ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 19, 2026

காட்டுவாசிகளுக்கு மத்தியில் எமக்கு ஏற்பட்ட அனுபவம்

காட்டுவாசிகளுக்கு மத்தியில் எமக்கு ஏற்பட்ட அனுபவம்


ஒரு சமயம் யாம் அஸ்ஸாம் பகுதிக்குச் சென்றிருந்தோம். அப்பொழுது அங்கே வசிக்கக்கூடிய மலை வாழ் மக்கள் எம்மைப் பிடித்துக் கொண்டார்கள்.
 
1.மலைப் பகுதியில் வாழும் மக்களின் மத்தியில் என்ன நடைபெறுகிறது…? என்பதை
2.யாம் தெரிந்து கொள்ளும் பொருட்டு அவசியம் நீ அங்கு செல்லத்தான் வேண்டும் என்று குருநாதர் கூறிவிட்டார்.
 
அந்தக் காடோ யானைகளும் காண்டா மிருகங்களும் மற்றும் பல்வேறு விலங்குகளும் வாழும் அடர்ந்த பகுதி. குருநாதர் கொடுத்த உபாயத்தின் பேரில் யாம் அங்கே சென்று மலைவாழ் மக்களிடம் பிடிபட்டு அவர்கள் இழுத்துச் சென்ற பகுதிக்குச் சென்றோம்.
 
அங்கே அவர்கள் எம்மை ஒரு மரத்தோடு கட்டிப் போட்டார்கள். உண்பதற்கு ஆகாரம் கொடுத்தார்கள். அங்கே காளி கோவில் மாதிரி ஒரு கோவிலை வைத்திருக்கிறார்கள். அதற்கு முன்னால் அந்த மலைவாழ் மக்கள் ஆட்டமும் பாட்டமுமாக இருந்து கொண்டிருந்தார்கள்.
 
இதையெல்லாம் கவனிக்கும்படி குருநாதர் கூறினார். ஆட்டமும் பாட்டமுமாக இருந்த அந்தக் கூட்டத்தில் தலைவனாக இருந்த பூசாரி பாடிக் கொண்டே வந்து எம் மீது பல இடங்களில் ஊசியால் குத்தினார்.
 
…! என்று அலறினோம். அந்த சமயம் சில மந்திரங்களைச் சொல்கிறார்கள். அவைகளை எமக்குள் பதியும்படிச் செய்தனர். இவ்வாறு சில நாட்கள் அதே இடத்தில் கட்டி வைத்திருந்து மந்திர ஒலிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக எம்முள் பதியச் செய்து குறிப்பிட்ட காலம் வந்ததும் எம்மைப் பலியிடக் காத்திருந்தனர்.
 
இதனின் நிலைகளை எல்லாம் குருநாதர் காண்பித்து குறிப்பிட்ட நாள் வந்ததும் உன்னைப் பலியிடுவார்கள். உன் ஆத்மாவைப் பிரித்தெடுத்துக் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.
 
பின் உனது உடலைத் துண்டு துண்டாக வெட்டித் தசைகளைத் தாங்கள் வெள்ளாமை செய்யும் பகுதிகளில் வீசிவிடுவார்கள். மேலும் உனது தசைகளைக் கோவிலில் பொங்கலிடுவார்கள் என்று குருநாதர் எமக்கு உணர்த்தினார்.
 
இவைகளெல்லாம் யாம் குருநாதர் அருள் துணை கொண்டு அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்ட உண்மைகள்.
 
மனிதரைப் பலியிட்டு அவர்களது ஆன்மாவைக் கைவல்யப்படுத்தி மந்திர ஒலிகளின் துணை கொண்டு தங்களைத் தற்காத்துக் கொள்ளும் விதமாக அந்த ஆன்மாவை எப்படிப் பயன்படுத்துவர்…? என்பதை அந்த இரவில் யாம் மரத்தில் கட்டப்பட்டிருக்கும் நிலையில் எமக்குக் குருநாதர் உணர்த்திக் கொண்டிருந்தார்.
 
1.இன்று பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். மலைப் பகுதிக்குச் சென்றால் அமைதியாகத் தனித்து வாழலாம் என்று.
2.ஆனால் சில மலைப் பகுதிகளுக்குச் சென்றால் எவ்வளவு பெரிய ஆபத்து இருகிறது…? என்பதையும் உணர்த்துகிறார்.
3.இறுதியில் யாம் குருநாதர் எமக்குக் கொடுத்த சக்தியின் துணை கொண்டு வெளியே வந்தோம்.
 
பின் இதே மந்திரத்தின் நிலைகளை நகரப் பகுதியில் எப்படி உருவாக்குகின்றார்கள்? என்ற நிலையைத் தெளிவாக உபதேசித்தார்.
 
இதைப் போன்ற நிலைகள் நமது நாட்டில் மட்டும்தான் என்றில்லாமல் உலக நாடுகள் அனைத்திலுமே இதன் நிலைகள்தான் இருந்தன. எகிப்து ஈரான் ஈராக் மற்றும் ரோமன் நாடுகள் பற்றியும் அங்கு நடைபெறும் நிலைகளையும் நமது குருநாதர் எமக்குக் கூறினார்.

நம் வாழ்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நல்லதாக்கித் தருவதே… குருநாதர் காட்டிய அருள் வழி

நம் வாழ்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நல்லதாக்கித் தருவதே… குருநாதர் காட்டிய அருள் வழி


நம்முடைய குழந்தையை வளர்க்கின்றோம். செல்லமாக வளர்த்துக் கொண்டும் நேரத்தில் “அவன் குறும்புத்தனம் செய்கின்றான் பார்…” என்று சொல்வோம்.
 
