ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 17, 2018

அகஸ்தியர் துருவ நட்சத்திரமாக ஆனது போன்று கணவன் மனைவி நீங்கள் இருவரும் சேர்ந்து "மின்னலின் ஒளிக் கற்றைகளை நுகரப் பழகுங்கள்"

துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதை நீங்கள் நுகர்ந்து அது மனைவிக்குப் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். மனைவியும் அதே போல அந்த அருள் சக்தி என் கணவர் பெற வேண்டும் என்று இப்படி இரு உணர்வும் ஒன்றிடல் வேண்டும்.

இப்படி இரு உணர்வும் ஒன்றானால் கருவுற்று உருவான நிலை எப்படியோ அதன் வழியாக இந்த அருள் உணர்வுகளும் வலு பெறும்.

என்னிடம் ஒருவன் சண்டையிட்டு மோசமாக நடந்து கொண்டு இருக்கின்றான் என்று மனைவி தன் கணவனிடத்தில் சொன்னால் “ஆகா... இப்படி ஆகிவிட்டதா...?” என்று கணவனுக்குப் பகைமை உணர்வை வளர்க்கின்றது.

கணவனும் இதே போன்று தன்னை ஒருவன் தாக்குகின்றான் என்று மனைவியிடம் சொல்லும்போது மனைவி கேட்டவுடனே “தன் கணவனுக்கு ஆபத்து...!” என்ற பயமான உணர்வை மனைவிக்கு உருவாக்குகின்றது.

கணவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் பயத்தின் உணர்வே வரும். இருவருமே இப்படிப்பட்ட உணர்வுகளை எடுத்து வாழ்க்கையில் தீமை என்ற நிலைகளை உருவாக்கிக் கொள்ள முடிகின்றதே தவிர தடுத்திடும் நிலை இல்லை.
இதைத் தடுக்க வேண்டும் என்றால்
1.அருள் மகரிஷியின் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும்.
2.என் கணவர்/மனைவி மகரிஷியின் அருள்சக்தி பெற வேண்டும்.
3.மன பலம் மன நலம் பெற வேண்டும்.
4.அவர் பார்வையால் தீமைகளை அகற்றிடும் சக்தி பெற வேண்டும் என்று
5.அதிகாலை துருவ தியானத்தில் எடுத்து ஒருவருக்கொருவர் பாய்ச்சுதல் வேண்டும்.

இப்படி ஒருவருக்கொருவர் பாய்ச்சி அந்த உணர்வுகளைச்  சொன்னால் அதைல் கேட்டால் அச்சத்திலிருந்து மீட்டிடும் நிலை வருகின்றது.

இருவருமே சேர்த்து இப்படி இணைத்தால் அந்த அருள் ஒளியின் உணர்வை நமக்குள் எளிதில் கவர முடிகின்றது. உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்,

இன்று மின்னல்கள் தாக்கினால் கணவனும் மனைவியும் நீங்கள் இணைந்த நிலைகளில் எடுத்துக் கொண்டால் மின்னல் ரொம்ப எளிதாகத் தெரியும். ஒரு மகிழ்ச்சியூட்டுவதாக உங்களுக்கு வரும்,

ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் மோதும் நிலைகள் வரப்போகும் போது மின்னல்கள் பாய்கின்றது.

நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் சரி அதிகாலை துருவ தியானத்தில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணினால் நட்சத்திரங்களிலிருந்து வரும் விஷத் தன்மையை அடக்கி ஒளிக்கதிர்களாக உங்களுக்குள் உருவாகும்.

அப்பொழுது உங்கள் உடலிலுள்ள அணுக்களுக்கு அதை உணவாகக் கொடுத்து மின்னலின் ஒளிக்கற்றைகளை ஏற்றுக் கொள்ளும் பருவத்தைக் கொண்டு வருகின்றது.

அணு குண்டைப் போட்ட பின் அதனுடைய அணுக் கதிரியக்கங்கள் பாறைகளையும் மற்றவைகளையும் உணர்வின் இயக்கமாக உருகச் செய்வது நட்சத்திரங்கள் தான். இரும்பையும்  கரைத்து ஆவியாக மாற்றி விடுகின்றது.

எல்லாவற்றையும் ஆவியாக மாற்றி விஷத் தன்மைகளைப் பரப்பி விட்டுப் பின் ஒடுங்கி விடுகின்றது. மனிதன் இந்த நட்சத்திரத்தின் நிலைகளை அணு குண்டாக வெடித்துச் செயல்படுத்தும் போது இந்த நிலை ஆகின்றது.

ஆனால் இதையெல்லாம் வென்ற மெய் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் சேர்த்து விட்டால் உங்கள் உடலுக்குள் இருக்கும் தீமைகளை இது கருக்கிவிட்டு உயிருடன் ஒன்றிய ஒளியாக உங்களை மாற்றிவிடும்.

இன்றைய உலகில் விஞ்ஞான வழிப்படி எத்தனையோ நிலைகளைக் கண்டு உணர்ந்தாலும் அது உடலின் நிலைக்குத் தான் வருகின்றது. இவர் உடல் அழிந்து விட்டால்
1.சேர்த்துக் கொண்ட உணர்வுப்படி பற்று கொண்ட இன்னொரு உடலுக்குள் சென்று
2.அதே விஞ்ஞானத்தைத் தான் வளர்க்க முடியும்.
3.மெய் ஞானத்தை அவனுக்குள் வளர்க்க முடியாது.
4.உடலின் இச்சையும் புகழ் தேடும் நிலையும் கொண்டு இருண்ட வாழ்க்கைதான் வாழ முடியும்.

இதையெல்லாம் வென்றவன் மகரிஷி. ஏதோ இலேசாகச் சொல்கின்றேன். இலேசாகக் கிடைக்கின்றது என்று அலட்சியப்படுத்தாதீர்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவது மிகவும் எளிது. நீங்கள் மந்திரம் சொல்ல வேண்டியது இல்லை. மாயம் சொல்ல வேண்டியதில்லை.

காலையில் எழுந்தவுடனே  ,
1.அந்தத் துருவ மகரிஷியின் அருள்சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.கணவன் மனைவிக்குப் பெற வேண்டும் என்றும் மனைவி கணவனுக்குப் பெற வேண்டும் என்று இருவரும் எண்ணுங்கள்.

வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் சோர்வடைகின்றீர்களோ
1.மகரிஷிகளின் அருள்சக்தியால் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்.
2.மன பலம் பெற வேண்டும்.
3.உயர்ந்த ஞானம் பெற வேண்டும்.
4.அந்த அருள் என்றுமே எங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று
5.இரண்டு பேருமே இப்படிப் பங்கிட்டுக் கொள்ளுங்கள்.
6.சோர்விலிருந்து உங்களால் விடுபட முடியும்.

நான் நன்மையைச் செய்தேன். ஆனால் அவன் எனக்கு இப்படித் தீமை செய்தான் என்ற இந்தப் பற்று வந்தால் யார் தீமை செய்தாரோ அந்தப் பற்றின் எண்ணம் கொண்டு அவர் உடலுக்குள் தான் புக முடியும். மீண்டும் தேய் பிறை ஆகத்தான் முடியும்.

நஞ்சினை வென்று ஒளியின் சுடராக ஒளியான முதல் மனிதன் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக உள்ளான். அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் அவன் வழியில் விண் சென்றவர்கள் ஏராளமானோர்.

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்வார்கள். சப்தரிஷி மண்டலங்களில் பல கோடி காலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களையும் அந்த எல்லைக்கு அழைத்துச் செல்வதற்கே இந்த உபதேசம்.