ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 30, 2013

போகமாமகரிஷி, தான் பெற்ற சக்தியை எல்லோருக்கும் பாய்ச்சுகின்றார்

1. போகமாமகரிஷி பெற்ற இந்த புவனத்தின் ஆற்றல்
மனிதனுக்கு எவ்வாறு பல நோய்கள் வருகிறது என்ற நிலையை அறிந்து, அதை மாற்றும் நிலையையும் கண்டுணர்ந்தார் போகமாமகரிஷி.

அதாவது, புவனேஸ்வரி, இப்(பூமி) புவனம் என்பதும்,
இந்தப் பூமியில் தோன்றிய அனைத்துத் தாவர இனச் சத்துக்களும்
பூமி தனக்குள் விண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளும்
உணர்வின் ஆற்றல் அது ஒன்றுடன் ஒன்று கலந்து
அந்த உணர்வின் சத்தான தாவர இனச் சத்துக்கள்
எவ்வாறு அது வெளிப்படுகின்றது?
அந்த உணர்வின் சத்தின் ஆற்றல் என்ன?
அதனைத் தனக்குள் சுவாசித்து, அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் ஆற்றலாக மாற்றி, அந்த உணர்வின் செயல் எவ்வாறு இருக்கின்றது என்பதனைத்தான் போகர் கண்டுணர்ந்தார்.

இதைப் போன்று, தன் உணர்வின் எண்ணத்தாலே
இந்த பூமிக்குள் விளையும் அனைத்துப் பொருள்களும்
இந்த உடலுக்குள் உண்டு என்ற நிலையையும்,
இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் தட்டியெழுப்பி,
இந்த உணர்வின் ஆற்றல் கொண்டு
ஒவ்வொன்றையும் கண்டுணர்ந்தார்.

இந்தப் பூமிக்குள் தங்கம் எவ்வாறு விளைந்தது, வைரம் எவ்வாறு விளைந்தது? மற்ற உலோகத்தின் தன்மைகள் எவ்வாறு விளைந்தது என்ற நிலையைத் தன் உணர்வின் எண்ணங்கள் கொண்டு கண்டறிந்தார்.
ஏனென்றால், இந்தப் பூமியில் தோன்றித்தான் ஆவியாக மாறி, மற்ற அணுக்களாக மாறி, தாவர இனங்களாக மாறி, அந்தச் சத்தின் தன்மை அது ஆவியாக மாறும் பொழுது, அது சூரியனின் காந்த சக்தியின் தன்மை கொண்டு ஆவியின் உணர்வலைகளாக மாறினாலும், அந்த உணர்வின் சத்து உடலுக்குள் கலந்தவுடன், எண்ண ஒலிகளாக மாறுகின்றது.

அந்த உணர்வின் தன்மை பொறிகள்.
நாம் உருவான பின்,
உயிரின் தன்மை துடிப்புக்குள் வரும் பொழுது,
இந்த உணர்வின் அலைகள் அந்த அங்கங்களாக அசைத்து
அது சொல்லாகவும் செயலாகவும்
உறுப்புக்களை எவ்வாறு இயக்குகின்றது என்ற
இந்தப் பேருண்மையை
தனக்குள் தான் கண்டறிந்த மெய்ஞானிதான் போகர்.
2. போகர் ஒவ்வொரு நாளும், ஒரு சக்தியைத் தனக்குள் எடுத்தார்
அவர் நாளொரு மேனியாக அவர் வாழ்நாளிலே
ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடனே,
சூரிய உதயத்தின் தன்மை கொண்டு
சூரியனின் காந்த இயக்கச் சக்தியை தான் நுகர்ந்து எடுத்து, பின்
இன்றைய வாழ்க்கையின் நிலைகள் குணத்தின் சிறப்பும்,
அந்த உணர்வின் தன்மையின் ஆற்றலயும்,
தனக்குள் அந்தச் சக்தியின் தன்மையைச் சேர்த்து,
சக்தியின் இயல்புகள் எவ்வாறு செயல்படுகின்றது என்ற
உண்மையின் தன்மையைத் தனக்குள் எடுத்தார்.
அதுதான், ஒவ்வொரு நாளும் ஒரு சக்தியைக் காதலித்தார் என்பது.

