
எனது வேலை ஞான வித்தை உங்களுக்குள் வளர்ப்பது தான்
மீனுக்கு இரையைப் போடுகின்றோம். அது வந்து சாப்பிடுகின்றது. உடனே தூக்கிப் பாக்கெட்டில் போட்டுக் கொள்கின்றோம்.
இதே மாதிரித் தான் உங்களுக்குள் இருக்கக்கூடிய ஆசையின் உணர்வுகளுக்கு அந்த இரைகளைப் போட வேண்டும் என்று வருகின்றேன்.
1.தொழிலில் லாபம் வேண்டும் என்று வருகிறீர்கள்.
2.அப்படி வந்த பின் அந்த வழிகளில் எடுத்து அந்த அருள் ஞான வித்தை உள்ளுக்குள் செலுத்தி விடுகின்றேன்.
3.அந்த அருள் வழியை அடுத்து நீங்கள் பின்பற்றினால் இந்த ஆசையின் நிலைகள் எதுவோ
4.அடுத்து நீங்கள் தேடாமலே செல்வங்கள் தேடி வரும். தேடாமலே உங்களுக்குள் மகிழ்ச்சி வரும்.
அந்த மகிழ்ச்சி என்று உருவாக்கப்படும் பொழுது அந்தச் செல்வம் வந்தாலும் தாராளமாக அதைச் செலவழிக்க வேண்டி வரும்.
செல்வம் இருந்தாலும் பொதுவாக அதைப் பாதுகாக்கும் ஞானம் இருக்காது. சிக்கனம் செய்வோம்... சாப்பிடாமல் கூட செய்வோம்... ஒருவரை வெறுத்துப் பேசுவோம்... சண்டைக்குப் போவோம். அதற்குச் செலவழிப்போம்.
அதே சமயத்தில் அன்புடன் இருப்போம் பரிவுடன் இருப்போம்... இருந்தாலும் அதைத் துடைக்க முடிவதில்லை.
1.வேதனைப்பட்டவரை நுகர்ந்தால் நோயாகி விடுகின்றது.
2.இந்தப் பணத்தைச் செலவழித்தாலும் அது போய் விடுகின்றது.
3.இது எல்லாம் போன பிற்பாடு அந்த நோயை நீக்க முடியுமா என்றால் முடியாது.
காசை வைத்து ஆன்மாவை விலைக்கு வாங்க முடியாது...!
அருள் ஞானிகள் உணர்வை அழியாச் செல்வமாக துருவ நட்சத்திரம் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த உணர்வினை நமக்குள் சேர்த்துப் பழக வேண்டும். வாழ்க்கையே தியானம் ஆக்க வேண்டும்.
உட்கார்ந்து தியானம் செய்து கொண்டேயிருந்தால் சக்தி கிடைக்கும் என்றால்... அடுத்து சாப்பாட்டுக்கு எங்கே செல்வது...? உட்கார்ந்து கொண்டே இருந்தபின் சாப்பாடு இல்லை என்றால்... அதை யாரும் கொடுக்கவில்லை என்றால் அந்த நேரத்தில் நாம் ஏங்கிக் கொண்டிருக்க வேண்டி வரும்.
ஆகவே
1.நமக்குள் அந்த மன வலு கொண்டு தொழிலையும் பார்க்க வேண்டும் உடலையும் காக்க வேண்டும் அதற்குப் பொருளும் வேண்டும்.
2.அதற்குத் தான் ஞாபகப்படுத்துவதற்கு உங்களுக்குப் பிரசாதம் கொடுக்கும் பொழுது அதில் காசைச் சேர்த்துக் கொடுக்கின்றோம்.
3.அந்தச் செல்வம் உங்களுக்கு வரும்... மகிழ்ச்சி கிடைக்கும்.
அதையாவது எடுத்து வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் செல்வம் தன்னாலே வரும் என்று சொல்கிறோம்.
ஆனால் அதை விடுத்துவிட்டு... நான் தொழில் செய்கின்றேன். கஷ்டம் என்ன விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது. வாங்கியவன் பணத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறான். அதனால் நான் வாங்கியவனுக்குக் கொடுக்க முடியவில்லை என்று இந்த ராகத்தைத் தான் பாடுகின்றோம்.
ஆகவே... அந்த அருள் ஞானத்தை வளர்க்க வேண்டும். அந்த அருளொளியைக் கூட்டி வளர்த்தால் காலத்தால் அந்த மகிழ்ச்சியை ஊட்டும். அருள் செல்வம் வளரும்.
அருள் செல்வம் வளர வளர யார் நம்முடன் பகைமையாக இருப்பினும் இந்த உணர்வுகள் சேரச் சேர உண்மைகளை அங்கே உணர்த்தும். தவறு என்ற உணர்வுகளை அவர் உணர்வார்.
உணரவில்லை என்றாலும் இந்த உணர்வின் தன்மை அவர் வலுவை இழக்கச் செய்யும். அவர் செய்யும் தவறுகளால் மற்ற இடங்களில் சிக்க வைக்கும்.
ஆக...
1.நம்மைப் பாதிக்கும் நிலை வராது.
2.நம்மைப் பாதுகாக்கும் நிலை வருகின்றது நல்லதைக் காக்கும் நிலை உருபெறுகின்றது
இதையெல்லாம் நாம் வழிப்படுத்துதல் வேண்டும்.