ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 31, 2017

பிறர் வேதனைப்படுவதைக் கண்டு எக்காரணம் கொண்டும் நாம் ரசிக்கக்கூடாது.., அவர்கள் "அதிலிருந்து மீள வேண்டும்" என்று தான் எண்ண வேண்டும் – விளக்கம்

நாம் சுவாசித்த உணர்வுகளில் “எது அதிகமோ” அதன்படிதான் நமது வாழ்க்கையில் எதுவும் நடக்கும்.

1.நமக்கு நோய் வருவதும்
2.இந்த உடலில் பல அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பல மனக்கலக்கங்கள் ஏற்படுவதும்
3.தீமையின் அணுக்கள் பெருகி உடலுக்குள்  உறுப்புக்கள் சேதமாவதும்,
4.மன நோய் வருவதும் உடல் நோய் வருவதும் மனநிலை கெடுவதும், சிந்தித்துச் செயல்படும் சக்தி இழப்பதும்
5.இவை அனைத்துமே “நாம் சுவாசித்த உணர்வுப்படிதான்” நமக்கு வருகின்றது. 

தன் வாழ்க்கையைச் சீர்படுத்த முடியாத நிலை ஏற்படுகின்றது.

நாம் வேதனை கொண்டு அடுத்ததை வேதனைப்படுத்தி ரசித்துக் கொண்டிருப்போம் என்றால் புலி நரி நாய் போன்ற உணர்வுகள் நமக்குள் தோற்றுவிக்கப்படுகின்றது.

அதன் உணர்வு அதிகரித்தால் அதன் கணக்கின்படி இந்த உடலில் கடுமையான நோய்கள் வருகின்றது. பின் அந்த வேதனை அலைகொண்டு ஆன்மா வெளியே சென்றால் நரியோ நாயோ புலியோ போன்ற நிலைகளை உருவாக்குகின்றது. இதைப் போன்று
1.நமது வாழ்க்கையில் பிறருக்குத் தெரியாமல் பல செயல்களைச் செய்கின்றோம்.
2.இவை அனைத்தையும் நமது உயிர் உருவாக்கியே தீரும்.
3.இதிலிருந்து எவரும் தப்பவே முடியாது.

நான் உங்களை ஏமாற்றலாம் ஆனால் நான் ஏமாற்றியதை எனது உயிர் கருவாக்கி அணுவாக்கி உடலாக உருவாக்கிவிடுகின்றது.

ஒருவரை வேதனைப்படுத்தி மறைமுகமாக ரசிப்போமென்றாலும் பிறரைத் துன்புறுத்தியோ பிறர் துன்பப்படும் நிலைகளை உருவாக்கியோ இத்தகைய செயல்களைச் செயல்படுத்தினால் அவர்கள் “உயிரிடமிருந்து… தப்பவே முடியாது”.

இன்றைய வாழ்க்கையில் எந்த உணர்வின் தன்மை அதிகரிக்கின்றதோ அதன்படி நோயும் இந்த உடலைவிட்டுச் சென்றபின் மனிதனல்லாத உருவையும் உருவாக்கிவிடும் உயிர்.

நாம் பல கோடிs சரீரங்களில் தீமைகளை வென்றிடும் உணர்வை நுகர்ந்து நுகர்ந்து தீமைகளை வென்றிடும் அமைப்பை நமக்குக் கொடுத்ததும் நமது உயிரே. 

தீமைகளை வென்றிடும் ஆற்றலை நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் இன்றைய செயல் நாளைய சரீரமாவதில் சந்தேகம் இல்லை.

நாளை புலியோ பாம்போ ஆடோ தேளோ என உருவாக்கிவிடும்.

ஒருவர் துன்பப்படுவதைக் கண்டு நாம் இன்பப்பட்டால் அதனுடைய நிலைகள் விபரீதமாக இருக்கும்.

ஒருவர் துன்பத்தின் செயலாக செயல்படும் பொழுது நாம் நுகர்ந்தறிந்தால் நாம்
1.அவர் அந்தத் துன்பத்திலிருந்து விடுபடவேண்டும்,
2.அவர் அருள் ஒளி பெற வேண்டும்
3.அவர் மெய் ஒளி காண வேண்டும் என்று
4.நம் உணர்வுக்குள் இதை இணைத்து
5.அந்தத் தீமையின் உணர்வுகள் வளராது காத்துக் கொள்பவர் எவரோ அவர் தப்ப முடியும்.

தீமையின் உணர்வை அடிக்கடி நுகர்ந்தபின் தீமையின் செயலை தன் எண்ணத்தால் உருவாக்கி அந்த உணர்வின் தன்மை ஆழப்பதிந்து விட்டால் மனிதனல்லாத உருவைத்தான் உருவாக்கும்.

பிறரைத் துன்பப்படுத்தி ரசித்து வாழ்பவர்கள் “அதனுடைய முதிர்வு காலத்தில்” நிச்சயம் அனுபவித்தே தீர வேண்டும்.
1.உடல்களில் பல நோய் வரும்.
2.டாக்டருக்கும் புலப்படாது, வேதனையிலிருந்து மீளமுடியாது.

காச நோயையோ புற்று நோயையோ பிறருடைய உடல்களில் நுகர்ந்தாலும் பிறருக்குத் தீமை செய்து ரசித்தாலும் அந்த உணர்வுகள் நம் உடலில் நிச்சயம் விளையும்.

விளைந்தபின் உடனே ஒன்றும் தெரியாது.

இன்றைய செயல் நாளைய வாழ்க்கையாக அமைகின்றது.  இன்று நாம் எந்த நிலைகளில் நல்ல உணர்வினைப் பெறுகின்றோமோ அது நாளைய உடலின் தன்மையாக நாளைய செயலாக அமைகின்றது.

