![]() |
துருவ நட்சத்திரத்தின் "உணர்வு "- அழுத்தம்
தையல் கடையில் துணி தைப்பவர் லேசாகத் தைக்கிறார் என்றால் நாமும் அவ்வாறு தைக்க முடியுமா...? அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டே மற்றவரிடம் பேசிக் கொண்டே சீராகத் தைத்து விடுவார். அந்த உணர்வின் இயக்கம் சீராக வேலை செய்கின்றது.
ஆனால் நாம் கூர்மையாகப் பார்த்துச் செய்தாலும் கூட தையல் கோணல் மாணலாக நெளிந்து கொண்டே போகும்.
1.அது போல் தான் இந்தத் தியானத்தினை நாம் சீராகப் பழகிக் கொண்டால்
2.வாழ்க்கையில் எதிர்நிலை வந்தால் "டக்..." என்று அதை மாற்றி விட முடியும்.
கம்ப்யூட்டர் மூலமாக இன்று எத்தனையோ வேலைகளைச் செய்கின்றார்கள். ஒரு வேலை செய்கிறார் என்றால் அதிலே தவறுகள் வந்து விட்டால் "ஏன் அவ்வாறு வந்தது...?" என்று அதைச் சரி செய்வதற்கு "மாற்று அழுத்தத்தைக் கொடுத்து விடுகிறார்கள்..."
1.அந்த மாற்று அழுத்தம் வந்தபின் தவறுகளை மாற்றி மறுபடியும் அதைச் சீராக்குகின்றது.
2.தவறு என்று வந்தாலே அதைக் காட்டிலும் அழுத்தமான உணர்வு கொண்டு அதை அழித்து விட்டு நல்ல உணர்வுகளைப் பதிவு செய்கின்றான்.
நாம் காகிதத்தில் தவறாக எழுதினால் அழித்து அதைத் திருத்துகின்றோம்.
ஆனால் உணர்வின் இயக்கம் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக். ஒரு பொருளின் ரூபத்தைக் கொண்டு வரும் பொழுது அழுத்தத்தின் தன்மை கொண்டு அது சீராகவில்லை என்றால் அழுத்தத்தை மாற்றி அந்த உணர்வுக்கொப்ப கொண்டு வருகின்றார்கள். கெமிக்கல் கலந்த உணர்வுகளில் உணர்வின் தன்மை அழுத்தம் எதுவோ அதன்படி அது கொண்டு வரும்.
1.விளக்குகள் சிறிதாகவோ பெரிதாகவோ எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் எந்த உணர்வுக்கொப்ப எப்படி அது எரிகின்றதோ
2.இது போன்று அந்த உணர்வுகளை எலக்ட்ரானிக்காக மாற்றி இந்த ஒலியின் நிலையை உருவாக்குகின்றார்கள்.
அப்போது எழுத்தின் வடிவம் வருகின்றது. விஞ்ஞானிகள் இதைச் செய்கின்றார்கள்.
இதைப் போன்று தான் நாம் கண் கொண்டு பார்க்கும் போது ஒருவன் வேதனைப்படுகிறான் என்று பார்த்தால் நல்ல உணர்வுகளை எலக்ட்ரானிக்காக மாற்றி அதை அழித்து அந்த (வேதனை) உணர்வைக் கொண்டு வருகின்றது.
ஆனால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் செலுத்தி "அந்த உணர்வின் அழுத்தத்தை நாம் கொண்டு வந்தால்"
2.அது அந்த வேதனையை மாற்றி தெளிந்த உணர்வின் தன்மையை நமக்குள் கொண்டு வரும்.
ஏனென்றால் நமது உயிரும் எலக்ட்ரிக் தான். நாம் நுகரும் உணர்வுகள் எலக்ட்ரானிக்.
விஞ்ஞானி காட்டுகின்றான் இன்று அகண்ட அண்டத்தையும். அன்று மெய்ஞானியோ தன் உணர்வின் தன்மையைப் பாய்ச்சினான்... உணர்வுகளை அறிந்தான்.உணர்வுக்கொப்ப எண்ணத்தை வளர்த்தான். அந்த உணர்வின் ஆற்றல் அது செயல்படும் நிலைகளை அகண்ட அண்டத்தையும் அகஸ்தியன் அறிந்தான்.
1.அகஸ்தியன் உடலில் விளைந்த உணர்வுகள் இந்தக் காற்று மண்டலத்தில் கலந்துள்ளது.
2.குருநாதர் கண்டார்... அதைப் பெற்றார் அந்த உணர்வை எனக்குள் பதிவாக்கினார்... அதை நினைவு கொள் என்றார்... அதன்படி நடக்க வேண்டும் என்று சொன்னார்.
3.அதை அறிந்து தான் நான் பேசுகின்றேன். கல்வியால் கற்றுணரவில்லை... எழுத்து வடிவில் நான் பார்க்கவில்லை.
4.குரு காட்டிய உணர்வைப் பதிவாக்கினேன்... நினைவு கொண்டேன்... அதை அறிய முடிகின்றது. அதைத்தான் உங்களிடம் சொல்கின்றேன்.
அதை நீங்கள் பதிவாக்கிவிட்டால் நினைவு கொண்டால்... அருள் ஞானி பெற்ற உணர்வை நீங்களும் பெறலாம். உங்களுக்குள் அறியாது வந்த இருளை மாற்றி அமைக்கும் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.
