ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 31, 2023

ஞானக்கனி

நாரதர் சிவனிடம் வருகின்றார்… கனியைக் கொண்டு வந்து கொடுக்கின்றார். உலகை யார் முதலில் வலம் வருகின்றார்களோ அவர்களுக்கே அந்தக் கனி.

முருகனின் வாகனம் மயில் ஆற்றல் மிக்கதாக இருப்பதால் ஏறி உட்கார்ந்தால் ஒரு நொடியில் உலகை சுற்றிச் வரலாம் என்று அவருடைய உணர்வு வேகம் செல்கின்றது.

ஆனால் விநாயகன் இருந்த இடத்திலிருந்தே… அதாவது
1.புழுவில் இருந்து மனிதனாக வளர்ச்சி பெற்ற நிலையில்
2.பல உணர்வின் சத்துக்களை எடுத்துச் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக
3.மனித உடல் பெற்ற இந்த உடல் அது இருந்த இடத்திலேயே இருக்கின்றது.

இருந்தாலும்… இந்த உணர்வின் எண்ண அலைகள் ஊடுருவிச் செயல்படும் நிலைகள் அந்த எண்ணத்தைப் பாய்ச்சி அங்கே செல்கின்றது (முருகன்).

விநாயகன் இருந்த இடத்திலிருந்து உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து வினையாகச் சேர்த்து வினையின் ரூபமாகச் சேர்க்கப்பட்டது.

உடல் பெற்ற நிலையில் தாய் தந்தையருடைய நிலைகள் என்பது பேரண்டமும் பேருலகமும்… என்று (அதனின் சக்தியைத்) தனக்குள் எடுத்துக் கொண்டது. இருந்த இடத்திலிருந்து தன் உணர்வின் சக்தியை எடுத்துக் கருவாக எடுத்துச் சிசுவாக விளைய வைத்தது.

ஆகவே
1.ஒரு மரம்…! அது பல அலைகளின் தொடர் கொண்டு
2.தனக்குள் எடுத்துக் கொண்ட மணத்தின் நிலைகள் கொண்டு இந்த சத்துக்குள் விளைந்தது கனி (மாங்கனி)
3.அது போல் அன்னை தந்தையருக்குள் விளைந்ததே இந்த உணர்வின் வித்து… (மனித உடல்)
4.இந்த வித்தின் தன்மையே “உயிரான அந்தச் சத்து…!”

இந்த உடலிள் வினையாகச் சேர்த்துக் கொண்ட அந்த நிலையான நிலைகள் கொண்டு… இந்தச் சத்தின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியாக
1.உயிர் எப்படி ஒளியாக ஆனதோ
2.அதைப் போல உயிரின் (ஒளியின்) தன்மை தனக்குள் எடுப்பது.

மாங்கனி அது வித்தாகி மரமாகி மீண்டும் தனக்குள் வித்தின் சத்தாகச் சேர்ப்பது போன்று
1.தன் இனத்தின் சத்தின் தன்மையை
2.ஒளியின் சுடராக வளரும் பக்குவ நிலைகள் பெறுகின்றது.
(சொல்வது அர்த்தமாகிறதல்லவா)

அந்தப் பக்குவ நிலையைக் காட்டுவதற்குத் தான் (நாரதன் கொடுப்பதாக) கனியைக் காட்டி
1.தாய் தந்தையருடைய பாசத்தால் தான் நாம் வளர்கின்றோம்
2.பாசத்தால் வளர்க்கப்படும் பொழுது… அந்த ஞானி காட்டிய உணர்வின் எண்ண அலைகளை நீ எடு
3.அவன் வழியில் நீ செல்…!

அன்று வான்மீகி வானை நோக்கி ஏகினான்… துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றான்…! துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய அணு தான் நாரதன். ஆகவே அந்த உணர்வின் தன்மை தான் வான்மீகிக்குள் ஈர்க்கப்பட்டது என்பதை “நாரதன் வான்மீகிக்கு ஓதினான் என்றார்கள்…”

ஏனென்றால் அது “விளைந்து முதிர்ந்த கனி…!” கனியிலிருந்து வரும் மணம் சுவையானது… இனிமை கொண்டது. நாரதனிடம் இருப்பது சுருதி ஏழு… சரஸ்வதியிடம் இருப்பது சுருதி ஏழு..! என்று இவ்வளவையும் படத்தைப் போட்டுப் பல உணர்வின் தன்மை அறிவதற்குக் காட்டுகின்றார்கள் மெய் ஞானிகள்.

தாய் தந்தை இறந்த பின் பாசத்தினால் இங்கு (பிள்ளைகளின் ஈர்ப்புக்குள்) வந்தாலும்
1.மெய் ஒளியின் தன்மை நாரதன் காட்டிய அந்த உணர்வின் எண்ணத்தை எடுத்து
2.எண்ணத்தாலே தாய் எப்படி நம்மைக் (தன் பிள்ளைகளை) கருவாகக் கூட்டியதோ
3.அதே போல பேரண்டமும் பெரு உலகமும் உன் அன்னை தந்தை தான்… அதற்குள் இருந்து தான் நீ ஜெனித்தாய்…! என்ற
4.இந்தப் பேருண்மையைக் காட்டி அது தான் உன்னை முதல் தெய்வமாக உருவாக்கியது
5.அதனுடன் நேசித்து நீ வளர வேண்டும் என்று தெளிவாக்குகின்றார்கள்.

ஏனென்றால் மரத்துடன் ஒன்றிய காய் “அது கனியாகும்…!”

காயாக (மரத்திலிருந்து) விழுந்து விட்டால் சுவை இருக்காது… இயக்கம் புளிப்பாகும். அதை எல்லாம் அன்று அந்த அகத்தின் இயக்கத்தின் தன்மையைத் தெளிவுற உணர்த்தப்பட்டது.

தாய் எப்பொழுதுமே தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே வாழ்கிறது. அதே வழியில் நாமும் நம் தாய் தந்தை உயர்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணத்தைச் செலுத்தி… அந்தப் பாசத்துடன் ஒன்றி… அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் செயல்படுத்தி… அந்தச் சக்தியை வளர்த்திட வேண்டும்.

1.இப்படி இதன் வழியிலே வளர்ந்தவர்கள் தான் விண் சென்றார்கள்… கனியாக ஆனார்கள்…! என்று கனியைக் கொடுத்து (நாரதன் கொடுக்கும் கனி)
2.மக்களுக்கு விளக்கம் சொல்வதற்கு இப்படிக் கதையாகக் காட்டிப் பேருண்மையை உணர்த்திச் சென்றார்கள்.

மோதலினால் ஏற்படும் உராய்வினால் “ஆத்ம சக்தியை வலுவாக்கிக் கொள்ளும் முறை”

ஈரமுள்ள பொருள் எதுவாகிலும்… அதன் மேல் காற்று பட்டவுடன் அதன் மணம் வெளிப்படுகின்றது. மூடி வைத்துள்ள சமைக்கப்பட்ட பொருளைத் திறந்தவுடன் அதன் மேல் காற்று படும் பொழுதும் மணம் வீசுகின்றது.

மண் மரம் போன்றவற்றில் நீர் பட்டவுடன் அதிலிருந்து உஷ்ண ஆவி வெளிப்படும் பொழுது காற்றின் மேல் அந்த ஆவி வெளிப்பட்டு மணம் வெளி வருகின்றது.

எந்தப் பொருளைச் சமைத்தாலும் அச்சமைப்பின் உஷ்ணத்திற்கொப்ப “சமைக்கப்படும் பொருளின் ஆவி நிலையின் மணம்” வெளிப்படுகின்றது. இந்தக் காற்றில் தான் இந்தப் பூமி வளர்த்துப் பக்குவப்படுத்திய அனைத்து அமிலச் சத்துகளும் நிறைந்துள்ளன.

ஒன்றுடன் ஒன்று உராயும் உராய்வில் அதனுடைய மணமும் மாற்று நிலையும் செயல் கொள்கின்றது. இதைப் போன்று தான் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி காந்த மின் அலைகளுடன் பூமியின் ஈர்ப்பு சக்தி மோதலினால் உராய்வாகின்றது.

ஒன்றின் மோதலில் இருந்து வெளிப்படுத்தும் உராய்வைக் கொண்டு அதனதன் மணம் எப்படி வெளிப்படுகின்றதோ… அதைப் போன்று சூரியனின் சமைப்பு அணு காந்த மின் ஒளியை இப்பூமியின் சமைப்பு ஓட்ட உராய்வினால் ஒளியாகக் காண்கின்றோம்.

சூரியனின் ஒளியை நம் பூமி எடுக்கும் உஷ்ண மின் அழுத்தத்திற்கொப்ப சுழலுகின்றது. அதே போல் சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற சுழற்சிக் கோளங்களான சந்திரன் செவ்வாய் வியாழன் புதன் சனி முதலான நாற்பத்தி எட்டுக் கோளங்களும் மற்ற நட்சத்திரக் கோளங்களும் அவை அவை வளர்ந்த விதம் தூர விகித நிலைக்கொப்ப அவை ஒளி மணம் பெறும் நிலை பெற்றுச் சுழன்று கொண்டுள்ளன.

சூரியக் குடும்பத்தின் சுழற்சி மண்டலத் தொடர்பு கொண்டு தான் சூரியனும் ஒளி பெற்று ஒளிர்ந்து கொண்டுள்ளது.

சாதாரணப் பொருளுக்கே காற்றின் மோதலினால் மணம் வெளிப்படுகின்றது. சமைக்கப்படாத பொருளின் மேல் காற்று மோதி வெளிப்படும் மணத்தைக் காட்டிலும்… “அதி உஷ்ணத்தைக் கொண்டு” சமைக்கப்படும் பொருளின் மணம் சமைக்கப்படும் காலத்தில் அதிகமாக வீசுகின்றது.

பூமியின் பொருளின் மணங்கள் சுழன்று கொண்டே… மோதலின் மாற்றம் கொண்டே… ஒளியாகி ஒளிர்வதைப் போன்று…
1.இந்த ஆத்ம ஜீவ சரீரத்தின் அணு வளர்ப்பை ஒளியாக்கும் நிலைக்கு
2.ஒளி கொண்டு வளர்வதற்கு வழி காட்டும் முறை தான் இந்த உபதேசம்.

பூமியின் சுழற்சியில் ஒலியாகி ஒளியாகி பூமி ஈர்ப்பின் சுவாசம் வெளிப்பட்டு பூமி சத்தெடுத்து ஆவி அலைகளை வெளிக் கக்குகிறது.

நிலத்திற்கு மேல் உள்ள நீர் நிலையான வட துருவம் தென் துருவம் மற்ற ஆறுகள் குளங்கள் கடல் ஆகியவை வெளிப்படுத்தும் ஆவி அலையின் சமைப்பு மணம் கொண்டு பூமி ஒளி பெற்று மணம் பெற்று ஜீவ ஞான செயல் வித்துக்களை உருவாக்கிக் கொண்டே உள்ளது.

ஆறறிவு கொண்ட பகுத்தறியக் கூடிய எண்ணம் செயல் கொண்ட மனித உருவகங்களை உருவாக்கிடும் கோடானு கோடி உயிரணுக்களை வளர்க்கும் சக்தி கொண்டது தான் இந்தப் பூமி.

இத்தகைய உருவாக்கும் சக்திகள் கொண்ட பூமியின் உண்மைகளை உணர்ந்து…
1.மனிதன் உன்னத உயர்வு ஒளி ஞானத்தைப் பெற
2.எண்ணத்தின் சமைப்பாகச் சுவாசம் எடுக்கும் எண்ணத்தின் உணர்வுக்கொப்ப இச்சரீரத்தை மணமாக்கி
3.மணத்தின் ஒளி காந்த நுண் அணுவை இச்சரீரம் வளர்த்து
4.காந்த மின் அணுவின் வலுவை எலும்புகளின் ஊன் நிலையில் வலு ஏற்றி
5.அந்த வலுவின் ஆவி அமில முலாமினால் ஆத்ம வலு கூடி
6.ஆத்ம வலுவினால் வளரப் பெறும் ஒளித் தன்மைக்கு
7.மகரிஷிகள் வளர்த்துக் கொண்ட ஒளியின் வலுவை… காந்த மின் அலை வளர்ச்சியை…
8.மனிதச் சரீரத்திலே வளர்த்து வலுவாக்கும் வழி முறையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

May 30, 2023

உபதேசக் கருத்துக்களை (வாக்கு) அழுத்தமாகச் சொல்வதன் காரணம் என்ன…?

இந்தக் காற்று மண்டலத்தில் இருக்கக்கூடிய ஞானிகளின் அருள் வித்துக்களைப் பெறச் செய்வதற்குத் தான் உபதேசத்தின் வாயிலாக வாக்குகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு)

விஞ்ஞான அறிவு கொண்டு வாழ்க்கைக்காக வேண்டி ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதைக் கேட்டுப் பதிவாக்கி… புத்தக வாயிலாகப் படித்து… பின் அதை எல்லாம் நினைவு கொண்டு பரீட்சை எழுதி அதில் தேர்ச்சி பெறுவது போன்று
1.மெய் ஞானிகளுடைய அருள் சக்திகளை உங்களுக்குள் கொடுத்து
2.துன்பத்தை நீக்கிடும் மெய் ஒளியின் தன்மையாக மெய் ஞானத்தின் அருளாற்றலைப் பெறச் செய்து
3.உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் இருள் சூழும் நிலைகளை நீக்கிடும் சக்தி பெற வேண்டும் என்பதற்காக
4.குருநாதர் காட்டிய அருள் வழியிலே வாக்கின் வன்மையாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

ஆகையினால் தான்… “இதை உங்களிடம் அழுத்தமாகச் சொல்வது…!”

“திட்டியவனை” எண்ணியவுடன் எவ்வளவு வேகமாக அந்த உணர்ச்சியின் வேகங்கள் கிளம்புகின்றதோ அதே மாதிரி
1.அந்த அருள் ஞானிகளைப் பற்றி உங்களுக்குள் “அழுத்தமாக” உபதேசிக்கும் பொழுது அந்த உணர்வுகள் உந்தும்
2.அப்பொழுது உங்களைச் சார்ந்தவர்களோ மற்றவர்களோ யாராவது சாபங்கள் இட்டிருந்தால்
3.உங்கள் உடலுக்குள் அது இருந்தால் அதை உணரச் செய்யும்… அதே சமயத்தில் எரிச்சலாகிப் பல நிலைகள் ஆகும்.

ஆனால் எரிச்சலாகும் பொழுது…
1.என்னடா சாமி இப்படிச் சொல்கிறார்…! என்று எழுந்து சென்று விட்டால் “யாம் சொல்வது எல்லாம் போய் விட்டது”
2.எப்படியும் இந்த உபதேசத்தைக் கேட்டு எனக்குள் இருக்கும் பாவ நிலைகளும் சாப நிலைகளும் தீர வேண்டும் என்று எண்ணினால் “பாவங்கள் போய்விடும்”
3.இல்லை என்றால் “நல்ல சக்திகளைப் பெறுவது போய்விடும்…”

குருநாதர் காட்டிய வழியிலே எப்படியும் அந்த உயர்ந்த சக்திகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்… நல்லது நடக்க வேண்டும்… என்பதற்குத்தான் தெளிவாகச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.நாம் தெரிந்து எதுவும் முடிவதில்லை
2.தெரிந்து யாரும் அவ்வாறு செயல்படுத்த முடியாது
3.சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வாக்கின் வன்மையும் தான் இயக்குகின்றது.

“ஏனென்றால் அது பிரணவம்…!”

“உயர்ந்த எண்ணத்தைத் தனக்குள் சிருஷ்டிக்க வேண்டும்” என்ற உணர்வின் ஏக்கத்தைத் தூண்டச் செய்து அந்த உணர்வுக்குள் பல நிலைகளை உங்களைப் பழக்கச் செய்வதற்குத் தான் இதைச் சொல்வது.

1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று
3.உங்கள் உடலுக்குள் இவ்வாறு தியானித்து அந்தச் சக்தியை ஏற்றிக் கொள்ளுங்கள்.

திரும்ப அதே உணர்வுடன் எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒருவன் நம்மைத் திட்டினான் என்றால் அவனை நாம் மீண்டும் மீண்டும் நினைத்து அப்படிப் பேசினான்… பேசினான்… என்று அந்த வேகங்களைக் கூட்டிக் கொள்கின்றோம் அல்லவா…! மீண்டும் மீண்டும் அவனைப் பற்றி பேசுகிறோம் அல்லவா…!

அதைப் போன்று தான் உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வினைத் திணிக்கச் செய்கின்றேன். இந்த உணர்வுகள் உள்ளே செல்லச் செல்ல துன்பத்தை ஊட்டும் உணர்வுகள் அது விலகும்.

அழுக்கு நீரில் நல்ல நீரை ஊற்ற ஊற்ற… அழுக்கு நீர் குறைந்து நல்ல நீர் பெருகி வரும். அது போன்று தான்
1.உங்களுக்குள் இருக்கக்கூடிய சங்கட அலைகள் அது படிப்படியாகக் குறையச் செய்வதற்கு
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா… என்று
3.ஒவ்வொரு நிமிடமும் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்யுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று திரும்பத் திரும்ப அந்த உணர்வுகளை ஏங்கிச் சுவாசியுங்கள். அதை உங்கள் உடலுக்குள் பரப்புங்கள்.

கண்ணின் நினைவு கொண்டு உயிர் வழி இந்த உணர்வுகளை உள்ளே செலுத்தப்படும் பொழுது உங்கள் துன்பங்கள் நீங்குகிறது.

கலி என்றாலே… பகுத்தறியும் உயர் ஞான வளர்ச்சி முற்றலின் வலு

நடக்கின்றோம் கேட்கின்றோம் பேசுகின்றோம் சுவைக்கின்றோம் பார்க்கின்றோம் நுகர்கின்றோம்..!

இந்த ஒவ்வொரு செயல் நிலையிலும் “ஞான வளர்ச்சி” காலமுடன் ஒன்றியதாகச் சத்து பெற்றுள்ள இத்தருணத்தை இன்றைய மனிதச் செயலின் அடுத்த நிலையான பறக்கும் நிலைக்கு மனிதனின் உருவக உயர்வு நிலை வந்திருக்க வேண்டும்.

