
அருள் பற்று... குடும்பப் பற்று
அருள் உணர்வுகளை நாம் பற்றுடன் பற்ற வேண்டும். அதன் வழி சென்றால் அருள் வழி வாழ முடியும். இருந்தாலும் குடும்பப் பற்றினை அதிகமாகச் சேர்த்து அருள் பற்றினைக் குறைக்கப்படும் பொழுது சிந்தனையை இழக்கும்படி ஆகிவிடுகின்றது.
1.என் குழந்தைக்கு இப்படியாக வேண்டும் மற்றவர்களுக்கு இப்படியாக வேண்டும் என்ற உணர்வு வந்து விட்டாலே
2.நமக்குள் பதிந்திருந்த பழைய உணர்வுகள் அனைத்தும் முன்னுக்கு வந்துவிடும்.
3.அது முன்னுக்கு வந்துவிட்டால் அதைக் காப்பது என்பதே மிகவும் சிரமம்.
ஆகவே நாம் ஒவ்வொரு நொடியிலும் ஒரு காரியத்தைச் சித்தியாக்க வேண்டும் என்றால் அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று "அதை வலுவாக்கித் தெளிந்த நிலை பெற வேண்டும்..." என்ற இந்த உணர்வை அடிக்கடி கூட்டி வந்தால் சரியாக இருக்கும்.
அதற்குக் கண்களைத் திறந்து விண்ணை நோக்கி ஏங்கி மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் ஒரு ஐந்து நிமிடமாவது எண்ணி வாழ்க்கையில் எது குறையாகத் தென்படுகின்றதோ அது நிறைவேற வேண்டும். குழந்தைக்குத் திருமணம் சீக்கிரம் நடக்க வேண்டும் அது எதிர்காலம் சிறந்த நிலை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
ஆனால் பெண்ணுக்கு வயதாகிவிட்டது... திருமணமாகவில்லையே...! என்ற ஏக்கம் வருகின்றது. ஆனால் அந்த ஏக்கம் திருமணம் நடக்க வேண்டும் என்ற நிலையாக இருந்தால் அதில் வேதனை வராது.
சில குடும்பங்களில் வேலையில் இருந்து அவர்கள் பணி ஓய்வு பெற்று இருப்பார்கள்.
1.அந்த வயதான காலகட்டத்தில் சம்பாத்தியம் இல்லாததால் உணர்வுகள் மாறி விஷத்தின் தன்மையாகிப் புவியின் பற்று அதிகரித்து விடுகின்றது.
2.உடலின் பற்று அதிகரித்து அருள் ஞானிகள் பற்று தணிக்கிறது.
ஆனால் ஞானிகள் பற்றினைக் கூட்டினால் இந்த வாழ்க்கையில் வரும் பற்றுகள் எதையும் வெல்ல முடியும்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் எடுக்கும் உணர்வுகள்... அது ஆர்வமாக வேகமாக இருக்கும் பொழுது நலமாகிறது. ஆனால் தளர்ச்சி அடைந்தால் விஷத்தின் தன்மை கூடி விடுகின்றது ஆனால் இத்தகைய உணர்வுகள் கூடிவிட்டால் அருள் ஞானத்தை இழக்கும் சந்தர்ப்பம் ஆகி விடுகிறது.
ஒரு சிலருக்குத் தாய் கருவில் இருக்கும் பொழுது ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள்
1.ஒருவருக்குத் திருமணம் ஆகவில்லை என்ற இத்தகைய குறைவான உணர்வுகளைக் கேட்டு நுகர்ந்துதிருந்தால்
2.அந்த அதிர்ச்சியின் உணர்வு கருவிலே பதிவாகி விளைந்து விடுகின்றது.
3.இது பூர்வ புண்ணியமாக அமைந்து அதனால் சில தடைகள் வருகின்றது.
ஆனால் இத்தகைய தடைகள் வந்தாலும் நாம் அந்த அருள் உணர்வுகளைப் பெற வேண்டும்... மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை உடல் முழுவதும் படர வேண்டும். திருமணம் ஆகி அது செல்லும் குடும்பத்தில் செல்வம் செல்வாக்கு பெற வேண்டும் என்று நாம் இத்தகைய உணர்வைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.
மாறாக "வயதாகி விட்டதே..." என்று சோர்வை எடுத்தால் அதனால் வேதனையும் வருகிறது. பாலிலே பாதாமைப் போட்டு விஷத்தைப் போட்டது போன்று சக்தி இழந்து விடுகின்றது.
பக்தி மார்க்கத்தில் வந்த நிலையில் நல்லது நடக்கும் பொழுது மகிழ்ச்சி வருகின்றது. அதிலே சிறிது தடை ஆகிவிட்டால் அந்தக் குறையைத் தாங்கும் நிலை அற்றுப் போய் விடுகின்றது. அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்குத் தான் இந்த தியானமே உங்களுக்குப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்
வராகன் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை எடுத்தது போன்று
1.இந்த வாழ்க்கையில் வரும் இருளான உணர்வுகளை மாற்றிட அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி அந்த உணர்வுகளை வலுவாக்கி
2.நாம் தெளிந்து தெரிந்து தெளிவான நிலைகள் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.
நம் காரியங்களை அதன் வழி கொண்டு சித்தியாக்க முடியும்.