ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 31, 2018

சட்டையில் ஒட்டும் தூசிகளைத் தட்டிவிடுவது போல் “ஆன்மாவில் படும் தீமைகளைத் தள்ளிவிட வேண்டும்…!”


நமது வாழ்க்கையில் கோபமோ வெறுப்போ வேதனையோ இவைகளை அதிகமாகச் சந்திக்க நேருகின்றது. அதன் வழி நம் உடல்களிலே அந்த அணுக்கள் பெருகுகின்றது.

கோபமும் வேதனையும் வெறுப்பும் இவை வரும் போது நம் நல்ல குணங்களுக்குள் ஊடுருவி நம் உடலுக்குள்ளே “பெரும் போராக… நடக்கின்றது…!”

நல்ல அணுக்கள் தன் ஆகாரத்திற்கு உணர்ச்சிகளை உந்தினால் அந்தக் கார உணர்ச்சிகளை உணவாக உட்கொள்ளும் அணுக்கள் அதனுடைய வளர்ப்பிற்கு அதை நுகரச் செய்து அதை உணவாக எடுத்துக் கொள்ளும் போது நம் உயிரிலே பட்டுத்தான் இந்த உணர்வுகள் செல்லுகின்றது.
1.அப்போது இந்த உணர்வுகள் நமக்குள் குழப்பமும் சிந்திக்கும் தன்மை இழக்கவும்
2.நம்மை அறியாதபடி ஓர் இயக்க நிலையாக மாறுகின்றது.

உதாரணமாக ஒரு தரம் கோபித்தவரைப் பார்க்கின்றோம். அந்தக் கோபித்த உணர்வுகளோ நமக்குள் அந்த அணுக்களாக மாறி மாறி நம்மை அறியாமலே அந்தக் கோப உணர்ச்சிகளைத் தூண்டும்.

அதனதன் பசிக்கு ஏங்கும் போது அதை நாம் நுகர நேருகின்றது. உயிரிலே படுகின்றது. அந்த உணர்ச்சியின் தன்மை நாம் அறிகின்றோம். அதன் வழி நம் எண்ணம் சொல் செயல் எல்லாம் அமைகின்றது.

இவ்வாறு நம் உடலில் அந்தக் கார உணர்ச்சிகள் அதிகமாக அதிகமாக அந்த அணுக்கள் பெருகப் பெருக நம் உடலில் “இரத்தக் கொதிப்பாக” மாறுகின்றது.
1.நம் உடலில் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட ஏற்பட
2.அதாவது உணர்ச்சியின் வேகம் கூடக் கூட
3.நரம்பு மண்டலங்கள் அந்த வீரிய துடிப்புகள் துடிக்கத் துடிக்க
4.கடுமையான நிலையாகி நம் நரம்பு மண்டலங்கள் சரியாக இயக்காதபடி விடைத்து விடுகின்றது.

நாம் நுகரும் உணர்வுகளை நம் உடலில் பரவச் செய்யும் (TRANSACTION) அந்த நுண்ணிய நரம்புகள் அந்தக் கார உணர்ச்சிகளின் அழுத்தம் தாங்காது வெடித்து விட்டால் “மரணம் தான்….!”

அதே அழுத்தத்தின் தன்மை நமது நுரையீரல்களில் அதிகமாகச் சேர்ந்து அந்தப் பாகங்களில் வெடித்து விட்டால் “இரத்த இரத்தமாகக் கக்க வேண்டியது தான்….!”

இதைப் போல நாம் நுகர்ந்த உணர்வுகள் அதீதமாக நம் நரம்பு மண்டலங்களில் அது இணையப்படும் போது நம்மை அறியாமலேயே இத்தகைய கடுமையான நிலைகள் ஏற்பட்டு விடுகின்றது.

இதிலிருந்து மீள்வதற்கு எவ்வழியில் நம்மைச் சாந்தப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அடிக்கடி மகரிஷிகள் உணர்த்திய பேருண்மைகளைச் சொல்லி வருகின்றேன்.

எல்லாம் கேட்கின்றோம். அப்புறம் அதையே மறந்து விடுகின்றோம்.  மறந்து மீண்டும் அந்த இயற்கையின் செயலுக்கே சென்று விடுகின்றோம். காரணம்… நல்லதையே எண்ணிக் கொண்டு இருந்தாலும்
1.நம் உடலிலே ஏற்கனவே பதிவான உணர்வுகள்
2.அந்த அணுக்களுக்குப் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.
3.அந்த உணர்ச்சிகள் உந்தி வேகமான நிலைகள் வரப்படும் போது நம் உயிருக்கு எட்டுகின்றது.
4.அந்த உணர்வை நுகரச் செய்கின்றது.
5.நுகர்ந்த பின் அதே உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது. நம்மை அறியாமலே அந்தச் செயலுக்குச் சென்று விடுகின்றோம்.
6.தவறு நாம் செய்யவில்லை.

நம்மை அறியாது இத்தகைய இயக்கங்கள் நம்மை இயக்குகின்றது. நம்மை அறியாது வந்து தாக்கும் இந்த உணர்விலிருந்து நாம் எப்படி விடுபடுவது…? என்பதனை நாம் அறிதல் வேண்டும்.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வே நம்மை இயக்குகின்றது. அதைத் தடுத்து நம்மை நாம் காக்க வேண்டும் என்றால் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை  நுகர்ந்து நம் உடல் முழுவதும் படரச் செய்ய வேண்டும்.

