ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 11, 2026

அவனுக்குள் ஒன்றி… அவனாக… அவனாகவே ஆக வேண்டும்

அவனுக்குள் ஒன்றி… அவனாக… அவனாகவே ஆக வேண்டும்

 

ஈசனுக்கு முன் நாம் எல்லோரும் ஒன்று. நாம் உருவாக்கும் நிலைகள் எல்லாம் ஒன்றி நமது உயிர் ஈசனாகின்றது. அவன் அமைத்த கோட்டை இந்த உடல். இந்தக் கோட்டையை நாம் எப்போதுமே புனிதப்படுத்த வேண்டும்.  
 
1.அவனுக்குள் ஒன்றி அவனாகவே ஆகவேண்டும்.
2.“என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா என்று நாம் சொல்லும் இந்த உணர்வுகள் ஒலி ஒளி என்ற நிலையில்  உயிர் என்று ஆகின்றது.
3.“நீயே தான் நான்... நானே தான் நீ…!” என்று உயிரோடு ஒன்றி  ஒளியென்ற நிலை  நாம் என்றும் பெற்றிடுவோம்.
 
இந்த மனித உடலை உருவாக்கியது நமது உயிர் என்றாலும் ஒவ்வொரு உடலிலும் காத்திடும் உணர்வினைச் சேர்த்துச் சேர்த்து அதன் உணர்வுக்கொப்ப  அந்தந்த உடல்களில் அதைக் காத்திடும் ஞானமும் அதன் வழி வளர்ச்சியும் பெற்று இன்று மனிதனாகி உள்ளோம்.
 
இந்த உடலில் உயிர் நம்மை உருவாக்கியது என்று எல்லாவற்றையும் அறிந்திடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு என்றும் ஒளியின் சுடராக வாழ வேண்டும்.
 
உயிரின்  உணர்வில் எக்காரணம் கொண்டும் நஞ்சு அணுகாது காத்துக் கொண்டவர்கள் ஞானிகள்.
1.இந்த மனித உடலில் ஆறாவது அறிவில் விஷத்தைக் கலக்காது அதைத்  தடுக்கும் ஞானம் தான்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நம் உடலுக்குள் உள்ள அணுக்களுக்குச்  சேர்ப்பிக்கும் நிலை.
 
அதைப் பெறும் நிலையாகத் தான் இப்பொழுது உபதேசித்துக் கொண்டுள்ளோம். 
 
ஆகையால் நீங்கள் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து ஆறாவது அறிவை அதனுடன் இணைக்கும் பருவம் பெற வேண்டும். ஆறாவது அறிவின் துணை கொண்டு தான் இன்று துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக இருக்கின்றது.
 
1.நாம் இந்த உடலை விட்டு எந்த நிலையில் சென்றாலும்
2.ஒரு கூட்டமைப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும்
3.உயிருடன் ஒன்றி உணர்வினை ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பில் (சப்தரிஷி மண்டலம்) நாம் இணைந்திடல் வேண்டும். 
 
அங்கே இணைந்து விட்டால் நமக்கு அழிவே இல்லை.
 
அகண்ட அண்டமே இருண்ட சூழ்நிலைகள் கொண்டு பல பிரபஞ்சங்கள் அழிவைத் தேடிச் சென்றாலும் அந்தந்தப்  பிரபஞ்சங்களில் தோன்றிய  உயிரணுக்கள் அது ஒளியின் சுடராகத்தான் வாழும்.
 
எத்தனையோ கோடி ஆண்டுகள் என்றும் ஏகாந்த நிலை என்ற அந்த நிலை பெறுவது இந்த மனித உடலில் தான்.  ஆனால்
1.நம்முடைய இந்தச் சந்தர்ப்பம் மிகப் பெரிய சக்தி வாய்ந்த குருவின் அருளைப் பெற்றதினால்
2.நம் அனைவருக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்துள்ளது.
 
நமது குருவின் மூலம் எத்தகைய கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றிடும்  சக்தியைப்  பெற முடிந்தது.
1.நமது குரு விஷத்தையும் தாங்கி அதை ஏற்றுக் கொள்ளும் பருவத்தினை ஏற்படுத்தினார்.
2.ஆகவே தான் உங்களுக்கும் அந்த ஆற்றல் மிக்க சக்தியாக விஷத்தை ஒளியாக மாற்றும் திறனைப் பெறச் செய்வது.
 
