ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 30, 2020

பேரண்டமே ஒளிமயமாக மாறும் காலமும் உண்டு

நம் பூமியில் பரிணாம வளர்ச்சியில் மனிதனானவர்கள்… தங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றிவிட்டு ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
 
அவர்களின் எண்ணங்களை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நாமும் அந்த எல்லையைச் சென்றடையலாம்.
 
ஆக… தீமைகளை வென்ற அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் விளைய வைத்தால்
1.நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை நாமும் வென்று
2.என்றும் ஒளியாக அந்த மகரிஷிகள் வாழ்வது போல் பிறவியில்லா பெரு நிலைகள் அடையலாம்.
 
இதைத் தான் வேகா நிலை என்பது...!
 
மாறாக… இந்த வாழ்க்கையில் பந்தம் பாசம் என்ற நிலைகள் வந்து விட்டாலோ… நம்முடைய பார்வையில் பிறர் செய்யும் தீமைகளை அதிகமாக எண்ணி அந்தத் தீமையின் பற்று வளர்ந்து விட்டாலோ… நாம் புவியின் ஈர்ப்புக்கே வந்து விடுகின்றோம்.
 
அதை எல்லாம் விடுத்துவிட்டு அந்த மெய் ஞானியின் உணர்வின் தன்மை நாம் நினைவு கொண்டால் இந்த மனித உடலிலிருந்தே அந்தச் சொர்க்க பூமியான சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து பேரின்பப் பெரு வாழ்வு வாழ முடியும்.
 
1.கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றாகி இரு உணர்வுகளும் ஒன்றாகி
2.நாம் நுகரும் உணர்வுகளை எல்லாம் ஒளி உணர்வுகளாக மாற்றி
3.அழியா ஒளிச் சரீரம் பெற்று… சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்திட முடியும்.
 
இந்தப் பிரபஞ்சம் முழுமையாக அழிந்தாலும் அந்தச் சப்தரிஷி மண்டலங்கள் அழிவதில்லை.
 
இதைப் போல் எத்தனையோ கோடிப் பிரபஞ்சங்கள் உண்டு. அதில் விளைந்த மனிதர்களும்  இதைப் போல் விண் சென்றவர்கள் பேரண்டத்தில் வெளி வந்த பின் அவர்கள் ஐக்கிய உணர்வு கொண்டு இந்த ஒளியின் சரீரமாக வாழ்கின்றார்கள்.
 
அதன் வழியில் பிறவியில்லா பெரு நிலை பெற்று இந்தப் பேரண்டமே ஒளிமயமாகும். அந்த நிலை அடையப் பல கோடி ஆண்டுகளாகும்.
 
ஆகவே… பேரண்டம் என்பது அகண்ட நிலைகள் பெற்றது. மனிதனான பின் நாம் நுகரும் உணர்வின் தன்மையை ஒளியாக்கி விட்டால் நமக்கு என்றும் அழிவில்லை.
 
அந்த அழியாத நிலைகள் பெறுவதற்குத் தான் இங்கே உணர்த்துகின்றோம். நாம் அனைவரும் அந்த வேகா நிலை பெறுவோம். 
 
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் மெய் உணர்வுகளை நமக்குள் எடுத்து வளர்த்து… நமக்குள் வரும் தீமைகளை அகற்றி அந்த மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற நாம் தியானிப்போம்.
1.நமக்குள் தீமைகள் புகாது தடுப்போம்.
2.நாம் பார்ப்போருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறத் தியானிப்போம்.

November 29, 2020

தவறே செய்யவில்லை என்றாலும் தீமைகள் ஏன் நம்மைச் சாடுகிறது...?

உதாரணமாக ரோட்டில் செல்லும் போது விபத்துக்களைப் பார்க்க நேர்கிறது. அடிபட்டவர்கள் அவர்கள் வெளிப்படுத்தும் வேதனை உணர்வுகள் பூமியில் படர்கிறது.
 
நம் கண் பார்த்து அந்த விபத்தான உணர்வுகளை… அந்த உடலைப் பதிவாக்கிய பின் அந்த உணர்வுகள் அலைகளாக வெளி வருகிறது.
1.அதை நாம் நுகர்ந்தால் நமக்குள் அது விளைந்து
2.அந்த உடல் சிதைந்திருந்தால் அதே உடலிலிருந்து உணர்வுகள் நமக்குள் விளைந்து நம் உடலையும் சிதையச் செய்துவிடும்.
 
இல்லை என்றால் அந்த உணர்வின் தன்மை தனக்குள் உருவாகி அவர்களைப் போல் நம்மையும் விபத்துக்குள்ளாக்கும் செயல்களை உண்டாக்கிவிடும்.
 
ஒரு பேருந்திலேயே பிரயாணம் செய்கிறோம் என்றாலும்… ஒரு விபத்தைக் கண் கொண்டு பார்த்த உணர்வின் எண்ணம் நமக்குள் பயத்தை ஏற்படுத்தி நாம் செல்லும் வண்டியின் ஓட்டுநரை அந்த உணர்வுடன் பார்த்தால் போதும்.
 
இந்த உணர்வுகள் அவரை இயக்கச் செய்து அவரின் சிந்தனைகள் குறைக்கப்பட்டு தன்னை அறியாமலே எதிரில் வரும் வாகனத்தைக் கண்டு மாற்றி அமைத்தால்… ஒரு மனிதனோ மாடோ குறுக்கே வந்தால் வண்டியை ஓரமாக ஒதுக்கினால்… அருகில் உள்ள மரத்தில் மோதி நாம் உட்கார்ந்திருக்கும் அந்தத் திக்கிலேயே உராயும் தன்மை வரும்.
 
