ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 28, 2022

வால் நட்சத்திரம்

 

இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களில் ஒதுங்கிய (கழிவு) தூசி மண்டலங்களை “வால் நட்சத்திரம்...” (COMET) என்று சொல்வார்கள். வால் நட்சத்திரம் என்பது கடும் விஷத் தன்மை கொண்டது.

அது போகும் பாதைக்கு நேராக எந்தச் சூரியக் குடும்பம் வருகின்றதோ அதற்குள் அது கவரப்படுகின்றது. சூரியன் அதைக் கவர்ந்தால் பரிசுத்தப்படுத்தி பிரபஞ்சத்திற்குக் கொடுக்கின்றது.

ஆனால் பிரபஞ்சத்தில் அதைப் பரிசுத்தப்படுத்துவதற்கு முன் கோள்கள் ஊடுருவினால் பூமிக்குள் வந்து விடுகின்றது.

மற்ற கோள்களில் ஊடுருவினால் அந்தக் கோள்களில் திசை மாற்றம் ஆகின்றது. கோள்களுக்குள்ளும் மாற்றங்கள் ஆகின்றது. விஷத் தன்மைகள் பரவி விட்டால் அதன் ஓட்டத்தின் திசையும் மாறுகின்றது.

உதாரணமாக செவ்வாய்க் கோள் நாதகாரகன் என்றால் அதிலே இந்த விஷத் தன்மைகள் கவரப்பட்டால் அதே விஷத் தன்மைகளை அதுவும் கலந்து வெளிப்படுத்துகின்றது.

செவ்வாய்க் கோளிலிருந்து வருவதைச் சூரியன் கவர்ந்து பிரபஞ்சத்திற்குள் அனுப்பப்டும் பொழுது அதனின் உணர்வு நம் பூமியின் ஈர்ப்பிற்குள்ளும் வருகிறது.

1.செவ்வாய்க் கோளில் உருவான விஷத்தன்மை கலந்த அந்த நாதம் நம் பூமிக்குள் கவரப்படும் பொழுது
2.தீமையின் உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையாகப் பரவுகிறது.
3.செவ்வாய்க் கோளில் மாற்றம் ஆவதைத் தாவர இனங்கள் எடுத்துக் கொண்ட பின் எதிர் நிலையான உணர்வின் நாதங்களாக மாறி
4.தாவர இனங்கள் கடும் நோயாகி அது விளையும் தன்மையும் மாறுகிறது.

இதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார். சாப்பாடு ஞாபகத்திற்குப் போகாதபடி இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை முழுமையாக யாம் தெரிந்து கொள்ளும் வரையில் பட்டினியாக இருக்கச் செய்தார்.

எதை...?

பட்டினி என்றால்
1.இந்த உடலில் இருக்கக்கூடிய மனித உணர்வு கொண்ட நிலைகளைப் பட்டினியாகப் போட்டு
2.அந்த அருள் ஞானி அகஸ்தியன் கண்ட உணர்வினை நீ பெறு என்றார்.
3.அகஸ்தியன் தெரிந்து கொண்ட உணர்வினை நீ உணவாக உட்கொண்டால்
4.இருளை நீக்கும் அந்த அருள் சக்தி கிடைக்கும் என்ற நிலையை இப்படிக் கொண்டு வந்தார்.

சிவன் இராத்திரி என்று விரதம் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் “நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுப்பதில்லை...!”

கஷ்டம் துன்பம் துயரம் என்ற தீமையான உணர்வுகளை உனக்குள் எடுக்காதபடி அந்த ஞானி கண்ட அருள் உணர்வை உனக்குள் எடுத்து வளர்த்துக் கொள்...! என்று குருநாதர் தெளிவாக்கினார்.

ஒரு கம்ப்யூட்டரை எலக்ட்ரிக் வைத்து இயக்கப்படும் போது உணர்வின் அதிர்வுகளை வைத்து நமக்கு வேண்டியதை எல்லாம் அதிலே பதிவாக்கித் தெரிந்து கொள்கிறோம்.

அதே போல நமது உயிரும் எலக்ட்ரிக்கை உருவாக்கிக் கொண்டுள்ளது.
1.இங்கே யாம் உபதேசிக்கும் போது கூர்ந்து கவனித்தால் உங்கள் கண்...
2.எலும்புக்குள் உள்ள ஊன்களில் அதைப் பதிவாக்கி அதன் உணர்வை இணைத்துக் கொண்டே உள்ளது.

உங்கள் கவனங்கள் யாம் உபதேசிப்பதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் இருந்தால் அது பதிவாகின்றது. மீண்டும் நீங்கள் நினைவாக்கப்படும் பொழுது அந்த மாமகரிஷி அகஸ்தியன் கண்டறிந்த உண்மையின் உணர்வுகளை... காற்றிலிருப்பதைக் கவரும் சக்தியாக உங்களுக்குள் வரும்.

எமது குருநாதர் எனக்கு (ஞானகுரு) எப்படிப் பதிவு செய்தாரோ அதைப் போல உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன். மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் போது நீங்கள் எளிதில் அதைப் பெற முடியும்... நிச்சயம் பெறுவீர்கள்.

இன்று... இந்தக் காற்று மண்டலத்தில் நச்சுத் தன்மைகள் பரவி மனிதனின் சிந்தனை இழந்து... மனிதனுக்கு மனிதனே கொன்று குவித்து அதை ரசிக்கும் தன்மையாக வந்து விட்டது.
1.ஆனால்... நாம் அனைவருமே ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டவர்கள் தான்
2.உலகில் படர்ந்து கொண்டிருக்கும் அந்தச் சிந்தனை இழந்த உணர்வுகள்
3.நம்மைத் தாக்காது இருக்க வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது.

மனிதனுடைய கதியை நிர்ணயிப்பது எது...? - ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
ஒரு கடிகாரம் தெரிகின்றது. கடிகாரத்தின் முட்கள் நகர்வதுவும் தெரிகின்றது.

விளக்கம்:
நேரத்தைக் குறிப்பிடுகின்ற கடிகாரத்தின் முள் ஒன்று பெரியதாகவும் ஒன்று சிறியதாகவும் உள்ளது. சிறிய முள் மணியையும் பெரிய முள் நிமிடங்களையும் காட்டுகின்றன.

பெரிய முள் ஓர் சுற்றுச் சுற்றிவர சிறிய முள் அடுத்த எண்ணுக்கு நகருகின்றது. அதைப் போன்று உணர்வின் எண்ணத்தின் வேகம் கடிகாரத்தின் பெரிய முள்ளைப் போன்று இச்சரீர ஒலியால் சுழலுகின்றது.
1.ஆத்மாவின் பதிவானது பெரிய முள்ளின் சுழற்சி வேகத்தைப் போன்றும்
2.உணர்வின் எண்ணத்தின் வேகம் ஆத்மாவின் செயல் பதிப்புகளானபின்
3.அது விளைந்து... இச்சரீரத்தின் வாசனையாக “இச்சரீரம் அடுத்து அடையும் கதியை...” சிறிய முள்ளின் குறிப்பு உணர்த்துகின்றது.

மனித உணர்வின் எண்ண ஓட்டத்திற்கு ஓப்ப செயலாக்கும் விந்தையின் விளைவுதான் “மனிதனின் கதி...”
1.மனிதனின் கதியில் செயலாக்கும் உயிரே “ஆண்டவனாய்...”
2.ஆண்டவனின் இயக்க ஆத்மாவில் எது பதிவாகின்றதோ அதுவே இறைவனாய் உள்ள நிலையில்
3.மனிதனின் மெய் ஞானம் தன் உணர்வின் எண்ணத்தின் வேகத்தை எக்கதி கொண்டு எடுக்கின்றானோ
4.அக்கதியின் ஈர்ப்பிற்குத்தான் சரீரத்தின் செயல் செயலாகும்.

இயற்கையின் கதியில்... பூமி சுழன்று ஓடும் பொழுது பூமியின் வட்டத்தில் அதன் ஓட்ட கதியில் எது எதையெல்லாம் சந்திக்கின்றதோ அச்சந்திப்பின் அமிலத்தைத் தன் வளர்ச்சியின் வித்தாக்கி... இயற்கையின் கதியாய் பூமி வளர்க்கும் வளர்ப்புகளும்... பூமியின் கால நிலையில் காற்றும் மழையும் உஷ்ணமும்... சுழற்சியின் கதியின் ஓட்டத்திற்கொப்ப பூமியின் செயல் வளர்ச்சி சுழலுகின்றது.

பூமியில் வளரக்கூடிய தாவரங்களின் வளர்ச்சியில் மரங்களையோ கொடிகளையோ வெட்டும் பொழுது... மீண்டும் அடிமரத்தின் தண்டு
1.”ஒரே கதியின் உணர்வில்” தாவரங்கள் இயற்கையின் அமிலத்தை எடுத்து ஒன்றின் தொடர்பில் வளர்வதினால்
2.வெட்டிய பிறகும்... துளிர் விட்டு மீண்டும் அம்மரங்கள் வளர்கின்றன.

ஆனால் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு... அதற்கடுத்த நிலை கொண்ட ஜீவ அணு வளர்ச்சி கொண்ட ஜீவ ஜெந்துக்களின் நிலையில் அதனுடைய உறுப்புக்கள் வெட்டுப்பட்டதென்றால் மீண்டும் வளர்வதில்லை.

அதே சமயத்தில் மனிதனின் நிலையில் பல உணர்வுகளை அறியக்கூடிய செயல் தன்மை எண்ணத்தின் உணர்வின் வேகம் கொண்ட செயல்பாட்டுத் திறமை உள்ளது.

ஆகையினால் மனிதன் தன் எண்ணத்தைக் கொண்டே தனக்கொத்ததைப் படைக்கவல்ல ஆற்றல் திறன் கொண்டவன் ஆகின்றான். மேலும்...
1.செயல் தன்மையின் உருவக நிலைக்கு
2.மனிதனின் நிலைதான் இப்பூமியின் வளர்ச்சியின் கடைசி நிலை. (உயர்ந்த படைப்பு)

தாவரங்களின் நிலையில் தனக்கொத்ததை ஈர்த்து ஒரே செயலில் வளரும் நிலையினால் அவைகளுக்கு எண்ணத்தின் ஓட்டமில்லை. மற்ற ஜீவ ராசிகளின் நிலையில் மனிதனை ஒத்த செயல் தன்மையில்லை.

1.எல்லா நிலையும் உணரக்கூடிய மனிதன்
2.தன் உணர்வின் எண்ணத்தில் எதை எடுக்க வேண்டும்..? என்பதனை
3.மனிதனின் ஞானத்தால் அறிதல் வேண்டும்.

ஆகவே... இப்பூமியில் பல நிலைகளுடன் ஒன்றிய வாழ்க்கையில் நாம் எதை எண்ணுகின்றோமோ அவ்வெண்ணத்தின் பல நிலைகள் வளர்ந்தாலும்
1.தனக்கொத்ததைப் பண்படுத்தி தன் ஜீவிதத்தை வளர்க்கும் மனிதன்
2.தனக்கொத்த நற்குணத்தின் நல் ஒலியை
3.தன் ஆத்மாவின் கதியில் பதிவாக்க வேண்டும்.

February 27, 2022

மனிதன் பித்துப் பிடித்தவன் போல ஆகி... சிந்தனை இழந்து தவிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை...

 

விஞ்ஞான அறிவு கொண்டு அணுவைப் பிளந்து அணுகுண்டைத் தயார் செய்து இங்கே பூமி முழுவதும் கலக்கச் செய்து விட்டார்கள். அது படர்ந்த இடங்களில் எல்லாம் துரித நிலைகள் கொண்டு விஷ அணுக்கள் உருவாகின்றது.

அதுவே மனிதனுக்குள் கடும் நோயாக... டி.பி. போன்ற நிலைகளும் இதனின் உணர்வின் அதிர்வுகள் அதிகமான பின் கேன்சர் போன்ற கடும் நோய்களும் உருவாகிக் கொண்டுள்ளது.
1.அணுக் கதிரியக்கப் பொறிகளால் ஏற்பட்ட விளைவுகளால்
2.”இன்ன நோய் தான்...” என்று காண முடியாத நிலைகளில் ஏராளமாக வந்து கொண்டுள்ளது.

இருப்பினும் வான் வீதியில் வீசப்பட்ட கதிரியக்கங்கள் அதனுடைய நிலைகள் சிதறப்பட்டு நம் பிரபஞ்சத்திளும் பரவியது. ஒவ்வொரு கோளும் அதை நுகர்ந்து மற்ற கலவையுடன் சேர்த்து சூரியனுக்குள்ளும் புகும் தருணம் வந்துவிட்டது.

சூரியனுக்குள் இயற்கையாக உருவாகும் ஆற்றலும் மனிதனால் பரப்பட்ட விஷக் கதிரியக்கமும் இது இரண்டும் மோதும் நிலைகள் அதிகமாகி விட்டது.

எலக்ட்ரிக்கில் மின்சாரம் செல்லும் இரண்டு வயரை ஒன்றாகச் சேர்த்தால்
1.எப்படிக் கரண்ட் அதிகமாகி அனைத்தும் ஃபீஸ் ஆகுமோ அது போன்று தான்
2.இந்த எலெக்ட்ரானிக்கால் இயக்கப்படும் அனைத்துக் கம்ப்யூட்டர்களும் செயலிழக்கப் போகின்றது.

உலகெங்க்லும் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று சீராகப் பயன்படுத்தும் நிலைகள் கொண்டு எத்தனையோ ஆயுதங்களைத் தயார் செய்துள்ளார்கள்.

அந்த ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய இடத்தில் மின்னலோ மற்றதோ தாக்கி விடாதபடி திசை திருப்பும் நிலைகள் கொண்ட கம்ப்யூட்டர்களை வைத்துள்ளார்கள். பாதுகாப்பாக இருப்பினும் அந்தக் கம்ப்யூட்டர்கள் செயலிழக்கப் போகின்றது.

தன் நாட்டைக் காக்க என்று சொன்னாலும் இராக்கெட்டுகளை ஏவி மற்ற நாட்டை அழிக்க வேண்டும் என்ற நிலையில் பொருதி வைத்திருக்கின்றார்கள்.

வேறு நாட்டில் இருந்து ஆயுதங்களை இங்கே எப்போது ஏவினாலும்...
1.அடுத்த கணமே அந்த ஏவலின் ஒலி அதிர்வைக் கண்ட பின்
2.இங்கிருந்து அந்த கம்ப்யூட்டர் உடனே இயக்கி சீறிப்பாயும் அலையாக
3.இதனுடைய ஆணைகள் இடப்பட்டு எதிர்த்துத் தாக்கி வானிலேயே அதைச் சிதறடிக்கும்படியாக
4.இராக்கெட்டுகளை வைத்துள்ளார்கள் விஞ்ஞான அறிவு கொண்டு.

கம்ப்யூட்டர் மூலமாகத் தான் அதை வைத்துள்ளார்கள். அணு விசைகளின் தன்மைகளையும் வைத்துள்ளார்கள்.

அக்காலத்தில் நடந்த போர் முறைகள் வேறாக இருந்தது. ஆனால் இன்று கதிரியக்கப் பொறிகளை அதிக இயக்கமாக வைத்துள்ளார்கள். சமீபத்தில் நடந்த போர்களில் இதைப் பார்த்திருப்போம்.

இராக்கெட்டை வைத்து வான் வீதியிலே மோதும் பல நிலைகளை அது எப்படியெல்லாம் உருவாகிறது...? என்ற நிலையை அறிந்து கொண்டோம்.

இந்த வான் வீதியிலே பரவிக் கொண்டிருக்கும் இந்த உணர்வுகள் அனைத்தும் விஷத்தன்மையாகப் பாய்ச்சப்பட்டு சூரியனுக்குள் வரப்படும் பொழுது அதனுடைய இயக்கம் எதிர்மறையாகி “அதிகமான எலக்ட்ரிக்கை உருவாக்கப் போகின்றது...!”

1.நம் உயிரும் எலக்ட்ரிக்கைத் தான் உருவாக்கிக் கொண்டுள்ளது.
2.சூரியனுக்குள் மாறப் போகும் தன்மை கொண்டு நம் உயிரின் துடிப்பு அதிகமாகி விட்டால்
3.நம் உடலில் உள்ள அணு செல்கள் இயக்கம் அதிகமாகிவிடும்.
4.மனிதன் பித்துப் பிடித்தவன் போல ஆகப் போகின்றான்.
5.சிந்தனை இழந்து தவிக்கும் நேரம் வெகு தூரத்தில் இல்லை... குறுகிய காலத்திற்குள்ளேயே உண்டு.

இதனுடைய அடர்த்தி அதிகமான நிலைகள் கொண்டு பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஓசோன் திரையும் கிழிந்து விட்டது. துருவப் பகுதி வழியாக கதிரியக்கங்கள் அதிகமாக வரப்படும் பொழுது துருவப் பகுதியில் பனிகள் கரைந்து கடல்களும் பெருகுகின்றது.

கடல் நீருடன் கலந்த அந்தக் கதிரியக்கப் பொறிகள் விஷத்தன்மையான உணர்ச்சிகளை ஊட்டும் நிலைகளை உருவாக்கிக் கொண்டுள்ளது. இந்தப் பூமியையே... மனிதன் அழிக்கும் தருணத்திற்குக் கொண்டு வந்துவிட்டான்.

இதையெல்லாம் வென்ற அருள் மகரிஷிகள் உணர்வை நாம் சேமித்தால் தீமைகள் புகாது நம்மைக் காக்க முடியும். அதனால்தான் விழித்திரு...! என்று சொல்வது.

ஒவ்வொரு நொடியிலேயும் உலகில் நடக்கும் அதிர்ச்சிகளைக் கேட்டுணர்ந்தால்
1.அடுத்த கணமே நாம் விழித்திருந்து “ஈஸ்வரா...” என்று உயிரிடம் வேண்டி
2.அந்த அருள் மகரிஷிகளின் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்க வேண்டும்.
3.விஞ்ஞானப் பேரழிவிலிருந்து நாம் தப்பித்து விண் செல்ல வேண்டும்.

நுண்ணிய நிலைகளை நுகரும் ஆற்றல் பெற்றால் தான் மெய் ஞானத்தை வளர்க்க முடியும் - ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
ஒருவர் காப்பியை ஆற்றிப் பருகுவதைப் போன்று தெரிகின்றது.

விளக்கம்:
நீரைக் கொதிக்க வைத்து... அதில் காப்பித் தூளைப் போட்டு பாலைத் தனியாகக் கொதிக்க வைத்து... காப்பியில் எடுத்த நீரையும் பாலையும் சேர்த்து அதற்குகந்த பக்குவத்தில் வேண்டிய அளவு சர்க்கரை சேர்த்து... “நம் உடல் ஏற்றுக் கொள்ளக்கூடிய சூட்டிற்கு” அதை நாம் பருகுகின்றோம்.

