ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 31, 2015

இந்த உடலுக்குப் பின் என்ன? வழி காட்ட சரியான குருவின் துணை தேவை

வேதனையின் உணர்வுகளை வலுவாக்கினால் நம் உடல் உறுப்புகள் எல்லாவற்றிலும் விஷம் கலந்துவிடுகிறது. இதன் தொடர் கொண்டு காற்றிலிருந்து விஷத்தை எடுத்து அடிக்கடி வேதனைப்படச் செய்கிறது.
உங்களிடத்தில் நோய்களை உருவாக்குகிறது.
வாழ்க்கையில் வெறுப்படையச் செய்கிறது.
மற்ற உயிரினங்களுக்கு விஷத்தை நீக்கத் தெரியாது.

நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று உங்களை அறியாது சேர்ந்த தீமைகளைத் துடைக்கவேண்டும், உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் விநாயகரை வைத்துள்ளார்கள்.
விநாயகர் சிலையை வடமேற்கே பார்க்கும்படி வைத்து
நம்மை வடகிழக்கு நோக்கி வணங்கும்படிச் செய்தார்கள் ஞானிகள்.

இவைகளை மனதில் வைத்து காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் கலந்து, எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நீங்கள் வலுவாக்கும்போது தீமைகள் உங்களுக்குள் வராது தடைப்படுகிறது.

நமக்குள் உள்ள கெட்ட அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது தடுக்கப்பட்டு தீய உணர்வுகள் நம் ஈர்ப்பு வட்டத்தைவிட்டு அப்புறப்படுத்தப்படுகின்றது. இதன் தொடர் கொண்டு நமக்குள் கெட்ட அணுக்கள் வளராது தடைப்படுகின்றது.

குருநாதர் எமக்குள் பதிவு செய்த உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். எமக்குப் போதுமான சக்தி இருக்கின்றது. அதைப் போல நீங்களும் பக்குவப்பட்டு மெய்வழியில் செல்லும் ஆற்றலைப் பெறவேண்டும்.

நீங்கள் உங்கள் வேதனைகளைச் சொல்லும்போது அந்த உணர்வுகள் உங்களிடம் வருகின்றது. அந்த வேதனை உணர்வுகள் உங்களைத் தாக்காமல் பாதுகாக்க வேண்டும்.

எம்மை குருநாதர் பாதுகாத்து வருவதைப் போன்று உங்களைப் பாதுகாத்து வரவேண்டும். எத்தனை ஆயிரம் பேர் வருகின்றார்களோ அத்தனை ஆயிரம் பேருக்கும் பாதுகாப்பு கொடுத்தே ஆகவேண்டும்.

உங்களிடம் இரண்டு பேர் வந்து “எங்களுக்கு அந்தக் கஷ்டம், இந்தக் கஷ்டம் என்றும், அவர்கள் எங்களை இப்படிப் பேசுகின்றார்கள்” என்று கூறினால் அதை நீங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

அப்பொழுது அந்த விஷ உணர்வுகள் உங்களுக்குள் வராது பாதுகாக்க வேண்டும். நீங்கள் ஆத்ம சுத்தி செய்து தீமையின் உணர்வுகள் வராது தடைப்படுத்திவிடவேண்டும்.
உங்களிடம் தங்கள் வேதனைகளைக் கூறியவர்களையும்
ஆத்ம சுத்தி செய்யச் சொல்லி
தீமைகளைத் துடைத்துக் கொள்ளச் செய்யவேண்டும்.

இது போன்று அருள் உணர்வுகளை உங்களுக்குள் வலுவாக்கிக் கொண்டீர்கள் என்றால் உங்களிடத்தில் தீமைகள் எதுவும் வராது.

தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் அதில் கலந்துள்ள செம்பும் பித்தளையும் ஆவியாகிவிடுகின்றது. இதுபோன்று அருள் உணர்வின் ஆற்றல் உங்களிடத்தில் அதிகமாகும்போது உங்களுக்குள் அறியாது சேர்ந்த தீமைகளையெல்லாம் மாற்றிவிடும்.