இது எல்லாம் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் இயல்புகள்.
 
விமானத்தில் அல்லது இராக்கெட்டுகளில் ஒரு ரிமோட் என்ற உணர்வின் தன்மையை வைத்து விஞ்ஞான அறிவு கொண்டு எப்படி இயக்குகின்றனரோ… இங்கிருந்து ஆணையிடும் அந்த ரிமோட் அதிலே எதைப் பதிவு செய்திருக்கின்றனரோ… அதே உணர்வின் அழுத்தத்தை இங்கே இயக்கும் போது அந்த விமானங்களையும் இராக்கெட்டுகளையும் திசை மாற்றுகின்றனர்.
 
இதே போல் தான் மனிதனுக்குள் விளைந்த (முதலிலே சொன்ன) உணர்வுகள் இதைப் போன்ற எண்ணங்கள் கொண்டு
1.தன்னுடைய எண்ணமே அது ரிமோட் ஆகி
2.யாரைப் பார்க்கின்றோமோ அந்த ஓட்டுநரையே திசை திருப்பச் செய்து விடுகிறது.
 
இதே போல் தான் நம்முடைய நண்பர்கள் என்று எண்ணும் போது… நட்பின் தன்மை கொண்டு “உதவி செய்தார்…” என்று மற்றொரு நண்பரிடம் புகழ் பாடும் போது அந்த உணர்வுகள் அங்கே விக்கலாகி அவருடைய குடும்பங்களோ தொழிலோ நலமாகின்றது.
 
ஆனால் பகைமை உணர்வு கொண்டு “எனக்குத் துரோகம் செய்தான் பாவி…” என்று எண்ணி விட்டால்… ஒரு காரையே அந்தச் சமயம் ஓட்டிக் கொண்டிருந்தால் அல்லது வியாபாரம் சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தால் அல்லது அதனின் பலன்களை எண்ணிப் பார்க்கும் பொழுது அந்த நேரத்தில் பார்த்தால் புரையோடும்.
 
புரை என்றால்… எனக்குத் துரோகம் செய்தவன் எங்கே சென்றாலும் உருப்பட மாட்டான்…! என்ற இந்த உணர்வுகளைச் சொல்லும் போது அவர் உடலில் பதிந்தது ரிமோட் செய்து அந்த வியாபாரத்தையே தடை செய்துவிடும்.
 
அதே சமயத்தில் தான் ரோட்டில் செல்லும் போது தான் இதைப் போல் புரையோடினால் சிந்தனை குறையப்பட்டு வாகனங்களை அது திசை திருப்ப அது ஒரு நொடி கவனம் மாறினாலும் மரத்திலோ அல்லது எதிரில் செல்லும் ஒரு மனிதன் மீது மோதி விபத்துக்குள்ளாக்கும்.
 
ஆனால் நாம் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் பதிவு செய்த உணர்வுகள் நம்மை இப்படியெல்லாம் ரிமோட் செய்து கொண்டிருக்கும்.
1.இது இயற்கையின் நிலைகள் (தவறில்லாது இயக்குகிறது)
2,இதை விதி என்றும் சொல்லலாம்.
 
ஏனெனன்றால் பதிவு செய்த அந்த உணர்வின் தன்மை வலு கொண்டது.
 
உதாரணமாக தாய் கருவிலே விளையப்படும் போது கருவின் சிசுவிலே இதைப் போன்ற உணர்வு பதிவானால் எந்த வயதில் அவர்கள் விபத்துக்குள்ளானார்களோ அதே உணர்வு பதிவாக்கப்படும் பொழுது அதே உணர்வுகள் அந்த உணர்வு வரப்படும் பொழுது அந்தக் கால நிலையில் இப்படி ரிமோட் செய்துவிடும்… விபத்தாகிவிடும்.
 
நாம் தவறு செய்யாமலே…
1.தாய் கருவில் இருக்கப்படும் பொழுதே இத்தகைய பதிவுகள் ஆகி விட்டால்
2.நம்மை அறியாமலே இது இயக்கி… விபத்துக்களும் பல தீமைகளும் உருவாகும் சந்தர்ப்பமாகிவிடுகிறது.
 
உயிரின் இயக்கம் எலெக்ட்ரிக் என்றாலும் நுகர்ந்ததை எலெக்ட்ரானிக்காக அந்த உணர்ச்சியாக இயக்கிவிடுகிறது. எலும்புகளில் உள்ள ஊனில் பதிவாக்கி விடுகிறது.

அதனின் விளைவுகளாகத் தான் இயக்கமாகிறது. இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு தீமையின் விளைவுகளிலிருந்து தப்ப அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து அவ்வப் பொழுது (விபத்தாகும் போதும் எதிர்பாராத இயக்கங்கள் நடை பெறும் போதும்) ஆத்ம சுத்தி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

November 28, 2020

பனை மரத்தில் பேய் இருக்கிறது...! என்ற எண்ணம் எப்படி உருவாகிறது...?


ஒரு சமயம் குருநாதர் காட்டிற்குள் என்னை (ஞானகுரு) அழைத்துச் சென்றார். பனை மரம் ஒன்று இருந்தது. அந்தப் பனை மரத்தில் ஒரு கோடைப் போடச் சொன்னார்... போட்டேன்...!
 