கல்வித் தரத்தில் எப்படி முதல் வகுப்பு… இர்ண்டாம் வகுப்பு… என்று கல்வித் தரத்தை (தேர்ச்சி பெற்றதை) உயர்த்துகின்றார்களோ அதைப் போன்று
ஒலி…
ஒளி…
நீர்…
தாவரம்…
ஜீவ சக்தி… (உயிரினங்கள்)
ஞான சக்தி (தற்போதைய மனிதன்)
இத்தொடரில் அடுத்த நிலையான தெய்வ வளர்ப்பு சக்தியை மனிதன் பெற வேண்டும்.

ஏனென்றால் இந்தப் பூமி பெற்ற எல்லாச் சக்தியுமே இந்த மனிதக் கோளத்தில் தொடர்பு கொண்டுள்ளது.

அத்தகைய வளர்ப்பின் வலு கூடிய பிறகு தான் (மனிதனின்) எண்ணத்தின் பகுத்தறியும் சொல் செயல் ஆற்றல் முதிர்வு நிலை பெறுகின்றது.

பூமியின் வளர்ச்சியில் முதிர்வு கொண்ட வளர்ப்பு தான் மனிதர்கள். மனிதனுக்கு அடுத்த நிலையான…
1.தெய்வ நிலை பெறக்கூடிய பூமியின் சத்து வித்தாக வளர்ச்சிப்படுத்த
2.பூமி சேமிக்கும் தன் வம்சத் தொடரின் தொடர்கள் தானப்பா
3.மனிதன் பெற்ற உயர் ஞான பகுத்தறிவு வித்து நிலை என்பது.

ஆனால் தன் உடல் கோளத்தில் உணரும் உயர் ஞானத்தை இக்கலி தந்த காலத்தில் வளர்க்கத் தெரியாமல்… கலிக்கு அடுத்த கல்கியின் உயர்ந்த சத்தாகப் பெறவல்ல உயர்ந்த சந்தர்ப்பத்தை… கல்கி யுகமாக்கிப் “பறக்கும் சக்தியை…” இந்தப் பூமி வளர்ப்பில் வளர்ந்த வித்துக்கள் (மனிதர்கள்) உயர்வு நிலைப்படுத்த முயற்சிக்கவில்லை.

“கலி” என்றாலே பகுத்தறியும் உயர் ஞான வளர்ச்சி முற்றலின் வலு என்று உணராமல்
1.இக்கலியையே செயற்கைக் கலியாக்கி
2.உன்னத வளர்ச்சியில் சுழன்ற இந்தப் பூமியின் சத்தையே
3.இன்றைய மனித ஞானம் அழிக்கும் நிலைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளது.

ஆக.. கல்கியுகத் தொடர்பை இந்தக் கலியில் இங்கே இந்தப் பூமியில் வளர்க்க முடியா விட்டாலும் நம் சூரியக் குடும்பத் தொடர்பில் (மற்றொரு கோளத்தில்) நாம் எடுக்கும் ஜெபத்தால் கல்கி யுகத்தை வளர்க்க முடியும்.

May 29, 2023

யாம் கொடுப்பது அனைத்துமே வாக்குகள் தான்… வெறும் பேச்சு அல்ல…!

உடனுக்குடன் தீமைகளை நீக்குவதற்குத் தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம். அதை நீங்கள் சீராகப் பயன்படுத்துதல் வேண்டும் ஏனென்றால் முந்தி ஆரம்பத்திலே யாம் (ஞானகுரு) போட்ட வித்து அது…!

உதாரணமாக வயலிலே களைகள் முளைக்கிறது என்று அவைகள் எல்லாவற்றையும் பிடுங்கிச் சுத்தம் செய்கிறோம். ஆனால் மீண்டும் அவைகள் முளைத்து விடுகின்றது. மற்றதை விளைய விடுவதில்லை.

இது போன்று தான்
1.நம் உடலுக்குள் முந்தி விளைந்ததெல்லாம் இருக்கின்றது.
2.இருந்தாலும் அவைகள் மீண்டும் முளைத்து விடாமல் நாம் கொஞ்சம் தடுத்துக் கொண்டே வர வேண்டும்.
3.அருள் ஞான உணர்வை எடுத்து நல்ல பயிரை நாம் வளர்ப்பதற்கு முற்பட வேண்டும்
4.எத்தனை துன்பங்கள் வந்தாலும் அந்தத் துன்பங்களை மறைப்பதற்கு மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்க வேண்டும்..

ஆத்ம சுத்தி என்ற இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி அவ்வப்பொழுது களைகளை அப்புறப்படுத்திக் கொண்டே வாருங்கள்

“என்னத்தை… ஆத்ம சுத்தி செய்து…?” என்று சாதாரணமாக எண்ணி விடக்கூடாது. ஆயுதத்தைக் கையில் கொடுத்திருக்கின்றோம். புல்லை நோண்டி அப்புறப்படுத்துவதற்கு அதைக் கொடுத்திருக்கின்றோம்.

கையிலே தான் புடுங்க முடியவில்லை. இந்த ஆத்ம சக்தி என்று ஆயுதத்தை வைத்து அதை எடுத்து விடலாம் அல்லவா. வாக்கால் தான் அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையே கொடுக்கின்றோம்.

1.நான் (ஞானகுரு) பேசுவது அனைத்துமே வெறும் பேச்சு அல்ல
2.எல்லாவற்றையும் வாக்காகத்தான் பதிவு செய்கின்றேன்
3.பதிவு செய்து எப்படியும் நீங்கள் அந்தத் துன்பத்திலிருந்து மீள வேண்டும்
4.உங்கள் மூச்சு உங்கள் துன்பத்தை நீக்க வேண்டும்
5.உங்கள் பேச்சு மூச்சும் நல்ல நிலைகள் பெற வேண்டும் என்பதற்குத்தான் அவ்வாறு செய்கின்றேன்

இதைத்தான் அன்று கந்த புராணத்தில் நாரதன் சொல்வதாக அன்னை தந்தையின் உணர்வுகளைத் தெளிவாக எடுத்துக் காட்டினார்கள்.

தாய் உன்னைக் கருவில் வைத்து வளர்த்தது. அந்தத் தாய் தந்தையரின் ஆன்மாக்கள் பிரிந்த பிற்பாடு அதற்கு நல்ல ஆகாரமாகக் கொடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். ஆனால் நாம் அதன்படி செய்கிறோமா…?

தாய் தந்தையர் இறந்து விட்டார்கள் என்பதற்காக சுட்ட சாம்பலை ஆற்றிலே கரைக்கவும் கடலில் கரைக்கவும் எங்கெங்கோ இடத்தைத் தேடிச் செல்கிறோம். இது சாங்கிய சாஸ்திரம்.

தண்ணீரே ஓடவில்லை என்றாலும் ஒரு குழியைத் தோண்டி அதில் தண்ணீரை ஊற்றிக் கரைக்க வேண்டும் என்று எத்தனை வழியில் செயல்படுத்துகின்றார்கள்.

ஏனென்றால் மழை பெய்து நாளைக்கு வெள்ளம் வந்தால் அது கடலில் சேர்த்துவிடும் என்று இப்படி ஒரு நம்பிக்கை. ஆனால்
1.தாய் தந்தையருடைய ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல ஒளிக்கடலிலே
2.உந்தித் தள்ளி இணைக்க வேண்டும் என்று தான் அன்று சொன்னார்கள்
3.அதை யாரும் செய்யத் தயாராக இல்லை.

பணத்தைச் செலவழித்துச் சாங்கியத்தை செய்து உணவு படைப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். காரணம் பாவ நிலைகளை நீக்குவதற்கு இப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று மாற்றி விட்டார்கள்.

அதே சமயத்தில் துணிமணிகளை எடுத்து மற்றவர்களுக்குத் தானமாக கொடுத்தால் ஒட்டி இருக்கும் பாவங்கள் போய்விடும்… தோஷங்கள் போய்விடும் என்று
1.அப்பா பேரைச் சொல்லித் தானம் செய்வதும்
2.அம்மா பேரைச் சொல்லித் தானம் செய்வதும் என்று இப்படித்தான் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

தானம் செய்தாலும் உடலை விட்டுப் பிரிந்து சென்ற தாய் தந்தையரின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் அவர்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று
1.நாம் அங்கே ஒன்றி இருத்தல் வேண்டும்.
2.அவ்வாறு செய்தால் தான் அந்த ஒளிகள் நம்முடன் இணையும்
3.இல்லையென்றால் அந்த ஒளிகள் ஒன்றும் செய்யாது.

சமமான சாந்த குண ஈர்ப்பு தான் நம்முடைய வளர்ச்சிக்கு உதவும்

உருக்கொண்ட உயிரணு வளர்ச்சி யாவையுமே… அவை அவை எடுத்த சுவை கொண்டு வளர்ச்சி பெற்ற வலுவின் செயல் கொண்டு… செயல் வழி குண நிலை தொடர் கொண்டு வளருகின்ற தொடர் வளர்ப்பில்… சரீர எண்ண குண வாழ்க்கையில்… சுவையும் காம இச்சையும் கொண்ட தொடர் வாழ்க்கையில் மனித எண்ண வழித் தொடர் கொண்ட வாழ்க்கை அமைந்துள்ளது

இச்சரீர ஈர்ப்பில்… சரீர உணர்வில் வளர்த்துக் கொண்ட குண நிலையை… உணர்வின் உந்தலை… எவ்விச்சையையும் “ஆவேச உணர்வு ஈர்ப்பில் செலுத்தாமல்… சமம் கொண்ட சாந்த குண ஈர்ப்பினாலேயே” செலுத்த வேண்டும்.

இவ்வுடலில் காந்த மின் அணு வலுவைக் கூட்டிய ஆத்ம பலத்தை
1.ஆண் பெண் என்ற தாம்பத்ய இணைப்பு ரிஷித் தொடர்பில்
2.இரண்டு ஆத்மாவும் ஒரு நிலை கொண்டு
3.ஓர் ஆத்மாவாக ஈருயிர் ஓர் ஆத்மாவாக வலுக் கொண்ட தொடரில் சென்றால்
4.ரிஷி சக்தி (சிவ சக்தி) கொண்ட வலுக் கூடும்.

அதன் மூலம் வளர்ச்சி கொண்ட ஜீவ வளர்ச்சி வளரத் தக்க வழித் தொடர்பிற்கு… சிவ சக்தி நிலை கொண்ட ஆத்ம ஜெபம் பெற்ற இந்த ஆத்மாக்கள் இரண்டாயிரம் சூரியக் குடும்ப இயக்க ஓட்டத்தில் எம்மண்டலத்தையும் தம் மண்டலமாக்கிட முடியும்.

மண்டல வளர்ப்பிற்கு… மனித அலை உயர் தெய்வ குண எண்ண பகுத்தறியும் ஆற்றல் கொண்ட வித்துத் தொடரை சிவ சக்தியின் செயல் கொண்டு தான் வளர்க்க முடியும்.

வளர்க்க வேண்டிய வளர் சக்தி கொண்ட “தெய்வ நிலை” மனித எண்ணத்திற்கு மட்டும் தான் உண்டு.

ஆகவே…
1.உண்டு கழித்து உறங்கும் இயந்திர பூமியின் பிடிப்பில் சுழலும் மனித ஆத்மாக்களே…
2.உங்களுக்குகந்த அறிவு ஞானத்தை இவ்வுடல் ஒன்று பெற
3.இம்மனிதச் செயல் செயல் கொள்ள
4.இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களின் தொடர்புடன் பல காலமாக வளர்ச்சி கொண்டு
5.வார்ப்புப்படுத்தி வார்ப்புப்படுத்தி வளர்ச்சி பெற்ற இம்மனித உயர் ஞான எண்ண உணர்வு கொண்ட இச்சரீரத்தை
6.மீண்டும் இச்சரீரக் கோளத்தின் சத்தையே எடுத்து எடுத்து
7.தன் ஆத்மாவின் வித்தை - தன்னைத் தான் உணராத நிலையில் விரயப்படுத்தி உழலும் இத்தொடரை விடுத்து விட்டு
8.உயரும் வழித் தொடரின் வழியறிந்தே நீங்கள் செல்லுங்கள்.

May 28, 2023

உடலுக்குப் பின் நாம் சென்றடைய வேண்டிய இடமும்… அதற்குண்டான வழி முறையும்

மனித வாழ்க்கை என்று இருந்தாலும் இந்த உடலை விட்டு நமது ஆன்மா ஒரு நாள் பிரியத் தான் செய்யும். அது சமயம் என்ன செய்ய வேண்டும்…?

குருநாதர் காட்டிய வழியில் பௌர்ணமி தியானம் இருக்கும் போதெல்லாம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து உந்தி விண்ணிலே செலுத்த வேண்டும்.

அப்போது
1.சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க உணர்வலைகள் இந்த உயிரான்மாவில் பட்டபின்
2.இன்னொரு உடல் பெறும் உணர்வின் சத்தை அது பஸ்பமாக்கிவிட்டு உணர்வின் ஒளி சுடராக அந்த உயிரான்மா வளரும்

எத்தனையோ மனிதர்களை விஞ்ஞான அறிவு கொண்டு இராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி இருக்கின்றார்கள். ஆனால் அந்த இராக்கெட் விபத்தாகி வெடித்து விட்டால் இறந்த ஆன்மா அங்கே விண்ணிலே தான் மிதந்து கொண்டிருக்கும்.

அப்படி மிதந்தாலும் அங்கிருக்கக்கூடிய மற்ற கதிரியக்க சக்திகள் அதிலே படப்படும் பொழுது
1.அந்த உயிராத்மா அது உயர்ந்த நிலை பெற முடியாது ஒளிச் சரீரமும் பெற முடியாது
2.வானில் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு வட்டத்தில் மிதந்தாலும் அது செயலற்றதாகத் தான் மாறும்.

ஆனால் இங்கே ஒரு அமைப்பை ஏற்படுத்தி உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை நாம் இங்கிருந்து சப்தரிஷி மண்டலத்திற்குக் கூட்டமைப்பாக விண் செலுத்தும்படி செய்கின்றோம்.

அப்போது அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படக்கூடிய உணர்வலைகள் இந்த உயிர் ஆத்மாவிலே கலக்கப்படும் பொழுது இந்த உணர்வின் ஒளியாகச் செயல்படுகிறது.

விஞ்ஞான முறைப்படி மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி இருந்தாலும் விபத்தாகி இறந்தால் நச்சுத்தன்மை கொண்ட உயிரான்மாவாகத் தான் விளைகின்றது.

விண்ணிலே சுழன்று கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்திலே மற்ற கோளின் ஈர்ப்புக்குள் வந்தால்
1.உடல் பெறும் தன்மையற்று விஷத்தின் ஆற்றல் கொண்ட குறுகிய உடல்களால
2.புழு போன்ற உயிரினங்களாகத் தான் உடல் பெற முடியும்.
3.அல்லது அப்படியே மனித உணர்வு கொண்ட உடல் பெற்றாலும் கூட
4.சிந்தனை இழந்து வேதனைப்பட்டு விஷத்தின் தன்மையைத் தான் வளர்த்துக் கொண்டே இருக்க முடியும்.

ஆனால் மெய் ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்லப்படும் பொழுது சுலப நிலைகளில் விண் செல்ல முடியும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.விண் செல்லும் பாதையை “எந்த மகரிஷி நமக்குக் காட்டினாரோ”
2.அவரின் உணர்வின் ஆற்றலை இங்கே தொடர்புகளாக உங்களுக்கு ஏற்படுத்தி
3.அதைத் தொடர் வரிசையாக உங்களுக்குள் பதிவு செய்து
4.அந்த ஆற்றலை ஓங்கி வளர்க்கும்படி செய்து இந்த உணர்வின் புலனறிவை
5.சப்தரிஷி மண்டலத்துடன் (உங்களை) இணைக்கச் செய்யப்படுகின்றது.

அவ்வாறு இணைத்துக் கொண்டோமானால் உடலை விட்டுப் பிரியும் போது அனைவரும் சேர்ந்து ஏக காலத்தில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை “உந்தி அங்கே செலுத்தப்படும் பொழுது…” சுலப நிலைகள் அங்கே இணையச் செய்ய முடியும்… நாமும் அங்கே இணைய முடியும்.

இதைப் போல் உந்தச் செய்வதற்குத் தான் அன்று ஒவ்வொரு ஞானியும் சாதாரண மனிதனைத் தேடி வந்தார்கள்.

அந்த ஞானிகள் பூமியிலே வாழும் காலத்தில்… எவ்வளவு பெரிய ஆற்றல் மிக்க சக்திகளை அவர்கள் பெற்றிருந்தாலும்
1.மற்ற மனிதர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடைய துன்பத்தைப் போக்க செய்து
2.அந்தப் பாச உணர்வின் சத்தைத் தனக்குள் எடுத்து… நல்ல உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்த்து
3.தன் மீது அந்த எண்ணத்தை வளர்க்கும்படி செய்து
4.தன் சிஷ்யர்கள் சிலரிடம் சொல்லி… இன்ன உணர்வு கொண்டு என்னை விண்ணிலே உந்திச் செலுத்து என்று
5.உந்திச் செலுத்தும்படி செய்து அவ்வாறு விண் சென்றவர்களே பலர்…!

அதனால் தான் ஒரு ஆன்மா உடலை விட்டு பிரிந்தது என்று நீங்கள் கேள்விப்பட்டால்
1.அவர்களை விண் செலுத்த வேண்டும் என்ற உணர்ச்சிகள் உந்தப்படுகின்றது
2.சப்தரிஷி மண்டல நினைவுகள் உங்களுக்குள் கொண்டு வரப்படுகின்றது.

அதைத் தான் பயிற்சியாக யாம் (ஞானகுரு- கொடுக்கின்றோம்.

அதாவது…
1.உடலை விட்டுப் பிரிந்த… எடையற்ற அந்த உயிரான்மாவை இயக்க வல்ல உணர்வின் ஆற்றலை
2.மனித உடலுக்குள் இருந்த நினைவின் அலைகளைக் கூட்டி… அந்த உணர்வுடன் தொடர்பு கொண்டு
3.சப்தரிஷி மண்டலத்திலே அங்கே செலுத்த முடியும்.

