ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 2, 2026

அகஸ்தியனின் புலன்

அகஸ்தியனின் புலன்


ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான். சந்தர்ப்பத்திலே அதைப் பார்க்கின்றோம். அந்த வேதனையை நாமும் நுகர நேர்கின்றது… நம்மையும் அது இயக்குகிறது.
 
அதே போன்றுதான் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற சந்தர்ப்பம் அகஸ்தியனின் தாய் தந்தையருக்குக் கிடைத்தது. எப்படி…?
 
1.மிருகங்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காகப் பச்சிலை மூலிகைகளைப் பயன்படுத்தினார்கள்.
2.அந்த மணங்களைச் சுவாசித்த பின் அந்தச் சந்தர்ப்பம் பல விஷத் தன்மை முறிக்கும் நிலை வந்தது.
3.அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்… ஏனென்றால் மிருகங்கள் தங்களைக் கொன்று விடும் தன்னைக் காக்க வேண்டும் என்று.
4.அந்தச் சந்தர்ப்பத்தால் தீமைகளை வெல்லும் சக்தி பெற்றார்கள்.
 
நுகரும் உணர்வுகள் புலறிவாக எப்படி இயக்குகிறது…? என்று புலஸ்தியர்…” என்று அக்கால மக்களைச் சொல்வார்கள்.
 
இன்று விஞ்ஞானிகள் மெய் ஞானிகள் என்று சொல்கிறோம் அல்லவா. அது போல
1.புலனின் உணர்வுகளைத் தெரிந்து கொண்டவர்கள்புலஸ்தியர்… பூமியின் முதல் மனிதர்கள்.
2.ஒரு தாவர இனத்தைத் தனக்குள் சேர்த்துக் கொண்டால் அதனின் அறிவு என்ன செய்கிறது…? என்ற உண்மையின் இயக்கத்தை அறிந்தவர்கள்.
 
அந்த ஆற்றல்களை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் காலை துருவ தியான நேரத்திலே அகஸ்தியன் துருவ நட்சத்திரமான அந்தச் சக்தியைத் தொடர்ந்து எடுக்கும்படி சொல்கின்றோம்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் அது அணுவாகும் தத்துவத்தைத் தான்…” குரு வழியில் உபதேசிக்கின்றோம்.
 
எல்லா நேரமும் நாம் தியானம் செய்யலாம். இருந்தாலும் இந்த அதிகாலை நேரத்தில் உங்கள் எண்ணத்தை அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து அந்த உணர்வுகளைக் கலந்து உங்களுக்குள் அந்த உண்மையின் உணர்வை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அறிந்து கொள்ள ஏற்படுத்துகின்றோம்.
 
உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கின்றது…? நாம் ஏன் கோபப்படுகின்றோம்…? நாம் ஏன் வேதனைப்படுகின்றோம்…? நாம் ஏன் தீமை செய்கின்றோம்…? என்று சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கும்.
 
ஒருவன் தவறு செய்கிறேன் என்றால் அவனை நாம் குற்றவாளியாக ஆக்குவதற்கு மாறாக அவன் உணர்வை நாம் எடுத்தால் பல தடவை அதைக் கேட்டறிந்தால் சந்தர்ப்பம் நம்மையும் குற்றம் இழைக்கக்கூடிய நிலையாக குற்றம் செய்பவனாக வளர்த்து விடுகின்றது.
 
நான் தவறே செய்ய மாட்டேன் என்பார்கள். ஆனால் தவறு செய்தவர்களை அடிக்கடி உற்று நோக்கினார்கள் என்றால் இவர்களும் அதைச் செய்ய ஆரம்பிப்பார்கள்.
 
1.எல்லாமே சந்தர்ப்பம் தான்.
2.ஆகவே நல்ல சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்த வேண்டும்.
 
பகைமையோ வெறுப்பையோ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கமோ கோபமோ வரும் பொழுது துருவ தியானத்தில் உங்களுக்குக் கொடுத்த சக்தியின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தித் தீமையை வலுவிழக்கச் செய்து ந்த உணர்வினை நமக்குள் வலுவாக்கிக் கொண்டே வர வேண்டும்.
 