இந்தச் சக்தியைத் தனக்குள் எடுத்து, தனக்கும் தன்னைச் சார்ந்துள்ள மக்களுக்கும் தன்னைச் சார்ந்து வருவோருக்கும் கொடுத்தார்.
3. போகமாமகரிஷி, தான் பெற்ற சக்தியை எல்லோருக்கும் பாய்ச்சுகின்றார்
மனிதர்கள் அவர்கள் சந்தர்ப்பத்தாலே எடுத்துக் கொண்ட நிலைகள் பிணியாகி, உடல் கெடுகின்றது. அதனால் பல இன்னல்களையும், மனோவேதனைகளையும் அனுபவிக்கின்றனர்.

அப்படி, தன்னையறியாமல் சிந்தனையற்ற நிலைகள் சிதறுண்டு இருக்கும் நிலைகள் கொண்ட மக்களுக்கு,
தன் ஒளியைப் பாய்ச்சி”
அந்த உணர்வுக்குள் இருக்கக் கூடிய
தீயவைகளை மாய்த்து, மனிதனை மகிழ வைத்தார்.


தன் ஆற்றல்மிக்க நிலைகளை, தான் எந்தச் சக்தியை எடுத்தாரோ அதே சக்தியைத் தன்னைச் சார்ந்த மனிதனின் உடலில் பாய்ச்சி, அவன் உடலில் இருக்கக் கூடிய தீய வினைகளை நீக்கி, அவர் சார்புள்ள மக்களாக மாற்றினார் போகமாமகரிஷி.

மிருகங்களுக்கு அதிக நோய்கள் வருவதில்லை, மனிதனுக்கு ஏன் வருகின்றது - விளக்கம்

1. நமக்கு நோய் வர முக்கியமான காரணம்
உதாரணமாக, நாம் குழம்பை வைக்கும் பொழுது,
அதில் எந்தப் பொருளை அதிகமாகக் கூட்டிக் கொள்கிறோமோ
அதனின் சுவை கொண்டு
அந்தக் குழம்பின் தன்மையை மாற்றிவிடுகின்றது.

நாம் எல்லாவற்றையும் சமமாகப் போட்டு, சுவை கொண்டதாக மாற்றும் பொழுது அது அமிர்தமாக இருக்கின்றது. அதைப் போன்று, நாம் சுவை கொண்டு சுவையாகச் சமைக்கும் எண்ணத்தை உருவாக்கி, சுவை கொண்ட நிலைக்கு உருவாக்கும் உணர்வின் ஆற்றல்மிக்க இந்த மனித சரீரம் பெற்றுள்ளோம்.

இருந்தாலும், நம்மையறியாமல் உப்பு, காரம் புளிப்பை சம அளவில்லாமல் போட்டுக் குழம்பை வைத்தால், சாப்பிடும் பொழுது வேண்டாம் என்று ஒதுக்கிவிடும் நிலை வந்துவிடுகின்றது.

ஆகவே, மனித வாழக்கையில் தவறு செய்யும் பொழுது,
ஒவ்வொரு நிமிடமும், நாம் எண்ணிய எண்ணங்களில்
எதை அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோமோ,
அதன் வழிக் கொண்டு, நாம் நமது உடலிலே நோய்கள் வந்துவிடுகின்றது.

கைகால் குத்துவது, வாத நோய், சர்க்கரைச் சத்து, மற்ற இரத்தக் கொதிப்பு, காதில் செவிடு, கண் பார்வை மங்கல், சிந்தனை குறைவது, இருதய நோய், குடல் நோய், அதைப் போன்று, பலவீனமான நோய்கள் நமக்கு வருகின்றது.

குஷ்டரோகம் வரும் பொழுது, நாம் மனிதனாக வளர்வதற்கு எவையெல்லாம் இருந்ததோ, நம் உடலின் உறுப்புகள் அப்படியே தேய்ந்து கரைந்து போய்விடுகின்றது.

