ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 23, 2026

தீமைகள் நமக்குள் புகாமல் தடுக்கும் வழி

தீமைகள் நமக்குள் புகாமல் தடுக்கும் வழி


எவ்வளவு செல்வம் தேடினாலும் எவ்வளவு செல்வம் சேமித்து வைத்தாலும்
1.கடுமையான நோய்கள் வந்து விட்டால் வாழ்க்கையில் வெறுப்பு தான் வருகின்றது.
2.வெறுப்பான உணர்வுகள் வரப்படும் பொழுது உடலை வெறுக்கின்றோம்வேதனையை வளர்க்கின்றோம்.
3.இதனால் நிம்மதியற்ற நிலைகளில் தான் நாம் வாழ வேண்டி வரும்.
     
ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியில் அழுக்குப்பட்டு விட்டால் கண்ணாடியின் அழுக்கைத் துடைத்தால்தான் நம்முடைய உருவத்தைக் காண முடியும்.
 
இது போன்று பிறருடைய தீமையின் உணர்வுகள் நமது ஆன்மாவில் பெருகி விட்டால் நம்மை எது இயக்குகிறது…? என்று அறிய முடியாதபடி நாம் பார்த்த உணர்வுகள் நமது உடலை இயக்கி நம்மை நாம் அறிய முடியாத நிலைகளாக ஆகி விடுகின்றது.
 
ஆகவே நம்மை நாம் எப்படி அறிய வேண்டும்…?
 
கண்ணாடியில் அழுக்குப் படிந்திருந்தால் நாம் எப்படிப் பார்த்தாலும் நமது முகம் தெரியாது. இது போன்றுதான் நமது ஆன்மாவில் அழுக்குப் படிந்து விட்டால் சிந்திக்கும் தன்மை இழக்கும் நிலை வருகின்றது.
 
1.கண்ணாடியில் படிந்த அழுக்கை நீக்கினால் நமது உருவம் தெளிவாகத் தெரிவது போன்று
2.நமது ஆன்மாவில் கலந்த அழுக்கை நீக்கித் தூய்மைப்படுத்த வேண்டும்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா. துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நம் உடலுக்குள் இந்த உணர்வின் தன்மையைச் செலுத்த வேண்டும்.
 
அவ்வாறு நாம் செலுத்தப்படும் போது வேதனைப்பட்ட உணர்வின் தன்மை நமது ஆன்மாவிலிருந்து நீங்கி நமது ஆன்மா தூய்மை பெறுகின்றது. 
 
ஆகவே நமக்குள் தெளிவான நிலைகள் வரும். சிந்திக்கும் தன்மை நமக்குள் வருகின்றது. தீமை அகற்றும் வல்லமை பெறுகின்றது. தீமைகள் புகாது தடுக்கவும் முடிகின்றது.
 
நீங்களும் ஒரு டாக்டர் தான். உங்களுடைய உயிர் தான் டாக்டராக இருக்கின்றது.
1.உயிரான டாக்டரிடம் உங்களுடைய உணர்வுகளைச் சொன்னீர்களென்றால்
2.அதற்குத் தகுந்த மாதிரி உயிரான டாக்டர் உங்களை இயக்கி உங்களை நல் வழிப்படுத்துவார். 
 
ஆனால் நாம் வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் நம்மிடம் வரும் பொழுது உயிரான டாக்டரை மதிக்காதபடி இருந்து விடுகின்றோம்.
 
உயிர் நமக்கு நல்லது கெட்டது போன்றவைகளைக் காண்பிக்கின்றது. கெட்டது என்று தெரிந்து அதை உள்ளே விடாதபடித் தடுக்கவில்லை என்றால் என்னவாகும்…?
 
டாக்டர்கள் ஒன்றைச் சாப்பிடாதீர்கள்என்று சொல்லியிருந்தும் அதைச் சாப்பிட்டோம் என்றால் உடல் நோயாகும்.
 
இது போன்றுதான் நாம் ஒருவர் வேதனைப்படுவதைப் பார்த்து நல்ல மனிதர் இப்படி ஆகிவிட்டாரே…! என்று வேதனைப்படுகின்றோம். அப்பொழுது என்ன செய்கின்றோம்?
1.வேதனையின் உணர்வுகள் நம்முள் நுழைவதற்கு ஏதுவாகத் திறந்து வைத்து விடுகின்றோம்.
2.இதனால் வேதனை உணர்வுகள் நம்முள் புகுந்து விடுகின்றது.
3.ஆகவே நாம் எப்பொழுதும் தீய உணர்வுகள் நம்முள் நுழையாத வண்ணம் கதவுகளை மூடி வைக்க வேண்டும்.
 
