ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 29, 2023

நம் இச்சையை எங்கே வைக்க வேண்டும்

தசரதச் சக்கரவர்த்தி கங்கணமே கழட்டவில்லை…!
1.திருமணம் ஆகிக் கொண்டே உள்ளது
2.அவருக்கு எண்ணிலடங்காத மனைவி…! என்று கூறுகின்றனர்.

அதனின் உட்பொருள் என்ன…?

நம் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ சம்பவங்களைப் பார்க்கின்றோம்… கேட்கின்றோம்.

உதாரணமாக ஒருவன் சண்டை போடுவதைப் பார்க்கின்றோம் அவன் சண்டையிடும் உணர்வை நுகருகின்றோம்
1.நாம் கவர்ந்து கொண்டது அது வசிஷ்டர்…
2.சண்டையைப் பற்றித் தெரிந்து கொள்ளப்படும் பொழுது நம் உடலில் அது பிரம்மமாகின்றது.

அதே போன்று ஒருவன் நோயுடன் வேதனைப்படுகின்றான். அவன் ஏன் வேதனைப்படுகின்றான்…? என்று ஏங்கிப் பார்க்கும் போது உயிரிலே பட்டுத் தான் அதை அறிய முடிகின்றது.

இருந்தாலும் அவன் உடலில் விளைந்த தீய உணர்வுகள் நம் உடலுக்குள் உருவாகி விடுகின்றது. பிரம்ம குருவாக அருந்ததியாக இணைந்து செயல்படுகின்றது… வேதனைப்படும் நிலைகளுக்கு நம்மையும் இயக்கி விடுகிறது.

சங்கடப்பட்டது சலிப்புப் பட்டது ஆத்திரப்பட்டது என்று இப்படி எத்தனையோ உணர்வுகளை மாறி மாறி நாம் சுவாசித்துக் கொண்டே தான் இருக்கின்றோம்.

அதை உணர்த்துவதற்குத் தான் எண்ணிலடங்காத மனைவியைத் திருமணம் செய்து கொள்கிறான்…! என்று காட்டுகின்றார்கள்.
1.நம் உயிர் தான் அந்தத் தசரதச் சக்கரவர்த்தி…!
2.காரணப் பெயராக இப்படி வைக்கின்றார்கள்.

பத்தாவது நிலை அடையக்கூடிய நாம் எதை எதையெல்லாம் ஆசைப்படுகின்றோமோ “அதை எல்லாம் கவர்ந்து கொள்கின்றோம்… அது தான் வசிஷ்டர்…!”

தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று எண்ணுகின்றேன். ஆனால் எண்ணியது நடக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றேன்.
1.வேதனையை நுகரும் பொழுது கவர்ந்து கொண்ட உணர்வுகள் நல்லது செய்வதற்கு மாறாக
2.வேதனையை உருவாக்கும் அணுவாக என்னுடன் இணைந்து அது சக்தியாக இயங்கத் தொடங்கி விடுகின்றது
3.இந்த உயிருடன் மனைவியாக அது இயக்கத் தொடங்கி விடுகிறது

ஆகவே… நாம் எதை ஏங்கிப் பெற வேண்டும் என்று விரும்புகின்றோமோ உயிரிலே பட்டு இந்த உணர்ச்சியின் இயக்கமாக
1.அந்த நுகர்ந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது
2.நுகர்ந்ததைத்தான் நமது உயிர் இயக்குகின்றது
3.நுகர்ந்ததைத்தான் நம் உடலாக மாற்றுகின்றது என்பதை இராமாயணக் காவியம் தெளிவாகக் கூறுகிறது.

ஆகவே நாம் எதைக் கவர வேண்டும்…? எதன் மீது நாம் இச்சைப்பட வேண்டும்…?

நம் இச்சையை உயிர் மீது வைக்க வேண்டும். இருளை நீக்கும் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட வேண்டும்.

பத்தாவது நிலை அடையக் கூடிய உயிர் நமக்குச் சக்கரவர்த்தியாக இருக்கின்றது. எதை எண்ணுகின்றோமோ அதை உயிர் எடுக்கின்றது
1.நாம் எதைக் கவர்கின்றோமோ வசிஷ்டர்.
2.இப்போது யாம் (ஞானகுரு) உபதேசிக்கக்கூடிய அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று ஏங்கினால் இது வசிஷ்டர்.
3.நுகர்ந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் அணுவாகும் பொழுது பிரம்மம்
4.பிரம்மமாக ஆனபின் அணுவின் தன்மை அடைகின்றது
5.பிரம்மகுருவின் மனைவி அருந்ததி…!

எந்தக் குணத்தின் தன்மை உடலுக்குள் அணுவாக ஆனதோ அந்தச் சக்தியாக அந்த அணு இயக்கும் என்பதை இராமாயணத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

அதாவது “பத்தாவது நிலையான ஒளியை நாம் எவ்வாறு அடைவது…?” என்பதைத் தான் சாஸ்திரங்கள் நமக்குக் காட்டுகிறது..

ஆத்மாவிற்குத் தேவை ஞானப்பால்

ஆத்மாவின் இயக்கம் தான் இச்சரீரக் கூடு…!

1.ஆத்மாவின் பதிவு நிலை கொண்டு
2.ஆத்மாவின் உந்துதலுக்குகந்த எண்ண மோதலினால் சரீர இயக்கம் உட்பட்டு
3.சரீரத்தின் செயலைக் கொண்டு ஆத்மா சத்தெடுத்து
4.ஆத்மா எண்ணத்தை உருவாக்கி…
5.சரீரத்தின் செயலால் தன் சத்தெடுக்கும் சுழற்சியில் சுழன்று வாழுகிறது…! என்று
6.முந்தைய பாடங்களில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

அப்படிப்பட்ட எண்ணத்தின் உணர்வுக்கொப்ப… காற்றலையில் கலந்துள்ள சத்துத் தன்மையை உரமாகப் பெறும் சுழற்சி ஓட்டத்திலிருந்து… உண்மைச் சக்தியான உயிராத்மாவை… இக்கர்ம உடலை… உடலில் கர்ம எண்ணங்களிலேயே செலுத்தக்கூடிய வழி முறையை… எண்ணத்தின் பால்… மேல் நோக்கிய சுவாசமாக… இது வரை வழிப்படுத்திய வழி காட்டிய தன்மை கொண்டு…
1.நம் எண்ணத்தின் செயலைக் கொண்டு
2.நம் ஆத்மா ஞானப்பால் கொள்ளும் சுவையாக வளர்ப்படுத்துங்கள்.

புஷ்பங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் அப்புஷ்பத்திலேயே அணுவாக வளர்ந்து புழுவாகிப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகள் எந்த அமில முலாமின் அணுப் பெற்று ஜீவன் கொண்டு சத்தெடுத்து வளர்ந்ததோ… அச்சத்தின் வண்ணக் கோர்வையை வண்ணத்துப் பூச்சியின் அழகு நிலை பெறுகின்றது.

அதே போல் பூவில் பிறந்த வண்டு தேன் சுவையைப் பெறுகின்றது. இவைகளைப் போன்று தான்
1.எச்சத்து நிலையில் எத்தன்மை வளர்ச்சி கொள்கின்றதோ அதன் வளர்ச்சி நிலைக்கொப்ப
2.எதில் எதில் எல்லாம் இவ்வெண்ண நிலை மோதி சத்தெடுக்கின்றோமோ
3.அதன் முலாம் வார்ப்பைத்தான் ஆத்மா பெறுகிறது என்பதை உணர்ந்து
4.ஆத்ம பலத்தின் உணர்வைக் கொண்டு அடைய முடியாப் பெரு நிலையை
5.இவ்வெண்ணத்தைச் செலுத்தும் உயர் ஞானத்தால் பெறலாம்.

இது நாள் வரை தெரிந்தோ தெரியாமலோ ஜெப வழியில் பல கோடி ஆத்மாக்கள் தனக்குத் தெரிந்த பாதை வழியில்… உயர்வைக் காண ஜெபம் கொண்டு செல்கின்றனர்.

அவர்களுக்கும்…
1.இந்தத் தியான மார்க்கத்தின் மூலம் இந்த ஞானத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பும்
2.மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் வாழும் தன்மைக்கும்
3.நாம் பெறும் போதனை ஞான வளர்ச்சியைக் கொண்டு
4.நம் ஈர்ப்பலையின் வட்டத்தில் ஆத்ம ஐக்கிய இயக்கத் தொடர்பு கொண்டு செயல் கொள்ள வேண்டும்.

April 28, 2023

“உங்களுக்குப் புது சக்தியாகக் கொடுக்கின்றோம்…”

இன்றைய உலகில் நாம் என்ன தான் ஆட்டம் போட்டாலும் தேடிய செல்வங்கள் நம்மிடம் இருக்கின்றதா…? அழகான உடலும் இருக்கின்றதா…! இல்லையே…!

பின் எதற்காக ஏன் நாம் இந்த வாழ்க்கையில் போர் செய்ய வேண்டும்…?

ஆகவே நாம் ஒரு செயல் செய்யப்படும் பொழுது நல்ல உணர்வாக எடுத்து மற்றவர்களையும் நல் வழியில் நடத்தும் நிலையாகத் தூண்டச் செய்ய வேண்டும்.

நாம் சும்மாதான் இருக்கின்றோம். இருந்தாலும் ஒருவர் வேண்டாத ஒரு பொருளை எடுத்து அதை ரோட்டிலே அனாவசியமாகப் போடுகிறார்..! என்று வைத்துக் கொள்வோம். நாம் அதை உற்றுப் பார்க்கின்றோம்.

அப்பொழுது… “பார் அங்கே இருப்பதை எடுத்து ரோட்டில் போடுகிறான்…”
1.தேவையில்லாத பொருளை மக்கள் நடக்கிற பாதையில் போடுகிறான் என்று
2.அவனை நாம் வெறுக்கின்றோம்… நம் மனம் வெறுப்பாகி விடுகிறது.

ஆக மொத்தம் நம் உணர்வுகள் அடுத்தவர் செயலைப் பார்க்கப்படும் பொழுது இந்த நிலை அடைகின்றது. ஆனாலும் நாம் செய்ய வேண்டியது என்ன…?
1.மற்றவர் தவறான செயலைச் செய்தாலும் “அவர் நல்லதைச் செய்ய வேண்டும்…” என்ற உணர்வை நாம் தோற்றுவித்தல் வேண்டும்.
2.நம் சொல்லும் செயலும் பிறர் வாழ்க்கையைப் புனிதப்படுத்தக்கூடிய சக்தியாக வருதல் வேண்டும்.
4.அத்தகைய உணர்வினை எடுத்துக் கொண்டால் நம் உடலும் புனிதம் ஆகின்றது.

அதே சமயத்தில் நாம் ஒரு நண்பரிடம் பழகுகின்றோம். சந்தர்ப்பத்தில் அவர் உடல் நலக் குறைவாகி… காய்ச்சலோ மற்றதோ வந்து விடுகிறது.

வந்தவுடன் அவரைப் பார்க்கின்றோம். என்னப்பா…? என்று கேட்கிறோம்.

காய்ச்சல் இரண்டு நாளாக இருக்கின்றது என்று சொல்கின்றார். அதைக் கேட்டவுடன் அப்பொழுது அவர் (உடல் நலமில்லாத) உணர்வுகளைத் தான் நாம் சுவாசித்துக் கொள்கிறோம். அதைத் தடுக்கின்றோமா…?

ஆனால் ஒரு நோயாளியைப் பார்த்தால்… அடுத்த நிமிடம் அந்த நோயின் உணர்வு நமக்குள் வராதபடி தடுக்க வேண்டும்.

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை
1.நாம் மனதில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.அங்கே சொன்னால் நடக்காது…!

நமக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்டால் அந்த நோய் நமக்கு வராது. அதே சமயத்தில்
1.அவர் நலமாக வேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்சினால் அவரை நாம் காக்க முடியும்
2.சீக்கிரம் உடல் நலமாகிவிடும் என்ற சொல்லை… நம்மைச் சொல்லும்படி. வைக்கும்.

நம் உயிர் ஒளியாக இருக்கின்றது அந்த ஒளியான உணர்வின் தன்மையைப் பெறச் செய்வதற்குத் தான் குருநாதர் காட்டிய வழியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பதிவாக்கி அதை உங்களைப் பெறும்படி செய்கின்றோம்.

ஆனால் உங்கள் எண்ணம் எப்படியோ அதன்படி தான் நடக்கும்.

ஏனென்றால் நான் (ஞானகுரு) சொல்கிறேன். காடு மேடெல்லாம் அலைந்து குரு காட்டிய வழியில் பல அனுபவங்களைப் பெற்றேன்
1.கஷ்டம் எப்படி எதனால் வருகின்றது…?
2.அதை எப்படி நிவர்த்திக்க வேண்டும்…? என்ற சக்திகளையும் கொடுக்கின்றேன்.

சக்தி கொடுத்து அதை எடுக்கத் தெரியவில்லை என்றால் அது என்னுடைய குறையாக வராது.
1.என்னமோ சாமி சொல்கின்றார்…! நம்மால் முடியுமா…? என்றால் அது முடியாது போய்விடும்
2.சாமி சொன்னதை நான் கடைப்பிடிக்க வேண்டும் என்று எண்ணி எடுத்தால்
3.வரும் தீமைகளை உங்களால் மாற்றிக் கொள்ள முடியும்
4.சாமி தான் செய்து தருவார் என்று நீங்கள் நம்பினால் “அது ஏமாற்றம் தான்…”
5.நான் செய்து தருகிறேன் என்று சொன்னால் “நான் எப்படிச் செய்து தர முடியும்…!”
6.ஒரு விதையைக் கொடுத்தால் அதை முளைக்க வைத்து அதனுடைய பலனை எடுப்பது நீங்களாகத்தான் இருக்க முடியும்
7.உங்களுக்காக நான் உட்கொண்டால் என் பசி தான் தீரும்… உங்கள் பசி எப்படித் தீரும்…?

சில பேர் எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொல்கின்றார்கள். அப்படி யாருக்கும் யாரும் செய்ய முடியாது.
1.உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று அருள் உணர்வுகளை யாம் பாய்ச்சினாலும்
2.அதை நீங்கள் எடுக்க வேண்டும் அல்லவா…!

ரேடியோ டிவி அலைகளை ஒலி/ஒளி பரப்புகின்றார்கள். நம் வீட்டில் உள்ள ரேடியோ டி.வி.யைத் திருப்பி வைத்தால் தானே அது வேலை செய்யும்.

அது போன்று தான் யாம் பதிவு செய்த துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த அருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் அது உங்களுக்குள் பாய்ந்து நல்லதாகும்..

ஆனால் சங்கடம் வரும் போது… “பாவிப்பயல்…! எனக்கு இடைஞ்சல் செய்தான்… உருப்படுவானா…?” என்று பிறரை எண்ணினால் அவன் உணர்வு வந்து அது தான் நம்மை இயக்கும்.

1.ஏனென்றால் எல்லாமே காற்றில் இருக்கின்றது நமக்குள்ளும் பதிவாகி இருக்கின்றது ஆக யாரிடத்திலிருந்தும் நாம் பிரிந்து இல்லை.
2.அந்த உணர்வுகள் எப்படி வேலை செய்கின்றதோ அது போன்றுதான் யாம் சொல்லும் சக்திகளும்.

இயற்கையின் இயக்கம் எப்படி இருக்கின்றது…? அகஸ்தியன் இருளை அகற்றி ஒளியாக மாறி துருவ நட்சத்திரமாக எப்படி ஆனான்…? என்பதை உங்களுக்குச் சிறுகச் சிறுகப் பதிவு செய்கின்றோம்.

அதைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் உங்களுக்குள் நிச்சயம் அது வளரும்.

தன்னுள் உள்ள தெய்வச் செயலை அறிய விரும்புவோர் “அரிதிலும் அரிதாகத்தான் உள்ளார்கள்...!”

இயற்கையில் வளரும் தாவர இன வளர்ச்சியில்... அதன் பலனின் தரவல்ல வித்துக்களும் மற்றைய கனிகளும் அதன் சுவை மணம் அழகு எல்லாமே அதற்கு உண்டு.

