ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 27, 2026

ஆக்ஞை

ஆக்ஞை


சில சமயங்களில் நாம் எவ்வளவு தெளிவாக இருந்தாலும் நம்முடைய பையன் அடம் பிடித்தால் போதும், இந்தப் பற்று இங்கே வந்து விடுகின்றது. அது நம் எண்ணத்தை ஆன்மாவிலே மறைத்து விடுகின்றது. இந்த உயர்ந்த எண்ணத்தைப் பெறும் தகுதியை இழக்கச் செய்கின்றது.
 
இந்த நஞ்சான உணர்வு வந்து ஊடுருவப்படும் பொழுது இது தன் இரையை எடுத்துக் கொள்கின்றது. இந்த உடல் பற்றின் உணர்வுகள் அந்த அணுவின் வளர்ச்சியும் நமக்குள் தொடர்ந்து விடுகின்றது. இதைத் துடைப்பதற்கு அவ்வப்பொழுது எண்ண வலுவைக் கொண்டு வரவேண்டும்.
 
அதற்குத்தான் நாம் ஒவ்வொரு நிமிடமும்
1.“ஈஸ்வரா என்று நம் உயிரிடம் எண்ணத்தைச் செலுத்திப் பழக வேண்டும்… கண்ணின் நினைவை அங்கே கொண்டு போக வேண்டும்.
2.கூட்டுத் தியானத்தில் நாம் பெறும் அந்த மகரிஷிகளின் உணர்வை கண்ணின் நினைவிற்குக் கொண்டு வந்து உயிருடன் இணைக்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இணைக்க வேண்டும்.
 
இவ்வாறு காட்டியதைத்தான் இந்தக் குண்டலினி யோகக்காரர்கள் ஆக்ஞைஇடப்பட்டு என்று சொல்வார்கள்.
1.நாம் எந்த உணர்வைச் செலுத்துகின்றோமோ அது மூலாதாரத்தில்உடலின் அணுக்களில் இயக்குகின்றது.
2.உடலின் உறுப்புக்களுக்கு மூலம் அணுக்களின் தன்மைஇங்கே உயிர் மூலாதாரம்.
 
இதைத்தான் மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்துஎன்கிற பொழுது நம்மிடத்தில் தீய அணுக்கள் உண்டு. அதற்கு வளர்ச்சி இல்லாதபடி… மூண்டெழும் கனலைக் காலமறிந்து கருத்துடன் செயல்பட வேண்டும் என்று தான் அந்த இடத்தில் காட்டப்பட்டது.
 
இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றால் அங்கே கட்டளை இடப்படும் பொழுது தான் ஆக்ஞை என்ற நிலையைக் கொண்டு வருகின்றார்கள். அப்பொழுது ஆக்ஞை இட்டுப் பரவுலகத்தை மேலே உச்சிக்குக் கொண்டு போய் இதன் வழி கொண்டு மோட்ச லோகத்திற்குக் கொண்டு போ என்று சொல்கின்றார்கள்.
 
மூலாதாரம்இந்த உடல் முழுவதற்கும் இங்கே கீழே இழுக்கப்பட்டு இந்த உணர்வுகள் சமைக்கப்பட்டு இந்த உணர்வின் தன்மை இரத்த நாளங்களில் இருந்து பிரிக்கப்படுகின்றது என்று இவர்களின் அனுமானம். மூலாதாரம் கீழே இருக்கின்றது என்று இவர்கள் கொண்டு போகின்றார்கள்.
 
1.ஆனால் நமக்கு மூலம் உயிர்நாம் எடுக்கும் உணர்வுகள் நமக்கு ஆதாரம்.
2.இந்த ஆதாரத்தை நமக்குள் மறைந்திருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்கும் சேர்ப்பிக்க வேண்டும்… இதுதான் குண்டலினி.
 
கண்ணின் நினைவு கொண்டு உயிருடன் ஒன்றி உணர்வினை உடலுக்குள் பரப்புதல் வேண்டும். அந்த உணர்வின் தன்மை வலுப்பெறும் பொழுது தீமைகளைப் பிளக்கின்றது.
 
