
மழை நீர் உருவாகும் விதம்
அகஸ்தியன் தாய் கருவிலிருக்கும் பொழுது நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்றான்.
அவன் குழந்தையாகப் பிறந்த பின் அவன் உடலில் இருந்து வெளிப்படும் மணங்கள்
நஞ்சு கொண்ட உயிரினங்கள் அவனை அணுகாது அவனைப் பாதுகாக்கும் நிலையாக அமைந்தது.
1.அத்தகைய மணம் உண்மையின் உணர்வின் தன்மையை
இயக்கி அதன்வழி அவன் வளர்ந்து
2.வான் வீதியின் உணர்வுகளை நுகர்ந்து வளர்ச்சி பெற்றான்.
நஞ்சை வென்றிடும் சக்தியைத் தாயின் கருவிலே பெற்றான். அதன் வழி கொண்டு வான் வீதியிலிருந்து நுகர்ந்தான் என்றால்… எதை…?
நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து விஷத் தன்மையைத்
தான் கவர்கின்றது. பால்வெளி மண்டலங்களாக மாற்றிக் கொள்கின்றது.
பால்வெளி மண்டலங்களாக
மாற்றும் பொழுது தூசுகளாக வருகின்றது.
1.இந்தத் தூசிகள் சூரியன்
அருகிலே வரப்படும் பொழுது மோதுகின்றது.
2.ஒன்றுடன் ஒன்று மோதி எதிர் நிலையாகி மின்கதிர்களாக மாறுகின்றது.
மின் கதிர்களாக மாறும் ஒளிக் கற்றைகளை வெள்ளிக்
கோள் எடுத்துக் கொள்கின்றது. அதிலே விஷத்தின் தன்மை பிரிவதைக் கேதுக் கோள் அந்த விஷத்தினைத் தான் வலு கொண்டு கவர்ந்து கொள்கின்றது. அதே சமயத்தில்
இணைத்த உணர்வின் தன்மையை ராகுக் கோள்
தனக்குள் கவர்ந்து தன்னுடன் இணைத்துக் கொள்கிறது.
இதிலே வரும் ஓசை… சப்தத்தை செவ்வாய்க் கோள் எடுத்துக் கொள்கின்றது. இதிலே வரும் கழிவு ஆவித்
தன்மை தனித்தன்மை அடைந்ததைச் சனிக்கோள்
எடுத்துக் கொள்கின்றது.
சாதாரணமாக… நாம் சமையல்
செய்யும் போது நாம் பல பொருள்களை எடுத்து வேக வைக்கின்றோம்
அப்பொழுது அந்தச் சத்தெல்லாம் ஒன்றுடன் ஒன்று
கலந்து விடுகின்றது.
ஆவித் தன்மைகள் மேலே செல்லுகின்றது. ஆவித்
தன்மை அடைந்தபின் மேகக் கூட்டத்துடன்
இணைந்து கொள்கின்றது.
1.அதில் நீர் என்ற நிலைகள் வந்தாலும் மேகக்
கூட்டத்திற்குள் கலந்தபின்
2.அதன் உணர்வின் தன்மையை பல வர்ணங்களில் பல ஒளிக் கற்றைகள் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது
3.அதில் கலந்து கொண்ட உணர்வின் தன்மையுடன் மோதுகின்றது….
4.அப்பொழுது பளீர்…ர்ர் என்று மின்னல் ஆகிறது… மின் கதிர்கள் அதைக் கருக்குகின்றது.
5.கருக்கிய நிலைகள் கொண்டு ஆவித் தன்மை மேகம் சுத்தம் ஆகின்றது.
6.சுத்தமான பின் இதிலே பிரிந்த உப்புச் சத்தின் தன்மை கலக்கப்படும் பொழுது மழை நீராகப் பெய்கின்றது.
எத்தனையோ வகைகள் இப்படிச் செல்கின்றது.
2.வான் வீதியின் உணர்வுகளை நுகர்ந்து வளர்ச்சி பெற்றான்.
2.ஒன்றுடன் ஒன்று மோதி எதிர் நிலையாகி மின்கதிர்களாக மாறுகின்றது.
2.அதன் உணர்வின் தன்மையை பல வர்ணங்களில் பல ஒளிக் கற்றைகள் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது
3.அதில் கலந்து கொண்ட உணர்வின் தன்மையுடன் மோதுகின்றது….
4.அப்பொழுது பளீர்…ர்ர் என்று மின்னல் ஆகிறது… மின் கதிர்கள் அதைக் கருக்குகின்றது.
5.கருக்கிய நிலைகள் கொண்டு ஆவித் தன்மை மேகம் சுத்தம் ஆகின்றது.
6.சுத்தமான பின் இதிலே பிரிந்த உப்புச் சத்தின் தன்மை கலக்கப்படும் பொழுது மழை நீராகப் பெய்கின்றது.
ஆனால் மனிதனான
பின் விஷம் கலந்த உணர்வின் தன்மை
(தொழிற்சாலைகளிலிருந்து வருவது) ஆவியாக மாறப்படும் பொழுது வான் வீதியில் சென்று அது மேகக் கூட்டங்களாக மாறி மழை
நீராக வரப்படும் பொழுது “கெமிக்கல் மழை…” என்று விஞ்ஞானத்தின் தன்மையால் ஏற்படுகின்றது.