ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 31, 2018

மனம் என்பது கண்ணாடி போன்றது... பக்குவமாகக் கையாளவில்லை என்றால் மனம் நொறுங்கிவிடும் – பரிபக்குவ நிலையை நாம் கடைப்பிடித்துப் பழக வேண்டும்


நம் குடும்பத்திற்குள் சில குறைகள் வந்திடலாம். குறை வந்தால் அந்த பக்குவமாகச் செயல்படும் நிலைகள் குறையும். உதாரணமாக கண்ணாடியில் எழுத வேண்டும் என்று நினைத்து அதை ஓங்கி அடித்தால் என்ன ஆகும்...? கண்ணாடி சிதறிவிடும்.

அதே போல மனிதரின் மனங்களிலும் சிறு  குறைபாடுகள் வந்தால்  நாம் என்ன செய்ய வேண்டும்...?
1.பக்குவமான நிலைகளில் செயல்படுத்த வேண்டும்.
2.நாம் சொல்லக்கூடிய பணிவில் தான் அந்தப் பக்குவம் இருக்கிறது.

சாதாரணமாக வீட்டில் உள்ள தூசியை மருமகள் பெருக்கிக் கூட்டுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். கூட்டும் போது தூசு விழுந்து விட்டதென்றால் ஏம்மா...! இந்தப் பக்கம் சிறிது தூசி இருக்கிறதே. இதையும் கொஞ்சம் சுத்தம் செய்துவிடலாமே...! என்று சொன்னால் இது பக்குவ நிலை.

ஆனால் அதை விட்டு விட்டுத் தூசியைக் கூட்டிக் கொண்டிருக்கும் போதே
1.பார்... வீட்டைக் கூட்டுவதைப் பார்...! 
2.தூசியை விட்டு விட்டுக் கூட்டுகிறாய் பார்...! என்று சொன்னால்
3.அந்தச் சொல் என்ன செய்யும்...?

நான் நன்றாகத் தான் கூட்டுகிறேன்... என்னால் இப்படித்தான் கூட்ட முடியும்...! என்ற நிலையில் அங்கே பக்குவம் தவறுகிறது. இதெல்லாம் குடும்ப வாழ்க்கையில் நம்மை அறியாமல் வரக்கூடிய செயல்.

அதோ அந்த ஓரத்தில் கொஞ்சம் தூசு இருக்கிறதம்மா அதைக் கூட்டிவிடம்மா...! என்று மாமியார் சொன்னால் அந்த நேரத்தில் பக்குவபடச் செய்கிறது.

இதே மாதிரி அண்ணன் குழந்தையோ தம்பி குழந்தையோ மற்றவர்களின் குழந்தையோ குறும்புத்தனம் செய்து கொண்டிருப்பார்கள். ஏண்டா... இப்படிக் குறும்புத்தனமே பண்ணிக் கொண்டு இருக்கிறாய்...? என்று சொன்னால் என்ன ஆகிறது...?

குழந்தையைத் திட்டியவுடன்
1.என் பிள்ளையைத் திட்டுகிறார் பார்...! என்ற உணர்வு வருகிறது.
2.குழந்தையைத் திட்டியது அவர்களைத் திட்டியது போன்ற உணர்வு வருகிறது.

ஆனால் அதே சமயம் அதைப் பக்குவமாக எப்படிச் சொல்ல வேண்டும்...? கண்ணு... கொஞ்சம் பார்த்து நடப்பா.. நீ இந்த மாதிரிச் செய்யப்பா...! என்று பக்குவமாகச் சொன்னால் அந்தக் குழந்தைக்கு ஒரு முறைக்கு இரண்டு மூன்று முறை சொன்னால் சரியாகி விடும்.

“ஏண்டா...?” என்று ஒரு தடவை அதட்டிச் சொல்லிவிட்டு அடுத்து அந்த மாதிரிச் செய்யாதே...! என்று சொன்னால் அவன் கேட்க மாட்டான். பக்குவம் தவறினால் அந்தக் குழந்தையின் உள்ளங்களில் இதுதான் பதிவாகும். நாம் சொல்லும் நல்ல சொல் அங்கே இயக்காது. அது தான் அந்த பரிபக்குவம்.

நான் நல்லது செய்கிறேன்... ஆனால் இப்படிச் செய்கிறார்கள்.. எனக்கு இப்படிக் கஷ்டமாக இருக்கிறது...! என்று பல முறை புத்திமதி சொன்ன பிற்பாடும் அவன் கேட்கவே மாட்டேன் என்கிறான் என்று இப்படிச் சொல்லக் கூடாது.

ஐந்து முறை சொன்னாலும் ஆறு முறை சொன்னாலும் குழந்தை உள்ளங்களில் ஒரு முறை இல்லையென்றால் ஒரு முறை நிச்சயம பதிவாகும்.

நாம் ஒன்றைப் பார்க்கிறோம்... படிக்கிறோம்...! படித்தவுடன் அடுத்த முறை நினைவு வருகிறதா...? திரும்ப அதே போல அந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்தால் தான் மீண்டும் நமக்கு நினைவு வரும்.

நினைவு வரவில்லையென்றால் நான் அன்றைக்குப் படித்தேனே எனக்கு ஞாபகம் வரவில்லையே...! என்று சொன்னால் எப்படி இருக்கும்...?

இதே போல நாம் புதிதாக ஒரு வீட்டிற்குச் செல்லும் சமயம் சில குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்க மாட்டார்கள். நான் அன்பாகத் தானே கூப்பிடுகிறேன். வரமாட்டேன் என்கிறான் என்று சொன்னால் எப்படிச் சரியாகும்...!

நான் (ஞானகுரு) இருக்கிறேன். எல்லோரும் என்னிடம் தாரளமாக வருவார்கள். என் பேரப்பிள்ளை (எல்லோரிடமும் போகிறவன்) நான் கூப்பிட்டால் வருவதில்லை.

