ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 28, 2012

ஆதிசக்தி தியானம்

I. ஆதிசக்தி தியானம்
1. அகண்ட அண்டத்தின் உணர்வுகளைப் பெற, ஞானகுரு நமக்குக் கொடுக்கும் ஆற்றல்
ஞானிகளால் உருவாக்கப்பட்ட அந்த சப்தரிஷி மண்டலங்களின் உணர்வின்தன்மையை நாம் அறிவதற்குசூரியனால் கவரப்பட்ட சூனியப் பிரதேசத்திலிருந்துஇன்று சூரியன் எப்படி வளர்ந்தது என்ற நிலையைசூனிய மண்டலத்தில்ஆதியிலே எப்படி உருவானது என்று இப்பொழுது நாம் தியானிப்போம்.

இப்பொழுது, அந்த உணர்வின் தன்மையை நாம் நுகரப்படும் பொழுது, இது அறியும் ஆற்றல் வரும். அறியவில்லையென்றால், சோர்வடைந்து விடாதீர்கள். அறிய முயற்சி எடுங்கள்.

யாம் ஒவ்வொரு சமயமும், “தெரியவில்லை, தெரியவில்லை” என்று குருநாதரிடம் சொல்வோம்.

தெரியவில்லை தெரியவில்லை என்று யாம் சொல்லும் போது, “தெரிய வேண்டும், தெரிய வேண்டும் என்று, நீ எண்ணி எடுக்க வேண்டும்” என்று நமது குருநாதர் சொல்வார்.

“தெரியவில்லை தெரியவில்லை என்று நீ சொல்லுகின்றாய், ஆனால் தெரிய வேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று குருநாதர் கேட்பார்.

யாம், குருநாதரிடம் “தெரிய வேண்டும் என்றுதான் சாமி விரும்புகிறேன்” என்று சொன்னோம்.

“அப்படி என்றால், தெரியவேண்டும் என்று சொல்லிவிட்டு ஜெபத்தை எடு” என்பார் குருநாதர்.

இப்பொழுது நாம் சமையல் செய்கிறோம் என்று  வைத்துக் கொள்வோம். அது ருசியாக வேண்டும் என்று எண்ணுவோம். ஆனால், ருசி இல்லை என்றால் என்ன செய்கிறோம்?

ஒரு தோசையை சீராகச் சமைக்க வேண்டுமென்று விரும்புகிறோம். அந்தத் தோசையில் ஒரு பக்கம், அடி சுட்டுவிட்டால், என்ன செய்கிறோம்? அதற்குத்தக்க எந்தப் பக்கம் நெருப்பு அதிகமாகின்றதோ, அந்தப் பக்கம் தணிக்கின்றோம். ஆக, சட்டியின் சூட்டைத் தணித்து, மறுபடி மாவை ஊற்றினால் ருசியாகவும் சீராகவும் வருகின்றது. சட்டியில் ஒட்டுவதில்லை.

இதே மாதிரிதான், நமக்குள் இப்பொழுது வரும் பலவிதமான எண்ணங்கள் இருந்தாலும், அகண்ட அண்டத்தின் உணர்வு உங்களுக்குள் பதிவானாலும், சில நேரங்களில் சந்தர்ப்பத்தில் எண்ணினால், யாம் சொன்ன உணர்வை, இந்நேரம் உங்களுக்குள் யாம் பதிவு செய்வதன் துணை கொண்டு, நீங்கள் எண்ணி எடுக்க முடியும்.

ஆக, பலவிதமான உணர்வு, நம் ஆன்மாவில் சேர்க்கப்படும் பொழுது, இந்த உணர்வு கலந்தபின், இந்த உடலின் இயக்கம் அதிகமானபின், பிற மண்டலங்களிலிருந்து வருவதை இது தடுக்கும்.

தடுத்தாலும், எப்படியும் பெறவேண்டுமென்ற உள்உணர்வைச் செலுத்தி, அதைப் பெறவேண்டுமென்ற ஏக்கத்தில் இருந்தால், நிச்சயம் பெறமுடியும்.

ஏனென்றால், குருநாதர் எமக்குப் பதிவு செய்த முறைப்படி, உங்களுக்கும் பதிவு செய்கின்றேன். நீங்கள் இதைச் சீக்கிரம் உணர்வின் தன்மை வளர்த்துக் கொண்டால், அந்த உண்மையின் இயக்கம் அகண்ட அண்டம் எப்படியானதோ? அதிலே சூரியக் குடும்பம், பிரபஞ்சம் எப்படி உருவானதோ? இதைப் போல பல சூரியக் குடும்பங்கள் உருவானதோ, இதைப் போல, உங்களுக்குள் உணர்வின் அறிவாக நீங்கள் தெளிவாக, இது உதவும். அவையனைத்தையும் நாம் அனைவரும் பெற, இப்பொழுது தியானிப்போம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா…

இப்பொழுது எப்படி, வியாழன் கோள் குருவாக இருந்து, பிரபஞ்சத்திற்குப் பல மாற்றங்களைக் கொடுக்கின்றதோ, உடலான இந்தப் பிரபஞ்சத்திற்கு நம் உயிரே குருவாக இருக்கின்றது.

நாம் எண்ணுவது “ஓ” என்று உயிரால் இயக்கப்பட்டு, அந்த உணர்வின் இயக்கமாக அணுக்களாக மாற்றுகின்றது. ஆகவே, நம் உயிரை வேண்டுவோம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா…. ஓம் ஈஸ்வரா குருதேவா…
2. அண்டம் உருவாகக் காரணமான சூனியப் பிரேதசம் (Dark Matter)
   அகஸ்தியன் தன் வாழ்நாளில், அவன் அகண்ட அண்டத்தையும், சூனியமான பிரதேசத்தையும், தன் உடலுக்குள் எப்படிக் கண்டுணர்ந்தானோ, அதே போல, இந்த உலகமே உருவாவதற்குக் காரணமான, மூலமான, “அகண்ட அந்தச் சூனியப் பிரதேசம்” எப்படி உருவானது? என்பதை, நீங்கள் எண்ணி, உங்கள் நினைவைப் புருவ மத்தியில் வைத்து, கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.

ஆக, நம் உடல் ஆதியிலிருந்து வந்த சூனியத்திலிருந்துதான் இன்று ஒளியின் உடலாகப் பெற்றது. ஆகவே, ஒளியின் உணர்வு பெற்ற அந்த அகஸ்தியன் காட்டிய உணர்வைத்தான், அவன் ஒளிச் சரீரமான உணர்வின் தன்மை கொண்டு நாம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.  

இருளைப் பிளந்து, உணர்வின் தன்மை நாம் தெளிவாகும் நிலை பெற்ற இந்த உடலில், இப்பொழுது கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி, ஆரம்பத்தில் இந்தச் சூரியனோ, மற்ற சூரியனோ இல்லாத பொழுது, அகண்ட அண்டம் எப்படி இருந்தது? அந்த சூனியப் பிரதேசமாக எப்படி இருந்தது? என்ற நிலைகளை உங்கள் கண்ணின் நினைவை வைத்து, வானை நோக்கி எண்ணி ஏங்குங்கள்.
3. இருண்ட நிலையிலிருந்து விஷமாகி, மோதலில் வெப்பம், காந்தம் உருவாதல்
முதலில், சிறுகச் சிறுக இருண்ட நிலை உருவாகும். அப்படி கடும் விஷத் தன்மையாக வரும் பொழுது, அதிலே இருளின் தன்மையும், இருட்டான நிலைகள் இன்னும் அதிகமாகும். அது விஷத்தின் பெருக்கம்

எப்படி மத்தாப்பூ வெடிக்கச் செய்தால், வான்வீதியில் சிதறுண்டு பல ஒளிக்கற்றைகள் ஓடுகின்றதோ, அதைப் போல, அந்த இருண்ட பிரதேசத்திலிருந்து, அந்த மோதலாகி, ஒளியின் அந்த நிலைகள் வெளிப்படுவதைக் காணலாம். மத்தாப்பூ போல பிரிந்து செல்லும்போது, வெப்பமும் காந்தமும், உருவாகின்றது.
4. மோதலில் ஒளிக்கற்றைகளாகி, பல வண்ணங்களாகி, மேகமாகும் நிலை
      இந்த மத்தாப்பூ போல விரிவடைந்தது, என்பது, அதாவது, மற்றொன்றோடு, ஒன்றோடொன்று, மின்மினிப் பூச்சி போன்று, ஒவ்வொரு உணர்வுகளும் ஒளிக்கற்றைகளாக மாறிக் கொண்டே வரும். பலவிதமான வண்ணங்கள் ஏற்படும்.

இப்பொழுது எப்படி வெடித்தபின், அதிலிருந்து ஒரு புகை மண்டலம் வெளிப்படுகின்றதோ, அதாவது, நாம் மத்தாப்பூ போடும் பொழுது, பலவிதமான வண்ணங்கள் வெளிப்பட்டு, அதிலிருந்து புகை மண்டலம் தனியாகச் செல்லுவது போன்று, இந்த ஆதிசக்தியில் ஏற்பட்ட இந்த உணர்வுகள், அதில் ஒவ்வொன்றும் மின்கதிர்களாக மாறி, பலவித வண்ணங்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

மோதலில், ஆவி மண்டலம் அதாவது, மேக மண்டலங்கள் தனித்து, பிரிந்து ஒதுங்கிக் கொண்டே இருக்கும். அதனுடைய அடர்த்திகள் பெருகும். இப்பொழுது, அலை அலையாக மோதி, பிரிந்து செல்வதையும் பார்க்கலாம்.

