ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 30, 2020

நஞ்சு சாகாக்கலை கொண்டது என்று சொல்வதன் பொருள் என்ன...?


பாம்பு ஒரு தவளையைக் கொத்தி அதிலே தன் விஷத்தைப் பாய்ச்சி விழுங்கி அதனை உணவாக உட்கொள்கின்றது.

இதே போன்று தான் வலுக்கொண்ட நிலைகள் கொண்டோர் பிறர் துன்பப்படுவதைக் கண்டு சிலர் ரசிப்பார்கள். யாரொருவர் பிறர் வேதனைப்படுவதைக் கண்டு ரசிக்கின்றார்களோ அது எல்லாம் பாம்பு நஞ்சைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை விழுங்குவது போன்றது தான்.

ஏனென்றால் நஞ்சின் தன்மை கொண்டு அதை விழுங்கி இருந்தாலும் நஞ்சு என்பது சாகாக்கலை கொண்டது.
1.அதாவது எதிலே எப்படிச் சென்றாலும் அந்த நஞ்சை வீழ்த்திட உங்களால் ஆகாது
2.எதனுடன் கலந்தாலும் நஞ்சின் தன்மை அது அடக்கும் சக்தியாகத் தான் வரும்.

உதாரணமாக ஒரு குடம் பாலுக்குள் ஒரு துளி விஷம் பட்டால் அதைப் பிரித்திட முடியாது.  அந்த ஒரு குடம் பாலையும் தன் இனத்தால் நஞ்சாக மாற்றி அதைச் சாகாக்கலையாக ஆக்கிவிடும். ஆனால் அதே சமயம்
1.நஞ்சு கலந்த அந்த ஒரு குடம் பாலுக்குள் பல ஆயிரம் குடம் பாலை விடும்போது
2.இதனின் சக்தி ஓங்கி நஞ்சின் தன்மை சிறுத்து அது ஆக்கச் சக்தியான வலுவை ஊட்டும்.

நோய்களை நீக்க மருந்தை உட்கொண்டாலும் அதற்குள் வீரியத் துடிப்பான நஞ்சைக் கலக்கித் தான் உங்களுக்குள் நோயினை நீக்கக் கொடுப்பார்கள்.

ஓர் உணர்வின் சக்தி கொண்டு நமக்குள் நோயாக ஆனாலும் அந்த நோயினை நீக்கிட அந்த மருந்துக்குள் நஞ்சினைப் பாய்ச்சி
1.நோயை எதிர்த்திடும் இந்த உணர்வின் மணத்தால்
2.நஞ்சு வீரிய உணர்வு கொண்டு செல்லும்போது “அது ஊடுருவி”
3.எங்கே வேதனை உணர்வு இருக்கின்றதோ அதனின் செயலை இந்த மணம் ஊடுருவி வேகமாகச் சென்று அதை அடக்கும்.

வைத்திய ரீதியிலே விஞ்ஞான அறிவு கொண்டாலும் இப்படித்தான் செயல்படுத்துகின்றார்கள்.

உதாரணமாக சர்க்கரை வியாதி அதிகமாக இருக்கின்றது என்றால் இன்சுலினை இஞ்செக்ஷன் செய்து அந்தச் சர்க்கரைச் சத்தை அடக்கிடும் உணர்வாகச் செய்வார்கள்.

சிறுகச் சிறுக இது ஒரு பழக்கமாக்கி விட்டால் இந்த இன்சுலின் இல்லையென்றால் அடுத்து நீங்கள் எந்த மருந்து போட்டாலும் அது ஆகாது.

பின்... நமக்குள் அது மாற்ற முடியாத நிலைகளும் ஒவ்வொரு நாளும் நரக வேதனையில் நமக்கு நாமே குத்திக் கொண்டு அதைக் குறைத்திடும் நிலைகள் வரும்.

முதலில் சிறுகச் சர்க்கரைச் சத்தாகத் தான் வரும். அதை அடக்க சிறிதளவு மருந்தைக் கொடுப்பார்கள். இதை உட்கொண்டாலும் சிறுகச் சிறுகச் சேர்க்க சர்க்கரை மருந்தின் அளவு கூடும்.

கடைசியில் முடியாத நிலைகளில் எல்லாம் சேர்ந்து நரம்புகள் தளர்ச்சி ஆகும். நாம் எடுக்கும் உணர்வின் நிலையில் சர்க்கரையை ஜீரணிக்க முடியாத நிலைகள் ஆகும்.

தளர்ச்சியானபின் இதனுடைய நிலைகள் துவண்டு விடும்.  இந்த நிலை வரும் போது தான் இன்சுலினை இஞ்செக்சனாகக் கொடுப்பார்கள்.

அதுவும்  நாளடைவில் கூடிக் கூடி வீரிய உணர்வு கொண்டு நம் உடலில் இரத்தத்தில் வரும் அசுத்தங்களை வடிகட்டும் கிட்னி... கல்லீரல் போன்ற உறுப்புகளைப் பாதிக்கும் தன்மை வருகின்றது

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

மனிதனாக நல்ல முறையில் வாழ வேண்டுமென்று தான் எல்லாம் செய்கின்றோம். இத்தகைய நோய் வந்த பின் நம்மிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு நோயின் வீரியத்தை மாற்றிக் கொள்கின்றோம்.

இருந்தாலும் உடலில் சேர்த்துக் கொண்ட நஞ்சின் தன்மை நமக்குள் சிறுகச் சிறுகச் சேர்ந்து விடுகின்றது.
1.நான் நல்லதைச் செய்தேன்... எனக்கு இப்படி வந்துவிட்டதே
2.இவ்வளவு செல்வத்தைச் சேர்த்தேன்... இப்படி ஆகிவிட்டதே என்ற நிலை வருகின்றது.

