ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label சுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம். Show all posts
Showing posts with label சுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம். Show all posts

August 19, 2025

பிராணயாமத்தின் மூலக்கூறு

பிராணயாமத்தின் மூலக்கூறு


ஆண்டென்னாக்களை வைத்து அதில் பல சக்திகளைக் கூட்டி அதனின் ஆற்றல் கொண்டு அதைத் திசை திருப்பி வைக்கப்படும் பொழுது வெகு தொலைவில் இருப்பதை எங்கிருந்தாலும் அந்த அலைகளை இழுத்துக் கவர்ந்து கொண்டு வருகின்றது.
 
இதைப் போன்று
1.நாம் அந்த அருள் ஞானிகள் வித்தை நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து
2.அதனின் நினைவைக் கண்ணுக்குள் கொண்டு வரப்படும் பொழுது
3.உயிருடன் ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நினைவினைக் கூட்டப்படும் பொழுது
4.மகரிஷிகளின் அருளாற்றல் நமக்கு முன் பரவிக் கொண்டிருப்பதைக் கவர்ந்து
5.நமக்குள் அறியாது புகுந்த தீமைகளை அகற்றிடும் சக்தியாக உருவாக்கச் செய்வது தான் அது.
 
அன்றாட வாழ்க்கையில் உடல் அழுக்கைப் போக்குகின்றோம் ஆனால் அதே போல் வாழ்க்கையில் நம் நல்ல உணர்வுகளில் படும் அழுக்கைப் போக்குகின்றோமா…? 
 
அன்புடன் பண்புடன் பணிவுடன் மற்றவருடைய துயரைக் கேட்டு அவர்களுக்கு நன்மைகளை செய்திருந்தாலும் அவருடைய தீமையான உணர்வுகள் நமக்குள் வளர்ந்திடாது அதைத் துடைத்திடும் நிலையாக ஆன்மாவைத் தூய்மை செய்தல் வேண்டும்.
 
தங்க நகை செய்யும் பொழுது தெரிந்து தான் செம்பும் வெள்ளியையும் இணைக்கின்றோம். அதைப் போல் வாழ்க்கையில் நாம் சென்றாலும் மற்றவர்கள் குறைகளைக் கேட்டுத் தான் அதை நிவர்த்தி செய்ய வேண்டி இருக்கின்றது.
 
ஆக அதை நுகர்ந்து உணர்ந்து அதன் பின் பல நன்மைகள் செய்திருந்தாலும் நமக்குள் அவர்களின் உணர்வின் சத்து நம் நல்ல குணத்துடன் இரண்டறக் கலந்து விடுகின்றது.
 
தீமைகளில் இருந்து அகற்றிடும் நிலையாகத் தன்னைக் காத்திடும் நிலையாகப் பரிணாம வளர்ச்சியில்
1.தனக்குள் வலுக் கொண்ட நிலைகளை நுகர்ந்தாலும்
2.அதனின் உணர்வுகள் இதற்குள் வலுவாகி அதனின் மணத்தை நுகர்ந்து அதனின் ஈர்ப்புக்குள் சென்று
3.“அப்படித்தான் பரிணாம வளர்ச்சி என்பதே வளர்ந்தது…”
 
அப்படிப் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்த நாம் மனிதனாக வாழ்ந்து உயிரோடு ஒன்றி ஒளியாக மாற்றிய அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்த்தால் தான் அவன் தீமையை அகற்றியது போன்று நாமும் நம்மை அறியாத உட்புகந்த தீமைகளை அகற்ற முடியும். அதைத் தான் விநாயகர் தத்துவமாகக் காட்டினான் அன்று அகஸ்தியன்.
 
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற நினைவினை உடலுக்குள் செலுத்தும் பொழுது அதற்குப் பெயர் பிராணயாமம்…”
 
ஒரு பானையிலே பொருளைப் போட்டு நெருப்பைக் கூட்டி வேக வைத்துச் செயல்படுத்தினோம் என்றால் அது வெந்து ஆவியாக வெளியாகி வருவது போல
1.நாம் உயிரோடு ஒன்றி நினைவை விண்ணிலே செலுத்தி
2.உயிர் வழி மகரிஷிகளின் அருள் சக்திகளை இந்த உடலுக்குள் கவர்ந்தோமென்றால்
3.உடலில் ந்த மங்கள் வெளிப்படுகின்றது… தீமைகளைப் பிளக்கின்றது… ஆன்மாவிலிருந்து அதை அகற்றுகின்றது.
 
ஒரு பன்றி சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தை எண்ணாது தன்னுடைய வலுவால் அதைப் பிளந்து அதற்குள் இருக்கும் நல்லதை எடுப்பது போன்று அருள் ஞானிகள் உணர்வை விண்ணை நோக்கி ஏகி அந்த உணர்வின் ஆற்றலைப் பதிவு செய்து நாம் எண்ணி எடுக்க வேண்டும்.
 
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எண்ணி எடுத்துக் கொண்டால் இது பிராணயாமம். அந்த மகரிஷிகளின் உணர்வு உடலுக்குள் சென்று நமக்குள் கலக்கப்படும் பொழுது ஆன்மாவில் இருக்கக்கூடிய தீமைகளைப் பிளக்கின்றது.
 
இதைத் தான் நரசிம்ம அவதாரம் என்று ஞானிகள் காட்டினார்கள்.
 
நாம் விண்ணை நோக்கி ஏகி… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிரின் துணை கொண்டு வலு சேர்க்கப்படும் பொழுது வாசல்படி மீது அமர்ந்தான் நர நாராயணன். மடி மீது அமர்த்தி இரண்யனைப் பிளக்கின்றான்.
 
இரண்யன் என்பது இந்த வாழ்க்கையில் கேட்டறிந்த வேதனையான உணர்வுகள் நல்ல குணங்களைக் கொல்லும் திறன் பெற்றது. நம் ஆன்மாவிலே அது கலந்து நல்ல சிந்தனைகள் செய்யக்கூடிய உணர்வின் அலைகளைச் செயல்படுத்தத் தடைப்படுத்துகின்றது.
 
இதைத்தான் நாராயணன் மடி மீது இந்தத் தீமைகளை வைத்து அது உள் புகாது பிளந்தான் வாசல்படி மீது அமர்ந்து…! என்று சொல்வது.
1.நமக்கு இந்த மூக்கு தான் வாசல்படி…. அந்த வாசல்படிக்கு மேல் பகுதியில் தான் நமது உயிர் அமைந்திருக்கின்றது.
2.அங்கே நம் நினைவைச் செலுத்தி அதன் வழி அருள் ஞானிகளின் உணர்வை உடலுக்குள் செலுத்தினால் இது நரசிம்ம அவதாரம் ஆகின்றது.
 
உயிர் வழி மகரிஷிகளின் உணர்வுகளை உள் செலுத்தி அதன் வழி இயக்கச் சக்தியாகக் கொண்டு வரும் பொழுது உடலுக்குள் இருந்து அந்த அருள் ஞானியின் உணர்வுகள் அருள் மங்களாக வெளிப்படும் பொழுது நம் முன் படர்ந்து இருக்கும் தீமையான உணர்வுகளைப் பிளக்கின்றது… சிந்திக்கும்படி செய்கின்றது.
 
தங்கத்தில் திரவத்தை ஊற்றினால் அதில் கலந்துள்ள செம்பு பித்தளை எப்படி ஆவியாக மாறுகின்றதோ அது போன்று நமக்குள் இரண்டறக் கலந்த தீமை செய்யும் உணர்வின் சத்தை அந்த ருள் மகரிஷிகள் உணர்வுகள் வலு இழக்கச் செய்கின்றது.
 
1.அன்றைய ஞானிகள் மகரிஷிகள் எவ்வாறு தங்களுக்குள் வந்த தீமைகளை வலுவிழக்கச் செய்தார்களோ
2.அந்த ஆற்றலைப் பெறுவதற்குத் தான் இந்த விநாயகர் தத்துவமே நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

January 10, 2025

சித்தனாக்கும் “சிந்தனா சக்தி”

சித்தனாக்கும் “சிந்தனா சக்தி”


ஒருமையுள் ஆமை போல் ஒன்றடக்கல்…” என்ற வள்ளுவச் சித்தனாரின் வேதம் உரைக்கும் பொருளின் உண்மை என்ன…?
 
1.பஞ்சேந்திரியங்கள் எனச் சொல்லப்படும் மெய் ண் மூக்கு செவி வாயினால்
2.உடல் இயக்கும் எண்ணத்தின் வழியாகச் செயல்படும் இந்த உறுப்புகளையா…?
3.அல்லது காற்று நூல் உரைத்த பஞ்சேந்திரியங்களின் உட்செயல் காட்டும் பஞ்சபூதங்களையா…?
 