பாலையும் நீரையும் காப்பித் தூளையும் சர்க்கரையையும் அதற்குகந்த உஷ்ணத்தைக் கொடுத்து காய்ச்சிச் சுவைப்படுத்திப் பிறகு அந்தச் சுவைக்குகந்த உஷ்ணத்தில்...
1.நம் உடல் ஏற்கக்கூடிய பக்குவத்திற்குக் காப்பியை ஆற்றிய பிறகுதான்
2.நாம் அதனைப் பருக முடிகின்றது.

அதைப் போன்று நம் உணர்வின் எண்ணமுடன் பல விதமான செயலுக்குகந்த எண்ண ஓட்டங்கள் கலக்கப் பெறும் பொழுது... உணர்வின் சமைப்பாய் உயிர் சமைக்கும் உஷ்ணத்தைக் கொண்டு... ஆத்மாவினைச் சுவைப்படுத்தி... ஆத்மாவின் சுவையை மீண்டும் செயலாக்க...
1.உணர்விலிருந்து வெளிப்படும் “நம் சொல்லின் ஒலி”
2.பக்குவப்படுத்தப்பட்ட பருகக்கூடிய தன்மைக்கு
3.ஆற்றிய காப்பியைப் போல் வெளிவரல் வேண்டும்.

பலவற்றையும் நாம் சமைக்கும் பொழுது... அதற்குகந்த உஷ்ணத்தைத் தந்து சமைத்த பிறகுதான் பிறிதொரு பக்குவத்திற்குச் செயல் கொள்ள முடியும்.

ஆரம்ப நிலை இயற்கையின் தொடர்பில்... வளர்ச்சியின் செயல் யாவையுமே விஷத் தன்மை கொண்ட வளர்ப்புத்தான்.

ஜீவ ஜெந்துக்கள் அதனுடைய சுவையின் உணர்விற்கொப்ப அதனதன் உடல் நிலைக்குகந்த உணவை மட்டும்தான் உட்கொள்ளும். மாற்று நிலை... சமைப்பு நிலை... ஏற்படுத்திக் கொள்ளாநிலை தான் ஜீவஜெந்துக்களின் நிலை.

இப்பூமியின் தொடர்பில் இப்பூமி எடுக்கும் அமிலத்தின் தொடர்பில் நாம் வாழ்ந்தாலும்...
1.நாம் உண்ணக்கூடிய உணவு எது...? எது மனிதனுக்கு ஏற்றது...? என்பதை
2.நம் முன்னோர்கள் நமக்கு தொடர்புப்படுத்திய உணவு முறையைப் பக்குவப்படுத்தி நாம் உண்ணுகின்றோம்.

மிருகங்களைக் காட்டிலும் வளர்ச்சியுற்ற மனித நிலையில் இயற்கையில் வளர்ந்துள்ள பல நிலைத் தாவரங்களை வழிப்படுத்திய நிலைத் தொடரில்தான் நாம் சமைத்து உண்டு வாழ்கின்றோம்.

நம்மைக் காட்டிலும் அறிவில்... செயல் திறனில் ‘செயலற்ற மிருகங்கள்...” நம்மைக் காட்டிலும் மேம்பட்ட நிலையில் “தன் உணர்வின் சுவாசத்தால்” பல உண்மைகளை முன் கூட்டி அறியக்கூடிய நிலைக்குச் செயலாக்கும் பொழுது அறிவில் உயர்ந்த மனித ஞானம் ஏன் உயர்வில் செயலாக்க முடியாது...?

உருவத்தில் சிறிய எறும்பு... மழைக் காலத்தில் தன் ஆகாரத்தை உண்ணுவதற்காக மழை வருவதற்கு முதலிலேயே அறிந்து சேமித்துக் கொள்கின்றது.

நாம் பாத்திரங்களில் சேமித்து வைத்துள்ள பொருளைத் தனக்கு ஒத்த உணவு என்று முன் கூட்டி அறிந்து தன் இனத்தின் கூட்டில் தனக்குகந்த உணர்வின் சுவாசத்தால் எறும்பு எடுத்து விடுகின்றது.

ஆனால்... மனிதன்
1.மூடி வைத்துள்ள பாத்திரத்திலுள்ள பொருளை அதன் மூடியை எடுத்தால் தான்
2.உள்ளே என்ன இருக்கின்றது...? என்பதை அறிய முடிகின்றது.

நம்மைக் காட்டிலும் சிறு எறும்பு அதை அறியும் பொழுது “மனித ஞானம் எங்குள்ளதப்பா இன்று...?”

மழை வருவதற்கு முன்னும்... எதிரி தன்னைத் தாக்க வருவதற்கு முன்னும்.. பல மைல்களுக்கு அப்பாலுள்ள நீர் நிலைகளைத் தன் சுவாசத்திலேயே அறியும் நிலையும் மிருக ஜெந்துக்களினால் அறிய முடிகின்றது.

இதனை எல்லாம் நாம் அதனுடைய இயற்கையின் செயல் என்கின்றோம்.

ஒவ்வொரு உருவக நிலையும்... அது அது எடுத்த சூரிய ஒளியில் உதித்த உயிரணுக்களின்... மண்டல ஈர்ப்பின் சுவைக்கொப்ப உருவாகும் உருவகத் தொடர் தன்மையில்... பூமியின் சமைப்பின் தொடர் உருவக உரு பெற்றிருந்தாலும்...
1.உருப்பெற்ற தன்மையின் உடல் அமைப்பின் செயல் நிலையை
2.மிருக ஜெந்துக்களினால் மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது.

மனித நிலையில் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு இயற்கையின் உண்மையை உணர்ந்து எண்ணத்தின் மெய் ஞானத்தால் எதனையும் மாற்றி அமைக்கக் கூடிய செயல் தன்மைக்கு “மனிதனால் தான் முடியும்...”

மெய் ஞானத்தின் உண்மையை இயற்கையின் தொடர்பு கொண்டு வானக்கோள்களின் நட்சத்திர ஒளியை இச்சரீர உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் அமிலத்தின் ஒலியை உணர்வின் எண்ணத்தைக் கொண்டு சமைக்கப்படும் நிலையே ஆத்மாவின் பதிவு ஆகிறது.

இதே தொடரில் இப்பூமியின் தொடர்பு கொண்ட நட்சத்திரக்கோள்கள் நவக்கோள்கள் ஒவ்வொன்றையும் எண்ணி நாம் தியானிக்கும்பொழுது எண்ணத்தின் உணர்வில் அக்கோளின் அமிலத்தின் அலையை இச்சரீரம் சமைத்து ஆத்மாவில் பதிவாக்கிக் கொள்கின்றது.

இப்பூமியின் பிடிப்பிலிருந்து மனித நிலை உயர வேண்டும் என்றால்...
1.இப்பூமிக்கு வளர்ச்சி கொடுக்கும் செயலாய் சுழலும் பிற கோள்கள் நட்சத்திரங்களின் தொடர்பில்
2.நம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி நாம் எடுக்கும்
3.அந்த அமிலத்தின் அலையைக் கொண்டுதான்
4.மனித நிலைக்கு அடுத்த நிலையான “ஆத்ம ஜோதி” என்ற ஒளியான வளர்ச்சி நிலை வலுக்கொள்ளும்.

இப்பூமியின் தொடர்பில் இருந்து... விஞ்ஞானி பல ஒலி ஆண்டுகளையும்... ஒளி ஆண்டுகளையும் கணக்கெடுத்து வான்கோளிலுள்ள உண்மைகளை எல்லாம் அறிந்தாலும்... அப்படி அறியக்கூடிய விஞ்ஞானியின் வாழ்க்கைக் காலம் “சரீரம் உள்ள வரைதான்...!”

1.ஆனால் மெய் ஞானத்தில் அறியக்கூடிய காலம் என்பது
2.வழி வழியாய் வளரக்கூடிய காலமப்பா...!

February 26, 2022

பல இலட்சம் ஆண்டுக்கு முன் அகஸ்தியன் உடலிலிருந்து வெளிப்பட்ட அருள் மணங்கள்

 

காட்டிலே வாழும் மிருகங்கள் உணவுக்காகத் தன்னுடைய எண்ணத்தைப் பாய்ச்சி எங்கே உணவு இருக்கிறது...? என்று அறிய எண்ணுகிறது.

மனிதன் இருக்கிறான் என்றால் அந்தத் தசைகள் இருக்கிறது என்றால் உணவாக உட்கொள்ளும் மணத்தால் அதை அறிந்து கொள்கிறது. உடலிலிருந்து வெளி வரும் மணத்தை அறிந்து மனிதன் இருக்கும் பக்கம் அந்த உடலை அழைத்து வருகிறது.

இதைத் தடைப்படுத்த அதற்கு எதிர் நிலையான மணங்கள் கொண்ட பச்சிலைகளையும் மூலிகைளையும் தான் படுத்திருக்கும் குகைப் பக்கம் பரப்பிக் கொள்கிறார்கள் அன்று வாழ்ந்த மக்கள்.

தன் உணவுக்காக வரும் மிருகங்களோ விஷ ஜெந்துக்களோ
1.இத்தகைய மூலிகை மணங்களை நுகர்ந்து கொண்ட பின் அதனுடைய விஷத்தின் வலிமை குறைகிறது
2.அதனால் இவர்கள் இருக்கும் திசைப் பக்கமே வருவதில்லை.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்... மனிதன் சந்தர்ப்பத்தால் அறிந்த அறிவால் அவன் கண்ட உண்மையால் இப்படிப்பட்ட பச்சிலை மூலிகைகளின் துணை கொண்டு அக்கால முதியவர்கள் முன் வாழ்ந்தார்கள்.

ஆனாலும் அந்தக் காலத்தில் வாழ்ந்த கணவன் மனைவி கருவிலே விளைந்த குழந்தைக்கு... இவர்கள் பரப்பி வைத்த அந்தப் பச்சிலை மூலிகைகளின் மணங்கள் கிடைக்கிறது.

1.தாயின் இரத்தத்தின் வழி வரும் மணங்களை அந்தச் சிசு நுகரப்படும் பொழுது
2.விஷத்தை அடக்கும் ஆற்றல் கருவில் வளரும் குழந்தைக்கு வருகின்றது
3.அப்படி உருவானவன் தான் அகஸ்தியன்.

பிறந்த பின் அவன் உடலிலிருந்து வெளி வரக்கூடிய மணத்தை விஷம் கொண்ட ஜந்துக்கள் நுகர்ந்தால் அவைகள் ஒடுங்கி விடுகின்றது. குழந்தைப் பருவமாக அவன் இருப்பினும் அவனைத் தாக்குவதில்லை.

இப்பொழுது நாம் படுத்தால் கொசு நம்மைக் கடிக்கின்றது. ஆனால் கருவிலே விஷத்தை முறிக்கும் தன்மை பெற்ற அந்தக் குழந்தையை எந்தக் கொசுவும் தாக்குவதில்லை... விஷ ஜந்துக்களும் தாக்குவதில்லை.

தாய் கருவிலே இருக்கும் போது பெற்ற அந்தச் சக்திகள் தான்
1.அவன் உடல் உறுப்புகள் அனைத்தையும் விஷத்தின் ஓட்டத்தை தணிக்கக்கூடிய வல்லமையாகின்றது.
2.உலகில் எத்தகைய விஷம் இருப்பினும் இவன் மணத்தை நுகர்ந்த பின் அவை அனைத்தும் ஒடுங்கி விடுகின்றது
3.இவன் (அகஸ்தியன்) அச்சமின்றி வாழ்க்கை வாழும் தன்மை வருகின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் பெற்ற அந்த அரும் பெரும் சக்திகளை நீங்கள் பெறுவதற்குத் தான் இதைப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).

“அறிந்து விட்டோம்...” என்ற எண்ணத்தை விட்டு விட்டு அறிய வேண்டிய எண்ணம் கொண்டு செலுத்துவதே உத்தமம் - ஈஸ்வரபட்டர்

 

நட்சத்திரமாய் உயர்ந்த வளர் சக்தி கொண்ட கோள்களாய்... பல கோடி உயர்ந்த உருளக் கூடிய மண்டலக் கோள்கள் இருந்தாலும்... உணர்வின் உண்மை அறியும் “ஞான மனித நிலை” எல்லாக் கோள்களிலும் இல்லை.

உணர்வின் எண்ணத்தில்... அறியும் ஆற்றல் செயல் தன்மை செயலாகும்...
1.இயற்கையின் ஒளி சூட்சுமத்தை வளர்க்கும் வலிமை கொண்ட தொடர்நிலை வளர்ந்தால்தான்
2.இயற்கையின் சுழற்சி ஓட்டத்திலிருந்து சமைக்கும் குண தத்துவத்தைச் செயலாக்க முடியும்.

ஆகவே பல கோடி நிலைகள் செயல்படும் அண்டக் கோள்களில் அறிவின் ஆற்றலும் அறியும் திறனும் மனிதனுக்குத்தான் உண்டு.

தனக்கொத்ததை மனிதனின் எண்ணம் ஏற்படுத்திக் கொள்ளும் ஏற்றத்தில்...
1.மனித உணர்வின் செயல் வீரியம்... “தான்...!” என்ற முதிர்வு நிலை ஏற்படுத்திக் கொண்டால்
2.தன் அடுத்த வளர்ச்சி நிலை இயற்கையின் தொடர்பு ஒலியை எடுக்க முடியா தேக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும்.

இந்த உண்மைகளை எல்லாம் அறிந்த சித்தன் “தனக்கு மேல் ஒருவன் உண்டு...” என்ற தெய்வத்தின் குணங்களை மனிதர்களுக்குச் சுட்டிக் காட்டத் தான் கோவில்களையும் சிலைகளையும் தத்துவ ஞானத்தில் ஸ்தாபித்தான்.

மனிதனின் உணர்வின் வேகம் “தான் உயர்ந்து விட்டேன்...!” என்ற எண்ணத்தைக் கூட்டிக் கொள்ளும் பொழுது தன்னை ஒத்த ஜீவாத்மாக்களை உயர்த்தக் கூடிய உணர்வுகள் மங்கிவிடுகின்றன.

1.தனக்கு மேல் ஒருவன்...
2.“தன்னை உயர்த்தச் செயல்படுகின்றான்...” என்ற எண்ணத்தின் வேகம் செலுத்தும் பக்தியினால் தான்
3.மனிதர்களின் உணர்வில் “தான்...” என்ற எண்ணத்தை அகற்ற முடியும்.

இதை உணர்த்திய பக்குவம் நம் ஞான பூமியில் பல உண்டு.

மனிதன் தெய்வத்தின்பால் செலுத்தப்பட்ட எண்ணத்தின் வேகம் கோயில்களில் தீ மிதித்து விரதங்கள் அனுஷ்டித்து பல செயல்கள் பக்தியில் செயல்படுவதை எல்லாம் பார்க்கின்றோம்.

பக்தியின் உந்தலின் வேகம் அவ் உணர்வின் வீரியத்திற்கொப்ப “அவன் எடுக்கும் சுவாசத்தின் வேகத்தால்” இன்றும் தீக்குண்டங்கள் நடப்பதைக் காண்கின்றோம்.

மனிதனின் உணர்வின் எண்ண வேகம் “எதனையும் ஈர்க்கவல்ல செயல் குணத் தன்மை கொண்டது...” இதனை...
1.தான் அறிந்து விட்டோம்... என்ற எண்ணத்தை விட்டு விட்டு
2.அறிய வேண்டிய எண்ணம் கொண்டு செலுத்துவதே உத்தமம்.

மனித உணர்வில் சலிப்பு சோர்வு வெறுப்பு கோபம் என்ற நிலைகளைக் கூட்டிக் கொள்ளாமல்... நற்குணத்தின் நறுமணமாய் இச்சரீர உணர்வின் ஒலி சுவாசமெடுத்து.... சம குணத்தின் ஒலியால் இயற்கையின் ஆதிசக்தியின் ஜீவ சக்தியின் ஒளியால்... நட்சத்திர மண்டலங்களின் ஒலி அலைகளையும் ஜீவ உணர்வுடன் இழுக்கும் பொழுது... இஜ்ஜீவ உணர்வின் எண்ணத்தில் மோதும் பொழுது... ஒளியாக... மின்காந்த ஒளியாக ஆத்மா ஒளிர்கின்றது.

ஆத்மாவின் ஒளிகள் மண்டலக் கோள்களின் எண்ண உணர்வுடன் ஈர்க்கும் பொழுது எப்படி இன்று நீரைக் கொண்டு இக்காற்றலையில் இருக்கும் மின் காந்த ஒளி சக்தியை மின்சாரமாக விஞ்ஞானத்தில் காண்பதைப் போன்று...
1.இச்சரீர எண்ணத்தின் உணர்வின் வேகத்தால்
2.நட்சத்திரங்களில் இருந்து வருவதையும் சூரியன் சந்திரன் மற்றக் கோள்களிலிருந்து வரும் சக்திகளையும்
3.நாம் எண்ணி எடுக்கும் ஒலி அலையில் அவ்வொலியின் உணர்வுடன் எண்ணத்தை எக்கோளுடன் செலுத்துகின்றோமோ
4.அந்த மண்டலங்களிலிருந்து வெளிப்பட்ட அமிலம் இச்சரீர உணர்வின் எண்ணமுடன் மோதும் பொழுது
5.உடலில் உள்ள உயிர் அணுக்கள் யாவும் ஒளி நிலையைப் பெறும் தன்மையை இச்சரீர ஆத்மா வளர்த்துக் கொள்ளும்.

இப்பூமியின் உணர்வுடன் சுழலும் வாழ்க்கை நிலையில்... மீண்டும் மீண்டும் இப்பூமி சமைத்து வெளிப்படுத்திய உணர்வின் ஒளியைத் தான் ஆத்மா வளர்த்துக் கொள்கிறது.

அத்தகைய தொடரில் நம் ஆத்மா இப்பூமிப் பிடிப்பில் சிக்கிவிடும் தன்மையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டு
1.உயிரின் உயர்வை உய்யும் செயலாய்
2.ஒவ்வொரு நொடிப் பொழுதும் காலத்தை விரயப்படுத்தாமல்
3.உயரும் தன்மையில் நாம் அனைவரும் உய்வோமாக..!

February 25, 2022

விண் செல்ல வேண்டும் என்றால் உயிரான்மாவின் முகப்பில் வைக்க வேண்டிய சக்தி எது…?

 

ஞானிகள் காட்டிய வழியில் நாம் விழித்திருக்க வேண்டும். அப்போது தான் மனிதனான நிலயில் பத்தாவது நிலையான கல்கி என்ற ஒளி நிலையை அடைய முடியும். உயிரணு தோன்றி மனிதனாக ஆனபின் தான் பத்தாவது நிலை அடைய முடியும்.