அதுமட்டுமல்ல.. உடல் மிகவும் நலிவடைந்து வரப்படும்போது நம்மிடம் கடன் வாங்கியன் பணத்தைச் சரியாகத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால்... அடப்பாவி...! என்று அவன் மேல் எண்ணத்தை பதிவு செய்து
1.நான் இவ்வளவு சிரமப்பட்டு கொண்டிருக்கின்றேன்..
2.எனக்குப் பணம் தரமாட்டேன் என்கின்றானே என்ற நிலையில் அவன் உணர்வை வளர்த்துக் கொண்டால்
3.இந்த உடலைவிட்டு சென்றபின் அவன் உடலுக்குள் நாம் செல்வதற்குத் தயாராகி விடுகின்றோம்.

இதே வேதனை உணர்வுகள் வீரியமாகி இந்த உடலை விட்டு நாம் அங்கே சென்றபின் அந்த உடலுக்குள் போனபின் இதே இன்சுலினை அங்கே குத்தும்படியாக அங்கேயும் இதே சர்க்கரை நோயாகி விடும்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு இந்த உடலுக்குப் பின் நம் நிலை என்ன...? என்று சிந்தித்து அதன் வழி மெய் ஞானிகள் காட்டிய அருள் வழி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

June 29, 2020

“மனித எண்ணத்தின் உணர்வின் உன்னத சக்தி” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


நம் சூரியக் குடும்பத்தின் மனித உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் ஜீவகாந்த ஒளித் தன்மையின் ரிஷி சக்தியைக் கொண்டு மண்டலக் கோள்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று ஓடுகின்றது.

நாற்பத்தி எட்டுக் கோள்களும் சூரியனை மையமாக வைத்துச் சுழன்று... ஒன்றொன்றின் சுழற்சி வளர்ப்பின் தொடர்பலையில் செயலின் சக்தியைச் செயலாக்கும் தன்மையில்தான் ரிஷி சக்திகளின் செயலே... செயல் கொள்கின்றது.

அந்த ரிஷி சக்திகளின் செயல்... சக்தி பெற மனித உணர்வின் எண்ண ஜீவ அலைத்தொடர் பிம்பமுடன் செயல்பட்டால்தான்... உணர்வின் எண்ணத்தைச் செலுத்தக்கூடிய... அந்த ஜீவகாந்த ஒளியைத் தன் செயலுக்கு உணவாகப் பெற்று இயங்கிட முடியும்.

நம் சூரியக் குடும்பத் தொடரைப் போன்றே பல ஆயிரம் சூரியக் குடும்பங்களும் “எண்ணத்தின் உணர்வைக் கொண்டுதான்” செயல் கொள்கின்றன.

பூமியில் உயிரணுக்களாய் ஜீவன் கொண்ட மனிதனல்லாத உயிரினங்கள் பல வளர்ந்து மடிந்தாலும் எல்லாமே பூமியில் வளர்ந்த இயற்கையில் தன் உணவை... உள்ளதை உண்டு மடிகின்றன.

தன் தேவைக்கொத்த உணவுகளைத் தானே உற்பத்தி செய்து உண்ணக் கூடிய நிலை மனிதனைத் தவிர மற்றெந்த ஜீவராசிகளுக்கும் இல்லை. தன் உடல் அமைப்புக்கு ஒத்த பாதுகாப்புடன் பிறவியில் வளர்ந்த நிலைதொட்டு அத்தொடரின் சுழற்சியுடனே இறந்து விடுகின்றது.

ஆனால் மனிதன் தன் உணர்வின் எண்ணத்தில் உடல் உபாதையை மாற்றி அமைக்கப் பல செயல்களுக்கு பக்குவத்தைச் செயல்படுத்திக் கொள்கின்றான்.

மனிதச் செயலின் ஞானத்தைக் கொண்டு... இவ் உடல் தேவையின் இன்பத்தைப் பெறப் பல நிலைகளை அறிந்து... அதன் தொடரில் செயலின் வழித் தொடரைச் செயற்கையில் செய்விக்கும் நிலை... “மனிதனுக்கு மட்டும் தான் உண்டு...”

தெய்வ சக்தியை உணரும் பக்குவமும்... செயலும் கொண்டு... அன்றைய சித்தர்கள் தன் ஞானத்தை இயற்கையின் சக்தியில் பல உண்மைகளை இந்த மனிதச் சரீரத்தில் எடுக்கக் கூடிய உயர் ஞானமாகப் பெற்று வளர்த்தார்க்ள்.

உடல் தேவையின் ஒன்றை மட்டும் குறிக்கோளாக வாழும் வழித் தொடரை...
1.ஆத்மாவின் உண்மை உயர்வை உணர்ந்து
2.ஆத்மாவை வளர்க்கக் கூடிய உயர் சக்தியைப் பெற வேண்டும்.

அதைப் பெற்றால் இவ் உடல் வாழ்க்கையில் பெறக்கூடிய இன்பத்தைக் காட்டிலும் நம் உயிர் ஆத்மாவின் உண்மைச் செயலை நாம் அறியக் கூடிய தன்மையில் ஆத்மாவில் பெறப்படும் இன்பத்தின் சூட்சுமத்தை உணரலாம்.

ஆகவே நம் எண்ணத்தை ரிஷிகளின் தொடர்புடன் செயல்படும் செயல் கொள்ளும் பக்குவத்திற்கு நம் உணர்வின் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்.

