ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 23, 2013

கண்ணன் சங்கநாதம் ஊதியபின் தான் குருக்ஷேத்திரப் போர்

உதாரணமாக, பூனையின் கண் எலியைப் பார்த்தவுடன், அந்த எலிக்குரிய காந்த உணர்வைத் தனது ஆத்மாவாக மாற்றி, உயிருக்குள் இயக்கச் செய்கின்றது. இவ்வாறே, எலியின் சத்தைத் தனக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்து கொள்கின்றது.

பின், தன் உணர்வுக்கு ஒத்துக் கொள்ளும் இயக்கம் குறைவாக இருப்பதால், அது தனது உணவாக எடுத்துக் கொள்ள முடியும் என்ற அந்த உயிரின் நிலைகள் வரப்படும் பொழுது, பூனை வலுக்கொண்டு, எலியைத் தாக்க ஆரம்பிக்கின்றது.

ஆனால், பெருச்சாளியாக இருந்தால், அது சீறிப் பாய்ந்தால், பூனை அதன் அருகில் செல்லாது. அதனின் உணர்வலைகள் அதற்குள் பட்டவுடன், இதே பூனை அதை எதிர்க்கும் நிலை வந்தால்,
பெருச்சாளியின் உணர்வுகளை பூனையின் கண் கவரும் பொழுது,
அதனின் உயிரில் படும் பொழுது, உணர்வுகள் வேகமாகத் துடிப்பாகி,
அதனின் வலு அதிகமாகும் பொழுது,
இது நிதானித்துச் செயல்படும்.

   மகாபாரதத்தில், பாரதப் போரில், கண்ணன் சங்கநாதம் ஊதியபின், குருக்ஷேத்திரப் போர் நடக்கிறது. இங்கே, குருக்ஷேத்திரம் என்பது பூனையின் உயிர், அந்த உடலுக்கு அது குருவாகின்றது.

அந்தப் பூனையின் கண் எலியைப் பார்க்கின்றது. எலியின் உடலில் இருந்து வரக்கூடிய உணர்வலைகளை, கண்ணில் உள்ள கருவிழி என்ற “ருக்மணி” எடுத்து தனக்குள் பதிவு ஆக்குகின்றது. அந்த கண்ணுக்குள் இருக்கக் கூடிய காந்தப்புலன் “சத்தியபாமா”. எலியின் உடலில் இருந்து வரக்கூடிய உணர்வை, இந்தக் கண், காந்தமான அந்த நிலையை இழுத்து, தன்னுடைய ஆத்மாவாக மாற்றி, தான் சுவாசிக்கும் பொழுது, குருஷேத்திரத்திற்குச் செல்லுகின்றது.

இந்தக் குருஷேத்திரத்தில்,
பூனையின் உணர்வும், அந்த எலியின் உணர்வும்,
இரண்டும் மோதப்படும் பொழுது,
(கண்ணன் – கண்கள்) சங்கநாதம் ஊதுகின்றான்.
எலியின் உணர்வைப் பூனை நுகர்ந்து, அதற்குள் மோதும்போது,
அங்கு, நாதம் சங்கநாதமாகின்றது.
பூனையின் உணர்வுகள் வலுக் கொண்டதாக இருக்கின்றது.
சேனாதிபதி உத்தரவுப்படிப் படைகள் இயங்குவதைப் போல,
தனக்குள் எடுத்துக் கொண்ட வலுவான நிலைகள் கொண்டு,
தன் உடலில் இருக்கக் கூடிய  உணர்வுகள் அனைத்தும் உந்தி,
பூனை எலியைத் தாவிப் பிடிக்கின்றது.

ஆனால், அதுவே  பெருச்சாளியாக இருந்தால், இங்கே இவ்வாறு செய், என்று யோசனை கூறுகின்றது.

உணர்வின் அழுத்தங்களும், 
உணர்வின் இயக்கங்களையும்
நாம் அறிந்து கொள்ள,  வியாசக பகவான்  மகாபாரதத்தை நமக்கு அருளினார்.

குருஷேத்திரப்போரில், முக்கியப் பங்கு கொண்டவன்  கண்ணன் (நம் கண்கள்).  அவன் ஒவ்வொரு நிமிடமும், மற்றதை எடுத்துச் “சங்கநாதம்”  ஊதியபின்தான், குருக்ஷேத்திரப் போரே நடக்கின்றது,  என்று தெளிவுற எடுத்துக் கூறியுள்ளார், வியாசக பகவான்.

