
அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் நின்று ஒவ்வொருவரும் சொல்ல வேண்டியது
யாம்
கொடுத்த அருள் ஞானச் சக்கரத்திற்கு முன்பு நின்று அதை
உற்றுப் பார்த்து…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற
வேண்டும்…
2.எல்லோருக்கும் அது கிடைக்க
வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
3.பகைமைகள்
வராது… இந்த உணர்வு அனைவரையும் அருள் வழியில் இயக்கும்
4.உயர்ந்த
பண்புகள் வளரும்… அருள் உணர்வுகள்
பெருகும்… இருள் புகாது தடைப்படுத்தும்
அந்தச்
சக்திகள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.
ஆகவே அந்த அருள் வழி நாம் செயல்படுவோம்.
சக்கரத்திற்கு
முன் அமர்ந்து தியானித்தால்
1.அபூர்வமான நிலைகளில் உங்களை அகண்ட அண்டத்திற்கே
அழைத்துச் செல்லும்.
2.நம்
பிரபஞ்சம் மட்டுமல்ல… 2000 சூரியக் குடும்பத்தையும் வட்டமிடும்.
3.2000 சூரிய
குடும்பம் எடுத்த உணர்வுடன் அங்கேயே உங்களை அழைத்துச் செல்கின்றேன்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி அது…!
ஏனென்றால் அவர் எனக்கு எப்படி இதையெல்லாம் காட்டினாரோ அதே
வழிப்படித் தான் உங்கள் உயிரிலே சேர்க்கப்பட்டது. அந்த உயர்ந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று
தான் இதை உபதேசிக்கின்றேன்.
ஒவ்வொருவரும்
இதைக் கடைப்பிடியுங்கள்.
குடும்பத்தில்
நண்பர்களோ அல்லது யாராக இருந்தாலும் சரி “ஈஸ்வரா” என்று
உயிரை எண்ணிவிட்டு… அவர்கள் நலம் பெற வேண்டும் என்று சக்கரத்திற்கு
முன் சொல்லுங்கள்.
அதிலிருந்து ஒளிகள்
வரும்… இந்த உணர்வுகள் அவர்களுக்குள் படரும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று சொல்லுங்கள்.
1.இத்தகைய
நல் உணர்வுகளாக மாற்றி அமைக்கப்படும் போது
2.நல்
சக்திகளாக அவர்களுக்கும் கிடைக்கும்… உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
ஆனால்
எப்படித்தான் இருந்தாலும் உடலை விட்டு நாம் செல்லத்தான்
வேண்டும். அதற்குள் அருள் ஒளியை அனைவருக்கும் கிடைக்கச்
செய்யும் நிலையாக அவருடைய இருளைப்
போக்க வேண்டும் என்று எண்ணினால்… நமக்குள் வரும் இருளைப் போக்கிடும் அந்த வலுவை நாம் பெறுகின்றோம்.
ஆகவே
யார் உடல் நலக் குறைவானாலும் சக்கரத்திற்கு முன் நின்று
ஈஸ்வரா என்று உயிரை வேண்டித் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று சொல்லிப் பழகுங்கள்.
இது போன்று
தியானித்து விட்டு அவர்களுக்கு ஏதாவது ஒரு பொருளைத் தொட்டுக்
கொடுங்கள்… நன்றாகிவிடும் என்று
சொல்லுங்கள்.
குடும்பத்திற்கோ
தொழிலுக்கோ விவசாயத்திற்கோ நண்பர்களுக்கோ யாரையெல்லாம் நாம் பார்க்கின்றோமோ அவர்களுக்கெல்லாம் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்
என்று அவர்கள் குடும்பமெல்லாம் நலம்
பெற வேண்டும் என்று
1.சக்கரத்துக்கு
முன்னாடி அமர்ந்து சொல்லுங்கள்… அதிலிருந்து ஒளிகள் வந்து கொண்டே இருக்கும்
2.காலை
துருவ தியானத்தில் அந்தச் சக்கரம்
உங்களுக்குப் பயன்படும்.
3.சக்கரத்தை எண்ணித் துருவ தியானத்தில் அமர்ந்தீர்கள் என்றால்
அற்புத நிகழ்ச்சிகள் நடக்கும்.
4.துருவ நட்சத்திரத்திலிருந்து
ஒளிக் கற்றைகள் ஈர்க்கப்பட்டு அதை எல்லாம்
நீங்கள் காணலாம்.