அதாவது அடக்கப்பட வேண்டியது ஐம்புலன்களையாஅல்லது அவைகளை இயக்கும் காற்றையா…? (மூக்கு வழி புகும் காற்று)
 
குதிரையைச் செலுத்துபவன் அதற்குக் கண் முகப் படலமிட்டு அதற்கு மேல் கடிவாளமிட்டுதான் அமர்ந்து செல்வதற்காக வேண்டிய சேணத்தையும் இட்டு இத்தனை அமைப்புகளுக்கும் பிறகு
1.எங்கே செல்ல வேண்டும்…? என்று உதித்திடும் எண்ணத்திற்கொப்ப
2.கடிவாளத்தின் தூண்டுதலை உணர்ந்து நேர் பாதையாகத் தன் வழி உணர்ந்து செல்லுதலுக்கொப்ப
3.மனித சரீரத்தில் செயல்படும் பஞ்சபூதங்களின் செயலையே
4.உயர்ந்த நன்மார்க்க சிந்தனையாக ஆத்ம பலம் பெற வேண்டும் என்ற சிந்தனையாக
5.சித்தின் நலம் பெற விளையும் சிவசக்தி தத்துவ சாரமாக
6.(தன்) மன எண்ணத்தின் லயிப்பு விங்கிடல் வேண்டும்.
 
அதுவே சித்தனாகும் சீரிய வழியாகும்…!
 
அப்படி அல்லாதபடிபஞ்ச பூத புரவிகள் இயங்கிடும் இயக்கம் செயலுறும் செயலில் மன எண்ணத்தின் எழுச்சி சிந்தனையை மாற்றிவிடும் கருத்தாக இருந்து விட்டால்…”
1.அப்புரவிகளின் வலு கட்டுக்கடங்காத செயல் நிலையாக
2.பஞ்ச பூதங்களாய் வழி நடத்தும் உயிரான்ம சக்தியின் உயர் நோக்க செயல் என்ன ஆவது…?
 
ஆகவே
1.சிந்தனை சக்தியின் கூர் பார்க்க… (பார்த்து)
2.சிந்திப்பின் அவலங்கள் நீக்கப்பட்டு
3.தர்மத்தின் செயலுறும்ழியில் சத்தியம் என்ற மெய்ப்பொருளை உணர வைத்து (தனக்குத் தானே உணர்ந்து)
4.அதிலே வகை மகிழ்ச்சி தரும் பேரின்ப நிலையை அனுபவித்தலே சித்தின் நிலைப்பா…!

November 30, 2024

நம் சுவாசம் உயர்ந்த நிலை பெற வேண்டும்… நம் சுவாசத்திற்குத்தான் மோட்சம் வேண்டும்

நம் சுவாசம் உயர்ந்த நிலை பெற வேண்டும்… நம் சுவாசத்திற்குத்தான் மோட்சம் வேண்டும்


ந்த உடலில் சிறிது காலம் தான் வாழ்கின்றோம். அதற்குள் மனதை எப்படி ஒன்றாக்க வேண்டும்…? என்ற நிலையை ஞானிகள் காட்டுகின்றார்கள். நம்முடைய எண்ணங்களை ஒன்றாக்க வேண்டும் கல்யாணராமா…!
 
ஆனால்… மனிதனின் உணர்வுகள்
1.அவன் அப்படிச் செய்கின்றான் இவன் இப்படிச் செய்கின்றான் என்ற நிலைகளை
2.“தான்… நான்…” என்று நான் செய்வேன் நான் செய்து கொண்டிருக்கின்றேன் என்னால்தான் முடியும்…!
3.”நான் இதை அனைத்தும் செய்தேன் என்று பலருக்குப் பல உபகாரங்கள் செய்வார்கள்.
 
பல உபகாரம் செய்தவருடைய உணர்வுகள் நான்” என்ற இந்த உணர்வு வரும் பொழுது கௌரவராகின்றது. கௌரவர் என்று செய்த நிலைகள் நான் அன்றைக்குச் செய்தேன் பார் ன்று என்னை மதிக்கின்றானா…? என்று இந்த கௌரவப் போர் வருகின்றது.
 
தான் எண்ணியபடி செய்யவில்லை என்றால் உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது
1.அவனைப் பார்த்தவுடன் குருக்ஷேத்திரப் போர்
2.அதை மீறி நம் உடலுக்குள் சென்றால் கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் போர்.
 
புறிவு ஐந்து உள்ளுக்குள் சென்ற பின் போராகின்றது போர் என்று உடலில் வரப்படும் பொழுது நமக்குள் இருக்கும் பல அணுக்கள் மகாபாரதப் போராக மாறுகின்றது. உடலுக்குள் கலக்கமும் பல நிலைகளும் மற்றதும் ரத்தத்தில் நடக்கப்படும் போது மகா போராக நடக்கின்றது
 
ஏனென்றால் உலகில் உள்ள அனைத்து மக்களுடைய உணர்வுகளும் நாம் எடுத்துக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு விதமான வெறுப்பு ணர்வுகளையும் எடுத்துக் கொண்டுள்ளோம்.
 
1.நல்லது என்று எண்ணப்படும் பொழுது கௌரவர்கள் அதை உள்ளே விடுவதில்லை.
2.இதைப் போன்ற கௌரவப் போர்கள் எப்படி நடந்து கொண்டுள்ளது…?
3.வீட்டில் பையன் சொல்கிறான் என்றால் பையன் சொல்வதை நான் கேட்பதா…?
4.மனைவி நல்லது சொன்னால் போதும் மனைவி சொல்வதை எல்லாம் கேட்பதா.
 
அதே போல மனைவி தவறு செய்தாலும் தப்பு என்று அதை ஏற்றுக் கொண்டால் திருப்பி நம்மைக் கணவர் பேசுவார்… திட்டுவார்” என்ற கௌரவத்தில் மறைக்கவும் செய்வார்கள்.
 
குழந்தைகள் தவறு செய்தால் நான் நல்லவன் என்று பெயர் எடுப்பதற்காக நான் தவறு செய்யவே இல்லை” என்பார்கள்.
1.ஆக… தவறை மறுக்கப்படும் போது என்ன நடக்கின்றது…? கௌரவப் பிரச்சினை வருகிறது.
2.குற்றவாளி என்று ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை மூடி மறைப்பதற்கு என்ன வேலையோ அதைத்தான் செய்வோம்.
 
இந்த உணர்வின் தன்மை நமக்குள் வரும் போது கடைசி முடிவு வேதனை என்ற உணர்வு வந்து மனிதனால் உருவாக்கி இருளை நீக்கி அந்த உணர்வுகள் அனைத்தும் மறைகின்றது… வேதனை என்ற போர் முறை வருகிறது.
 
நம்முடைய எண்ணங்கள் அடிக்கடி வேதனை என்று வரும் பொழுது கண்ணும் பார்வை இக்கின்றது.
1.வலுவான உணர்வு என்ற பீமனும் அழிகின்றது.
2.அர்ஜுனன் என்ற நிலைகள் குறி வைத்துத் தாக்கும் உணர்வுகளும் சோர்வடைகின்றது… தாக்க முடிவதில்லை.
 
மகாபாரதப் போரின் கடைசியில் கண்கள் (கண்ணன்) இழந்தபின் அர்ஜுனனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவனுக்கு முன்னாடியே மாடுகளைத் திருடிக் கொண்டு போகின்றார்கள்.
 
முதலிலே நான் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்பொழுது ஒன்றும் செய்ய முடியவில்லை என்று காவியத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்
 
அதாவது அர்ஜுனன் ஆரம்பத்தில் எல்லாவற்றையும் செய்கின்றான் கண்ணின் உணர்வு கொண்டு தான் செயல்படுத்துகின்றான். கண்கள் இந்த பின் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
 
இப்படி எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டாலும்
1.மோப்பத்தால் (சுவாசம்) அறிந்து கொண்ட உணர்வு தான் எனக்கு வழிகாட்டியது.
2.தீமை நன்மை என்று என்னால் அறிய முடிந்தது
3.தீமையிலிருந்து  விடுபடும் உணர்வுகளை நான் எடுத்தேன் என்று தர்மனைச் சொல்கின்றார்கள்.
 
அவன் யாருக்கு மோட்சம் கேட்கின்றான்…?
 
தன் நாய்க்கு மோட்சத்தைக் கொடு…! என்று கேட்கின்றான்.
 
1.நாம் சுவாசித்த உணர்வின் தன்மை தான் நமக்கு வழிகாட்டியாக இருந்தது.
2.தீமையை நீக்கும் அந்த உணர்வு தான் வழிகாட்டியாக வந்தது
3.நான் நுகர்ந்த உணர்வின் தன்மை அதன் வழியே நான் ஒளியாகும் தன்மை வேண்டும் என்று
4.மகாபாரதத்தில் இவ்வளவு தெளிவாக கொடுத்துள்ளார் வியாசர்.
5.நம் சுவாசத்திற்குத் தான் உயர்ந்த நிலை பெற வேண்டும் அதற்குத்தான் மோட்சம் வேண்டும்.
 
இது பற்றி நாம் யாராவது சிந்திக்கின்றோமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள். எவ்வளவு பெரிய பேருண்மையை நமக்குக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்…!

