ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 30, 2013

மனிதனுடைய கடைசி எல்லை -- "ஞானகுருவின்" விண் செல்லும் மார்க்கம்

1. குருதேவர்,  மனைவியின் ஆன்மாவையும் தன்னுடன் இணைத்து விண் செலுத்தும்படி செய்தார்
என் மனைவியை (யார்? குருநாதருடைய மனைவியை).அது இறந்தபின் அதைத் தவறி விட்டுவிட்டேன் அதனால் அது எங்கே இருக்கின்றதென்று தெரியவில்லை. அதை நீ இந்த மாதிரி இதை அந்த உணர்வை எடுத்துப் பாய்ச்சப்படும் பொழுது, இந்த உணர்வின் நிலை கொண்டு ஒரு காலம் வந்தால், இணைத்து விடு என்று சொல்கிறார், குருநாதர்.

இது பரம ரகசியம். சொல்வது அர்த்தம் ஆகின்றதா? அது விண் சென்றாலும் கூட, இதில் நாம் எப்படி அதனுடன் இணைய வேண்டும்? அவருடன் இணைத்து அந்த வளர்ச்சியின் தன்மை பெறும், என்று சொல்லித்தான் அப்புறம் உணர்வைக் கொடுக்கின்றார்

பல இதுகளை எடுத்த பிற்பாடு குருநாதர், அவர் இருக்கும் பொழுதே இதைச் சொல்கிறார் என்றால், அதைக் கண்டுபிடிப்பதற்கு ம்மிடம் கொடுத்தார் அவருக்கு ஆசை இருக்கின்றது இருந்தாலும் கூட, “நீ இதைக் கண்டுபிடி” என்று சொகின்றார்.

அதன் பிறகுதான், இந்த ஆன்மா இங்கே அந்த உடலை விட்டு வந்த பிற்பாடு, இவருடைய உணர்வுகள் எண்ணங்களில் பதிக்கச் செய்து, பதிக்கச் செய்து, ஆவி அந்த ஆன்மாவாக (குருநாதருடைய மனைவி) இருக்கின்றது, அது,
இதை எடுத்துத்தான், இது இந்த உணர்வோட இணைத்து,
அங்கே சப்தரிஷி மண்டலத்திற்குக் கொண்டு போகச் சொன்னார்.

தை யாம் தெரிந்து கொள்வதற்காக,
முதலில் உயிருடன் இருக்கும் பொழுது,
குருநாதர் தையெல்லாம் சொல்கின்றார்.
ஏனென்றால், எல்லாம் சூட்சம உணர்வுதான்,

அப்புறம் மனைவியுடன் இணைத்துக்கொண்ட பிற்பாடுதான், சப்ரிஷி மண்டலத்தில் சேர முடிகின்றது. இல்லையென்றால், அங்கே சேர்க்க முடியாது.
மனைவியோடு சேர்க்கப்படும் போதுதான்,
அணுவின் நிலைகள் ஒளியாக மாறும்.

ஆண் பெண் என்று, செடி கொடிகளில் அதன் வித்தை உருவாக்குகின்றது. இதைப்போல ஆண் பெண் என்ற நிலைகள் வரப்போகும் போது, தன் இனத்தை எப்படி விருத்தி செய்கின்றதோ, இந்த இரண்டு உணர்வும் ஒளியான பின் ஒளியின் சரீரமாக ஆன பிறகு உணர்வைக் கருவாக்கி, ஒளியின் சரீரமாக்கும் ஆக, விண்ணின் நஞ்சினை ஒளியாக மாற்றும் தன்மை பெற்றது
2. திருமணம் ஆகாதவர்கள் தாய் உணர்வுடன் விண் செல்லலாம்
ஹரித்துவாரில், இவன் அரசனாக இருந்து (ஆயிரம் வருடம் தவம் இருந்த ஒரு ஆன்மா) தவமிருந்தாலும் கூட, இதனுடைய உணர்வுகள் அங்கே தாயுடன் இணைத்துவிடும்படிச் சொன்னார் குருநாதர்.