ஆதியில் ஒரு வெப்பத்தின் தன்மை அடைந்து கோளாகி நட்சத்திரமாகி சூரியனாகும் போது இது ஒன்பதாவது நிலைதான் வருகிறது.
1.இந்தப் பிரபஞ்சத்தைச் சூரியன் இயக்கலாம்
2.ஆனாலும் அது அழியக் கூடிய தன்மை பெற்றது.

ஆனால் இதிலே உருவான மனிதன் தான் இன்று மின்னலையும் அடக்குகின்றான்… மின்னலைக் காட்டிலும் மின்னணு தாக்கும் நிலைகளையும் விஞ்ஞான அறிவால் ஊடுருவுகின்றான்.

மண்ணிற்குள் படிந்துள்ள பொருளைக் கண்களால் காண முடியவில்லை என்றாலும்
1.இயந்திரத்தின் துணை கொண்டு உணர்வின் அதிர்வுகளைக் கூட்டி
2.இங்கே தங்கம் உள்ளது… இங்கே வெள்ளி உள்ளது… இங்கே நீர் உள்ளது… இங்கே எண்ணை உள்ளது… என்று
3.மேலே பறக்கும் நிலையிலிருந்தே பல ஆயிரம் அடிகளுக்கு அப்பால் ராக்கெட்டுகளைச் செலுத்தி
4.பூமியின் சுழற்சியில் பூமிக்குள் இருக்கும் நிலைகளை இங்கிருந்து காணுகின்றான் விஞ்ஞானி.

காந்தப் புலனறிவு கொண்ட (POWERFUL TELESCOPE) கண்ணாடிகளைக் கொண்டு… ஒவ்வொரு கோளும் எதை எதை உருவாக்குகின்றது…? அதனின் உணர்வுகள் எவ்வாறு வெளியில் பரவுகிறது…? என்றும் காணுகின்றனர்.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று மாற்றும் உணர்வின் அறிவு கொண்டு கண்ணாடிகளில் எடுத்த அந்தப் பதிவின் துணை கொண்டு இவன் ஏவும் இராக்கெட் அந்தக் கோளின் திசையை நோக்கிச் சரியான நிலையில் சென்றடைகிறது.

இராக்கெட் அங்கே செல்வதற்குண்டான அளவுகோலை அறிந்து கொள்ள தரையிலிருந்தே காந்தப் புலனறிவு கொண்ட கண்ணாடியை வைத்து வெகு தூரத்தில் இருப்பதையும் தனக்குள் இழுத்து உணர்த்தும் நிலைகளை உருவாக்குகின்றான் மனிதன்.

கம்ப்யூட்டர் மூலமாக அதைப் பதிவாக்கி அதிலிருந்து அழுத்தத்தை ஆயிரம் மடங்கு பெருக்கி நுண்ணிய நிலைகளில் ஒளியின் அதிர்வுகளைப் பெருக்கி இந்த உணர்வின் ஆற்றலை அதிகமாகச் சேர்த்து உந்து விசையாகச் செல்லும் இராக்கெட்டின் முகப்பில் அதை வைக்கின்றார்கள்.

பிரபஞ்சத்தில் கோள்கள் உமிழ்த்தும் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து சென்றாலும்
1.அதில் வரும் நுண்ணிய அதிர்வின் வலு கொண்டு தன் இனத்துடன் அது மோதி
2.அந்தக் கோள் எங்கே இருக்கிறதோ அங்கே இந்த இராக்கெட்டை அழைத்துச் செல்கன்றது.

இதைப் போன்றுதான் இந்த மனிதனின் வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் நாம் எண்ணி எடுக்கும் பொழுது அது நமக்குள் முதலிலே பதிவாகிறது.

பதிந்தது வளர்ச்சி அடைந்து அதை வலுவாக்கிக் கொண்ட பின் மனித உடலை விட்டுச் செல்லும் போது
1.எந்தத் துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் எண்ணி எடுத்தானோ
2.அந்த நட்சத்திரத்திலிருந்து வரும் நிலைகள் புவியின் ஈர்ப்பைக் கடந்து அங்கே அழைத்துச் செல்கிறது.
3.அங்கே உடல் பெரும் உணர்வினைக் கரைத்து விடுகின்றது.
4.உயிரான்மா ஒளியாக மாறுகிறது/

இதை ஒரு பழக்கமாக வைத்துக் குடும்பத் தியானங்கள் மூலம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை துருவ நட்சத்திரத்தின் சக்தி வெளிப்படும் காலங்களில் உந்திச் செலுத்தினால் (இராக்கெட் போன்று) அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும்.

உடல் பெறும் உணர்வைக் கரைத்துப் பிறவியில்லா நிலையை அடையச் செய்யும். இது மனிதன் செயல்படுத்த வேண்டிய நிலைகள்.

மனிதனின் ஞானம் விஞ்ஞானத்திற்கு அடிமை ஆகிவிட்டது - ஈஸ்வரபட்டர்

 

ஆத்திச்சூடியில் ஔவையாரின் அரிச்சுவடியில் "இளமையில் கல்" என்பதன் பொருள் யாது...?

வளரக்கூடிய எண்ண உணர்வில் எதனை அறிவின் வளர்ச்சிக்குப் போதனையாக எதை வளர்க்கின்றோமோ அவ்வினையின் செயலே விதியாகும்.

நற்கதியைப் போதிக்கும் சுருக்கத்தை முன்னோர்கள் ஆறில் வளையாதது அறுபதில் வளையுமா...? என்று பல உண்மைதனை நமக்குப் போதித்தனர்.

காலையிலிருந்து இரவு வரை உணர்வின் எண்ணத்தின் வேகத்தை மனிதனின் செயல் அவரவர்களின் நிலைக்கொப்ப தொழிலாளர்களும் வியாபாரிகளும் மருத்துவம் விஞ்ஞானம் பலதரப்பட்ட செயல் முறை ஒவ்வொன்றிலுமே ஒன்றில் பழக்கப்பட்ட உணர்வின் எண்ண ஓட்ட செயல் முறையின் செயல் வளர்ச்சியே வலுவாக்கும் தன்மையாக உள்ளது.

அந்தந்தத் தொழிலின் வினைகளின் செயல் விதி என்ற தொடரில்தான் வாழ்க்கை அமைப்பின் ஆத்மாவாகி அவ்வாத்மாவின் மணமே செயலாகும் கதியில் மனித நிலை செயல் கொள்கின்றது.

இச்செயலின் நிலை யாவையுமே மனிதன் இன்று வரை
1.தன் விதியின் செயலைத் தெய்வத்தின் செயலாக
2.தனக்குத் தெய்வம் விதித்த விதி என்று தான் வாழுகின்றானே அன்றி
3.தான் எடுக்கும் எண்ணத்தின் வினைதான் விதியாக அமைகிறது என்றும்
4.எடுத்துக் கொண்டதற்கொப்ப அந்த விதியின் கதியே
5.நற்கதியாகவும் துர்கதியாகவும் வாழும் நிலை அமைகிறது என்பதனை உணரல் வேண்டும்.

இளமைக்கால அறிவின் வளர்ச்சியில் எண்ணத்தின் வினையை எவ்வினையின் செயலுக்குப் பக்குவப்படுத்தி... நம் குழந்தைகளை எப்படி வளர்க்கின்றோமோ அந்த விதியின் கதியின் தொடரில் தான் உணர்வெடுக்கும் எண்ணப்படி செயலாக்கும் முறையையும் வலுவாக்குகின்றோம்.

ஒவ்வொரு சிசுவின் ஆரம்பக்கால ஆத்மத் தொடர் முந்தைய ஜென்மத்தில் அவ்வுயிராத்மா எத்தொடரின் வலுக்கொண்ட ஆத்ம உயிரில் இருந்திருந்தாலும்
1.தாய் கர்ப்பத்தில் ஜீவிதம் கொள்ளும் காலத்தில்
2.உடல் கூறின் அமைப்பு பெறும் வளர்ச்சி நிலையில்
3.தாய் உணர்வின் எண்ண கதியின் ஜீவ ஓட்டத் தொடரில் ஜீவகாந்த சரீர ஒலி எடுக்கும் பொழுது
4.முந்தைய ஜென்ம நிலை யாவும் மறக்கும் நிலை ஆகின்றது.

தாய் எடுக்கும் உணர்வின் ஒலித்தொடர்பின் பிறப்பால்... பிறப்பின் செயலுக்கு எண்ணத்தின் உணர்வின் ஒலியின் அறிவை வளர்க்கும் பக்குவத்தால்... இஜ்ஜென்மத்தின் கதி மாறுகின்றது.

1.தெய்வத்தின் தொடர்பால் தொடர்பட்ட விதியல்ல மனிதனின் நிலை
2.தன் உணர்வின் எண்ணத்தால் ஏற்படுத்திக் கொண்ட செயலின் கதியின் ஓட்டம் தான்
3.இது நாள் வரை நாம் வாழும் வாழ்க்கை நிலை.

இவ்விதியை மதி கொண்ட நற்கதியில் சப்தரிஷிகளின் எண்ணமுடன் கலக்கும் நிலையாக நம் உணர்வின் எண்ண ஜீவகாந்த ஒளி கொண்டு உணர்ந்து பெறும் தொடர்பால் பல உண்மைகளை அறியலாம்... உணரலாம்.

அத்தகைய ஒளி கொண்ட உயர் சக்திகளின் செயலுடன் நம் செயலின் எண்ண ஓட்டம் அமைந்தால் விதியின் கதியே நற்கதியாய் நல் ஒளி பெறும் தன்மையாக அமையும்.

இதைப் பெறவல்ல நிலை… எண்ணத்தின் உணர்வு கொண்ட மனிதச் செயலுக்குத்தான் உண்டு.

அதே போல் மண்டலக் கோள்களையும் தாவரங்களையும் ஜீவராசிகளையும் எதனையுமே...
1.தன் உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் ஒலி அலையின் முலாமின் தொடர்
2.இவ்வாத்மாவில் பதிவாக்கிக் கொள்ளும் செயல் மனிதனுக்கு மட்டும்தான் உண்டு.

ஆனால் மனிதச் செயலின் வீரிய உண்மை விஞ்ஞானத்திற்கு இன்று அடிமை ஆகிவிட்டது.

1.மெய் ஞானத்தின் வீரியத்தின் தன்மையோ...
2.அதைச் செயலாக்கும் மாமகரிஷிகளின் வளர்ச்சியால்
3.நாம் ஒவ்வொருவரும் செழுமை அடையலாம்.

எம்முடைய (ஞானகுரு) நோக்கம் என்ன…?

 

எம்முடைய (ஞானகுரு) உபதேசத்தைப் புதிதாகக் கேட்பவர்கள் சிலருக்கு வித்தியாசமாக இருக்கும்.

ஆனால் முன்ன்னாடி உபதேசத்தைக் கேட்டவர்களுக்கு அல்லது பல முறை உபதேசத்தைக் கேட்டவர்களுக்கு
1.அந்த உபதேசத்தின் வாயிலாக உடலிலே உருவான அணுக்களுக்கு
2.இப்பொழுது கொடுக்கும் உபதேச உணர்வுகள் மூலம் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உணவாகக் கிடைக்கும்.

பல முறைகளில் பல கோணங்களில் அந்த உணர்வின் சத்தை உங்கள் உடலில் விளைந்த அணுக்களுக்கு ஆகாரமாகக் கொடுப்பதற்குத் தான் இந்த உபதேசங்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் புதிதாகக் கேட்பவர்களுக்கு அருள் ஞான வித்தாக உருவாக்கப்படுகின்றது. வித்தாக ஊன்றிய பின்
1.இதை நீங்கள் மீண்டும் தொடர்ந்து எண்ணத்தில் கொண்டு வந்தால்
2.அது கருவாகி உருவாகி அந்த அருள் ஞானத்தைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

சிலர் எண்ணலாம்… ஒன்றும் அர்த்தம் ஆகவில்லையே என்று. உங்களுக்கு அர்த்தமாகாது…!
1.ஆனால் பேசிய உணர்வு பின்னர் கருவாகும்… பின் அது உருவாகும்.
2.பின் அதனின் உணர்வுகள் உங்களுக்குள் தெளிவாகும்

அதனால் தான்
கருவாய்…
உருவாய்…
வருவாய்…
முருகா…
குருவாய்…! என்று
1.எதனை நாம் எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மை கருவாகி உருவாகி உங்களுக்குள் குருவாக வரும்.
2.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நமக்குள் அது தெளிவாக உருவாக்கும் என்பது அது தான்.

நாடாக்களில் படமோ பாடலோ பதிவு செய்துவிட்டால் திருப்பி அதைப் போட்டுப் பார்க்கும் பொழுது மீண்டும் அந்தப் பாடலைக் கேட்க முடிகின்றது.
1..இதைப் போல் தான் உபதேசித்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகிவிடும்
2.உடலில் அணுவாகவும் உருவாகிவிடும்.

அந்த அணுக்களுக்குச் சிறிது காலம் உணவைக் கொடுத்தால் அது மீண்டும் வளர்ச்சியாகித் “தன்னிச்சையாக…” அதனின் உணவை எடுத்துக் கொள்ள அந்த வளர்ச்சிகள் பெறும்.

முந்திய நிலையில் உபதேசங்களைக் கேட்டவர்களுக்கு… உடலில் விளைந்த அணுக்களுக்கு உயர்ந்த ஞான உணவாக இப்பொழுது கொடுக்கப்படுகிறது. அவர்கள் வளர்ச்சி பெற இது உதவும்.

அதே சமயத்தில் புதிதாகக் கேட்பவர்களுக்கு ஊழ்வினை என்ற வித்தாக உருவாக்கப்படுகிறது. ஊன்றிய வித்து உருவாகிக் கருவாக வேண்டுமென்றால்
1.உங்கள் நினைவினைக் கூட்டினால் அது உருவாகும்
2.அந்த உணர்வின் தன்மை அது உருவாகும் பொழுது குருவாகும்
3.நல்வழியையும் காட்டும்…. அதே உணர்வை உணவாக ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வரும்.
4.இந்த உணர்வை ஏற்றுக் கொள்ளும் பருவம் வரும் பொழுது அருள் ஞானம் தன்னிச்சையாக வளரும்.

அதனால் தான் சாமி சொல்வது எனக்குப் புரியவில்லையே என்று எண்ண வேண்டாம் என்று திரும்பத் திரும்பச் சொல்வது.

குருநாதர் எனக்குள் எப்படி ஆழமாகப் பதிவு செய்து… அந்த உணர்வின் அணுக்களைப் பெருக்கச் செய்து… இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகரச் செய்தாரோ… உங்களிடம் அதைப் பெறச் செய்து… உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபடும் நிலைக்கே இது உருவாக்கப்படுகின்றது.

அந்த உணர்வின் ஆற்றலை நீங்கள் வலுப்பெற… உணவாகக் கிடைக்கச் செய்வதற்கே தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

பொதுவாக உபதேசம் சொல்லும் போது
1.முதலிலே மெதுவாக சொல்ல முற்பட்டேன்
2.இரண்டாவது சிறிது வேகமாகச் சொன்னேன்
3.மூன்றாவது அதை காட்டிலும் வேகமாகச் சொல்லும் நிலை வந்தது.
4.(எம்முடைய உபதேச ஒலிகளைக் கேட்டவர்களுக்கு இது தெரியும்)

காரணம்… இந்த உணர்வின் ஈர்ப்புகள் உங்களுக்குள் பதிய வேண்டும் என்பதற்குத் தான்.

அந்த உணர்வின் ஆற்றல் ஆழமாகப் பதிந்தால்…
1.அப்போதுதான் சாமி என்ன சொன்னார்…? என்று ஏக்கமாக இருப்பீர்கள்.
2.அப்போது ஆழமாகப் பதிந்து விடுகின்றது.
3
பின் அதனுடைய நிலைகள் உருவாக இந்த உணர்வுகள் உங்களுக்கு உதவும். - இது புதிதாக வந்தவர்களுக்கு.

ஏற்கனவே கேட்டவர்களுக்கு அந்த அருள் உணர்வின் சக்தி உணவாகக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
1.அருள் ஞானம் பெருகிக் கொண்டே இருக்கும்
2.மகரிஷிகளின் ஆற்றல்களைப் பெறும் வலிமையும் பெருகிக் கொண்டே வரும்.

February 24, 2022

உணர்வுகளை ஒளியாக மாற்றும் முறை - ஈஸ்வரபட்டர்

 

கடிகாரத்தை (MECHANICAL WATCH) நாம் சாவி கொடுக்கும் பொழுது எந்த அளவிற்குச் சுற்றுகின்றோமோ... அதற்கொத்த அமைப்பு முறை கொண்டு அதனுடைய ஓட்ட முறை செயல்பாடு உள்ளது. செயல்படுத்தும் பொருள் நிலை செயலாக்கப்பட்ட நிலை கடிகாரத்தின் நிலை.

அதைப் போன்றே மனித வாழ்க்கையில் நாம் எடுக்கும் எண்ண உணர்வின் செயல்...
1.காலையிலிருந்து இரவு வரை நம்முடைய செயல்பாடு அனைத்தும் நம் புலன் அடங்கி உறங்கும் வரை
2.நம் எண்ணத்தில் எடுத்த உணர்வலைகள் யாவும் வினையாகச் சரீர உணர்வில் செயல்படுகின்றது
3.செயலடங்கிப் புலன் அமைதியுற்று உறங்கும் பொழுது நம் ஊனுடன் பதிவாகி விடுகின்றது.

இதே தொடரின் அலையை ஒன்றின் தொடரில் ஆவேச உணர்வில் எந்த அலையின் வீரியத்தைச் செலுத்துகின்றோமோ... பயத்துடனோ கோபத்துடனோ அச்சத்துடனோ குரோதம் வஞ்சனை என்ற எவ்வுணர்வின் வேகத்தையாவது அதிகமாக எடுத்தால்
1.அதே உணர்வின் அலையை திரும்பத் திரும்ப எண்ணி எடுக்கும் வேகத்தால் அதுவே வினையாகி
2.வினையின் பயன் எலும்புக்குள் இருக்கும் ஊனில் பதிவாகி
3.அதன் தொடர் அலையைச் சில காலங்கள் எண்ணி எடுக்கும் தொடரில்
4.நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் “விதியாகி” விடுகின்றது.

அவ்வாறு உருவாகும் விதியின் தொடரை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்று தெரியாத செயலுடன் தான் நாம் வாழுகின்றோம்.