ஆனால் இன்றைய சமுதாய உணர்வு... செயற்கையின் பிடியில் உண்மை நிலையை அறியாத நிலையில் உள்ளதனால்
1.ஜீவனுடன் கூடிய பல ஆத்மாக்கள் பல இடங்களில் உடலுடன் சமாதி நிலை கொண்டு
2.மகரிஷிகளின் தொடர்புக்காகத் தன் உணர்வின் ஜீவனை அழியா நிலை கொண்டு செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

மனிதனுக்குள் உள்ள பகுத்தறியக்கூடிய உணர்வின் எண்ண ஞானத்தை உடலின் செயற்கை வாழ்க்கை இன்பத்திற்கு மட்டும் செயல்படாமல்
1.உயிராத்மாவின் உண்மை அறிந்து சகல மாமகரிஷிகளின் சக்தியை உணர்ந்து
2.இஜ்ஜீவ காந்த சரீரத்திலிருந்தே ஒளிகாந்த நிலையை பெறக்கூடிய பக்குவத்திற்கு
3.மெய் ஞானத்தின் சக்தி நிலையை உணர்ந்து செயல்படல் வேண்டும்.

June 28, 2020

நம் சித்தம் தெளிவாக வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


காட்சி:
அழகான தடாகத்தில் அன்னப்பட்சி நீரில் நீந்துவதைப் போன்றும்... படகில் மனிதர்கள் அமர்ந்து செல்வதைப் போன்றும் தெரிகின்றது.

விளக்கம்:
மனிதனுடைய ஞானம் “ஒன்றைப் பார்த்தவுடன்...” அதனைத் தன்னுடைய செயலுக்கு வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று சிந்தனையில் அதைச் செயலாக்குகின்றான்.

நீரில் மிதக்கக்கூடிய அன்னப்பட்சியின் நிலையைப் பார்த்துத் தானும் அதைப் போன்று செயல்படுத்திக் கொள்ளும் அமைப்பாக (படகை) உருவாக்குகின்றான்.
1.இப்படிப்பட்ட சிந்தனையின் செயலுக்கு வலுப்படுத்தும் மனிதர்கள்
2.வாழ்க்கைத் தொடரில் வெற்றி பெறுகின்றார்கள்.

ஆனால் கற்பனையில் எண்ணக்கூடிய மனிதர்களின் வாழ்க்கை
1.சஞ்சலம்... சோர்வு... பிணி... என்று
2.தன் ஞானத்தின் வலுவைத் தான் எண்ணிய கற்பனை உணர்வுடன்
3.வாழ்க்கையை ஒப்பிடும் சிந்தனையற்ற செயலாக்கம் இல்லாத நிலையினால் அவ்வாறு ஏற்பட்டு விடுகின்றது.

கற்பனையின் உணர்வில் தான் எண்ணியதை... கவுரவத்தின் உணர்வாகச் செயலாக்குபவன் வாழ்க்கையில் தான் முன்னேறுவதில்லை.

ஆக்கத்தின் ஆக்கமாய் உணர்வின் எண்ணத்தைச் சிந்தனையில் சீர்படுத்தும் மனிதனின் குணம்... வாழ்க்கையின் செயல்பாட்டில் வெற்றி காணும் நிலை ஏற்படுகிறது

ஒவ்வொரு பொருளிலுமே அப்பொருளின் மாற்றம் எப்படி ஏற்படுகின்றது...? அதனுடைய “உஷ்ண அலையின் மாறுபாடு நிலை... சமைப்புநிலை... ஏற்படும் தன்மை கொண்டுதான்...” ஒவ்வொரு கருவின் உருவும் வளர்கின்றது.

வளர்ச்சியில் வெளி கக்கும் கழிவு நிலை கொண்டு தான்... அதனின் சத்து நிலையை ஒவ்வொரு செயலிலும் அச்செயல் நிலையின் “உன்னத நிலை” உருவாகின்றது.

பூமியின் ஈர்ப்பில்... உயர்ந்த ஒவ்வொரு கனி வளங்களும் வளரக்கூடிய நிலையில் அவ்வளர்ச்சியின் உயர்ந்த தன்மையான உலோகங்களை நாம் பிரித்து எடுக்கின்றோம்

சாதாரணமாகத் தங்கப் படிவங்கள் வளர்ந்துள்ள மண்ணில் உள்ள தங்கப் பாளங்களை வெட்டி எடுத்து... அதைப் புடம் போட்டுத் தங்கமாக்குகின்றோம். இதைப் போன்றே பூமியில் உள்ள கனி வளங்களை நமக்கு வேண்டிய பக்குவத்திற்கு பல நிலைகளைச் செய்வித்துச் செயல்படுத்துகின்றோம்.

இதைப்போன்று இச்சரீரத்தின் உண்மை நிலையையும் நாம் உணரல் வேண்டும்.

நாம் எடுக்கக் கூடிய எண்ணத்தின் உணர்வின் உஷ்ண ஓட்டத்தால் நாசி எடுக்கும் சுவாசம் கொண்டு
1.நாசியில் (மூக்கில்) சளியும்
2.பார்க்கும் பார்வையின் ஒளி ஈர்ப்பைக் கொண்டு கண்ணெடுக்கும் ஒளி ஈர்ப்பால் கண்ணின் பீழையும்
3.செவி கேட்கும் ஒலி ஈர்ப்பால் காதில் அழுக்கும்
4.வாய் பேசும் ஒலி அலையால் வாயில் உமிழ் நீரும்
5;உண்ணும் உணவால் மலமும் சிறு நீரும்
6.பால் உணர்வின் உஷ்ண அலையின் தொடர்பால் பெண்ணிற்கு மாதவிடாயும் ஆணிற்கு விந்து நிலையும்
7.உடல் உறுப்பின் செயலில் வேர்வையும்
8.அந்தந்த உறுப்பின் அவயவங்களின் செயலுக்கொப்ப வெளிப்படும் கழிவுகள் நம் உடல் உறுப்பிலேயே செயல் கொள்கின்றதல்லவா...!