தாய் அதனுடைய உணர்வோடு இணைக்கப்படும் போது, அந்தக் கருவுடன் உருவாக்கிவிடுகின்றது.
அப்படிப் பல நிலைகள்
சப்தரிஷி மண்டலங்களில் உண்டு

தாய் தன் கருவுடன் இணைந்து விடுகின்றது அப்பொழுது, தாய் என்ற நினைவு வரும்பொழுது, அந்த ஒளியுடன் அதனுடன் சேர்த்து, பிள்ளை இணையும் இது வேறு மாற்றம். அதாவது, தாயிற்குள் இது புகும்.
3. அகஸ்தியன், அவன் மனைவி, தாய் தந்தையர் நால்வரும் இணைந்து, ஒளியின் உணர்வாக இன்று இயக்குகின்றார்கள்
ஆதியிலே, அகஸ்தியனுடைய தாய் தந்தையருடைய உணர்வுகள் தான்,
அகஸ்தியனுடன் சேருகின்றது
அதுதான் துருவநட்சத்திரமாக ஆகியிருக்கின்றது
அகஸ்தியனுடைய மனைவியும் சேர்த்து, நான்கு ரூபமாக இருந்து, அந்த உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது. இப்படி இணைகின்றதும் உண்டு

தன் மனைவி என்று சொல்லும்போது தன்னுடைய இனத்தை எடுத்துக் கருவாக மாற்றுகின்றது தாய் என்ற உணர்வுக்குள் இப்பொழுது என்ன செய்கின்றது? இந்த ஆன்மா இங்கே வருகின்றது அவர் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை வருகின்றது

இது வளர்த்துக்கொண்ட பின், தன் மனைவி என்ற நிலைகள் வரப்படும் போது இணைத்து, (துருவ நட்சத்திரம்) ஒரு குடும்பமாகவே இன்றைக்கு இயக்குகின்றார்கள்.

அதனால் தான், இங்கே தாய் தந்தையின் முக்கியத்துவத்தைக் கொடுத்து, இங்கே உங்களுக்கு வளர்க்கச் சொல்வது. சொல்வது அர்த்தமாகின்றதல்லவா?

அப்பொழுது, தாய் தந்தையரின் உயிராத்மாக்கள் விண்ணிலே செல்லப்படும் போது, அந்த விண் சென்ற உணர்வலைகளை எடுக்கும்போது ந்த ஒளியான உணர்வுகள் நமக்கு மீண்டும் கிடைக்கும் து தனித்தன்மை வாய்ந்ததாகப் போகும். ப்படி வித்தியாசங்கள், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித்தியாசம் உண்டு

ஏனென்றால், முன்பின் சேர்த்த நிலைகளில் இப்படி சப்தரிஷி மண்டலங்களில் எத்தனையோ வகைகள் உண்டு. அது வளர்ச்சி கொண்டு வருவதும், அதில் வளர்ச்சி பெறாததும் உண்டு.
4. தனித்த நிலையில் யாருடைய துணையும் இல்லாமல், விண்ணுக்குச் செல்ல முடியாது
இப்படி (ஹரித்துவாரில் 1000 வருடம் தவம் செய்தவர்) தனித்த முறையில் போகிறவர்களுக்கு, இங்கேயிருந்து உந்தித் தள்ளுவதற்கு, யாரும் இல்லையென்றால் அவர்கள் விண்ணுக்குப் போக முடியாது.

ங்கே தரையில் இருக்க வேண்டும்.
இந்த புவியீர்ப்பிலிருந்து கடக்க வேண்டும்.
புவியீர்ப்பைக் கடக்க வேண்டும்

புவியீர்ப்பைக் கடக்க வேண்டுமென்றால், அந்த விண்ணின் ஆற்றல், அந்த சப்தரிஷிமண்டல ஆற்றலை வலு சேர்க்க வேண்டும்.

அந்த உணர்வின் தன்மையைத்தான், உயிராத்மாக்களின் முகப்பில் சேர்க்க வேண்டும் அப்பொழுது, அந்த சப்தரிஷி மண்டலத்துடன் சேரவேண்டுமென்றால் இதை இழுத்துக்கொண்டு போகும்.

எதுவும் கடிவாளம் இல்லாதபடி, எங்கேயும் போக முடியாது  அதற்குச் சரியான குரு வேண்டும். நான் தனியாக விண்ணுக்குப் போய் விடுவேன் என்று சொன்னால், அது முடியாது. ஒருவர், ஒரு துணையில்லாதபடி ஒன்றும் ஒன்றும் செய்ய முடியாது

அதனால், ங்கே நீங்கள் பலர் இருக்கப்படும் போது, சரியான நிலையில் தயார் ஆகிவிட்டீர்கள் என்றால், எல்லோரும் வளர்ச்சி அடைவதற்கு உறுதுணையாக இருக்கும்.
5. குருநாதர் சொன்ன பிற்பாடுதான், இப்பொழுது உயிராத்மாக்களை விண் செலுத்தச் செய்கின்றோம்
ஏனென்றால், வெகுகாலம் இடைவெளிவிட்டது.
அதாவது, திருமூலருக்குப் பிற்பாடு, போகருக்குப் பிற்பாடு
இது நான்காயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டது
அதற்கப்புறம், சப்தரிஷி மண்டலத்தில் யாரும் இணைந்தது இல்லை.

