ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 3, 2026

குரு மீது உண்மையான பற்று இருந்தால் தான் குரு உபதேசிப்பது ஆழமாகப் பதிவாகும்

குரு மீது உண்மையான பற்று இருந்தால் தான் குரு உபதேசிப்பது ஆழமாகப் பதிவாகும்


1.ஆசிரியர் கற்றுத் தரும் பாடங்களை மாணவன் கூர்மையாக உற்றுப் பார்த்து அதைத் தனக்குள் பதிவாக்கி
2.ஆசிரியர் மேல் பற்று கொண்ட உணர்வின் தன்மையையும் மாணவன் தனக்குள் திவாக்கினால்
3.ஆசிரியர் தமக்குள் கற்றுணர்ந்த உணர்வின் தன்மைகள் மாணவனிடத்தில் பரவி அந்த உணர்வே ஆசிரியராக இருந்து
4.”இது - இவ்வாறு,  இது - இந்த நிலைஎன்பது போன்ற சிந்திக்கும் திறனும் செயலும் அதற்குண்டான உணர்வும் வரும்.
 
இப்படி ஒருவர் கற்றுத் தரும் போதனையைக் கூர்மையாகக் கவனித்து  அதன் உணர்வின் தன்மையை எவர் தமக்குள் பதிவு செய்கின்றனரோ அதன் வழி அவருக்குள் இயக்கமாகின்றது.
 
இதைத் தான் குரு எமக்குக்  காண்பித்து எம்முள் அதைப் பதிவாக்கினார்.
 
உலக நிலையை அறியச் செய்திடும் ஆசிரியர் என்ற நிலையில் எமது குருவின் உணர்வின் தன்மையை எமக்குள் பதிவு செய்து கொண்டபின் உலகின் தன்மையையும் கடந்த காலத்தில் மனிதர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்…? என்றும்  குரு எமக்கு உணர்த்தினார்.
 
1.இப்படி இதன் வழியில் நான் எண்ணும் பொழுது
2.அவர் கற்றுணர்ந்த உணர்வின் இயக்கங்கள் எம்மைச் சிந்திக்கச் செய்யும் நிலையாகவும்
3.அதன் வழி கொண்டு வாழ்க்கை அமைத்திடும் நிலையும் வருகின்றது.
 
ஆதே போல்
1.இப்பொழுது யாம் உபதேசிக்கும் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் பதிவாக்கி… “பதிவாக்கியதை மீண்டும் நினைவு கொண்டால்…”
2.தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் அணுக்கள் உங்களுள் உருவாகி
3.நீங்களும் இதை நுகர்ந்தறிந்து தீமையிலிருந்து விடுபடும் மனிதனாகின்றீர்கள்.
 
ஒருவன் என்னை ஏசுகின்றான்எனக்குத்  தொல்லை கொடுக்கின்றான்என்ற உணர்வின் தன்மையைப் பதிவாக்கிக் கொண்டு தீமை செய்தவனை எண்ணும் பொழுது மீண்டும் நமக்குள் தீமையின் உணர்வுகள் வளர்ந்து  நம்மிடத்தில் கை கால் குடைச்சலாகிச் சிந்திக்கும் தன்மை இழந்து கோப உணர்வுகள் வருகின்றது.
 
சிந்திக்கும் தன்மையை இழக்கப்படும் பொழுது செயலின் தன்மை குறைகின்றது. நமது செயல் நற்பலன் தரவில்லையென்றால் உணர்ச்சியின் தன்மை கூடுகின்றதுகொதிப்பின் தன்மை ஏற்படுகின்றது.
 
கொதிப்பின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து நமது நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது. இதுவே நமக்குள் வளர்ந்து கடும் நோயாகவும் மாறுகின்றது. ஆக இதுவும் ஆசிரியராக வருகின்றதுகுருவாக வருகின்றது.
 
ஆகவே எதனின் தன்மையை நம்முள் பதிவாக்குகின்றோமோ அதன் வலிமை கொண்டு நம்மை இயக்கிவிடும்.
1.இதை வென்றவர் துருவ மகரிஷி.
2.அவர் கண்டுணர்ந்த உணர்வை நமது குரு கற்றுணர்ந்தார்.
3.குரு ஊட்டிய உணர்வினை யாமும் நுகர்ந்தோம்கண்டறிந்தோம்.
 
குருநாதர் உபதேசித்த அந்தப் பேருண்மைகளை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றோம்.

