ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 13, 2026

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் பதிவாக்க வேண்டியது மிகவும் அவசியம்

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் பதிவாக்க வேண்டியது மிகவும் அவசியம்


குருநாதர் யாம் தீமைகளிலிருந்து தப்புவதற்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை எமக்குள் பெறச் செய்ததைப் போன்று உங்களுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின்  உணர்வுகளை யாம் பதிவு செய்கின்றோம்.
 
துருவ நட்சத்திரத்தின் அருளாற்றலின் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால்
1.உங்களிடத்தில் அறியாது சேர்ந்த தீய வினைகள் நீங்கும்.
2.புதிதாகத் தீய வினைகள் உங்களிடத்தில் வராது தடுத்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ளலாம்.
 
ஒரு வித்தை நிலத்தில் ஊன்றி விட்டபின் அதற்கு நாள்தோறும் நீர் ஊற்றி வந்தால்தான் வளரும். நான் வித்தை ஊன்றி விட்டேன் என்று சும்மா இருந்தால் வளருமா? 
 
அருளுணர்வுகளை யாம் உங்களிடத்தில் பதித்து விட்டோம் என்றால் அதன் உணர்வுகளை நாளும் நீங்கள் வளர்த்து வர வேண்டும். 
 
எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப மனித ரூபத்தைக் கொடுத்தது நமது உயிர்.
 
அகஸ்தியர் தம்முள் பல விஷத்தன்மைகளை அடக்கி மனித உடலின் உணர்வின் தன்மைகளை மாற்றி ஒளியின் உடலாகத் தாம் பெற்றார்.
1.அவரிடமிருந்து வெளிப்படும் அருளுணர்வினை நமது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவிலும் பெறக்கூடிய தகுதி பெற்றால்
2.அகஸ்தியரைப் போன்று நாமும் நமது உடலில் உள்ள அணுக்களைச் சிறுகச் சிறுக ஒளியாக மாற்றியமைக்க முடியும்.
 
நம்மிடம் உள்ள முந்தைய தீய வினைகளைத் தணித்துப் புதுத் தீய வினைகள் நமக்குள் சேராமல் தடுத்து நம்முள் நல் உணர்வினை வலுவாக்க முடியும்.
 
பிறிதொரு உணர்வை நாம் நுகர்ந்து கொண்டபின் நமது உணர்வுகள் என்ன செய்கின்றது? ஒரு உணர்வை நமது உடலில் வளர்த்துக் கொண்டபின் நம்மை நமது நண்பர்கள் பார்க்கும் பொழுது வெறுப்போ அல்லது பாசமோ எப்படி நமக்குள் வருகின்றது? 
 
இதெல்லாம் நமது உடலில் உள்ள  உணர்வுக்கொப்பத்தான் வரும்  என்பதனை நீங்கள் ஒவ்வொருவரும் அனுபவரீதியாக உணர வேண்டும்.  தெரிந்து தெளிந்து வாழ்ந்திடும் வாழ்க்கையாஉங்கள் வாழ்க்கையை அமைத்திடல் வேண்டும்.
 
எல்லோரும் எல்லோரிடத்திலும் பழகியிருக்கின்றோம்.
1.நமக்குக் கோபம் எப்படி வருகின்றது? வெறுப்பு எப்படி வருகின்றது?
2.நம்மை வெறுப்படையச் செய்வது எது?
3.வெறுப்பான பின் குடும்பத்தில் என்னென்ன வேதனையாகின்றது?
4.அந்த வெறுப்பை நீக்குவது எப்படி? என்பது போன்றவைகளை நாம் அனுபவப்பூர்வமாகக் கொண்டு வர வேண்டும்.
 
இத்தனையும் யாம் கஷ்டப்பட்டுத்தான் தெரிந்து கொண்டோம்.
1.கஷ்டத்திலிருந்து உங்களைக் காப்பதற்குத்தான் உயர்ந்த சக்திகளை உங்களிடம் சொல்லிப் பதிய வைக்கின்றோம்.
2.தீமைகளை நீக்கும் சக்தியை நீங்கள் பெறுவதற்காகத் தான் யாம் உபாயங்களைக் கூறுகின்றோம். 
3.யாம் அப்படிச் செய்து விடுவோம்இப்படிச் செய்து விடுவோம்…! என்று சொல்லவில்லை.
 