பல வகையான வண்னங்கள் அந்த அலைகள் மோதுவதில், பலவிதமான வண்ணங்கள் உருவாகும். மோதிய வண்ணங்களிலிருந்து, பலவிதமான வண்ண உணர்வுகள் அலைகளாக மாறும்.

ஒவ்வொரு வண்ணமும், ஒருவிதமாக, ஒன்று மற்றொன்றோடு சேர்க்கப்படும் பொழுது, இளம் மஞ்சள், இளம் பச்சை, இதைப் போல உணர்வுகள் மாறிக் கொண்டே வரும். இந்த உண்மையை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது மேகக் கூட்டத்தில், பலவித வண்ணங்களைக் காண்கின்றோம் அல்லவா? அதைப் போல, இந்த அணுக்கள் சிதறுண்டு, மற்றோன்றோடு மோதும் பொழுது, அடர்த்தியின் வண்ணங்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இப்பொழுது கடலைகள் மோதுவது போல, ஒவ்வொரு அடர்த்தியின் தன்மை ஒன்றைக் கண்டு, ஒன்று அஞ்சி ஓடும் உணர்ச்சிகளை, இப்பொழுது ஆதியில் எப்படி உருவாகியதோ, அதன் உணர்வின் தன்மைகள் ஒன்றுடன் ஒன்று மறைந்து, ஓடும் தன்மையும் பார்க்கலாம்.

எப்படி பட்சிகள் பறந்து ஓடுகின்றனவோ, ஒரு குளவி திரும்பத் திரும்ப, அது சுழற்சியின் தன்மை அடைகின்றதோ, இதைப் போல, மேல் அடர்த்தியின் உணர்வுகள் ஒரு கூட்டமைப்புத் தன்மையாகவும், மற்றொரு கூட்டமைப்பு, மற்ற நிலைகள் பறந்து, ஓடிக் கொண்டே இருப்பதைப் பார்க்கலாம்.

இப்படி, மோதலில் ஒரு அதிர்ச்சியின் தன்மையாகி, ஒரு பெரும் ஒளிகற்றையாகி, அதிலிருந்து உணர்வுகள், மறுபடியும் சிதறுண்டு ஓடுவதைப் பார்க்கலாம். இதைப் பார்க்கலாம் என்றால், நுகர்ந்து உணர்வுக்குள் அறியலாம்.

ஏனென்றால், உயிரான உணர்வுக்குள் அந்த உணர்வின் இயக்கத்தை நீங்கள் அறியும் பொழுது, அகக் கண்ணால் உங்களால் அறிய முடியும். புறக் கண்ணால் பார்ப்பது சிரமம்.

இப்பொழுது, நாம் வாணவேடிக்கை விடும் பொழுது, அந்த உணர்வின் கற்றைகள் மேலே வெடித்தபின், எப்படிப் பரவலாகின்றதோ, இதைப் போல, ஒன்றுடன் ஒன்று மோதியபின், இந்த உணர்வலைகள் ஒளிக்கற்றைகளாகப் பலவிதமான வண்ணங்களிலும், பலவிதமான ரூபங்களிலும், இதுப் பரவிப் படர்வதைக் காணலாம்.
இப்பொழுது, உங்கள் உணர்வுகளில் மணங்கள் வித்தியாசமான மணங்கள் மாறும். மின்னல் தாக்கப்படும் பொழுது, மேக மண்டலத்தில் எப்படி மின்னிக் கொண்டு, பலவிதமான உணர்வுகள் மாறுகின்றதோ, இதைப் போல, பெரும் மாற்றங்கள் ஏற்படும்.
5. மேகம் நீராக மாறுதல்
இவையெல்லாம், சூனிய மண்டலத்தில் மாறுபடும் நிலைகள். இவை ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது, மின் அதிர்வுகள் ஒளிக்கற்றைகளாகப் பரவிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

காணலாம் என்றால், உங்கள் உணர்வின் தன்மை கொண்டு, உங்கள் உடலுக்குள் உணரலாம். உங்கள் புலனறிவிற்குக் காட்சியாகத் தெரியும். இப்பொழுது, அதே போல, அடர்த்திகள் பலவிதமான வண்ணங்கள், அடர்த்தி அடர்த்தியாக, மாறிக் கொண்டே இருப்பதைக் காணலாம்.

இப்பொழுது, ஒன்றோடொன்று மோதும் பொழுது, பல மின் அணு என்ற நிலைகள் அடைந்தாலும், சில வெண்புகை போன்ற உணர்வுகள், படலம் படலமாக மாறும். மாறிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

இப்பொழுது, பறவைகள், பட்சிக் கூட்டங்கள் பறக்கும் பொழுது, அது ஓடி ஓடி, திரும்பி எப்படி வருகின்றது. இதைப் போல, ஒரு அணுவும் ஒரு அணுவும் மோதும் பொழுது, சுழற்காற்று எப்படி வீசுகின்றதோ, இதைப் போல, சுழல் காட்சி போல, ஒரு சுழலும் தன்மை வருகின்றது. இந்த மின்மேகக் கூட்டத்திற்குள் ஊடுருவுகின்றது. அதெல்லாம் சுருங்கி, நீராக மாறுகின்றது. பார்க்கலாம், உணரலாம்.
6. வெப்பத்தால் திடப் பொருளாகும் நிலை
பலவிதமான வண்ணங்கள் பல நிலைகள் மோதி, அதற்குள் ஒடுங்கி சுழலும் தன்மை அடைகின்றது. நீராக மாறி, நீருக்குள் அமிழ்ந்து விடுகின்றது. இப்பொழுது, எடை கூடுகின்றது. சீராக ஓடும் தன்மை பெறுகின்றது.

ஓடும் வேகத்தில், இளம் மஞ்சளாக, எப்படி நெருப்பு எரியும் பொழுது, மஞ்சளும், சிவப்பும் தெரிகின்றதோ, அதைப் போல, அது ஓடும் வேகத்தில் அந்த நிலைகள் தெரிகின்றது. இளம் மஞ்சளாக இருக்கும் பொழுது, இளம் நீலமாக மாறுகின்றது.
இளம் மஞ்சளும், நீலமும் நீங்கியபின், ஒரு கருமையின் பொருளாக மாறுகின்றது. ஆக, உராயும் தன்மை கொண்டு, சிவப்பு நிலை ஓடுகின்றது. கருப்பின் தன்மை போன்று, அந்த உணர்வின் தன்மைகள் மாறுகின்றது.

ஒரு தீப்பந்தை நாம் சுற்றினால், எப்படியோ அதைப்போல, அந்த உணர்வுகள் மாறும். அந்தப் பொருளுக்குள், ஈர்க்கும் நடு மையம் அடைகின்றது. நடு மையத்தில் வெப்பம் என்ற நிலை உருவாகின்றது.

அந்த வெப்பத்தின் தன்மை, உள் நின்று மற்ற பொருளுடன் கலக்கின்றது, “கடவுள்”. இந்த வெப்பத்தின் தன்மை அதிகரிக்கும் பொழுது, இந்த உணர்வுகள் ஒன்றாகச் சேர்த்து, அது உணர்வின் தன்மை ஒன்றாக மாற்றி, ஒரு புதுவிதமான உருத்தன்மையை, அந்தப் பந்து போல உள்ள உணர்வுகளில் வேக வைக்கின்றது. கருப்பு நிறம் சிவப்பு நிறமாக மாறுகின்றது.
7. கோள் உருவாகும் நிலை – சீவலிங்கம்
சுழலும் வேகத்தில், தன் மேல் பாயும் மற்ற உணர்வுகளை எப்படிக் கவர்ந்து, அது உடலிலே பரப்புகின்றது? எத்தனையோ விதமான வண்ணங்களை அது போகும் பாதையில் கிடைக்கின்றதோ, அதையெல்லாம் தன் மேற்பரப்பில் எப்படிப் பரவுகின்றது?

அது தன்னிச்சையாகச் சுழன்று, வெப்பமும், தன் ஈர்ப்பின் தன்மை கொண்டு ஒரு கோள் என்ற முழுமையடைந்து, சீவலிங்கம் என்ற நிலையை அது அடையும் தன்மையை, நீங்கள் இப்பொழுது, அந்த உணர்வின் தன்மையால் அறியலாம்.

ஏனென்றால், இத்தகைய நிலையைப் பெற்றபின் தான், நம் உடலுக்குள், இந்த உடலின் உணர்வு பெற்றது. பிரித்துப் பார்க்கும் பொழுது, இந்த உணர்வுகள் எப்படி உருவானது? நமக்குள் எப்படி உருப்பெற்றது? உருவானது? எப்படி மனிதனானோம்? என்ற உண்மையின் இயக்கத்தை, இதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

உங்களுக்குள் இருக்கும் உணர்வுதான், ஆதியில் உருவான உணர்வுடன் ஒன்றித்தான் வருகின்றது. சிறிதாக ஒரு பரம் என்ற நிலையிலிருந்து, ஒரு வளர்ச்சியின் தன்மை பரிணாமம் வளர்கின்றது. சிறு உருண்டையாக இருந்து, அது வளர்ச்சியில் எப்படி வளர்கின்றது? என்பதை, அந்த வளரும் தன்மையை நீங்கள் உணரலாம்.

வெறும் கோளாக இருப்பது, பல வண்ணங்களாக அந்தக் கோளின் அமைப்பு மாறுகின்றது. கருமையாக இருந்தது, கரு நீலமாக மாறுகின்றது. கரும் பச்சையாக மாறி மாறி, பல உணர்வுகள் மாறுகின்றது.