அது வரையிலும் குருவினுடைய உதவி உங்களுக்குத் தேவை. ஏனென்றால் உங்களைக் காக்கவேண்டிய பொறுப்பு எமக்கு அதிகமாக இருக்கின்றது.

எமக்கு எவ்வளவு நாள் குருநாதர் உதவியிருந்தாரோ அது போன்று குருவினுடைய தன்மை உங்களுக்குள் நீங்கள் வளர்க்க வளர்க்க அது உங்களைப் பாதுகாக்கும்.

எமது ஆசை என்ன?
ஒவ்வொரு உயிரும் கடவுள்.
ஒவ்வொரு உடலும் கோவில்.
மனிதராக உருவாக்கிய அரும்பெரும் சக்தி காக்கப்படவேண்டும்.
நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்
என்று எண்ணி யாம் செய்யும்போது
உங்களுக்குள் விளைவது எமக்கும் கிடைக்கின்றது, மற்றவர்களுக்கும் கிடைக்கின்றது.

நீங்கள் கவலைப்பட்டுச் சொல்லும்போது மற்றவர்களுக்கு வேதனையாகின்றது. நீங்கள் சந்தோஷமான சொல்களைச் சொல்லும்போது மற்றவர்களுக்குச் சந்தோஷமாகின்றது.

மற்றவர்கள் சொல்வது இந்த உடலுக்குத்தானே தவிர
இந்த உடலுக்குப் பின் என்ன?
என்று யாரும் சொல்லவில்லை.

நாம் இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை என்ற அழியா ஒளிச்சரீரம் பெறவேண்டும் என்பதைத்தான் விஜய தசமி என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

நீங்கள் அனைவரும் அந்த அழியா ஒளிச்சரீரம் பெறவேண்டும் என்பதற்காகத்தான் யாம் இத்தனை பாடுபடுகின்றோம். 

July 30, 2015

நல்ல குணங்களை நமக்குள் வளர்க்க ஞானிகள் அன்று செய்த நிலைகள

இந்தக் காலத்தில் தாயையே பேய் என்று பேசக்கூடிய நிலைகள் உள்ளன.

தாய் தன் பையனைப் பார்த்து, “நீ நல்ல பையனாக இரு, ஒழுக்கமானவனாக இரு” என்று கூறினால் “என்னை ஏன் நீ பெற்றாய்? நீ எனக்குச் சோறு போடு” என்று தாயையே பேசும் நிலை உருப்பெற்றுவிட்டது.

விஞ்ஞான அறிவால் குழந்தைகளின் உள்ளங்களில் வளர்ந்த நல்ல பண்புகள் சீர்கெட்டு விட்டன.

உலகில் என்னென்ன தவறுகள் நடக்கின்றனவோ அவை அனைத்தையும் படமாக்கி உலகம் முழுவதும் ஒளி பரப்புகிறார்கள். இதை நாம் அனைவரும் டி.வி. முன் அமர்ந்து காண்கிறோம்.

டி.வி.யில் தகாத செயல்களால் தண்டனை பெற்றார்கள் என்று காண்பிக்கப்பட்டாலும்
நம்மிடத்தில் பதிவாகும் உணர்வுகள்
விஞ்ஞான அறிவு கொண்டு
துரித நிலைகளில் திசை மாற்றுகின்றது.

டி.வி.யை எடுத்துக் கொண்டால் முதியவர்களுக்குக்கூடிய டி.வி.யை இயக்கத் தெரிவதில்லை. ஆனால், இரண்டு மூன்று வயதுக் குழந்தை டி.வி.யை இயக்கத் தெரிந்திருப்பது மட்டுமல்லாமல் கலர் சரியில்லை என்றால் அதனைச் சரி செய்யவும் டி.வி. குறைவாக இருக்கிறது என்றால் அதனை அதிகப்படுத்தவும் அறிந்து வைத்திருக்கின்றன.