அடிக்கடி அந்த உணர்வை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். ஆத்ம சுத்தி செய்யும் பழக்கம் நமக்குள் வந்துவிட்டால்
1.நம் உடையில் ஒட்டும் தூசியைத் தட்டிவிடுவது போல்
2.நம்மை அறியாது இயக்கும் தீமைகளை எளிதில் விலக்கித் தள்ளிவிடலாம்.

மனிதன் வாழ்க்கையின் கடைசி எல்லை - உங்கள் எண்ணம் தான் உங்களைக் காக்கும்...!


கிட்னி மாற்று (KIDNEY) ஆபரேஷன் செய்தால் இன்னொரு மனித உடலில் இருக்கக்கூடிய அந்த உறுப்புகளை எடுத்து பழுதான உடலில் இணைக்கின்றார்கள்.

அப்படிப் பொருத்தினாலும் கூட இவர்கள் இரத்தம் வேறு. அவர்கள் இரத்தம் வேறு. இந்த உறுப்பில் இருக்கின்ற அணுக்கள் வேறு. அவர்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் வேறு.

இதை இரண்டையும் இணைக்கச் செய்வதற்கு இதை சமப்படுத்துவதற்காக வேண்டி ஒரு மருந்தைக் கொடுப்பார்கள். கிட்னி ஆபரேஷன் செய்யும் போது இந்த மருந்தைக் கொடுத்தவுடனே இரண்டும் ஒத்துக் கொள்கின்றது.

அப்பொழுது புதிதாக ஒட்ட வைத்த அந்த கிட்னி அது கொஞ்சம் கொஞ்சமாக ஜீவனாகி வேலை செய்யும். ஆனாலும் அந்த மருந்தைத் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.

1.யாராவது காய்ச்சல் உள்ளவர்களைப் பார்த்து விட்டாலும்
2.சாப்பிடும் தட்டைக் கொதிக்கின்ற தண்ணீரில் கழுவாமல் சாப்பிட்டாலும்
3.அந்த எதிர்ப்பு சக்தி இல்லாததால் மறுபடியும் கிட்னி கழன்று கொள்ளும்.
4.அந்த மனக்கட்டுப்பாடு இல்லை என்றால்
5.காசு செலவழித்து ஆபரேஷன் செய்தும் பயன் இல்லாமல் போய்விடும்.

ஏனென்றால் இந்த உடலில் சிறிது நாள் வாழ்வதற்கு இத்தனை முயற்சி எடுக்கின்றோம். இதையெல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கின்றோம்.

உடல் சரியில்லை என்றால் உடனே டாக்டரிடம் போகின்றோம். மருந்தைச் சாப்பிடுகின்றோம். ஓரளவிற்குக் குணமானதும் வந்து விடுகின்றோம்.
1.மறுபடியும் நோய் வருகிறது.
2.மறுபடியும் டாக்டரிடம் சென்று மருந்து சாப்பிடுகின்றோம்.
3.இப்படி நோய் வந்து கொண்டே தான் இருக்கின்றது.
4.நாம் மருந்தைச் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கின்றோம்.
5.கடைசியில் எல்லா மருந்தும் ஒட்டு மொத்தமாகப் போட்டு ஒரே அமுக்கு அமுக்கிவிடுகின்றது.
6.அமுக்கியவுடனே உடலெல்லாம் நலிந்து “உன் விதி அவ்வளவு தான்...!” என்று உயிர் வெளியில் போகின்றது.

இந்த உடலில் நாம் சேர்த்து கொண்ட உணர்வுக்கொப்ப இன்னொரு உடலில் கொண்டு பொருத்தி விடுகிறது. உடலில் சேர்ந்த விஷத்திற்கு தகுந்த மாதிரி அடுத்த உடலை மாற்றி விடுகிறது. இது உயிரின் வேலை.

உதாரணமாக கொடூரமாகத் தாக்கும் புலியை மான் அதிகமாகப் பார்த்த பின் பயத்தினால் புலியின் உணர்வு பூராம் மானின் உடலுக்குள் போகின்றது.

அதைத் தான் கண்ணன் வெண்ணெயைத் திருடுகின்றான் என்று சொல்வது.
1.புலியின் வலுவான உணர்வு மானின் உயிரிலே மோதி
2.உன்னை அது கொல்லப் போகின்றது என்று சொல்கின்றது.
3.அதன் வழி தப்பித்துப் போகின்றது.

இருந்தாலும் மான் புலியை உற்றுப் பார்த்துப் பயந்த உணர்வுகள் அனைத்தும் மானின் இரத்தத்தில் கலக்கின்றது. புலியின் வலுவான உணர்வுகள் மானின் உடலை உருவாக்கிய அணுக்களுக்குள் சேர்ந்து விடுகின்றது.

அப்போது மானுக்குப் புலியின் நினைவே அதிகமாக இருக்கின்றது. மான் உடலை விட்டுச் சென்ற பிற்பாடு எங்கே போகிறது...?

1.செத்தவுடனே மானின் ஈர்ப்பிற்குத் தான் போக வேண்டும்.
2.ஆனால் புலியின் நினைவு அதிகரித்ததால் புலி உடலின் ஈர்ப்புக்குப் போய்ப் புலியாகப் பிறக்கிறது.
3.மான் புலியிடம் சிக்கியவுடனே எத்தனை வேதனைப்படுகிறது..?
4.எலி பூனையிடம் சிக்கியவுடனே அது எத்தனை வேதனையாகிறது...?

இப்படித்தான் நாம் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்தோம். பல கோடித் தீமைகளை நீக்கி எல்லாவற்றிலும் எத்தனையோ கொடுமைப்பட்டுத்தான் மனிதனாக வந்திருக்கிறோம்.

