ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 25, 2026

தியானத்தில் வளர்ச்சி பெற்றோர் அவசியம் தெரிய வேண்டியது

தியானத்தில் வளர்ச்சி பெற்றோர் அவசியம் தெரிய வேண்டியது


நாம் குரு காட்டிய வழியில் தியானத்தைக் கடைப்பிடித்து வாழ்கின்றோம். அப்படிச் சீராகக் கடைப்பிடிக்கும் பொழுது பிறருடைய கஷ்டமான உணர்வுகளைப் பிரித்துக் காட்டும்.
 
1.மகரிஷிகள் உணர்வை எடுத்து அதை நமக்குள் நீக்கிய பின் அவர்களுக்கு நல்ல வழியைக் காட்டி விட்டோம் என்றால்
2.வாழ்க்கையில் தீமைகள் வராதபடி தடுத்துக் கொள்ளலாம்.
 
இதை நீக்காமல் இருந்துவிட்டு இந்த உணர்வின் தன்மை எடுத்துக் கொண்டால் அதுவும் இதுவும் கலந்திருக்கும். இந்த ஆன்மாவில் உள்ளதை நாம் சுவாசித்தவுடன் உயிரில் கலக்கும்.
1.இரவில் புலனடங்கித் தூங்கும் போது இதெல்லாம் காட்சிப் பொருளாகவும் கெட்ட கனவுகளாகவும் வரும்.
2.இதைப் புரிந்து கொண்டோம் என்றால் நன்றாக இருக்கும்
 
ஒரு வெளிச்சத்தைப் போட்டு அதிலே எந்தக் கலர் சுற்றுகின்றோமோ அது தான் தெரியும். அது போல அறிவின் ஞானத்தை ஊட்டி இந்த உணர்வின் தன்மை வரப்படும் போது அந்த உணர்வு தான் நமக்குத் தெரியும்.
 
அப்பொழுது பிறருடைய குறைகளை உணர முடியும். இப்படி நடக்கின்றது அவருக்கு இடையூறு வருகின்றது என்று தெரியும்.
 
பிறர் தவறு செய்திருப்பார்கள். அவருடைய இன்னலான நிலைகள் தெரிய வந்திருக்கும். எனக்குக் காட்சி கிடைத்தது. அவரைப் பார்த்தேன். இந்த மாதிரிக் கஷ்டமாக வந்துவிட்டது.. எனக்கு முதலிலேயே தெரிந்தது என்று சொல்வோம்.
 
ஏனென்றால அவருடைய தவறின் உணர்வுகளை அறிய முடிகின்றது. இதைத்தான் நாம் நுகர்ந்து சொல்கின்றோம். அப்பொழுது அந்த மாதிரி நேரங்களில் காட்சிகளைக் கொடுத்தவுடனே இதை எப்படிச் செய்ய வேண்டும்…?
 
1.அருள் வழியில் பற்றுடன் ஆத்ம சுத்தி செய்து விட்டோம் என்றால் ஒருவரது நிலைகளைச் சொன்னாலும்
2.அவர் நஞ்சு கொண்ட வேதனையான உணர்வுகள் நம் ஆன்மாவில் கலக்காது.
 
ஆனால் இரவில் நம் வாழ்க்கையில் ஆத்ம சுத்தி செய்யாமலோ அல்லது செய்திருந்தாலும் அந்த ஆத்ம சுத்தியில் குறை இருந்தாலோ என்ன ஆகும்…?
 
ஒரு பாத்திரத்தில் அழுக்கு சிறிது ஒட்டியிருந்தால் அது சீக்கிரம் போய் விடுகின்றது. அதோடு ஒன்றிய நிலைகள் இருக்கும் போது இரண்டு தரம் தேய்த்துக் கழுவினாலும் போகாது. இதே மாதிரி நம் ஆத்ம சுத்தியிலும் ஏற்படும். இதெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
நான் ஆத்ம சுத்தி செய்கிறேன்… “இப்படித் தெரிகிறதே…!” என்று ஏங்கக்கூடாது. இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
1.நாம் போகும் மார்க்கங்கள் மனிதனின் முழுமை அடையும் நிலைகள்
2.பிறருடைய இருளைப் போக்கும் தகுதி பெற்றவர்கள் நாம்.
3.அதனால் அந்தத் தகுதியை நமக்குள் வளர்த்துக் கொள்வது நல்லது.
 
