
அருள் வழியில் நீங்கள் முழுமையாக யாராவது தயாரானால் தான் நல்லது
முந்தைய காலங்களில் யாம் கொடுக்கும்
உபதேசத்தையெல்லாம் யாரும் எட்டிப் பிடிப்பது
என்றால் கஷ்டம். எக்ஸ்பிரஸ் மாதிரி ஓடிக் கொண்டேயிருக்கும்…. யாரும் அர்த்தம் காண முடியாது.
ஆனால் இப்பொழுது எல்லோருக்கும் அர்த்தம் புரியும் அளவிற்குத் தான் உபதேசித்துக் கொண்டு வருகின்றேன்.
காரணம் ஆரம்பத்தில் சில ரகசியங்களை எல்லாம் சொல்வேன்.
மந்திரவாதிகள் அதை எல்லாம்
திருடி எடுத்துக் கொள்வார்கள் என்பதற்காகப் பட்டும் படாதபடி அவர்களுக்குப்
புரியாமல் இருப்பதற்காகக் கட…கட… என்று உருட்டிக் கொண்டு செல்வேன்.
1.இப்பொழுது அது எல்லாம் இல்லை.
2.உலகம் மிகவும் மோசமான நிலையில் இருள் சூழும்
நிலைகளாகச் சென்று கொண்டிருப்பதால்
3.எல்லோருக்கும் இதைக் கிடைக்கச்
செய்ய வேண்டும் என்பதற்குத்தான் பவரைக் கொடுக்கின்றேன்.
இதைச் சிதற
விட்டு விடாதீர்கள்.
1.இந்த உபதேசத்தைக் கேட்டவர்கள் நீங்கள் தயாரானால் போதும்.
2.உலகையும் காக்கலாம் ஊரையும் காக்கலாம் வீட்டையும் காக்கலாம்.
முறைப்படுத்திப்
பக்குவப்படுத்திக் கொண்டால் போதும். சிரமப்பட வேண்டியதில்லை… சிரமமான நிலையில் இருந்து விடுபடுவதற்குத் தான்
உணர்த்துகின்றேன்.
நான் சிரமப்பட்டேன்… தெளிந்தேன்…! நீங்கள் அதைப் பெற வேண்டும் என்று தான்
உபதேசிக்கின்றேன்.
1.இதிலே நீங்கள் முழுமையாக யாராவது தயாரானால் தான் நல்லது.
2.அரையும் குறையுமாக விட்டு விட்டுச் செல்லக்கூடாது.
விஷ உலகமாக
மாறிக் கொண்டிருக்கும் நிலையில் காற்று மண்டலமும் நச்சுத்தன்மை ஆகிக் கொண்டுள்ளது. கடவுளின் அவதாரத்தில் வராகன்
சாக்கடையில் உள்ள நாற்றத்தை எப்படிப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்ததோ இதைப் போல அந்த நச்சுத்தன்மைகளை எல்லாம் நீக்கிவிட்டுத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப்
பெருக்கி உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை.
இந்தச் சூரியன்
அப்படியே இருக்கப் போவதில்லை. அதனுடைய ஈர்ப்பு
வட்டத்தில் இருக்கக்கூடிய இந்தப் பூமியும் எந்த
நிமிடத்திலும் தலைகீழாக மாறிவிடும்.
அணுகுண்டுகள் வெடித்தாலே போதும். எந்தப் பகுதியில் இதைச் செயல்படுத்துகின்றார்களோ சரமாரியாக
அவைகள் வெடித்தால் சூரியனை ஒளிக் கதிர்கள்
அங்கே தடுக்கப்படுகின்றது. வெயில்
படவில்லை என்றால் பனிப்பாறைகளாகி அந்த இடத்தில் பூமி உறைந்து
விடும்… தலை குப்புறக் கவிழ்ந்து
விடும்.
ஆரம்பத்திலே துருவத்தின் வழி பூமி சக்திகளைக் கவரப்படும் பொழுது முட்டை வடிவில் வளர்ந்தது.
அப்போது அது திரும்பும் நிலை வந்தது.
1.அந்தச் சந்தர்ப்பத்தில் தான் அகஸ்தியன் இந்தப் பூமியை லேசாகத் திருப்பி வைத்தான்… பூமி சமமானது.
