ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 7, 2026

உலக மக்கள் உணர்வைப் பற்றாதே என்றார் குருநாதர்

உலக மக்கள் உணர்வைப் பற்றாதே என்றார் குருநாதர்


ஜெய் கணேச ஜெய் கணேச பாஹிமாம் என்று பாடுகின்றோம். அந்த கணேசன் எங்கே இருக்கின்றான்…? நம்மை எவ்வாறு இயக்குகிறான்…? என்ற தத்துவத்தை ஞானிகள் கொடுத்திருந்தாலும் புகழ் பாடும் நிலைகள் கொண்டு பொருள் காண முடியாத நிலைகள் நாம் திரிந்து கொண்டிருக்கின்றோம்.
 
மெய்ப் பொருள் கண்டறிந்த அருள் ஞானிகள் உணர்த்திய உண்மைகள் நமக்கு முன் படர்ந்து கொண்டே இருக்கின்றது. இதையெல்லாம் பித்தனாக இருந்த குருநாதர் உணர்த்துகிறார்.
 
எல்லோரும் உங்களைப் பைத்தியமாக எண்ணுகின்றார்கள். நீங்கள் ஏன் இவ்வாறு இருக்கிறீர்கள்…? என்று கேட்கப்படும் பொழுது அவர் சொல்கின்றார்.
 
1.உலக மக்கள் என்னைப் பித்தனாக எண்ணுகிறார்கள்.
2.ஆனால் அவர்கள் எத்தகைய பித்துப் பிடித்து வாழுகின்றார்கள்…? என்பதை நீ உணர்ந்து கொள்.
3.அவர்கள் உணர்வைப் பற்றாதே அருள் உணர்வைப் பற்றிக் கொள்.
4.மற்றவர்களைப் பற்றி எண்ணாதே,.. நான் கொடுத்த அந்த அருள் ஞானிகள் உணர்வை நீ பற்று.
 
வாழ்க்கையில் உன்னை அசுத்தப்படுத்தும் நிலைகளைப் பற்றற்றதாக்கு.
 
யார் உன்னைக் கேவலமாகப் பேசினாலும் சங்கடமாகப் பேசினாலும் கோமாகப் பேசினாலும் வேதனையாகப் பேசினாலும் அதையெல்லாம் பற்றற்றதாக்கு.
 
அருள் ஞானிகள் உணர்வின் தன்மை கொண்டு மெய் உலகம் சென்ற அந்த அருள் ஞானிகள் உணர்வைப் பற்று. தீமைகளைப் பற்றற்றதாக்கு.
 
1.அருள் ஞானிகள் உணர்வுகளை மக்கள் மத்தியிலே அதைப் பற்றுமபடிச் செய்…!
2.அருள் உணர்வுகளை நேசித்துத் தீமைகளை அகற்றிடும் நிலைகள் கொண்டு
3.தீமைகளைப் பற்றற்றதாக உருவாக்கிவிடு என்று குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உணர்த்துகிறோம்.
 
ஒரு சிலர் இதைப் பற்றற்றதாகவும் இருக்கலாம். ஆனால்
1.அருள் ஞானிகளைப் பற்றிடும் நிலையாகத் தீமைகளைப் பற்றற்றதாக்க முடியும் என்ற
2.எமது குருவின் ஆணைப்படி நீங்களும் அதைப் பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் சொல்கின்றேன்.

“என்றும் மாறாத நிலையில்” வாழ்பவர்களே மகரிஷிகள்

“என்றும் மாறாத நிலையில்” வாழ்பவர்களே மகரிஷிகள்


மனிதனாக வாழும் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் அருள் ஞானப் பற்றுடன் வாழ வேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்வுகளை ஒருவருக்கொருவர் நுகர வேண்டும்.
 
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அனைவரும் பெற வேண்டும்.
2.அனைவரது வாழ்க்கையிலும் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் குடும்பம் எல்லாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்.
4.அவர்கள் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் அருள் ஞான வாழ்க்கை வாழ வேண்டும்.
5.இருளை அகற்றி மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி இந்தப் பூமியில் வாழும் அனைவரும் பெற வேண்டும் என்று
6.நானும் நினைக்கின்றேன் நீங்களும் அது போன்று நினையுங்கள்.
 
இது அனைத்தும் ஒன்றாகச் சேர்த்தால் என்ன ஆகும்…?
 
சூரியனுடைய காந்த சக்தியால் வளர்க்கப்பட்ட தீமையான உணர்வுகளை பூமியில் வாழும் மனிதர்கள் அதை ஈர்க்கும் சக்தி இழக்கப்பட்டால் காலை 6 மணிக்கெல்லாம் அந்தத் தீமைகளைச் சூரியன் கவர்ந்து சென்று அங்கே ரைத்து விடும்ருக்கி ஒளியாக மாற்றிவிடும்.
 
விறகை அடுப்பிலே வைத்து எரிக்கின்றோம். அது எரிந்து நெருப்பாகின்றது ஒளியாக.தனுடைய உணர்வின் சத்துக்கள் பிரிகின்றது. ஆனால் விறகு கருகி விடுகின்றது.
 
சூரியன் கவர்ந்து ஆவியாக மாற்றுகின்றது.
1.ஆவியின் தன்மை எதன் உணர்வு பெற்றதோ செடி புவியின் ஈர்ப்பின் தன்மை கொண்டு
2.எந்த வித்து இங்கே படுகின்றதோ அதே மரத்தின் அதே வித்தாக அந்தச் சத்தை எடுத்து விளைகின்றது.
3.தனெதன் உணர்வின் தன்மை எது எது எடுத்து வளர்கின்றதோ.. இப்படி இயற்கையில் (மறுசுழற்சியாக) மாற்றிக் கொண்டே வருகின்றது.
 
ஆனால் நாம் மாறாத நிலைகள் பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
 
ஆறாவது அறிவு பெற்றவன்… என்றும் நிலையான என்றும் 16 என்ற நிலை அடைந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று நுகர்ந்து பழக வேண்டும்.
1.நம் உடலுக்குள் அதைப் பெருக்க வேண்டும்.
2.இதை அழியாச் சொத்தாக அழியாச் செல்வமாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.