கண்ணின் இயல்பான பங்கின் நிலையையும், கண் மற்ற உணர்வின் தன்மை கொண்டு, தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றலையும், செயலையும், தெளிவுற எடுத்துக் காட்டியுள்ளார் வியாசக பகவான்.

இதைத் தெரிந்து கொண்டால் போதும். மனிதன் யார்? நாம் எப்படிச் செயல்பட வேண்டும்? என்ற உண்மையினை அறிந்து கொள்ளலாம்.

      எலி குருக்ஷேத்திரப்போரில் தோல்வியை அடைகின்றது. ஆனால்,
மறைமுகமாகக் கண்ணன் காட்டிய வழி கொண்டு,
பூனையின் உடலுக்குள் வியூகத்தைத் தகர்த்து,
பூனையின் வியூகத்துக்குள் சென்று,
அதனின் உணர்வை, அதனின் வலுவை எடுத்து
அதே ஆகின்றது. (எலி பூனையாக ஆகின்றது)

இந்தப் பரிணாம வளர்ச்சியில், எலியைப் பூனை கொன்றாலும், உடல் இறக்கின்றது. அதனின் உயிரான்மா, அதைக் கண்டுணர்ந்த அந்த உடலின் வலுக் கொண்டு, அதனின் நிலைகள் கொண்டு, அதனின் உடல் பெறுகின்றது என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார், வியாசக பகவான்.

மகாபாரதத்தில், குருக்ஷேத்திரப் போரின் நிலைகளைப் பத்தாம் நாள் போர் என்று சொல்வார்கள். கடவுளின் அவதாரமும் பத்து.
உணர்வின் இயக்கங்கள் மாற்றமாவதால்,
ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதமாகச் சிருஷ்டிக்கும் நிலை.

இயற்கையின் நிலைகள், ஒவ்வொரு உணர்வின் ஆற்றலின் நிலைகளில், மாற்றங்கள் எவ்வாறு வருகின்றது? என்ற நிலையை அறிந்து கொள்வதற்குத்தான் மகாபாரதத்தை, வியாசக பகவான் அருளினார். இன்றைய நிலையில், பூரணமாக எல்லாவற்றையும் எடுத்துரைத்தால் கூட, கிரகிக்கும் தன்மை இல்லை.

இயற்கையின் தன்மை ஒன்றுடன் ஒன்று இணைந்து, “எண்ணத்தின் தோற்றம் எண்ணத்தின் இயக்கம்” என்ற நிலைகளில், எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப, உருவாக்கப்படும் போது, தோற்றம், ஒரு உணர்வின் தன்மை ஒரு உடலுக்குள் சென்றவுடனே, அந்த உணர்வின் மணங்கள் அதை உணர்வாக இயக்கும் நிலைகள் வேறு.

மெய்ஞானிகள் அவர்கள் கண்டுணர்ந்ததை, நாம் தெரிந்து கொள்வதற்காகக் கூறிச் சென்றனர்.

February 20, 2013

உபதேசிப்பது யாம் இல்லை - அருள்ஞானிகள்

1. உபதேசிப்பது யாம் இல்லை
மெய்ப்பொருள் கண்ட மெய் ஞானியின் உணர்வை யாம்  பின்பற்றி, மக்குள் ஆட்சி புரியும் நஞ்சின் நிலையை  வென்று, அந்த நஞ்சினை அடக்கி, உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றமெய் ஞானியின் உணர்வை நாம் பருகுவதற்கு, அவர் காட்டிய நிலைகள், இன்று உங்களுக்குள் உபதேசித்தது, பேசுவது நான் அல்ல.

மெய் உணர்வைத் தனக்குள் எடுத்து, பொருளறிந்து,
உணர்வின் தன்மை நஞ்சினை அடக்கி,
அதையே ஒளியாக மாற்றி,
இன்றும் நிலையாக இருக்கும்,
இந்த உயிரின் நிலைகள் கொண்டு
தனக்குள் ஒளியின் சிகரமாக இருக்கும்
அவரிடம் ஒன்றி, அவராக இருக்கும்
அருள்ஞானியின் உணர்வுகளை,
இங்கே அது நுகரப்படும்போது,
உணர்வுகள் பேசுகின்றன, நான் அல்ல.

