
ராம ராஜ்யம்
2.உயர்ந்த கருத்தினை அவரினுள் செலுத்தி அவர்தம் உடலில் வரும் தீமையினை அடக்கி அதற்குத் தண்டனை அளித்து
3.இணைந்து செயல்படும் உணர்வினை வளர்த்துக் கொண்டார்கள்.
2.அந்த உடலில் இருக்கும் நல்ல உணர்வின் தன்மையை
3.சகோதர உணர்வுடன் பாவிக்க வேண்டும் என்பதைத்தான் “ராம ராஜ்யம்” என்றார்.
2.அஹிம்சைத் தத்துவத்தைக் கடைப்பிடித்துத் தென்னப்பிரிக்காவில் வாழும் மக்களுக்கு நீதி பெற்றுத் தந்தபின்
3.இந்திய நாட்டைக் காக்க வேண்டும் என்ற ஆசை காந்திஜிக்கு வந்தது.
2.இந்திய மக்கள் அனைவரும் தங்களிடமுள்ள பகைமை உணர்வுகளை நீக்கி
3.அனைவரையும் அரவணைக்கும் தன்மை பெற வேண்டும் என்று எண்ணி
4.இந்திய மக்களைச் சீர்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மன உறுதி கொண்டு செயல்படுத்தினார்.
2.காந்திஜியின் வழியில் சென்றோம் என்றால் நமது குடும்பத்தில் பகைமையை அகற்றி ஒன்றுபட்டு வாழும் தன்மை பெற முடியும்.
1.“பிறரைத் துன்புறுத்தி வாழ்வதைக் காட்டிலும்
2.அனைவரையும் இன்புறச் செய்து வாழ வேண்டும்” என்ற உணர்வை ஓங்கி வளர்த்தவர் காந்திஜி.
1.மக்களிடையே தம் மீதான பாசத்தை வரவைத்து
2.அதன் வழியில் மக்களுக்கு உண்மைகளைப் புரிய வைத்து
3.பிறருக்குத் தீங்கு செய்யாத நிலைகளையும்
4.தீண்டாமை என்ற நிலைகளை மறக்கச் செய்து அனைவரையும் அரவணைத்து வாழும் தன்மையும் பெற வேண்டும் என்ற
5.“உறுதி கொண்ட உணர்வை” மக்களுக்கு ஊட்டினார்.
1.தீமை செய்வோர் தீமை செய்யும் சக்திகளை எல்லாம் வெளியேற்றி
2.அன்புடன் அரவணைக்கும் நிலையினை நமது நாட்டில் உருவாக்க வேண்டும் என்று காந்திஜி கூறினார்.
1.மகாத்மா காந்திஜியின் அருள் சக்தி பெற்று… அனைவரையும் அரவணைத்து வாழும் அருள் சக்தி பெற்று
2.இந்த வாழ்க்கையில் சாந்தத்துடன் ஞானத்துடன் விவேகத்துடன் வாழ்ந்து
3.தெளிந்த ஞானமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெற்றுப் பேரானந்த பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.