ஏனென்றால், தாய் தான் கர்ப்பமாக இருக்கும்பொழுது டி.வி.யை உற்றுப் பார்த்து அந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கி அந்த உணர்வுகள் கருவில் விளைந்த பின் குழந்தை பிறந்து இந்த நிலைகளில் செயல்படுத்துகின்றான்.

அதே சமயத்தில் டி.வி.யில் தகாத செயல்களையும் அதர்ம நிலைகளையும் காண்பிக்கப்படும் பொழுது மணிக்கணக்கில் இங்கே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தச் சமயம் வீட்டில் திருடு போனால்கூட தெரிவதில்லை.

டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது யார் வேண்டுமானாலும் அங்கே புகுந்து எது வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். அந்த அளவுக்குக் கூர்மையாக டி.வி.யில் கவனத்தைச் செலுத்துகின்றனர்.

அந்தச் சமயம் படம் பார்த்ததின் உணர்வுகள் கருவில் வளரும் குழந்தையிடம் பதிவாகிவிடுகிறது. அதன்வழியில் உருவாக்கப்பட்டு அந்தக் குழந்தைகள் பிறக்கப்படும்போது “தாயே நீ என் என்னைப் பெற்றாய்?” என்று கேள்விகளைக் கேட்டும், நல்ல ஒழுக்கங்களைச் சொன்னாலும் அதைக் கேட்பது கிடையாது என்ற நிலைகளும் இருக்கின்றன.

ஏனென்றால், விஞ்ஞான அறிவு அந்த அளவுக்கு வளர்ச்சியைக் கொடுத்துள்ளது.

அன்று, மெய்ஞானிகள் சாதாரண மக்களும் தன் அறிவை எவ்வாறு பெறவேண்டும் என்று தெளிவாக்கினார்கள். அதாவது
சரஸ்வதி என்றால் யார்? லட்சுமி என்றால் யார்?
முருகன் என்றால் யார்? சிவன் என்றால் யார்? என்று உணர்த்தி
இந்த உடலில் நல் உணர்வுகளைப் பெறுவது எவ்வாறு என்று உருவங்கள் மூலம் காண்பித்துள்ளார்கள்.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அது நம்முள் வினையாகி அந்த உணர்வின் சத்து நமது உடலாகும்போது சிவமாகின்றது. இது சிவம்

வினை என்பது வித்து அதனின் உணர்வின் சத்து எப்படி வினையாக நம் முன் இயக்குகின்றது என்பதை நமக்குத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

மனிதரின் உடலினுள் மறைந்துள்ள நல்ல குணங்களைச் சிலையாக வடித்து அந்தக் குணஙகளின் சிறப்பைக் காவியமாகப் படைத்து உணர்வின் உண்மைகளை அறியும்படிச் செய்தார்கள்.

எழுத்து வடிவம் இல்லாத அக்காலங்களில் உருவம் அமைத்து
காவியங்களைச் செவிவழி பெறச் செய்து
இதனின் உணர்வுகளை மக்களிடத்தில் பதிவாக்கி
அவர்களிடம் நல்ல குணங்களை வளரும்படி செய்தார்கள்.

நல்லதைச் செய்தால் நல்ல அணுக்கள் நமக்குள் உருவாகும். நல்ல உடலை நாம் பெறுவோம். நல்லதைச் சொன்னால் கேட்போர் உணர்வுகளில் நல்ல உணர்ச்சிகளைத் தூண்டி நன்மை பயக்கும் நிலைகள் உருவாகும்.

July 28, 2015

உங்களுக்குச் சக்தி இருக்கிறதா.., இல்லையா...? என்று பாருங்கள்

உங்களுக்குள் இன்று மட்டுமல்ல என்றுமே இதற்கு முன்னால் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்கள் எவை இருப்பினும், "ஈஸ்வரா" என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் ங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

பின், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்; ங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் ங்கள் ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி பத்து நிமிடம் தியானிக்க வேண்டும். அந்தச் சுவாசத்தை உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள்.