எனக்கு ஒரு சந்தர்ப்பம்.
இந்த உணர்வுக்குள் ஊடுருவி, உணர்வின் செயலாக,
எனக்குள் இருக்கும் நிலைகள் கொண்டு சேர்ந்து, அகத்தை அடக்கி,
அந்த உணர்வின் ஆற்றலைப் பருகும் நிலைகளுக்கு,
இங்கே, அந்த உணர்வின்  தன்மை, 
2. நீங்கள் பெறவேண்டும் என்று யாம் எண்ணும் பொழுதுதான் எமக்குள் விளைகின்றது.
கேட்டுணர்ந்த அனைவருக்கும் உணர்வின் தன்மை விளையவேண்டும் என்ற ஏக்க நிலைகள் வரும்போதுதான், இந்த உணர்வின் தன்மை,க்குள் விளைகின்றது.
உங்களால், நான் இதை அனுபவிக்கின்றேன்.
க்கு என்று எதுவுமில்லை.
உங்களுக்கு என்று யாம் சொல்லும்பொழுது
இந்த நிலை வருகின்றது. இதைத்தான்,
ஆலயங்களில் செய்து  காட்டிய நிலைகள்.

ஆலயங்களில், தெய்வ குணத்தைப் பார்க்கப்படும் பொழுது,
இந்த தெய்வ குணத்தைப் பெறவேண்டும்,
இந்த மலரின் மணம் நாங்கள் பெறவேண்டும்,
கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெறவேண்டும்.

இந்த மலரைப் போல எங்கள் உடல் முழுவதும் மணங்கள் மணக்க வேண்டும்.. அந்த மகரிஷிகளின் அருள் ஒளி, எங்களுக்குள் நல் மணமாக மாறவேண்டும் என்று நாம் எண்ணவேண்டும்,

எங்களைப் பார்ப்போர்க்கெல்லாம், மலரின் மணமும், மகிழ்ச்சியும் பெறவேண்டும். எங்கள் சொல்லின் தன்மை, பிறரை இனிமைப்படுத்தும் நிலையாகப் பெறவேண்டும் என்று நாம் எண்ணும் பொழுது, நாம் எண்ணியதை, அந்த உணர்வின் தெய்வமாக மாற்றுகின்றது.

ஆலயத்திற்கு வருவோர் அனைவரும்,
அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைய வேண்டும்.
இந்த நற்குணங்களைக் காத்திடும் உணர்வுகள் வரவேண்டும்.
காத்திட்ட அருள்ஞானியின் உணர்வுகள் இங்கே விளைய வேண்டும்.
வருவோர் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெறவேண்டும்
என்று நாம் எண்ண வேண்டும்

அவர்கள் அறியாது செய்த தீமைகள் நீங்க வேண்டும்.
மெய்ப்பொருள் காணும் நிலை பெறவேண்டும்.
இந்த தெய்வநிலை அங்கே பெறவேண்டும்,
என்று ஆலயத்தில் யாரொருவர் வணங்குகின்றனரோ,
அவர்கள் அதுவாகுகின்றார்கள்.

இதுதான், ஆறாவது அறிவு கொண்டு பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் என்பது. நமக்குள் நட்பற்ற நிலைகள், எத்தனையோ உண்டு. கோபம் உண்டு, அழித்திடும் நிலை உண்டு குரோதம் உண்டு. பழித்திடும் நிலை உண்டு.

அனைத்தும் இருந்தாலும், ஆலயத்தில் காட்டிய, இந்த உணர்வின் தன்மை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று, யாம் எண்ணும் பொழுது, எனக்குள் அனைத்துச் சக்தியும், எனக்குள் அகந்தையாகப் பேசும் உணர்வுகளுடன், அந்த மெய்ஞானியின் உணர்வு கலந்து, எனக்குள் அது சென்று, எனக்குள் அகந்தையின் நிலைகளை வீழ்த்தி, அந்த உணர்வின் ஆற்றலைப் பெறச் செய்கிறது.

