ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 5, 2026

தாய் உணர்வு கைக்குழந்தையை எப்படியெல்லாம் இயக்குகின்றது…?

தாய் உணர்வு கைக்குழந்தையை எப்படியெல்லாம் இயக்குகின்றது…?


உதாரணமாக தாய் ஒருவர் சண்டை போடுவதைப் பார்த்துவிட்டு வந்திருப்பார்கள். இங்கே வீட்டிற்கு வந்து தாய் தன் குழந்தைக்குப் பால் கொடுக்கும். கொஞ்ச நேரத்தில் குழந்தைவீல்வீல்…” என்று கதறும்.
 
உடனே அந்தத் தாய் யார் கண் பட்டு விட்டதோ…? “சில்சில்…” என்று குழந்தை அழுகின்றது என்பார்.
1.தாய்க்குத் “தன் பார்வை பட்டது தான்…!” என்று தெரியாது.
2.ஏனென்றால் சண்டை போடுபவர்களைப் பார்த்த அந்த உணர்வுகள் தாய் உடலில் பதிவாகி விடுகிறது.
3.அந்த நினைவுடன்… பாசத்தால் குழந்தையைத் தாய் அரவணைக்கிறது.
4.ஆனால் குழந்தைக்கு ஒன்றுமே தெரியாது…. அதைத் தாங்கக்கூடிய சக்தி குழந்தைக்கு இல்லை.
5.இப்பொழுது குழந்தைக்குச் சீக்காகிவிட்டது என்பார்கள்.
 
அப்படி வேதனையினுடைய நிலைகள் அதிகமானவுடன் மிகக் கஷ்டமாக இருக்கின்றது என்று பிறர் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
 
இதைக் கேட்டுக் கொண்டு வந்த உணர்வுகள் அந்தக் குழந்தைக்குத் தாங்காதபடி வயிற்றுப் போக்கு போய்க் கொண்டே இருக்கும். அந்தச் சங்கடமான உணர்வையே மேலும் மேலும் நினைத்துப் பாய்ச்சிக் கொண்டே இருப்பார்கள்.
 
இதற்கு என்ன செய்ய வேண்டும்…?
 
ம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நன்றாக ஆத்ம சுத்தி செய்யுங்கள்.
1.பின் உங்கள் பார்வையால் உங்கள் எண்ணத்தைக் குழந்தை மேல் செலுத்துங்கள்.
2.“இனி உனக்கு வயிற்றால் போகாதுநன்றாகிவிடும்…!” என்று குழந்தையின் கண்களைப் பார்த்துச் சொல்லுங்கள்.
3.உங்கள் எண்ணத்தால் பார்வையால் குழந்தைக்கு நன்றாகிவிடும்.
 
இதை நீங்கள் அனுபவத்தில் கொண்டு வாருங்கள்.
 
உங்கள் மனதை வலுப்படுத்துங்கள். உங்களுக்கு வரக்கூடிய துன்பத்தைப் போக்கக் கூடிய சக்தி உங்களுக்குள் வரும். இதை நீங்கள் அனுபவபூர்வமாக பார்க்கலாம்.
 
அடுத்தடுத்து இவ்வாறு நீங்கள் பெறும் அனுபவத்தால் உங்கள் வாக்கினைச் சொல்லும் பொழுது
1.அடுத்தவர்கள் எண்ணங்களில் இது பதிய வேண்டும்.
2.அவர்கள் நோய்நான் போகிறேன்…” என்று ஓட வேண்டும்.
 
நான் இந்த முறைப்படி ஆத்ம சுத்தி செய்து தீமைகளை நீக்கினேன் என்று நீங்கள் சொல்லும் பொழுது பிறர் காது கொடுத்துக் கேட்டவுடன்
1.எங்கள் கஷ்டமெல்லாம் சுலபமாக இனிமேல் விலகிவிடும்
2.எங்களுக்கு நன்றாக இருக்கும்…! என்ற எண்ணங்கள் அங்கே அவர்களுக்குத் தோன்ற வேண்டும்.