அரவணைத்துச் சொன்னால் தான் அவன் நம்மிடம் வருவான். ஒரு முறைக்கு இரு முறை சொன்னவுடன் அப்புறம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வான். ஆகவே நாம் எங்கே சென்றாலும் அந்தப் பக்குவ நிலைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

அந்தக் குழந்தைகளையோ மற்ற பிள்ளைகளையோ பார்த்தவுடன் கண்ணு...! இதை இந்த மாதிரிச் செய்யலாம். ஆனால் அப்படிச் செய்தால் அது தப்பு..! இதை இந்த மாதிரி நீ செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது அங்கே ஏற்றுக் கொள்ளும் நிலை வரும், ஏனென்றால்
1.நாம் சுவாசித்தது உயிரிலே பட்டவுடன் அதை நாதங்களாக ஆக்குகின்றது. அது தான் அரங்கநாதன்.
2.அப்பொழுது அந்த உணர்ச்சிகள் அதற்குரிய சொல்லாக நம்மை இயக்கும்
3.அதே சொல்லைக் குழந்தைகள் கேட்கும் போது அவன் உடலுக்குள்ளும் இந்த உணர்வின் உணர்ச்சியைத் தூண்டி நல்லதாகும்.

ஆனால் ஏண்டா சும்மா சேட்டை செய்கிறாய்...? என்று சொன்னால் என்ன ஆகும்...!
1.முதலில் நமக்குள் அந்த வெறுப்பின் தன்மை வருகிறது.
2.நம் சொல்லைக் கேட்ட பின் அவனுக்குள்ளும் அந்த வெறுப்பின் தன்மை வருகிறது.
3.அதாவது அந்த உணர்ச்சி நம்மை இது ஆள்கிறது.. அதே சமயம் அதைக் கேட்கும் அவனையும் அது ஆள்கிறது.
4.அதைத்தான் ஆண்டாள் என்று சொல்வது.

ஆகவே இந்த வாழ்க்கையில் நாம் எப்படி பக்குவப்படவேண்டும் என்ற நிலைகளைத்தான் சாஸ்திரங்கள் நமக்குத் தெளிவாகக் கூறுகின்றது.

அந்த ஞானிகள் காட்டிய வழியிலே நாம் சென்றால் இந்த வாழ்க்கையில் என்றுமே மகிழ்ந்து வாழ்ந்திட முடியும்.

மனதைத் தங்கமாக்கச் செய்யும் கொங்கணவமாமகரிஷி


அன்று மெய்ஞானிகள் காட்டிய உண்மையின் உணர்வுகளை அரசர்கள் மந்திர ஒலி கொண்டு மனித உடலுக்குள் ஊடுருவச் செய்து அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் ஆற்றல் மிக்கதாகப் பெருக்கிக் கொண்டார்கள்.

1.ஆயிரம் தரம்… ஒரு இலட்சம்… இரண்டு இலட்சம்… தடவை ஜெபித்தால்
2.ஆற்றல்மிக்க சக்தி வருகிறது என்று சொல்லி
3.ஒரே உணர்வின் தன்மையைத் தனக்குள் சேர்க்கப்படும் பொழுது மந்திர சக்திகள் கூடுகின்றது.
4.இதற்கென்று ஒரு மூலத்தை முன் வைத்திருப்பார்கள்.

மூலம் என்பது ஒவ்வொரு அரசனும் ஒவ்வொரு நிலை கொண்டு மந்திரம் செய்வார்கள். இன்று நாடி சாஸ்திரங்களைப் பார்க்கலாம். இந்த நாடிகள் என்றோ எழுதியது இன்றும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த நாடிகள் அனைத்தும் அரசர்களால் எழுதப்பட்டதுதான்…! (ஞானிகளும் மகரிஷிகளும் நாடிகளை உருவாக்கவில்லை)

அரசனாக இருக்கப்படும் பொழுது அவன் தன் உடலை விட்டுச் சென்றபின் இன்னொரு உடலுக்குள் போக வேண்டும் என்பதற்காக வேண்டி இந்த நாடியை எழுதினார்கள்.

அதை எழுதி இன்னொரு உடலுக்குள் மாறவேண்டும் என்று கூடு விட்டுக் கூடு பாயும் தந்திரத்திலே செயல்படுத்தி அடுத்தவர் உடலுக்குள்ளே புகுந்து விடுவார்கள்.

புகுந்த உடலுக்குள் தன் உணர்வின் தன்மையை அங்கு செயலாக்கி மற்ற அரசர்களின் போர் முறையிலிருந்து தப்பித்துத் தன் உணர்வின் நிலையை இன்னொரு நிலைகளுக்கு நிலைப்படுத்தச் செய்தார்கள். இப்படித்தான் நாடி சாஸ்திரத்தின் நிலைகள் வந்தது.

இவ்வாறு வந்த நிலைகளில்தான் அரசனாக இருந்த பிருகு ஆரம்ப காலங்களில் மந்திரத்தினுடைய சக்தியை அதிகமாகச் செயல்படுத்தினாலும் திருவள்ளுவர் காலத்தில் தான் அவர் கொங்கணவர் உடலுக்குள் வந்தது.

பிருகு பல உடல்கள் மாறி மாறி இதைப் போன்று நாடிகளை எழுதி வைத்து அந்த நாடியின் தன்மையை மற்றவர் வாசிக்க அவ்வாறு வாசித்தவர் உடலுக்குள் பிருகு புகுந்து அந்த உடலின் தன்மையையும் தான் செயலாக்கி ஆற்றல்மிக்க சக்திகளைத் தேடி அலைந்தவர்.

அப்படித் தேடி அலைந்து வரப்படும் பொழுதுதான் வீட்டுக்கு வீடு யாசகம் தேடிய கொங்கணவருடைய உடலில் புகுந்து அந்த ஆற்றலின் நிலைகளை இந்த உடலிலிருந்து எடுத்து வந்தார்.