அப்புறம், யாம் குருநாதரிடம் வந்த பிற்பாடு, இதனுடைய தொடர் வரிசையில், ஒவ்வொரு உயிராத்மாவாக நாம் அனைவரும் இப்பொழுது விண்ணுக்குச் செலுத்துகின்றோம்.

ஏனென்றால், இப்பொழுது இனம் இனத்தைச் சேர்க்கும். நீங்கள் தையெடுத்தாலும், அந்தக் கூட்டமைப்புடன் சேர்த்து வளர்த்துத்தான், நாம் அந்த வளர்ச்சியைப் பெறமுடியும்.
6. தனித்த நிலையில் எதுவுமே இயங்கவும் முடியாது, வளரவும் முடியாது
தனித்த நிலையில் எந்த ஒரு மண்டலமும் வளராது. ஒரு பிரபஞ்சம் இருக்கிறதென்றால், பிற மண்டலங்களிலிருந்து எடுத்துத்தான் இந்தப் பிரபஞ்சத்திற்குள்ளே இரையாகக் கொடுக்கின்றது.

இதே மாதிரிதான், மனிதன் தன் உணர்வின் தன்மை எடுத்து வளர்க்கப்படும் பொழுது, அந்த அடர்த்தி அதாவது மற்றதை இழுத்துத் தனக்குள் உணவாகப் பெருக்கும் தன்மை வருகின்றது.

ஒன்று தனித்து, என்றுமே ஒன்றும் வேலை செய்யாது. இந்த உண்மையைத் தெரிந்து கொண்டால், நாம் விலகி நிற்க மாட்டோம்.

நீயா? நானா? என்று போர் செய்து கொண்டிருந்தால் என்னகின்றது? இப்பொழுது சொல்வதெல்லாம், அந்த இயற்கையின் உண்மை நிலைகள். ஏனென்றால், யாம் இதில் ஆயிரம் மறைத்திருக்கின்றோம்
7. விண் செல்லவேண்டுமென்றால், குரு வழியில்தான் அது முடியும்.
உங்களிடம் பதிவு செய்த இந்த உணர்வுகளை,
நீங்கள் ஒவ்வொன்றாக இணைத்து,
அதைக் கொண்டுவர முயற்சி எடுத்தீர்கள் என்றால்,
எல்லாவற்றையும் உங்களுக்குள் பார்க்க முடியும்.
யாம் சொல்வதைக் கேட்டுக்கொண்டு மட்டும் இருந்துவிட்டால்,
அதனால் பலன் இல்லை.

நமது குருநாதர் எமக்குக் கொடுத்த அந்த உணர்வை, நீங்கள் பெறக்கூடிய தகுதியைத்தான் யாம் உங்களிடம் உருவாக்குகின்றோம். நீங்கள் தொடர்ந்து வந்தீர்கள் என்றால், அது கிடைக்கும், பின் அது வளர்ச்சியடையும்.

இயற்கையில் ஒவ்வொரு செடிக்கும் நாம் என்ன செய்கின்றோம்? உரத்தைச் சேர்க்கிறோம் என்றால், அது ஆவியாகப் படுகின்றது. அந்தச் செடியில் இணைத்துக் கொண்டபின் என்ன செய்கின்றது? அந்த ஆவி, செடியுடன் இணைந்து உறையப்படும் பொழுதுதான், அந்தச் செடி வீரிய சத்தாக எடுத்து, நன்றாக மீண்டும் வளர்ப்பதற்கு வழி செய்கின்றது.

ஏனென்றால், அது இழுக்கும் சக்தி இல்லை செடியிலிருந்த சத்தும், உரமும் இணைய வேண்டுமென்றால் இந்த மாதிரி சில நிலைகளை நாம் உருவாக்கச் செய்ய வேண்டும்.

அதைத்தான் இப்பொழுது இந்த உரங்களை உங்களுக்குள் இணைத்துக் கொடுத்து, உங்களிடம் அந்த விண்ணின் ஆற்றலை எடுக்கும் சக்தியைக் கொடுக்கின்றோம். தை எடுத்து, உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு அணுக்களிலும் இதைப் பரப்ப வேண்டும்.
வாயில் சொல்லிவிட்டுப் போனால்,
அப்புறம் இந்த குண்டுச்சட்டிக்குள் தான்
ஓடிக் கொண்டு இருக்கவேண்டும்.