அதைப் போன்றே மனித வாழ்க்கையில் எண்ணத்தின் உணர்வில் மோதப் பெறும்... நடந்தது... நடக்க வேண்டியது... நடப்பது எதுவாகிலும்... உணர்வின் ஜீவித எண்ணமுடன் ஓடக் கூடிய எல்லாமே இவ்வுயிர் ஆத்மாவின் சரீர வாழ்க்கையில் எலும்பில் ஊனாகப் பதிந்து விடுகின்றது.

ஊன் நிலைக்கொப்பத்தான் ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளும்... இருக்கும்.

1.எதை அதிகமாக எடுத்து மனித உணர்வின் எண்ணம் பேசிச் செயல்படுகின்றதோ
2.அந்த நிலைக்கொப்ப ஊனின் பதிவு வினையாக வாழ்க்கையில் வெளிப்படுகின்றது.

கண் பார்த்துப் பொருளறியும் நிலையால் கண்ணில் எப்படிப் பீழை ஏற்படுகின்றதோ அதைப் போன்று
1.உணர்வெடுத்து நாம் பேசியது.. பேசப் போவது என்ற எண்ண உணர்வே ஊனாகி...
2.ஊனே வினையாகி... வினையே வாழ்க்கையாக... அந்த வாழும் நிலையை மாற்றுவது என்றால்
3.இச்சரீர உணர்வின் விதியால் மதி கொண்ட உயர் ஞானத்தால் மெய் ஞானம் பெறும் ஏழாம் நிலையில்
4.இது நாள் வரை இங்கே சொன்ன வழி முறைக்கொப்ப விண்ணிலிருந்து பெறும் மின் காந்த ஒளி சக்தியைக் கவர்ந்து
5.சரீர உணர்வுடன் இவ் ஊனில் பதிவாகி உள்ள பதிவு நிலையை மாற்றக்கூடிய அந்தச் செயல் தன்மைக்கு
6.ஐம்புலனின் செயலின் வீரியத்தைக் கண் காது மூக்கு வாய் உணர்வு என்ற
7.ஐம்புலனின் செயலையும் ஒரு நிலையாக்கி... மதி கொண்டு மெய் ஞானம் பெற வேண்டும்.

மெய் உணரும் உண்மையால் பரந்து கிடக்கின்ற இயற்கையில் உண்மையின் உணர்வைச் சித்தத்தின் செயலாகச் சீர்படுத்துதல் வேண்டும்.

கற்பனைக் கோலம்... கலங்கிடும் காலம்...
அனுபவ ஆற்றல்... ஆக்கத்தின் ஆக்கம்...!

சஞ்சலத்தில் சச்சரவை... சங்கடத்தில் சிக்கலின்றி சிந்தனையில் சீர்தூக்கினால்...
சிந்தைதனில் சீர்படுத்த... சிந்தையின் செயலே சீர்படும் சிகரமாகுமே...!

சாமி நன்றாகச் சொல்கிறார்...! என்று தான் நினைக்கின்றார்களே தவிர சாமி சொன்னதைச் செய்தால்... நன்றாக இருப்போம் என்ற நிலை வரவில்லை


“சாமி (ஞானகுரு) நேற்று சொன்னதைத்தான் சொல்கின்றார்...” என்று சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவார்கள்.

இப்போது நான் சொல்வது எல்லாம் புதிதாக இருக்கும். ஆனால் சொன்னதையும் சொல்லியிருக்கின்றேன் இடை இடையில் கொஞ்சம் கொஞ்சம் புது உணர்வும் கொடுத்திருக்கின்றேன்.

எல்லாவற்றையும் சொல்லி விட்டால்...
1.சாமி நன்றாகச் சொல்கின்றார்...! என்று இதைப் பாடமாக (போற்றும் நிலை) வைத்துக் கொள்வார்கள்
2.உபதேசிப்பதைத் தான் எடுக்க வேண்டிதை விட்டுவிடுவார்கள்.

அடுத்தாற் போல் யாம் பேச ஆரம்பிக்கும்போதே...
1.நேற்றே இதைச் சாமி சொன்னாரே... சரி சொல்லட்டும்...! என்று கூறி
2.இதை விட்டுவிட்டு... ஞாபகத்தை வேறு பக்கம் வைத்துவிடுவார்கள்.

இது தான் மனிதனுடைய இயற்கையினுடைய நிலைகள் நமக்குள் வருவது.

ஆகையினால் தான் எதையுமே எடுக்கும் பொழுது இந்த “ரசனை வரவேண்டும்...” என்பதற்காக இதை உணர்த்துகின்றோம். ஏனென்றால் நாம் அல்ல.

நமக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் ரசனைக்கு எடுக்கப்படும்போது... அது ஏங்கி அதை உணர்ந்து எடுக்கும்.

ஆனால் கொஞ்சம் ஈர்க்கும் தன்மை குறைந்துவிட்டது என்றால் நேற்று சாப்பிட்டது ருசி இல்லை... இன்றைக்குப் புதுப் புது ருசியாகத்தான் சாப்பிட வேண்டும் என்று அது இயக்கும். அதாவது புதிதாக இருந்தால் ருசியாக இருக்கும்.... அந்த உணர்வுகள் அதைத் தேடும்...!