உதாரணமாகபயந்த சுபாவம் உள்ள ஒருவர் சந்தர்ப்பவசத்தால் கண்கூடாக ஒரு விபத்தைக் காண நேரிடுகிறதென்றால் விபத்தைப் பார்த்ததின் உணர்வு அவரிடத்தில் ஜீவ அணுவாக விளைந்து விடுகின்றது.
 
அடுத்த முறை அவர் ஏதேனும் ஒரு விபத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால் அஞ்சி ஓடமாட்டார். அது எங்கே…? என்று தேடிப் பிடித்துப் போய்ப் பார்ப்பார். 
1.ஆக பயத்தின் உணர்வை ஒரு முறை நம்மில் பதிவு செய்தாலும்
2.அடுத்த முறை அங்கே செல்லாமல் இருக்கின்றோமோ என்றால் இல்லை.
3.ஏனெனில் ஏற்கனவே விளைந்த ஜீவ அணுவிற்கு உணவு தேவை.
4.நாம் சும்மா இருந்தாலும் அது நம்மை அங்கே அழைத்துச் சென்றுவிடும். 
 
நாம் எத்தகைய நிலைகளை வேடிக்கையாகப் பார்த்தாலும் சரிபரிவுடன் பார்த்தாலும் சரி அது நமக்குள் ஜீவ அணுவாக விளைந்து விடுகின்றது.
 
உதாரணமாககுழந்தைகளாக இருப்பவர்கள் ஏதாவது ஒன்றைக் கண்டால் அடுத்த சில மணி நேரத்திற்குள் அந்த விஷயம் அதனின் நினைவில் இருக்காது. இருந்தாலும்…
1.பின்னாடி அதனின் நினைவு வரும் பொழுது அந்தக் குழந்தைக்கு மனதில் பயம் உருவாகும்.
2.திரும்பவும் அந்த இடத்திற்குச் செல்லாது.
 
ஆனால் பெரியவர்களாக இருப்பவர்களுக்குப் பயம் இருந்தாலும் மன வலிமை கொண்டு என்ன…? ஏது…!என்று எட்டிப் பார்க்கச் சொல்லும்.
 
குழந்தைப் பருவத்தில் அணுவின் செல்கள் எளிமையாக இருப்பதனால் அது தனக்குள் கண்டபின் உடனே மறைந்து விடுகின்றது. எண்ண நிலைகளை மற்ற நிலைகளுக்கு அழைத்துச் செல்கின்றது.
 
அதே சமயத்தில் குழந்தைகளிடத்தில் ஒரு உயர்ந்த கருத்தைச் சொன்னால் அது அதனிடத்தில் ஆழப் பதிந்து விடுகின்றது. மீண்டும் அதே கருத்தினைச் சொல்லும் நிலை வருகின்றது.
 
வேதனை போன்ற மற்ற உணர்வுகளைப் பெரியவர்களான நாம் வளர்த்துக் கொள்ளும் பொழுது
1.பிறர் சொல்லும் நல்ல உயர்ந்த குணங்கள் நம்மிடத்தில் பதிவதில்லை.
2.வேதனையான குணத்தின் உணர்வே நமக்குள் நினைவில் வரும்.
 
குழந்தைகளிடத்தில் உயர்ந்த கருத்தினைச் சொன்னால் அது அவர்களிடத்தில் எளிதில் பதிவாகும். அதே சமயத்தில் தீமையான உணர்வுகள் அவர்களிடத்தில் பதிவாகி விட்டால் தீமையின் உணர்வே அதிகமாக வரும்.
1.அதுவே முன்னனியில் நிற்கும்
2.குழந்தைகள் நல்லதையும் பதிவு செய்து கொள்ளும்தீயதையும் பதிவு செய்து கொள்ளும்.
3.வளரும் பருவம் கொண்ட சரீரங்களில் இந்த நிலை.
 
மனித உணர்வுகளின் தன்மையை அறிந்து மகரிஷிகள் காண்பித்த அருள் வழியை நாம் பதிவு செய்து கொண்டு அடுத்தடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டுமென்று இந்த உணர்வைக் கட்டாயப்படுத்திச் செலுத்துவோம் என்றால் அந்தச் சக்தி நமக்குள் வரும். 
 
நமக்கு நோய் என்று ஒன்று வந்து விட்டால் அதற்கு மிகவும் கசப்பான மருந்தைக் கட்டாயப்படுத்தி உள்ளே செலுத்தும் பொழுதுதான்…” அந்த நோயே நம்மை விட்டு அகன்று ஓடுகின்றது.
 