அது அல்லாமல் நாம் பயிர் செய்யும் தானியங்களில் அவை பலன் தரவல்ல காலங்களில்... உதாரணமாக நெல் மணியில் அதன் சத்து நிலை தரவல்ல காலங்களில் பூத்து... பின் நெல் மணிகள் அழகு பெற்று வளர்ந்து குலுங்குகின்றது.

அந்தந்தக் காலங்களில் இவைகளின் மணத்தைக் கொண்டு உணவைத் தேடி வரும் பட்சிகளின் ரோமத்தின் மிருதுத் தன்மையும் அவற்றின் வண்ண அழகுகளும் எத்தனையோ உள்ளது.

1.அது அது எடுத்து வளரத்தக்க அமில வார்ப்பின் வளர்ப்பின் வளர் நிலையில்
2.அதன் பலன் தரும் வளர்ச்சி அழகை... “இயற்கை...” என்ற நியதியுடன் கண்ணுற்றுப் பார்க்கும்
3.செயற்கையுடன் ஒன்றி வாழும் நாம் அது வளரும் உண்மையை அறியாமல்
4.ஆனந்த ரசிப்பில் இயற்கையாக எண்ணித்தான் அதனைக் காண்கின்றோம்.

ஆனால் ஒவ்வொரு வளர்ப்பிலுமே “அதன் பலன் ஒன்று…” வளரும் தன்மையில்தான் சகல சக்திகளும் வளர்கின்றன.

கடல் வழியில் பல கோடி வளர்ப்புகள் கடல் நீரில் சத்தெடுக்கின்றன. நீரின் நிலைகளில் ஆற்றுப் படுகைகளில் நீர் நிலை உருளும் தனமையிலேயே பல வளர்ச்சி நிலைகள் நிறைந்துள்ளன.

1.எல்லாவற்றிலும் மோதுண்டு மோதுண்டு பல வளர்ச்சியில் முலாம் கொண்ட உயிரணு
2.மோதுண்ட வளர்ச்சி நிலைக்கொப்ப ஆத்ம நிலை கொண்டு
3.சக்தி நிலை பெறவல்ல எண்ணச் செயல் பூண்டு
4.ஜீவ ஆத்மாவாகக் கரு தோன்றி கரு வளரும் அமில முலாமாக
5.எண்ணத்தின் ஞானத்தால் ஞானப்பாலின் சத்தெடுத்து
6.ஆத்ம முலாம் மனித வித்தின் ஜீவிதத்தில் வளர்ச்சியுறும் காலத் தன்மையில்
7.ஆத்மாவின் ஒளி நிலை பெறும் வளர் நிலை தான் மனித வித்தின் ஜீவ வளர்ச்சியின் அடுத்த நிலை.

மாமரம் மாங்கனிகளைத் தன்னுடைய சத்தாக வெளிப்படுத்துகின்றது. ஆனால் மனிதன் தன்னுடைய பிறப்பின் வளர்ச்சி என்பது… “தான் பெறும் மக்கள் செல்வம்தான்…” என்ற எண்ணத்திலேயே உள்ளான்.

ஆக…
1.தன் பெயர் சொல்லும் வாரிசு நிலையைத்தான் உயர்வு கண்டு வாழ்கின்றனரேயன்றி
2.தான் பெற வேண்டிய முதிர்வு நிலையைப் பற்றி எண்ணவில்லை.

அன்றைய போகமகரிஷிக்கும் கொங்கண தேவருக்கும் கோலமாமகரிஷிக்கும் கிடைத்த வாரிசு நிலை அவர்களின் நிலையுணர்ந்த ஞானவான்களுக்குத் தெரியும்.

1.பிறவியுடன் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் செல்வம் மட்டும் தான் செல்வம்…! என்று எண்ணாமல்
2.”பிறவா வரம்…” என்ற முத்தாகும் “ஒளி நிலை” பெறுவது தானப்பா உண்மையான உயர்வு நிலை….!

இன்றைய கால நிலையில் இத்தகைய ஆத்ம ஞானத்தால் பெறும் தியான வழி முறையையோ தன்னுள் உள்ள தெய்வச் செயலையோ அறிய விரும்புவோர் அரிதிலும் அரிதாகத்தான் உள்ளார்கள்.

April 27, 2023

குருநாதர் எம்மை அரவணைத்துச் செய்த நிகழ்ச்சி

ஒரு சமயம் நான் (ஞானகுரு) பழனியில் இருக்கின்றேன்… கல்கத்தா செல்வதற்கு டிக்கெட் எடுடா…! என்று குருநாதர் சொல்கின்றார்.

எதற்கு சாமி…? என்று கேட்டேன்.

டிக்கெட் எடுடா…! என்றார்.

குருநாதர் பணத்தையும் கொடுக்கின்றார். ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று டிக்கெட்டை எடுத்துக் கொண்டு வந்தேன்.

ஒரு குதிரை வண்டியைப் பிடிடா… என்று சொன்னார். வண்டி வந்தது.

ஆனால் கொடைக்கானல் பக்கம் காட்டுப் பக்கமாக வண்டியைப் போகச் சொல்கிறார்.

சாமி… நாம் இந்தப் பக்கம் செல்ல வேண்டும்…! என்று சொன்னேன்.

கல்கத்தா செல்ல டிக்கெட் எடுத்து விட்டாய் அல்லவா…! குதிரை வண்டியில் ஏறு… வண்டியைப் போகச் சொல்…! என்று சொல்கின்றார்.

வண்டியில் ஏறிய பின்… கல்கத்தாவில் குருநாதர் அங்கே சுற்றி வந்த பல நிகழ்ச்சிகளைச் சொல்கிறார். கல்கத்தா காளி எவ்வாறு இருக்கின்றது…? எப்படி எப்படி உருவானது…? எந்தெந்த நிலை…! என்று சொல்லிக் கொண்டு வருகின்றார்.

அதை எல்லாம் சொன்ன பின்… இப்பொழுது எதற்காக உன்னை அங்கே அழைத்துப் போகின்றேன் தெரியுமா…! என்று கேட்டார்.

அவர் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நன்றாகப் பதம் பார்த்துவிட்டு என் கழுத்தைப் பிடிக்கின்றார்.
1.இங்கே குத்தி இந்த இரத்தத்தை அங்கே கொண்டு போய்க் காளிக்கு கொடுத்துவிட்டு
2.“நான் மந்திரத்தைக் கற்றுக் கொள்ளப் போகின்றேன்…!”
3.அதற்குத்தான் கல்கத்தாவிற்கு உன்னை அழைத்துப் போகின்றேன் என்றார்.

எனக்கு எப்படி இருக்கும்…? காட்டிற்குள் அழைத்துச் சென்ற பின் இப்படிச் சொல்கிறார்.

நான் என்ன சொன்னேன்…?

என் மனைவியை நோயிலிருந்து காப்பாற்றி எழுப்பிக் கொடுத்தீர்கள். நீங்கள் என்ன சொல்கின்றீர்களோ அதன்படி…
1.என்னைக் கொன்றாலும் சரி… அல்லது மற்ற எப்படி வேண்டுமானாலும்
2.எதை வேண்டுமானாலும் நீங்கள் செய்து கொள்ளுங்கள்…! என்று சொன்னேன்.

குருநாதர் “கெக்கெக்க….கெக்க….” என்று பலமாகச் சிரிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் மறுபடியும் என் கழுத்தைப் பிடித்துக் கத்தியை எடுத்துக் குத்த வருகின்றனர்.

மீண்டும் என்னை மிரட்டுகின்றார்…! பார்க்க வேண்டிய எல்லா பரீட்சைகளையும் செய்து பார்க்கின்றார்.

சிறிது நேரம் கழித்து
1.”என்னை அரவணைத்து…” கல்கத்தாவிற்கு அழைத்துச் செல்கின்றனர்.
2.நானும் இப்படித்தான் அங்கே சென்று வந்தேன் என்று சொல்கின்றார்

உன்னை அங்கே பலி கொடுத்து நான் சக்தி பெற போகின்றேன்... நான் உலகத்திலேயே மிகச் சக்தி வாய்ந்தவனாக மாறப் போகின்றேன் என்று சொல்கின்றார்.

அரசர்கள் காளில் கோவிலை எப்படி உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்…? பலி பீடங்களை அமைத்து எதிரிகளை வீழ்த்துவதற்கு என்ன செய்கின்றார்கள்…? அதே சமயத்தில் எந்தெந்தக் காலங்களில் எதைச் செய்கின்றார்கள்…?

ஆடு மாடு அனைத்தையும் பலி கொடுத்துவிட்டுக் கடைசியில் மனிதனையும் பலி கொடுக்கின்றார்கள். படிப்படியாக அசுவமேதை யாகம் செய்வது போன்று கடைசியில் மனிதனை நரபலி கொடுக்கின்றார்கள்.

ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு விதமான சக்திகளை0ப் பெறுவதற்காக மனிதனுக்குள் விளைந்த உணவு உணர்வுகளை எடுத்து இந்த உடலைப் பலி கொடுத்து எப்படிச் சக்தி பெறுகின்றார்…? என்று காட்டுகின்றார்.

முருகன் ஆலயத்தில் பாலாபிஷேகம் தேனாஅபிஷேகம் செய்கின்றார்கள். கருப்பணசாமி மாடசாமி கோவில்களில் கோழியோ ஆட்டையோ அறுத்து இரத்தத்தை அங்கே அபிஷேகம் செய்கின்றார்கள்.

இதே போன்று மனிதனுடைய இரத்தத்தையே காளிக்குக் கொண்டு போய்க் கொடுக்கின்றார்கள். மந்திர ஒலி கொண்டு அங்கே என்ன செய்கின்றனர்…? என்று நேரடியாகக் காண்பிக்கின்றார்.

என்னை அங்கு அழைத்துக் கொண்டு சென்று இந்த உண்மைகளை எல்லாம் காட்டுகின்றார்.

இங்கே வருவதற்கு முதலில்… உடல்களைச் சரியான இடத்திலே கொண்டு போய் மறைத்து வைக்கின்றார்.

ஏனென்றால் நாம் இருவரும் இங்கே வந்து விட்டோம் அங்கே மனிதர்கள் இந்த உடலைப் பார்த்தார்கள் என்றால் “எல்லாம் தீர்ந்து போகும்டா…” என்கிறார்.

நாம் வருவதற்கு நேரமாகி விட்டது என்றால்
1.“செத்து விட்டோம் என்று என்று சொல்லி உடலை எரித்துப் பொசுக்கி விடுவார்கள்…
2.கடைசியில் நாம் இருவரும் ரோட்டிலே தான் அலைய வேண்டியிருக்கும்…! என்று அதையும் சொல்கின்றார்.

கல்கத்தா காளி கோவில் நடக்கக்கூடிய பல உண்மைகளை இப்படித்தான் குருநாதர் எம்மை அறியும்படி செய்தார்.

உயர் சக்தியை உருவாக்குங்கள் “ரிஷிபத்தினி என்ற ரிஷிச் சக்தியை…!”

நீர் சக்தி இல்லை என்றால்… நெருப்பு எரிய சக்தி இல்லை. நெருப்பாக ஆவி கொண்டு (உஷ்ண அலை) நீர் நிலை பெறாவிட்டால்… நீருக்கும் வளர்ச்சி இல்லை.

தனித்த சக்தி.. தனி அணு… தனித்த ஒன்றுக்கு… எப்படிச் செயல் இல்லையோ அதைப் போன்று ஆத்ம சக்தியின் சித்து வளர்ப்பிற்கு ஆண் பெண் இயக்கத் தொடர்பு ஆத்மக் கூட்டு நிலை செயல் கொள்ளும் வளர்ப்பு நிலை அவசியம் வேண்டும்.

ரிஷிபத்தினி… ரிஷி சக்தி… என்ற கூட்டு ஐக்கிய ஆத்ம தொடர் சித்து பெறும் தம்பதியின் வழித் தொடரினால் தான்
1.உணர்வின் எண்ணத்தால் செயல் கொள்ளும் படைப்புத் தொடர் ஆத்ம அணு வளர்ப்பின் தொடர் அலையை
2.இன்று நம் பூமியில் உள்ள மனித சக்தியைப் போன்ற தொடர் அலையை வழிப்படுத்தும் வளர் நிலைக்கு
3.பிறிதொரு மண்டலத்தில் இதைப் போன்று வளர வேண்டிய நிலை ஏற்பட வேண்டிய தொடருக்கே
4.இத்தொடர் நிலை கொண்ட சக்தி நிலை ரிஷித் தன்மை செயல்பட வேண்டும்.

படர்ந்து கொண்டேயுள்ள ஆவி அமிலம் திடம் கொண்டு அண்டசராசர அனைத்துக் கோடி சுழற்சியிலும் மாறிக் கொண்டே வழித் தொடர் கொள்ளும் ஒவ்வொன்றின் நிலை அனைத்திற்குமே வளர்நிலை தொடர் வளர்ச்சிக்கு “ரிஷித் தன்மை கொண்ட அலைத் தொடர் வளர்ப்பு தேவை…!”

அந்த வளர்ப்பைக் கொண்டு எச்சக்தி நிலையையும் உயர்வுபடுத்திச் செயலாக்கும் வளர் சக்தியின் சக்தியே ஆண் பெண் என்ற எண்ண சக்தியில் மனித வளர்ப்பு வார்ப்பில் உருவாக்கும் தொடர் அலையில் தான்

நாம் வாழும் இந்தப் பூமியே “சிவ சக்தி” என்ற இரண்டு ஆத்மாக்களின் தொடர்பில் உருவாகிப் பல கோடி ஆண்டுகளாகத் தன் உருவின் உருக்களை வளர்த்துக் கொண்டுள்ளது.

அப்படிப்பட்ட உருவின் உருவைக் கொள்ளும்
1.உயர் ஆத்ம தொடர்பு - ஆண் பெண் ரிஷித் தன்மையின்
2.வழித் தொடர் ஆத்மாக்களை வளர் கொள்ளும் செயல் தன்மை
3.அரிதிலும் அரிதாகத்தான் இன்று வரை செயல்பட்டுள்ளது.

இதைப் படிப்போர் ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண் பெண் தொடர்பு ஆத்ம தியான சித்தைப் பெற்று… வாழ்க்கையுடன் ஒன்றிய கூட்டு ஐக்கிய தியான வளர்ச்சியால்…. இந்தப் பூமியின் சக்தியைப் போன்று.. நம் சூரியக் குடும்பத்தின் சுழல் கொண்டு மிதந்து ஓடும் மண்டல சுழற்சி ஒவ்வொன்றிலுமே… அதன் சக்தி நிலைக்கொப்ப “அதன் வளர் சக்தியின் வளர்ப்பிற்கு வழி செய்யலாம்…!”

நம் பூமியைத் தவிர சூரியக் குடும்பத்தில் வளர்ந்த மற்ற மண்டலங்கள் விஷத் தன்மை கொண்டதாகத்தான் இன்றைய நிலையில் உள்ளது.

இதே சுழற்சி நீடித்து நம் பூமியும் இன்றுள்ள விஷத் தன்மையில் (செயற்கை என்ற காந்த மின் சக்தியைப் பிரித்தெடுத்ததன் விஷத்தால்) சுழன்றது என்றால்
1.இக்கலி மாற்றத்தில் வரப் போகும் கல்கியில்
2.தன் ஞானம் மிஞ்சாது விஞ்ஞானம் எஞ்சி நிற்கும்.

ஆகவே ஒவ்வொரு ஆத்மாவுமே தன்னுள் உயர் சக்தியை உருவாக்குங்கள் “ரிஷிபத்தினி என்ற ரிஷிச் சக்தியை…!”

April 26, 2023

“ஒன்று இரண்டு பேர் தான்…!” பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று தொக்கி வருகின்றார்கள்

இன்றைய சூழ்நிலையில்…
1.எந்தச் சாமியாரும் நம்மைக் காப்பாற்றப் போவதில்லை…
2.எந்தச் சாமியும் நம்மைக் காப்பாற்றப் போவதில்லை…!

நான் தான் கடவுள்…! என்று ஒருவன் பறைசாற்றுகின்றான் என்றால் அவன் ஆசை எதைத் தெரிந்து கொண்டானோ அந்த உணர்வின் ஆசை எல்லோருக்கும் வருகின்றது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால் குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று… செத்தைகளையும் குப்பைகளையும் எடுத்துக் கொண்டு வந்து போடச் சொன்னார். ஈயக் கட்டியை வாங்கி வரச் சொன்னார். எல்லாவற்றையும் வைத்து எரிக்கச் சொல்லி தங்கமாக உருவாக்கினார்.