நாம் ஒவ்வொரு நாளும் உயிரின் முகப்பில் ஈர்க்கப்படும் பொழுது ந்தத்  துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடல் முழுவதும் பரவுகின்றது.
 
இதைப் போன்று
1.உடல் உறுப்புகளை உருவாக்கிய  அணுக்களின் முகப்பின் இயக்கத்தில்
2.உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வினை குரு எமக்கு எப்படி ஈர்க்கச் செய்தாரோ
3.அதைப் போன்று உங்களில் ஈர்க்கச் செய்யும் பொழுது நாம் அனைவரும் ஒளியின் சரீரம் பெறும் தகுதி பெறுகின்றோம்.
 
நாம் அனைவரும் அவர் காட்டும்  வழியில்  செல்வோம். குருவின் துணையால் அஞ்ஞானத்தை அகற்றி மெய் ஞானத் தொடரில் இந்த வாழ்க்கையைத் தொடர்வோம். எமது அருளாசிகள்.

வெறும் சொல்லாக யாம் சொல்லவில்லை… அது மிக உயர்ந்த சக்தி

வெறும் சொல்லாக யாம் சொல்லவில்லை… அது மிக உயர்ந்த சக்தி


யாம் உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்து வந்து சாமி…! என் உடம்புக்குச் சரியில்லை என்று ஒருவர் கேட்டால் எப்படி இருக்கும்...? வெளியில் வேலைகள் எப்படி நடக்கிறது…? என்று பார்த்து வரலாம் என்று யாம் சுற்றிப் பார்க்கும் பொழுது அங்கே வந்து என்னிடம் இடைமறித்து என் கஷ்டம் போக வேண்டும் என்று நீங்கள் கேட்டால் எப்படி இருக்கும்…?”
 
சாதாரணமாக… ஒருவர் தன் கஷ்டத்தை உங்களிடம் சொல்கிறார் என்றாலே அதைக் கேட்கும் பொழுது உங்களால் சமாளிக்க முடியவில்லை… அந்தக் கஷ்டம் உங்களுக்கு வந்து விடுகின்றது.
 
1.ஆனால் எத்தனையோ பேர் எம்மைச் சந்தித்து கஷ்டம் கஷ்டம் என்று சொல்லி
2.அதையெல்லாம் நான் காதில் கேட்டால் எப்படி இருக்கும்…?
3.நான் உங்களைக் கவனிக்க வேண்டும் நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்.
 
அதற்கப்புறம் அதை நான் உணர வேண்டும். பின் உங்கள் தீமை நீங்க வேண்டும் உங்கள் கஷ்டம் நீங்க வேண்டும் என்று நான் சொல்ல வேண்டும்.
 
நீங்கள் சொல்லும் கஷ்டமான உணர்வையெல்லாம் எனக்குள் இயக்காமல் அதை நீக்கித் தூய்மைப்படுத்தி விட்டு உங்களுக்கு நல்ல வாக்காகக் கொடுக்க வேண்டும் என்றால் நான் எத்தனையோ சிரமப்பட வேண்டி வரும்…?
 
1.நீங்கள் சொல்லும் கஷ்டத்தை எல்லாம் எனக்குள் வராது
2.அதைச் சமாளிக்கக் கூடிய அந்தச் சக்தி இருந்தால்தான் உங்களுக்கு நல்ல வாக்கையே நான் கொடுக்க முடியும்.
 
அந்த உயர்ந்த சக்தி வாய்ந்த வித்தை யாம் உங்களுக்குக் கொடுக்கும் பொழுது நீங்கள் அதை விளைய வைத்தால் உங்களுக்கு அந்தப் பலன் கிடைக்கும்.
 
இல்லாமல் போனால் என்னுடைய சொல் வெறும் சொல்லாகத்தான் இருக்கும்.
 