மற்றவர்களுடைய தவறைக் கண்ணால் பார்க்கின்றோம். நமக்குள் பதிவு செய்து விடுகின்றோம். நாம் ஆத்ம சுத்தி என்ற வலு சேர்த்திருந்தாலும் அந்த நிமிடம்தான் அந்த வலு.
 
அதிலே துடைப்பு அதிகம் இருக்காது. தூங்கப்போகும் போது இது வந்துவிடும்.
 
வெறுப்பின் உணர்வுகள் இங்கு வரப்படும் பொழுது தூக்கம் வராது. என்னதான் ஆத்ம சுத்தி செய்தாலும் தூக்கம் வரவில்லை என்போம். ஏனென்றால் அந்த உணர்வின் இயக்கங்களே நமக்குள் இருக்கும்.
 
அப்பொழுது நாம் ஆத்ம சுத்தி செய்த பின்பும் அந்தக் கடினமான நிலைகள் விலகவில்லை என்று பொருள். இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?
 
1.நம் நினைவைத் துருவ மகரிஷியோடு இணைக்க வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தோடு சப்தரிஷி மண்டலத்தோடு இணைக்க வேண்டும்.
3.இதைக் கூட்டிக் கொண்டே இருந்தோமென்றால் அந்த உணர்வுகள் நமக்குள் வர வர இது ஒடுங்கும்.
 
இந்த ஆன்மாவைச் அது சுத்தப்படுத்தும்.
 
அதே சமயத்தில் நம் உடலில் நாம் கேட்டறிந்த தீமையான அணுக்களுக்குச் சாப்பாடு போய்ச் சேராது. நம் வாழ்க்கையில் தொடர்ந்து அதிலே இருக்க வேண்டும்.
1.நம் வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் எடுத்து இந்த உடலென்ற சட்டியில் சமைக்க வேண்டும்.
 
நாம் எந்தெந்தக் காய்களை குழம்பில் போட்டுச் சமைக்கின்றோமோ அந்த வாசனைதான் வரும். நாம் உயர்ந்த சரக்குகளைப் போட்டாலும் காரமோ உப்பின் தன்மையோ கூடிவிட்டால் அந்தக் குழம்பின் சுவை கெட்டுவிடும்.
 
இந்தக் குழம்பைப் போன்றுதான் நம் வாழ்க்கையின் நிலைகளில் எதைச் செயல்படுத்துகின்றோமோ அந்த மணம் நமக்குள் சுவை கொண்ட சொல்லாகவும் செயலாகவும் வரும். அந்தச் சுவை கொண்ட உணர்ச்சிகளைத் தூண்டும்.
 
குழம்பில் சிறிது வித்தியாசமாகிப் போய்விட்டது என்றால் உள்ளுக்குள் இழுக்காது. சுவை கெட்டுவிடும். ஆனால் உணவு எவ்வளவு சத்தான நிலைகளில் இருந்தாலும் உள்ளே ஏற்றுக் கொள்ளாது மறுக்கின்றது.
 
சாப்பாட்டில் அதிலே போட்டிருக்கின்ற மணம் தான் முலாம். மணத்தின் உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்படும் பொழுது உள்ளுக்குள் இழுக்காது. வெளியில் தள்ளி விடுகின்றது. ஆனால் பசி எடுக்கும். இந்த மணத்தை நுகரும் உணர்ச்சிகள் நம்மை இயக்கினால் தான் இது உள்ளே போகும்.
 
ஆகையால்
1.நாம் நமது வாழ்க்கையில் குருநாதர் காட்டிய அருள் வழியில்
2.“மகரிஷிகளின் அருள் மணங்களை” ஒவ்வொரு நொடிப் பொழுதும் நுகர்ந்து பழக வேண்டும்.
 
