ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 30, 2022

கணவன் மனைவி ஒன்றி வாழ வேண்டியதன் சூட்சமம்

மாயவரத்தில் ஒரு டாக்டர் இருக்கின்றார். அவருடைய தாயாருக்கு வயது எண்பது இருக்கும் அவருடைய கணவர் உடலை விட்டுப் பிரிந்து விட்டார்.

அந்தத் தாய் “என் கணவர் என்னுடன் தான் இருக்கின்றார்…” என்ற நிலையிலே அது வாழ்ந்தது. மற்றவர்கள் பொட்டையும் தாலியை நீக்கச் சொல்லி இருக்கிறார்கள்.

என் கணவர் என்னுடன் இருக்கும் பொழுது நீங்கள் ஏன் அதை நீக்கஸ் சொல்கிறீர்கள்…? என்று மற்றவர்கள் சொல்வதை ஏற்காதபடி வீட்டிற்குள்ளேயே அடங்கி இருந்தது…. வெளியே சென்றால் அதையே கேட்கிறார்கள் என்று…!

அந்த அம்மா உபதேச வாயிலாக யாம் வெளிப்படுத்திய புத்தகங்களை இதற்கு முன்னாடி படித்திருக்கின்றார்கள். அதை மனதில் எண்ணிக் கொண்டு
1.இந்த மாதிரி ஒரு சாமி (ஞானகுரு) வருகின்றார்… அவரை நான் பார்க்க வேண்டும்
2.அவரை பார்த்து அவர் என்ன சொல்கிறார் என்ற விளக்கங்களைக் கேட்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இருந்தது.

ஆனால் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

நான் (ஞானகுரு) அவர்களைச் சந்திக்கச் சென்றேன். அப்போது
1.தெரிந்தோ தெரியாமலோ அந்த எண்ணம் (என்னுடன் தான் கணவர் இருக்கிறார்) எனக்கு வந்தது
2.சாஸ்திரங்களைப் பற்றி படிக்கும் பொழுது எனக்கு அந்த உள் உணர்வு ஒன்று தோன்றியது என்று
3.விபரங்களை எல்லாம் அந்த அம்மா சொல்லியது.

கணவனுடன் இணைந்து வாழ்கின்றோம். இருவரும் ஒன்றாகி விட்டால் மனைவி இறந்தால் கணவனும் உடனே இறக்கின்றான்… கணவன் இறந்தால் மனைவி இறந்து விடுகிறாள்…!
1.இப்படி ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்து ஒரே உணர்வோடு சென்றால்
2.அந்த ஆன்மாக்கள் எங்கே செல்கிறது…? என்று இந்த ரகசியத்தை எல்லாம் நான் எடுத்துச் சொன்னேன்.

எனக்கு இந்தச் சக்தி எப்படிக் கிடைத்தது…? என்று அந்த அம்மா என்னிடம் கேட்கின்றது.

உங்களுடைய தாய் கருவிலே நீங்கள் விளையப்படும் பொழுது
1.இந்த உணர்வைப் பற்றி நீங்கள் கேட்டதால் உங்கள் உடலில் விளைந்திருக்கின்றது
2.அந்த உணர்வு தான் உங்களை இயக்குகின்றது என்று விபரத்தைச் சொன்னேன்.

கணவர் என்னுடன் தான் இருக்கின்றார் என்று தான் அறியாதபடியே அவர்கள் எண்ணிச் செயல்பட்டார்கள். ஆனால் சாங்கியம் செய்ய ஒத்துக் கொள்ளவில்லை… சாங்கியம் செய்யவும் விடவில்லை

இருந்தாலும்… உன்னுடைய கணவருடைய ஆன்மா வேறு எங்கேயும் செல்லாதபடி உன் உடலைச் சுற்றிக் கொண்டே இருப்பதே நீ பார்க்கலாம் அம்மா…! என்று சொன்னேன்

அப்போது கணவனின் உணர்வலைகள் தனக்குள் இருந்து அவர் வாழ்ந்த காலத்தில் எப்படி மகிழ்ச்சியாக இருந்ததோ அதை எல்லாம் அந்த அம்மா கண்களில் பார்க்கின்றது.

அந்த மகிழ்ச்சியான நிலையினை அந்தத் தாயும் மகனும் (டாக்டர்) காணுகின்றனர். பின் இன்றைக்குத்தான் இந்த உண்மைகளை நாங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது… உணர முடிந்தது…! என்று என்னிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள்

என் தாயின் அருள் கிடைக்க வேண்டும்… என் குடும்பத்திலும் அந்த நிலை கிடைக்க வேண்டும் என்று அந்த உண்மையைத் தெரிந்து கொண்ட பின் டாக்டரும் வேண்டி நிற்கின்றார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் காலையில் நான்கு மணிக்கு எடுத்து அதை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த வலுவின் துணை கொண்டு அந்த ஆன்மாவை உந்தி “விண்ணுக்குச் செலுத்துங்கள்…” என்று சொன்னேன்.

அந்த ஆன்மா இவர்கள் உடலுக்குள் செல்லவில்லை வெளியே தான் இருந்தது. உடலைச் சுற்றிக் கொண்டிருப்பதை அந்த உண்மைகளை அவர்கள் உணர்கின்றார்கள்.

யாம் சொன்ன முறைப்படி அவர்கள் செய்த பின் அவர் ஒளிச் சரீரம் பெறுகின்றார்.

ஏனென்றால் முன்னாடி அவர்கள் ஒரு பெரிய சாதுவைச் சந்தித்து இருக்கின்றார்கள். அவர் சில உபதேசங்களைக் கொடுத்திருக்கின்றார். இராமாயணம் மகாபாரதத்தை பற்றிச் சொல்லி இருக்கின்றார்.

ஆனால் சாங்கியங்கள் மட்டும் நீ செய்ய வேண்டாம்…! என்று ஒன்றை மட்டும் சொன்னார்… மற்ற விவரங்களை அவர் சொல்லவில்லை என்று அந்த அம்மா சொல்கிறது.

அவர் சொன்ன முறைப்படி என் கணவர் என்னுடன் தான் இருக்கின்றார் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றேன்.
1.அவர் கட்டிய தாலி என்னுடன் இருந்தாலும்
2.அவருடன் ஒன்றி முழு மாங்கல்யக்காரியாகத்தான் நான் செல்ல வேண்டும் என்ற
3.அந்த எண்ணத்தில் தான் நான் வாழுகின்றேன்… என்று அந்த அம்மா சொன்னது.

ஏனென்றால் இந்த உண்மைகளை அறிந்தும் அறியாதபடி சில இடங்களில் சில நிலைகள் இருக்கின்றது.

குருநாதர் காட்டிய அருள் வழியில் மூன்று லட்சம் பேரை நான் சந்தித்ததில் “எப்படி எல்லாம் இந்த உலகம் இயங்குகின்றது…?” என்பதைக் கண்டுணர முடிந்த்து.

ஆகவே… மனிதரான பின் இனி நமக்கு என்ன இருக்கின்றது…?

1.இந்த உடலுக்குப் பின் நான் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று உறுதியை வைத்து விட்டால்
2.நாம் நிச்சயம் அந்த எல்லை அடைகின்றோம்…!

அதை அடைவதற்கு தான் இந்த உபதேசம்…!

June 29, 2022

ஒரு நொடிக்குள் ஏற்படப் போகும் மாற்றம்...

விஞ்ஞான உலகில் வாழும் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மெய் ஞான வாழ்க்கையை நாம் தொடர்தல் வேண்டும்.

விஞ்ஞான வாழ்க்கையில் வரும் கடுமையான விஷத்தன்மைகளால் சூரியனின் இயக்கச்சக்தி எத்தனையோ மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.

1.வெயிலின் அழுத்தம் கடுமையாக... இன்று எப்படிச் சுட்டெரிக்கும் வெயிலாக வருகின்றதோ
2.சூரியனின் இயக்கம் ஒரு நொடிக்குள் கரண்ட்டை அதிகமாக உற்பத்தி செய்யும் நிலையாக
3.பூமிக்குள் நிலநடுக்கம் ஏற்படுவது போல் மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் சூரியனை அணுகும் நிலையாகி விட்டது.

ஒரு எலக்ட்ரிக் வயருடன் இன்னொரு எலக்ட்ரிக் வயர் உராய்ந்தால் அதிகமான மின்சாரம் பாய்ந்து பல்புகள் ஃப்யூஸ் ஆவது போல
1.ஒரு நொடிக்குள் சூரியனுக்குள் தாக்குதல் அதிகமாகி அதிகமான காந்தப்புலன்களை அது உமிழ்த்தி
2.அந்த உணர்வுகள் மனித உயிருக்குள் உராயப்பட்டு அதனின் உணர்வின் தொடராக அதிகமான உணர்ச்சிகளைத் தூண்டி
3.நம் உடலில் உள்ள அணுக்களில் கடுமையான மாற்றங்கள் மாற்றப்பட்டு
4.மனிதனே மனிதனல்லாத நிலைகள் செயல்படுத்தும் உணர்ச்சிகளைத் தூண்டி மனிதனைத் தாக்கிடும் நிலையாக வரும்.

ஒரு நொடி மாற்றத்தின் நிகழ்வுகளிலிருந்து உங்களைக் காக்கவும் உங்கள் சார்புடையவரைக் காக்கவும் இந்த உலகைக் காக்கவும் அருள் ஒளியின் உணர்வை தினமும் காலை துருவ தியானத்தில் கணவனும் மனைவியும் எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் நமக்கு உறுதுணையாக இருக்க
2.”நாம் அனைவரும் ஒன்று...” என்ற நிலைகளில் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற
3.எங்கிருந்தாலும் துருவ தியானத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தியானித்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் அழுத்தத்தை நாம் அதிகமாகக் கூட்டி அதை அடர்த்தியாக உலகெங்கிலும் பரவச் செய்து உலக மக்களையும் காக்க முடியும்... அவர்களையும் நாம் நல்லவர்களாக்க முடியும்.

உலக மக்களின் தீமையான உணர்வுகள் நமக்குள் இருந்தாலும் பகைமையான உணர்வை வளர்க்கும் தன்மையிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ள முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்கு அருளிய அருள் வழிப்படி இந்த வாழ்க்கையில் வரும் பகைமைகளை மாற்றி நஞ்சினை வென்று... நஞ்சினை வென்றிடும் அருள் உணர்வின் தன்மையை நமக்குள் உருவாக்கிடல் வேண்டும்.

நம் ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்றாலும்... தீமைகள் புகாது சேனாதிபதியாக அருள் ஒளியின் உணர்வை எடுத்துத் தீமைகளைத் தடுத்து நிறுத்தி அதனுடைய செயலாக்கங்களை மாற்றிடல் வேண்டும்.

ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி மெய் உணர்வின் வழிப்படி நாம் வாழ்ந்தோமென்றால் அடுத்து நமக்குப் பிறவி இல்லை. அதை அடைவது தான் மனிதனுடைய கடைசி எல்லை.

1.உயிர் தோன்றி உணர்வின் தன்மை மனிதனாக உருவாக்கிய நிலைகளில்
2.உயிருடன் ஒன்றிய உணர்வின் அறிவாக ஒளியாக மாறுதல் நாம் வேண்டும்.

எத்தகைய அழுக்குப் பட்டாலும் உடலை நாம் தூய்மைப்படுத்துகின்றோம். இந்த உடலிலே ஒரு திரவகமே பட்டு அதனால் தசைகள் வெந்தாலும் நாம் மருந்தைப் போட்டு அதை ஆற்றத் தொடங்குகிறோம்.

இதைப் போன்று
1.கடும் வேதனையான உணர்வுகளை நுகர்ந்தாலும் “அருள் மகரிஷிகள் உணர்வுகளை வைத்து அதை நீக்கிடல் வேண்டும்...”
2.இதுவே வாழ்க்கை என்ற நிலையில் அருள் வாழ்க்கை வாழ்வோம்
3.அருள் ஆற்றலை நாம் பெறுவோம்... அருள் ஆசையுடன் வாழ்வோம்.

இதைப் பேராசை என்று கூடச் சொல்லலாம்...!

அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்ற இந்த ஆசை என்றுமே நமக்குள் நிலையானதாக இருக்க வேண்டும். அதன் வழி வளர்ச்சி அடைந்தால் “உடல்” என்ற ஆசையிலிருந்து விடுபடுகின்றோம்.

ஆனால் உடலுக்காக வாழும் போது “எண்ணியபடி நடக்கவில்லை...!” என்று நம்முடைய ஆசைகள் தடைபடும் பொழுது இது பேராசையாக மாறுகின்றது.
1.முதலில் ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்தால் போதும் என்று நினைப்போம்
2.அது வந்த பின் அடுத்து ஒரு லட்சம் கிடைத்தால் போதும் என்று நினைப்போம்.
3.முதலில் ஒரு சிறிய வீட்டைக் கட்டி இருப்போம்
4.அடுத்து இதைக் காட்டிலும் விசாலமான வீட்டைக் கட்டினால் நலமாக இருக்கும் என்று ஆசையைக் கூட்டிக் கொண்டே இருப்போம்.
5.சிறிது தடைப்பட்டாலோ வேதனைகள் கூடிவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

ஆகவே இருளை அகற்றிடும் அருள் சக்தியைப் பெறுவோம்... மெய் ஞானிகளுடன் ஒன்றி வாழ்வோம்... மெய் ஞான வாழ்க்கை வாழ்வோம்

உயிருடன் ஒன்றி நாம் வாழ்வோம்... என்றும் பேரின்பம் பெறுவோம்... பெரு வாழ்க்கை வாழ்வோம். பிறவி இல்லா நிலை அடைவோம்... அருள் ஒளியாக என்றுமே நிலை கொள்வோம்.

1.சூரியனே அழிந்தாலும் அகண்ட அண்டத்தில் என்றுமே நாம் என்றும் பதினாறு என்ற நிலைகளில் ஏகாந்தமாக வாழலாம்
2.வைகுண்ட ஏகாதசி வைகுண்டம் என்றால் அகண்ட அண்டத்திலும் ஏகாந்த வாழ்க்கை வாழக்கூடிய தன்மை.

பகைமை உணர்வுகள் நமக்குள் வளராது அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற வாழ்க்கையை வாழத் தொடங்கினால் இதுவே வைகுண்ட ஏகாதசி...! என்றும் பகைமைகள் புகாத நிலையாக வருகின்றது.

ஆனால் விஷத்தின் தன்மை அதிகரித்து விட்டால் புவியின் ஈர்ப்புக்குள் நம்மைச் சிக்க வைத்துவிடும். இதிலிருந்து நாம் மீண்டு அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம்... ஏகாந்த நிலை பெறுவோம்.

பேரின்பம் பெறுவோம்... ஏகாந்த நிலை பெறுவோம்...! என்று பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன் (ஞானகுரு).

நடந்ததை நினைத்து வேதனைப்படுவதும்... நடக்கப் போவதாகக் கனவு காணுவதும் நமக்குகந்ததல்ல...!

சிறு சிறு மழைத் துளிகள் தான் பெரும் வெள்ளமாகச் செல்கிறது. நாற்று நட்டுப் பயிர் செய்து.. அந்தப் பயிரை விளைய வைத்து... அதை எடுத்து வந்து நாம் சமைத்துப் பக்குவப்படுத்திய பின் தான்... நாம் உணவை உட்கொள்ள முடிகின்றது.

அதே போல் தான் இந்தத் தியான முறையிலும் நம்மை நாம் சிறுகச் சிறுகப் பக்குவ நிலைக்குப் பதப்படுத்தித்தான் அந்த நிலைக்கு நாம் வழியமைத்து வந்திட முடியும்.
1.அவசரப்பட்டும்…
2.இருக்கும் நிலையில் கசப்புடனும்…
3.ஆவல் நிலையில் ஆசைப்பட்டும் வருவதல்ல தியான நிலை.

மெய் ஞானத்தைப் பெறும் தியான நிலையின் பக்குவம் என்ன...?
1.தன் வாழ்க்கையுடன் ஒன்றி உயர்ந்து
2.சிறு சிறு நிலைக்கும் நம் எண்ணத்தையும் செயலையும் பக்குவப்படுத்தி
3.நம் உடலிலுள்ள அணுக்களை எல்லாம் நம் நிலைக்குச் செயல்படும் தன்மைக்குக் கொண்டு வந்து
4.நாம் என்ற நிலையையே... இந்த உடல் என்னும் கூட்டை நாம் மறக்கும் நிலை கொண்டு
5.நம்மை நாம் பரிபக்குவப்படுத்தி நம்முள் இருக்கும் அந்த ஆத்மாவை நாம் கண்டு
6.அருள் வழியில் நாம் இதை இயக்கும் தன்மையைப் பெற்று
7.அந்த ஆத்மாவின் நிலை கொண்டு பெரும் உன்னத சக்தியை நாம் ஈர்த்து எடுக்கலாம்.

இந்த உலகம் சுழலும் சுழற்சி நிலையில் நம் ஆன்மாவிற்கு விண்ணிலிருந்து வந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நேரடியாக ஈர்க்கும் நிலையை ஏற்படுத்திக் கொண்டு அதிலிருந்து நம் நிலையை நாம் ஞான நிலைக்கும் ரிஷியின் நிலைக்கும் உயர்த்திக் கொள்ள முடியும்.

1.நடந்தவைகளை நினைப்பதுவும்
2.நடக்கப் போவனவற்றைக் கனவு காண்பதுவும்
3.ஞான நிலைக்கும் ரிஷி நிலைக்கும் உகந்ததல்ல,
4.நேற்று... இன்று... நாளை... என்ற பாகுபாடில்லாத பகலும்... இரவும்... பிரித்து எண்ணாமல் தியான நிலையைப் பெற்றிடலாம்.

வெறும் பாட நிலையிலிருந்தோ போதனை நிலையிலிருந்தோ தன்னுள் அச்சக்தியின் அருளை ஒவ்வொருவரும் ஈர்த்து எடுத்திட முடியாது.

பாட நிலையும் போதனை முறையும் நமக்கு வழி காட்டி நிலை தான். வழி அறிந்து செயல்படுவது “நம்முடைய செயலினால் தான்...!” இந்த நிலையை ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டு ஒவ்வொருவரும்
1.தன் நிலையில் ஜெப நிலை என்றால் என்ன…?
2.அத் தெய்வத்தின் சக்தியின் அருளை நாம் எப்படி ஈர்த்து எடுத்திட முடியும்...? என்றுணர்ந்து
3.தன் தன் நிலையில் நடந்தவற்றை மறந்து
4.நடக்கப் போவதை எண்ணிடாமல் இன்று இருக்கும் நிலையில் எண்ணம் கொண்டே ஜெபித்திடுங்கள்.