1.ஏனென்றால் நமக்குள் எடுக்கக்கூடிய பல கோடி உணர்வுகள் ஒவ்வொன்றும் இப்படித் தூண்டச் செய்யும்.
2.அப்பொழுது நாம் எடுத்துக்கொண்ட உணர்விற்குத் தக்கவாறு தான் இது பெருகும்.

இதைப் போலத்தான் உங்கள் உடலிற்குள் எடுத்துக் கொண்ட உணர்விற்கு அந்த ஞானியர் உணர்வைப் புதிது புதிதாகச் சேர்க்கச் செய்து கொண்டே இருக்கின்றோம்.

ஒவ்வொரு காலத்திலும் உங்கள் உணர்வுகள் ஒவ்வொரு விதமாக அது உங்களுக்குள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.
1.வீட்டில் சங்கடமாக இருப்பீர்கள் அந்த நேரத்தில் இங்கே இதைக் கேட்க வந்திருப்பீர்கள்.
2.நண்பனிடத்தில் பாசமாக... உயர்ந்த குணங்கள் கொண்டு இருப்பீர்கள் அதிலே கொஞ்சம் நஞ்சு கலந்திருக்கும். நஞ்சு கலந்தபின் சுவை கெட்டுப்போகி இருக்கும். அந்தச் சமயத்தில் இதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

அந்த அருள் ஞானிகளின் உணர்வின் தன்மையைப் புகட்டியவுடனே அந்த ருசியின் தன்மையை மாற்றி உங்களுக்குள் சுவை கொண்டதாக மாற்றும்.

1.ஏனென்றால் சுவையற்றதாக ஆக்கும் அந்த உணர்வினை வென்றவன் ஞானி
2.அவனின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கப்படும்போது இணைக்கப்பட்டு
3.தீமையான உணர்வின் தன்மையை உங்களுக்குள் குறைக்கச் செய்யும்.

அதைக் குறைக்கச் செய்ய வேண்டும் என்பதற்குத்தான் மணிக்கணக்கில் உபதேசிப்பதும் அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதியச் செய்வதும்.

இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர்... எனக்கு முதுகு வலி... இடுப்பு வலி... என்னால் உட்கார முடியவில்லை...! என்ற நிலைகள் இருந்தாலும் இதைக் கேட்ட பின் அது குறைந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் கை கால் குடைச்சல் எல்லாம் குறைந்திருக்கும். கலக்கமாக இருப்பவருக்கும் ஓரளவுக்கு மன பலம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.

ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் பெற வேண்டுமென்பதற்குத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். ஒரு நிமிடத்தில் சொன்னால் “சாமி நன்றாகச் சொல்கின்றார்...!” என்கிறார்கள்.

ஆனால் மணிக்கணக்கில் சொன்னாலும் கூட...
1.என்னுடைய கஷ்டங்களெல்லாம் இவ்வாறு இருக்கின்றது அது எல்லாம் நிவர்த்தியாக வேண்டும்
2.மகரிஷிகளின் அருளால் எனக்குள் தெளிவாக வேண்டும் என்ற எண்ணத்தில் கேட்க மாட்டேன் என்கின்றீர்கள்.

என்ன செய்கின்றார்கள்...?

ஐயோ... நான் மூன்று வருடங்களாக நோயால் கஷ்டப்பட்டேன். அந்த டாக்டரிடம் சென்றேன்... இந்த டாக்டரிடம் சென்றேன்... எல்லாம் போகின்றேன்
1.என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கின்றது.
2.அதனால் தான் இங்கே வந்தேன் என்கிறார்கள்.

ஆக எதைக் கேட்கின்றார்கள்...? தொல்லை என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது என்று கேட்பதற்காகத்தான் இங்கே வருகின்றார்கள்.

எல்லா இடத்திற்கும் போனேன்... நடக்கவில்லை. ஆனால் அதெல்லாம் நீங்கி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். என்னை அறியாத இருள் நீங்க வேண்டும் என்று யாரும் கேட்பதில்லை.

எனக்கு ஒரே தலைவலி... எங்கள் குடும்பத்தில் தொடர்ந்து சிக்கல்... அதனால் ரொம்ப அவஸ்தைப்படுகின்றேன் என் பையன் சொன்னபடியே கேட்க மாட்டேன் என்கின்றான். கொடுத்த கடனைத் திரும்பக் கொடுக்க மாட்டேன் என்கின்றார்கள். போனால் சண்டைக்கு வந்துவிடுகின்றார்கள். இப்படித்தான் கேட்கிறார்கள்.

கடன் கொடுத்திருந்தால் அவர்களுக்கு நல்ல வருமானம் வரவேண்டும் என்னிடம் வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கேளுங்கள்... கேளுங்கள்...! என்று சொல்கின்றேன்.

எத்தனை முறை சொன்னாலும் அடுத்தாற்படி கேட்டுப் பாருங்கள் மீண்டும் கஷ்டத்தைத் தான் வந்து கேட்பார்கள்.

காரணம் நாம் அல்ல...! நமக்குள் விளைய வைத்த உணர்வுகள் அந்த நினைவலைகளை நமக்குள் ஈர்க்கின்றது. அதை மாற்ற முடியவில்லை.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்குத்தான் மணிக்கணக்காகப் பேசி
1.உங்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரவேண்டும்
2.அந்த மகிழ்ச்சியான நல்ல மூச்சலைகள் இங்கே படர வேண்டும்
3.அதன் மூலம் எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும்...! என்று சொல்கிறேன்.