மெய்ப்பொருளைக் கண்டுணர்ந்த  ஞானிகள் காட்டிய நிலைகளில், நீங்கள் அனைவரும் வாழவேண்டும் ஏன்று யாம் எண்ணும் பொழுது, எமக்குள் அந்த ஞானிகளின் அருள்சக்தி விளைகின்றது.
3. நாம் எங்கே செல்லவேண்டும்?
அதே சமயத்தில், நாம் முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக, இந்த உடலாக நாம் ஆனாலும், நாம் எந்த வினையை நமக்குள் சேர்க்க வேண்டும் என்ற நிலையாக, நஞ்சை நீக்கி, மெய் உணர்வின் தன்மை பெற்று, இருளுக்குள் பொருளைக் காணும் நிலைகளைப் பெற்று, தீமையை வென்று, உணர்வை ஒளியாக மாற்றிச் சென்ற மகரிஷிகள் உணர்த்தியுள்ளார்கள்.

அதே போன்று, நம்முடைய முன்னோர்கள் நம்மை வாழ வைத்து, மனிதனாக உருவாக்க, அவர்கள் உடலில் அறியாது நஞ்சைச் சேர்த்து, நஞ்சு கொண்ட  உணர்வு கொண்டு, உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிராத்மாக்களை, நாம் பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.

நமக்காகப் பல துயரங்களைப்பட்ட, நம் குலதெய்வங்களின் உயிராத்மாக்களை, கூட்டமைப்பாக, வலுக்கொண்ட எண்ணங்களைக் கூட்டி, நம்மைக் காத்த உயிரான்மாக்களைப் பிறவா நிலை பெறச் செய்யவேண்டும். அவர்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து, அந்த உணர்வின் ஆற்றலைக் கலக்கச் செய்து, அடுத்து நஞ்சான உடலாகப் பெறும் உடலைக் கருக்கச் செய்து, அவர்கள் அங்கே செல்ல வேண்டும்.

பூமியின் ஈர்ப்புக்குள் சிக்கி, நம் உடல் வளர்ந்தது.
பூமியின் ஈர்ப்புக்குள் வந்து, உணர்வுகள் தோன்றியது.
பூமியின் ஈர்ப்புக்குள், நாம் வாழ்ந்து பழகியவர்கள்.
ஆக, இதைக் கடந்து, நாம் செல்ல வேண்டும் என்றால், இந்தப் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், சூட்சும உடலடைந்த முன்னோர்களை விண்ணுக்குத் தள்ளி,  சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கச் செய்து, நம் மூதாதையர்களின் உயிராத்மாக்களை, அங்கே சுழலச் செய்வதுதான் நம் கடமை.

நம்மை ஈன்ற தாய் தந்தையை, தன்னை வளர்த்திட்ட முன்னோர்களின் உயிராத்மாக்களை நாம் விண் செலுத்துகின்ற பொழுது, நமது எண்ணமும் அங்கே செல்கின்றது. இதுவே கூர்ம அவதாரம்.

சூரியனைச் சுற்றி மற்ற கோள்கள் சுழல்வது போல, முதல் மனிதன் அகத்தியன் துருவத்தையடைந்து, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமானான். அதன் ஈர்ப்பு வட்டத்தில், (சப்தரிஷி மண்டலம்) அவரைப் பின்பற்றிச் சென்றவர்கள், எண்ணிலடங்காது, முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்வார்கள்.
நாம் அனைவரும், அங்கே செல்ல வேண்டும்.

ஒரு அணுவிற்குள் உள்ள ஆயுதங்கள் - ஆயுத பூஜை

சூரியனில் இருந்து வெளிப்படும் வெப்பம் பராசக்தி என்றும், அதனிடம் இணைந்து வெளிப்படும் சக்தி காந்தம் லட்சுமி என்றும் பெயர் வைத்தனர் ஞானிகள். அதனுடன் வெளிக்கடந்து, சூரியனிலிருந்து வெளிப்படும் அல்ட்ரா வயலட் என்ற நஞ்சினைக் கவர்ந்து, நமது பூமிக்குள் வரப்படும் பொழுது, மூன்று நிலையாக வருகின்றது.

விஷம்   இயக்கம்,
காந்தம்   இணைத்தல்,
வெப்பம் உருவாக்குதல்,
என்ற நிலைகள் கொண்டு, நம் பூமிக்குள்  வரப்படும் பொழுது, அது நம் பூமியிலே வந்து, ஒரு ரோஜாப்பூவின் மணத்தைக் கவர்ந்து கொண்டால், காந்தம் தனக்குள் கவர்ந்து, தன்னுடன் இணைத்துக் கொள்ளும் பொழுது, வெப்பமான நிலைகளிலே இது மோதியவுடனே, வெப்பமாகின்றது.