June 28, 2022

செல்வம் தேடக் கோடிக்கணக்கான சிந்தனைகளைச் செலுத்தினாலும் தனக்குள் வரும் பகைமைகளை நிர்வகிக்கும் திறன் இருக்கின்றதா...?

வாழ்க்கை என்ற நிலைகளில் செயல்படும் போது “ஒரு எஞ்சினியர்” அவர் கண்டுபிடித்த கருவியை உருவாக்குவதில் கால தாமதமானால் வேதனை என்ற உணர்வு அவருக்குள் அதிகமாகிறது.

இப்படி வேதனையை உருவாக்கி விட்டால் பின் அதனுடைய நிலைகள் ஆன பின் அந்த இயந்திரத்தைச் சீராகப் பயன்படுத்த முடியாது.

காரணம்... வேதனை என்று வரப்படும் பொழுது சிந்திக்கும் தன்மை இழந்தால் அருகில் இருக்கும் தன்னுடைய சிஷ்யனை (தன்னிடம் வேலை செய்பவனை) கோபித்துப் பேசுவான்.

அவன் சொன்னபடி சரிவர செய்யவில்லை என்றால்... சரியான பதில் சொல்லவில்லை என்றால் “போடா அறிவு கெட்டவனே... ஏன்டா இப்படிச் செய்கின்றாய்...?” என்று சீறிப்பாயும் தன்மை தான் வரும்.

ஏனென்றால்...
1.மனிதன் தான் நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள் - உயிருடன் ஒன்றி உணர்வின் பொறிகள் இயக்கி
2.அந்த உணர்வு எப்படி இயக்குகின்றது...? என்பதனை நமது குருநாதர் தெளிவாக எடுத்து என்னிடம் கூறினார்.

மனிதனின் வாழ்க்கையில் ஆசையுடன் தான் வாழ்கின்றோம். அந்த ஆசை நிராசையாக எப்படி மாறுகின்றது...? நிராசையாக மாறும் பொழுது மனித உணர்வுகள் எப்படி மாறுகின்றது...?

வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது நோய் என்ற நிலைகள் வருகின்றது. பல துறைகளைக் கற்றுணர்ந்த டாக்டர்களும் இந்த உடலை விட்டு அதனால் தான் மடிகின்றார்கள். வேதனை என்ற உணர்வு கொண்டு மீண்டும் மனிதன் அல்லாத நிலையைத் தான் பெறுகின்றார்கள்.

1.செல்வத்தைத் தேடக் கோடிக்கணக்கான சிந்தனைகளைச் செலுத்தி நிர்வாகத்தை நடத்தும் திறன் வந்தாலும்
2.இந்த உடலுக்குள் இருக்கும் பகைமையான உணர்வுகளை நிர்வகிக்கும் தன்மை எவருக்கும் இல்லை.

அப்படி நிர்வகிக்கும் அந்தத் திறனைப் பெற
1.அனைத்தையும் ஒளியின் உணர்வாக மாற்றிடும் அந்த மெய் ஞானியின் உணர்வை
2.எவர் ஒருவர் இங்கே தேடிக் கொள்கின்றனரோ அவரே அதனைப் பெற முடியும்.

ஆகவே... அந்த அருள் ஞானத்தின் உணர்வின் தன்மையை நாம் நமக்குள் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

விஞ்ஞானத்தின் அறிவு வந்தால் அது இந்த உடலின் இச்சைக்கே வருகின்றது. ஆனால் மெய் ஞானத்தினுடைய அறிவால் ஒவ்வொரு அணுவின் இயக்கங்களையும் அறிய முடிகின்றது.

அருள் உணர்வின் தன்மை கொண்டு மெய் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் உருவாக்கி விட்டால் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக நமக்குள் வருகின்றது.

உதாரணமாக குறும்புத்தனம் செய்வோரை உற்றுப் பார்த்த பின் அந்த குறும்புத்தனத்தை உருவாக்கும் அணுவாக நம் உடலில் விளைய ஆரம்பிக்கிறது.
1.அவனை நினைக்கும் போதெல்லாம் இந்த உணர்ச்சிகள் தூண்டும்
2.நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு நாமும் குறும்புத்தனம் செய்வோம்... பார்க்கலாம்...!

அது நமக்குள் உருப் பெறாதபடி தடுக்க வேண்டுமல்லவா...!

ஏனென்றால் தவறு செய்கின்றான் என்று தெரிந்து கொள்ள முடிகின்றது. அது கார்த்திகேயா. கார்த்திகேயா என்றால் ஆறாவது அறிவு... நம்மைக் காத்திடும் சேனாதிபதி.

ஆகவே... தீமையான உணர்வு நமக்குள் வராதபடி தடுக்க வேண்டும் என்றால் சேனாதிபதிக்கு வலு எப்படி கொடுக்க வேண்டும்...?

நஞ்சினை வென்ற அகஸ்தியன் துருவனாகி... துருவ மகரிஷியாக உள்ளான்.
1.அவனின் உணர்வை அடுத்த கணமே இணைத்து நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்குதல் வேண்டும்.
2.அந்தத் தீமைகள் உள்புகாதபடி நம் வழிக்கு அது வசப்படும்படி செய்தல் வேண்டும்.

நாம் எடுக்கும் ஞானத்தின் வழிகளில் அருள் ஒளியின் உணர்வைத் தன்னுடன் இணைத்து தீமைகளை அடங்கச் செய்ய வேண்டும். அது தான் அங்குசபாசவா...!

தீமையான உணர்வை நாம் நுகர்ந்தாலும் அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து... இதை வைத்து அதை அடக்கி நமக்குள் செயலாற்றும் தன்மை பெற வேண்டும் என்பதற்காக
1.சிறு கல்லைக் காட்டி (ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள தெய்வச் சிலை)
2.அடுத்து உன் வாழ்க்கையை நீ எப்படி அமைக்க வேண்டும்...?
3.இந்த உடலை விட்டுச் சென்றால் நீ என்ன ஆவாய்...? என்ற நிலையைத் தெளிவாகக் கூறியுள்ளான் அருள் ஞானி.

இயற்கையின் உண்மை நிலைகள் எப்படி மாறுகின்றது...? என்பதை உணர்ந்த மெய் ஞானிகள்... உருவாக்கும் திறன் பெற்ற ஆறாவது அறிவால் நாம் எப்படிச் சீராகச் செயல்பட வேண்டும் என்று காட்டியுள்ளார்கள்.

சொல்வது நன்றாக அர்த்தம் ஆகிறது அல்லவா.

படிப்பறிவினால் சம்பாரித்து உடலை வளர்க்கலாம்… அருள் ஞானத்தைப் பெற்றால் உயிரான்மாவை வளர்க்கலாம்

பிறந்தோம்... வளர்ந்தோம்... வாழ்ந்தோம்... மடிந்தோம்...! என்ற சாதாரண நிலையில் மிருகங்களின் வாழ்க்கை நிலை போலத் தான் “நம் எண்ணத்தின் சக்தியை...” நாம் எண்ணிப் பார்க்காமல் வாழ்கின்றோம்.

1.இந்த எண்ணம்...
2.இந்தச் சக்தி...
3.உடல் என்னும் கூட்டில் ஆத்மா உள்ள வரை “செயல்படும் தன்மை...!”
4.உடலை விட்டுப் பிரிந்த பின்னாடி ஆவி உலகத்தில் அறிந்திட முடியாது.
5.தன் அறிவைப் பெருக்கிக் கொள்ள ஆவி உலகில் உள்ள ஆத்மாவினால் முடிந்திடாது. (இது மிகவும் முக்கியம்)

பல ஜென்மங்களில் நாம் எடுத்த எண்ணங்களும் செயல்களும்தான் இந்த உடலை விட்டுச் சென்ற அந்த ஆவிகளால் அறிந்து கொள்ள முடியும்.

உடலில் உள்ள பொழுது எந்தெந்த நிலையை அந்த ஆத்மா பெற்றதோ... எந்த நிலை கொண்ட அறிவாற்றல் அந்த ஆன்மாவிலே இருந்ததோ... அதே நிலையில் தான் அந்த ஆத்மா சுற்றிக் கொண்டேயிருக்கும்.

1.இந்த உலகையும்…
2.தான் எந்தெந்த நிலையில் வாழ்ந்ததோ அந்த நிலை கொண்ட மனிதர்களையும்…
3.அதே நிலை கொண்ட இடத்திலும்தான்.. அந்த ஆன்மா மறு ஜென்மம் பெற்று
4.“தன் தேவையை எப்படிப் பூர்த்தி செய்து கொள்ளலாம்...!” என்ற ஆவலுடன்
5.பல ஆண்டுகள் சுற்றிக் கொண்டே இருக்க முடியும்.

ஆனால் மறு ஜென்மம் பெற்று இன்று இந்த உலகில் வாழ்ந்திடும் உடலுடன் கூடிய ஆத்மாக்கள் எல்லாம் தன் நிலை உணர்ந்து வாழும் நிலையும் ஈர்க்கும் நிலையும் இல்லாமல் பிறரின் நிலை கொண்டே தன் எண்ண சக்தியை விரயமாக்கிக் கொண்டுள்ளார்கள்.

ஏனென்றால் நாம் வாழும் இந்த உலகம்.. மற்ற மண்டலங்கள்... அண்டசராசரங்கள்... எல்லாவற்றையுமே அறிந்து கொள்ள மனிதர்களால் மட்டும் தான் முடிந்திடும்.
1.இன்று ஆத்ம உடலுடன் உள்ள மனிதனால் மட்டும் தான்
2.எல்லா நிலையையும் ஈர்த்து
3.எல்லா உண்மைகளையும் கண்டுணர முடியும்.

அத்தகைய சக்தியைப் பெறும் தகுதி என்பது ஆண்... பெண்... குழந்தைகள்... முதியவர்கள்... என்ற நிலை கொண்டு வயது வரம்பில்லாமல் எல்லோருக்குமே அந்தச் சக்தியுள்ளது. நாம் ஈர்த்து எடுக்கும் நிலை கொண்டு தான் அந்தச் சக்தி நமக்கு உதவுகின்றது.

மின்சாரத்தை உபயோகித்து ஒரு கடுகளவு வெளிச்சத்தையும் அதிதீவிர வெளிச்சத்தையும் உண்டாக்குகின்றோம். அந்தந்தச் சாதனத்திற்குள் எந்த அளவிற்கு மின்சாரத்தைப் பாய்ச்சுகின்றோமோ அந்த நிலையில் நாம் அதனின் ஒளியைப் பெறுகின்றோம். அதைப் போல
1.மனிதனின் சக்தி என்பது
2.அந்த மின்சாரத்தின் சக்தியைவிட அதிவிரைவு கொண்ட சக்தியாக உள்ளது.
3.ஆனால் இன்றைய மனிதர்கள் தன் சக்தியைத் தானே உணர்ந்து எடுக்கும் நிலை இல்லை.

படிப்பு என்ற நிலையில் பல நூல்களையும் பல கல்வி ஸ்தாபனங்களுக்குச் சென்று படிப்பதுவும் தன் அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இருந்தாலும் அறிவு வளர வேண்டும்...
1.தன் எண்ணத்தில் வீரிய சக்தி பெற வேண்டும்
2.தன் நிலையில் பல உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற
3.இப்படிப்பட்ட எண்ணத்தில் படிப்பை வளர்த்துக் கொள்பவர்கள் மிகவும் குறைவு.

படிப்பதனால் தன் வாழ்க்கை நிலைக்குகந்த செல்வம் பெற்றுச் செல்வச் செழிப்புடன் வாழலாம்.
1.உயர்ந்த உத்தியோகம் கிடைக்கும்
2.உன்னத நிலை பெற்று புகழ்ந்த நிலையில் வாழலாம் என்ற
3.இந்த ஆசாபாசத்துடன் தான் இன்றைய பாட நிலையும் படிக்கும் நிலையும்
4.கல்வி கற்பவருக்கும்... கல்வி புகட்டுபவருக்குமே... உள்ளது.

அப்படி வாழ்ந்திடாமல் அச்சக்தியின் அருளை ஏற்று வாழும் வாழ்க்கையைப் பெற்று வாழ்ந்திடுங்கள்.

இந்த உடல் என்னும் கூட்டை... ஆத்மாவின் நிலை கொண்டு... நம் எண்ணம் என்ற செயலினால்...! இந்த உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களை ஆற்றல் மிக்கதாக ஆக்கி
1.இந்த உலகம் அனைத்திலும் உள்ள சக்தியைக் கண்டறியும் ஆற்றலும்
2.இந்த உடலையே நாம் பறக்கும் நிலைப்படுத்திடவும்
3.எந்த நிலைக்கும் இந்த உடலை நாம் ஈர்த்து அச்சக்தியின் அருளைப் பெற்று
4.இந்த உலகில் உள்ள மக்களுக்குப் பல உண்மைகளை உணர்த்திட முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்...!

June 27, 2022

நான் (ஞானகுரு) கற்றறிந்தேன்... பேசுகின்றேன்... நீங்கள் என்றைக்குத் தயாராகுவது...!

மனிதனாக வாழும் பொழுதே கணவன்-மனைவி இருவரும் இங்கே கொடுக்கும் உயர்ந்த சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பார்வை தீமைகளை அகற்றிடும் ஆற்றல்மிக்க சக்தியாக விளைய வேண்டும்.

உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்... அருள் ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை
1.உங்கள் உடலிலே வளர்த்துக் கொள்ளுங்கள்
2.இந்த உணர்வலைகளை உலகெங்கிலும் பரப்புங்கள்.

அத்தகைய நிலையை ஏற்படுத்துவதற்குத்தான் திரும்பத் திரும்ப உங்களுக்கு இதை நினைவுபடுத்துகிறேன் (ஞானகுரு).

ஏதோ சாமி சொல்கின்றார்... நாங்கள் கேட்பதற்குத்தான் இருக்கிறோம் என்று எண்ணிவிடாதீர்கள்.

நீங்கள் என்றைக்குத் தயாராகுவது...?

நான் கற்றறிந்தேன்... பேசுகின்றேன். உங்களை வளர்ப்பதற்காக இந்த உணர்வின் தன்மை பதிவாக்குகின்றேன். நீங்கள் தயாராக வேண்டும்...!

1.ஒரு குருவாக இருந்தார்... என்னைத் தயாராக்கினார்.
2.அந்த ஞானத்தின் வழியை எல்லோருக்கும் போதிக்கச் சொன்னார்.
3.நீங்கள் எல்லோரும் நம் குருவின் உணர்வை ஏற்று... குருவாகவே மாற வேண்டும்.

ஒவ்வொருவரும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை வளர்த்து குரு நமக்கு எந்த வழியைப் போதித்தாரோ அதன் வழியிலே நாம் சென்றோம் என்றால்
1.நாம் அனைவரும் குருவே... குரு வழியில் குருவாகின்றது அதன் வழியே செயல் ஆகின்றது
2.ஆக அருள் ஒளியை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்
3.அந்த அருளையே நமக்குள் குருவாக்குதல் வேண்டும்
4.அருள் வழியில் இருளை மாற்றிடும் உணர்வை நமக்குள் உருவாக்க வேண்டும்
5.குருவாக... குருவின் நிலைகளில் தீமையை மாற்றிடும் அருள் உணர்வுகளைப் பெறுதல் வேண்டும்.

அதற்குத் தான் இதைச் சொல்வது.

சாதாரண மனித வாழ்க்கையில் வாழ்கின்றோம். இருந்தாலும் இயற்கையின் நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் உணர்வுகளை... அந்த மெய் ஞானிகளின் உணர்வைக் காலை துருவ தியானத்தில் எடுத்துப் பழகுங்கள்.

அந்த மகரிஷிகள் சென்ற பாதையில் கணவனும் மனைவியும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை பெறவேண்டும் என்று உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த உணர்வின் அறிவாக வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஒருப் பத்து நிமிடம் எடுத்துக் கொண்டபின் அந்தச் சக்தி என் கணவருக்குப் பெற வேண்டும் என்று ஏங்கி பெறச் செய்யுங்கள் அதே போன்று கணவன் மனைவிக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டுமென்று உணர்வைப் பாய்ச்சுங்கள்.

1.அடுத்தடுத்து உங்களுக்குள் அந்த மெய் உணர்வின் விளக்கங்கள் வர வேண்டும்.
2.நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஒளியின் சுடராக மாற வேண்டும்
3.உங்கள் பார்வையால்... உங்கள் சொல்லால் கேட்போர் உணர்வுகளில் இருளை மாய்த்திடும் நிலை பெற வேண்டும்.

உங்கள் பேச்சும் மூச்சும் விஞ்ஞான அறிவில் வரும் பேரழிவுகளில் இருந்து உலகைக் காக்கும் நிலையாக மாறுதல் வேண்டும். குருவின் அருள் நமக்குள் செயல்படுதல் வேண்டும்.

தியானத்தின் மூலம் பெற்ற சக்தியால் உங்கள் சொல்லைக் கேட்கும் பொழுது மற்றவர்கள் பிணிகள் பறந்து ஓடவேண்டும் அருள் உணர்வுகளை அவர்கள் நுகரும் திறனைப் பெறச் செய்தல் வேண்டும்.

அதை அவர்கள் நுகர்ந்தால் அவர்கள் பிணிகள் ஓடுகின்றது. இதனின் தன்மையை அவர்களுக்குள் சேர்த்தால் பல பிணிகளையும் போக்க முடிகின்றது. பிணிகளைப் போக்கும் அந்த நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நோயாகிவிட்டதே...! என்று எண்ணி அதை நுகர்ந்தால் இங்கே அது சாடிவிடுகிறது. நம் நல்ல குணங்களையும் அழித்து விடுகின்றது.

ஆகவே மெய் ஞானிகளின் உணர்வு கொண்டு அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து நாம் விடுபட்டு மெய் ஞான வாழ்க்கைக்குச் செல்லுதல் வேண்டும்.

அஞ்ஞான வாழ்க்கையாக வாழும் இன்றைய உலகில்...
1.மனிதன் சிதைந்திடும்... மனிதனைச் சிதைக்கச் செய்யும் உணர்வுகள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில்
2.மனிதனையே பூண்டோடு அழித்திடும் சக்திகளும்
3.மனிதனுக்கு மனிதன் அழித்திடும் நிலையை உருவாக்கும் சந்தர்ப்பங்களும்
4.மதம் இனம் மொழி என்ற நிலையில் மொழி பேதங்களும் இனபேதங்களும் மனபேதங்களும் உருவாக்கப்பட்டு
5.நம்முடைய ஆறாவது அறிவின் தன்மையை இருள் சூழச் செய்துவிட்டோம்.