விண்ணின் ஆற்றலுக்குச் செல்ல வேண்டுமென்றால், தை “குருவழியிலே பெற்றிருக்க வேண்டும்”. அதை எல்லோருக்கும் கொடுத்துப் பழக வேண்டும்.

அந்தப் பாதை தெரியாமல் யாரும் போகமுடியாது.

May 29, 2013

விஞ்ஞானி, தான் இந்த உடலுக்குப் பின் என்ன ஆவோம்? என்று காண முயற்சிக்கக் கூட இல்லை.

விஞ்ஞான அறிவில் மனிதன் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற முறையில், கம்ப்யூட்டர் துணை கொண்டு நாடாக்களில் (CD) பேசி, பதிவு செய்துவிடுகின்றார்கள்.

அந்தப் பேச்சின் பதிவின் பிரகாரம், இப்படித்தான் இயந்திரம் இயக்க வேண்டுமென்று கட்டளையிடும் பொழுது,
எலெக்ட்ரன் என்ற நிலையில் இயந்திரத்துடன் இணைத்து,
இத்தன மணிக்கு இது ஓடவேண்டும்,
இத்தனை மணிக்கு இது ஆகவேண்டும், என்று சொல்லி,
பதிவு செய்த நிலை கொண்டு
இயந்திரத்தை இயக்கும் நிலை வருகின்றது.

சொல்லாகவே சொல்லி, இயந்திரத்தை இயக்குகின்றான். அது மட்டுமல்லாமல் ரோபோட்டுகள் எனும் இயந்திரங்களைக் கொண்டு ஆபரேஷன்களைச் செய்கின்றனர்.

இன்றைய விஞ்ஞானக் காலத்தில் எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு,
செயற்கைக் கோள் மூலமாகக் கட்டளைகளை அனுப்பி,
இங்குள்ள இயந்திரத்தை இயக்கி,
இங்கிருக்கும் மனிதருக்கு ஆபரேஷன் செய்கின்றனர்.

டாக்டர்கள் ஒருவருக்குக் கட்டியை அகற்றும் ஆபரேசன் செய்யும் பொழுது, கத்தியை வைத்துக் கிழிக்கும் பொழுது, சந்தர்ப்பத்தில் ஏமாந்து பிறிதொரு நரம்பின் மேல்பட்டு, அதனால் காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் உருவாக்கப்பட்ட இயந்திரமோ, அதனுடைய பதிவுக்கு ஏற்றவாறு எந்த அளவுக்குப் போகவேண்டுமோ, அந்த நோயின் உணர்வுகள் இருக்கும் வரை செல்கின்றது. அதற்கு மேல் செல்வதில்லை. அதனுடன் நிறுத்திக் கொண்டு, ஆபரேஷன் செய்கின்றது.

இப்படி, விஞ்ஞான அறிவு வெகு தூரம் முன்னேறியுள்ளது. ஆனாலும், நாம் இன்னும் அறியாமையில்தான் உழன்று கொண்டுள்ளோம்.

அன்று மெய்ஞானிகள் கண்டுணர்ந்ததை வைத்து, இன்று விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். ஆனாலும், மெய்ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வுகளில் ஆயிரத்தில் ஒரு மடங்கு கூட, விஞ்ஞானிகள் காணவில்லை.

உணர்வின் இயக்கமாக இயந்திரத்தை இயக்கக் கற்றுக் கொண்டான் விஞ்ஞானி, தான் இந்த உடலுக்குப் பின் என்ன ஆவோம்? என்று காண முயற்சிக்கக் கூட இல்லை.


இதுதான் இன்றைய மனிதர்களின் உண்மையின் நிலைகள்.

May 28, 2013

மெய் ஞானிகள் கண்டுணரும் வழியை ஈஸ்வரபட்டர் காட்டினார்

நமது குருநாதர் தாம் பெற்ற சக்தியின் துணை கொண்டு, அவர் உபதேசிக்கும் உணர்வுகள் சொல்லாக வந்தாலும், எமக்குள் பதிவானபின், அதனின் உணர்வின் நிலையாக அறியும் பருவத்தை எமக்குள் ஏற்படுத்தினார். உணர்வின் தன்மைகள் கவர்ந்திருப்பதைக் காட்சிகளாகக் காணும்படிச் செய்தார்.