நல்ல ஒழுக்கங்களையும் நல்ல பண்புகளையும் நாம் பெற்றாலும், வேதனை என்ற உணர்வுகளை நுகரப்படும்பொழுது அது மனித உடலை உருவாக்கிய அனைத்து நல்ல நிலைகளையும் அழித்துவிடுகின்றது.

ஆகவே நாம் அனைவரும் நமது குரு காட்டிய வழியில் மகரிஷிகளின் ஆற்றல் மிக்க அருள் சக்திகளை நமக்குள் சேர்த்து நம்மையறியாது வரும் வேதனைகளிலிருந்து விடுபடுவோம். வேதனைகளை நீக்கிடும் அருள் சக்தி பெறுவோம். அதைப் போன்று,
1.நாம் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
2.அவர்களும் வேதனைகளிலிருந்து மீள வேண்டும் என்று
3.நாம் “தியானிப்போம்… தவமிருப்போம்”.

உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள் புவிக்குள் சுழல்வதையும் ஒளிச் சரீரம் பெற்ற உயிராத்மாக்கள் “சப்தரிஷி மண்டலங்களில்” வாழ்வதையும் காட்டினார் குருநாதர்

உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் தெய்வங்களைப் பற்றிய உண்மைகளைக் காட்டுகின்றன.

அந்தந்த மதங்கள் காட்டிய வழி முறைப்படி வணங்கி வரும் தெய்வ வழிபாட்டில் உபதேசித்த அறநெறிகளையும் பல நற்பண்புகளையும் கடைப்பிடித்து உலக மக்கள் வாழ்கின்றார்கள்,

ஒவ்வொரு மனிதனும் தான் வணங்கி வரும் தெய்வங்கள் தங்களைக் காத்து வரும் என்ற நம்பிக்கையில்
1.எல்லா வழிகளிலும் நல்லதைச் செய்யவே
2.உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் எண்ணுகின்றார்கள்.

ஆனால் நான் உனக்குக் காட்டி உணர்த்திய படி
1.ஒவ்வொரு மனிதருக்குள்ளும் “தீய உணர்வலைகள்”
2.அவர்களை அறியாமல் அவர்கள் உடல்களில் எவ்வாறு சேர்கின்றன? என்பதனை உணர்த்தினேன் என்றார் குருநாதர்.

அதிலே நீயும் ஒருவன்.

தீய உணர்வுகளில் இருந்து உன்னை நீ எவ்வாறு காப்பாற்றிக் கொள்ளப் போகின்றாய்…! என்ற கேள்விக் குறியுடன் அவர் சொல்வதை நிறுத்திக் கொண்டார்.

சிறிது நேரம் கழித்து என்னை விண்ணை நோக்கிப் பார்க்கும்படி சொன்னார்.

1.பல நட்சத்திரங்களில் இருந்து வெளிவரும் ஒளி அலைகளைக் காண்பித்தார்
2.அதன் உண்மை நிலைகளையும் உணர்த்தினார்
3.பின்பு சப்தரிஷி மண்டலங்களைக் காண்பித்தார்

அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் ஈர்ப்புக்குள் சிறு சிறு புள்ளிகளாக வலம் வந்து கொண்டு கோலிக் குண்டுகளைப் போன்று பல வண்ணங்களில் இருந்தன.

“அவை எல்லாம் என்ன…?” என்று என்னைக் கேட்டார்.

“நான் தெரியவில்லை…”என்று சொல்லியதும் மற்றவர்களிடம் பைத்தியம் பேசுவது போன்று பேசுவதைப் போல எனக்குப் புரியாத நிலையில் பேசிக் கொண்டே என்னை ஓங்கி ஒரு அடி கொடுத்தார்.

நான் திகைத்துப் போனேன் பிறகு அதன் நிலையை உணர வைத்தார்.

அதெல்லாம் சப்தரிஷி மண்டலங்கள் வெளிப்படுத்திய ஒளி சக்தியைப் பூமியில் மனிதர்களாக வாழ்ந்த காலங்களில் அவர்கள் தவத்தின் வலிமையால் புலன்களின் உணர்வால் அந்த ஒளி சக்தியை தங்களின் சுவாசங்களில் ஈர்த்துக் கொண்டனர்.

சுவாசித்த உணர்வுகளை இரத்த நாளங்களில் சேர்த்துக் கொண்டு, அவர்களின் அவர்களின் உடல்களில் சேர்த்துக் கொண்டதினால் மனிதனை மிருகமாக மாற்றவல்ல தீய உணர்வுகளை மாய்த்தனர்.
1.அதனின் வளர்ச்சியில் தங்களையே அறியும் ஞானிகளாக
2.ஞானத்தின் வழித் தொடரில் மெய்ஞானிகளாகி
3.அவர்களின் உயிரில் ஆத்மாவாக இயங்கிய அணு சிசுக்கள் ஒளியாக மாறி உயிருடன் உயிராகச் சேர்ந்து
4.ஒளியின் உணர்வு கொண்ட ஜடமாக மின்னும் நட்சத்திரங்களைத் தான் நீ பார்த்தது என்றார் குருநாதர்.

உயிரின் ஈர்ப்பில் ஆத்மாவாக இருக்கும் அணு சிசுக்கள் ஒவ்வொரு உடலிலும் சேர்த்துக் கொண்ட உணர்வுகளுக்கு ஒப்ப அணு சிசுக்கள் மாறிக் கொண்டே இருக்கும்,

“மாறிய அணு சிசுக்களுக்கு ஒப்பத்தான்” அடுத்த உடலை அந்த உயிர் உருவாக்கும் என்று உணர்த்தினார் குருநாதர்.