ஏனென்றால் வாழ்நாளில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் உணர்வின் வேகம் பல ரூபத்தில் நமக்கு நடந்து கொண்டுதான் இருக்கும். அத்தொடரின் ஈர்ப்புகளை எல்லாம் வினையாக நமக்குள் பதிவு செய்து கொள்ளாமல் நம் உயிரின் வலுவின் ஆத்ம ஒளியைக் கூட்ட வேண்டும்.

உயிரான நெருப்பில் நாம் அதில் செலுத்தும் எண்ணத்தின் உணர்வின் வாசனையைத் தான் அது சமைக்கும். அதுவாகத் தான் நம்மை மாற்றும்.

நம் பூமியின் சுவைத் தன்மை எப்படி ஆறு குணங்களைக் கொண்டு ஆறு சுவைகளை வளர்த்துக் கொண்டதோ அதைப் போன்றுதான்
1.உணர்வில் சலிப்பை வளர்க்கும் பொழுது புளிப்பும்
2,உணர்வில் கோபத்தை வளர்க்கும் பொழுது காரமும்
3.உணர்வில் இனிமையை வளர்க்கும்பொழுது இனிப்பும்
4.உணர்வில் விரக்தியை வளர்க்கும் பொழுது துவர்ப்பும்
5.உணர்வில் வெறுப்பை வளர்க்கும் பொழுது கசப்பும்
5.இப்படியாக குணத்திற்கொப்பச் சுவையில் நம்முடைய உயிர் காந்த ஜீவ சரீரம் பதிவு கொண்டு விடுகின்றது.

இத்தகைய வினையின் செயல் விதியாகும் வளர்ச்சியை நாம் மேல் நோக்கி எடுக்கக்கூடிய உணர்வின் தியானத்தால் நற்குண ஒலி கொண்டு உயர் மின் காந்த அலையை அதிகாலையிலிருந்தே நாம் எடுக்கும் பக்குவ முறையினால்
1.அந்தந்த வினையின் செயலுக்கு அடிமையாகாமல்
2.நற்குண ஒலியின் செயல்பாட்டில்
3.எண்ணத்தின் வேகத்தை எதிர்கொள்ளும் எதுவாகிலும் (தீய நிலைகள்) சுட்டுப் பொசுக்கும் ஆயுதமாக
4.நம் உயிராத்மாவின் சமைப்பில் உயர் ஞானிகளின் மகரிஷிகளின் மணங்களை எடுத்துத் தியானிக்க வேண்டும்.

இதன் வழி செய்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நமக்குள் விதைக்கும் வளர்ப்பாக உயிராத்மாவின் வீரிய ஒளித் தன்மையின் செயலை நாம் பெற முடியும்.

ஆகவே ஒளியான எண்ணத்தின் உணர்வை உயிராக்குங்கள்...!

February 23, 2022

நஞ்சு என்று தெரிந்தாலே… அதனால் வீரியம் பெறுபவன் தான் முதல் மனிதனான அகஸ்தியன்

 

அகஸ்தியனுக்குள் நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் இளம் பருவத்தில் விளைந்த பின்
1.ஒவ்வொன்றும் அறிந்திடும் நிலையாகவும்
2.மிகவும் வலுக் கொண்ட உணர்வாகவும் வருகின்றது.

எந்த மிருகத்தின் அருகில் இவன் சென்றாலும் இவனைக் கண்டு அது அஞ்சி ஒடுங்குகின்றது.

தாவர இனங்களில் இருக்கும் சத்துகளை இவன் உணவாக உட்கொண்ட நிலையில் அதனின் உணர்வின் தன்மை வரும் போது
1.அந்தத் தாவர இனங்கள் ஒடுங்குவதையும் காண்கின்றான்
2.அதன் இயக்கத்தையும் அவன் இளமைப் பருவத்திலேயே உணர்கின்றான்.

நாம் பார்க்கிறோம்… ஒரு குளவி கூட்டினைக் கட்டி அதற்குள் புழுவைக் கொண்டு வந்து அடைத்து வைக்கிறது. சிறிது நாள்களில் அந்தப் புழுவே குளவியாக மாறுகிறது.

மாறிய பின் அதுவும் தாய்க் குளவி எதைச் செய்ததோ அதே போல் ஒரு கூட்டினைக் கட்டிப் புழுவைக் கொண்டு வந்து அடைத்துத் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்குகின்றது.

ஆக… எப்படி குளவி சொல்லிக் கொடுக்காத நிலையில் புழு குளவியாக மாறிய பின் செயல்பட்டதோ அதே போல் அகஸ்தியனுக்குள் நஞ்சினை வென்றிடும் அந்த இயக்கங்கள் ஆன பின் “அவன் அறியாமலேயே…” சில செயல்களைச் செயல்படுத்துகின்றான்.

விஷத்தை ஒடுக்கும் தன்மை வரும் பொழுது
1.விஷத்தை நுகர்ந்தாலே மற்றவர்களுக்கு (நமக்கு) மயக்கம் வருகின்றது
2.ஆனால் விஷச் செடியின் அருகில் சென்றால் அகஸ்தியன் மீண்டும் வீரியம் அடைகின்றான்… வலுவடைகிறான்.

காரணம்…
1.விஷத்தின் தன்மை ஒடுக்கும் வல்லமை கொண்டதனால்
2.அவன் தெளிந்த மனமும் வலுவான உணர்வு கொண்டவனாகவும் மாறுகின்றான்.

ஐந்தாவது வயது வரப்படும் பொழுது புவியின் ஈர்ப்பின் தன்மைகளை அறிகின்றான். நமது பூமி தனக்குள் ஆகாரம் எப்படி எடுக்கிறது…? என்பதை உற்று நோக்கினான்.

வான இயலை இளம் பருவத்திலேயே கண்டுணர்கின்றான். இந்தப் பிரபஞ்சத்திலிருந்து பூமி துருவப் பகுதி வழியாக எப்படி விண்ணின் ஆற்றலைக் கவர்கிறது…? என்பதை உணர்கிறான்.

உணர்ந்தாலும் “விஷத்தின் தன்மையே…” விண்ணிலிருந்து வருகின்றது... தாவரங்களும் இந்த விஷத்தின் உணர்வின் செயலாகவே வளர்கின்றது…! என்றும் அறிகிறான்.

இருப்பினும்…
1.தாவர இனங்களுக்குச் செல்லும் சக்திகளை நேரடியாக அகஸ்தியன் உட்கொள்கின்றான்
2.தன் உணர்வினை ஒளியின் அணுக்களாக மாற்றும் திறனும் பெறுகின்றான்.

துருவத்தை உற்று நோக்கும் பொழுது பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அண்டத்தின் இயக்கத்தையும் அறிகின்றான். அவன் ஆதியிலே கூறியது தான்… இருண்ட நிலையிலிருந்து அகண்ட அண்டங்கள் எப்படி உருவானத் என்ற உண்மைகள் அனைத்துமே…!

விஷத்தின் ஆற்றல் உருவாகும்போது விஷத்தின் அளவுகோலையும் அந்த விஷம் எப்படி உருவாகிறது…? என்ற நிலையையும் முதல் மனிதன் உடலில் இவன் உணர்கின்றான்.

இதை வைத்துத்தான் அகண்ட அண்டம் எப்படி இருந்தது...? அதனின் நிலைகள் கொண்டு எப்படி வளர்ந்தது…? என்று துருவத்தை உற்று நோக்கும் போது இவனுக்குள் கண்டறிகிறான்.

விளைந்த உணர்வுகள் இவனின்று வெளிப்படுவதை சூரிய காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அதன் வழி சென்ற... பின் வந்த மக்கள் இதை அறிவாக அறிகின்றனர். அறிவின் வளர்ச்சியாகத் தெளிந்த நிலை பெறுகின்றனர்.

இருளை வெல்லும் திறன் பெற்ற முதல் மனிதன் அகஸ்தியனே…! அவனுடைய ஆற்றலைத் தான் குருநாதர் காட்டிய வழியில் இங்கே உணர்த்தி அதனைப் பெறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).

விண்ணுலக ஆற்றலைப் பெற்றால் தான் வளர்ச்சி - ஈஸ்வரபட்டர்

 

மனிதனின் செயலில் பல விநோத உண்மைகளை வளர்த்துக் கொண்டுள்ளான். “மனித விஞ்ஞானம்” பல உண்மை நிலைகளைச் செயல்படுத்தும் நிலையில்... இன்று நாம் பல நிலைகளைக் காண்கின்றோம்.

தனக்கு மேல் வீரியத் தன்மை கொண்ட பல உண்மைகளை அதற்குகந்த பாதுகாப்பு செயல் திறமையுடன்... இன்றைய மனிதனின் விஞ்ஞானம் எப்படி முன்னேற்றம் கண்டுள்ளது...?

வீரிய சக்தி கொண்ட மின்சாரத்தைத் தன் செயலுக்கு மனிதன் உபயோகப்படுத்துகின்றான். அதைச் செயல்படுத்துவதற்கு அதற்குகந்த பாதுகாப்பு நிலையில்
1.எது எதில் அந்த மின்சாரம் பாயும் தன்மை கொண்டுள்ளது என்று கண்டறிந்து...
2.அதனுடைய வீரியத் தன்மையைத் தன்னுடைய செயல் தன்மைக்கு
3.அதையே பக்குவப்படுத்திப் பலன் காணுகின்றான்.

இது எல்லாமே இவ்வுடலின் வாழ்நாளைக் கருதி வளர்த்துக் கொண்ட வழிமுறைகள் தாம்.

மனித உணர்வின்... எண்ண வீரியத்தின் ஒலியை இன்றைய மனிதன் உணர்ந்தானானால்... தன் உணர்வின் ஒலி கொண்டு ஒளிரும் நிலையைத் தன் வலுவில் வளர்க்கும் வளர்ச்சியை வளர்த்துக் கொள்ள முடியும்.

நம் பூமியின் ஓட்டத்தில் பல கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள சூரியனின் ஒளியை நம் பூமி “தன்னுடைய சுழற்சியின் ஜீவ ஓட்ட ஈர்ப்பின் ஒளியால்” ஒளி பெறுகின்றது.

அதைப் போன்றே தன் ஓட்ட கதியில் நட்சத்திர ஒளிகளையும் சந்திரனின் ஒளி அலையையும் தன் ஓட்டத்தில் தொடர்பு கொள்ளும் மற்றக் கோள்களின் சந்திப்பில் அந்தந்தக் காலங்களில் அவ்வொளியின் ஒலியை நம் பூமி சந்தித்துக் கொண்டே ஓடுகின்றதல்லவா...?

நாம் இன்று காணும் நட்சத்திரங்களின் ஒளியையும் சூரியனின் ஒளியையும் சந்திரனின் ஒளியையும் பூமி தன் ஜீவகாந்த ஒளியின் சுழற்சியில் ஒளி பெற்று தன்னுடைய சுழற்சியின் ஈர்ப்பில் சந்திக்கும் அவைகளின் தொடர்பலையின் அமிலத்தின் ஒளித் தன்மையில் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று பெற்று வளர்கிறது.

மனிதப் பிறப்பிற்கு ஜாதகத்தில் நட்சத்திர ராசிகளை அந்தந்த நேரத்திற்கொப்ப பிறக்கும் குழந்தைகளுக்கு எப்படிக் கணிக்கின்றார்களோ அதைப் போன்றுதான் இன்று நம் பூமியில் பல நிலைகள் (அது சந்திக்கும் நிலையில்) வளர்ந்துள்ள வளர்ச்சியின் தன்மையும்.

ஆனால் இதை எல்லாமே பூமியின் சுழற்சி ஓட்ட கதியில் சந்திப்பின் தொடரில் வளர்ந்த “இயற்கையின் வளர்ச்சி” என்கின்றோம். ஆனாலும் அதே இயற்கையை... மனிதன் தன் செயலுக்குப் பல நிலைகளை வகுத்துக் கொள்கின்றான்.

ஆகவே பூமியில் ஜெனித்த மனிதன் இயற்கையைத் தன் செயலின் தொடரில் செயலாக்கும் “விந்தைதனை” தன் உணர்வின் எண்ணத்தால் “மெய்ஞானத் தொடர் கொண்டு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்...”

ஏனென்றால் இப்பூமியின் ஜெனிப்புத் தொடர் அலை ஈர்ப்பு... இப்பூமியில் வாழும் காலத்திற்குத்தான் பயன்படும். உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் தேய் பிறை தான்.

உணர்வின் எண்ணத்தின் ஓட்டத்தை மற்றக் கோள்களின் தொடர்புடன் எண்ணி எடுக்கும் ஒலி அலையால்... இஜ்ஜீவ காந்த சரீர ஓட்டத்தில் எண்ணி எடுக்கும் அலையின் தொடர் அமில குணத்தை...
1.இச்சரீர உணர்வின் தொடரில் வளரும் உயிர் காந்த ஒளி அலையின் தொடர்பால்
2.இச்சரீரத்தை இயக்கும் ஆத்ம ஒளி ஒளிரும் தன்மையை
3.இவ்வெண்ணத்தில் எடுக்கும் தொடர்புபடுத்தி வலுப்படுத்திக் கொள்ளலாம்.

நம் பூமியின் ஓட்டத்தினால்தான் சூரியனின் ஒளியையும் மற்றக் கோள்களின் ஒளியையும் பூமி பெறுகின்றது.

அதைப் போன்று ஜீவகாந்த சரீர உயிர் எண்ண ஓட்டத்தால்... நாம் எண்ணி எடுக்கும் எக்கோள்களின் ஒளி அமிலத்தையும்... இச்சரீர உணர்வில் பதிவாக்கும் வலுவினால்...
1.இது வரை ஆத்மாவின் ஒளி வட்டம் வளர்ந்த நிலையை வலுவாக்கும் வழிமுறையில்
2.தியானம் கொள்ளும் வலுவால் இச்சரீரத்தின் ஆத்ம உயிர் வலுவாகும் ஒளியை நாம் காணலாம்.

February 22, 2022

துருவ நட்சத்திரத்துடன் ஒட்டிக் கொள்ள நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய தகுதி

 

உதாரணமாக நாகன் (பாம்பு) தன் விஷத்தை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சுகின்றது. விஷத்தைப் பாய்ச்சி மயங்கச் செய்த பின் அதை உணவாக எடுத்து உட்கொள்கின்றது.

ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு விதமான விஷங்கள் உண்டு. எதனின் விஷமோ இதனில் கலந்து அதற்குள் இணைந்த பின்
1.பாம்பின் விஷம் அதை மடியச் செய்கின்றது... அந்த விஷத்தின் வலுவைக் குறைக்கின்றது
2.குறைத்த பின் அதன் உடலின் தன்மை உணவாக உட்கொள்கின்றது.
3.உட்கொண்ட பின் அந்த விஷத்தை ஒடுக்கித் தனக்குள் எடுத்துக் கொள்ளும் போது
4.இப்படிப் பல உணர்வுகள் சேர்ந்து இந்த விஷத்தின் தன்மை அடைந்த பின்
5.அதுவே ஒளியின் தன்மையாக நாகரத்தினமாக விளைகின்றது.

இதைப் போன்று தான் ஆதியிலே அகஸ்தியன் துருவனாகும் போது உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றியவன்.

வேதனைப்படுவோரை அடிக்கடி நாம் எண்ணினால் நம் இரத்த நாளங்களில் அந்த வேதனை கலந்து மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்குள் தாக்கிய பின் அது சோர்வடைகிறது.

வேதனை என்பது விஷம். அந்த வீரிய உணர்வு கொண்டு அனைத்தையுமே மாற்றுகின்றது.

ஆனால் இதை எல்லாம் வென்றவன் அகஸ்தியன். அந்த அருள் மகரிஷியின் உணர்வை நாம் நுகரப்படும் போது நம் இரத்தத்தில் கலக்கின்றது. இதை அதிகமாக உடலுக்குள் செலுத்திய பின் இரத்தங்கள் மூலம் எல்லா உறுப்புகளுக்குள்ளும் சுழன்று வருகிறது.

நாம் நுகர்ந்த வேதனை என்ற நஞ்சினை வென்றிடும் ஆற்றல் உருவாகிறது. நஞ்சினை வென்றிடும் அந்த உணர்வின் ஆற்றல் நமக்குள் பெருகும் பொழுது அந்த நஞ்சினை மாற்றிவிடுகிறது… விஷம் பிரிந்து செல்கின்றது.

இது போன்று இப்படிப் பெருகிய உணர்வுகள் தான்
1.அணுவின் துடிப்பால் ஏற்பட்ட உணர்வுகள் அகஸ்தியனுக்குள் “மின் அணுவின் தன்மையாக” உருவானது.
2.அந்த அகஸ்தியனுக்குள் விஷம் ஒடுங்கி எப்படி மின் (பேரொளி) அணுவாக உருவானதோ
3.அதே போல நம் உடலில் இருக்கக்கூடிய உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றோம்.

இதை எல்லாம் சற்றுக் கவனமாகக் கேட்க வேண்டும். இதை ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால் உங்கள் நினைவுகள் அந்தப் பேரருளைப் பெற்ற அருள் ஞானிகளின் அருகிலேயே அழைத்துச் செல்லும்.

தீமை செய்கிறான் என்று எண்ணினால் நம்முடைய நினைவுகள் தீமை செய்பவனிடமே அழைத்துச் செல்கின்றது… அங்கேயும் இயக்குகின்றது.

அதைப் போல் நண்பன் எனக்கு உதவி செய்தான் என்று எண்ணினால் நினைவலைகள் அங்கே சென்று விக்கலாக நல்ல உணர்ச்சியை ஊட்டுகின்றது.

இதைப் போன்றுதான் அருள் ஒளியின் உணர்வுகளைப் பதிவு செய்யும் பொழுது அந்த ஞானியின் வட்டத்திற்குள் நாம் செல்கிறோம்.

1.மகரிஷிகள் தங்களுக்குள் கண்டுணர்ந்த உணர்வின் ஆற்றல்கள் வெளிப்பட்டதை குரு எனக்குக் (ஞானகுரு) கொடுத்தார்.
2.அந்த உணர்வின் வித்தினை வளர்த்தேன்
3.அந்த அருள் ஞான வித்தினை உங்களுக்குள்ளும் விளைய வைக்கின்றேன்.
4.இதன் தொடர் கொண்டு நீங்கள் எண்ணினால் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நீங்கள் ஓட்டலாம்.

அதன் உணர்வின் தன்மையை நீங்களும் உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்யலாம். உங்களில் தீமை செய்யும் உணர்வுகளுக்கு இந்த அருள் உணர்வினை இணைத்து அதைக் குறைக்கலாம்.

இது சிறுகச் சிறுக வளர்ச்சியாக நஞ்சின் தன்மையும் குறையும். உணர்வின் மணமும் குறையும்.
1.உங்கள் உணர்வின நினைவும் விண்ணிலே செல்லும்
2.பிறவி இல்லை என்ற அழியா ஒளி நிலை பெறலாம்.