சும்மா இருக்கும் பொழுது ஒருவரை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம் என்றால் அவர் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு திடீரென்று நினைவு ஓட்டம் ஓடும்,
 
ஒரு வெளிச்சத்தைப் போட்டவுடன் அங்கு இருக்கும் பொருள் தெரிய வரும். அதைப் போல ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் வரப்படும் பொழுது அந்த உண்மைகளை நாம் உணர முடியும். தொழிலில் இருப்போம். இந்த உணர்வுகள் அங்கே பிரித்துக் காட்டும்.
 
ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு அலைகள் போட்டவுடன்உதாரணமாக எழுத்து வடிவிலே ஆங்கிலமோ தமிழோ கொடுக்கிறார்கள். அதனதன் அழுத்தத்தைக் கொடுத்தவுடன் மற்றதைப் பிரித்துக் காட்டுகின்றது.
 
இதைப் போல நமது உயிர் சூரியனின் காந்த சக்தி கவர்ந்த இந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது அதை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
1.அதனுடைய செறிவினுடைய அளவுகோல் எதுவோ அதற்குத் தகுந்த மாதிரி நம் உடலை இயக்குகின்றது.
2.அதன் அளவுகோல் எதுவோ அதற்குத்தகுந்த மாதிரி நமது உயிர் ந்தக் காந்தத்தை இழுக்கின்றது.
3.அதில் வந்த உணர்வின் அழுத்தம் எவ்வளவு இருக்கின்றதோ அதற்குத் தகுந்த மாதிரி எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
4.மாற்றிய உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது அதற்குத் தகுந்த அதிர்வுகளைக் கொடுத்து உடலை இயக்குகின்றது.
5.அதற்குத் தகுந்த சிந்தனைகளைக் கொடுத்து அதற்குண்டான செயல்களையும் செய்கின்றது.
 
இதைப் போலத்தான் நமக்குள் நூற்றுக்கணக்கான பிரிவுகள் உண்டு.
 
அது வெளிப்படும் பொழுது எந்தெந்த அளவுகோல் இருக்கின்றதோ அதற்குத் தக்கவாறுதான் புலனடங்கித் தூங்கும் பொழுது அதிலே இந்த வாழ்க்கையில் நாம் எந்த உணர்வை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ அந்த அணுக்களின் உணர்ச்சிகள் அதிகமாகத் தூண்டும்அது ஆன்மாவாக மாறும்.
 
இது இரண்டும் கலந்து உயிரிலே படும் பொழுதுதான் எலக்ட்ரானிக்காக மாற்றிப் பல நிலைகளை நாம் தெரிந்து கொள்கின்றோம்.
1.தியான வழிகளில் இது ரொம்பத் தெளிவாகத் தெரியும்.
2.தூக்கத்தில் இருந்தாலும் சும்மா படுத்திருந்தாலும் நாம் அமைதியாக இருக்கும் பொழுது
3.இந்த ஆன்மாவில் உள்ளபடி நம் மனநிலையில் மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கும்.
4.அந்த மாதிரி நேரங்களில் தீமையான அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காதபடி ஆத்ம சுத்தி செய்து அகற்ற வேண்டும்.
 
இதுதான் ஆத்ம சுத்தியில் உள்ள மூலக்கூறு.

பிராணாயாமத்தில் உள்ள தத்துவம்

பிராணாயாமத்தில் உள்ள தத்துவம்


நான் சொல்லக்கூடிய உணர்வுகள் அனைத்தும் உங்கள் உயிரிலே மோதப்பட்டு உணர்ச்சிகள் இயக்கப்பட்டு நான் பேசிய உணர்வை அந்த இயக்க அணு உங்கள் உயிரிலே மோதிய பின் உமிழ் நீராக மாறுகின்றது.
 
