ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 20, 2026

பெண்கள் தலையில் உருவாகும் பேன் பற்றிய உண்மைகள்

பெண்கள் தலையில் உருவாகும் பேன் பற்றிய உண்மைகள்


உதாரணமாக பெண்கள் தங்களது குழந்தைகள் மீது அன்பாக இருப்பார்கள்... பாசமாக இருப்பார்கள். ஆனால் பையன் சேட்டை செய்யும் பொழுதுசும்மா சேட்டை செய்கிறானேதொலைஞ்சு போறவன்…” என்று, பெண்கள் தங்களது பையனைப் பேசி விடுவார்கள்.
1.தன் குழந்தை மேல் பாசமாக இருந்தாலும்
2.கோபத்தில்தொலைஞ்சு போறவனே…!” என்ற வார்த்தையைச் சுலபமாகச் சொல்லிவிடுவார்கள்.
 
இதே போன்று மாமியார் மருமகளைப் பார்த்து ஒரு வேலையாகஏம்மா இப்படிச் செய்கிறாய்…? அதைச் செய்தால் என்ன…?” என்று ஒரு முறைக்கு இரு முறையாகச் சொல்லி விட்டால் போதும்.
 
உடனே மருமகள்… “சும்மா சொல்லிக் கொண்டேயிருந்தால் எப்படி…? நான் செய்ய மாட்டேனாஎனக்குத் தெரியாதா…?” என்று வெறுப்பை வெளிக்காட்டி விடுவார்.
 
1.இந்த உணர்வின் அலைகள் புவியின் ஈர்ப்பால் வீட்டில் பதிந்து விடுகின்றது.
2.பதிந்தபின் இந்த உணர்வுகள் அலைகளாக வெளிப்படுகின்றது.
3.நுகர்ந்த உணர்வுகள் அங்கே வெறுப்பாகின்றது.
4.வெறுப்பான உணர்வுகள் இருவரிடத்திலும் படரப்படும் பொழுது அது அவர்களிடம் விஷ அணுக்களை உருவாக்கத் தொடங்குகிறது,
5.அவர்களது உடலில் நல்ல குணத்திற்கு எதிர்மறையான உணர்வுகள் மோதும் பொழுது அவர்களது உடலில் அரிப்பு வரும்
 
சில வீடுகளில் சங்கடமும் சஞ்சலமும் இருந்தால் போதும். அங்கிருப்பவர்களுக்கு உடலில் அரிப்பு வரும்பார்க்கலாம். அதுவும் சிறிது நாள் சென்றால் அவர்களுடைய தலைகளில் சீலைப் பேனாக மாறிவிடும்.
 
வீட்டில் சஞ்சலமும் சலிப்பும் சங்கடமும் வேதனையும் கொண்டவர்கள் தலையில் நிச்சயம் பேன் வரும்.
1.சந்தோஷத்தை உருவாக்கிப் பாருங்கள்பேன் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.
2.ஏனென்றால் பேனிற்கு மனிதரின் சந்தோஷமான உணர்வுகள் எதிரி.
 
வீட்டில் சலிப்புமாமியாரின் கோபம்பையனின் சேட்டைகடை வியாபாரத்தில் மந்தம்பக்கத்து வீட்டுக்காரரின் வம்புஎன்று பலவற்றை எண்ணிச் சலித்து வெறுத்துப் பேசிக் கொண்டிருந்தால் போதும். நிச்சயம் அவர்கள் தலையில் பேன் வரும்.
 
அந்தப் பேன் அவர் தலையை விட்டு இறங்கினால் அடுத்து சஞ்சலம்  கொண்ட இன்னொருத்தரிடம்தான் போகுமே தவிர மற்றவர்களைப் பார்த்தால் அஞ்சி ஓடிவிடும். ஒரு வீட்டில் நாலைந்து பேர் இருந்தாலும் சஞ்சலம் கொண்டவரிடத்தில் மட்டுமே பேன்கள் உருவாகும்.
 
இது எதனால் இப்படி ஆகிறது…?
 
நமக்குள் எடுத்துக் கொண்ட மூச்சலைகளையும்… நாம் வெளிப்படுத்தும் எண்ண ஒலி அலைகளையும் சூரியனின் காந்தச் சக்தி எடுத்து வைத்துக் கொள்கின்றது.
1.மீண்டும் அதை நம்முள் சேர்த்தவுடனே அது ஜீவ அணுவாக மாறுகின்றது.
2.நம் உடலிலிருந்து வந்ததுநம் உடலிலேயே பாய்கின்றது.
 
இந்த உணர்வின் தன்மையை ஒட்டி இதனுடைய சக்தியை எடுத்து அது அணுவாக மாறுகின்றது. நம் உடலுக்குள் வந்து சாப்பிட ஆரம்பிக்கின்றது.
 