பிருகு முந்தைய நிலைகளில் அரசனாக இருக்கும் பொழுது மனித உடலுக்குள் மந்திரத்தைச் செருகி அதில் பல ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் யானை தேய்ந்து கட்டெறும்பான மாதிரி விண் செல்ல முடியவில்லை.

1.போர் முறைகளினுடைய நிலைகளாலும் பிறிதொரு நிலைகளாலும்
2.தான் விண் செல்ல முடியவில்லை என்று அறிந்த பின்புதான்
3.கொங்கணவரின் உடலுக்குள் வந்து தான் விண் செல்வதற்காக
4.ஒவ்வொரு மனிதரையும் புனிதமாக்கும் நிலைக்கு வந்தார்.

தான் எடுத்துக் கொண்ட ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு ஒரு மனிதனுடைய துன்ப அலைகளை மாற்றிய அவர்கள் எண்ணும் நல்ல எண்ணங்களினுடைய சுவாசமே தன்னை அந்த ஒளிச் சரீரம் பெற வைக்கும் என்று உணர்ந்து கொண்டார்.

அதை உணர்ந்த நிலையில் தன் “மனதைத் தங்கமாக்குவதற்காக…” கொங்கணவர் உடலிலிருந்த பிருகு ஒவ்வொரு வீட்டுக்கும் யாசகம் கேட்டுச் சென்றார். இதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
1.மனதைத் தங்கமாக்கும் நிலைகள் கொண்டு திருப்பதிக்கு வருகின்றார்.
2.கொங்கணவர் வந்து தங்கியிருந்த “இடம்…” இன்றும் திருப்பதியில் உண்டு.

மெய்யை உணர்ந்து ஞான ஸ்தானம் என்ற நிலைகள் கொண்டு திருப்பதிக்கு வந்து அங்கே குடி கொண்டு மந்திர சக்தியினுடைய நிலைகளை மாற்றிவிட்டு விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெறுவதற்குச் செயல்பட்டார்.

முன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் - முருகனின் சிலை. வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்னாடி தான்.

அந்த ஆறாவது அறிவின் தன்மையைத் தன் உடலுக்குள் எடுத்து உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றும் நிலைகளுக்குத்தான் அன்று மனதைத் தங்கமாக்கும் நிலைகளில் செயல்பட்டார் கொங்கணவர்.

போகமாமகரிஷி எப்படி மனித உடலில் விஷத்தை நீக்கி மகிழ்ச்சியான உணர்வுகளைத் தான் பெறவேண்டும் என்று பழனியிலே செய்தாரோ இதைப் போலத்தான் திருப்பதியிலே கொங்கணவ மாமகரிஷி செய்தார்.

பின் வந்த அரசர்கள்தான் இதைப் பல நிலைகளுக்கு மாற்றி விட்டார்கள். திருப்பதியிலே பொருளாசையைத்தான் காட்டிச் சென்று விட்டார்கள். திருப்பதிக்குச் சென்றால் நாம் என்ன செய்கின்றோம்…?

தங்கத்தைக் கொண்டு போய் திருப்பதியிலே அபிஷேகம் செய்துவிட்டு எனக்குத் தங்கத்தைக் கொடு…! என்கிறோம். தங்கத்தை உண்டியலிலும் போடுகின்றோம். வியாபாரத்திற்கு வருபவரிடம் திருப்பதிக்குப் போகிறோம் என்று காணிக்கையாகக் காசு வாங்கிவிட்டு அங்கே கொண்டு போய்ச் செலவழித்துவிட்டு வருகின்றோம்.

லாபம் ஜாஸ்தி வந்துவிட்டால் உனக்குக் கொஞ்சம் பங்கு கொடுக்கின்றேன் என்று கொண்டு சொல்கிறோம்.
1.இந்த மன சுத்தத்தைப் பங்கு போடுவதற்கோ
2.இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் மனமோ அங்கே வருவதில்லை.
3.காரணம் மனிதன் தன் வாழ்க்கைக்குத்தான் இவையெல்லாம் பயன்படுத்த முடிந்ததே தவிர
4.மெய் ஒளியை யாரும் காண முடியவில்லை.

கொங்கணவ மாமகரிஷி மனதைத் தங்கமாக்கினார். ஒருவருக்கொருவர் பாசமும் பரிவும் செலுத்தப்படும் பொழுது அந்தப் பாசத்தினாலே எல்லாமே கூட்டமைப்பாக வருகின்றது என்று உணர்ந்து கொண்டார்.

1.ஒருவருக்கொருவர் நமக்குள் வரக்கூடிய துன்பத்தின் நிலைகளை நீக்கிவிட்டால் மனம் தங்கமாகின்றது.
2.மனம் தங்கமாகும் பொழுது நாம் நினைத்த காரியங்கள் செயலாகின்றது.
3.ஆகவே நாம் அனைவரும் கொங்கணவ மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்
4.தங்கத்தைப் போன்ற மங்காத மனம் பெறுவோம்.

August 30, 2018

அகஸ்தியன் மின் கதிர்களை நுகர்ந்து உடல் பெறும் உணர்வை மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனான் – அவன் பெற்ற சக்திகளை அவன் சகாக்கள் பெற்றுச் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்

பிறந்த பின் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில் அகஸ்தியன் வானை நோக்கிப் பார்க்கின்றான். மின்னல்கள் பல வழியில் தாக்குகின்றது. அதை உற்றுப் பார்த்த அந்தக் குழந்தையோ
1.அந்த மின் கதிர்களின் உணர்வை தனக்குள் நுகர்ந்து அதை அடக்கும் வலிமை பெறுகின்றது.
2.சூரியனிலிருந்து வெளிப்படும் கதிரியக்கங்களை நுகருகின்றான்.
3.மின் அணுக்களைப் போன்று தன் உயிரின் அணுக்களை மாற்றும் தன்மை வருகின்றது.