உறுப்புகள் இருக்கின்றன. அந்த உணர்வின் அலைகள் வந்தவுடன் அந்த உறுப்புகள் எப்படிக் குறைகின்றது? குறை நோய் வரும் பொழுது, அந்த நிலை மாறுகின்றது

நமது எலும்புக்குள் மற்ற உணர்வுகள் ஊடுருவும் பொழுது, எவ்வளவு திடப் பொருளாக இருந்தாலும், குறைகின்றது (T. B.).

இதைப் போன்று, நாம் எவ்வளவு வறுமையான நிலைகளில் இருந்தாலும் தசைகள் அப்படியே குறைந்து அப்படியே உருகச் செய்கின்றது. இதைப் போன்று,
நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை,
தசைகளை உருக்குவது போன்று
நம் உணர்வின் எண்ணங்களை குறையச் செய்து,
சிறுகச் சிறுக, பல நோய்கள் வருகின்றது.
2. மிருகங்களுக்கு இத்தனை வகையான நோய்கள் ஏன் வருவதில்லை?
நாம் எவ்வளவு பரிபக்குவ நிலைகள் கொண்ட மனித உடலைப் பெற்றாலும், கூடுமான வரை மற்ற மிருக இனங்களுக்கு, இத்தனை வகையான நோய்கள் அதிகமாகச் சாடுவதில்லை.

மற்ற உயிரினங்கள், தான் வாழ்வதற்கு உண்டான நினைவலைகளை அது எடுத்துக் கொள்கின்றது. தன் ஆகாரத்தை தேடிச் செல்கின்றது தேடிச் செல்லும் பொழுது
இடர்ப்படும் தடைகளிலிருந்து
“தன்னை மீட்டுக் கொள்ளும் உணர்வைத்தான்”
மிருகங்கள் சுவாசித்துக் கொள்ளும்.

அப்படி, தன்னை மட்டும் மீட்டுக் கொள்வதற்கும், பல உணர்வுகள் எடுத்துக் கொண்டு தனக்குள் வளர்த்துத்தான், அந்த அணுக்கள் விளைந்து அந்த விளைந்த உணர்வுகளுக்கொப்பத்தான் உடலின் மாற்றங்கள்

இப்படி நாம் மாறி வந்தாலும், இன்று மனிதனானபின், நாம் எடுததுக் கொண்ட குணங்களுக்கொப்ப, இந்த உணர்வுகள் (நோய்கள்) கூடிவிடுகின்றது. இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது, நமக்கு நலம் பயக்கும். எமது அருளாசிகள்.

நாம் எல்லோரும் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றோம்?

1. எதையுமே சிருஷ்டிக்கும் தன்மை மனிதனுக்கு உண்டு
நாம் ஒவ்வொரு சரீரத்திலும் நல்ல உணர்வுகளைச் சுவாசித்து, தன்னை தற்காத்துக் கொள்வதற்காக எடுத்துக் கொண்ட அந்த உணர்வுகளே, நம்மை மனிதனாக உருவாக்கியது.

அதாவது, சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும், சிந்தித்துச் செயல்படும் இந்த உணர்வின் எண்ணமும் அதற்குத்தக்க அங்கங்களும் அமைந்து,
அந்த உணர்வின் ஆற்றலால்,
எதையுமே சிருஷ்டிக்கும் தன்மை கொண்ட
மனித உடலை நாம் பெற்றுள்ளோம்

நாம் மனிதனானபின்,
பல எண்ணங்கள் கொண்டு எண்ணும் பொழுது,
சுவாசித்த உணர்வுகள் நமது உடலுக்குள்
ஒவ்வொரு உடலில் இருக்கும் பொழுதும்
எத்தனை கோடி சரீரங்கள் எடுத்தோமோ
எந்த குணங்கள் கொண்டு தன் நிலைகளைச் சேர்த்ததோ
அது சேர்த்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப உருவங்கள் மாறி
அதனுடைய குணங்களின் எண்ணங்களும்
ஆற்றல் மிக்கதாக அந்த உணர்வின் ஆற்றல் பெருகி வளர்கின்றது.

