ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 24, 2026

தெய்வச் செயல்

தெய்வச் செயல்


தீமையானவற்றை நாம் காணும் பட்சத்தில்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கும் பொழுது
2.நம்மிடத்தில் உணரப்பட்ட தீமை துடைக்கப்படுகின்றது.
 
இதைத் தான் தெய்வச் செயல் என்பது.
 
மேலும் யார் நமக்குத் தீமை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றாரோ அவரிடத்தில் "நல்ல உணர்வுகள் வளர வேண்டும்" என்று எண்ணி அதனின் உணர்வை நாம் பரப்பும் பொழுது அங்கே கடும் சொல் வராது,  
 
அது கனிந்திடும் நிலையாகக் கேட்போரின் உணர்வில் இனிமையானதாகப் பாய்ந்து அவரிடத்தில் இருக்கும் தவறை மாற்றி அவர் நம் மீது கொண்ட பகைமையை நீக்கி நட்பினை வளர்க்கும். 
 
பிறவிப் பெருங்கடல் நீந்தி தன் ஞானத்தால் பிறவி இல்லாப் பெரு நிலையை அடைந்து உயிருடன் ஒன்றி ஒளிச்சரீரமாக இன்றும் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மகரிஷிகள்.
 
1.அந்த  மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் ஏக்கத்துடன்
2.நமது நினைவின் ஆற்றல் அடிக்கடி அவர்கள் பால் செல்லும் பொழுது
3.அவர்களிடம் நமது உயிரான்மா இணைந்து அங்கே சுழலும்  சக்தியாக
4."பிறவா நிலை" என்னும் நிலையை அடையச் செய்கின்றது.
 
அவ்வாறில்லாமல் நமக்குத் தீங்கு செய்பவரைப் பற்றியே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் இந்த உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா இந்த உடலில் வாழ்ந்த காலத்தில் எவரைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தோமோ அவரின் உடலுக்குள் இந்த உயிரான்மாவை அழைத்துச் சென்றுவிடும்,
 
பின் அந்தத் தீங்கின் விளைவை அனுபவிக்கச் செய்து அதன் மூலம் அவரிடத்தில் விளைந்த உணர்வின் சத்தை இந்த உயிரான்மா கவர்ந்து அவரின் உயிரான்மாவையும் வீழ்த்தி இதுவும் வீழ்ந்து பிறிதொன்றைக் கொன்று புசிக்கும் உயிரினங்களின் ஈர்ப்பிற்குள் சிக்கி அதனின் சரீரத்தை இந்த உயிரான்மா பெறுகின்றது.
 
ஆகவே நாம் தேய்பிறை போன்று இல்லாது வளர்பிறையாக
1.மெய் ஞானத்தை வளர்க்கும் விதமாக மெய் ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து வாழ்வில் வரும் தீமைகளை ஒடுக்கி
2.விண்ணில் நிலைத்த ஒளி சரீரத்துடன் இருந்து வரும் மகா ஞானிகளின் ஈர்ப்பில் கலந்து நாமும் அந்த ஓளிச்சரீரமாக வாழ்வோம்
 
இதன் வழியில் கூட்டுத் தியானங்களில் ஏங்கித் தியானிக்கும் அனைத்து உயிராத்மாக்களுக்கும் எமது ஆசீர்வாதங்கள்.

இன்று உலகில் நடப்பதெற்கெல்லாம் மனிதனின் எண்ணமே மூலமாக இருக்கின்றது

இன்று உலகில் நடப்பதெற்கெல்லாம் மனிதனின் எண்ணமே மூலமாக இருக்கின்றது


இன்று உலகில் போர்கள் நடந்து கொண்டுள்ளது. சிந்திக்கும் ஆற்றல் மறைந்து கொண்டுள்ளது.
1.நல்ல செய்திகளைக் கேட்க முடியவில்லை.
2.அன்பும் பண்பும் அரவணைப்பும் மறைந்து வருகிறது.
 
பண்டைய கால மனிதர்கள் விலங்குகளைப் போல் வாழ்ந்தது போன்று இன்று நாம் நகரில் வாழ்ந்தாலும் “காட்டில் வாழ்வது போல் தான் இருக்கிறது…”
 
ஒருவருக்கொருவர் கொல்லும் உணர்வே வளர்ந்து கொண்டிருக்கின்றது. அத்தகைய தீமையான நிலைகளை அகற்றிடும் சக்தி எங்குமில்லை.
1.எந்த மதக் கடவுளும் அதைக் காக்கவில்லை.
2.இன்றைய உலகில் கடவுளாக வணங்கி வரும் எந்தக் கடவுளும் தீமை செய்பவர்களுக்கு நல்ல போதனையைக் கொடுக்கவில்லை.
 