ங்களை அறியாது சேர்ந்த சக்கரைச் சத்து நீங்க வேண்டும்
ங்களை அறியாது சேர்ந்த வாத நோய் நீங்க வேண்டும்
எங்களை அறியாது சேர்ந்த இரத்தக் கொதிப்பு நீங்க வேண்டும்
எங்களை அறியாது சேர்ந்த கேன்சர் நீங்க வேண்டும்
ங்களை அறியாது சேர்ந்த டி.பி நீங்க வேண்டும்
ங்களை அறியாது சேர்ந்த சரவாங்கி நோய் நீங்க வேண்டும்
என்ற இந்த உணர்வினை எடுத்து எண்ணத்தைச் செலுத்திப் பாருங்கள்,

உங்கள் எண்ணம் மாற்றியமைக்கின்றதா... இல்லையா? என்று பாருங்கள்.

சாமியை நீங்கள் நம்புகின்றீர்கள்; சாமியாரை நம்புகின்றீர்கள்; உங்கள் எண்ணத்திற்குள் உங்கள் உணர்விற்குள் இவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது. நீங்கள் ஏன் இதைச் செய்ய மாட்டேன் என்கின்றீர்கள்.

இப்படி சொல்லிக் கொண்டிருப்போம். அடுத்தாற்போல், "கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கின்றது" என்று சாமியிடம் வரம் கேட்கத்தான் வருகின்றீர்கள்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த அருள்வாக்கைப் பெறவேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும், ங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும், ங்கள் நோய் நீங்க வேண்டும்; நாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று இதைக் கேளுங்கள் என்று சொன்னால் யாரும் கேட்டதில்லை.
மாறாக எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது,
குடும்பத்தில் கஷ்டமாக இருக்கிறது என்று தான் சொல்கின்றீர்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அந்தச் சக்தியை வேண்டும் என்று கேட்டு வாங்கத் தெரியவில்லையே.

காசைக் கொடுத்துவிட்டு "சரணாகதித் தத்துவம்" என்று கஷ்டத்தையெல்லாம் சொல்லிவிட்டால் "அவன் பார்த்துக் கொள்வான்" என்று எண்ணும் அந்த எண்ணம் இன்றும் நம்மை விட்டு நீங்கவில்லையே.

இப்படிச் சொல்லும் பொழுது என்ன நடக்கின்றது?

சாமி நம்மைத்தானே எடுக்கச் சொல்கின்றார். இந்தச் சாமியிடம் சென்று என்ன பண்ணுவது? என்று எண்ணுகிறார்கள்.

ஜோசியக்கார சாமியாரிடம் சென்றால் பணம் வரும், எல்லாம் வரும், சொத்து வரும் என்று சொன்னால் அங்கே ஓடுவார்கள். அதற்கு இவ்வளவு காணிக்கை செய்ய வேண்டும்; இந்த யாகம் செய்ய வேண்டும் என்றால் அதற்காக காசைக் கொடுத்துவிட்டு அவர்கள் சொன்னதைக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இருந்த இடத்திலேயே நீங்கள் எதையும் பெறமுடியும்.
இருந்த இடத்திலேயே வலிமையைப் பெறமுடியும்.
இருந்த இடத்திலேயே அருள் சக்தி பெறமுடியும்.
இருந்த இடத்திலிருந்தே உங்கள் எண்ணத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.

ஆகவே உங்களை நம்புங்கள்;
உங்கள் உயிரை ஈசனாக மதியுங்கள்;
உங்கள் உடலை சிவமாக மதியுங்கள்;
உங்கள் கண்களைக் கண்ணனாக மதியுங்கள்.
உங்கள் எண்ணத்தைச் சீதாராமனாக எண்ணுங்கள்.

நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும்  வினையாக வித்தாக எண்ணுங்கள். எத்தனை கோடி எண்ணங்களை எண்ணுகின்றோமோ அவையெல்லாம் வித்து.

அவை அனைத்தும் அருள் ஞான வித்தாக நாம் ஊன்றும் பொழுது தீமைகளை அடக்கும் வல்லமை பெறுகின்றது. அதையே வினையாக்கி கணங்களுக்கு அதிபதியாக கணபதியாக்க வேண்டும்.

அவ்வாறு ஆக்கிவிட்டால் நமது ஆறாவது அறிவாக கார்த்திகேயனாக மாறுகின்றது.

அண்டம் - பிண்டத்திற்குள் இயக்கும் உணர்வின் ஆற்றலைத் தெளிவாக்கியது தான் "காவியம்". உணர்வின் தன்மையை காவியமாக்கிக் கருத்தினை நாம் நுகரும்படி செய்தார்கள் ஞானிகள்.

ஆனால் கோவிலுக்குள் நாம் சென்றாலும் கல்லைக் கடவுளாக்கிவிட்டோம். நமது மனதைக் கடவுளாக்கிவிட்டோம். ஏனென்றால்,
கல்லின் ரூபமாக நற்குணங்களை எடுக்கச் செய்கின்றார்கள்.
கல்லாக இருப்பது துவைதம்.
கனியாக இருப்பது துவைதம்.
மலராக இருப்பது துவைதம்.
சுடராகத் தெரிவதும் துவைதம்.

நாம் பார்ப்பது துவைதம். அதனுடைய நிலைகளை எண்ணி எடுப்பது அத்வைதம், நாம் நுகர்ந்தறிவது விசிஷ்டாத்வைதம், அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குவது,

அந்த உணர்வின் சக்தியாக நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும் மீண்டும் துவைதம். அதாவது "உயர்ந்த குணங்களை உன் உடலாக்கு" என்று தான் ஆலயத்தின் பண்பு.
அதை நாம் விடுத்து, நம்மை அறியாமலேயே நமக்குள் பக்தி, நம்பிக்கையில்லாத பக்தியாக இருக்கின்றது.

அருள் ஞான பக்தியுடன் வாருங்கள். நீங்கள் பார்ப்பவர்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெற எண்ணுங்கள்.

ஆலயங்களில் காட்டப்பட்டுள்ள நிலைகளில் அருள் ஒளியால் நமக்குள் இருளை அகற்றிடும் சக்தி பெறுகிறோம். நாம் ஒளியின் சரீரமா மாறும் திறன் கிடைக்கின்றது.

July 27, 2015

மந்திர ஒலிகளில் நாம் சிக்கி விடக்கூடாது...!

அன்று ஆண்ட அரசர்கள் ஞானிகள் கொடுத்த பேருண்மையின் தன்மைகளைத் தனக்கும் தனது ஆட்சிக்கும் உகந்த நிலையில் மாற்றியமைத்து மக்களை அடிமைப்படுத்தும் நிலைக்கு உருவாக்கினார்கள்.

தெருவில் ஒரு போக்கிரி இருக்கிறான் என்றால் பிறருடைய கையில் ஏதாவது பொருள் இருப்பதைப் பார்த்துவிட்டு அதைத் தரும்படி அவன் கேட்டு,
இல்லை.., என்று சொன்னால் உதைக்க ஆரம்பித்துவிடுவான்.
இந்தப் போக்கிரிகளைப் போன்றவர்கள்தான் அரசர்கள்.

அந்தப் போக்கிரி வரிசையில்தான் அரசர்கள் உருவாகி அதன் கீழ் மக்களை அடிமைப்படுத்தி ஞானிகள் கொடுத்த தத்துவத்தை, சாஸ்திரங்களை, வேதங்களை தங்களுக்குகந்த வகையில் மாற்றியமைத்து, குல தெய்வங்களாக்கப்பட்டு இவர்கள் இது இது செய்தால் இந்த நிலை வரும் என்று சட்டங்களை உருவாக்கி அதை மக்களிடத்தில் பதிவாக்கினார்கள்.