ஞானிகளும் மகரிஷிகளும் நம்மைப் போன்று மனிதர்களாக வாழ்ந்தவர்கள் தான். வாழ்க்கையில் வந்த துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உயர்ந்த எண்ணங்களை எடுத்து அந்தக் கெட்டதை எல்லாம் பஸ்பம் ஆக்கியவர்கள்.
 
1.தன் உடலுக்குள் வந்த நோய்களை மாற்றி மெய் ஞானத்தின் தன்மை வளர்த்து
2.தன் உடலில் இருக்கும் உணர்வுகளை ஒளியாக மாற்றி
3.தன் உடலில் இந்த வாழ்க்கையில் வந்த அனைத்தையுமே புடம் போட்டு அதை மாற்றி உயிரணுவோடு சேர்த்து உயிருடன் சேர்த்து
4.உயிராத்மாவை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
 
அதற்குப் பின்னாடி வந்தவர்கள் அவர் உடலில் விளைய வைத்த அந்த உணர்வின் சக்தியை எடுத்து அதைச் சுவாசித்து தன் உடலில் வந்த கஷ்டங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலந்து அதைப் புடம் போட்டு சங்கடத்தையும் சலிப்பையும் மாற்றிவிட்டு தன் உணர்வுகளை ளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாகச் சென்றிருக்கின்றார்கள்.
 
தனக்குள் வந்த துன்பத்தையெல்லாம் மாற்றி விண் செல்ல வேண்டும் என்ற நிலைகள் கொண்டு அங்கே சென்றார்கள். அவர்கள் மனிதனாக இருக்கும் பொழுது வெளிப்பட்ட அந்த உயர்ந்த சக்திகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நம் பூமியிலும் பரவச் செய்துள்ளது.
 
விண்ணிலே அவர்கள் இன்று சப்தரிஷி மண்டலங்களாக இருந்தாலும் அதிலிருந்து வெளிப்படும் ளி உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.
 
துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்றவர்கள் னின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக இருக்கின்றார்கள்.
1.பூமி சுற்றுகிறது என்றால் வட துருவத்தில் இருக்கும் பொழுது
2.சப்தரிஷி மண்டலம் வானிலே தெரியும் போது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இடத்திற்கும் வித்தியாசமாகத் தெரியும்.
 
இரவில் இன்று ஏழு மணிக்கு நாம் இருக்கும் இடத்தில் சப்தரிஷி மண்டலத்தைப் பார்க்க முடிகிறது என்றால் அதே ஏழு மணி அளவில் ஒரு வாரம் கழித்து மற்ற இடங்களில் மாறி வரும் பொழுது அங்கே தெரியும். அந்த ஒரு வார வித்தியாசத்தில் அங்கே அதே நேரத்தில் பார்க்க முடியும்.
 
துருவ நட்சத்திரம் இருந்த இடத்திலேயே இருக்கும். அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்தின் ஒளியான உணர்வுகள் அனைத்தும் இப்படி பூமியைச் சுழன்று கொண்டு வருகின்றது.
 
ஆனால் சூரியனுடைய வெப்ப காந்தம் அதிலிருந்து வரும் சக்திகளைக் கவர்ந்து நம் பூமிக்குள் இங்கே நமக்கு முன் கொண்டு வருகின்றது பூமிக்குள் படர்ந்து கொண்டிருக்கின்றது.
 
1.அந்தச் சக்தியைத் தான் குருநாதர் எம்மை எடுக்கும்படி செய்தார்.
2.அதை எடுத்துத் தான் தீமைகளை மாற்றி உணர்வுகளை ளியாக மாற்றுகின்றேன்.
3.திலே விளைந்த அதே வித்தைத் தான் உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாக வாக்காக ஊன்றுகின்றேன்.
4.அதை வளர்த்துக் கொண்டால் வர்கள் சென்றடைந்த எல்லையை நீங்களும் அடைய முடியும்.

எனது சுயநலம்

எனது சுயநலம்


தங்கத்திலே செம்பும் பித்தளையும் வைத்து பற்ற வைத்துத் தான் நகையாகச் செய்கின்றோம். அதற்குப்பின் அடுத்த நகை செய்யும் பொழுது திரவகத்தை ஊற்றி அதைப் புடம் போட்டு நீக்கி விட்டு அதைச் சுத்தத் தங்கமாக்கி மீண்டும் நகை செய்கின்றோம்.
 