ஒரு எலி பூனைக்கு இரையாகின்றது. அந்த வேதனையுடன் என்னைக் கொல்கிறானே என்று எண்ணுகின்றது. பூனை உடலுக்குள் போகின்றது.

இத்தனை வேதனைகளையும் பட்டுத்தான் பூனை உடலுக்குள் எலி போகின்றது. ஆனால் அந்த எலி பூனைக் குட்டியாகப் பிறக்கும் போது அந்தப் பூனை எத்தனை வேதனைப்படுகின்றது..?

அதே போன்று தான் மான் வேதனையுடன் தான் புலி உடலுக்குள் போகின்றது. புலிக் குட்டியாக அது பிறக்கும் போது அந்தப் புலிக்கு வரும் வேதனை எத்தனை வேதனை...?

இவைகள் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று ஆகி இந்த வேதனை உணர்வுடனே தான் வளர்ந்து வருகிறது. இதே மாதிரி நாம் எத்தனையோ உடல்கள் பெற்றிருக்கின்றோம்.

பாம்பு நம்மைக் கடிக்கும் என்று அதை அடித்து நரக வேதனைப்படுத்துகின்றோம். பாம்பின் உயிர் நமக்குள் வந்து விடுகிறது. பாம்பின் உயிர் நம் உணர்வை எடுத்து மனிதக் கருவாகின்றது. “மனிதனாகவே பிறக்கின்றது....!”

மனிதனாகப் பிறக்கும் நிலையில்
1.குழந்தை பிறக்கும் முன்னாடி அந்தத் தாய் படும் அவஸ்தை எத்தனை எத்தனை..?
2.பிறந்த பிற்பாடு எத்தனை அவஸ்தைப்படுகின்றோம்...?
3.ஆனாலும் பாசத்தால் குழந்தையை ஆதரித்து நல்ல முறையில் வளர்க்கின்றோம்.

எலியைக் கொன்று சாப்பிட்டது பூனை. அந்த எலியின் உயிர் போகும் போது பூனையின் உடலுக்குள் சென்று பூனையாகப் பிறந்தவுடனே தன் குட்டியைக் காக்கும் தன்மை வருகின்றது.

இப்படித் தான் இயற்கையின் தன்மையில் ஒவ்வொன்றும் விளைகின்றது என்பதனை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குத் (ஞானகுரு) தெளிவாகக் காட்டினார்.

இத்தனையும் குருநாதர் அனுபவத்தில் தான் கொடுத்தார். பாட நிலைகளில் அல்ல. நான் அனுபவித்தேன். தெரிந்து கொண்டேன்.

இத்தனையும் அனுபவித்துத் தெரிந்து கொண்ட பிற்பாடு...
1.நீங்கள் தீமைகளில் போய்ச் சிக்காதீர்கள் என்று
2.உங்களுக்கு அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியைக் கொடுக்கின்றேன்.

ஞானிகளின் அருளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் யார் கேட்கின்றார்கள்...? அதைத் தூக்கி எறிந்து விடுகின்றார்கள்.

இவ்வளவு பேருண்மைகளைக் கொடுக்கின்றோம். ஆனால் அவர்களை வளர்த்துக் கொள்ள முடியவில்லை. மீண்டும் எங்கே போகின்றோம் என்ற வகையில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நீங்கள் எங்கே சென்றாலும் நோயை நீக்கி எந்த மருந்தைச் சாப்பிட்டாலும் எந்தக் கோயிலுக்குப் போய் ஆண்டவனைத் தரிசிக்கப் போனாலும்
1.யாம் சொல்லும் முறைப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துப் பாருங்கள்.
2.உங்களை உங்கள் எண்ணம் தான் காக்கும். நிச்சயம்...!

May 30, 2018

தர்மன் சூதில் சிக்குகின்றான்… கண்ணனோ போரில் காக்கின்றான்…!” – விளக்கம்


தர்மன் தனக்குள் வலிமையாகி ஆட்சி புரிந்தாலும் “சூது…” என்ற நிலையில் சிக்கப்பட்டுச் சூட்சமத்தில் சிக்குகின்றான். தன் குடும்பத்தின் பாரம்பரியத்தையும் இழந்து விடுகின்றான்.

ஒருவர் நம்மிடம் வந்து ஆசை வார்த்தைகளைப் பேசுகின்றார். அந்த ஆசையை நமக்குள் சேர்த்துக் கொண்ட பின் என்ன செய்கின்றோம்…?

1.உங்களுக்கு அது வருகின்றது… இது வருகின்றது… அது கிடைக்கும்… இது கிடைக்கும்…! என்று ஆசையைக் காட்டியபின்
2..அவர்கள் செய்யும் தவறான உணர்வுகளை அறியாது
3.அந்த ஆசையில் நாம் சிக்கப்பட்டு
4.எத்தனை ஏமாளித்தனமான நிலைகளில் இருக்கின்றோம் என்று தெரிந்து கொள்ளலாம்.

அதனால்தான் இங்கே சூதின் தன்மை வரப்படும்போது உண்மையின் உணர்த்தும் அந்த உணர்வின் தன்மையை அறியாது (திரௌபதையை) அங்கே அவமதிக்கின்றோம் என்று காட்டுகின்றனர்.

புறக் கண்ணால் பார்த்தாலும் அகக் கண்ணால் நுகரும் உணர்வுகள் நமக்குள் உணர்ச்சிகளைக் காட்டினாலும்
1.ஆசையின் நிமித்தம் நாம் சென்று அவர் சொல்லும் வழிகளில் முழுவதும் சென்ற பின்
2.கடைசியில் சிக்கலான பிற்பாடுதான் “ஏமாந்துவிட்டோம்…!” என்று நாம் உணர முடிகின்றது.

