
“புலனறிவால்…” மெய்ப் பொருள் காணும் திறனை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி
ஒரு பயிற்சி:-
ஆறாவது அறிவின் உணர்வு கொண்டு வளர்த்துக் கொண்ட “முருகனின் காட்சியைக் காண வேண்டும்…” என்று வானை நோக்கி உற்றுப் பார்த்து உங்கள் நினைவினைச்
செலுத்துங்கள். சிறிது நேரம் மேல் நோக்கிப் பாருங்கள்
அந்த அலைகள் குவிந்து உங்களுக்கு முருகனாகக் காட்சி தெரியும்..
பூமியில் வாழ்ந்த மனிதர்களுக்குள்
1.எந்தெந்த முருகன் உணர்வுகளைக் கவர்ந்து அலைகளாகப் பரவப்பட்டதோ
2.அதை மீண்டும் நாம் குவிக்கப்படும்
பொழுது இந்த உருவத்தை நாம் காண முடியும்.
அதாவது… டிவிக்களில் எப்படிப் படக்காட்சிகளைக் காணுகின்றோமோ… அதே போல்… மன வலிமை கொண்டு எண்ணும் பொழுது
அலைகள் குவிந்து முருகனாகக் காட்டும்.
எதற்காக இதைச் சொல்கிறோம்…?
அன்று வாழ்ந்த அகஸ்தியரும் வியாசகரும் வானுலக ஆற்றலைத் தங்களுக்குள் வளர்த்து உடலில் அதைப் பெருக்கப்பட்டு அந்த உண்மையின் உணர்வுகள் அருள் ஞான
ஒளியாகப் படர்ந்திருப்பதை
1அதை எண்ணி நுகரப்படும் பொழுது வியாசகர் கண்டதை நாம் காண முடியும்.
2.விஷத் தன்மையால் நம் பூமி சுழல்வதும்
3.துருவப் பகுதி வழி விண்ணுலக ஆற்றலைக் கவர்வதும்
அதனால் தனக்குள் மாற்றம் அடைவதையும்
4.தாவர இனங்களாக உருப்பெற்றதையும்
அதை எடுத்து உயிரினங்கள் எப்படி உருப்பெறுகிறது…? என்பதையும் நீங்கள் காண முடியும்.
5.மேரு என்ற மலையை மத்தாக வைக்கப்பட்டு
என்று சொல்லும் பொழுது
6.மேலே சொன்ன பூமியின் இயக்கத்தைக்
காட்சியாகத் தியானம் செய்யும் பொழுது
பார்த்திருக்கலாம்.
இவையெல்லாம் அன்று வியாசகரால் கண்டுணரப்பட்ட உணர்வுகள்.
காரணம்… அகஸ்தியன் கண்டறிந்த உணர்வுகளை வியாசகர் கவர்ந்து
பூமியின் செயலாக்கங்களை உணர்ந்ததை
1.அக்கால மொழி கொண்டு அதனை வெளிப்படுத்திய
உணர்வுகள்
2.அவனில் விளைந்த உணர்வுகள் இங்கே பரவி
உள்ளது.
ஆகவே நாம் காண வேண்டியது எது…?
அகஸ்தியன் துருவ மகரிஷியாகி உணர்வினை ஒளிச் சரீரமாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத்
துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளி
அலைகளாகப் பரவிக் கொண்டிருப்பதைப் பெற
வேண்டும் என்று எண்ணி ஏங்குவோம்.
துருவ மகரிஷியாகும் பொழுது அகஸ்தியனும் அவன் மனைவியும் ஒருவருக்கொருவர் உணர்வுகளைப் பாய்ச்சி இருவரும் அதைப் பரிமாறிக் கொண்ட நிலையை அவர்கள் உடலில் விளைந்த அலைகள்
இங்கே பாய்ந்து கொண்டிருப்பதை நாம் காண்போம்.
மீண்டும் வானை நோக்கி உற்றுப் பாருங்கள்..!
அகஸ்தியன் துருவ மகரிஷியாக உருப்பெறும் காலத்தில்
1.கணவனும் மனைவியும்
துருவத்தின் ஆற்றலைப் பெற வேண்டும் என்று
2.ஒருவருக்கொருவர் என்று ஏங்கிய உணர்வுகள்
அது பரவி வரும் பொழுது
3.அந்தக் காலத்தில் வாழ்ந்த “அவர்கள் இருவரின் உடல் அமைப்பு…” அலைகளாகப் படர்ந்திருப்பதை நீங்கள் காணலாம்.
துருவப் பகுதி வழியாகக் கவர்ந்த உணர்வுகள் ஒன்றாக இருவருக்குள்ளும்
இணைந்து இந்த உணர்வின் தன்மை ஒளிச்
சரீரமாகி எந்த எல்லையில் நிலை கொண்டார்களோ
1.அங்கே சென்று துருவ நட்சத்திரமாக
உருப்பெற்ற உணர்வை நீங்கள் காணலாம்.