அது தான் ஓம் இந்த உணர்வுகள் அனைத்தும் இயக்கப்பட்டு ம் என்று உமிழ் நீராக மாறுகின்றது. அந்த உமிழ் நீர் சிறுகுடலுக்கு வருகின்றது. ஒரு உயர்ந்த உணர்வுகளைச் சொல்லும் பொழுது சிறுகுடலில் உள்ள அணுக்கள் உற்சாகமடைகின்றது.
 
சாப்பிட்ட ஆகாரத்தை அப்பொழுது துரிதமாக நல்ல நிலைகளில் ஜீரணிக்கும் சக்தி கிடைக்கின்றது. அடுத்து பெருங்குடலுக்கு வரும் பொழுது பாம்பைப் போன்று உள்ளுக்குள் இழுத்து இழுத்து நசுக்கி அது ஜீரணிக்கும்அதனின் இயக்கம்.
 
1.ஆகாரத்தை எடுத்து இவ்வாறு நசுக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சத்துக்களை (ஆவி) ஃபில்டர் பண்ணும்.
2.ஒரு துணியை வைத்து பிழிந்தால் எப்படியோ… வேக வைத்தால் எப்படி ஆவி வருகின்றதோ
3.பெருங்குடலுக்கு வந்தபின் ஆவியாகிப் பிரித்துச் சத்தை எடுத்துக் கொள்கின்றது.
4.குடலுடன் சேர்த்த நரம்பு மண்டலங்கள் அதில் புனல் போன்று உண்டு அது அந்த ஆவிகளை வடிகட்டிப் பிரிக்கின்றது.
 
கரும்புச்சாற்றை எடுத்த பின் பல கெமிக்கல்களைப் போட்டு எத்தனையோ வகைகளில் செயல் முறைப்படுத்தி அதைச் சர்க்கரையாகப் பிரித்து எடுக்கின்றார்கள் அல்லவா…!
 
இதைப் போன்று புனல் போன்று உள்ள கணையத்தில் மொத்தமாக வருவதை மூன்று விதமாகப் பிரித்து ரத்தத்திற்கு கொழுப்பிற்கு உடல் சத்திற்கு என்று எடுக்கின்றது.
 
பிரித்ததை மற்ற பாகங்களுக்கு அனுப்பித் தசைகளுக்குள் இருக்கும் அணுக்களுக்குச் சாப்பாடு ஆகிறது
1.ஆவியாக மாறுகின்றது அதை எடுக்கின்றது சாப்பிடுகின்றது
2.அது மலமாகிறது… ந்த உறுப்புகள் கின்றது.
 
ஞானிகள் காட்டிய நிலையில்… நம் உயிரின் இயக்கம் எப்படி இருக்கின்றது…? நுகர்ந்த உணர்வுகள் உடலாக எப்படி மாறுகின்றது…? என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.
 
அடுத்து கல்லீரலுக்கு வரப்படும் பொழுது அதுவும் வடிகட்டுகிறது.
 
தண்ணீரில் அதிகமான அழுக்குகள் இருந்தால் விஞ்ஞான முறைப்படி பெரிய கல் சிறிய கற்கள் மணலைப் போட்டு வடிகட்டி அதை நல்ல தண்ணீராக மாற்றுகின்றார்கள்.
 
இதைப் போன்று தான் நாம் உணவாக உட்கொண்ட ஆகாரத்தில் உள்ள கசடுகளை எல்லாம் கல்லீரல் மாற்றி வடிகட்டி ரத்தத்தைச் சுத்தப்படுத்துகின்றது
1.தசைகளில் இருக்கும் திசுக்களுக்கு உணவாகப் போய்ச் சேருகின்றது.
2.அந்தத் திசுக்கள் தேனீக்கள் கூடு கட்டுவது போன்று உறுப்புகளாக உருவாகின்றது.
 
ண்ணீரலுக்கு வந்த பின் ரத்தங்கள் வடிகட்டப்படுகிறது. அடுத்து நுரையீரல் பாகம் வருகின்றது.து பம்ப் பண்ணி எடுக்கின்றது.
 
இதில் எந்தெந்த உணர்வுகள் கலக்கின்றதோ மூக்கு வழி காற்றிலிருந்து எடுத்து அதைச் சேர்க்கின்றது. நல்லதாக இருந்தால் அதே உணர்வாக ஆனபின் அதன் வழி இழுக்கின்றது.
 
