ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 31, 2026

நாம் உருவாக்க வேண்டிய கூட்டமைப்பு

நாம் உருவாக்க வேண்டிய கூட்டமைப்பு

 

விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட கதிரியக்கங்களைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்து வைத்திருக்கின்றது. எந்தெந்த நாடுகளில் இதைச் செய்து கொண்டார்களோ
1.இந்த உணர்வு "நியூட்ரான் என்ற விஷத்தன்மைகளின் அழுத்தம்" கதிரியக்க உணர்வினைக் கண்ட பின் அது அஞ்சி ஓடுவதும்
2.மற்றொன்றுடன் மோதிச் சுழல் காற்று போலப் புயலாக மாறுகின்றது அல்லது சூறாவளியாக மாறுகின்றது.

அணுகுண்டை வெடித்தால் கட்டிடங்களுக்குள் ஊடுருவித் தன் இனமாக மாற்றி அது புகை மண்டலங்களாக மாறுகின்றது. ஆனால் அதே சமயத்தில் இந்த நியூட்ரான் என்ற உணர்வுகள் பூமியிலே கலந்தால் விஷத் தன்மை கொண்டு மடியச் செய்யும்.

ஆனாலும் விஷத்தின் தன்மை கொண்டு கதிரியக்கப் பொறிகள் அஞ்சி ஓடும் பொழுது மற்றொன்றுடன் மோதியவுடன் சூறாவளியாக மாறி கடலிலே பட்டால் அதையும் அள்ளி எடுத்துக் கொண்டு புயல் போல் மாறும்.

இது கட்டிடங்களிலே படர்ந்தால் பலவீனப்படுத்தித் தரைமட்டமாக்கிவிடும்... மனிதனாக இருந்தாலும் தூக்கிச் சென்று விடும்.

கடலில் பட்டால் அலைகளாக மாறுகிறது. சனிக் கோளின் உணர்வு படடால் நீரை ஆவியாக மாற்றி மேகங்களாகக் கூடி மழை பெய்ய வைக்கின்றது.

ஆனால் விஷத்தன்மையான உணர்வுகள் மாறி கடலோரம் உள்ள நகரம் எல்லாம் அழியும் தன்மை வருகின்றது விஞ்ஞான அறிவால். இதைப் போன்ற பாதிப்புகளில் இருந்து நாம் தப்ப வேண்டும்.

1.கூட்டு ஐக்கியமாகத் தியானங்களைச் செய்து துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் வாழும் இடங்களிலே பரவச் செய்து
2.அந்த உணர்வலைகளை மோதும்படிச் செய்து அதைப் பெருக்கச் செய்யப்படும் பொழுது நம்மையும் காக்கலாம்... நாம் வாழும் ஊரையும் காக்கலாம்.

துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வு அழுத்தமாகும் பொழுது அந்தத் தீமைகளை விலக்கிவிடும். நம் நாட்டிலே அத்தகைய சூறாவளியோ புயலோ வராதபடி காக்கலாம்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி இந்த அகஸ்தியன் வெளிப்படுத்திய உணர்வுகளை... காலை துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும்.

தியானத்தைக் கடைபிடிக்கும் குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும் அந்த அருள் சக்தியைப் பெற்று
1,தியானமிருக்கும் அனைத்துக் குடும்பங்களில் இது படர வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் தெளிந்த மனம் பெற வேண்டும்
3.மகிழ்ச்சியான நிலைகள் பெற வேண்டும் மகரிஷிகள் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்
4.நாம் பார்க்கும் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடத்திலும் இதைப் படரச் செய்ய வேண்டும்.

அது தான் கோடிக்கரை... இராமன் என்ன செய்தான்...? மணலைக் குவித்துச் சிவலிங்கத்தைப் பூஜித்தான் என்று காட்டியிருப்பார்கள். காரணம்... மனிதனின் கடைசி எல்லையில் இருக்கின்றோம்.

மனதைக் குவித்து ஒன்றுபட்டு வாழும் நிலையில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை ஒன்றாகக் கூட்டி
2.ஒருங்கிணைந்த நிலையில் கூட்டமைப்பாக வலுவான நிலைகள் கொண்டு
3.விஞ்ஞான அறிவால் வரும் தீமைகளை விலக்கித் தள்ளி ஊரையும் நாட்டையும் காக்கும் நிலைக்கு வர வேண்டும்.

எங்கிருந்தாலும் சரி...! விஞ்ஞானப் பேரழிவுகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள
1.கூட்டமைப்பாகத் துருவ தியானத்தை மேற்கொண்டு அருள் உணர்வுகளைக் கவர்ந்து நாம் வாழும் இடங்களில் இந்த உணர்வுகளைப் பரவச் செய்வோம்.
2.ஒவ்வொரு நாளும் நாம் இதை வலுப்படுத்திக் கொண்டே வருவோம்.
3.உலகைக் காக்கும் சத்தியாக நாம் செயல்படுவோம்.