சிறிது நேரம் மலைகளையும், காடுகளையும் சமவெளிகளையும் திரும்பிப் பார்க்கச் சொன்னார்.

திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அப்பொழுது இளம் கருப்பு அடர்த்திக்கொப்ப இலேசான ஒளி பிரகாசமான ஒளி, இவ்வாறு பல வகையான வண்ணங்களில் சிறு புள்ளிகளாகத் தெரிந்தன.

அதன் விவரங்களை விளக்கி உபதேசித்துக் கொண்டிருந்தார் குருநாதர். “மின்னல் பாயும் பொழுது… கண்களை மூடிவிடாதே…!” என்றார்.

எனக்குப் பயம்… வந்துவிட்டது. கண்களை மூடவில்லை என்றால் பார்வை இழந்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்டேன்?

அவ்வளவுதான்… பைத்தியம் பிடித்தவர் போன்று எனக்குப் புரியாத பாஷையில் பேசிவிட்டுப் பிறகு என் உணர்வுகளில் “புரியும்படி” உணர்த்தினார்

நான் சொன்னதைச் செய்கிறேன் என்றாய் இப்பொழுது ஏன் தயக்கம்? என்று கேட்டுவிட்டு
1.“நீயாகவா பார்க்கிறாய்…!
2.நான் அல்லவா… பார்க்கச் சொல்லுகிறேன்…! என்றார்.

சிறிது நேரம் சமவெளியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது இந்த மனிதர்களின் உடல்களிலிருந்து பிரிந்து வந்த உயிராத்மாக்கள்தான் சிறு சிறு புள்ளிகளாகத் தெரிவது என்று காட்டினார்.

அதில் பிரகாசமாகத் தெரிந்த புள்ளிகளைச் சுட்டிக் காட்டி சில கூடு விட்டுக் கூடு பாய்ந்து பல செயல்களைச் செய்து வந்து கடைசியில், கூடு விட்டுக் கூடு பாயும் சக்தி இழந்த உயிராத்மாக்கள் கரும் புள்ளிகளாக இருக்கின்றன என்றார்.

பல மந்திர தந்திரங்களைச் செய்து காட்டி வந்த உயிராத்மாக்களும், கரும் புள்ளியாக இருக்கின்றன. இவை அனைத்திலும் உயிரின் ஈர்ப்பில் ஆத்மாவாக உள்ள அணுசிசுக்கள் தெரிகின்றன.

இன்னும் சிலர் ஒன்றையும் எதிர்பார்ப்பில்லாது பல துன்பங்கள் வந்தாலும் அதைத் தாங்கிக் கொண்டு நல்ல செயல்களைச் செய்து வந்து தெய்வமே துணை என்ற நிலையிலும் வளர்ந்து வந்த உயிராத்மாக்கள் இளம் சிவப்புப் புள்ளியாகத் தெரிந்தன.

இதையெல்லாம் சொல்லிவிட்டுச் சமவெளியைப் பார்த்துக் கொண்டே இருக்கச் சொன்னார்.

அச்சமயம் எதிர்பாராது “பளீர்…பளீர்…ர்ர்” என்று மின்னல் பாய்ந்து கொண்டேயிருந்தது. அந்த மின்னலில் சிக்கிய பல வண்ணம் கொண்ட உயிராத்மாக்களின் அணுசிசுக்கள் செயல் இழந்து விட்டன.

ஆனால் உயிர்கள் அழியவில்லை அவை அழிவதில்லை.

“ஒளியாக இருந்த உயிராத்மாக்கள்” மின்னலின் கதிர்வீச்சில் சிக்கினாலும் எவ்விதப் பாதிப்புமில்லாது மின்னிக் கொண்டேயிருந்தன.

இத்தகைய ஒளியான உயிராத்மாக்கள் மறு பிறப்பிற்கு வராமல் பூமியின் ஈர்ப்பில் சுழன்று கொண்டே தங்களை வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவைகளாகின்றன.

காலத்தால் விண்ணைச் சென்றடைந்து விடுகின்றன.

இத்தகைய ஒளியான உயிராத்மாக்களிலிருந்து வெளிப்படும் ஒளி அணுக்கள் சந்தர்ப்பவசத்தால் பிறிதொரு மனிதனின் உணர்வின் ஈர்ப்பில் சேர்ந்தால்
1.அந்த மனிதனின் ஆற்றல் பெருகி
2.ஞானத்தின் வழித்தொடரில் தன்னை அறியக்கூடிய மெய் ஞானியாகின்றான்.

இவ்வாறு நிகழ்வது எங்கோ ஒருவருக்குத்தான் என்று உணர்த்திவிட்டு மின்னலில் செயலிழந்த உயிராத்மாக்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

மின்னலின் தாக்குதலுக்குள்ளான உயிராத்மாவின் அணுசிசுக்களின் செயலிழந்த சத்துக்கள் உயிரில் இணைந்த ஆத்மாவாக இருக்கின்றன. அது மீண்டும் மனிதனாக உடல் பெறத் தகுதியற்றதாகிறது.

