
மெய் ஞானம் பெறும் ஆற்றல்
ஒருவருக்கொருவர் துணை இல்லாது யாரும் வாழ முடியாது. துணையில்லாத உயிரினங்கள் சுத்தமாகவே அழிந்து விடுகின்றது... அது மடிய மடிய அந்த இனத்தின் ரூபங்களே முழுவதுமாக மடிந்து விடுகின்றது.
கடந்த காலங்களில் மனிதர்கள் உருவாவதற்கு முன் வலிமைமிக்க மிருகங்கள் வாழ்ந்திருந்தாலும்...
1.அந்தந்த இனத்தின் வலிமை அதிகமாகும் பொழுது அதற்குள்ளேயே ஒன்றை ஒன்று கொன்று புசிக்கும் நிலை விளைந்து
2.இறந்த அலைகள் வந்த பின் அதை நுகர்ந்த... பற்றுடன் வாழ்ந்த அந்த இனம் பூராமே அழிந்துவிட்டது.
பல இனப் பெருக்கங்களும் தடைப்பட்டு கடந்த கால ரூபங்கள் எல்லாம் எப்படி மறைந்தது...? என்பதை குருநாதர் இமயமலைப் பகுதிகளுக்குச் செல்லப்படும் பொழுது சில பகுதிகளிலும் சூட்சும நிலைகள் கொண்டு சில பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்றும்
1.அன்று வாழ்ந்த மிருகங்கள் அதன் இனமே இல்லாது எப்படி அழிந்தது...?
2.அது வாழ்ந்த நிலைகள் அங்கே எப்படிப் பதிவாகியுள்ளது...?
3.அந்த அலைகள் எப்படி உள்ளது...? அதனுடைய ரூபங்கள் எப்படி இருக்கிறது...? என்பதை குருநாதர் காண்பித்தார்.
இதை நீ வெளியிலே மற்றவர்களிடம் சொன்னாய் என்றால் போற்றலுக்கு உண்டான நிலை வரும். அந்த ரூபத்தை வரைந்து கொடுத்தால் பணமும் கிடைக்கும்.
ஆனால் விஞ்ஞான அறிவு கொண்டு இந்த உணர்வை வைத்து அந்த அலைகளை கம்ப்யூட்டர் மூலம் பிரித்து எடுப்பார்கள். அதனுடைய எண்ண அலைகள் தொடர்பு கொண்டதைக் காற்றில் இருப்பதையும் பிரிப்பான்.
உனக்குள் விளைந்த உணர்வின் தன்மையைக் கம்ப்யூட்டரில் இணைக்கப்படும் பொழுது அந்த அலைகளின் தொடரை வைத்து அந்த ரூபத்தை அறிவான். அதைக் காணும் நிலையும் வரும்.
ஆனால் அது ஜீவனுள்ளதாக வராது.
கம்ப்யூட்டர் மூலமாக உருவத்தைக் கொண்டு வந்தாலும் நுகர்ந்த உணர்வுகள் மீண்டும் அந்தக் கடந்த கால நிலைகள் எதுவோ இந்த உணர்வுகள் வளர்க்கப்பட்டு விஞ்ஞான அறிவு கொண்டு கண்டறிந்தாலும் அவன் கொண்ட நினைவாற்றல் மனித ரூபத்தை விட்டு
1.அந்த அகோரமான உணர்வுகள் இணைக்கப்பட்டு இந்த உணர்வின் தன்மை வெளிவந்த பின்
2.இன்றைய சூழ்நிலைக்குமில்லாது கடந்த காலச் சூழ்நிலைக்கும் இல்லாது இந்த உயிர் இதற்கு இணையான ரூபத்தை மாற்றிக் கொடூர மிருகமாக மாறும்.