June 27, 2020

ஏகாந்த சுகம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


இங்கே உணர்த்தப்படும் உண்மை மெய் ஞானத்தை... மனிதன் பெற வேண்டிய உண்மை சக்தியின் வளர்ச்சி நிலையை... ஒவ்வொருவரும் பெறல் வேண்டும்.

பூமியின் சுழற்சியும் பூமியின் வளர்ச்சியும் பூமியின் பல கோடி வளர்ப்பு நிலையில் ஜீவ பிம்பம் நிலை பெற்ற உணர்வுகளில் மனிதனுக்குக் காட்டப் பெற்ற உயர்வு சித்தம் என்பது அன்றிருந்த மனிதர்கள் சைவ சித்தாந்தத்தை மனிதர்களுக்கு உணர்த்தியது தான்...!

இயற்கையின் உண்மைகளை அறிய மனிதர்கள் உணர்வின் ஒட்டத்தில் ஜீவ வாழ்க்கைக்கு ஆறறிவின் முதிர்வை மெய் ஞானம் கொண்டு சித்தத்தை அறிய... சைவ சித்தாந்தத்தில் உண்மைகள் வடிக்கப் பெற்றது.

1.உயிரணுவின் உணர்வை உயர்த்தக்கூடிய ஒலி ஒளி நீரைக் கொண்டு
2.எடுக்கும் எண்ணத்திற்கு எண்ணம்தான் உணர்வாகி... உணர்வு தான் ஆத்மாவின் வலு என்பதனை உணர்ந்து
3.தெய்வ குணங்களை வணங்கும் எண்ணத்தை வழிகாட்டிய முறை நான்கு வேதங்களாய் பிரிக்கப்பட்டு
4.மந்திர ஒலிகள் ஜெபிக்கப்பட்டு மந்திர ஒலிகளுக்கு வலுவாக்க வேள்விகளை நடத்தி
5.அதிலிருந்தே மனிதனை மனிதனே உயர்த்தி... தாழ்த்தி... வழி வந்ததின் வழியினை
6.நாம் இன்று நம் சிந்தனையில் உணர்ந்திடல் வேண்டும்.

இன்றைய விஞ்ஞானத்தில் வளர்த்துக் கொண்ட முறைகள் எல்லாமே மனிதனுடைய தேவையின் அடிப்படையில் “உடலின் சுகத்திற்கே” முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த விஞ்ஞானத்தின் கதியால் மனித உணர்வு உயர்வு எங்கிருக்கின்றது...? என்பதை மனிதன் மெய் ஞானத்தில் உணரவில்லை.

அணு ஆயுதங்களும் இன்று விஞ்ஞானத்தில் சுகம் கொள்ளும் ஒலி ஒளி யாவையுமே இவ்வுடலின் தேவைக்குத்தான் உள்ளது. மனித விஞ்ஞானம்... மருத்துவம்... யாவையுமே உண்ண... உடுக்க... இருக்க... உடலின் தேவைக்கு சுகம் பெற வேண்டியதாகத் தான் உள்ளது.

1.ஆனால் மனித ஜீவ வாழ்க்கையில் மலர வேண்டிய...
2.மெய் ஞானத்தால் மனிதன் பெறக்கூடிய உண்மையை உணர்ந்தோமா...?

இந்த உடலுக்கு என்று சுகம் காண... மனித ஞானம் எல்லாமே விஞ்ஞானம் கண்டு... அதனால் விபரீத சுகமாக அல்லவா... இன்று நடக்கும் கலியில் சுகம் காணும் நிலை...!

உடல் வாழ்க்கை உள்ள வரைக்கும்... இன்ப வாழ்க்கை இனிது நடக்க... மனித உணர்வின் தேவை என்பது “செயற்கையிலேயே ஒன்றி விட்டது...” இயற்கையின் வித்தாக இருந்த உலகத்தை மாற்றும் வழியாகவே மாறி விட்டது இன்றைய நிலை.

எந்தச் சுகத்தைப் பெற மனித உணர்வின் வேகம் விஞ்ஞானத்தில் சென்றதோ... அவை எல்லாம் செயற்கையின் குறுகிய கால சுகம் தான்..!
1.மனித வாழ்க்கையில் உணர்வின் குணத்தைச் சமம் கொண்டு
2.மெய் ஞானத்தை உணரும் ஆத்ம பலம் பெறும் சுகம் ஒன்றே
3.ஏகாந்தத்தில் உணரும் ஏகாந்த சுகம்.

உயிர் பெற்ற ஜீவ ஆத்மாவின் முதிர்வு கொண்ட மனித உயர்வை... மெய் ஞானத்தால் மனிதனுக்கடுத்த தெய்வ குணங்களால்... தெய்வச் செயலைத் தன் சித்தத்தின் சித்தாக்கிக் கொண்டால் பிறப்பின் முதிர்வுக்கு அடுத்த நிலையான... “பறக்கும் நிலையை” மனிதன் என்றோ பெற்றிருக்கலாம்..!

மனிதனின் உணர்வில் இனிமையை ரசிக்க... இன்பமாய் இருக்க...வேண்டும் என்றால் அது... மெய் ஞானத்தின் சித்தத்தால் தான் பெற முடியும்.

1.இன்று செயற்கையில் காணும் நிலை யாவையுமே குறுகிய கால நிலை தான்
2.வழியறிந்து வளரும் நிலை “உண்மையின் சக்தி நிலை” பெறுவது ஆகும்...!

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோர் “சொற்பமாக இருக்கின்றீர்கள்...” என்று எண்ண வேண்டாம்...!