இராத்திரி இந்தப் பனை மரத்தில் ஒரு இராட்சசன் வந்தான்.. ஆகையினால் இந்த வழியாகப் போகும் பொழுது பார்த்துப் போங்கள்...! என்று யாரிடமாவது சொல்லு என்றார்.
 
அதே மாதிரிச் சொன்னேன்.
 
இந்த எண்ணத்தைப் பதிவு செய்த பின் அதே எண்ணத்திலேயே அங்கே போகின்றார்கள்.
1.வெண்மையாகக் கோடு போட்டத்தைப் பார்த்ததும்
2.இவன் எண்ணத்திற்கு அது தெரியப்படும் பொழுது பளீர்... பளீர்...! என்று மின்ன ஆரம்பித்தது.
3.இராட்சசன் வருகின்றான்...! என்ற உணர்வு அவனுக்கு வருகிறது.
 
ஏனென்றால் இதே எண்ணத்தில் இறந்த ஆன்மாக்கள் இவனுக்குள் குவிக்கப்படுகின்றது. வந்ததும்... அது இவனுக்குள் வருவதாகவே அந்த நினைவு வருகின்றது.
 
அப்படி வந்ததும் இவனின் இதயங்கள் வேகமாகத் துடிக்கின்றது. உணர்ச்சி வேகங்கள் இரத்தநாளங்களில் ஆனவுடனே அது வெடித்து விடுகின்றது... அல்லது இதயத்தில் வெடித்து விடுகின்றது. இரத்தம் இரத்தமாகக் கக்குகின்றான்.
 
இப்படி அச்சுறுத்தும் நிலை வரும் பொழுது “பேயடித்து விட்டது..!” என்று சொல்கிறார்கள். அவன் இப்படிக் கிடக்கின்றான் என்றவுடன் அடுத்தாற்போல் அந்தப் பக்கம் யார் போனாலும் இதே பயம் வருகிறது.
 
1.ஏனென்றால் மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வுகள்
2.அதே நினைவு கொண்டு அதையே நமக்குள் உருவாக்குகின்றது.
 
இப்படித்தான் ஆலயங்களில் இந்தத் தெய்வம் அதைச் செய்யும் இதைச் செய்யும் என்றும் யாகங்கள் நடத்தி... அந்த உணர்வை நமக்குள் உருவாக்கி வைத்துள்ளார்கள். அந்த உணர்வின் நினைவு வரப்படும்போது அது தான் பக்தி என்று நாமும் எண்ணுகிறோம்.
 
சில தெய்வங்களுக்கு ஆட்டையும் கோழியையும் வெட்டி அதில் நைவைத்தியம் செய்து படைக்கின்றார்கள். இப்படிச் செய்தால் அந்தத் தெய்வம் நம்மைக் காப்பாற்றும்…! என்று நினைக்கின்றோம்.
 
இது போன்ற தெய்வங்களுக்கு என்று விசேஷமான வாத்திய இசைகள் உண்டு. உறுமி மேளம் அது போன்று மற்றதை வாசிப்பார்கள். அதையும் நமக்குள் பதிவு செய்து வைத்திருப்போம்.
 
பூஜைக்கு என்று எதை வெட்டி அங்கே படைத்துக் கொடுத்து விட்டு நாம் அதைச் சாப்பிடுகின்றோமோ அதன் உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் வளர்ந்தபின் நாம் இறந்தபின் என்ன நடக்கின்றது..?
 
அடுத்தாற்படி பூஜைக்கு வருபவர்கள்..
1.இந்த உறுமிக் கொட்டை மீண்டும் கொட்டியவுடனே… அதைக் கேட்டு அந்த உணர்ச்சிகள் உந்தப்படுகின்றது
2.அவர்கள் உடலில் போய் இந்த ஆன்மாக்கள் சேர்ந்துவிடும்.
 
சேர்ந்த பின்… ஏன்டா எனக்கு இன்னும் ஆடு கொடுக்கவில்லை…? உன் குடும்பத்தை நான் பார்க்கின்றேன் பார்…! என்று அருளாடும்.
 
இது எல்லாம் மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் தான்…!
 
ஏனென்றால் அதே உணர்வு கொண்டு இங்கே எண்ணி ஏங்கி வரப்படும்போது இந்த உடலுக்குள் அது புகுந்து விடுகிறது. அந்த அசுர குணங்கள் கொண்டே அது கேட்கும்.
 
ஆனால் மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்றால்…
1.அந்த மாடனுக்கு அதைச் செய்யவில்லை
2.அதனால் இந்த நிலை உருவானது என்று…!
 
இவை எல்லாம் அரசர் காலங்களில் “ரிக்கியர்கள்…” என்று சொல்வார்கள். மாட்டுக்கு ஒரு உணர்வும் பன்றி போன்ற மற்ற மிருகங்களுக்கு என்று அதனின் அசுர குணங்களும் உண்டு. அதைப் பலியிடுவார்கள்.
 
இதைப் போன்ற மிருக உணர்வுகளைச் சொல்லி (மந்திர ஒலி கொண்டு) அந்த உணர்வைத் தனக்குள் உருவாக்கப்பட்டு அந்த உணர்வின் மந்திரத்தை இதே மனிதனுக்குள் எடுக்கப்பட்டு இதே மாமிசத்தை அவனுக்குள் உணவாக உட்கொள்ளச் செய்வார்கள்.
 