நம் உயிரை மறந்துவிட்டோம்... எங்கேயோ இருக்கின்றான் ஆண்டவன் என்று எண்ணுகின்றோம்... எங்கேயோ இருக்கின்றான் கடவுள் என்று எண்ணுகின்றோம்... எங்கேயோ இருக்கின்றான் ஈசன் என்று எண்ணுகின்றோம்... எங்கேயோ இருக்கின்றான் கர்த்தர் என்று எண்ணுகின்றோம்...!

ஆக மொத்தம் கடவுள் நாம் எண்ணும் உணர்வு எதுவோ அந்த உணர்வைத் தான் உருவாக்கி இயக்குகிறது. இது தான் உயிருடைய வேலை

நமக்குள் இருந்து இயக்கும்
1.அவனை (உயிரான ஈசனை) மறவாது
2.அவனால் உருவாக்கப்பட்ட மனித உடலை அழித்திடாது
3.மனித உடலில் சோர்வை விடாது அருள் உணர்வுகளை வளர்த்துப் பழகுங்கள்.

தீமைகள் வரும்போதெல்லாம் மகரிஷிகளின் அருள் ஆற்றலை உங்கள் இரத்தநாளங்களில் கலக்கச் செய்யுங்கள். தீமை என்று நுகர்ந்தாலும் அறிய அது உதவினாலும் அடுத்தகணம் நமக்குள் உருவாகாதபடி அதை மாற்ற வேண்டும்.

அதற்குத்தான் இந்த உபதேசம்...!

நாம் எண்ணிய எண்ணத்தில் தான்... ஏற்றமும் தாழ்வும் அமைவது…!

எண்ணக் கடலில் செல்லும் நாம்
எண்ணிய இடத்திற்குச் செல்வதற்கே
எண்ணிய எண்ணத்தில் தான்...
ஏற்றமும் தாழ்வும் அமைவதுவே...!

இந்த உலகம் என்ற மாயையே எண்ணி மயங்கி வாழும் வாழ்க்கை தான் நாம் வாழ்கின்றோம். அப்படிப்பட்ட
1.இந்த உலக வாழ்க்கையிலே நமக்கு எஞ்சி இருப்பது எதுவப்பா…?
2.வாழும் வாழ்க்கையில் மிஞ்சுவது என்னப்பா…?
3.சொத்தையும் சுகத்தையும் ஆள்வது யாரப்பா…?
4.இந்த உலகில் பிறந்து வாழ்ந்து இறந்த பின் நிலைத்து இருப்பது என்னப்பா...?
5.நம் உடலா...? சம்பாரித்த பணமா...? சொத்தா...? சுகமா...?

நாம் இந்த உலகை விட்டுச் செல்லும் பொழுது நம்முடைய மக்கள் (பிள்ளைகள்) இருக்கின்றார்களே...! என்ற எண்ணம் பலருக்குண்டு. ஆனால்
1.நம் பெயர் சொல்ல அந்த மக்கள் எத்தனை காலங்களுக்கு…?
2.அடுத்து அந்தக் குழந்தைகளுக்குக் குழந்தை.. குழந்தைகளுக்குக் குழந்தை...! என்று (பேரன்... கொள்ளுப் பேரன்....!)
3.இப்படிச் சுற்றிக் கொண்டேயுள்ள நிலையிலே நம் பெயர் மறைய எத்தனை காலங்கள்…? என்று இதை எல்லாம் சிந்திக்கின்றோமா...?

நம்முடைய அம்மா...அப்பா... பற்றி சிறிது காலத்திற்கு எண்ணுகிறோம். அவர்கள் அம்மா அப்பா... அதற்கு முன்னாடி வாழ்ந்தவர்கள்...! என்று யாரையாவது நாம் நினைக்கின்றோமா...?

மீறிக் கேட்டால் என்ன சொல்வோம்..? அவர்கள் எல்லாம் போய் விட்டார்கள்... என்று “சாதாரணமாகத்தானே சொல்கிறோம்...!”

அவர்கள் எதையுமே (தன் உடலையோ பொருளையோ) கொண்டு போக முடியவில்லை என்கிற பொழுது நாம் மட்டும் எதைக் கொண்டு போக முடியும்...?

ஆக மொத்தம் பிறப்பு...உடல்...இறப்பு...! மீண்டும் பிறப்பு... உடல்...இறப்பு...! என்று இராட்டினம் மாதிரித் தான் சுற்றிக் கொண்டே இருக்கின்றோம்.

இந்தப் பூமியில் பிறந்த நாம் அனைவரும் பிறவிப் பயன்... பிறவிப் பயன்... என்பதையே புரிந்து வாழ்ந்திடாமல் இருக்கும் வரை (உடலுடன்) அனுபவிக்க வேண்டும் என்று இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனாலும் நம்மைப் போன்றே பூமியில் தோன்றிய புண்ணியவான்கள் இன்றும் அவர்கள் பெயர்கள் நிலைத்திருக்க வாழும் நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

1.நம்முடைய ஆணிவேரான சுவாச நிலையிலிருந்து
2.நாம் பெறும் பாக்கியங்களை... நாம் பெறும் செல்வங்களை
3.உயிராத்மாவிற்குத் தேவையான அழியாத பொக்கிஷத்தை... அந்தச் செல்வத்தை நாம் புரிந்து வாழ்ந்திட
4.பல நிலைகளை நமக்கு அளித்துச் சென்றவர்கள் தான் புண்ணியவான்களான அந்த ஞானிகளும் மகரிஷிகளும்...!

அவர்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய நிலையினிலே பல பல ஆற்றல்களையும் சக்திகளையும் பெற்று இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் நிலைத்திருக்கவில்லையா…?

அவர்கள் பிறந்த அதே பூமியில் வாழும் நமக்கு நம் நிலை நிலைத்திருக்கப் பல நிலைகளை உணர்த்திச் சென்றுள்ளார்கள்.

அத்தகைய சக்தி (அஷ்டமாசித்து) பெற்றவர்கள் தன் உடலை ஒரு கூடாக வைத்துத்தான் தன் ஆத்மாவை உலகெங்கும் பிற மண்டலங்கள் எங்கும் சென்று வரும் நிலைக்குப் பல அருளைப் பெற்றார்கள்.

இந்த உலகில் கலந்துள்ள அத்தகைய மெய் ஞானிகள் மகரிஷிகளின் நிலையை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
1.நாம் எந்த நிலை கொண்டு எண்ணுகின்றோமோ அந்த நிலைக்கெல்லாம் வந்து உதவி
2.நம் எண்ணத்தையும் செயலையும் நல்லதாக்க
3.நமக்குப் பல நன்மைகளைச் செய்திடப் அப்படிப்பட்ட பல பெரியோர்கள் உள்ள பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்...?

நம் எண்ணமும் செயலும் பல ஆசை கொண்ட சுகபோகங்களுக்குச் சென்றிடாமல் அதற்கு அடிமைப்பட்டு வாழும் நிலையை மாற்றிட வேண்டும். அன்பென்னும் ஆசை தான் நமக்கு வேண்டும்.

ஆகவே
1.அழியாச் செல்வமான நம்முடைய ஆத்மாவை நாம் அழித்தே வாழ்ந்திடாமல்
2.நம் எண்ணத்தையும் நம் சுவாசத்தையும் நம் ஆத்மாவிற்கு அடிமையாக்கி
3.அந்த ஆத்மாவிற்கு அடிபணிந்து வாழ்வதற்கு நம்முள் இருக்கும் உயிரான ஈசனின் சக்தியைக் கொண்டு
4.நமக்கு முன் தோன்றிய பல பெரியோர்களின் ஆசியைப் பெற்று வாழ்வதுவே மனிதனின் வாழ்க்கை.

ஞானிகள் மகரிஷிகளின் அருளாசி பெற்று வாழ்ந்திடுங்கள்...
அன்புடன் வாழ்ந்திடுங்கள்... ஆண்டவனாக வாழ்ந்திடுங்கள்…!

நழுவ விட்டதை மீட்டிட இந்தக் கடைசி உடலிலிருந்தாவது உயிரணுவைச் சமமாக நிலை நிறுத்தி மகரிஷிகளிடம் ஐக்கியப்படுத்துங்களப்பா

இந்தப் பூமியில் பிறப்பெடுத்த ஒவ்வொரு மனிதருமே சமமான நிலை நிலைக்க வாழும் வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள். சமமான வாழ்க்கையை ஆண்டவன் நமக்கு ஏன் அருளவில்லை என்று எண்ணிவிடாதீர்கள்.

இந்தப் புண்ணிய பூமியில் பிறந்ததின் நோக்கமே அச்சக்தியின் அருள் பெற்று நமக்குத் தந்த இச்சந்தர்ப்பங்களை எல்லாம் நம் நிலையைச் சமமாக்கி வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

அதாவது ஒவ்வொரு பிறவி எடுக்கும் பொழுதும்
1.அடுத்த பிறவியிலாவது நம் வாழ்க்கையைச் சமமாக்கி வாழ்ந்திடலாம்
2.சகல தேவரையும் கண்டிடலாம் என்ற பேராவலுக்காகத்தான் பிறப்பு எடுக்கின்றோம்

பிறவி எடுத்திருந்தாலும் நிறைவு பெற்ற சமமான வாழ்க்கையை எடுத்திட முடியாமல் தான் இன்று இந்த உலகில் உள்ள பாமரர்களின் நிலை உள்ளது.

மனிதனாகப் பிறவி எடுத்த நாளிலேயே அடுத்த ஏழு பிறவிக்கு நம் ஆத்மாவை அலைய விட்டிடாமல்
1.ஒரே பிறவியில் தன் நிலை உணர்ந்து சமமான நிலை எய்தி
2.சகல தேவனாக சூட்சம உலகத்தில் சென்று கற்றுணர்ந்த ஞானிகளும்
3.தன் நிலையைத் தெய்வ நிலையாக்கி வாழ்ந்தவர்களும் இன்றும் தெய்வமாக உள்ளார்கள்.

ஆனால் நாம் எடுத்துள்ளோம் இப்படிப் பல பிறவிகளை. இந்தப் பிறவியிலும்... இப்பொழுதும்... இன்றும்... நிறைவு இல்லாமலேயே வாழ்கின்றோம்.

ஆகவே சமமான நிலை நிலைக்க அந்த ஆண்டவனின் அருள் கிட்ட நம்முள் இருக்கும் ஆண்டவனைப் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
1.நான் என்ற நிலையை...
2.நம்மை ஈசன் இயக்குகின்றான் என்ற உண்மையை உணர்ந்திடல் வேண்டும்

இவ்வுலக வாழ்க்கையிலே சலிப்பும் சங்கடமும் மேற்கொள்ளாமல் நம்மை நாம் சமமாக நிலைப்படுத்தி வாழ்ந்திடும் வாழ்க்கையால்தான் அந்த சகல தேவர்களுடன் நாமும் ஒருவராக வாழக்கூடிய தகுதியைப் பெற முடியும். அந்தத் தேவாதி தேவர்களின் நிலையையும் எய்திட முடியும்.

சகல தேவர்கள் என்றால் யார்...? என்ற கேள்விக்குறி எழுந்திட முடியும்.

ஈசன் ஒருவன் தான் சகலத்திலும் கலந்துள்ளவன். அந்த ஈசன் தான் என்னும் பொழுது ”சகல தேவர்கள்” என்று பிரித்துக் கூறும் நிலையில் உள்ளவர்கள் யார்...? என்று நம் மனதிற்கு விடை காண எண்ணிடலாம்.

1.சகல ரூபங்கள் கொண்டு
2.ஒவ்வொரு ரூபத்தின் வடிவினிலும் எண்ணி ஏங்குபவருக்கு
3.ஆண்டவனாக வந்து அருள் புரியும் அந்த ஞான நிலை பெற்ற
4.“மெய் ஞானிகளும்... மகரிஷிகளும் தானப்பா அச் சகல தேவர்கள்...!” (முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்)

இந்த உலகில் மனிதர்கள் மிருகங்கள் மட்டும் வாழவில்லை. நம்மைச் சுற்றிப் பல கோடி ஆத்மாக்கள் உடலில்லாமல் ஆத்மாவுடன் (ஆவிகள்) இந்தக் காற்று மண்டலத்தில் உள்ளது.

1.உலகில் நடக்கும் நிலைகளை எல்லாம் தெரிந்து கொண்டு தன் நிலைகளுக்கு ஏற்ப உடல்களையும்
2.தன் ஆத்மா வந்து (தான்) பிறந்து வாழ்ந்திடும் நிலைக்காகவும்
3.எந்த உடலில் ஏறினால் அந்த உடலின் மூலமாகத் தான் விட்டுச் சென்ற தன் எண்ணத்தை - நன்மையையோ துவேஷத்தையோ பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலை கொண்டும்
4.இப்படித் தன் நிலையை ஈடேற்றிக் கொள்ள இன்று உடலுடன் வாழும் மனிதர்களை
6.உடலில்லா ஆத்மாக்கள் பல கோடி கோடியாகத் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளச் சுற்றிக் கொண்டேயுள்ளன.

நாம் நினைக்கின்றோம்...!
நம் எண்ணம்...
நம் உடல்...
நம் ஆன்மா என்று...!
நம் உடலில் நாம் மட்டும் வாழவில்லையப்பா.

(நாம் எண்ணுவதைப் போல் நாம் மட்டும் வாழவில்லை - இது மிகவும் முக்கியமானது)

நம் மன நிலை எந்தெந்த நிலை கொண்டு மாறுகின்றதோ
1.அந்தந்த நிலை கொண்ட ஆவி அணுக்கள் நம் உடலில் வந்து எந்தத் திசையிலும் ஏறிக் கொண்டு
2.நம்மையே ஆட்டிப் படைத்து நம்மை ஆண்டு வாழ்ந்து
3.தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள நம் உடலை ஒரு கூண்டாக
4.தான் குடியிருக்கும் கூண்டாக வைத்து ஆண்டு வாழ்கிறது.

(உடலில் ஆவிகள் இல்லாத மனிதரே இல்லை என்று சொல்லலாம்)

நம் நிலையைக் கொஞ்சம் போல மாற்றிக் கொண்டாலே (உணர்ச்சி வசப்பட்டாலே) நம் நிலையில் இருந்து வாழ்ந்திடப் பல அணுக்கள் நம்மைச் சுற்றிக் கொண்டுதான் உள்ளன...! என்பதை இப்பொழுதாவது ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளுங்கள்.

இதிலிருந்தெல்லாம் தப்ப வேண்டும் என்றால் நம்முள் அந்த ஆண்டவனின் சக்தி ஒன்றைத்தான் ஈர்த்து வாழ்ந்திட முடியும் என்ற உண்மையை உணர்ந்து பல ஆவி உலக ஆன்மாக்களுக்கு நாம் அடிமையாகாமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இது வரை இந்த உலக வாழ்க்கையில் பெற்ற சந்தர்ப்பங்கள் (பல பிறவிகள்) எல்லாவற்றையுமே நழுவ விட்டு விட்டோம்.
1,இந்தக் கடைசி நிலை கொண்ட இந்த மனித உடலிலிருந்தாவது
2.நம் உயிரணுவைச் சமமாக நிலை நிறுத்தி
3.அந்தச் சகல தேவர்களிடம் (மகரிஷிகளிடம்) ஐக்கியப்படுத்துங்களப்பா...!

June 26, 2022

வாயுப் பிடிப்பு... அல்சர்... இது எல்லாம் வரக் காரணம் என்ன...?

நாம் நுகரும் உணர்வுகள் (சுவாசிப்பது) அனைத்தும் இரத்த நாளங்களில் தான் செல்கின்றது.

சூரியன் பல விதமான உணர்வுகளைக் கவர்ந்து அலைகளாக மாற்றி பூமியில் எப்படிப் பரவச் செய்கின்றதோ இதைப் போல நாம் எடுக்கும் ஒவ்வொரு உணர்வுகளும் இந்த இரத்த நாளங்களின் வழி கூடித் தான் எல்லா அணுக்களுக்கும் உணவாகப் போய்ச் சேர்கின்றது.

அப்போது உடலுக்குள் ஆங்காங்கு மோதலின் எதிர்நிலை வரப்படும் பொழுது வாயு உண்டாகிறது.

ஒரு வேப்பமரத்தினுடைய உணர்வும் ரோஜாப்பூவினுடைய உணர்வும் இரண்டும் கலந்து வரப்படும் பொழுது
1.வேப்பமரத்தின் மணத்தைக் கண்டு ரோஜாவின் மணம் அஞ்சி ஓடப்படும் பொழுது
2.இதற்கு முன்னாடி இதனுடைய அழுத்தம் தள்ளும் பொழுது ஒரு காற்று வரும்... நறுமணமாக இருக்கும்.
3.அதே போல இதைக் காட்டிலும் வலுவான நிலைகள் (விஷச் செடியின் மணம்) அங்கே இருக்கிறது என்றால் போகாது தடுக்கும்
3.”சுழி...” என்ற காற்றுகள் சுழலும்.

ஒரு எதிர்ப்பான உணர்வின் தன்மை வரப்படும் பொழுது இங்கே காற்று மண்டலத்தில் சுழிகள் எப்படி வருகின்றதோ இதைப் போல நாம் அணுக்களின் நிலைகளில் இரத்த நாளங்களில் செல்லப்படும் பொழுது மோதலின் தன்மை வரப்படும் பொழுது
1.எதிர்மறையான மோதல் வந்து
2.ஏ...வ்வ்வ்வ்...! என்று ஏப்பமாக வருவது இப்படித்தான்.

எதிர்நிலையான அணுக்களின் தன்மையும் அதே சமயத்தில் இந்த உணர்வும் இரத்த நாளங்களில் அதிகமாக ஊடுருவி அது செல்லும் பாகங்களில் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது வாயு அதிகமாக உருவாகின்றது.

அது அதிகமாக உருவாகி அழுத்தங்கள் அதிகமாக்கப்படும் போது நம் உடல் அசர்க்கையாகின்றது (சோர்வு). ஏனென்றால்
1.இந்த அணுக்கள் நுகர்ந்த உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதல் ஆக்கப்படும் பொழுது
2.இதற்குள் ஒன்றை ஒன்று வென்றிடும் உணர்வுகள் வரும்.

சில நேரங்களில் வாயு உபத்திரவம் ஆனால் முக்கியமான பாகங்களில் செல்லப்படும் பொழுது “பளீர்...ர்...” என்று ஒரு மின்னலாகும். நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் இந்த உணர்ச்சியின் தன்மை தூண்டப்படும் பொழுது இந்த உணர்வை நுகர்ந்து நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.