2.இதுவரையிலும் இந்த வண்டி ஓடிக் கொண்டுள்ளது.
ஆனால் விஞ்ஞான அறிவு இன்று சென்று கொண்டிருக்கும் நிலையில் பூமி எங்கே போகும்…? எப்படி ஆகும்…? என்று சொல்ல முடியாது. அத்தகைய நிலை இருக்கின்றது… குறுகிய காலமே இருக்கின்றது.
எங்கே பார்த்தாலும் தீவிரவாதம்…! இந்த உணர்வு நமக்குள் பதிவானால் காற்றலைகளில் அது இருக்கிறது.
நாம் மீண்டும் எண்ணினால் நம் உடலுக்குள்ளும் அது
தீவிரவாதமாக வருகிறது… அறியாமலே பகைமை…!
உடலுக்குள் தீமையாக வருகின்றது.
இதிலிருந்தெல்லாம்
நீங்கள் விடுபட வேண்டும்.
1.எப்படியும் கொஞ்சம் பேராவது முந்திக் கொண்டீர்கள் என்றால் மற்றவர்களுக்கும் நன்மை செய்ய
முடியும்.
2.நான் ஒருவன் பெற்றால் போதுமா…? நீங்கள் எல்லோரும்
தயாராக வேண்டும் அல்லவா…!
ஆனால் இன்னும் ஒன்றாம் வகுப்பிலே இருந்தது போன்று… அருள் வழியில் பெற்ற அனுபவங்களை ஒவ்வொருவரையும் சொல்லச் சொன்னால் எதை எதையோ சொல்கின்றார்கள். தான் பெற்ற
அனுபவங்களைச் சரியாகச் சொல்ல
முடியவில்லை.
உங்கள் அனுபவங்களை ஏன் கேட்கிறோம்…? என்றால்
1.நீங்கள்
கற்றுக் கொண்ட உணர்வு மற்றவர்களும் அதன் வழி
கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.
2.அதைத்
தெளிவாகச் சொன்னால் போதும்.
3.100 பேர் இது போன்று 100 விதமான கருத்துக்களை அனுபவங்களைச் சொன்னால் 100 விதமான உணர்வுகள்
அங்கே வருகின்றது.
4.மற்றவர்கள் அதைத் தெரிந்து கொள்ள உபயோகமாக இருக்கும்
என்று சொல்கின்றோம்.
யாம் சிரமப்பட்டுத் தெரிந்து கொண்டு வந்தோம். அதை எல்லாம் நான் உங்களுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கு முன் விரயம் ஆகி விடுகின்றது.
ஒரு சிலர் அனுபவங்களுக்குப் பதில் கதையைச் சொல்கின்றார்கள்.
ஆகவே எந்தெந்த நேரங்களில் எதை எதைச் செய்ய வேண்டும்…? எப்போது அதைக் கேட்க வேண்டும்…? என்ற
பொறுப்புணர்ந்து
1.குருவிடம் எப்படிப் பேச வேண்டும்…?
2.குரு வழியில் நாம் எப்படிச் செல்ல வேண்டும்…?
3.குரு
வழியினை எப்படிப் பின்பற்ற வேண்டும்…? என்று
நீங்கள் பக்குவப்பட வேண்டும்.
உங்களுக்குச் சக்தி
கொடுக்கிறோம் என்றால் அதைப் பயன்படுத்திய நிலையில் அடுத்து அதை வளர்ச்சியின் பாதைக்கு எப்படிக் கொண்டு செல்ல வேண்டும்…? என்று எம்மிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
அதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சாமியிடம் எப்படிக்
கேட்பது…? என்று எண்ண வேண்டியதில்லை. “அதையெல்லாம் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தியை நீங்கள்
பெற வேண்டும்…”
அதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் வளர்த்துக் கொண்டால் ஆயிரம் பேருடைய தீமைகளை நீங்கள் போக்க முடியும்.
2.உங்கள் அரவணைப்பில் ஆயிரம் பேரைக் காக்க முடியும்.
ஆகவே பழமையை எண்ணாதபடி எதிர்காலத்தில் இதைப் போன்ற ஆக்கபூர்வமான செயல்களைச் செயல்படுத்த வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்தைக் காட்டுங்கள்.