 புழுவை ஒரு குளவி கொட்டினால் அதனின் விஷத் தன்மைகள் பாய்ந்து புழுவின் உணர்வுகள் மாற்றமடைந்து புழுவை வளர்த்த அந்த உயிர் குளவியின் உணர்வை நுகர்ந்து குளவியாக உருமாறுகின்றது.

இதைப் போலத் தான் தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது தாய் உற்றுப் பார்த்த உணர்வின் தன்மை கருவிலே விளைந்து அகஸ்தியன் பிறந்தபின் மின்னல்களையும் சூரியனிலிருந்து வரும் விஷத் தன்மைகளையும் கருக்கிவிட்டுத் தன் உடலிலிருக்கும் அணுக்களை எல்லாம் ஒளிக் கதிர்களாக மாற்றும் நிலை வருகின்றது.

ஒரு மின் மினிப் பூச்சியை எடுத்துக் கொண்டால் அது நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதன் இயக்கத் தொடரில் மின் ஒளிகளை அது தன் உடலிலிருந்து வெளிப்படுத்தும்.

அது போன்று அகஸ்தியன் உடலுக்குள் இருக்கும் உணர்வின் அணுக்களும் நஞ்சை ஒடுக்கி உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது.

அவன் குழந்தையாகத் தவழ்ந்து வரும் போது அவன் அருகிலே வரும் பாம்பினமோ கொசு இனமோ விஷ வண்டுகளோ மிருகங்களோ யானைகளோ இவன் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகளைக் கண்டு அஞ்சுகின்றது... ஒடுங்குகிறது... இவனைத் தீண்டுவதில்லை... இவன் அருகிலே வருவதற்கு அஞ்சுகின்றது. அதனுடைய விஷத்தின் வலிமையையும் இழக்கின்றது.

இதை உற்றுப் பார்த்த அன்று வாழ்ந்த மக்கள் இது கடவுளின் பிள்ளை என்று இவரை வணங்கத் தொடங்குகின்றனர்.

குளவி கொட்டியபின் புழுவினுடைய தன்மைகள் மாறி அது குளவியானபின் மீண்டும் தாய்க் குளவி எதைச் செய்ததோ அதே போல ஒரு கூட்டை அமைத்து தன் இனத்தைப் பெருக்குகின்றது.

அதே போல அகஸ்தியனுக்குள் இருக்கும் உணர்வுகள்
1.நஞ்சை ஒடுக்கிடும் உணர்வின் அறிவை அவனுக்கு ஊட்டி
2.இதன் வழி கொண்டு அவன் அரும் பெரும் சக்திகளை எல்லாம் பெறுகின்றான்.

மிருகங்கள் இவனைத் தாக்குவதில்லை என்ற நிலைகளை அறிந்த பின் அகஸ்தியன் காட்டுக்குள் செல்லும் போது படைகள் போன்று அவன் பின்னாடி மக்கள் செல்கின்றனர்.
அவன் கடவுளின் அவதாரம் இவன் காட்டு அரசன் என்று அவனைப் போற்றித் துதிக்கும் நிலையும் வணங்கும் நிலையும் அக்காலங்களில் வருகின்றது.

தன் ஐந்தாவது வயதிற்குள் பூமிக்குள் உருவாகும் தாவர இனங்களுக்கு உணவு எவ்வாறு கிடைக்கின்றது…? இது எப்படி விளைகின்றது..? எதன் வழி விளைகின்றது என்று அவன் அறிகின்றான்.

அகண்ட அண்டம் எப்படி உருவானது என்பதையும் உணர்வின் தன்மை ஒளியாகச் சூரியன் எவ்வாறு பிறந்ததென்ற உணர்வையும் அறிகின்றான். அவன் கண்ட உண்மையை அக்கால மக்களிடம் வெளிப்படுத்துகின்றான்.

அக்கால மக்கள் அவன் சொல்வதின் உணர்வை அறியாத நிலை வரும் பொழுது அகஸ்தியன் உணர்ச்சியின் தன்மையைக் கூட்டி இயற்கையின் இயக்கத்தை ஜாடையாகக் காட்டி அதன் வலிமையைக் காட்டுகின்றான்.

ஐந்தாவது வயதில் பூமியின் துருவத்தை உற்று நோக்கி அதிலிருந்து வரும் விஷத் தன்மையை நுகர்ந்து அந்த நஞ்சினை வென்றிடும் அணுத் தன்மையைத் தனக்குள் வளர்க்கிறான்.

அகண்ட அண்டத்தின் நிலையும் பிரபஞ்சத்தின் நிலையும் சூரியனின் இயக்கமும் இந்தப் பிண்டத்திற்குள் (உடலுக்குள்) எப்படி உருவானது என்ற உண்மை நிலையையும் அவன் உணர்கிறான்.

அணுவின் இயக்கத்தை உணரும் பருவம் பெறுகின்றான். அந்த உண்மையின் இயக்கத்தை அறிந்ததனால் அவனுக்கு அகஸ்தியன் என்ற காரணப் பெயர் வைக்கின்றனர்.

இந்தப் பேருண்மைகள் அனைத்தும் அவனுக்குள் வளர்ந்து வளர்ந்து வளர்ந்து வளர்ந்து தான் கண்டதைத் தன் அருகில் உள்ள மற்ற சகாக்களுக்கும் சொல்கிறான்.

அவனின்று வெளிப்பட்ட உணர்வு இன்றும் புவியில் படர்ந்துள்ளது. அவன் நகர்ந்து சென்ற எல்லைகளிலும் பதிந்துள்ளது.
1.அகஸ்தியன் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகித் துருவ நட்சத்திரமாக ஆனான்.
2.அவனுடைய சகாக்கள் அவனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.
3.அந்த அகஸ்தியனின் உணர்வைக் கவர்ந்தால் நாமும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழலாம்.