நாம் எப்படி, ஒரு நெருப்பை வைத்தால், அது வேக வைக்கும் பொழுது, அந்த உலோகத்தில் பலவிதமான வண்ணங்கள் தோன்றுகின்றதோ, இதைப்போல அந்தக் கோளின் உணர்விலிருந்து, வெளிப்படும் உணர்வுகளை, நீங்கள் உணரலாம்.
8. சூரியக் குடும்பம் உருவாகும் நிலை
      அந்தக் கோள் பெரும் கொதிகலனாக மாறி, அதிலிருந்து சிதறுண்ட உணர்வுகள், இது ஓடும் பாதையில் வெளிவந்து, அது உராயும் தன்மையை, இதன் ஈர்ப்பு வட்டடத்தில் வருவதைக் காணலாம்.

எந்தெந்த வண்ணத்தைக் கொண்டு வருகின்றதோ, அதன் உணர்வின் தன்மை கொண்டு, அங்கே ஒரு பந்து போன்று, இயக்கத்தில் வருகின்றது. எது இதனுடைய கொதிகலானாகி வெளிப்படுத்தியதோ, அது இதனுடன் வரப்படும் பொழுது, அத்தகைய உணர்வைக் கவர்வதையும், இதைப் போல ஒவ்வொன்றும் வெளிவரும் உணர்வுகள், இப்படி வெளி வரும் உணர்வுகள் முதலிலே வந்துவிடும்.

இரண்டாவது வந்ததும், மூன்றாவது அடுக்கில் வரப்படும் பொழுது, வரிசைப்படுத்தி, அதன் மேல் வரிசயில் கூட்டி, அதனுடைய உணர்வுகள் அடுக்கடுக்காக வருவதைக் காணலாம்.
இதன ஈர்ப்பு வட்டத்தில் வளரப்படும் பொழுது, ஒன்று பின் தங்கியும், ஒன்று முன்னாலேயும், இதைப் போல, ஒன்று வேகத் தொடர் கொண்டு, அது சுழன்று கொண்டு வருவதைப் பார்க்கலாம்.

இப்படி ஒரு வட்ட வடிவாகின்றது. இந்தச் சுழற்சியின் மையத்தில் சிவப்பின் நிலை கொண்ட ஒரு சுழல்வட்டம் தெரியும். அதுதான் நட்சத்திரம். சூரியனாக மாறும் தன்மை. இது 27 விதமான நிலைகள், அவ்வப் பொழுது கொதித்து வெளிவரும் உணர்வுகள், ஒரு ஈர்ப்பு வட்டத்தில் ஒரு வளையம் போன்று ஆகின்றது.

இப்பொழுது, நாம் பந்தைச் சுற்றும் பொழுது, நடு மையத்தில் எப்படி இருக்கின்றது? அதைப் போல, அந்தச் சுழல் வட்டத்தின் மையம் கொள்கின்றது.
9. பிரபஞ்சத்திற்குள் நடக்கும் நிகழ்ச்சிகள்
இப்பொழுது 27 நட்சத்திரங்களும் முழுமையடைந்து, தனது பால்வெளி மண்டலங்களாக மாற்றி, அது உமிழ்த்தும் உணர்வை, தான் உணவாக எடுத்துக் கொள்ளும் சூரியன், தான் கவரும் பொழுது, இடைவெளியில் மோதியபின், இந்த விதவிதமான, வித்தியாசமான உணர்வலைகள் பரவுவதையும், பார்க்கலாம்.

அதன் வழியில், இந்த சூரியனில் இருந்து வரக்கூடிய அமிலங்களும், இந்த உணர்வுகள் பட்டு, இதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் வரும் ஒளிக்கற்றைகளில் ஒன்றும், இதைப் போல விஷத்தன்மை ஒன்றும், இருள் சூழ்ந்த நிலை ஒன்றும், இப்படி அதன் உணர்வின் நாதங்களை எடுத்துக் கொள்வதும், இதைப் போல வியாழன் கோள், தன் அருகிலே வந்தபின், அந்தச் சுழற்சியின் வேகத்தில், பல 27 நட்சத்திர உணர்வுகளைக் கவர்ந்து, அது பெரிதாக வளர்ந்து, அது தன் வளர்ச்சி வட்டத்தில், வளர வைப்பதைக் காணலாம்.

இந்த ஒலியின் தன்மை செவ்வாய்க் கோளில் பதிந்தபின், அந்த ஒலியின் கற்றையை அதன் வழி கொண்டு, அந்த நாத ஒலிகளைத் தனக்குள் எடுத்து, அந்த மோதலில் ஏற்படும் சிகப்பின் தன்மை, அதிலே மாறிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

சூரியனால் மோதப்பட்டு, பிரிக்கப்பட்டு, அந்த உணர்வின் அலைகளையும், திருப்பி இதைப் போல சூரியனுக்குச் செல்வதற்கு முன், இதைக் கவர்ந்து கொண்டபின், இந்த ஒவ்வொரு கோளின் ஈர்ப்பு வட்டத்தில், அது பிரிந்து, வளையமிட்டுக் கொண்டிருப்பதை, அந்த அடர்த்தியின் நிலைகளைப் பார்க்கலாம்.

இப்பொழுது, ஒரு மரத்திற்கு ஆன்மா எதுவோ, இதைப்போல பிரித்தெடுக்கும் ஆன்மாவாக மாற்றி, அது எப்படியெல்லாம் மாற்றிக் கொண்டுள்ளது, என்பதைக் காணலாம்.

பலவிதமான வண்ணங்களும், பலவிதமான உணர்வுகளும் மாற்றப்பட்டு, அதன் பாதை, ஒரு சுழல்வட்டமாக வந்து, மீண்டும் சூரியனுக்கு வரப்படும் பொழுது, புதன், சூரியனுக்கு அருகிலே இருப்பது கவர்ந்து கொண்டு, உலோகத்தன்மையாக மாற்றி, அதன் பலவிதமான வண்ணங்கள் வெளிப்படுவதை, மஞ்சள், பச்சை, கருநீலம் போன்ற உணர்வுகளில் அது வெளிப்படுவதைக் காணலாம்.

நாம் எப்படி ஒரு உலோகத்தை வேக வைக்கும் பொழுது, பல வண்ணங்கள் வருகின்றதோ, இதே போல, உலோகத் தன்மை அடைந்து, பல வண்னங்கள் வெளிப்படுகின்றன.

எல்லாவற்றிலும் மோதி, ஆவியின் தன்மை அடைவதை, சனிக் கோள், அது சுழற்சி வட்டத்தில் கவர்ந்து, உறையும் தன்மை ஆவதைக் காணலாம்.

இவையெல்லாம் சூரியன் கவரப்படும் பொழுது, தன் உடலில் விளைய வைத்த உணர்வு, பாதரசத்தால், அது வெண்மை நிறமாக இருக்கும். அந்த உணர்வு மோதியவுடன், ஒரு நெருப்பு மயமான நிலைகள் தோன்றும். பிரிந்து ஆவியின் தன்மையாகும்.

மற்ற உணர்வுகள் பறந்து செல்வதைக் காணலாம். இப்பொழுது, சூரியனால் உருவாக்கப்பட்ட ஒரு பிரபஞ்சத்தின் முழுமையையும், நீங்கள்  உங்களுக்குள், இப்பொழுது நுகரும் உணர்வுகளால் அறியலாம்,

இந்தப் பிரபஞ்சம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது? என்பதை, நமது பூமியில், செடி கொடிகள் எப்படி எதன் உணர்வு கொண்டு உறைந்ததோ, அதனதன் நிலைகளைக் காற்றிலிருந்து கவர்ந்து, அதுஅது வளர்ச்சி அடைவது போன்று, பல மோதல்களும், மற்றவைகளும் ஏற்பட்டாலும், அதனதன் உணர்வு கொண்டு,. அதனதன் நிலையில் கவர்ந்து, அந்தந்த வண்ணம் கொண்ட கோள்கள் எப்படி மாறுகின்றது? எத்தனைவிதமான நட்சத்திரங்கள், அதாவது வண்ணங்கள் எப்படி கலவையாக மாறுகின்றது? இந்தப் பிரபஞ்சத்திற்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை நன்றாகப் பாருங்கள்.

இந்த 27 நட்சத்திர மின் கதிர்கள், அதாவது, வியாழன் கோள் ஈர்ப்பு வட்டத்தில் நுழைந்து, அது வெளி வரப்படும் பொழுது, பல வண்ண நிலைகள் கொண்ட, சேர்த்துக் கொண்ட உணர்வின் ரூபங்களாக, வெளியே எப்படி மாறுகின்றது? என்பதைப் பாருங்கள்.

நாம் எப்படி மத்தாப்பை விட்டபின், பல ரூபங்களாக ஆகின்றதோ, இதே போல, பொறிகள், அதாவது, இரண்டு நட்சத்திரத்தின் பொறி அலைகள், மோதி, உணர்வின் தன்மை வரப்படும் பொழுது, வியாழன் ஈர்ப்பு வட்டத்தில் நுழைந்து, வெளிச் செல்லும் பொழுது, அதனுடைய உண்மையின் உணர்வுகள் அணுத்தன்மையாகி, அந்தக் கலர்களுடைய உணர்வுகளாக எப்படி மாறுகின்றது?
இப்பொழுது உங்களுடைய உணர்வுக்குள், பலவிதமான உணர்ச்சிகள் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். பல மணங்களும், பல உணர்ச்சிகளும், உங்கள் உடலுக்குள் புதுப்புது மணங்களும் வரும், உணர்ச்சிகளும் வரும்.