இந்த உணர்வின் தன்மை பதிவானபின் அந்த அசுர குணங்கள் கொண்டு மனிதனே அசுரனாக மாறுகின்றான் இதனுடைய நிலைகளில்.
 
அக்கால அரசர்கள் தனக்குப் பாதுகாப்புக்காக இப்படி மாற்றப்பட்டு ஞானிகள் காட்டிய அருள் உண்மையின் உணர்வுகளை இவர்களுக்குச்  சாதகமாக்கி தீமையின் விளைவாக உருவாக்கிக் கொண்டார்கள்.
 
அதர்வண என்று நல்ல குணங்களை அடக்கி எதிரி நாட்டு அரசனையோ அவன் நாட்டு மக்களையோ அடிமைப்படுத்தும் நிலைகள் கொண்டு வந்தார்கள்.
 
இதே அசுர உணர்வுதான் மக்கள் மத்தியிலும் சுழன்று கொண்டுள்ளது. இதிலிருந்து நாம் மீள வேண்டும்.
 
இன்றைய விஞ்ஞான உலகில் இவையெல்லாம் கடந்து போய்விட்டது. விஞ்ஞான அறிவு ஓங்கிவிட்டது. கதிரியக்கச் சக்திகள் அதிகமாகப் பரவியிருக்கின்றது.
 
சிந்தனை குறையும் நிலைகள் வந்துவிட்டது. மனிதனுக்குள் இருக்கும் நல்ல சிந்தனையே இழந்து மனிதனுக்கு மனிதன் கொன்று புசிக்கும் நிலை வந்துவிட்டது.
 
ஆனால் இதையெல்லாம் வென்று பழகியவன் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக உள்ளான்.
 
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து நமது மனதை நாம் கட்டுபடுத்துதல் வேண்டும்.
2.அதைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிட வேண்டும்.
3.எவர் இதைச் செய்கின்றனரோ அவரே பற்றற்ற நிலைகள் கொண்டு பிறவியில்லா நிலைகள் அடைகின்றார்.

ஆகவே நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதைப் பெறுவோம் அருள் ஞானத்தைப் பெருக்குவோம்.

முன் ஜென்ம வாழ்க்கை என்று ஒன்று உண்டா…? - ஈஸ்வரபட்டர்

இவ்வுலகில் சில இடங்களில் சில ஆத்மாக்கள் குழந்தைப் பிராயத்திலேயே அதன் வயதுக்கு ஒவ்வாத நிலையில் சில நிலைகளை ஞானோதயம் பெற்று “வயதுக்கு மீறிய செயல்கள் செய்கிறது...” என்றால் அது எந்த நிலையில்…?
 
அவ்வாத்மாவின் ஒளி அலைகள்…
1.அதனுடைய முன் ஜென்மத்தில் சில மகான்களின் தொடர்புடன் வாழ்ந்திருந்து
2.அவர்களின் எண்ணத்திலேயே ஆத்மா பிரிந்து…
3.மறு ஜென்மத்திற்கு வரும் பொழுது தான் இத்தகைய நிகழ்வுகள் வருகிறது.
 
ஒவ்வோர் உடலுக்குள்ளும் பல அணுக்கள் உள்ளன… பல ஆவிகளும் உடலில் ஏறிக் கொண்டுள்ளன…! என்று ஏற்கனவே உணர்த்தியுள்ளோம்.
 
அந்த மகானானவர் அவர் வாழ்ந்து ஞானம் பெற்று சக்தியின் நிலையில் ஒளியுடன் கலக்கப் பெறும் பொழுது அவர் உடலுடன் உள்ள நிலையிலேயே அவர் எடுத்த ஜெபத்தினால் அவ்வுடலில் இருந்த மற்ற ஆவிகளும் அணுக்களும் (பல கோடி எண்ண அணுக்கள்) அவரின் ஞானத்தினால் இவைகளும் நல்ல நிலை எய்துகிறது.
 
மகான் உடலைவிட்டுச் செயல்படும் நிலையிலேயே இவ்வுடலில் தங்கிய இவ்வாவிகளுக்கும் அவற்றின் எண்ணமெல்லாம் நீங்கி இம் மகானுடன் அவர் உடலில் சாடியதின் பயனால் அவர் பெற்று ஏற்றிய ஞானத்தின் ஒளியில் பங்கு பெறுகிறது.
 
அடுத்து மறு ஜென்மத்திற்கு வந்து வாழும் நிலையில்…
1.அந்த மகானுடன் (மகான் உடலில்) ஒன்றியதினால்
2.அவ்வொளி அலையை ஈர்க்கும் அமில குணமுடன் இச்சிசு பிறப்பில் வாழும் பொழுது
3.அம்மகானின் சக்தி அலை இச்சிசுவின் மேல் பாய்ந்து பல அபூர்வ நிலையெல்லாம்
4.வயதிற்கு மீறிய செயலாக இன்றளவும் நடந்து வருகின்றது.
 
திருஞானசம்பந்தரின் மொழி அமுதை ஒரு குழந்தை வெளிப்படுத்துகிறது என்றால் அது இந்த நிலையில்தான்.
 
இன்று மட்டுமல்ல பல கால கட்டங்களாய் சில சில இடங்களில் இப்படி வியக்கத்தகும் நிலைகள் நடந்து வருகின்றன. இதன் வட்ட ஒளியிலேயே ஞானம் பெற்று செயல்பட்டால் மீண்டும் மீண்டும் சக்தி நிலை பெருகிப் பல நிலைகளைச் செயலாக்கிடலாம்.
 