ஏனென்றால் நமக்குள் பதிவான குணங்கள் பல கோடி. அது அது சாப்பாட்டிற்குக் கிளர்ந்தெழத்தான் செய்யும். பூமிக்குள் என்னென்ன விதை மறைந்திருக்கின்றதோ மழைக் காலம் வந்து விட்டதென்றால் துணிந்து ஆகாரத்தை எடுத்துத் தழைக்க ஆரம்பித்துவிடும்.
 
அதே மாதிரி அந்தந்தக் காலப் பருவத்தில் அது அதை எடுத்துக் கொள்கின்றது.
 
ஒருவர் கோபப்படுவதைப் பார்த்துப் பதிவு செய்து விட்டால் சண்டை போடுவதைப் பார்த்தால் அந்தக் காலப்பருவம் வந்துவிட்டது. உடனே ஆன்மாவில் சேர்ந்துவிடும்.
1.உடனே சண்டை போடுகிற மாதிரிதான் வரும்.
2.சண்டையை வேடிக்கை பார்த்தால் வீட்டில் சண்டை போடுவீர்கள்.
3.அந்தக் காலப்பருவத்தில் அது வளர ஆரம்பித்து விடுகின்றது.
 
நமக்குள் விளைய வைத்த வித்துகள் அந்தந்தக் காலப்பருவம் வந்து விட்டால் அது அது விளைய ஆரம்பித்து விடுகின்றது. எந்தக் காலப்பருவத்தில் விளைந்தாலும் நமக்குத் தேவைப்பட்டதை விளையச் செய்யக் களையை நீக்குகின்றோம். அதை நீக்குவதற்குச் சக்தி கொடுக்கின்றோம்.
 
1.எந்தக் காலப்பருவமானாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும்.
2.அந்த உணர்வை உள்முகமாக உடலுக்குள் செலுத்தி வலுப் பெறச் செய்து அதற்குச் சாப்பாடு இல்லாமல் செய்ய வேண்டும்.
 
இந்தக் களையை நீக்க வேண்டும். இதை நீக்கினால்தான் அதற்குச் சாப்பாடு கிடைக்காது. இல்லையென்றால் சண்டை போட்ட அணுவெல்லாம் சாப்பாடு எடுத்துவிடும்.
 
ஓரு குடும்பத்தில் வேதனைப்படுகிறார்கள். அந்த வேதனையான சொல்லைக் கேட்டுக் கொண்டிருந்தோமென்றால் அந்தக் காலப்பருவம் என்ன செய்யும்…? அந்த வேதனையான அணுக்கள் நம்மிடம் வந்து வளர்ச்சிடைய ஆரம்பித்து விடுகின்றது.
 
இப்படிப் பெரும்பகுதி எங்கு திரும்பினாலும்ரயிலில் போகும் பொழுது அடுத்தவர்கள் செய்யும் தவறைப் பார்த்தால் வேதனை. கடையில் இருக்கும் போது ஒருத்தருக்குக் கடன் கொடுத்துவிட்டு அவர் திரும்பத் தரவில்லை என்றால் வேதனை கோபம் குரோதம் வெறுப்பு.
 
1.இதுவெல்லாம் சந்தர்ப்பத்தால் விளையப்படும் போது உள்ளுக்குள் ஊட்டம் கொடுத்துக் கொண்டேயிருக்கும்அது அது வளரும்.
2.மனிதருடைய மனநிலை காலையில் ஒரு மனதாக இருக்கும்.
3.இதை விட்டு வெளியே போகின்றோம் என்றால் மனது வேறு விதமாக மாறும்.
 
தொழிலில் அமர்ந்தவுடன் என்ன ஆகும்…?
 
ஒருவன் நம் சொல்லைக் கேட்காமல் இருப்பான். நமக்கு இடைஞ்சல் செய்து கொண்டே இருப்பான். நாம் இங்கே இருக்கும் வரையில் இதையெல்லாம் மறந்து இருப்போம். ரோட்டில் போகும் பொழுது மறந்திருப்போம். தொழிலில் உட்கார்ந்தவுடனே அவனைப் பார்த்தவுடனே மீண்டும் அந்தக் களை முளைக்க ஆரம்பித்துவிடும்.
 