சிலருக்கு எதிர் நிலையாகும் பொழுது, உடலில் வியர்வை அதிகமாகும். இப்பொழுது, ஒரு சிலருக்குக் குதிரை மேல், அதாவது, இராட்டினத்தில் உட்கார்ந்து, சுற்றிவரும் பொழுது, எப்படிச் சுழல்கின்றோமோ, அதே உணர்வுகள் சிலருக்கு வரலாம்.

இதையெல்லாம் இப்பொழுது, “கிரேதாயுகத்தில்” நாம் காண்கின்றோம். எதெனெதன் உணர்வுகள் சேர்த்ததோ, அதனதன் உணர்வு கொண்டு, ஈர்க்கப்பட்டு, அதன் உணர்வு வளர்ச்சியாகின்றது. 
10. கோள்கள் உபக் கோள்களை உருவாக்கும் நிலை
இப்பொழுது, நமது சூரியக்குடும்பத்தில் இந்தப் பிரபஞ்சத்திற்குள் எத்தனை மாற்றங்களாகின்றதோ, ஒவ்வொரு கோள்களுக்குள்ளும் எந்தெந்த நிலைகள் மாறிக் கொண்டுள்ளது? அந்தக் கோள்கள், தனது உபக் கொள்களை எப்படி வளர்த்துக் கொண்டுள்ளது? உபக் கொள்கள் எப்படி வளர்கிறது?

அதன் உணர்வுகள் எதன் ஈர்ப்பு வட்டத்திலோ, வியாழன், செவ்வாய், இதைப் போன்று, சனிக் கோள் போன்ற உணர்வுகள் ஒவ்வொன்றும் உபக்கோள்களை அமைத்து, தனது உணர்வின் தன்மையை எப்படி எடுத்துக் கொள்கிறது என்று பாருங்கள்.
11. பூமி தன் சத்தைக் கவரும் நிலை
இவையனைத்தும் கடந்து கொண்டு வரப்படும் பொழுது, நமது பூமி, துருவத்தின் வாயிலாக பலவிதமான வண்ணங்களைத் தனக்குள் சேர்த்து, அதன் உணர்வினை வடிகட்டி, ஜீவ சத்துடன் எப்படிப் பெறுகின்றது என்பதனை, நம் பூமியின் உணர்வின் தன்மையை, நீங்கள் அறிந்து பார்க்கலாம்.

எவ்வகையில், எத்திசையில் ஆனாலும் கூட, இந்த உணர்வுகள் சூரியனைக் கடந்து வரும்போதும், சூரியனை விட்டு, மற்ற கோள்கள் கடந்து செல்லும் இந்தப் பாதையில், நமது பூமி கவர்வது, நமது பூமிக்குள் பலவிதமான மாற்றங்களை உருவாக்குகின்றது.
12. வியாழன் கோளில் உயிரணுக்களின் தோற்றம்
இப்பொழுது, கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து வரும் ஒரு துகளும், ரேவதி நட்சத்திரத்திலிருந்து வரும் ஒரு துகளும், எப்படி அவை பரவி வருகின்றதோ, எதிலும் மோதாதபடி, வியாழன் ஈர்ப்பு வட்டத்திற்குள், எப்படி நுழைகிறது? என்பதைப் பாருங்கள்.

இந்த 27 நட்சத்திர உணர்வு கொண்டபின், இதன் ஈர்ப்பு வட்டத்திற்குள் மோதலாகி வெடித்திடாது, உணர்வின் துடிப்பாக, எப்படி ஒரு அணுத்தன்மை உருவாகின்றது? என்பதைப் பாருங்கள்.

மற்ற ஜீவ அணுக்கள், இதை எப்படி ஜீவ அணுவாக மாறுகின்றது? ஆக, மோதல், மற்ற மின் கதிர்கள் மோதி, வியாழன் ஈர்ப்பு வட்டத்திற்குள் நுழைந்து, வெளிச் செல்லும் பொழுது, மோதிய உணர்வுக்கொப்ப, ஒரு புதுவிதமான உணர்வின் ரூபம் கொண்டு, வெளியிலே எப்படிச் செல்கிறது?

ஆனால், இந்த உயிரணுவின் தன்மை கொண்டு, இரண்டு மோதலின் உணர்வின் கலர்கள், அதாவது ரேவதி நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வும், இதைப் போன்ற மற்ற பெண்பால் என்ற நட்சத்திரங்கள் வருவது, இவை சந்தர்ப்பத்தால், ஈர்ப்பு வட்டத்தில் வந்தபின், இந்த மோதலில் பல வண்ணங்கள் தோன்றி, பலபல உணர்ச்சிகளை, எப்படி ஜீவ அணுக்களாக மாறுகிறது என்பதை, “இந்த வியாழன் கூட்டமைப்புக்குள் என்ன நடக்கிறது?” என்பதைப் பாருங்கள்.
இப்பொழுது மின்னல்கள் ஒன்றோடொன்று மோதும் பொழுது, மின் ஒளிகள் எப்படி ஆகின்றதோ, இதைப் போல வியாழன் கோளுக்குள் வந்தபின், இந்த இரண்டு நட்சத்திரத்தின் உணர்வுகள், இரண்டாகச் சேர்த்துக் கொண்டபின், அதன் உணர்வுகள் மின் கதிர்கள் எப்படிப் பாய்ச்சுகிறது?

அது எப்படி ஒரு இயக்க உணர்வாக வருகிறதென்று, அதாவது, மின்மினிப் பூச்சி எப்படி இருக்கிறதோ, இதைப் போல, மின் அணுத் தன்மையை அடைகின்றது.

நட்சத்திரச் சேர்க்கையில், எந்தப் பெண்பால் என்ற நிலைகள் நட்சத்திரத்தின் உணர்வு அதிகமாகின்றதோ, ஆண்பால் என்ற நட்சத்திரத்தின் உணர்வு சேர்க்கப்படும் பொழுது, ஆண்பால் என்ற நட்சத்திரத்தின் தன்மை சிறுத்தால், பெண்பால் எனற நட்சத்திரத் தன்மையானல், அதன் உணர்வுக்கொப்ப, அதன் உணர்வைக் கவர்ந்து, அதைப் போல அணுக்களை உருவாக்கும், பெருக்கும் தன்மை வருகின்றது.

அதாவது, பெண்பால் நட்சத்திரத்தின் தன்மையானால், ஆண்பால் நட்சத்திரத்தின் ஆனால், இந்தப் பெண் பால் நட்சத்திரம் சிறுத்திருந்தால், இந்த உணர்வின் தன்மை ஒவ்வொரு அணுவிற்கும், ஒரு உணர்வின் தன்மையை அதே அணுவாக மாற்றும் தன்மைகள் எப்படி அடைகிறது என்பதை நீங்கள் பாருங்கள்.
13. உயிரணுக்கள் மற்ற கோள்களில் ரூபம் பெறும் நிலை
இதையெல்லாம் எதன் உணர்வு பெற்றதோ, இதெல்லாம் “கிரேதாயுகம்”. வியாழன் கோளில் கருவாகி, உயிரணுக்கள் தோன்றியபின், இந்தப் பிரபஞ்சத்தில் சுழலும் பொழுது, எந்தெந்தக் கோள்கள் அந்தத் துருவப்பகுதியில் செல்லுகின்றதோ, அதன் ஈர்ப்பு வட்டத்தில், அந்தக் கோளுக்குள், இந்த உயிரணுக்கள் எப்படி நுழைந்தது?

எந்தக் கோளுக்குள் நுழைகின்றதோ, அதன் உணர்வின் தன்மையை இந்த உயிரணு, அந்தக் காந்தத்தால், அந்த உயிரின் துடிப்பால், ஈர்க்கப்படும் பொழுது, “கிரேதா”. அது அந்த உணர்வின் தன்மையைப் பெற்றபின், அந்த உடலின் அமைப்பு எப்படி மாறுகின்றது?

அதாவது, வேதனைப்படுவோரின் உணர்வுகளை நுகரும் பொழுது, நமக்குத் தலையில் எப்படிப் பேன் வருகின்றதோ, அது எவ்வளவு விகாரமாக அந்த உணர்வின் தன்மை தோற்றுவிக்கின்றதோ, இதைப் போல, மற்ற கோள்களில், இதை நுகரப்படும் பொழுது, ஒவ்வொரு கோளுக்குத்தக்க, அந்த விஷத்தின் தன்மையை நுகர்ந்தபின், சிறிதளவே அணுவாக மாறும். விஷம் கொண்ட அணுக்களாக அது எப்படி மாறுகின்றது?

ஒவ்வொரு கோளும் அவ்வாறு கவர்ந்து கொண்டபின், அந்தந்தக் கோளில் உருவான உணர்வுகள், இந்த உயிரணுக்கள் அதிலே பட்டபின், இந்த உணர்வின் தன்மை கொண்டு, அங்கே எவ்வாறு ரூபமடைகின்றது?

பல நட்சத்திரங்கள் மின் கதிர்களாகப் பாய்ச்சப்படும் பொழுது, அதிலிருந்து ஒளிக்கற்றைகளை, ஒவ்வொரு கோளும் எப்படிக் கவர்கின்றது? அந்த அணுக்களானபின், அந்த அணுக்களுக்குள், இந்த உடலின் உணர்வு பெற்றபின், “திரேதா”, அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் தோன்றியபின், அணுக்கள் எப்படி நகர்ந்து செல்கின்றது? தன் உணவுக்காகத் தேடி, எப்படிச் செல்கின்றது?