நாத விந்துவின் நாராயணா… நானும் அது தான் நாராயணா…! - ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
நாராயணன் உருவமும் அவர் வீணையை வாசித்துக் கொண்டு நடப்பதுவும் தெரிகின்றது.

விளக்கம்:
மனித உணர்வில் மோதக்கூடிய எண்ணத்திற்கு இரண்டு விதமான “சரியா… தவறா…” என்ற குணம் ஓடுகின்றது. அதைப் பகுத்தறியக் கூடிய ஒலியைத்தான் நாராயணனாய் நமக்குச் சுட்டிக் காட்டிய தத்துவமே….!

தன் உணர்வின் பொக்கிஷமாய் எடுக்கும் ஒலி மனித ஞானத்திற்குத்தான் உண்டு.

சூரியனும் மற்றக் கோள்களும் செயல்படும் ஓட்டமெல்லாம்… அது அது ஓடக்கூடிய ஓட்டப் பாதையில் எக்கோள்களை எத்தொடரில் சந்திக்கின்றதோ… அதன் இயக்கத் தொடரில் தான் சூரியனானாலும் சந்திரனானாலும் வளர்ந்த எக்கோள்களும் அதனதன் இயற்கை நியதிக்கொப்பச் செயல் கொள்ள முடியும்.

ஆனால் மனித ஞானத்தின் பகுத்தறிவின் எண்ணம் தான்
1.எல்லாவற்றிற்கும் மேல் எண்ணத்தைச் செலுத்தும்
2.பல உணர்வைப் பெறத்தக்க எண்ண ஓட்டச் செயல் கொண்டது.

மனித குணத்தின் உணர்வின் செயலை… ஜீவகாந்த ஒளியை வலுவாக்கும் வளர்ச்சி… மனித உணர்விற்குத்தான் உண்டு.

மனித உணர்வின் எண்ண ஓட்டத்தில்… எண்ணும் வலுத்தன்மை கொண்ட நாம்
1.எண்ணத்தின் வலு பகுத்தறிவை எதில் செலுத்துகின்றோமோ…
2.அதற்கொத்த ஆத்ம வலுவைத்தான் இன்று நாம் பெறும் நியதி.

February 21, 2022

எனக்கு அது தேவை… இது தேவை… என்று உயிரிடம் கேட்கக் கூடாது…!

 

மனிதனுடைய வாழ்க்கையில் பலருடைய எண்ணங்களையும் இன்று நாம் அறிந்து கொள்கின்றோம்… பலராமன்…! அதே சமயத்தில் தீமையின் நிலைகளை மாற்றி அமைக்கும் சக்தி நாக்கு இருப்பதனால் நரசிம்மா...!

1.எதனையும் உட்புகாதபடி வாசல்படி (சுவாசம் உட்புகும் இடம்) மீது அமர்ந்து…
2.தீமைகள் வராதபடி ஒவ்வொன்றையும் தீமையை இங்கேயே பிளந்து விடுகின்றான்…
3.உள்ளுக்குள் சென்றால் தானே தீமையின் நிலைகள் வரும்.

ஆகவே அந்த மகரிஷியின் அருள் சக்தியைத் தனக்குள் ஒவ்வொரு நிமிடமும் நாம் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஒருவன் தீமை செய்கிறான் என்று தெரிந்து கொள்கின்றோம். ஆனால் தீமை செய்வான் என்று முதலிலேயே பதிவு செய்து கொண்டால்
1.அந்த தீமையை அடக்க மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.என் பார்வை எல்லோரையும் நல்லவராக்க வேண்டும்.
3.என்னைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் என்ற உணர்வினை
4.நமக்குள் நாம் ஆழமாகப் பதித்து விட்டால்…
5.அவர்கள் தீமை செய்தாலும் இங்கே நமக்குள் பதிவாகாது... அதை ஈர்க்கும் தன்மையும் வராது.

காரணம்… ஞானிகளின் உணர்வுகளைத் தனக்குள் வலுப் பெறச் செய்யும் பொழுது அந்தத் தீமை நம்மை இயக்காது. நம்மைப் பார்க்கும்போது பிறருடடைய தீமையின் உணர்வுகளை இது அடக்கும்.

இதைத்தான் “நீ விழித்திரு…” என்று சொல்வது.

1.எந்த நேரத்திலும்… எதனின் நிலைகள் கொண்டாலும்… நாம் ஒவ்வொரு நிமிடமும்
2.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனான உயிரிடம்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இங்கே வேண்ட வேண்டும்.
4.இந்த உணர்வு உடல் முழுவதும் படர வேண்டும் என்று பரப்ப வேண்டும்.

“அப்பொழுது அவன் (உயிரான ஈசன்) பார்த்துக் கொள்வான்...!”

அதை விடுத்துவிட்டு…
1.எனக்கு இது தேவை… அது தேவை…! என்றும்
2.இன்னாருக்கு நல்லதைச் செய்தேன். அவன் எனக்குத் தீமைதான் செய்கிறான் என்று எண்ணினால்
3.நம்மை இருள் சூழ்ந்த நிலைகளுக்கே அழைத்துச் செல்லும்.

ஆகையினால் நாம் எந்த நல்லதைச் செய்கின்றோமோ அந்த நல்ல உணர்வுகள் அங்கே விளைதல் வேண்டும். அப்படி நல்லது விளைய வேண்டும் என்றால் “அந்த மகரிஷிகள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…!” என்ற இந்த உணர்வினை வலு சேர்த்துக் கொண்டால் நமக்குள் தீமை விளையாது.

நம்மைப் பார்க்கும் பொழுதே அந்தத் தீமை விளைவிக்கும் உணர்வுகள் அங்கே ஒடுங்கும். இது தான் நரசிம்மா…!

வாசல்படி மீது. நமக்குள் நுகரும் சக்தி இங்கே வராதபடி இதைத் தள்ளிவிட்டால்
1.அந்தத் தீமை விளைவிக்கும் எண்ணங்கள் வராது
2.தீமையை விளைவிக்கும் அருள் வித்து இங்கே உருவாகாது
3.அந்த வினையாக வராது… வினைக்கு நாயகனாக இயக்காது...!

அது தான் கோதண்டத்தை முறித்தபின் “சீதா…” என்ற மகிழ்ச்சியைத் திருமணம் செய்து கொண்டான் கல்யாணராமா...!

தீமைகளை அடக்கிடும் அந்த மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
1.அந்த அரவணைக்கும் சக்தியை நுகர்ந்து... அருள் ஞானிகளுடன் சேர்ந்து…
2.என்றுமே மனிதன் என்ற நிலைகள் முழுமை அடைந்து… மெய் ஞானிகளுடன் ஒன்றி
3.பிறவியில்லாப் பெரு நிலையை நாம் அடைய முடியும்.

நிதானத்தைக் கடைப்பிடித்தால் தான் நல்லதைக் காக்க முடியும் - ஈஸ்வரபட்டர்

 

இன்றைய மனித வாழ்க்கையில் நாம் பலதரப்பட்டோருடன் ஜீவிதம் நடத்த உறவாட வேண்டியுள்ளது. அப்படிப் பழகுபவர்களின் குணங்களில் தீயகுணம் நற்குணம் என்ற நிலையை அறியக் கூடிய தன்மையை நாம் எப்படிப் பெற முடியும்...?

சாதாரண நிலையில் எல்லாத் தீய குணங்களையும் தீய பழக்கங்களையும் கொண்ட கயவனின் உணர்வின் எண்ணம்
1.தன்னுடைய அதிகப்படியான சிந்தனையின் செயலை
2.எண்ணத்தில் தீயதிற்கு செயல்படுத்தியவனின்
3.சரீர உணர்வின் ஆரோக்கியத்தில் கூட அதிக பாதிப்பு இருக்காது.

ஒரு பித்தளைப் பாத்திரம் அது எப்படி உறுதி கொண்டதாக உள்ளதோ அதைப் போன்று திருடனின் குணத்தில் அவன் வளர்த்துக் கொண்ட உணர்வின் சக்தி கொண்டு அவன் செயல் உறுதி கொண்டதாக இருக்கின்றது.

ஆனால் சமுதாயத்தில் அவன் நல்லவனாகக் காட்டிட
1.அவனுடைய செயல் எல்லாவற்றையும் அவன் பூசிக் கொள்ளும் முலாமாக
2.எதனையும் தன்னுள் கலக்கச் செய்யும் செயலாக
3.அந்தத் தீயவனின் நிலை தான் வாழ்க்கையில் வெற்றி கொள்ளும் நிலையாக
4.இன்றைய கலியின் உணர்வு நிலை செயலாகின்றது.

உதாரணமாக... மண் பாண்டத்தில் எதனையும் எந்த முலாமும் பூசாமல் அதிலே சமைத்துச் சாப்பிட முடியும்.
1.எந்தத் தீயநிலையும் மண்பாண்டத்திற்கு இருப்பதில்லை
2.ஆனால் சிறிது கவனப் பிசகு ஏற்பட்டாலும் உடைந்துவிடும் அந்த மண்பாண்டம்.

அதே போல் தான்..
1.நல்லவர்களைத் தீயவர்கள் ஏமாற்றுவது மிகவும் சுலபம்
2.தீயவனை நல்லவனாக்கவோ நல்வழிப்படுத்தவோ மிக மிகக் கடினம்.

சமுதாயத்தில் நல் உணர்வு கொண்டோர் தன் உணர்வுக்கொப்பத் தான் ஒவ்வொருவரும் இருக்கின்றார்கள் என்ற எண்ணத்தைச் செலுத்தி எல்லோரிடமும் நற்பெயர் எடுக்க வேண்டுமென்ற உணர்வில் அவர்களின் செயல் செல்கிறது.

இருந்தாலும்...
1.தீய நிலைகள் மோதும் பொழுது அவர்களுடைய உணர்வெடுக்கும் அலையால்
2.பதட்டத்தின் சிதறல் மண்பாண்டத்தைப் போன்று உடைந்து விடுகின்றது.

ஆனால் நயவஞ்சகத்திலேயே எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள தீயவர்களின் குணம் எந்த நிலைகள் வந்து மோதினாலும் உடைவதில்லை. அவரின் உணர்வின் அலை பித்தளைப் பாத்திரத்தைப் போன்று…!

இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் மனித ஆத்மாக்கள் எப்படி மீள முடியும்...?

நல் உணர்வு பெறும் பொழுதும் மீண்டும் மீண்டும் எண்ணத்தின் சிதறல்கள் வாழ்க்கையில் மோதும் பொழுதும் எல்லாவற்றையும் துறந்து சந்நியாசம் வாங்கியவர்கள் இந்தப் பூமியில் பலருண்டு.

இந்த நிலையில் மீளும் நிலைதான் சிந்தனையில் சீர்படுத்தும் சிகரமான ஆத்ம ஒளி பெறும் நிலை. அதாவது...
1.பதட்டமான காலங்களில் உணர்வின் எண்ணத்தை அவசர வேகத்தில் சொல் ஆற்றலை வெளிப்படுத்தாமல்
2.ஒவ்வொரு கால தருணத்திலும் எண்ணத்தின் சிந்தனையை நிதானப்படுத்தி
3.அத்தருணத்தில் மோதக்கூடிய எந்தச் செயலாக இருந்தாலும்
4.ஒரு நிமிட சிந்தனையால் உண்மையை அறியக்கூடிய நிதானத்தால்
5.மண்பானையை உபயோகிப்பதைப் போன்று உணர்வின் வேகத்தைப் பாதுகாத்தல் அவசியம்.

ஆகவே... நல்நிலையில் “ஏமாற்றும் தன்மையை..” சிந்தனையில் உணர்ந்துவிட்டோம் என்றால்
1.உணர்வை வேகமாகச் செலுத்தி தீய உணர்வலையுடன் நல்லதை மோதவிடாமல்
2.சிந்தனையில் நிதானப்படுத்தும் சொல் செயலால்
3.நல்வளர்ப்பின் நல் ஆத்மாவுடன் தீயதிலிருந்து விடுபட்டு
4.தன் ஆத்மா சிகரத்திற்கு செல்லும் சீர்படும் சிந்தனையால் ஒவ்வொருவருமே சித்தனாகலாம்...!

February 20, 2022

யாம் உங்களுக்குக் கொடுக்கும் சக்தி வாய்ந்த… “ஆண்டெனா பவர்”

 

விஞ்ஞான அறிவால் பரீட்சாந்திரமாகப் பிற ஆன்மாக்கள் மீது நஞ்சு கொண்ட விஷமான உணர்வுகளைப் பாய்ச்சும் பொழுது அந்த ஆன்மாக்கள் எவ்வாறு பதை பதைக்கின்றது...?

எதை அழிக்க நஞ்சான உணர்வாகச் செலுத்தி விஞ்ஞானத்தில் கண்டு கொண்டானோ அதனால் வெளி வந்த அந்த விஞ்ஞான அறிவு கொண்டு செயல்பட்ட உயிரான்மாக்கள் அனைத்தும் உலகில் சுழன்று கொண்டுள்ளது.
1.துன்புறுத்தும் நஞ்சு கொண்ட உணர்வின் ஆன்மாக்களாக எவ்வாறு படர்ந்து கொண்டிருக்கின்றது.
2.அதனுடைய விளைவுகள் என்ன...? என்ற நிலையை அறிந்து கொள்வதற்கு
3.குருநாதர் உலகம் முழுவதும் என்னைச் சுற்றுப் பயணம் செல்லச் செய்தார்கள்.
4.பன்னிரண்டு வருடம் இதையெல்லாம் அனுபவித்த பின் தான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.

விஞ்ஞான அறிவால் தன் ஆராய்ச்சியின் நிமித்தமாகப் பல கடுமையான விஷம் கொண்ட இதைப் போன்ற நிலைகள் இந்தக் காற்றிலே சுழன்று கொண்டுள்ளது.

இதிலிருந்து தப்பும் மார்க்கம் என்ன...?

ஒரு உணர்வைப் பிளந்து உடல் பெறும் தன்மையை மறைத்து தன் உணர்வுகளை ஒளியாக மாற்றி விண் சென்ற முதல் மனிதன் அந்த அகஸ்தியன்.

அகஸ்தியனின் உணர்வுகளைப் பின்பற்றிச் சென்றவர்கள் ஆறாவது அறிவால் ஏழாவது நிலையாக இன்றும் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டிருக்கின்றார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வலைகளை எடுத்துச் சுவாசித்துத் தன் உணர்வுகளை ஒளியாக்கி விண் சென்றவர்கள் மெய் ஞானிகள்.

சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் நமது பூமி சுழன்று கொண்டிருக்கின்றது.

அதே போல இந்தப் பூமிக்குள் உயிரணுவாகத் தோன்றி ஒளியின் சரீரமான அந்த அகஸ்தியனின் உணர்வைக் கண்டுணர்ந்து அதை நுகர்ந்து ஒளியாக மாற்றிச் சென்ற மனிதர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாகத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
1.“முப்பது முக்கோடி தேவாதி தேவர்கள்…” என்று சொல்வார்கள்.
2.சப்தரிஷி மண்டலங்களாக நமது பூமியின் சுழல் வட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் படரச் செய்கின்றது.

இன்று வெகு தொலைவில் இருந்து ஒலி/ஒளிபரப்பு செய்தாலும் சக்தி வாய்ந்த ஆண்டென்னாவை வைத்து தொலைக் காட்சியின் மூலமாக நாம் தெளிவாக அறிந்து கொள்கின்றோம்.

செயற்கைக் கோள்களை ஏவி விண்ணிலிருந்து ஒளி பரப்பச் செய்யும் விண்ணின் ஆற்றல்களையும் அந்த அலைகள் வெளியில் படர்ந்திருந்தாலும் அதற்குத் தகுந்த ஆண்டெனா பவரை வைத்து தரையிலிருந்து இங்கே கவர்கின்றார்கள்.

அதை விஞ்ஞானத்தின் மூலம் திரைகளிலும் டி.வி.யிலும் அந்தப் படங்களைத் தெளிவாகப் பார்க்கவும் முடிகிறது. இதைப் போல
1.மெய் ஞானிகள் கண்ட விண்ணின் ஆற்றல்களையும்
2.நாம் பார்க்க முடியும்… நுகர முடியும்… அறிய முடியும்.

அந்த மெய் ஞானியின் ஆற்றல் மிக்க சக்தியை நீங்கள் பெறும் வண்ணம் யாம் உபதேசிக்கும் போது
1.எந்த அளவிற்கு நினைவு கொண்டு கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றீர்களோ
2.உங்கள் கண் இதை ஈர்த்து உடலுக்குள் ஊழ் வினையாகப் பதிவு செய்கின்றது.
3.சாதாரணமாக உங்கள் கண் ஈர்க்கும் நிலைகளைக் காட்டிலும் சக்தி வாய்ந்த ஆண்டெனா போன்று
4.உங்கள் கண்களுக்கு ஈர்க்கும் சக்தியைக் கூட்டும் நிலைகளுக்கே இதை உபதேசிக்கின்றோம்.

எமது குருநாதர் எமக்கு உபதேசிக்கும் பொழுது நான் (ஞானகுரு) கூர்ந்து அவர் சொல்லும் உணர்வைக் கேட்டு என் நினைவைச் செலுத்தி அவர் உணர்வின் ஆற்றலை நான் நுகர்ந்தேன்.

அதனின் நினைவு கொண்டு என் கண்ணின் புலனறிவுகள் ஆற்றல் மிக்கதாக மாறியது. அவர் உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் எனக்குள் ஊழ்வினையாகப் பதிவானது.

அதை நான் மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை குருநாதர் ஏற்படுத்தினார். நீங்களும் அவ்வாறு பெற வேண்டும் என்ற நிலைக்குத்தான் சொல்கின்றோம்.

1.இந்த உபதேசங்களை யாரெல்லாம் கூர்ந்து கவனித்துக் கேட்கின்றனரோ
2.அவர்கள் கண்ணுக்கு (உரம் ஊட்டுவது போல) ஆற்றல் மிக்க சக்தியாக அந்த ஆண்டெனா பவர் கூடுகின்றது.

சாதாரண ஆண்டெனாவை வைத்து டி.வி.யைத் திருப்பி வைத்தால் அது பக்கத்தில் வரக்கூடிய ஸ்டேசன்களை இயக்கிக் காட்டுகின்றது.

இராக்கெட்டை விண்ணிலே ஏவி வெகு தொலைவில் இருக்கும் கோள்களின் செய்திகளை அறிய சக்தி வாய்ந்த ஆண்டெனாவைத் தரையிலே வைத்துக் கவரும் பொழுது அது நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.

அதைப் போலத்தான் விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நுகரும் ஆற்றலை உங்களைப் பெறச் செய்கிறோம்.