மனிதருக்குள் ஒருவருக்கு ஒருவர் பகைமையான உணர்வுகள் அலைகளாகப் படர்ந்திருப்பதை நிறுத்த... அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து.. அந்தப் பகைமையை நீக்க அகஸ்தியனால் கொடுக்கப்பட்டதே விநாயகர் சதுர்த்தி.

1.எனக்குள் வந்த பகைமையை நான் நீக்குவதும்
2.யாரை நான்  பகைமையான எண்ணினேனோ அவரும் இதே போல் பகைமை உணர்வை மறுப்பதும் தான் விநாயகர் சதூர்த்தி.

இப்படி ஏகோபித்த நிலைகள் கொண்டு மக்கள் அனைவரும் இந்த உலகம் முழுவதும் பகைமைகளை அகற்றிடும் சக்தியை எடுத்துத்  தொழுவார்கள் என்றால் பகைமை உணர்வு இங்கே முழுமையாக அழிக்கப்படுகின்றது.

பமையான உணர்வுகளை இங்கே ஈர்க்கும் சக்தி இழக்கப்படும் பொழுது அதன் இருப்பிடத்தை மாற்றி நகன்று சென்று கடலின் ஈர்ப்பிற்குள் சிக்கி அது மறைத்து விடும்.

அந்த அகஸ்தியன் காட்டிய இந்த நிலைகளைத் தான் தத்துவ ஞானியர் விநாயகர் சதூர்த்தி என்று காட்டினார்கள்.

அன்றைய நாள் ஏகோபித்த நிலைகள் கொண்டு அனைவருடைய எண்ணங்களும் பகைமை அகற்றிடும் நிலையாக தீமைகள் தமக்குள் புகாது தடுத்து நிறுத்தும் மார்க்கம் தான் விநாயகர் சதூர்த்தி.

இதைப் பின்பற்றுவோர் நீங்கள் “சொற்பமாக இருக்கின்றீர்கள்...” என்று எண்ண வேண்டாம்.
1.நீங்கள் எடுத்து வெளிவிடும் அந்த அருள் ஞானிகளின் மூச்சலையால்
2.விஞ்ஞான அறிவைப் பொசுக்கிடும் திறமை பெறுகின்றீர்கள்.

நான் (ஞானகுரு) சொல்வது எளிமையான நிலைகளில் இருக்கின்றது என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் யாம் பதிவாக்கும் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து அந்த வலிமையான எண்ணங்கள் கொண்டு அதைச் செயல்படுத்த முடியும்.

மகரிஷிகள் தோன்றிய நம் நாட்டிலே..
1.தென்னாட்டுடைய சிவனே போற்றி... எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி...! என்பது போல
2.அந்த அகஸ்தியன் உணர்வலைகளை நமக்குள் பெருக்கி
3.அவன் உணர்வின் துணை கொண்டு நம் நாட்டைக் காக்கலாம்
4.உலக மக்களைக் காக்கும் சக்தியும் நமக்கு உண்டு.

அத்தகைய ஆற்றலை நாம் பெற வேண்டும் என்றால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம்முடைய மூதாதையர் குலதெய்வங்களின் உயிராத்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்திடல் வேண்டும்.

அங்கே இணைத்து உடல் பெறும் உணர்வினைக் கருக்கி விட்டால் அதே உணர்வின் தன்மை நமக்குள் வரும் போது நஞ்சின் தன்மை கருக்கிடும் வல்லமையை நாமும் பெற முடியும்.

அதன் மூலம் நாம் எடுத்துக் கொண்ட மூச்சின் அலைகள் உலகம் எங்கும் பரவச் செய்யும் நிலைகள் வரும். இந்த உலகின் தீமைகளை அகற்றிடும் சக்தியாக அது செயல்படும்.

மெய் ஞானியான... அன்று பித்தனைப் போல் இருந்த மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அருளிய “அந்த உணர்வின் சக்தியை” எல்லோரும் பெற முடியும்.

ஒரு திட்டுவோரின் உணர்வை நமக்குள் பதிவு செய்து கொண்டால் அவரின் நினைவு வந்து நம்மை அடக்குவது போல அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை... தீமைகளை அகற்றிய அந்த உணர்வின் தன்மையை நீங்கள் நினைவு கொள்ளும்போது... தீமையை அகற்றும் சக்தியாகப் பெறுகின்றீர்கள்.

ஆகவே மறவாதீர்கள்... ஏதோ பேசுகின்றேன்...! என்ற நிலைகள் வேண்டாம். உங்களுடன் ஒன்றிப் பேசும் போது தான் அந்த ஞானிகளின் உணர்வின் நிலைகள் உங்களுக்குள் ஒன்றி வரும்.

உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மன பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி மத பேதமின்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற உணர்வை ஒவ்வொருவரும் பரவச் செய்யுங்கள். உலக மக்களை ஒன்று சேர்க்கும் நிலையாக அது உங்களால் முடியும்.

அதே போன்று துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர வேண்டும் நல்ல மழை நீர் பொழிய வேண்டும் என்று அந்த அருள் சக்திகளை மேகங்களில் கலக்கச் செய்தால் அந்த உணர்வின் தன்மை மழையாகப் பெய்யும்போது தாவர இனங்களில் இனம் புரியாத விஞ்ஞான அறிவால் தூவப்பட்ட நஞ்சின் தன்மைகளும் மறையும்.

இதற்கு முன் நம்மில் விளைய வைத்த நஞ்சின் தன்மையை ஒடுக்கவும் இது உதவும். நமது குருநாதர் காட்டிய அருள் வழி இது தான்...!