அத்தகைய விண் செல்லும் தொடர் வரிசையை நாம் ஏற்படுத்தினால்… நாமும் சரி… நமக்குப் பின் செல்பவர்களுக்கும் அதே நிலை இயக்கப்படுகின்றது

ஆனால் இதை அறியாதவர்கள் அல்லது இந்த முறைப்படி தியானம் செய்யாதவர்களை அங்கே விண் செலுத்த வேண்டும் என்றால்
1.உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்களை அவர்கள் தாய் தந்தையருடன் ஒன்று சேர்த்து
2.அந்த உணர்வுடன் இயக்கச் செய்து அவருடைய துணை கொண்டு அங்கே அனுப்ப முடியும்.
3.இந்த வழி தெரியாதவர்களை அப்படித் தான் விண் செலுத்த முடியும்.

உயிரான்மா எப்படி இயங்குகிறது... இயக்குகிறது... வலுக் கூ(ட்)டுகின்றது...?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் எடுக்கும் பலதரப்பட்ட குணங்களில் புளிப்பு இனிப்பு துவர்ப்பு கரிப்பு கசப்பு எரிப்பு போன்ற ஆறு வகைச் சுவையை உடல் சமைக்கும் ஏழாம் சுவை அமில வளர்ப்பைக் கொண்டு... உடல் அணுக்கள் வளர்ச்சியில் வளரும் வலுவை... உடலை இயக்கும் ஆத்மாவானது அச்சுவையின் அலையை எடுத்து இயங்குகிறது... இயக்குகிறது... வலுப் பெறுகின்றது.

அலை என்பது... என்ன...?

1.உடல் சமைக்கும் ஆவி உணர்வை ஆத்மா இழுத்து ஆத்மாவின் உடல் இயக்க உயிர் செயல் கொள்ள
2.நாம் எடுத்த உணர்வு நிலைக்கொப்ப... உடல் என்ற சட்டியில் அது சமைக்கப்பட்டு... உடல் வெளிப்படுத்தும் வெக்கை நிலைக்கொப்ப
3.எச்சுவையின் வார்ப்பகத் தன்மையில் இந்த உடலின் இயக்கம் செயல் கொள்கின்றதோ
4.அதற்குகந்த அலை காற்றுடன் கலந்துள்ள அமிலம் காந்த ஜீவத் துடிப்பு கொண்ட ஆத்ம ஈர்ப்பிற்கு வலுக்கூட்டி
5.எச்சுவையின் தன்மையை உடலின் இயக்கம் அதிகப்படுத்தி (முன்னணியில் உள்ள குணம்) வளர்ச்சி கொள்கின்றதோ
6.அத்தொடருக்குகந்த வலுத் தொடரைத் தான்
7.உடல் வளர்க்கும் அணு வளர்ச்சியின் ஈர்ப்பிற்கு இந்தக் காற்றலையின் தொடரிலிருந்தும் பெறுகின்றோம்.

உதாரணமாக மிளகாய்ச் செடியின் வித்து நீர் சக்தியைக் கொண்டு உயிர் சக்தி ஜீவ வளர்ப்பு சக்தியை எப்படிப் பெற்றதோ... அத் தொடரின் வலுவைக் கூட்டி அச்செடி வளர்ந்து... அது எடுத்த கார உணர்வின் வளர்ப்பு நிலை கூடி... வித்து நிலையில் காரமுடன் கூடிய “மிளகாயின் பலன்” கிடைக்கின்றது.

இதைப் போன்று...
1.எந்தச் சுவையில் எந்த உயிரணு ஜீவன் கொண்டதோ...
2.அதற்குகந்த வளர்ப்புத் தொடரில் பல மாற்றத்திற்குப் பிறகு
3.வலுக்கூடிய வளர்ச்சி உன்னத உயிர் ஆத்ம நிலையில்
4.எண்ண உணர்வுடன் இயங்கக்கூடிய இவ்வுடல் கோளத்தின் சமைப்பில்
5.குணங்களைக் கொண்ட உணர்வு... உணர்வுக்குகந்த சுவை... சுவைக்குகந்த செயலாக... மனித வாழ்க்கை நிலை ஓடும் வழித் தொடரை...
6.நம் எண்ணத்தால் குண நிலையை நல்வழிப்படுத்தி
7.சாந்தமுடன் கூடிய வீரமான ஞானத்தைக் கொண்டு
8.இதுகாறும் இந்த உடல் இயக்கத்தில் நம்மை அறியாமல் நாம் வளர்த்துக் கொண்ட
9.குணமும் சுவையும் செயலும் வழித் தொடர் கொள்ளும் வழி நிலையைச் சமமான குணம் கொண்டு
10.நமக்கு மேல் வலுவாகத் தெய்வ நிலை பெற்ற... தெய்வ சக்தி பெற்ற “மகரிஷிகளின் தொடர்புடன்”
11.மேல் நோக்கிய காந்த மின் அலைத் தொடர்பினை நம் சுவாசத்தால் எடுக்க
12.நாம் இந்த உடலின் இயக்கத்தை உட்படுத்தினோம் என்றால்
13.மனித சக்தியின் உயர்ந்த உன்னத சக்தியை ஒவ்வொரு உயிராத்மாவும் பெற முடியும்.

May 27, 2023

நல்லதைக் காக்கும் சக்தியைப் பெற விரும்புவோருக்கு…

யாம் (ஞானகுரு) சித்தாவதற்கு முன் என்னுடைய ஆரம்ப வாழ்க்கையிலும் நான் நல்லதைச் செய்யப்படும் போது அதிலே எத்தனையோ சிக்கல்கள் வந்தது. அதிலிருந்தெல்லாம் மீண்டு தான் வந்தது.

நல்லதைச் செயல்படுத்த வேண்டும் என்று விரும்பி இன்றும் எத்தனையோ பேர் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றார்கள். நல்ல உணர்வுடன் செய்யும் போது தீய உணர்வுகளில் சிக்கி அதிலிருந்து தப்ப முடியாதபடி இருக்கின்றார்கள்.

அதை எல்லாம் மாற்றிடும் சக்தி பெற வேண்டும்.

ஏனென்றால் வாழ்க்கையில் எதைப் பெற வேண்டும்…? எங்கே பெற வேண்டும்…? என்ற இந்த உணர்வு கொண்டுதான்
1.ஒவ்வொரு நிலையிலும் குருநாதர் காட்டிய நெறிகள் கொண்டு
2.அது எத்தனையோ சிரமங்கள் எல்லை கடந்து சந்தர்ப்பங்கள் செல்லும் பொழுது அதிலிருந்து மீள்வதற்கு
3.அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்வது…? என்று அவர் கொடுத்த சக்திகளைத் தான்
4.உங்களுக்குள் சொல்லாக… வாக்காக… இப்பொழுது கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

ஆனால் ஆரம்பத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் போல் வேகமாக உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தேன்… அர்த்தத்தைக் காண முடியாத அளவிற்கு…! ஏனென்றால் இங்கே அதைப் பதிவு செய்வதற்காக அவ்வாறு செய்தது.

முதலிலே இந்தச் சக்திகள் காற்றிலே இல்லை. ஆகவே அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் இந்தக் காற்று மண்டலத்திலே பரப்பி வைப்பதற்காக வேகமாக உபதேசித்தேன்.

1.யாரெல்லாம் அதை ஏங்கிப் பெறுகின்றார்களோ… எண்ணும் போது அவர்களுக்குக் கிடைப்பதற்காகவும்
2.காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெறச் செய்வதற்கும்
3.எண்ணியவுடன் அந்த உணர்வுகள் வேலை செய்ய வேண்டும் என்பதற்காகவும் தான் வேகமாக உபதேசித்து வந்தது.

ஆரம்ப நிலைகளில் சஷ்டிச் கவசத்தைக் கூட நான் பாடி இருக்கின்றேன். சில அன்பருடைய வீடுகளில் குருநாதர் எனக்குக் காட்டிய உண்மைகளை இரவு முழுவதும் விடிய விடியப் பேசியும் வெளிப்படுத்தியிருக்கின்றோம்.

உதாரணமாக மங்களூர் நாராயணசாமி வீட்டுக்குச் சென்றால் எல்லாக் கோவில்களுக்கும் மற்ற இடங்களுக்கும் சென்று வந்தது தான். கர்நாடகாவில் உள்ள பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். மூகாம்பிகை கோவிலுக்கும் சென்று வந்தது தான்.

குருநாதர் காட்டிய வழியில் அனுபவங்கள் பெறுவதற்காக எல்லா இடங்களிலும் இவ்வாறு சுழன்று வந்தது. காரணம்…
1.எந்தப் புத்தகத்தையும் படித்து விட்டு நான் உங்களுக்கு உபதேசிக்கவில்லை.
2.குருநாதர் கொடுத்த சக்திகளை எல்லாம் எனக்குள் விளைய வைத்தேன்
3.அதிலே விளைந்த ஞான வித்தைத் தான் உங்களுக்குள் இப்பொழுது ஆழமாகப் பதிவு செய்கிறேன்.

ஆகவே இதை எல்லாம் பதிவு செய்யும் நீங்கள் ஒவ்வொருவரும்
1.உங்கள் குடும்பத்தில் வரக்கூடிய சிக்கலை நீக்குவதற்கு என்ன வழியோ
2.அந்த மகரிஷிகள் அருள் சக்திகளைப் பெற்று
3.அதை நீக்கக்கூடிய அளவிற்கு முதலில் “பயிற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்…”

கோபமோ வெறுப்போ வேதனையோ மற்ற இன்னல்கள் வரும் பொழுதெல்லாம் அருள் உணர்வுகளைச் சேர்க்கப் பழகிக் கொள்ளுங்கள்

உங்களுக்குள் தீமைகளை நீக்கிய பின் அது யாரால் எவரால் அந்தத் தீமைகள் வந்ததோ…
1.நம்மைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கும் அந்த உயர்ந்த உணர்வு கிடைக்கச் செய்யும் விதமாக
2.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

யாரிடத்தில் நாம் பேசினாலும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்தே வெளிப்படுத்த வேண்டும். அப்போது நமக்குள்ளும் அந்த அருள் உணர்வுகள் பெருகிக் கொண்டே வரும்.

மனிதன்... வழி தெரியாமல் சென்றதன் விளைவுகளைக் காணும் நேரம் வந்து விட்டது

மனித ஞானம் பெற்றுள்ள இன்றைய வளர் நிலைத் தொடர் நிலையையும்… மனிதன் தன் உயர்வின் வழி தெரியாமல் வாழ்க்கை ஓட்ட உருவ பிம்ப சரீர இச்சைக்கொப்ப மனிதனின் ஞானம் செயல் வழி சென்றதன் விளைவுகளையும்… காணும் நிலை வந்து விட்டது.

விஞ்ஞான விபரீதத்தால் அணுக் கதிர் இயக்க வீச்சின் விஷத் தன்மை அதிக அளவில் பரவியதால் இக்கலிக்குப் பிறகு பூமியின் பிரளய மாற்றமும் அதற்குப் பின் அடுத்த இன வளர்ச்சி நிலை… மனித வித்தின் ஞானம் செயல்படா வண்ணம்… செயலின் தொடரே மாறப் போகின்றது.

எந்த வளர்ச்சியில் மனிதக் கரு பல ஆயிரம் வருடங்களாக வளர்ச்சியுற்று வளர்ந்ததுவோ… அவ்வளர்ச்சியின் தொடர் வலுத் தன்மை வளரக் கூடிய வளர்ச்சி நிலை… பூமியின் விஷ அலையினால் மாற்றமாகிக் கொண்டிருக்கின்றது.

ஆகவே மாறப் போகும் இத்தருணத்தை ஒவ்வொரு மனிதனும் தன் உயர்வின் ஞானத்திற்கு உணர்வின் எண்ணத்தை உயிரின் ஆத்மாவிற்கு வலுக்கூட்டிக் கொள்வதே நல்லது.

வரப் போகும் விஷ அலையின் மாற்றத்திலிருந்து…
1.மனிதன் பெற்ற உயர்ந்த சக்தி நிலையான
2.பகுத்தறியும் ஞான வளர்ச்சி… செயல் திறமை… சொல்லாற்றலின் செயல் நிலை… யாவற்றையும்
3.எண்ணத்தின் உணர்வைக் கொண்டு சமமான சாந்த குணத்தால்
4.உடலில் உருவாகும் உயிரணு யாவற்றையும் உயர் ஞான அணுக்களாக
5.உயிர் ஆத்மாவின் வலுவுடன் வலுச் சேர்க்கும் வளர்ச்சி நிலைக்குக் கொண்டு செலுத்த வேண்டும்.

அதற்கு… மெய் ஞானிகளின் அலைத் தொடர்பைப் பெற்று இச்சரீர இயக்க ஓட்டத்தில் எண்ணத்தால் எடுக்கக்கூடிய வலுவைக் கொண்டு உயிர் ஆத்மாவின் வலுச் சக்தியைக் கூட்ட வேண்டும்.

காந்த மின் அணுக்கள் தன் இனமுடன் இனத்தை எப்படிச் சேர்த்துக் கொள்கின்றதோ அதைப் போன்று இச்சரீர இயக்கத்தில் ஓடும் அணுத் தன்மை யாவையும் மெய் ஞானிகளின் உயர் காந்த மின் அலையை ஜெபதபத்தினால் எடுத்துப் பழக வேண்டும்.

1.அதனின் வளர்ச்சி கொண்டு இயக்கப்படும் இணைப்பைக் கொண்டு
2.உயிராத்மாவின் வலுக்கூடக் கூட
3.இந்த உடல் என்ற கோளத்தின் உருண்டோடும் அணுவின் வளர்ச்சியில் இருந்து
4.ஆத்ம உயிரின் கன நிலை கூடிக் கொண்டே செயல் கொள்கின்றது.

சூரியன் தான் வளர்க்கும் கோளத்திலிருந்து… சூரியனின் தொடர்பு கொண்டு ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வலுக் கூடி வளர்ந்து கொண்டே உள்ளதோ அதைப் போன்று இச் சரீரத்தின் ஆத்ம உயிரின் வலுவும் வளர்கின்றது.

ஓர் உயிராத்மா பிறப்பெடுத்து வளர்ச்சி நிலை குறிப்பிட்ட வயது வரம்புடன் ஆத்ம வித்து வலுக் கொண்ட தன்மை கொண்டு உருவக வளர்ச்சி நின்று விடுகின்றது.

இந்தப் பூமி வளர்க்கும் ஜீவ சரீர இயக்கமும் தாவர வளர்ச்சியும் அவை எடுத்த வித்தின் உயிர் ஆத்ம வலுவின் நிலைக்கொப்ப வளர்ச்சி நிலை வாழும் காலம் மாறி மாறிச் செல்கிறது.

மாறி மாறி என்பது…
1.விதை ஒன்று போட்டு
2.அவ்விதையில் மரம் வளர்ந்து பலன் தந்து
3.அதன் சத்து நிலை உள்ள காலங்கள் வரை சததெடுத்து வளர்ந்து
4.பலன் தந்து கடைசியில் பட்டுவிடுகின்றது.

அதே சமயத்தில் இந்தப் பூமியின் உள் பகுதியில் உள்ள நீர்… மண் வளம்… கனி வளம்… இவற்றின் வளர்ப்பு நிலை கூடிக் கொண்டே உள்ளது. ஆக… உருவகத்தில் கனத்துக் கொண்டே “பூமி வளர்க்கும் உயிர் வளர்ப்பு யாவையும்” குறிப்பிட்ட சத்து நிலைக்கொப்ப தாவரமும் ஜீவராசிகளும் வாழ்ந்து மடிகின்றன.

ஆகவே பிறப்பு… வளர்ப்பு… இறப்பு… என்ற தொடர்புடனேயே மீண்டும் மீண்டும் சுழல விடாமல் உடல் கோளத்தின் உயிராத்மாவை என்றும் அழியா நிலைக்கு உயர்த்த வேண்டும்.

சூரியனுக்கும் பூமிக்கும் மற்றெந்தக் கோளத்திற்கும் இல்லா உயர் செயலை… நம் ஆத்ம உயிர் வலுவைக் கொண்டு
1.இன்றெப்படி சுவை எண்ணம் உணர்வு செயல் ஞானம் எல்லா இன்ப நிலைகளில் உடலில் பெறுகின்றோமோ
2.அதைக் காட்டிலும் இந்த உடலில் உள்ள எதிரிகளின் எதிர்ப்பு நிலையற்று மகிழ்ந்து வாழலாம்.

எதிரி என்பது இந்த உடல் அவயங்களில் ஏற்படக்கூடிய சோர்வு… பிணி… பசி… தூக்கம்… இத்தகைய எதிரிகளின் நிலையுமன்றி ஆத்ம வலுவின் வலுவைக் கூட்டி வலுவாக்கிக் கொண்டோமானால் வளர் தொடர் வளர்ச்சியின் வலுவாக நம் இயக்கச் செயல் “பிறவா நித்திய நிலையாகச் செயல் கொள்ளும்…!”

அதற்குத்தான் இந்த உபதேசமே…!

May 26, 2023

துன்பம் வரும் நேரத்திலே யாம் (ஞானகுரு) சொன்னதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்

உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் துன்பத்தைத் துடைக்கத் தான் அருள் ஞானிகளுடைய சக்திகளை வாக்காகக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

திட்டியவர்களையோ குறை சொல்பவர்களையோ நீங்கள் எண்ணும் பொழுது துன்பங்கள் எப்படி உண்டாகின்றதோ… அந்தத் துன்பம் உண்டாகும் நேரத்திலே யாம் (ஞானகுரு) சொன்னதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
4.உங்கள் துன்பங்கள் உங்களை விட்டு அகலும்.

ஏனென்றால் வான்மீகியோ வியாசரோ “எல்லாம் தெரிந்து” அவர்கள் அந்த நிலை பெறவில்லை.
1.சமைத்து வைத்தது… “சப்தரிஷி மண்டலத்தில் இருக்கக்கூடிய மெய் ஞானிகள்”
2.அந்த உணர்வின் மணம் அங்கிருந்து வெளிப்பட்டது.
3.வெளிப்பட்டதை அந்த சந்தர்ப்பம் யாரெல்லாம் எடுக்கின்றார்களோ அவர்கள் ஞானியாகின்றார்கள்.

அது போன்று தான் இந்தச் சந்தர்ப்பம் உங்களுக்கும்…! எண்ணி எடுக்கப்படும் பொழுது நீங்களும் அந்த ஞானியாக முடியும் அத்தகைய நிலை நீங்கள் பெற வேண்டும் என்பதுதான் எம்முடைய ஆசை…!

