
இந்த உடலையும் உயிரையும் “குருவே எப்போதும் வழிநடத்த வேண்டும்…”
குருநாதர் எம்மைக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தாவர
இனங்கள் எவ்வாறு விளைகின்றது…? உயிரணுக்கள் உயிரினங்கள் எவ்வாறு விளைகின்றது…? கோள்கள் மற்ற சத்துக்களைக் கவர்ந்து எவ்வாறு வளர்கின்றது…? என்ற நிலையைச் சாப்பாடு இல்லாதபடி காட்டிலே அமர்த்தி அதை
எல்லாம் அறியும்படி செய்தார்.
விஞ்ஞானிகள் இயந்திரத்தின் துணை கொண்டு பல
நிலைகளைக் கண்டு கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் முழுமையும் அவர்கள் காணவில்லை.
அன்று மெய் ஞானிகள் தனக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின்
ஆற்றலின் துணை கொண்டு
1.நம் குருநாதரும் அதை அறிந்து…
அதை நாம் அறியும் நிலைக்கு எமக்குள் அதைப் பதியச்
செய்கின்றார்.
2.பதிந்த உணர்வினை நினைவு கொண்டு நான் விண்ணை நோக்கும் பொழுது விண்வெளியில் நடக்கும் அதிசயங்களை
உணரும்படி செய்கின்றார்.
3.சில நேரங்களில் காட்சியாகவும் பெறும்படிச்
செய்கின்றார்.
குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.ஒவ்வொரு ரூபத்திலும் அவர் பதிய வைத்த உணர்வை… ஏட்டை நினைவு கொள்ளும் பொழுது இதை உணர்த்தி
2.அவரே தான் இந்த உடலை வழி நடத்துகின்றார்… ஏனென்றால் என்னுள் இருந்து அல்ல…!
நாடாக்களில் பதிவு செய்தது போன்று அவர்
உணர்வுகள் எனக்குள் பதிவானது…!
1.அதை நான் எண்ணும் போது
அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு அதைப் பெறப்பட்டு
2.அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று அவர் செய்த உணர்வைத் தான் நான் செய்கின்றேன்.
3.அந்த உணர்வு தான் என்னை இவ்வாறு செயல்படுத்த
வைக்கின்றது.
ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நாம் அனைவரும்
பெறுவோம். அவர் காட்டிய அருள் வழியில் செல்வோம்.
இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகள் காட்டிய
அருள் வழியில் செல்வோம். இந்த உடல் வாழ்க்கையிலே மகிழ்ச்சி பெறச்
செய்வோம். நாம் பார்க்கும் அனைவரையும் மகிழச் செய்வோம்.
மகிழ்ந்த உணர்வுடனே வாழ்வோம்.
1.என்றும்
பேரானந்த நிலை பெற்ற அந்த மகரிஷிகளுடன்
ஒன்றி வாழ்வோம்
2.அவர்களுடன் ஒன்றி வாழும் நிலையை உருவாக்குவோம்… அவர்களுடனே
வாழ்வோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
உங்களிடம் இதற்கு முன்பு படிப்படியாகச் சிறுகச்
சிறுக சொல்லிக் கொண்டு வந்தேன்… இப்பொழுது
விளக்க உரைகளைக் கொடுக்கின்றேன். பூரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் அதற்குண்டான கால நேரம் இல்லை.
1.குருநாதர் பதிவு செய்தது எண்ணிலடங்காதது.
2.அனைத்தையும் நாம் முழுமையாக அறிய வேண்டுமென்றால்
இந்த மனித உடலுக்கு ஆயுள் பத்தாது.
அவ்வளவு பெரிய அண்டத்தின் உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார். அதை எல்லோரும் நீங்கள் பெற வேண்டும் என்ற
நிலையில் அவ்வப்போது துணுக்குத் துணுக்காகக் கொடுத்து அந்த நினைவுகளை உங்களுக்குள் ஊட்டுகின்றோம்.
1.அவ்வாறு ஊட்டி உங்கள்
உணர்வை ஒளியாக்கி அதனை எண்ணமாக்கி
2.உங்களுக்குள் இயக்கும் சக்தியாக அதைக் கொண்டு வருகின்றேன்.