September 29, 2024

நம் எண்ணத்தையே “கடும் ஜெபம் ஆக்கினால் ஒழிய” இன்றைய உலகிலிருந்து மீள்வது மிகவும் கடினம்தான்

நம் எண்ணத்தையே “கடும் ஜெபம் ஆக்கினால் ஒழிய” இன்றைய உலகிலிருந்து மீள்வது மிகவும் கடினம்தான்


உயிரணுவாய் உதித்திட்ட இவ்வுயிர் அணுக்களே வளர்ச்சியின் வழி சக்தி நிலைகொண்ட உயிராத்மாவால் இம் மனித உடல் பெற்று, எண்ண நிலையின் வளர்ச்சித் தொடர் கொண்டு, அவ்வெண்ணத்தின் ஞான சக்தியினால் பல நிலைகளைக் கண்டுணர்ந்து, ஆத்ம சக்தியை எண்ண சக்தியுடனே வளர்ச்சி கொண்டு வந்த நிலையில், இக்கலியின் முற்பட்ட அவதார காலங்களில் எல்லாம் வந்த ஞானத்தின் வழித்தொடர் சக்தி நிலையை கிருஷ்ணாவதார கால முதற்கொண்டு, இக்கலியின் காலத்திலும் நாகரிக வளர்ச்சி என்ற வளர்ச்சி நிலை பெற்று, வழி வந்திடும் நிலையில் ஞான வளர்ச்சி நிலை குன்றிவிட்டது…
1.நல்லொழுக்கம், நல் ஞானம், சத்தியம், தர்மம், நியாயம் என்ற நற்சக்திகளின் வழித்தொடரில் சென்றிட
2.இன்று இக்கலியில் பிறப்பெய்தி வாழும் இம்மனித ஆத்ம சக்தியிலேயே தொடர் நிலை இல்லை.
 
இக்கலியில் மனிதர்களாய் இன்று வாழ்பவர் எல்லோருடைய நிலையிலும், இக்கலிக்கும் முற்பட்ட காலத்திலேயே வாழ்ந்தவரின் எண்ண சக்தி நிலையில் வந்திட்ட ஆத்மாக்களாய்இக்கலியில் பிறப்பெடுத்து வாழ்வதினால்இன்று வாழும் அனைத்து ஆத்மாக்களின் எண்ண சக்தியேஅன்று வாழ்ந்தவரின் தொடர் நிலையினால் வந்த வினைதான்.
 
இன்று வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களின் எண்ணம் முன் ஜென்மத் தொடருடன் செயல்பட்டு வழி வந்த வினை இன்றைய இக்கலியின் பேராசை நிலை.
1.நாமாய் இந்நிலையை வளரவிடவில்லை… வளர்ச்சியின் தொடர்நிலை தான் இந்நிலை.
2.ஒவ்வோர் உடலுக்குள்ளும் அவ்வுடலுக்குகந்த ஆத்மா ஒன்றுதான்.
3.ஆனால் ஒவ்வோர் உடலுக்குள்ளும் இருந்து செயல்படும் மற்ற அணுக்களின் நிலை அதிகம்.
 
தோன்றிக் கொண்டே உள்ள உயிரணுக்கள் இப்பூமியில் உதித்து வளர்ச்சி கொண்ட எல்லா உயிர்த் துடிப்புக் கொண்ட கோளத்திலும் அன்றன்று உயிர் பெற்றுக் கொண்டே வளர்ந்து வருகிறது.
 
தாவரங்களில் எப்படி அதன் சுவாசத்துடன் கூடிய புழுக்கள், பூச்சிகள், வண்டுகள் வளர்கின்றனவோ அந்நிலை போன்றே இப்பூமியில் கழிவிடங்களில், நிலத்தில், நீரில் இப்பால்வெளி மண்டலத்தில் மற்றப் பிராணிகள், பட்சிகள், மனிதர்கள் எல்லாவற்றிலுமே இவ்வுயிர் அணுக்கள் வளர்ந்து கொண்டேதான் உள்ளன.
 
அந்நிலையில் நம் உடலுடன் சூரியனின் ஒளிக்கதிரிலிருந்து வந்திடும் உயிரணுக்களின் நிலை பல வளர்ந்து கொண்டே ஒவ்வொரு நாளும் உள்ளன. ஒவ்வொரு நாள் என்பது மட்டுமல்ல நம் சுவாச நிலை செயல் கொண்டிடும் நிலையிலெல்லாம் பல உயிரணுக்களின் நிலை நம் உடம்பிலும் ஏறுகின்றது…
 
இப்புதிய உயிரணுக்கள் மட்டுமல்லாமல் இக்காற்றினில் படர்ந்துள்ள ஏற்கனவே பல நிலைகளில் வாழ்ந்து பல உடல் நிலைகளை மாற்றிக் கொண்ட பல எண்ணக் கலப்புக் கொண்ட உயிரணுக்களும் நம் சுவாசத்துடன் நம் உடலுடன் ஏறுகின்றன.
 
நம் உயிராத்மாவும் உயிரணுவாய்த் தோன்றிப் பல நிலைகள் பெற்று
1.பெற்ற பிறகு இம்மனித ஆத்மாவாய் உடல் கொண்ட எண்ணக் கலப்பு கொண்ட
2.வாழ்க்கையின் ஏழு ஜென்ம நிலை கொண்ட சக்தி நிலை தொடர்பும் கொண்டு
3.இன்று வாழ்ந்திடும் இவ்வுடலுடன் கூடிய ஆத்மாவை
4.இவ்வெண்ணச் சிதறலில் இருந்தும் இன்றைய வாழ்க்கை நெறி முறையில் இருந்தும் தப்பி ஞான சக்தியின் வழித்தொடரை அறிய
5.நம் எண்ணத்தையே கடும் ஜெபம் ஆக்கினால் ஒழிய இன்றைய இப்பிடியிலிருந்து மீள்வது மிகவும் கடினம்தான்.
 
இன்றுள்ள இவ்வளர்ச்சியின் தொடரிலேயே மனித ஆத்மாக்கள் சென்றிட்டால் இச்செயற்கையின் ஆசையினாலும் இவ்விஞ்ஞான எண்ண வளர்ச்சியினாலும் இம்மனித ஆத்மாக்களின் எண்ண நிலையை சூனிய நிலை போல் சக்தியிழந்து செயலற்ற நிலையில் செல்லும் நிலைக்குத்தான் இக்கலியின் பிடியில் நம் ஆத்மாக்கள் சிக்குண்டுள்ளன.
 
இவ்வணுக்கதிர்களை ஆராயும் நிலைக்காக இப்பூமியில் இருந்தும் வான மண்டலத்திலிருந்தும் பல அணுக்கதிர்கள் ஒன்றுபடுத்தி இவ்விஞ்ஞானத்தில் செயல்படுத்திடும் நிலையினால்
1.இவ்வணுவின் வெடிப்பு (விஷமான குண்டுகள்) அடிக்கடி ஏற்படுத்துவதினாலும் இக்காற்று மண்டலமே செயலற்றதாகி
2.மனித ஆத்மாக்களின் சுவாச நிலையும் மாறு கொண்டு இவ்வெண்ணச் சிதறல்கள் ஏற்பட்டு
3.சூனிய நிலைகொண்ட பைத்தியங்களாய்த் தான் இம்மனித ஆத்மாக்களின் நிலையும் செயல்படப் போகின்றது.
 
அறிவு நிலை கொண்ட ஆத்மாக்களுக்கே இந்நிலை என்றால் இம்மனிதனிலிருந்து மாறு கொண்ட மிருகங்கள் பட்சிகள் இவற்றின் நிலை எப்படி இருந்திடும்…?
1.எண்ண வளர்ச்சியை ஞானத்தின் சக்தி நிலை தொடர்பு படுத்தி
2.சுவாச நிலையை ஒருநிலைப்படுத்தினால் அன்றி இக்கலியின் பிடியிலிருந்து தப்புவது கடினம்தான்.

August 11, 2024

சுவாச நிலையில் நறுமணங்களைப் பெறுபவன் ஆண்டவனின் ஆசி பெற்றவனாகின்றான்

சுவாச நிலையில் நறுமணங்களைப் பெறுபவன் ஆண்டவனின் ஆசி பெற்றவனாகின்றான்

 

முதல் பாடத்திலேயே ஆண்டவனுக்கு அறுசுவை உணவு படைப்பது பற்றிச் சில நிலைகளைச் சொல்லி உள்ளேன்… அதன் விளக்கத்தை இன்று தருகின்றேன்.

என்பவர் யார்…? என்று முதலிலேயே சொல்லி உள்ளேன். ஆண்டவனுக்கு அறுசுவை உணவைப் படைக்கும் பொழுது ஆண்டவன் சக்தி பெற்ற முருகனாக உள்ளவரும் வெங்கடாஜலபதியாக உள்ளவரும் இப்படிப் பல ஆண்டவனின் நாமத்தைப் பெற்றுள்ள ரிஷிகள் எல்லாம் அங்கே வருகிறார்கள். எந்த வகையில்…?

நீ ஆண்டவனை வணங்கி அமுது படைக்கும் பொழுது அந்நிலைக்கு அவர்கள் வந்து அம்மணத்தின் ஈர்ப்பு தன்மைக்காக (பதார்த்தங்கள் பல வகை பழங்கள் புஷ்பங்கள் ஊதுபத்தியின் வாசனை கற்பூர சாம்பிராணி வாசனைகள்) அம்மணத்தின்…
1.நாம் படைத்த படையலின் மணத்திற்கு நாம் எண்ணி வணங்கும் பொழுது
2.யாரை நினைத்து எண்ணி வணங்குகின்றோமோ அவர்கள் அந்த நிலைக்கு வந்து
3.நம் சுவாச நிலைக்கு நம் உயிரணுவிற்கு வேண்டிய சில நிலைகளை அவர்கள் அதை எடுத்து நமக்கு அளிக்கிறார்கள்… புரிகிறதா…?