அதேபோல ஒவ்வொரு உணர்வுகளும் நமக்குள் மாறிக் கொண்டே இருக்கின்றது.

வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கும் பொழுது நம் இரத்த நாளங்களைச் சோதித்தால் இதில் வித்தியாசமாக இருக்கும்.
1.மறு நாள் காலையில் பார்த்தோம் என்றால் சிவப்பு அணுக்களையே காணோமே...! என்ற நிலை வரும்
2.இதை மாற்றிடும் உணர்வின் தன்மை நுகர்ந்து விட்டால் சிவப்பணுக்களின் நிலைகள் பூராம் இழந்து விடுகின்றது.

ஒரு திரவகத்தை ஊற்றினால் எப்படியோ அது போல் விஷத்தன்மை கொண்ட இத்தகைய நிலைகளும் நொடிக்குள் நம் உடலுக்குள் மாற்றும் நிலை வந்துவிடும்.

நொடிக்குள் மாற்றம் வரப்படும் பொழுது...
1.நமக்குள் வளர்ச்சி பெற்ற அணுக்களுக்கு இதனின் உணர்வின் தன்மை அந்த வலு இல்லை என்றால்
2.அதனுடைய செயலாக்கங்களை இழக்கின்றது... சோர்வடைகின்றது.

உதாரணமாக... காற்று மண்டலத்தில் அனல் காற்று வீசினால் இங்கே தாவரங்கள் எப்படி வளரும்...? அது கருகுகின்றது. அனல் காற்று பூமியில் உள்ள ஈரசத்தை எல்லாம் எடுத்துக் கொண்டால் தாவர இனங்களுக்கு வேண்டிய ஈரம் இல்லை என்றால் மரம் வாடுகின்றது.

இதைப் போன்றுதான் நாம் நுகர்ந்த உணர்வுகள் போர் முறையாகி வெப்பமாகி ஈரச்சத்தை எல்லாம் ஆவியாக்கி விட்டால் உடலுக்குள் அடுத்து வாயு உருவாகிறது.

நம் உடலுக்குள் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுள்ளது. இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

அன்பு கொண்டு நாம் வணங்கும் “அனைத்துமே ஆண்டவன் தான்...”

ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கு வேண்டிய ஒரே ஆசையான அன்பென்னும் ஆசையைத்தான் நாடி ஏங்கி வாழ்கிறது. எல்லா ஆன்மாக்களுமே அன்பை வேண்டித்தான் இந்த உடலுடன் வாழ்கின்றது.

அந்த அன்பிற்காகத்தான்... ...
1.அந்த அன்பு கிடைக்காத நிலையில் சோர்வாகி
2.மன நிறைவைப் பெற்றிடாமல் பல தவறுகளும் பல இன்னல்களும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் வந்து
3.அந்த மனம் என்னும் அன்பு கொண்ட ஒரே லோகத்தைப் பல லோகங்களாக்கி வாழ்ந்திடுகிறார்கள் மனிதர்கள்.

பரலோகம்.. எமலோகம்... நரகலோகம்... பூலோகம்... சொர்க்கலோகம்... இப்படிப் பல லோகங்களைச் சொல்கிறார்கள்…! அல்லவா. இவைகள் எல்லாம் என்னப்பா…?

மனம் என்னும் அந்த அன்பு லோகத்தை அந்த அன்பையே ஏங்கி அன்புக்காக வாழும் அந்த ஆத்மலோகத்திற்காக நம்மைச் சுற்றியுள்ள பல லோகங்களைத்தான் நாம் அழிக்கின்றோம்.

அன்பு ஒன்றினால் மட்டுமே இந்த உலகை உன்னதமாக ஆக்கிட முடியுமப்பா. ஆகவே எந்த நிலை கொண்டும் இன்று இருக்கும் இந்த விஷமான விஞ்ஞான உலகில்
1.பல இன்னல்களுடன் வாழ்ந்திடும் இம்மனமென்னும் ஆத்மாவிற்கு
2.அன்பென்னும் பொக்கிஷத்தை அவ்வுயிர் ஆத்மாவிற்கு ஊட்டம் தந்தே வாழ்ந்திடுங்கள்.

ஏனென்றால் அன்பினால் தான் நம் உடலும் நம் மனதும் நம் ஆத்மாவும் புத்தொளிர் பெற்று வாழ்கிறது என்ற உண்மையை அறிந்து ஒவ்வொருவரும் அன்பு கொண்டு வாழ்ந்திடுங்கள்.

ஆண்டவனை வணங்கிடும் முறையை நமக்கு முன் வாழ்ந்த முன்னோர்கள் ஏன் உணர்த்தினார்கள்…? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

1.சஞ்சலக்கூடு நிறைந்த இந்த மனத்தை
2.அன்பு என்னும் நிலையில் தான் அவ்வாத்மாவை அமைதிப்படுத்த முடியும் என்ற நிலைக்காகத்தான்
3.ஆண்டவன் என்னும் ரூபத்தை ஏற்படுத்தினார்கள் முன்னோர்கள்.

மனமென்னும் நிலையைச் சஞ்சல நிலையிலிருந்து மீட்டிட அவ்வாண்டவனைப் பல ரூபத்தில் எண்ணி மகிழ்ந்து நம் ஆண்டவன் என்னும் அன்பு ரூபத்தை நாம் அன்பு கொண்டு வணங்கிட நம் முன்னோர்கள் வழி காட்டி வந்தார்கள்.

ஆண்டவன் என்னும் ரூபத்தில் நம் அன்பை ஒன்றில் மட்டும் செலுத்தி வணங்கிடுவதில்லை...!
1.அன்பு கொண்டு நாம் வணங்குவதெல்லாம் ஆண்டவன் தான்.
2.எல்லா உயிரினங்களிலுமே அந்த ஆண்டவன் உள்ளான்.

உன் அன்பை உயிரினங்களிடம் மட்டுமல்ல...! இந்த வானமும் பூமியும் மரம் செடி கொடி மழை காற்று சூரியன் சந்திரன் நட்சத்திர மண்டலங்கள்
1.இப்படி எந்நிலை கொண்டும்
2.உன் மனமென்னும் அன்பைச் செலுத்தி எண்ணி வணங்கிட்டாலே
3.எந்த ரூபத்திலும் (எல்லா வகையிலுமே) உன் உயிராத்மாவிற்கு நீ சேர்க்கும் உன்னதப் பொக்கிஷம் கிட்டுகின்றது.
4.ஆகவே அந்த அன்பினால் மட்டும் தான் அவ்வுயிராத்மாவிற்குக் குளிர்ந்த நிலையை (மகத்துவத்தை) அளிக்க முடியும்.

இந்த உடல் முழுவதுமே ஒரு நிலை கொண்ட வெப்பத்துடனே உள்ளது. ஆனால் இந்த உடலிலுள்ள நம் உயிரணு மட்டும் தான் குளிர்ந்த நிலையில் உள்ளது.

மனம் என்னும் நிலையை நாம் அமைதிப்படுத்தி அன்புடன் வாழும் பொழுது அவ்வுயிராத்மா ஒரே நிலை கொண்டு அமைதியுடன் அன்பு கொண்ட நிலையில் ஆனந்த நிலையில் உள்ளது.

இம்மனமென்னும் நிலையை
1.நாம் பல நிலை கொண்டு அலைய விடும் பொழுது (மன அழுத்தம் – TENSION, STRESS)
2.இவ்வுடல் நிலையில் ஏற்படும் அதி உஷ்ண நிலையினால்
3.அவ்வுயிராத்மாவிற்குப் பல தீங்குகளைத்தான் நம்மால் சேர்க்க முடிகின்றது.

நம்மில் பல பெரியோர் இந்த அன்பையே நமக்குப் பல வழிகளில் உணர்த்திட அன்றிலிருந்து இன்று வரை போதித்துச் சென்றார்கள்.
1.“அன்பிலார்க்கு இவ்வுலகமே இல்லை...!” என்ற உண்மையை உணர்த்திச் சென்றார்கள்,
2.அன்பே தான் கடவுள்...! என்றார்கள்.

ஆனால் இப்பொழுது வாழ்ந்திடும் மனிதர்களின் குறிக்கோள் எல்லாம் செல்வந்தனாகச் செழித்து வாழ்ந்திட வேண்டும் என்பது தான். அதற்காக “எதை வேண்டும் என்றாலும் செய்யலாம்...!” என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.

அந்த நிலைக்காகத் தன்னைத் தானே.. தன் இனத்தைத் துவேஷிக்கும் நிலையில்
1.தன்னைத்தானே ஏமாற்றி வாழ்கிறான்.
2.அன்பிற்கு மேல் துவேஷத்தினால் தான் இன்றைய உலகமே உள்ளது.
3.இந்த நிலையில் இவ்வுலகில் கலந்துள்ள இக்காற்று மண்டலமே விஷமுடன் உள்ளது.

ஆகவே இனி வாழ்ந்திடும் வாழ் நாள்களை வீண் விரயம் செய்திடாமல் அன்பு கொண்ட வாழ் நாள்களாக வாழ்ந்து அன்பென்னும் பொக்கிஷத்தை ஆண்டு வாழ்ந்திடுங்கள் அன்புடனே.

ஈஸ்வரபட்டனாகிய எனது ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

June 25, 2022

நம்முடைய உணர்வுகள் தீமைகளை அகற்றிடும் சக்தியாகவே என்றும் வெளிப்பட வேண்டும்

குடும்பத்தில் மிகவும் கஷ்டம் என்று ஒருவர் சொன்னால் அதை அதிக நேரம் கேட்டு நமக்குள் பதிவாக்கக் கூடாது. கேட்டவுடனே...
1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
2.எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட வேண்டும் ஈஸ்வரா... என்று ஏங்கித் தியானியுங்கள்.

தியானித்த பின் கஷ்டத்தைச் சொன்னவரிடம்... உங்கள் குடும்பத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து குடும்பத்தில் எல்லோரும் நலமாக இருப்பீர்கள்... உங்கள் தொழில் நன்றாக இருக்கும்... குடும்பத்தில் ஒற்றுமையாக இருப்பீர்கள்... செல்வம் செல்வாக்கு பெருகும்... என்று இதைச் சொல்ல நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அவர் உடலில் வந்த நோயைப்பற்றிச் சொன்னாலும் அடுத்த கணம் ஈஸ்வரா...! என்று ஏங்கித் தியானியுங்கள். பின் அவரிடம்... மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் இரத்த நாளங்களில் கலந்து உங்கள் உடல் முழுவதும் அது படர்ந்து நீங்கள் நலம் பெறுவீர்கள்...! என்று சொல்ல வேண்டும்.
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அவர்களை ஏங்கித் தியானிக்கும்படி சொல்ல வேண்டும்
2.உடலில் எங்கு வலி இருக்கிறதோ அவர்களை அங்கே நினைக்கச் செய்து
3.மகரிஷிகளின் அருள் சக்தி அந்த வலி எடுக்கும் இடங்களில் படர்ந்து வலி நீங்கி நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிக்கச் செய்ய வேண்டும்.

இப்படிச் செய்தால் அவருடைய நோய் நீங்க நீங்களே உதவி செய்கின்றீர்கள். ஆனால்
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்காதபடி
2.உடனடியாக (SUDDEN ஆக) நோய் நீங்கிவிடும் என்று சொல்லக்கூடாது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர அருள்வாய் ஈஸ்வரா என்று முதலில் ஏங்கி அந்தச் சக்திகளை வலுவாக்க வேண்டும்.

அதற்குப் பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவருடைய இரத்த நாளங்களில் கலந்து அவர் உடலில் இருக்கக்கூடிய சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ மற்ற எந்த நோயோ அது நீங்க வேண்டும் என்று சொல்லிப் பழக வேண்டும்.

கணவன் மனைவிக்குள் இவ்வாறு இருந்தாலும்
1.கணவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்றும்...
2.கணவர் உடல் நலம் பெற வேண்டும் என்றும் மனைவி இதே மாதிரி சொல்லி
3.ஒருவருக்கொருவர் இந்த உணர்வை பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

இதன்படி செய்து வந்தால் எந்த நோயாக இருந்தாலும் அதை நீக்கிடும் சக்தி பெறுகின்றீர்கள். இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும். பழகி விட்டால் சரியாகிவிடும்.

ஆகவே நம்முடைய உணர்வுகள் தீமைகளை அகற்றிடும் சக்தியாக இருக்க வேண்டும்.

தீமைகளை நீக்கிடும் அரும் பெரும் சக்தியாக நாம் விடும் இத்தகைய மூச்சலைகள் இந்த பூமியிலே பரவப் பரவ.... விஞ்ஞான அறிவால் காற்று மண்டலம் நச்சுத் தன்மை அடைந்து வரும் இந்த வேளையில் அதை மாற்றிடும் சக்தியாகப் பரவும்.

கூட்டுத் தியானங்களின் மூலம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும்... நோய்களை நீக்கும் சக்தி பெற வேண்டும் என்றும்... நாம் ஏங்கி எடுத்து அந்த உணர்வுகளைப் பரப்பும் போது பூமியிலே அதிகமாக இது பரவும்.

ஒவ்வொருவரும் இதைச் செய்தால் எல்லோருக்கும் நன்மை பயக்கும் சக்தியாகப் பரவுகிறது. எளிதில் கிடைக்கும் சந்தர்ப்பமும் உருவாகிறது.

உதாரணமாக நண்பனுக்கு நண்பன் பழகும்போது “நன்மை செய்தான்...” என்றால் விக்கலாகிறது... நாம் செய்யும் காரியமும் அப்போது நல்லதாகிறது.

காரணம்... நன்மை செய்த உணர்வுகள் இங்கே படர்ந்திருக்கும் நிலையில் அதை எண்ணும்போது உடனே அவர்கள் உடலிலே பதிந்திருக்கும் உணர்வுகள் அதை இயக்கிச் செயல்படுத்துகின்றது.

ஆனால் பழகிய பின் தீமை செய்திருந்தால் அதைப் பதிவு செய்து எனக்குத் துரோகம் செய்தான் பாவி...! என்று எண்ணினால் உடனே அங்கே இயக்கிப் புரையோடச் செய்கின்றது... காரியங்களும் தடையாகின்றது.

இது போன்ற உணர்வின் இயக்கங்களை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால்
1.நண்பர்கள் உடல் நலக் குறைவாக இருந்தாலும் கேள்விப்பட்ட மாத்திரத்தில் உடனே நாம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு
2.நண்பனின் உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.
3.ஒருவருக்கு ஒருவர் இவ்வாறு நாம் செய்து துன்பங்களை நீக்கிப் பழகுதல் வேண்டும் (இல்லை என்றால் நண்பரிடம் விளைந்தது இங்கேயும் பரவும்)

கூட்டுத் தியானங்கள் ஆங்காங்கு நடக்கும் பொழுது புதிய அன்பர்கள் வந்தாலும் அவர்களுக்கும் இந்த முறையைச் சொல்லிக் கொடுத்து... நீங்கள் இந்த மாதிரிச் செய்யுங்கள்...! உங்கள் குடும்பம் நலமாகும் தொழில் நலமாகும்... உடல் நோய்கள் நீங்கும் என்ற வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும்.

அதன் வழியில் கூடுமானவரை அவர்கள் உடலில் இருக்கக்கூடிய சிரமங்கள் குறைந்தால் நீங்கள் சொல்வது போல் அவர்களும் இந்தத் தியானத்தைச் செய்ய முற்படுவார்கள்.
1.அவர்கள் விடும் நல்ல மூச்சுகளும் இந்தப் பூமியிலே பரவும்
2.ஒன்று சேர்ந்து வாழும் சக்திகள் நம் பூமியிலே அதிக அளவிலே வளரும்.

பணம் சம்பாரிக்கத் தான் இன்றைய கல்வி… தன்னை உணர்வதற்கல்ல…!

அறியாதவர்கள் அறிந்து வாழ வேண்டும் என்ற நிலையை எண்ணிடாமலேயே வாழ்கின்றார்கள். அறிந்தவர்களோ அந்தமும் ஆதியும் அறிய வேண்டும் என்ற ஆசையுடன் வாழ்கிறார்கள்.

கற்றவர்… கல்லாதவர்… அறிந்தவர்… அறியாதவர்… எழை… செல்வந்தன்… இப்படிப் பல பல தரப்புள்ள மேடு பள்ளம் கொண்ட உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கொண்டு இந்த உலகமே சுழல்கின்றது.

1.கற்றவருக்குத் தான் கற்ற வித்தையும் கர்வமும்
2.கல்லாதவருக்குத் தான் கல்லாத நிலை கொண்டு தாழ்வு மனப்பான்மையும்
3.தன் மனதிலுள்ளே ஏற்றம் தாழ்வு என்ற இரு நிலை படைத்த
4.மாய ரூபத்தையே மனதினில் கலக்கவிட்டு உலக மக்கள் இன்று வாழ்கிறார்கள்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு...! என்ற உண்மையைத் திருவள்ளுவர் ஆதி காலத்திலேயே உணர்த்தியுள்ளார். இன்றுள்ள மக்களின் மனதில் ஏட்டுப் படிப்பின் எண்ணம் தான் அதிகமாக உள்ளது. அதையே பெரிய படிப்பாக எண்ணி வாழ்கின்றார்கள்.

1.ஏட்டுப் படிப்பிற்குப் பதவி பணம் என்ற போர்வையைப் போர்த்தியுள்ளதால்
2.அந்த நிலைக்காக ஏங்குவோர் பலர் உள்ளனர்.
3.படிப்பும் பட்டமும் அளித்த மாய ரூபங்கள் தாம் இவை.

தன் எண்ணத்தினால் தன் ஜெபத்தினால் தன்னுள்ளேயே உலக உண்மைகளை ஈர்க்கும் சக்தியைப் பெற்ற திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு
1.எந்தப் பள்ளியில் படித்து யாரால் பட்டமளிக்கப்பட்டதப்பா…?
2,அன்று கம்பர் எழுதிய கவிதையெல்லாம் எந்தப் பட்டிமன்றத்தில் ஏற்றுப் படிக்கப்பட்டதப்பா..?

கம்பரும் திருவள்ளுவரும் வியாசகரும் வான்மீகியும் இப்படி எண்ணிலடங்கா ஞானிகளும் சித்தர்களும் ரிஷிகளும் எழுதிய நூல்கள் எல்லாம் எந்தப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்று எழுதினார்களப்பா…?

அன்று நமக்குத் தம் சக்தியை உபயோகப்படுத்தி உன்னத நூல்களை அவர்கள் அளித்த நிலை கொண்டுதான் இன்றும் பல போதனா மொழிகளில் பள்ளிகளிலும் கல்லூரியிலும் கல்வி என்ற பெயரில் சொல்லிக் கொடுத்து வருகிறார்கள்.

