ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 6, 2026

குருநாதர் என்னை அடித்து உதைத்து… கவனம் முழுவதையும் அவர் பால் திருப்பச் செய்து தான் ஆற்றல்களைப் பெறச் செய்தார்

குருநாதர் என்னை அடித்து உதைத்து… கவனம் முழுவதையும் அவர் பால் திருப்பச் செய்து தான் ஆற்றல்களைப் பெறச் செய்தார்


மகரிஷிகளைப் பற்றியும் மெய் ஞானிகளைப் பற்றியும் அவர்கள் கண்டுணர்ந்த பேருண்மைகளையும் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
 
1.நாம் படிக்கவில்லை…! ஒன்றும் தெரியவில்லை…! ஆனால் சாமி (ஞானகுரு) சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்றோ
2.இவ்வளவு பெரிய தத்துவத்தைச் சொல்கின்றாரே…!
3.நமக்கு ஒன்றும் புரியவில்லையே..! என்று விட்டு விட்டீர்கள் என்றால் தீர்ந்து விட்டது.
4.புரிய வேண்டும்…” என்ற ஏக்கத்தில் இருந்தால் புரியும்.
5.புரியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தால் புரியாது.
 
முதலில் பள்ளிக்கூடத்திற்கு நாம் படிக்கச் செல்கின்றோம் என்றால் நாம் தெரிந்து போய்த் தெரிந்து கொள்வதில்லை…!” தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அங்கே போகின்றோம்.
 
முதலில் எழுத்துக்களைப் பார்க்கப்படும் போது
1.அந்த எழுத்துக்களில் என்ன கருத்து உள்ளது…? என்று அறிய
2.அதை ஆழமாகப் பதிவு செய்தால் தான் பதிவு ஆகும்.
 
இல்லை என்றால் நீங்கள் ஆயிரம் வருடம் அஎன்று சொல்லிக் கொண்டே வந்தால் முடியாது. அஎன்று எழுத்தைப் படிக்க வேண்டும் என்றால் எத்தனை குழந்தைகள் வருடக் கணக்கில் உட்கார்ந்து தெரிந்து கொள்கிறது என்று பார்க்கலாம்.
 
1.ஆர்வமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற குழந்தைகளுக்குச் சொன்னது பதிவாகி
2.அது உடனடியாகப் பதில் சொல்லக்கூடிய நிலைக்கு வரும்.
 
ஆகையினாலே ஏதோ சொல்லுகின்றேன் என்று எண்ணி விட வேண்டாம்.
 
வான்மீகி தெரிந்து வரவில்லை. இராமகிருஷ்ண பரமஹம்சர் அனைத்தும் அறிந்து கொண்டு வரவில்லை. இராமலிங்க அடிகள் அறிந்து வரவில்லை.
 
1.வியாசகர் பேரண்டத்தின் இயக்கத்தின் தத்துவத்தையே காட்டினார் அவர் தெரிந்து வரவில்லை.
2.உணர்வின் இயக்கங்களை எண்ணங்களைப் பற்றி வெளிப்படுத்திய வான்மீகியும் அறிந்து சொல்லவில்லை… அறிவின் ஞானம் இல்லை.
3.அகஸ்தியனோ கல்விச் சாலைக்கே செல்லாதவன்… அவன் இயற்கையின் இயக்கங்கள் அனைத்தையும் கண்டுணர்ந்தான்.
 
எவரும் தெரிந்து வரவில்லை.
 
1.அறியாத நிலைகள்
2.“சந்தர்ப்பத்தால் இணைந்து இயக்கிய அந்த உணர்வின் தன்மை…”
3.தன்னுள் அறியும் பருவம் வரும் போது தான் மகா ஞானி ஆகின்றார்கள்.
 
அறிந்தவர் அறிந்ததைத் தனக்குள் விளைவைத்த பின் அதை
1.அறிந்திடும் நிலை கொண்டு செல்லும் போதுதான்
2.அறிவைப் பற்றி நாம் தெரிந்து கொள்கின்றோம்.
 
எழுத்து வடிவில் புதிதாக ஒருவர் எழுதி இருந்தால் அதை மீண்டும் அவர் சொல்லும் உபாயத்தை வைத்து அதை எடுக்கும் போது தான் அந்த எழுத்தின் தன்மை கொண்டு மற்றதை அறிய உதவுகின்றது.
 
எத்தனையோ மொழிகள் இருக்கிறது நாம் பார்க்கின்றோம். இதைப் போன்று தான் ஞானிகள் தனக்குள் விளைய வைத்த உணர்வுகள்.
1.அவர்களுக்கு எழுத்தறிவு இல்லை என்றாலும்
2.தன் உணர்வால் இயக்கப்பட்டு அறிந்தனர்.
3.ஒன்றின் இயக்கச் சக்தியைத் தனக்குள் கவர்ந்து
4.அதனின் தன்மைகளை முழுமையாக அந்த மெய்யை உணர்ந்து கொண்டார்கள்.
 
