ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 3, 2026

தீய உணர்வுகளைக் கடலுக்குள் கரைக்கும் நிலை

தீய உணர்வுகளைக் கடலுக்குள் கரைக்கும் நிலை


விநாயகர் சதுர்த்தி நன்னாளில் விநாயகர் உருவத்தைக் களிமண்ணால் செய்து பூஜித்துப் பின் கடலில் கரைக்கின்றோம்.
 
இதைப் போன்றுதான் சந்தர்ப்பத்தால், நமக்குள் சேர்ந்த தீய உணர்வுகளை வளராது தடுத்து
1.அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
2.எல்லாக் குடும்பங்களும் நலம் பெற வேண்டும்
`3.எங்கள் பகைமைகள் அழிய வேண்டும்என்று ஏகோபித்த நிலையில் பிரார்த்திக்கும் பொழுது
4.நம் உடலிலும் நம் பகைவர்களின் உடலிலும் பதிந்த தீய உணர்வுகள் அனைத்தும் கரைந்து விடுகின்றன.
 
ஒரு மரம் எந்த நறுமணத்தின் உணர்வுகளைக் கொண்டிருக்கின்றதோ அதனின் உணர்வின் சக்தியைக் காற்றில் இருந்து ஈர்க்கின்றது.
 
ஆனால் அதனுடைய வேரை அறுத்து விட்டால்…” அது நீரைக் கவரும் திறனை இழந்து தன் ஜீவ சக்தியை இழந்து தன் இனத்தைக் கவரும் தன்மையையும் அது இழந்து விடுகின்றது.
 
இதைப் போன்றுதான் நமக்குள் மற்றவரின் உணர்வின் தன்மையைப் பதிவு செய்து
1.அதனின் நினைவாற்றல் வராதபடி தடுத்து நிறுத்தும் நிலையாக
2.மகரிஷிகளின் அருள் சக்தியை இணைக்கப்படும் பொழுது தீய உணர்வுகளின் விழுதுகள் தடைப்படுகின்றன.
 
இவ்வாறு தடைப்பட்டபின் நாம் அனைவரும் ஏகோபித்த நிலையில் எல்லோரும் நம் நண்பர்கள் என்று வளரப்படும்போது நம் அனைவரிடமும் இருந்து வெளிப்பட்டிருந்த காற்றில் கலந்துள்ள தீய உணர்வுகள் நகர்ந்து கடலின் ஈர்ப்புக்குள் சென்று மறைந்து விடுகின்றன.
 
அப்பொழுதுதான் இந்தப் பூமியில் பரிசுத்த நிலைகள் பெருகி அதே சிந்தனை மக்களின் மத்தியிலும் தோன்றுகின்றது.
 
1.ஏனென்றால் உலக மக்கள் அனைவரும் ஓரினம்.
2.நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்.
3.நாம் ஈசனின் இயக்கத்தால்தான் இயங்குகின்றோம்.
4.நம்மை இயக்கும் உயிரான ஈசனுக்கு மதத்தின் பெயராலோ இனத்தின் பெயராலோ
5.வெறுப்பையோ குரோதத்தையோ கொடுத்துவிடக் கூடாது.
 
ஆகநமது உயிரான ஈசனுக்கு செய்யக் கூடிய கடமைகள் எதுவென்று உணர்ந்து நமது வாழ்க்கையில் நல்ல குணங்களைச் சுதந்திரமாக்க அருள் ஞானிகளின் உணர்வைக் கவசமாக மாற்றிட வேண்டும்.
 
அரசியல் மத இன மொழி பேதங்களால் விளைந்த தீய உணர்வுகள் இந்தப் பூமியில் படர்ந்து இருக்கின்றது. இவைகளில் இருந்து நாம் விடுபட்டு நமது நல்ல உணர்வுகளைச் சுதந்திரமாகச் செயல்படச் செய்ய வேண்டும்.
 
அவ்வாறு செயல்பட்டுத் தீமையற்ற உலகைப் படைப்போம். தீமையற்ற உலகத்தை முதலில் நம்மிடத்தில் உருவாக்க வேண்டும். இதைச் செய்தோமானால் பேருலகத்தையும் படைக்க முடியும்.
 
1.நாம் எதை எண்ணுகின்றோமோ அதைப் படைக்கும் திறன் பெற்றது நமது உயிர்.
2.ஆகவே உயிரை ஈசனாக மதித்து உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் சிகரமாக்குவோம்.
 
நம் முன் படர்ந்து கொண்டிருக்கும் தீய உணர்வுகள் நமக்குள் ஊடுருவ இடம் கொடுக்காது துருவ நட்சத்திரத்தின் துணை கொண்டு அதனைக் கடலுக்குத் துரத்தியடிக்க வேண்டும்.
 
ஏனென்றால் தீய உணர்வுகளை ஈர்ப்பதற்கு இடமில்லையென்றால் அது வேறு வழி இல்லாது இறுதியில் கடலின் ஈர்ப்பிற்குச் சென்று மறைந்துவிடும்.
 
1.இவ்வாறு இனி தீய உணர்வுகளுக்கு இங்கு இடமில்லை என்று செய்வோம். 
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இவ்வுலகமெங்கும் படரச் செய்வோம்.
3.அனைவரிடத்திலும் பகைமையை நீக்குவோம்… மத இன மொழி அரசியல் பேதங்களை அகற்றுவோம்.
4.அனைவரும் ஒன்றுபட்டு வாழ எல்லா மகரிஷிகளின் அருளை வேண்டிப் பிரார்த்திப்போம்.
5.இவ்வுலகில் அமைதி படர்ந்து அனைவரும் பிறவா நிலை எனும் நிலைஎய்த வேண்டும் என்று எண்ணி நாம் தவமிருப்போம்.
 