அந்தப் படிப்பைப் படித்ததற்கு இன்றுள்ள உபாத்தியாயர்கள் மதிப்பெண்களும் தருகிறார்கள். மதிப்பெண் பெறுவதில் தான் இருக்கின்றார்கள்.
1.ஆக இன்றுள்ள இக்கலியுகமே
2.தானாக உணர்ந்து செயல்படும் நிலையை முழுவதுமாக மாற்றி வருகிறது.

உலகின் ஒவ்வொரு நிலையிலும் புதிய புதிய சக்தி நிலை தோன்றிக் கொண்டே வரும் பொழுது இம்மனிதனின் எண்ணத்தில் மட்டும்
1.தான் உணர்ந்து செயல்படும் நிலையை மாற்றிக் கொண்டு
2.பெரும் பேராசையின் நிலைக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டு வாழ்கின்றான் இன்றுள்ள மனிதன்.
3.மனிதர்களின் எண்ணமெல்லாம் ஏட்டுப் படிப்புடனும்
4.பிறர் சொல்லிய உண்மைகளையே ஆராய்ந்து பார்க்கும் நிலையுடனும்
5.அந்த நிலையைக் கொண்டு விவாத நிலைக்கும் கொண்டு வந்து விட்டார்கள்.

இன்று மனிதர்கள் உயிர் வாழும் நிலையே செயற்கையினால் தான் நடந்து வருகின்றது. இந்தச் செயற்கையின் சொரூபத்திற்குத் தன்னை அடிமையாக்கிக் கொள்ளாமல் இனியாவது இயற்கையைப் போற்றி வணங்கிடுங்களப்பா…!

ஒவ்வொரு மனிதரும் தன் நிலைக்கும் அந்தச் சக்தியின் நிலை உண்டு. தன்னாலும் இயற்கையின் உண்மையை உணர்ந்து நடந்திட முடியும்.

தானும் ஒரு திருவள்ளுவராகவும்.. கம்பராகவும்... வால்மீகியாகவும்... வியாசகராகவும்... அந்த ரிஷிகளைப் போல ஆகலாம்...! என்ற உண்மையை உணர்ந்து ஒன்றிலிருந்து இன்றைக் கூட்டி வாழ்ந்திடுங்கள்.

வீண் விவாதத்திற்கு இடம் தராமல் கற்கும் கல்வியால் தன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியை ஈர்த்து
1.இந்த உலக நன்மைக்காக
2.இந்த உயிரணுக்களின் நன்மைக்காக
3.இந்த விஷமான கலியின் கடைசி நிலையை மாற்றி
4.கல்கி என்னும் புத்தொளிர் கொண்ட இயற்கைத் தேவனின் இயற்கையின் சக்தியைப் பெற்றிடுங்கள்...!

நம் எண்ணத்தையும் நம் சுவாசத்தையும் நம்மையே நாம் அச்சக்திக்காக (இயற்கைக்கு) அடிபணிந்து வாழ்ந்திடலாம்.

June 24, 2022

கணவனும் மனைவியும் ஒன்றிணைந்து ஒளியாக ஆவதற்குத் தான் திருப்பூட்டும் பழக்கத்தை ஏற்படுத்தினர் ஞானிகள்

கணவன் இறந்தாலும் அவர் உடலிலே விளைந்த உணர்வுகள் மனைவியின் உடலிலே நிலைத்திருக்கின்றது. அந்த உணர்வின் துணை கொண்டு
1.என்றும் என்னுடன் அவர் இருக்கின்றார்... “இருக்க வேண்டும்...!” என்பதற்குத்தான் மாங்கல்யத்தை அணிகின்றனர்.
2.ஞானிகள் காட்டிய அருள் வழியில் மாங்கல்யத்தின் தத்துவமே
3.என்றுமே கணவர் தன்னுடன் உறுதுணையாக இருக்கின்றார் என்று நினைவுபடுத்துவதற்குத் தான்.

மாயவரத்தில் ஒரு கிராமத்தில் அவர் ஒரு டாக்டர். அவருடைய தாயாருக்கு வயது 65 அல்லது 70 இருக்கும். கணவர் உடலைவிட்டு ஆன்மா பிரிந்துவிட்டது.

அந்த ஊரின் சமூகத்தின்படி பொட்டை நீக்கவேண்டும்... தாலியைக் கழட்ட வேண்டும் என்றெல்லாம் கட்டளையிட்டார்கள்.

நான் (ஞானகுரு) அங்கே மாயவரம் சென்றிருக்கும் பொழுது இந்த உண்மைகளை எடுத்துச் சொல்லும் பொழுது அந்த அம்மா பொட்டையும் கலைக்கவில்லை... தாலியையும் கழட்டவில்லை.

1.கணவர் என்னுடன் தான் இருக்கிறார்... என்னுடன் தான் இருக்கிறார்... என்ற நிலையைச் சொல்லி
2.அவருடைய உணர்வு என்னுடன் உள்ளது
3.சாமி சொன்னபடி அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்றே செயல்படுத்தியது.

உடலை விட்டு பிரிந்து சென்ற அந்த ஆன்மா அவருடைய உணர்வின் துணை கொண்டு... எங்கள் உடலில் இருப்பதை அதனின் வலுக் கொண்டு தான் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்தோம்.

உடல் பெறும் உணவுகள் அங்கே கரைந்துவிட்டது... ஒளி பெறும் சரீரம் அங்கே நிலைத்திருக்கின்றது.

1.இன்றும் சப்தரிஷி மண்டலத்தில் அவருடன் நான் தொடர்பு கொள்கின்றேன்... காண்கின்றேன்.
2.அந்த உணர்வின் ஒளியின் நிலை கொண்டு எனக்குள் அவ்வப்போது அந்த நினைவாற்றல் வரும் பொழுது
3.இந்தப் புவியில் வரும் இருளை நீக்கும் அருளாற்றல் எனக்குக் கிடைக்கின்றது என்று அந்த அம்மா செயல்படுத்தியது.

இது நடந்த நிகழ்ச்சி...!

ஆனால் சாங்கியங்களைச் செய்து மாங்கல்யத்தைப் பறிப்பதும் பெண்களை அவமதிப்பதிலும் தான் இருக்கின்றார்கள். பெண்களை ஒரு கருவியாகத் தான் மதங்கள் பயன்படுத்தி உள்ளதே தவிர
1.சம உரிமை கொண்டு கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழும் நிலை இல்லை
2.காலப்போக்கில் அவை அனைத்துமே மறைந்து போய்விட்டது.

கணவனும் மனைவியும் என்றும் ஒன்றியிருந்து ஒளியின் உணர்வின் நினைவு கொண்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படும் பொழுது இந்த உடலை விட்டு முதலில் ஒருவர் சென்று அடுத்து ஒருவர் சென்றாலும் “அங்கே தான் செல்ல முடியும்...”

இப்படிப்பட்ட உணர்வுடன் காலை துருவ தியானத்தில் எடுக்கப்படும் போதெல்லாம் அங்கே ஒளியான கணவன்/மனைவி உணர்வுடன் தொடர்பு கொள்கிறது. அதன் மூலம் அந்தக் குடும்பத்திற்கும் உயர்ந்த உணர்வின் ஞானங்களும் கிடைக்கின்றது.

ஆகவே யாராக இருந்தாலும் உடலை விட்டுப் பிரிந்தால் உடல் தான் செல்கிறது. ஆனால் அவருடன் வாழ்ந்த உணர்வுகள் இவரை (உடலில் பதிந்திருப்பது) விட்டு அகலவில்லை இந்த உணர்வை எப்படிப் போக்குவது...?

பொட்டையும் தாலியையும் நீக்க வேண்டும் என்றால் உறவாடிய உணர்வுகள் உடலில் பதிந்துள்ளது... நினைவுகள் வருகின்றது... சொற்கள் வருகிறது. இதை எப்படி நீக்குவது...?

சாங்கியங்களைச் செய்து கணவன் மனைவி ஒன்றிணைந்து ஒளியாகும் பழக்கங்கள் காலத்தால் அந்த உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டது.

ஆகவே
1.திருமணம் ஆகிவிட்டால் கணவனும் மனைவியும்
2.நாங்கள் ஒன்றி வாழ்கிறோம் என்ற இந்த உணர்வுடன் தான் வாழ வேண்டும்.

நம்மால் வரும் கஷ்ட நஷ்டங்களுக்கு ஆண்டவனா பொறுப்பாளி…?

1.மனித எண்ணத்தின் வேகம் என்பது
2.இந்த உலகிலுள்ள எல்லா வேகங்களுக்கும் மேல் துரிதமான வேகம் என்று
3.பல முறை சொல்லியுள்ளேன்.

நம் எண்ணத்தைப் பிறரின் எண்ணத்தில் மோதவிடும் பொழுது பிறரின் நிலையும் மாறுபட்டுச் செயல்படும் தன்மை வலுவாகிறது.

இந்த எண்ணத்தை வைத்துத்தான் உலக நிலையும்... உயிர் உதிக்கும் நிலையும்... உடலை விட்டு ஆத்மா பிரியும் நிலையும்... எல்லாமே வருகின்றன.

இந்த எண்ணத்தில் நாம் எந்த நிலையில் ஆசைப்படுகின்றோமோ அந்த நிலை கொண்டு தான் வேதனையும் மகிழ்ச்சியும் வருகின்றன. எண்ணத்தின் ஆசையை வளர விடுவதனால் பல வேதனையான நிலைகளை நம் வாழ்க்கை நிலையில் கண்டு வேதனைப்படுகின்றோம்.

இந்த எண்ணத்தினால் தான் எல்லா நிலைகளுமே வருகின்றன என்றேன்.
1.இந்த எண்ணத்தை வைத்தே ஒவ்வொரு ஆத்மாவும் அந்த உடலில் இருக்கும் நிலை கொண்டு
2.தன் எண்ணத்தை “ஓ..ம் ஈஸ்வரா…” என்ற நாதம் கொண்டு
3.ஒரே நிலையில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து
4.இந்த உடல் வேறு... இந்த ஆத்மா வேறு...! என்ற நிலையைக் கண் கூடாகக் கண்டிடலாம்.
(சீராகத் தியானமிருப்பவர்களால் இதை நிச்சயம் உணர்ந்திருக்க முடியும்)

நம் ஆத்மாவின் நிலையை நாம் போற்றிப் பாதுகாத்தால் வாழ்க்கை நிலையில் நாம் பல சங்கடங்களுக்கு உள்ளாக வேண்டியதில்லை. ஏனென்றால் நம்மையே நாம் உணராத நிலையில்
1.பிறரின் அன்பை நாம் வேண்டும் பொழுது
2.பிறரின் அன்புக்கும் நம் ஆன்மாவை நாம் அடிமையாக்கிக் கொள்கிறோம்.
3.அன்புக்காக ஏங்கும் நிலையும் ஆசை நிலை தான்.

ஆண்டவனையே ஆண்டவனின் அன்பை வேண்டி வேண்டுகின்றோம். அந்த ஆண்டவன் நமக்கு எப்படி அன்பைப் பொழிவான்…?

நம்முள் அதிக ஆசையை வளரவிட்டு அதனால் வரும் கஷ்டங்களை நம் உடலும் நம் எண்ணமும் படும் வேதனையை
1.நம்முள்ளேயே சங்கடத்தை ஏற்றுக் கொள்ளாமல்
2.நம்மையே நாம் வெறுக்காமல்
3.நம்முள் இருக்கும் தவறை நாம் மாற்றிக் கொண்டு
4.நம்மையே நாம் எண்ணிப் பார்த்து
5.நம் வேதனையும் நம் ஆசைகளும் நம்முள்ளேயே தான் வருகின்றன என்ற உண்மையைப் புரிந்து
6.நம்மையே நாம் அமைதிப்படுத்திக் கொண்டு நாம் எண்ணும் பொழுது
7.நம்முள் இருக்கும் அவ்வாத்மா அமைதியுற்று அந்த ஆண்டவனின் சக்தியே
8.நமக்கு அன்பு கொண்டதாக வந்திடும் நிலையை ஏற்றுத் தருகிறது.

நம் மன நிலையில் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு நாமே தான் அந்த நிலையை அனுபவிக்க முடியும். பிறரை எந்த நிலை கொண்டும் எண்ணிப் பார்த்திடலாகாது.

நம்மால் வரும் கஷ்ட நஷ்டங்களுக்கு அந்த ஆண்டவனா பொறுப்பாளி…? நம்மில் இருக்கும் ஆண்டவனைக் கண்டிட நம்மை நாமே நம் சுவாசத்திலும் எண்ணத்திலும் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.அப்பொழுது தான் அந்த ஆண்டவனின் ஜெபத்திற்கும்
2.ஆண்டவனின் ஆசியைப் பெறுவதற்கும் உகந்தவர்களாகின்றோம்.

June 23, 2022

விண்ணுலக ஆற்றலை எடுத்துத் தன் ஆத்மாவுக்கு ஊட்டம் தந்து என்றும் அழியாது வாழ்பவர்களே “சப்தரிஷிகள்”

இப்பூவுலகில் ஜீவ உடலுடன் நம் ஆத்மா (உயிர்)
1.எந்த நிலை கொண்டு சுவாசம் எடுத்ததோ
2.எந்த நிலை கொண்டெல்லாம் சப்த அலைகள் நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ளதோ (உடலுடன் உள்ள பொழுது)
3.அதே நிலை கொண்டு தான் இந்த உடலை விட்டு ஆன்மா பிரிந்த பின்னும்
4.உயிராத்மாவைச் சுற்றிச் சப்த அலைகள் சுற்றிக் கொண்டே உள்ளன.

ஏனென்றால் உடலை விட்டு உயிர் பிரிந்து சென்ற பிற்பாடு எந்த நிலையில் ஆன்மா சுற்றிக் கொண்டுள்ளது...?
1.நாம் எந்த நிலை அடைகிறோம்...?
2.எங்கே எப்படி இருப்போம்..? என்ற எண்ணம் எல்லோருக்குமே உள்ளது.

இதைப் பற்றி பலரும் பல ரூபங்களிலும் பல விதக் கதைகளிலும் நம் முன்னோர் வாயிலாகக் கேட்கப் பெறுகின்றோம். அறிந்த உண்மையை அறிந்த நிலையில் செப்புவதற்கு இன்று யாருமில்லை. அன்றைய பெரியோர்கள் தான் அறிந்து செப்பினார்கள்.

நம் உடலை விட்டுச் செல்லும் ஆத்மாவிற்குச் சுவாச நிலை உடலுடன் இருந்த பொழுது எந்த நிலை கொண்டிருந்ததோ அந்த நிலையில் தான் சுற்றிக் கொண்டே இருக்கும்.

பூமியில் சுற்றிக் கொண்டேயிருந்து மீண்டும் இங்கேயே இன்னொரு ஜீவ உடல் பெற்று ஜென்மம் எடுக்கிறதா…? அல்லது இந்த நிலையிலிருந்து பிற மண்டலங்களுக்குச் சென்று ஜென்மம் எடுப்பதில்லையா…? என்ற எண்ணம் உள்ளது.

அச்சக்தியின் அருள் பெற்ற அவ்வுயிரணு உருவம் பெற்ற நிலையில் எந்த மண்டலத்தில் சுவாச நிலை கொண்டு ஜீவன் பெற்று உயிர் வாழ்ந்ததோ அந்த நிலை கொண்டே தான் அவ்வுயிரணுவின் சுவாச நிலைகள் உள்ளது.

1.உடலுடன் அஜ்ஜீவாத்மா இருக்கும் நிலையும்
2.உடலை விட்டு ஆவி உலகில் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையும்
3.பிறகு ஒவ்வொரு ஜென்மங்கள் எடுத்தும்
4.ஒவ்வொரு நிலை கொண்டும் எத்தனை ஜென்மங்கள் எடுத்து அவ்வாத்மா வாழ்ந்தாலும்
5.அதன் தாய் சக்தியான எந்தச் சக்தி நிலை பெற்று அவ்வுயிரணுவிற்குச் சுவாச நிலை கிடைத்ததுவோ அதே நிலை பெற்றுத்தான்
6.மீண்டும் மீண்டும் எந்த மண்டலத்தில் தோன்றியதோ அங்கேயே தான் சுற்றிக் கொண்டிருக்க முடியும் அவ்வுயிரணு என்னும் ஆத்மா எல்லாமே..!

அந்த ஆத்மாவின் சுவாசத்தால் எப்பூமியில் அவ்வுயிரணுவிற்கு ஊட்டம் தந்ததோ அந்த நிலை கொண்டு தான் அவ்வுயிரணு எத்தனை காலமானாலும் சுற்றிச் சுற்றிப் பிறவி எடுத்துக் கொண்டே வாழ்ந்திட முடியும்.

உடலுடன் இருக்கும் பொழுது தான் உயிராத்மா தன் வலுவைக் கூட்ட முடியும். உடலை விட்டுப் பிரிந்தால் உயிராத்மாவில் என்ன மணம் அதிகமாக உள்ளதோ அந்த மணங்களின் ஈர்ப்பிலே தான் சுழன்று கொண்டிருக்க முடியும். வளர்ச்சி இருக்காது.

இதிலிருந்தெல்லாம் விடுபட்டு மீண்டும் ஒரு உடலுக்குள் செல்லாது
1.“பிறவியில்லா நிலை அடைய வேண்டும்...!” என்று முயற்சி எடுத்து
2.அதன் வழி விண்ணுலக ஆற்றலை எடுத்துத் தன் ஆத்மாவுக்கு ஊட்டம் தந்து
3.விண்ணுலகில் அழியாது வாழ்பவர்களே சப்தரிஷிகள்.

அந்த நிலையை எய்திடத்தான் இந்தப் பாடங்கள் எல்லாமே...!

தேறாதது எது…? தேறுவது எது…!

நோயுற்ற ஒரு பெண் குழந்தையைக் குணப்படுத்துவதற்காக எம்மிடம் (ஞானகுரு) அழைத்து வந்தார்கள். சுமார் 13 வயது இருக்கும்.

குழந்தை நோயால் மிகவும் வாடிக் கொண்டிருக்கும் பொழுது வேதனை என்ற உணர்வையே எடுத்துக் கொண்டதால் விஷத்தின் தன்மை அடைந்து விட்டது.

1.மருந்து மாத்திரைகள் என்று விஞ்ஞான அறிவு கொண்டு விஷத்தின் உணர்வுகள் அதிகமாகச் சேர்த்திருப்பதால்
2.இந்த ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தால் மனிதனல்லாத உடலாகத் தான் பிறக்கும்.