அவர்கள் எடுத்து என்று சொல்லும் பொழுது நாம் படைக்கும் பல வகைப் பதார்த்தங்களை அந்த நல்ல நறுமணங்களை நமக்கு அவர்கள் அளிக்கின்றார்கள்
1.நம் சுவாச நிலைக்கு அதை அளிக்கின்றார்கள்.
2.நம் சுவாச நிலையும் ஒருநிலைப்படுகிறது
3.நம் உயிரணுவும் ஊட்டம் பெறுகிறது.

ஆண்டவனின் நாமத்தைச் சொல்லிப் படைக்கும் உணவெல்லாம் அவ்வாண்டவனின் நாமத்தில் உள்ளவர்களா எடுத்து அள்ளி அள்ளி உண்ணுகிறார்கள்…?

இக்காற்றினில் கலந்துள்ள பல கோடி நல்ல மணங்களைத் தன் சுவாச நிலைக்குத் தன் உயிரணுவிக்கு ஊட்டமாக எடுத்துக் கொள்ள அச்சித்தர்களினாலும் ரிஷிகளினாலும் ஞானிகளினாலும் தான் முடியுமப்பா.

இம் மனித உடலில் உள்ள நமக்கு நாம் பூஜை நிலையில் படைக்கும் உணவின் மணத்தை எல்லாம் நறுமணங்களை எல்லாம் நமக்கே தான் அளிக்கிறார்கள் “அவ்வாண்டவனின் நாமத்தில் உள்ள அருட்பெருஞ்ஜோதிகள் எல்லாம்…”

1.நான் எல்லோருக்குமே பொதுவானவன்… சமய வேறுபாடு எனக்கில்லை
2.சகலத்தையும் ஒன்றாக எடுப்பவன் தானப்பா நான்.

இந்துமத முறைப்படி இப்படிப் பல முறைகளில் வணங்குகிறோம். ஆண்டவனை இந்நிலையில் வணங்கும் பொழுது அச்சித்தர்கள் ரிஷிகள் நாம் வணங்கும் முறைக்கு நம் நிலைக்கு நல் உணர்வு தருகின்றார்கள்.

ஆனால் பல கோவில்களில் பலியிட்டு அந்நிலையில் ஆடு கோழி இவைகளை உணவாகப் படைத்து ஆண்டவனை வணங்குகின்றார்கள். அவர்கள் வணங்கும் நிலைக்கும் வருகிறார்கள்… அவர்கள் வணங்கும் தெய்வமான ஆவிகளான நாட்டராயன் முனியப்பன் பேச்சியம்மன் அங்காளி அம்மன் இன்னும் பல நாமங்களுடைய அந்நிலையில் அருள் பெற்ற ஆவிகள்.

ஆண்டவன் சக்தியிலிருந்து அவரவர்கள் நிலைக்குப் பெற்றார்கள் சில சக்திகளை ரிஷிகளும் தவசு முனிவர்களும் என்றேனல்லவா. அவர்கள் பெற்ற சுவாச நிலைக்குத் தகுந்தபடி தான் அவர்கள் நல் சக்தியின் அருளைப் பெறுகின்றார்கள்.

அச்சக்தியின் அருளைப் பெற்றவர்கள் எல்லாம் அவர்கள் சுவாச நிலைக்கு எங்கு ஆகாரம் கிடைக்கிறதோ அங்கு வந்து அருள் தருகிறார்கள் ஆண்டவனாக.

அவர்கள் பெற்ற அருள்… நாட்டராயன் முனியப்பன் பேச்சியம்மன் அங்காளி அம்மன் என்னும் நாமங்களுடைய தேவதைகள் எல்லாம் வந்து அவர்களுக்குகந்த ஆகாரம் கிடைக்கும் பொழுது அவர்கள் சுவாச நிலைக்குகந்த ஆகாரம் கிடைக்கும் பொழுது அந்நிலைக்கு அவர்கள் அருள் புரிகின்றார்கள் அம்மக்களுக்கு.

இன்னும் பல இடத்தில் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் நிலைக்குத் தகுந்தபடி பலவித வாசனைத் திரவியங்களை தன் மேலே பூசிக்கொண்டு அவர்கள் வணங்கும் ஆண்டவனின் ஆலயத்திற்குச் செல்கிறார்கள்.

அந்நிலையில் அவர்கள் வணங்கும் அல்லாவும் இயேசுவும் வருகிறார்கள் அவரவர்கள் நிலைக்கு தகுந்தபடி ஆசீர்வாதம் அளிக்கிறார்கள்.

1.சுவாச நிலையில் எவன் ஒருவன் நல்ல மணங்களைப் பெறுகின்றானோ
2.அவன் ஆண்டவன் அருளைப் பெற்ற ஆண்டவனின் ஆசியைப் பெற்றவனாகின்றான்.
3.ஆண்டவனின் அருளெல்லாம் இச்சுவாச நிலையிலிருந்து தான் உயிரணுவிற்குக் கிடைத்து மனிதனின் நிலையையே நடத்திச் செல்கிறது.

சுவாச நிலையிலிருந்து வருவது தான் எல்லாமே…!

மனநிலை சோர்வுற்றவனும் மனநிலையில் குழப்பத்துடன் உள்ளவனும் இவ்வாண்டவனை எண்ணி அவ்வாண்டவனுக்குகந்த நிலையில் நறுமணம் உள்ள புஷ்பத்தைச் சூட்டி வணங்கும் பொழுதே மனநிலையில் சில மாற்றங்களைக் காணலாம்.

1.சுவாச நிலையில் இருந்து தானப்பா இவ்வுலக நிலையே உள்ளது
2.இவ்வுலக நிலைக்கு ஊன்றுகோலே சுவாச நிலைதானப்பா.

நீராவியில் எப்படி ரயில் செல்கின்றது என்று சொல்கின்றாயோ அந்நிலையே தானப்பா இவ்வுலகச் சுற்றலும். அச்சக்தியின் சொரூப நிலை மனிதனை மட்டும் தாங்கிக் கொண்டில்லையப்பா.

அவன் படைத்த படைப்பில் எல்லாவற்றிலுமே கலந்துள்ளவனப்பா அவன். அச்சக்தியின் சொரூப நிலையைக் கண்டிடவும் முடியாது சொல்லிடவும் முடியாது.

போற்றிப் போற்றி வணங்கிடத் தானப்பா வேண்டும் இந்த மானிட உடலைப் பெறும் பாக்கியம் பெற்ற நாம் எல்லோருமே.

July 29, 2024

ஈர்ப்புத் தன்மையே சுவாச நிலைதான்

ஈர்ப்புத் தன்மையே சுவாச நிலைதான்

 

உலகத்தன்மையிலே ஈர்ப்பு நிலை இருந்து விட்டால் ஈசன் அருள் வந்ததப்பா. ஈர்ப்பு நிலையில் தான் இவ்வுலக நிலையே உள்ளதப்பா. மூச்சின் பாடத்தைப் பகர்ந்துள்ளேன்.

1.எந்நிலைக்கும் ஈர்ப்பு நிலை வேண்டுமப்பா…!
2.மனித மனத்திற்கு ஈர்ப்பு நிலை இருந்தால் தான் அவ்வீசனையும் வணங்கிடுவான்

ஈர்ப்பு நிலை ஈர்ப்பு நிலை என்பதெல்லாம் காற்றை இந்த பூமி தன்னுள் ஈர்ப்பதனால் தான் இப்பூமியே சுற்றுகிறது என்றேன். ஈர்ப்பு நிலையின் பாடங்கள் பல உள்ளன.

1.ஈர்க்கும் தன்மையை எடுத்துக் கொள்…!
2.எந்நிலைக்கும்… ஒருவர் சொல்வதையும் “நம் மனதில் ஈர்ப்பு நிலை இருந்தால் தான்” எடுத்துக் கொள்ள முடியும்.
3.அவ்வீர்ப்பு நிலையில் தான் ஈசன் அருளையும் பெற்றிட முடியும்.

அவ்வீர்ப்பு நிலையினால் தான் ஒரு தாயின் வயிற்றில் அக்கருவும் தரிக்கிறது மலரின் மணத்தை ஈர்க்கின்றது அவ்வண்டு என்ற வழிமுறை தெரிந்து இருக்கும்.

அதைப் போல் தான் தாயின் வயிற்றில் வந்து உதிக்கும் கருவின் நிலையும். மணங்களின் பாடம் பகர்ந்திட்டேன். ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு மணம் உள்ளது. பூவிற்கு மணங்கள் உள்ளது போல் மனித உடல்களுக்கும் அந்த மணங்கள் உள்ளன.

ஜென்மப் பலனைப் பகர்ந்திட்டேன் மணத்தையும் முதல் பாடத்தில் பகிர்ந்துள்ளேன் அக்கரு எப்படி வந்து உதிக்கிறது…? என்று.