அப்படி வளர்ந்த நிலைகளுக்கொப்பத்தான், பரிணாம வளர்ச்சி பெற்று உடலின் தன்மைகள் அமைந்தது. அதன் ஆற்றல் மிக்க செயல்கள் செயல்படும் எண்ணமும், அந்த உணர்வுக்கொப்ப உடலின் இயக்கமும், அந்த உடலின் எண்ணங்களை நமக்குள் எண்ணச் செய்தது.
2. பரிணாம வளர்ச்சி பெற்று மனிதனாக வந்த நாம், இன்று என்ன செய்கின்றோம்?
அவ்வாறு வந்த அந்த உடலின் உறுப்புகளின் உணர்வின் தன்மையை, மனிதனானபின் நாம் எல்லா நிலைகளிலும் சேர்த்துக் கொண்டாலும் வளர்ந்து கொண்டபின், நாம் எதையெல்லாம் நன்மை என்று எண்ணுகின்றோமோ, அந்த நல்லதை எண்ணி ஒருவர் தவறு செய்யும் பொழுது, நாம் அதைப் பார்க்கின்றோம். 

எதையும் சிருஷ்டிக்கும் தன்மை கொண்ட மனித உடலை நாம் பெற்றாலும், நம் இன்றைய வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிமிடமும் சலிப்பு, சங்கடம், சஞ்சலம், கோபம் குரோதம், அவசரம், ஆத்திரம், அந்த உணர்வின் நிலைகளைச் நம் எண்ணத்தால் நமக்குள் சேர்த்துவிடுகின்றோம். இவை அனைத்துமே விஷமான உணர்வுகள்.

எல்லோரும் வீட்டில் நல்லதை நினைக்க வேண்டும் என்று நினைப்போம். அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைப்போம்.

நமது பையனுக்குக் கல்யாணம் ஆனபின், “பையன் இப்படியெல்லாம் செய்கின்றானே” என்ற வேதனையை எடுத்துக் கொள்வோம்.

வேதனை என்பது விஷம். வேதனை என்ற சொல்லுக்குள் அனைத்துமே விஷம். சமையல் செய்யும் பொழுது, பலகாரங்களை நல்ல முறையில் பக்குவமாகச் செய்துவிட்டு, கடைசியில் உப்போ, காரமோ அதிகமாகிவிட்டால் என்னவாகும்? சுவை அனைத்தும் மாறிவிடும்.
பையன் செய்யும் தவறைப் பார்த்தபின்,
நாமும் அதைப் போன்ற நிலையை அடைகின்றோம்.

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். ஆனால், ஒவ்வொரு நிமிடமும் குடும்பத்திலும், தொழில் செய்யும் இடத்திலும், கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளை நாம் அதிகமாக நுகர வேண்டியிருக்கின்றது. அதன்வழியில், நம்முடைய உணர்வையே அது மாற்றி விடுகின்றது.

அதை மாற்ற வேண்டுமல்லவா? அதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

June 27, 2013

மனிதனாக ஆனபின், மெய்ஞானிகள் செய்தது

1. பரிணாம வளர்ச்சியில், மனித உடலை நாம் எப்படிப் பெற்றோம்?
மனிதனுடைய ஆறாவது அறிவின் சிருஷ்டிக்கும் தன்மை பெற்றது. உலகிலே சூரியனுடைய நிலைகள் அது வீசும் சந்தர்ப்பத்தாலேதான், ஒரு பொருளுடன் ஒரு பொருள் மோதி, அது ஒரு பொருளை உருவாக்கும்.

எவ்வளவு பெரிய பிரபஞ்சமானாலும்,
சூரியனோ மற்ற கோள்களோ
பேரண்டத்தில் எத்தனை பெரிய
ஆற்றல்மிக்க சக்திகளாக இருந்தாலும்
அவை அனைத்தும் வெளிப்படுத்தும் நிலைகள்
அது ஒன்றுடன் ஒன்று மோதும் சந்தர்ப்பத்தில் அதில் எது கடினமோ அது மற்றதை விழுங்கி, அதற்குள் மாற்றமாகி, மாற்றத்தின் தன்மை வருகின்றது.
இன்று ஒரு எலி இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அதைத் தாக்க, வலுகொண்ட நிலையில் பூனை தன் உணர்வின் நிலையைச் சுவாசித்து, எலியை அடித்து விழுங்குகின்றது. இதைப் போன்றதுதான் ஒரு அணுவின் தன்மையும்.

