
குரு சொன்னதை நாம் செயலுக்குக் கொண்டு வர வேண்டும்
இப்பொழுது யாம் உங்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சமயம் நீங்கள்
1.நம்முடைய வீட்டில் செய்ய வேண்டிய வேலை என்ன…?”
2.வீட்டில் மகன் என்ன செய்து கொண்டிருக்கின்றானோ…! ஏதாவது செய்து விட்டால் என்னவாகும்…?” என்று எண்ணிக் கொண்டிருப்பீர்கள் என்றால்
3.யாம் சொல்லும் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகாது.
அதைப் போல்… ஒருவர் நம்மிடம் தீமை தரும் உணர்வுகளையோ வேதனை தரும் உணர்வுகளையோ சொல்வாரே என்றால் அது சமயம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம்முள் இணைப்போமேயானால அத்தீய உணர்வுகளை நம்முள் புகாது தடுக்கலாம்.
1.அவர்கள் சொல்லும் உணர்வுகள் செவிகளில் கேட்கும்… ஆனால் ஈர்க்காது. 2.இதனை ஒரு பயிற்சிக்குக் கொண்டு வரவேண்டும்.
எத்தனையோ பேர் எம்மிடம் கஷ்டங்களை நிவர்த்திக்க வருகின்றார்கள், அவர்களுடைய வேதனைகளைச் சொல்கின்றார்கள். யாம் அதை ஈர்ப்பதில்லை.
யாம் எம்மைத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளுக்குள் இணைத்துக் கொள்வதால் அவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வோம்.
1.அதன் பிறகு யாம் கோபமாக என்ன சொல்வோம்…?
2.“போங்கள்… உங்களுக்கு ஒன்றுமில்லை போங்கள்…” என்று சொல்வோம்.
அப்படி யாம் சொன்னால்… “சாமி திடீரென்று நம்மைக் கோபிக்கின்றாரே…” என்று எண்ணினால் என்னவாகும்…?
ஏனென்றால் அவர்கள் சொல்லும் வேதனையின் உணர்ச்சிகளை உடனே தாங்கி “மடக்கி” அனுப்புகின்றோம்.
நீங்கள் சாமி நம்மைக் கோபித்துக் கொண்டார் என்று சொன்னால் யாம் என்ன பண்ணுவது…? அப்படியானால், அவர்கள் சொல்லும் கஷ்டத்தை யாம் ஈர்க்க வேண்டுமா…?
யாம் உங்கள் கஷ்டத்தை நீக்குவதற்குத்தான் அப்படிச் சொல்கின்றோம்.
மற்றவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தையெல்லாம் நீங்கள் உற்றுக் கேட்பீர்கள் என்றால் என்னவாகும்…? அந்த உணர்வுகள் உங்களுக்குள் இந்திரீகமாக மாறும். ஆகையால் இந்தத் தீய உணர்வுகளை நீங்கள் உங்களிடத்தில் வராது தடைப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில் யாம் அநேகம் பேருக்குப் பல நிலைகளைச் சொல்லிக் கொடுத்தோம். ஆனால் அவர்கள் சொல்லிக் கொடுத்ததின் நிலைகளைத் தோல்வி அடையச் செய்து விட்டனர்.
மனிதரின் இயக்கம் எப்படி இருக்கின்றது…? அதை நாம் எப்படிக் கொண்டுவர வேண்டும்…? என்று உணர்த்துகின்றோம்.
ஆனால் பெரும் பகுதியானவர்கள் என்ன செய்து விட்டார்கள்…?
1.நாளை என்னவோ நடக்கட்டும்.
2.இன்று நாம் தொழிலில் முன்னேற வேண்டும்.
3.தான் ஒன்றைச் சொன்னால் அவ்வார்த்தையையும் தன்னையும் மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று இப்படித்தான் தலைகீழாகப் போகிறார்கள்.
4.அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் தன்மையை யாம் எவ்வளவுதான் கொடுத்தாலும் எடுபட மாட்டேன் என்கிறது.
ஆகையால் யாம் மற்ற நிலைகளை நிறுத்தி விட்டு இப்பொழுது தியானவழி அன்பர்களைத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றச் செய்யும் நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.
அந்த உணர்வோடு கொண்டு போகப்படும் பொழுது அவ்வுணர்வின் ஒளிக்கற்றைகளை உங்களில் சேர்த்துப் பழகுங்கள். ஆனால் சாதாரண மின்னல் வருகின்றதே அதை நீங்கள் பார்க்கக் கூடாது.
மின் கதிர்களை எண்ணிச் சுவாசிக்கப்படும் பொழுது அதன் உணர்வின் தன்மையினை உங்களிடத்தில் ஒவ்வொரு அணுவிலும் சேர்க்க உதவும். நாம் நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து மற்ற அணுக்களில் சேர்கின்றது. இவையெல்லாம் குரு தன்மையால் வருவது.
1.“சாமி (ஞானகுரு) சொன்னார் இதையெல்லாம் பெற வேண்டும்” என்று எண்ணப்படும் பொழுது
2.நீங்கள் எண்ணிய ஆற்றல் பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும்.
நான் தனித்தன்மையில் செல்வேன் என்று எண்ணினால் முடியாது.
குரு இல்லாத வித்தை எதுவுமே வித்தையாகாது. ஆகையால் “குருநாதர் சொன்னார்” என்ற நிலையில் ஒன்றை இணைத்துப் பார்க்கும் பொழுது தனக்குள் உருவாகும்.
ஆகவே இதன் வழியில்தான் நாம் அறிய முடியும். அப்படியில்லாமல் நமது எண்ணங்களை பலவீனமடையச் செய்தால் அந்த உணர்வின் அணு உங்களைத் திசை திருப்பிவிடும்.
ஏனென்றால்
1.“நாம் இம்மனித உடலுக்குப்பின் பெற வேண்டியது எது…?” என்பதை
2.உங்கள் எல்லோருக்கும் தெளிவாக்கும் தன்மைக்குத்தான் கொண்டு வருகின்றோம்.