 அவனை நல்லவனாக்குகின்றோம்.
1.ஆனால் அவனுடைய குறைகளை நாம் சொல்லிக் கொண்டே வருகின்றோம்.
2.அதைப்ரிபக்குவமாக எடுத்துச் சொல்லும் நிலை வர வேண்டும்.
 
குடும்பம் வீடு என்று இருக்கும் பொழுது சில நேரங்களில் குறைகள் வருகின்றது. அதைப்ரிபக்குவமான நிலைகளில் நிவர்த்தி செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.
 
பக்குவம் தவறி விட்டால் சொல்கள் மாறிவிடும். வாருங்கள் என்று கனிவுடன் வரவேற்பதற்குப் பதில் “வாங்கள்…..” என்ற சொல் அழுத்தமாக வரும். அது குற்றமாகிவிடும்.
 
ஆகவே பக்குவத்தின் நிலைகள் என்பது
1.ஒன்றை நல்லதாக்குவதும் கெட்டதாக்குவதும்
2.உணர்வுகளை மாற்றுவதும் குணங்களை மாற்றுவதும்
3.எதிரிகளாக்குவதும் நண்பனாக்குவதும்
4.இது எல்லாம் நம்முடைய உணர்வுகள் வெளி வரும் அதனின் பக்குவத்தைப் பொறுத்துதான் இருக்கின்றது.
 
ஆக நாம் தொழில் செய்தாலும் சரி மற்ற எதிலும் சரி பக்குவ நிலை அவசியம் தேவை. சில கஷ்டங்கள் வந்து விட்டாலும் ஓரளவுக்கு நாம் பக்குவமான நிலைகள் கொண்டு சிந்தித்தோம் என்றால் அதிலிருந்து விடுபட்டு அதை நிவர்த்திக்கும் தன்மை வருகிறது… பகைமைகளைக் குறைக்கலாம்.
 
இதைப் போல வாழ்க்கையில் பரிபக்குவ நிலைகளை நாம் கொண்டு வருதல் வேண்டும். மற்றவருடைய குறையான உணர்வுகள் நமக்குள் வராதபடி தடுக்கத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து அதை வைத்துத் தடுத்து நிறுத்தினால் அதன் வேகத்தையும் துடிப்பையும் நிறுத்தி உணர்வின் அறிவாக நமக்குள் சிந்தித்துச் செயல்படும் சக்தி வரும்.
 
1.யாரும் கெட்டவர்கள் அல்ல
2.சந்தர்ப்பத்தில் தான் இத்தனை நிலைகளும் வருகின்றது. அந்தச் சந்தர்ப்பம் கெட்டவராக மாற்றுகின்றது.
3.அதிலிருந்து மீட்டிடும் வழியே நமது குருநாதர் காட்டிய அருள் வழி.
 
ஆனால் அதே சமயத்தில் அதற்காக வேண்டி ஒரு முரடனிடமோ குடிகாரனிடமோ பக்குவமாகப் பேசினால் அவன் கேட்பானா…? நாம் அந்த இடத்தில் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்… அது தான் முக்கியம்.
 
நம்முடைய பக்குவத்தை அங்கே அவனிடம் எடுத்துச் சொன்னால் அவன் கேட்க மாட்டான். அவன் தவறு செய்ய விரும்புகின்றான் நாம் அதற்குப் பக்குவம் சொன்னால் அவன் கேட்க மாட்டான்.
 
1.திருடனிடம் சென்று “ஏண்டா இந்த மாதிரிச் செய்கிறாய்…?” என்று பக்குவம் சொன்னால் கேட்பானா…? கேட்க மாட்டான்.
2.அந்த இடத்தில் அவனுடைய உணர்வுகள் நமக்குள் வராதபடி நம்மை நாம் பக்குவப்படுத்த வேண்டும்.
 
நல்ல பொருள்களை வைத்திருக்கிறோம் என்றால் அதிலே தூசி அதிலே படாதவாறு நாம் பாதுகாக்க வேண்டும். அதைப் பத்திரமாக மூடி வைக்க வேண்டும்.
 
தீமை நமக்குள் புகாதபடி தடுக்க வேண்டும். ஆனால் அதற்காக வேண்டிப்
1.போக்கிரியையும் திருடனையும் பார்த்த பின் நாம் பக்குவமாக நடந்து கொண்டிருந்தால் எல்லாம் தலைக்கு மேல் சென்று விடும்.
2.நம்முடைய பக்குவமெல்லாம் தலைகீழாகக் கவிழ்ந்து விடும்.
 
அவன் செய்யும் தவறு நமக்குள் வந்து விடாது… அதனால் நாம் தவறு செய்யாது பக்குவமாக அதைத் தடுத்துக் கொள்ள வேண்டும்.
 
ஒருவன் தவறு செய்கிறான் என்றால் “இவன் இப்படித் தவறு செய்கின்றானே…” என்று அந்தத் தவறான உணர்வு நமக்குள் வந்தால் அதைத் தான் நம்மையும் செய்யும்படி வைத்துவிடும்.
 
இதைப் போல
1.நமது வாழ்க்கையில் நடந்து கொள்ள பரிபக்குவ நிலைகள் தேவை.
2.எந்தெந்த இடத்திற்கு எவ்வாறு தேவையோ… அப்போதெல்லாம் நம்மை நாம் பக்குவப்படுத்திப் பழக வேண்டும்.