“கிரேதாயுகம்” இருந்த இடத்திலிருந்து கவர்கின்றது. “திரேதாயுகத்தில்” தன் உணர்வின் தன்மை எங்கே இருக்கின்றதோ, அதை நாடி எப்படி அந்த அணுக்கள் மற்ற கோள்களிலும் சரி, மற்றவைகளிலும் அணுக்கள் தேடிச் செல்கின்றது.
14. முதன் முதலில் கடலில் உயிரினங்கள் தோன்றும் நிலை
நமது பூமி கவர்ந்து கொண்டபின், கடல்களிலே முதலிலே அந்த மின்னல்கள் தாக்கினால், “POISON” ஆக மாறுகின்றது. இதைப் போல, கடலுக்குள் ஈர்க்கப்பட்ட அணுக்கள், முதலில் மண்ணிலே அந்த கடல் உப்புச் சத்திற்குள் அது கலந்தபின், அதன் உணர்வின் மணமாகும் பொழுது, “சங்காக” மற்றவைகளாக எப்படி மாறுகின்றது?

அந்த உணர்வு மறைந்தபின், உயிரணு வெளிவந்தபின், தாவர இனத்தின் உணர்வை, எப்படி உணவாக உட்கொள்கின்றது? அது மீன் இனமாக எப்படி உருவாகின்றது?

இவையெல்லாம் அந்த உடலின் உணர்வுக்குத்தக்க, கிரேதாயுகமாகி, நுகர்ந்த உணர்வு திரேதாயுகத்தில் வந்து, அந்த வண்ணங்கள் எப்படிச் சேர்கின்றது? உடலுக்குள் உருவாகும் உணர்வின் மாற்றங்கள் அதுதான், திரேதாயுகம்.
15. சனிக் கோளின் செயல்கள்
சூரியன் எப்படித் தனது காந்தப் புலனால் கவர்கின்றதோ, இதைப் போல, தன் நீரின் சக்தியை, சனிக் கோள் எப்படி பூமியிலிருந்து கவர்கின்றதென்ற நிலையும், கடல் நீர் மட்டத்தில் படரப்படும் பொழுது, மேகங்கள் எப்படி நீரை உறிஞ்சுகிறதென்று, சுழல் நிலைகள் (புயல்) எப்படி வருகிறதென்ற நிலையும், இந்தக் காற்றின் வீச்சின் அலைகளை, அந்தக் கடல் சுழல் காற்றுகள் எப்படி வீசுகிறதென்று, உருவாகிறதென்ற நிலையை, இந்த உணர்வால் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
அதை நீங்கள் உற்றுப் பார்க்கும் பொழுது, உங்களுக்குள் குளிர் எப்படி வருகிறதென்று பாருங்கள். நமது பூமியில் உறிஞ்சுவது போலவே, இப்பொழுது மற்ற கோள்களின் தன்மையையும் அது கவரும். அது தூசிப் புயலாக மாறும்.

இப்பொழுது, வான் மண்டலத்தில், மற்ற கோள்களில் சனிக் கோள் கவரும் பொழுது, அது தூசி மண்டலங்களாக எப்படி மாறுகிறதென்பதைப் பாருங்கள்.

கோள்களில் அனைத்தும், தூசிப்படலங்கள் பரவிக் கொண்டிருக்கும். ஆனால், அந்த சனிக் கோளின் தன்மை, நமது பூமிக்குள் வரும் பொழுது, நீர் மண்டலங்களாக மேலே இழுத்துச் செல்வதைக் காணலாம்.
16. பூமியின் ஓசோன் திரை
இப்பொழுது, நமது பூமிக்குப் பரவலாக இருக்கும் “ஓசான்திரை” என்று விஞ்ஞானிகள் கூறுவது போல, விஷத்தன்மைகள் அனைத்தும், நமது பூமியின் சுழற்சி வட்டத்தின் மேற்பரப்பில், அதிகமாக, அடர்த்தியாகிக் கொண்டே செல்வதைக் காணலாம்.

எப்படி, ஒரு ரைஸ்மில்லில், மொத்தமாகப் போடும் பொழுது, சிறு பாதையில் சென்று, அது தோல்களைப் பிரிக்கின்றதோ, இதைப் போல நமது பூமி, அந்த விஷத் தன்மையின் தன்மையை மேல் அடர்த்தியாக வைத்து, தனக்குத் தேவையான உணர்வைச் சுவாசித்து, நமது பூமிக்குள் ஒரு இயக்கச் சக்தியின் தன்மையாக, மாற்றிக் கொண்டே இருப்பதைக் காணலாம்.

அந்த விஷத்தன்மைகள், துருவத்தில் உறையும் தன்மையையும், பின் வெப்பத்தால் ஆவிகளாக மாறும் தன்மையையும், மீண்டும் காற்று மண்டலத்தில் செல்வதையும், இதைப் போல உறையும் தன்மை கொண்டு, நீராக வடிவதையும், நமது பூமி தன் செயலாக்கங்களாக மாற்றுகின்றது.
17. அகஸ்தியன் ஒளியான நிலை
அகஸ்தியன் துருவனாகி, துருவ நட்சத்திரமான அவர், அவர் உடலிலே விளைந்த உண்மையின் நிலையை அறிந்தார். அதன் வழி நமது குருநாதரும் இதை அறிந்தார். அதன் உணர்வு கொண்டு, நமக்குள் பதிவாகி, அந்தத் துருவ நட்சத்திரத்தின் தன்மையைப் பெறச் செய்ததனால், அவர் கண்ட அகஸ்தியன் கண்ட உண்மையின் தன்மையை, யாம் அறியும் தன்மை பெற்றது.

அதே உணர்வை உங்களுக்குள் பதிவாக்கி, உங்கள் நினைவை நினைவாக்கப்படும் பொழுது, இதை நீங்கள் மீண்டும் எண்ணினால், அந்த அகண்ட அண்டத்தையும், ஆதிசக்தியின் ரூபங்கள், எத்தனையோ வகையான இந்த உணர்வுகள், இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் நீங்கள் அறியலாம்.

ஆக, இதன் உணர்வு, உங்கள் உடல் ஒரு பிரபஞ்சம் என்ற உண்மையும், ஜீவ அணுக்கள் என்ற நிலையும், திரேதாயுகத்தில், இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு, உங்களுக்குள் இருளை அகற்றி, நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க, உயிர் ஒளியான உணர்வின், ஒளியாக மாற்றிய அந்த உணர்வுகளை, நாமும் பெறலாம்.
18. அகஸ்தியன் தாய் தந்தையர் நுகர்ந்த தாவர இனங்களின் மணங்கள்
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன், அகஸ்தியன், அவன் தன் தாய் கருவிலே வளரும் பொழுது, அந்தத் தாய் தந்தையர் நுகர்ந்த உணர்வுகளும், அவர்கள் பரப்பிய தாவர இனங்களின் உணர்வின் மணங்களும், இப்பொழுது உங்களுக்குள் வரும்.

பலவிதமான மணங்கள் வரும். இப்பொழுது, உங்கள் உடலுக்குள் சலிப்போ, சங்கடமோ, சஞ்சலமோ, வெறுப்போ, இதைப் போன்ற உணர்வுகள் வந்தால், அது ஒடுங்கும்.

தாவர இனத்தின் வலுவால், விஷத்தன்மை கொண்ட ஜெந்துக்கள் தன்னைத் தாக்கிடாது, அந்தப் பாதுகாப்பான நிலைகள் வரும் பொழுது, அந்த மணத்தையும், அகஸ்தியனுடைய தாய் நுகர்கின்றது.

அந்த உணர்வுகள் தாயின் இரத்தத்தில் உறைகின்றது, கவர்கின்றது, கலக்கின்றது. அதனை, தாயின் கருவிலே உருவாகும் அந்த அகஸ்தியன் என்ற உணர்வுகள், பெறப்படுகின்றது.

விஞ்ஞான அறிவால், சக்தி கொண்ட எந்திரங்களை வைத்து, கருவில் இருக்கும் குழந்தையை, இன்று எப்படிக் காண்கின்றார்களோ, அதைப் போன்று, மெய்ஞானி வளர்த்துக் கொண்ட உணர்வின் தன்மைகளை ஊடுருவிப் பாய்ச்சி, இந்த உணர்வின் தன்மையை நீங்கள், எண்ணத்தால் இதைப் பாய்ச்சப்படும் பொழுது, அன்று தாய் கருவிலே அகஸ்தியன் பெற்ற உணர்வை, உங்களால் உணரமுடியும்.

அவர்கள் பரப்பிய ஈர்ப்பு வட்டத்திற்குள், மற்ற உயிரினங்கள் அதைக் கண்டு, அதன் வீரியத் தன்மை பிரிந்து, அது நகர்ந்து ஓடுவதையும், நீங்கள் இப்பொழுது உங்கள் உணர்வால் பார்க்கலாம்.

அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்கள் உடலிலே விளைந்து, அதனதன் ஜீவ ஜெந்துக்கள், இதை நுகர்ந்தபின், நகர்ந்து சென்ற அந்த உணர்வின் அந்த ரூபங்களை, அக்கால உணர்வின் தன்மையை நீங்கள் இப்பொழுது பார்க்கலாம்.
19. அகஸ்தியன் நுகர்ந்த மூலிகைகளின் மணங்களை நுகர்ந்து, தீமைகளை அடக்குதல்
அகஸ்தியனுடைய தாய் தந்தையர் பெற்ற அந்தத் தாவர இனத்தின் மணங்களை, நீங்கள் இப்பொழுது உங்களுக்குள் நுகரும் சக்தி பெறுங்கள். உங்கள் உடலுக்குள், அந்த உணர்வுகள் செல்லச் செல்ல, ஒரு வித்தியாசமான உணர்ச்சிகள், உங்கள் உடலிலே தோற்றுவிக்கும். நுகரும் மணத்தில் வித்தியாசமான மணங்கள் வரும்.

