
யாரையும்… எதையும்… எப்பொழுதும் துன்புறுத்தக் கூடாது… நாம் கல்யாணராமனாக வேண்டும்
நம் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ பேரை நாம் பார்க்கின்றோம்.
வேதனைப்படுபவர்களையும் சங்கடப்படுபவர்களையும் கோபப்படுபவர்களையும்
ஏமாற்றுபவர்களையும் பார்க்கின்றோம்.
இத்தனை உணர்வுகளையும் சுவாசித்து உயிரிலே பட்டபின் ஓ…ம் நமச்சிவாய…! ஓ…ம் நமச்சிவாய…! என்று சதாசிவம் ஆகிக்கொண்டே
இருக்கிறது.. அதாவது உயிர் நம் உடலாக மாற்றிக் கொண்டே
இருக்கின்றது.
ஆனால் நாம் எதைச் சிவமாக்க வேண்டும்…?
1.காலையிலிருந்து இரவு வரை சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்தத் தீமையான உணர்வுகளை மறந்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள்
உணர்வுகளைச் சேர்த்துச் சிவமாக்கி
3.எல்லோருக்கும் நல்ல நிலைகள் கிடைக்க வேண்டும் என்ற உணர்வை நம்
உடலாக்க வேண்டும்.
4.அப்படி ஒன்று சேர்த்தால் ஒன்று சேர்த்து
வாழும் அதுதான் கல்யாணராமா…!
5.நம் எண்ணங்கள் அனைத்தும் ஒன்று சேர்க்கப்படும் பொழுது ஏன்றைக்குமே
சந்தோசமாக இருக்கும்.
ஜனகச் சக்கரவர்த்தி சீதாவிற்குத் திருமணம் செய்ய
சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார். கலந்து கொண்டோர் அனைவரும் அவரவர்கள் திறமையைக்
காட்டுகின்றார்கள். திறமையைக் காட்டிச் சீதாவைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று
விரும்புகின்றார்கள்.
ஆனால் இராமன் என்ன செய்கின்றான்…?
தீமை செய்யும் அந்தக் காண்டீபத்தையே ஒடித்து விடுகின்றான்.
1.காண்டீபம் என்பது உடலில் விளைந்த
தீமையான உணர்வுகள் தான்.
2.அதை ஒடிப்பது என்பது சாமானியமானது அல்ல… இராமாயணத்தில் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
அந்தத் தீமை
செய்யும் காண்டீபத்தை இராமன் ஒடிக்கின்றான். அப்பொழுது சீதாவை அரவணைத்துக் கொள்கின்றான்.
அரவணைக்கப்படும் பொழுது கல்யாணராமன் ஆகின்றான்.
1.உங்கள் மீதுள்ள வெறுப்பான குணத்தை நான் நீக்கி விட்டால்
இரண்டு பேருடைய எண்ணங்களும் ஒன்றாகின்றது…
2.அப்பொழுது மகிழ்ச்சி வருகின்றது கல்யாணராமா…!
என் உடலில் இருக்கும் தீமைகளை நீக்கிவிட்டு உங்கள் மீது
இருக்கும் வெறுப்பை நீக்கி பின் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான்
சொல்லும் பொழுது அந்த
உணர்வுகள் உடலில் ஒன்று சேர்ந்து வாழ்கின்றது.
இந்த நிலையை உருவாக்குவதற்குத் தான் கோவிலை அமைத்துள்ளார்கள்
ஞானிகள்.
1.எண்ணங்களை எப்படி நுகர வேண்டும்…?
2.அந்த எண்ணங்கள் அனைத்தையும் எவ்வாறு ஒன்று சேர்க்க வேண்டும்…?
3.பகைமை வளராதபடி எவ்வாறு தடுக்க வேண்டும் என்று உருவம் அமைத்து அருவ நிலைகளை நமக்குக் காட்டியுள்ளார்கள்.
கோவிலுக்குச் சென்று நாம் இப்படி நினைக்கின்றோமா…?
என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.