தீமையை நீக்கும் அரும் பெரும் சக்திகளை நமக்குள் உருவாக்கும் நேரமே பிரம்ம முகூர்த்தம்

தீமையை நீக்கும் அரும் பெரும் சக்திகளை நமக்குள் உருவாக்கும் நேரமே பிரம்ம முகூர்த்தம்


ரத்தத்தை உறிஞ்சும் சில கொடிகள் காட்டுக்குள் இருக்கின்றது. அந்தக் கொடியின் அருகில் ரத்தம் உள்ள உயிரினங்கள் வந்தால் அழுங்காமல் அதை எடுத்துக் கொள்ளும். ரத்தத்தை உறிஞ்சிய பின் “சொத்…” என்று கீழே விழுந்து இறந்து விடும்.
 
அந்த மாதிரிக் கொடிகள் வளர்ந்திருக்கும் இடத்திற்குக் குருநாதர் எம்மை அழைத்துச் சென்றார். அந்தக் கொடி நம் மீது பட்டால் சுரீர் என்று மின்சாரம் தாக்கியது போல் இருக்கும். உடலிலிருக்கும் ரத்தத்தை உறியும். மயக்கம் வந்துவிடும்.
1.ஆனால் குருநாதர் எம்மிடம் ஒரு கத்தியைக் கொடுத்திருந்தார்.
2.முதலில் எனக்கு அந்தக் கொடியே தெரியவில்லை.
3.என்னைத் தொட்டவுடன் தான் தெரிந்தது… உடனே அதை வெட்டினேன்.
 
இப்படி எல்லாம் காட்டிற்குள் பல நிலைகளைத் தெரிந்து கொண்ட பின்பு தான் உங்களிடம் ல்லாவற்றையும் சொல்லி வருகின்றேன். என்னை இப்படித்தான் பல வகைகளிலும் பழக்கினார்.
 
எம்மிடம் வருபவர்கள்… எம்மைச் சந்தித்த உடனே தலைவலி போக வேண்டும் என்ற எண்ணத்தில் வருகிறார்கள். தலைவலி போய் விடுகின்றது.
 
தலை வலி போனாலும் எதனால் வந்தது…? என்று அறிந்து அந்தத் தப்பை மட்டும் திருத்த மாட்டார்கள்.
1.ஏனென்றால் அறியாமல் தவறு செய்யும் நிலைகளை நீக்குவதற்குத் தான் தியானம் செய்யுங்கள்
2.எது உங்களை இயக்குகிறது…? தவறு செய்ய வைக்கிறது என்பதைத் தெரியச் செய்கிறோம்.
3.தீமைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்டால் நீங்களே மாற்றி அமைக்க முடியும் என்றும் சொல்கிறோம்.
 
அதன்படி நன்றாகிறது…!
 
ஆனால் இதை வீட்டில் உள்ளவர்கள் கேட்க மாட்டேன் என்கிறார்கள் என்று என்னிடம் வந்து சொல்வார்கள்… திட்டுவார்கள்.
1.இது எல்லாம் எதைக் குறிக்கின்றது…?
2.நம்மை அறியாமல் நாம் எடுத்துக் கொண்ட அந்தக் குறை உணர்வுகள் தான் மீண்டும் இயக்குகின்றது.
 
அதனால் உருவாகும் நோயை நீக்க மருத்துவர்களிடம் சென்று மருந்தை உட்கொண்டாலும் அந்த மருந்தின் விஷத்தன்மைகள் ரத்தத்தில் கலந்து வீரியத் தன்மை காட்டப்படும் பொழுது இதைச் சுத்தப்படுத்தும் கிட்னி பெயிலியர் ஆகி விடுகிறது.
 
அடுத்து உப்புச் சத்து வந்து விட்டது சர்க்கரைச் சத்து வந்து விட்டது என்று சொல்வார்கள். சர்க்கரையைப் பிரிக்கும் நிலை இழந்து அந்த உணர்வின் இயக்கமாகி விட்டால் ரத்தத்தில் சர்க்கரை கலந்து விடுகின்றது நீரிலும் பிரிகின்றது.
 
அவர்கள் சிறுநீர் கழித்தால் யோ எறும்போ மொய்க்கத் தொடங்கும், தைச் சீர்படுத்தும் உறுப்புகள் பலவீனம் அடைகின்றது. வேதனை அதிகமாகி பித்த சுரப்பிகள் அதிகமாகி விட்டால் அந்த நஞ்சு அதிகமாக ரத்தத்தில் கலந்து விடுகிறது. அதனால் தலைசுற்றல் வரும்.
 
1.அந்தத் தலை சுற்றலுக்கு என்று மீண்டும் மருந்துகளை உட்கொள்ளும் பொழுது உடலில் விஷத்தன்மை தான் அதிகமாகின்றது.
2.தலை சுற்றல் குறையவில்லை என்பார்கள்.
3.ஏனென்றால் மீண்டும் விஷ அணுக்களாக உடலுக்குள் மாறும்.
4.அந்த நிலையில் அரிப்பு வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் அதிகமாகும். சிந்திக்கும் தன்மை இழக்கப்படும்.
 