இப்பொழுது, நம் வாழ்க்கையில் காணும் மணத்தைக் காட்டிலும் இந்த மணங்கள் வித்தியாசமாக வரும். சில உடல்களில், நோய்களின் தன்மை இருந்தால், இந்த உணர்வுகளை நுகரும் பொழுது, அது ஓடி ஒடுங்குவதை, உங்கள் உடல்களில் பார்க்கலாம். உணரலாம். இப்பொழுது பல பல மணங்கள் வரும்.

உங்கள் உடலில், இதற்கு முந்திய எதிர்நிலையான அணுக்களுக்கு மாறாக, இப்பொழுது நாம் சுவாசிக்கும் மணங்கள், எதிர் நிலைகளை அதை ஒடுக்கும்.

அகஸ்தியனின் உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுது, உங்கள் உடல்களில் பலவிதமான, வித்தியாசமான நல்ல உணர்வுகளும், அந்தத் தாவர இனத்தின் மணமும், உங்களுக்குள் கடும் வெறுப்போ, வேதனையோ, இதைப் போல அவைகளை அடக்கும் உணர்ச்சிகள் உங்கள் உடலுக்குள் ஊடுருவும்.

இப்பொழுது, அகஸ்தியனின் உணர்வுகள் உங்களுக்குள் பட்டபின், யாம் இதற்கு முதலில் சொன்ன, “ஆதிசக்தியின் உணர்வின் தன்மையை”, அந்த உயர்ந்த உணர்வினை அறிந்திடும் உணர்வும், ஆனந்த நிலையும் பெருவீர்கள். அருள் உணர்வுகள், உங்களுக்குள் உருவாகும் கருவாக இப்பொழுது உருவாகின்றது.

இப்பொழுது, இந்தக் காற்றிலும், ஒரு அற்புதமான, ஒரு தென்றலின் மணம் வரும். அகஸ்தியன் காலத்தில் நுகர்ந்த, அந்த மூலிகையின் மணங்கள் இப்பொழுது உங்களின் சுவாசத்திற்கு வரும்.

இது உங்கள் உடலில் படரப்படும் பொழுது, பல வித்தியாசமான உணர்வுகள் தோன்றும். ஆக, வெறுப்பு, சலிப்பு, சஞ்சலம், என்ற நிலையை அடக்கும். சிந்திக்கும் ஆற்றலை ஊட்டும்.

யாம் இந்நேரம் வரையில் சொன்ன, அகண்ட உணர்வுகளுக்கு உங்கள் எண்ணத்தைச் செலுத்துங்கள். அகஸ்தியன் அறிந்த பேருண்மையை, நீங்கள் அறியும் ஆற்றலை, இப்பொழுது பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள்.

இப்பொழுது உங்களைச் சுற்றி, ஒரு ஒளி வரும். இப்பொழுது பதிவு செய்த உணர்வுகள் அனைத்தும், அகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்தில், நாம் அனைவரும் வாழ்கின்றோம்.

அகஸ்தியன் நஞ்சினை வென்றிட்ட, அந்தப் பேரருள் நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து, இந்த உணர்வினை நுகர்ந்து, உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

அகஸ்தியன் பெற்ற பேரருள், எங்கள் அனைவரது உடல் முழுவதும் படர்ந்து, இரத்த நாளங்களின் கலந்து, எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று இந்த உணர்வின் தன்மையும், உங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று, ஏங்கி தியானியுங்கள்.
II. ஞானகுரு நம்மிடம் எதிர்பார்ப்பது
1. அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை உலகுக்கு எடுத்துக் காட்டும் நிலை
இப்பொழுது அகஸ்தியன் கண்ட பேருண்மையை நாம் அனைவரும் அறிந்தோம். வான்வீதியில் என்ன நடக்கின்றது என்பதையும், இந்தப் பிரபஞ்சத்தில் எப்படி நடக்கின்றது என்பதையும் உணர்ந்தோம்.

உங்கள் உடலில், இப்பொழுது பல அற்புதங்கள் நடந்திருக்கும். இந்த உணர்வுகள் நன்றாக, உங்களுக்குள் பரவி இருக்கும். பேருண்மையின் உண்மையின் சக்தியை, நீங்கள் அறியும் தன்மை பெற்றிருக்கிறீர்கள். இதைத்தான், இப்பொழுது யாம் பதிவு செய்தது.

இதன் வழிப்படி, இனி உங்கள் எண்ணத்தில்தான் கொடுக்க வேண்டும். அதை நீங்கள் வளர்க்க வேண்டும். நீங்கள் எல்லோரும் வளர வேண்டும். பிறருடைய தீமைகளை நீங்கள் போக்கக் கூடிய சக்தியாக மாற வேண்டும். உண்மையின் நிலையை, இந்த உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும்.

நமது குரு வழியில் எமக்குக் கொடுத்த, இந்த உண்மைகளை எனக்கு எப்படிப் பாய்ச்சினாரோ, அதன்வழியில் தான், உங்களுக்கும் இப்பொழுது பாய்ச்சினேன். இந்த உணர்வை நீங்கள் எடுத்து வளர்ப்பது, இனி உங்களுடைய பொறுப்பாகும்.

சாமி கொடுக்கவில்லை, என்று எண்ண வேண்டாம். உணர்வை நீங்கள் எடுக்கவில்லை என்ற நிலை இல்லாதபடி, “அதை எடுப்போம், வளர்ப்போம், உண்மையை உலகுக்கு எடுத்துக் காட்டுவோம்”, என்ற இந்த நிலைக்கு நீங்கள் எல்லோரும் வாருங்கள்.

ஆக, இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல. நமக்குச் சொந்தமானது எல்லாம், உணர்வும், உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வாக, அகஸ்தியன் பெற்ற பேருண்மையை நாம் பெறுவதே ஆகும். அதைப் பெற முடியும், என்ற தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
2. உயிரின் இச்சைக்காக வாழவேண்டும்
இந்நேரம் வரையிலும், நமது குருநாதர் காட்டிய நிலையில் அழைத்துச் சென்றேன். உங்கள் மனமெல்லாம், இந்த உலகெல்லாம் சென்று, அகஸ்தியன் பார்த்த இந்தப் பிரபஞ்சத்தையும், ஆதிசக்தியின் ரூபத்திலிருந்து, இதுவரையிலும் உங்களைப் பெறச் செய்தது.

உங்கள் எண்ணங்களைப் பழகச் செய்து, இந்த உணர்வின் தன்மையெல்லாம், கிரேதா. நாம் எந்த உணர்வின் தன்மையைக் கவர்ந்து, பதிவு செய்கின்றோமோ, அதை நினைவூட்டும் பொழுது, கிரேதாயுகமாகக் கவரும் சக்தி பெறுகின்றது.

இந்த உணர்வின் தன்மை, உயிருடன் மோதி, மீண்டும் இந்த திரேதாயுகத்தில், உணரின் எண்ணங்கள் கொண்டு, நமக்குள் மாற்றும் சக்தி வருகின்றது.

ஆக, அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நம்க்குள் சேர்த்து, இந்த திரேதாயுகத்தில் நாம் மாற்றி, இந்த உயிரின் உணர்வின் தன்மையை, ஒளியாக மாற்றுதல் வேண்டும்.

அப்பொழுது, அதை ஒளியாக மாற்றும் பொழுது, இந்த உயிர் எப்படி ஆனதோ, இதைப் போல உணர்வின் அணுக்களை மாற்றியமைத்துக் கொள்வதே, நமது குரு காட்டிய அருள்வழி.

ஆகவே, இந்த உடல் இருக்கும் பொழுதே, இந்த உணர்வைப் பெறுவோம். உடலின் இச்சைக்கு அநேகமாக யாரும் செல்லாதபடி, உயிரின் இச்சையைச் சேர்த்து, அந்த உணர்வின் தன்மையை, நாம் வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பெறுவதற்கு சக்தி கொடுத்திருக்கிறோம். அதை நீங்கள் பெறுவது, உங்களுடைய நிலைகளில்தான்.

கிடைக்கவில்லை, கொடுக்கவில்லை, என்ற நிலை வராதபடி, ஏனென்றால், இனி எதிர்காலம் மிகக் கடினமான காலமாக இருக்கும். அதனால், இந்த உணர்வை நாம் வளர்த்துக் கொள்வோம். அருளைப் பெருக்குவோம். இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை என்ற நிலையில், முழுமை அடைதல் வேண்டும்.

ஏனென்றால், இவ்வளவு நாள் கேட்டோம், நீங்கள் அதை அடைய வேண்டும். உங்கள் சொல்லைக் கேட்டவர்கள் உணர்வுகளிலும் அதே உணர்வுகளைப் பெருக்கச் செய்ய வேண்டும். அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி, ஒளியான உணர்வை, அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெறுவோம்.
3. ஞானகுரு நமக்குள் பதிய வைக்கும் ஞானவித்து
ஒரு உணர்வுக்கு ஒரு வித்தைக் கொடுக்கின்றோம். அந்தச் செடி வளர்ந்தால்தான், அந்த வித்தின் ரூபம், மலரின் தன்மை, மணத்தின் தன்மை தெரியும். இப்பொழுது, இங்கு ஒரு ஞானவித்தை யாம் உங்களுக்குக் கொடுக்கிறோம். அப்படியென்றால், உங்களுக்குள் பதிவு செய்து, ஈர்க்கக் கூடிய சக்தியைக் கொடுக்கிறோம்.

அப்பொழுது, அதில் நாம் ஒன்றியிருக்க, எத்தனையோ கஷ்டங்களும் நஷ்டங்களும் இருக்கும். இதையெல்லாம் பிளந்துவிட்டு, உள்ளுக்குள் கொண்டு போக வேண்டும். அந்த உணர்வை, நமக்குள் வளர்க்கக் கூடிய சக்தி நமக்குள் உண்டு.