இதன் வழியில் மகரிஷிகளின் அருள் வழியைப் பின்பற்றிச் செயலாக்கி வரும் அனைவருக்கும் எமது ஆசீர்வாதங்கள்.

எதிர்காலத்தில் நீங்கள் மெய் ஞானிகளாக வருவீர்கள்

எதிர்காலத்தில் நீங்கள் மெய் ஞானிகளாக வருவீர்கள்


தியானம் என்றாலே சாமியாராகப் போய்விடுவோம் சாமி கும்பிடுவோர் நாங்கள் எப்படித் தியானம் செய்வது…? என்றெல்லாம் சிலர் நினைப்பார்கள்.
 
தியானம் என்பதே உயர்ந்த எண்ணங்களைப் பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணுவது தான்.
 
நம்மிடம் யாராவது சண்டையிடுகிறார்கள் அல்லது திட்டுகின்றார்கள்… என்றால்
1.அப்பொழுது என்ன நினைக்கின்றோம்…?
2.என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்…! என்று எண்ணுவது இது தியானம் தான்.
 
அந்த மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் இது தியானம்தான்.
 
காரணம்
1.நாம் எண்ணியது நமக்குள் உடலாகின்றது
2.ண்ணியதை உயிர் இயக்குகின்றது
3.எண்ணியதை உடலாக்குகின்றது உயிர்.
4.ண்ணியதை உடலுக்குள் விளைய வைக்கின்றது
5.விளைந்ததைத் தான் உடலை விட்டுப் பிரியும் சமயம் தன்னுடன் அழைத்துச் செல்கின்றது
6.நமக்குள் இருக்கும் எண்ணங்களை உயிரே அதைப் படைக்கின்றது
7.நம்மை ஆளும் ஆண்டவனும் உயிரே
8.ஆண்டவனாக இருப்பதும் உயிரே
9.எண்ணியதை இயக்கி இறை ஆக்குவதும் இறைவன் ஆக்குவதும் உயிரே
10.எண்ணியதை ஓ என்று ஜீவன் ஆக்குவதும் உயிரே
11.ண்ணி உடலுக்குள் பதிவு செய்தாலும்… அது அனைத்திற்கும் குருவாக இருப்பதும் உயிரே.
 
நாம் எந்தெந்த உயர்ந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அதைத் திரும்ப எண்ணி அதற்குக் குருவாக நின்று நல்வழி காட்டுவதும் உயிரே.
 
1.ஞானிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்யும் பொழுது
2.மீண்டும் அதை எண்ணுவீர்கள் என்றால் குருவாக நின்று உங்களுக்கு அது நல்வழி காட்டும்.
 
தீமை செய்த உணர்வுகளை எண்ணினால் அது என்று ஜீவனாக்கி உடலுக்குள் ம் என்று பதிவு செய்தால் திரும்ப எண்ணினால் தீமை செய்யும் எண்ணமாகக் குருவாக நின்று தீமையை விளைவிக்கும் நிலைக்கே அது உங்களை அழைத்துச் செல்கின்றது.
 
நோய் என்ற நிலைகள் பதிவானால் அந்த நோயைப் பற்றிப் பேசினாலும் அந்த நோயே ஜீவனாகி அதுவே குருவாகி நோயாக உடலுக்குள் உருவாக்கி விடும்.
 
ஆனால் நோயை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்துக் கொண்டால்
1.அதனை உங்கள் உயிர் ஜீவனாக்கி இந்த உணர்வின் தன்மை நோயற்றவனாக ஆக்கி
2.ஞானத்தின் தன்மை கொண்டு பொருளறிந்து செயல்படும் திறனாக நமக்குள் தை வளர்க்க
3.அந்த உணர்வின் எண்ணம் குருவாக நின்று இந்த வாழ்க்கையை தீமை அற்றவனாக்கி
4.தீமைகளை அகற்றிடும் சக்தியாக நமக்குள் அது விளையும்.
5.அப்படி விளையச் செய்யும் சக்தி இதைக் கேட்டுணர்ந்தவர்கள் நீங்கள் பெற முடியும்.
 
உங்களுக்குள் ஊழ்வினையாக அந்த மெய் ஞானிகள் உணர்வுகள் ஆழமாகப் பதிய வேண்டும். உங்களை அறியாத தீமைகள் நீங்க வேண்டும். நீங்கள் நன்மை செய்த நிலைகள் அந்தத் தெய்வ குணங்கள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்.
 
மெய் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் விளைந்திட வேண்டும் உங்கள் மூச்சும் பேச்சும் உலக நன்மை பயக்கும் சக்தியாக மலர்ந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை யாம் உபதேசித்தது.
 
கேட்டுணர்ந்தோர் அனைவருக்கும் இது பதிவாகி இதன் வழி கொண்டு உங்கள் எதிர்காலம் சிறந்து இருக்க வேண்டும். அந்தச் சிறந்த எண்ணங்கள் உங்களுக்குள் பதிவாகி ஞானத்தின் வழித்தொடராக வளர வேண்டும்.
 
1.எதிர்காலத்தில் நீங்கள் மெய் ஞானிகளாக வருவீர்கள்.
2.விஞ்ஞானப் பேரழிவிலிருந்து மக்களை மீட்டிடும் சக்தியாக விளைந்து
3.உங்கள் மூச்சும் பேச்சும் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக வளரும்.