குடும்பத்தில் ஆண்களானாலும் பெண்களானாலும் தனது வாலிபப் பருவம் வரும்போது அது ஒரு இச்சைக்கு இணங்கி விட்டால் அந்த ஆசையின் உணர்வால் இயக்கப்படுகின்றது.

பின் இந்த உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்துக் கொண்ட பின் அந்த இச்சையே இயங்கத் தொடங்கிவிடுகின்றது. தீமையின் விளைவுகளைப் பற்றிச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது.

ஆகவே இங்கே மகாபாரதப் போர் நடக்கின்றது. நல்ல வழியைக் காட்டும் தாய் தந்தையரை மதிக்க முடியாத நிலைகள் ஏற்படுகின்றது. அன்னை தந்தையின் உண்மையின் உணர்வை அறிய முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

இதே போன்று தான் நட்பின் தன்மை கொண்டு தொழில் நல்ல நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணினாலும் ஒருவர் ஆசை வார்த்தையைக் காட்டிய பின் சூதாட்டத்தில் தாயக்கட்டையைப் போட்டு தோற்றுவிடுவது போல் சம்பாரித்த பணத்தை எல்லாம் ஏமாற்றுபவரிடம் கொடுத்துவிட்டு எல்லாவற்றையும் இழந்து விடுகின்றார்கள்.

நல்ல குணங்கள் இருப்பினும் ஆசையின் உணர்வால் சிக்குண்டு செய்வதறியாது ஏமாற்றுபவரிடம் சிக்கப்பட்டு நல் ஒழுக்கங்களைச் சீர் கெடச் செய்து இப்படி மகாபாரதப் போராக வாழக்கையை வெறுக்கச் செய்கின்றது என்ற நிலையை அங்கே காட்டப்படுகின்றது.

மகாபாரதப் போரில் இன்னொன்றும் காட்டுவார்கள். அதாவது “தனுர் வேதம்” என்று வரப்படும் போது மந்திர தந்திரங்களால் பிறருடைய நிலைகளை மயக்கி அவர்களை அடிமையாக்க வேண்டும் என்று காட்டுகின்றனர்.

தன் எதிரிகளை வீழ்த்த தனுர் வேதம் தேவை என்று அதற்கென்று குரு தன்மையைக் கூட்டுகின்றனர்.

தனுர் வேதம் என்பது ஒரு உடலுக்குள் பிறிதொரு உணர்வினைச் சேர்த்து அந்த உடலின் உணர்வினை மாற்றப்பட்டு அவன் இறந்த பின் அந்த மந்திரத்தை எடுத்துக் கொள்வது.

உதாரணமாக ஒரு நோயாளி இருக்கிறார் என்றால் அவரிடத்தில் அதிகமாக நாம் பழகுகின்றோம் நேசிக்கின்றோம் என்றால் அந்த உணர்வின் வலிமை பெற்ற பின் அந்த உடலை விட்டு அவர் இறந்தால் அந்த ஆன்மா நமக்குள் வந்து விடுகின்றது. நமக்குள் வந்து அதன் வழியே நம்மையும் இயக்கும்.

இதே போலத் தான் தனுர் வேதம் என்ற நிலையில் செயற்கையில் மந்திரம் கொண்டு ஒரு உடலுக்குள் ஊடுருவச் செய்து அது சிந்தனையை சிதையச் செய்வார்கள்.

மகாபாரதப் போரில் சூது என்ற நிலைகள் இருந்தாலும்
1.கண்ணன் அது தன்னை எதுவும் தாக்கிடாது
2.தேரை அழுத்திக் கீழே தணித்து விடுகின்றான்.
3.அவன் உத்தரவு இல்லாது எதுவும் செய்யாது என்று காட்டுகின்றார்கள்.

கண்கள் உணர்வு கொண்டு புறக் கண்ணால் பார்த்தாலும் மாயா உணர்வு கொண்ட நிலைகள் வருவதை
1.கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன்கள்
2.அதனை எப்படிக் காக்க உதவுகிறது…? என்ற நிலையை அங்கே காட்டுகின்றனர்.

அகண்ட அண்டத்தின் உணர்வுகள் ஒரு பிரபஞ்சத்திற்குள் வந்து தாவர இனங்களாக வளர்ந்து ஒரு தாவர இனத்தின் தன்மையை ஒரு உயிரணு சாப்பிடும் என்றால் அடுத்த தாவர இனத்தை அது நுகர்வதில்லை.

இதைப் போன்று தான் நம் உடலுக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் ஒன்று சேர்த்து வாழும் நிலையில்
1.தீமைகளை அகற்றிடும் உணர்வு பெற்ற மனிதன்
2.ஒவ்வொரு போர் முறைகளிலும் வென்று வென்று
3.எல்லாவற்றையும் வென்றிடும் மனித உடலைப் பெற்றான்.
4.ஆனால் மனிதனான பின் ஆசையின் தன்மை கொண்டு சூதுகளில் சிக்கி விடுகின்றோம்
5.அதாவது உண்மையின் உணர்வை நமக்கு உணர்த்தி நல்ல உணர்வை நமக்குள் வளர்த்திடும்
6.அந்தத் திரௌபதையை நாம் அவமதிக்கின்றோம்.

ஒருத்திக்கு ஐந்து கணவன் என்றால் என்ன…? புலன் அறிவு ஐந்து அது எதன் எதன் உணர்வுகளைக் கவருகின்றதோ அதன் உணர்வுக்கொப்ப உணர்ச்சிகளை நமக்குள் தெரியப்படுத்திக் காட்டும். அது தான் திரௌபதை.