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். வாழ்க்கையில் வரக்கூடிய இருளை நீக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துங்கள்.
1.மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவேன்
2.என் பேச்சால் மூச்சா’ல் உலகம் நன்மை பெறச் செய்வேன்
3.இந்த உடலை விட்டுச் சென்றால் விண்ணின் நிலைகளை நான் அடைவேன்.
4.எந்த மகரிஷி வழி காட்டினானோ அவன் வழியிலே செல்வேன்
5.மெய் வழியிலே நான் செல்வேன்… மெய் ஒளி பெறுவேன்…!

உயிர் விண்ணிலே ஒளியாகத் தோன்றியது… பூமிக்குள் விஜயம் செய்து உடல் பெற்றது… மனித உடல் பெற்ற நிலையில்
1.உணர்வுகள் அனைத்தையும் “உயிரைப் போன்ற ஒளியாக மாற்றி விண் செல்வேன்…” என்ற
2.இந்த உணர்வுகளை உங்களுக்குள் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

எது நிறைவேற வேண்டும் என்று நான் (ஞானகுரு) ஆசைப்பட்டேனோ அதற்காக வேண்டி குருநாதர் காட்டிய வழியில் உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்… உங்கள் உடலை ஆலயம் என்று மதிக்கின்றேன்… உங்களுக்குள் இருக்கக்கூடிய குணங்களைத் தெய்வங்களாக மதிக்கின்றேன்…!

நீங்களும் இதே போன்று உயிரைக் கடவுளாக வைத்து உடலை ஆலயமாக மதித்துப் பிறரிடமிருந்து தீய உணர்வுகள் வந்தாலும்… அவர்கள் தீமையாகப் பேசினாலும்… உங்கள் உடலுக்குள் சேராதபடி மாற்றிக் கொள்ளுங்கள்.

பிறருடைய உணர்வுகளை நாம் சேர்க்க வேண்டியது இல்லை. உயிரான ஈசனிடம் வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெருக்கிப் பிற உணர்வுகள் உள்ளே புகாது தடுத்துக் கொள்ளுங்கள்.

1.நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி “அவரின் துணை கொண்டு”
2.மெய் அறிவின் ஆற்றலைப் பெறும் தகுதியின் வித்தை செம்மையானபடி நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

துன்பப்படும் நேரங்களில் எல்லாம் “மகரிஷிகளின் அருளைப் பெறுவேன்…” என்று எண்ணுங்கள்… தீமைகள் புகாது தடுக்க இது உதவும்…!

மனித வாழ்க்கையில் எவ்வளவு கௌரவமாக வாழ்ந்தாலும் உடலை விட்டு உயிர் சென்று விட்டால்… அடுத்து இந்த உடலைத் தூக்கி எறியத்தான் செய்கின்றார்கள்.

எவ்வளவு கோடிப் பணம் சம்பாதித்தாலும் அவர்களுக்கும் இந்த நிலைதான்…! அவர் இறந்த பின் செல்வத்தை மற்றவர்கள் எப்படிப் பங்கிட்டு கொள்கிறார்கள் என்பதையும் பார்க்கலாம். அவர்கள் ஒருவருக்கொருவர் எப்படிச் சாடிக் கொள்கிறார்கள்…? எப்படி வெறுக்கும் நிலை வருகிறது…? என்பதையும் பார்க்கலாம்.

ஆகவே அது போன்ற நிலையில் சிக்காதபடி இந்த மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்களைப் பார்க்கும் போது அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வாக அவர்களுக்குள் வர வேண்டும் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஆகவே அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று உங்கள் மூதாதையரின் உயிரான்மாக்கள் விண் சென்று… விண்ணின் ஆற்றலைப் பெறக்கூடிய தகுதியை நீங்கள் பெற்று… இருளை நீக்கி ஒளியின் தன்மையாக “நீங்கள் விண் செல்லும் நிலைக்கே இதை உபதேசிப்பது…”

நீங்கள் வளர்ச்சியாவது போன்று உங்கள் குடும்பத்தில் குழந்தைகளையும் அவர்களுக்குள்ளும் இந்த உணர்வுகளை வளர்த்திடும் சக்தியாக பிஞ்சு உள்ளங்களிலும் வேரூன்றி வளரட்டும்.

சூரியனின் ஈர்ப்பில் கோள்கள் விளைவது போன்று
1.குழந்தைகள் உங்களுடன் இணைந்து செயல்பட்டுப் பிரகாசிக்கும் சொல் தொடராக அவர்கள் வெளிப்படுத்தி
2.வீட்டுக்குள் நீங்கள் தெய்வமாகவும் வீட்டிற்குள் சுடர் விளக்காகவும்
3.உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களுக்கு இருளை நீக்கிடும் நல்ல உணர்வாகப் படர வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன் (ஞானகுரு).

நிகழ்ந்து கொண்டிருக்கும் உலக மாற்றத்திற்குப் பின் மனித உரு என்ன ஆகும்…?

இன்றைய மனிதக் கரு ஜீவ சக்திகளும்… இப்பூமியில் பிறப்பெடுத்து உடலற்ற ஆத்ம உயிர்களும்…
1.இன்றுள்ள விஷ நிலையான எண்ண வளர்ச்சித் தொடர்பலையினால்
2.இன்றைய அறிவு… ஞான செயல்… திறமை… உருவ அழகு… இவற்றின் நிலை யாவையுமே
3.இனி நிகழப் போகும் பிரளய காலத்திற்குப் பிறகு மாறப் போகின்றன.

மனித உணர்வின் எண்ணமே விஞ்ஞான அணுக் கதிரியக்கச் செயற்கைப் பூகம்ப நிலையாலும்.. லேசர் இயக்கச் செயலுக்காக சூரிய அலையில் பூமிக்கு எவ்வலையை பூமி சமைத்து வடிகட்டிப் பூமி வளர்ந்து வாழுகின்றதோ சூரிய சக்தியிலிருந்து அதைப் பிரித்ததாலும் பல பல மாற்றங்கள் ஆகிவிட்டது.

(அந்த அமில வண்ணம் (ULTRA VIOLET) பிரகாசமான VIOLETt கலர் காட்சியாகத் தெரிகிறது)

இப்படி அந்த அணுக் கதிர்களை விஞ்ஞானச் செயலுக்காகச் சில நாடுகள் பூமி எதைத் தன் ஈர்ப்பிற்கு எடுக்காமல் பூமியின் சுழற்சியில் வடிகட்டி (FILTER செய்து) தன் வளர்ப்பை வளர்த்துக் கொண்டுள்ளதோ அதையே மனித விஞ்ஞானம் தனித்துப் பிரித்து விட்டது… அதனால் விஷம் கொண்ட காற்றாக இன்று மாறி விட்டது.

ஆத்ம ஜீவ வாழ்க்கை சக்தியின் உன்னத ஞான வாழ்க்கையை உணர்ந்து வாழாமல்… செயற்கை வாழ்க்கை விஞ்ஞானச் செயலுக்காக… மனிதனின் தன் நிலை மறந்த “போதை” உணர்வு வலு நிலைக்கு உணவு நிலையாக… விஞ்ஞான அணுக் கதிர்களை உபயோகிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டனர்.

நிகரில்லா நிலை பெற்ற.. நித்தியமான நிலையில் வளரும் மனித ஞான வளர்ச்சியையே குரோத வஞ்சனை வெறி தேச மத உணர்வு நிலையில் ஒருவரை ஒருவர் அழிக்க வந்துவிட்டனர்.

தன்னுடைய பேராசையாலும் குரோதத்தாலும் விஞ்ஞான வளர்ச்சியைக் கொண்டு இவ் அணு சக்தியை சூரியனிலிருந்து பிரித்தெடுத்து
1.அழிவுச் சக்திக்காகப் பயன்படுத்துகின்றோம்…! என்ற உண்மையை மறைத்து
2.திரை போட்டு ஆக்கச் சக்தியென்ற வழியைச் சொல்லி
3.மனித விஞ்ஞானம் இன்று வளர்ந்துள்ளது.

அதனால் இன்றைய மனித உணர்வின் எண்ணச் சிதறல்களும் தன்னைத் தான் உணராத நிலையும் ஏற்பட்டு விட்டது.

இத்தகைய தருணத்தில் தனக்குள் உள்ள இறை நிலையை உணர்ந்து… தான் உடல் பெற்று… உணர்வு பெற்று… சுவையும் குணமும் பெற்று… சரீர ஞானச் செயல் கொண்ட மனித வாழ்க்கை உன்னதச் செயலில் இருந்து உயர்வு நிலை கொள்ளும் வழித் தொடரை ஒவ்வொரு ஜீவ ஆத்மாவும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஊசி முனைக்கு மேல் உருவத்தில் ஆயிரம் மடங்கு சிறிதாயுள்ள உயிராத்மா உருவக சரீர ஜெட ஜீவச் செயல் பெற்றுச் செயல் புரியும் உயிராத்மாவை நல்லுணர்வின் ஞான ஜெபத்தால் வளர்த்திட வேண்டும்.

இச்சரீர அணு அனைத்தையுமே உயர் ஞான உணர்வு எண்ணம் கொண்டு செயல்பட்டு ஜோதி நிலையான ஒளி நிலைக்கு ஆத்ம உயிரின் வலுவைக் கூட்ட வேண்டும்.

தெய்வம் என்பது நம் உயிரே நமக்குத் தெய்வம் தான் என்று உணர வேண்டும். ஆகவே… நமக்குள் உள்ள தெய்வ உயிரைப் பிறிதொரு ஈர்ப்புப் பிடியில் தன் உணர்வற்ற இன்பம் என்ற உணரும் சுவை ஈர்ப்பில் சிக்க விடக் கூடாது.

போதை… காமம்… அதி விரைவு… வெறியான சுவை உணவின் இச்சை… போன்ற இவ் இன்ப உணர்வின் தொடர்பிலெல்லாம் எண்ணத்தின் வலுவைச் செலுத்தாமல்
1.தன்னுள் உள்ள இறை உயிர் ஆத்மாவை வலுவாக்கிக் கொள்ள
2.உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையுமே
3.உயர்வு ஞான நற் குண ஜெப நிலையினாலும்
4.சம நிலைகொண்ட சாந்த உணர்வு வலுத் தொடரினாலும் உயர்த்திட வேண்டும்.

ஏனென்றால்… இன்றுள்ள தன்மை பிரளய மாற்றத்திற்குப் பிறகு பூமியின் மாற்றுச் சக்தியால் பூமி வளர்த்த அணு யாவையும் எப்படி நெற் செடியில் அதற்குகந்த ஆகார நிலை கிடைக்கவில்லை என்றால் “பதர் அரிசி மணி” வளர்கின்றதோ அதைப் போன்று மனித ஆத்ம உயிர்கள் ஜீவ உயிர்கள் யாவையுமே பிறப்புப் பெற்றாலும் சரீரம் எண்ணம் செயல் ஒலி ஒளி ஆகிய எவையுமே இன்றுள்ள நிலை பெற முடியாது…!

தனக்குகந்த ஆகார சக்தி கிடைக்கா விட்டால் காய்கறி கனிகளில் கரடு நிலை தட்டிய காய் கனிகள் வளருவதைப் போன்று தான் வரும்.
1.சில பிராணிகள் ஜீவ சக்தி பெற்றிருந்தாலும் “தேவாங்கு” போன்று
2.அமர்ந்தது அமர்ந்த நிலையிலேயே பிறப்பெடுத்து வாழ்ந்து மடிகின்றதோ
3.அதைப் போன்ற பிறப்பு நிலைதான் பிரளய நிலைக்குப் பின் வரும்.

பிறப்பு நிலை இன்றைய நிலை போல் மீண்டும் வளராது…!

May 25, 2023

வெப்பத்தைக் கூட்டிக் காந்த சக்தியைக் கூட்டினால் “மகரிஷிகள் உணர்வினைக் கவரும் தகுதி பெறலாம்”

காற்றிலே மகரிஷிகளின் அருள் சக்திகள் இருக்கின்றது. அந்த அருள் ஞான வித்துக்களை நீங்கள் பெறுவதற்குத் தான் இந்த உபதேசத்தின் வாயிலாக இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

உதாரணமாக பலகாரம் சுட வேண்டும்… அச்சு முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அது கரண்டியை எடுத்துக் காய வைத்துக் கொள்கின்றார்கள் அதற்குப்பின் அதிலே மாவை ஒட்ட வைத்துச் சுடுகின்றார்கள்.

ஆனால் அந்த கரண்டியை காய வைக்காதபடி அதைச் செயல்படுத்த முடியுமா…?

அச்சு முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அந்த இரும்பு கரண்டியை முதலிலேயே அது சூடாக்கிக் கொள்ள வேண்டும்.
1.அது சூடான பிற்பாடு மாவிலே முக்கினால் சொய்ங்… என்று ஓட்டிக் கொள்கிறது
2.அதற்குப் பின் எண்ணைய்ச் சட்டியிலே அதைச் சுட்டால் முறுக்கு சீராக வரும்… கரண்டியிலிருந்து அச்சு முருக்கு அழகாக விழுகும்.

பக்குவம் தெரிந்தவர்கள் இப்படிச் செய்கிறார்கள்…!.

அச்சு முறுக்கு அவர்கள் சுடுகிறார்கள் என்று நாம் கரண்டியைக் “காய வைக்காதபடி… பச்சையாக வைத்தால்” என்ன ஆகும்…? மாவு ஒட்ட மாட்டேன் என்கிறது கரண்டி சரியில்லை என்று சொன்னால் சரியாக இருக்குமா…?
1.அந்தக் கரண்டி சூடாகி
2.மாவை இழுக்கக்கூடிய அந்தப் பவர் (சக்தி) வேண்டும்.

அதே போன்றுதான் நம்மிடம் எத்தனையோ குணங்கள் இருக்கின்றது சொன்ன முறைப்படி தான் நான் தியானம் செய்கின்றேன் என்று “காந்த சக்தியை எடுக்காதபடி…” தியானம் செய்தால் எப்படிச் சரியாக வரும்…?

1.காந்த சக்தியை எடுத்து நமக்குள் சூட்டை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்
2.ஓ…ம் ஈஸ்வரா…! என்று உயிரைப் பரிபூரணமாக
2.அந்த உணர்வோடு புருவ மத்தியில் எண்ண வேண்டும்… இது முக்கியம்…!

(“ஓம் ஈஸ்வரா… ஓம் ஈஸ்வரா…” என்று சும்மா வெறுமனே சொல்வதனால் பயன் இல்லை)

1.ஓ…ம் ஈஸ்வரா என்கிற போது நாம் எண்ணியது பிரணவமாகின்றது
2.உணர்வுடன் நினைவை அங்கே செலுத்தப்படும் பொழுது காந்த சக்தி ஓடுகின்றது… இழுக்கக்கூடிய திறனும் கூடுகின்றது.

ஏனென்றால் நாம் எண்ணியது பிரணவமாகின்றது. எந்தக் குணத்தை நாம் எண்ணுகின்றோமோ அது உயிரிலே பட்டு ஜீவன் பெறும் போது பிரணவம். அதற்குப் பெயர் தான் ஓ…!

ஓ…! என்று சப்தமாகி ம்… உடலுக்குள் சென்று அந்த உணர்வின் சத்து அடங்குகின்றது. ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அது நம் உடலாக மாறுகின்றது ஆகையினால் ஈஸ்வரா என்று எண்ணும் போது அந்தச் சக்தி கிடைக்கின்றது.

ஆனால் “அயோக்கியப் பயல்…!” என்று ஒருவனை எண்ணும் பொழுது அவனை நினைத்தாலே எரிச்சல் ஆகின்றது.

அதை மாற்றி அமைக்க… “ஈஸ்வரா…!” என் சொல் பேச்சு அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

யாராவது நம்மைக் கெடுதலாக நினைத்தார்கள் என்றால் என் பேச்சு அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று இந்த எண்ணத்தை நாம் எண்ணினாலே போதுமானது.
1.காந்தப் புலன்கள் ஈர்க்கின்றது
2.இந்த நல்ல உணர்வின் சக்தி நமக்குள் கூடுகின்றது.

யாருடனாவது சண்டை போட்ட பின்பு பாருங்கள் உங்கள் நெஞ்சுப் பகுதியில் படபட… படபட… என்று துடிப்பலைகள் வரும்.

அப்பொழுது அந்த நேரத்தில் யாராவது வந்து ஒரு நல்ல செய்தியைச் சொல்லட்டும். இந்த நேரத்திற்கு வந்து சொல்கின்றான் பார்…! என்று வெறுப்பு தான் வரும். நல்லதைச் சொன்னாலும் கூட சனியன் எப்படியோ போகுது போ…! என்ற எண்ணம் தான் வரும்.

வீட்டிலே பையன் நம்மிடம் சண்டை போட்டு விட்டான் என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் தொழிலில் வேலை செய்வோர் நம்மிடம் வந்து பத்தாயிரம் ரூபாய் லாபம் வருகிறது என்று சொன்னால் நாம் என்ன சொல்வோம்…?

சந்தோஷமான செய்தியாக அவர் சொன்னாலும் கூட என்னத்தைச் சம்பாரித்து வைத்து என்னத்தைப் பண்ணப் போகின்றோம்…? போய்யா நீ…! என்ற சொல் தான் வரும்.

பத்தாயிரம் ரூபாய் பணம் லாபம் வருகிறது என்று அந்த நேரத்தில் சந்தோஷப்பட முடியுமா…? முடியாது.

ஏனென்றால் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட பையன் மீது வெறுப்பாக இருக்கின்றோம் காரணம் நாம் சொன்னபடி அவன் கேட்கவில்லை… நம்மை எதிர்க்கின்றான்… முறைக்கின்றான்…! என்றால் உடனே வெறுப்பாகி விடுகிறது.

அப்போது இங்கே வியாபாரத்தில்
1.லாபம் அதிகமாக வருகிறது சரக்கு எல்லாம் நன்றாக விற்பனையாகிறது என்று சொன்னாலும் கூட
2.இந்த அளவுக்குப் பணம் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுச் சொன்னாலும் கூட
3.எனக்கு இந்த அளவுக்கு நீங்கள் கமிஷன் கொடுத்தால் கூட போதும் என்று அவர் நம்மிடம் விவரங்களை எல்லாம் சொன்னாலும் கூட
4.எனக்கு எல்லாம் தெரியும்… நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்யா…! என்று
5.பணம் அதிகமாகக் கிடைக்கிறது என்று சந்தோஷப்பட முடியாதபடி உதறித் தள்ளும் உணர்வு தான் வரும்.