கசப்புத் தன்மை கொண்ட ஒரு ஆற்றல்மிக்க சக்தி பூமியில் படர்கின்றது. அதைப் போன்று,. ஒரு இனிப்பான சத்தின் தன்மைகள் ஒரு பக்கம் பரவி வருகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

இரண்டும் எதிர் கொண்டு மோதும் பொழுது, சக கசப்பின் அணுக்களின் தன்மை அதிகமாக இருந்தால், இந்தக் கூட்டத்திற்குள் மூழ்கியவுடன் இது மோதிய நிலைகள் கொண்டு, இதனுடைய நிலைகள் வலுப்பெற்று, இந்த இனிப்பின் சத்தை கசப்பு தனக்குள் கவர்ந்து கொள்ளும்.

ஆகவே, கசப்பிற்குள் இனிப்பு சிக்கி இந்த இனிப்பை இழுத்துக் கொண்ட ஒரு அணுவின் தன்மையும், அதற்குள் இருக்கக்கூடிய காந்தமும், அந்த இனிப்பை வளர்க்கக்கூடிய வெப்ப காந்தம் இந்த இரு நிலையும் இந்தக் கசப்பில் இருக்கக்கூடிய காந்தமும் சேர்க்கப்படும் பொழுது, இரண்டு காந்தங்களின் ஆற்றல் அதிகமாகின்றது.

அதே சமயம் வெப்பத்தின் தன்மை அதிகமாகின்றது, அதனுடைய உணர்வுகளில், கசப்பும் இனிப்பும் கலந்த நிலைகள் கொண்ட உணர்வுகள் மாற்றம் அடைகின்றது.

இதைப் போன்றுதான், நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக,
தற்காத்துக் கொள்ளும் உணர்வின் தன்மையை
எடுத்துக் கொண்ட, அந்த உணர்வின் தன்மையே
அணுக்களின் வளர்ச்சி.

அது ஆற்றல்மிக்கதாகத் தெளிவாகி,
அந்தந்த உடல்களில் விளைந்து
அந்த உடலை இயக்கும் பொழுது
உயிருடன் சேர்த்துக் கொண்டு
இந்த உணர்வின் தன்மை உயிராத்மாவாக வந்தது.
இதையெல்லாம் மெய்ஞானிகள் தெளிவாக உணர்த்தினார்கள்.

ஏனென்றால் விஷமான உடலாக இருந்தாலும், எடுத்துக் கொண்ட விஷத்தை நீக்கி, தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய உணர்வாக, அந்த உடலிலே விளைய வைத்து, தன் உயிரான்மாவாக வளர்த்து வந்தது.

அப்படி வளர்த்து வந்த அந்த அணுக்களுக்குத் தக்கவாறு, நம் உடலின் அமைப்புகள் மாறி மாறி, மனிதனாக மிகவும் ஆற்றல்மிக்க நிலைகள் நாம் பெற்றோம்.

ஆற்றல்மிக்க நிலையில், நாம் இப்பொழுது (வளர்ந்து வந்த அந்த ஒரு அணுவின் தன்மைதான்) நாம் எண்ணங்களாகப் பேசுகின்றோம். அது செயலுக்கு வருகின்றது.

