
 
புது வருடம் பிறந்து விட்டது முதல் தேதி என்று இவர்கள் கொண்டாடினாலும் தீமைகளை உணர்த்தி தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று இயேசு அதைச் சொல்லி இருந்தாலும் அந்த வம்சம் தான் இரக்கமற்றுக் கொன்றதுதை ரசித்து வாழ்ந்தது…”
 
இன்றைய நிலைகள் நடப்பது… அன்றைய இதனுடைய தொடர்ச்சி தான்…!
 
இதைப் போன்ற கொடுமைகளிலில் இருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் 25 வருடம் யாம் உங்களுக்குத் தொடர்ந்து அந்த மெய் ஞானிகளைப் பற்றி உபதேசித்து வருவது.
 
1.உங்கள் அனைவருக்குள்ளும் பரவச் செய்து அந்த அருள் மகரிஷிகள் உணர்வை ஏங்கிப் பெறும்படி செய்து செய்து கொண்டிருக்கின்றேன்.
2.அந்த மகரிஷிகள் உணர்வுகளை நாம் பெற்றால் ஒழிய இதிலிருந்து தப்ப முடியாது.
3.ஆகவே அருள் ஒளியைப் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.
 
இன்றைய உலகச் சூழ்நிலையில் எந்தச் செல்வத்தையும் காக்கும் திறன் எவருக்கும் இல்லை.
 
1.ஆனால் என்றும் அழியாச் செல்வத்தை அருள் ஞானச் செல்வத்தை.. அருள் சக்தியாக நமக்குள் உருவாக்கி விட்டால்
2.இதை யாரும் தடுக்க முடியாது அதை அழித்திட முடியாது.
 
ஆறாவது அறிவின் துணை கொண்டு அந்த அருள் சக்திகளை வளர்க்க வேண்டும். அந்த ஒளியின் தன்மையாக நாம் அனைவரும் வளர வேண்டும்.