இத்தகைய உயிராத்மாக்கள் பூமியில் உள்ள தாவரங்கள் மீது படும் பொழுது உயிரின் துடிப்பினால் செயலிழந்த ஆத்மாக்கள் மீண்டும் அணுக்கருக்களாக உருவாகி “புது விதமான பூச்சிகளாக” உருப்பெறுகின்றது என்பதை உணர்த்தினார்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

அகஸ்தியன் “தலைக் காவிரியில் அமர்ந்து” அகண்ட அண்டத்தையும் அறிந்தான் – அந்த அறிவின் ஆற்றலை நாமும் பெறுவோம்

வராகன் பல கோடிச் சரீரங்கள் எடுத்துக் கூர்மையாகப் பார்த்துத் தீமைகளை அகற்றிடும் வல்லமை பெற்று நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்தது. அடுத்து மனிதனாக உருவானது.

ஆனால் காற்று மண்டலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட நச்சுத் தன்மைகள் இன்று ஏராளமாக வருகின்றது.

அதனால் நம் உடலில் இரத்தநாளங்களில் பல விஷத் தன்மைகள் கிருமிகள் உருவாகின்றது. பல விதமான புதுப் புது நோய்களும் உருவாகின்றது.

இதைப் போன்ற நிலைகளை நாம் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வலுவாக எடுத்துச் சுவாசித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

காலையில் எழுந்தவுடன்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும்
2.அது என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும்
3.அது என் கணவருக்குக் கிடைக்க வேண்டும்
4.எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும்
5.எங்கள் குடும்பம் முழுவதும் படரவேண்டும்
6.நாங்கள் பார்க்க்கும் பார்வையில் தீமைகள் அகன்றிட வேண்டும் என்ற உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்.

இதைச் சேர்த்துக் கொண்டே வந்தோம் என்றால் இனி அணுகுண்டை வெடித்து அதனால் வரப் போகும் எத்தகையை விஷத்தன்மையாக இருந்தாலும் அது நம்மைப் பாதிக்காதவண்ணம் தடுத்துக் கொள்ளலாம்.

ஏனென்றால் உலக யுத்தம் என்ற நிலை வரும்போது அணுகுண்டை வெடித்து இரு மடங்கு மின் உற்பத்தியாகும் நிலை ஏற்படும்.

அந்த அணுக்கதிரியக்கங்கள் பிரபஞ்சத்தில் மோதி எல்லாக் கோள்களும் அதை எடுத்து அது உமிழ்த்தும் போது
1.சூரியன் அருகிலே போனதும் மோதி
2.இரு மடங்கு காந்தத்தை உற்பத்தி செய்யப் போகின்றது.
3.அந்த மாதிரி இயக்கச் சக்தி வரும் பொழுது நம் உயிரின் துடிப்பு அதிகரிக்கும்.
4.உடலில் உள்ள அணுக்களின் துடிப்பு அதிகரிக்கும்.

நம் உணர்வின் தன்மை மடிந்து போகும் நேரத்திலே நாம் நம்மைக் காக்க வேண்டும் என்றால் அந்த அகஸ்தியனின் உணர்வை எடுத்தே ஆக வேண்டும்.

ஆகவே எப்படி வராகன் தீமையைப் பிளந்ததோ அந்த அருள் ஞானிகளின் உணர்வைச் சேர்த்து விஷத் தன்மைகள் நமக்குள் வராது பிளந்து பழகவேண்டும்.

யாம் சொல்வது லேசாகத் தான் தெரியும். இதை நீங்கள் கண்டுபிடித்து அர்த்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால் உங்களுக்கு ஆயுள் பத்தாது.

ஏனென்றால் குருநாதர் அந்த அருள் சக்தியின் உணர்வுகள் கொண்டு அகஸ்தியன் உணர்வைக் கவரும்படி செய்தார்.

பாக மண்டலத்தில் அகஸ்தியன் அமர்ந்த இடத்தில் என்னையும் இருக்கச் செய்தார் குருநாதர். அங்கே மேலே தண்ணீர் இருக்கும். ஆனால் கீழே அடிவாரத்தில் நீர் கிடையாது. மேலே ஊற்றுகள் உண்டு.

ஏனென்றால் அங்கே மேகங்கள் கூடி வருவதை நுகர்ந்து அதை நீராக மாற்றுகின்றது. அதனால் தான் அகஸ்தியனுக்கு நீர் சக்தி வருகின்றது. நீர் சக்தி வருவதனால் ஜீவ சக்தியை அவனால் பெற முடிந்தது.

இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகின்றது அகண்ட அண்டம் ஆதியிலே எப்படி உருவானது என்று அகஸ்தியன் கண்டுணர்ந்த உண்மைகளை அங்கே அமர்ந்து தியானிக்கும்போது அறிய முடிந்தது. குரு அருளால் அதைக் கண்டுணர முடிந்தது.
1.அகஸ்தியன் கண்டுணர்ந்த அந்த உணர்வின் அறிவு தான்
2.எனக்குள்ளும் புகுந்து இத்தகைய நிலைகளை எல்லாம் அறிய முடிந்தது.

இதைப் போல நீங்களும் அறிந்து தீமைகளைப் பிளந்து அந்த “அகஸ்தியனின் அருள் ஒளிகளை” உங்களுக்குள் விளைய வைத்துப் பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்.

அதற்காகத்தான் நான் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பச் சொல்வது.

வளர்ச்சியின் பாதையில் வந்த மனிதன் “தன்னைக் காட்டிலும் வலுவான” மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து அடுத்த நிலையை அடைய வேண்டும்

நுகர்ந்த உணர்வின் அறிவு கொண்டுதான் மற்ற உயிரினங்கள் வாழுகின்றது. மனிதர்கள் நாம் பேசுகின்றோம் உயிரினங்கள் ஒலிகளை எழுப்புகின்றது. ஆனந்தக் குரல் சோகக் குரல் எதிரிகளைக் கண்டபின் அது எப்படி வாழ வேண்டும்? என்று, எதிரொலிகளை அனுப்புகின்றது.