அதாவது, நம் உடலில் பல கோடி செல்களின் தன்மையும், ஒரு செயலாக்கும் தன்மையாக உணர்வின் ஆற்றல் வரும் பொழுது சொல்லாகவும், செயலாகவும் வருகின்றது.
2. மனிதனாக உருவாகியபின், மெய்ஞானிகள் செய்தது
நாம் பெசும் இந்தச் சொல்லுக்குள், பல கோடி உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகள் நமக்குள் விளைந்து, செயலின் ஆக்கத்தையும், அதற்குத்தகுந்த உடலின் உருவ நிலைகளை நாம் பெற்றோம், என்ற இந்த உண்மையை அன்று மெய்ஞானிகள் கண்டுணர்ந்து, மனிதனானபின் ஆற்றல் மிக்க இந்த நிலையைக் கண்டு கொண்டான்.

அந்த உணர்வின் சக்தியின் தன்மையை,
அன்று ஞானிகள் தனக்குள் எடுத்துக் கொண்ட
ஆற்றல்மிக்க சக்தி கொண்டு,

மனிதனுக்குத் துன்பம் வரும் பொழுது, மனிதருடைய உடல்களிலே பாய்ச்சச் செய்து, அந்தத் துன்பத்தை நீக்கி, அங்கே அந்த மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவிக்கச் செய்தார்கள்.

June 26, 2013

மனிதன் - தெய்வமாக ஆகும் நிலை பெறச் செய்வதற்கே ஆலயம்

1. மக்களை ஒன்றுபட்டு வாழச் செய்யும் இடம்தான் கோவில்
மனிதனுக்குள், மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைத்தான் கோவில்களாக உருவாக்கினார்கள் ஞானிகள்.

அந்த ஞானிகள் பாதையில் செயல்படுபவர்கள் யாரும் இல்லை.
தனக்குச் சொத்து வேண்டும்,
சுகம் வேண்டும் என்பதற்காக,
சாபமிடும் ஆலயங்களாக மாற்றிவிட்டார்கள்.

நாம் தெளிந்து வாழவும், நம்மை அறியாது இயக்கும் இருளில் இருந்து மீளவும், தனக்குள் இருக்கும் பகைமை உணர்வை மாற்றி, ஒன்றுபட்டு வாழச் செய்யும் இடம்தான், ஆலயம்.

ஆக, இந்த உண்மையின் தன்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதைச் சொன்னால், இவர் கடவுளே இல்லை என்று சொல்கிறார் என்று சொல்வார்கள்.

னால், இவர்கள் காசைக் கொடுத்து, தேங்காய் பழத்தை உடைத்து, ஐயர் மந்திரம் சொல்லி கொண்டு வந்தபின், அந்த தெய்வம் கப்பாற்றும் என்ற நிலைகளில் தான் வருவார்கள்.

ர் இறந்தபின், எந்தெந்த மந்திரத்திற்கு எதை எதை அபிஷேகம், ஆராதனை செய்தார்களோ, அந்த உணர்வின் தன்மையில் மந்திரத்தை ஜெபிக்கும்போது, இவது ஆன்மாவை இன்னொருவர் கைவல்யம் ஆக்கும் நிலைக்குத் தான் வருகின்றது.

ண்மையின் உணர்வின் தன்மையை அறிந்து, நமக்குள் ந்த தெய்வீக உணர்வை எடுத்து, இந்த ஆலயம் வருவோர் அனைவரும் நலம் பெறவேண்டும் என்று எடுக்க வேண்டும்.

கோவிலின் உண்மையின் உணர்வை உணரும் நிலை மக்களுக்கு வர வேண்டும் என்பதற்குத்தான், அன்று கோவிலை மதித்து நடக்க வேண்டும் என்றனர் ஞானிகள்.
    
மனிதனுக்கு இந்த உடலே கோவிலாகின்றது, மனிதனான பின் தீமையை அகற்றும் உணர்வு பெற்ற நல்ல எண்ணங்கள் நமக்குள் இருக்கின்றது. ஆக அதுவே நமக்குள் தெய்வமாக இருக்கின்றது. அந்த தெய்வமான நிலையைக் காப்பதற்காகத்தான், உருவம் அமைத்தனர் ஞானிகள்.