இதை நாம் தெரிந்து கொள்வது நலம்.

தியானத்தில் இருந்தால் மட்டும் பத்தாது…!

தியானத்தில் இருந்தால் மட்டும் பத்தாது…!


மைனர்கள் எல்லோரும் தியானத்தில் இருந்தால் மட்டும் பத்தாது…” நீங்கள் ஒவ்வொருவரும் வழிகாட்டியாக அமைய வேண்டும் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக ஞானிகளாக மாற வேண்டும்.
 
சாமி மீது உங்களுக்குப் பற்று அதிகமாக இருக்கலாம் ஆனால்
1.பற்று எதுவாக இருக்க வேண்டும்…?
2.அந்த அருளைப் பற்ற வேண்டும் இருளைப் போக்க வேண்டும்.
3.அந்த அருள் பற்று தான் நமக்குத் தேவை.
 
சாமியினுடைய உடல் பற்றல்ல…!
 
1.சாமியைக் கௌரவிப்பதும் சாமியை உயர்வாகச் சொல்வதும் உடலைத் தான்.
2.சாமியிடம் கேட்கும் உபதேசங்களை… அந்த அருளைப் பற்றி அதை நாம் போற்றுதல் வேண்டும்.
 
சாமியிடம் இருக்கும் அருள் பற்று எப்படி இருக்க வேண்டும்…?
1.ஞானத்தை வளர்த்தால் சாமியின் உடல் பற்று வராது.
2.சாமியின் ஞானப்பற்று தான் உங்களுக்கு வரவேண்டும்.
 
எங்கள் சாமி உயர்ந்தவர்…” என்று சொல்வதைக் காட்டிலும்
1.”அந்த உயர்ந்த உணர்வு என்னிலே வளர்கிறது…” என்று
2.உலகிற்கு நீங்கள் எடுத்துக் காட்டினால் வழி நடத்தினால் ருள் பற்று வருகின்றது.
 
இந்தத் தியானத்தைக் கடைபிடிப்போர்கள் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
நீங்கள் அனைவரும் இன்னொரு வேலை செய்ய வேண்டும். என்னுடைய உபதேசங்களை எழுத்து வடிவிற்குப் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும்.
1.அதை எழுதி என்னிடம் கொடுங்கள் திருத்தங்களைச் சொல்லிக் கொடுக்கின்றேன்
2.ஒவ்வொருவரும் அருள் ஞானத்தை வெளிப்படுத்தும் நூல் ஆசிரியராக வாருங்கள்.
 
அந்த மாதிரிப் பழகிக் கொண்டால் பகைமைகள் புகாது தடுக்கலாம். அருளைப் பெருக்கலாம்.ருண்ட உலகில் இருந்து மீட்டித் தெளிந்த மக்களாக கொண்டு வர முடியும்.
 
விஞ்ஞானத்தின் விளைவுகளிலிருந்து நம்மையும் நாட்டையும்  உலகையும் காக்க முடியும்.
 
ஒரு வித்தை மண்ணில் ஊன்றினோம் என்றால் அது உபயோகமற்றதாக மாறுகின்றது. பின் செடியாக வளர்ந்து தன் இனத்தின் வித்தைக் கவர்ந்து எல்லோருக்கும் பசியாற்றுகின்றது.
 
இதைப் போன்று கருவில் வளரும் சிசுக்களுக்கெல்லாம் அருள் ஞான வித்துக்களைப் பதிவு செய்து ஊன்றினால் அவன் வளர்ந்து அருள் ஞானத்தைக் கொண்டு அனைவரையும் காக்கும் திறன் கொண்ட ஞானி ஆகின்றான் நாட்டைக் காக்கும் ஞானியாகின்றான்.
 
இத்தகைய அருள் ஞானிகளை வளர்த்தால் தான்
1.இனி அரசாங்கங்க நிர்வாகத்தைத் தனதாக மாற்றி
2.“நாம்…” என்ற நிலைகளில் ஒன்றுபட்ட இயக்கமாக அவன் கொண்டு வருவான்.
 
இப்பொழுது உலகெங்கிலும் நடக்கும் அரசாங்கங்கள் அனைத்தும் நான்…” என்ற நிலையில் தான் நடக்கிறது.
 
நாம் என்ற நிலையில் அத்தகைய அரசாங்கத்தை உருவாக்கி மகிழ்ந்து வாழும் மக்களாக நாம் உருவாக்க வேண்டும். அத்தகைய ஞானிகள் உருவானால் அனைவரையும் பிறவி இல்லா நிலை அடையச் செய்யும் அரும்பெரும் சக்தியாக அது மாறும்.
1.ஆகவே ஞானிகளை உருவாக்குவோம்.
2.நமக்கு இனி ஒரு பிறப்பு வேண்டாம் நம்முடைய எல்லை ஒளி உடல் பெறுவது தான்.