1.ஞானிகளின் உயர்ந்த கருத்துக்களையும் தத்துவங்களையும் கேட்க நேரும் பொழுது
2.நமது கவலைகள் வேதனைகள் இவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஆர்வமுடன் கேட்க வேண்டும்.
3.அப்பொழுதுதான் அதனின் ஞானம் நம்மிடத்தில் பதியும். 
 
ஏனென்றால்… வேதனைகளை மனதில் நிறைத்துக் கொண்டு உள்ளவர்களிடத்தில் நல் உணர்வுகள் எதுவும் பதியாது.
 
இந்த உடல் என்றும் நம்முடன் வரப் போவதில்லை. ஆனால் இந்த உடலில் இருந்து விளைய வைத்த உணர்வின் சத்துதான் நம்முடன் என்றும் நிலைத்திருக்கும்.
 
ஆகவே நமது வாழ்க்கையில்
1.நாம் அனைவரும் துருவ தியானம் மற்றும் கூட்டுத் தியானங்களை வலுப்படுத்தி
2.அதன் மூலம் ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்யும் ஆற்றலைப் பெருக்கி
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளியான சக்திகளை நமது உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் சத்தாகச் சேர்ப்போம்.
 
நாம் அனைவரும் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறுவோம், செல்வம் செல்வாக்கு பெற்று தொழில் வளம் பெற்று உடல் நலம் பெற்று மன பலம் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றென்றும் இணைந்து மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.

“ஓம் ஈஸ்வரா…” என்ற நெருப்பைக் கூட்டி... “மகரிஷிகளின் அருள் ஒளியைக் கூட்டு”

“ஓம் ஈஸ்வரா…” என்ற நெருப்பைக் கூட்டி... “மகரிஷிகளின் அருள் ஒளியைக் கூட்டு”


வேதனயான உணர்வை நாம் நுகர்ந்தால் அது நமது இரத்த நாளங்களில் கலந்து விடுகின்றது. நம்மை மனிதனாக உருவாக்கிய உடலின் அணுக்களில் விஷத்தின் தன்மை கலந்தபின் உடலின் அணுவின் தன்மை மாறுகின்றது.
1.அணுக்கள் விஷத்தின் தன்மையாக மாறும் பொழுது உடலில் வலி வருகின்றது.
2.வலி வந்தால் உடல் நலிகின்றது எண்ணம் குறைகின்றது.
 
நம் ஊர்களில் திரும்பும் பக்கமெல்லாம் மாரியம்மன் கோவில் இருக்கும். ஏன்…?
 
மனித வாழ்க்கையில் அடிக்கடி சலிப்பு வருகிறது சங்கடம் வருகிறது. ஒருவர் தவறு செய்கின்றார் என்றால்
1.அந்தத் தவறான நிலைகளை உற்றுப் பார்க்கும் பொழுது
2.அந்த உணர்வு தனக்குள் மாறித் (மாரி) தன்னை றியாமல் ஆட்டிப் படைக்கின்றது.
 
நிவர்த்திப்பதற்கு என்ன செய்ய வேண்டும்…? 
 
மாரியம்மன் கோவிலில் நெருப்புச்சட்டி வைத்திருப்பார்கள். நெருப்பு என்ன செய்யும்…? சுட்டுப் பொசுக்கும்.
 
அதாவது நாம் நுகர்ந்த தீமைகள் அனைத்தையும் அதில் போட்டுச் சுட்டுப் பொசுக்க வேண்டும் என்று காட்டுகிறார்கள்.
1.நாம் எடுத்துக் கொண்டது விஷம்நமக்குள் வந்தால் பதறச் செய்கிறது.
2.மாரியம்மனின் கோவிலில் அக்கினிச் சட்டியைக் கண்டு தீயதைச் சுட்டுப் பொசுக்க வேண்டும்.
 
அந்த மாரியைத் தடுப்பதற்கு என்ன செய்கிறோம்?  நெருப்பு…!
1.யாராவது அதைக் காட்டியிருக்கிறார்களா?  யாராவது சொல்லி இருக்கிறார்களா?  இல்லை. 
2.அந்த நெருப்பு யார்?  ந்த மகரிஷிகள். 
3.மனித வாழ்க்கையில் வந்த இடைஞ்சல்களை எல்லாம் நீக்கிப் பழகியவர்கள்.
 
‘’ஓம் ஈஸ்வரா’ என்ற’ இந்த நெருப்பைக் கூட்டி ‘’மகரிஷிகளின் அருள் ஒளியைக் கூட்டுமகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று ஏங்க வேண்டும்.
 