உதாரணமாக காளியின் தன்மையோ கோபமானது. எவராவது ஒருவர் தவறு செய்தால் அந்தக் காளி கோவிலுக்குச் சென்று காளிக்குரிய மந்திரத்தை உச்சரித்தால் அந்த உணர்வின் தன்மை கொண்டு எதிரியை வீழ்த்த முடியும், எதிரிகளின் அங்கங்களை முடக்க முடியும் என்று மந்திரங்கள் கூறுகின்றது.

இது அதர்வண வேதத்தில் கடைப்பிடிக்கும் முறைகள்.

காளியை வேண்டி யாகங்கள் செய்யும்போது  ஆடுகளையும், பிற உயிர் பிராணிகளையும் யாகத் தீயில் போடுவார்கள். அப்பொழுது அதற்குகந்த மந்திரங்களையும் சொல்வார்கள்.

கேட்டுணரும் மந்திரங்களின் உணர்வுகளையும், மற்ற உயிரின்ங்களின் உணர்வுகளையும் உற்றுக் கவனிக்கும் பொழுது அதை நாம் நுகர்கின்றோம்.

ஒரு புலி மற்ற உயிரினங்களை இரக்கமற்றுக் கொல்வதைப் போன்று தான் தன்னுடைய எதிரிகளை வீழ்த்திடவும், தனக்குள் வலு சேர்க்கவும், இரக்கம்ற்ற செயல்களைச் செய்யும் உணர்வினை உருவாக்கத்தான் அரசர்கள் காளி என்ற நிலை கொண்டு யாகங்களை உருவாக்கி அதில் அனைவரையும் அமரச் செய்து மந்திரங்களை ஓதுகின்றனர். நமக்குள் அது பதிவாகிறது.

இந்த உணர்வின் தன்மைகளை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது உணர்வின் வேகங்கள் நமக்குள் பதிவாகி அது நமக்குள் இருக்கும் சாந்த குணங்கள் அனைத்தையும் அடக்குகின்றது.
வீரிய உணர்வுகள் தூண்டப்படுகிறது.
அப்பொழுது அதற்குண்டான இசையும் இசைக்கப்படுகின்றது.

காளிக்குத் தகுந்த நிலை கொண்டு அதிர்ச்சி தரும் வாத்ய இசைகளை இசைப்பார்கள். அந்த இசையும் நமக்குள் பதிவு உண்டு. இப்படி உருவாக்கப்பட்ட நிலைகள் கொண்டுதான் நாம் பக்தியுடன் அங்கே செல்கிறோம்.

நமக்குத் துன்பம் நேரிடும்போது காளியிடம் வேண்டினால் நமக்கு வேண்டிய பாதுகாப்புத் தருவாள் என்றும் தன்னை நியாயப்படுத்தி அதன் உணர்வின் துணை கொண்டு மற்றொருவர் தீங்கு செய்வதாக எண்ணி “காளி அழித்துவிடுவாள் அவனை” என்ற இந்த உணர்வுகள் நமக்குள் வளர்க்கப்படுகிறது.

இப்படி யாகங்களை வளர்த்து இந்த உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொண்டபின் நம் உடலை விட்டு உயிராத்மா பிரிந்தால், அந்த உயிராத்மாவில் எந்தெந்த இசையின் தன்மைகள் பதிவாகியுள்ளதோ, அந்தந்த இசைகளை வாசித்து அந்தந்த மந்திரங்களைச் சொல்லி உயிரான்மாவை வசியம் செய்து கைவல்யப்படுத்துகிறார்கள்.