பெற்ற பயனைப் பொருளாக்கும்… புகழுக்கும்… விரயப்படுத்தி விட்டால் ஞான சக்தியின் வலு குன்றிவிடுகின்றது.
 
திருவையாறு தியாகராஜரின் நிலை இந்த நிலையில் வந்தது தான்…!
 
அவர் தன் உடலை விட்டுப் பிரியும் நாள் வரை அச்சங்கீத ஞானத்துடனே ஐக்கியப்பட்டு தான் அடைந்த ஞானத்தின் பொக்கிஷத்தை இம்மியளவும் சிதறவிடாமல் செயல் கொண்டதினால் நல் ஒளி பெற்றார்.
 
இந்த நிலை தெய்வீக நிலையில் மட்டும் ஏற்படுகின்றதா…? மற்ற நிலைகளில் இல்லையா…,? என்ற வினா எழும்பலாம்.
 
இன்று உலகத்தில் பல பாகங்களில் தன் பூர்வ ஜென்மத்தில் இந்த இந்த இடத்தில் வாழ்ந்ததாகவும்…
1.இவர் தான் என் தாய்… இவர் தான் என் தந்தை...! என்று சொந்தபந்தங்கள் உணர்த்தியும்
2.தன் முந்தைய நாமகரணத்தையும் சொந்தபந்தங்களின் நாமகரணத்தையும் மற்ற எல்லாக் குறிப்புக்களையும்
3.மறு ஜென்மம் எய்திய பிறகும் முன் ஜென்மத்தில் நடந்த இடத்தை உணர்த்துகின்றார்கள்.
 
இது எல்லாம் எந்த நிலையில்…?
 
ஓர் ஆத்மா வாழுகின்றது. அது வாழும் நிலையில் இன்று பேய் பிடித்து விட்டது. பிசாசு பிடித்து விட்டது என்றெல்லாம் சிலரைச் செப்புகின்றனர்.
 
எந்தப் பேயும் யாரையும் பிடிப்பதில்லை. ஆனால் இம்மனித ஆத்மாவின் எண்ணச் சிதறலினால் அந்த அந்தந்த எண்ண நிலைக்கொப்ப ஆவி உலக ஆத்மாக்கள் அதன் எண்ணத்தை ஈடேற்றச் சில உடல்களில் ஏறுகின்றன.
 
உடலில் ஏறிய எந்த ஆத்மாவுமே அவ்வுடலுக்குச் சொந்தமான ஆத்மா பிரிந்த பிறகுதான் இவ்வாவி ஆத்மாவும் வெளியேற முடிகின்றது.
 
“ஓர் உடலில் இப்படி ஏறிய ஆவி ஆத்மாவானது…”
1.அந்த உடலுக்குச் சொந்தமான ஆத்மாவைக் காட்டிலும்
2.சக்தியுடையதாய் ஏறிச் சில செயல்களைப் புரிவதினால்தான் சிலர் (சில உடல் ஆத்மாக்கள்)
3.தன் நிலை பெற முடிந்து தன் எண்ணத்தைக் கொண்டு வாழ்ந்திட முடியாமல்
4.ஆவி ஆத்மாவின் செயலிலேயே வாழ்வதினால்தான் “பேய் பிடித்து விட்டது… பிசாசு பிடித்து விட்டது…” என்கின்றனர்.
 
இப்படி வீரிய சக்தி கொண்ட ஆவி ஆத்மாக்கள் ஏறிய உடல் ஆத்மாக்கள் நீண்ட நாளும் வாழ்வதில்லை. அகால மரணம் எய்துகின்றனர்… தன் நிலை மறந்து…!
 
அந்த நிலையிலேயே அவ்வுடலில் இருந்து உடலுக்குச் சொந்தமான ஆத்மாவும்… உடலில் ஏறிய ஆவி ஆத்மாவும்… பிரிந்து செல்கின்றது.
 
ஆனால் அந் உடலில் ஏறிய ஆவி ஆத்மாவிற்குத் தன் செயலைச் செயல்படுத்த மற்றோர் உடலில் ஏறியதினால்…
1.தன் முந்தைய நிலையும் மறந்து
2.எந்த உடலில் ஏறிச் செயல் கொண்டதோ அவ் உடலின் சொந்த பந்தங்களுடன் தன் எண்ணமும் செயல்பட்டதினால்
3.இவ்வுடலுக்குச் சொந்தமான சொந்த பந்தங்களும் வாழ்ந்த இடங்களையும் தனதாக ஒன்றிவிடுகின்றது.
 
பொதுவாக… உடலை விட்டுப் பிரிந்த எந்த ஆத்மாவானாலும் சரி உடனே பிறப்பிற்கு வருவதில்லை. தன் உதிரத் தொடர்புடைய தாய் தந்தையர் மக்கள் இவர்கள் உள்ளவரை பிறப்பிற்கு வருவதில்லை.
 