கண்கள் எப்படிப் புற நிலையில் காட்டுகின்றதோ அக நிலையைக் காட்டுவதைக் கண்ணனின் சகோதரி “திரௌபதை” என்று காட்டுகின்றனர்.

நமக்குள் தீமையின் உணர்வுகளைத் தெளிவாக்கி நாம் எப்படி வாழ வேண்டும் என்ற நிலையைக் காட்டி… உயிரான உணர்வின் தன்மை கொண்டு நாம் எப்படி வாழ வேண்டும்/..? என்ற நிலையைச் சித்தரிக்கும் நிலை தான் மகாபாரதம்.

உயிரணு தோன்றி பல கோடிச் சரீரங்களைப் பெற்று மனிதனாக வந்த நிலையை சிவ தனுசு என்றும் தீமைகளை நீக்கி உணர்வை ஒளியாக மாற்றுவதை விஷ்ணு தனுசு என்றும் இராமயாணத்தில் காட்டுகின்றனர்.

இருளை அடக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தான் விஷ்ணு தனுசு என்று அன்று காரணப் பெயர் வைத்தார்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து வாழ்க்கையில் நம்மை அறியாமல் மாயமாக இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட முடியும்...! என்பதையே நம்முடைய சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

அடிக்கடி உணர்ச்சி வசப்படுகின்றோம் (TENSION) - அதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்...?


என் பிள்ளையை எப்படியெல்லாம் வளர்த்தேன்.... எல்லாம் நல்லது செய்தேன்....! “தொலைந்து போகின்றவன்... இப்படியெல்லாம் செய்கின்றானே...! என்று நாம் திட்டுகின்றோம்.

அப்போது இந்தப் பக்குவம் கெடப்படும் போது நாமும் பக்குவம் கெட்டுவிடுகின்றோம். அவனையும் பக்குவ நிலையிலிருந்து கெட வைத்து விடுகின்றோம்.

வியாபாரம் செய்கின்றோம். ஒருவர் ஒரு தடவை கேட்டவுடனேயே கடனைக் கொடுத்து விடுகின்றோம். ஆனால் சந்தர்ப்பம் கடன் கொடுத்தவரால் திரும்பக் கொடுக்க முடியாமல் போய்விடுகின்றது.

கடன் கொடுத்தவனால் பணத்தைக் கொடுக்க முடியவில்லை என்று சொன்னால் நமக்குள் என்ன ஆகின்றது…? “நான் கொடுத்தேன்... என்னை ஏமாற்றி விட்டான்...!” என்றால் இந்தப் பக்குவம் கெட்டுப் போய்விடுகின்றது.

கொடுத்தேன் ஏமாற்றி விட்டான்… கொடுத்தேன் ஏமாற்றி விட்டான்… கொடுத்தேன் ஏமாற்றி விட்டான்…! என்று இப்படியே சொல்லிக் கொண்டிருக்கும் போது நம் நல்ல குணங்கள் எல்லாம் மாறுகின்றது. பக்குவ நிலைகள் கெடுகின்றது.

1.நான் இதைச் செய்தேன்.., அதைச் செய்தேன்...! என்று சொல்கின்றோம்
2.அந்தப் பாட்டைப் பாடுகின்றோம்
3.ஆனால் (நல்ல) பக்குவத்தைக் கெடுத்து விடுகின்றோம்.
4பல நினைவுக்குச் சென்றுவிடுகின்றோம்

தோசையைச் சுட வேண்டும் என்றால் மாவை எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி வைத்து விடுகின்றோம்.  ஆனால் தீயை நிறைய எரிய விட்டுத் தோசையை ஊற்றினால் என்ன செய்யும்...? கருகிப் போய்விடும்.

குழிப் பணியாரம் சுடும் போது நெருப்பை அதிகமாக வைத்துவிட்டு மாவை ஊற்றினால் என்ன செய்யும்...? கீழே அடியில் பிடித்துவிடும். கருகிவிட்டால் சுவை இருக்காது.

ஆகவே அது அதற்கு என்ன பக்குவம் செய்ய வேண்டுமோ அந்த நிலை இல்லையென்றால் ருசி கெட்டுப் போய்விடுகின்றது.

அதைப் போன்று தான் கோபம் ஆத்திரம் வேதனை என்ற உணர்ச்சிகள் நமக்குள் அதிகமான பின் நம் பக்குவம் தவறிப் போய்விடுகின்றது. நம் சொல்லும் நயம் கெடுகின்றது.

1.பக்குவம் தவறுவதால் கார உணர்ச்சிகள் நம் உடலுக்குள் வந்து
2.நம் உடலிலுள்ள உறுப்புகளில் அதே கார உணர்ச்சியைத் தூண்டும் இரத்தமாக மாறுகின்றது.
3.இரத்தத்தில் கார உணர்ச்சிகள் வந்தவுடனே எல்லா அணுக்களும் கெடும். பக்குவம் தவறிப் போகும்.

எல்லோருக்கும் நல்லதைச் செய்கின்றோம்... பின்னாடி நான் இதைச் செய்தேன் அதைச் செய்தேன் என்று சொல்கின்றோம்.

செய்த பிற்பாடு நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் பக்குவம் கெட்டுத்
1.திட்ட ஆரம்பித்து விடுகின்றோம்.
2.அல்லது குறை கூற ஆரம்பித்து விடுகின்றோம்
3.இந்தக் குறையைத்தான் வளர்க்கின்றோம்.

அதே சமயத்தில் நோயாளியைக் காப்பாற்ற எண்ணுகின்றோம். அந்த நோயின் தன்மையோ வேகம் அதிகமாக இருக்கின்றது.