இப்படி முதலில் அவர் செய்து காட்டினார்… பின் அவருக்குத் தெரியாமல் நானும் (ஞானகுரு) செய்து பார்த்தேன்… தங்கம் வந்துவிட்டது.

அதை எனக்குத் தெரிந்தவரிடம் கொடுத்து விற்கப்படும் பொழுது ஆஹா…! என்று சொல்லி
1.நீ எவ்வளவு வேண்டும் என்றாலும் செய்து கொண்டு வா… விற்றுத் தருகிறேன் என்கிறார்
2.இதிலே இன்னும் கொஞ்சம் செம்பைச் சேர்த்தால் “ஜம்…” என்று இருக்கும் என்கிறார்.
3.உங்களுக்கு எந்தக் கோவில் வேண்டும் என்றாலும் கட்டித் தருகின்றோம்
4.நீ தவறு செய்ய வேண்டாம்… நான் தவறு செய்து கொள்கின்றேன்
5.உனக்கு வேண்டிய உதவிகளை நாங்கள் செய்கிறோம்… தங்கம் செய்வதை மட்டும் காட்டிக் கொடுத்து விடுங்கள்…! என்றார்.

இப்படி நிறையப் பேர் என்னிடம் வந்தார்கள்.

ஒரு வாத்தியார் அவர் செய்யும் வேலையை விட்டுவிட்டு என்னைச் சுற்றிக் கொண்டே இருந்தார். ஒரு சிறு வேலை…! ஒரே நிமிடம் தான்…! தங்கம் எப்படிச் செய்வது…? என்று சொல்லிக் கொடுத்தால் உங்களுக்கு எவ்வளவு பணம் வரும் தெரியுமா…!

அத்தனையும் உங்களுக்கு நான் செய்து தருகின்றேன். என்னை ஒரு வேலைக்காரனாக மட்டும் வைத்துக் கொண்டால் போதும். தங்கம் செய்வதை மட்டும் காட்டிக் கொடுத்து விடுங்கள் என்று என்னைத் துரத்திக் கொண்டே வந்தார்.

ஆனால் ஞானிகள் உணர்வுகளைச் சேர்த்து மனதைத் தங்கமாக்க வேண்டும் என்று சொன்னால் யாரும் வருவதில்லை.
1.நான் தங்கம் செய்து கொடுக்கின்றேன் என்று சொன்னால் எனக்குப் பின்னாடி கூட்டம் இங்கே நிறைய கூடிவிடும்
2.ஆனால் மனதைத் தங்கமாக்க வேண்டும் என்று சொன்னால் யார் வருகின்றார்கள்…?
3.ஒன்று இரண்டு பேர் தான்…! பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று வருபவர்கள் தான் தொக்கி வருகின்றார்கள்

இல்லையென்றால் அதுவும் வரமாட்டார்கள்…!

1.நாளைக்கு எதுவும் நடந்து விட்டுப் போகின்றது
2.இன்றைக்குச் சம்பாதித்தால் அது போதும்… சுகமாக இருக்கலாம்…! என்று தான் நினைக்கின்றார்கள்

ஆனால் கோடிக்கணக்கில் சம்பாரித்து எண்ணிலடங்காத சொத்து வைத்திருப்பவருடைய கதி எப்படி இருக்கின்றது…? என்று தெரிந்து கொள்ளலாம்.

என்னை இவன் மோசம் செய்தான் அவன் அப்படிச் செய்தான் என்று இவன் எண்ணினால் இறந்த பின் அந்த உடலுக்குள் பேயாகத்தான் போக முடியும்…!. “இன்று கோடீஸ்வரனாக இருந்தாலும்… அடுத்து பேயாகத் தான் ஆக முடியும்…!”

எத்தனையோ பேரை இன்று நாம் பார்க்கின்றோம் அல்லவா…!

ஏனென்றால் நமது ஞானிகள் காட்டியது உண்மையின் இயக்கம்
1.உயிரோடு ஒன்றி ஒளியாக மாறுதல் வேண்டும்
2.உயிர் எப்படி ஒளியாக ஆனதோ அந்த வேகா நிலையை நாம் அடைதல் வேண்டும்.

ஒரு மனிதன் தீயிலே குதித்து இறந்து விட்டால் உடல் கருகுகிறது… ஆனால் உயிர் கருகுவதில்லை. எரிந்த உணர்வு கொண்டு உயிராத்மா வெளியிலே செல்கின்றது.

ஆனால் நண்பனாக இருப்பவன் இதைக் கேள்விப்பட்டு “அட… நேற்று வரை நன்றாக இருந்தானே… இப்பொழுது தீயை வைத்து இறந்து விட்டானே ஆ…!” என்று சொன்னால் போதும்.

1.இல்லைப்பா…! உனக்குள் நான் வந்து விட்டேன் என்று அந்த ஆன்மா இங்கே வந்து விடும்.
2.சிறிது நேரத்தில் பார்த்தால் ஐய்யய்யோ… எரிகின்றதே… எரிகின்றதே…! என்று சொல்ல ஆரம்பிப்பான்.

காரணம் என்ன…? என்று கேட்டால் ஒன்றுமே தெரியாது.

நான் சும்மாதான் இருந்தேன் திடீரென்று என் உடலில் எரிகின்றது எங்கேயோ தீயிலே குதிக்கின்ற மாதிரி இருக்கின்றது யாரோ என்னமோ செய்து விட்டார்கள் என்று ஜோசியக்காரிடம் செல்வான்.

அவன் இங்கே அங்கே என்று சுற்றச் சொல்லி அந்தச் சாமிக்கு இதைச் செய்ய வேண்டும்… இதற்கு இதைச் செய்ய வேண்டும் என்று காசுகளை அவன் வாங்கிக் கொண்டே இருப்பான் காசைச் செலவழித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
1.கடைசியில் “என்னால் தாங்க முடியவில்லை…” என்று இவனும் தீயிலே குதித்துச் சாவான்
2.இறந்த பிற்பாடி எத்தனை நிலை ஆகிறது என்று பார்க்கலாம்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆத்மாவுக்குத் தேவையான உணவு

ஜீவன் கொண்ட ஒவ்வொரு செயலுமே தன் ஜீவித உணவை எடுத்து எப்படி வளர்கின்றதோ அதைப் போன்றே இவ் ஆத்ம வலுத் தன்மைக்கு வலுக்கூடிய பிறகு… அதுவே ஒளிரும் தன்மையில் தனித்து இயங்கக்கூடிய வழித் தொடருக்கு “உணவு நிலை தேவை...!”

அதைப் பெறும் வழி முறை எப்படி…?

கல் மண் தாவரங்கள் உலோகங்கள் திரவகங்கள் ஜீவராசிகள் ஒவ்வொன்றுக்கும் ஜீவ சக்தியுடன் வாழும் காலத்தில் அது அதற்குகந்த உணவு நிலையை உட்கொண்டு ஜீவத் துடிப்புடன் வாழ்கின்றது.

கல்லும் மண்ணும் உலோகமும் திரவகமும் தாவர இன வர்க்கங்கள் எல்லாமே வளரும் பிடிப்பிலிருந்து எடுத்தவுடன் அதனுடைய வளர்ச்சி நிலை நின்று விடுகின்றது.

இப்படி அதனை உருமாற்றிச் செயல்படுத்தும் ஜீவனற்ற மாற்று நிலைக்கு உட்படுத்தியவுடன் அதன் வளர்ப்பு நின்று ஜட பிம்பப் பொருளாக கரையும் ஆவி நிலைக்கு உட்படும் வழித் தொடருக்குச் சென்று விடுகின்றது.
1.இதே போல் தான் ஜீவராசிகளின் உயிர்ச் சக்தியும் உயிர் ஆத்மா பிரிந்தவுடன்
2.திடப் பொருளாகி உணவு உட்கொள்ளும் நிலை மாறி ஆத்மா பிரிந்து செல்கிறது.

ஜீவ சக்தி கொண்ட ஒவ்வொன்றுமே தன் வளர்ப்பின் வளர்ப்பிற்கு உணவை உட்கொண்டு வாழ்வதைப் போன்று அழியாத நிலை என்னும் பிறவி இல்லா நிலை பெறும் சக்திக்கும் அதன் வளர்ச்சி வளர் கொள்ள உட்கொள்ளும் (உணவு) வழித் தொடர் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

வளர் தன்மைக்கு ஆண் பெண் அமிலச் சேர்க்கை ஜீவத் துடிப்பு எப்படி அவசியமோ அதைப் போன்றே
1.ஆத்மாவைச் சரீரத்திலிருந்து பிரித்துச் செயல்படுத்தும் வழி முறைக்கு
2.உடலுக்கு வேண்டிய உணவை உட்கொள்வது போன்றே
3.ஆத்மாவிற்கான உணவைச் செயல்படுத்தும் வழி முறை செயல். தான் “அஷ்டமா சித்து” கொண்ட வளர் நிலை.

பலவற்றில் இருந்து விளைந்து உயர்வின் முற்றிய தன்மையான மனித சக்தியின் எண்ண உணர்வு சொல் செயல் ஆற்றல் கொண்ட ஆத்ம சரீர சக்தியில் இருந்து தான் மனித சக்திக்கு அடுத்த வளர்ப்பு சக்தியான தன் ஆத்மாவைப் பிரித்துச் செயல்படுத்தும் வழி முறை வளர்ச்சி நிலைக்குச் செல்ல முடியும்.

அதற்குரிய ஆரம்பத் தொடர் உணவு நிலையாக… ஆத்மா பெறும் நிலை எண்ணத்தைச் செலுத்திக் காற்றலையின் தொடர்பிலிருந்து தன் சுவாச ஈர்ப்பிற்கு நறுமண அலைத் தொடர்பையும் கனிகளின் சுவை அலையையும் பெற்று அச்சுவைகளை உணவாக எடுக்கும் வழித் தொடரை ஆத்மா பெறுகின்றது.

1.காந்த மின் அலையின் வார்ப்பு சக்தியை ஜெபத்தால் எடுக்கும் ஞான சக்தியில்
2.தன் ஆத்மாவைத் தானே காணக்கூடிய வழி முறை பெற்றவுடன்
3.சரீர இயக்கத்திலிருந்தே உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி உணவு எடுக்கும் வழி முறை பெற்று
4.அவ்வழி முறைத் தொடர்பில் இருந்து ஆத்மா தனித்து இயங்க
5.ஆத்மாவுக்கந்த ஆத்ம அலைத் தொடரில் தொடர்பு கொண்டு
6.ஆத்மாவிற்கும் ஆத்மாவிற்கும் உள்ள தொடர்பலையின் ஈர்ப்பலையின் ஈர்ப்பிலிருந்தே தன் ஆத்மாவிற்கு உணவெடுத்துக் கொள்கின்றது.

வலுக் கொண்ட நிலையில் தனித்து இயங்கும் ஆத்மாவின் செயல் ஒன்றை அறிய… அணுவுக்குள் அணுவாக… இச்சரீர பிம்ப இயக்கத் தொடர்புடன்…
1.சரீரத்தில் இருந்து எண்ணத்தை வெளிப்படுத்திய ஆத்மா செயல் கொள்ளும் வழித் தொடரில் மோதும் பொழுது…
2.இச்சரீர சுவாச ஈர்ப்பிற்கு அவ் அணு அலை வளர்ச்சி கொண்ட
3.சேமித காந்த நுண் அலை சுவாசத்தின் உணர்வில் சமைத்து
4.எலும்புகளின் உராய்வு கொண்டு - ஆத்மாவின் செயலுடன் ஒன்றுகின்றது… “உணவாக…!”

இத்தகைய நிலை பெற்றால் ரிஷிகளின் தொடர்பலையுடன் ஒன்றிட முடியும். அவர்கள் பெற்ற வளர்ச்சியையும் பெற முடியும்.

April 25, 2023

சரியான முகூர்த்த நேரம்

இயற்கையின் நியதிகள் வளர்ந்து கொண்டே வரப்படும் பொழுது “நாம் எப்படி வாழ வேண்டும்…?” என்பதை உங்களுக்குக் குருநாதர் காட்டிய அருள் வழியிலே தொட்டுத் தொட்டுத் தொட்டுத் தொட்டுக் காண்பித்துக் கொண்டே வருகின்றேன்.

1.முழுமையாக உங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்றால் பத்து வருடம் நீங்கள் அமர்ந்து கேட்க வேண்டும்.
2.ஒரு நாய் எப்படி இறந்தது…? நாய் எப்படி மனிதனாக உருவாகின்றது என்றும்
3.அதே சமயத்தில் ஒரு மனிதன் இறந்தால் அடுத்த உடலுக்குள் அது எப்படி ஆவியாகச் செல்கின்றது…? அந்த உடலை எப்படி மாற்றியது…? என்பதைத் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

நீங்கள் இதை எல்லாம் சாதாரணமாகக் கேட்கின்றீர்கள். என்னை குருநாதர் இரவு பகல் என்று பாராதபடி தூங்க விடாது செய்தார். சரியான சாப்பாடும் கிடையாது.

இப்படித்தான் இந்த உண்மைகளை எல்லாம் நேரடியாக உணர்த்திக் காட்டினார் தெரியும்படி செய்தார் ஏனென்றால்
1;.அனைத்தும் காற்றிலே இருக்கின்றது… அதை நீ எடுக்க வேண்டும்…! என்று சொல்வார்.
2.நீங்களும் இந்தக் காற்றிலிருந்து உயர்ந்த உணர்வுகளை எடுக்கச் செய்வதற்குத் தான் இத்தனையும் பதிவு செய்கிறேன்.

எனக்கு குருநாதர் எப்படிச் செயல்படுத்தினாரோ அதே போல உங்களுக்கும் அவ்வப்போது பயிற்சியாகக் கொடுத்து அருள் உணர்வுகளைப் பதிவு செய்கிறேன்.

1.யாம் பதிவு செய்தைதை எல்லாம் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்
2.நல்லது எது…? கெட்டது எது…? என்று நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

அதற்குத் தான் தீமையை நீக்கக்கூடிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கிறேன். எப்பொழுது கேட்டது என்று வருகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீங்கள் எடுத்தீர்கள் என்றால்
1.அதைப் பிளந்து காட்டி இந்த உட்பொருளை அறியும்படி செய்யும்.
2.தீமையை நீக்கி உங்களைக் காத்துக் கொள்ள அது உதவும்.

அதைப் பெறச் செய்வதற்குத் தான் உங்களிடம் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்திக் கொண்டே வருகிறேன். இயற்கையின் உண்மையின் உணர்வை அறியும்படி செய்வதற்குத் தான் தியானப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்… உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய சக்தி வாய்ந்த உணர்வுகளை அதிகாலையில் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.
1.நமது பூமி துருவத்தின் வழியாக அதை இழுக்கின்றது
2.மனிதனாகப் பிறந்து தீமைகளை வென்ற இந்த உணர்வுகளை நுகரப்படும் அந்த நேரம் தான் “பிரம்ம முகூர்த்தம்…”

சகஜ வாழ்க்கையில் நாம் எதைப் பார்க்கின்றோமோ கேட்கின்றோமோ… நுகர்ந்ததை எல்லாம் நமது உயிர் பிரம்மம் ஆக்குகின்றது… உடலுக்குள் உருவாக்குகின்றது.

உயிர் உருவாக்குவது போன்று துருவ நட்சத்திரம் ஒளியான உணர்வை உருவாக்கும் திறன் பெற்றது. அந்த ஒளியான துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது உயிரைப் போன்றே உணர்வின் தன்மை இணைந்து வாழும்… ஒளியாக மாறும் நிலையாக அமைகின்றது. அதனால் தான் “பிரம்ம முகூர்த்தம்…” என்று சொல்வது.

பிரம்ம முகூர்த்தத்திற்கு இத்தனை அர்த்தங்களும் உண்டு…!

ஏனென்றால் நாம் நுகர்வதை உயிர் எவ்வாறு பிரம்மமாக ஆக்குகின்றதோ அதே போன்று தீமைகளை நீக்கும் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றியது துருவ நட்சத்திரம்.

துருவப் பகுதி வழி வரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம் பூமி கவரும் அந்த நேரத்திலே நாம் நுகர்ந்து நம் உயிரோடு இணைத்தால் அது பிரம்ம முகூர்த்தம்.