அப்படி இருக்க… இந்தக் குறுகிய காலத்தில் பிறப்பெய்தி இவர்கள்தான் என் தாய் தந்தையார் சுற்றத்தார்…! என்றெல்லாம் முன் ஜென்மத்தின் நிலையை உணர்த்துகிறது என்றால்
1.இவ்வுடலில் ஏறிய ஆவி ஆத்மாவானது தாயின் கரு நிலைக்கு வந்தவுடன் அதன் இரண்டு நிலைகொண்டு
2.இரண்டு நிலையென்பது அதன் முன் ஜென்ம நிலையும் ஆவியாக மற்ற உடலில் சாடியதின் நிலையும் கொண்டு கர்ப்பத்திற்கு வந்தவுடன்
3.இவ்வாத்மாக்களுக்கு பன்னிரண்டு வகையான அமிலத்தை ஈர்க்கும் குணமுடைய சக்தியைக் காட்டிலும்
4.மற்றோர் உடலில் ஏறி வெளிப்பட்டதின் நிலையினால் தாயின் கருவில் அதன் நிலையும் மறக்கப் பெற்று
5.பிறப்பிற்கு வந்த பிறகு அது எடுக்கும் சுவாசத்தினால்
6.எண்ண நினைவுகள் எல்லாம் நினைவில் சாடும் பருவத்திலேயே
7.அதன் பேசி உறவாடும் கால கட்டத்தில்
8.அவை ஏறிய உடலாத்மாவின் சொந்த பந்தங்கள்… வாழ்ந்த நினைவலைகள்… எல்லாம் இவ்வாத்மா செப்புகின்றது.
 
மற்றோர் உடலில் குடியேறித் தன் முந்தைய ஆவி நிலையை மறந்து அவ்வுடலின் எண்ணத்தில் வாழ்ந்து செயல்பட்ட ஆவிகளினால்தான் இப்படி முந்தைய ஜென்மத்தைச் செப்ப முடியும்.
 
ஆனால் இவற்றிலேயே எல்லா ஆவிகளும் இப்படி மற்ற உடலில் ஏறிய பிறகு ஜென்மத்திற்கு வர முடியாது.
 
நல்ல ஆத்மாவின் எண்ணமுடன் ஏறிச் செயல்பட்ட ஆத்மாக்களுக்குத்தான் இப்படிப் பிறப்பெடுக்கும் நிலை பாக்கியமும் வருகின்றது.

ஆனால் முந்தைய ஜென்ம வாழ்க்கையை உணர்த்தி வாழும் ஆத்மாக்களும் நீண்ட நாட்கள் வாழ்ந்திடாது…!

November 27, 2020

ஒளியுடன் ஒளி சேரின் ஒளிருமே.. அறு குண நிலையுடன் உயருமாம் ஆன்மா...! - ஈஸ்வரபட்டர்

உயிரணு உதித்து உயிராத்மாவாய் ஆத்ம சக்தியை அவ் உயிரணு சேமிக்கும் நிலையிலேயே உயிரணுவின் ஆரம்ப உறுப்பாய் இக்கவன நரம்பின் செயல்தான் முதலில் தாயின் வயிற்றில் உதிக்கிறது.
 
1.அதுவே... உயிரணுவிற்குச் செயல் கருவியாய்
2.அது ஈர்க்கும் அமில குணமான ஆத்மா என்ற ஆவி அமிலம் திடப்பட்டு
3.அதன் தொடர்ச்சியில் இருந்துதான் ஒவ்வோர் உறுப்புகளும் உருக்கொள்கின்றது.
 
மனித ஆத்மாவுக்குகந்த பன்னிரண்டு வகையான குண அமிலத்தையும் ஈர்க்கவல்ல சக்தியாய் இக்கவன நரம்பு ஆரம்ப கட்டத்திலிருந்தே செயல் கொள்கின்றது.
 
சாதாரண மனித ஆத்மாக்கள் இதன் தொடர்ச்சி வட்டத்தில் எக்குண அமில சகக்தியை அதிகப்படியாக ஈர்த்துப் பழக்கப்படுத்தி வாழ்ந்தனவோ அதே தொடர் நிலையில் வாழ் நாள் முழுவதும் வாழ்கின்றன.
 
வாழ் நாள் முடிந்த பிறகும் ஆவி உலகிலும் மறு ஜென்மத்திலும் இதன் தொடரில் இருந்து மாறுபடுவதில்லை.
 
ஆனால் இப்பன்னிரண்டு வகையான அமில வட்டத்தில் வாழும் மனிதன்... தன் நிலை உணர்ந்து... சம நிலை பெற்று...
1.இங்கே உணர்த்தும் ஞான மார்க்கத்தின் தொடர் நிலை எய்துங்கால்
2.இப்பன்னிரண்டு வகையான குண அமிலத்திற்கும் அப்பாற்பட்ட
3.உயர்ந்த குண அமிலமான ஞான அமிலத்தை ஈர்க்கும் பக்குவம் பெற்று விட்டால்
4.அதன் தொடரினால் ஒவ்வோர் ஆத்மாவும் இவ்வுலகினில் நம்முள் கலந்துள்ள
5.தீய சக்தி எது...? நற்சக்தி எது...? என்ற பாகுபாட்டை அறியலாம்.
 
ஒருவரைக் காணும் பொழுதே அவரின்ம் குண நிலையையும்... அவர் எவ்வெண்ணமுடன் நம்மை நாடுகிறார்...? என்ற செயலையும் “அவர் சுவாசமுடன் நம் சுவாசம் மோதும் நிலையிலேயே...” அவரது எண்ண நிலையை நாம் அறியலாம்.
 
ஆனாலும் இந்த ஞானத்தொடர் வழி பெற்றுத் தெய்வத்துடன் ஐக்கியமாகி தெய்வமாகிப் பேரானந்தம் அடையலாம்...! என்ற ஆசையில் செயல்பட்டால் அது கொடிய விஷத் தன்மையுடைய நான் என்னும் அகந்தையில் செல்லும் மார்க்கம்.
 