உதாரணமாக கோழியை எடுத்துக் கொண்டால் தன் குஞ்சுகளை வளர்க்கும் பொழுது கருடனைக் கண்டால் ஒரு விதமான அச்சுறுத்தும் குரல்களை எழுப்புகின்றது.

உடனே குஞ்சுகள் அனைத்தும் கோழியின் சிறகிற்குள் அடைக்கலம் புகுந்துவிடுகின்றது. இது அதனுடைய பரிபாஷைகள்.

ஆனால் கோழி குஞ்சுகளுக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை. அதன் உணர்வின் தொடர்பு கொண்டு இயக்கச் சக்தியாக இயங்குகின்றது.

எலிகளை எடுத்துக் கொண்டாலும் பூனையின் மணத்தை நுகர்ந்தால், அடுத்த எலிகளுக்கு எச்சரிக்கை செய்கின்றது. அதனுடைய ஒலிகளை எழுப்பியவுடன் மற்ற அனைத்தும் அமைதியாக இருந்து விடுகின்றது.

பூனையோ தன் இரைக்காகப் பதுங்கி இருக்கின்றது. ஆனால், எலியின் மணத்தை நுகர்ந்து, நுகர்ந்து அதே மூச்சை வெளியிடுகின்றது. அப்பொழுது, இந்தப் பூனையின் மணம் மறைந்துவிடுகின்றது.

இவ்வாறு பூனையின் மணம் மறைந்து எலியின் மணம் வெளிவரத் தொடங்கியவுடன் எலி வெளிவரத் தொடங்கி விடுகின்றது.

பூனை அந்த எலியின் சிரசை அடித்து விடுகின்றது. ஏனென்றால், எலியின் மற்ற உடல் பாகம் பிடித்தால், அது கடித்துவிடும் என்று, பிடித்தவுடனே உதறிவிடுகின்றது. அதன் பலத்தைக் குறைத்து விடுகின்றது. பின்பு அதைக் கொன்று தனக்கு இரையாக்கிக் கொள்கின்றது.

இது ஒவ்வொன்றும், உணர்வுகளுக்கு ஒப்ப வெளிப்படுத்துகின்றது. மனிதனாக இருக்கும் நாம் பல பல எண்ணங்களை நமக்குள் கலந்து கொள்வோம். பல தந்திரங்களையும் கற்றுக் கொள்வோம்.

அவைகளில் ஒரு மாட்டைப் பிரியமாக வளர்க்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம்.

அந்த மாட்டிடம் யார் ஒருவர் உணர்வை அதிகமாகச் செலுத்துகின்றாரோ அவருடைய குணமெல்லாம் அந்த மாட்டிற்கு உண்டு. அவர் யாரையாவது வெறுக்கும் தன்மை வந்து, கோபமாகப் பேசுகின்றார் என்றால் அதே போன்று அந்த மாட்டிற்கும் வரும். அது பதிவாகி உடனே தாக்க ஆரம்பிக்கும்.

இந்த மனிதனின் உணர்வுகள் அதனின் உடலில் பதிவாகி அத்தகைய செயல்களைச் செயல்படுத்தும், ஏனென்றால் அதன் உடலில் உள்ள “காந்தப் புலன்” அதைக் கவர்ந்து அந்த உணர்வுக்குக்கொப்ப அந்த மாடு வளர்கின்றது.

சிலர் நாய் வளர்க்கும் பொழுது அந்த நாய் யார் மேல் அதிகமாகப் பற்று வைத்திருக்கின்றதோ அந்தப் பற்றுக்கொப்ப அதனுடைய உணர்வுகளும் அறிவும் இருக்கும். அவர்கள் யாரிடமாவது சீறித் தாக்கித் தன்னிடம் அணுகாது செய்திருந்தால் அதே உணர்வு நாயிற்கும் வரும்.

ஆனால் மனிதர்கள்பால் வளரப்படும் பொழுது எத்தகைய உணர்வு கொண்டு வளருகின்றதோ நம்மை உற்று நோக்கும் பொழுது நம்முடைய உணர்வுகள் அதனுடைய உடலில் படருகின்றது.
1.மனிதன் வளர்க்கும் உயிரினங்கள்
2.அது இறந்தபின் யார் அதை வளர்க்கின்றனரோ
3.அவர்களின் உடலுக்குள் புகுந்து, அது மனிதனாகப் பிறக்கின்றது.

நம் வீட்டிற்குள் ஒரு பாம்பு வந்துவிட்டால் அது தீண்டி விடுமே என்ற அச்சத்தின் உணர்வாக நுகர்ந்தால் அந்தப் பாம்பின் உடலில் இருந்து வரக்கூடிய மணத்தை நாம் நுகர்ந்து அந்தப் பாம்பின் நினைவே வரும்.

அந்த நினைவு கொண்டு எண்ணங்களைச் செலுத்தும்போது பாம்பு அவருக்கு நேராகவே வரும். பாம்பு அடிக்கடி அவர் கண்ணுக்குத் தென்படும். இவர் எண்ணத்தின் மணத்தை நுகரப்படும் பொழுது தன் இனமென்ற நிலைகளில் தாராளமாக வரும்.

அது வரும் பொழுது நாம் அஞ்சி ஓடுவோம். அத்தகைய நிலை வரும் பொழுது பாம்பைக் கண்டால் அடிக்க மனம் வராது.

அவர் பாம்பைக் கண்டு அஞ்சி ஓடுவார். ஆனால் அடுத்தவர்தான் அதை அடிப்பார். இதுவெல்லாம் நாம் அறியாமலேயே நடக்கும் உயிரின் இயக்கங்கள்.