வேதனை வெறுப்பு வந்து விட்டால் நல்லவர்களையும் வெறுத்துப் பேச ஆரம்பித்துவிடும். ஒரு நல்ல அமைப்பை அமைக்க வேண்டுமென்றால் வெறுப்பாகத்தான் வரும். அந்தந்தக் காலப்பருவத்தில் அது அது விளைகின்றது.
 
நாம் ஒவ்வொரு நிமிடத்திலும் மனிதன் காலப்பருவத்தை மாற்றுகின்றோம். அதே போல
1.மாற்றியமைத்த அருள் ஞானிகளின் உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி
2.அந்தந்தப் பருவங்கள் வரப்படும் பொழுது களைகளை நீக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
 
இதுதான் ஆத்ம சுத்தி என்பது.
 
அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று நம் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து பல முறை எண்ண வேண்டும்.
 
இதைத்தான் அன்று ஞானிகள் சொன்னது ஆக்ஞை..! இந்த உணர்வின் தன்மை கொண்டு நம் உயிருடன் எதை எண்ணுகின்றோமோ உயிர் அதை இயக்கும்.
 
அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி, எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற உணர்வைப் புருவ மத்தியின் வழியாக உடலுக்குள் கொண்டு போக வேண்டும்.
 
சிறிது நாட்களுக்குப் பழக்கம் வந்து விட்டதென்றால் இது உள்ளுக்குள் கொண்டு போகும். அப்பொழுது இந்த உணர்வின் செல்களை வளர்க்கப்படும் பொழுது எதை அங்கு பற்றினோமோ இந்த நினைவு துருவ நட்சத்திரத்திற்குக் கொண்டு போகும்.

மனித உடலாக நாம் வளர்ச்சிக்கு வந்த நிலை

மனித உடலாக நாம் வளர்ச்சிக்கு வந்த நிலை


குளவிக்கு உமிழ் நீர் ஊறுகின்றது அந்த உமிழ் நீரைக் கொட்டி மண்ணைப் பிசைகின்றது ஹொய்ங்… ஹொய்ங்… டுன்… டுன்…” என்று அது எப்படி இரைகின்றதோ அந்த இறக்கைகளில் நாதங்கள் வருவது போன்று தன் உணர்வின் இரைச்சலை அந்த மண்ணிலே கொடுக்கின்றது.
 
இறக்கையாலும் நாதத்தைக் கொடுக்கிறது உணர்வின் ஒலிகளையும் கொடுக்கின்றது மண்ணை உருண்டையாக உருட்டுகின்றது.
1.மண்ணிற்குள் கலந்திருக்கக் கூடிய காந்த ஈர்ப்புக்குள் அது ஈர்க்கப்படுகிறது.
2.ஏனென்றால் மண்ணும் அது ஒன்றுடன் ஒன்று இணைந்து தான் வளர்ச்சியின் தன்மை பெற்றது.
 
குளவி தன் உமிழ் நீரை அதற்குள் கொட்டி அதைப் பிசைந்து நாங்களைச் செருகுகின்றது. செருகிய நிலைகள் கொண்டு குளவி கூட்டைக் கட்டுகின்றது. கூட்டைக் கட்டிய பின் புழுவைத் தேடிச் செல்கின்றது. தேடிச் சென்று புழுவைத் தூக்குகின்றது.
 
கூட்டுக்குள் கொண்டு வந்து வைத்தவுடன் லேசாகக் கொட்டுகின்றது. கொட்டும் போது குளவியின் பால் புழுவின் நினைவு திரும்புகிறது. உயிரின் துடிப்பின் வேகம் அதிகமாகக் கூடுகின்றது.
 
தேள் கொட்டியுடன் நாம் துடிக்கின்றோம் அல்லவா குளவியே கொட்டினாலும் துடிக்கின்றோம். இதைப் போல அந்தப் புழுவைக் குளவி கொட்டியபின் உணர்வுகள் தூண்டி எழுந்து உற்சாகத்துடன் வரும் பொழுது வேகத்தின் நிலைகள் அதிகமாகின்றது.
 