நாம் பிறந்த பூமியில் நம்முடன் கலந்துள்ள ஜீவ ஆத்மாக்களின் நிலையிலிருந்து ஒதுங்கி... “தான் மட்டும்...” ஆண்டவனாகச் செல்லும் ஞான மார்க்கம் உகந்த மார்க்கமல்ல.
 
நம்முடன் கலந்துள்ளவர்களின் விரோதத்தையும் கோபத்தையும் சாடி வாழ்ந்து... பொருளாசையில் தனக்கே சொந்தமாகப் பொருள் பெற்று... “நான் என்ற வட்டத்தில் வாழ்வதினால் நம் ஆத்மாவிற்கு என்ன பயன்...?”
 
1.நம்முடன் கலந்துள்ள ஜீவ ஆத்மாக்களுக்கு அன்பு என்ற கலசத்தை ஏற்றிக் கலந்து வாழ்ந்து...
2.நாம் பிறந்ததின் நலனை உணர்ந்து...
3.நாம் அறிந்த இந்த உண்மையின் ஞானத்தைப் பலருக்குப் போதித்து
4.வாழும் இக்குறுகிய வாழ் நாட்களில் அன்பின் அடிப்படையில் வாழும் பக்குவத்தையும்
5.நம் சக்தியைக் கொண்டு சேமிக்கும் பொருளினால்
6.பல ஜீவன்களையும் வாழ வைக்கும் முறையை உணர்ந்து செயல்படல் வேண்டும்.
 
நமக்கு உள்ள பொருளை எடுத்து அடுத்தவர்களுக்குத் தானமளித்து அவர்களைச் சோம்பேறி நிலைப்படுத்திடச் செப்பவில்லை.
 
ஒவ்வொரு ஜீவ ஆத்மாவும் தனக்குகந்த செயல் புரிந்து தான் ஜீவிதம் கொள்ள வேண்டும். அதன் வழித் தொடருக்குப் பொருளிடுங்கள். அங்கவீனமுற்ற ஆத்மாக்களுக்கு ஜீவிதம் செய்திடப் பொருள் அளித்திடலாம்.
 
பட்சிகளோ மற்ற மிருக இனங்களோ தனக்கு வேண்டிய உணவை எப்படித் தானாகச் சம்பாதித்துக் கொள்கிறதோ அதைப் போன்ற பக்குவ ஆத்மாக்கள் மனித ஆத்மாவில் குறைவு.
 
பன்னிரண்டு வகையான குண அமிலத்தைப் பெற்ற மனித ஆத்மாதான் இன்று தன் நிலை உணராமல் வாழ்கின்றான். மிருக இனங்கள் மனிதனைக் காட்டிலும் இன்று உயர்ந்ததாகிவிட்டது.
 
1.நாம் நம் நிலையை (தன் நிலை) உணரும் பக்குவம் பெற்ற பிறகு
2.ஞானத் தொடரின் ஓளியை ஈர்க்கும் குண நிலை கொண்ட பிறகு
3.ஞானத்தின் வட்டத்திலுள்ள பல ஒளி ஞானிகள் (மகரிஷிகள்) எல்லாம் நமக்கு உதவுவர்.
 
ஆரம்ப நாளிலேயே ஏன் அவர்கள் நம்மை ஏற்கவில்லை...? என்ற வினா எழும்பலாம்.
 
நம் ஆத்மாவைக் கொண்டு நாம் பெறும் சக்தியின் ஞான ஈர்ப்பில் “நம் செயல் சென்ற பிறகுதான்...” அச் செயலின் ஒளியும் நம்முடன் கலக்குமே அன்றி 
1.அவர்கள் சக்தியை எல்லாம் தீய ஆத்மாக்களின் வட்டத்தில் செலுத்தி விட்டால் அவர்கள் பெற்ற சக்தியும் குறைந்துவிடும்.
2.குறைந்துவிடும் என்பது மட்டுமல்ல வீண் விரயப்பட்டுவிடும்...!
 
இதனை உணர்ந்துதான் சில கால கட்டங்களில் இத்தியான மார்க்கத்தை ஈர்த்து ஞானத்தின் வழிபெறும் ஆத்மாக்களின் நிலையுடன் இவ்வுலகிற்குத் தன் ஒளியை எப்படி எப்படி எல்லாம் பரப்பிடலாம்..? என்ற ஆர்வத் துடிப்புடன்... இன்று நாம் எப்படிப் பல சித்தர்களின் நிலையை உணருகின்றோமோ அதைப் போன்று பல காலமாய் இச்செயல் நிலைகள் நடந்து வந்தன.
 
1.தானாக எந்த நிலையும் செயல் கொள்ளாது...!
2.ஒளியுடன் நல்லொளியாய்க் கலக்கத்தான் செய்யுமே ஒழிய வீண் விரயப்படுத்திச் செயல்படாது.

மனிதனான பின் தனக்குள் வரும் தீமைகளை நீக்கி ஒளியாக மாற்றும் பயிற்சியே பிரம்ம சூத்திரம்

இங்கே யாம் (ஞானகுரு) உபதேசம் செய்கின்றோம். பெரும்பகுதியான படித்தவர்கள் என்ன நினைக்கின்றார்கள்...? யாம் சொல்வதை சரியா தப்பா...! சரியா தப்பா...? சரியா தப்பா...? என்று ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பார்கள். 
 