மெய்யை உணர்ந்த அந்த மெய் ஞானிகளிடமிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு நமது பூமியில் மகா சக்தியாகப் பரவிக் கொண்டுள்ளது.
 
அதை உங்களுக்குள் நினைவுபடுத்திக் கூர்மையாகப் பதிவு செய்கிறோம். பதிந்ததை நீங்களும் எண்ணி எடுக்க முடியும்.
 
ஒரு மரத்தில் விளைந்த ஒரு வித்தினை நாம் எங்கே கொண்டு போய் ஊன்றினாலும் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு தாய் மரத்தின் உணர்வை அது நுகர்ந்து செடியாகி மரமாகி தன் இனமான வித்துக்களை அது மீண்டும் விருத்தி செய்கின்றது.
 
மெய் ஞானிகள் விண்ணுலக ஆற்றலை அறிந்தார்கள். அந்த விண்ணின் ஆற்றலை எண்ணத்தால் தனக்குள் பதிவு செய்யும் பொழுது (அவ்வப்போது) அறிந்த உணர்வுகள்
1.ஆற்றல் மிக்க சக்தியாக அவர்களுக்குள் விளைந்தது
2.அலைகளாக இன்றும் நமக்கு முன் படர்ந்துள்ளது.
 
அதனை குருநாதர் காட்டிய அருள் வழியில் அவர் கண்டுணர்ந்த உணர்வினை நினைவுபடுத்தி உங்களைக் கூர்மையாகக் கேட்க வைத்துப் பதிவாக்குகின்றோம்.
 
ஒரு வித்து தன் தாய் மரத்தின் உணர்வின் துணை கொண்டு அது எப்படிக் கவர்ந்து கொள்கின்றதோ அது போல் ஞானிகள் கண்டுணர்ந்த அறிவின் ஞானத்தை பதியச் செய்யும் போது ஆழமாக நீங்கள் பதிந்து கொண்டால் போதும்.
 
ஞானத்தின் வித்து விளையத் தொடங்கி விட்டால் இருளைப் போக்கி ஒளி காணும் உணர்வின் தன்மையை நிச்சயம் உங்களுக்குள் விளையும். ஆகவே ஞானிகளின் உணர்வுகள் விளைய வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.
 
நான் கல்வி அறிவற்றவன் தான். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரும் கல்வியறிவு அற்றவர் தான்.
 
இருப்பினும் அவரைக் கூர்ந்து கவனிக்கும் அளவில்
1.நான் அவர் சொல்வது எனக்குப் புரியவில்லை என்று விலகிச் சென்றாலும்
2.அதைப் புரியும்படி செய்வற்காக வேண்டி என்னை அடிக்கடி உதைப்பார்.
3.உதைக்கும் போது அவரைப் பற்றி அதிகமாக எண்ணுவேன்.
4.அவர் சொல்வதைத் திருப்பி என்ன..?” என்று கேட்கும்படி வைப்பார்.
5.அப்போது அந்தந்தச் சந்தர்ப்பங்களில் அவர் எண்ணிய உணர்வுகளைத் திரும்ப திரும்ப எண்ணும் போது
6.அவர் எதைக் கற்றுணர்ந்தாரோ அந்த உணர்வின் சக்தி எனக்குள் வருகின்றது.
 
அவர் என்னை அடித்து உணர்த்தினார். உங்களுக்குச் சொல்லாகச் சொல்லுகின்றேன். உங்கள் கவனம் இதை ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும்…” என்ற ஏக்கம் இருந்தால்
1.மெய் ஞானிகள் கண்டதை நான் உணர்ந்தது போல்
2.நீங்களும் உணர முடியும் காண முடியும்.

“நாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற வேண்டும்…” என்று சொல்வதன் முக்கிய காரணம்

“நாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற வேண்டும்…” என்று சொல்வதன் முக்கிய காரணம்


பாம்பு தன் நஞ்சினை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சி அதை உணவாக எடுத்து அது தனக்குள் விளைந்து விளைந்து உயிருடன் உணர்வுகள் அமில சுரப்பியாக ஆனாலும்…” மற்றதைக் கொன்று புசித்திட்ட உணர்வுகளும் மற்றது தன்னைக் கொல்ல வரும் நிலைகளிலும் நினைவின் ஆற்றல் கொண்டு உணர்வின் சக்தி வெளி வந்த பின் நஞ்சை உணவாக எடுத்துக் கொண்ட நிலைகள் அது நாகரத்தினமாக மாறுகின்றது.
 
அதைப் போல் யானையும் வலுக் கொண்ட உணர்வின் சத்தைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் அது முதிர்ந்த நிலைகள் கொண்டு அதற்குள் வைரம் போன்ற முத்தாக விளைகின்றது.
 