அந்த உடலிலேயே அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை ஏற்று வளர்த்துக் கொண்டால் அடுத்து உடலை விட்டுப் பிரிந்தால் அது பிறவியில்லா நிலை அடைகின்றது.

ஆகவே…
1.மகரிஷிகளின் உணர்வை அந்த குழந்தைக்குச் செருகேற்றப்பட்டு
2.உயர்ந்த உணர்வைப் பெற வேண்டும் என்று அந்த உணர்வுடனே தொடர்பு கொண்டு தியானப் பயிற்சி கொடுத்தோம்.

ஏனென்றால் அது உடலில் ஆஸ்த்மா தொல்லை உண்டு.

நுரையீரல் பாகங்களில் நரம்பு இழுத்துப்பிடித்து இருப்பதனால் அத்தகைய பாதிப்பு வந்தது. இந்தப் பிடித்தம் அவர்களின் பரம்பரையில் வந்தது அப்பாவுக்கும் உண்டு… தாத்தாவுக்கும் அது இருந்தது

பரம்பரை வழியிலே வந்ததனால் இந்த பின்னம் அதிகமாகச் சேர்த்துக் கொண்டே இருக்கும். இதிலிருந்து விடுபட்டால் தான் அதனுடைய நிலைகள் தப்ப முடியும்.

ஆகவே பெண் குழந்தையாக இருப்பதால் இப்போது காப்பாற்றினாலும்… அதனுடைய மண வாழ்க்கையில் மீண்டும் அதிகமான வேதனைப்பட்டால் மனிதனல்லாத உருவைத் தான் உருவாக்கிவிடும்.

ஆகவே பருவம் வரப்படும் பொழுது அருள் ஒளியின் தன்மை கொண்டு இந்த உடலிலே மகிழ்ச்சியின் உணர்வு கொண்டு நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை அவர்களையே பெறும்படி செய்தோம்.

இப்போது எடுக்கும் அருள் உணர்வுகளின் வளர்ச்சி கொண்டு…
1.அடுத்து உடலை விட்டுப் பிரியும் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணையவும்
2.உடல் பெறும் உணர்வுகள் கரையவும் பிறவியில்லா நிலையை அடையவும் இது உதவும்.

ஏனென்றால் கடும் நோய்வாய்ப்பட்டவருடைய நிலைகளை நாம் இத்தகைய நிலைகளில் அது மாற்றி அமைக்க வேண்டும்.

குழந்தையினுடைய தாயும் வேதனை உணர்வையே எடுத்துக் கொள்கின்றது. அதை மாற்றி ஒளியின் தன்மையாக மாற்றுவதற்கு இந்த உடலிலேயே அந்த உணர்வுகளைக் கரைத்திட வேண்டும் என்ற நினைவைக் கூட்டும்படி செயல்படுத்தப்பட்டது.

1.இதன் வழி செய்தால் அந்த ஆன்மா எளிதில் அங்கே போய்ச் சேர்கின்றது
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைகிறது.

காரணம்... எந்த நேரமும் எத்தருணத்திலும் உடலை விட்டுப் பிரிய நேரலாம். முயற்சி செய்தால் இன்னொரு பத்து வருடம் வாழப் போகின்றோம்... அவ்வளவு தான்...!

ஆனால் இங்கே இந்தப் பெண் குழந்தை என்று வரப்படும் பொழுது சீரான உடல் அமைப்பு இல்லை என்றால் மண வாழ்க்கையில் காலப் பருவம் வரும் போதெல்லாம் வேதனைப்படும்.
1.ஆகவே “இது தேறாது...” என்ற நிலை வந்தபின்
2.தேறுவது எது...? என்ற நிலையில் அருள் உணர்வின் ஒளியே தேறுகிறது... அதுவே என்றும் பிறவியில்லா நிலை.
3.இந்த இளமைப் பருவத்தில் அது ஒளியாகிவிட்டால் நலமாக இருக்கும் என்று
4.அந்த ஆன்மா அதன்படி சப்தரிஷி மண்டலம் இணைந்தது.

இப்படி... இந்த உடலுக்கு என்று இச்சை அதிகமாகப் பெறாதபடி அருள் ஒளி பெற வேண்டும்... இந்த வாழ்க்கையில் வரும் இருளை நீக்க வேண்டும் என்று இந்த உணர்வுகளை நாம் எடுத்தாலே போதுமானது.

1.குறித்த காரியங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதற்குப் பதில்
2.அருள் ஒளியை நமக்குள் பெருக்கும் பொழுது தெளிவான உணர்வுகள் வரும்
3.வழியறிந்து செயல்படக்கூடிய திறன் வரும்
4.சோர்வு என்ற நிலைகள் விடாது தெளிந்த மனதைக் கூட்ட இது உதவும்.

எத்தகைய தொல்லைகள் வரினும் அருள் ஒளி எங்கள் உடலில் பெருக வேண்டும்... அருள் ஒளி பெறும் அந்த நினைவு பெருக வேண்டும்... இந்த உடலை விட்டுச் சென்றால் என்றும் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்... அந்த அரும் பெரும் சொத்தே நமக்குச் செல்வம் என்று செயல்படுத்த வேண்டும்.

நாம் தேடிய செல்வங்கள் நம்முடன் வருவதில்லை... அழகான உடலும் வருவதில்லை... நாம் அலங்காரம் செய்யக்கூடிய பொருள்களும் வருவதில்லை... ஆடம்பரமாக நாம் கட்டிய வீடும் வாங்கிய காரும் வருவதில்லை. மற்ற எத்தகைய பொருளாக இருந்தாலும் நம்முடன் வருவதில்லை.
1.ஆனால் அந்த அருள் ஞானத்தை இந்த உடலிலே வளர்த்துக் கொண்டால்
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை பெறும்.
3.வேகா நிலையாக பிறவியில்லா நிலை அடைய முடியும்
4.அகண்ட அண்டத்தில் என்றுமே ஒளியாக வாழ முடியும்
5.அப்படி வாழக்கூடிய பருவத்தை இந்த உடலிலேயே சேர்த்தால்தான் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.

June 22, 2022

உடலும் உயிரும் வேறு வேறாக உள்ள பொழுது மனதை மட்டும் “நான்…!” என்று ஏன் இயங்கச் செய்ய வேண்டும்…?

தாய் தந்தையில்லாமல் குழந்தையில்லை...! நிலம் நீர் இல்லாமல் “தாவர இனங்கள் இல்லை….!” சூரியனின் ஒளிக் கதிர்கள் இல்லாமல் பூமியுமில்லை…! பல மண்டலங்களின் நிலையில்லாமல் சூரியனுமில்லை…!

சூரியனின் நிலை இல்லாமல் பல மண்டலங்களுமில்லை…! சூரியனுக்கே சக்தி தரும் பல கோடிச் சூரியன்கள் இல்லாமல் இயங்காமல் இந்த மண்டலங்கள் சூரியன்கள் எதுவுமே இல்லை…!

இந்த மண்டலங்களின் தன்மை எதுவும் இல்லாமல் காற்றும் மழையும் ஒளியுமில்லை…! இப்படி இந்த எல்லா நிலைகளையும் ஆட்டிப் படைக்கும் அத் தேவனின் சக்தி ஒன்றே தான்… ஒரே நிலை கொண்டு தனித்து வணங்கிடும் அவ்வாண்டவனின் சக்தி…!
1.அவ்வாண்டவனின் சக்தியிலிருந்து இயங்குபவை எல்லாமே
2.எதுவுமே தனித்து இல்லை….
3.ஒன்றை ஒன்று ஒட்டித்தான் எல்லாமே உள்ளன.

ஆனால் இன்றைய மனிதர்களில் சிலரின் நிலை “நான்…!” என்ற ஆணவத்தில் இயங்கி வருகிறது. அந்த நான் என்ற ஆணவத்தை விட்டகற்றிடும் அவன் மன நிலையை அச்சகலத்திலும் கலந்துள்ள அவ்வாண்டவனின் சக்தியிலிருந்து தான் அவன் பெற வேண்டும்.

ஆண்டவனே இல்லை என்று சொல்லும் யாராக இருந்தாலும் இதைப் படித்து விட்டுப் பதில் சொல்லட்டும்…!

1.இந்த உடலும் உயிரும் வேறு வேறாக உள்ள பொழுது
2.நம் மனதை மட்டும் “நான்…!” என்ற நிலையில் ஏன் இயங்கச் செய்ய வேண்டும்…?
3.நான் என்ற நிலை கொண்ட மன நிலையை விட்டு அகற்றிடுங்கள்.

இந்தக் கலியின் கடைசி நிலை கொண்டு நாம் எல்லோரும் வாழ்கிறோம் என்ற உண்மையை அறிந்து இனி நல்ல வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என்னும் நிலையில் அவ்வாண்டவனை வேண்டி அருள் பெற்று வாழ்ந்திடுங்கள் நல் வாழ்க்கையை.

ஆண்டவனின் சக்தி… ஆண்டவனின் சக்தி… என்று சொல்லும் பொழுதே ஆண்டவனை ஆண்பாலாகவும் சக்தியினைப் பெண்பாலாகவும் கொண்டு யாம் (ஈஸ்வரபட்டர்) எதையும் தனித்துச் சொல்லவில்லை.

எல்லாமே ஒன்றுடன் ஒன்று கலந்து தான் உள்ளது. அந்த ஆண்டவனின் சக்தி நிலை இயங்குவதற்கே இப்பல மண்டலங்கள் இல்லாவிட்டால் பொருளில்லை.

இந்த நிலையில் ஆண்டவன் எங்கப்பா தனித்து நிற்கின்றான்…?

1.நாம் தனியாக இயங்கவில்லை (நம் எண்ணத்தில் தான்…!)
2.அவன் ஒருவன் உள்ளான் என்ற நிலையில் நாம் வாழ வேண்டும் என்பதற்காகத்தான்
3.அவ்வாண்டவனை மட்டும் தனித்த நிலையில் வணங்கச் செய்தார்கள் ஞானிகள்.

அவ்வாண்டவனின் சக்தியில் தான் எல்லா மண்டலங்களும் எல்லா உயிரினங்களும் உள்ளன.

1.அவ்வாண்டவனே தான் எல்லாமே
2.ஆண்டவன் என்பவன் தனித்து எங்குமில்லை
3.அவ்வாண்டவன் என்பவன் தான் எல்லாமே என்ற உண்மை மட்டும் தனித்து இருக்கிறதப்பா…!

அவ்வாண்டவனின் சக்தியை நீங்கள் எந்த ரூபம் கொண்டும் எந்த நிலை கொண்டும் அவரவர்கள் மன நிலைக்கு உகந்தபடி வணங்கி வாழ்ந்திடுங்கள். நம்முள்ளே உள்ள ஈசனையே நாம் காணும் பாக்கியம் பெற்றிடலாம்.

அந்த ஆண்டவனின் சக்தி நிலையும்… எந்த நிலை கொண்டு இருக்கிறது என்பதனையும் தான் புகட்டியுள்ளோம்.

ஆண்டவன் என்பவன் யாரென்று புரிகின்றதா…?

ஆண்டவன் என்பவன் யார்…? நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் புலப்படாத இந்தப் புவியிலும் மற்ற எல்லா நிலைகளிலுமே கலந்துள்ள சக்தியை யாரும் எந்த நிலையிலும் முழு உருவம் கொடுத்து ஆண்டவன் என்னும் ஒருநிலைப்படுத்திச் சொல்லும் நிலையில் ஆண்டவன் எங்குள்ளான்…?

ஆண்டவனின் நிலையையே பல மதங்களாக்கிப் பல ரூபங்கள் தந்து அவரவர்கள் வழிக்கு வணங்குகின்றார்கள். இவ்வுலகில் உதித்த எல்லாமே அச்சக்தியின் அருள் பெற்ற ஆண்டவன் தான்.

இங்கு ஆண்டவனை வணங்கும் முறையே பல உருவங்களை ஆண்டவனுக்கு அளித்து உருவ ரூபப்படுத்தி ஆண்டவனுக்குப் பல அபிஷேகங்கள் செய்து பொருள் உள்ளவர்கள் மட்டும் தான் ஆண்டவன் அருளைப் பெற முடியும் என்ற முறையையும் ஏற்படுத்தி ஆண்டவனின் சக்தியை வணங்கவே பல பல வழிகளை சாஸ்திரங்களின் பெயரால் புரியாத நிலைப்படுத்தி வணங்குகின்றார்கள்.

ஒவ்வொருவரும் அவர் எடுக்கும் சுவாச நிலையும் எண்ண நிலையும் கொண்டு ஆண்டவனாகலாம். எல்லோருமே ஆண்டவன் தான். எண்ணத்தினால் தான் நாம் ஆண்டவனாகவும் பேயாகவும் உலவி வருகிறோம்.

1.எத்தனையோ ஞானிகளும் மகான்களும் சாஸ்திரங்களாகக் கொடுத்த நற்போதனைகளை
2.அவர்கள் உடலுடன் வாழ்ந்த காலத்தில் ஏற்று நடத்திடாமல் இன்று
3.அவர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒருவர் மேல் ஒருவர் துவேஷமும் நயவஞ்சகமும் கொண்டு வாழ்வதும் நல் உபதேசத்தை ஏற்கும் மன நிலையை மாற்றித்தான் வாழ்ந்து வருகின்றார்கள்.

நாளேடுகளிலும் சினிமா டி.வி.யிலும் மற்ற வழிகளிலும் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலும் ஆவேசம் கொண்டு வாழ்ந்திடும் படங்களைக் காட்சியாக காண்பித்து மக்களின் மனதையே பெரும் உந்துதலுக்குண்டான நிலைக்குக் கொண்டு செல்கிறார்கள்.

அரசியல் என்னும் நிலையிலும் பல ஆவேச நிலை கொண்ட தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் நிலையில் தான் இன்று ஆட்சி செய்பவர்களும் உள்ளார்கள். பல கோடி நன்மைகள் நமக்குக் கிடைக்கும் என்பதை எல்லாம் மறந்து நாம் பயத்துடனே இன்று வாழ்கின்றோம்.

அதை எல்லாம் மாற்றிவிட்டு நம் பூமியிலே தோன்றி வாழ்ந்து வளர்ந்து சூட்சம நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் ஞானிகளின் ஆசியுடன் வாழ்கின்றோம் என்ற பேருண்மையை உணர்ந்து ஜாதி மதம் பாவம் நயவஞ்சகம் இந்த நிலை எல்லாம் மறந்து ஒவ்வொருவரும் மனிதனாகப் பிறந்த பாக்கியத்தை எண்ணி வாழுங்கள்.

1.இது வரை நடந்தவைகளை நடந்தவையாகவே விட்டு விட்டு
2.இனி நடக்கப் போகும் காலங்களை நல்ல சுவாச நிலையுடன்
3.நம் உயிரணுவிற்கு உன்னத பொக்கிஷத்தைத் தேடித் தந்து
4.நமக்காக மட்டும் வாழாமல் நம்முடன் தோன்றிய எல்லா உயிரணுக்களுமே நம்மில் ஒன்றாக எண்ணி உயர்ந்து வாழ்ந்திடுங்கள்.

அன்றிலிருந்து இன்று வரை தோன்றிய எல்லோருமே அன்பைத்தான் ஆண்டவனாகக் காட்டினார்கள் எல்லா உயிரினங்களிலுமே கலந்துள்ள அச்சக்தியின் அன்பைச் சகலமும் போற்றி வணங்கி வாழ்ந்திடுங்கள்.

இக்கலியை கல்கியாக்கி வாழ்ந்திடுங்கள். கலியை ஆண்டவன் வந்து கலியாக்குவதில்லை. இக்கலியில் வாழ்ந்திடும் ஆண்டவன்கள் எல்லோருமே ஆண்டவன்கள் என்பது யாரென்று புரிந்ததா…?

இக்கலியில் உள்ள உயிரணுக்களான நாம் எல்லோருமே தான் கலியைக் கல்கியாக்கி வாழ்ந்திட வேண்டுமப்பா.
1.ஒவ்வொரு காலங்களும் தானாக மாறுவதில்லை
2.மனிதர்கள் மன நிலையை வைத்துத்தான் கால நிலையும் மாறுகின்றது.

ஒவ்வொரு அவதாரமும் அன்றன்று வாழ்ந்து மனிதரின் மன நிலையை வைத்துத் தான் மாறுபடுகிறது. இன்று மக்கள் மனதில் தோன்றியுள்ள பெரும் பீதிக்கு மூல காரணமே இந்த மன நிலை மாறுவதற்காகத்தான்… நம் ஞானிகளின் நிலை கொண்டே நடந்திடும் “பெரும் நாடகம்…”

நாடகத்தின் தொடரை இனிக் கண்டு வாழ்ந்திடலாம். இந்த நிலையிலிருந்து மக்களின் மன நிலையில் பெறும் மாற்றம் வந்திடுமப்பா.

அந்த நிலை நடப்பதற்காகத்தான் சூட்சம நிலையில் உள்ளவர்கள் மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் காலத்தை உண்டு பண்ணி மனிதர்களின் மனதிற்குப் போதனைக்கு விட்டுள்ளார்கள்.

இன்றைய செயற்கையின் கோளத்தை அந்த நிலையின் உண்மைகளை நாமும் (எல்லோரும்) பார்த்திடலாம்.

June 21, 2022

குடும்பப் பற்றும்... அருள் பற்றும்

ஞானிகள் காட்டிய வழியினைப் பற்றுடன் பற்றும் பொழுது அருளை நாம் பற்றுகின்றோம். அதன் வழியே காரியங்கள் எல்லாம் நடக்கின்றது.

வாழ்க்கையில் குடும்பப் பற்றினை அதிகமாகச் சேர்த்து அருள் பற்றினைக் குறைக்கப்படும் போது செயல்கள் தடைப்படுகிறது. காரணம்...
1.குடும்பப் பற்று என்று வந்தாலே
2.அதிகமான நிலையில் தன் சிந்தனையை இழக்கச் செய்யும்.

இந்தக் குழந்தைக்கு இப்படி ஆக வேண்டும்... அங்கே இப்படி நடக்க வேண்டும்... என்ற உணர்வு வந்து விட்டாலே போதும்.
1.நமக்குள் பதிந்திருந்த “பழைய உணர்வுகள்” அனைத்தும் முன்னாடி வந்துவிடும்.
2.அது முன்னாடி வந்து விட்டால் அதனைக் காப்பது என்பதே பெரிய சிரமம்.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் ஒரு காரியத்தைச் சித்தியாக்க வேண்டுமென்றால் அருள் உணர்வுகள் பெற வேண்டும்... எல்லாம் தெளிவாக வேண்டும் என்ற உணர்வினை அடிக்கடி நாம் கூட்டிக் கொண்டே வந்தால் சரியாக இருக்கும்.

