ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 15, 2026

ஞானிகள் அமர்ந்த இடத்தில் அனுபவம்

ஞானிகள் அமர்ந்த இடத்தில் அனுபவம்


குருநாதர் காட்டுக்குள் சில இடங்களுக்குக் கூட்டிக் கொண்டு போவார். இங்கே படுடா…!என்பார்.
 
இந்தப் பக்கம் படுத்தால் கொசுக் கடிக்கின்றது. இன்னொரு பக்கம் படுத்தால் கொசுக் கடிக்கிறதில்லை. இந்த மண்ணிலேகாட்டிலே இருந்து தவம் செய்து தன்னைப் பெரிய சித்தனாக்கிக் கொள்ள வேண்டும் என்று தவத்திற்கு வந்தவர்கள் இந்த இடத்தில் பச்சிலை மூலிகைளை வைத்திருப்பார்கள்.
1.அவர்கள் ந்தப் பச்சிலை மூலிகைகளை எடுத்துத் தன் உடலிலே பூசிக் கொள்வார்கள்.
2.தவம் என்ற நிலைகளில் இருக்கப்படும் பொழுது அந்த எல்லை வரையிலும் கொசுக்கள் பாம்புகள் மற்றவை வருவதில்லை.
 
அங்கே சுத்தமான மனிதன் போனால் தான் போக முடியும். தவறான ஆசையுடன் போனால் அவனைத் தூக்கி எறிந்துவிடும் என்றார்.
 
நான் போனேன்.
 
அங்கே உட்காருடா…! என்றார்.
 
தூக்கி எறியப்பட்டேன்… என்ன சாமி…? பேயோ பிசாசோ இருக்கு போலிருக்கு…! என்றேன்.
 
பேயுமில்லை பிசாசுமில்லை…! அந்தக் காலத்தில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று இந்தக் குறிப்பிட்ட இடத்திலே செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
 
தவறான ஆட்கள் உட்கார்ந்தார்கள் என்றால் விஷத்தன்மை பரவிவிடும் என்று இந்த உணர்வுகள் உன்னைத் தூக்கி எறிகிறது என்று சொன்னார்.
 
நான் சொன்ன மாதிரி இப்படிச் செய்…! என்றார். இப்போது போய் உட்கார் என்றார்.
 
போய் உட்கார்ந்தால் கொசுவும் வரவில்லை ஒன்றும் வரவில்லை. ஆனந்தமாகத் தூக்கம் வந்ததது.
1.அவர் எப்படித் தியானம் பண்ணினாரோ அதே மாதிரி எனக்கும் சக்தி கிடைத்தது.
2.இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தபோவனத்தில் பாய்ச்சப்படும் பொழுது இங்கே பதிவாகின்றது.
3.அதே போல நீங்களும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உங்கள் வீட்டில் பதிவு செய்து விட்டீர்கள் என்றால்
4.விஷத்தன்மைகளை ல்லாம் போக்கும் நிலைகள் வரும்.

ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தால் அது நம் உடலில் உள்ள தீமை செய்யும் அணுக்களை உணவாக எடுக்கும்

ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தால் அது நம் உடலில் உள்ள தீமை செய்யும் அணுக்களை உணவாக எடுக்கும்


1.தீமைகளை வென்றவன் அருள் ஞானி.
2.அதை வைத்து நமக்குள் உருவாகும் தீமைகளைக் கொல்ல வேண்டும்.
 
ஒன்றை ஒன்று புசித்துத் தான் ஒவ்வொன்றும் வாழ்கின்றது. ஆடு சாந்தமாந உணர்வாக இருந்தாலும் புலி அதைக் கொன்று புசிக்கத்தான் செய்யும்.
 
இதைப் போல நமக்குள் நல்ல உணர்வுகள் இருப்பினும்
1.நாம் எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வுகளால் உடலுக்குள் டி.பி.நோய் வந்து விட்டால்
2.உடலில் உள்ள நல்ல அணுக்களை அது கொன்று புசிக்கத் தான் செய்யும்
3.எலும்புகள் இருக்காது காணாமல் போய்விடும்.
 
ஆக நாம் எடுத்துக் கொண்ட வேதனைகள் உடலில் இவ்வாறு உருவாகி விட்டால் அதைக் கொன்று புசித்து விடும்.
 
மனிதனில் விளைந்த வேதனையான தீமையான மூச்சலைகள் அங்கே தாவர இனங்களில் பட்டு நாம் எதைப் புசித்தோமோ அதைக் கொன்று நமக்கு உணவில்லாத படி செய்து அந்த இனத்தைக் கொன்று விடுகின்றது.
 
அதாவது நம் உடலுக்குள் மட்டுமல்ல தாவர இனத்திலும் இதைத்தான் கொல்கிறது.
 
அக்ரிகல்ச்சரில் தென்னை மரத்திலே அதனுடைய கருவுலகை எடுத்து அதிலுள்ள சாறை எடுத்து அதிலே தீமை விளைவிக்கும்
1.“ஓலைக் கருகல்” என்ற நிலையில் அந்தச் சத்தினை உறிஞ்சிச் சாப்பிடும் கொசுக்களையோ பூச்சிகளையோ கொல்ல
2.விஞ்ஞானிகள் மற்ற உணர்வைச் சேர்த்து அதிலே கருவை உண்டாக்குகின்றார்கள்.
 
விஞ்ஞான அறிவு கொண்டு மரத்திலே இணைத்த பின் இது படர்ந்து ஓலைகளின் சத்தை எடுக்கும் ஆனால் அதே சமயத்தில் ஓலைச் சத்தைத் தின்று கொண்டிருக்கும் பூச்சிகளையும் கிருமிகளையும் இது கொன்று புசித்துக் கொண்டே இருக்கும்.
 
அது செத்த பிற்பாடு தான் இதுவும் போகும்… பின் மடியும்…!
 
அதே மாதிரித் தான் அந்த மகரிஷிகள் உணர்வின் சத்தை அந்த மெய் ஞானிகள் அருள் உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டு உடலில் விளைய வைத்த பின்
1.மனிதனாக உருவாக்கிய நல்ல உணர்வின் அணுக்களை எது கொன்று புசிக்கின்றதோ…”
2.அது இருக்கும் வரையிலும் அருள் ஞானிகள் உணர்வு அதைக் கொன்று புசித்துக் கொண்டே இருக்கும்.
3.பின் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலைத்தே இருக்கும்.
 
விஞ்ஞானத்திற்கு மெய் ஞானத்திற்கும் உள்ள நிலைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
உணவுக்காக விஞ்ஞானி அவ்வாறு செய்கின்றான். ஆனால் என்றும் நிலையான சரீரத்தை அதாவது “நம்மை ஒளியின் சரீரமாக…” நிலைக்கச் செய்கின்றான் மெய் ஞானி.