இதைப் போன்று
1.இந்த வாழ்க்கையில் கெட்டது எதைப் பார்த்தாலும் அந்த அழுக்குகளை நீக்கிவிட்டு அதைப் புடம் போட்டு
2.ஞானிகள் சக்தியை நமக்குள் போட்டு தீய விளைவுகளைப் புடம் போட்டு
3.மனிதனாகப் பிறந்த நாம் அந்த மகரிஷிகளின் வாழும் எல்லைக்குச் செல்ல வேண்டும்.
 
பௌர்ணமி முதலில் பிரகாசிக்கின்றது. அது போல் மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது. அடுத்து உடலை விட்டுச் சென்றபின் ஜீவன் போகின்றது எல்லாம் மறைந்து விடுகின்றது.
 
அதற்கு பின் அந்த நிலவிலே சிறிதளவு வெளிச்சம் தெரியும். இந்த உயிரின் தன்மை வரும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் கூடிப் பௌர்ணமியாக வரும். இப்படித்தான் நாம் தேய்ந்து தேய்ந்து வளர்ச்சிக்கு வருகின்றோம்.
 
அது பௌர்ணமி ஆகி உயிர் ஒளியாக முழுமை பெறக்கூடிய நிலை எப்படி ஆனமோ எல்லாவற்றையும் தெரிந்து கொண்டோமோ அதை நிலையாக்கு.
1.நிலையான அவனின் உணர்வை எடு என்பதற்காக வேண்டித்தான் எனது குருநாதர் இதை எல்லாம் ஞாபகப்படுத்தி
2.எல்லோரும் அதைப் பெற வேண்டுமென்று எண்ணு… நீ அதுவாகு என்று சொன்னார்.
 
இது என் சுயநலம்.
 
நீங்கள் எல்லோரும் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது நான் அதுவாகின்றேன் என்னுடைய சுயநலமாகின்றது…! என் குருநாதர் அப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்.
 
மக்கள் அவர்களை அறியாது வந்த இருள்கள் மாய வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணினால் நீ அதுவாகின்றாய்.
 
ஆகையினால்
1.இந்தச் சக்தியை உனக்கு நான் கொடுக்கிறேன் என்றால் அவர்களுக்கு இது கிடைக்க வேண்டும் என்று நீ எண்ணு.
2.அவர்கள் மகிழ்வதைப் பார்த்து நீயும் மகிழ்ச்சியாக இரு.
3.அவர்கள் சந்தோஷப்படுவதைப் பார்த்து நீயும் சந்தோஷமாக இரு என்ற நிலையைத் தான் சொன்னார்.
 
இருந்தாலும்… சிலர் திடீரென்று என்னிடம் கேள்வியும் கேட்பார்கள். சாமி என்னைக் கோவிக்கின்றாரே… ஏன் என்று…?
 
காரணம் உங்கள் கஷ்டம் எனக்குள் வராதபடி நரசிம்ம அவதாரமாக வந்து விடுகின்றது.
1.மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று வானை நோக்கி எண்ணும் பொழுது
2.என் உடலுக்குள் அந்தச் சக்தி வாய்ந்த நிலைகள் வந்து பாய்கின்றது.
3.அப்பொழுது அந்தச் சக்திகளை நீங்கள் வீரியமாகப் பார்த்தீர்கள் என்றால் அந்த நல்ல வாசனை வரும்.
4.நீங்கள் துன்பப்பட்டுச் சொல்லும் வார்த்தை இங்கே வராது.
5.டபார்…! என்று அதைப் பிளந்து விட்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி ஊடுருவும்.
 
ஆகவே திடீரென்று யாம் உங்களைக் கோபித்தாலும் இந்த வார்த்தை உங்களுக்குள் போய் உங்கள் துன்ப அலைகளைப் போக்கிவிடும். இந்த உணர்வுகள் ஊடுருவிய பின் கவலையாகச் சொல்லக் கூடாது என்ற நினைப்பு வரும்.
 
அதற்காக வேண்டித் தான் இந்த உணர்ச்சியைத் தூண்டும் நிலைகளாக வெளிப்படுத்துவது…”