1.கொட்டிய விஷத்தின் தன்மைகள் புழுவின் தோலைச் சீக்கிரம் கருகச் செய்கின்றது கருகிய பின் சருகு போல் ஆகிறது.
2.சருகு போல் ஆகும் தன்மை வரும் பொழுது இரண்டாவது தரம் கொட்டியவுடன் துடிப்பு அதிகமாகின்றது.
3.சருகு போல் ஆனபின் கொட்டிய வேகத்தில் கோழி முட்டைக்கு எப்படி ஓடு உருவாகின்றதோ
4.அதைப் போல புழுவின் தசைகள் அனைத்தும் அழுகி சருகு போல ஒரு கருவாக உருவாகின்றது.
 
ஆனால் புழுவை உருவாக்கிய அந்த அணுக்கள் அனைத்தும் துடிக்கும் நிலை பெறுகின்றது. மண்ணை வைத்து அந்தக் கூட்டைக் குளவி மூடிவிடுகிறது.
 
அந்தக் கூட்டிற்குள் அடங்கிய புழுவினைக் குளவி கொட்டியதால்
1.உயிரின் வேகத் துடிப்பு அதிகமாகி அந்த இயக்கத்தின் நிலைகள் கொண்டு காந்தம் அதிகமாகி
2.விஷத்தின் தன்மை உமிழ்ந்து அதனால் கட்டப்பட்டக் கூட்டின் மூலம்
3.வெளியிலிருக்கும் காந்த அலைகளைத் தனக்குள் ஈர்க்கும் நிலை வருகின்றது.
4.அவ்வாறு ஈர்க்கப்படும் பொழுது இந்த உயிரின் துடிப்பு வேகும் பொழுது காந்தப் புலன்கள் அதிகமாகிச் சூடாகி
5.உடலுக்குள் இருக்கக்கூடிய அழுகிய புழுவின் தசையை ஆவியாக மாற்றி உயிரின் துடிப்புக்குள் கொண்டு வருகின்றது.
6.ஒரு மத்தாப்பை நெருப்பை வைத்துக் கொளுத்தினால் அது பல ரூபங்கள் ஆவது போல
7.குளவியின் நிலைகள் உயிரிலே கொஞ்சம் கொஞ்சமாக ஆடைகளாகச் சேர்த்து அந்தப் புழுவே குளவியாக மாறுகின்றது.
 
குளவியாக மாறி குவி உருப்பெற்ற பின் அதற்கும் உமிழ் நீர் ஊறுகின்றது. கூட்டிற்குள் உமிழ் நீரைக் கொட்டுகின்றது. ஈரமான பின் துவாரமிட்டுத் தன்னிச்சையாக வெளி வருகின்றது.
 
கூட்டைக் கட்டிய குளவி போய் அதைத் திறப்பதில்லை. புழு குளவியாக ஆன பின் உமிழ் நீர் சுரந்து உமிழ் நீரைக் கொட்டித்தான் குளவி வெளி வருகின்றது.
 
ப்படி வெளியே வந்த பின் முதல் குளவி எதைச் செய்ததோ புழு குளவியான பின் அதே நிலையைச் செய்கின்றது. ஏனென்றால் அந்த உணர்வுக்கொப்ப வேலையைச் செய்கின்றது.
 
இதைப் போல் தான் ஒரு மாங்கனி தனக்குள் வித்தாக ஆனபின் அதை மண்ணிலே நடப்படும் பொழுது தன் உணர்வின் ஆற்றலைப் பெருக்கி இந்த உணர்வின் தன்மை ஈர்க்கப்பட்டு ந்த மரத்தின் இலையைப் போன்று ரூபங்களை உருவாக்குகின்றது…”
 
இவ்வாறு எடுத்துக் கொண்ட உணர்வுகள் பல அணுக்களாகச் சேர்த்து வெளியிலே வந்த பல அணுக்கள் கலக்கப்படும் பொழுது வேறு ஒரு புது வித்தாக…” மாறுகின்றது.
 
1.புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் இப்படித்தான் அத்தனை சக்திகளும் நமக்குள் விளைந்து
2.இன்று மனிதனாக ருப் பெற்று இருக்கிறோம் என்பதை நாம் அறிய வேண்டும்.