இது இரண்டும் சேர்த்துப் பிராணவாயுவாக நாம் எதை எடுத்தோமோ இந்த உணர்வின் தன்மை இயக்கத்திற்கு ஆகின்றது. ஆனால் வேதனை என்ற உணர்வானால் வேதனையின் மூச்சாகி நாமும் சோர்வடைகின்றோம்.
 
ஓம் உயிரிலே பட்டுப் பிரணவமானாலும் அதற்குத்தக்க இது எப்படி இயக்குகின்றது…? என்பதை நாம் தெரிந்து கொள்வது நல்லது.
 
1.வேதனை வெறுப்பு போன்ற உணர்வுகள் நுரையீரலுக்கு வரும் பொழுது ஆவியாகி நீராக மாறி விடுகின்றது அங்கே நீராகும் பொழுது சளி கட்டுகின்றது.
2.அடிக்கடி வேதனைகளை எடுத்து அது அங்கே தேங்கி விட்டால் விஷக்கிருமிகள் உண்டாகின்றது
3.அப்புறம் அரிக்க ஆரம்பிக்கின்றது சளி உண்டாகிக் கொண்டே இருக்கும்.
4.சளி கட்டிய பின் சுவாசம் சீராக இல்லாதபடி அடைப்பாகித்டையாகிது.
5.நாளடைவில் விஷக்கிருமிகள் தேங்கி விட்டால் டிபி நோயாகவும் மாறுகின்றது.
 
வேதனையான உணர்வுகள் எல்லை கடந்து வெளிப்படுத்துவோரைப் பார்க்கிறோம். கேன்சர் நோயினால் அவதிப்படுவரைப் பார்க்கின்றோம். அது போன்ற நிலைகளை நுகர்ந்து விட்டால் இங்கே சேர்ந்து அதுவே கிருமி ஏற்படவும் காரணம் ஆகிறது.
 
இந்த வாழ்க்கையில் இது போன்ற நிலைகளைக் காணாமல் இருக்க முடியாது. விஷத்தின் வலிமையாகும் பொழுது அந்த விஷத்தை ஒன்று சேர்த்து உணவாக உட்கொள்ளும் அணுவின் தன்மை ஆகின்றது.
 
கேன்சர் என்று சொல்லும் பொழுது அது விஷத்தை உட்கொள்கின்றது பாம்பு எப்படி விஷத்தைப் பாய்ச்சி அதை உணவாக உட்கொள்கின்றதோ அதைப் போல் விஷத் தன்மைகள் ஆனால் ஒரு நோயாளியின் உடலில் அந்த விஷமானால் அங்கே அத்தகைய அணுவாகிறது.
 
அந்த மூச்சின் தன்மை படர்ந்து அத்தகைய இயக்க அணுக்களாக உருவாகி விட்டால் நம் உடலுக்குள் வந்து த்தகைய நிலையைச் செய்கின்றது. ஆனால் தவறு செய்யவில்லை. இயற்கையின் மாற்றங்கள்.
 
கல்லீரல் மண்ணீரலுக்கு வந்து அடுத்து நுரையீரலுக்கு வருகின்றது. ரத்தத்தை மற்ற பாகங்களுக்கு எல்லாம் சுத்தப்படுத்தி அனுப்புகின்றது. ரத்தத்தில் உள்ள கழிவை நீராக மாற்றுகின்றது.
 
உப்புச் சத்து சர்க்கரைச் சத்து வாத நீர் என்ற விஷத்தன்மைகளை கிட்னி சுத்திகரித்து வடிகட்டி நீராக மாற்றி வெளியேற்றுகின்றது. வடிகட்டப்பட்ட சுத்த ரத்தம் இருதயத்திற்கு வருகின்றது.
 