அதைக் கேட்டுக் கொண்ட பின் தவறிப் போய் பாசத்தால் “உனக்கு இப்படி ஆகிவிட்டதே...!” என்று நமக்குள் அவரின் நோயின் உணர்வைச் சேர்த்துக் கொண்டோம் என்றால் அந்தப் பக்குவம் தவறிவிடுகின்றது. அதே  நோய் நமக்குள்ளும் வந்து விடுகின்றது.

மற்றவரைக் காப்பாற்ற வேண்டும், அப்படியே நம்மையும் காப்பாற்ற வேண்டும். அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்...?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் படர வேண்டும். எங்கள் உடலிலே உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் பெற வேண்டும் என்று பக்குவப்படுத்தி அந்த வலுவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் நோயாளியின் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து அவர் நோயிலிருந்து நீங்கி நன்றாக வேண்டும் என்று அந்த நல்ல வாக்கினை அவரிடம் பதிவு செய்ய வேண்டும்.

ஏனென்றால் அவரால் முடியவில்லை. அப்பொழுது நமக்குள் அருள் உணர்வுகளை விளைய வைக்கின்றோம், சொல்லை உணர்வாக்குகின்றோம். அருள் ஒளியாகப் பாய்ச்சுகின்றோம். அந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றோம். நோயாளி அதைப் பெறுகின்றார்.

உதாரணமாக நம்முடைய நண்பன் சந்தர்ப்பத்தால் வேதனைப்படுகின்றான். என் பையன் இந்த மாதிரிச் செய்து விட்டான். அந்த மாதிரிச் செய்து விட்டான் என்று சொல்லும் போது அந்தச் சந்தர்ப்பம் நண்பருக்குள் வேதனை உருவாகின்றது.

ஆனால் அந்த நண்பனை நாம் சந்திக்கும் சந்தர்ப்பம் நமக்கு என்ன செய்கின்றது..? அவர் வேதனையைக் கேட்டவுடனே அதே சந்தர்ப்பம் நமக்குள்ளும் வேதனையை உருவாக்குகின்றது.

நாம் சந்திக்கும் சந்தர்ப்பத்தில் தான் இவ்வாறெல்லாம் நடக்கின்றது. பல பல நன்மைகளை நாம் செய்தாலும் பரிபக்குவ நிலையை நாம் பெறத் தவறினால் இந்த வாழ்க்கையில் தேய் பிறையாகி மீண்டும் கீழே தான் போவோம்.

சர்க்கஸில் வேலை செய்பவர்கள் பல விதமான விளையாட்டுகளைச் செய்வார்கள். பார் (BAR) விளையாட்டில் இத்தனாவது நூலில் வருகின்றார்கள் என்று தெரிந்து அதைத் தாவிப் பிடித்துவிடுகின்றார்கள்.

தன்னுடைய வேகத்தில் என்ன செய்கிறார்கள்..? நிற்பவர்களையும் அந்தச் சமப்படுத்தும் நிலை கொண்டு (BALANCE செய்து) தூக்கி மேலே கொண்டு போய்விடுகின்றார்கள்.
1.அதிலே சிறிது பக்குவம் தவறி விட்டால் கீழே தள்ளி விட்டு விடும்.
2.சர்க்கஸில் விளையாடுகின்ற மாதிரிதான் நம்முடைய வாழ்க்கை.

எதனுடைய உணர்வை எடுத்தாலும் இந்தப் பக்குவம் தவறினால் நம் நல்ல குணங்கள் வீழ்ந்து போகும். வீழ்ந்த பிற்பாடு நாம் நல்லது செய்வது என்பது முடியாது போய் விடுகின்றது.

அடுத்து நல்ல செயலை வளர்க்க முடிவதில்லை. எல்லாம் நல்லது செய்தேனே... எனக்கு இப்படியெல்லாம் வந்து விட்டதே…! என்று இப்படித்தான் சொல்கின்றோம்.

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் பிறர்படும் துயரங்களையோ அல்லது பிறர் செய்யும் தவறுகளையோ பார்த்தால் “ஈஸ்வரா...!” என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எடுக்க வேண்டும்.

எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணினால் அந்த வேகத்தைத் தணித்து விடுகின்றோம். நல்ல சிந்தனை வருகின்றது.

1.கோபமோ வேதனையோ எதனால் நமக்கு வருகின்றது என்று சிந்தித்து
2.அதைத் தடுத்து நிறுத்தியவுடனே
3.நல்ல உணர்வுகள் நமக்குள் வருகின்றது.
4.சாந்தம் வருகிறது, விவேகம் வருகின்றது. அது நல்லதாகின்றது.

ஆக கோபப்படுவோரின் உணர்வுகளையும் வேதனைப்படுவோரின் உணர்வுகளையும் நமக்குள் சேராது விவேகத்தின் தன்மை கொண்டு அவனுக்குள் மாற்றும் சக்தியாக வருகின்றது. அப்பொழுது மற்றவர்கள்  கஷ்டம் நமக்குள் வராது.

அதற்காகத்தான் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் “பரி பக்குவ நிலை பெற எனக்கு அருள்வாய் ஈஸ்வரா...!” என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டும்படிச் சொல்கிறோம்.

இந்தப் பழக்கம் வந்துவிட்டால் நம் மனதில் எப்பொழுதும் அமைதியும் சாந்தமும் குடிகொள்ளும்...!

May 29, 2018

ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம் உடலான இந்திரலோகத்தில் (இரத்தநாளங்களில்) நடக்கும் நிகழ்ச்சிகள்…!