உயிரைப் போன்ற உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற அந்த நேரத்தைத் தான் பிரம்ம முகூர்த்த நேரம் என்று சொல்வது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நம் எண்ணத்தைப் புருவ மத்தியில் வைத்த பின் தீமைகள் உள்ளே செல்லாதபடி தடுக்கப்படுகிறது.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் சேர்த்துக் கொண்டால்
2.எத்தகைய விஷத்தையும் நாம் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

எது உயர்ந்த எண்ணம்...?

நம் எண்ணத்தின் உயர்வினால் பெற்ற ஆத்ம பலம் கொண்டு நாம் செலுத்துவது எல்லாமே… நாம் எடுத்த ஜெப உணர்வின் நற்குண எண்ண அலை வெளிப்படும் பொழுது…
1.எவ்வளவு கொடிய எண்ணம் கொண்ட குரோதம் கொண்டவனாக ஒருவன் நம்மைச் சந்தித்து எதிர்பட்டாலும்
2.அந்தக் கொடிய எண்ணத்தைக் கொண்டவனின் குரோத நிலை
3.நாம் வெளிப்படுத்தும் சாந்தத் தன்மையினால் அண்ட முடியாது.

பதட்டம் சோர்வு சங்கடம் சலிப்பு போன்ற உணர்வு நிலைக்கே இடம் தரா ஆத்மாவாக நம் ஆத்மா வலுப் பெற்ற தன்மையாக இருந்தால் எதிர் நிலை கொண்ட எந்த உணர்வு எண்ணமும் நம்மைப் பாதிக்காது.

குரோதத்தாலும் வஞ்சனையினாலும் பதட்டம் கொண்ட சோம்பல் கொண்ட எச்சுழற்சி வட்ட ஈர்ப்பில் உள்ளவராக இருப்பினும் அவைகளும் நம்மைப் பாதிக்காது.

நாம் பெற்ற அந்த நற்குண வலுத் தன்மையினால்
1.எந்த ஆத்மாவின் மேல் எண்ணத்தின் பார்வையின் ஒளியை
2.எதை எண்ணிச் செலுத்துகின்றோமோ அந்நிலை அங்கே நடக்கும்.

ஆனால் அதே சமயத்தில் கொடிய குரோத எண்ணம் கொண்டவனாக இருந்தாலும்… தெய்வ சக்தியின் உயர்வு ஆத்ம சித்துவை நாம் பெற்றிருந்தாலும்… நாம் செலுத்தும் சக்தி அங்கு நடக்கும்…! என்ற உண்மை தெரிந்தாலும்…
1.தீய சக்தியை… அந்தத் தீயதை அழிக்க வேண்டும்…! என்று நம்மை உயர்த்தி எண்ணத்தைச் செலுத்தினோம் என்றால்
2.அவன் பெற்ற தீய அலைத் தொடர்பின் ஈர்ப்பில் நாமும் மீண்டும் சிக்கி
3.அவன் பால் செலுத்தும் எண்ணத்திலேயே மனிதனுக்கு மனிதன் விடும் சுவாசத்தின் மோதலினால்
3.காந்த நுண் அலையின் தொடர்பு ஈர்ப்பு அணு வளர்ப்பின் செயலுக்கு நம் உடலும் உட்படுகின்றது.

ஆகவே எண்ணத்தை உயர்த்தி நாம் சந்திக்கும் ஒவ்வொரு ஆத்மாவையுமே தெய்வ சக்தி கொண்டதாக எண்ணத்தில் கொண்ட ஆத்மத் தொடர்பினால் தான் நம் ஆத்மா வலுக் கொள்ள முடியும்.

அதாவது…
1.நாம் செலுத்தும் எதிர் அலையின் உணர்வலை தான்
2.நாமும் திரும்பப் பெற முடியும்.

எந்நிலை எக்குண வழித் தொடரில் இருந்தாலும் அவ் ஈர்ப்புப் பிடியில் நாம் சிக்காமல் எண்ணத்தின் உயர்வைக் கொண்டு உயர்ந்த ஒலி அலைகளையே பிறர்பால் செலுத்தி எண்ணத்தில் ஒவ்வொரு ஆத்மாவையும் நாம் உயர்த்தி நமக்கு வேண்டிய நல் சத்தை நாம் பெறலாம்.

1.தீயது… நல்லது…! என்ற பாகுபாட்டுடன் நம் உணர்வின் எண்ணத்தைச் செலுத்தாமல்
2.நம் உயர்வின் உயர்விற்கு உயர்ந்த எண்ணத்தால் சக்தி பெறலாம்.

April 24, 2023

எமனையே வதம் செய்த இடம்

நாம் தொழில் செய்கின்றோம் சந்தர்ப்பவசத்தால் நஷ்டமாகி விடுகின்றது. அதனால் வேதனை வருகின்றது. ஆனால் அதிலிருந்து மீள நமக்குச் சரியான சிந்தனை இல்லை என்றால் இருள் சூழ்ந்து விடுகின்றது.

வேதனை வந்தால் நமக்கு நல்ல சிந்தனை வருகின்றதா…? இல்லை…!

பொருளை வாங்கியவன் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் “இப்படிச் செய்கின்றானே…” என்று அவனை எண்ணி வேதனைப்படுகின்றோம்.

அபிராமி ஆலயத்தில் எதைக் கொண்டு வருகின்றார்கள்…?

நஷ்டமாகும் போது…
1.அப்போதே அது ஏன்…? என்ற அந்தத் தெளிவான உணர்வைச் சுவாசிக்கப்படும் பொழுது
2.தன் எண்ணத்தால் தீமையை அகற்றிடும் உணர்ச்சியை ஊட்ட முடியும்
3.அப்பொழுது இருளை நீக்கும் சக்தியாக அது வளருகின்றது.

ஏனென்றால் அந்த அபிராமி ஆலயத்தில்
1.“என்றும் பதினாறு” என்ற நிலையை அங்கே உருவாக்கிக் காட்டி உள்ளார்கள்
2.எமனையே வதம் செய்த இடம் என்று…!

வேதனை என்ற உணர்வு வந்தால் அது வராது தடுக்கும் சக்தியாக (எமனாக வரும்) அந்தச் சங்கட உணர்வுகளை… இருள் சூழ்ந்த நிலைகளை “நம்மால் நீக்க முடியும்…” என்று அங்கே காட்டுகின்றார்கள்.

ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஆலயங்கள் எல்லாம் மனிதர்களை தெய்வமாக வாழச் செய்யும் நிலைகள். ஆனால்
1.”ஆயுள் ஹோமத்தைச் செய்தால் ஆயுளை நீட்டிக்கலாம்…” என்று காட்டி விட்டு
2.ஞானிகள் சொன்ன உண்மையான உணர்வை எடுக்க முடியாதபடி நம்மை முட்டாளாக்கி விட்டார்கள்.

பணம் உள்ளவர்கள் அங்கே ஹோமத்தைச் செயல்படுத்துகின்றார்கள். அதே சமயத்தில் 60-வது கல்யாணத்தைச் செய்து முடித்தோம் என்ற எண்ணம் இருக்கும்.
1.அந்த அறுபதாம் கல்யாணத்தை முடித்துவிட்டு வந்த பின் இறந்தவர்கள் இருக்கின்றார்கள்
2.அல்லது 70… 80… என்று கல்யாணம் நடத்தியவர்களும் இறக்கத்தான் செய்கின்றார்கள்
3.இறக்காமல் யாரும் இருப்பதில்லை.

ஞானிகள் அந்த ஆலயத்தில் காட்டிய தத்துவம் என்ன…? நமக்குள் எப்பொழுது இருள் சூழ்கின்றதோ… அதை நீக்கும் வலிமையான நிலைகளை நாம் எடுத்துப் பழக வேண்டும்.

ஆனால் வேதனையான உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது “அந்த எண்ணம்” எமனாக மாறுகின்றது… எனக்கு இப்படி ஆகிவிட்டது என்று…!

சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான்…! எப்படி…?

தொழிலில் நஷ்டமாகி விட்டது… நஷ்டமாகி விட்டது…! என்று எண்ணி எண்ணி அந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் அது தொடர்ந்து தனக்குள் வளர்ச்சியாகும் பொழுது
1.அந்த எண்ணமே நமக்கு எமனாக மாறுகின்றது
2.நாம் எதை எடுத்தோமோ வரிசைப்படுத்தி அது முழுமை பெறுகின்றது.

எமன் எதன் மீது வருகின்றான்…? எருமை மீது தான் வருகின்றான். சிந்தனையற்ற நிலை கொண்டது எருமை…! அதற்காக வேண்டி பரிணாம வளர்ச்சியில் வந்ததைத் தெளிவாக்குகின்றார்கள்.

ஆகவே மனிதனாக இருக்கக்கூடிய நாம் சிந்திக்கும் திறனை இழந்தால்… அந்த முரட்டுத்தனம் எதுவோ அதன்படி வளர்த்துக் கொண்ட பின்… இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது எண்ணம் எதுவோ… விஷம் கொண்ட பாம்பின் உடலுக்குள் நரக வேதனைப்படும்படி உயிர் அழைத்துச் சென்று விடுகின்றது.

என் பையன் இப்படி இருக்கின்றானே…! என்று வேதனைப்பட்டுக் கொண்டே இருந்தால் வேதனையான எண்ணங்களையே வளர்த்தால்… உடலை விட்டுச் சென்ற பின் தன் பையன் உடலுக்குள் சென்று அவனையும் வீழ்த்தத்தான் அது உதவும். பையனையும் காக்க முடியாது…!

நமது எண்ணமே இப்படி எமனாக மாறுகிறது… சிந்தனையற்ற நிலைகளில் நாம் வாழுகின்றோம்…! என்ற நிலையை அந்த ஆலயத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

சற்று சிந்தித்து மக்களிடத்தில் இந்த உண்மைகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும்…? ஆலயத்திலே நாம் எப்படி வழிபடுத்த வேண்டும்…? என்ற ஒழுங்கு கூட இல்லாது போய்விட்டது.

ஆகவே கோவிலுக்குச் செல்லும் பொழுது நாம் எப்படி வழிப்பட வேண்டும்…?
1.தெளிந்த மனம் கொண்டு தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்.
3.இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்தச் சக்தி பெற வேண்டும்
4.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
5.வருவோருக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் நாம் அதைப் பெறுகின்றோம்.

நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால் என் உயிருக்கு அது அபிஷேகமாக ஆகின்றது. அந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலந்து உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அது ஆகாரமாகக் கிடைக்கின்றது.

ஒவ்வொரு கோவிலிலும் சிலைக்குப் பாலாபிஷேகம் தேனாபிஷேகம் சந்தன அபிஷேகம் எல்லாம் செய்கின்றோம். ஆனால் அங்கே அபிஷேகம் செய்யும் போது நாம் என்ன எண்ணுகிறோம்…?

1.கஷ்டத்தை எல்லாம் அங்கே முறையிட்டு…
2.என்னை ஏன் இப்படித் தொல்லைப்படுத்துகிறாய்…?
3.எனக்கு ஏன் இப்படிக் கஷ்டமாக வருகின்றது…? என்று இதைத்தான் சொல்லி
4.நல்லது எடுப்பதற்கு மாறாக தப்பான வழிகளில் அங்கே வழிபடுகின்றோம்.

கனிகளை வைத்து அபிஷேகம் செய்யும் பொழுது இங்கே வேதனை தான் வருகின்றது. சந்தன அபிஷேகம் செய்யும் பொழுது அந்த நறுமணத்தையாவது நுகர்கின்றோமா…?

சந்தனத்தைப் போன்று நறுமணம் நாங்கள் பெற வேண்டும். இந்தக் கோயிலுக்கு வருவோர் அனைவரும் அந்த நறுமணம் பெற வேண்டும். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த நறுமணம் பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

பையன் மீது ஆசையாக இருப்போம்… ஆனால் சரியாகப் படிக்கவில்லை என்று வரும் பொழுது அவன் மீது வெறுப்பாகி விடுகின்றது.

அப்போது என்ன செய்ய வேண்டும்…?

என் பையனுக்கு சந்தனத்தைப் போன்ற நறுமணம் கிடைக்க வேண்டும் அவனுக்கு அந்த நல்ல ஞானங்கள் வர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

1.இப்படி நாம் சுவாசிக்கும் பொழுது நம் உயிருக்கு உயர்ந்த அபிஷேகம் நடக்கிறது.
2.இந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலந்து மனிதனாக உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு ஆகாரமாக அமுதாகப் போய்ச் சேருகின்றது.

தனித்து ஆத்ம சக்தி பெற முடியாது…!

1.இச்சரீர அணுத் தன்மை ஒவ்வொன்றுமே மலம் தான்
2.இச்சரீர சதை அணு மலத்தின் வளர் அணு வளர்ப்பு வார்ப்பு எலும்புகளின் வலுத் தன்மைதான்.
3.ஒளி பெறும் ஆத்ம சக்தியை எண்ணத்தில் எடுக்கும் உயர்ந்த குணத் தன்மையால்
4.சரீரம் வளர்க்கும் ஒவ்வொரு அணுவையுமே
5.ஏற்கனவே எக்குணத்தின் வழித் தொடரில் பழக்கப்பட்டு வழி பெற்றிருந்தாலும்
6.எண்ணத்தால் எடுக்கும் ஞானத்தின் நற்குணத் தொடர்பைக் கொண்டு உடலில் அணு வளர்ந்து
7.அதனின் சமைப்பினால் எலும்புகள் வளர்ந்து
8.காந்த மின் அலை உணர்வுத் தன்மையினால் எலும்புத் தன்மை உறுதி கொள்ளும் வார்ப்பு நிலைக்கொப்ப ஆத்ம வலு கூடுகின்றது.

இச்சரீர பிம்ப அணுக்களின் வளர்ப்பு நிலைக்கொப்பத்தான் இவ் எலும்பின் வளர்ப்பு அமைகின்றது. காந்த மின் சக்தியின் ஈர்ப்பினால் எலும்புகள் உறுதியாகி ஆத்ம வலு கூடுகின்றது.

அப்படிப்பட்ட வலுத் தன்மை பெற்று ஒளி பெறும் உயர்ந்த சக்தியாக்கி விட்டால்… காந்த மின் சக்தியின் வார்ப்பான எலும்பின் வலுத் தொடரைக் கொண்டு
1.ஒளி கொண்ட ஆத்ம சக்தியை எதனிலும் ஊடுருவவிட்டு
2.உயர் தன்மையின் வார்ப்பாக ஆத்ம சக்தியை ஒளி பெறச் செய்யலாம்.

உயர் குண சக்தியால் தன்னைத்தான் நம்பி தன்னுள் வளரும் பல கோடி கோடி உயிரணுக்களையும்
1.உயர் நிலை அணுக்களாக வளர விட்டு
2.அவ்வுயர்வின் வலுவை எலும்புத் தன்மையில் வலுவாக்கி
3.ஆத்ம சக்தியை உயர்த்திக் கொண்டோமோனால்
4.தன் ஆத்மாவைத் தானே பார்க்கவும் பேசவும்
5.ஆத்மாவைக் கொண்டு எச்சக்தியும் பெறவும் உயர்வு ஞான சக்தியால் வழிப்படுத்தவும் முடியும்.

ஆத்ம வலு தான் மனிதனுக்கு அடுத்த தெய்வ சக்தி நிலை…!

ஆத்ம வலுக் கொண்ட தன்மையினால் இவ்வாத்மாவின் ஒளித் தன்மையைக் கொண்டு முன்கூட்டி அறியும் ஞானத்தையும்… உலகச் சுழற்சி தொடர்பு முறையினால்..
1.உலகத் தன்மையில் எங்கெங்கு மாற்று நிலைகள் ஏற்படும் நிலையை அறியவும்
2.ஏற்படக்கூடிய மாற்றத்தின் அபாயத்தை ஆத்ம வலுக் கொண்டு அறியும் தன்மையில் மாற்றியமைக்கவும் முடியும்.