தெளிந்து தெளிவான நிலைகள் கொண்டு வாழ்ந்து தீமைகளை அகற்றி வாழ்வதற்குத் தான் குருநாதர் சொன்ன வழியினைப் போதிக்கின்றோம்.
 
1.அகஸ்தியன் அருளை… அவன் எப்படிப் புலனின் நிலையை அறிந்தானோ
2.அந்த புலனின் தன்மையை நுகரச் செய்து உங்கள் நல்ல புனாக அறிந்திடும் அறிவின் புலனாக
3.அகஸ்தியனின் புலனைஅவன் ளியான உணர்வின் புலனை உங்களுக்குள் செவி வழி கேட்கும் படிச் செய்து
4.உங்களை நுகரச் செய்து உங்கள் ஆகாரத்தின் வழி ரத்தத்தில் கலக்கச் செய்து கொண்டிருக்கின்றேன்.
 
இதை நீங்கள் தொடர்ந்து வளர்த்துக் கொண்டால் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து கல்கி என்ர நிலையை அடைய முடியும்.
 
ராமேஸ்வரம் - எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இந்த உடல்…! தனுசு கோடி - ஒவ்வொரு நிமிடமும் தீமை என்ற உணர்வுகளைத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு மாற்றிக் கொண்டே வரவேண்டும்.
 
1.கோடிக்கணக்கான உணர்வுகள் நமக்குள் தோன்றுகிறது.
2.அதற்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலந்து கொண்டே வந்தால் தனுசு கோடி.
 
எத்தனை கோடி உணர்வுகள் வந்தாலும் அதை ஒளியாக மாற்றிக் கொள்ளும் சக்தி பெற்றது துருவ நட்சத்திரம்.
1.அந்த ஆற்றலை நாமும் நிச்சயம் பெற முடியும்
2.அகஸ்தியனின் புலன் கொண்டு அந்த முழுமையை அடைய முடியும்.

பிறருக்கு உதவி செய்தாலும்… அவரிடமிருந்து வரும் இருளான உணர்வுகள் நம்மை இயக்கி விடக் கூடாது

பிறருக்கு உதவி செய்தாலும்… அவரிடமிருந்து வரும் இருளான உணர்வுகள் நம்மை இயக்கி விடக் கூடாது


பெரும்பகுதியான மக்கள்…கான்களை நேரடியாகச் சந்திக்கும் பொழுது தங்களுக்குப் பொருள் வேண்டும் செல்வம் வேண்டும் என்று தான் அணுகுகிறார்கள். மகான்கள் கூறும் உண்மையின் உணர்வைப் பெறுவதில்லை… அதைக் கடைப்பிடிப்பதில்லை.
 
தன் வாழ்க்கைத் தேவைக்குத் தான் மகான்களைச் சந்தித்தார்கள். தன் பிழைப்புக்கு ஏதாவது கிடைக்குமா…? என்று பார்க்கிறார்கள்.
 
இன்று வரையிலும் அப்படித்தான் உள்ளது.
 
பிழைப்புக்குக் கிடைக்க வேண்டும் என்றாலும் ஞானம் இல்லை என்றால் அப்படி வந்த பணத்தைச் சீராகப் பாதுகாக்க முடியாது.
1.செல்வங்கள் வந்தாலும் அந்த ஞானம் இல்லை என்கிற பொழுது ஆசையினால் கடைசியில் இப்படி ஆகிவிட்டதே…” என்று வந்துவிடும்.
2.காரணம் ஒன்று கிடைத்தாலும் கூட அந்த ஆசை அதோடு திருப்தி அடைவதில்லை.
3.இதைப் பெற்றால் பரவாயில்லை என்று முதலில் நினைப்போம்.
4.நன்றாக வந்தது என்று அதை வைத்து இன்னொன்றைப் பெருக்கலாம் என்று ஆசை வரும்.
5.அதில் நஷ்டமாகி விட்டால் வேதனை…!
6.வேதனை வந்தபின் முதலில் வந்து கொண்டிருந்ததும் போய் விடுகின்றது… அடுத்துளர்வதும் போய் விடுகின்றது.
7.இரண்டும் சேர்த்து வேதனை உணர்வுகள் அணுக்களாக விளைந்து உடலில் நோயாக உருவாக்கத்தான் தயாராகின்றது.
8.நோயான பின் நான் இப்படி எல்லாம் செய்தேனே நன்றாக முயற்சி செய்தேனே…” என்று சொல்வார்கள்.
 