அவ்வாறு ஏங்கிவிட்டு நமக்குத் தீங்கு செய்தவர்கள் நாளை அறியாமையிலிருந்து விடுபடவேண்டும். நல்லதைச் செய்யும் எண்ணம் அவர்களுக்குள் வரவேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் சுவாசிக்க வேண்டும்.
 
அதற்குத் தான் மாரியம்மன் கோவிலில் மத்தியில் அக்கினிச் சட்டி  வைத்திருப்பார்கள். கோவில்களெல்லாம் தப்பல்ல…! நாம் வழிபடும் முறைதான் தப்பாக இருக்கும்.
 
ஆகவே நாம் தியானிக்க வேண்டும் எதை?
 
இந்தத் தெய்வம் நல்லது செய்திருக்கிறது.
1.இந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும்
2.நாங்கள் செய்வதனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும்,
3.எங்கள் பேச்செல்லாம் பிறருக்கு நல்லதாக இருக்கவேண்டும்.
4.இந்தத் தெய்வ குணத்தின் சக்தி எங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்.
5.இதை உணர்த்திய மெய் ஞானிகளின் அருள் ஒளி வளர வேண்டும்.
6.அந்த அருள் ஒளியால் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று தியானித்துப் பாருங்கள். 
 
இது தான் உண்மையான அர்ச்சனை…! இதைத்தான் ஆதிசங்கரர் சொன்னார். 
1.“அத்வைதம்…!” சூட்சுமமாக இருப்பதை உனக்குள் எடுத்து உன் சுவாசமாக்கு.
2.அந்த உயர்ந்த சக்தியை உனக்குள் கூட்டு என்று அன்றைக்கு ஆதிங்கரர் சொன்னார்.
 
அவர் காட்டிய அருள் வழியில் காற்றில் மறைந்துள்ள அருள் ஞானிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து அனைவரும் மகிழ்ந்து வாழ்வோம். பிறவியில்லா நிலையெனும் அழியா ஒளிச்சரீரம் நாம் அனைவரும் பெறுவோம்.

ஓம் ஓம் ஓம் ஓம் – சிவ சக்தி என்றால் உயிருடன் ஒன்றி ஒளியாக இயக்கக்கூடிய நிலை

ஓம் ஓம் ஓம் ஓம் – சிவ சக்தி என்றால் உயிருடன் ஒன்றி ஒளியாக இயக்கக்கூடிய நிலை

                                                        
ஒவ்வொருவரும் சிவ சக்தியாகத் தான் இயங்குகின்றார்கள்.
1.உடல் சிவமாகின்றது
2.உடலுக்குள் இயங்குவது சக்தியாக இருக்கின்றது… இப்படித் தான் சிவ சக்தி.
 
உருவம் சிவம் தனக்குள் இயங்குவது சக்தி. இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றிச் சக்தியாக இயக்க முடியும்.ணர்வின் தன்மை எந்தச் சக்தியாக இயக்குகின்றோமோ மறு உருவைக் கொடுக்கும்.
 
1.உருவல்லாது சக்தியை நாம் சேர்ப்போம் என்றால் உயிருடன் ஒன்றி என்றும் சிவ சக்தியாக ஒளியின் சரீரமாகும்.
2.அது தான் எண்ணத்தால் வருவது எண்ணத்தால் ருமாற்றிய நிலைகள் இராமலிங்கம்உயிருடன் ஒன்றி நிலைகள்…!
 
சீவலிங்கம் உறைந்த உடல் கொண்டு தான் நாம் இப்பொழுது இயக்குகின்றோம். எண்ணத்தால் இருளைப் போக்கி ஒளியாக உயிருடன் ஒன்றினால் ராமலிங்கம்.
 
எங்கே சென்றாலும் சக்தி இல்லையேல் சிவமில்லை சிவம் இல்லையேல் சக்தி இல்லை. பெருக்கும் சக்தியின் நிலைகள் கொண்டுதான் அந்தச் சக்தியின் துணை கொண்டு தான் எண்ணத்தால் சீவலிங்கமாக இந்த உடல் ஆகிறது.
 
எண்ணத்தால் ராமலிங்கமாக உருவாக்க வேண்டும். ஒளியின் சரீரம்…! இது தான் சிவசக்தி என்பது. கணவன் மனைவி அல்ல.
 