பிற ஈர்ப்பலையில் சிக்கா ஒளி வட்ட ஞானத்தால் ஆத்ம வலுவின் சித்துத் தன்மையில் அறியும் அஷ்டமாசித்து நிலை அனைத்தும் ஆத்ம வலுவில் பெற்றாலும்
1.எவ்வாத்ம வலுவை எவ்வழித் தொடரில் பெறுகின்றோமோ
2.அவ்வலுவுக்குத் தகுந்த உணவு நிலையைப் படைத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

உடலுக்கு உணவை உண்ணுகின்றோம். உணர்வுக்குத் தக்க உறக்கம் கொள்கின்றோம். அதைப் போன்றே ஆத்ம வளர்ப்பிற்கு வளர் தொடர் சக்தி நிலைக்கு உணவாக
1.மனித ஆத்ம பிம்பத்தால் பெற்ற ஆத்மாவின் வலுவிற்கு உணவு
2.எவ்வழித் தொடரில் உயர்வு கொண்ட ஆத்ம நிலை பெற்றோமோ
3.அத்தொடர்பு கொண்ட சரீர பிம்ப ஆத்மாக்களின் பால் இருந்து வெளிப்படும்
4.எண்ண உணர்வின் சப்த அலையின் தொடர்பு நிலை சுழற்சி நிலை இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

தனித்து ஆத்ம சக்தி பெற முடியாது…! ஆணுக்குப் பெண் சக்தியும் பெண்ணிற்கு ஆணின் சக்தியும் கூட்டுச் சக்தியின் போதனைத் தொடர் அலை சக்தியும் அவசியம்.

எண்ணத்தின் உணர்வைக் கொண்டு… அன்பு பாசம் வீரம் சாந்தம் கொண்ட உயர் குணத்தின் வழித் தொடர் வாழ்க்கையில் கலந்துறவாடும்… ஆத்மாக்களின் நம் பால் செலுத்தப்படும் அலை உணர்வின் ஈர்ப்பினால்… நம் ஆத்மாவிற்கு நாம் செலுத்தும் உணவு… நாம் எத்தொடரில் ஞானம் பெற்றோமோ அத்தொடர்பின் உணவாக நமக்குக் கிட்டும்.

April 23, 2023

புடம் போட்ட தங்கமாக ஆத்ம வலுவை வளர்த்துக் கொள்ளுங்கள்

அகம் புறம் சூட்சமம் இவற்றின் உண்மைத் தத்துவத்தை உணராமல் புற நிலையைக் காணும் வாழ்க்கையின் சுழற்சி ஓட்டம் தான் இன்று உள்ளது. சூட்சமத்தால் வெளிப்படுத்தப்பட்ட பல தத்துவங்கள் மறைக்கப்பட்ட நிலையில் தான் இன்றளவும் உள்ளது.

மனித ஞானம் பக்குவம் பெற்று… வாழ்க்கை என்ற கூட்டமைப்பு நெறி முறை நிகழ்ந்த காலத்திலிருந்தே… மனித ஞானத்தின் வாழ்க்கையின் வழி முறைச் செயலுக்கு “பல பக்குவ ஆரோக்கிய நிலைகளைச் சித்தர்கள் காட்டிச் சென்றனர்…!”

சமைத்து உண்ணும் உணவைப் பச்சை வாழை இலையில் சூடாகப் படைத்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தியது சித்தர்கள் தான்…!

உணவின் உஷ்ணம் வாழையிலையின் மீது பட்டு அதிலிருந்து வெளிப்படும் ஆவிச் சத்துடன் உணவை உண்ணும் பொழுது
1.உணவின் சுவையும்…
2.அவ்வாவியிலிருந்து வெளிப்படும் இரசசத்தான அமில குணம் உடலுக்குள் சேர்ந்து
3.உணவின் செரிப்பிற்கும் உடல் ஆரோக்கியத் தன்மைக்கும் வழிகாட்டியாக உள்ளதன் நிலையை உணர்ந்து
4.அந்தப் பக்குவ முறையைச் சித்தர்கள் காட்டிச் சென்றனர்.

இதைப் போன்று வாழ்க்கை நெறிக்குப் பல உண்மைகளை உணர்த்திச் சென்றார்கள். அதைப் போன்ற சூட்சமத்தால் மறைக்கப்பட்ட பல நிலைகள் இன்றும் உள்ளன வாழ்க்கையில்…!

ஆதி சக்தியின் பரம்பொருளின் சக்தி நிலையைச் சிறிய இவ்இரண்டு கண்களைக் கொண்டு பரந்த கண்ணுக்கெட்டிய பலவற்றையும் பார்க்கும் சக்தி கொண்ட மனிதப் படைப்பு தான் நாம்…!

விஞ்ஞானத்தில்… இன்று ஓர் இடத்திலிருந்து ஒளி பரப்பபடும் உருவத் தொடர் காட்சிகளை இக்காற்றில் கலக்க விட்டுப் பல மைல்களுக்கு அப்பால் அதே உருவத்தின் செயலை அமிலச் சேர்க்கையின் உலோக அலைத் தொடரில் காணும்படி செய்கிறார்கள்.

அதாவது மின் அலையின் மோதலினால் எங்கோ தொலைவில் நடைபெறும் நிகழ்ச்சிதனை… காற்றலையில் கலந்து வரும் அந்த அலைத் தொடரை உருவமாக்கி இருந்த இடத்திலேயே பார்க்கச் செய்கின்றனர்.

இதைப் போன்ற ஞானத்தைக் கொண்டு
1.ஆத்ம தியானத் தொடரால் இவ் எண்ணத்தின் உந்தலை எதில் செலுத்துகின்றோமோ
2.அத்தொடரில் உள்ள நிலைகள் அனைத்தும்
3.புருவத்தின் மத்தியில் உள்ள எலும்பு கவன நரம்புகளில் எண்ணிய சுவாச மோதல் ஏற்பட்டவுடன்
4.எதை எண்ணித் தியான நிலை எண்ணம் செல்கின்றதோ
5.அங்கு நடக்கும் நிலையைத் தொலைக்காட்சியில் காண்பதைப் போன்று
6.பக்குவம் பெற்ற ஆத்ம ஞானத்தால் காணவும் ஒலி/ஒளி கேட்கவும் முடியும்.

ஆத்ம ஞானத்தால் முக்காலமும் அறியவல்ல சக்தியை ஒவ்வொரு ஆத்மாவும் பெற முடியும்…!

சென்ற காலம் நடந்தவை யாவையுமே இக்காற்றலையில் தான் கலந்துள்ளன. உணர்வின் எண்ணத்தைப் பின்னோக்கிய அலைத் தொடரில் செலுத்தப்படும் நிலைக்கொப்ப உயிரணு தோன்றிய காலம் தொட்டே மனித ஞான சக்தியால் எதனையும் காண முடியும்.

நிகழ் நிலையையும் எண்ணத்தைச் செலுத்தும் உணர்வின் மோதலினால் “ஞானதிருஷ்டி” என்று சித்தர்கள் உணர்த்திய நிலையால் நிகழும் காலத்தையும் அறியலாம்.

எதிர் கால நிலையை நாளை நடப்பதை இன்றெப்படி அறிய முடியும்…! என்ற வினா தான் இன்றைய செயலில் உள்ளது.

பிறப்பும் இறப்பும் ஆண்டவன் செயல்… காலதேவனின் கருணை…! என்ற எண்ணம் பக்தி மார்க்கத்தில் உணர்த்துகின்றார்கள்.

அதையே விஞ்ஞானின் அமிலச் சேர்க்கையின் நிலையை இயந்திரச் சாதனங்களின் துணையைக் கொண்டு கால நிலைகளின் மாற்றத்தையும் மண்டலச் சேர்க்கைக் காலங்களில் புள்ளி விவரங்களையும் வைத்து உணர்த்தத்தான் செய்கின்றனர்.

ஒரு இயந்திரத்தால் உணரக்கூடிய எதிர்கால நிலைகளை
1.ஆத்ம ஞான வலுக்கூட்டிக் கொண்ட ஞான சக்தியினால்
2.எதிர் காலத்தில் நடக்கும் நிலைகளை இன்றே உணரக்கூடிய உண்மை பெறும் நிலைய அடையலாம்.

“முக்காலமும் உணரும் பொற்காலமாக..” இவ்வாத்ம காலத்தைப் பக்குவப்படுத்துங்கள் “பொற்கோவிலாக..” ஆத்மாவின் வளர்ப்பில் எவ் ஈர்ப்பின் உணர்வும் மோதாமல் “புடம் போட்ட பொன்னாகப் பக்குவப்படுத்துங்கள்…”

ஈயம் பித்தளை செம்பு தங்கம் இவற்றில் திரவகத்தை விடும் பொழுது மற்ற உலோகங்கள் கரைந்தாலும் தங்கம் எப்படித் தனித்து நிற்கின்றதோ அதைப் போன்ற புடம் போட்ட தங்கமாக இவ்வாத்ம வலுவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

எக்காலமும் அறியவல்ல ஆற்றலும்… முக்காலமும் உணரும் சக்தி நிலையும்.. இவ்வாத்ம ஞானத்தால் பெறவல்ல சக்தியை.. இந்த உபதேசத்தின் சக்தியால் பெறும் ஜெப தியானத்தால்…
1.என் ஈர்ப்பின் வட்டத்தில் வழி வந்த
2.ஆத்ம தியானம் கொண்ட தம்பதிகள் ஆண் பெண் இருவரும் இணைந்து
3.என் சக்தி நிலையில் உணர்த்தப் பெற்ற உபதேசத்தின் உயர்வை இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் வளர்த்து
4.தன் ஆத்ம தொடர்பு கொண்ட பல ஆத்மாக்களுக்கும் இந்த ஆத்ம தியானத்தின் உண்மைச் சத்தியத்தை உனர்த்தி
5.ஆதி பரம்பொருளின் சக்தியின் படைப்ப்பின் உயர்வுப் படைப்பை ஒவ்வொரு ஆத்மாவும் பெற்று
6.”சக்தியின் சக்திக்கே.. ஆண் பெண் இனம் வளரச் சக்தி தாருங்கள்…!”

April 22, 2023

ஆண் பெண் இருவரும் ஆத்ம ஐக்கிய நிலையில் செயல்பட்டால் தான் “ரிஷித் தன்மை பெற முடியும்…”

இந்தப் பூமியில் சகல ஜீவ ஜெந்துக்களும் ஆண் பெண் இனத் தொடரில் இனப் பெருக்கம் வளர்கின்றது.

அதனை ஒத்த தன்மையின் வளர் சக்தியில்தான்
1.ஆண் எடுக்கும் உயர் தொடர்பலை தியானத்தால் கூடக்கூடிய அமிலத்தின் தன்மைக்கு
2.ஜீவன் பெற பெண் இனச் சுவாசத் தொடர் எண்ணப் பரிமாற்றம் தேவை.

ஏனென்றால்
1.தான் பெற்ற சக்திக்கே “ஜீவ சக்தி” இருந்தால் தான் ஆத்ம பலத்தின் வலுத் தன்மையே பெற முடியும்.
2.ஆத்ம பலம் என்பது உடல் பலத்தைக் கொண்டு பயில்வான்கள் எடுக்கும் பளு தூக்கிகளைப் போல் பெறத்தக்கதல்ல.

எண்ணத்தால் எடுக்கும் சுவாச அலையின் ஜெபத் தன்மைக்குக் கூடப் பெறும் அமிலச் சேர்க்கைக்கு ஜீவத் துடிப்பலைகள் பெறவல்ல அணு வளர்ச்சித் தன்மைக்குப் பெண்மைத் தொடர் சுவாச அலை இருந்தால் தான் ஆண் எடுக்கும் ஜெபத்தின் உயர் அமிலத்தின் வார்ப்புத் தன்மையை அணு வளர்ப்பின் சமைப்புத் தன்மை ஆவி நிலையால் ஆத்ம வலுவின் மூலம் பலம் கொள்ள முடியும்.

1.பெண் இனமே இல்லாமல் பல கோடி ஆண்டுகள் கடும் தவமிருந்து
2.பெண்ணின் சுவாச அலையே படாமல் இந்தப் பூமியில் ஜெபம் பெற்றாலும்
3.எந்தப் பூமியிலிருந்து ஜெப நிலைப் பெற்றார்களோ
4.அதே ஈர்ப்புப் பிடிப்பின் சுழற்சி வட்டத்தில் சிக்குண்டு
5.தனித்த நிலை கொண்டு தவத்திலிருந்து செயல்பட முடியுமேயன்றி
6.வளர் சக்தியான தொடர் சக்தியான ரிஷிச் சக்தியின் சுழற்சி வட்டத்தில் சுழலும் தன்மை பெற முடியாது.

ஒன்றுடன் ஒன்று மோதுண்டு சுழல் பெறும் வழித் தொடரில்… ஒவ்வொன்றும் உருவாகுகிறதே அன்றி “தனித்த ஒன்று...” என்பது இயங்காத் தன்மை தான்.

தெய்வ சக்தி கொண்ட ரிஷித் தன்மை பெற வேண்டும் என்றால்
1.ஆத்ம தொடர்பு கொண்ட ஆண் பெண் இனத் தொடர்பு
2.ஆத்ம அலையின் கூட்டு ஐக்கியமான தொடரில் தான் பெற முடியும்.

இத்தொடரில் சில சித்தர்கள் தன் வாழ்க்கைப் பந்தத்தில் பெற முடியாத ஜீவத் தொடர் கிட்டாததனால்… தன் சித்து நிலையில் ஆத்ம வலுவைக் கொண்டு ரிஷித் தன்மை பெற வேண்டிய சக்திக்காக… மிருக அலைத் தொடர்புடனும் ஆத்ம ஜீவ பிம்ப உடல் எண்ணத்தை மிருகங்களின் உணர்வலையுடன் தன் ஆத்மாவைப் பிறிதொரு சரீரத்தின் மேல் செயல்படுத்தியும் அச்சக்தியைப் பெற்றனர்.

அதே போல் பல சித்தர்கள் தாய் இன குணமுடன் தான் பெறும் சக்திக்குப் பல ஆத்மாக்களின் பால் தன் எண்ண உணர்வின் உயர்விற்காக உபதேச நிலையில் பல சக்திகளைப் பெற்றனர்.

ஆகவே… ஆணின் உயர்வுத் தன்மைக்குப் பெண் இன ஜீவ அலைத் தொடர் எப்படி அவசியமோ… அதைப் போன்றே பெண்மையின் சக்திக்கு ஆணினத்தின் அமிலத் தன்மையும் அவசியம் தேவை.

அது இல்லாவிட்டால்…
1.ஜீவ சக்தியின் வழி சக்தியைப் பெருக்க
2.சக்தியின் செயல் தன்மை உயர் ஞானம் பெறவல்ல வழித் தொடருக்குச் செல்லாமல்
3.பெண் இனத்தின் துரித அமிலக்கூறு ஜீவ சக்தியின் வம்சப் பெருக்கத்தில் சோர்வு நிலை ஆகி
4.புழு பூச்சி கரையான் இப்படி பூமியின் கீழ் பிடிப்பில் ஊரும் ஜெந்துக்களின் வளர்ப்பாக
5.உயிரினங்களின் இனப் பெருக்கம் அதிகமாகச் சுழலும் தன்மை ஏற்படும்.

பெண்கள் விடும் சுவாச அலையில்… ஒவ்வொரு மூச்சலையின் தொடரிலும் பல கோடி ஜீவ அணுக்கள் பெருகிக் கொண்டே உள்ளன.

புழுவாகவும் பூச்சியாகவும் தன் சுவாச அலை ஈர்ப்பை வளர்க்கும் தாயினம்... நற்குணத்தின் பால் ஆண் இன குணங்களுடன் தன் எண்ணத்தின் செயலை ஞானத்தால் செலுத்தும் உயர் குணத்தைக் கொண்டு… இந்தப் பூமியின் பிடிப்பலைக்கே ஞான உணர்வைப் பெறவல்ல நற்குண வளர்ப்பாக்கலாம்.

உயர் மின் தொடர்பில்… பூமியின் உயர்வுக்கே பெண் எடுக்கும் சுவாசத்தால் உயர்வு நிலைப்படுத்த முடியும்.

1.பெண்களின் சொல் ஈர்ப்பில்…
2.ஆண் இன உணர்வின் மோதல் எடுக்கப்படும் நிலை கொண்டு தான்
3.ஆண் இன அமில ஜீவ ஆவி வார்ப்பு ஆத்மாவிற்குக் கூடுகின்றது.

