
எம்மிடம் ஆசி பெற்றாலும் யாம் சொன்னதைக் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம்
சாமியாரிடம் ஆசி வாங்கினால் போதும் என்ற நிலையில் என்னிடம் ஆசி வாங்கினால் அன்றைய தினத்திற்கு நன்றாக இருக்கும்.
1.அடுத்து நீங்கள் யாம் சொன்ன வழியைக் கடைப்பிடித்தால்
2.நிலையாக உங்களுக்குச் சரியாகும்.
அப்படி இல்லாது "சாமியிடம் ஆசி வாங்கினேன்... நன்றாக இருந்தது..!" என்று ஒரு சொல்லில் சென்று விட்டால் அடுத்து என்ன ஆகின்றது...?
சண்டை போடுபவன் வேதனைப்படுபவன் சங்கடப்படுபவன் இவர்களை எல்லாம் இரக்கத்துடன் உற்றுப் பார்த்தால்... அடப் பாவமே நல்ல மனிதன் இப்படி ஆகிவிட்டார் என்று வேதனையான உணர்வை உணர்ந்தால் அந்த உணர்ச்சிகள் உங்கள் ரத்தத்தில் தான் கலக்கின்றது.
1.கலந்த பின் நல்ல அணுக்கள் பிடிக்காது அதை விட்டு விடுகிறது.
2.நல்ல
3. அணுக்கள் ஏற்கவில்லை என்றால் சிந்திக்கும் தன்மை குறைகிறது... வியாபாரம் செய்தால் மன வலிமை இல்லாது போய் விடுகின்றது.
மன வலிமை இல்லை என்றால் நல்ல சரக்கைத் தேர்ந்தெடுக்க முடியாது. நல்ல சரக்கை எடுத்தாலும் கூட நம் சொல் வெளிப்படும் பொழுது அதனுடன் வேதனை கலந்து வருகின்றது.
1.நம் கடையில் துணியை எடுக்க வருபவர்கள் இந்தச் சரக்கைப் பார்த்த பின் அவர்களுக்கு அதிலே வெறுப்பு வருகின்றது.
2.ஏனென்றால் நம் உணர்வுகள்... அந்த மணம் அதில் பட்டபின் அவர்கள் அதை நுகரும் பொழுது துணியை வாங்குவதில்லை.
வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் இப்படி வருகின்றது. இதை எல்லாம் துடைக்க வேண்டும் அல்லவா. இது போன்று நம்மை மறைக்கும் "சிறு திரைகளை" அவ்வப்போது தூய்மைpபடுத்த வேண்டும்.
ஈஸ்வரா... என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி நாங்கள் பெற வேண்டும் என்று அந்தச் சக்தியை உடலுக்குள் சேர்த்து ரத்தத்தில் கலந்து இருளை மாற்றிப் பழக வேண்டும்.
ஒவ்வொரு நிமிடமும் இதைச் செய்து பழக வேண்டும்.
ரோட்டில செல்கின்றோம்... உடையில் தூசி படுகின்றது. துணியை அடுத்து துவைத்து விடுகின்றோம். நாம் ஒரு வேலை செய்கின்றோம்... கையிலே அழுக்குப் படுகின்றது. உணவை உட்கொள்ளும் முன் கையைத் தூய்மைப்படுத்துகின்றோம்.
இதே போன்று தான் ரோட்டில செல்கின்றோம்... ஒருவர் வேதனைப்படுபவதைப் பார்க்கின்றோம்.
1.அது அழுக்காக நம் ஆன்மாவிலே படுகின்றது... ரத்தத்தில் கலக்கின்றது.
2.ரத்தத்தில் அசுத்தமாவதைத் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா.
நல்ல உணர்வுகள் இருந்தாலும் பிறருடைய வேதனை உணர்வுகள் அந்த நல்ல குணத்திலே சித்திரை சிறு திரையாக மறைத்து விடுகின்றது... மூடி விடுகின்றது. இந்த வேதனை தான் முன்னணியில் வருகின்றதே தவிர நீக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை.
இதைப் போன்ற தீமையெல்லாம் நீக்கி ஒளியாக இருப்பது துருவ நட்சத்திரம்.
1.அதை நாம் நுகர்ந்து எடுத்து நம் ரத்தத்திலே கலந்து தூய்மைப்படுத்த வேண்டும்.
2.இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.