2.அகஸ்தியனும் அவர் மனைவியும் இரு
உணர்வும் ஒன்றாகி ஒளி சரீரமாக இணைந்து துருவப்
பகுதிக்குச் சென்றதை நீங்கள் காணலாம்
3.துருவ நட்சத்திரமாக ஒளியாக இருப்பதையும்
காணலாம்.
இப்பொழுது இதைக் கண்டவர்களும் சரி…
மற்றவர்களுக்குள் பதிவானதும் சரி… அந்தத் துருவ மகரிஷியின் ஆற்றல் பெற வேண்டும் என்ற நினைவுடன் இரவிலே நீங்கள் படுத்து உறங்கினால்
1.அந்த உணர்வுகள் கிளர்ந்து உயிருடன்
ஒன்றி உங்களுக்குள் பெருகி
2.அதனின் ஆற்றலை உங்கள் புலனறிவிலே காண முடியும்.
ரேடியோ டிவிக்களில் எப்படி ஒளி ஒலி என்ற நிலையில்
அலைகளாக அனுப்பப்படும் பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு அதைக்
கவர்ந்து வீட்டிலேயே அதைக் காணும்படிச்
செய்கின்றார்கள்.
அதைப் போலத் தான் பல லட்சம் ஆண்டுகளுக்கு
முன் வாழ்ந்த அந்த உடலிலிருந்து வெளி வந்த உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கலந்து அலைகளாக
மாற்றி வைத்துள்ளது.
1.நமது குருநாதர் இந்த உண்மையின் உணர்வினை
எமக்குள் பதிவாக்கி அந்த நினைவினை எடுக்கும்படிச் சொல்லி
2.அதனின் அருள் ஞான வித்தாக இதைக் கேட்போர் உணர்வுகளில் ஊழ் வினையாகப் பதிவு செய்து
3.வினைக்கு நாயகனாக வளர்ந்ததை மீண்டும்
நினைவு கொள்ளும் பொழுது
4.காற்றில் படர்ந்திருப்பதை
அதன் வளர்ச்சியாகக் கவர்ந்து அந்த உணர்வினை கண் புலனறிவிலே
காண முடியும்.
இருந்தாலும்… சில உண்மைகள் படக்காட்சிகளாக
உங்களுக்குத் தெரிய ஆரம்பித்தால்
1.திடீரென்று இந்த உணர்வின் வேகம் கூட்டப்படும் பொழுது
2.அந்த உருவங்கள் தெரிந்தால் அதைக் கண்டு அஞ்சி ஓடுபவர்களும் பலர் உண்டு… பயந்து விடுவார்கள்.
ஆகையினால்… அந்த உணர்வின் தன்மை “அப்படிக் காட்சியாகக் கிடைக்கக் கூடாது…” என்பதற்கும் ஒளியின் சிகரமாக விண்ணிலே சென்று அருள் ஞானத்தின்
உணர்வை “ஒளியின் உணர்வாக…” உங்களுக்குள் வளர்ப்பதற்குத் தான் இதைச் செயல்படுத்துவது.
சாமி நமக்கு ஒன்றும் காட்சியாகக் கொடுக்கவில்லையே என்று
நீங்கள் எண்ணவே வேண்டியதில்லை. “நாம் காண வேண்டியது அந்த ஒளியான உணர்வுகள் தான்…”
அந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றும் திறன் பெறுவது தான் நம்முடைய கடைசிக் கடமை. இதை எல்லாம் நீங்கள் அனைவரும் பெறுவதற்குத் தான்
பயிற்சியாகக் கொடுக்கின்றோம். நிச்சயம்
நீங்கள் பெறுவீர்கள்.
முந்தி எல்லோருக்கும் காட்சிகளைக் கொடுத்துக் கொண்டு வந்தேன் சில
உண்மைகளை அறியும்படியும் செய்தேன் புவியின் ஈர்ப்புக்குள்.
1.ஆனால் அதனுடைய பலன் மனிதனின் இச்சைகள் வளர்க்கப்பட்டது.
2.விண் செல்ல அந்த உணர்வுகள் விடவில்லை.
அவ்வாறு ஆகாதபடி உங்களுக்குள் மெய் ஒளியைப் பெறும் ஆற்றலாகத் தான் அதை
இப்பொழுது ஏற்படுத்துகின்றோம்.
விஞ்ஞான அறிவால் இந்தக் காற்று மண்டலம் கடும் விஷத்தன்மை கொண்டதாக வளரப்படும்போது… அதை மனிதன் நுகர்ந்து சிந்தனையற்றவனாக
ஆக்கும் நிலைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில்… அதிலிருந்து நம்மை மீட்டி நம் சிந்தனையை விண்ணிலே
செலுத்த வேண்டும்.
அப்போது நம் அருகிலே அந்த மகரிஷிகள் உணர்வுகள் வரும்
போது மனிதன் தீமைகளிலிருந்து விடுபட
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் தன்னைக் காக்கவும் மற்றவரைக் காக்கவும் விண்ணின் ஆற்றலைப்
பெருக்கவும்
2.இந்த உடலை விட்டு அகன்ற பின் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய இது உதவும்.
அதற்குத்தான் இந்தப் பயிற்சியைக் கொடுத்தது.