காரணம்… இது எல்லாமே நாம் நுகரக்கூடிய உணர்வுகளினால் வரும் விளைவுகள் தான். இதை மாற்ற வேண்டும் அல்லவா.
 
இதைப் போன்ற உணர்வுகளை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம். அதிலிருந்து வெளிப்படும் அலைகள் மிகவும் சக்தி வாய்ந்தது.
 
1.துருவ நட்சத்திரம் பூமியின் அச்சுக்கு நேராக இருப்பதால்
2.மற்றது வருவதற்கு முன்பாக அதிகாலையில் நம் பூமி துருவத்தின் வழி அதைக் கவர்கின்றது நமக்கு முன் பரவச் செய்கின்றது.
3.அந்த நேரத்தில் அதைப் பெற வேண்டும் என்று எண்ணினால் பிரம்ம முகூர்த்தம்
4.அதாவது நமக்குள் புதிதாக அந்த உயர்ந்த சக்தியை உருவாக்க முடியும் என்று ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.
 
பிரம்மம் என்றால் மனிதனின் ஆறாவது அறிவு கொண்டு தீமையை நீக்கும் அரும்பெரும் சக்தியை நமக்குள் பிரம்மாக்குகிறோம் என்று இப்படி அதை மறைமுகமாகச் சொல்கிறார்கள்.
 
ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எடுத்து வாழ்க்கையில் வரும் தீமைகளை உங்களால் நீக்க முடியும். அதிகாலையில் ஒரு பத்து நிமிடமாவது அந்த உயர்ந்த சக்தியைடுத்து உடலுக்குள் சேர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
 
1.எல்லா ஆலயங்களிலும் அந்த அதிகாலையில்ணங்கும் முறைகளை ஞானிகள் கொடுத்தது இந்த அடிப்படையில் தான்.
2.நல்ல குணங்களை வளர்ப்பதற்கும் தெய்வீகப் பண்புகளை நாம் வளர்ப்பதற்கும் ஞானிகள் அன்றே காட்டியுள்ளார்கள்.

பச்சிலைகளின் மகிமை

பச்சிலைகளின் மகிமை


டேய் இந்தப் பச்சிலை பேசுமாடா…? என்றார் குருநாதர்.
 
என்ன சாமி…? பச்சிலைக்கு வாய் இல்லையே…! அது எப்படிப் பேசும்…? என்றேன். ஒன்றல்ல இரண்டல்ல எத்தனையோ பச்சிலைகளைக் காண்பித்துப் பேசுமாடா…? என்று அவர் கேட்பார். எப்படி சாமி பேசும்…? என்று நான் கேட்பேன்.
 
முதலில் ஒரு நல்ல பச்சிலையைக் கொடுத்து என்னை நுகரும்படி செய்தார். எப்படி இருக்கிறது…? என்றார்.
 
1.சாமி…! கமகம…” என்று இருக்கிறது. உடல் ஜம் என்று இருக்கின்றது என்று சொன்னேன்.
2.இப்போது யாருடா பேசியது…? என்கிறார்.
2.இந்த வாசனை உயிரிலே பட்டு அந்த உணர்வின் தன்மை உன்னைப் பேச வைக்கிறதா இல்லையா…? என்றார்.
 
இப்படியே சொல்லிக் காட்டுக்குள் கூட்டிக் கொண்டு செல்கிறார்.
 
அடுத்து வேறு ஒரு பச்சிலையை நுகரச் சொன்னார். நுகர்ந்தேன் தலை சுற்ற ஆரம்பித்தது. சாமி…! தலை சுற்றுகிறது எங்கேயோ என்னைக் கொண்டு செல்கின்றது என்றேன்.
 
1.இப்போது யாருடா அதைச் செய்வது…?
2.அந்தப் பச்சிலை தானே…! என்று கேட்டார்.
 
உயிரினங்களில் பச்சிலைகளைச் சாப்பிடுகின்ற வெள்ளாட்டைப் பாருங்கள். எருக்கலையைச் சாப்பிட்டால் வயிறு வெந்துவிடும். அதே சமயத்தில் விஷ முள் பச்சிலையை எடுத்து அரைத்து மேலே தேய்த்தால் கை கால் எல்லாம் சரியாக வராது செயலிழந்து விடும். தலையில் தேய்த்தால் பித்துப் பிடித்தது போல் ஆகிவிடும்.
 
என் தலையிலே அதைத் தேய்த்தார்…! பாருடா என்ன செய்கிறது…? என்றார். தலை சுற்றிக் கொண்டே இருக்கின்றது புத்தி பேதமாவாது போன்று ஆனது.
 