நாம் வளர்ந்தோம் என்றால், அடுத்தவர்ளையும் வளர்க்கலாம். அடுத்தவர்களின் வேதனை வளர்ந்தால், அதைக் கேட்டோம் என்றால், நாமும் அந்த வளர்ந்த வேதனையை நமக்குள் வளர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது எது தேவை? 

அதனாலே, சில உண்மையின் உணர்வுகள் உங்களுக்குள் வரும் பொழுது, ஞானம் வளர்ந்து கொண்டே இருக்கும். நீங்கள் தொடர்ந்து, இந்த உணர்வுகளை, உங்களுக்குள் எடுத்து வளருங்கள்.

ஒரு வித்தை உங்களுக்குக் கொடுத்துவிட்டால், அதைப் பாதுகாக்கும் உணர்வுக்குச் செலுத்த வேண்டுமா? இல்லையா? அந்த ஞானத்தின் வித்தின் தன்மையை, அந்த அடர்த்தியானது, அது “ஆதிசக்தியினுடைய உணர்வுகள்”.

இப்பொழுது, அகண்ட அண்டம் எப்படி இருக்கிறது என்று, “வட்ட வட்டமாக”, “மோதி மோதி, மோதி மோதி”, எப்படிப் பல நிலைகள் மாறுகிறது என்று நன்றாகத் தெரியும். அதை நாம், நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதை உங்களுக்குள் பதிவு செய்வது.

ஒரு கண்ணாடி சுத்தமாக இருந்தால், நம் உருவத்தைத் தெளிவாகக் காட்டும். அதில் கொஞ்சம் அழுக்குப் பட்டால், அதில் உருவத்தைத் தெளிவாகக் காணமுடியாது. ஆக, அந்த அழுக்கைத் துடைத்தால்தான், சரியாக வரும்.

ஆகவே, அந்த அழுக்கைத் துடைக்கக் கூடிய உணர்வைத்தான், யாம் கொடுத்துக் கொண்டே இருக்கின்றோம். நம் ஆன்மாவில், இதைப் போன்ற அழுக்குகள் இருக்கின்றது. இதன் வழி கொண்டுதான் நாம் பார்க்க முடியும்.

அதில் அழுக்குப் பட்டிருக்கும் பொழுது, அழுக்குப் படவில்லை என்று நாம் சொன்னால், என்ன செய்யும்? அந்த அழுக்குகள், ஒன்று ஒன்றாகக் கூடிக் கொண்டேதான் இருக்கும்.

ஆக இந்த அழுக்குகளை, நாம் சுத்தப்படுத்தியே ஆகவேண்டும். அப்பொழுது, நிச்சயம் இந்தத் தெளிவை அடைகின்றோம். சொல்வது அர்த்தமாகிறதல்லவா?
4. ஞானகுரு காட்டும் வழியில் நாம் வளர்ந்து காட்ட வேண்டியது
ஏனென்றால், நாளக்கு வரக்கூடிய் விஷத்தன்மைகள் ஏராளமாக இருக்கின்றது. அதற்குள், எப்படி ஒரு விஷத்தன்மை படர்ந்த உணர்வுகளில், ஒரு பூ அந்த நல்ல மணத்தை எடுத்து, நறுமணத்தைக் கொடுக்கின்றதோ, அதே போல, நம் உடலிலுள்ள அணுக்களுக்கு, வலுவான நிலைகளில் அந்த உணர்வுகளை நுகரச் செய்து, உணர்வை வளர்க்க வேண்டும். அந்த நறுமணங்களைப் பெருக்கச் செய்யவேண்டும்.

இப்பொழுது, தியானத்தில் தொடர்ந்து இருப்பவர்களுக்கு சாக்கடைப் பக்கம் நின்றால், சாக்கடை வாசனை தெரியாது. “என்ன இவன் சாக்கடை பக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கிறான்” என்று மற்றவர்கள் பேசுவார்கள். ஆக, அவர்கள் இதை ஞாபகப் படுத்தினால், இங்கே இருக்கும் சாக்கடையைத் திரும்பிப் பார்த்த பின்பு, சாக்கடையின் வாசனை தெரியும். இதை நீங்கள் உணரலாம்.

ஏனென்றால், மற்ற தீமைகள் நமக்குள் போகாதபடி பாதுகாப்புக் கவசமாக இருக்கின்றது. அதனாலே, நாம் இதை நாளடைவில் பெருக்கிக் கொண்டு வரவேண்டும்.

இந்தப் புத்தகத்தை வாங்கிச் செல்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? யாம் சொல்லும் இந்த உணர்வுகளை, உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள், அந்த உணர்வைப் பெறுவதற்குண்டான வழிகளைத்தான், யாம் காட்டுகின்றோம்.

இதை எல்லோரும் பெற முடியும். ஆனால், நீங்கள் யாம் சொல்லும் முறைப்படி, வளர்ந்து காட்ட வேண்டும். யாம் ஒருவன் மட்டும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தால், பத்தாது. நீங்களும் இதைப் பெற வேண்டும், பெற முடியும். அந்த நிலைக்கு மாற வேண்டும்.

அப்பொழுதுதான், நாளைக்கு வரக்கூடிய தீவிரவாதத்திலிருந்து, நம்மை மீட்கவும், நம் குடும்பத்தாரையும், நண்பர்களையும், உலக மக்களையும் மீட்க முடியும். ஏனென்றால், இந்த உடலுக்குப் பின் அதைத்தான் நாம் பெறுகின்றோம். அதுதான் நமக்கெல்லாம் தேவை.
 (பின் குறிப்பு: ஆதிசக்தி தியானமும், ஞானகுரு நம்மிடம் எதிர்ப்பார்ப்பது என்ற தலைப்புகளில் உள்ளவைகள் அனைத்தும், நம் சாமி அவர்கள் சிதம்பரத்தில் 22.09.2000 அன்று தியானம் செய்து, பின் உபதேசித்ததின் எழுத்து வடிவம்)

September 23, 2012

மகரிஷிகள் விரும்பும் செயல்

1.   மகரிஷிகள் தன் இனமாக மாற்றும் செயல்
குருதேவர் குளவியைக் காட்டுகின்றார். குளவி புழுவைத் தூக்கிக் கொண்டு வந்து, தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மை கொண்டு புழுவைத் தாக்கி, தன் இனமாக மாற்ற விரும்புகின்றது. காட்டிற்குள் இதையெல்லாம் காட்டுகின்றார்.

அதாவது, மகரிஷிகள் ஒளியாதவற்கும், தன் இனமாக (மகரிஷிகளாக) மாற்ற விரும்பும் நிலையையும், அங்கே காட்டுகின்றார்.

உயிரினங்களில் தன் இனத்தைப் பெருக்க வேண்டும் என்ற உணர்வுகளில், இனச் சேர்க்கை வேறு. இனத்தை உருவாக்க வேண்டும் என்ற உந்துதல் வேறு.

குளவி தனக்குள் எண்ணிய உணர்வின் தன்மையைப் புழுவின் மேல் பாய்ச்சுகின்றது. தனக்குள் ஊறும் உமிழ்நீரைக் கூடாகக் கட்டி, அந்தப் புழுவினை அங்கே இணைக்கப்படும் பொழுது, தன் உணர்வின் இயக்கங்களை அதன் மேல் தாக்குகின்றது.

ஆக, இதற்குள் இருக்கும் விஷத்தின் தன்மை தாங்காது, புழுவுக்கு அந்தக் குளவியின் நினைவே வருகின்றது. புழுவின் உணர்வுகளுக்கு, அந்த உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது, அதிலே பதிந்துவிடுகின்றது.

அப்பொழுது, திடீரென்று ஓங்கி எம்மை அடிக்கிறார் குருநாதர். அடித்தவுடன் குளவியைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, குருநாதர் மேல் திருப்பம் வருகின்றது.

அந்தக் குளவியைப் பற்றிக் காண்பித்துக் கொண்டிருக்கும் பொழுது, குளவி அதனுடைய விஷத்தால், புழுவின் மேல் தாக்கப்படும் பொழுது, புழுவின் நினைவலைகள்,
குளவியால் தாக்கப்பட்ட உணர்வு கொண்டு,
எவ்வாறு இணைக்கின்றது?
அந்த உணர்வுகள்,
அதற்குள் இருக்கக்கூடிய காந்தப் புலனறிவு
எவ்வாறு இயக்குகின்றது,
எவ்வளவு துரிதமாக இயக்குகின்றது?
என்பதை உணர்த்துகின்றார்.
2. ஈஸ்வராய குருதேவர் எமக்குள் மெய் உணர்வை இணைக்கச் செய்த முறை
அதே சமயத்தில், எம்மை ஓங்கி அடிக்கின்றார். அடித்தவுடன், அவரைத் திடீரென்று பார்க்கின்றேன். திடீரென்று திரும்பியவுடன், அவர் உணர்த்திய உணர்வின் அலையை,
அந்த மெய்ஞான உணர்வை எடுத்து,
எம் எண்ணத்தில் கவரச் செய்கின்றார்.
இழுக்கச் செய்கின்றார்.

இப்படி அவர் உணர்த்தும் மெய் உணர்வை, யாம் கவர்ந்து எமக்குள் இழுத்தவுடன், சிரிக்கின்றார் குருநாதர்.