பணம் அதிகமாக இருந்தால் தாராளமாகச் செலவழிப்பார்கள். பிறருக்கு உதவியும் செய்வார்கள். ஆனால் அந்தக் கஷ்டப்பட்டவர்கள் வேதனை எல்லாம் நுகர்ந்து விடுவார்கள். அதைத் துடைக்கத் தெரிவதில்லை.
 
நான் எல்லாம் செய்தேன் ஆண்டவன் கடைசியில் என்னை இப்படி ஆக்கிவிட்டான்…! என்று புலம்புவார்கள்.
 
ஆலயங்களுக்குச் சென்றால் “தர்மம் செய்ய வேண்டும் ஆண்டவன் அப்போது தான் மெச்சுவான்” என்று எல்லா மதங்களுமே சொல்லுகின்றது. அதன் வழி நாமும் தர்மம் செய்கின்றோம்.
 
ஆனால் அப்படிச் செய்யும் பொழுது என்ன நடக்கிறது…?
 
அவனோ பாவத்தின் எல்லையில் இருக்கின்றான் தொல்லைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
1.ஆனால் நம்மிடம் உதவி பெற்ற பின் ஆ…! “ஆஹா…!” இன்று அந்த ஆசையிலே அவன் உணர்ச்சிகளை எல்லாம் வெளிப்படுத்துகின்றான்.
2.அவனை உற்று நோக்கி அவன் ஏங்கிப் பெறும் உணர்வுகளை நாமும் நமக்குள் பதிவு செய்து கொள்கின்றோம்.
 
நல்லது தான் செய்கின்றோம் ஆனால் அவருடைய உணர்வுகள் இங்கே வந்து அவனுடைய தரித்திரத்தை இங்கே கொண்டு வந்து விடுகிறது. அதை நீக்கத் தெரிவதில்லை.
 
இதைப் போன்று பிறரது இருள் சூழும் உணர்வுகள் நமக்குள் வருவதைத் தூய்மைப்படுத்தாதபடி ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான் என்று தான் எண்ணுகின்றோம்.
 
ஆனால் நம்மை ஆளும் ஆண்டவன்…? நமது உயிர் தான்.
 
1.ஈகை பண்புடன் தான் உதவி செய்தோம்
2.ஆனால் அவருடைய இருள் சூழ்ந்த உணர்வுகள் இங்கே நமக்குள் விடுகின்றது.
3.அதைத் துடைக்க வேண்டும் அல்லவா.
 
உதாரணமாக எத்தனையோ உணவுப் பொருள்களைச் செய்கின்றோம் அதை மூடி வைக்கவில்லை என்றால் என்ன ஆகும்…? மண் தூசி மற்ற அசுத்தங்கள் படத்தான் செய்யும்.
 
அப்போது அதை மூடி வைக்க வேண்டும் அல்லவா.
 
மூடி வைக்காதபடி நான் நன்றாகத் தான் செய்தேன். அதிலே மண் தூசி எல்லாம் வந்து விட்டதே…! என்று சொன்னால் எப்படிச் சரியாகும்…?
 
இதைப் போன்று தான்
1.அந்தப் பாதுகாப்பு நிலை இல்லை என்றால் நம் ஆன்மாவில் மற்றவருடைய இருளான உணர்வுகள் புகுந்து
2.உடலுக்குள் அணுக்களாக விளைந்து கடும் விளைவுகளை உண்டாக்கி விடும்.
 
அதனால் தான் அடிக்கடி ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து ஞாபகப்படுத்துகின்றோம்.
 
எந்தக் காரியத்தைச் செய்தாலும் காரியத்தைச் செய்வதற்கு முன்பும் பின்பும் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று இதை உடலுக்குள் வலுவாக மாற்றிக் கொண்டே வரவேண்டும்.
 
1.நம் பார்வை சொல் செயல் அனைத்தும் அந்த மகரிஷிகள் உணர்வின் தன்மையாகவே நாம் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
2.எத்தகைய நிலையிலும் பிறரின் உணர்வு நம்மை இயக்கி விடக்கூடாது… அது உடலுக்குள் அணுக்களாக விளைந்து விடக்கூடாது.