ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 21, 2026

கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதன் அவசியம்

கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதன் அவசியம்


என்னிடம் நினைவைச் செலுத்தி வினாக்களை எழுப்பும் பொழுது விடைகளைப் பெற்று அனைவரும் அதன் மூலம் அதற்குண்டான விளக்கங்களைப் பகிர்ந்து கொள்ள எதுவாக இருக்கும்.
 
யாம் பல முறைகளிலும் வகைகளிலும் உபதேசத்தைக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.
1.எந்த அளவிற்கு அது உங்களுக்குள் ஆழமாகப் பதிந்து இருக்கின்றது…?
2.உங்களுடைய மனோ நிலை என்ன…?
3.எதை அறிந்திருக்கின்றீர்கள்…? அறிய விரும்புகின்றீர்கள்…? என்பதற்குத் தான் கேள்வி பதில்…” வைப்பது.
 
உபதேசம் பொதுவாகச் சொல்கின்றோம் கேட்கின்றீர்கள். சாமி சொல்வது நன்றாக இருக்கிறது என்று ஒரே வரியில் சொல்லி விட்டுச் செல்வோரும் உண்டு.
 
சிலர் என்ன நினைக்கிறார்கள்…! சாமி சொல்கின்றார் ஆனால் சொன்னதையே திரும்பச் சொல்கின்றார் என்று திருப்பிச் சொல்லி விடுகின்றார்கள்.
 
ஆனால் நேற்று என்ன சொன்னார்…? அதற்கு முந்தி என்ன சொன்னார்…? இன்று என்ன சொல்கின்றார்…? என்று கேட்டால் முழிக்கின்றார்கள்.
 
ஆகவே… உபதேசம் என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல…!
 
குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் உபதேசம் கொடுக்கப்படும் பொழுது நான் எதையும் முதலில் நினைத்துக் கொண்டு ஆரம்பிப்பது அல்ல.
1.யார் யார் ங்கே முன்னாடி வந்து இதை விரும்புகின்றார்களோ தை அறிய வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ
2.அதன் அடிப்படை ஆதாரமாக வைத்துத் தான் அன்றைய உபதேசமே அமையும்.
 
ஒரு பத்து பேர் நினைக்கின்றார்கள் என்றால் அவர்கள் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய அளவிற்கு இந்த உபதேசம் வரும். நான் நினைத்துக் கொண்டு வந்தேன் சாமி சொல்லிவிட்டார்…! நான் நினைத்துக் கொண்டு வந்தேன் சாமி சொல்லிவிட்டார்…! என்று எல்லோரும் சொல்வார்கள்.
 
அத்தகைய நினைவு வந்தாலும் கூட நாம் பதிந்து கொண்ட நிலையும் இந்த வாழ்க்கையை எவ்வாறு வழிநடத்த வேண்டும்…? என்பதையும் அறிய வேண்டும்.
 
இந்தக் காற்று மண்டலத்தில் “மகரிஷிகளின் அருள் சக்தி எவ்வளவு கலந்துள்ளது…” என்று பல ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன்.
1.அதை எண்ணும் போது நமக்குள் அந்தச் சக்தி எப்படிக் கவரப்படுகிறது…?
2.தை எப்படி நமக்குள் சேர்த்து வலுப்படுத்துவது…?
3.அதற்கு நாம் எதை நினைவுபடுத்த வேண்டும்…? என்று இதையெல்லாம் அறிந்து கொள்வது மிகவும் நல்லது.
 
ஆகவே உபதேசத்தைக் கேட்டுணர்ந்த நீங்கள் எந்த அளவுக்கு மீண்டும் அதை உயர்த்திக் கொள்ள வேண்டும்…? எப்படி வலுப்பெறச் செய்ய வேண்டும்…? அருள் ஞானத்தை எப்படி வளர்க்க பெற வேண்டும்…? என்பதற்குத்தான் கேள்விகளை எழுப்பும்படிச் சொல்வது.
 
எல்லோருக்கும் இது பயனுள்ளதாக அமையும்.

எதை எடுத்தாலும்… அந்த விண்ணின் பற்றுக்கே நாம் வர வேண்டும்…!

எதை எடுத்தாலும்… அந்த விண்ணின் பற்றுக்கே நாம் வர வேண்டும்…!