பின், அந்த உயிராத்மாக்களைத் தங்களுக்குகந்தவாறு செயலாக்கங்களைச் செய்யும்படியாகப் பயன்படுத்துகின்றார்கள். மந்திர ஒலிகளை வைத்து மனிதன்பால் பாய்ச்சப்பட்டு வெறி கொண்ட நிலையில் எதிரிகளை வீழ்த்தும் நிலைக்குச் செல்கிறார்கள். அதற்குத்தான் மதுபானங்கள்.

நீங்கள் எந்த யாகத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த யாகத்தில் சோமபானம் என்ற நிலைகளில் அதனை ஊற்றுவார்கள். தெய்வங்களுக்கு இந்தெந்த நிறத்தில் ஆடை என்று அந்த ஆடைகளையும் யாகத்தீயில் போடுவார்கள்.

இன்று டி.வி.க்களில் மனிதர்கள் வேடமிட்டு நடிக்கும்போது அதைப் படமாக்கி இயந்திரத்தின் துணை கொண்டு காற்றில் பரவச் செய்கின்றனர். மற்றொரு இடத்தில் டி.வி.யை அந்த அலைவரிசைக்குத் திருப்பும்போது அதனின் காட்சியை நேரடியாக அதிலே காண்கிறோம்.

இதே போன்றுதான் ஆலயங்களில் வேடமிட்டு அந்த உணர்வினைக் கண் கொண்டு பார்க்கப்படும்போது சூரியனின் காந்தப்புலனறிவால் அதை அலைகளாக மாற்றி பூமிக்குள் பரவுவதை நம் கண்ணின் காந்தப்புலனறிவு கவர்கின்றது.
கவர்ந்து அதை நுகரச் செய்கிறது.
அதன் உணர்வு கொண்டு நம்மை இயக்குகின்றது.

இத்தகையை தன்மை உலகிலுள்ள எல்லா மதங்களிலும் உண்டு. மந்திரமில்லாத மதமும் இல்லை. மந்திரத்தைக் கேட்காத மனிதனும் இல்லை.

மந்திரங்களால் மதச் சட்டங்களை இயற்றி ஒழுங்குமுறைகளை ஏற்படுத்தி இதுவே கடவுள் என்ற நிலைகளை மனிதரிடத்தில் உருவாக்கிவிட்டார்கள்.
ஆக, ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களை
அரசர்கள் தங்களுக்குகந்தவாறு மாற்றியமைத்து
அவர்களுக்குகந்த கடவுளாக எடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

இப்படி உருவாக்கிய அரசன் இறந்துவிட்டால் அவனுடைய மகன் ஆட்சிக்கு வந்து தனக்கென்று ஒரு கடவுளை உருவாக்கி தந்தை செய்தது சரியில்லை, இதுதான் சரி என்று மாற்றி மாற்றி மதச் சட்டங்கள் மாற்றப்பட்டு பல்வேறு இனங்களாக மனிதர்களைப் பிரித்துவிட்டார்கள்.

ஆகவே, நாம் இனிமேல் மந்திர ஒலிகளில் சிக்காது மகரிஷிகளும் ஞானிகளும் நமக்கு வகுத்துத் தந்த மெய்ஞான வழியில் நமது எண்ணங்களைச் செலுத்துவோம்.

சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து என்றும் தெளிந்த மனதுடன் மகிழ்ந்திடும் நிலையாக உணர்வினை வளர்த்து பிறவா நிலை எனும் பெருவீடு பெறும் நிலையாக நம் உணர்வுகளை வளர்ப்போம்.

மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் நீங்கள் எல்லோரும் பெற்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்திட எமது அருளாசிகள்.

July 25, 2015

நாம் ஏழாவது நிலை பெறுவதற்கு சாப்பாடு கொடுப்பது துருவ நட்சத்திரம்தான்

ஒரு வித்து மண்ணில் புதையுண்ட ஓரிரு நாட்களில் முளைவிட்டுச் செடியாக வெளிப்படும்போது நம்மால் அது என்ன செடி என்று அடையாளம் காண முடிவதில்லை.