நமக்குச் சம்பந்தமில்லாதபடி ஒருவர் கோபப்படுகின்றார் என்று அதைப் பார்க்கின்றோம். பார்த்ததும் அவர் மேல் வெறுப்பும் கோபமும் ஆத்திரமும் வருகின்றது. “இப்படிச் செய்கின்றாரே…!” என்ற வேதனை நமக்குள் கலந்துவிடுகின்றது.

இதைப் போல கோபம் வேதனை என்ற உணர்வுகள் விளைந்து அது இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது இத்தகைய உணர்வின் அணுக்கள் நமக்குள் உருவாகிவிடுகின்றது.

உடல் முழுவதும் பரவப்படும் பொழுது நம் உறுப்புகளை அது வீணாக்குகின்றது. எப்படி..?

கோபப்படுவோரையோ வேதனைப்படுவோரையோ சங்கடப்படுவோரையோ ஆத்திரப்படுவோரையோ நுகர்ந்திருந்தால் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும்
1.இரத்தத்தில் கருவாகி முதலிலே முட்டையாகின்றது.
2.முட்டையான பின்பு தொடர்ந்து அதே உணர்வுகளை மீண்டும் மீண்டும் நுகர்ந்தால்
3.அந்த முட்டையின் இனக் குஞ்சாக அணுவாக மாறுகின்றது
4.அணுவான பின் எதனால் அணுவானதோ அதே உணர்வைக் கவர்ந்து தன் இனத்தைப் பெருக்கத் தொடங்குகின்றது
5.பெருக்கிய பின் பக்கத்திலிருக்கும் நல்ல அணுக்களை வளரவிடாது உடலைப் பலவீனப்படுத்துகின்றது

ஆனால் கருத்தன்மை அடையவில்லை என்றால் நுகர்ந்த உணர்வின் விஷத்தின் தன்மை இதே இரத்தத்துடன் கலந்து மற்ற உறுப்புகளுக்குள் சென்று அதை வீணாக்கும் உணர்வுகளைத் தொடர்ந்து விடுகின்றது. அதாவது
1.இரத்தத்தில் அணுவாக உருவாகாதபடி அந்த முட்டை வெளியே சென்றால்
2.அழுகிய உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்து
3.உடல் முழுவதும் சென்று எந்த உறுப்பில் கலக்கின்றதோ
4.அந்த உறுப்பை வீணாக்கிவிடுகின்றது.

இதைப் போன்று தான் மனிதனின் வாழ்க்கையில் நாம் நுகரும் உணர்வுகள் உடலுக்குள் சென்று பலவிதமான உறுப்புகளைக் கெடுக்கும் அணுக்களாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்குத்தான் இந்த  உபதேத்தின் வாயிலாகத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை
1.உங்கள் இரத்தத்தில் கலக்கச் செய்கிறோம்
2.உங்கள் உடல் முழுவதும் படரச் செய்கிறோம்
3.உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைப் பெறச் செய்கின்றோம்.

அகஸ்தியன் ஒளியின் சுடராகத் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த உணர்வை நினைவூட்டி அந்த அகஸ்தியனின் உணர்வை ஈர்க்கும் சக்தியை அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் இரத்தத்தில் பெருகப் பெருக அது கருத் தன்மை அடைந்து ஒளியான அணுக்களாகப் பெருகும். ஒளியான அணுக்கள் பெருகினால் நோயை உருவாக்கும் அணுக்களை ஒடுக்கி உறுப்புகளைச் சீராக இயக்கச் செய்யும்.

மகிழ்ந்து வாழும் சக்தி பெறுவோம்…!

மாந்திரீகம் தாந்திரீகம் என்று போய் அதிலே சிக்கிக் கொள்பவர்கள் கடைசியில் நரக வேதனைப்படுவார்கள் – சீராகத் தியானிப்பவர்கள் அருகில் மாந்திரீகமோ தாந்திரீகமோ எதுவும் வராது...!


மாந்திரீகம் தாந்திரீகம் என்று செய்பவர்கள் கருவை வைத்து (ஒரு உடலில் விளைந்த உணர்வை) விளையாடுவார்கள். அந்தக் கருவை வாடகைக்கு வாங்கிப் பல வித்தைகளைச் செய்வார்கள்.

அந்தக் கரு வித்தை விளையாடுகிறவர்களோ அல்லது அதைப் போன்ற சாமியார்களையோ நீங்கள் பார்க்கலாம். அவர்கள் அப்படியே இருந்து கொண்டிருப்பார்கள்.
1.திடீரென்று இப்படி ஒரு சுண்டு சுண்டும்.
2.அப்படிச் சுண்டினால் ஏவப்பட்ட ஆவியின் உணர்வு அங்கு இருக்கிறது என்று அர்த்தம்.

சிலர் பேசிக்கொண்டே இருப்பார்கள். தலையை “வெடுக்...” என்று சுண்டுவார்கள். எதைக் கருவாக உள்ளுக்குள் செலுத்தினானோ அந்த ஆவி உள்ளே இருக்கின்றது என்பதை நீங்கள் அடையாளம் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

ஏனென்றால் பிறரிடத்தில் எடுத்து கொண்ட ஆவியின் தன்மைகள் அதனின் இயக்கம் அப்படிக் காட்டும். அந்த ஆவியின் தன்மை கொண்டவர்களுக்குத் தியானம் சீராக எடுக்கின்றவர்களைப் பார்த்தாலே “மயக்கம்...” வரும்.