ஒரு சொல்லாக வெளி வர வேண்டும் என்றால் எத்தனையோ கோடி உணர்வுகள் சேர்ந்துதான்…”ந்தச் சொல் வரும் தனித்து வராதுதனுடைய சுருதிகள் அப்படி…!
 
ஒரு சிலர் மிகவும் எளிமையாகப் பேசுவார்கள். அவர்களிடம் சாந்த குணம் இருக்கும்
1.சாந்த குணம் இருக்கிறது என்றால் மனதிலே உணர்வுகள் ஜாஸ்தி இருக்கும்.
2.எண்ணத்தால் பாய்ச்சவர்கள் இது அவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வு.
 
உதாரணமாக… சில பொருள்களை வெளியிலே பார்த்தால் ஒன்றும் தெரிவதில்லை… செய்வதில்லை. ஆனால் அதைச் சாப்பிட்டு விட்டோம் என்றால் குடலுக்குள் சென்று அரிப்பைக் கொடுத்துவிடும் எதிர்மறையாகும்.
 
இதே மாதிரித் தான் ஒருவர் மிகவும் சாந்தமாக இருப்பார் அவர் சாந்தமாக இருக்கின்றார் (சாதாரண வாழ்க்கையில்) என்று நாம் நினைப்போம்
1.ஆனால் எண்ணங்கள் பல விதமாக அங்கே ஓடும்.
2.அவர்கள் நினைவுகள் வெளிப்படும் அவர்களுக்குள் மற்றது சேராது.
3.மற்ற கெடுதலை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இவருடைய நினைவுகள் அதை அடக்கும்.
 
இயற்கையிலே சிலருக்கு இப்படி விளைகின்றது.
 
ஆனால் அந்த மகரிஷிகளோ…
1.”கோடி கோடி…” என்று பல கோடி உணர்வுகளைத் தனக்குள் ஒளியாக மாற்றியவர்கள்.
2.அந்த உணர்வை நாம் எடுத்து நமக்குள் புகுத்த வேண்டும்.
3.அப்படிப் புகுத்தினோம் என்றால் தீமைகள் நீங்கும்.
 
புகுத்த வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் வலுப்பெறும். இந்த அலைகள் ங்கே பரும் நினைவுகள் அங்கே விண்ணுக்குச் செல்லும். ஆகவே எதை எடுத்தாலும் அந்த விண்ணின் பற்றுக்கே நாம் வர வேண்டும்…!”
 
வாழ்க்கையில் இப்படிச் செய்கின்றார்களே என்று எண்ணி விட்டால் இந்த நிலைதான் இங்கே வரும். இதை மாற்ற வேண்டும்.
 
விண்ணின் பற்றைக் கொண்டு நாம் ந்த எண்ணத்தால் ஒவ்வொரு நிமிடத்திலும் ஆத்ம சுத்தி செய்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற நினைவினை எடுத்து வலுப்படுத்த வேண்டும்.
 
மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் வேறு வேலை செய்து கொண்டிருந்தாலும்
1.நினைவை மேலே கொண்டு செல்ல வேண்டும் கண்ணின் நினைவைச் சிந்தனையை மேல் நோக்கிச் செலுத்திப் பாருங்கள்.
2.அடுத்தவரிடம் பேசிக் கொண்டிருப்பது போல் இருக்கும் செவிகளில் படும்
3.நினைவோ விண்ணிலே இருக்கும் இரண்டும் கலவையாகும் அவருடைய உணர்வு நம்மை இயக்காது…!
 
சரி.. என்று எதிர் பதிலைத்தான் சொல்லச் சொல்லும்.
 
நேராக அவர்களைக் கண்ணுற்றுப் பார்க்காதீர்கள். கோமாகப் பேசுபவர்களைக் கண்ணுற்றுப் பார்க்கக் கூடாது.
 
சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருப்போம். அப்போது அந்த மகரிஷிகளின் ருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைத்து வலுவாக்கிக் கொண்டால் உங்களை அது இயக்காதபடி தடுக்க முடியும்.
1.உங்கள் சொல் அங்கே பாய்ந்து அங்கே அவருடைய இயக்கத்தை மாற்றும்.
2.இந்தப் பதிவுகள் நமக்கு அதிகமாகத் தேவைப்படுகின்றது.