அதாவது, இன்று ஒரு T.V.ஐ ஒரு அலைவரிசையில் வைத்தால், அந்த அலைவரிசையில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை இங்கே படமாகக் காண்பிக்கின்றது. இதைப் போன்று,
எக்காலத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடந்தது என்ற நிலையை
படக் காட்சிகளாக எமக்குக் காண்பித்தார்.

இன்று, விஞ்ஞான அறிவு கொண்டு, ஆதியில் மனிதன் வாழ்ந்ததையும் அவன் உடலில் விளைந்த உணர்வுகளையும் அவன் ஒரு மிருகம் போன்று, நடமாடிய இடங்களையும், அதன் உணர்வுகள் பதிவானதை கம்ப்யூட்டர் சாதனத்தின் துணை கொண்டு கண்டறிந்து, எலக்ட்ரானிக்காக மாற்றி பதிவாக்குகின்றார்கள்.

இதைப் போன்று இன்னொரு பக்கம், அக்காலத்தில் வாழ்ந்த மிருகங்களின் நிலைகள் எவ்வாறு? அதனுடைய குணம், பலம், என்ன என்பதை, அதனுடைய தொடர் வரிசையில் எலெக்ட்ரானிக்காக மாற்றி, பட வரிசையாகப் பதியும்படிச் செய்கின்றனர்.

மற்றும் அந்த மிருகங்கள் வாழ்ந்த காலத்தில் உணர்வின் இயக்கங்களை அறிந்து, அக்காலங்களில் வாழ்ந்த பகுதிகளில் உள்ளபடி பூமியினைத் தோன்டுகின்றனர்.

முன் காலத்தில் வாழ்ந்த வலுக்கொண்ட மிருகங்களின் எலும்புக் கூடுகள், வலுவாக இருக்கக் காரணம் என்ன? என்பது போன்ற நிலைகளை, விஞ்ஞானத்தின் மூலம் அறிந்து கொள்கின்றனர்.

அதைச் சேமித்து,
எலெக்ட்ரிக், எலக்ட்ரானிக் என்ற முறைப்படுத்தி,
கம்ப்யூட்டர்களில் அலை வரிசைப்படுத்தி,
அதனுடைய வாழ்க்கையின் தரத்தையும்
அதனுடைய ரூபத்தையும் கண்டுணர்கின்றனர் விஞ்ஞானிகள்.
 
இதனின் உண்மைகளை நமது குருநாதர் எமக்குத் தெளிவாக உணர்த்தினார். மலைப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, ஒவ்வொன்றின் தன்மைகளையும் காண்பித்து, ஒவ்வொன்றின் உண்மையின் தன்மைகளை அறியும்படிச் செய்தார் குருநாதர்.

இன்று, விஞ்ஞான உலகில் வாழ்ந்தாலும், மனித உறுப்புக்களை மாற்றி அமைத்து மனிதனைக் காத்தாலும், இந்த உடலில் எந்த உணர்வை வளர்த்துக் கொண்டோமோ அதன்வழி கொண்டுதான் இந்த உயிர் உடலைவிட்டுப் பிரிந்து சென்றபின், இன்னொரு உடலைப் பெறுகின்றது. இதை விஞ்ஞானத்தால் தடுக்க முடியவில்லை.

ஆகவே, நீங்கள் அனைவரும் யாம் உபதேசிக்கும் இந்த மெய் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கி, அதன் வழியில் வளர்த்துக் கொண்டால், எமக்கு குருநாதர் காட்டிய அனைத்து நிலைகளையும் நீங்கள் நிச்சயம் காண முடியும்.


இந்த உடலுக்குப் பின், ஈஸ்வராய குருதேவரின் ஈர்ப்பு வட்டத்தில் இணையலாம். அழியா ஒளிச் சரீரம் பெறலாம். எமது அருளாசிகள்.

May 27, 2013

இறந்தவர்களை நாம் எப்படி விண் செலுத்துவது...? என்று பழக்கப்படுத்தினார் ஈஸ்வரபட்டர்

1. தன் ஆன்மாவை ஒளிப்படுத்தும் மார்க்கத்தைக் காட்டினார், ஈஸ்வராய குருதேவர்
அகஸ்தியன் தன் உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து, ஒளி நட்சத்திரங்களின் தன்மை, உயிரை ஒளியாக மாற்றி முதலில் சென்றவன் துருவனாகி, துருவ நட்சத்திரமானான். அதன்பின், இன்னொரு உடலுக்குள் போகாதபடி வந்தது.