ஏனென்றால் பையன் மீது இருக்கும் வெறுப்பு நம்மை இவ்வாறு இயக்கி விடுகின்றது. பணம் சம்பாதிக்கும் எண்ணத்தையும் அடுத்து மாற்றுகிறது.

இது எல்லாம் நடைமுறையில் ஒவ்வொருவரும் செய்வதைத் தான் சொல்கின்றேன்.. நான் புதிதாக ஒன்றும் சொல்ல வரவில்லை. இதைத் தான் அனுபவம் என்று சொல்வது.

உங்களுக்கும் இப்போது தெரிகின்றது இதை மற்றவர்களுக்கும் சொல்லத் தெரிய வேண்டும்.

இதிலிருக்கும் உண்மைகள் இன்னென்ன மாதிரி இருக்கின்றது என்று பிறருக்குச் சொல்லிச் சொல்லி… ஞானிகள் காட்டிய வழியில் திரும்பத் திரும்ப நாம் செயல்படுத்தினோம் என்றால் “அந்த ஞானம் நமக்குள் தன்னிச்சையாக வரும்…”

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்துக் கொண்டே வந்தால்
1.அந்த ஞானிகள் உணர்வுகள் உயிரிலே பட்டு
2.அந்த உணர்ச்சியில் தூண்டப்பட்டு அந்த ஞானத்தின் தொடராக அது வரும்
3.மற்றவர்களுக்கு தெளிவாகவும் அமைதியாகவும் எடுத்துச் சொல்லக்கூடிய நிலையாக வரும்.

தொடர்ந்து இதைச் செய்தால் உயர்ந்த சத்தாகவும் உங்களுக்குக் கிடைக்கின்றது உங்கள் சொல் அனைவரையும் காக்கக் கூடிய சக்தியாகவும் வரும்…!

எங்கள் சாமி (ஞானகுரு) பிரமாதமாகப் பேசுகிறார் என்று சொல்வதை விடுத்து விட்டு சாந்தமான நிலைகள் கொண்டு அருள் உணர்வுகளை எடுத்து வளர்த்து… எல்லோரையும் பெறச் செய்யும் அந்தப் பக்குவத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் பகுத்தறிந்து வளர்ச்சியாக்கும் விஞ்ஞானம் மனிதனுக்கு அடுத்த வளர்ச்சி நிலைக்கு ஏன் செல்லவில்லை…?

பக்தி மார்க்கத்தில்… ஜெப நிலையில்… மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே எத்தனையோ காலங்களாகத் தெய்வ சக்தி கிட்டும் என்ற எண்ணத் தொடரில் சுழற்சி வட்டத் தொடரில் ஜெப மந்திரங்களை ஓதி யோக நிலை பக்தி நிலை என்ற நிலையில் எல்லாம் கால நிலையைக் கடத்தி ஆழ் நிலையில் இச்சரீரத்தையே பயிற்சி செயலில் ஆரோக்கிய நிலையில் செயலாக்கி இருந்தாலும் காணப் போகும் பலன் என்ன…?

1.எண்ண நிலையைக் கொண்டு அறியும் ஞான வழியின்
2.காந்த மின் நுண் அலை கூடிய வலுவாகிய உடல் சமைப்பின் ஆத்ம உயிரின் வலு நிலை பெற்றால் தான்
3.பக்தி மார்க்கத்திலும் யோக மார்க்கத்திலும் மற்ற எந்த விஞ்ஞான மார்க்கமானாலும்
4.இத்தொடர் நிலையை மனித ஆத்மா பெற்றதென்றால்தான்
5.மனித சக்தியின் தெய்வ சக்தியை இவ்வுடல் சமைக்கும் உணர்வின் எண்ணத்தை - அறியும் ஞான ஆற்றலை
6.அறிந்தோரின் ரிஷி சமைப்பின் அலைத் தொடரை உணர்வின் எண்ணத்தில் அறிந்து உயர்வு நிலையை நாம் பெற முடியும்.

இப்பூமி சமைக்கும் வழித் தொடரில் சுழலும் எண்ண நிலையை இப்பூமியையே இயக்கவல்ல உயர் வழியை அறிய இவ்வண்ணத்தைக் கொண்டு அறியும் நிலை கொண்டு செயல்படுத்த வேண்டும்.

அதற்காக வேண்டி இச்சரீரக் கோளத்தின் அணுக்கோடிகளுக்கெல்லாம் ரிஷித் தொடர்பை ஏற்படுத்தி உயர் ஞானம் அறிந்த அந்தச் சமைப்பு நிலை கொண்டு
1.இச்சரீரத்தைக் கொண்டே உயர்வு நிலை பெறவல்ல செயலுக்கு
2.நம் உணர்வின் எண்ணம் அறியும் தன்மை கொண்டு
3.நம் தியான நிலை செயல்பட வேண்டும்.

பொருள் சேர்க்கையும்… சரீர பிம்பத்தைக் காக்கும் வழி முறையும்… இத்தொடரில் வாழ்க்கை நிலையில் மோதப்படும் வழி முறைக்கு மட்டும்… எண்ணத்தின் உணர்வைச் செலுத்திச் சுழல் வட்டத்தில் சுழலும் வாழ்க்கையில்…
1.பிறப்பும் இறப்பும் இயற்கை நிலை என்று எண்ணத்தைச் செலுத்தி விடாமல்
2.எண்ணத்தின் ஞானத்தைக் கொண்டுதான் இயற்கை நிலையே உருப்பெறுகின்றது…! என்பதை மனிதன் உணரல் வேண்டும்.

ஆதிசக்தியின் அமில சக்தி உருவாகிப் பல கோடி மாற்றங்களில் சுழலுகின்ற சுழல் வட்டத்தில்… மனித எண்ணத்தைக் கொண்டு அறியும் வழித் தொடரில் உருவாகும் உயர்வு நிலை சமைப்பு தன்மை மாறவே… ஒன்றில் இருந்து ஒன்று மாற “இவ்வெண்ண நிலையின் தொடர் நிலை உருவாக்கித் தந்த உரு நிலை தான் இப்பூமியின் நிலை…!”

பிறப்பு இறப்பு இயற்கை என்றால்…!
1.இயற்கையாக வாழ்க்கை நிலையை மனிதன் ஏன் ஒன்றி விடாமல்
2.ஒவ்வொரு செயலையும் பக்குவம் கொண்டு பகுத்தறிவினால் செயல்படுத்துகின்றான்…?

விஞ்ஞானம்… மருத்துவம்… விவசாயம்… போன்ற எல்லா துறைகளையும் மனிதனின் எண்ணம் பகுத்தறியும் நிலைக்குச் செல்லும் பொழுது
1.மனித சரீரத்திற்கு அடுத்த உயர்வு நிலைக்கு
2.தன் பகுத்தறிவின் ஞானத்தை ஏன் செலுத்தவில்லை…?

May 24, 2023

நதி மூலமும் அகஸ்தியன் தான்… ரிஷி மூலமும் அந்த அகஸ்தியன் தான்...!

அகஸ்திய மாமகரிஷி அவர் வாழ்ந்த காலத்தில் இந்தப் பூமியில் உள்ள மலைப்பகுதிகளில் எல்லாம் சுழன்று வந்து பல பல ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்றார்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டிய அருள் வழிப்படி
1.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் கண்டறிந்த விண்ணின் ஆற்றல்மிக்க உணர்வின் தன்மையை
2.இங்கே பாபநாசம் மலைப் பகுதியில் நாம் அமர்ந்து மீண்டும் அந்த உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது
3.இங்கே மீண்டும் அது ஜீவன் பெறுகின்றது.

குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் அதை நினைவுபடுத்தும் போது அந்த உணர்ச்சியின் வேகம் அதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சியை உங்களுக்குள் தூண்டும்படி செய்கிறோம்.

இங்கே படர்ந்துள்ள பதிந்துள்ள அந்த அகஸ்தியன் உணர்வுகளுடன்… குரு உணர்வுகளைக் கலந்து அதனுடன் இணைக்கச் செய்து தான் யாம் (ஞானகுரு) உபதேசிக்கின்றோம்.

எம்முடைய உபதேசத்தைக் கூர்ந்து கவனிக்கப்படும் போது
1.உங்கள் எண்ணங்கள் அந்த மகரிஷியின் உணர்வுகளை ஈர்க்கும் தன்மையாக
2.அதை நுகரும் நிலையும் கவரும் நிலையும் வருகின்றது.

அகஸ்திய மாமகரிஷி பெற்ற அந்த அருள் சக்திகளை ஊழ்வினையாக உங்களுக்குள் பதியச் செய்யும் நிலைக்குத்தான் இங்கே பாபநாசத்திற்கு அழைத்து வந்தது.

காரணம்…
1.அன்று அகஸ்தியன் அவன் தனக்குள் விளைய வைத்த சக்தி வாய்ந்த ஆற்றல்கள்
2.இந்த இடத்தில் (பாபநாசம் மலை) இருக்கும் பாறைகளுக்குள் காந்தப் புலனால் கவரப்பட்டுப் பதிவாகியுள்ளது.

அந்த மகா ஞானி பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அவன் உடலில் தாவர இனங்களின் சத்துக்களை நுகர்ந்தறிந்தான். அறிந்த நிலைகள் கொண்டு மற்ற தாவர இனங்களை அதனுடன் இணை சேர்த்து “மகா சக்தி வாய்ந்த தாவர இனங்களாக…” (புதிதாக) உருவாக்கினான்.

அதாவது இன்று விஞ்ஞானிகள் மற்ற மற்ற தாவர இன செல்களை இணைத்து எப்படிப் புதிய தாவர இனங்களை உருவாக்குகின்றார்களோ அது போன்ற சக்தி வாய்ந்த தாவர இனங்களின் சத்துக்களை இணைத்து “மிக மிக சக்தி வாய்ந்த தாவர இனங்களாக…” அகஸ்தியன் உருவாக்கினான்.

1.அந்தத் தாவர இனச் சத்துக்களை மனிதர்கள் நுகர்ந்தால்
2.அவர்கள் உடலில் அறியாது சேர்த்ததீய வினைகளை நீக்கிடும் ஆற்றல் மிக்க சக்தியாக ஆது பெருகுகின்றது.
3.அதற்கே அகஸ்தியன் அதை எல்லாம் உருவாக்கினான்.

பிற்காலத்தில் வந்தவர்கள் அனைவரும் அத்தகைய தாவரங்களைப் பயன்படுத்தி வேருடன் அறுத்து அழித்து விட்டார்கள். அவைகள் அதற்குப்பின் வளர்ச்சி இல்லாது அதை வளர்த்திடவும் அதைக் காத்திடவும் நிலையில்லாது சென்று விட்டது. அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட பல தாவர இனங்கள் காலத்தால் இப்படி அழிந்துவிட்டது.

இந்த மலைப்பாங்குகளில் அன்று அகஸ்தியன் தன் உணர்வின் ஆற்றலால்… அவன் எண்ணத்தால் சுவாசித்து… பல பல தாவர இனங்களின் சத்துக்களை அவன் இணை சேர்த்துச் சக்தி வாய்ந்ததாக மாற்றி அமைத்தான்.

இந்தப் பூமியில் அகஸ்தியன் சென்ற அனைத்து மலைப்பகுதிகளிலும்… இப்படிப் பதியச் செய்தான்.

வானில் மேகங்கள் கூடி வந்தாலும் மலைப் பாங்குகளில் வரும் பொழுது
1.அங்கே அகஸ்தியனின் உணர்வலைகள் பதிந்து இருப்பதனால்
2.தாவரங்கள் அந்த மேகங்களைக் கவர்ந்து அழைத்து வரப்படும் போது
3.பாறைகளுக்குள் அகஸ்தியனின் உணர்வுகள் பட்டதைக் கவர்ந்து “ஜீவ நீராக… ஜீவ நதியாக உருவாகின்றது…”

அப்படி உருவாகும் ஜீவித நீரால் அப்பகுதியில் மற்ற தாவர இனங்கள் புதிதாக ஜீவன் பெறும் நிலையும் வந்தது. அதே சமயத்தில் அகஸ்தியன் எந்தெந்தத் தாவர இனங்களை உருப்பெறச் செய்தானோ அதற்கு நீரே இல்லை என்றாலும் மேகங்களைக் கூடச் செய்து ஜீவித நீர் கிடைக்கும் அளவிற்கு ஆற்றல் கொண்டதாக அவன் உருவாக்கினான்.

1.வெறும் கற்பாறைகளாக இருந்தாலும் அந்தப் பாறைகள் மேகங்களைக் கவர்ந்து நீராக வடிக்கச் செய்கின்றது
2.தான் உருவாக்கிய அந்த உயர்ந்த சக்தி வாய்ந்த தாவர இனங்களை வளர்த்திடுவதற்காக
3.அவ்வாறு செய்தான் அன்றைய முதல் மெய் ஞானியான அகஸ்தியன்…!

புலனை அடக்கும் ஆழ்நிலை தியானத்தால் அமைதி கிடைக்கும்… “உயர்வு கிடைக்காது…!”

உதாரணமாக நத்தையை ஒத்த பல பிராணிகள் உருவ நிலைக்குகந்த உணர்வு நிலையிலேயே அதன் உருவத்திலேயே “பாதுகாப்பபு நிலை கொண்டு” (ஓடு) அறிவின் எண்ண நிலை பெறுகின்றது.

எப்படிப் பாலை உஷ்ணப்படுத்திய பின் அதன் ஆவி நிலை வெளிப்பட்டு ஏடு (ஆடை) நிலை அடைகின்றதோ அந்நிலையின் தொடர் போன்று
1.தாய் எடுக்கும் சுவாசத்தில்
2.தாயின் உடல் நிலையின் உதிரத் தொடர்புடன் உருக்கொள்ளும் கர்ப்ப சிசு
3.உதிரத்தின் தொடர்பு உஷ்ண நிலை பெற்று
4.அதனுடைய அமில நிலைக்கொப்ப உராய்வு நிலை கொண்டு உருவ நிலை (மனித உடல்) பெறுகிறது.

அதனின் வளர்ச்சி நிலை முற்றிய தன்மையில் உணரும் நிலையும் எண்ண நிலையும் பெறுகின்றது. “எண்ண நிலை” என்பது அதனுடைய ஆவி (ஆத்ம) நிலையிலேயே அதற்குத்தக்க எண்ண நிலையில் தான் தாய் உடலில் புகுந்து பிறப்பிற்கே வருகின்றது.

பிறப்புத் தொடரில்… ஜீவ சக்தி கொண்ட சரீர நிலை முற்றிய நிலையின் பிறப்பு நிலை கொண்ட பிறகு தான் சரீர மனித நிலை செயல் நிலை யாவும் “பகுத்தறிந்து…” செயல் கொள்கின்றன.

1.இதற்குப் பின் வளரும் நிலைக்கும்…
2.வழி கொள்ளும் வளர்ச்சி நிலைக்கு வழி காட்டும் நிலைக்காகவும் தான்
3.இயற்கை நிலையையும் இயற்கைத் தொடர்பு நிலையையும்
4.அதில் வளர்ச்சி கொண்டு மாற்றப்படும் தொடர் நிலையையும் உணர்த்தி வந்தேன் (ஈஸ்வரபட்டர்).

ஆனால் தான் வளர்ந்த தொடரிலேயே பகுத்தறியும் அறிவு நிலை கொண்ட மனித ஆத்மாவும் “இயற்கை” என்ற பிடிப்பிலேயே சிக்குண்டு வாழ்ந்து விட்டால் “பிறப்பின் பலன்” இல்லாது போகின்றது.

ஏனென்றால் எண்ணத்தின் தொடர்பைக் கொண்டு உருவாக்கும் ஆதி சக்தியின் அகில சக்தியுடன் தெய்வ சக்தி கொண்டு படைப்பு நிலையைப் படைக்கவல்ல சக்தி கொண்ட பகுத்தறியும் எண்ணத்தால் உயரவல்ல நிலையை அடைய வேண்டும்.

இயற்கை என்ற சுழற்சியிலேயே சுழன்று… தன் சக்தியை உணராமல்… முக்தி நிலை பெறும் மார்க்க நிலைக்குச் சிலரின் உபதேச நிலைகளைக் கேட்டு… ஐம்புலனை அடக்கி ஆழ்நிலையில் உயர்வு நிலை பெறலாம்…! என்ற வழி காட்டும் தொடரில் சென்றால்… சரீர வாழ்க்கை நிலையில் மட்டும் தான் ஆரோக்கிய நிலையும் அமைதியும் கிட்டும்.

உயர்வு நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால்
1.உணர்வின் எண்ணம் பகுத்தறியும் எண்ணத்தால்
2.அறியும் ஞான வழியில் தான் உயர்வு நிலை கொள்ள முடியும்.

May 23, 2023

ரோட்டில் செல்லும் போதெல்லாம் செய்ய வேண்டிய ஆத்ம சுத்தி

இந்த உபதேசத்தின் வாயிலாக அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம். நீங்கள் எண்ணும் போதெல்லாம் அதைப் பெறக்கூடிய தகுதியாக இது அமைகின்றது.

நீங்கள் எங்கே வெளியே சென்றாலும்
1.பஸ்ஸிலே சென்றாலும்… மற்ற வாகனத்தில் சென்றாலும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொண்டே செல்லுங்கள்
3.ஆத்ம சுத்தி செய்துவிட்டு நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்…
4.வாகனத்தில் செல்வோர்கள் எல்லாம் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்லுங்கள்.

ஏனென்றால் ரோட்டிலே வாகனத்தில் செல்லும் நிலையில் எத்தனையோ விபத்துக்களும் சேதாரங்களும் ஆகிறது. அதையெல்லாம் மறந்துவிட்டு நாம் எந்த வாகனத்தில் சென்றாலும் ஆத்ம சுத்தி செய்து கொண்டே செல்ல வேண்டும்.

பஸ்ஸிலே பயணம் செய்வோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

நாம் வாகனத்தில் போகும் பொழுது…
1.ரோட்டிலே “பாதசாரிகள்” நடந்து செல்பவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர் வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
3.உங்கள் எண்ணம் உங்களையும் காக்கின்றது… பஸ்ஸிலே பயணம் செல்வோரையும் காக்கின்றது… ரோட்டில் செல்வோரையும் காக்கின்றது.