இதைப் போன்று நாம் பல கோடிச் சரீரங்களில் வலுவான  உணர்வுகளை நுகர்ந்து அதன் அறிவாக அதனிடமிருந்து காத்துக் கொள்ளும் உணர்வே வலுவாகின்றது.

இவ்வாறு அது வளர்த்துக் கொண்ட உணர்வுகள் “கூர்மை அவதாரம்”.

1.எதைக் கூர்மையாக வளர்த்துக் கொண்டதோ
2.அந்த உணர்வுகள் அந்த உடலில் பெருகி,
3.அந்த உடலை விட்டு இறந்தபின்,
4.எந்த உணர்வு வலுப் பெற்றதோ அந்த உடலுக்குள் சென்று
5.அதன் ரூபமாக, அந்த உடலாக மாற்றி விடுகின்றது
6.இப்படித்தான் பரிணாம வளர்ச்சியில் பல வகையிலும் பிறந்துள்ளோம்.

மற்ற உயிரினங்கள் தாவர இனங்களை உணவாக உட்கொள்கின்றன. மற்ற உடல்களை (மாமிசத்தை) உணவாக உட்கொள்பவை புல்லைத் தின்பதில்லை. புல் பூண்டுகளை உணவாக உட்கொள்பவை சைவம், மாமிச உணவை உணவாக உட்கொள்பவை அசைவம்.

1.உணர்வால் இயக்கப்பட்ட
2.உணர்வின் சக்தி பெற்ற அந்த உணர்வை நுகர்ந்து உடலான பின்
3.அத்தகைய உணர்வை எடுத்துத்தான் அதைக் கொன்று புசிக்கின்றது.    

ஆனால் கொன்று புசிக்கும் பொழுது அந்த உயிர் அதனுடைய உடலுக்குள் சென்று அது தன் குட்டியானபின் (தின்ற உடலின் உயிர் தன் குட்டியாக உருவானபின்) குட்டியைப் பாதுகாக்கின்றது.

இதைப் போன்றுதான் நாம் பல சரீரங்களுக்கு இரையாகி இரையாகி, நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை ஒவ்வொரு சரீரத்திலும் இறையாக்கி அதன் வலு கொண்டுதான் வராகன் என்ற வலிமை பெறுகின்றது.

எத்தனையோ கோடிச் சரீரங்களை உற்று நோக்கி அதனின் வலுவைக் கண்டுணர்ந்து அதனின்று மீண்டிடும் உணர்வை நுகர்ந்து அதன் உணர்வை இறையாக்கி இறையின் உணர்வாகத் தன் வாழ்க்கையை நடத்துகின்றது.

வலுவான உடல்கள் கொண்ட உயிரினங்கள் மற்றதைக் கொன்று தனக்கு இரையாக்கி கொள்கின்றது.

1.வலுவானது
2.“வலு இழந்ததின் தசைகளை” இரையாக்கிக் கொள்கின்றது.

1.வலுவிழந்ததோ
2.”வலுவான உணர்வை” இரையாக்கிக் கொள்கின்றது. 

நாம் இன்று மனிதனாக இருப்பினும் நம்மைக் காட்டிலும் வலுவான “மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து” இன்றைய செயல் நாளைய சரீரமாக நாம் மெய்ஞானியாக ஆக வேண்டும்.

July 30, 2017

“தன் இனமாக உருவாக்க வேண்டும்” என்று விரும்பும் மெய்ஞானிகளின் விருப்பம்

மெய் ஞானிகள் சென்ற அவர்களின் வழிப்பாதைகளில் செல்ல வேண்டும் என்று நான் (ஞான குரு) எண்ணுகின்றேன்.

அப்போது அந்த எண்ணத்திற்கு வலு கொடுக்க எமது குருநாதர் பல முறைகளில் அவர் கண்டுணர்ந்த உணர்வை அவர் எனக்குள் பதிவு செய்துள்ளார்.

அவர் உடலுக்குள் விளைய வைத்த ஆற்றல்களை எண்ணத்தின் செயலாகச் சொல்லுகின்றார்.
1.அதை உற்று நோக்கும் போது அந்த உணர்வின் சத்து
2.அவர் உடலில் இருந்து வரக்கூடிய ஒலியை என் செவிப் புலன் ஈர்த்தாலும்
3.அந்த உணர்வின் சத்து எனக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

ஊழ்வினை என்றால் “வித்து” என்று பொருள். அதாவது ஒரு மரத்தின் சத்து தனக்குள் விளைந்து அதனின் வித்தாகும் போது அதை ஒரு நிலத்தில் நாம் பதியச் செய்கின்றோம்.

அப்பொழுது அந்த மரம் எந்த உணர்வின் சத்தை வித்தாக எடுத்ததோ அந்த வித்து அதே உணர்வின் இயக்கமாக பூமியின் துணைகொண்டு நம் முன் படர்ந்திருக்கும் தன் தாய் மரத்தின் சத்தை உணவாக எடுத்து வளரும்.

உதாரணமாக ஒரு வேப்ப மரத்தில் இருந்து வெளிப்படும் கசப்பின் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரச் செய்கின்றது. அது இங்கே உண்டு.

அந்த வேப்ப மரத்தில் ஒரு வித்து உருவாகின்றது என்றால் அதை நாம் மண்ணிலே ஊன்றுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.அப்பொழுது அது காற்றிலே பரவி படர்ந்திருக்கும்
2.தன் தாய் மரத்தின் உணர்வின் சத்துகளை காந்தப் புலன் கவர்ந்திருந்தால்
3.புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு அதைக் கவர்ந்து
4.தன் உணவாக எடுத்து அந்த உணர்வின் சத்தாக விளைந்து “வேப்ப மரமாகும்”.
5.அதன் உணர்வின் “வித்தாக” மீண்டும் விளைகின்றது.