உங்கள் கண்ணின் ஈர்ப்பு சக்தியை அந்த ஆண்டெனா பவரைக் கூட்டுவதற்குத்தான் இதை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

1.கண்களுக்குக் கொடுக்கும் அதீத ஈர்க்கும் சக்தியை வைத்து
2.நீங்கள் விண்ணை நோக்கி எண்ணி ஏங்கும் பொழுது
3.சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் உணர்வலைகளை எளிதில் பெற முடியும்.

அதை உங்கள் உடலில் வினையாகச் சேர்த்து அறியாது வந்த தீமைகளைத் துடைப்பதற்காக இதைச் சொல்கின்றோம் (ஞானகுரு).

ஆத்மாவின் உண்மை உயர்வை உணர்ந்து... ஆத்மாவை வளர்க்கக்கூடிய உயர் சக்தியைப் பெற வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

நம் சூரியக் குடும்பத்தின் மனித உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் ஜீவகாந்த ஒளித் தன்மையின் ரிஷி சக்தியைக் கொண்டு மண்டலக் கோள்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று ஓடுகின்றது.

நாற்பத்தி எட்டுக் கோள்களும் சூரியனை மையமாக வைத்துச் சுழன்று... ஒன்றொன்றின் சுழற்சி வளர்ப்பின் தொடர்பலையில் செயலின் சக்தியைச் செயலாக்கும் தன்மையில்தான் ரிஷி சக்திகளின் செயலே... செயல் கொள்கின்றது.

அந்த ரிஷி சக்திகளின் செயல்... சக்தி பெற மனித உணர்வின் எண்ண ஜீவ அலைத்தொடர் பிம்பமுடன் செயல்பட்டால்தான்... உணர்வின் எண்ணத்தைச் செலுத்தக்கூடிய... அந்த ஜீவகாந்த ஒளியைத் தன் செயலுக்கு உணவாகப் பெற்று இயங்கிட முடியும்.

நம் சூரியக் குடும்பத் தொடரைப் போன்றே பல ஆயிரம் சூரியக் குடும்பங்களும் “எண்ணத்தின் உணர்வைக் கொண்டுதான்” செயல் கொள்கின்றன.

பூமியில் உயிரணுக்களாய் ஜீவன் கொண்ட மனிதனல்லாத உயிரினங்கள் பல வளர்ந்து மடிந்தாலும் எல்லாமே பூமியில் வளர்ந்த இயற்கையில் தன் உணவை... உள்ளதை உண்டு மடிகின்றன.

தன் தேவைக்கொத்த உணவுகளைத் தானே உற்பத்தி செய்து உண்ணக் கூடிய நிலை மனிதனைத் தவிர மற்றெந்த ஜீவராசிகளுக்கும் இல்லை. தன் உடல் அமைப்புக்கு ஒத்த பாதுகாப்புடன் பிறவியில் வளர்ந்த நிலைதொட்டு அத்தொடரின் சுழற்சியுடனே இறந்து விடுகின்றது.

ஆனால் மனிதன் தன் உணர்வின் எண்ணத்தில் உடல் உபாதையை மாற்றி அமைக்கப் பல செயல்களுக்கு பக்குவத்தைச் செயல்படுத்திக் கொள்கின்றான்.

மனிதச் செயலின் ஞானத்தைக் கொண்டு... இவ் உடல் தேவையின் இன்பத்தைப் பெறப் பல நிலைகளை அறிந்து... அதன் தொடரில் செயலின் வழித் தொடரைச் செயற்கையில் செய்விக்கும் நிலை... “மனிதனுக்கு மட்டும் தான் உண்டு...”

தெய்வ சக்தியை உணரும் பக்குவமும்... செயலும் கொண்டு... அன்றைய சித்தர்கள் தன் ஞானத்தை இயற்கையின் சக்தியில் பல உண்மைகளை இந்த மனிதச் சரீரத்தில் எடுக்கக்கூடிய உயர் ஞானமாகப் பெற்று வளர்த்தார்க்ள்.

உடல் தேவையின் ஒன்றை மட்டும் குறிக்கோளாக வாழும் வழித் தொடரை...
1.ஆத்மாவின் உண்மை உயர்வை உணர்ந்து
2.ஆத்மாவை வளர்க்கக்கூடிய உயர் சக்தியைப் பெற வேண்டும்.

அதைப் பெற்றால் இவ் உடல் வாழ்க்கையில் பெறக்கூடிய இன்பத்தைக் காட்டிலும் நம் உயிர் ஆத்மாவின் உண்மைச் செயலை நாம் அறியக்கூடிய தன்மையில் ஆத்மாவில் பெறப்படும் இன்பத்தின் சூட்சுமத்தை உணரலாம்.

ஆகவே நம் எண்ணத்தை ரிஷிகளின் தொடர்புடன் செயல்படும் செயல் கொள்ளும் பக்குவத்திற்கு நம் உணர்வின் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்.

ஆனால் இன்றைய சமுதாய உணர்வு... செயற்கையின் பிடியில் உண்மை நிலையை அறியாத நிலையில் உள்ளதனால்
1.ஜீவனுடன் கூடிய பல ஆத்மாக்கள் பல இடங்களில் உடலுடன் சமாதி நிலை கொண்டு
2.மகரிஷிகளின் தொடர்புக்காகத் தன் உணர்வின் ஜீவனை அழியா நிலை கொண்டு செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

மனிதனுக்குள் உள்ள பகுத்தறியக்கூடிய உணர்வின் எண்ண ஞானத்தை உடலின் செயற்கை வாழ்க்கை இன்பத்திற்கு மட்டும் செயல்படாமல்
1.உயிராத்மாவின் உண்மை அறிந்து சகல மாமகரிஷிகளின் சக்தியை உணர்ந்து
2.இஜ்ஜீவ காந்த சரீரத்திலிருந்தே ஒளிகாந்த நிலையைப் பெறக்கூடிய பக்குவத்திற்கு
3.மெய் ஞானத்தின் சக்தி நிலையை உணர்ந்து செயல்படல் வேண்டும்.

February 19, 2022

தனித்திருந்து... “விழித்திருத்தல் வேண்டும்...”

 

விழித்திரு... விழித்திரு... விழித்திரு... “தனித்திரு...!” என்ற நிலைகளைச் சொல்வார்கள். ஆனால் “விழித்திரு... தனித்திரு...” என்றால் எப்போதுமே
1.பிறிதொரு தீமையின் உணர்வுகள் நமக்குள் கலக்காது
2.பிறருடைய உணர்வுகள் நமக்குள் கலந்துவிடாது
3.தனித்த அந்த ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
4.அந்த மகரிஷிகள் உணர்வுடன் ஒன்றி நாம் தனித்து வாழ முடியும்.

இல்லை என்றால் பிறருடைய தீமை செய்யும் உணர்வுகள் நம்மை இயக்கிவிடும். அதனால்தான் நீ விழித்திரு... நீ தனித்திரு... என்று காரணங்களைச் சொல்லி ஞானிகள் ஒவ்வொரு நிலைகளிலும் கூறுகின்றார்கள்.

அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் விழித்திருந்து அந்த உணர்வின் தன்மையை தனக்குள் வளர்த்துக் கொண்டால் பிறிதொரு தீமை செய்வோருடைய உணர்வுகள் நம்மை இயக்காது.

இந்த உணர்வின் தன்மையை நாம் வளர்த்துக் கொண்டால் நாம் தனித்தே... தனித்தன்மையில் வாழ்கின்றோம்.

துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக மற்றொன்று இதை இயக்கிடாது அது தனக்குள் இயக்கப்பட்டு ஒளியின் தன்மையாக “தனித்தன்மையாக...” வளர்கின்றது.

இந்த மனித வாழ்க்கையில் எவரொருவர் விழித்திருந்து... தீமை தனக்குள் வளராது அது தனித்துத் தன் ஒளியின் சுடராக மாற்றினார்களோ...
1.அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சுடராக ஆகி
2.அவரவர்கள் நிலைகளுக்கேற்ப தனித்தே வாழ்கின்றார்கள் “தனித்தன்மை கொண்டு...”

ஆகவே நாம் இந்த மனிதனின் வாழ்க்கையில் நாம் எதனின் தன்மை கொண்டு நாம் நுகர்கின்றோமோ அடுத்தவருடைய தொடர்பு கொண்டு தான் நாம் வாழுகின்றோம். ஒருவருக்கொருவர் இணை சேர்த்து ஒருவருக்கொருவர் ஒன்றி வாழ்கின்றோம்.

கோள்களும் அதே போன்று தான் அதனதன் நிலையில் வளர்ந்து அதனதன் தனித்தன்மையில் வளர்ந்தாலும் அதனில் விஷத்தன்மைகள் வளர்கின்றது. ஆனாலும்
1.சூரியன் “தனித்தன்மை கொண்டு...” வரும் நஞ்சினைப் பிரித்துவிட்டு ஒளியின் சுடராக அது மாற்றுகின்றது
2.இதைப் போன்றுதான் நாம் தனித்திருந்து விழித்திருத்தல் வேண்டும்.

சூரியன் எப்படி நஞ்சினைப் பிரித்து அதனுடைய தனித்தன்மையைக் காட்டுகின்றதோ... தனித்த நிலைகள் அதனுடைய ஒளியின் தன்மையாக அது செயல்படுகின்றதோ... இதைப் போன்றுதான் தீமையின் உணர்வுகள் ஒவ்வொரு நொடியிலும் நமக்குள் சேராது நமக்குள் தனித்திருத்தல் வேண்டும்... அதே போல விழித்திருத்தல் வேண்டும்...!

ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு நல்லவருடைய உணர்வுகளையும் அறிந்தாலும் அதிலே அவர்களுடைய உணர்வுகளில் சிக்கி...
1.அவருடைய உணர்வுகளுக்கு அடிமையாகி விடாது “தனித்திருப்பது நல்லது...”
2.தனித்திருப்பது என்றால் நாம் விழித்திருப்பது நல்லது.

தீமைகள் எப்பொழுதும் நமக்குள் ஊடுருவாது அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நாம் நுகர்ந்து... அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் பெருக்கித் தீமைகள் தன்னை நாடாது தனித்தன்மையாக நமது உணர்வுகள் பிறருடைய தீமைகளிலிருந்து அகன்று... நாம் தீமையற்றவர்களாக வாழும் நிலை பெற வேண்டும்.

1.மகரிஷிகள் தனித்திருந்து... அவர்கள் விழித்திருந்ததனால் தனித்திருக்கும் நிலை பெற்றார்கள்
2.அதனின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால்
3.நமது வாழ்க்கையில் விழித்திருக்கும் உணர்வும்
4.நமது வாழ்க்கையில் தனித்து வாழும் நிலைகளும் .
5.நமது வாழ்க்கையில் தீமையற்ற நிலைகளும் வளர்ந்திடும் நிலைகள் பெறுகின்றோம்.

இதை நினைவுபடுத்தும் நன்னாள் தான் சிவன்இராத்திரி.

சித்தம் தெளிவானால் வெற்றி நிச்சயம் - ஈஸ்வரபட்டர்

 

காட்சி:

அழகான தடாகத்தில் அன்னப்பட்சி நீரில் நீந்துவதைப் போன்றும்... படகில் மனிதர்கள் அமர்ந்து செல்வதைப் போன்றும் தெரிகின்றது.

விளக்கம்:
மனிதனுடைய ஞானம் “ஒன்றைப் பார்த்தவுடன்...” அதனைத் தன்னுடைய செயலுக்கு வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று சிந்தனையில் அதைச் செயலாக்குகின்றான்.

நீரில் மிதக்கக்கூடிய அன்னப்பட்சியின் நிலையைப் பார்த்துத் தானும் அதைப் போன்று செயல்படுத்திக் கொள்ளும் அமைப்பாக (படகை) உருவாக்குகின்றான்.
1.இப்படிப்பட்ட சிந்தனையின் செயலுக்கு வலுப்படுத்தும் மனிதர்கள்
2.வாழ்க்கைத் தொடரில் வெற்றி பெறுகின்றார்கள்.

ஆனால் கற்பனையில் எண்ணக்கூடிய மனிதர்களின் வாழ்க்கை
1.சஞ்சலம்... சோர்வு... பிணி... என்று
2.தன் ஞானத்தின் வலுவைத் தான் எண்ணிய கற்பனை உணர்வுடன்
3.வாழ்க்கையை ஒப்பிடும் சிந்தனையற்ற செயலாக்கம் இல்லாத நிலையினால் அவ்வாறு ஏற்பட்டு விடுகின்றது.

கற்பனையின் உணர்வில் தான் எண்ணியதை... கவுரவத்தின் உணர்வாகச் செயலாக்குபவன் வாழ்க்கையில் தான் முன்னேறுவதில்லை.

ஆக்கத்தின் ஆக்கமாய் உணர்வின் எண்ணத்தைச் சிந்தனையில் சீர்படுத்தும் மனிதனின் குணம்... வாழ்க்கையின் செயல்பாட்டில் வெற்றி காணும் நிலை ஏற்படுகிறது

ஒவ்வொரு பொருளிலுமே அப்பொருளின் மாற்றம் எப்படி ஏற்படுகின்றது...? அதனுடைய “உஷ்ண அலையின் மாறுபாடு நிலை... சமைப்பு நிலை... ஏற்படும் தன்மை கொண்டுதான்...” ஒவ்வொரு கருவின் உருவும் வளர்கின்றது.

வளர்ச்சியில் வெளி கக்கும் கழிவு நிலை கொண்டு தான்... அதனின் சத்து நிலையை ஒவ்வொரு செயலிலும் அச்செயல் நிலையின் “உன்னத நிலை” உருவாகின்றது.

பூமியின் ஈர்ப்பில்... உயர்ந்த ஒவ்வொரு கனி வளங்களும் வளரக்கூடிய நிலையில் அவ்வளர்ச்சியின் உயர்ந்த தன்மையான உலோகங்களை நாம் பிரித்து எடுக்கின்றோம்

சாதாரணமாகத் தங்கப் படிவங்கள் வளர்ந்துள்ள மண்ணில் உள்ள தங்கப் பாளங்களை வெட்டி எடுத்து... அதைப் புடம் போட்டுத் தங்கமாக்குகின்றோம். இதைப் போன்றே பூமியில் உள்ள கனி வளங்களை நமக்கு வேண்டிய பக்குவத்திற்கு பல நிலைகளைச் செய்வித்துச் செயல்படுத்துகின்றோம்.

இதைப்போன்று இச்சரீரத்தின் உண்மை நிலையையும் நாம் உணரல் வேண்டும்.

நாம் எடுக்கக் கூடிய எண்ணத்தின் உணர்வின் உஷ்ண ஓட்டத்தால் நாசி எடுக்கும் சுவாசம் கொண்டு
1.நாசியில் (மூக்கில்) சளியும்
2.பார்க்கும் பார்வையின் ஒளி ஈர்ப்பைக் கொண்டு கண்ணெடுக்கும் ஒளி ஈர்ப்பால் கண்ணின் பீழையும்
3.செவி கேட்கும் ஒலி ஈர்ப்பால் காதில் அழுக்கும்
4.வாய் பேசும் ஒலி அலையால் வாயில் உமிழ் நீரும்
5;உண்ணும் உணவால் மலமும் சிறு நீரும்
6.பால் உணர்வின் உஷ்ண அலையின் தொடர்பால் பெண்ணிற்கு மாதவிடாயும் ஆணிற்கு விந்து நிலையும்
7.உடல் உறுப்பின் செயலில் வேர்வையும்
8.அந்தந்த உறுப்பின் அவயவங்களின் செயலுக்கொப்ப வெளிப்படும் கழிவுகள் நம் உடல் உறுப்பிலேயே செயல் கொள்கின்றதல்லவா...!

அதைப் போன்றே மனித வாழ்க்கையில் எண்ணத்தின் உணர்வில் மோதப் பெறும்... நடந்தது... நடக்க வேண்டியது... நடப்பது எதுவாகிலும்... உணர்வின் ஜீவித எண்ணமுடன் ஓடக் கூடிய எல்லாமே இவ்வுயிர் ஆத்மாவின் சரீர வாழ்க்கையில் எலும்பில் ஊனாகப் பதிந்து விடுகின்றது.

ஊன் நிலைக்கொப்பத்தான் ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளும்... இருக்கும்.

1.எதை அதிகமாக எடுத்து மனித உணர்வின் எண்ணம் பேசிச் செயல்படுகின்றதோ
2.அந்த நிலைக்கொப்ப ஊனின் பதிவு வினையாக வாழ்க்கையில் வெளிப்படுகின்றது.

கண் பார்த்துப் பொருளறியும் நிலையால் கண்ணில் எப்படிப் பீழை ஏற்படுகின்றதோ அதைப் போன்று
1.உணர்வெடுத்து நாம் பேசியது.. பேசப் போவது என்ற எண்ண உணர்வே ஊனாகி...
2.ஊனே வினையாகி... வினையே வாழ்க்கையாக... அந்த வாழும் நிலையை மாற்றுவது என்றால்
3.இச்சரீர உணர்வின் விதியால் மதி கொண்ட உயர் ஞானத்தால் மெய் ஞானம் பெறும் ஏழாம் நிலையில்
4.இது நாள் வரை இங்கே சொன்ன வழி முறைக்கொப்ப விண்ணிலிருந்து பெறும் மின் காந்த ஒளி சக்தியைக் கவர்ந்து
5.சரீர உணர்வுடன் இவ் ஊனில் பதிவாகி உள்ள பதிவு நிலையை மாற்றக்கூடிய அந்தச் செயல் தன்மைக்கு
6.ஐம்புலனின் செயலின் வீரியத்தைக் கண் காது மூக்கு வாய் உணர்வு என்ற
7.ஐம்புலனின் செயலையும் ஒரு நிலையாக்கி... மதி கொண்டு மெய் ஞானம் பெற வேண்டும்.

மெய் உணரும் உண்மையால் பரந்து கிடக்கின்ற இயற்கையில் உண்மையின் உணர்வைச் சித்தத்தின் செயலாகச் சீர்படுத்துதல் வேண்டும்.

கற்பனைக் கோலம்... கலங்கிடும் காலம்...
அனுபவ ஆற்றல்... ஆக்கத்தின் ஆக்கம்...!

சஞ்சலத்தில் சச்சரவை... சங்கடத்தில் சிக்கலின்றி... சிந்தனையில் சீர்தூக்கினால்...
சிந்தைதனில் சீர்படுத்த... சிந்தையின் செயலே... சீர்படும் சிகரமாகுமே...!