உதாரணமாககாற்று பலமாக உள்ள பொழுது என்னவாகும்…? தூசி, நாற்றம் அனைத்தையும் அடித்துக் கொண்டு வரும். அப்படி வரும் பொழுது அவை அனைத்தும் நம்முள் நுழைந்துவிடும். ஆகவே நாம் கதவை மூடி வைத்திருக்கப் பழக வேண்டும்.
 
நாம் ஒரு உணர்வை மூக்கு வழி நுகரும் பொழுது அது நம் உயிரில் மோதுகின்றது. நமது கண் ஒன்றைப் பார்க்கும் பொழுது கருவிழி ருக்மணி என்ன செய்கின்றது? கவர்ந்த உணர்வை நமது உடலில் உள்ள விலா எலும்புகளில் உள்ள ஊனில் பதிவாக்கி விடுகின்றது. வேதனைப்பட்ட உணர்வை நுகர்ந்து நமது எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றது.
1.இவைகளெல்லாம் சுவாசித்தல் மூலம் நம்முள் செல்வதில்லை.
2.சுவாசத்தில் இல்லாமலே கருவிழி ஒன்றைப் பார்த்துப் படமாக்கி நம்முள் பதிவாக்கி விடுகின்றது.
 
எக்ஸ்ரே படம் எடுத்தால் உடனே படமாகக் காட்டுவதைப் போன்று கருவிழி பார்த்தவுடனே நமது உடலில் உள்ள விலா எலும்புகள் கடிகாரம் மாதிரி படபடவெனத் துடித்து இழுக்கும். இழுத்து உடனே தன்னுள் பதிவாக்கிக் கொள்கின்றது.
 
இவ்வாறு பதிவான பின்னே கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் அதனின்று வெளிப்படும் வேதனை உணர்வைக் கவர்ந்து அவ்வுணர்வை இயக்கக்கூடிய அணுக்களாக மாற்றுகின்றது.
 
வேதனையின் உணர்வுகள் நமது உடலுக்குள் வலுவானபின் அதன் அருகில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களைப் பலவீனப்படுத்தும். மேலும் அந்த நல்ல அணுக்களை உணவாக எடுத்துச் சாப்பிடத் தொடங்கும். பின் நாம் நலிவடைய வேண்டியது தான்.
 
எனவே இதை போன்ற நிலைகளைத் தடுக்க நாம் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை உயிர் வழி கவர்ந்து
2.நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும். 
3.இவ்வாறு நாம் செய்துவர நாம் அனைத்துத் தீமைகளிலிருந்தும் விடுபட முடியும்
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ முடியும்.

மன வலிமையைக் கூட்டித் தீமையை நீக்கும் நிலை

மன வலிமையைக் கூட்டித் தீமையை நீக்கும் நிலை


சாதாரணமாக மனிதர் பாம்பினைக் கண்டால் அஞ்சுகின்றார். ஆனால் பாம்பு பிடிப்பதில் தெளிந்த மனிதன் ஒருவன் ஒரு பாம்பைப் பிடிக்கச் சென்றால் பாம்பு அவனைக் கண்டு அஞ்சுகின்றது. அவன் கையில் ஒரு குச்சி மட்டுமே இருக்கும்.
 
பாம்பைக் கண்டு நாம் பயப்பட்டோம் என்றால் பாம்பு இந்த உணர்வை நுகர்ந்து சிர்என்று சீறித் தாக்கும்பயந்த மனிதன் தாக்குகின்றான் என்று உணர்கின்றது.
 
1.தெளிந்த மனிதன் வலிமையைக் கண்டு இவன் தாக்குவான்என்று பாம்பு அஞ்சி ஓடுகின்றது. 
2.ஆனால் பயந்தவன் தாக்கும் பொழுது பாம்பும் அஞ்சி இவனைத் தாக்குகின்றது.
 
வலிமையுள்ளதை நுகர்ந்துணரும் சக்தி பிற உயிரினங்களுக்கு உண்டு. மனிதருக்கும் இந்த அறிவு இருப்பினும் இந்த அறிவைச் சீராகப்  பயன்படுத்துவதில்லை. ஆதலால் நாம் அறியும் தன்மை இழந்திருக்கின்றோம்.
 
பாம்பு பிடிப்பதில் தெளிந்த மனிதன் இந்தப் புற்றுக்குள் பாம்பு இருக்கிறது என்று அறிகின்றான். இவனின் மணத்தை நுகரும் பாம்பு புற்றுக்குள் அஞ்சி ஒடுங்குகின்றது. இவன் தூண்டும் போது வெளி வரும் பாம்பு இவனைத் தாக்குவதில்லை அஞ்சி ஓடுகின்றது.
 
