ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 28, 2014

இறந்தபின் செல்வம் நம்முடன் வருமா? உடல் கூட நம்முடன் வருவதில்லை!

இன்று நாம் நமது மனித வாழ்க்கையில் உடல் பற்று கொண்டு, உடலை வளர்க்க செல்வத்தைத் தேடி அலைகின்றோம்.

அதே சமயம், நாம் தேடிச் சேர்த்த செல்வம் இறந்தபின் நம்முடன் வருமா? வருவதில்லை.  நமது உடல் கூட வருவதில்லை.

ஆனால், நாம் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை எண்ணி,
அந்தச் செல்வத்தைத் தன் மகன் காப்பானா?
அடுத்தவர்கள் திருடிக் கொண்டு போய்விடுவார்களா?
என்ற அச்சமும், வேதனையும் கொள்கின்றோம்.

ஆனால், தன் மகனைக் காக்க வேண்டுமென்றுதான் எண்ணுகிறோம். “அவனை எப்படிக் காக்கப் போகிறேன்?” என்று அவனை நினைத்து, வேதனையின் உணர்வை நமக்குள் வளர்த்துவிட்டால்,
நமது உடலில் விஷ அணுக்கள் பரவி,
நம்மை மனிதனாக உருவாக்கிய
நல்ல அணுக்களைக் கொன்றுவிடுகின்றது.
கடும் நோயினை, நமக்குள் உருவாக்கிவிடுகின்றது.

நோயானபின் உடல் நலிந்து, மனித உடலை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் அழிந்து, விஷம் கொண்ட உணர்வுகள் உடலில் பெருகிய நிலையில் உடலைவிட்டு உயிரான்மா வெளியில் வருகின்றது.

எந்த மகன்மீது பற்று வைத்தோமோ அவனுடைய உடலுக்குள் புகுந்து விடுகின்றது. குடும்பத்தில் பத்துப் பேர் இருந்தாலும், பத்துபேரில், யார் மீது அதிகப் பாச உணர்வை செலுத்தினோமோ, இதன் உயிரான்மா இதன் தொடர்கொண்டு, தான் பற்று கொண்ட உடலுக்குள் செல்கின்றது.

இது போன்றே, பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட நீங்கள்
நான் அவனுக்கு உதவி செய்தேன்.
ஆனால் அவன் என்னை மதிக்கவில்லை,
உதவி வேண்டும்போது மட்டும் என்னை அணுகினான், அவனுக்கு வசதி சேர்ந்தபின், என்னைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லைஎன்று வேதனைப்படுகின்றோம்.

வேதனைப்படும் உணர்வுகளை நீங்கள் எண்ணினால் வேதனையின் உணர்வுகள் வளர்ந்து, எந்த மனிதனை எண்ணி வேதனையின் உணர்வுகளை வளர்த்தார்களோ அதனின் உணர்வுகள் உங்கள் உடலில் பெருகி, இந்த உடலைவிட்டுப் பிரிந்து சென்றபின் எந்த உணர்வின் தன்மையைத் தன்னுள் வளர்த்தீர்களோ, உயிராத்மா அவரின் உடலுக்குள் சென்றுவிடும்.

அங்கே சென்று, தன்னுள் வளர்த்த வேதனையை அவரிடத்திலும் உருவாக்கி, வேதனையின் உணர்வுகளை அதிகமாக வளர்த்த நிலையில், தான் புகுந்த உடலையும் வீழ்த்திவிட்டு,
வெளி வந்தபின்,
உயிரான்மா  பாம்பாகவோ, தேளாகவோ தான்,
அடுத்த உடலை உருவாக்கும்.

ஈசன் (உயிர்) போய்விட்டால் நீசத்திற்கு "வேலையே இல்லை"

உதாரணமாக நாம், நமது நண்பர் ஒருவர் வீட்டிற்குச் செல்வோம். அப்பொழுது, அவர் ஏதோ ஒரு சங்கடத்தில் இருந்திருப்பார். அவர் தன் சங்கட நிலையில் நம்மைவாங்க..,” என்று அழைக்காது விட்டுவிட்டால் போதும்.

நமது மனதில், “இவனுக்கு வந்த கௌரவத்தைப் பார், வீடு தேடி வந்திருக்கிறேன். கொஞ்சமாவது மதிக்கிறானா?” என்ற வெறுப்பு உணர்வுகளைச் சுவாசிக்க நேர்கின்றது.
நம்மை மதிக்கவில்லையேஎன்று எண்ணும் பொழுது,
வேதனை உணர்வுள் நம்மிடத்தில் வருகின்றது.