February 18, 2022

நான்...! என்று இல்லாது “நாம்...” என்ற கூட்டமைப்பாகச் செயல்பட வேண்டும் என்று குருநாதர் எச்சரிக்கை செய்தார்

 

மெய் ஞானிகள் அனைவரும் இயற்கையின் பேருண்மைகளைக் கண்டுணர்ந்தவர்கள். தங்கள் உடலில் வந்த தீமைகளை அகற்றி மெய் உணர்வுகளை அவர்களுக்குள் ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றவர்கள்.

அவர்களின் நினைவுகளைத் தான் எனக்குள் (ஞானகுரு) பதியச் செய்து எமக்கு உபதேசித்து அருளினார் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்.

1.மனித வாழ்க்கையில் தன்னை அறியாது வந்த சோர்வடைந்த உணர்வுக்குள்
2.அந்த மெய்ஞானிகளின் உணர்வை இணைத்து அவர்களின் நினைவு கொண்டு நீ கவர்ந்தாயானால்
3.அந்த மெய் உணர்வைப் பெறும் தகுதியை நீ பெறுகிறாய்.

அதனின் உணர்வு உனக்குள் விளைய... விளைய... உன்னிடமிருந்து வெளிப்படும் எண்ணத்தின் சொல் கேட்டுணர்வோர் உணர்வுகளில் ஓ... என்று ஜீவன் பெற்று ம்... இன்று அவர் உடலுக்குள் பிரம்மமாகின்றது.

இவ்வாறு நீ எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை... நீ பிறர் நலமாக இருக்க வேண்டும் என்றும்... அவர்கள் மெய் ஞானிகளின் அருள் ஆற்றல் பெற வேண்டும் என்றும்... ஏக்க உணர்வுடன் வரும் பொழுது அனைத்து உணர்வின் சத்தைப் பெற்று நீ வலுப்பெற்றவன் ஆகிறாய்.
1.அந்த உயர்ந்த சக்தி எத்தனை பேருக்குக் கிடைக்க வேண்டும் என்று நீ எண்ணுகிறாயோ
2.அத்தனை பேருடைய எண்ணம் உனக்குள் வலுவாகக் கிடைக்கின்றது.

மெய் உணர்வுகள் அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று நீ எண்ணும் பொழுது... இந்த உணர்வுகள் அவர்கள் உடலுடன் இரண்டறக் கலந்து... சக்தி வாய்ந்த நிலைகளாக அங்கேயும் விளைகின்றது.

விளைந்த உணர்வுகள் வெளிப்படும் பொழுது “அவர்கள் எவ்வாறு மகிழ்ச்சி பெறுகின்றார்கள்...?” என்று நீ எண்ணிப் பார்க்கும் பொழுது இந்த உணர்வின் சக்தியை உனக்குள் ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றாய் என்று தெளிவாக உணர்த்தினார் குருநாதர்.

“நாம்...” என்ற நிலையை அடைந்தால் நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்த்து வலு கொண்ட நிலையாக அடைகின்றோம்.

1.நான்...! என்ற நிலையில் சென்றோம் என்றால்
2.அது தனித்து நின்று மற்றவரின் உணர்வின் வலு இழக்கப்படுகின்றது... வலு கிடைக்காது.
3.நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலை வருகின்றது.

குரு என்னிடம் இதை எச்சரித்தார்.

மகரிஷிகளும் ஞானிகளும் உயர்ந்த ஆற்றலை எப்படி வளர்த்துக் கொண்டார்களோ... எப்படிக் கலந்து உறவாடினார்களோ அந்த உணர்வின் சக்தியை நீ பெற வேண்டும் என்று தான் உனக்குள் அதை இணைக்கின்றேன் (ஈஸ்வரபட்டர்).
1.நீ பெற வேண்டும் என்று நான் எண்ணும் பொழுது
2.உன்னுடன் இணைத்தே நான் ஆகின்றேன்... ஆக “நாம்... ஆகின்றேன்...”

இதைப்போல அனைவருக்கும் அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது
1.அவர்களுடன் இணைந்த நீயும்... அவர்கள் ஆகின்றாய்.
2.அவர்களும் உன்னுடன் இணைந்து... அவர்கள் ஆகின்றார்கள்

இதைப் போன்றுதான் “நாம்...” என்ற நிலைகளில் அந்த அருள் ஞானிகளின் சக்திகளைப் பெற நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

விண்ணிலிருந்து பல பல தீமைகள் (நஞ்சுகள்) வந்தாலும் அந்தப் பலவும் ஒன்றாக இணைந்து சூரியன் ஒளியின் சுடராக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிமயமாக இயக்குகிறது.

அதைப் போல நீயும் மெய் ஞானிகளின் உணர்வைப் பருக வேண்டும். அதைப் பருகிடும் சக்தியைப் பெற வேண்டும் என்றால் அனைவருக்கும் நீ அதைப் பெறச் செய்ய வேண்டும்.

அதனின்றுதான் நீ அதைப் பெறுகின்றாய்...! என்ற நிலையைக் குரு தெளிவாக எனக்கு வழிகாட்டினார். அவர் எனக்குக் காட்டிய அதே அருள் வழியைத் தான் உங்களுக்கும் உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.

1.குருநாதர் காட்டிய வழியில் நாம் சென்று
2.ஒளியின் சரீரமாக அனைவரும் ஆக முடியும்...! என்ற நிலைக்குத் தான் இந்த உபதேசம்...!

மனிதன் இன்பமாக இருக்க...வேண்டும் என்றால்… அதை மெய் ஞானத்தால் தான் பெற முடியும் - ஈஸ்வரபட்டர்

 

இங்கே உணர்த்தப்படும் உண்மை மெய் ஞானத்தை... மனிதன் பெற வேண்டிய உண்மைச் சக்தியின் வளர்ச்சி நிலையை... ஒவ்வொருவரும் பெறல் வேண்டும்.

பூமியின் சுழற்சியும் பூமியின் வளர்ச்சியும் பூமியின் பல கோடி வளர்ப்பு நிலையில் ஜீவ பிம்பம் நிலை பெற்ற உணர்வுகளில் மனிதனுக்குக் காட்டப் பெற்ற உயர்வு சித்தம் என்பது அன்றிருந்த மனிதர்கள் சைவ சித்தாந்தத்தை மனிதர்களுக்கு உணர்த்தியது தான்...!

இயற்கையின் உண்மைகளை அறிய மனிதர்கள் உணர்வின் ஒட்டத்தில் ஜீவ வாழ்க்கைக்கு ஆறறிவின் முதிர்வை மெய் ஞானம் கொண்டு சித்தத்தை அறிய... சைவ சித்தாந்தத்தில் உண்மைகள் வடிக்கப் பெற்றது.

1.உயிரணுவின் உணர்வை உயர்த்தக்கூடிய ஒலி ஒளி நீரைக் கொண்டு
2.எடுக்கும் எண்ணத்திற்கு எண்ணம்தான் உணர்வாகி... உணர்வு தான் ஆத்மாவின் வலு என்பதனை உணர்ந்து
3.தெய்வ குணங்களை வணங்கும் எண்ணத்தை வழிகாட்டிய முறை நான்கு வேதங்களாய் பிரிக்கப்பட்டு
4.மந்திர ஒலிகள் ஜெபிக்கப்பட்டு மந்திர ஒலிகளுக்கு வலுவாக்க வேள்விகளை நடத்தி
5.அதிலிருந்தே மனிதனை மனிதனே உயர்த்தி... தாழ்த்தி... வழி வந்ததின் வழியினை
6.நாம் இன்று நம் சிந்தனையில் உணர்ந்திடல் வேண்டும்.

இன்றைய விஞ்ஞானத்தில் வளர்த்துக் கொண்ட முறைகள் எல்லாமே மனிதனுடைய தேவையின் அடிப்படையில் “உடலின் சுகத்திற்கே” முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த விஞ்ஞானத்தின் கதியால் மனித உணர்வு உயர்வு எங்கிருக்கின்றது...? என்பதை மனிதன் மெய் ஞானத்தில் உணரவில்லை.

அணு ஆயுதங்களும் இன்று விஞ்ஞானத்தில் சுகம் கொள்ளும் ஒலி ஒளி யாவையுமே இவ்வுடலின் தேவைக்குத்தான் உள்ளது. மனித விஞ்ஞானம்... மருத்துவம்... யாவையுமே உண்ண... உடுக்க... இருக்க... உடலின் தேவைக்கு சுகம் பெற வேண்டியதாகத் தான் உள்ளது.

1.ஆனால் மனித ஜீவ வாழ்க்கையில் மலர வேண்டிய...
2.மெய் ஞானத்தால் மனிதன் பெறக்கூடிய உண்மையை உணர்ந்தோமா...?

இந்த உடலுக்கு என்று சுகம் காண... மனித ஞானம் எல்லாமே விஞ்ஞானம் கண்டு... அதனால் விபரீத சுகமாக அல்லவா... இன்று நடக்கும் கலியில் சுகம் காணும் நிலை...!

உடல் வாழ்க்கை உள்ள வரைக்கும்... இன்ப வாழ்க்கை இனிது நடக்க... மனித உணர்வின் தேவை என்பது “செயற்கையிலேயே ஒன்றி விட்டது...” இயற்கையின் வித்தாக இருந்த உலகத்தை மாற்றும் வழியாகவே மாறி விட்டது இன்றைய நிலை.

எந்தச் சுகத்தைப் பெற மனித உணர்வின் வேகம் விஞ்ஞானத்தில் சென்றதோ... அவை எல்லாம் செயற்கையின் குறுகிய கால சுகம் தான்..!
1.மனித வாழ்க்கையில் உணர்வின் குணத்தைச் சமம் கொண்டு
2.மெய் ஞானத்தை உணரும் ஆத்ம பலம் பெறும் சுகம் ஒன்றே
3.ஏகாந்தத்தில் உணரும் ஏகாந்த சுகம்.

உயிர் பெற்ற ஜீவ ஆத்மாவின் முதிர்வு கொண்ட மனித உயர்வை... மெய் ஞானத்தால் மனிதனுக்கடுத்த தெய்வ குணங்களால்... தெய்வச் செயலைத் தன் சித்தத்தின் சித்தாக்கிக் கொண்டால் பிறப்பின் முதிர்வுக்கு அடுத்த நிலையான... “பறக்கும் நிலையை” மனிதன் என்றோ பெற்றிருக்கலாம்..!

மனிதனின் உணர்வில் இனிமையை ரசிக்க... இன்பமாய் இருக்க...வேண்டும் என்றால் அது... மெய் ஞானத்தின் சித்தத்தால் தான் பெற முடியும்.

1.இன்று செயற்கையில் காணும் நிலை யாவையுமே குறுகிய கால நிலை தான்
2.வழியறிந்து வளரும் நிலை “உண்மையின் சக்தி நிலை” பெறுவது ஆகும்...!

February 17, 2022

நோய் உருவாகாதபடி நாம் விழித்திருக்க வேண்டியதன் அவசியம்

 

இந்த மனித வாழ்க்கையில் அடிக்கடி நாம் வேதனைப்படும் உணர்வுகளை எடுப்போம் என்றால்
1.நம் உடலில் உள்ள பித்த சுரப்பிகளில் அது சுரக்கும் உணர்வுகள் அதிகமாக அதிகமாக
2.வேதனை உணர்வுகள் உறையப்பட்டு அது மோதப்பட்டு அதனின் உணர்வுகள் கற்களாக உருபெறுகிறது.

அவ்வாறு உருப்பெற்று விட்டால் இந்தப் பித்தத்தையே விஷம் கொண்ட கற்களாக அது மாற்றிவிடுகின்றது.

இதைப் போன்று சிறுநீர்ப் பைகளிலும்... இரத்தத்தைச் சுத்திகரிக்கும் கிட்னியில் மணலைப் போன்று அது தேங்கி விட்டால் அந்த விஷத் தன்மைகள் உறைந்து உறைந்து விஷத்தையே தனக்குள் எடுத்து இரத்தத்தில் வரும் மாசுகளைச் சுத்திகரிக்கும் தன்மை இழந்துவிடுகிறது

கிட்னி பழுதடைந்து விடுகின்றது. அதனின் உணர்வின் தன்மை உடல் முழுவதும் தீமையை உருவாக்கும் நிலையாக உருவாகி விடுகின்றது.

பின் உடல் முழுவதும் விஷத் தன்மைகள் பரவி அடுத்து மாற்று உறுப்புகளை மாற்றித்தான் விஞ்ஞான அறிவு கொண்டு வாழ வேண்டி உள்ளது. அப்படிச் செயல்பட்டாலும் அதிலிருந்து முழுமையாக மீள்வது என்பது மிகவும் கடினமாகி விடுகிறது.

இதைப் போன்றுதான் நாம் சுத்திகரிக்கும் உறுப்பான கல்லீரல் போன்ற உறுப்புகளில் விஷத்தின் தன்மை ஆற்றல் அதிகரித்து விட்டால் அங்கே உணர்வின் தன்மை வளர்ச்சி பெறப்படும் போது அதுவும் பாழடைகிறது.

ஏனென்றால்...
1.சில கடுமையான நிலைகளை உருமாற்றும் அல்லது கரைத்திடும் திறன் கொண்ட
2.அமிலத்தை உருவாக்கும் திறனை நம் கல்லீரல் இழந்து விட்டால்
3.மற்ற கடின பொருள்களைக் கரைக்கச் செய்யும் தன்மையும் அது செயல் இழந்துவிடுகிறது.

இதைப் போன்று வாழ்க்கையில் நாம் எடுக்கும் விஷத் தன்மையான உணர்வுகளால் நஞ்சான அணுக்கள் விளையத் தொடங்கி விட்டால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் பாழடையும் தன்மையே அடைகிறது.

இயற்கையிலே ஒவ்வொரு இனப் பறவைகளும் தன் தன் குஞ்சுகளுக்கு என்று அது உணவைத் தேடிச் சென்று அதை வாயிலே ஊட்டுகின்றது.

எப்போது...?

அந்தக் குஞ்சுகள் இரைக்காக ஏங்கி இருக்கும் பொழுது அதனதன் இனம் அதனதன் வழியில் உணவாகக் கொடுத்து அதை வளர்க்கின்றது. இதைப் போன்றுதான்
1.நம் உடலில் உள்ள அனைத்து குணங்களுக்கும் நம் உயிரே தாயாகின்றது.
2.அதனால் உருவாக்கப்பட்ட அணுக்களுக்கு அது எதனின் வழியில் வேதனையின் நிலைகள் உருவானதோ
3.அந்த வேதனையான உணர்வு தான் அதற்கு உணவாகத் தேவை.
4.அதே வேதனை உணர்வைத்தான் உயிர் உணவாகக் கொடுக்கும்.
5.வேதனையால் உருவான அணுக்கள் தன் உணர்ச்சிகளைத் தூண்டி ஏங்கப்படும் போது
6.உயிர் (தாய்) காற்றிலிருந்து கவர்ந்து அந்த வேதனையான அணுக்களுக்கு உணவைக் கொடுத்துக் காப்பாற்றுகின்றது.

நல்ல குணங்கள் கொண்டும் நாம் வாழ்ந்திருப்பினும் வேதனை என்ற குணங்கள் வரும் பொழுது அதனின் ஆற்றல் பெருகி விடுகின்றது. அதனின் மலங்கள் உடலில் அதிகரிக்கப்படும் பொழுது நல்ல குணங்களுக்குக் கிடைக்கும் உணவு தடையாகி... அதனின் வலு இழக்கப்படுகின்றது.
1.சரியான வளர்ச்சி பெறுவதில்லை
2.நாம் நல்லதை எண்ணினாலும் நம்மால் முடியாது போகிறது.

அது காலத்தால் தடைப்படும் போது அந்த விஷத்தை உருவாக்கும் விஷ அணுக்களின் உணர்வுகள் நமக்குள் அதிகமாகப் பெருகி விடுகின்றது. இதைப் போன்ற நிலைகள் இருந்து நாம் விழித்திருத்தல் வேண்டும்.

1.ஒரு புளியங்கொட்டை அது மண்ணில் செடியாக முளைக்கும் போதே
2.அதைக் கிள்ளி எறிந்து விட்டால் ஒன்றும் சிரமமில்லை
3.அதைப் பிடுங்க கோடாரியோ மற்ற ஆயுதமோ தேவையில்லை.

ஆனால் பெரிய மரமாக வளர்ந்த பின் அதை வெட்டக் கோடாரி அவசியம் தேவை. ஏனென்றால் மரங்களைக் கோடாரி போன்ற போன்ற ஆயுதத்தை வைத்துத் தான் வெட்ட முடியும்.

ஆனால் செடி சிறியதாக இருக்கும் பொழுது தெரிந்து கொண்டால் எளிதாக நீக்க முடியும். அதனால் தான் விழித்திரு...! என்று சொல்வது

மரம் பெரிதாக வளர்ந்த பின் அதனுடைய விழுதுகளைப் பாய்ச்சி விட்டால் கட்டிடத்தையே பலவீனமாக்கிவிடும்... நடந்து போகும் பாதையும் தடுத்துவிடும்.

ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து விட்டால் பாதையும் மறைக்காது... கட்டிடத்தையும் இடிக்காது. ஆகவேதான் நாம் விழித்திருத்தல் வேண்டும்.

1.நமது வாழ்க்கையில் எந்த வழியில் தீமை என்ற உணர்வை நாம் நுகர்ந்தாலும்
2.அடுத்த கணம் அது நம் உடலுக்குள் வளராது விழித்திருத்தல் வேண்டும்.

தீமைகளைக் கேட்டுணர்ந்த பின்... அல்லது பார்த்துணர்ந்த பின்... அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்... அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா...! என்று எண்ணி அந்தச் சக்திகளை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

அந்த வேதனையை உருவாக்கிய உணர்வுக்குள் மகரிஷிகளின் உணர்வை இவ்வாறு பாய்ச்சப்படும் போது அதை அடக்கி அதன் தன்மையை மாற்றிவிடும்.

தெய்வ குணத்தை வளர்ப்பதே “சைவ சித்தாந்தம்...” ஈஸ்வரபட்டர்

 

ஜீவன் பெற்ற அனைத்து ஜீவன்களுக்குமே ஞானம் உண்டு. ஞானத்தை எதில் செலுத்துகின்றோமோ அச்செயல்தான் நடக்கின்றது.

1.ஞானத்தை மெய்யாக ஆக்கும் உயர் ஞானத்தை உணரும் சித்தத்தால்
2.உண்மையை வளர்க்கும் சைவ சித்தமாக்க வேண்டும்.

உணர்வில் வளர்க்கப்படும் எண்ணங்கள் “பிறிதொன்றை வளர்க்கவல்ல...” உயர் குணமுடன் தெய்வ குணங்களைப் பெறுவது சைவத்தின் சித்தம்.

ஆனால் அசுர குணங்களை அரக்க குணமாக எண்ணக்கூடிய உணர்வு அசைவமாகின்றது. அதனுடைய தொடர் அலையில் வளர்ப்பின் நிலை யாவையுமே வளர்வற்ற சிதறும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.

