ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 29, 2026

சாஸ்திரங்கள் கூறியுள்ள உண்மை நிலை

சாஸ்திரங்கள் கூறியுள்ள உண்மை நிலை

 

விஷத் தன்மைகள் பரவினால் பூண்டோடு அழியும் நிலை வருகின்றது. காரணம் தீமைகள் விளையும் சந்தர்ப்பங்களே இன்று உருவாகிக் கொண்டுள்ளது அதிலே சிக்காது நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

1.எல்லாச் சாஸ்திரங்களும் இதைத்தான் கூறுகின்றது... தென்னாட்டில் உள்ளவர்கள் கொஞ்சப் பேர் தப்பிப்பார்கள் என்று...!
2.மற்றவர்கள் அசுர உணர்வு கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொல்லும் நிலையே வருகின்றது.

மனிதனாக இருப்பான்... விஷத்தன்மை மோதும் பொழுது அழிந்திடும் நிலையே வருகின்றது. மனிதனுக்குள் ஆசை அதிகமாகும் பொழுது இரக்கமற்றுத் தட்டிப் பறித்துச் செல்கின்றான்.

இதிலிருந்து நாம் மீண்டு பழகுதல் வேண்டும். உங்களை நீங்கள் நம்புங்கள்.
1.உங்கள் உயிரான ஈசனைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
2.அந்தப் பேரருள் என்ற உணர்வைச் சேர்த்து ஒளியாக ஆக வேண்டும்.
3.அவனுடன் அவனாக அவனாகவே ஆகும் நிலையை நாம் பின்பற்றுதல் வேண்டும்.

அதைப் பெறும் வழியைக் குருநாதர் சொன்னார். அவர் காட்டிய வழியில் உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்... ஈசனாக மதிக்கின்றேன்... ஆண்டவனாக மதிக்கின்றேன்... இறைவனாக மதிக்கின்றேன்.

அவனால் உருவாக்கப்பட்ட உடலைக் கோவில் என்று மதிக்கின்றேன்... சிவம் என்று மதிக்கின்றேன்... சிவசக்தி என்று மதிக்கின்றேன். பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனான அரும்பெரும் சக்திகள் உங்கள் உடலில் உண்டு என்று மதிக்கின்றேன்.

மனிதனின் நிலைகள் தீமைகளை அகற்றிடும் கார்த்திகேயா... எதனையுமே அறிந்திடும் அறிவு உடலுக்குள் கிடைத்துள்ளது. அறிவின் தன்மை அறிந்திடும் உணர்வை உயிரின் தன்மை எனக்குள் உருவாக்கினார் குருநாதர்.

நீங்கள் ஒவ்வொருவரும் அந்த நிலை பெற வேண்டும் என்று நான் எண்ணினால் உங்கள் பகைமைகள் எனக்குள் வராது. இதையெல்லாம் நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதில் சில தவறு செய்வோரும் உண்டு. நம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணுவோரும் உண்டு. அத்தகைய நிலை பெறுவோர் உணர்வுகளை அவர்கள் உயிரே அதை மாற்றிவிடும்.

1.அவர்கள் எதை நுகர்ந்தார்களோ அதையே உயிர் உருவாக்கிவிடும்.
2.அதன் விளைவை அவர்கள் பின்னாடி தெரிந்து கொள்வார்கள்.
3.அது தான் தெய்வம் நின்று கேட்கும்... அரசு அன்று கேட்கும் என்று சொல்வது.

பிறரைக் கெடுக்க வேண்டும் என்ற உணர்வை வளர்த்தால் அந்தக் கெடுக்கும் உணர்வே தெய்வமாகின்றது. இந்த உணர்வைப் பெருக்கப்படும் பொழுது எந்த அளவிற்குப் பிறரைத் துன்பப்படுத்த வேண்டும் என்று எண்ணினார்களோ அந்தத் துன்பப்படுத்திடும் உணர்வுகள் அங்கே விளைந்தே தீரும். அதிலிருந்து எவரும் தப்ப முடியாது.
1.அதிலிருந்தெல்லாம் நாம் மீள்தல் வேண்டும்
2.பேரருளைப் பெறுதல் வேண்டும்... அந்த அருள் சக்திகளை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்.