வாங்கஎன்று எந்த மனிதர் நம்மை அழைக்கவில்லையோ, அந்த மனிதருடைய நல்ல குணங்களை, நல்ல பண்புகளை, நாம் அறிய முடியாதபடி நம்முடைய வேதனையான உணர்வுகள் மறைத்து விடுகின்றன.

நண்பராக இருந்து அன்புடன் பழகிய அவரின் நல்ல உணர்வுகளை நாம் அறிய முடியாதவாறு, நம்முடைய சிந்தனைத் திறனும் தெளிந்த மனமும் குறைந்து கொண்டே வருகின்றது.

உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் இருந்தாலும், அத்தகைய தீமைகளை நீக்கிடும் அருள் சக்தி பெறவேண்டும் என்பதற்குத்தான் யாம் அருள் ஞானத்தை உங்களுள் பதிவாக்குகின்றோம்.

நமக்குள் இருக்கக்கூடிய உயிரான ஈசன், இந்த உடலைவிட்டுப் போய்விட்டது என்றால் இந்த நீசத்திற்கு வேலையே இல்லை.
நாம் எத்தனை கௌரவம்,
எத்தனை துணி,
எத்தனை அலங்காரம்,
எத்தனை சுகமான நிலை,
எத்தனை பஞ்சு மெத்தை போட்டு வைத்ததிருந்தாலும்,
இந்த ஈசன் போய்விட்டால் குப்பையில் போய் எரித்துவிடுவார்கள்.

நாம் இங்கு பார்க்கும் கௌரவம் எல்லாம்,
இப்படியெல்லாம் இருந்தார்கள் என்று பார்க்கிறோமோ?
ஆனால், இழுத்துக் கொண்டு கட்டையில் வைக்கும்போதும்,
மண்ணைக் கொட்டும் போதும்
பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றோம்.

"ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று கேட்கிறோமோ?
ஒரு நாளைக்கு மேல் வைத்திருந்தால், நாற்றம் அடிக்கும்
தூக்கிச் சென்று விடுகிறோம்.

இப்படி இருக்கப்படும் பொழுது, இந்த உடலிலே அந்த ஈசன் இருக்கும்போழுதே நீங்கள் இந்த கௌரவத்தைப் பார்ப்பதைக் காட்டிலும், அந்த மெய்ஞானியின் உணர்வை எடுத்து அந்த நீசமான உணர்வு நமக்குள் வளராதபடி, அந்த மெய்ஞானியின் உணர்வை வளர்க்கச் செய்யுங்கள்.

இந்த கௌரவப் பிரச்னை”, நமக்குள் நிறையவே உண்டு.

ஏனென்றால், நாம் அல்ல. அரசனுக்கு அந்த கௌரவத்தில் என்ன செய்கிறான்? என்ன தப்புப்பண்ணினாலும் சரி? உடனே போர் முறைதான். நான் சொன்னேன், கேட்கவில்லை. உடனே போர்முறை.

இப்பொழுது நான் வலுவாக நிலையில் இருக்கிறேன். நான் சொன்னதைக் கேட்கவில்லை. உடனே எதிர்த்துவிடு. என்னை எதிர்த்துப் பழகி விட்டால், அதே உணர்வு, என்ன சொன்னாலும் அங்கே கேட்க மாட்டார்கள்.

இந்த உணர்வினுடைய வேலை எதிர் நிலைகளில் வேலை செய்து கொண்டேதான் இருக்கும். ஆக, எந்தெந்த உணர்வுகள் நமக்குள் முன்னனியிலே நிற்கிறதோ, அது வேலை செய்து கொண்டே இருக்கும்.

இதை மாற்றுவதற்காகத்தான், உங்களுக்கு இந்த ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். இதை வைத்து, வாழ்க்கையில் எப்பொழுது துன்பம் வருகிறதோ அப்பொழுது நிவர்த்தி செய்து பழக வேண்டும்.

February 27, 2014

ஈசன் – உயிரின் இயக்கம் எப்படி உருவாகின்றது?

1. ஈசன் – உயிரின் இயக்கம் எப்படி உருவாகின்றது?
விஷத்தன்மை கொண்ட நட்சத்திரத்தின் உணர்வலைகளை சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அதே சமயத்தில் இன்னொரு விஷத்தன்மை கொண்ட அலைகளை எடுத்து வருகின்றது.