இருதயத்திலிருந்து ரத்தம் உடல் முழுவதும் அனுப்பப்பட்டு உற்சாகப்படுத்தி நல்ல அணுக்களாக மாற்றுகின்றது. ஆனால் வேதனையான உணர்வுகள் அதிகரித்து விட்டால் அதைச் சிறுநீரகம் சரியாக இயக்கவில்லை என்றால் உப்புச் சத்து வந்துவிடும் சர்க்கரைச் சத்தும் வந்துவிடும்.
 
1.ரத்தத்தில் அந்தக் கசடுகள் கலந்து இருதயத்திற்கு வரும் பொழுது அது பலவீனமாகின்றது.
2.லிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை என்று வடிகட்ட முடியாதபடி வரும் பொழுது இருதயத்திலே அடைப்பாகின்றது
3.உப்புச் சத்தினால் ரத்தம் உறைகின்றதுநெஞ்சு வலி வருகிறது.
 
வேதனையும் உற்சாகமும் வரும் போது நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் அந்த இரண்டுக்கும் எர்த் ஆகும் போது ஒரு விதமான மயக்கம் வருகின்றது.
 
மயக்கமாகி நீரானால் நுரையீரலில் உப்புசமாகி எப்படி வேர்க்கின்றதோ இதை போன்று நம் மூளை பாகத்தில் வெப்பமாகி அது ஆவியாக மாறுகின்றது. தலை சிரசிலே ரண்டு மூன்று தோல் பகுதிகள் உண்டு மூளையைப் பாதுகாக்க.
1.அதைக் கடந்து இரண்டாவது பாகத்தில் வந்த பின் நீராக வடிகின்றது.
2.ஒரு சிலருக்குச் சிலந்தி பூச்சியாக அங்கே எடுப்பார்கள் தலைவலி இருக்கும்.
3.அந்த நிலை ஆகிவிட்டால் நச்சு நச்சு என்று தும்மிக் கொண்டிருப்பார்கள்.
4.சில நேரங்களில் எதிர்பாராதபடி மூச்சுத் திணறலாகக் கூட வந்து விடும்.
 
ஆனால் தவறு செய்யவில்லை. வேடிக்கையாகப் பார்த்த நிலைகள் இப்படி எல்லாம் உறுப்புகளில் மாற்றம் ஆகின்றது. இதையெல்லாம் இயக்குவது யார்…? நமது உயிர். நுகர்ந்ததை இயக்குவதும் உடல் ஆக்குவதும் எல்லாவற்றையும் செயலாக்குவது உயிர்தான். அவன் இன்றி அணுவும் சையாது.
 
அதனால் தீராத தலைவலியும் வந்து விடுகின்றது முதல் பாகத்திலே அழுத்தமாகி இவ்வாறு தேக்கமாகி விட்டால் கல்லீரலிலும் வேர்த்து நீராக மாறி குடம் குடமாக நீரை வெளியேற்றுவார்கள்.
 
வாயு மண்டலங்கள் அதிகமாகி அதிகமான விஷத்தன்மையாகி வெப்பமானால் மூட்டுகளில் முழங்காலில் நீர் கோர்க்க ஆரம்பிக்கும். அங்கே வலி வரும். இது எல்லாம் சந்தர்ப்பத்தால் ஏற்படக்கூடிய உணர்வுகள்.
 
இப்படி உடலில் மாறிக் கொண்டே வருகின்றது. ஆனால் யாரும் தவறு செய்யவில்லை. தவறு செய்பவர்களைப் பார்க்காமல் வேதனைப்படுவோரைப் பார்க்காமல் நாம் இருக்க முடியாது.
 
ஆனாலும்
1.இதனுடைய இயக்க நிலைகளை நம்மைப் பற்றி நாம் தெரிந்து கொண்டால்
2.நாம் சுவாசிக்கும் உணர்வுகளால் என்னென்ன விளைவுகள் வருகிறது…?
3.அதிலிருந்து தடுக்கும் உபாயத்தை நீங்கள் பெற வேண்டும்
4.அதைப் பயன்படுத்தும் பக்குவ நிலை பெற வேண்டும் என்பதற்குத் தான் இதையெல்லாம் உபதேசமாகக் கொடுக்கின்றோம்.