நம் குருநாதர் ஈஸ்வராய குருதேவர் கூட, உடல் விட்டு உடல் தாவி வந்தவர்தான். கூடு விட்டு கூடு பாய்ந்து,
முதலில் அபிராமி பட்டராக இருந்தார்.
இப்பொழுது இங்கே, ஈஸ்வரபட்டராக இருக்கிறார். இதைப்போல,
ஏனைய இன்னும் ஒரு ஐந்தாறு உடல்கள் எடுத்து வந்தவர்தான்.

இந்த உடலுக்கும் சேர்த்து, திலேயும் பைத்தியக்காரராகத்தான் இருக்கிறார். திலேயும் பைத்தியக்காரர்தான். ஆனால், தன்னுடைய காரியம் எதுவோ, அதைச் சாதித்து வந்தவர் நமது குருநாதர்.

இந்த உடலில் மாற்றங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது? என்கின்ற வகையில் அதை எண்ணித்தான், இனி இந்த உடலில் கடைசியாக தான் சேமித்த பிற்பாடுதான், சில ரகசியங்களைச் சொல்லி, எப்படி எடுக்க வேண்டும் என்பதை எமக்குச் சொன்னார்.

அதைச் சொல்லி, அவர் உடலை விட்டுச் சென்ற பிற்பாடு, அந்த ஆன்மாவை எப்படி ஒளியாக வேண்டும் என்று, அதற்குண்டான மார்க்கத்தைக் காட்டினார். ஏனென்றால், எதுவும் உந்துவிசை வேண்டுமல்லவா. அந்த மார்க்கங்களைக் கொடுத்தார்
2. ஆயிரம் வருடம் தவமிருந்த ஆன்மாவை, விண் செலுத்தச் செய்தார் குருநாதர்
ஆக, அவர் விண்சென்ற பிற்பாடுதான் மற்றவர்களை நாம் செலுத்துகின்றோம். அவரை விண்செலுத்துவதற்கு முதலில், ஆயிரம் வருடம்  தவமிருந்த ஆன்மாவை விண் செலுத்தும்படி செய்தார்.

இமயமலைக்குப் போய், ஹரித்வாரில் ஓம்.. ஓம்..” என்று ஆயிரம் வருடம் ஓம் நமச்சிவாய., ஓம் நமச்சிவாய என்று தவமிருந்த ஒரு ஆன்மா இந்தச் சிறைக்குள் (உடலுக்குள்ளே) அடைப்பட்டிருந்தது.

அந்த நிலையில், தையே ஜெபமாக எடுக்கிறவர்கள் அந்த உணர்வுடன் சேர்த்து, அவர்கள் ஆயிரம் வருடம் வாழ்ந்தவர்கள். இனியும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

அப்பொழுது, அவர்களுக்கு இந்த விண் செல்லும் மார்க்கத்தைக் காட்டி,
என்னை அங்கே இருக்கச் செய்து
வெள்ளத்தை வரவழைக்கச்செய்து, அதைக் கடக்கச் செய்து,
அந்த சப்தத்தை எதிரொலியாக்கி,
மீண்டும் அந்த எண்ணத்தை அவர்களுக்குச் சொல்லப்படும் போது,
சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய
குருநாதர் எம்மைச் செயல்படுத்தினார்.

ஏனென்றால், ந்த சப்தரிஷி மண்டலத்தின் சக்தியைப் பெறவேண்டும் என்கின்ற உணர்வு அவர்களுக்குத் தெரியாது.
அன்றைக்கு ரு அரசனாக இருந்தவன், இந்த நிலையைப் பெற்றவன், இங்கே அடைபட்டிருக்கின்றான் இதற்கு, நீ ஏதாவது செய்து கலைத்துவிட்டாய் என்றால், அவன் உன்னை நினைத்தானென்றால், உன்னைச் சுட்டுப் பொசுக்கக்கூடிய சக்தி இருக்கின்றது.
ஆகவே, இந்த சப்தரிஷி மண்டல ஒளிகளை எடுத்து,
அந்த விண்ணுலகை எடுத்துக் காட்டு என்றார் குருநாதர்.