ரேவதி நட்சத்திரம் என்பது விஷத்தன்மை கொண்ட உணர்வலைகளை வளர்ப்பதுதான். கார்த்திகை நட்சத்திரம் என்பது விஷத் தன்மை கொண்ட ஆசைகளை வளர்ப்பதுதான். இவை மிகவும் கடின விஷம் கொண்டது.

அதே சமயத்தில், வியாழன் கோளில்தான் உடல் அமைப்பு கோள்கள் உருவானாலும், அது தனக்குள் கவர்ந்து கொண்ட விஷக் கதிரியக்கங்களை உருவாக்கும் உணர்வுகள் வெளிப்படுவதை இதே சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

இந்த மூன்றில் வித்தியாசம் ஆகப்படும் பொழுது, விஷத்தின் உணர்வின் ஆற்றல் வியாழன் கோளில் உருவாகும் இந்த உணர்வுகள் கண்டபின், ரேவதி நட்சத்திரத்தின் உணர்விகள் அஞ்சி ஓடுகின்றது.

கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வலைக்குள் மோதும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதி, இந்த விஷத்தின் தன்மை கொண்டு துடிப்பாகும் பொழுது ஒளியின் மின் அணுவாக மாறுகின்றது.
2. உடல் உறுப்பில் மின் அணுவாக மாறுவது - “மின்மினிப் பூச்சி”
மின்னெட்டாம் பூச்சி என்ற நிலைகளைப் பார்க்கலாம். அதன் துடிப்பின் நிலைகள் வரப்படும் பொழுது, அதிலே கலந்த
கெமிக்கலின் தன்மை வரும் பொழுதுதான்
மின்னிக் கொண்டேயிருக்கும்.
இது உடல் உறுப்பில் மின் அணுவாக மாறுவது.

ஆனால், உயிரின் உணர்வுக்குள் துடிப்பாகும் பொழுது, இந்த துடிப்பின் உணர்வாகப்படும் பொழுதுதான் ஒன்றை உருவாக்கும் உயிரணுவாக மாறுகின்றது.

ஆகவே, அதுவும் விஷத்தின் மோதலில் இருளை வென்று ஒளியின் சக்தியாக மாறுகின்றது.

இன்று வைரத்தை எடுத்துக் கொண்டால் இயற்கையில் பகலைப் போன்று மின் அணுவாக மாறுகின்றது. ஆனால், கடும் விஷம் கொண்டது வைரம்.

ஒன்றுடன் ஒன்று மோதி, உணர்வின் நிலைகள் அடக்கப்பட்டதுதான் வைரம்.

அதே சமயத்தில் சூரியனிலிருந்து வெளிப்படும் கதிரியக்கப் பொறிகளை இந்த வைரம் தனக்குள் எடுக்கும் பொழுது
ஒளி அலைகளாக மின்னுகின்றது.
இவையெல்லாம் இயற்கையின் நியதிகள்.
3. துடிப்பால் அறிவின் ஒளியாக மாற்றுவது உயிரின் இயக்கம்
விஷத்தின் துடிப்பு கொண்டு
மின் அணுவாக வரும் நிலைகளில்
உயிர் என்ற நிலைகள் ஊடுருவி,
தனக்குள் சிக்கும் உணர்வுகளை துடிப்பின் நிலை கொண்டு
அறிவின் ஒளியாக மாற்றுகின்றது. இதுதான் நம் உயிரின் இயக்கம்

ஆகவே, அதன் உணர்வின் தன்மை இதனுடன் சேர்ந்து இயக்கப்படும் பொழுது அது எதனால் உருவாக்கப்பட்டதோ அதே உணர்வைத் தனக்குள் எடுத்து
அதன் மலத்தின் தன்மை உயிருடன் ஒன்றி
அடைபடும் பொழுது சிவன் இராத்திரி, சிவமாகின்றது.
இருளுக்குள் மறைந்துவிடுகின்றது இந்த உயிர்.

ஆக, நுகர்ந்த உணர்வின் தன்மையைத் தன் உடலாக மாற்றும் திறன் கொண்டது உயிரின் தன்மை. காரணப்பெயர் ஈசன்.

உள் நின்று ஈசனாக உருவாக்குகின்றது என்பதனை மெய்ஞானிகள் தெளிவாக்குகின்றனர்.

February 26, 2014

பீஷ்மர் திருமணம் செய்யவில்லை...! பேடியால்தான் (சிகண்டி) பீஷ்மர் வீழ்ச்சி அடைகின்றார் ஏன்....?