அதே போன்று பத்திரிக்கையையோ டிவியையோ பார்த்தாலும் அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

அதற்குப் பின் மகரிஷிகளின் அருள் சக்தி உலக மக்களுக்குக் கிடைக்க வேண்டும். உலகில் அறியாது சேரும் இருள்கள் நீங்க வேண்டும். உலக மக்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்… மன பேதமின்றி வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும். மகரிஷியின் அருள் உணர்வுடன் ஒன்றி வாழ்ந்திடும் அந்த சக்தி உலக மக்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அப்பொழுது நீங்கள் அதுவாக ஆகின்றீர்கள்…!

இது போன்ற உணர்வுகளை நாம் பெருக்கப் பெருக்க உலகம் எங்கிலும் இந்த அருள் உணர்வுகள் பெருகும். காற்று மண்டலத்திலும் மகரிஷிகளின் அருள் சக்தி அதிகமாகப் பெருகும்.

1.நமது நினைவுகள் அனைத்தும் அந்த மகரிஷியின் அருள் வட்டத்தில் இணையும்.
2.அந்த உடலை விட்டு அகன்றால் வாழ்க்கையில் வரும் எந்தத் துயரங்களும் நம்மைப் பற்றி விடாது அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றோம்.
3.ஆகவே அந்த மகரிஷிகளுடனே ஒன்றி வாழுங்கள்.

ஆகவே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகப் பெருக்கப் பெருக இந்தப் பூமியின் பிடிப்பு குறைந்து மிதப்பது போன்று அந்த உணர்வு கிடைத்திருக்கும்… பூமியின் ஈர்ப்பு குறைந்திருக்கும்.

உங்கள் நினைவு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் சென்றால் எப்பொழுதுமே அதைப் பற்றுடன் பற்றுகின்றீர்கள். யாருடைய உணர்வும் இழுத்து விடாதபடி தடுத்துக் கொள்ள முடியும்
1.இதை ஒரு பழக்கமாக நாம் வைத்துக் கொள்ள வேண்டும்…
2.“குரு அருள் உங்களுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும்…”

மாறி மாறி ஏற்படும் “வெப்பத்தினாலும்… குளிர்ச்சியினாலும் தான்…” சிருஷ்டியே நடக்கின்றது

அண்ட கோளத்தில் அமில சுழற்சியில் சுழன்று கொண்டே மிதந்து கொண்டுள்ள அமில நிலைகள் அவை அவை சுழற்சி ஓட்டத்தில் சந்திக்கின்ற சீதோஷ்ண நிலையின் தொடர்பு நிலைக்கொப்ப மாற்றத் தன்மைகளை ஏற்படுத்தி சீதோஷ்ண நிலை மோதலின் தொடரைக் கொண்டு அதனுடைய குணத் தன்மையில் வலுத்தன்மை பெறுகின்றது.

உதாரணமாக நாம் பால்… காபி… கஞ்சி… போன்ற வஸ்துக்களைச் சமைத்து வைத்துள்ள நிலையில் அதைக் காய்ச்சி வைத்துள்ள பாத்திரத்தில் அதைக் காய்ச்சி அப்படியே வைத்தவுடன்
1.அதிலுள்ள ஆவி நிலை வெளிப்பட்டு மேல் நிலையில் “ஆடையாக” திடம் கொண்டு படிந்து விடுகின்றது.
2.உஷ்ணம் உள்ள வரை பாலில் ஆடை கட்டுவதில்லை
3.குளிர்ந்த நிலையிலும் அதே தன்மையில் அது உள்ளது.

ஆனால் உஷ்ணப்படுத்தி ஆறிய நிலையில் அதன் குறிப்பிட்ட கால நிலைக்குப் பிறகு அதன் நிலையில் புளிப்பு நிலை கொண்டு மாற்று நிலை ஏற்பட்டு அதை எடுக்காமல் அப்ப்டியே வைத்து விட்டால் என்ன நடக்கின்றது…?

அதில் இரண்டு மூன்று நாட்களில் பூமியின் உஷ்ண நிலைக்கொப்ப புழுக்கள் வளர்கின்றன. அந்தப் புழுக்கள் வளரும் நிலையில் அதையும் அப்படியே விட்டு விட்டால் மேலும் என்ன நடக்கின்றது…?

அதுவே பாலில் அதிகமாக வளர்ந்த புழு ஒன்றை ஒன்று உட்கொண்டு… அதற்குகந்த ஆகாரம் வேண்டி நிலையில் ஒன்றுக்கொன்று உட்கொண்ட நிலையில் பெரும் புழுக்களாகின்றது.

1.பின் ஆகாரம் கிடைக்காத நிலையில் அதனுடைய ஜீவ நிலை பிரிந்து
2.நீர் சக்தி வெளியாகி படிம நிலைக்கு அந்தப் புழு உட்படுகின்றது.
3.இதற்குப் பிறகும் அத்தொடரில் பல நிலைகள் மாறு கொள்கின்றன.

இத்தொடரைப் போன்றே அண்டத்தின் அமிலத் தொடரும் உஷ்ண நிலைக்கொப்பவும் குளிர் நிலைக்கொப்பவும் அமில நிலைச் சேர்க்கைக்குச் சமைப்பு நிலையில் “பல பல உருக்கள்…” உருப்பெறுகின்றன.

சூரியன் சமைத்த ஆறு வகைக் குணத்தின் வண்ண நிலை பூமி சமைக்கும் ஏழாம் வண்ணமாகி மோதலுடன் தொடர்பெடுத்து பூமியின் ஈர்ப்பு நிலைக்கு பூமித் தொடர்பு கொண்ட பூமி சுழற்சியுடன் சுழலுகின்ற அமிலச் சமைப்பில் தொடர் வளர்ச்சியின் தன்மையைத்தான் “இயற்கை” என்றுணர்த்துகிறோம்.

1.இதிலே மாற்ற நிலைகள் பலவாக உருப்பெற்று மாறி மாறித் தொடர்கின்ற நிலையினில்
2.ஜீவ சக்தி கொண்டு உயிரணுத் தன்மை உருவான நிலையில்
3.உணர்வுத் தன்மை வளர்கின்ற இயற்கைத் தாவர நிலை மாறி
4.சரீர நிலை உணர்வு கொள்ளும் பொழுது அறிவு நிலை கொண்ட எண்ண நிலையும் உருவாகிறது.

May 22, 2023

தனித்து யாரும் விண் செல்ல முடியாது…!

இன்று தன் கணவன் என்று இருக்கும்… ஆனால் கணவனுக்கோ தொழில் நிமித்தம் வேலை பார்க்கும் இடங்களில் அவருக்குப் பல தொல்லைகளைக் கொடுத்திருப்பார்கள்.

1.“உன்னை விட்டேனா பார்…?” என்ற நிலைகளில் கோபமாகச் சண்டை இட்டிருந்தால்
2.கடைசியில் உடலை விட்டுச் சென்ற பின் அந்த உடலுக்குள் கணவனுடைய ஆன்மா சென்று விடும்…
3.அவருடைய எண்ணமே எமனாக மாறிவிடும்.

அந்த எண்ணத்தின் வழி மற்றவர் உடலுக்குள் கணவன் சென்று விட்டால் அடுத்து… “தன் கணவன்…” என்று சொல்வதற்கு என்ன இருக்கின்றது…?

அதே போன்று தொழிலில் நஷ்டம் என்று வரும் பொழுது ஒருவர் கணவனுக்கு உதவி செய்கின்றார். இருந்தாலும் வாழ்க்கையின் கடைசியில் உடல் பலவீனமாகும் பொழுது… நன்றிக்காக வேண்டித் தனக்கு உதவி செய்தவரின் எண்ணம் தான் வரும்.

அந்த எண்ணம் வந்து உடலை விட்டுச் சென்று விட்டால் அவர் உடலுக்குள் தான் கணவனின் ஆன்மா செல்லும்.
1.இங்கே இவருக்குக் கணவன்… பிள்ளைகளுக்கோ தந்தை…
2.உடலை விட்டுச் சென்று இன்னொரு உடலுக்குள் போனால் பேய்…!
3.அந்த உடலில் இருந்தும் வெளியே சென்ற பின் மாடோ ஆடோ தான்…!
4.ஆட்டிலோ மாட்டிலோ அங்கே உரு பெற்ற பின் அதன் இனமாக வளர்ந்தது இதற்குத் தாயாக மாறுகின்றது.

அப்போது இங்கே இந்த மனைவிக்குக் கணவன் எங்கே…? மற்றொன்றுக்குத் தான் கணவனாக மாறுகின்றது.

ஆகவே தான் “எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…!” என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டது.

ஆனால்… சாங்கியப்படி என்ன செய்கிறோம்…? கணவன் இறந்து விட்டால் தாலியை நீக்கிவிடுகின்றோம். ஏனென்றால் கணவனை இழந்தவர் என்று மற்றவர்களுக்குத் தெரிவதற்காக அவ்வாறு செய்து வேதனையைத் தான் உருவாக்குகின்றோம்.

வேதனையை உருவாக்கினால்… கணவனை மனைவி எங்கே மீட்டுவது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

பல இலட்சம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள். அவர்களைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

இன்று பெரும் பகுதியானோர்…
1.தனித்த ஆளாக நான் கடும் தவம் இருந்து விண்ணுலகம் சென்று விடுவேன்…
2.பிறவா நிலை அடைந்து விடுவேன்…! என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
3.முடியாது…! முனி(வனாக)யாகத் தான் மாற முடிமே தவிர உணர்வின் தன்மை “ஒளியாக மாற்றும் திறன் இருக்காது…”

கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி “அந்த உணர்வுகள் உராய்ந்து குழந்தைகள் எப்படி ஜெனிக்கின்றதோ” அதே போன்று இந்த உடலை விட்டு அகன்ற பின் கணவன் மனைவி எவர் முன் பின் சென்றாலும் அங்கே இரு மனமும் ஒன்றாகி ஐக்கியமாகி… ஒரு உணர்வாகும்.
1.என்றுமே ஒளியின் கருவின் அணுவினை உருவாக்கிக் கொண்டே
2.வளர்ந்து கொண்டே செல்லும்…! (துருவ நட்சத்திரம் – சப்தரிஷி மண்டலம்)

தாவர இனங்களிலும் ஆண்பால் பெண்பால் உண்டு. ஆண்பால் வீசும் உணர்வினைப் பெண்பால் கொண்ட செடி கொடிகள் கலந்தால் தான் அதிலே மற்ற வித்துக்கள் உருவாகும். இல்லையென்றால் வித்துக்களைக் காண முடியாது.

அன்று வாழ்ந்த அகஸ்தியனும் திருமணம் செய்துதான் மனைவியை அரவணைத்துத் தன்னுடன் அழைத்துச் சென்றார். அகஸ்தியன் என்று (சொல்) தனித்துச் சொன்னாலும்
1.அவன் உருவாக்கிய உணர்வின் தன்மை கொண்டு தன் மனைவியைத் தன்னுடன் அழைத்தே சென்றான்.
2.அதைத்தான் கவர்ந்து கொண்ட உணர்வுகள் “வசிஷ்டரும் அருந்ததியும் போன்று…” என்று சொல்வது

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் இரு மனமும் ஒன்றாக இயக்கி… குறைகள் இருப்பினும் அதை நீக்கி… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்துக் குறைகளைக் களைந்து… அந்த ஞானிகள் உணர்வு கொண்டு இந்த வாழ்க்கையிலே ஒன்று சேர்த்து வாழ வேண்டும்

இதற்குப் பெயர் நளாயினி…!ஆகவே என்றுமே இணை பிரியாது ஒருவருக்கொருவர் மதித்து நடக்க வேண்டும் என்பது.

1.குடும்பத்திலே கணவன் மனைவிக்குள் குறைகள் வரும்
2.உடலில் அழகான துணிகளை நாம் அணிந்திருந்தாலும் அதிலே அழுக்குப் படியத்தான் செய்யும்
3.அதை மீண்டும் மீண்டும் நாம் தூய்மைப்படுத்திக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

இதைப் போன்று தான் வாழ்க்கையில் கணவனுக்கும் மனைவிக்கும் சில சந்தர்ப்பம் வெறுப்பின் நிலைகள் வரும். அதைக் களையும் தன்மையாக “மகரிஷியின் அருள் சக்தி கொண்டு இணைத்து” அதை மாற்றுதல் வேண்டும்.

கணவன் மனைவியின் உணர்வுகளை மதித்து… அதே போல் கணவன் சொல்வதை மனைவி மதித்து… இரு உணர்வு ஒன்றாகும் போது தான்
1.மகிழ்ச்சி என்ற உணர்வும்.. இருளைப் போக்கும் அருள் சக்தியும் கிடைக்கின்றது.
2.காவியத்திலே காட்டப்பட்ட இந்த உண்மைகளை நமக்கு யாரும் தெளிவாகச் சொல்லவே இல்லை.

“மனைவி மட்டும் தான்” என்று ஒருதலைப் பட்சமாக நளாயினி முடவனான கணவனைச் சுமந்து சென்றாள்…! என்று திரிபு செய்துவிட்டனர்.

கணவன் மனைவி இருவருக்குள்ளும் எந்தக் குறைகள் இருப்பினும் ஒருவரை ஒருவர் மதித்து அந்தக் குறைகளைக் களைந்து மகிழ்ச்சியை உருவாக்க வேண்டும்…!

அப்படி உருவாக்க வேண்டும் என்றால் கணவன் மனைவி இருவருமே சமப்படுத்தி இணைத்து… விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும்.

இந்த வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் ஒன்று சேர்ந்து “வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்தவர் எவரோ… அவர்கள் தான் அங்கே இருக்கின்றார்கள்…”

அவர்களை எண்ணிக் குறைகளைக் களைய அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தனக்குள் இணைத்து இணைத்து இருள்களை மாய்த்து “ஒன்று சேர்ந்து விண் செல்ல வேண்டும்…!” என்பதுதான் தத்துவம்.

மனதில் ஏற்படும் “இரு நிலைப் போராட்டம்”

பிறப்பெடுத்த நாளிலிருந்து நாம் இறக்கும் காலம் வரை… “நினைவின் ஓட்ட நிலை” சுழன்று கொண்டே தான் உள்ளது.

எண்ணத்தின் சரீர உணர்வின் நினைவு நிலை இச்சரீர வாழ்க்கையில் மட்டும் தானா…? ஆவி நிலையில் கர்ப்பக் காலத்தில் இதன் ஓட்ட நிலை யாது…? என்ற நிலையை உணரல் வேண்டும்.

ஆத்ம பிம்பத்தில் இந்நினைவலைகளின் சுழற்சி ஓட்ட எண்ண உணர்வு ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஓடக்கூடிய நிலைக்கொப்ப எண்ணத்தின் நினைவின் ஆணைக்கொப்ப சரீரச் செயல் சொல்லாகவும் செயலாகவும் நடைபெறுகின்றது.

எண்ணத்தின் ஓட்ட இயக்க நிலைக்கொப்பச் சரீரச் செயல் நடக்கவும்… உண்ணவும்… எழுதவும்… சரீரத்தால் இயங்கத்தக்க அவய நிலைகள் எண்ணத்தின் உணர்வு உந்தியவுடன்… தன் தன் செயலைப் புரிகின்றது.

எண்ணத்தின் நினைவோட்டத்தை
1.செய்த நிலை… செய்யப் போகும் நிலை… செய்யும் நிலை என்ற தொடரில் எண்ணத்தைச் செலுத்தும் நிலையிலும்
2.சரீர அங்கத்தின் செயல் நிலை செயல் கொள்ளா எண்ண நிலையிலும்
3.எதில் எதிலெல்லாம் எண்ணத்தின் உணர்வுகள் உருள்கின்றதோ அத்தொடரில் எல்லாம்
4.ஜீவ சக்தியுடன் கூடிய உஷ்ண அலை கொண்ட இச்சரீர ஓட்ட இயக்கத் தன்மையிலேயே
5.சுவாசத்தின் மோதலில் - நடக்கப் போகும் நினைவின் எண்ண உணர்வு செலுத்தக் கூடிய தருணத்திலும்
6.சுவாச அலையின் துடிப்பு நிலை அணு வளர்ப்பைக் கொண்டு
7.நினைவலையின் எண்ண உணர்வை இச்சரீர பிம்ப வாழ்க்கையில்
8.ஆத்மா தன் பதிவு நிலைக்குப் பதித்துக் கொள்கின்றது.

ஆனால் நடை முறையில் அவரவர்கள் உடல் அமைப்பு நிலைக்கொப்ப நினைவின் எண்ண ஓட்டம் சுழன்று கொண்டேயுள்ள நிலையில் “ஒரே சமயத்தில்” இரண்டு நிலையான போராட்ட நிலையும் இச்சரீரத்திற்கு உண்டு.

நினைவின் எண்ணத்தால் ஆத்மாவில் பதியப் பெற்ற எண்ண நிலையும்… எண்ணத்தின் உணர்வை ஆத்மா சமைக்கும் தருண நிலை மோதலில் “பதிவு பெற்ற நிலை… பதிவாக்கும் நிலை…!” இந்த இரண்டு நிலையில் ஒன்றை நாம் முடிவெடுக்க எண்ணத்தைச் செலுத்தும் தருணத்தில் போராட்டமாகின்றது.

எச்செயலுக்காக எண்ணத்தைச் செலுத்திச் செயல் கொள்ள விழைகின்றோமோ அதே செயலைச் செய்விக்க வேண்டிய நிலைக்காக
1.ஆத்மாவின் பதிவு நிலையில் ஏற்கனவே பதியப் பெற்ற நிலையில் எண்ணங்கள் மோதும் பொழுது
உள் மனம் வெளி மனம் என்ற இரண்டு நிலையான ஓட்ட நிலையில் மோதும் எண்ணச் செயலை
3.இச்சரீர பிம்ப வாழ்க்கையில் காண்கின்றோம்.

அதில் சில போராட்ட நிலைகளும் எண்ணத்தில் ஏற்பட்டு அதன் வழியிலும் சில முடிவுகள் எடுக்கின்றோம்.

சரீர அங்கத்தில்… ஆத்மாவின் செயல் இயக்கும் பிறப்பு இறப்பு கால ஓட்டத்தில்… எண்ணத்தின் நினைவோட்ட நிலை “இரண்டு நிலையில்” செயல் கொள்ளும்.
1.இத்தகைய இரண்டு நிலையே
2.மனிதனின் அறிவு… பகுத்தறியக் கூடிய உயர் ஞானத்திற்கு வித்தாக அமைந்துள்ளது.