இவ்வுலகத்தில் பல தேசங்கள் உள்ளன. எத் தேசத்தில் பிறந்தவனும் முதல் ஜென்மத்தில் விட்ட குறையினால் மறுஜென்மம் எடுக்கின்றான் என்பதைப் பகர்ந்து உள்ளேன்.

அண்டகோடியில் உள்ளவன் தன் ஆவி ரூபத்தில் தன் எண்ணத்தின் செயலை “எப்பிறவி எடுத்தால் முடித்திடலாம்…?” என்று எண்ணுகின்றான்.

அதனுடைய ஈர்ப்புத் தன்மையினால் தாயின் எண்ணத்தின் மணத்தை அறிந்து அத்தாயின் வயிற்றில் உதிக்கின்றான்.

பிறவி எடுப்பதற்கு முன் அவ்வாவிகளின் நிலை எல்லாம் ஈர்ப்புத் தன்மை தான். “ஈர்ப்புத் தன்மையே சுவாச நிலைதான்...” ஒருவர் எடுக்கும் மூச்சிலிருந்து அவர்களுடைய மணத்தையும் மனத்தையும் ஈர்க்கின்றது அவ்வாவிகள்.

அதிலிருந்து தான் அவ்வாவிகள் பிறக்கின்றன கருவில்… இப்பாட நிலை புரிந்ததா…?
1.மனித மனத்திற்கு வேண்டுமப்பா ஈர்ப்புத் தன்மை.
2.இவ்வுலகம் ஈர்ப்பதினால் தான் உன் நிலை நடக்கின்றது… நிற்கின்றது.

இவ்வுலக மண்டலத்திற்கு “பல மைல்களுக்கு அப்பால்… ஈர்ப்பு நிலை இல்லையப்பா…”

உலக மண்டலத்தில் உள்ளவர்கள் எல்லோருமே கலியில் வந்துள்ளார்கள் என்ற பாடத்தைப் பகர்ந்துள்ளேன். இவ்வுலகத்தில் உள்ளவர்கள் பிற மண்டலத்தில் பிறக்கின்றார்களா…? என்று சாமியிடம் கேட்டாய் எங்கும் பிறக்கின்றார்கள்… ஆனால் அந்த வழிகள் வேறு.

மனித ஜீவராசிகள் இவ்வுலகத்தில் உள்ளது போல் வேறு எந்த உலகத்திலும் இல்லையப்பா. வேறு உலகத்தில் ஜீவராசிகள் நிலை எல்லாம் உருளும் தன்மையில் தான் ஊரும் தன்மையில் தான் உள்ளதப்பா.

இவ்வுலகில் உள்ள ஈர்ப்பு தன்மை பிற மண்டலத்தில் இல்லையப்பா…! பிற மண்டலத்தின் தன்மை எல்லாம் மாறுபடுகின்றது.

இன்று விஞ்ஞானத்தில் பிற மண்டலத்திற்குச் சென்று உயிர் வாழப் போகின்றானாம்… நடந்து பார்க்கின்றானாம்… பயிர் செய்து பிழைப்பானாம்…! கால நிலையைக் கடத்துகின்றார்கள் பெரும் கஷ்டத்திற்குள்ளே.

ஜெப நிலையில் இருந்தவனுக்குத் தெரிந்துவிடும் பிற மண்டலத்தின் நிலை. இவ்வுலகம் ஈர்ப்புத் தன்மையில் நடப்பது போல் அந்நிலையில் அவன் நடந்துவிடுவானா…?

செயற்கையுடன் சென்று நடந்தேன் என்று செப்புகின்றானாம். எப்படி அப்பா நடந்திருப்பான்…? “உருண்டல்லவா சென்றிருப்பான்…!” இவ்வுலக நிலை எவ்வுலகிலும் இல்லையப்பா.

இவ்வுலகில் பிறந்த பயனைப் பெற்றிடுங்கள் என்பதெல்லாம் இதுவே தான்.

1.ஈர்ப்புத் தன்மைக்கும் மனநிலைக்கும் ஒத்திருந்தால் எல்லா நிலையும் ஈசனே பார்த்துக் கொள்வானப்பா
2.நம் நிலை வேறு நினைத்தாலும் அவ்வீர்ப்பு நிலையைத் தான் ஈசன் முடித்திடுவான்.

இதைப் போல்தான் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு சொல்லும்
1.அவ்வீசனின் நிலையில் ஈர்ப்பு இருந்தால் நடந்திடுமப்பா… ஈர்ப்பு நிலைப்பாடத்தை இதற்காகத்தான் பகர்ந்திட்டேன்.
2.மனதில் உள்ள எந்நிலையையும் அவ் ஈசனின் ஈர்ப்புக்கு விட்டு விட்டால் அவ்வீசன் பார்த்துக் கொள்வான் எல்லாமே… புரிந்ததா…?

ஈர்ப்பு நிலை வைத்திடம்மா… உன் நிலைக்கு மிகத் துரிதமாக எல்லா நிலையும் கிட்டிவிடும்… ஜெப நிலையும் தான்…!

ஒவ்வொரு மனதிற்கும் ஈர்ப்புத் தன்மை எப்படி அறிவு வளர்ச்சி என்று சொல்கின்றோமோ அதைப்போல ஈர்ப்புத் தன்மையும் மாறுபடுகின்றதம்மா.

ஒரே முறையில் பலர் சமைத்தாலும் சமையல் ருசியும் மணமும் மாறுபடுகின்றது கை வாக்கு என்கின்றார்கள்… அது “மனவாக்குத் தான்…”

அது ஒரு நாள் செய்த முறையிலேயே மறுநாள் சமைத்தால் அந்தச் சுவை இருப்பதில்லை. இது எல்லாம் மன வாக்குத் தான் அது. மனதின் ஈர்ப்பு நிலை எப்படி உள்ளதோ இதைப் பொறுத்துதான் எல்லாமே.

உன் மனதின் ஈர்ப்பை இன்று ஈசனிடம் செலுத்தி விடு நோயைப் பற்றி எண்ணிவிடாதே கலசம் வைத்ததின் பயனை நீ பெறுவாய்.

காட்சி:- நிறைய சித்தர்கள் ரிஷிகள் சுற்றி நின்று ஆசீர்வாதம் செய்தல்.
1.ஒரு சித்தர் அல்ல… பல சித்தர்கள் இங்கே வந்துள்ளோம்
2.சித்தாதி சித்தர்களின் ஆசிகளை அருளியுள்ளோம். பல கொழுந்துகளை ஆசீர்வாதம் செய்துள்ளோம்
3.வாரி இறைப்பேன் ஞானச் செல்வங்களை உனக்கு…!

July 24, 2024

நாரதரின் வழியில் சென்று தான் நசுக்கிட வேண்டும் மூட்டைப் பூச்சிகளை…!

நாரதரின் வழியில் சென்று தான் நசுக்கிட வேண்டும் மூட்டைப் பூச்சிகளை…!

 

உண்ணும் உணவில் வருவதல்ல உடலின் ஆரோக்கிய நிலை. எல்லாமே மனநிலையில் இருந்து வருவது தான்.
1.கழிவுப் பொருளை வைத்து வேலை செய்பவனுக்கு… அவன் உடம்பு “ஆரோக்கியமாக இருந்திடப் பார்த்திருப்பாய்…”
2.ஆனால் பரிபக்குவமான உணவை உண்பவனுக்கோ ஆயிரம் வியாதிகள் அவனுக்குள்ளே கலந்திருக்குமப்பா.

நல்லதை மறந்துவிட்டுப் பல நினைவுகள் அவனுள்ளே சுற்றிக் கொண்டிருப்பதனால் நெஞ்செல்லாம் வேதனை வளர விட்டு இருப்பவன் சுவாச நிலையில் எல்லாமே அண்டிக் கொள்கின்றது.

கழிவு பொருளைக் கையில் எடுப்பவன்
1.அவனைச் சுற்றி இருக்கும் அழுக்கைப் பற்றி எண்ணாதபடி தான் வேலை செய்ததற்குண்டான கூலி பெறுவதையே எண்ணி
2.அந்த நிலையிலேயே உணவை உட்கொள்கின்றான்… தீமையான அந்தப் பொருளைப் பற்றி அவன் எண்ணுவதில்லை.
3.அவனுடைய சம்பாத்தியத்தில் அவன் நினைவு மாறாமல் இருப்பதால் அந்தத் தீது அவனைப் பாதிப்பதில்லை.
4.அவனுடைய எண்ணம் தான் அவனை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

மனிதன் எண்ணி எடுக்கும் எண்ணங்களுக்குண்டான பாதிப்புகளைப் பற்றித் தெரிந்து கொண்டாய் அல்லவா..! எண்ணத்தை உயர்த்தி விட்டால் நல் வாழ்க்கை வாழ்ந்திடலாம்.

ஆகவே அவனவன் சுவாச நிலையில் உள்ளது தான் வாழ்க்கை நிலையும் எண்ணமும் எல்லாம்.

சுவாச நிலைக்கும் எண்ணத்திற்கும் பாடங்கள் பல நாள் பகர்ந்து விட்டேன் இனியும் உன் நிலையை ஒரு நிலைப்படுத்திடப் பார்த்திடப்பா.