ஆக, நல்ல குங்களை எண்ணி உயிரிலே சேர்த்து,
உணர்வின் நிலையை உடலிலே பெறச்செய்து,
நம்மை உருவாக்கிய நல்ல குங்களை
எப்படிக் காக்க வேண்டும் என்பதற்குத்தான்,
இந்த ஆலயம் என்பதை தெளிவாக உணர்துகின்றனர் ஞானிகள்.
2. மனிதன் - தெய்வமாக ஆகும் நிலை பெறச் செய்வதற்கே ஆலயம்
இன்றைக்கு ஆலயங்களை நாம் மதிக்கின்றோமா? கோவிலுக்கு போய் தேங்காய் பழத்தை உடைத்து, ஒவ்வொரு கோவிலிலும் கிரிவம் வந்து, அங்கே தேங்காய்களை உடைத்து, வாழைப் பழத்தை உறித்துச் சாப்பிட்டு, தோலை அங்கேயே போட்டு, செரட்டையும் போட்டு விட்டு, அபிஷேகம் செய்தேன், சாப்பிட்டேன் என்று வருகின்றார்கள்.

ஆலயத்தை நாம் மதிக்க வேண்டும். ஆலயப் பண்புகளை நாம் மதித்து நடத்தல் வேண்டும். ஏனென்றால்,
நம்மைத் திருந்தி வாழச் செய்வது
ந்தக் கோவில்.

நமக்குள் ஆசையின் தன்மைகள் அதிகமாக வளரும் போது, ஆசையை நிராசையாக மாற்ற வேண்டும். ஒவ்வொருரும் நலமாக இருக்க வேண்டும் என்ற இந்த ஆசையைத்தான் கூட்ட வேண்டும்.

நீங்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வைச் சொல்ல வைக்கும் இடம்தான் கோவில். ங்கு வருவோர் அனைவரும்
இந்தத் தெய்வீகப்ண்பு பெறவேண்டும்,
தெய்வீக நிலையாக இருக்க வேண்டும்,
அவர்கள் குடும்பமெல்லாம் இந்த நிலை பெறவேண்டும்,
என் குடும்பமெல்லாம் நன்றாக இருக்க வேண்டும்,
அவர்கள் தொழில் வளம் பெறவேண்டும் என்று
எல்லோரையும் எண்ண வைக்கும் தெய்வீகப்ண்புகளை வளர்ப்பது ஆலம்.

அதை நாம் யாராவது மதிக்கின்றோமோ? இல்லை. இதை யாம் இப்படிச் சொன்னால், உடனே இவர் சாமியே இல்லை என்று சொல்கிறார் என்பார்கள். இங்கு நாங்கள் இப்படித்தான் வங்குகிறோம் என்பார்கள்.
3. அனைவரையும் காக்கும் உணர்ச்சிகளை ஊட்ட வேண்டும்
லயப்ண்களை நாம் மதித்து நடத்தல் வேண்டும். ஆகவே, நீங்கள் ஆலயத்திற்குச் சென்றால் எப்படி வணங்க வேண்டும்? ஆலயத்தை எப்படிக் காக்க வேண்டும்? என்ற உணர்வினை உபதேசிக்கிறோம்.

ஒவ்வொருவரையும் காக்கும் உணர்ச்சிகளை ஊட்டி,
உணர்வின் தன்மை நிறைவாக்கி,
அவர்கள் பகைமை உணர்வுகளை மக்கச் செய்து,
அன்பு கொண்டு அரவணைக்கும் நிலைகளை வளர்க்க வேண்டும்.

உங்களுக்குள் விளைந்த இந்த உணர்வின் தன்மைகளை, நீங்கள் எல்லோரும் ஆலயங்களில் சொல்லப்படும் போது, உங்கள் உடலில் விளைந்து, அதன் வழி மற்றவர்களையும் வாழச் செய்ய வண்டும்.

ஏனென்றால், இன்றைய உலகில் எங்கு பார்த்தாலும் தீவிரவாதம் என்ற நிலைகள் அதிகமாக இருக்கின்றது. தீவிரவாதம் செய்வோரும் ஆலயத்தில் வணங்குகின்றனர்.