1. பீஷ்மர் - உயிர்
பீஷ்மர் தனக்குத் திருமணம் வேண்டாம், தன் தந்தைக்குச் சுகமான நிலைகள் வரட்டும் என்று சத்தியம் செய்து, கடைசி வரையிலும் காத்தவர்.

சகல வல்லமை பெற்ற வனும் தப்ப முடியவில்லை என்று எவ்வளவு தெளிவாக ஞானத்தின் நிலைகளைப் போதிக்கின்றனர்.

இந்த உயிரான குரு, மனிதனின் நிலைகளில் எத்தனையோ பகைமைகளைக் கொண்டு வந்தது. “நான், எனதுஎன்ற அகந்தை கொள்ளும் போது, பிறரைத் துன்பப்படுத்தி, துன்பத்தின் நிலைகளை நுகர நேருகின்றது.

கௌரவர்களுடைய நிலைகள், அவர்களுடைய தன்மையை இயக்குவதற்கு சகலகலா வித்தைகளைக் கற்றுக் கொண்டவர்கள்.

இந்த கௌரவம், தான் பிறருடைய தன்மமையை ரசிக்கும் தன்மை வரப்படும் பொழுது, இந்த உடலை அமைத்த உயிரான குருவிற்கு நம்மை அறியாமலேயே தீங்கு செய்கின்றோம்.

இதன் தன்மை கொண்டுதான்உத்ராயணம் வரும் வரை இதை அனுபவித்தே ஆக வேண்டும் என்கிறார் பீஷ்மர்அந்தக் காலம் வரும்போதுதான் ஜீவன் போகவேண்டும்.

அது வரையிலும், நான் செய்த தன்மைக்கு எவருடன் உறுதுணையாக இருந்தேனோ,
அந்த உறுதுணையால் விளைந்த வேதனையை,
என்னில் நீக்குவதற்கு, அர்ச்சுனனுக்குத் தெரியும்.
அந்த உணர்வின் தன்மை கொண்டு,
எனக்கு நோவில்லாமல் செய்பவன் அவனே.
அவனைப்பற்றி நான் எண்ணும்பொழுது, தீமைகள் ஆகலும் நிலை கிடைக்கும் என்கின்றார், பீஷ்மர்.
2. பேடியால்தான் (சிகண்டி) பீஷ்மர் வீழ்ச்சி அடைகின்றார் - விளக்கம்
சத்தியத்திற்காக வாழ்ந்த தன் தாத்தாவை, நான் எப்படிக் கொல்வது?” என்று அர்ச்சுனன் எண்ணுகின்றான்.

அதே சமயத்தில், அவரை விட்டுவிட்டால் உன்னுடைய நல்ல குணங்கள் மடிந்துவிடுமே என்று கண்ணன் சொல்கின்றார். கொல்வதற்குண்டான உபாயத்தையும் கண்ணன் சொல்கின்றார்.

பேடி என்ற நிலைகளை அவர் என்றைக்கும் தாக்குவதில்லை. இதை மறைமுகமாக வைத்து, பேடி என்ற நிலையைத் தாழ்த்துவார். ஆனால்,
உன் வலிமையைப் பற்றி அவர் சிந்திப்பார்.
உன்னைத் தாக்கமாட்டார்.

அப்படி, பேடியின் நிலைகளில் அவர் திருப்பப்படும் பொழுது, அவர் விழ்ச்சி அடைகின்றார். வீழ்ச்சி அடைந்தபின், தன் உணர்வுக்குத் தக்கவாறு வேதனை அனுபவிக்கின்றார். எதிர்ப்பு இல்லை என்கின்ற பொழுது அர்ச்சுனன் தாக்கிவிடுகின்றார்.

சாதாரணமாக, ஒருவர் மேலானவர் என்ற நிலைகள் இருக்கும்போது தாக்கி விடுவார்என்று உஷாராக இருப்போம்.

ஒருவன் பேடியாக (இரண்டுங்கெட்டானாக) இருக்கும்போது,
அவன் பயத்தால் நம்முடன் வந்தால்,
அவன் ஒன்றும் செய்யமாட்டான்
என்று அசட்டையாக இருந்தால்
அவன் நம்மைத் தாக்கிவிடுவான்.
இந்த உணர்வைத் தெளிவாகக் காட்டுகின்றது மகாபாரதம்.