1.மீண்டும் உனக்கு நல்ல நினைவு வருவதற்கு நினைவூட்டச் செய்வது யார்…?
2.அந்தப் பச்சிலை தானே…! என்றார் குருநாதர்.
 
பரிணாம வளர்ச்சியில் புழுவில் இருந்து மனிதனாக வரும் நிலையில் ஒன்றை ஒன்று கொன்று தின்று கொன்று தின்று ஒன்றுக்கு இரையாகி  இப்படித் தான் இன்று மனிதனாக வந்துள்ளோம்.
 
உதாரணமாக பல்லியினுடைய மூத்திரம் நம் மீது பட்டால் மேலெல்லாம் பொறிகளாகிக் கொப்புளமாகிவிடும். உணவுப் பொருளில் பல்லி விழுந்து விட்டால் அதை நாம் சாப்பிட்டால் நம்மைக் கொன்று விடும்.
 
ஆனால் அந்த விஷத்தன்மை உருவாகி அந்தப் பல்லிக்கு அது பாதுகாப்பு ஆகிறது. இருந்தாலும் அந்தப் பல்லியைக் கோழி உட்கொள்கின்றது மற்ற சில பறவைகளும் சாப்பிடுகின்றது. அதனின் உறுப்புகள் இந்த விஷத்தை அடக்கக் கூடிய சக்தி இருப்பதால் அதை ஒன்றும் செய்வதில்லை.
 
நீ சாப்பிடுடா பார்க்கலாம்…! என்று என்னைச் சாப்பிடச் சொல்கின்றார்.
 
சாமி…… என்றேன்.
 
நான் சொல்வதை எல்லாம் கேட்கிறேன் என்று சொன்னாய் அல்லவா கேளு…! என்கிறார்.
 
நான் பிள்ளை குட்டிக்காரன்… என் உயிர் போய்விடும். என்று சொன்னேன். ஆனால் அவர் விடவில்லை. அதைச் சாப்பிடும் படிச் செய்து அந்த உணர்வு என்ன செய்கிறது…? என்று காட்டுகின்றார்.
 
1.அதற்குப் பாதுகாப்புக்காகப் பச்சிலை ஒன்றை உனக்குக் கொடுக்கிறேன்
2.கையில் கொடுத்துஇந்த பச்சிலையைச் சாப்பிட்டால் உன்னை அந்த விஷம் எதுவும் செய்யாது என்றார்.
 
இப்படி அந்தப் பச்சிலைகளுக்கு உண்டான மகிமையைக் காட்டுகிறார். அந்தப் பச்சிலையை நுகர்ந்து பார்த்த பின் விஷங்களை அது முறிக்கின்றது.
 
ஆகஅந்தப் பச்சிலைகளின் சக்திகளை எல்லாம் நான் சுவாசிப்பதற்காக வேண்டி
1.ஒரு கட்டுக் கணேஷ் பீடியை வாங்கிக் கொடுத்துப் பற்ற வைத்து ஊதுடா…! என்கிறார்.
2.கணேஷ் பீடி என்றால் கணேசன்…! கணங்களுக்கு எல்லாம் ஈசன் என்று அவன் உணர்வுகளை நீ நுகர்ந்தால்
3.கணங்களுக்கு ஈசனாக உற்பத்தி செய்வான்டா…! என்று சொல்லி ஒரு கட்டுப் பீடியைக் குடிடா என்று சொல்கின்றார்.
 
நீ அப்படிச் செய்தால் கணங்களுக்கு ஈசனாக மாறும் என்கிறார். ஏனென்றால் பைத்தியக்காரத்தனமாகத் தான் சொல்வார்.
 
அந்த உணர்வுகளை எடுத்து நுகர்ந்தவுடன்
1.யாரெல்லாம் உடல் நலமில்லாதபடி நோய்வாய்ப்பட்டுள்ளார்களோ
2.அவர்களுடைய நோயெல்லாம் போக வேண்டும்…! ஊதுடா…” என்று சொல்கின்றார்.
 
அவர்களை நினைத்து இதைச் செய்த பின் அவர்கள் வீட்டிலே இந்த பீடி வாசனை வருகிறது. அந்தச் சமயத்தில் நான் சுற்றுப்பயணம் செல்லும் பொழுது சாமி வந்து விட்டார் என்று சிறிய குழந்தைகள் எல்லாம் சொல்வார்கள்.
 
1.அங்குள்ளவர்களுக்கு நோய் இருந்தால் அது உடனே நீங்குகிறது.
2.இப்படித் தான் பச்சிலைகளின் ஆற்றலை எமக்கு அனுபவபூர்வமாகக் கொடுக்கின்றார் குருநாதர்.