முன்பே அந்தச் செடி வளரும்போது பார்த்திருந்தால் தெரிந்து கொள்கிறோம். அல்லது ஓரளவு செடி வளர்ச்சியடைந்த பின்பு அது என்ன செடி என்று தெரிந்துகொள்கிறோம்.

இது போன்று நம் உடலிலுள்ள அணுக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அருள் ஒளியின் அணுக்களாக மாற்றிக் கொண்டே வருகிறோம்.

அந்த அருள் ஒளியின் சுடராக உங்கள் உடலிலுள்ள அணுக்களை மாற்றுவதற்குத்தான் யாம் இத்தனை வேலைகளைச் செய்கிறோம்.

உபதேசத்தின் மூலமாக  துருவ நட்சத்திரத்தைப் பற்றித் திரும்பத் திரும்பச் சொல்லிப் பதிவாக்கிக் கொண்டிருக்கிறோம். உங்களுடைய வாழ்க்கையில் எத்தகைய நிலை வந்தாலும் நிவர்த்திக்கக்கூடிய சக்தியை யாம் உங்களுக்குக் கொடுத்துள்ளோம்.

ஆனால், நீங்கள் “முடியவில்லை..,” என்ற உணர்வைச் செலுத்தினீர்கள் என்றால் உங்களுடைய முயற்சி தடைப்படும். உங்களுடைய வாழ்க்கையில் தடைகளாக இருப்பவைகளை நீக்க வேண்டும்.

ஒவ்வொரு காரியத்தையும் ஜெயிக்க வேண்டும் என்று முயற்சி செய்யும்போது சில கஷ்ட நஷ்டங்கள் வரலாம். இதனால் வேதனை உணர்வுகளை எடுப்பதை விடுத்து அடுத்து நாம் என்ன செய்யவேண்டும்? என்ற எண்ணத்துடன் துருவ நட்சத்திரத்தின்பால் நினைவைச் செலுத்தவேண்டும்.
துருவ நட்சத்திரத்தை எண்ணும்போது
தீமைகளிலிருந்து விடுபடுவதற்குண்டான ஞானம் வரும்.

சூரியன் கோள்களுக்கு, பூமிக்குத் தேவையான ஆகாரத்தைக் கொடுக்கின்றது. பூமியில் உள்ள உயிரினங்கள் பூமியில் விளைந்த உணர்வை எடுத்து வளர்கின்றது.

ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக ஆக்கியது துருவ நட்சத்திரம். துருவ நட்சத்திரம் ஒளியின் நிலை பெற்றது.

நாம் ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலை பெறும் உணர்வை வளர்க்கும்போது நமக்குச் சாப்பாடு கொடுப்பது துருவ நட்சத்திரம்தான்.

ஏனென்றால், துருவ நட்சத்திரம் விஷத்தை ஒளியாக மாற்றுகின்றது. நாகம் விஷத்தை அடக்கி நாகரத்தினமாக ஒளியாக மாற்றியமைக்கிறது.

அதைப் போன்று நாம் உயிரின் உணர்வு போன்று ஒளியின் உணர்வை எடுத்து நம்முள் உள்ள அனைத்து அணுக்களையும் ஒளியாக மாற்றியமைக்கிறோம்.
இப்படி ஒளியாக மாற்றியமைக்கும்போது
நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைகின்றோம்.

நமது தியானங்களில் என்ன செய்கிறோம்? துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின்  உணர்வுகளை நம் உடலிலுள்ள இரத்தநாளங்கள், எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், தசை மண்டலம் என்று எல்லா உறுப்புகளிலும் இணைக்கின்றோம்.

இப்படி உடல் உறுப்புகளில் இணைத்து வலுவாக்கும்போது காற்றிலிருந்து அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை பிரித்துத் தனக்குள் எடுத்துக் கொள்கிறது.