இப்பொழுது சொல்வது அர்த்தமாகின்றதல்லவா?

இதைப் போலத்தான் குருநாதர் அவர் விளைய வைத்த உணர்வின் சத்தை எனக்குள் உபதேசித்தார்.

என் செவிப் புலனறிவால் நான் கேட்டறியும்போது அவர் உணர்வின் உணர்ச்சிகள் எனக்குள் உந்தப்பட்டு அந்த உணர்வின் ஆற்றலை
1.நான் நினைவு கொண்டு “கூர்ந்து…” எண்ணும் போது
2.”அதைக் கவரும் நிலை” ஏற்படுகின்றது.
3.கவர்ந்த உணர்வுகள் என் நினைவுகளுடன் இணைக்கப்பட்டு
4.கருவின் தன்மையாக ஊழ்வினையாக ஒரு “ஞான வித்தாக” எனக்குள் பதிவாகின்றது.

அவர் உபதேசித்த உணர்வின் தன்மை கூர்மையாகக் கவனித்த பின் அதனின் நிலைகள் எனக்குள் பதிவாகி அதனை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தேன்.

 அவர் உடலிலே விளைந்த தீமைகளைக் கண்டறிந்து அதனின் உண்மையின் பொருளை கண்டுணர்ந்து மெய்யுணர்வை அவர் தனக்குள் வளர்த்த உணர்வுகளை என்னால் பெற முடிந்தது.

நமது குருநாதர் அவர் தீமைகளை அகற்றி மெய்யுணர்வைத் தனக்குள் வளர்த்து உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி இன்றும் விண்ணுலகில் சஞ்சரித்து கொண்டிருக்கின்றார்,

இப்பொழுது தற்காலத்தில் (1971) சப்தரிஷி மண்டலத்தில் இணைந்தவர் தான் நமது குருநாதர் “மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்”.

அவர் உடலில் விளைந்த அந்த உணர்வின் எண்ணங்களை உங்களுக்குள் யாம் உபதேசிக்கும் போது கேட்டுணர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

பதிந்த நிலைகளை நீங்கள் மீண்டும் எண்ணும்போது நமது குருநாதர் காட்டிய அருளுணர்வு இங்கே படர்ந்திருப்பினும் அவர் நினைவு கொண்டு அங்கே விளைந்த உணர்வை நாம் கண்டுணர முடிகின்றது. நுகர முடிகின்றது.

நுகர்ந்த உணர்வுகள் - ஒரு வித்து எவ்வாறு தனக்குள் சுவாசித்து தன் தாய் மரத்தின் சத்தைக் கவர்ந்து அதே மரமாக விளைகின்றதோ இதைப் போல குருநாதர் உடலில் விளைந்த
1.அந்த மெய்ஞானியின் மெய்யுணர்வின் ஆற்றல்
2.நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்று ஒளியின் சரீரமாக இருக்கும் அந்த உணர்வின் ஆற்றல்
3.நமக்குள் அது வளரும் தன்மை பெறுகின்றது.

ஒரு வித்து தாய் மரத்தின் சத்தைக் கவருவது போல் மெய் ஞானிகள்  விளைவித்த மெய் ஞான உணர்வுகளை நாம் பெற வேண்டும்

இதைப் படித்துப் பதிவாக்கும் அனைவரும் மெய் வழி நடந்து மெய் ஞானம் பெற்று மெய் ஞானிகளாக வளர்ந்து “என்றென்றும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும்” என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டுகின்றேன் பிரார்த்திக்கின்றேன். 

ஓம் ஈஸ்வரா குருதேவா…!

நம் உணர்வுகள் என்றுமே பிறரை “நல் வழியில் இயக்கும் ஆற்றலாக (ELECTRONIC)” இருத்தல் வேண்டும்

நாம் என்றுமே இருளை நீக்கி உயிருடன் ஒன்றி என்றும் நிலையாக வாழ வேண்டும். இந்த மனித உடலில் குறுகிய காலமே வாழ்கின்றோம். “நேரமாகி விட்டது என்று காவியங்கள் கூறுகின்றன.
 
1.நாம் வளர வளர இந்த உடலின் ஆயுளும் குறைந்து கொண்டே வருகின்றது.
2.இந்த உடலின் தரமும் குறைகின்றது.
3.ஆகவே நாம் அதற்குள் உயிருடன் ஒன்றி ஒளியின் உடல் பெற வேண்டும்.
4.அதற்கு நாம் நமது மனதை ஒன்றாக குவித்துப் பழகுதல் வேண்டும்.

நமது வாழ்க்கையில் பகைமை என்ற உணர்வு வந்தாலும் அது நம்மை இயக்காது பிறர் உடலில் உள்ள பகைமை ஊட்டும் உணர்வுகள்நம் பார்வையால் அகன்று செல்லும் சக்தி நாம் பெறுதல் வேண்டும்.

அனைவரையும் நல் வழியில் இயக்கும்எலெக்ட்ரானிக்காக நமக்குள் வலிமை பெற்றுப் பிறருடைய தீமையை நீக்கி அவர் உடலுக்குள் சென்று அந்த உணர்வினை மாற்றும் சக்தி பெறுதல் வேண்டும். 
1.நம் உணர்வுகள் என்றுமே 
2.பிறரை இயக்கும் “எலக்ட்ரானிக்காகஉருவாக வேண்டும்.