கஷ்டத்தையும் வேதனையையும் பதிவு (RECORD) செய்யும்போது துயரமான வாழ்க்கையாகின்றது - அதை மறக்க என்ன செய்ய வேண்டும்...?

விஞ்ஞான அறிவு கொண்டு இப்போது கம்ப்யூட்டரில் (RECORD) பதிவு செய்து வைத்துக் கொள்கின்றார்கள். தட்டி விட்டவுடனே அதனுடைய இயல்பைத் தெரிந்து கொள்கின்றார்கள்.

அதே போல் தான் மனிதர்கள் நாம் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதைப் பதிவாக்கிக் கொள்கின்றோம். சண்டை போடுவதை எண்ணியவுடனே நமக்கும் கோபம் வந்து விடுகின்றது. நம் நல்ல காரியத்தைக் கெடுத்துக் கொள்கின்றோம்.

கோவிலுக்குப் போய் நாம் தெய்வத்தை வணங்குகின்றோம். வணங்கி வரும் பொழுது நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால்
1.“நடக்கவில்லையே... நடக்கவில்லையே...!” என்று எண்ணி
2.என்னத்தைச் சாமியைக் கும்பிட்டு என்ன பண்ணுவது…? என்று இதைப் பதிவு செய்து விடுகின்றோம்.

(இந்த ரிக்கார்டைத் தட்டியவுடன்) அதாவது சோர்வாக எண்ணியவுடன் நல்லதை எடுக்க முடியாமல் போய்விடுகின்றது. ஏனென்றால் நாம் எண்ணிய உணர்வுகள் எல்லாமே
1.நம் எலும்புக்குள் எண்ணிலடங்காத நிலைகளில்
2.ரிக்கார்டு பண்ணி வைத்துக் கொள்கின்றது.
(விஞ்ஞானி இதையெல்லாம் எலெக்ட்ரானிக் சாதனங்களின் மூலம் அந்தப் பதிவின் இயக்கங்களை (ELECTRONIC CONTROL) நிரூபித்துக் காட்டுகின்றான்.)

உதாரணமாக தன் குழந்தையை எண்ணி
1.எப்பொழுது பார்த்தாலும் குறும்புத்தனம் தான் பண்ணுகின்றான்
2.யாரிடம் சொன்னாலும் கேட்க மாட்டான்... அவன் அப்படித்தான் செய்வான்...! என்று பதிவு வைத்துக் கொள்வார்கள்.

அதே போல் மனைவி மேல் கணவனுக்கு வெறுப்பு வந்து விட்டால் அதைப் பதிவு செய்து கொள்வார்கள். கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாம்மா... என்று மனைவியைக் கூப்பிடுவார்கள். ஆனால் அவர்களோ வேலையில் கவனமாக இருப்பார்கள். கணவன் சொன்னது சரியாகக் காது கேட்டிருக்காது.

பாருங்கள்... எப்போது பார்த்தாலும் நான் கூப்பிட்டால் சரியாகக் கவனிப்பதே இல்லை...! என்று அடுத்துக் கோபமாகப் பேசுவார்கள். அதே மாதிரி இப்போது கணவரின் கோபத்தைப் பார்த்தவுடனே மனைவி என்ன செய்வார்கள்.
1.ஏதாவது ஒன்று என்றால் கொஞ்சம் கூடப் பொறுத்துச் சொல்லாதபடி
2.எப்பொழுது பார்த்தாலும் “என்னைக் குற்றவாளியாக்குகின்றாரே...!” என்பார்கள்
3.ஆக இத்தகைய வெறுப்பான உணர்வுகள் தான் குடும்பத்தில் வளர்கின்றது.

நீங்கள் சங்கடமாக இருக்கும் போது உங்களுடைய செயல்கள் எப்படி இருக்கிறது என்று மட்டும் பாருங்கள். உதாரணமாக ஒரு துணியை வாங்க ஜவுளிக் கடைக்குப் போகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் உங்கள் குழந்தை ஏதாவது ஒன்றைக் கேட்டு அடம் பிடிக்கிறது. அப்பொழுது என்ன சொல்வீர்கள்...?

ஏன்டா வெளியிலே போகும் போது இப்படிப் பண்ணுகின்றாய் என்ற சங்கடம் வரும். அடுத்து வெறுப்பு உணர்வு வரும். அப்புறம் கோபம் வரும். இத்தனையும் எடுத்துக் கொண்டு நீங்கள் கடைக்குள் போகின்றீர்கள். அந்த நேரத்தில் வெறுப்பு உணர்வு தான் உங்கள் கண்ணிலே வரும்.

நல்ல துணிகளாக எடுத்துக் காண்பிப்பார்கள். எதைப் பார்த்தாலும் இது வேண்டாம்... அது வேண்டாம்... என்று சொல்லிக் கடைசியில் வெறுப்பின் உணர்வு கொண்டு சடைத்துப் போய் “சரி இதையாவது கொடுங்கள்...!” என்று ஒன்றை எடுத்துக் கொண்டு வருவீர்கள்.

வீட்டுக்கு வந்தவுடன் துணியை எதிர்பார்த்துச் சந்தோஷமாக இருப்பவர்கள் இந்தத் துணியைப் பார்த்ததும்... “என்னங்க...! போயும் போயும் இந்தப் புடவையைத் தான் எடுத்து வந்தீர்களா...!” என்பார்கள்.

இல்லை...இல்லை... இந்தத் துணிக்கு என்ன குறைச்சல்...? என்பீர்கள். அவர்கள் உங்களிடம் நன்றாகப் பாருங்கள்...! என்பார்கள். ஏனென்றால் அன்றைக்குத் தெரியாது.