இந்த உடலையும் உயிரையும் “குருவே எப்போதும் வழிநடத்த வேண்டும்…”

இந்த உடலையும் உயிரையும் “குருவே எப்போதும் வழிநடத்த வேண்டும்…”


குருநாதர் எம்மைக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தாவர இனங்கள் எவ்வாறு விளைகின்றது…? உயிரணுக்கள் உயிரினங்கள் எவ்வாறு விளைகின்றது…? கோள்கள் மற்ற சத்துக்களைக் கவர்ந்து எவ்வாறு வளர்கின்றது…? என்ற நிலையைச் சாப்பாடு இல்லாதபடி காட்டிலே அமர்த்தி அதை எல்லாம் அறியும்படி செய்தார்.
 
விஞ்ஞானிகள் இயந்திரத்தின் துணை கொண்டு பல நிலைகளைக் கண்டு கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் முழுமையும் அவர்கள் காணவில்லை.
 
அன்று மெய் ஞானிகள் தனக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின் ஆற்றலின் துணை கொண்டு
1.நம் குருநாதரும் அதை அறிந்து அதை நாம் அறியும் நிலைக்கு எமக்குள் அதைப் பதியச் செய்கின்றார்.
2.பதிந்த உணர்வினை நினைவு கொண்டு நான் விண்ணை நோக்கும் பொழுது விண்வெளியில் நடக்கும் அதிசயங்களை உணரும்படி செய்கின்றார்.
3.சில நேரங்களில் காட்சியாகவும் பெறும்படிச் செய்கின்றார்.
 
குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.ஒவ்வொரு ரூபத்திலும் அவர் பதிய வைத்த உணர்வை… ஏட்டை நினைவு கொள்ளும் பொழுது இதை உணர்த்தி
2.அவரே தான் இந்த உடலை வழி நடத்துகின்றார்ஏனென்றால் என்னுள் இருந்து அல்ல…!
 
நாடாக்களில் பதிவு செய்தது போன்று அவர் உணர்வுகள் எனக்குள் பதிவானது…!
 
1.அதை நான் எண்ணும் போது அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு அதைப் பெறப்பட்டு
2.அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று அவர் செய்த உணர்வைத் தான் நான் செய்கின்றேன்.
3.அந்த உணர்வு தான் என்னை இவ்வாறு செயல்படுத்த வைக்கின்றது.
 
ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நாம் அனைவரும் பெறுவோம். அவர் காட்டிய அருள் வழியில் செல்வோம்.
 
இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகள் காட்டி அருள் வழியில் செல்வோம். இந்த உடல் வாழ்க்கையிலே மகிழ்ச்சி பெறச் செய்வோம். நாம் பார்க்கும் அனைவரையும் மகிழச் செய்வோம். மகிழ்ந்த உணர்வுடனே வாழ்வோம்.
 
1.என்றும் பேரானந்த நிலை பெற்ற அந்த மகரிஷிகளுடன் ஒன்றி வாழ்வோம்
2.அவர்களுடன் ஒன்றி வாழும் நிலையை உருவாக்குவோம்… அவர்களுடனே வாழ்வோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
 
உங்களிடம் இதற்கு முன்பு படிப்படியாகச் சிறுகச் சிறுக சொல்லிக் கொண்டு வந்தேன்இப்பொழுது விளக்க உரைகளைக் கொடுக்கின்றேன்.  பூரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் அதற்குண்டான கால நேரம் இல்லை.
 
1.குருநாதர் பதிவு செய்தது எண்ணிலடங்காது.
2.அனைத்தையும் நாம் முழுமையாக அறிய வேண்டுமென்றால் இந்த மனித உடலுக்கு ஆயுள் பத்தாது.
 
அவ்வளவு பெரிய அண்டத்தின் உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார். அதை எல்லோரும் நீங்கள் பெற வேண்டும் என்ற நிலையில் அவ்வப்போது துணுக்குத்  துணுக்காகக் கொடுத்து அந்த நினைவுகளை உங்களுக்குள் ட்டுகின்றோம்.
 
1.அவ்வாறு ஊட்டி உங்கள் உணர்வை ஒளியாக்கி அதனை எண்ணமாக்கி
2.உங்களுக்குள் இயக்கும் சக்தியாக அதைக் கொண்டு வருகின்றேன்.