1.இவன் பாம்பை எளிதில் பிடித்துக் கவட்டையில் போட்டுப் பாம்பு உயிருடன் இருக்கும் பொழுதே, பாம்பின் தோலை உரிக்கின்றான்.
2.இத்தகைய உணர்வுகள் பாம்பு பிடிப்பவனிடத்தில் இருப்பதால் அவனிடமிருந்து வெளிப்படும் மணத்தைப் பாம்பினம் காண்கிறது.
3.ஆகவே அவனைக்  கண்டு அஞ்சி ஓடுகின்றது.
4.சாதாரண மனிதனைக் கண்டால் சீறித் தாக்குகின்றதுஎதிர்த்து நிற்கின்றது.
 
இதைப் போன்றுதான் வாழ்க்கையில் பகைமை என்ற உணர்வுகள் எத்தனையோ நம்மிடத்தில் வருகின்றது.
 
நாம் அன்பும், பண்பும் பரிவும் கொண்டு பிறருடைய கஷ்டங்களை நோய்களைக் கேட்டறிந்து உபகாரம் செய்தாலும் நாம் கேட்டறிந்த உணர்வுகள் ம் நமசிவாயஎன்று நம் உடலாக மாற்றுகின்றது. அதுவே வினையாகின்றதுவினைக்கு நாயகனாக அதன் வலுவைக் காண்பிக்கத் தொடங்கி விடுகின்றது.
 
ஆகவே இது போன்ற  தீமைகளிலிருந்து எங்ஙனம் நாம் விடுபட வேண்டும்?  என்பதைச் சிந்திக்க வேண்டும்.
 
ஒரு இயந்திரத்தை உருவாக்கும் இஞ்சினியர் அந்த இயந்திரத்தில், எங்கெங்கே அழுத்தம் அதிகமாக இருக்கும்…? எங்கெங்கே வலிமை தேவை…? என்பதைக் கணக்கிட்டு உலோகத் தன்மையின் வலிமையையும் இயந்திரத்தில் ஏற்படும் உராய்வையும் கணக்கிட்டு இயந்திரத்தை உருவாக்குகின்றார்.
 
ஆனால்இயந்திரத்தைச் சோதித்துப் பார்க்கும் பொழுது உலோகக் கலவையில் வலு சிறிது குறைவாக இருக்கும் பொழுது இயந்திரம் நொறுங்கி விடுகின்றது.
 
பின் எதனால் இப்படி நேர்ந்தது…? என்று சிந்திக்கின்றார். சிந்தித்து இயந்திரத்திற்குண்டான வலிமையைக் கூட்டுகின்றார். இதனைத் தொடர்ந்து சரியான ஒரு இயந்திரத்தை உருவாக்குகின்றார்.
 
1.இதைப் போன்று தான் ஞானத்தின் நிலைகள்…!
2.தீமை என்று ஒன்று வரும் பொழுது நாம் அருள் ஞானிகளின் உணர்வை நம்முள் பதிவாக்கினால்
3.உடனே சிந்தனை தூண்டப்பட்டுத் தீமைகளை அகற்றும் தன்மை நம்மிடத்தில் உருவாகின்றது.
 
அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது
1.அது நம்முள் விஷத்தின் தன்மையை அடக்கி
2.நம்மிடத்தில் சிந்திக்கக்கூடிய மன வலிமையைக் கூட்டுகின்றது.
 
இத்தகைய ஆற்றலை நீங்கள் பெற்றால் தான் உங்களுடைய வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற முடியும். உங்கள் வாழ்க்கையைச் சீராக்க முடியும்.
 
பேரருள் பேரொளி பெறும் நிலையாகத் தனக்குள் அருள் ஒளியின் உணர்வின் தன்மையைக் கூட்டும் பொழுது அதன் உணர்வின் அலைகளை நீங்கள் பெற்று இந்த உடலுக்குப் பின் பிறவியில்லை…! என்ற நிலையை அடைந்திட முடியும்.
 
இதை உணர்ந்து ஞானிகள் காண்பித்த அருள் வழியில் அருள் ஞானத்தை வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும் தம்முள் நஞ்சினை வென்று பேரருள் பெற்று பிறவியில்லா நிலை பெறும் அருள் சக்தி பெற்று பிறவியில்லா நிலை என்ற அருள் வாழ்க்கை வாழ்ந்து இவ்வாழ்க்கையில் பிறவியில்லாப் பெருநிலையாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

அகஸ்தியனைப் போன்றே இந்தப் பூமியை மீண்டும் நாம் சமப்படுத்த வேண்டும்

அகஸ்தியனைப் போன்றே இந்தப் பூமியை மீண்டும் நாம் சமப்படுத்த வேண்டும்


சிவன் ஏனோ ஆகால விஷத்தைக் கழுத்தில் நிறுத்திக் கொண்டான் என்று சொல்வார்கள். நம் பூமி தான் சிவம் இதற்குள் உருவானது தான் அனைத்தும்.
 