வேதனை வெறுப்பு என்ற உணர்வுகளை நாம் கண்டு கொண்டபின் இயற்கையின் நிலைகளில் அந்த வேதனையான உணர்வுகள் நம்மை அறியாமலேயே மற்றவர்களுடைய தீமையான உணர்வுகளைக் கவரும் நிலைகளாக நமக்குள் சலிப்பு சஞ்சலம் சோர்வு போன்ற நிலைகள் ஏற்படுகின்றது.

நீங்கள் ஒருவரைப் பார்த்துவிட்டுச் செல்லுங்கள் எவன் முகத்தில் விழித்து விட்டுச் சென்றேனோ தெரியவில்லை, என் காரியமெல்லாம் கெட்டுப் போய்விட்டது என்று சொல்வார்கள்.

ஏனென்றால் அவருடைய உணர்வுகளை நாம் கவர்ந்து கொண்டபின் நம் நல்ல உணர்வுகள் கெட்டுவிடும், செயலற்றதாகி விடும். 

ஒரு பொருளின் முகப்பில் எதைப் பூசுகின்றோமோ அந்த மணம்தான் வரும். உட்பொருளில் வேறு விதமாக இருக்கும்.

இதைப் போன்று நம் ஆன்மாவின் முன் பகுதியில் அது வந்து விட்டால் முன் பகுதியில் உள்ள உணர்வே நமக்கு எதிரியாக வந்து சேரும்.

1.நல்ல உணர்வுகள் முன் பகுதியில் இருந்தால்
2.அது நம்மை வாழ வைக்கும்.
இவ்வாறு செய்தோம் என்றால் நமக்குள் தெரிந்து தெளிந்து எதிரி என்ற நிலையை மாற்றி நண்பனாக மாற்றும் திறன் பெறுகின்றது.

அதனை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்குள் நீங்கள் உண்மையின் இயக்கங்களை உணர வேண்டும் என்பதற்காகத்தான் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு இதை உபதேசிப்பது. 

ஆகையினால் நமது மனதினை ஒன்றாகக் குவித்துப் பழகுதல் வேண்டும்.

ஒரு பாலின் நறுமணங்கள் ஒன்றாக இருந்தால் ஒரே மணமாக இருக்கும். பாலில் ஒரு பக்கம் காரம் உப்பு போன்ற நிலைகள் இருந்தால் அது  காரத்தின் சுவையாக மாறும். பாலின் தரத்தின் சத்தைக் காண முடியாமல் போய்விடும்.

நாம் எத்தனையோ கோடி உடல்களில் இன்னலைச் சந்தித்தோம். ஒன்றுக்கு இரையானோம். நாமும் மற்றொன்றைத் துன்புறுத்தி உணவாக உட்கொண்டோம். இப்படிப் பல நரக வேதனைப்பட்டுத் தீமையான நிலைகளில் இருந்து மீளும் வண்ணம் மனித உடல் பெற்றது நமது உயிர்.

இந்த மனித உடலை உருவாக்கியது நமது உயிர் என்றாலும் ஒவ்வொரு உடலிலும் காத்திடும் உணர்வினைச் சேர்த்துச் சேர்த்து அதன் உணர்வுக்கொப்ப அந்தந்த உடல்களில் அதைக் காத்திடும் ஞானமும் அதன் வழி வளர்ச்சியும் பெற்று இன்று மனிதனான
1.இந்த உடலுக்குப் பின்
2.உயிர் நம்மை உருவாக்கியது என்று
3.எல்லாவற்றையும் அறிந்திடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு,
4.”என்றும் ஒளியின் சுடராக வாழ வேண்டும்.

இந்த மனித உடலில் ஆறாவது அறிவில் விஷத்தைக் கலக்காது அதைத் தடுக்கும் ஞானம்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நம் உடலுக்குள் உள்ள அணுக்களுக்குச் சேர்ப்பிக்கும் நிலை.

அதைப் பெறும் நிலையாகத்தான் இப்பொழுது உபதேசித்துக் கொண்டுள்ளோம்.

ஆகையால் நீங்கள் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து ஆறாவது அறிவை அதனுடன் இணைக்கும் பருவம் பெற வேண்டும். ஆறாவது அறிவின் துணை கொண்டுதான் இன்று துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக இருக்கின்றது.

1.நாம் இந்த உடலை  விட்டு எந்த நிலையில் சென்றாலும்
2.ஒரு கூட்டமைப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன்
3.உயிருடன் ஒன்றி உணர்வினை ஒளியாக மாற்றிச் செல்லும் அந்தக் கூட்டமைப்பில் நாம் இணைந்திடல் வேண்டும்.

ஆகவே அங்கே இணைந்து விட்டால் அகண்ட அண்டமே இருண்ட சூழ்நிலைகள் கொண்டு பல பிரபஞ்சங்கள் அழிவைத் தேடிச் சென்றாலும் அந்தந்தப் பிரபஞ்சங்களில் தோன்றிய உயிரணுக்கள் அது ஒளியின் சுடராகத்தான் வாழும்.

எத்தனையோ கோடி ஆண்டுகள் என்றும் ஏகாந்த நிலை என்ற அந்த நிலை பெறுவது இந்த மனித உடலில் தான்”. ஆனால் நம்முடைய இந்தச் சந்தர்ப்பம் மிகப் பெரிய சக்தி வாய்ந்த குருவின் அருளைப் பெற்றதினால் நம் அனைவருக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்துள்ளது. 

நாம் அனைவரும் அவர் காட்டும் வழியில் செல்வோம். குருவின் துணையால் அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞானத் தொடரில் இந்த வாழ்க்கையைத் தொடர்வோம்.