நாம் கவர்ந்து கொண்ட சக்தி வசிஷ்டர். கவர்ந்தது எதுவோ அதனுடன் இணைந்தே வேலை செய்யும். எண்ணிய எண்ணங்கள் எதிர்நிலை ஆகிவிட்டால் என்ன செய்யும்…? அதனால் தான் சிவ சக்தி என்பது. சக்தி தான் சிவம் ஆகிறது. சிவம் தான் சக்தியாகிறது.
1.சக்தியான நிலைகள் மறைமுகமானது.
2.உறைந்துவிட்டால் சிவம் ஆகின்றது சிவசக்தி என்று பொருள்
 
ஒன்றுக்குள் ஒன்று ஜீவன் பெற்று ஒன்றின் அணைப்பில தான் இயங்குகின்றது. முதலில் என்று பிரணவம் ஆகின்றது… மற்றொன்று அதற்குள் இருந்து ஒவ்வொரு உணர்வும் தன் தன் நிலைகளை இயக்கும்.
 
முக்குள்ம்முக்குள்ம்முக்குள்ம்முக்குள்ம். இதைப் போன்று பல கோடி உணர்வின் தன்மை ன்றுடன் ஒன்று இணைந்து ஓ என்று பிரணவமாகி ம்… என்ற உடல் ஆகிறது.
 
உயிரணுவின் தன்மை உடலுக்குள் வரப்படும் பொழுது எத்தனையோ கோடி உணர்வு கொண்டுதான் எண்ணத்தின் தன்மை வருகின்றது.
 
உயிர் ஓ என்று இயக்கினாலும் நாம் எண்ணிய உணர்வுகள் முக்குள்ம் அந்த உணர்வின் இயக்கமாகத்தான் இயக்கும். எதிலேயும் ஓ என்ற பிரணவம் இயக்கம் இல்லை என்றால் உடல் உருவாகாது.
 
1.ஜீவன் ஆனால் தான் மலம் உடலாகின்றது. உறைந்திடும் நிலைகள் உடல்.
2.அதாவது திரேதா யுகம் உடலுக்குள் உயிரணுவின் தோற்றமான பின்
3.எண்ணத்தின் உணர்வு கொண்டு ஓ என்று இயக்குகின்றது. உணர்வின் தன்மை ம்… என்று மலமாகிறது.
 
அதே போல செடிகளில் ஒன்று இணைந்த பின் ஓ என்று குவித்த நிலையில் இயக்குகின்றது ம்… என்று உணர்வின் சத்து உறைகின்றது… சிவமாகிறது.
 
சக்தியாக இருப்பது செடியாக்கப்படும் பொழுது துவைதம். னின் மணம் வெளி வரப்படும் போது சக்தி ஆகின்றது. அதற்குள்ளும் எந்தெந்த உணர்வுகள் உள்ளதோ அதனின் ஜீவன் இயக்கவில்லை என்றால் வளர்ச்சி ஆகாது.
 
ஒரு கசப்பின் தன்மை வரவேண்டும் என்றால் பல உணர்வுகள் சேர்த்துத் தான் அது உருவாகின்றது. அந்தப் பல உணர்வுகள் ஒன்றுக்குள் ஒன்றாகி  ஒன்றின் உணர்வு கொண்டு இணைந்து அது ஓ என்று ஜீவனாகி ம்ன்று உடலாகிறது.
 
இதைத்தான் ஓமுக்குள் ஓம் ஓமுக்குள் ஓம். ஒன்றுடன் இணைந்து இயக்கவில்லை என்றால் அது இல்லை என்றே பொருள்.
1.ஆக மொத்தம் எதிலுமே ஒன்றுடன் ஒன்று துணை கொண்டு அது இயக்கச்சக்தியாக மாறினால் தான் ஓம் ஓம் ஓம் ஓம்…”
2.நாம் எதை எண்ணி ஓம்…” என்று இப்பொழுது தனக்குள் சேர்க்க வேண்டும்…?
3.மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து அதை ஜீவன் பெறச் செய்து ஒளியாக மாற்ற வேண்டும்.
 
அதைத் தான் இந்த உபதேச வாயிலாக உணர்த்துகின்றோம்.

கண் பார்வை… உணர்ச்சி… ரூபம்… இயக்கம்…!

கண் பார்வை… உணர்ச்சி… ரூபம்… இயக்கம்…!


குருநாதர் ஒரு சமயம் ஒரு வேடிக்கையைக் காட்டுடா…! என்று சொன்னார். ஒரு வாழை மட்டை குப்பைத் தொட்டி அருகே நல்ல பாம்பு படம் எடுத்தது போன்று இருந்தது.
 