1.கண்களைத் திறந்து விண்ணை நோக்கி நினைவைச் செலுத்தி
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடமாவது எண்ணி
3.அந்த அருள் சக்திகளைச் சுவாசிக்க வேண்டும்.

அதற்குப் பின் வாழ்க்கையில் எது நமக்குக் குறையாகத் தென்படுகிறதோ அது நிறைவேற வேண்டும்... குழந்தைக்கு திருமணம் ஆக வேண்டும் சீக்கிரம் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்

ஆனால் ஆகவில்லை என்கிற போது பெண்ணுக்கு இவ்வளவு வயதாகிவிட்டது... திருமணம் ஆகவில்லையே...! என்று ஏக்கம் வருகிறது.

ஏக்கத்தின் தன்மை கொண்டு “அது நடக்க வேண்டும்...” என்ற நிலை இருந்தால் சோர்வு நமக்குள் வராது. ஆனால் சோர்வடைந்த நிலையில் எண்ணி எடுக்கப்படும் பொழுது இந்த விஷத் தன்மைகள் கூடி
1.இந்தப் புவியின் பற்றும் உடலின் பற்றும் அதிகரித்து விடுகின்றது.
2.அருள் ஞானிகளின் பற்று தணிகின்றது.

ஆனால் அருளைக் கூட்டினால் அது வளர்ந்து எதையும் நாம் வெல்ல முடியும்

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் எடுக்கும் உணர்வுகள் உயர்வாக இருக்கப்படும் பொழுது நலமாகின்றது.

கொஞ்சம் தளர்ச்சி அடைந்தால் விஷத்தின் தன்மை கூடி விடுகின்றது மனித வாழ்க்கையின் எண்ணங்கள் கூடினால் அருள் ஞானத்தை இழக்கும் சக்தி வருகின்றது.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும்
1.நமக்குள் வரும் எந்தக் குறையாக இருந்தாலும் அதை மனதில் இருத்தாதபடி
2.அருள் ஒளி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.அருள் ஞானம் பெருக வேண்டும் அருள் வழியில் எங்கள் வாழ்க்கை நலம் பெற வேண்டும்
4.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும்... நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும் என்று
5.இந்த உணர்வினை நாம் வளர்த்துக் கொண்டே வந்தால் இந்த உயர்ந்த குணம் நமக்குள் உருவாகும்... நமக்குள் அது பெருகும்... நம்முள் அது வளரும்.
6.நம் சொல் அனைவரையும் பற்றுடன் இயக்கும் நிலை வரும்
7.நாம் எண்ணிய காரியங்கள் ஜெயமாகும்... அந்த உணர்வின் இயக்கமும் நமக்குள் தொடர்ந்து செயலாகும்.

சுவாசக் கண்ணின் நிலை கொண்டு தான் “உயிர்க் கண்ணே…” ஒரு நிலைப்படுகின்றது

1.நாம் எண்ணும் பொழுது தான்… சுவாசத்தை ஈர்த்து
2.நம் உடல் இயங்குகிறது என்று எண்ணுகிறோம்.
3.ஒருவரை நாம் பார்க்கும் பொழுது - ஒரு பொருளையோ ஒரு மனிதரையோ எதுவாக இருந்தாலும்
4.நம் பார்வை பட்டுத்தான் நம் எண்ணத்திற்கு வருவதாக நாம் நினைக்கின்றோம்.

ஆனால் நம் பார்வைக்கு (கண்களுக்கு) ஒளியே எங்கிருந்து கிடைக்கின்றது…?

நாம் ஒன்றைப் பார்க்கும் பொழுது பார்ப்பதற்கு முதலிலேயே அச்சுவாச நிலை கொண்டு ஈர்க்கும் பொழுதுதான் நம் கண்களுக்கே ஒளி வருகிறது.
1.நம் கண்ணிற்கு “ஒளி”
2.நாம் எடுத்திடும் சுவாசத்திலிருந்து தான் கிடைக்கிறது.
3.நம் உடலில் உள்ள எல்லா அவயங்களுமே இந்தச் சுவாச நிலை கொண்டே தான் இயங்குகிறது.
4.அந்தச் சுவாசத்தை ஈர்த்து நாம் இழுக்கும் பொழுதே நம் எண்ணம் நம் அவயம் யாவும் செயல்படுகிறது.

நாம் வாழ்ந்த நாட்களில் நாம் சுவாச நிலையில் எடுத்துக் கொண்ட எல்லா நிலைகளும் நம்மைச் சுற்றி அப்படியே பதிந்துள்ளன. நாம் சுவாச நிலையில் பார்த்த நிலையும் பல நாட்களுக்குப் பிறகு நம் எண்ணத்தில் வருகிறதல்லவா…!

அது எப்படி வருகிறது…?

நாம் பேசிய ஒலி அலைகள் மட்டும் தான் நம்மைச் சுற்றுகிறது என்பதல்ல. நாம் எடுத்திட்ட ஒவ்வொரு சுவாச நிலையும் நம்மைச் சுற்றிக் கொண்டே தான் உள்ளது.

1.நாம் விழித்துள்ள நிலையில் எடுத்த சுவாச நிலைகளும்
2.உறக்கத்தில் எடுத்த சுவாச நிலைகளும் நம்மைச் சுற்றிக் கொண்டு தான் உள்ளன.

நாம் ஒன்றைப் பார்க்கும் பொழுது அச்சுவாச நிலை ஈர்த்துத் தான் பார்க்க முடிகிறது. அதைப் பார்ப்பதற்கு முதலிலேயே நம் எண்ண நரம்பில் அச்சுவாச நிலை தாக்கிய பிறகு தான் நாம் எண்ணிப் பார்க்கிறோம்.

நம் விழியில் அச்சுவாச நிலை பட்ட பிறகுதான் அவ் விழியே பார்க்கும் தன்மை பெறுகிறது.
1.ஞானக் கண்ணில் பார்க்கின்றார்கள்…
2.அகக் கண்ணில் பார்க்கின்றார்கள்
3.புறக் கண்ணில் பார்க்கின்றார்கள் என்கின்றார்கள்.
4.அவ்வகக்கண்ணும் புறக் கண்ணும் ஞானக் கண்ணும் இச்சுவாசக்கண் ஒருநிலைப்படும் பொழுது தான்
5.செயற்கரிய கண்ணாகச் செயல்படுகிறது.

நம் சுவாசக் கண்ணை எந்த நிலை கொண்டு செயல்படுத்துகின்றோமோ அந்த நிலை கொண்டு தான் “உயிர்க் கண்ணே…!” ஒரு நிலைப்படுகின்றது.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனின் இரண்டு கண்களை வைத்து அந்தக் கண்களிலிருந்து வீசிடும் ஒளியை வைத்து அவன் குண நிலைகளை அறிந்து கொள்ளலாம்.

மன நிலையில் மாறுபட்டவர்கள் நிலையையும் அக்கண்ணிலிருந்தே கண்டிடலாம். ஒரு மனிதனின் குணத்தையும் அவன் நிலையையும் அவன் கண்ணிலிருந்தே அறிந்திட முடியும். ஒவ்வொரு மனிதனின் குணமும் அவன் எடுக்கும் சுவாச நிலை கொண்டு தான் அமைகிறது.

அழகான இயற்கை நிலை கொண்ட சில இடங்களுக்கு நாம் செல்லும் பொழுது அந்த நிலையில் நாம் எடுக்கும் சுவாச நிலைக்கும் நமக்குப் பிடிக்காத நிலை கொண்டு ஒருவரைப் பார்க்கும் பொழுது நாம் எடுக்கும் சுவாச நிலைக்கும் நம் கண்ணின் பார்வைக்கும் நம் உடல் உறுப்புகளுக்கும் நம் உயிரணுவிற்கும் பல மாற்றங்கள் விளைவிக்கின்றன.

நாம் ஒவ்வொரு நிலை கொண்டு எடுத்திடும் சுவாச நிலையைப் பொறுத்துத்தான் நம் உடல் நிலை செயல்படுகிறது. நம் உடல் நிலை எந்த நிலை கொண்டு செயல்படுகிறதோ அந்த நிலை எல்லாம் நம் உயிர் அணுவிற்குத் தாக்கப்படுகிறது.

அதிகக் கோபமும்... அதிக மனச் சஞ்சலமும்... அதிகத் துவேஷமும்... உள்ள மனிதர்களுக்கு அவர்களின் உயிரணு சஞ்சல நிலைப்படுகிறது. நாம் ஒவ்வொரு நிலை கொண்டு இருக்கும் பொழுதும் அந்த உயிரணு எல்லா நிலையும் அறிந்து தான் செயல்பட்டு வருகிறது.

நம் உடல் மனம் இவைகளைத்தான் நாம் எண்ணுகின்றோம். நம்மை ஆட்டி வைக்கும் அவ்வுயிரணுவைப் பற்றி நாம் நினைப்பதில்லை.

சுவாச நிலை கொண்டு தான் எல்லா உயிரினங்களுமே உயிர் வாழ்கின்றன என்ற உண்மை எல்லோரும் அறிந்ததுவே. ஒவ்வொரு உயிரணுவும் எப்படி எப்படி உயிர் பெறுகிறது என்பதனைத்தான் பாட நிலையில் விளக்கியுள்ளோம்.

1.சுவாச நிலையை நாம் எந்த நிலை கொண்டு ஈர்க்கிறோம் என்பது தான்
2.இந்தப் பாட நிலையின் மையக் கருத்தாகும்.

June 20, 2022

குருவின் அருள் பாதுகாப்பு

 

நான் (ஞானகுரு) எத்தனையோ சிரமங்கள் பட்டேன். காட்டிற்குள் சென்று பல துன்பங்களை அனுபவித்துக் குருநாதர் காட்டிய உண்மைகளையெல்லாம் அறிந்து அதை உங்களுக்குள் பதிவு செய்து அந்த உணர்வை வளர்க்கும் நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.

ஆனால் பற்று கொண்டவர்கள் இரவெல்லாம் சாமி...! எனக்குத் தலை வலிக்கிறது... மேல் வலிக்குதே... உடம்பு வலிக்குதே... என்னை காப்பாற்ற மாட்டீர்களா...! என்று தான் நினைக்கிறார்கள்.

சாமியைத் தான் நினைக்கின்றார்களே தவிர
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும் என்றும்
2.அது எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்
3.தீமையை வென்றிடும் அந்த அருள் சக்தி எனக்குள் வளர வேண்டும் என்று
4.ஒவ்வொருவரும் எண்ணுங்கள் என்றும் யாம் சொன்னாலும் அதை எண்ணுவதில்லை.

சாமியைத் தான் நினைக்கிறார்கள்... ஆனால் ஞான வித்தை நான் தான் உங்களுக்கு பதிவு செய்திருக்கின்றேன்.

இது போன்று ஆயிரம் பேருடைய உணர்வு என்னைத் தாக்கினால் எனக்கு எப்படி இருக்கும்...? அத்தனை பாதிப்புக்கும் நான் உள்ளாக வேண்டியிருக்கின்றது இத்தனைக்கும் நான் சமாளிக்க வேண்டி இருக்கின்றது
1.என்னையும் காக்க வேண்டும்... உங்களுக்கும் கொடுக்க வேண்டும்.
2.என்னை அந்த உணர்வுகள் சாடாதபடி பாதுகாத்துக் கொள்வதற்குக் குருநாதர் அருள் கொடுத்தார்
3.அதைப் போன்று உங்களுக்கும் அந்த அருள் பாதுகாப்பு உண்டு... என்றுமே எமது அருள் உறுதுணையாக இருக்கும்.

அதை எல்லாம் நீங்கள் எளிதில் பெற முடியும். குரு அருள் உங்களுக்கு எளிதில் கிடைக்கும். அது கிடைக்கச் செய்வதற்குத் தான் இதைச் சொல்வது.

இந்த வாழ்க்கை என்ன...? என்று அறிந்து கொண்டபின் இனி நாம் எப்படி வாழ வேண்டும்... என்ற நிலையில் உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.

ஆனால் ஒரு பிறவி என்று இனி வந்தாலோ நரகத்திற்குத் தான் நாம் செல்கின்றோம். இப்போது நரகலோகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
1.மனித உடல் பெற்றால் சொர்க்கலோகம் என்று சொல்வார்கள்
2.அது பண்டைய காலமாகப் போய்விட்டது.

உடலுக்குள் பல வேதனையும் நரக வேதனை உருவாக்கும் உணர்வுகளையும் நுகர்ந்து நுகர்ந்து ஒவ்வொரு நொடியிலும் போர் முறைகளே நமக்குள் வருகின்றது.

நல்ல குணங்களுக்கும்... தீமை செய்யும் குணங்களுக்கும்... மற்றவர்கள் செய்யும் உணர்வுகளை நுகர்ந்தபின் நமக்குள் பெரிய போரே நடக்கின்றது இந்த போரினால் மனக் கலக்கங்கள் வருகின்றது... உடல் நோய்கள் வருகின்றது... சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது.

நம் உடலுக்குள் நாம் நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் எது அதிகமோ அதன்வழி இந்த உணர்வுகள் சென்று அந்த வழிக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறது.

1.என்ன வாழ்க்கை என்றும் இனி வாழ்ந்து என்ன...? என்றும்
2.இந்த உடலையே அழித்திடும் நிலைக்குத் திருப்பி விடுகிறது.

இதை எல்லாம் நாம் செய்யவில்லை. உணர்வின் இயக்கங்கள் உயிரிலே பட்டபின் அது எதுவோ அந்த உணர்ச்சிக்கொப்ப நம்மைச் செயலாக்குவதும் இதே உயிரே தான்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்றும் இருளை அகற்ற வேண்டும் என்றும் அருள் ஞானத்தை உங்களுக்குள் பதித்தல் வேண்டும்.

பதித்த அந்த நினைவு கொண்டு காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வளர்த்துக் கொண்டால்
1.வாழ்க்கையில் வரும் போர்களை அடக்கும்.
2.அது எத்தகைய போராக இருப்பினும் நம்மைப் பாதிக்காத நிலையில் கொண்டு வரலாம்.

அத்தகைய வலிமை பெற்று விட்டால் நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியின் வலுவைப் பெற்றோமோ உடலை விட்டுச் சென்ற பின் நம்மைப் பிறவியில்லா நிலைக்கு அழைத்துச் செல்லும்.

உன் எண்ணத்திற்குள்ளே நான் (ஈஸ்வரபட்டர்) இருப்பேன்… சொல்லும் சொல்லாக நான் வருவேன்… செயல் தானாகவே வந்துவிடும்

1.எண்ணும் எண்ணம்
2.சொல்லும் சொல்
3.செய்யும் செயல் எல்லாம் ஒன்றாக...
4.ஒன்றுடன் ஒன்று சுற்றும் நிலையில் இருக்க வேண்டும்.

ஏனென்றால் சொல்லும் சொல்லைக் காப்பவனே “பெரும் நாணயஸ்தன்...!”

மனித நிலையில் சொல்லும் சொல்லைக் காப்பாற்றி விட்டால்...! அவன் நிலை என்றுமே உயர்ந்து நிற்கும்.

நீ வேறல்ல உன் எண்ணம் வேறல்ல உன் சொல் வேறல்ல உன் செயல் வேறல்ல எல்லாம் கலந்துதான் மனிதன் என்பவன்.
1.வெறும் ஆத்மாவும் உடலும் மட்டுமல்ல மனிதன்
2.உயிரும் உடலும் மட்டும் தான் மனிதனல்ல
3.எண்ணமும் சொல்லும் செயலும் தான் மனிதன்,

உடலும் அழிகின்றது ஆத்மாவும் பிரிகின்றது. எண்ணிய எண்ணமும் சொல்லிய சொல்லும் செய்த செயலும் நிலைக்கின்றது. ஆகவே
1.எண்ணும் எண்ணத்தை நல் எண்ணமாக எண்ண வேண்டும்.
2.நல்ல சொல்லும் நல்ல செயலும் தானாக வரும்.

எண்ணம் என்பது எங்கிருந்து வருகின்றது…? உன் உடலில் எந்த உறுப்பப்பா எண்ணம்…? எண்ணும் எண்ணம் எல்லாம் உன் நிலையைச் சுற்றித்தான் உள்ளது. சுற்றி வரும்.

காற்றிலே நல்ல பூவின் மணமும் கொடிய நஞ்சுத் தன்மையும் உண்டு. நீ எடுக்கும் தன்மையிலே தான் அது உன்னுள்ளே வந்து சேரும்.

எண்ணங்களைக் காவியத்தில் வடித்திடலாம். காலங்கள் மாறினாலும் காவியங்கள் அழிவதில்லை. பெரும் ஞானிகளின் நிலையும் அது தான்.

பெரும் பட்சிகள் வானிலே பறந்தாலும் அதன் எண்ணமெல்லாம் ஒன்றிலேயே நிலைத்திருக்கும். நிலைத்த எண்ணத்திலேயே தன் உணவை எடுத்துச் சென்றுவிடும். பறவையின் பார்வையின் தன்மையில் தான் சொல் உள்ளது.

நான் முதலில் சொல்லிய கருத்தின்படி எண்ணத்தையும் செயலையும் காட்டியது… பறவையின் நிலை எல்லாம் இதுவே தான்.

எண்ணம் சொல் செயல் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதன் பொருள் இது தான். எண்ணம் சொல் செயல் என்பது புரிந்ததா…?

1.உன் எண்ணத்திற்குள்ளே நான் (ஈஸ்வரபட்டர்) இருப்பேன்.
2.சொல்லும் சொல்லாக நான் வந்திடுவேன்
3.செய்யும் செயல் தானாகவே வந்துவிடும்.
4.எண்ணத்தை உயர்த்திவிட்டால் சொல்லும் உயர்ந்துவிடும்... செயலும் ஓங்கிவிடும்.

எண்ணம் என்பது தியானத்திற்கு மட்டுமல்ல. நீ எடுக்கும் எந்த எண்ணத்திற்கும் எந்த நிலைக்கும் இதுவே தான்.

நாளெல்லாம் நல்ல நாள் தான்
நாளெல்லாம் நடத்திடலாம்
நாளைக் கடத்திட வேண்டாம்
நாளை நாளை என்று…!

June 19, 2022

பிறவியில்லா நிலை அடைவதற்கு ஓசான் திரையின் முக்கியத்துவம் என்ன…?