மிருகங்களின் செயலில் இத்தகைய இரண்டு நிலை கொண்ட எண்ண ஓட்ட அறிவின் பகுத்தறியும் தன்மை நிலை குறைவாக உள்ளது. மேலும் சரீர அங்கத்தின் செயல் தன்மையும் மனிதனை ஒத்த சொல்லாற்றல் நிலையும் குறைவு.

ஆகையினால்… சரீர உணர்வின் நிலைக்கொப்ப ஆத்மாவின் பதிவு நிலை செயலை “எண்ண உணர்வின் மோதாத சரீர எண்ண நிலைக்கொப்ப… ஒரு நிலையில் தான்” மிருகத்தின் செயல் உள்ளது.

ஆனால் மனித ஞானத்தில் உயர்ந்த சக்தி நிலையாக ஆத்மாவின் பதிவு நிலை செயல் ஞானம் அமைந்துள்ளது.

உடலுடன் உள்ள சரீர ஜீவ சக்தியின் செயலினால் மனித ஆத்மாவின் உயர்வு நிலையே “உள் மனம்… வெளி மனம்…” என்ற நினைவின் எண்ண உணர்வு செயல் கொள்ளும் செயலினால்…
1.அறிவின் பகுத்தறிவு நிலை கொண்டு
2.ஞானத்தின் வளர்ச்சியை எந்நிலைக்கும் வளர்த்துக் கொள்ள முடியும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆத்மாக்கள்… சரீரத்தில் உள்ள பொழுது பதித்துக் கொண்ட அதனின் நினைவோட்டங்கள் ஆத்மாவுடன் பதிவாகி… ஆவி நிலையில் சுழன்று ஓடினாலும் எவ் எண்ண அலையாக இந்த ஆத்மா பதித்துக் கொண்டதோ அதே எண்ண நிலைக்கொப்பத்தான் சுழல முடியும்.

அவ்வாறு சுழலும் நிலையில் தான் பெற்ற சுவை குண எண்ண நிலைக்கொப்பச் சரீரங்கள் கிடைக்கும் பொழுது அவ் ஈர்ப்பில் இவை சிக்கி ஆவி நிலையில் உள்ள ஆத்மா சரீர ஈர்ப்பில் உட்புகுந்து விடுகின்றது.

அதாவது…
1.ஜீவ சக்தி கொண்ட அலை கிடைத்தவுடன்
2.தன் ஆத்மாவின் வலுவை வளர்க்க நீர் சத்தின் உஷ்ண நிலை கிட்டியவுடன்
3.அதனுடைய வளர்ப்பு நிலை வளர்ச்சி கொண்டு பிறப்பு நிலைக்கு வருகின்றது.

May 21, 2023

விநாயகர் தத்துவத்தில் காட்டப்பட்டுள்ள பேருண்மை

உயிர்:-
நாம் எண்ணியதை நமக்குள் பதிவு செய்வதும் மீண்டும் நினைவுபடுத்தும் போது அதை இயக்குவதும் உயிருடைய வேலை.

கண்;-
நாம் எண்ணியது எதுவோ நமது கண் இந்த உயிரின் இயக்கத்தின் ஓட்டத்தை அது வழிகாட்டுகின்றது நல்லவை கெட்டவை என்று கவர்ந்து உயிருடன் இணைத்து உடலாக மாற்றுகின்றது.

உடல்:-
எது இயக்கியதோ அதைத் தன்னுடன் வரவேற்று அணைத்துக் கொள்வதுதான் உடலின் வேலை. ஆகவே சிவன் அனைத்தையும் சிவமாக்கித் தனக்குள் சக்தியாக இயக்கச் செய்வது தான்.

எல்லாவற்றையும் இயக்குவதும் உருவாக்குவதும் தான் உயிரின் வேலை.
1.அதைத்தான் விஷ்ணு வரம் கொடுக்கின்றான் பிரம்மாவோ உருவாக்குகின்றான் என்று சொல்வது.
2.நாம் எண்ணியதை நமது உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக ஆக்கி
3.ஜீவ அணுவாக ஆனபின்… எந்த எண்ணமோ அதை மீண்டும் உருவாக்குவது தான் பிரம்மாவின் வேலை.

நாம் எண்ணியது அனைத்தையும் தனக்குள் ஜீவ அணுவாக மாற்றுவது தான் உயிரின் வேலை. நாம் எண்ணியதைத் தன்னுடன் அரவணைத்துக் கொள்வதுதான் உடலின் வேலை.

ஒருவர் நல்ல சொல்லைச் சொல்கின்றார். அதை நாம் கேட்கும் பொழுது உடனே உயிர் ஜீவ அணுவாக மாற்றி நம் உடலாக மாற்றி விடுகின்றது.

மீண்டும் அந்தச் சொன்னவரை நாம் நினைக்கின்றோம்
1.அவர் உடலில் இருந்து வெளிப்பட்ட அலைகள் இங்கே உண்டு
2.அதை மீண்டும் கவர்ந்து நாம் சுவாசித்து “உயிரின் வழி தான்” அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் (முடியும்).
3.உயிர் அதை இயக்கிக் காட்டி இந்த உணர்வினை உடலுக்குள் பரப்புகின்றது.
4.அவர் சொன்னது உடலில் ஜீவ அணுவாக இருக்கும் பொழுது அந்த நல்ல அணுக்களுக்கு இது உணவாகப் போய்ச் சேர்கின்றது
5.அந்த நல்ல அணுக்கள் விளையத் தொடங்குகிறது.

உயிரின் வேலையையும் அதனின் இயக்கத்தையும்… உடலின் வேலையையும் உடலாக ஆவதைப் பற்றியும்… அறிந்து கொள்வதற்கே இதை உணர்த்துகின்றோம்.

ஆதியிலே இதை எல்லாம் அறிந்தவன் அகஸ்தியன். அந்த அகஸ்தியன்… அவன் வாழ்க்கையில் தான் கண்டறிந்த தீமைகளை அகற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இன்றும் விண்ணிலே மின்னிக் கொண்டிருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.

துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்ற அனைவருமே பிறவி இல்லா நிலை அடைந்து பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டே உள்ளார்கள். இந்தப் பேரண்டத்தில் மனிதனாகி ஒளியின் சரீரம் ஆகிவிட்டால் என்றுமே அதற்கு அழிவில்லை.

சூரியன் அழியும்… மற்ற பேரண்டங்கள் எவையாக இருப்பினும் அவைகளும் அழிந்து விடும். ஆனால்
1.உயிரணு தோன்றி பரிணாம வளர்ச்சியில் மனிதனாகி… ஒளியின் சரீரமாக மாறிவிட்டால் அதற்கப்புறம் பிறவி இல்லை… அழிவே இல்லை…!
2.அதிலிருந்து உருப்பெரும் உணர்வுகள் உயிரணுக்களுக்கு வழிகாட்டியாக அமைந்து
3.இருளை நீக்கிப் பொருள் காணும் நிலைகளில் ஒளியாக உருவாக்கிக் கொண்டே இருக்கும்

விநாயகர் தத்துவத்தில் இது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

ஒளி கொண்டு திக்கெட்டும் பாயட்டும் உயர் ஞான ஒலிகளாக…!

நம் செவியில் படும் ஒலி நாதத்தின் ஈர்ப்பிற்கொப்ப… எண்ண உணர்வு சமைக்கப்படும் அணு வளர்ச்சி கொண்டு தான் “உடல் வாழ்க்கை” நடக்கின்றது.

உடலின் இயக்கத்தால் எடுக்கக்கூடிய நம் எண்ண நிலையின் செயல் உணர்வு நிலைக்கொப்ப அணு வளர்ப்பின் முலாமைத் தான் (ஆத்மாவில்) நாம் பெறுகின்றோம்.

அதனால் வாழ்க்கையுடன் ஒன்றிய ஈர்ப்பு வட்டத்தில் ஒலி கொண்டு ஒலி பெறும் இச் சரீர இயக்கத்தை
1.உயர் நாத விந்து வளர்ப்பு நிலை பெறத்தக்க
2.ஒலி நிலை கொண்ட ஒளி பெறும் (மகரிஷிகளின் அருள் சக்தி)
3.காந்த மின் அலைத்தொடர் வளர்ச்சிக்குக் கொண்டு செல்லுதல் வேண்டும்.

உயர் ஞான சக்திகளின் வளர்ப்பாக உடலில் ஒளியான அணுக்களை உருவாக்கி… அதன் மூலம் உடலின் எலும்புகளின் ஊன்களை உறுதியாக்கும் தன்மை பெற்றால் நம் ஆத்மாவே ஒளி நிலை கொண்ட “ஜோதி நிலை” அடைகின்றது.

1.எதனின் ஈர்ப்புப் பிடியிலும் சிக்காத இந்த ஆத்மாவின் ஒளிப் படர்வின் செயலினால்
2.ஒளி பெற்ற ஆத்ம சரீர அலையிலிருந்து வெளிப்படும் ஒலி அலைகள்
3.ஒளி கொண்டு திக்கெட்டும் பாயும் உயர் ஞான ஒலிகளாக…!

ஒலி பாய்ச்சி ஒளி கொண்டு எத்தொடரில் உயர் ஞான சக்தியினால் எடுக்கப்பட்ட சொல் நாதம் ஒலிக்கின்றதோ அச்சொல்லின் செயல் “வாக்காகச் செயல் கொள்ளும்…”

“சொல் வாக்குப் பெற்ற சக்தி நிலை” என்பது
1.விழி கொண்டு பாய்ச்சப்படும் ஒளியின் கூர்மை கொண்டு…
2.ஒளி வழித் தொடர் அலையின் உயர்வு நிலை…
3.“ஒளி பட்ட இடத்திலேயே செயலாக்கம் ஆகும்…”

அதாவது… எரியும் பொருள்களில் சிறு நெருப்புப் பொறி பட்டவுடன் சிறு நெருப்புப் பொறியானது பெரும் நெருப்பாகச் சகலத்தையும் பஸ்பமாக்குகின்றது.

அதைப் போன்று இவ்வொளியைப் பாய்ச்சி உயரக்கூடிய வழி நிலைக்கும்
1.ஒலி கொண்டு ஒளி பெற்ற “விழி ஒளியின் கூர்மை கொண்டு”
2.எந்த அலைத் தொடரையும் மாற்றவல்ல “ஒளி நிலை பெறலாம்” இந்த ஒளி நிலை ஞானத்தால்.

சரீரத்தின் எண்ண உணர்வைச் செலுத்தப்படும் செயல் கொண்டு
1.செயலின் வழி ஞானம் மிகவும் கூர் பாய்ச்சிய தன்மையில்
2.வாழ்க்கை வழி முறையில் அதை மிகவும் சாந்தத் தன்மையில் செயல்படுத்த வேண்டும்.

May 20, 2023

அருள் ஞான வளைய(ம்)ல்

குடும்பத்திலே தாய் கர்ப்பமாக இருக்கிறது என்று தெரிந்து விட்டால் தயவு செய்து வீட்டிலே யாரும் சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள்.

ஒருவருக்கொருவர் மாறுபட்ட எண்ணங்கள் உணர்வுகள் வரும் பொழுது ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வர வேண்டும்… ஒழுக்க நிலைகள் பெற வேண்டும்
2.கருவில் வளரும் சிசு ஞானக் குழந்தையாக வளர வேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டே வாருங்கள்.

அக்கம்பக்கத்தில் புறநிலைகளில் வரக்கூடிய குறைகளையும் துன்பங்களையும் உற்று நோக்கி அதை மனதில் எண்ணி வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

ஆகவே அது போன்ற சந்தர்ப்பங்கள் வந்தால் அந்தப் பத்து மாதங்களிலும் ஒரு கடுமையான விரதமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் கருவில் வளரும் சிசு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணிப் பாருங்கள் கருவுற்றிருக்கும் அந்த தாய்க்கு அந்த உணர்வுகளை செலுத்துங்கள்.

இது தான் “வளைகாப்பு…” என்பது.

ஏழு எட்டு வகையான உணவு வகைகளைப் போட்டு… போட்ட பின் அதைச் சரியாகச் செய்யவில்லை. தங்கத்திலே வளையல் செய்து போட்டார்களா…? என்கிற வகையில்
1.கர்ப்பத்தில் இருக்கக்கூடிய தாய்க்கும் சரி… அந்தக் குடும்பத்தாருக்கும் சரி… வேதனையை உருவாக்கி
2.இது போன்ற சாங்கியத்தால் கருவில் வளரும் குழந்தை ஞானக் குழந்தையாக வளர்வதற்கு மாறாக நஞ்சை வளர்த்து விடுகின்றார்கள்.

இதையெல்லாம் நீங்கள் விடுபட்டு “உதறித் தள்ளுங்கள்...” நமக்கு வேண்டியது என்ன...?

தாய் கருவிலே வளரும் குழந்தை அருள் ஞானக் குழந்தையாக வளர வேண்டும் என்று இப்படி எல்லோரும் எண்ணினால்
1.அந்தக் குழந்தை நோயற்ற குழந்தையாக உருவாகும்… உலக ஞானம் பெறும்
2.பிறந்து வாழ்க்கையில் அது வளரும் பொழுதே அந்தக் குடும்பத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும்
3.மெய்ப்பொருளைக் காணக்கூடிய சக்தியும் பெறும்.

ஆகவே குழந்தைகளை அரும் பெரும் ஞானிகளாக ஆக்குங்கள். கருவிலே வளரும் குழந்தைகள் ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும் என்று கூட்டுத் தியானத்தில் எண்ணினால்
1.நீங்களும் ஞானியாகின்றீர்கள்
2.உங்கள் குழந்தைகளும் ஞானியாகின்றார்கள்.

பத்து மாதங்கள் இவ்வாறு எண்ணிக் கருவிலேயே குழந்தையை ஞானியாக உருவாக்கி விட்டால்
1.குடும்பத்தில் எத்தகைய சிக்கல்கள் இருந்தாலும் அது ஓடிப் போய்விடும்…
2.எந்தத் தொல்லையும் அங்கே நிற்காது.

ஆகவே வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க ஒவ்வொருவரும் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை அன்றாவது ஒன்று சேர்ந்து கூட்டாகத் தியானம் செய்ய வேண்டும்.

டிவி பார்ப்பதற்கோ சினிமாவிற்குச் செல்வதற்கோ குடும்பத்தில் அனைவரும் ஒன்றாகச் சேர்கின்றோம். டிவியை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது… வீட்டின் பின் கதவைத் திறந்து திருடன் பொருளை அபகரித்துச் சென்றாலும் உள்ளே இருப்பவருக்கு ஒன்றும் தெரிவதில்லை.

இப்படித்தான் நாம் இருக்கின்றோம்…!

டிவி பார்க்க வேண்டாம்… பார்க்கக் கூடாது…! என்று சொன்னாலும் நீங்கள் பார்க்காமல் இருக்கப் போவதில்லை. அப்படியே பார்த்தாலும் ஒரு பத்து நிமிடமாவது எல்லோரும் அமர்ந்து கூட்டுத் தியானமிருந்து
1.எங்கள் குடும்பம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
2.எங்கள் குழந்தைகளுக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று உலக ஞானம் பெற வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்
4.அந்தக் குழந்தைகளுக்கு இதையே ஆசிர்வாதமாகக் கொடுத்துப் பாருங்கள்.

கர்ப்பமாக இருக்கும் தாய்க்கு “வளைகாப்பு” என்று பல வகை உணவுகளைப் போட்டு எல்லோரும் வளையலைப் போடுவது போல்
1.அருள் ஞான உணர்வுகளை காப்பாக வளையலாக இதைப் போட்டுக் கொள்ளுங்கள்
2.இது அருள் ஞான வளையல்…!

புறத்தில் வளையலைப் போடுவதைக் காட்டிலும்… அருள் ஞானக் காப்பாக “மகரிஷிகளின் அருள் சக்தியை வளையலாகக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கும்… அந்தத் தாய்க்கும்… வீட்டில் உள்ள அனைவரும் போட்டுப் பாருங்கள்…”

பிறக்கக்கூடிய குழந்தை “ஞானக் குழந்தையாகப் பிறக்க வேண்டும்… ஞானக் குழந்தையாகப் பிறக்க வேண்டும்…!” என்று எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கள்.

உங்கள் அனைவருக்கும் எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று நீங்கள் பார்க்க முடியும். பிறந்த பின் அந்தக் குழந்தை
1.ஞானத்தை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்றும்
2.குடும்பத்தில் எவ்வளவு செழிப்பு வருகிறது என்றும்
3.அப்பொழுதாவது நீங்கள் தெரிந்து கொள்ளலாம்… இது உங்கள் அனுபவத்தில் காண முடியும்.

எங்கெங்கோ சென்று எது எதற்கோ நேரத்தைச் செலவிடுகிறோம். மணிக்கணக்காக டி.வி பார்க்கிறோம். ஒரு பத்து நிமிடமாவது இந்தத் தியானத்தை தினமும் எடுத்துப் பாருங்கள்..

1.தொடர்ந்து அதைச் செய்ய செய்ய டிவி பார்க்கும் அந்த மோகம் போய்விடும்
2.டிவியைப் பார்த்து நுகர்ந்த தீய அலைகளும் ஒடுங்கிவிடும்.
3.அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைச் சேர்க்கச் சேர்க்க டிவியில் பார்த்த (படமாக) மாதிரி
4.உலக ஞானத்தையும் உங்கள் மனக்கண்ணால் பார்க்க முடியும்.

தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகள் உங்களுக்குள் விளைவதையும் பார்க்கலாம். உங்கள் நினைவுகள் அனைத்தும் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் இணைந்து… உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலையை அடையச் செய்யும்.

நல்லதை உருவாக்க சகுணத்தைக் காட்டினால் அதை “நல்ல சகுணம்... கெட்ட சகுணம்” என்று பிரித்து விட்டார்கள்

கழுதையின் சரீரச் செயலே பல சுமைகளைச் சுமக்கவல்ல ஜட உணர்வு கொண்ட அமைப்பில் உள்ளது. கழுதை அதன் கூட்டமைப்பு உருவம் பெற்ற ஜெனிப்புத் தன்மைக்கொப்ப அதனுடைய ஒலித் தன்மை “விகார நிலையில் ஒலிக்கின்றது…!”