பேடியைப் போன்று நடிப்பவர் உணர்வுகளில் சூட்சுமத் தன்மைகளும் உண்டு. அவனுள் தாக்கும் உணர்வுகளே இருக்கும் என்றும், மனித வாழ்க்கையில் பேடி என்று ஒதுக்கப்பட்டால், அதன் உணர்வுகள் என்ன செய்யும்? என்றும் காட்டப்பட்டது.

ஒருவன் ஒன்றும் செய்ய மாட்டான்.
இவனிடம் என்ன சக்தி இருக்கின்றது? என்று நினைத்தால்
அவன்தான் எளிதில் தாக்கும் நிலையாக வரும்.

வல்லமை கொண்டவன் பேடியை எதிர்க்க மாட்டான். இவனுக்கென்ன..,? என்ற நிலைகளில் ஒதுக்கப்படும் பொழுது, இந்த உணர்வு வருகின்றது.

அப்பொழுதுதான் குருவை மதிக்கின்றான். பேடியால் தாக்கப்பட்ட உணர்வும், தான் தீமையின் சார்புடைய நிலைகளில் இருக்கப்படும் பொழுது, அதிலிருந்து அர்ச்சுனன் எவ்வாறு காத்தான்?என்று மகாபாரதத்தில் காட்டப்பட்டது,
3. துருவத்தின் நினைவு கொண்டுதான் (துருவ நட்சத்திரம்) உடலைவிட்டுப் பிரியவேண்டும்
அர்ச்சுனன் அவனுடைய உணர்வுகள் நீதியின் தன்மை வரப்படும் பொழுது, நீதிக்குள் எத்தனை சிக்கல் சிக்குகின்றான் என்று காட்டுகின்றனர்.

உணர்வுகள் இயக்கத்தால் அவன் உயிரின் தன்மையில், அவன் உணர்வுகள் எப்படி மாறுகின்றது என்ற நிலையையும், மகாபாரதத்தில் தெளிவாக்குகின்றனர்.

அருள் ஞானிகள் காட்டிய நிலைகள் கொண்டு உத்ராயணத்தில் நான் உடலை விட்டு போகவேண்டுமென்று கேட்டது போல், அருள் ஒளி பெற்ற அருள் ஞானியின் உணர்வின் நினைவு கொண்டு,
இந்த உடலை விட்டுச் சென்றபின்,
பிறவியில்லா நிலை அடைவதே கடைசிநிலைஎன்று,
வியாசர் தெளிவாகக் கூறியுள்ளார்.

அவர் கூறிய கூற்றை, அவரவர் சுயநலங்களுக்காகக் காட்டப்பட்டு, தங்கள் சுயநலங்களுக்கு ஒப்பத்தான் நூல்களை வடிவமைத்து, அதைப் படித்தவர்கள் எல்லாம் இந்த வாழ்க்கைக்குத் தவறு செய்தே வாழ்கின்றனர்.

இந்தத் தவறிலிருந்து, அனைவரும் உண்மையின் உணர்வை உணர்ந்து, துருவனின் நிலையை நாம் நுகர்ந்து, துருவ மகரிஷியின் உணர்வை நாம் நுகர்ந்து, இந்த மனித உடலுக்குப்பின் பிறவியில்லா நிலையை அடைவோம்.

விஞ்ஞானத்தில் வரும் பேரழிவால், எந்த நிமிடத்திலும் நாம் உடலை விட்டுப் பிரியலாம்.

ஆனால், அந்த உத்ராயணம்,
அந்த துருவத்தின் நினைவு கொண்டு,
இந்த உடலை விட்டுப் பிரிந்தால்,
அவனுடன் ஏகாந்த நிலைகளில் வாழலாம்.

இதைத்தான் மகாபாரதத்தில், தான் செய்த தவறுகள் இருப்பினும், அர்ச்சுனனுக்குத் தெரியும் என்னுடைய நிலைகள் என்று கூறப்பட்டது.

அர்ச்சுனனுக்குக் கண்ணால் காட்டப்பட்டு,
தீமையினுடைய உணர்வுகளை அகற்றும்
அந்த வலிமையான நிலைகள்,
தன்னைக் காக்கும் உணர்வுகள் அவனுக்குத் தெரியும்
என்று தெளிவாகக் கூறுகின்றது.

அதன்வழி கொண்டு, என்னுடைய ஆன்மா எப்படி இருக்க வேண்டும்? என்று அவனுக்குத் தெரியும் என்று மகாபாரதத்தில் வியாசரால் கூறப்பட்டது.