அதிகாலை துருவ தியானத்தில் நாம் சக்தி ஏற்றிக் கொண்ட பின்… நாம் எதைத் தியானித்தோமோ அந்த வலுவின் தன்மை கொண்டு நம் குடும்பத்தைச் சேர்ந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை எளிதில் விண் செலுத்த முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலத்துடன் உயிரான்மாக்களை இணையச் செய்தபின் இந்த உணர்வுகள் பட்டு அவர்கள் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது. “ஏனென்றால் அவர்கள் உடல் பெறும் உணர்வைக் கரைத்தவர்கள்…”

இதைக் கரைத்து வெளி வருவது என்றால் அடுத்து காலை சூரிய உதயம் வருகின்றது. அது வரப்படும் பொழுது
1.இந்த உடலிலிருந்து பிரிந்து சென்ற இந்த உணர்வுகளை
2.அந்த விஷத்தை அது கவர்ந்து சென்று விடுகின்றது… ஏனென்றால் இதிலே பிரித்தது.

உதாரணமாக கருணைக் கிழங்கை நாம் வேக வைக்கின்றோம். விஷத்தின் தன்மை பிரிந்து சென்ற பின் இதே சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

ஆனால் இது இயற்கையில் விளைந்த உணர்வாக இருந்தாலும் “வேக வைத்து நாம் நீக்கினாலும்…”
1.எதன் கலவையுடன் இந்த உணர்வினை வெளிப்படுத்துகின்றோமோ
2.இந்த உணர்வின் அலைகள் வெளிப்படுத்தி நாம் அதை உணவாக உட்கொண்டால்
3.அந்த உணர்வின் தன்மை இழுத்து வைத்திருப்பதை நம் உணர்வின் அணுக்கள் ஆக்கப்படும் பொழுது
4.இந்த உணர்வுகள் இதிலிருந்து வெளிப்பட்ட உணர்வை ஈர்த்து நமக்குள் அதை வளர்க்கின்றது.

எந்தப் பொருளானாலும் நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் அணுக்களாக்கப்படும் போது அதை நமக்குள் உருவாக்கி
1.அந்த அணுக்களில் எந்த உயர்ந்த குணத்தைப் பதிவு செய்கின்றோமோ
2.அந்தப் பதிவின் நிலைகொண்டு அந்த அணுக்கள் மாற்றமடைகின்றது.

இதை நாம் செயல்படுத்துதல் வேண்டும்.

இதைப் போல நாம் எடுக்கும் ஒவ்வொரு உணர்வுகளையும் சூரியனுடைய காந்த சக்தி இங்கே எடுத்துக் கொள்கின்றது. ஆனால் பூமியின் ஈர்ப்பைக் கடந்து வெளியிலே செலுத்தப்படும் பொழுது அந்தக் காலை சூரிய உதயத்தில் அது வரப்படும் பொழுது ஓசோன் திரை அதைக் கவர்ந்து கொள்கிறது.

காரணம் ஓசோன் திரை என்பதே “விஷத்தின் அடர்த்தியாகி… தன்னுடன் விஷத்தை இணைத்துக் கொள்வது தான்…!”

சூரியனிலிருந்து மற்ற பிரபஞ்சத்திலிருந்து வரக்கூடியது எல்லாம் பூமியின் சுழற்சி வட்டத்தில் ஒரு அடர்த்தியான பின் தான் விஷத்தன்மை உட்புகாது தடுக்கப்படுகின்றது… அதுதான் ஓசோன் திரை.

சூரியனிலிருந்து வரக்கூடியது அல்ட்ரா வைலட்… அதுவும் விஷத்தின் தன்மை கொண்டது தான். அது அடித்துப் பிசைந்து வெளிவரப்படும் பொழுது அதனுடைய ஒளிக்கதிர்கள் வெகு தூரத்தில் இருப்பதையும் நெருப்பின் தன்மையாக மாற்றுகின்றது.

நெருப்பின் தன்மையாக மாறினாலும் விஷத் தன்மைகள் பிரிகின்றது. ஆனாலும் இந்த மோதலில் (வெப்ப) மின் அணு போன்று ஆகும்பொழுது ஈர்த்துத் தனக்குள் இந்த விஷத்தின் தன்மை கொண்டு ஒரு அணுவின் தன்மையை அடைகின்றது.

இயற்கையின் நிலைகளில் இவ்வாறு நிகழ்ந்து வரும் நிலைகளில் பூமிக்கு இத்தகைய விஷத்தின் தன்மை அடர்த்தியாக (ஓசான்) ஆனபின் நம் பூமியில் ஜீவ அணுக்கள் மற்ற உயிரினங்கள் வாழும் தகுதி பெறுகின்றது.
1.நஞ்சினை அது கவர்ந்து கொள்ளும் நிலையும்
2.தனக்குள் அடக்க சக்தியாகக் கொண்டு வரும் நிலையும் வருகின்றது.

இதைப் போன்றுதான் இதனின் உணர்வுகள்… இந்த பிரபஞ்சத்தை விட்டு உயிரான்மா வெளி சென்றபின்
1.உடல் பெறும் உணர்வுகள் அந்த ஓசான் திரையுடன்… அதனுடைய அடர்த்தியில் கலந்து விடுகின்றது.
2.இந்த மனித உடலில் விளைந்தது அங்கே செல்லவில்லை என்றால் (விஷம் வடிகட்டப்படவில்லை என்றால்)
3.மீண்டும் இந்த உயிரின் தன்மை அதனின் உணர்வு தொடர் கொண்ட உடலைத்தான் உருவாக்கும்.

அதாவது… இந்த உடலில் எத்தகைய உணர்வை எடுத்துக் கொண்டதோ அந்த உணர்வுக்கொப்ப உடலைத் தேடிச் சென்று அந்த உடலாகத் தான் மீண்டும் உருவாக்கும். பிறவா நிலை பெறுவதில்லை.

ஆசை ஆசை என்பதெல்லாம் உன் அருளைப் பெற்றிடவே… உன் ஆசையை என் ஆசையில் பதித்திடப்பா...!

1.பற்றற்று இருக்க வேண்டும்...
2.ஆசையில்லாவிட்டால் தான் உலக ஞானம் பெற முடியும் என்பது எல்லாம் இவர்களாகச் சொன்ன கதை.

பெரும் ஆசையினால் வந்தது தான் இந்த உலகமே. ஆசையில்லா விட்டால் இவ்வுலகமே இல்லை... ஜீவனும் இல்லை... பந்த பாசமும் இல்லை... பாற்கடலுமில்லை... பாழடைந்த நிலை தான் எங்கும் இருக்கும்...!

மனிதனின் எண்ணமும் ஆசை தான். ஈசனின் எண்ணமும் ஆசை தான். ஈசனின் ஆசையிலே தான் உலகமே உள்ளது. இந்த உலகம் மட்டுமல்ல... எல்லா உலகமும் ஈசனின் ஆசையில் தான் உள்ளது. ஈசனின் அருளைப் பெற்றிடவே பெரும் ஆசைதான் வேண்டும்.

1.பற்றற்றவன் என்பவனுக்கும் ஆசை இல்லாமல் இல்லை.
2.ஆசையில்லாதவன்...! என்று எவனும் இல்லை.
3.சித்தனுக்கும் ஞானிக்கும் மகரிஷிக்கும் ஆசையுண்டு.

ஈசனுக்கு ஆசையுள்ளதால் தான் ஞானி சித்தன் மனிதன் உயிரினங்கள் எல்லா ஜீவராசிகளுக்குமே ஈசனின் அருளை அளித்திடுகின்றான்.

எண்ணத்தை இன்பமாக்குங்கள் என்று சொல்லும் பொழுது அந்த எண்ணம் ஆசையில் தான் வருகிறது.
1.ஆசைக்கு நான் (ஈஸ்வரபட்டர்) எதிரியல்ல.
2.ஆசையுடன் தான் நானும் உள்ளேன்.
3.ஆசையுடனே இருந்திடுங்கள்..!

ஆசை என்பது வேறு... ஆனால் பேராசை என்பது வேறு...! பேராசை என்னும் பேயை ஒட்டிவிடுங்கள்.

“சுவாச நிலை... சுவாச நிலை...!” என்பதெல்லாம் நம் மனதைச் சாந்த நிலையில் வைத்துக் கொண்டு
1.நம் மனதில் வந்து மோதும் கோபம் தாபம் குரோதம்
2.எது வந்தாலும் அந்த நிலையை அடக்கிக் கொண்டு
3.பெரும் சாந்த நிலைக்கு வருவது தான் சுவாச நிலை.

அச்சுவாச நிலை வருவதற்கே அந்த ஆசை இருந்தால் தான் சுவாச நிலையே வரும். ஆசை தான் மனிதனே. சோர்வல்ல மனிதன்.

ஆசையை அடக்கிவிடு... ஆசையை அடக்கிவிடு...! என்று சொல்வதெல்லாம் சொல்பவனுக்கே அந்த நிலை இருப்பதில்லை.

1.ஆசையை விட்டுவிட்டால் இந்த ஆன்மாவுக்கு என்ன வேலை இந்த உடலில்...?
2.ஆசையை அடக்குபவனின் ஆன்மா தானாகப் பிரிந்துவிடும் தன் நிலைக்கே.

இவ்வுலகில் நாம் பிறந்த பலனை (மெய்ப் பொருளை அடைய) ஆசையுடனே பெற வேண்டும். நாம் பெற்ற குழந்தையை ஆசை இருந்தால் தான் வளர்க்க முடியும். உண்ணும் உணவையும் ஆசைய்டன் தான் உண்ண முடியும்.

ஆசையுடன் இருங்கள் என்பதும்... அன்புடன் இருங்கள் என்பதும்... ஒன்றே தான். ஆசை இல்லை என்றால் இந்த உலகில் அலையுமில்லை கடலுமில்லை.

செடிக்கும் மரத்திற்கும் ஆசையுள்ளது. மண் பேசும் கல் பேசும் என்பதும் இந்த ஆசையினால் தான். ஆசையில்லாதவன் பிறந்ததுமில்லை. ஆசையில்லாதவன் பிறக்கப் போவதுமில்லை.

ஆசையைப் பற்றிச் சொல்லும் பொருள் எல்லாம் என்ன என்றால்
1.தன் நிலை அறிந்து
2.உன் ஆசையை எண்ண வேண்டும் என்பது தான் அதனின் பொருளே.

ஆசையுடன் அருள் செய்வாய்... “குருதேவா ஈஸ்வரா...!”
ஆசையான இவ்வுலகில் ஆசையுடன் இருந்திடவே
ஆசையுடன் அருளிடுங்கள் நல்லாசியை...
ஆசையுடன் அருளிடுங்கள் நல்லாசியை...!

ஆசை ஆசை என்பதெல்லாம் உன் அருளைப் பெற்றிடவே – உன்
ஆசையை என் ஆசையில் பதித்திடப்பா...!
ஆசை மனதை எனக்கருளி
ஆசை அமுதை எனக்கூட்டு...!

ஆசையுடன் நான் தியானம் செய்ய ஆசியும் அருளும் வேண்டுமப்பா
ஆசியும் அருளும் வேண்டுமப்பா... ஆசியும் அருளும் வேண்டுமப்பா...!

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலை வரும்போது பிறவியில்லா நிலை அடையும் தகுதி இழக்கப்படுகின்றது

பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக உருப்பெற்றபின் விஞ்ஞான அறிவால் பேரழிவுகள் இந்த பூமியில் இன்று பரவிக் கொண்டுள்ளது.

1.பக்தி மார்க்கங்களிலும் கடவுளை வணங்குவது எல்லாம் இந்த உடலுக்கு வேண்டிய சுகத்திற்குத் தான்.
2.இந்த உடலில் வரும் தீமைகளை மாற்ற அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்றால் அதை யாரும் எடுப்பதில்லை.
3.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகரும் பொழுது இந்த வாழ்க்கையில் வரும் குறைகளை நீக்கும்...
4.அதே சமயத்தில் அந்த ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் ஓங்கி வளரும் என்ற நம்பிக்கை யாருக்கும் வருவதே இல்லை.

விஞ்ஞான அறிவால் இன்று பல ஆடம்பரப் பொருட்களை விரும்புகின்றோம். அதன் வழி கொண்டு செயல்பட்டாலும் டி.வி. மற்ற தொலைத் தொடர்பு உபகரணங்களை நாம் உபயோகப்படுத்தும் பொழுது உலகம் முழுவதும் நடக்கும் அசம்பாவிதங்களைப் படமாக்கி அதை உடனுக்குடன் காட்டுகின்றனர்.

ஒரு கர்ப்பமுற்ற தாய் இதையெல்லாம் உற்றுப் பார்க்கும் நிலை வந்தால் குறிப்பாக... “ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள் இதை நுகர்ந்தால்...” அந்த குழந்தையின் உடலிலும் இத்தகைய நிலைகளை உருவாக்கி விடுகின்றது.

அங்கே சிதைந்த உணர்வுகள் டி.வி. மற்ற சாதனங்கள் மூலமாக இங்கே வருகின்றது. சிதைந்திடும் உணர்வுகள் இந்தக் குழந்தையிடமும் விளைகின்றது கருவிலேயே...!

இதைப் போன்று நம்மை அறியாத நிலையில் எத்தனையோ வருகின்றது.

இவ்வாறு ஒளி ஒலி அலைகளை அடிக்கடி இப்படி ஒளிபரப்பு செய்கின்றனர். எங்கே சிதைந்த உடலிலிருந்து அந்த உணர்வலைகள் வெளிப்பட்டதோ அந்த உணர்வலைகளை நுகரும் தன்மை வருகின்றது.

இன்று எங்கேயோ நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளையும் வீட்டில் இருந்தபடியே உடனடியாக இங்கே அந்தச் செய்திகளைப் பார்க்கவும் படிக்கவும் பல பிரதிகள் (COPY) எடுக்கவும் முடிகின்றது... மற்றவருக்கு அனுப்பவும் முடிகிறது.

காரணம்... காற்றின் அழுத்தத்தால் கம்ப்யூட்டர் என்ற சாதனத்தால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற முறைகளை வைத்து மாற்றிக் கொண்டு வருகிறார்.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற தொடர்வரிசை கொண்டு இதே அழுத்தங்களை எண்ணப்படும் பொழுது அந்த அழுத்த உணர்வுகள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்காக மனிதனுடைய படத்தையே அங்கு காட்டுகின்றது.

உலகெங்கிலும் நடக்கும் நிகழ்ச்சிகளை ஒரு நொடிப் பொழுதில் இங்கே கிடைக்கும்படி செய்கின்றார். ஆக மனிதனின் வாழ்க்கையில் இவ்வாறு நாம் செய்தாலும் அது மனிதனுக்கு “எவ்வளவு பெரிய தீங்கு விளைவிக்கின்றது...?” என்ற நிலைகளை நாம் மறந்துவிட்டோம்.

1.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் வரும் பொழுது மனித உடலின் இச்சைதான் வருகின்றது
2.மனிதனின் கடைசி எல்லை - பிறவியில்லா நிலையை அடைய முடியாதபடி இழக்கப்படுகின்றது.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வின் துணை கொண்டு அவன் சென்ற பாதையில் நாம் சென்றோம் என்றால் அதன் வழிப்படி நாம் அதைப் பெற முடியும்.

அதிகாலை துருவ தியானத்தில் இதைத் தெளிவாக அதை எடுத்துக் கணவனும் மனைவியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்ற இந்த உணர்வினைத் தனக்குள் சேர்த்து
1.தன் மனைவிக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டுமென்று என்ற நிலையைச் செயல்படுத்த வேண்டும்.
2.அதே போல் மனைவியும் தன் கணவனுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்தி
3.இரு உயிரும் உணர்வின் தன்மை ஒன்றிணைக்க அவசியம் பழகுதல் வேண்டும்.

கூட்டுத் தியானத்தின் மூலம் அருள் உணர்வைப் பெற்றுத் தங்களைச் சார்புடையோர் நிலைகள் உடலை விட்டுப் பிரிந்திருந்தால் அந்த ஆன்மாக்களை நாம் விண் செலுத்துதல் வேண்டும்... சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும். அவர்கள் முன் சென்றால் நாமும் பின் செல்ல முடியும்.

June 18, 2022

தியானத்தின் நிலையில் “அந்த ஈஸ்வரனே...” பந்தம் வருவான்

மனதை அடக்கு...! என்பதன் பொருள் என்ன…?

1.உள் மனதை அடக்கும் தன்மை முதலில் வந்துவிட்டால்
2.வெளி மனதும் அடங்கிவிடும்.
3.உள் மனதை அடக்கிவிட்டால் ஜெப நிலையில் ஜோதி நிலை காண்பாய்.
4.வெகு சீக்கிரத்தில் இந்தப் பூமியின் ஆகர்ஷண சக்தியையே வென்றிடலாம்.

“ஆர்யபட்டா” பறந்ததன் நிலை என்ன…? அவனே செய்தானா..? ஈஸ்வரபட்டா சென்றல்லவா அதைப் பார்த்தான். அந்த ஆர்யபட்டா என்ற பெயர் வர அவனுள்ளே நான் இருந்தேன்.

ஆனால் விஞ்ஞான நிலை கொண்டு அழிக்கும் நிலை நமக்கு வேண்டாம்.

1.தியானத்தின் நிலையில் அந்த ஈஸ்வரனே பந்தம் வருவான்.
2.“நீ வேறு... அவன் வேறு அல்ல...!” என்ற நிலையை நீ பெற்றிடு.

நான் சொல்லும் பாடம் இதுவே தான்,

இந்த உலகில் பிறந்த நிலை எவ்வுலகத்திலும் இல்லை.

நம் மனமே தெய்வமாக்கும் நிலையைச் சீக்கிரம் பெற்றிடுங்கள். வாயளவில் மனமே தான் தெய்வம் என்பதில்லாமல் மனதையே தெய்வமாக்கிக் கொள்ளுங்கள்.
1.உன் மனதைத் தெய்வமாக்கிய பின்னால் தான் உனக்கருளும் பாக்கியம் வரும்.
2.தியான நிலையின் மூலமாகப் பெறும் அருள் மணங்களை உன் மனதில் உருவாக்கு.
3.சுவாச நிலை என்பதன் உட்பொருளே இது தான்.
4.உன் மனதை வாசனையாகப் பெற்றுவிட்டால் கோடி இன்பம் இதுவே தான்…!
5.நுகரும் தன்மையில் இருந்திடப்பா…! மலரும் கழிவும் வேறல்ல...! என்னும் நிலை தெரிந்திடும்.

கோப நிலை எல்லோருக்கும் உண்டு. எனக்கும் உண்டு. மணம் என்னும் வாசனையைப் பெற்றுவிட்டால் எல்லா நிலையும் மாறிவிடும். யோகியாகச் சென்று தான் இதை அடைய வேண்டும் என்ற நிலை இல்லை.

இப்பொழுது வாழும் நிலையிலேயே மெய்ப் பொருளை உணரத்தான் இந்தப் பாடங்கள்…!