தியான நிலை… சுவாச நிலை மன நிலைகளைப் பொறுத்தே உள்ளது எந்த நிலை வந்தாலும் மன நிலையை சந்தோஷமாகவே வைத்துக் கொள்.
1.அது எப்படி வரும் அந்நிலை…? என்று கேட்பாய்.
2.கலக்கம் வரும் பொழுது நானாகவா அதைச் செய்து கொண்டேன்…! அதற்கு என்ன செய்வது…? என்று கேட்டிடுவாய்.

கதையில் படித்திருப்பாய் ஊரெல்லாம் பற்றி எரிந்தாலும் பிடில் வாசித்தான் ஒரு மன்னன் என்று.

எரியும் ஊர் எரிந்து விட்டது அதனுடன் அழுது அவன் என்ன செய்திடுவான்…?
1.மனநிலை ஒரு நிலையில் இருந்திட்டால் ஊர் எரிவதும் தெரியாது.
2.உலகளவு துவேஷம் வந்தாலும் தாங்கிடுமப்பா அந்த மனநிலை.

வரும் துவேஷத்தை எண்ணிக் கொண்டிருந்தால் எதிர் துவேஷம்தான் எழும்பி நிற்கும். துவேஷிப்பவனை துவேஷத்தன்மையில் துவேஷிப்பது அல்ல அந்நிலை என்று முதலிலேயே பகர்ந்துள்ளேன்.

நாரதரின் கதையையும் புகட்டி உள்ளேன்..! உன் மனநிலையை மாற்றிடாமல் துவேஷிக்கும் தன்மையை ஏற்றிடாமல் தியான நிலையில் ஒரு நிலைப்படுத்திடப்பா உன் மன நிலையை.
1.அந்நிலையில் உதித்திடும் பல உதயங்கள் உனக்குள்ளே.
2.நாரதரின் வழியில் சென்று தான் நசுக்கிட வேண்டும் மூட்டைப் பூச்சிகளை…! புரிகிறதா…!

பெரும் குடிகாரனின் எண்ணமெல்லாம் குடியிலும்… அதை அடைவதற்கான வழியிலும் வந்து கொண்டே இருக்கும். அவ்வெண்ணத்தின் வழியிலே அவனுக்குள் இருக்கும் ஈசனின் சக்தியையே அவனுள்ளேயே அவ்வெண்ணத்திலேயே கொண்டு செல்கின்றான்… அவன் நினைப்பதும் நடக்கின்றது.

அதே வழியில் தான் பெரும் திருடனும் நடக்கின்றான். திருடனின் எண்ணமெல்லாம் எந்நிலையில் பொருளைக் களவாடலாம்…? என்றே எண்ணுகின்றான். அவனுள் இருக்கும் ஈசனும் அவன் வழிக்கே வருகின்றான். ஒவ்வொருவரின் தொழிலிலும் இதே முறைதான்.

1.எல்லோரிடத்திலும் உயிரிலும் கலந்திருக்கின்றான். அவ்வீசன்.
2.அவனவன் எண்ணத்திற்கு அவனவன் வழி செல்கின்றான்…
3.நல்லவனுக்கும் வழி செல்கின்றான் தீயவனுக்கும் வழி செல்கின்றான்.

ஈசன் என்பவர் யார் என்கிறாய்…?

ஈசன் என்பவன் கல்லும் மண்ணும் அல்ல. காலமுடன் கலந்துள்ளான்… காற்றிலும் ஒளியிலும் கலந்துள்ளான். எண்ணும் எண்ணத்தில் கலந்திடுவான் அவ்வீசன்.

1.ஜெப நிலையை எண்ணுபவனுக்கும் ஜெபத்துடன் கலந்திடுவான்.
2.உலகமெல்லாம் சுற்றியுள்ளான்… எடுக்கும் பிறப்பை முடிக்கும் வரை எல்லா எண்ணத்திலும் எல்லா உயிரிலும் கலந்திருப்பான் ஈசன்.

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதன் பொருள் இதுவே…!

ஜெப நிலையில் பாடம் புரிந்து கொண்டு எடுத்த பயனை நல்வழியில் முடித்துக் கொண்டு பிறகு ஏழு ஜென்மங்களின் பாடம் பற்றி முதலிலேயே சொல்லி உள்ளேன்.

அந்நிலையைப் புரிந்து கொண்டு வாழ்க்கை முறையைப் பயனுள்ளதாக்கி நல்லெண்ணம் எண்ணிக் கொண்டு சுவாச நிலையை மாற்றிடாமல் வடிகட்டி வருபவன் தான் பெருநிலை அடைகின்றான்.
1.இவ்வுலக வாழ்க்கையின் கலியின் கடைசிக் காலம் இது.
2.மனித ஜீவனின் கடைசிக் காலமப்பா இது.
3.இப்பயனைப் புரிந்து கொண்டு நடந்திட வேண்டுமப்பா.

இருந்தென்ன பயன்…? இருக்கும் வரை சம்பாதிக்கலாம்…! நம் இஷ்டத்திற்கு வாழாத வாழ்க்கை நமக்கு எதற்கு…? என்ற வாதங்கள் தான் பலர் மனதில் உள்ளது.

பல ஆண்டுகளாகச் சம்பாதித்து பல நிலையில் இருப்பவர்களுக்கும் ஒரு குண்டைப் போட்டு விட்டால் உலகமே அழிந்திடும் தன்மையில் உள்ளதப்பா.

இருக்கும் வரை சந்தோஷமாக இருங்கள்…
1.நல் சுவாசத்தை எடுங்கள்… நல் உணர்வுடன் இருங்கள்…
2.அணுவென்ன…? அணுகுண்டென்ன…? உலக நிலை மாறினாலும்
3.உன் நிலையை ஒரு நிலைப்படுத்தினால் வந்துவிடலாம் “போகரின் நிலைக்கே…”

பாடங்கள் பகிர்ந்திட்டால் பல கோடி பகர்ந்திடலாம். உலகத்தன்மையில் இருளடையும் தன்மை தான் இனி சில காலத்திற்குள் நடந்திடுமப்பா. ஒளி என்பதும் இல்லை பெரும் காற்றும் இல்லை ஒளியும் காற்றும் இல்லாவிட்டால் நீரும் இல்லை. உலக ஜீவராசிகளும் இல்லை. இந்நிலை வருவதற்கே கலியுகம் என்ற கடைசிக் காலத்தை குறிக்கிறார்கள்.

ஒரு நிலைப்படுத்திடப்பா உன் நிலையை…! புரிகிறதா…?

July 1, 2024

நல் மணத்தை நான் தந்தேன்… உன் மனதை நல் மனதாக ஆக்கிக்கொள்

நல் மணத்தை நான் தந்தேன்… உன் மனதை நல் மனதாக ஆக்கிக்கொள்

 

நல் மணம் எல்லாம் எங்கு செல்கின்றது என்று எண்ணுகின்றாய்…? இயற்கை தந்த மணம் எல்லாம் நல் மனம் தான்.
1.இயற்கையின் மணத்தை எல்லாம் மனிதர்களாகிய நீங்கள் எடுத்துச் சமைத்து
2.நல் மணமான இயற்கை மணத்தைச் சமைத்தவுடன் உடனே எனக்கு அச்சுவை வந்து பின்பு நீ சுவைக்கின்றாய்.

நீ சுவைத்தவுடன் அதன் நிலையைப் பார்த்தாயா…?

கழிவு நிலை எல்லாமே மனிதனிடமிருந்து தான் வந்ததப்பா ஒரு நிமிடம் எண்ணிப்பார்… நாற்றம் என்பது என்னவென்று புரிந்துவிடும்…!

இயற்கை தந்த வரம் எல்லாம் இன்பமயமான மணம் தான் இயற்கையுடன் ஒன்றிப் பார். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மணம் இருக்கும். கெட்ட மணம் என்பதெல்லாம் இந்தக் கெட்ட உடலிலிருந்து தான் வருகின்றது.

அசுத்தம் அசுத்தம் என்கின்றாய்…! அசுத்தம் எல்லாம் மனிதனிடம் தான் மனிதனிடம் தான் அசுத்தமா…? மிருகத்திடம் இல்லையா…? என்று நீ நினைக்கின்றாய்…! மனிதரிடம் இருந்துதான் மிருகத்திடம் வந்ததப்பா.

1.நான் தந்த இயற்கையில் இருந்து மனிதன் பிறந்தான்
2.மனிதனின் பாவ புண்ணியத்திலிருந்து மிருகம் எல்லாம் வந்ததப்பா.
3.மிருகத்திலிருந்து தான் பறவை எல்லாம் வந்ததப்பா
4.பறக்கும் பறவையிலிருந்துதான் ஊரும் ஊர்வனை எல்லாம் வந்ததப்பா
5.ஊரும் ஊர்வன எல்லாம் அன்ன ஆயிற்று…? என்று கேட்பாய்…?
6.ஊரும் ஊர்வன தான் பிறகு மனிதனாகவும் வருகிறது.

இம்மனிதனின் நிலையில் எப்படி எப்படி மாறுகின்றது என்று இப்போது புரிந்ததா…?