வ்வாறு செய்தவுடன், அது வந்த பிற்பாடு இந்த ஆன்மா து கூட்டைவிட்டு வெளியில் வருகின்றது. அப்பொழுது, சப்தரிஷி மண்டல ஒளிகளை இணைக்கப்படும்போது, ந்த நட்சத்திர அலைகளை நுகரும் ஆற்றல் கொடுத்தவுடனேதான்,  இந்த ஆன்மா விண்ணுக்குச் செல்கின்றது

அப்போது, அந்த முகப்பின் உணர்வு வரப்படும்பொழுது, அது சப்தரிஷி மண்டலத்திற்குள் இணைகின்றது
3. உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களை எப்படி விண் செலுத்துவது? என்று பழக்கப்படுத்தினார் குருநாதர்
அதுதான், நமது குருநாதர் முதலில் எமக்கு அந்த பழக்கத்தைக் கொடுத்து, அடுத்து மற்ற ஆன்மாக்களை எப்படி விண் செலுத்துவது என்று சொன்ன பிறகு, இப்பொழுது, நாம் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அதைச் செய்கிறோம். சொல்வது அர்த்தமாகின்றதல்லவா.

இல்லையென்றால், அந்த வழி தெரியவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்? சும்மா சொல்லி, வறட்டுத்தனமாகச் சப்தம் போட்டுக் கொண்டு இருப்பதில் பியோஜனம் இல்லை.

குருநாதர் அதற்கப்புறம்தான், அந்த வழியில் என்ன செய்தார். இப்பொழுது நான் இருக்கின்றேன். இந்த உடலை மாற்றி, இதற்கு சரியான நேரத்திற்குத் தேட முடியவில்லை.

நீ இன்னென்னது செய்ய வேண்டும், இப்படி, இப்படிச் செய்ய வேண்டும் என்று எம்மைப் பக்குவப்படுத்தி, அவருடைய ஆன்மா உடலை விட்டுப் போகும் போது, அதற்கு என்ன செய்யவேண்டும்? என்றுதான் சில நிலைகளைச் செய்யச் சொன்னார்.. யாருக்கு?

அவரை (குருநாதரை) விண்செலுத்துவதற்கு, அதற்கே ஒரு துணை தேவைப்படுகின்றது. நேரடியாக எங்கேயும் போக முடியாது. உந்துவிசை வேண்டும்”.

அந்த சப்தரிஷி மண்டல முகப்பை எடுத்து, எண்ணத்தை திசை மாறாது கொண்டு போக வேண்டும். ஏதாவது திசைமாறிப் போனது என்றால் வான்வெளியிலே மிதந்துவிடும் அணுவின் தன்மை அடைந்தால், மற்ற கோளின் ஈர்ப்புக்குத்தான் போகும்.

ஆக, இதனுடன் சப்தரிஷி மண்டலத்துடன் இணையாது. இப்பொழுது இங்கிருந்து போய்விட்டது என்றால், மற்ற கோள்கள் அதாவது, சந்திரன் இருக்கிறதென்றால் அங்கே போகும். ஆனால், அங்கே வளர்ச்சியற்ற அணுவாகத்தான் இருக்கும்.
4. குரு இல்லாதபடி, எந்த நிலையும் இருக்க முடியாது
ஏனென்றால், இங்கே எடுத்துக்கொண்ட உணர்வின் தன்மையில், மீண்டும் அதைக் கடந்து செல்லக்கூடிய திறன் இருக்காது அதற்குள்ளே அடைபட்டுப்போகும். அதில் எத்தனையோ வகைகள், அவர் சொல்லித்தான்  இப்பொழுது, நாம் இதைச்செய்கின்றோம்.

அதுதான், குரு இல்லாதபடி எந்த நிலையும் இருக்க முடியாது, குருகாட்டிய அந்த நிலைகளை, நமக்குள் பதிவாக்கினால்தான், செல்ல முடியும்.

சும்மா அந்த கிணற்றுத்தவளை மாதிரி சுற்றிக்கொண்டு இருந்து, எடுப்பதென்றால் இது முடியாது. ஏனென்றால், எமக்கு இருபது வருடம் இந்த அனுபவத்தைக் கொடுத்துத்தான இதைப் பெறச் செய்கிறார்

அதனால்தான், உங்களுக்கு அடிக்கடி இந்த உணர்வுகளைப் பதியச் செய்து, பதியச் செய்து, நினைவுகளை அங்கே கொண்டுபோய், ஒவ்வொன்றாகக் கொண்டு வருகிறோம்.

அதற்கு, கணவன் மனைவி நீங்கள் இருவரும் இணைந்து, தியானத்தை இப்படி எடுத்தே ஆக வேண்டும். எதற்கு? உணர்வு வெளியில் போய்விட்டதென்றால், கருவை உருவாக்க வேண்டும்.