விஞ்ஞான அறிவால் அந்த நிலை தான் வரும். அந்த ரூபங்களைப் பார்க்கும் பொழுது உடல் இச்சைக்காக அதைச் செய்தாலும் அதனுடைய பின் விளைவுகள் இப்படி இருக்கும் என்று அதையும் குருநாதர் காட்டுகின்றார்.
இன்று விஞ்ஞான அறிவு கொண்டு பூமிக்கடியில் மண்ணைத் தோண்டுகின்றார்கள். அந்த மணலை எடுத்து
1.நுண்ணிய அலைகள் கொண்டு அதிலே திரவகத்தை இணைக்கப்படும் பொழுது மேல் எழுந்தவாறு ஆவிகளாக மாறி
2.அதிலே வலிமை பெற்றதும்... ஒவ்வொரு நிலையாகப் படிப்படியாக அந்த திரவகத்தின் அடர்த்தியைக் கூட்டக் கூட்ட
3.இன்னென்ன காலங்களில் இவ்வளவு வலிமை பெற்றது... அந்த வலிமையை இவ்வளவு காலத்தில் பெற்றது என்று
4.அந்த திரவகத்தை ஊற்ற ஊற்ற அந்த வலிமை கொண்டு கரைந்து கரைந்து செல்வதை
5.அதனுடைய காலகட்டத்தை விஞ்ஞான அறிவால் அறிகின்றார்கள்... இந்தப் பாறை இத்தனை காலத்திற்கு முந்தையது...! என்று.
இதைப் போன்றுதான் குருநாதர் விண்ணுலக ஆற்றலின் உணர்வுகளை இன்னென்ன காலங்களில் விளைந்தது என்பதை நீ நுகர்ந்து பார். அந்த உணர்வின் ஒலி அலைகள் எப்படி வருகிறது...? என்று அதனை நீ அறிந்து கொள்.
ஆனால் அதற்காக வேண்டி காலத்தைச் செலவழிக்காதே. நீ அறிந்து கொள்ளவே இதை உனக்குக் கொடுக்கின்றேன்.
இந்த அறிவின் தெளிவை மற்றவர்களுக்கு நீ ஊட்டினால் விஞ்ஞான அறிவிக்கே அடிமையாகி மனித உடலில் இச்சைகள் உருவாக்கப்பட்டு அதன் வழியில் அழியும் பருவத்தைப் பெறுவாயே தவிர... என்றும் உயிருடன் ஒன்றி நிலை கொண்டு ஒளியின் சரீரமான அந்த மகரிஷியின் அருள் வட்டத்தில் நீ இணைய முடியாது என்று தெளிவாகக் காட்டினார்.
ஆகவே அதன் வழிப்படி நான் அந்த வழிக்குச் செல்லவில்லை.
1.மெய்ஞான உணர்வுடன் வளர்ந்து கொண்டிருக்கும் ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அருள் மகரிஷிகள் உணர்வுடன் உங்களை ஒன்றச் செய்து
2.அந்த உணர்வுகளை உங்களுக்குள் விளையச் செய்து இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மைகளை அகற்றச் செய்ய வேண்டும்.
என் ஒருவனால் அது முடியாது. நீங்கள் அனைவரும் அந்த அருள் உணர்வுகளை எடுத்து உங்களுக்குள் நினைவு கொண்டு அந்த மகரிஷியின் ஆற்றலைப் பெற வேண்டும்.
மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்... எங்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும்... நாங்கள் பார்ப்போர் எல்லாம் பெற வேண்டும்... என்னைப் பார்ப்போருக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்ற உணர்வினை உங்கள் எண்ணத்தால் பரப்பினால்
1.இது சிறுகச் சிறுக வளர்ந்து ஒவ்வொரு மனிதருக்குள்ளும் விளைந்து உணர்வலைகளைப் பெருக்கி
2.அதன் வலு கொண்டு இந்தக் காற்று மண்டலத்தில் விஞ்ஞான அறிவால் வரும் நச்சுத்தன்மைகளை மாற்ற முடியும்.