கொடுமைப்படுத்தப்பட்ட ஆன்மா அந்த உடலுக்குள் இருந்தது என்றால் இந்த உண்மையை தியானம் செய்பவர்கள் எடுத்துச் சொல்லும் போது அவர்கள் கண் என்ன செய்யும்...? நம்மை அப்படியே முறைத்துப் பார்க்கும்.

என்னை அதர்மத்தில் கொன்றார்கள்...! என்ற இந்த உணர்வை இந்த உடலுக்குள் இருந்து தன் “கண்” வழியாகக் காட்டும். தியானம் செய்ப்வர்கள் நீங்கள் அனுபவரீதியில் இதைத் தெரிந்து கொள்வது நல்லது.

1.நாம் என்ன நினைப்போம்...?
2.நான் அவர்களை ஒன்றுமே சொல்லவில்லை...!
3.என்னை “இப்படி முறைத்துப் பார்க்கின்றார்களே...!” என்று எண்ணுவோம்.
4.ஏனென்றால் அந்த உணர்வின் அலைகள் அந்த உடலுக்குள் இருக்கின்றது.

கரு வித்தைகளை வாங்கிக் கொண்டு வந்தவர்கள் நிறையப் பேரிடம் இதைப் பார்க்கலாம். பேசிக் கொண்டு இருந்தவுடனே இப்படி வெடுக்கென்று சுண்டுவது... தலையைச் சுண்டுவது... தெரியாத மாதிரி எல்லாம் அவர்கள் நடித்துப் பார்ப்பார்கள்.

மாந்திரீகம் தாந்திரீகம் செய்பவர்களும் சரி...! யாருக்குள் அதை அவர்கள் பாய்ச்சினார்களோ அவர்களும் சரி...! மீண்டும் இன்னொரு உடலுக்குள் சென்று நரக வேதன்யைத்தான் அனுபவிக்க முடியும்.  தப்பிக்கும் மார்க்கமில்லை.

ஏனென்றால் இன்னொரு ஆன்மா ஒரு உடலுக்குள் போகும்போது என்னென்ன வேலைகள் செய்கின்றது...? என்பதை நீங்கள் தெரிந்து கொள்வதற்காக இதைச் சொல்கிறோம்.

பக்தி மார்க்கத்தில் நல்ல ஒழுக்கங்களை நாம் கடைப்பிடிக்கின்றோம். ஆனால் தீமையின் நிலைகளோ மிகவும் வலுபெற்றது.

நல்லதை எண்ணி நாம் செயல்படும் பொழுது அந்தத் தீமையின் நிலைகளை அறிகின்றோம். இருந்தாலும் அந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வே நமக்குள் வலுபெறுகின்றது.

நாம் வீடு கட்டி விடுகின்றோம். தூசி வருகின்றது. துடைக்காமல் விட்டால் என்ன செய்யும்...? தூய்மைப்படுத்துகின்றோம் அல்லவா...!

தரையில் எண்ணெய் சிந்திவிடுகின்றது. அதிலே அழுக்குப் பட்டால் பிசு...பிசு.. என்று ஒட்டுகின்றது. அந்த எண்ணெயில் கிரசினைப் (KEROSENE) போட்டுத் தேய்த்தவுடனே பிசு பிசுப்பான எண்ணெய்களை எல்லாம் நீக்கிவிடுகின்றது.

1.அப்போது எண்ணெய் கொட்டி விட்டது நான் கூட்டினேன்.
2.மீண்டும் அழுக்கு அதிலே ஒட்டுகின்றது... என்று
3.அப்படியே விட்டு கொண்டே இருக்கின்றோமா...?
4.அதற்குத் தக்க உபாயத்தைக் கூட்டி நாம் இதைத் துடைக்கின்றோம் அல்லவா...!

இதைப்போல வாழ்க்கையில் எத்தனையோ வகையான நிலைகள் நமக்குள் “ஒட்டிக் கொள்கின்றது....!” அதை நாம் சுத்தப்படுத்த வேண்டும். சுத்தப்படுத்துவதற்குண்டான சக்திகளை நீங்கள் பெறுவதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.

மகரிஷிகளின் உணர்வை நீங்கள் நினைவு கொண்டு எடுத்துப் பழக வேண்டும். உங்களை அறியாது ஏதாவது வந்தாலும் கூட உங்களைக் காத்துக் கொள்ள உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று சதா ஜெபம் இருக்கின்றேன்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நான் (ஞானகுரு) பெறுகின்றேன். அதை எனக்குள் வலுவாக்கிக் கொண்ட பின் நீங்கள் எந்த நல்லதையெல்லாம் செய்கின்றீர்களோ அது நல்லபடியாக ஆக வேண்டும் என்று ஜெபம் இருக்கின்றேன். (நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நான் ஜெபம் இருக்கின்றேன்)

ஒரு டி.வி. நிலையத்தில் ஒளிபரப்பு செய்கிறார்கள் என்றால் அதே ஸ்டேசனைத் திருப்பி வைக்கும் போது அதை நாம் வீட்டிலிருந்து பார்க்க முடிகின்றது. அதைப் போன்று தான்
1.“ஈஸ்வரா...! என்று உங்கள் உயிரை நினைக்கும் போதெல்லாம்
2.உங்களுக்குள் அந்த மகரிஷிகளின் அலைத் தொடர்பு கிடைத்து  
3.அந்தச் சக்தி வாய்ந்த உணர்வலைகள் கிடைக்கும்.

ஆகவே அருள் உணர்வுகளை நீங்கள் வளர்ப்பதற்குச் சந்தர்ப்பம் நிறைய இருக்கின்றது. இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நமது குருநாதர் காட்டிய அருள் வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இது ஒன்றும் கஷ்டமில்லை. உங்களால் வளர்க்க முடியும்.