மறுநாள் காலையில் பார்த்தீர்கள் என்றால் நல்ல துணி இல்லை என்று தெரிய வரும். “சனியன்...! நான் போகும் போது குறுக்கே வந்துவிட்டது. அடம் பிடித்து நமக்கு இத்தனை தொல்லை கொடுத்து விட்டான் சனியன் பிடித்த பயல்...!” என்று மீண்டும் அந்தச் “சனியன்” என்று தான் சொல்வோம்.

யாரை...? இந்த உணர்வுகள் தன் குழந்தையைப் பார்க்கும் பொழுது அந்த வெறுப்பு வருகின்றது. அவனை எண்ணிக் கொண்டு நீங்கள் சமைக்கச் சென்றாலும் சரி... காயை அறுக்கும் பொழுது நேராக அறுப்பதற்குப் பதில் சாய்த்துப் பிடிக்க வைக்கும். கையில் பட்டுவிடும்.

ஆ,..! என்று சொல்லி வெறுப்பாகி இன்னும் கடுமையான வார்த்தைகளைச் சொல்லிப் பையனைத் திட்டுவீர்கள். வேதனை இன்னும் அதிகமாகும். இதையெல்லாம் நீங்கள் பார்க்கலாம். இது எதைச் செய்கின்றது...? சந்தர்ப்பங்கள் தான் செய்கின்றது.

இப்படி மற்றவர்கள் சண்டை போடுவதையும் குடும்பத்தில் வரும் கஷ்டங்களையும் பதிவாக்கிக் கொள்கின்றீர்கள். அந்தப் பதிவின் நிலைகளை எண்ணும் பொழுது அதன் வழியிலே தான் உங்களை அது வழி நடத்துகின்றது.

ஆனால் இந்தக் கஷ்டத்திலிருந்து எப்படி மீள்வது...? என்று நாம் திகைப்போம்...! இருந்தாலும்... அதை நாம் மறந்து (அந்தப் பதிவை இயக்கவிடாது)
1.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று
2.இந்த உணர்வை எடுத்தால் நமக்குள் அருள் சக்திகள் பெருகுகின்றது
3.சிந்திக்கும் ஆற்றலையும் நமக்குக் கொடுக்கின்றது
4.சிரமங்களிலிருந்து நம்மை மீளச் செய்கின்றது - நமது எண்ணம் தான்...!

நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்று இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்றார்கள் ஞானிகள்.

நம் ஆறாவது அறிவு என்ன செய்கின்றது…? அது இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி. எதன் மேல் நாம் இச்சைப்படுகின்றோமோ அது கிரியையாகி அதன் ஞானமாகத்தான் வருகின்றது.

வாழ்க்கையில் நாம் எதை ஞானமாக உருவாக்க வேண்டும் என்ற நிலையில் ஞானிகள் ஆலயங்களிலே தெய்வீகப் பண்புகளைக் காட்டி அதைப் எல்லோரும் பெறும்படி செய்தார்கள். அந்த உணர்வினை நுகர்ந்தால் நாம் தெய்வமாகின்றோம்.
1.சிலையை உருவாக்கி அந்தச் சிலை வடிவில் ஞானத்தை ஊட்டி
2.நாம் தெய்வமாக எப்படி மாற வேண்டும்...?
3.நம் சொல்லும் செயலும் எப்படித் தெய்வீக நிலையாக மாற வேண்டும்...? என்று
4.நம்மைத் தெய்வமாக்குவதற்காகத் தான் அவ்வாறு காட்டினார்கள்.

இந்த உடலில் எத்தனை காலம் நாம் வாழுகின்றோம்…? வாழும் இந்தக் குறுகிய காலத்திற்குள் உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் அத்தகைய தீமைகளை நீக்குவதற்காகத்தான் அருள் மகரிஷிகளின் உணர்வினை உங்களுக்குள் திரும்பத் திரும்பப் பதிவு செய்கின்றேன். 
1.நீங்கள் எந்த அளவுக்குக் கூர்மையாகப் பதிவு செய்து கொள்கின்றீர்களோ
2.அந்த அளவிற்குத் திரும்ப எண்ணும் போது உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் மகரிஷிகள் உணர்வைப் பெற்றேன்.
4.அதே உணர்வின் தன்மையை இப்பொழுது உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
5.இந்தப் பதிவின் நினைவை நீங்கள் எடுத்துக் கொண்டால் போதும்.
6.நாம் தெய்வ சக்திகளைப் பெறுகின்றோம். ஞானிகள் மகரிஷிகளுடன் ஒன்றுபடுகின்றோம்.

August 29, 2018

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் “அகஸ்தியன் பெற்ற மின்னல்களின் பேராற்றல்கள்”


விஞ்ஞான அறிவு கொண்டு சில காந்தப்புலன் அறிவைக் கொண்டு இன்று இடி மின்னலைத் தாங்கும் நிலையாக இடி தாங்கி (LIGHTNING ARRESTOR) என்று வைத்திருக்கின்றார்கள்.

இதைப் போலத் தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் தாய் தந்தையர்கள் பச்சிலைகளையும் வேர்களையும் முலாமாகப் பூசிக் கொண்டார்கள். அதாவது
1.சில பச்சிலைகள் மின்னல்களின் வீரியத்தைத் தடுத்து
2.அது தனக்குள் ஒரு நல்ல வீரிய உணர்வுகளைக் கொடுக்கும்.
3.இத்தகைய பச்சிலைகளைத்தான் அவர்கள் உடலில் பூசிக் கொண்டது.

அப்படிப் பூசிக் கொள்ளும் போது இடி மின்னல்கள் வந்தால் அதை முறித்து அந்த விஷத்தின் தன்மையைத் தணிக்கச் செய்து கொண்டார்கள். இவர்கள் உடல்களை அனந்த மின்னல்கள் எதுவும் பாதிப்பதில்லை.