June 26, 2020

தொலைத் தொடர்பு அலை வரிசைகளினால் ஏற்படும் தீமைகள்


அமெரிக்கா விஞ்ஞானத்தில் மிகவும் உயர்ந்தவன் ஆகிவிட்டான். மற்ற நாட்டின் விஞ்ஞான அறிவுகளைத் தடைப்படுத்தும் வல்லவனாக ஆகிவிட்டான்.

சேடிலைட் டி.வி. என்று அந்த அலைகளை நாம் உற்றுப் பார்த்துக் கொண்டுள்ளோம். இருந்தாலும்... “அதில் வரும் கேடான அலைகளை” யாரும் அறியவில்லை.

சில டி.வி.க்களில் அவன் விஷம் கலந்த உணர்வினை ஒளிபரப்பு செய்கின்றான். அது நமக்குள் பதிவாகின்றது.

அந்த ஒளி அலைகளின் நிலைகளை எல்லாம் சேமிக்கும் கிடங்காக... எதிர் நிலையான ஒளி அலைகளைக் கவர்ந்து நிலை கொள்ளும் நிலைகளுக்கு... அந்த விஞ்ஞான அறிவைப் பரப்பி விட்டான்.

ஏனென்றால் படிப்பறிவில்லாதவன் நான் சொல்கின்றேன். நாளைக்கு உங்களுக்கு பத்திரிக்கை வாயிலாக வந்தால்தான் எல்லாமே தெரியும்.

ஐயோ... இதை அன்றைக்குச் சாமி சொன்னாரே...! என்று சொல்வீர்கள்.

விண்ணிலே ஒரு பெரிய கோளின் சிதையுண்ட பாகம் நம் பிரபஞ்சத்திற்குள் வந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னேன். அந்தப் பாகம் நம் பூமியில் விழாது... வியாழன் கோளில் தான் விழுகும்...! என்றும் சொல்லியிருந்தேன் (சுமார் 30 வருடம் முன்).

ஆனால் விஞ்ஞானிகள் இங்கே விழுகுமோ... என்றும் பின் தப்பி விட்டது...! என்றும் அவர்கள் கருவிகள் மூலம் கண்டுணர்ந்து சொன்னார்கள். பின் அந்த விஞ்ஞானி “அவன் தான் கண்டுபிடித்துச் சொன்னான்...” என்று அவன் பெயரையும் அதற்கு வைத்துக் கொண்டார்கள்.

அதே போல் தான் இதையும் யாம் சொல்கிறோம். விஞ்ஞான அறிவால் டி.வி. ரேடியோவை ரசித்துக் கேட்கின்றோம்... உற்றுப் பார்த்துப் பதிவு செய்திருக்கின்றோம்.

அதன் மூலமாக... ஒரு நஞ்சு கலந்த உணர்வின் தன்மையை அவன் இயக்குவான் என்றால் அதை நமக்குள் பாய்ச்சியபின் காக்கா வலிப்பு போல் சுண்டும்.

இராணுவத்தில் இருக்கின்றான் என்றால் ரேடியோ அலைவரிசையில் அவனுடைய கூர்மையாக நிலைகளில் எதிரியைக் காண விரும்புகிறான் என்றால் அவனுக்குள் ஊடுருவி அவனுக்கு காக்கா வலிப்பாக வரவைக்கும்.

அவனுக்கு மட்டுமல்ல...! டி.வி.யை கேட்டவர்கள் அனைவருக்கும் அந்த அலைகளாக வந்தவுடன் உடலில் பதிவு செய்தது சுண்டிவிடும். பெரும் பகுதி இந்த மாதிரி வலிப்புகள் நிறைய வருகின்றது.

மனிதரைச் செயலிழக்கச் செய்யும் நிலைகளுக்கு அவன் பல முறைகளைக் கையாண்டுள்ளான். அதாவது
1.சக்தி கூடியதும் சக்தி குறைந்ததும்
2.விசை கூட்டியும் குறைத்தும் வைத்திருக்கும் இந்த நிலைகள்
3.எந்த நிமிடம் எதைச் செய்வார்கள்...? என்று சொல்ல முடியாது.

ஒரு நாடு தனக்கு அடங்கி வரவில்லை என்றால் இத்தகைய ஆயுதத்தை எடுத்துப் பயன்படுத்தித் “தனக்கு எவனும் எதிரி இல்லை...” என்ற நிலைக்கு அமெரிக்கா செய்வான்.

இத்தகைய நிலைகளை அவன் செய்வான் என்றால் தத்துவ ஞானியர்கள் (மகரிஷிகள்) அவ்வளவு எளிமையானவர்கள் அல்ல. அவன் கண்டுபிடித்த அணு குண்டைக் காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள்...!

இந்திய நாட்டைச் சீர்குலைக்கும் நிலைகளுக்கு எதைச் செய்தாலும் நிச்சயம் அதைப் படுவார்கள். ஏனென்றால்
1.அந்த விஷமான அலை வரிசைகளைக் கொண்டு மனிதனை செயலிழக்கும் நிலையாக
2.ஒவ்வொரு நாட்டையும் அடிமைப்படுத்த விஞ்ஞான அறிவால் வரப்படும்போது
3.அவனும் அழிகின்றான்... மற்றவர்களையும் அழிக்கின்றான்.
4.நாட்டு மக்களுக்கும் தீங்கைச் செய்கின்றான்

இதைப் போன்ற விஞ்ஞானத்தால் உருவாகும் தீமைகளில் இருந்து நீங்கள் மீண்டிட வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).