ஐயோ நல்ல பாம்பு…! என்று நீ சொல் என்றார். சொன்னேன்…! எல்லோரும் பார்த்து ஆமாம் என்கிறார்கள். இது நடந்த நிகழ்ச்சி.
 
1.மனிதனின் உணர்வுக்குள் எதை ஏற்றுகின்றோமோ ந்த உணர்ச்சியின் இயக்கங்கள் எப்படி ரூபமாகக் காட்டுகிறது…?
2.வாழை மட்டை தான்…! நாகப்பாம்பு போன்று தெரிகின்றது.
 
இதை ஏற்றுக் கொண்ட பின் மனிதனுக்குள் இந்த உணர்வு எப்படி இயக்குகின்றது…? பாம்பின் ரூபமாக எப்படிக் காட்டுகிறது…? என்று காட்டுகின்றார்.
 
ஐயோ பாம்பு…! என்று சொன்னேன் எல்லோரும் ஆமாம் என்கிறார்கள். அது அந்தி நேரம். வாழை மட்டையிலே லேசாக மினு மினு என்று மின்னிய பின் அந்த நேரத்திலே அப்படித் தெரிகின்றது. சுருக்கம் சுருக்கமாக இருப்பதால் நிஜமாகவே அது நாகப் பாம்பு போலவே தெரிகின்றது.
 
எல்லாம் விழுந்து அடித்து ஓடுகின்றார்கள். பாம்பை அடிக்க வேண்டும் கட்டையை எடு கம்பை எடு…! என்கிறார்கள். ஒருவன் பெரிய கம்பால் அதை அடிக்கின்றான். கம்பிலே அடித்தவுடன் சுற்றி எங்கேயோ சென்று விட்டது… தெரியவில்லை.
 
காலுக்குள் சென்றது… இல்லை அங்கே போய்விட்டது என்று அலறிக் கொண்டுள்ளார்கள். ஆனால் அடித்தவுடன் சுற்றி மேலே சென்று தூரத்தில் விழுந்து விட்டது.
 
ஆனால் அந்தப் பக்கம் போனால் அது வாழை மட்டையாகத் தான் இருக்கின்றது. அவன் அதை அடிக்கவில்லை. ங்கேயோ போய்விட்டது இல்லை இந்தப் பக்கம் போய்விட்டது…! என்று தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.
 
ந்த உணர்வுகள்… “நாம் சமைத்த உணர்வுகள் கண்ணிலே எதைக் காட்டுகின்றது…?” என்று இதை நீங்கள் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.
 
வேறு ஒன்றும் வேண்டியதில்லை. ஒரு பொருளை உங்களுக்கு முன்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
1.கண்ணிலே சிறிது நேரம் அப்படியே உற்றுப் பாருங்கள்.
2.பார்த்துவிட்டுத் திரும்பி வேறு பக்கம் பாருங்கள்.
3.அந்தப் பொருள் சுவரிலே தெரியவரும்.
 
புள்ளிப் புள்ளியாக ஓட்டையிட்டு ஒரு பொருளை வைத்துக் கொள்ளுங்கள்... அடையாளம் தெரிந்து கொள்வதற்கு…! சிறிது நேரம் அதை உற்றுப் பாருங்கள்
 
பார்த்துவிட்டு அந்தப் பக்கம் பாருங்கள் அதே ஓட்டை அந்தப் பொருள் எல்லாம் தெரிய வரும்.
1.அதே பொருளைப் பார்த்து விட்டு நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
2.சுவரிலே பார்த்தால் அப்படியே தெரியும்.
 
இந்த உணர்வுகள் நம் கண்ணிலே அதனுடைய பிரதி பிம்பமாக அப்படித் தெரிய வருகிறது.
 
கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வார்கள்.
1.அந்த உணர்வின் தன்மை தனக்குள் வரும் போது
2.குவித்து… உணர்வின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.
 
பல கோடிச் சரீரங்கள் கடந்து மனிதனான பின்
1.உணர்வின் நோக்கங்கள் கவர்ந்து கொண்டது எதுவோ
2.அந்த உணர்ச்சிகளைத் தனக்குள் நுகரச் செய்து
3.இந்த உணர்வுக்கொப்பவே ரூபத்தைக் காட்டுகின்றது…”
 
தையெல்லாம் அனுபவித்துச் சொல்லுகின்றேன். குருநாதர் கொடுத்த சக்தியை எப்படிப் பயன்படுத்த வேண்டும்…? என்பதற்குத் தான் இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.