நாம் எண்ணிய உணர்வுகள் உயிரால் இயக்கப்பட்டு அந்த உணர்வின் செயலே தான் நமக்குள் நடக்கின்றதே தவிர மனிதனுடைய எண்ணம் தான் இதற்கு மூலமாகிறது…”
 
எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றது. அந்த உணர்வை அணுவாக மாற்றுகின்றது அதன் வழியே செயலும் நடந்து கொண்டிருக்கிறது.
 
தனித்து ஒரு கடவுள் இல்லை…!
 
1.நாம் எண்ணும் உணர்வுகளில் எத்தகைய தீமைகளை நாம் செய்கிறோம் என்று நம் உயிர் கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கும்.
2.அதே சமயத்தில் எந்த வகையில் எந்தெந்தத் தீமைகளை நீக்கினோம் என்று அந்தக் கணக்கையும் உயிர் வைத்துக் கொண்டே இருக்கும்.
 
ஆக மொத்தம் முடிவில் நமக்கு ஜட்ஜ்மெண்ட் - தீர்ப்பு கூறுவது நம் உயிர் தான். எதன் கணக்காகின்றதோ…
1.நீ இவ்வளவு செய்தாய் அதற்குண்டான உடலை நீ பெறுவாய் அதனை நீ அனுபவித்துப் பார்…! என்று தீர்ப்புக் கூறி
2.அதன் வழி அடுத்த வாழ்க்கை தொடர்கின்றது.
 
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தின் மூலம் தீமையை அகற்றிடும் அருள் சக்திகளைப் பெற்றுப் பழகி அதை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
 
பிறருடைய கஷ்டமோ துன்பமோ துயரமோ அதை உற்றுப் பார்த்து அவர்கள் சொல்வதைக் கேட்டு நுகர்ந்திருந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் இயக்கிடாது தடைப்படுத்தி ஒவ்வொரு நொடிப் பொழுதும் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்
 
உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அனைத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருக்கி இப் பிறவியில் வரும் இருளை அகற்றி… “உயிருடன் ஒன்றி ஒளி என்ற உடலைத் தான் பெறுவோம்…” என்று உறுதிப்படுத்துங்கள்.
 
1.எந்த நிலையிலும் இந்த உடலை விட்டுத் தான் உயிர் செல்கிறது.
2.செல்லும் பொழுது இந்த உடலில் எதைச் சேர்த்துக் கொண்டோமோ அதற்குத்தக்க மாற்று உடலை உருவாக்குகின்றது உயிர்.
3.உணர்வுக்கொப்ப உடலை உயிர் மாற்றுகின்றது என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் ஏற்கனவே பல முறை உபதேசித்துள்ளேன்.
 
ஆகவே குரு வழியில் நமக்குள் அருள் சக்தியினைக் கூட்டித் தீமை புகாது தடுத்து நாம் பார்ப்போருக்குத் தீமை என்று உணர்ந்தால் அது வராது தடுத்து வேதனைப்படும் உணர்வுகளிலிருந்து அவரை நாம் மீட்டு அவரையும் அருள் வழியில் அழைத்துச் செல்லும் அருள் ஞானத்தை நாம் பெறவே இந்தத் தியானத்தை அமைத்துள்ளோம்.
 
உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கும் பொழுது நீங்களும் அதன் வழியில் அதைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்…”
 
உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தியைப் பெற்று அதன் வழியில் உங்கள் உடலில் தீமை அகற்றிடும் சக்தியாக அத்தகைய உறுப்புகளாக மாற்றி ஓர் தெளிந்த மனம் பெறும் சக்தி பெறுவீர்கள்.
 
1.வரும் இருளை அகற்றி இந்த வாழ்க்கையை ஒரு புனிதப் பயணமாக வைத்து
2.இந்த வாழ்க்கைக்குப் பின் என்றும் ஏகாந்த நிலையாகப்கைமையற்ற நிலையில்
3.பிறிதொன்று நம்மைக் கவர்ந்திடாத நிலையை அடையச் செய்யும் மார்க்கம் தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழி…”