உலகம் மட்டும் உருள்வதில்லை மனிதன் நிலையும் உருள்கின்றது சொல்லும் விளக்கம் புரிந்ததா…?
1.உருளும் மனிதனாகப் பிறந்து விட்டாய்.
2.உருளும் தன்மை உனக்கு வேண்டாம்.

ஒரு நிலையான நிலை நீ இருக்க உன் தியானத்தைக் கூட்டிக் கொள் என்னும் பொருளும் இது தானே.

பெரும் தாதுப் பொருள் என்கின்றோம். அதன் தகதகக்கும் நிலை எல்லாம் எங்கிருக்கிறது என்கின்றாயா…?

உருளும் உலகத்தில் உள்ளே தான் பெரும் தாதுப்பொருளும் உள்ளது. அப்பொருளின் நிலைகளை எல்லாம் எண்ணிப்பார். எப்படி அதன் நிலை வந்தது…?

உலகம் உருளும் தன்மையிலே காற்றும் மழையும் பட்ட பின் சில நிலையில் நிலைத்திருக்கும் நல்லோரின் நினைவிலே அது உருவாகிறதப்பா…!

நல்லவரின் நிலை என்பது நான் சொல்லும் சுவாச நிலை…! அத்தன்மை பாய்ந்தவுடன் இப் பூமி இழுக்கிறது. தண்ணீருடனும் காற்றுடனும் நல்லோரின் சுவாச நிலைத் தாதுப் பொருள் எல்லாமே அவ்விடத்திற்கு உகந்தபடி தான் இழுக்கும்.

அவ்விடம் எப்படி வந்தது தெரிகின்றதா…? நீ விடும் மூச்செல்லாம் காற்றுடன் கலந்தவுடன் மூச்சு மட்டுமல்ல எல்லா ஓசைகளும் கலந்து தான் வருகிறது.

நீ சொல்லும் பூமித்தாய் என்பவள் யாரப்பா…? பூமித்தாயை நீ சொல்லும் வழியிலேயே நானும் சொல்கின்றேன் பூமித் தாய் எல்லாத் தன்மையும் தன்னுள்ளே அடக்கிடுவாள். அடக்கிவிட்டு அவள் தரும் நிலைகள்தான் இவை எல்லாம்.
1.வெறும் மண் என்று நீ நினைக்கின்றாய்
2.இம்மண் தான் இவ்வுலகத்தின் முதல் நிலையே.

முதல் நிலையின் தன்மையைத்தான் முதலிலேயே சொல்லிவிட்டேன். நீ விடும் மூச்சும் உலகத்தின் ஒலியைப் பற்றி முதலிலேயே சொல்லி இருக்கிறேன். மூச்சில் இருந்து தான் ஒலியும் பிறக்கின்றது. ஒலியின் தன்மையும் ஒளியாகி அவ்வொலி தரும் மழையிலே இப் பூமித்தாய் ஈர்க்கின்றாள்.

அவள் தரும் இயற்கையிலே மணம் எல்லாம் இருக்கின்றது. முதன் முதலில் மணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தேன்… அம்மணம் எங்கிருந்து வருகின்றது என்பது புரிகின்றதா…?

எல்லாமே சுழற்சி தான்… சுழலின் தன்மையை பார்த்தாயா…! இந்தப் பாடத்தின் தன்மை புரிந்ததா…?

சுழலும் தன்மையைப் புரிந்து கொண்டாயா…! சுழலுடன் சுழலாகக் கலந்து விட்டால் “கலந்தது” உனக்குத் தெரியாது.
1.இக்கலக்கங்களிலிருந்து மீள்வதற்கு ஒரே நிலை “தியான நிலை தான்…”
2.தியான நிலை பெற்றுவிட்டால் பெரும் சூட்சம உலகம் என்னும் சுழற்சியில் சிக்கி விடலாம்
3.சூட்சம உலகில் சிக்கிவிட்டால் பெரும் சூட்சுமம் எல்லாம் கண்டிடுவாய்.
4.ஈரேழு லோகம் என்பதைக் கண்டிடுவாய்… ஈன்றவன் யார் என்று கண்டிடுவாய்.

அவ்வுலகத்திற்குச் சென்றுவிட்டால் இவ்வுலகத்தின் நிலையைப் பார்த்திடுவாய் இவ்வுலகம் மட்டுமல்ல எவ்வுலகையும் உனதாக்கு. இப்பொழுது புரிகிறதா… தியான நிலையின் அவசியம் எல்லாம்…!

இச்சுழற்சி உனக்கு வேண்டுமா…? அல்லது அச்சுழற்சியில் சுழன்று விடுகின்றாயா…?

1.இருக்கும் நிலையை விட்டு ஏன் குருநாதர் பறக்கும் நிலையைச் சொல்கிறார் என்று எண்ணுகின்றாய்.
2.சக்தி தந்த இயற்கையின் தன்மையை அர்த்தமுள்ளதாகப் புரிந்து கொண்டு
3.சாமி சொன்ன சுவாச நிலையை மாற்றிடாது பிறவிப் பயனே போதும் என்ற எண்ணமுடன்
4.உன் நிலையை நிலை நிறுத்து… அதற்காகவே இந்தப் பாடம்...!

May 19, 2024

தியான நிலையையும்… சுவாச நிலையையும்… “ஒன்று தானப்பா…!”

தியான நிலையையும்… சுவாச நிலையையும்… “ஒன்று தானப்பா…!”

 

தியான நிலை சுவாச நிலை வேண்டும் என்று கேட்கின்றாய். இப்பொழுது இங்கே கொடுக்கும் பாடங்கள் எல்லாம் என்னப்பா..?
1.சுவாச நிலையே தான் தியான நிலை.
2.தியான நிலையே தான் சுவாச நிலை.

பூஜையில் அமர்ந்து நீ விடும் சுவாச நிலையில் ஜெபித்திடும் ஜெபங்கள் தான் சுவாச நிலையும் தியான நிலையுமாப்பா…? இல்லையப்பா…!

உன் எண்ணத்திற்குப் பல காலம் பல வழியில் பல வழிகளை நானும் என் சிஷ்யனும் செப்பிவிட்டோம். இன்னும் வேண்டுகிறாய் தியான நிலைக்கும்… சுவாச நிலைக்கும்…!

1.நீ எண்ணும் எண்ணமே தான் தியான நிலையும்… சுவாச நிலையும்… பெரும் ஜெப நிலையும்...!
2.எண்ணும் எண்ணமே தான் உன் வாழ்க்கை நிலையும்… உன் உடல் நிலையும் புரிந்ததா…?

எண்ணும் எண்ணம் போல் வாழ்வு…! என்றிட்டார். எண்ணும் எண்ணமே தான் வாழ்க்கையுடன் கலந்து வருகிறது.

உன் வாய் திறந்து சொல்லும் சொல்கள் தான் காற்றிலே சுற்றுகிறது என்று எண்ணுகிறாய். உன் மனதில் எண்ணும் சிறு எண்ணமும் உன் சுவாச நிலையில் தான் சுற்றுகிறது.

நீ எண்ணும் எண்ணமெல்லாம் உன் சுவாச நிலையில் வெளிப்படுகின்றது. நீ பிறவி எடுத்த நாள் முதல் கொண்டு நீ எண்ணிய எண்ணமும்… நீ சிரித்த… அழுத… பேசிய எல்லா ஓசைகளுமே உன்னைச் சுற்றியே தான் வந்து கொண்டிருக்கின்றது.

உன் கடந்த காலத்தை எண்ணிப் பார்…! உன் நினைவில் நீ ஒன்று நினைத்ததும்… நீ ஒன்று நடத்தியதும் ஞாபகத்தில் வந்திடும்.
1.நீ பேசிய பேச்சுக்கள் மட்டும் தான் சுற்றிக் கொண்டுள்ளது என்று எண்ணுகிறாய்
2.நீ நினைத்ததும் உன்னையே தான் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்தப் பிறவி மட்டுமல்ல…! ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உலகம் தோன்றிய நாள் முதல் அவன் உயிரணுவின் சுவாச நிலை எல்லாமே அவன் உள்ளவரை சுற்றிக் கொண்டே தான் உள்ளது.

இந்த உலகம் சுற்றுவதே இச்சுவாச நிலையில் தான்.
1.மனிதனைச் சுற்றியுள்ள சுவாச நிலையில் மனிதன் வாழ்கின்றான்.
2.உலகைச் சுற்றியுள்ள சுவாச நிலையில் உலகம் உருள்கின்றது.

உன் சுவாச நிலையையும் ஜெப நிலையையும் எந்த நிலைக்கப்பா நான் அருள்வது…? நீ எண்ணும் எண்ணமே தான் சுவாச நிலை… ஜெப நிலை… பெரும் ஜோதி நிலை எல்லாமே…!

காலத்தைக் கடத்திவிட்டாய்…! இனி இருக்கும் காலத்தில் உன் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி சுவாச நிலையையும் ஜெப நிலையையும் எய்திடப்பா…!

எண்ணும் எண்ணத்திலேயே மனிதன் வாழ… எண்ணம்தான் உயிர் ஜீவனப்பா…!
1.உன் உயிருக்கு ஏதப்பா ஆகாரம்…?
2.எண்ணும் எண்ணம் தான் அந்த உயிரின் ஜீவனப்பா…!
3.புரிகிறதா...! மிகவும் விளக்கமாகச் சொல்லியுள்ளேன்.