இன்று இப்பூமியில் காற்றலையில் கலந்துள்ள அமிலத் தன்மை திடமாகி அத்திடத்தை நாம் நுகரும் பொழுது அதனுடைய வாசனை அதிகமாக வீசுகின்றது.
1.அதனையே சமைக்கும் பொழுது
2.திடத்தைக் காட்டிலும் வேகமாக அதனை நுகர முடிகின்றது.

சமைப்பின் பொருள் அனைத்தும் காற்றலையில் இருந்துதான் திடப்பட்டு செயலுக்கு வருகின்றது.

செயல்படும் பொருளைப் பார்க்கும் பொழுது (கண்களால்) அது “உறுதிப்படுத்தப்பட்ட உண்மை...” என்று அறிகின்றோம். உண்மை எதிலிருந்து வருகின்றது...?

இக்காற்றலையில் எவை எவையெல்லாம் கலக்கப் பெற்றுள்ளனவோ அவை தான் திடமாகிச் செயலாகின்றது. அதைப் போன்று...
1.வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள திடப் பொருளை நம்பி
2.அதைத்தான் உண்மை...! என்று நாம் உணர்ந்து
3.இந்த உடலுக்கு மட்டும் வாழுகின்றோம்.

உணர்வலையாக எண்ணுவதை... காற்றலையில் கலந்துள்ள உயர்ந்த நிலையை... தனக்கொத்த உணர்வலையின் எண்ணமுடன் “வலுப்படுத்தக் கூடிய வளர்ச்சிக்குத் தன் சித்தத்தைச் சைவமாக்க வேண்டும்...”

திடத்தின் உடல் வாழ்க்கையில் வாழக் கூடிய வழித் தொடர் யாவையும் அசைவம் தான்.

சித்தத்தால் எடுக்கும் மெய் ஞானத்தைத் தன் ஞானமாக்கும் உயர் ஞானி... தன் ஆத்மாவை அழிவில்லா ஒளித் தன்மையாக... என்றுமே அழியா நிலை கொண்டு ஏகாந்தத் தன்மை பெறுகின்றான்.

1.ஏகாந்த நிலைக்கும்...
2.இவ்வுடலின் உணர்வின் எண்ணத்தைச் சைவமாக்கும் தெய்வ குணத்திற்கும்... தொடர்புண்டு.

ஏனென்றால் இஜ்ஜீவ வாழ்க்கையில் சரீர உணர்வின் எண்ணம்.. சங்கடத்துடன்... சலிப்புடன்... மோதப்படும் உணர்வால் மனிதன் தன்னையே அசைவமாக்கிக் கொள்கின்றான்.

தெய்வ குணத்தைத் தன்னுள் வளர்த்து... மெய் உணரும் வழியை அறிய... தெய்வ குணங்களைப் பெற ஒவ்வொருவரும் அதை உரமாகத் தான் எடுத்து வளர்தல் வேண்டும்.

ஒவ்வொரு ஆத்மாவையுமே தெய்வ குணங்களை வளர்க்கும் சைவத்தின் சித்தாகத் தன் உணர்வின் செயல் அமையும் பொழுது தன் வலுவின் வளர்ச்சியால் மெய் ஞானி சித்தனாகின்றான்.

சித்து நிலையின் அஷ்டமாசித்தினால் அகிலத்தையும் அறியக்கூடிய வளர்ச்சி நிலையின் வளர்ப்பால் ரிஷியாக முடியும்.

இரு மனத்தின் திருமணமே
இல்லறத்தின் நறு மணமே
இறையுணர்வின் வழியறிந்தே
இவ்வுலகின் காவியத்தில்
இருளகற்றும் ஒளிச்சுடராய்
இனியதொரு வாழ்வமைப்போம்

இடும்பனான குணமகற்றி
இறையருளின் நற்குணத்தில்
ஈன்றெடுக்கும் கனியமுதே
ஈசனருள் பொக்கிஷமே...!

இல்லத்தில் இனிய வித்திட்டு
இனிய குண வளர்ப்பாக
இல்லறத்தில் நீர் ஊற்றி
இன்பத்தின் இனிமை பெற்றிடவே

ஈசன் அருளில் உதித்த நாம்
ஈன்றெடுத்த தெய்வமாய்
ஈன்றெடுத்த அன்னை தந்தையை
ஈசனாக்கி வணங்கிடுவோம்

February 16, 2022

மற்றவருடன் பேச்சுத் தொடரானாலும்... நம் நினைவுகள் உயிருடன் ஒன்றும் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்

 

இராமன் எப்பொழுது கல்யாணராமன் ஆகின்றான்...?

தீமைகளை விளைவிக்கும் வில்லை... அந்த அம்பினை ஒடித்து விடுகின்றான். தீமைகள் செய்யாத உணர்வினை எப்பொழுது தனக்குள் விளைவிக்கின்றானோ அப்போதுதான் மற்றவரை அரவணைக்கும் தன்மை வருகிறது... சீதாவை அரவணைத்துக் கொள்கிறான்... கல்யாணராமா.

அரவணைக்கும் உணர்வைத் தனக்குள் சேர்த்து... பேரன்பு கொண்ட உணர்வினை வளர்த்து ஒன்றிய நிலைகள் கொண்டு இயக்கப்பட வேண்டும் என்பதற்குத் தான் “கல்யாணராமா...!” என்று காவிய காப்பியங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

எத்தகைய தீமையின் உணர்வுகள் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று அதை எண்ணி தீமை நமக்குள் விளைந்து விடாது அதை ஒழித்தல் வேண்டும்.

ஒருவன் தீமை செய்கிறான் என்று உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் தீமை செய்யும் உணர்வே நமக்குள்ளும் வரும். நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை அழித்திடும் எண்ணங்களையே அது உருவாக்கும்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று என்ற உணர்வினை நமக்குள் இணைத்தால்
1.அந்தத் தீமைகள் நமக்குள் விளையாதபடி
2.அருள் உணர்வின் தன்மையை அரவணைப்பதாகக் கல்யாணராமனாக மாற முடியும்.

நம் உடலில் இதனின் வலிமை ஆகிவிட்டால்
1.யார் நமக்குத் தீமை செய்தனரோ அதை அடக்கும் நிலைகள் வரப்படும் பொழுது
2.இதே உணர்வின் எண்ணங்கள் நம்மைப் பார்க்கும் பொழுது அவர்கள் உணர்வுகளை அடக்கும் தன்மை வருகின்றது.
3.அவருடைய செயலாக்கங்கள் அவர்களையே ஒடுக்கிவிடும்
4.யார் ஒருவர் தீமை எண்ணுகின்றனரோ அவருள்ளே நின்று அவர் அதற்குள்ளேயே மடிவர்.

ஆகவே அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்தால் நமக்குள் விளையும் தீமையை அடக்கி வலிமை மிக்கதாக மாற்றிக் கொள்ளலாம்.

இதைத்தான் விழித்திரு...! என்ற நிலைகளில் மகா சிவன்ராத்திரி என்று காட்டுகின்றார்கள்.

இந்த உலகில் ஒவ்வொரு நாளும் எத்தகைய தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் பார்த்தாலும் அந்தத் தீமை நமக்குள் விளையாதபடி ஒவ்வொரு நொடியிலும் நாம் விழித்திருத்தல் வேண்டும்.

பத்திரிகையைப் பார்த்துப் படித்தபின் அல்லது டி.வியைப் பார்த்தபின் அவர்கள் இப்படிப் பேசினார்கள்... இவர்கள் இப்படிப் பேசினார்கள்... இவர்கள் இதைச் செய்தார்கள்... கெடுதல் செய்தார்கள்...! என்று
1.மற்றவர்கள் பார்த்தவர்கள் பதிவு செய்ததை எண்ணத்தால் எண்ணி நாம் பேசும் பொழுது
2.அதே உணர்வு நமக்குள் பதிவாகி எந்த நிலையை அவர்கள் செய்தார்களோ அதையே நுகர்ந்து
3.மோசமான ஆள்...! என்று நாமும் அந்தக் கெடுதலையே பேசத் தொடங்குவோம்.

அப்போது அவர்கள் எத்தகைய மோசம் செய்தார்களோ அதே மோசத்தின் தன்மை நமக்குள்ளும் விளைகின்றது இதைப் போன்ற நிலைகள் வரும் பொழுதெல்லாம் உடனடியாக மாற்றுதல் வேண்டும்.

இதற்குத் தான் நீ விழித்திரு என்று சொல்வது...! ஏனென்றால் இதை ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு சமயத்திலும் உங்களுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம் (ஞானகுரு).

நாம் மறந்து இருந்தாலும்... அடுத்த கணமே...
1.மற்றவருடன் பேச்சுத் தொடரான பின் நம் நினைவின் ஆற்றலை உயிருடன் புருவ மத்தியில் ஒன்ற வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவன்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்.
4.நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும்
5.எங்களைப் பார்ப்போருக்கு எல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும்
6.நாங்கள் பார்ப்போருக்கு எல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும் என்று இந்த உணர்வுகளை இணைத்தல் வேண்டும்.

பகைமையான உணர்வுகளை நமக்குள் வளர்த்து விட்டால் அதே உணர்வுக்கு அது இரை தேடும்... அதற்கு உணவு கொடுத்தாக வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுடன் இணைத்து
2.அந்தத் தீமைகளை நமக்குச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.

சிந்தனைச் சிலையைச் சீர்படுத்தத் தான் தெய்வச்சிலையை வைத்தார்கள் ஞானிகள் - ஈஸ்வரபட்டர்

 

நம் முன்னோர்கள் ஒலியின் நாதம் கொண்டு ஒளித் தன்மை வளரும் உண்மையைத் தன் சித்தத்தில் அறிந்து கொண்டனர்.

சூரியனும் சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களுக்கும்... பூமியின் தொடர்பு பெற்ற இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும்... சனிக் கோளில் உருவாகிக் கரையும் பன்னிரண்டு கோள்களுக்கும் தொடர்பு கொண்டு... பன்னிரண்டு மாதங்களின் நாமகரணத்தை ஒலியின் ஒளியால் சூட்டினார்கள்.

இயற்கையின் தொடர்களை...
1.கோள்களின் ஈர்ப்பில் விகித கணிதத்தை வான சாஸ்திரத்தில் அறிந்த தொடரில்
2.ஒவ்வொரு ஜீவ உயிரின் வீரியமுமே... மூன்று நட்சத்திர ஒலி ஒளி பெற்ற பின் தான்
3.ஜீவ உயிரணு உயிர் பெறுகின்றது.

மனித நிலை பெற்ற பின் அடுத்த நிலை பெற மனித உணர்வின் எண்ண அலையின் ஜீவகாந்த ஈர்ப்பு வலுப் பெறுவதினால்... வலுவின் தொடர் இப்பூமி இழுக்கும் ஒலி அலைகளைக் காட்டிலும் மனித ஜீவ உணர்வின் வீரியம் பெற்று விடுகின்றது.

பூமியின் தொடரிலேயே... நடைமுறை வழக்கத்திற்கொப்ப மனிதன் வாழ்ந்தான் என்றால்
1.இப்பூமி எதன் தொடரில் சக்தி பெற்று... சமைத்து பூமியின் வளர்ப்பின் வளர்ச்சி சுழற்சி வளர்கின்றதோ
2.அதன் அதன் ஈர்ப்புப் பிடிப்பில் தான் இப்பூமியில் பிறந்த நாம்
3.இப்பூமியின் ஈர்ப்பு சுழற்சியுடன் சுழன்று கொண்டிருக்க முடியும்.

ஜீவகாந்த பகுத்தறியும் எண்ண உணர்வைக் கோள்களின் தொடர்புடன் மனிதன் வளர்க்க வேண்டும் என்பதற்குத்தான் மனிதனின் உண்மை நிலையை சிவரூபத்தில் உணர்த்தினார்கள் நம் முன்னோர்களாகிய அன்றைய ரிஷிகள்.

சிக்கலைத் தீர்க்க சிலை வைத்தான்
சிந்தனைச் சிலையை (மனித உடல்) உணர்ந்தானா...?

சிறுமையின் உருவாய் சிலையென்று
சந்தியில் நிற்கும் நிலையென்ன...?

சஞ்சலத்தில் சச்சரவை
சங்கடத்தில் சிக்கலின்றி
சிந்தனையில் சீர்தூக்கி
சிந்தைதனில் சீர்படுத்து...!
(சிவன் படமும் விளக்கமும்)

இதன் தொடரை மனிதன் பெற்றால் மனித நிலை தெய்வ நிலை பெறக்கூடிய தொடர்பிற்கு வளர முடியும். ஒளி கொண்டு ஒளி பெறும் ஆத்ம பலத்தின் தொடர்பைப் பெறலாம். ஆகவே இயற்கையின் தொடர்புடன் உயரும் நிலை தான் தெய்வ நிலை.

இப்புவியின் ஈர்ப்பில் வளரும் கனிவளங்களும் மற்றத் தாவரங்களும் சத்தெடுத்து அதனதன் மாற்றுத் தன்மை சிலவற்றில் வீரியமாக இருப்பது போன்று
1.இயற்கையின் ஒலித்தன்மையில் மனித ஜீவாத்மாவில் சிலருக்கு
2.சரீர உணர்வின் ஜீவ நிலையே ஒளித் தன்மை கூடியிருக்கும்.

அத்தொடரில் இயற்கையை ஒன்றி... கோள்களின் தொடர்புடன் எண்ணத்தில் ஒளிரும் ஆத்மா... நட்சத்திர நிலை போன்று என்றுமே மாறாத நிலையில்... இப்பால்வெளி மண்டலத்திலுள்ள எண்ணிலடங்கா அமிலத்தின் சமைப்பை எடுக்கவல்ல “ஜோதி நிலை பெற்று... வளர்ச்சியின் வளரும் நிலை பெறலாம்...”

ஆனால்... மனித நிலையிலேயே பிற ஆத்மாவின் ஈர்ப்பின் ஒலி அலைகள் சாடும் நிலைக்குத் தன் ஆத்மாவை அடகு வைக்கும் நிலை தான் “மந்திர தந்திர மாய நிலை...!”

February 15, 2022

எந்த மகரிஷியின் உணர்வை வலுப்படுத்துகிறோமோ அவருடன் நாம் இணைய முடியும்

 

ஒரு வேதனைப்படுவர் உணர்வை நாம் நுகரப்படும் பொழுது அது வாலி ஆகி... நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது. நம் வலிமை இழககப்படுகின்றது

இதனை மாற்றுவதற்குத் தான் வாலியை இராமன் “மறைந்திருந்து தாக்கினான்..” இந்த நிலைகளைக் காட்டுகின்றார்கள்.

மறைந்திருந்து என்றால் இத்தகைய தீமைகளை வென்றவன் மகரிஷி. அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் எடுத்துக் கொண்டால் அந்த உணர்வின் வலிமை நமக்குள் கவரப்படும் பொழுது வாலி என்ற அந்த நஞ்சினை ஒடுக்க முடியும்...!

அதுதான் பரசுராம். அதனுடைய வலிமை எதுவாக இருப்பினும் தனக்குள் அடக்கித் தன் செயலாக மாற்றிக் கொள்ளும். அந்த நஞ்சினை இயக்குவதற்குப் பதில் தனக்குள் வலிமை கொண்டதாக மாற்றிவிடும்.

உதாரணமாக... விஞ்ஞான அறிவுப்படி செய்தாலும் சரி மெய்ஞான அறிவுப்படி செய்தாலும்
1.ஒரு நல்ல மருந்திற்குள் விஷத்தைச் சிறிதளவு கலந்து விட்டால்
2.அந்த மருந்திற்கு வீரிய சக்தி உண்டாகின்றது.

இந்த விஷத்தின் துடிப்பின் வேகத்தால் நல்ல மருந்து உடலுக்குள் ஊடுருவிச் செல்கிறது. நல்ல மருந்திற்குள் இந்த விஷத்தின் தன்மை சேர்த்தபின் உடலுக்குள் ஊடுருவி
1.வேதனைப்படும் இடங்களில் நல்லவைகளைக் கொண்டு குவிக்கின்றது.
2.நல்லவைகளை அங்கு அதிகமாக குவிக்கப்படும் போது
3.வேதனையை (நோய்) உருவாக்கும் அணுக்களுக்கு இரை இல்லாது தடைப்படுத்தி அந்த அணுக்களை மடியச் செய்கின்றது.
4.பின் அந்த நல்ல உணர்வின் சத்தை நல்லவைகளாக மாற்றி நோய்களை அகற்றுகின்றது.

வேதனையான உணர்வுகளை நாம் சுவாசிக்கும் பொழுது வேதனையின் அணுக்கள் உருவாகி நல்ல அணுக்களைக் கொன்று புசிக்கத் தொடங்கி விடுகின்றது. நல்ல அணுக்களால் உருவான உடலின் தன்மை நலியத் தொடங்கிவிடுகிறது.

ஆகவே... நாம் எப்போதெல்லாம் தீமைகளை பார்க்கிறோமோ அப்போதெல்லாம்
1.இந்தத் தீமைகளை வென்றிடும்... வென்றிட்ட... அருள் ஞானிகளின் உணர்வுகளை
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தை
3.அதனுடன் இணைத்துப் பழகினால்... தீமை நமக்குள் வளராது அதை அடக்கித் தனக்குச் சாதகமாக்கிவிடும்.

ஒரு விஷத்தின் தன்மை... தீமை என்று இருப்பினும் நல்ல மருந்துடன் அது இணைக்கப்படும் பொழுது அதை நல்லவையாக மாற்றிவிடுகின்றது.

இதைப் போன்றுதான் அருள் ஞானிகளின் உணர்வுகளை இந்த வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமைகளை பார்க்கிறோமோ அப்போதெல்லாம் அந்த துருவ மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

நாம் நுகர்வது எதுவாக இருந்தாலும் முதலில் நம் உயிரிலே பட்டுத் தான் உணர்வுகள் கலக்கின்றது. அத்தகைய கலக்கும் இடத்தில்...
1.எப்போது தீமையைப் பார்த்தோமோ தீமையைக் கேட்டோமோ அந்த நேரங்களில் எல்லாம்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்தல் வேண்டும்.

அப்போது இரண்டும் இணைக்கப்படும் பொழுது தீமையை விளைவிக்கும் அணுக்கள் விளையாது தடுக்கப்படுகின்றது.

ஆனால் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் விளையும். இது சமப்படுத்தும் உணர்வாக நம் உடலில் உருவாகி
1.எந்த ஞானியின் உணர்வை நாம் வலுப்பெறுகின்றோமோ
2.அங்கே அவனிடம் நம்மை அழைத்துச் செல்லும்.