ஆனால் அந்த அளவுக்குப் படிப்பில்லாதவர்கள்
1.யாம் என்ன சொன்னாலும் அதைப் பதிவாக்கிக் கொள்கின்றார்கள்.
2.குருநாதர் சொன்னார் அல்லவா... இதை நாம் செய்து பார்ப்போமே...! என்று
3.அந்த உணர்வுகள் தூண்டும்போது அவர்கள் ஞானத்தைப் பெறுகின்றார்கள். 
 
படித்தவர்கள் என்ன செய்கின்றார்கள்...?
 
நான் மகாபாரதத்தைப் படித்தேன் கந்த புராணத்தை படித்தேன்... பிரம்ம சூத்திரத்தையும் படித்தேன். ஆனால் அதையெல்லாம் இங்கே சாமி (ஞானகுரு) சொல்லவில்லை.
 
ஆக அவர்கள் படித்ததைப் பதிவு செய்து கொள்வார்கள். ஆனால் இங்கே யாம் சொல்லும் ஞானத்தின் நிலைகள்
1.அந்த அருள் ஞானிகள் பெற்றதைச் சொல்லும்போது இந்தச் சூத்திரத்தை விட்டுவிடுவார்கள்.
2.காலி செய்து கொண்டே இருப்பார்கள்...
3.தான் பதிவும் ஆக்க முடியாது. அதைப் பெறவும் முடியாது.
 
அவர்கள் படித்த பிரம்ம சூத்திரத்தில் தெளிவாக இருக்கின்றார்கள்.
 
இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் மனு நீதி சாஸ்திரத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
1.மனிதனான பின் இந்த தீமைகளை அகற்றுவது எப்படி...?
2.தீமையை அகற்றியவன் யார்...?
3.தீமையை அகற்றிய உணர்வுகளை நாம் எப்படி எடுப்பது...? என்று
4.இந்த மனு நீதி சாஸ்திரத்தில் இது உண்டு.
 
மனுஷாள்...! என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அந்தச் சாஸ்திரத்தை தெளிவாக்கும் நிலைகள் இல்லை.
 
மனு நீதி சாஸ்திரத்தை நான் படித்து இருக்கின்றேன்... இவர் சொல்வது எங்கே இருக்கின்றது...? காணவில்லையே...! இந்த நிலைகள் தான் படித்தவர்களுக்கு எண்ணமாக வரும்.
 
மகாபாரதத்தைப் படிக்கும்போது படித்த நிலைகள்... அந்தப் படித்தது மட்டும் தான் இருக்கும். குருநாதர் சொல்வதை அதிலே காணோமே...! என்பார்கள்.
 
உதாரணமாக கேரளாவில் மொக்கை அரிசியைச் சாப்பிடுகின்றார்கள். அதனின் ருசி வேறாக இருக்கின்றது. இங்கே நாம் பொன்னி அரிசியைப் போட்டுச் சாப்பிட்டோம் என்றால் அந்த ருசி வேறு இருக்கும்.
1.அந்த ருசியை இதிலே காணோமே... என்பது போன்று
2.அந்தப் படித்த உணர்வுகள் எதுவோ அதே தான் வரும்.
 
நம்மிடம் மொக்கை அரிசியைச் சாப்பிடச் சொன்னால் பார்த்தவுடனே பொன்னி அரிசியின் ருசி அதில் வரவில்லையே என்று தான் சொல்வோம்.
 
ஏனென்றால் அந்தந்த உணர்வின் சுவை எதுவோ அதனால் வளர்ந்த அணுக்களும் அதே போல் தான் உணர்வினை இயக்கும். ஆக மதங்கள் ஆனாலும் இனங்கள் ஆனாலும்
1.எதன் மேல் பற்று வைத்து நாம் பதிந்து கொண்டோமோ
2.அதன் சுவை தான் அவர்களுக்கு ரசிப்பாக இருக்கும்.
 
நம் குருநாதர் காட்டிய வழியில் அருள் ஞானியின் உணர்வை நாம் பெற வேண்டும். இருள் சூழா நிலைகள் கொண்டு நம்மை எப்படிப் பாதுகாக்க வேண்டுமென்று இங்கே யாம் கொடுக்கும் உபதேசங்களைப் பதிவாக்கிக் கொண்டால் அதன் சாரமாக நமக்குள் அருள் ஞானியரின் உணர்வைப் பெருக்கி நமக்குள் அறியாது வரும் தீமைகளை மாற்ற முடியும்.
 
படித்ததை வைத்து நாம் தெளிவாக்க வேண்டுமென்றால்...
1.படித்தது பாதைகளை அறிவதற்கு உதவும்.
2.ஞானத்தின் நிலைகள் வளர்வதற்கு அருள் ஞானியின் உணர்வைப் பெறுதல் வேண்டும்.
3.ஞானத்தை வைத்துத்தான் படித்த கல்வியின் நிலைகள் ஞானத்தில் கொண்டு செல்ல முடியும்.
 
கல்வி உடலின் உணர்வுக்குதான் உதவுமே தவிர... உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை வளர்க்கும் ஞானத்திற்கு இது உதவாது.
 
நமக்கு நற்பாதையை காட்டுவதற்குத்தான் கல்வி. அந்தக் கல்வியை நாம் சீராக எண்ணி
1.அந்த அருள் ஞானியின் உணர்வுடன் ஒன்றிப் பார்த்தால்
2.இன்றைய விஞ்ஞான உணர்வின் தீமையான விளைவுகளை மாற்றியமைக்கலாம்.