பாம்பிற்குள் நாகரத்தினமாக எப்படி விளைந்ததோ இதைப் போல்
1.மனிதன் மற்ற நஞ்சு கொண்ட உணர்வுகளைத் தனக்குள் செயலாற்றதாக ஆக்கி
2.அந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நஞ்சினை ஒடுக்கி
3.துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
 
உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உணர்வின் இயக்கம் ஒளியாக மாறினான் மனிதன். ஆனால் நாகமோ நஞ்சினை உறையச் செய்து ஒளியின் சுடராக விளைகின்றது.
 
தன் உணர்வின் நிலைகளுக்காக முதிர்ந்த நாகம் நாகரத்தினமாக ஆனாலும் உமிழ்த்தி ஒளியின் சுரிலே… கண் ஒளிகள் மங்கினால் இந்த உணர்வின் அலைகள் கொண்டு உணவைத் தேடும் நிலையாகச் செல்கின்றது உடலின் நிலைகளுக்கு…!
 
ஆனால் நஞ்சு கொண்ட உணர்வுகள் மற்றது தாக்கப்படும் பொழுது வேதனை கொண்டு கவர்ந்த உணர்வுகள் எதனை உற்று நோக்கியதோ அதனின் உணர்வின் துணை கொண்டு உயிரான்மா வெளி சென்ற பின் எதைக் கொன்று புசிக்க வேண்டும் என்று விரும்பியதோ அதன் உடலுக்குள் சென்று விடுகின்றது.
 
1.இதனில் விளைந்த நஞ்சு தன் உணவுக்குத் தான் உதவ முடிந்தது.
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக ஆகவில்லை.
 
ஆனால்
1.மனிதனுக்குள் எத்தனையோ வேதனை போன்ற உணர்வுகள் வந்தாலும் மகரிஷிகள் உணர்வுகளை இணைக்கச் செய்து
2.நஞ்சை அடக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சிகரமாக மாற்றிச் சென்ற அவனின் உணர்வுகளை நமக்குள் எடுத்தோம் என்றால்
3.என்றும் பதினாறு என்ற நிலையில் பெரு வீடு பெருநிலை என்ற அழியா நிலைகள் கொண்டு வேகாக் கலை ஆகின்றது… வேகா நிலை ஆகின்றது.
4.எந்த நெருப்பும் எந்த நஞ்சும் இந்த உணர்வை வெல்ல முடியாது.
 
துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் நஞ்சு கொண்ட உணர்வுகள் எதுவும் மாய்த்திடாது.
 
சூரியனோ கோள்களோ மிகச் சக்தி வாய்ந்த கதிரியக்கத்தை உமிழ்த்தும் நட்சத்திரங்களோ இவை அனைத்துமே மடிந்திடும் நிலைகள் கொண்டது தான்.
 
நட்சத்திரங்கள் சூரியனாக மாறலாம். சூரியனாகிப் படைக்கும் தன்மை வந்தாலும் மிருக நிலையிலிருந்து மாறி மனிதன் முதுமை அடைந்து போல் சூரியனும் முதுமை அடைந்து விடும்.
 
பிரபஞ்சத்திற்குள் உயிரணுவின் தோற்றமாகி மற்ற ஏனைய உடலில் இருந்து பெற்று மனிதனான நாம்
1.மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்த்துக் கொண்டால் வேகா நிலையாக என்றும் நிலைத்திருக்க முடியும்.
2.என்றும் பதினாறு என்ற நிலையில் வளர்ந்து கொண்டே இருக்கும்.
 
அதற்குத்தான் மார்க்கண்டேயன் கதையைக் காட்டுகின்றார்கள். மார்க்கண்டேயன் எதைப் பற்றுகின்றான்…? கீழிருக்கும் ஆவடையப் பற்றவில்லை. (ஆவடை என்பது உடல்).
 
1.உயிர் தன்னை இயக்கிய நிலைகள் கொண்டு தாவி அந்த லிங்கத்தைத் தான் ஆலிங்கனம் செய்கின்றான்… அது ஜீவன் உள்ளது
2.உயிரின் தன்மை வளர்ச்சி அடைந்து கொண்டிருப்பதை உயிரைப் பற்றுடன் பற்றி
3.அதனுடன் ஒன்றி உணர்வினை ளியாக மாற்றினான் என்ற நிலையை நினைவுபடுத்துவதற்காக அவ்வாறு காட்டுகின்றார்கள்.
 
அவ்வாறு மார்க்கண்டேயன் உயிருடன் ஒன்றிய நிலைகள் வரப்படும் பொழுது மனால் வனைக் கவர முடியவில்லை…” என்று சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் ண்ணம் ஞானிகள் இதை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.