மின்னலின் ஒளிக்கற்றைகள் தாக்கும் நிலைகள் கொண்டு ஊடுருவி வந்தாலும் தங்கள் உடலில் பூசிக் கொண்ட தாவர இன மூலிகைகளால் தப்பித்துக் கொள்கின்றனர்.

அதே சமயத்தில் கருவுற்ற தாய் இத்தகைய மூலிகைகளின் மணங்களைச் சுவாசிக்கப்படும் போது கருவில் இருக்கும் குழந்தைக்கும் அந்த ஆற்றல்கள் தாயின் இரத்தத்தின் வழியாக இணைகின்றது..

அந்தக் கருவில் வளரும் குழந்தை இப்படிப்பட்ட விஷத்தை முறிக்கும் மூலிகைகளின் சத்தினைப் பெற்றவன் தான் அந்த அகஸ்தியன். அவன் பிறந்து வளர்ந்து வரும் நிலையில் தாய் கருவிலேயே விஷத்தை முறித்திடும் ஆற்றல் பெற்றதால் எந்த விஷம் கொண்ட உணர்வும் இவனைத் தாக்குவதில்லை. ஏனென்றால்
1.அந்த (மின்னலின் ஒளிக்கற்றைகளைத் தணித்த) மின் கதிர்கள் இவனுக்குள் இருப்பதனால்
2.மற்ற உயிரினங்களும் இவனைப் பார்த்த பின் அமைதியாகி விடுகின்றது.

இவனிடம் எந்த மிருகங்களும் தாக்கும் உணர்வு கொண்டு வருவது இல்லை. பல விஷம் கொண்ட ஜெந்துக்களும் இவனைத் தாக்கும் நிலையற்றுப் போய்விடுகிறது. ஆகையினால் அவன் காட்டிற்குள் தாராளமாகச் செல்கின்றான்.

மின்னல் மோதியவுடனே… அதை உற்றுப் பார்க்கின்றான் அகஸ்தியன்.
1.அது எவ்வளவு தூரம் விரிவடைந்து அந்த ஒளிக் கற்றைகள் செல்கின்றதோ
2.அதைப் போல அகஸ்தியன் தன் பார்வையால் பார்க்கப்படும் போது
3.எதனையுமே ஊடுருவி அதன் உண்மையின் உணர்வை அறிந்திடும் ஆற்றல் பெறுகின்றான்.

இவனுக்குள் பதிந்த அந்த மின்னலின் உணர்வின் தன்மை கொண்டு மின்னல்கள் எதனால் உருவாகின்றது…? என்பதையும் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அறிகின்றான்.

இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகும் உணர்வுகளை நமது பூமி துருவத்தின் வழியாகக் கவர்ந்து
1.இந்தத் தாவர இனங்களும் உயிர் இனங்களும் எப்படி வளர்கின்றது…?
2.நமது பூமியின் இயக்கங்களை அது எப்படி மாற்றுகின்றது…?
3.இது எதனால்…? என்று அவனுடைய சிந்தனைகள் அறியும் ஆற்றலாக இயக்குகின்றது.

ஏனென்றால் அந்த விஷத்தின் நுண்ணிய அலைகளை அகஸ்தியன் அடக்கப்படும் போது உணர்வின் தன்மை மோதலாகும் பொழுது எதனையும் அறியும் பருவம் பெறுகின்றான்.

அப்படிப்பட்ட அறியும் ஆற்றல் வந்ததால் மனிதர்களுக்குத் தேவையான பல பல தாவர இனங்களைப் புதிதாக உருவாக்கும் தன்மையும் பெறுகின்றான்.

தாவர இனங்களை “வேக வைத்து விட்டால்…!” அதனின் இயற்கையின் நிலை மாறுகின்றது என்று அறிந்து மற்ற தாவர இனங்களில் விளைந்ததையும் இணைத்துச் சுவை மிக்கதாக உணவாக உட்கொள்ளும் முறையை முதன் முதலில் அகஸ்தியன் தான் கண்டுணர்ந்தான்.

ஏனென்றால் மிருகங்களைக் கொன்று அதனின் தசைகளை உட்கொண்டால் அதன் மணம் நமக்குள் பெருகி மனித உரு அல்லாதபடி மிருகமாக மாற்றி விடுகிறது என்பதை அறிந்ததால் தாவர இனங்களைச் சுவை மிக்கதாகச் சமைத்து அதை உட்கொள்ளும் நிலையை வளர்த்துக் கொண்டான் அகஸ்தியன்.

இப்படி வளர்த்த நிலை கொண்டு அவன் தன் வாழ்நாளில் அகண்ட அண்டத்தையும் இந்தப் பிரபஞ்சத்தையும் அளந்தறிந்து நமது பூமி அதிலிருந்து தனக்கு வேண்டியதை எப்படிக் கவர்கிறதென்ற உண்மையை அந்தத் துருவத்தின் நிலையை நுகர்ந்தறிகின்றான்.

இதையெல்லாம் எப்போது…? அந்தத் துருவத்தை உற்று நோக்கும் பொழுது தான் அவன் இந்த உண்மைகளை எல்லாம் அறிகின்றான். ஆகையினால் தான் அவனுக்குத் துருவன் என்று பெயர் வைக்கின்றனர். இளமைப் பருவத்தில் ஐந்து வயதிலேயே அந்தத் துருவத்தை அறியும் ஆற்றல் அவனுக்கு வருகின்றது.

அகஸ்தியன் கண்ட பேருண்மையின் உணர்வுகள் தான் இதெல்லாம்.

ஆனால் விநாயகர் அருளால் வாதாபியை வதம் செய்தார் அகஸ்தியர் என்றும் தன் ஐந்து வயதில் காட்டிலே தவமிருந்து மகா விஷ்ணுவிடம் சக்தி பெற்றவன் தான் துருவன் என்றும் பிற்காலத்தில் மதங்களுக்காகவும் இனங்களுக்காகவும் நூல் வடிவில் ஏராளமான தவறுகளைப் புகுத்தி அகஸ்தியனின் பேருண்மைகளை எல்லாவற்றையும் மாற்றி விட்டார்கள்.

அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் வெளிப்படுத்திய உணர்வலைகளை (மூச்சலைகளை) நம்மால் (நினைவு கொண்டு) கவர முடியாது. ஆனால் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அகஸ்தியன் உணர்வைத் தனக்குள் பெற்று விளைய வைத்துக் கொண்டார்.

1.அவரின் துணை கொண்டு அந்த உணர்வினை நாம் நுகர்ந்தால்
2.அன்று அகஸ்தியன் எதையெல்லாம் கண்டறிந்தானோ இந்த அகண்ட அண்டத்தின் அத்தனை உண்மைகளையும்
3.வான இயல்… புவி இயல்… உயிரியல்… அடிப்படையில் நாம் எல்லோருமே காண முடியும்.
4.காண வேண்டும் என்பதற்காக வேண்டித்தான் இதைச் சொல்கிறோம்…!

மழை பெய்வதை ஐந்தறிவு கொண்ட ஒரு தவளை ஆனந்தமாக ஏற்றுக் கொண்டு சப்தமிட்டு வரவேற்கின்றது – ஆறு அறிவு கொண்ட நாம் “சனியன் பிடித்த மழை...” என்று அதைத் திட்டிப் போகச் சொல்கின்றோம்

தேர்தல் நேரத்தில் பய உணர்வு கொண்டு அங்கே இப்படிச் செய்கிறார்கள்… இங்கே இப்படி எல்லாம் செய்கிறார்கள்…! என்று இப்படிப்பட்ட மனித எண்ணங்கள் அங்கே கலந்தவுடனே ஒரு முழுமையான நிலை இல்லாதபடி ஊரே கலங்கிப் போய்விடுகிறது.

ஏனென்றால் மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் வெளிப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இப்படி ஆகின்றது.

பதினெட்டாம் பெருக்கு என்றால் முன்பெல்லாம் ஆறுகளில் குளங்களில் தண்ணீரைப் பார்க்கலாம். மகிழ்ச்சியான எண்ணங்களைப் பரப்பி நல்ல மழை பெய்ய வேண்டும் என்று அந்தக் காலத்தில் சொன்னார்கள்.

அதனால் அப்பொழுது மழையும் பெய்தது. அப்பொழுது அவர்கள் எண்ணங்கள் அனைத்தும் வானை நோக்கிப் பார்த்துப் பேரானந்தப்பட்டார்கள்.

உதாரணமாக தவளை என்ன செய்கிறது…? மழை இல்லாத காலங்களில் தண்ணீர் இல்லை என்றால் சேற்றுக்குள்ளே போய் ஒளிந்து கொள்கிறது. அப்படி ஒதுங்கித் தனக்குள் எடுத்துக் கொண்ட ஜீவ சத்து கொண்டு மேல் தோலை மூடிக் கொள்கின்றது. ஏனென்றால்
1.தன் உடலில் இருக்கக்கூடிய அந்த நீர்ச் சத்து முழுவதும் போய்விடாதபடி
2.அதற்குள்ளேயே (உள்ளேயே) தங்கிக் கொள்கின்றது.

அடுத்து மழை பெய்தது என்று சொன்னால் பெரிய பெரிய தவளை எல்லாம் நீங்கள் பார்க்கலாம். ஆனால் மழை இல்லாத காலத்தில் பாருங்கள். தவளைகள் ஜாஸ்தி இருக்காது. நீங்கள் பார்க்க முடியாது.

மழை பெய்தவுடனே தவளை எங்கிருந்து தான் வருகிறது என்று தெரியாதபடி குர்ரான்…குர்ரான்… குர்ரான்…குர்ரான்… ஆனந்தமான சப்தத்தை எழுப்பிக் கொண்டு வெளியே வருகிறது.
1.மழை நீரைப் பார்த்துத் தன் உடலில் இருக்கின்ற தோலை உறித்துக் கொண்டு
2.ஆனந்தமாக வெளியில் வருகிறது.

மழை நீருக்காகப் பல நாள் ஒளிந்திருந்து அந்தக் குளிர்ச்சியான நிலைகளான பின் வெளியில் வந்து மீண்டும் தன் இனத்தின் கருவை வெளியிட்டுத் தன் இனத்தை அதிகமாகப் பெருக்குகின்றது.

ஐந்தறிவு கொண்ட தவளை மழை பெய்வதற்குச் சப்தத்தைக் கொடுத்துக் கொண்டு வருகிறது. ஆனால் இன்றைய மனிதர்கள் நாம் மழை பெய்தாலே நாம் என்ன சொல்கிறோம் என்று சிந்தித்துப் பாருங்கள்...!

தான் உடுத்தியிருக்கும் துணி அழுக்காகிவிடும். வெளியிலே காயப்போட்ட துணியோ மற்ற எந்தப் பொருளானாலும் ஈரமாகிவிடுகின்றது என்று இப்படி எத்தனையோ காரணங்களைச் சொல்லி
1.சனியன் பிடித்த மழை இந்த நேரத்திலா வர வேண்டும் என்று
2.திட்டி அதைப் போகச் சொல்கின்றோம்.

இப்படிப்பட்ட மனிதனுடைய எண்ணங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மழை பெய்வதைத் தடுத்து விடுகிறது. ஆனால் இப்படித் தடுத்தாலும் அதெல்லாம் ஒரே இடத்தில் ஒன்று கூடி பேய் மழையாகப் பெய்து ஊரையும் மக்களையும் வெள்ளக்காடாக மாற்றி அழித்தும் விடுகிறது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொண்டு அந்த ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நடந்து பழகுதல் வேண்டும்.