குளவிக்கும், மனித வாழ்க்கைக்கும், எடுத்துச் சொல்லப்படும் பொழுது, சாதாரண மனிதன் தன்னைக் காத்துக் கொள்வதற்காக, ஒருவனைத் தாக்கபடும் பொழுது, இந்த உணர்வுகள் அவன் மேல் பாய்ச்சப்பட்டு, அதே நிலைகளில், எதிர் பதிலாக, ”அவவனை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது. இந்த மூன்றுக்கும் உண்டான வித்தியாசங்களைக் காட்டுகின்றார்.

குருநாதர் எம்மை அடித்தவுடன், திரும்பிப் பார்க்கின்றேன். அவருக்குள் விளைந்த சக்திகள், அவர் எண்ணத்தால் வெளியிடுவதை, உடனே உற்றுப் பார்த்தவுடன், அந்த உணர்வுகள் வருகின்றது.

அப்பொழுது, அவர் விளைய வைத்த உணர்வுகள், அவரை எண்ணியபின், இந்த அடியை மறந்து, குளவி எப்படி விஷத்தால் புழுவைத் தாக்கியபின், அந்தப் புழு வேதனையை நீக்கிவிட்டு, குளைவியையே எண்ணுகின்றதோ, அதே மாதிரி குருநாதருடைய எண்ணத்தை வைத்து, குருநாதருடைய நிலைகளை எண்ணுகின்றேன்,
அப்படி எண்ணப்படும் பொழுது,
அவர், அந்த “மூல உணர்வுகளின் நிலைகள்”,
அவருக்குள் இணைத்ததை எமக்குள் இணைக்கின்றார்.
இப்படித்தான் குருநாதர் மெய் உணர்வின் தன்மையை எம்மைப் பெறச் செய்தார்.
3. நாம் ஒளியாக மாறும் நிலை
இதைப் போன்று, நீங்களும் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றீர்களோ, உங்கள் நல்ல உணர்வுகள் மாறுகின்றதோ, உடனடியாக, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் திருப்பமாகி, நினைவச் செலுத்தும் பொழுது, அதிலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளியைச் சுவாசிக்கும் பொழுது, பிறருடைய தீமையான உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.

அதே சமயத்தில், அந்த அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி, இன்று துருவ நட்சத்திரமாக, நஞ்சினை வென்று உணர்வை ஒளியாக மாற்றி, என்றும் பதினாறு என்று கணவன் மனைவியாக இணைந்து, வாழ்ந்து வளர்ந்து கொண்டும், தன் இன மக்களை வளர்க்கச் செய்து கொண்டிருக்கின்றான்.

அப்பொழுது, அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும், அருள் உணர்வுகளை, நாம் நமக்குள் கூட்டும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

ஆக, அந்த துருவ நட்சத்திரத்தின் அருள் வட்டத்தில், நாம் இணைந்து வாழும் நிலை உருவாகின்றது. இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலை அடைந்து, அழியா ஒளி சரீரம் நாம் அனைவரும் பெறுகின்றோம். 
4. குளவி, புழுவை எப்படி தன் இனமாக (குளவியாக) மாற்றுகின்றது?
குளவி புழுவைத் தூக்கியபின், தன் இனத்தின் நிலைகள் கொண்டு, அது தன் இனமாக மாற்றவேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகின்றது.

தனக்குள் இன விருத்திக்கான உமிழ்நீரைச் சுரக்கும் பொழுது, அதை மண்ணிலே போட்டுப் பிசைகின்றது. மண்ணிலே போட்டுப் பிசையும் பொழுது, ஒரு நிறம் இருக்கிறதென்றால், தனக்குகந்த மண்ணை எடுத்து வந்து, சுண்ணாம்பினால் அதைக கலந்து எடுத்துக் கொண்டு வருகின்றது. அதிலே இருக்கக்கூடிய காந்தப் புலனறிவிலே அதைப் பாய்ச்சுகின்றது. அதைப் பாய்ச்சி, உருண்டையை எடுத்துவந்து கூடாகக் கட்டுகின்றது.

தன் இனவிருத்தியின் உணர்வின் நோக்கங்களில், தன் இனத்தைப் பெருக்க வேண்டும் என்ற உணர்வை அது எடுத்துக் கொண்டு, புழுவைத் தாக்குகின்றது. தாக்கியவுடன், புழுவின் உணர்வின் செல்கள் வெளியிலே போகாதபடி, அது மறைத்துவிடுகின்றது.

முதலில் கவசமாகக் கட்டி விடுகின்றது. அதிலிலுள்ள விஷத்தின் தன்மை புழுவின் தோலைச் சருகாக மாற்றி விடுகின்றது. அதற்கு அந்தச் சக்தி இருக்கின்றது.

அப்பொழுது, புழுவின் உடலை உருவாக்கிய உயிரும், உயிரால் உணர்வால் ஆக்கப்பட்ட, உடலுக்குண்டான அணுக்களிலும், இந்த விஷத்தின் தன்மை பாய்ந்து, விஷமாக ஆகின்றது.

விஷத்தன்மை பாய்ந்தபின், புழுவிற்கு அந்தக் குளவியின் நினைவாற்றல்தான் அதிகமாகி வருகின்றது. அந்த நினைவாற்றல் அதிகரிக்கப்படும் பொழுது, அது கொட்டி சருகாகும் பொழுது, அந்தக் கூட்டின் மேலிருந்து “ரீங்கார ஒலிகளை” எழுப்புகின்றது.

அந்த உணர்வின் இயக்கமானபின்,
இதே நினைவலையில், அந்த உணர்வின் செல்கள் மாறிவிடுகின்றது.
இந்தக் கூட்டின் வழியாக, அந்த உமிழ்நீரைச் சேர்த்தபின்,
அந்த ஒலி அலைகளை எடுக்கின்றது.

நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய கதிரியக்கங்கள், பூமிக்குள் ஊடுருவி, அந்தக் காந்தப் புலனறிவு இயக்கும். காந்தம் அதிகமாகும் பொழுது, பூமியின் நடுவிட்டம் ஊடுருவிச் செல்லும். ஊடுருவிச் செல்லும் பொழுது, மரங்கள் மேல் தாக்கப்பட்டால், மரங்கள் கருகி விடுகின்றது.

அப்படி ஊடுருவும் நிலைகள்  பூமிக்குள் சென்றவுடனே, வெல்டிங் (welding) வைத்தால் எப்படி ஓட்டை ஆகின்றதோ, அதே போல சில பாறைகளில் ஊடுருவி, அதற்குள் சில நுண்ணிய அலைகளைப் பாய்ச்சுகின்றது. அது தனக்குள் சேர்த்துக் கொண்டபின், மொத்தத்தில் வெடித்துக் கொண்ட உணர்வுகளை ஆவியாக மாற்றும் பொழுது, அதன்வழி, மாற்றங்களைக் கொடுக்கின்றது.

பூமியின் செயலாக்கங்களுக்கு, பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத்தன்மையை, நட்சத்திரங்கள் அது தனக்குள் உருவாக்கி, அது உமிழ்த்தும் அலைகளை சூரியனின் காந்த சக்தி, அது தனக்குள் கவர்ந்து கொண்டபின்,
அந்த அலைகளின் வீரியம் வருவதும்,
நம் பூமியின் ஈர்ப்புக்குள் நுழைந்து கொண்டபின்,
அது ஈர்த்துச் சேமிக்கும் நிலையான
நடுமையத்தில் கொண்டு போகின்றது.

நாம் சுவாசிக்கும் நிலைகள், உணர்வுகளை நம் உடலுக்குள் பாய்ச்சினாலும், உடலில் விளைந்த உணர்வுளை எல்லாமே, உயிரிடமே கொண்டு வந்து சேர்த்து வைத்துக் கொள்கின்றது.

இந்த உயிரின் இயக்கங்களை ஊடுருவிச் செய்தாலும் உணர்வின் இயக்கங்களைப் பெருக்கி, அணுக்களைப் பெருக்கி, தன் நினைவுடன் இயக்கச் செய்து, தன்னுடன் இணைத்து, ஒரே இயக்கமாகக் கொண்டு வருகின்றது.

இதற்கும் அதற்கும் உண்டான வித்தியாசத்தைக் காட்டுகின்றார். 27 நட்சத்திரங்களின் நிலைகள் ஒன்று சேர்ந்தபின், கொதிகலனாக மாறுகின்றது. அதிலிருந்து கலவைகள் ஆவியாக மாறி, இது தனது நிலைக்கு மாற்றிக் கொள்கிறது. இதைப் போலத்தான்
இந்த விஷத்தன்மை கொண்ட உணர்வுகள்,
புழு, கூட்டுக்குள் அந்த உணர்வின் வேகங்கள் எடுத்தபின்,
இந்த அணுக்களில் பட்டபின்,
புழுவின் “உயிர்”, இந்த உணர்வுகளை எடுத்து, இந்த செல்களை மாற்றி, குளவியாக உருவத்தை மாற்றுகின்றது. இது பரிணாம வளர்ச்சி.
5. மெய்ஞானத்தின் மூலக்கூறுகளை அனைவரும் பெறும் தகுதி
“மூலக்கூறினுடைய உணர்வுகளை”, ஓரளவுக்கு இணைத்துக் கொடுக்கின்றோம். உங்களுடய உணர்வுகளில், “குருநாதருடைய உணர்வுகளையும், அவர் கண்டுணர்ந்த உணர்வுகளையும் இணைத்து வளரச் செய்வதற்குத்தான் இதை உபதேசிப்பது.

அணுக்களின் நிலைகளை நாம் தெரிந்து கொள்வோம் என்றால், உங்களில் ஒளியான உணர்வுகள் வளர்ச்சி அடைவதற்கு ஏதுவாக இருக்கும். எமது அருளாசிகள்.