இதனை நம் முன்னோர்கள் ஒலியின் விகாரத்தை மனித உணர்வு பெற்றால் என்ன நடக்கும்...! என்று உணர்த்தினார்கள்.

ஒரு விகாரமான ஒலித் தன்மையை செவி நிலை பெற்று அதன் மூலம் அமையும் சுவாசத்தின் அணு வளர்ப்பு வளர்க்கும் நிலைக்கொப்ப எண்ணத்தின் உணர்வு செயல்படுவதை அன்றே நம் முன்னோர்கள் காட்டினார்கள்.

அதாவது மனித வாழ்க்கைக்கு… பூமி சுழற்சியில் பிறப்பெடுத்த ஜீவ ஜெந்துக்களின் தொடர்புடன் வாழ்க்கை நிலை ஒன்றியதனை
1.ஒலியின் நாதத்தால் மனித உணர்வு ஞானம் வழித் தொடர் அமையவல்ல நிலையை
2.நன்மை தீமை என்ற சகுணங்களை அடிப்படைக் குணமாகக் காட்டி
3.கழுதை கத்தும் ஒலியையே நன்மை என்ற சகுண நிலையைக் காட்டி
4.நல்லது நடக்க கழுதையின் கத்தல் உகந்தது…! என்று உணர்த்தினார்கள்.

மனித வாழ்க்கை அமைப்பில் மோதுண்டு சுழலுகின்ற ஜீவ ஜெந்துக்களின் தொடர்பில் இருந்தெல்லாம் மனித ஒலி ஒளி சமைப்பு நிலைக்கொப்பத் தான் மனிதனின் எண்ண உணர்வு செயல்முறை எண்ண வளர்ச்சி ஆகியன வளர்கிறது என்ற உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள் தான் இதை இப்படி வழிப்படுத்தினர்.

இன்றல்ல நேற்றல்ல…! பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே
1.ஒளியின் ஒலி நாதம் கொண்டு
2.உயருகின்ற உயர்வு நிலைக்காக வழியமைத்துக் காட்டினார்கள்.

ஒலி கொண்டு சேமிக்கப்பட்ட அமில உணர்வு எண்ண நிலைக்கொப்ப அதனதன் அணு வளர்ந்து… அந்த அணுவிற்குகந்த அமில முலாமின் கரைசலை ஜீவ சரீரங்கள் பெற்று… வளருகின்ற வளர்ச்சி நிலை ஒவ்வொன்றின் தொடரும் “ஒலி கொண்டு ஒளிரும் நிலை பெற்றது தான்…!”

அந்தந்தச் சரீரக்கூறின் அமிலச் சேர்க்கைக்கு ஒப்பத்தான் ஒலித் தன்மை ஒலிக்கின்றது.

கழுதை கத்தும் தருணத்தில்… அதனுடைய உணர்வின் சந்தோஷ மிகுதி உந்தும் வேளையில் அதன் கத்தும் ஒலியானது ஜீவ உணர்வுடன் தான் வெளிப்படுகிறது. அதை நாம் கேட்கும் பொழுது
1.அதனுடைய (சந்தோஷ) இனிமை உணர்வுக்கொப்ப இனிமை பெற்று
2.இனிய நற்காரியங்கள் நடைபெறுவதை உணர்த்தியது
3.நம் முன்னோர் காலத்திலிருந்தே வழி வழியாக வந்தது தான்.

ஒலிக்கும் ஒலியைக் கொண்டு… அவ்வொலியை நாம் ஈர்க்கும் நிலைக்கொப்ப…
1.நம் எண்ணத்தின் உணர்வு எடுக்கும் அலைத் தொடரைக் கொண்டு
2.மனித வாழ்க்கையில் செயல் கொள்ளகூடிய செயல் முறை உந்தல் நடைபெறுகின்றது என்று தெளிவாக்கினார்கள் முன்னோர்கள்…!

May 19, 2023

குடும்பங்களில் “கொடி போல் வரிசையாகப் படர்ந்து வரும்” சாப அலைகளின் இயக்கங்கள்

ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனையோ வகையான சாப அலைகள் சாடி உள்ளது (நமக்குத் தெரியாமலே…!)
1.நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் அதில் இருந்து மீள முடியாத நிலையில் இருக்கின்றீர்கள்
2.நல்லவர்களாக வேண்டும் என்று முயற்சித்தாலும் சாப வினைகள் கலந்து
3.வாயிலே விஷம் கலந்தது போன்று வாழ்க்கையில் ஈடேற முடியாத நிலைகளில் சாப வினைகள் தடுத்துக் கொண்டுள்ளது.

சாப வினைகளையும் பாப வினைகளையும் சுட்டுப் பொசுக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று குடும்பத்தில் உள்ளோர் வலுவாக எண்ணினால் அவைகள் நீங்கும்.

இன்று பார்க்கலாம்…! ஒன்றுமறியாத இளம் குழந்தைகளாக இருந்தாலும் கூட சாப அலைகளால் கை கால் முடமாகி… நாளுக்கு நாள் குறுகி எத்தனையோ அவஸ்தைகள் படுகின்றது.

ஒரு குடும்பத்தில் செழித்த நிலைகள் செல்வங்கள் இருப்பினும் எனக்கு எப்படி இந்தக் கதியானதோ… உன் குடும்பமும் இப்படித்தான் போகும்…! என்று யாரோ சாபமிட்ருப்பார்கள்.

கர்ப்பமாக இருக்கும் தாய் இதைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்கினால் போதும்.
1.சாபம் இட்ட உணர்வின் வீரிய சக்தி அந்தக் குடும்பத்தில் வாழும் பெண் கொடி வழியில் அது படர்ந்து வந்து
2.அந்தக் குடும்பத்தின் ஒற்றுமையைக் கெடுத்து… அவர்கள் வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்கள் படுவதைப் பார்க்கலாம்.

எல்லோருக்கும் நல்லது தான் செய்வார்கள்… நல்ல குணங்கள் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் கொடி வழி வந்த அந்தச் சாப வினைகள் அவர்களை ஈடேற விடுவதில்லை.

அதே சமயத்தில் எல்லோருக்கும் பரிபக்குவ நிலைகளை நாம் செய்திருப்பினும்… அன்புடன் பண்புடன் பழகி மற்றவருக்கு உதவி செய்வோராக நாம் இருந்தாலும்…
1.ஒரு ட்ரெயினிலே போகும் பொழுது சாதாரணமாக ஒருவருடன் பழகி இருப்போம்… உதவி செய்திருப்போம்
2.ஏனென்றால் கஷ்டமாக அவர் இருந்திருப்பார்… நாம் உதவி செய்த உணர்வோ ஆழமாக அவருக்குள் பதிவாகி விடுகின்றது.

கஷ்டங்களைப் பட்டவராக இருப்பதால் “அவருடைய சந்தர்ப்பம்” அவர் வீட்டுக்குச் சென்ற பின் ஹார்ட் அட்டாக் வந்தோ அல்லது திடீரென்று அதிர்ச்சியினாலோ இறந்து விடுகிறார்…! என்று வைத்துக் கொள்வோம்.

அவர் உயிர் பிரியும் நேரம்… உதவி செய்த நம் மீது தான் அவருடைய எண்ணம் வரும்.
1.காரணம் அவருக்கு நாம் உதவி செய்த நன்றிக் கடனாக நம்மை எண்ணுவார்.
2.ஆக… ஹார்ட் அட்டாக்கில் இறந்த அந்த உயிரான்மா நம் உடலுக்குள் வந்துவிடும்
3.வந்த பின்… அவருக்கு எப்படி அந்தப் பாதிப்பு ஏற்பட்டதோ அதே நிலை இங்கேயும் வருகின்றது.

ஏனென்றால் இந்த உணர்வின் இயக்கங்கள் அவ்வாறுதான் செயல்படுகின்றது. இதை யாரும் குறையாகச் சொல்வதற்கு இல்லை…!

ஆனால் இது போன்ற நிலைகள் வராது தடுக்க வேண்டுமா இல்லையா…!

ஆறாவது அறிவு துணை கொண்டு விண்ணிலே ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து உடலுக்குள் செலுத்திக் கொண்டால் மனிதன் முழுமையாகின்றான்.

இல்லை என்றால் மீண்டும் நரகலோகம் தான்…! (மீண்டும் பிறவி நிலை) என்று சாஸ்திரங்களில் தெளிவாகத் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது.

தேளுக்குக் கொடுக்கிலே விஷம் இருக்கின்றது ஆனால் உணவு உட்கொள்ளும் போது எத்தனையோ வேதனைப்படுகின்றது. மற்ற எதிரிகளிடமிருந்து தப்பித்து வாழ “அஞ்சியே வாழ்கின்றது…”

இது போன்று ஒவ்வொரு உயிரினங்களும் எத்தனையோ வகையில் அல்லல்படுகின்றது… நரக வேதனைப்படுகின்றது இதை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

1.அது போன்ற வேதனைப்படும் உயிரினங்களாக மீண்டும் பிறவிக்கு வந்து
2.இன்னொரு இழி நிலையான சரீரத்திற்குள்ளே சென்று விடாதபடி
3.இந்த மனித வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் ஆற்றல்களைப் பெற்றுத் தீமைகளை அகற்றி
4.நம்மை அறியாது சேர்ந்த சாப வினைகளையோ பாவ வினைகளையோ நீக்கி
5.வாழ்க்கையில் என்றும் மகிழ்ந்து வாழும் அந்த அழியா ஒளிச் சரீரத்தைப் பெற வேண்டும்.

இந்த உடலை விட்டு அகன்றால் நம் எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்…! அந்த எல்லையை அடிப்படையாக வைத்து வாழ்க்கை வழி நடத்தினால் தான் அது சரியாக இருக்கும்.
1.யாரும் என்னை மதிக்கவில்லை… எல்லோரும் கேவலமாகப் பேசுகிறார்கள்…! என்ற
2.பிறருடைய எண்ணங்களோ அல்லது அது போன்ற உணர்வின் இயக்கமோ நம்மைக் கீழே இழுத்து விடாது…!

ஓமுக்குள் ஓம் நாம்…! ஒ..ம் ஆக நாம் வளர்க்க வேண்டியது எதை...?

சப்த கோடிகளே….
சகல நாத விந்துக்களே…
மணமாகி ஒளியாகி நீராகி நிகழுகின்ற உருக்கோல ஜீவ திட சக்தி தொடர் நிலைகளே…
“கல்கி நிலை உருவாக உருத்தாருங்கள்…!”

ஒலி கொண்டு ஒளி பெற்று… ஒலிக்கின்ற “ஓ…ம்” என்ற இப்பூமியின் நாத சுழற்சியில்… ஓ…ம்ம்ம்ம்… என்ற நாதத்தில் தான் நம் பூமி ஜெனித்து ஓடிக் கொண்டுள்ளது.

பூமியின் நாதத்தில் வளர்கின்ற பல கோடி நாதத் தொடர்பால் ஒலி கொண்டு ஒளி பெற்ற இச்சரீர (நம் உடல்) கோள நாதமாக
1.ஓமுக்குள் ஒமாக… நாதத்திலிருந்து நாதமாக
2.நம் நாத ஒலி சுழற்சியில் ஓம் என்ற கோளமாக
3.பிறிதொரு கோளத்தை உருவாக்கும் நாத விந்து வளர்ச்சியை நாம் பெற வேண்டும். (அது தான் மண்டலப் படைப்பு)

அதைப் பெற்றோமானால் ஓ…ம் என்ற நாதத்துடன் உருளுகின்ற உலகைப் போல் இம்மனித சரீர பிம்பத்தில் ஒலி கொண்டு ஒளி பாய்ச்சி சுவாச நாதம் வளர்க்கும் விந்துவின் இந்திரிய வலுவைக் கொண்டு உடலை இயக்கும் ஆத்மாவின் ஈர்ப்பு வட்டத்தில் ஜோதி நிலை (ஓளி நிலை) அடையலாம்.

சூரியன் தன் ஒளியின் நாத சுழற்சியைக் கொண்டு சூரிய வட்டத்தில் உள்ள பல கோள்களுக்கும் “ஒளி தந்து…” ஒலி பெற்று… தன் சுழற்சியின் கூட்டமைப்பின் சக்தியுடன் ஒன்றித் தானும் வளர்கின்றது.

அதே போல் நம் பூமியும் ஓ…ம் என்ற நாதத்துடன் “ஒளி பெற்று” ஒளியாக்கிச் சுழலும் தொடர்பைப் போன்று தான் மனித சரீரம் பல கோடி ஒலித் தொடர்புடன் ஒளி பெற்றுள்ளது.

அவ்வாறு உருவான இந்த ஆத்மாவிற்கு வலு கூட்டிக் கொள்ள சூரியனின் நிலையை ஒத்த குண சமைப்பைப் போன்று சரீர உணர்வின் எண்ண சமைப்பு பிறிதொரு ஆத்மாவின் மேல் “ஒளி பாய்ச்சி” ஒலி பெற்று வலுக் கூட்ட வேண்டும்.

“ஒளி பாய்ச்சி” என்பது என்ன…?

இந்தப் பூமியின் சுழற்சியில் திடம் பெற்ற பல கோடிச் சரீரங்களும் ஒன்றை ஒத்து ஒன்று இல்லை. இருந்தாலும்… ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சக்தி நிலை “உயர்வு” கொண்டு இயங்குகிறது.

அவ்வாறு இயங்கக்கூடிய ஒலி… ஒளி… ஞானம்… செயல் திறன்… பொருந்திய சரீர உணர்வு கொண்ட எண்ண உணர்வுடன் தான் நாம் மனிதர்கள் செயல் கொள்கிறோம்.

சரீரத் தொடர்புடன் நம்முடைய உணர்வின் எண்ணம் செலுத்தும் வழிதனில்…
1.ஒருவரை நாம் பார்க்கும்… ஒளி பாய்ச்சும் நிலையிலேயே…
2.விழி படமெடுத்து…
3.நாசி சுவாசம் எடுத்து
4.ஒளியின் ஒலியாக நாத விந்துக்கள் உடலின் இந்திரிய அணு வளர்ப்பாக வளர்ந்து விடுகிறது.

இப்படி… “ஒளி பாய்ச்சி” ஒலி பெறும் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் சரீர சமைப்பு சுழற்சி சுழன்று கொண்டேயுள்ள இத்தொடரில்
1.நம்முடைய உணர்வின் எண்ணத்தைப் பிறிதொரு ஈர்ப்பில் சிக்காமல்
2.நம் ஆன்ம வளர்ப்பு நிலையின் வலுத்தன்மை கொண்டு
3.ஞான குண ஒளி பாய்ச்சும் தன்மையினால்
4.எந்த உயர்ந்த எண்ணத்தைக் கொண்டு பிறிதொருவரின் மேல் நாம் ஒளி பாய்ச்சுகின்றோமோ
5.அதன் தொடர் காந்த மின் அலை ஒளி ஈர்ப்புடன்
6.இச்சரீர ஈர்ப்பிற்கு சுவாச ஒலி எடுத்து... வித்துக்கள் வளர்ந்து
7.”ஆத்மாவின் வலு” ஒலி “ஒளியாகப் பதிவு கொள்கின்றது…”

May 18, 2023

இரவு தூங்கும் முன்னும்… காலையில் கண் விழித்தவுடனும் “நாம் கட்டாயப்படுத்தி எண்ண வேண்டியது”

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியையும் அகஸ்தியன் துருவ நட்சத்திரமான அந்தச் சக்தியையும் அனைவரும் பெறும் பாக்கியத்தை ஏற்படுத்தியது. ஆகவே…

1.அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் உணர்வின் துணை கொண்டு
2.நம் வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும் என்ற நிலையில்
3.எத்தகைய இருளானாலும் எத்தகைய வேதனையானாலும்
4.அதை வென்றிடும் அருள் சக்தியை நாம் பெற வேண்டும்.

இரவு தூங்கச் செல்லும் போதெல்லாம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு என்னைப் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… மகிழ்ந்து வாழும் சக்தி கிடைக்க வேண்டும்… அவர்கள் தொழில் சிறந்து விளங்க வேண்டும் என்றுப் படுக்கும் பொழுதெல்லாம் இந்த முறைப்படி எண்ண வேண்டும்.

அடுத்து…
1.எங்கள் குடும்பம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்
3.எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்து நோய்கள் நீங்க வேண்டும்
4.உலக மக்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
5.அவர்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
6.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
7.உலக மக்கள் இன பேதம் இன்றி மன பேதம் இன்றி மொழி பேதம் இன்றி வாழ்ந்திடும் திறன் பெற வேண்டும் என்று அவசியம் படுக்கையில் எண்ண வேண்டும்.

இவ்வாறு எண்ணினால் அதுவாக நீங்கள் மாறுகின்றீர்கள்…!

காரணம்… ஒருவருக்கொருவர் வரும் பேதங்களை எல்லாம் தவிர்த்தால் தான் “மனிதன்… மனிதனாக இன்று நாம் வாழ முடியும்…!” இந்தக் காற்று மண்டலத்தில் படர்ந்திருக்கும் பகைமை உணர்வுகள் அகல வேண்டும் என்றால் மேசே சொன்ன தியானத்தை அவசியம் செய்ய வேண்டும்.

இதை இப்போது பதிவு செய்து கொண்ட நீங்கள்
1.ஆங்காங்கு எந்த ஊர்களில் எந்த இடங்களில் இருந்தாலும்
2.இரவிலே இது போன்று அவரவர்கள் வீட்டில் இதைச் செய்து
3.அந்த அலைகளைப் பரப்பபடும் போது இந்தக் காற்று மண்டலத்தில் இது பரவுகின்றது

காலையில் எழுந்திருக்கும் பொழுது… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று தியானித்து விட்டு எங்கள் குடும்பம் முழுவதும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும்… நாங்கள் பார்ப்போர் எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரொளி பெற வேண்டும்… எங்களைப் பார்ப்போருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று செல்வச் செழிப்புடன் வாழும் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் எண்ணுங்கள்.

1.இவ்வாறு செயல்பட்டால் அந்தச் சக்தியை முதலில் நீங்கள் பெறுகின்றீர்கள்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியும் எமது அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

உங்கள் வாழ்க்கையில் எந்த நேரத்தில் எந்த நிலை வந்தாலும்… அதில் உள்ள இருளை நீக்கிப் பொருள் காணும் திறன் பெற்று… மகிழ்ந்து வாழ்ந்திடப் பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).