அப்பொழுது, அது இரண்டறக் கலந்து, அந்த ரோஜாப்பூவின் மணமாக,
இந்த சூரியனில் இருந்து வந்த, காந்தப்புலன் இயங்குகின்றது. அப்பொழுது அந்த மணம், ஞானம் சரஸ்வதி. ஆகவே, அந்த அணுவிற்கு
(1) வெப்பம் - உருவாக்கும் சக்தியாகவும்,
(2) காந்தம்  - தனக்குள் அணைக்கும் சக்தியாகவும்,
(3) மணம்    - அறியும் சக்தியாகவும்,
அதனுடன் இணைந்துள்ள
(4) விஷத்தின் தன்மை - இயக்கச்சக்தியாகவும்,
அனைத்தும் இணைந்து இருந்தால்,
(5) உணர்வு, இயக்கம் என்று, ஐந்து புலனறிவாக மாறுகின்றது.
மூன்று சக்தியாக இயங்குகின்றது. (1) பராசக்தி   வெப்பம், உருவாக்கும் சக்தி  (2) லட்சுமி    - காந்தம், அணைக்கும் சக்தி(கவரும் சக்தி)  (3) சரஸ்வதி  -ஞானம், மணத்தின் சக்தி,  என்று  ஒரு அணுவின் இயக்கத்தை நாம் அறிந்து கொள்வதற்குத்தான், மூன்று படங்களையும் வைத்து, ஒரு அணுவிற்குள் உருவாக்கும் சக்தியும், அணைக்கும் சக்தியும், மணத்தின் சக்தியுமாக அது இயங்குகின்றது,  என்ற நிலையை மனிதனாக இருக்கும் நாம் புரிந்து கொள்வதற்காக, ஆயுத பூஜை என்று ஞானிகள் வைத்தார்கள்.

‘’ஆயுதம்‘’  என்றால் என்ன?  இப்பொழுது எந்த குணத்தை எண்ணுகின்றோமோ,  அந்த குணத்தின் சக்தியாக நாம் எண்ணி, அதையே ஆயுதமாக எண்ணி, நாம் செயல்படும் தன்மை, ஆயுத பூஜை.

இப்போது நாம் ஒரு பொருளை உருவாக்க வேண்டும் என்றால்,  அதை எண்ணி, நாம் எண்ணத்தால் செயல்படுத்தும் நிலையை நாம் அறிந்து கொள்வதற்காக,  ஆயுத பூஜை என்று வைத்தது.

நாம் ஏதாவது செய்யவேண்டும் என்றால், ஞானம் வேண்டும் என்பதற்காகத்தான் ஆயுத பூஜை என்றும், நாம் எண்ணியதை காந்தம் அணைத்து, அந்த உணர்வாக செயலாக்கும் நிலைதான் லட்சுமி. இவை அனைத்தும் நமக்குள் எண்ணியதை, இந்த எண்ணத்தை உருவாக்கியது, ‘’பராசக்தி’’ என்ற இந்த  உண்மையினை நாம் அறிவதற்காகத்தான்,  (ஒரு அணுவிற்குள் உள்ள ஆயுதங்கள்) “ஆயுத பூஜை என்றும், லட்சுமி பூஜை என்றும், பராசக்தி பூஜை என்றும் கொண்டாடப்படுகின்றது,

 இன்று வட இந்தியாவில் எடுத்துக் கொண்டால், துர்கா பூஜை என்றும், காளி பூஜை என்றும் அதை வணங்குகின்றனர். அன்று துர்கை மாதிரி சிலைகளைச் செய்து, பத்து நாள் கொண்டாடி, அதன்பின் துர்கையைக் கொண்டு போய்த் தண்ணீரில் கரைப்பது வழக்கம்.

ஆனால், தமிழ் நாட்டைப் பொறுத்த வரையிலும், ஆயுத பூஜை என்று நாம் வைத்து, முறைப்படி இங்கு வணங்குகின்றோம்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி,
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி,
என்று சொன்னதைப் போல, தென்னாட்டிலே தோன்றிய அகத்திய மாமகரிஷி இதைக் கண்டுணர்ந்து, இந்த உண்மைகளை வெளியிட்ட நாள் தான் விஜய தசமி.

இதிலிருந்துதான், உலகம் முழுவதற்கும் விண்ணுலக ஆற்றலின், ஒரு அணுவின் இயக்கத்தை வெளிப்படுத்தியது.