கையினால், காலையில் துருவ தியானத்தை எடுத்து, அந்த மகரிஷியின் அருள்சக்தி நான் பெறவேண்டும் என் உடல் முழுவதும் படரவேண்டும் தன் கணவனுக்கு இந்தச் சக்தி கிடைக்க வேண்டும், என்று மனைவி எண்ணவேண்டும்.

அதே போன்று, கணவன் தன் மனைவிக்கு கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். இந்த இரண்டு உணர்வும், ஒன்றாக்க வேண்டும். அதை நாம் உருவாக்கி, அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளைப் பெற்று, அந்த சப்தரிஷி மண்டலம் சென்றடையலாம்.
5. ஒவ்வொரு ஆன்மாவிலும், சப்தரிஷி மண்டல முகப்பை இணைக்க வேண்டும்
ஏனென்றால், இங்கே துருவ நட்சத்திரத்தில் இருக்க முடியாது. அதனுடைய வட்டப்பாதையில் தான் போய்ச் சேரமுடியும். அப்பொழுது அதற்குண்டான முகப்பை எடுத்து, இந்த உணர்வை எடுத்த பிற்பாடுதான் அங்கு போய்ச் சேரும்.

இப்பொழுது, ராக்கெட்டை இங்கே செய்தவுடனே,
கம்ப்யூட்டரில் அந்தப் படங்களை எடுக்கிறான்.
அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் சேர்த்துக் கொண்டபின்,
முகப்பில் வைக்கிறான்.
இந்த ராக்கெட்டில் விண்ணில் சேர்த்த பிற்பாடு, அந்த முகப்பைப் பார்த்து, அந்த ஈர்ப்புக்குத்தான் அங்கே கொண்டு போகும். அதில் கொஞ்சம் திசைமாறிப் போனதென்றால், எங்கேயாவது இழுத்துக் கொண்டு போய்விடும். எந்தெந்தக் கோள்களை எடுக்கின்றானோ, அந்த முகப்பை இதில் இணைக்க வேண்டும்.

அதே மாதிரித்தான், ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் அந்த சப்தரிஷி மண்டலங்களின் முகப்பை இணைக்கச் சொல்வது. ப்படி இணைக்காதபடி, அந்த இடம் போய்ச்சேர முடியாது.

விலகிப் போனதென்றால், எங்கேயோ போய்விடுவோம். நாம் நினைக்கின்றோம். ஆனால், இதில் கரணம் தப்பினால் மரணம்என்கிற மாதிரி, பல வித்தியாசமான நிலைகள் இருக்கின்றது.
6. எம்மைப் பழக்கப்படுத்தி, குருநாதரை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்தார்
அதனால்தான் ன்ன செய்கின்றோம்? இன்றைக்கு குரு போகிறார் என்றால், அவரை சரியான எல்லை வைத்து அனுப்புவதற்குத்தான், எம்மை இப்படிப் பழக்கப்படுத்தினார்.

ஏனென்றால், மற்றவர்கள் எல்லாம், இந்த உடல் ஆசைக்குத்தான் குருநாதரிடம் வந்தார்கள். வந்தவுடனே, அதைச் செய்வேன், பூனையைச் செய்வேன், யானையைச் செய்வேன், என்று சொல்லிக் கொண்டு, ஆசையில்தான் போனார்கள். அப்புறம், இவர்கள் எங்கே? அவர்களால், வரை விண் செலுத்த முடியாது

ஆனால், எம்மைச் சரியான முறையில் பக்குவப்படுத்தித்தான், தன்னை அதனுடன் இணைப்பதற்கு, நீ எதை எதைச் செய்ய வேண்டும்? என்று முதலில் அதை ஏற்றச் சொல்கிறார்.

அது சரியாக வந்த பிற்பாடுதான், உடலை விட்டே குருநாதர் பிரிகின்றார். ஆன்மா போகும் போது, இந்த உணர்வை வளர்த்தபின், இது எப்படி சரியான முகப்பில் கொண்டுபோய் இணைகின்றது. ஆக, இப்படி உதாரணம் தெரிந்து கொண்ட பிற்பாடுதான், அங்கே கொண்டு போகின்றார்

சொல்வது அர்த்தமாகின்றது அல்லவா? சரியாஇங்கே இருந்து, அந்த முகப்பு இல்லையென்றால் கொண்டுபோக முடியாது.
அப்புறம் உந்தி,
குருநாதருடைய ஆன்மாவை,
சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்த பிற்பாடுதான்,
அந்தச் சக்தியை யாம் அதிகமாகப் பெற முடிந்தது