சிவம் இல்லையேல் சக்தி இல்லை.
1.துருவத்தின் வழி விண்ணுலக ஆற்றலைப் பூமி நுகர்கின்றது
2.விஷத்தின் தன்மை பூராம் அங்கே அடக்குகின்றது.
 
வெப்பத்தின் தன்மை கொண்டு ஆவியாக மாறுகின்றது. இந்த உணர்வின் தன்மை மற்றொன்றுடன் சேர்க்கின்றது. சேர்த்து அங்கே திரளுகின்றது வெண்ணை ஆகின்றது.
 
ப்படி விளைந்தது பூராம் எப்படி உருவங்களாக உருவானது என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.
 
அதாவது…
1.மேரு என்ற மலையை மத்தாக வைத்து அப்படி என்றால் பூமி சுற்றுகின்றது.
2.வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து என்றால் விஷத்தின் தாக்குதல்… அது தொடர்ந்து தாக்கும் போது தான் பூமியைச் சுழற்றுகின்றது.
 
துருவத்தின் வழி விண்ணுலக ஆற்றல்களை நுகரப்படும் பொழுது அது சிவம் பார்வதி. அதன் வழி உள்ள வந்து அங்கே இணையும் பொழுது சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் (பனிப்பாறையாக உறையும் இடம்).
 
அந்த இடத்திலே சக்திகள் சேமிக்கப்படும் பொழுது நீளமாக வளர்ந்து கொண்டே வருகின்றது. இது வளர்ச்சியாகி அப்படியே சென்று விட்டால் தலை குப்புறக் கவிழ்ந்து விடும்.
1.அகஸ்தியனால் ஆரம்பத்தில் இது தடுக்கப்பட்டு மாற்றப்பட்டது
2.ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டத்திலே பல அகஸ்தியர்கள் தோன்றினால் தான் மீண்டும் உலக மாற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியும்.
 
அணுக்கதிரியக்கத்தைப் ஒரு பக்கத்திலே வெடிக்கச் செய்தால் பூமியின் ஈர்ப்பு வழி கூடி மேகங்கள் வரப்படும் போது காந்த ஈர்ப்பின் தன்மை தடுக்கப்பட்டால் பூமியை மாற்றலாம்.
 
ஆனால் இவர்கள் எடுத்த அணு விஷக் கதிரியக்கம் இங்கே பரவும். இதிலேயும் லாயக்கில்லை அதிலேயும் லாயக்கில்லை. கதிரியக்கங்களால் அடர்த்தியாக முடியும். சூரியனுடைய ஒளிக்கதிர்கள் மாற்றப்படும் பொழுது பூமியைத் திசை மாற்றலாம்.
 
ஆனால் அணுக்கதிரியக்கங்கள் ங்கே பரவினால் யார் வாழ முடியும்…? திசை திருப்பலாம்… விஷத் தன்மைகள் தான் பரவும்.
 
1.சூரியனின் தொடர் கொண்டு தன் எண்ணத்தால் அதை குறுக்காட்டப்படும் பொழுது அகஸ்தியன் அன்று திசை திருப்புகின்றான்.
2.அப்படித் திருப்பி நிலைகள் தான் அங்கே ஒரு அண்டம் வருகின்றது...து கரைகிறது.
 
இப்படி அவன் வளர்த்துக் கொண்டான்.
 
இன்னொரு காலம் இந்தப் பூமிக்குள் அது போல் வரும். அதிலே நாம் தப்பித்தால் நல்லது. தப்புவிக்க யாம் சொல்வது என்ன…?
 
கஸ்தியன் அவன் தாய் கருவிலே எவ்வாறு வளர்ச்சி பெற்றானோ அதைப் போல் கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கும் அதே சக்தியை ஊட்ட வேண்டும்.
 
அந்தக் கருவிலே உருவான சிசுக்களுக்குள்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி விளைய வேண்டும்
2.அஸ்திய மாரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.சப்தரிஷி மண்டலங்களின் சக்தி விளைய வேண்டும்
4.உலக ஞானம் பெற வேண்டும் என்று கருவுற்ற தாய் ஊட்டினால்
5.அந்த சக்தி மீண்டும் வந்து அந்த அகஸ்தியன் பெற்ற ஆற்றலைப் பெறும் தகுதியாக வருகிறது.
 
அவர்களுக்கு இந்த உபதேசத்தை கொடுத்துக் கருவிலேயே பூர்புண்ணியமாகக் கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறோம்.
 
ஆக அகஸ்தியநின் ஆற்றலைப் பெறும்படி செய்து பூமியின் மாற்றங்களை நாம் சீர்படுத்திக் கொள்ள முடியும்.