இந்நிலையைப் புரிந்து கொண்டால் உன் எண்ண நிலையை உயர்த்தி மகரிஷிகளுடனும் சித்தர்களுடனும் கலந்திடலாம்…!

May 9, 2024

பல பல எண்ணங்களை எண்ணியே… நம் சுவாச நிலையைக் கெடுத்துக் கொள்கின்றோம்

பல பல எண்ணங்களை எண்ணியே… நம் சுவாச நிலையைக் கெடுத்துக் கொள்கின்றோம்

 

1.நம் எண்ணத்தில் பல நினைவுகளைச் சிதறடித்துக் கொண்டு நாம் சுவாசம் எடுக்கும் பொழுது
2.அந்நிலை தான் நம் எண்ணத்தையும் சுவாசத்தையும் ஒருநிலைப்படுத்தி
3.பல அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகி
4.மீண்டும் மீண்டும் பல பல எண்ணங்களை எண்ணியே
5.நம் சுவாச நிலையைக் கெடுத்துக் கொள்கின்றோம்.

நாம் எந்த நிலையில்… எந்த நினைவில் இருக்கின்றோமோ… அந்நிலையில் எண்ணும் எண்ணத்தை வைத்து நாம் சுவாசம் எடுக்கும் பொழுது “அந்நிலையேதான்…” வாழ் நாட்களில் நம்முடன் கூடவே வருகின்றது.

1.அவ்வாண்டவனை நினைத்துச் சுவாசம் விடும் பொழுது
2.அந்தச் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்குப் பெரும் உன்னத நிலை கிட்டுகின்றது.

ஆனால் அந்நிலையை நாம் புரிந்திடாமல்…
1.நம் வாழ்க்கையையே…
2.நாம் நம்மையையே நாம் அடிமையாக்கிக் கொள்கின்றோம்.
3.அசுத்த சுவாச நிலை என்பதன் பொருளும் இது தான்.

நம் எண்ணத்தைக் கொண்டு தான் நம் சுவாச நிலையில் பலவித நறுமணங்கள் பெற முடிகிறது. நல்ல மணமுடைய சுவாச நிலையில் உள்ள பொழுது நம் உயிர் நிலைக்குப் பெரும் ஊட்டம் கிடைக்கின்றது.

நாம் வாழ்வதுவும் மடிவதுவும் நம் எண்ணத்தைக் கொண்டு தான்…!

இந்நிலையைப் புரிந்து கொண்டு இந்நிலையில் இருந்து தான் பல கோடிச் சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள்.

1.வாழும் வாழ்க்கையில் நிறைவு பெற்று வாழும் பொழுது
2.அச்சித்தர்களின் நிலையைப் போல இந்த மனித உடலைப் பெற்ற நாம் எல்லோருமே பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்.
3.உயிர் என்னும் ஆத்மாவிற்குப் பெரும் நிலையைத் தேடிடலாம்.

May 5, 2024

“நேரடியாக” நாம் எடுக்க வேண்டிய சக்தி

“நேரடியாக” நாம் எடுக்க வேண்டிய சக்தி

சக்தியின் நிலை கொண்டு உயிர் பெற்ற உயிர் அணுக்கள் எல்லாமே தன் தன் உயிர் நிலை நிலைத்து நிற்க உணவை உட்கொள்கின்றன. மனிதர்களுக்கு அவரவர்கள் உண்ணும் உணவிலிருந்து சில உணர்வுகளும் உண்டாகின்றன.

நாம் உண்ணும் உணவெல்லாம் நம் உடலை வளர்க்கத்தான் என்ற நிலையில் உண்ணுகின்றோம். நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டும் தான் நம் உடலை நாம் காத்திட முடிகிறது என்றால்…
1.பல கோடிச் சித்தர்களும் பல தவசு முனிவர்களும் பல ரிஷிகளும்
2.பல நாள்கள் ஆகாரம் புசிக்காமலே ஜெப நிலையிலிருந்து இன்றும் இருந்து கொண்டுள்ளார்கள்.
3.அது எந்நிலையப்பா…?

நாம் உண்ணும் உணவு நமக்குச் சக்தியளித்து சக்தி எல்லாம் நமது உடலில் ஈர்த்துப் பாக்கி நிலையில் உள்ளது கழிவாகிறது என்னும் நிலை தான் மனிதர்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ளது.

நம் உடல் ஒரு இயந்திரம் போல் உள்ளது என்று எண்ணுகின்றோம்.

நாம் உண்ணும் உணவின் நிலை என்ன என்றால் நாம் எந்த ஆகாரத்தைப் புசிக்கின்றோமோ அந்நிலையிலிருந்து அவ்வாகரத்தின் தன்மை “நம் சுவாச நிலைக்கு வந்துதான்” நாம் பிறகு சுவாசம் எடுக்கும் பொழுது நம் உடல் அந்த ஆகாரத்தை ஏற்கிறது.

சித்தர்கள் ஞானிகள் பெற்ற நிலை எல்லாம்
1.”அச்சுவாச நிலையிலிருந்தே” தன் உடலுக்கு வேண்டிய ஆகாரத்தை ஏற்று எடுக்கும் நிலையை
2.அச்சூரியனிலிருந்தே பூமிக்குக் கிடைத்திடும் அணுவின் சக்தி நிலை கொண்டு தன் சுவாச நிலைக்கு ஏற்றுக் கொள்கிறார்கள்.

மரம் செடி கொடிகளின் நிலை எல்லாம் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளின் நிலைக்கும் உயர்ந்த நிலை பெற்ற நிலையப்பா…!

அச்சூரிய சக்தியிலிருந்து ஒளிக் கதிர்கள் நம் பூமியைத் தாக்கி அந்நிலையிலிருந்து தான் நாம் சுவாசிக்கின்றோம். மற்ற மிருகங்களின் நிலையும் மற்ற ஜீவனின் நிலையும் சூரியச் சக்தியின் ஒளிப் பிளம்பு பூமியில் பட்ட பிறகு தான் தன் சுவாச நிலைக்கு எடுத்துக் கொள்கிறது.
1.கீழ் நோக்கிய சுவாச நிலை கொண்டு தான்
2.இயற்கையில் எல்லோருமே ஜீவன் பெற்றுள்ளோம்.
3.அப்பூமி ஈர்த்து அந்நிலையில் தான் நம் சுவாச நிலைக்கு எடுக்கின்றோம் சுவாசத்தை.

மரம் செடி கொடிகளின் இலைகள் எல்லாம் அவ்ஈசனின் சக்தியைப் பெற்று அவ்ஈசனின் சக்தி என்பது சூரியனிலிருந்து வெளி வரும் ஒளிக் கதிர்களை நேராகவே தன் சுவாச நிலைக்கு ஈர்க்கின்றது.

அந்நிலையிலிருந்து நாம் பெறும் புஷ்பங்களும் காய் கனிகளும் நாம் உண்ணும் பொழுது நம் உயிரணுவிற்கும் நம் உடலுக்கும் பெரும் ஆரோக்கிய நிலை தருகின்றன. மற்ற அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்குவதில்லை.

1.மற்ற ஜீவராசிகளைச் சமைத்து உண்ணும் பொழுது
2.எந்நிலை கொண்டு எப்படி உஷ்ணத்தை ஏற்றிச் சமைத்தாலும்
3.அந்த அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்கத்தான் செய்யும்.

அந்த அணுக்களின் நிலையிலிருந்தெல்லாம் தப்பி… நாம் உண்ணும் உணவில் நல்ல நிலையை எடுத்துக் கொள்ள… அன்று வாழ்ந்த சித்தர்கள் நமக்குச் சொல்லிய பல வழிகள் மறைந்து விட்டன.

நாம் ஜெப நிலையிலிருந்து நல்ல உணர்வுடன் நாம் விட்டிடும் சுவாச நிலையிலிருந்து
1.அந்த ஈஸ்வர சக்தியை எடுத்துக் கொண்டால்
2.நம் நிலைக்கும் அச்சூரியனிலிருந்து வரும் சக்தி நிலைகள் பூமிக்கு வந்து தாக்கிடாமல்
3.பெரும் உன்னதமான நிலையில் நம் சுவாச நிலைக்கே அது வந்து
4.அழியாச் செல்வமான நம் உயிரணுவிற்கு… நம் ஆத்மாவிற்கு… சகல நிலையையும் பெற்றிடலாம்.

சித்தர்களும் ஞானிகளும் பல காலங்கள் ஆகாரம் புசித்திடாமல் இருந்த நிலைகள் எல்லாம் எப்படி...? என்று இப்பொழுது புரிந்ததா…!

தியான நிலையில் இருந்து கொண்டிருந்தால் இந்நிலையில் தியானம் பெற்றவர்கள் நிலை ஆயிரம் அணுகுண்டுகளை வெடித்தாலும் நம் சுவாச நிலைக்கு அவ்வணுகுண்டின் அழிக்கும் தன்மை என்றுமே வந்து தாக்கிடாது.

நம் கண்ணிற்குத் தெரியாமல் வாழும் பல கோடி ரிஷிகளின் நிலை எல்லாம் இது தானப்பா…!