நான் செய்வது எனக்கு நியாயமாக இருக்கிறது என்றும், இவன் அநியாய கொள்ளைக்காரனாக இருக்கிறான், ஆகையால், நான் அவனைக் கொலை செய்யவேண்டும் என்று தெய்வத்திடம் வேண்டிவிட்டு, அவனைக் கொலை செய்கின்றார்கள்.

ஆகவே,துதான் கலி என்ற நிலைகளில் மற்றதை ஒன்றாக்கி, தனக்குள் தீமையின் தன்மையை உருவாக்கி, விஷதின் தன்மை பெருகும் போது. இதே உணர்வின் தன்மை. ஒருவரை ஒருவர் கொல்லும் போது,. விஞ்ஞான அறிவால் இந்த மனிதனைப் போல் உருவாக்குவதும், இந்த மனிதனின் தன்மையை மாற்றியமைப்பதும் கலி.

கலியின் உணர்வு அதிகமாகும் போது, கடைசியில் மனிதரின் உடலில் விஷத்தின் தன்மையாகி, பரிணாம வளர்ச்சியில் மீண்டும் தேய் பிறைக்குத்தான் செல்கின்றனர்.
4. ஒளியின் சரீரம் பெறுவதுதான் “கல்கி”
ஆனால், இந்தக் கலியில் இருந்து விடுபடும் நாம் இந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கினோம் என்றால்,. இதிலிருந்து விடுபட்டு கல்கி என்ற நிலையை அடைகின்றோம்.

உணர்வின் தன்மை ஒளியாக மாற்ற வேண்டும்.
கல்கி என்பது, இருளைப் போக்கும்,
உணர்வை அறிவாக இயக்கும்,
ஒளியின் சரீரமாக நிலைத்து நிற்கும்.துதான் கல்கி.

ஒரு உயிரணு தோன்றினாலே கல்கி, அந்த உணர்வின் தன்மை அணுக்கள் ஒன்றாக எடுத்து, ஒன்றின் வலிமை பெருகும் போது, கல்கி முழுமை அடைகின்றது. அந்தக் கல்கி தான் துருவ நட்சத்திரம். அந்த வழியில் சென்றவர்கள் தான் மகரிஷிகள்.

அவர்கள் ஆறாவது அறிவை, ஏழாவது நிலையாக்கி, சப்தரிஷி மண்டலம் என்ற நிலையில் அடைந்ததை, கடவுளின் அவதாரத்தில் கடைசி நிலையைக் கல்கி என்று தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

இன்று கல்கி என்று வேஷத்தைப் போட்டு, மந்திரவாதியைக் கொண்டு. கல்கி இன்று பூமிக்கு இறங்கி வந்திருக்கிறான் என்று, மந்திர ஒலி கொண்டு பேயாட்டம் ஆடச் செய்யும் நிலைதான் கல்கி என்கிறார்கள்.

ஆகவே, அவரவர் நிலைகளில் அவர்களை ஆட்டிப் படைக்கும் இச்சைகளில் தான் செயல்படுகின்றனர். மனிதனுடைய ஒவ்வொரு உயிரும் கடவுள் என்ற நிலையை மறக்கும்படி செய்கின்றார்கள்..

நம் உயிரே கடவுள். எண்ணிய நிலையில் நம்மை இயக்குகின்றான், நாம் நுகர்ந்த உணர்வை உருவாக்குகின்றான் ஈசன். என்ற உணர்வின் தன்மையில்,
நம் உடலே சிவமாகின்றது.
இந்த உடலான சிவத்திற்குள் பல சக்திகள் இருக்கிறது.
இன்று மனிதான பின் உணரும் பக்குவம் பெற்றது என்று,
தீமையென்ற நிலைகளை விரட்டி,.
நல்ல தெய்வீகப் பண்புகளை நம் உடலில் உருவாக்க வேண்டும்.

இதை உணர்த்துவதற்காகத்ன் ராமாயாணம், மகாபாரதம், கந்த புராணம், சிவ புராணம் என்று அனைத்தையும் கொடுத்துள்ளார்கள் ஞானிகள். இதை நாம் பேணிக் காக்க வேண்டுமா இல்லையா? அதற்குத் தான் இப்போது உபதேசித்தது.