ஆயுள்
மெம்பராக நாம் அனைவரும் அங்கே தான்
இணைந்திருக்கின்றோம். ஏனென்றால் நான் ஒருவன் மட்டும் ஒன்றும்
செய்ய முடியாது. ஒரு நெல் பசிக்கு உதவாது… அதைப் பல நெல்களாகக் குவித்தால்
அனைவரும் பசியாற முடியும்.
நாமெல்லாம்
அந்த அருள் ஒளி பெறும் பொழுது அது பேரொளியாக மாறும். இருளை
அகற்றும் வலிமை பெறும் உலகையே காத்திடும் நிலை வரும்.
1.இந்த
உணர்வின் சுழற்சி வரப்படும் பொழுது விஞ்ஞான அறிவால் வரும் சூறாவளியோ மற்ற விஷத்தன்மைகளோ
2.நாம்
வாழும் பக்கங்களில் வராதபடி நிச்சயம் தடுக்க
முடியும்.
விஷக்கிருமிகளால்
கொடிய நோய் வந்தாலும் கூட கூட்டுத்
தியானங்கள் எடுத்து துருவ நட்சத்திரத்தின் சக்தி ஊர் முழுவதும் படர வேண்டும்… ஊர் மக்கள் அனைவரது உடல்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளி பெற வேண்டும் என்று சக்கரத்திற்கு முன் சொல்லுங்கள்.
வெளியிலே
சொல்வதற்குக் கூச்சமாக இருந்தாலும் சக்கரத்திற்கு முன் நீங்கள் நின்று தாராளமாகச் சொல்ல முடியும்.
1.வீடு
நன்றாக இருக்க வேண்டும் தெரு நன்றாக இருக்க வேண்டும் ஊர் நன்றாக இருக்க வேண்டும்
2.அனைவரும்
ஒன்றுபட்டு வாழ வேண்டும் சக்கரத்திற்கு முன்னாடி சொல்லுங்கள்.
3.அந்த உணர்வுகள் அலை அலையாகப்
படரும். உடலுக்குள் இருளை மாய்க்கும்… பேரொளியாக உருவாக்கும்
3.மகிழ்ந்து
வாழும் சக்திகள் பரவும்.
அதற்குத்தான்
சக்கரத்தைக் கொடுத்தது.
தென்னாட்டுடைய
சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று இந்தத் தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் தான் ஒளியாகித் துருவ நட்சத்திரமானான்.
இந்த உணர்வை எவர் பெற்றாலும் இருளை அகற்றி ஒளித்தன்மை பெறுகின்றது.
தென்னாட்டில் தோன்றிய நாமும் அவன் வழியைப் பின்பற்றி நம் உணர்வுகள் உலக இருளை ஒளியாக
மாற்றிடும் அறிவின் தன்மையும் “மக்களைக் காத்திடும் நிலையையும் நாம் செயல்படுத்த முடியும்…”
ஏனென்றால் உலக உணர்வுகள் அனைத்து நமக்குள் உண்டு.
உயிருடன் ஒன்றி… உடலை
விட்டு அகன்றால் பேரொளியாக மாறி
1.எல்லோரையும்
காக்கும் உணர்வாக முழு முதல் கடவுளாக ஆவோம்.
2.நாம்
அனைவரும் ஒன்றாக இணைந்தால் தான் அது செயலாகும்.
எத்தனையோ
அணுக்களின் மலம் தான் நம் உடலாகின்றது.
அதே போன்று அருள் ஒளி என்ற உணர்வின்
அணுக்களாக விளைந்தால்… உயிருடன் ஒன்றி
ஒளிச் சரீரம் பெற முடியும். அது
தான் முழுமை.
நாம்
அனைவரும் அதைப் பெறுவோம். அருள்
ஞானத்தைப் பெறுவோம். நாம் எதைக் கொண்டு செல்லப் போகின்றோம்…?
நாம் எதையும் கொண்டு போவதில்லை… இந்த உடலையும் நாம் கொண்டு செல்ல முடியாது.
அழகான
வீட்டைக் கட்டினாலும் அழகான ஆடைகளை அணிந்தாலும் உடலில் நோயாகி விட்டால்
உடல் சுருங்குகின்றது… அதை அனுபவிக்க முடிவதில்லை.
ஆகவே… “நம்முடைய
எல்லை பிறவி இல்லா நிலை அடைவது தான்…” என்பதை உணர்ந்து செயல்படுவோம்.