ஆனால் பெண் இனம் ஆணின் சொல் ஈர்ப்பிலிருந்து சக்தி பெறுவதில்லை. பெண்ணின் சொல்லும் எண்ணமும் ஆணின் பால் செலுத்தும் உணர்வுக்கொப்ப
1.உணர்வின் ஈர்ப்பிலேயே காந்தமுடன் இரும்பு சேர்வதைப் போன்று
2.தானாகவே சக்தியைப் பெற்றுக் கொள்கின்றது பெண் இனம்.

இதை ஒவ்வொருவரும் தன் வாழ்க்கை நிலையுடன் ஒத்த வழியிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

ஜெபத்தால் எடுக்கும் ஞானத் தொடர்பின் சூட்சமத்தை..
1.ஒன்றுடன் ஒன்று கலந்த உணர்வுத் தொடர்புடன் உள்ள
2.வழித் தொடரை அறிந்து நீங்கள் செயல் கொள்ளுங்கள்…!

ஒரு பிரபஞ்சம் இயங்குவது போல் தான் ஒரு உடலுக்குள்ளும் இயக்கங்களாகிறது

நம் பிரபஞ்சத்தில் உள்ள இருபத்தியேழு நட்சத்திரங்கள் அவை வெளிப்படுத்தும் உணர்வலைகள் சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது மின்னல்களாக ஆகின்றது.

உதாரணமாக கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம், பால்வெளி மண்டலங்களாக அது மாற்றி வரப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதினால் மின்னலாக மாறுகின்றது.

“வியாழன் கோள்” அந்த 27 நட்சத்திரங்களுடைய சக்திகளையும் கவரும் திறன் பெற்றிருப்பதால் அது எல்லாவற்றையும் சமைத்து தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் அந்த மின் கதிர்கள் வந்தால் அந்த இரண்டையும் இணைத்து ஒரு அணுவாக மாற்றி விடுகின்றது.

“வெள்ளிக் கோள்” அந்த மின்னலில் இருந்து வெளிப்படும் ஒளிக் கற்றைகளை எடுத்துக் கொள்கின்றது

“செவ்வாய்க் கோள்” மோதலினால் ஏற்படும் நாதத்தின் அந்த ஒலியான உணர்வுகளைப் பிரித்து எடுத்துக் கொள்கின்றது.

“இராகு” மோதலிதனால் வெளி வரும் புகைகளை எடுத்துக் கொள்கின்றது.

“கேது” விஷமான உணர்வலைகளைக் கவர்ந்து கொள்கின்றது.

இதில் பிரிந்த வரும் ஆவித் தன்மைகளை “சனிக் கோள்” எடுத்து நீராக மாற்றிக் கொள்கிறது

“புதன் கோள்” அனைத்தையும் கவர்ந்து உலோகமாக மாற்றிக் கொள்கின்றது.

எல்லாவற்றையும் கலந்து “சூரியன்” ஏகமாக எடுக்கும் பொழுது அது பாதரசமாக மாற்றிக் கொள்கிறது.

இது தான் நம் பிரபஞ்சத்தின் இயக்கம்…!

இதே போன்றுதான் நமது உயிர் அது சூரியனாக இருக்கின்றது எதிர்நிலையான மனிதனுடைய உணர்வுகளை நுகரப்படும் போது அது நமக்குள் மோதலாகிறது (நட்சத்திரத்தின் சக்தி மோதி மின்னலாவது போல்)..

உதாரணமாக ஒரு மனிதன் வேதனைப்படுவதை நாம் பார்க்கின்றோம்… வேதனையை நுகர்கின்றோம்.
1.நம் ஆன்மா இங்கே “நட்சத்திரமாக” இருக்கின்றது
2.ஏனென்றால் மற்றவருடைய உணர்வுகளை அங்கே சேமித்து வைத்திருக்கின்றது
3.பால் வெளி மண்டலமாக அது அமைக்கின்றது.

அந்த வேதனைப்பட்ட உணர்வுகளை ஆன்மாவிலிருந்து நாம் நுகர்ந்து உயிரிலே பட்ட பின் இந்த உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களிலே கலந்து இரத்தத்தின் வழி உடலுக்குள் சுழல்கின்றது.

பிரபஞ்சத்தில் உள்ள கேது விஷமான சத்தைக் கவர்வது போன்று
1.நம் உடலில் உள்ள பித்த சுரப்பிகள் விஷத்தை எடுத்துக் கொள்கின்றது
2.கல்லீரல் மண்ணீரல் இவையெல்லாம் இரத்தத்தில் இருந்து வருவதை அதன் உணர்வுகளுக்கொப்ப உணவு எடுத்து அந்த உறுப்புகள் உருவாகின்றது
3.நுரையீரலும் அதே மாதிரித் தான்.

சிறுநீரகங்கள் அந்த இரத்தத்தை வடிகட்டிய பின் அதிலிருந்து இதயத்திற்கு வருகிறது. இரத்தம் அதற்குள் சென்ற பின் எல்லா உறுப்புகளுக்கும் இரத்தத்தை அது பம்ப் செய்கிறது.

இரத்தங்களை நேரடியாக நம் சிறுமூளை பாகங்கள் வரைக்கும் அது கொண்டு செல்கின்றது
1.இந்த மூளையில் சந்திக்கும் இடங்களில் வாயுவாக மாறுகின்றது
2.வாயு நீராக மாறுகின்றது… அமிலமாக மாறுகின்றது…!

அதாவது நாம் எடுத்துக் (சுவாசிப்பது) கொண்ட உணர்வுகள் ஒரு வாயு என்ற நிலையில் இயக்கப்படுகின்றது எதன் உணர்வு இயக்கப்படுகின்றதோ அதிலிருந்து வரக்கூடிய ஆவியாக மாறுகின்றது. ஒரு பொருளை நாம் வேக வைத்த பின் எப்படி ஆவியாக மாறுகிறதோ அது போல்…!

ஆவியாக மாறியதை மேலே நீரை வைத்து குளிர்ச்சி அடையச் செய்தால் அது நீராக வடிகிறது. இதைப் போன்று தான்
1.சுவாசித்த உணர்வின் தன்மை தனக்குள் சேர்த்துக் கொண்ட பின் மேலே போட்டு அது அமிலமாக வடிகின்றது
2.நம் உடலுக்குள் இருக்கும் எல்லாவற்றுக்கும் இது இணையச் செய்கின்றது.

சுவாசித்தது உயிரிலே பட்ட பின் உடலுக்குள் செல்லும் நிலையில் இரத்தத்திலே கலந்து… இந்த இரத்தம் உடல் முழுவதும் சுழன்று வரப்படும் பொழுது எதெனதன் உணர்வோ அது அது எடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்கின்றது

பிரபஞ்சம் எப்படியோ அப்படித்தான் இந்த உடலான பிரபஞ்சமும்…!

உயிர் சேர்த்துக் கொண்டது ஆன்மாவாகி… உயிரான்மாவாகிறது - விளக்கம்

உதாரணமாக உடலில் நோயாகி விட்டால் மருத்துவரிடம் செல்கிறோம். அவர் கொடுக்கும் மருந்தைச் சாப்பிட்டு. உடல் சீக்கிரம் நலமாக வேண்டும் என்று விரும்புகின்றோம்.

மருத்துவர் கொடுக்கும் மருந்து இரத்தத்தில் அது கலந்த பின் வேலை செய்கிறது. இருந்தாலும்
1.மருந்துக்கு விஷத்தின் தன்மை கொடுக்கப்படும் பொழுது வேதனை என்று வருகின்றது.
2.ஏனென்றால் மருந்திற்கு அந்த விஷம்தான் வீரியத்தன்மை கொடுக்கின்றது
3.விஷத்தின் தன்மை ஊட்டியபின் உடலுக்குள் ஊடுருவி வேகமாகச் சென்று உற்சாகமும் ஊட்டுகின்றது.
4.சிறுநீரகத்திற்கு வரப்படும் பொழுது இரத்தம் அங்கே வடிகட்டப்படும் போது விஷம் அதிலே மாட்டிக் கொள்கிறது.
5.கிட்னி சரியாக இயங்கவில்லை என்றால் உப்புச் சத்து சர்க்கரைச் சத்து எல்லாம் வந்து விடுகின்றது.

சிறுநீரகம் சரியாக இரத்தத்தைச் சுத்திகரிக்கவில்லை என்றால் வடிகட்டும் தன்மை இழந்து சர்க்கரை உப்பு இவைகளின் அளவு இரத்தத்தில் அதிகமாகி
1.நுரையீரலுக்குச் செல்லும் போது அங்கே வடிகட்டும் நிலைகளீல்
2.பின்னிக் கிளைகளாக வரப்படும் போது… சளியாக அங்கே சேர்ந்து கொள்கின்றது.
3.சளி சேரச் சேர… கட்டியாக உறைந்து நீர் அதிகமாகக் கோர்த்த பின் புஷ்… கிஷ்… என்று மூச்சுத் திணறலாகிவிடும்.

அது மட்டுமல்ல…!

சளியினால் வழுவழுப்பான நிலைகள் அங்கே அதிகமான பின் நாம் உணவாக உட்கொள்ளும் எதையுமே… ஆகாரத்தை வாந்தியாக வெளி தள்ளிக் கொண்டே இருக்கும். உட;ல் எங்கே சௌகரியமாவது…? ஒன்று சரியானாலும் மற்றொன்று இப்படி மாறி வந்துவிடுகிறது.

ஆக… பிறர் செய்யும் தீமைகளை எல்லாம் சந்தர்ப்பவசத்தால் நாம் நுகர… அந்த உணர்வலைகள் நம் இரத்தத்தில் கலக்கக் கலக்க… அதனின் வளர்ச்சி இப்படி ஆகிக் கொண்டே இருக்கின்றது.

இன்று மனிதனாக இருக்கின்றோம் இதை எல்லாம் தெரிந்து கொள்கின்றோம். ஆனால் மற்ற உயிரினங்களோ
1.தன்ன்னைத் தாக்க வரும் எதிரிடமிருந்து “தப்பிக்க வேண்டும்…” என்ற வலுவான உணர்வை நுகர்கின்றது… அறிகின்றது
2.இரத்த நாளங்களிலே அந்த (தப்பிக்கும்) உணர்வுகள் பெருகுகின்றது
3.அதனுடைய உடலில் புதுப்புது வைரஸ்களாக அது மாறுகின்றது
4.அதனுடைய கரு முட்டைகளும் இரத்தத்திலே பெருகுகின்றது.

பின் உடலை விட்டு வெளியே வரும் பொழுது அந்தக் கரு முட்டையுடன் சேர்ந்து தான் உயிர் வெளியே வருகின்றது அதனால் தான் அதை “உயிரான்மா” என்று சொல்வது (இது முக்கியம்). உயிருடன் சேர்த்து இந்த உடலில் விளைய வைத்த அந்த ஆன்மா வெளி வருகின்றது.

1.எந்த உயிரால் அந்த உடலில் வளர்க்கப்பட்டதோ
2.அதனுடைய சத்து அதிலே எது அதிகமோ அதன் வழி இந்த உயிர் வெளியே வரப்படும் பொழுது
3.அந்த உணர்வுக்கொப்ப மாற்று உடலாக உயிர் அமைத்து விடுகின்றது.

ஆனால் இதை யார் செய்தது…? அந்த உடலில் நுகந்த உணர்வுக்கொப்ப எது அதிகமோ அதற்குத் தக்க உறுப்புகளை மாற்றிவிடுகிறது… உறுப்புகளை மாற்றி உடலை மாற்றுகிறது.

இன்று ஆடாக இருப்பதை நாளைக்கு ஓநாயாக மாற்றி விடுகின்றது… ஆடு புலியை உற்றுப் பார்த்தால் புலியாக மாறுகிறது. ஒரு நரியைப் பார்த்து அதனின் உணர்வை எடுத்தால் அதன் நிலைக்குத் தான் அந்த ஆடு மாறுகிறது.

ஆனால் ஆடு ஒன்று தான்…! அதனுடைய வாழ்க்கையில் எந்த மிருகத்தை அதிகமாக உற்று நோக்கி அதனிடமிருந்து தப்பும் நோக்கில் உணர்வுகளைக் கவர்ந்ததோ… அது இரத்தத்தில் கலந்தால் அதிலே அது பெருகி… அதன் வழி கொண்டு எது அதிகமோ அதற்குத்தக்க மாறுகிறது.

1.இப்படி இந்த உயிர் எதை எதை நுகர்ந்ததோ அதற்குத் தக்க ஆத்மாவாகப் பெருக்கி
2.ஆன்மாவிற்குத் தக்கவாறு உடலை அமைத்து
3.அந்த உடலுக்கொப்ப உணர்ச்சிகளாக இயக்கி
4.அதன் வழிகளில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதனை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

April 21, 2023

“சத்து இருக்கிறது…!” என்று சொல்லிக் கொண்டு வகை வகையாக உணவுகளை உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள்

1.தாவர இனங்களில் சில விஷத்தன்மையான நிலைகளும் உண்டு.
2.உதாரணமாக நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள்ளும் தானியங்களிலும் கீரைகளிலும் அத்தகைய நிலை உண்டு.

சிலருக்கு சில கீரை வகைகளைச் சாப்பிட்டால் உடனே “பேதி” ஆகிவிடும். சிலருக்கு அந்தக் கீரைகளைச் சாப்பிட்டால் மன உறுதி கிடைக்கும்.

தானியங்களிலே எடுத்துக் கொண்டாலும் சிலர் சோளத்தைச் சாப்பிடுகின்றனர் அவர்கள் உடலுக்கு நல்ல வலிமையாகின்றது. ஆனால் சிலருக்கு அந்தச் சோளத்தைச் சாப்பிட்டால் “சொறி சிரங்கு” வருகின்றது.

சிலர் கம்பை உணவாக உட்கொள்கின்றனர். கம்பை உணவாக உட்கொள்ளும் பொழுது நாளடைவில் மனிதனை அந்த விஷத்தின் தன்மை செவிடாக்கி விடுகிறது… உணர்வின் ஒலி அலைகளை அது இழக்கும்படி செய்து விடுகின்றது.

“உணவுக்குள் இத்தனை மாற்றங்களும் இருக்கின்றது….”

வெயில் காலத்தில் ஒரு சிலர் காலையில் கம்பைச் சாப்பிட்டால் நல்லது என்று சாப்பிடுவார்கள். சிலருக்கு ஒத்துக்கொள்ளும்… சிலருக்கு அது
1.செவிடாக மாற்றி விடுகிறது…
2.காதிலே நீராகவும் கூட வடியத் தொடங்கி விடுகிறது.

இது எல்லாம் உணவுப் பழக்கங்களினால் வரும் நிலைகள்…!

நாம் எந்தெந்த உணவை அதிகமாக உட்கொண்டமோ அதற்குத் தக்க நம் உடலில் அணுக்களும் பெருகுகின்றது.
1.ஏற்கனவே நாம் உட்கொண்டதைக் காட்டிலும்
2.மாற்றமான சில உணவு வகைகள் எடுத்துக் கொண்டால் உடலிலே எதிர்ப்பு நிலைகள் வருகிறது.

இதே போன்று பருப்பு வகைகளை எத்துக் கொண்டாலும் ஒவ்வொரு பருப்புக்கும் ஒரு விதமான வாயுவை உருவாக்கும் தன்மை உண்டு.. வாய்வை உற்பத்தியாக்கி இந்த உணர்ச்சியின் வேகத்தை ஊட்டக்கூடிய சக்தி இருக்கின்றது.
1.ஒரு சிலருக்கு பருப்பைச் சாப்பிட்டால் ஏப்பம் அதிகமாக வருவதும்
2.கை கால்கள் சோர்வடைவதும் பல வித்தியாசமான நிலைகளையும் உருவாக்கி விடுகின்றது.

கீரை வகைகளைச் சாப்பிட்டாலும் சிலருக்கு ஏற்றுக் கொள்வதில்லை ஒரு மனிதன் ஒன்றைப் பயன்படுத்தினாலும் மற்ற மனிதனுக்கு இது பயனற்றதாகப் போகின்றது… எதிர்ப்பு நிலையும் வருகிறது

ஒரு கீரையை உணவாக உட்கொண்டால் அந்த உணர்வின் சத்து இரத்தத்தில் கலந்த பின் உடலில் இருக்கக்கூடிய அணுக்களிலும் சேர்க்க நேருகிறது.

நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களில் சேர்த்து விட்டால்
1.எந்த கீரைச் சத்தை வித்து எடுத்து வளர்கின்றதோ அதனுடைய சத்து காற்றிலே செல்வதை நுகரச் செய்யக்கூடிய சக்தியும் உண்டு.
2.அப்படி நுகரப்படும்போது நம் உயிரிலே பட்டு
3.நம்மை அறியாமலே பல வகையான வேதனைப்படும் நிலைகளும் வந்துவிடுகிறது.

ஏனென்றால் இதையெல்லாம் நாம் தெளிவாக தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

ஒரு கீரையோ மற்றதோ நமக்கு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் “உடனே அதை நிறுத்திப் பழகுதல் வேண்டும்…” அடுத்து இதனுடைய நிலை எப்படி…? என்று நாம் தியானத்தைக் கூட்டி துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாக நம் உடலில் கூட்டிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியக் கூட்டிக் கொண்டால் ஓரளவுக்கு நமக்கு ஏற்றுக் கொள்ளும்படியும் செய்ய முடியும்.

தங்கத்தில் திரவத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறி தங்கம் சுத்தமாவது போன்று
1.எதிர்ப்பு நிலைகள் உடலுக்குள் வருவதைத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று
2.நமக்குகந்ததாக அதை மாற்றிக் கொள்ள முடியும்.

அதற்குத் தான் இதைப் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

விந்தையான செயல்களைச் செய்யும் மனிதன் ரிஷிகள் பெற்ற சித்துகளைப் (சக்திகளை) பெற முடியாதா...?

சரீரத்தைக் கொண்டு யோகாசனம் சில வித்தை விளையாட்டுக்கள் எல்லாம் செயல் புரிகிறார்கள். அவர்களின் அங்கக்கூறின் அமிலத் தன்மையே அவ் ஈர்ப்பின் எண்ண உணர்வின் வலுவான அணு வளர்ப்பினால்
1.சரீரத்தைப் பத்து நாட்கள் அல்லது பதினைந்து நாட்கள்
2.சுவாசத்தை அடக்கிய முறையிலேயே சில விந்தை புரிபவர்களும் உண்டு.

அதைப் போன்றே சரீர இயக்கத்தால் சரீரத்தைப் பல விந்தைச் செயலாக யோகாசனம் (GYMNASTICS) போன்ற வழி முறையில் செயல்படும் முறையும் இதன் தன்மைக்கு உகந்தது தான்.

நாட்டியம்… சங்கீதம்.. உடல் பயிற்சி… சில விளையாட்டு வழி முறைகள் இவற்றில் ஒவ்வொன்றிலுமே
1.எண்ணத்தின் உணர்வைக் கூர்மையாக்கி
2.எத்துறையின் வழிப்படி இச்சரீர இயக்கம் அதிகப்படியாகச் செயல் கொள்கின்றதோ
3.அதற்குகந்த அணு வளர்ப்பை இச்சரீரம் பெற்று
4.எடுக்கும் எண்ணத்தினாலேயே அவ்வமிலத்தைக் காந்த மின் அணு வளர்ப்பாக சரீரம் வளர்ச்சி கொள்கின்றது.

அதாவது… எண்ணத்தின் உணர்வைக் கூர்மையாக்கி… துரிதம் கொண்ட ஆர்வ உணர்வின் உந்தலுக்குகந்த வார்ப்பாகச் சரீரம் வழி வகுத்துக் கொள்கின்றது.

இத்தொடர் சரீர இயக்கத்தில் மட்டும் அல்லாமல்… தொழில் முறையிலும்… மற்ற கலைகள் ஒவ்வொன்றிலுமே… ஒரு மனிதன் தன் வாழ் நாளில்…
1.எண்ணத்தின் உணர்வு சுவாசத்தை எச்செயலுடன் ஒன்றிய சுழலில் வாழ்கின்றானோ
2.அவ்வலையின் வளர்ப்பைச் சரீர அணுக்களே வளர்ப்பதோடு மட்டுமல்லாமல்
3.அதே நிலை கொண்ட அமிலக்கூறின் ஆவி நிலை அமிலத் தொடர்பும்
4.இவ்வளர்ப்பின் தொடர்புடன் வளரும் அலைத் தொடர்பாக இவ் ஈர்ப்புடன் தொடர்ந்து வளர்கின்றது.

“இனம் இனத்துடன் சேரும்…” என்ற உண்மையின் தத்துவ உணர்வு இதன் அடிப்படையில் சொல்லப்பட்டது தான்.

ஆகவே இச்சரீர உணர்வின் எண்ணத்தைச் “செலுத்தும் வழி முறையைக் கொண்டு” வாழ்க்கையின் நடைமுறைச் செயலையே..
1.மனித சக்தியின் செயலை உயர்வின் வழியமைக்கச் செயல்படுத்தும் முறை அறிந்து
2.எண்ணத்தின் உணர்வை உயர்வு கொண்ட மகரிஷிகளின் தொடர்புடன் தன் ஞானத்தை வளர்த்து
3.சகல சித்தும் அறியும் ரிஷித் தன்மையின் வழி பெறலாம்.

சரீர உணர்வுடன் இந்த ரிஷித் தன்மை பெற ஆண் பெண் கூட்டு உணர்வு எண்ண வழி முறையின் வளர்ச்சியினால் தான் முடியும். சகல சித்துவும் பெறும் தன்மை அடைய வேண்டும் என்றால் வாழ்க்கையில் ஆண் பெண் எண்ணக் கூட்டு நிலை தேவைப்படுகின்றது.

ஒவ்வொரு சித்தரும் ஒவ்வொரு நிலையில் சக்தி பெற்றார்கள்.

ஞானச் சித்தின் வளர்ப்பு நிலைக்குச் சிவ சக்தி என்ற ஆண் பெண் அமிலக் கூட்டின் உணர்வுத் தொடர்பு அவசியம்.

தனித்த சக்தியினால் நான் செயல்படுவேன்…! என்பது வளர்ப்புத் தன்மையக் காட்டிலும் மலட்டுத் தன்மையான முனிவர்களின் நிலையை ஒத்துத்தான் தனித்து இயங்க முடியும்.

ஏனென்றால் ஆண் பெண் அமில சக்தி தான் நம் பூமியின் சக்தியே…!

அச்சக்தியின் தொடர்பு போன்றே பூமியில் உள்ள சகல நிலைகளும் இன்றளவும் வளர்ந்துள்ளதைப் போன்று ஞானத்தின் தொடருக்கும் இவ்வழி முறையைப் பெற்றிடுங்கள்.

April 20, 2023

ஆனந்த வாழ்க்கை வாழச் செய்யும் “குருவின் அருள் ஞான சக்தி…”

ஒன்று இல்லாது ஒன்று இல்லை… ஒன்றின் துணை கொண்டு தான் ஒன்று வாழுகின்றது. இயற்கையின் நியதி இது.

அதைப் போன்று ஒரு நண்பரின் துணை கொண்டு தான் நாமும் வாழுகின்றோம். ஆனால் சந்தர்ப்பத்திலே அதிலே வெறுப்பு என்ற உணர்வுகள் வரும் பொழுது
1.இதிலிருந்து மீட்டுக் கொள்ள வேண்டும் என்ற உணர்வுகளைத் தூண்டுகின்றது
2.எதிரியிடமிருந்து மீள வேண்டும் என்று வருகின்றது.
3.எதிரி என்ற உணர்வுகள் இல்லை என்றால் “தன்னைக் காக்கும் நிலை” என்பதே மறந்துவிடும்.

ஆகவே எந்த நிலை ஆனாலும் நமது வாழ்க்கையில் எதிர்ப்பு என்று வரும் பொழுது… அடுத்து சிந்தித்து நாம் அதிலிருந்து மீளும் உணர்வுகளை எடுத்தால்… அந்த வெறுப்பு நமக்குள் வராதபடி தடுக்க முடியும்

1.நஞ்சின் தாக்குதல் இல்லை என்றால் அணு என்ற இயக்கமும் இல்லை
2.நஞ்சின் தாக்குதல் இல்லை என்றால் கோள் அதுவும் உருவாகாது.
3.நஞ்சின் தாக்குதலினால் தான் சுழற்சியின் தன்மை ஆகி அதனால் வெப்பமும் ஈர்க்கும் காந்தமும் அது உருவாகின்றது.

கோள் என்று வரும் பொழுது தான் சுழற்சியில் அது வளர்ச்சி பெற முடியும். சுழற்சியின் வேகம் கூடும் பொழுது தான் சூரியனாகி… நஞ்சை வெல்கின்றது. ஒளியின் தன்மையாகப் பிரகாசிக்கின்றது. நஞ்சு இயக்கினாலும் அந்த நஞ்சை வெல்லக்கூடிய சக்தி சூரியன் பெறுகின்றது.
1.நஞ்சை வென்றாலும் அதனின் தொடர் கொண்டு
2.அந்த இயக்கத்தின் வரிசையில் வாழுகின்றது.

இதைப் போன்று தான் நமக்குள் வரும் உணர்வின் தன்மையும்…! “விருப்பும் வெறுப்பும்” அது எத்தகைய நிலையில் வந்தாலும் அதை நமக்கு நன்மையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நெருப்பு என்று வரும் பொழுது அதை ஒளியாக… வெளிச்சமாகப் பயன்படுத்தி அதனால் மற்ற பொருளைத் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது. அதே சமயத்தில் அந்த நெருப்பை அதிகரித்து கடினமான பொருள்களையும் நாம் உருக்குகின்றோம்.

உணவுப் பதார்த்தங்கள் அனைத்துமே அந்த நெருப்பை வைத்து நாம் சமைக்கின்றோம். அந்தப் பக்குவங்கள் கொண்டு வரும் பொழுது உணவு சுவையாக மாறுகின்றது. அதைப் போன்று தான்
1.வாழ்க்கையில் வெறுப்போ துன்பமோ இவைகள் வரும் பொழுது அதனை நாம் அடக்கி
2.நன்மை பயக்கும் நிலையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அத்தகைய சக்தி பெற்றது தான் நம் ஆறாவது அறிவு. தீமை என்று வந்தாலும் அதைச் சுவைமிக்க நிலையாக மாற்றிக் கொள்ளும் நிலையில் அவ்வாறு சுவை மிக்கதாக மாற்றிக் கொண்ட “அருள் ஞானிகள் உணர்வுகளை நமக்குள் பெருக்கி… ஆனந்த நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்...!”

1.நெருப்பை வைத்து உணவைச் சமைத்து நாம் ஆனந்தமாக எப்படி உட்கொள்கின்றோமோ
2.அதே சமயத்தில் இருளை நீக்கி அந்த நெருப்பு ஒளியாகக் காட்டும் போது பொருள்கள் தெரிகிறது என்று எப்படி ஆனந்தப்படுகின்றோமோ
3.சாதாரணமாக உருக்க முடியாத பொருள்களை நெருப்பை வைத்து உருக்க நாம் முற்படும் பொழுது அது உருகி விட்டால் அதைக் கண்டு நாம் எப்படி ஆனந்தப்படுகின்றோமோ
4.எதனை உருக்க எதனின் தன்மை வேண்டும்…? என்ற நிலையில் கடுமையாக இருந்தால் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று நாம் எப்படி அறிந்து கொள்கின்றோமோ இது போன்று…
5.கடுமையான பகைமைகள் வந்தாலும் அது நம்மைத் தாக்காதபடி அருள் ஒளியைக் கூட்டி அந்தப் பகைமைகளை நீக்கி நாம் ஆனந்தப்படுதல் வேண்டும்.
6.நாம் எடுக்கும் உணர்வின் தன்மை கொண்டு அந்த ஆனந்தம் என்ற நிலை வருதல் வேண்டும்.

ஆகவே… நிலையான அழியா ஒளிச் சரீரம் பெற நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துதல் வேண்டும்.

வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகள் யாவுமே “ஞானத்தைப் பெறச் செய்வதற்குத் தான்…!”

ஆத்ம வலுப் பெறுவது என்பது ஆண்டவன் அருளால் ஒரு நொடிப் பொழுதில் கிட்டிவிடுவது என்பதல்ல.

இச்சரீரக்கூறின் உணர்வின் எண்ணத்தையே உயர் ஞான வழி முறைக்குச் செயல்படும் ஒவ்வொரு செயலுக்குமே செயலின் வழி முறையில் செலுத்தப்படும் எண்ணத்தில் “உடல் ஏற்கும் உணர்வு நிலைக்கொப்பத்தான் செயல்படுத்த முடியும்…!”

உணர்வு நிலை என்பது…
1.சகல நிலைகளிலும் இவ்வெண்ணம் மோதும் பொழுது
2.சமமான சாந்த நிலையுடன் கூடிய எண்ணத்தின் பால்
3.அந்த உணர்வின் செயகையை உடல் நிலை ஏற்று வழிப்படுத்தும் நிலைக்கொப்ப
4.சகல சக்திகளிலும் சமமான சாந்த சக்தியைச் செயல்படுத்தும் வழி முறையினால் தான்
4.ஆத்ம பலத்தைக் கூட்டிக் கொள்ள முடிகிறது.

ஆத்ம பலம் பெற்ற… ஞானத் தன்மையினால் எண்ணத்தின் உணர்வைச் சாந்தப்படுத்தும் வழிச் செயலை “அவ்வாத்மாவே…” பிறகு செயல்படுத்தி வழி நடத்தும்.

சிறு சிறு துளிகள் சேர்ந்து தான் பெரு வெள்ளமாகின்றது. அதைப் போன்று ஒவ்வொரு செயலிலும் எண்ணத்தின் வழி முறையைச் செயல்படுத்தும் தனமை கொண்டு தான் ஆத்ம பலம் கூடி வலுவாகின்றது.

1.ஆத்ம பலம் பெற்று விட்டாலும்
2.வாழ்க்கையில் நடக்கும் எதிர் நிலை உந்தல்கள் பல மோதத்தான் செய்யும்.

பெரும் வெள்ளத்தில் எதிர்படும் குப்பைகள் எப்படி அடித்துச் செல்லப்படுகின்றனவோ அதைப் போன்றே ஆத்ம பலம் பெற்ற வாழ்க்கையில் எதிர்ப்படும்
1.உணர்ச்சிகளை உந்தக்கூடிய சில நிலைகள் ஏற்பட்டாலும்
2.வெள்ளத்தில் அடித்துச் செல்லும் குப்பைகளைப் போன்று
3.அது நம் ஆத்மாவுடன் கலக்காது.

பல காலமாக உழைத்துச் சம்பாதித்து வீடு கட்டும் பொழுது… வீட்டின் அஸ்திவாரத்தைப் பலம் கொண்டு கட்டியவுடன்… அதற்கு அழகு செய்வது கடினமல்ல…!

அப்படிக் கட்டப்பட்ட வீட்டில் ஆங்காங்கு ஏற்படும் துப்புரவு நிலைகள் சில செய்து கொண்டே தான் இருக்க வேண்டும்.

அதைப் போன்றே ஞானத்தால் சித்து கொண்ட ஆத்ம பலம் பெற்று இச்சரீரமுடன் வாழும் காலத்தில்
1.கட்டப்பட்ட வீட்டின் குப்பைகள் அண்டுவதைப் போன்றும்
2.காரைகள் உதிர்வதைப் போன்றும் சில நிலைகள் ஏற்படத்தான் செய்யும்.

அதைத் துப்புரவுபடுத்திக் கொண்டு தான் இருக்க வேண்டும்.

உடலுடன் கொண்ட வாழ்க்கையில் எதிர்ப்படும் யாவையுமே
1.நம் ஞானத்தை வளர்க்கவல்ல வழி முறையாக
2.ஆத்மாவின் செயலைக் கொண்டு வழி பெறும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்.

April 19, 2023

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் எண்ணத்தால் கவர வேண்டிய பயிற்சி

குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம். அருள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கியதன் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற தியானப் பயிற்சியையும் கொடுக்கின்றோம்..

துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகளை ஊட்டி உங்கள் நினைவனைத்தும் நட்சத்திரத்தின் பால் செலுத்தும்படி செய்கிறோம். உங்கள் எண்ணத்தால் அதை எடுக்க முடியும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று
1.உங்கள் கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து
2.உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.
3.இப்பொழுது உங்களை நேரடியாக அந்தத் துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்கின்றேன்
4.நீங்கள் உயிர் வழி ஏங்கிப் பெறும் பொழுது அதிலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் எளிதில் பெறலாம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகள் உயிர் வழி உங்கள் இரத்த நாளங்களில் கலக்கும். கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தப்படும் பொழுது அதனின்று வெளிப்படும் உணர்வை எளிதில் கவர்ந்து உங்கள் உடலுக்குள் பரப்பச் செய்ய முடியும்.

கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்
1.குரு வழியில் அந்தப் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கி நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப ஏங்கித் தியானியுங்கள்.

அடுத்து… கண்களை மூடி நினைவனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று மீண்டும் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

1.இப்பொழுது புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை (உயிரில் உள்ள காந்தம்) ஈர்க்கும்
2.அங்கே புருவ மத்தியிலே பேரொளி தெளிவாகத் தெரியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடல் முழுவதும் பரப்புங்கள்.

“கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி” இரத்த நாளங்களில் அதைக் கலக்கச் செய்து… உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

இப்பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வு கலந்த ரத்தம் உங்கள் உடல் முழுவதும் பரவுவதனால்
1.உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் நல்ல அணுக்களாக மாறும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது
2.புது விதமான உணர்ச்சிகள் உங்கள் உடலுக்குள் தோன்றும்
3.அருள் உணர்வுகள் பெருகும்.. அருள் ஞானம் பெருவீர்கள்
4.துருவ நட்சத்திரத்தினுடைய உணர்ச்சிகள் உங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களையும் இயக்கும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்கள் இரத்தத்தில் அதிகமாகப் பரவுவதனால் ஒரு மிதப்பதை போன்று உணர்வுகள் உங்களுக்குள் தோன்றும்
1.அதாவது புவி ஈர்ப்பின் பிடிப்பு குறைந்து துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு உங்களுக்குள் பெருகும்.
2.உடல் எடை குறைந்து இப்பொழுது மிதப்பது போன்ற உணர்ச்சிகள் தோன்றும்
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பிலே மிதக்கும் தன்மை வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குடும்பம் முழுவதும் படர்ந்து நாங்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலே மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் தெளிந்த மனமும் தெளிவான வாழ்க்கை வாழும் அருள் சக்தியும் எங்கள் குடும்பத்தார் அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

எலும்புக்கூறுகளுக்கு ஊட்டமாகக் கொடுக்க வேண்டிய “மின் காந்த சக்தி”

நம் பூமியின் இயக்கத்தில் எப்படி இருள் அதிகமாகவும் ஒளி குறைவாகவும் உள்ளதுவோ அதைப் போன்றுதான் மனிதனின் எண்ணச் செயலும் உள்ளது.

1.கடும் இருட்டிலும் சிறிது வெளிச்சம் ஊடுருவி ஒளி பாய்ச்ச முடியும்.
2.ஆனால் சிறிது வெளிச்சத்தையே மறைக்கக் கடும் இருட்டு தேவையாக உள்ளது.

நம் எண்ணத்தின் இருளை ஒளியாக்கும் ஆத்ம வலுவை நாம் பெற்றோமானால்
1.உடலின் எண்ண நிலைக்கொப்பச் செயல்படும் குணத்தையே
2.ஆத்மாவின் செயலாக உடலைச் செயல்படும் வகையில் செயலாக்கி
4.இருளில் இருந்து ஒளி பெறும் ஞான ஒளியாக
5.நம் ஆத்ம ஒளி பிரகாசிக்கும் சக்தியைப் பெறும்.

எண்ணத்தில் உள்ள இருள்கள் எவை…?

சலிப்பு… சோர்வு… பிறரிடம் உள்ள குறை காணல்.. புகழுக்காக ஏங்கும் ஏக்க நிலை… மரண பயம்…! போன்ற இருள் தன்மைகள் எல்லாவற்றையும் எண்ணத்தால் எடுக்கும் ஞான சக்தி கொண்டு நாம் மாய்க்க வேண்டும்.

குரோதம் வஞ்சனை என்ற தீய குணங்கள் வேறு. எண்ணத்தால் மறைத்துவிடும் இருள் குணங்கள் வேறு.

ஆத்ம ஞானத்தால் நாம் வளர்ந்து வரும் காலங்களில் சலிப்பின் சோர்வை அண்ட விடக்கூடாது.

சலிப்பின் ஏக்கத்தால் “உயர்வு கொள்வோம்” என்ற
1.உயர் ஞான வழிக்கு அந்த ஏக்க நிலையைச் செலுத்தி
2.அந்த ஏக்கத்திலேயே ஆத்ம வளர்ப்பை வளர்க்கவும் முடியும்.

ஆனால்… பிறர்பால் பொருளைப் பார்த்து ஏக்கப்படும் ஏக்கத்தால் மனித வாழ்க்கை அழிவிற்கும் செல்வதுண்டு.

குணங்களை வழிப்படுத்தும் ஞானத்தால் பெறவல்ல ஆத்ம பலத்தால் தான் இருள் என்ற நிலை நீங்கும். மேலும் ஒளியான ஆத்ம வலுவைப் பெற்ற ஆத்ம ஞானத்தால்… எண்ணிய எண்ண நிலைக்கொப்ப கடும் பசியையும்… உடல் சோர்வையும்… கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

அதே போல் உடலின் எந்தப் பாகத்தில் எந்த வகையான உபாதைகள் ஏற்பட்டிருந்தாலும்… இவ்வுடலின் செயலுக்கும்…
1.இவ்வாத்ம ஞானத்தால் மகரிஷிகளின் அலைத் தொடர்பில் தொடர்பு கொண்டு
2.அவர்கள் ஈர்ப்பலை வரிசையில் எண்ணத்தைச் செலுத்தி சுவாசம் எடுக்கும் பொழுது
3.எதை எண்ணிச் சுவாசம் எடுக்கின்றோமோ… அவ்வலை அமில உணர்வு இந்த உடலில் சாடி ஏற்படும் எண்ண நிலைக்கொப்ப…
4.”ஆத்ம பலத்தைக் கொண்டு” இவ்வுடலின் செயலையும் சீராக்கிடும் வழியை வகுத்துக் கொள்ளலாம்.

இந்த உடல் ஒரு அடுப்பு தான். இந்த உடலில் சமைக்கும் அமில உணர்வின் ஆவி நிலையை ஆத்மா பெற்று அதன் வழியில் ஆத்மா வாழ்வது என்பது “சாதாரண வாழ்க்கை நிலை...!”

ஆனால் வாழ்க்கையின் ஞான ஈர்ப்பு நற்குணத் தியானச் செயலால்… எண்ணத்தின் சுவாசத்தில் ஆத்ம பலம் பெற்ற ஒரு ஞானியினால்…
1.உடல் சமைப்பிலிருந்து ஆத்மா பலம் பெறும் நிலை மாறி
2.ஆத்மாவின் செயலுக்குகந்த சமைப்பாக இந்த உடலை இயக்க முடியும்.

பசி… தூக்கம்… கழிவு… காமம்… போன்ற உடலின் செயல் இயக்கத்தையே ஆத்ம வலுக்கூடிய ஞானியினால் ஆத்ம வலுவைக் கொண்டு மாற்றியமைக்க முடியும்.

அத்தகைய தன்மைக்கு… இச்சரீரக்கூறின் எலும்புகளை மின் காந்த வலுக் கொண்ட உறுப்புக்களாக உறுதி கொண்டிடும் செயலால்
1.சரீர உணர்வின் சாதாரண நிலையையே
2.எண்ணத்தின் இயக்க நிலைக்கொப்ப மாற்றியமைக்கும்
3.ஆத்ம வலுவைக் கொண்டு செயலாக்கத்திற்குக் கொண்டு வர முடியும்.

April 18, 2023

இன்று எல்லாமே “துரித வேகமாக” இயக்கப்படுவதன் காரணம் என்ன…?

சூரிய அலை ஈர்ப்பிலிருந்து (SOLAR) இன்றைய விஞ்ஞானத்திற்காகச் செயற்கை மின் காந்த அலையை மிகத் துரித இயக்கமாக இந்த நூற்றாண்டில் மனித விஞ்ஞானம் பிரித்தெடுத்துக் கொண்டே உள்ளது.

செயற்கை ஒளி காண… சூரிய சக்தியின் அலையை இந்தப் பூமிக்குத் துரிதப்படுத்தியதன் “செயற்கை இயக்க வேகம்…” உயிரினங்களின் ஈர்ப்பு வார்ப்பிலும் இக்காற்றலையின் தொடர்பினால் பெறவல்ல துரித இயக்கத்தினாலும்
1.இக்கலி மனிதர்களின் ஞான ஈர்ப்பும்
2.இயக்கத் துரிதமும் மிக வேகமாக முன்னேறியுள்ளது.

முன்னேறியுள்ளது…! என்பது இயற்கையின் அலை ஈர்ப்பானது உயிரினங்களின் சுவாச ஈர்ப்பிற்குத் துரிதம் கொள்ளும்… காந்த அணுக்களின் மின் ஈர்ப்பு நிலை… உயிரின வளர்ப்பு யாவற்றுக்குமே துரிதப்பட்டுள்ளது இயற்கை.

“செயற்கையின் செயலுக்காக” சூரிய அலையின் மின் காந்த அலைகளைப் பிரித்தெடுக்கும் இயக்கத்தால்… பூமியின் தன்மைக்கே அந்தக் குணம் கூடிவிட்டது.

அத்தகைய வேகத்தின் செயலினால்தான்… இந்நூற்றாண்டில் மனித விஞ்ஞானச் செயல்கள் அனைத்தும்… துரித வேக ஓட்டம் கொண்டு… மிகவும் வளர்ச்சியுற்று ஓடிக் கொண்டுள்ளது இன்று.

இத் துரித ஓட்டத்தையே சீர்படுத்தி வழிப்படுத்தும் ஞான ஈர்ப்பின் இயற்கைச் சக்திக்கு ஆத்ம தொடர்புடன் செயல்படுத்தினோமானால் ஆயிரம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வளர்ச்சியுற்ற நிலையைக் காட்டிலும் உயர் வளர்ச்சிக்குக் கொண்டு போகலாம்.

அதாவது இன்றைய (இக்கலியின்) மின் அலைச் செயலுக்கு உட்படுத்தப்பட்ட மின் சக்தியின் துரிதம் போன்றே
1.எண்ணத்தில் எடுக்கும் சுவாசத்தால்… ஞானத்தின் ஈர்ப்பு நிலையினால்…
2.இவ்வாத்ம வார்ப்பை ஒளி நிலையாக்கி…
3.உயர் ரிஷிகளின் தொடர்பில்… சித்து நிலை கொண்ட ரிஷித் தன்மைக்கு உட்படுத்த முடியும்.

அதே சமயத்தில் தீய சக்தியின் செயல்களும் இன்று பல நிலைகளில் துரிதம் கொண்டு மாந்திரீகத்தாரால் அவர்கள் அறியாத நிலையிலேயே அவர்களுக்குள் சில துரித ஆவேச அலை உணர்வு கொண்ட ஆவி ஆத்மாக்கள் அவர்கள் ஈர்ப்புக்குள் சிக்கிவிடுகின்றன.

அவ்வாத்மாவின் உந்தலின் சுவைக்கு உகந்த ஆகாரத்தை இவர்கள் தந்து… மந்திரவாதியின் (சூனியக்காரர்களின்) செயலுக்காக அவ்வாவிகள் எச்செயலையும் செய்விக்கும் தன்மையில் பல விபரீத செயல்களும் நடை பெற்றுக் கொண்டுள்ளன.

அதிலெல்லாம் சிக்காது… உண்மையின் இயற்கை ஆத்ம வலுவை
1.நாம் நற்குணங்களின் வார்ப்பாக இயக்கவல்ல இயக்கத்தால்
2.இவ்வாத்ம வலுவைக் கொண்டு துரிதமாக ரிஷித் தன்மை பெற முடியும்.

“நீடித்த நாள் வாழ்வது என்பது…” துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைவது தான்

உலகிற்கே இன்று ஒளியின் சுடராக இருக்கும் “அகஸ்தியன்…” துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன அந்த அருள் சக்தி கருவில் வளரக்கூடிய குழந்தைகள் பெற வேண்டும் என்று… குடும்பத்தில் பத்து மாதத்திலும் கூட்டு தியானங்கள் இருந்து செயல்படுத்தினால்
1.“அந்தக் குழந்தை மகரிஷியாகின்றான்…!”
2.இப்படி உருவாக்கினால் தான் விஞ்ஞான அறிவால் வரும் விஷத்தன்மைகளிலிருந்து நம்மை நம் குழந்தை காக்கும்
3.இந்த முறைப்படி வகுத்துக் கொண்டால் விஷத்தின் தன்மை அந்தக் குழந்தைகள் நுகராது.
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து… பச்சிலை மணங்கள் அவர்களுக்குப் பாதுகாப்பாக வந்து
5.நமக்கும் சரி இனி அடுத்து வரும் சந்ததிகளுக்கும் சரி அவர்கள் எல்லாம் மகரிஷிகளாகப் பயன்படுவார்கள்.

திருஞானசம்பந்தர் தாய் கருவில் அவர் இருக்கப்படும் பொழுது சில அற்புத சக்திகளைப் பெற்றார்.

சீர்காழி என்ற ஊரில் அவரின் தாய் பக்தியின் நிலைகள் இருந்தாலும் “சிவன் ஆலகால விஷத்தைத் தனக்குள் அடக்கி மற்றவருடைய விஷத்தைப் போக்கினான்…” என்று கதாகாலட்சேபம் மூலமாக அதை நுகர நேருகிறது.

அந்தச் சக்தி என் கருவிலே இருக்கக்கூடிய குழந்தை பெற வேண்டும் என்றும் அந்தத் தாய் எண்ணியது. காரணம்
1.முதலில் குழந்தை இல்லாதது ஏங்கியது
2.குழந்தை உருவாக வேண்டும் என்று ஆர்வத்திலே அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து தனக்குள் வளர்த்துக் கொண்டது
3.அதன் மூலமாக அந்த அற்புத சக்திகள் தாய் கருவிலே வளரும் சிசுவிற்குள் இணைந்தது.

இப்படி அந்தக் கருவிலே வளர்ந்தவர் தான் திருஞானசம்பந்தர்…!

அவர் பிறந்த பின் கடும் நோயால் அவதிப்படுவரையும் குழந்தைப் பருவத்திலே உற்றுப் பார்த்தால் அந்த நோய்கள் நீங்குகிறது. ஒரு விஷமான பாம்பு தீண்டினாலும் கூட திருஞானசம்பந்தர் பார்வை பட்டால் அந்த விஷங்கள் அகலுகிறது.

அத்தகைய சக்திகளை ஆரம்ப நிலையில் பெற்றவன்.
1.ஆனால் இத்தகைய ஆற்றல்களை அவன் பெற்றிருந்தாலும் அவன் நீடித்த நாள் வாழ்ந்தானா…? இல்லை.
2.35 வயதுக்குள் தான் திருஞானசம்பந்தர் உடலை விட்டுப் பிரிந்தது.

ஆனால் எங்கே சென்றது…?

1.விஷத்தை முறித்திடும் உணர்வுகளைத் தன் தாயின் வழியில் பெற்ற பின்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வு பெற்று முழுமை அடைகின்றான்… ஒளியின் சரீரம் பெறுகின்றான்.

இதை ஏன் சொல்கிறோம்…? என்றால்
1.நாமும் இந்த உடலில் நீடித்த நாள் இருக்கப் போவதில்லை.
2.நீடித்த நாள் வாழ்வது என்பது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைவது தான்.

நெருப்பிலே ஒரு மனிதன் குதித்தால் உடல் தான் கருகுகின்றது… ஆனால் உயிர் அழிவதில்லை. காரணம் அது வேகா நிலை பெற்றது.

அதே சமயத்தில் அகண்ட அண்டத்தில் வரக்கூடிய எத்தகைய விஷத்தின் தன்மையும் துருவ நட்சத்திரத்தை அழிக்க முடியாது. ஏனென்றால் அது விஷத்தை ஒளியாக மாற்றும் சக்தி பெற்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெற்றால் நாமும் வேகா நிலை அடையலாம். அதற்குத் தான் இந்த உபதேசமே…!

April 17, 2023

காற்று மண்டலத்திலிருந்து நாம் நுகர வேண்டிய சில உன்னதமான சக்திகள்

அகஸ்தியன் தன் வாழ்நாளில் தீமைகளை நீக்கினான். தாய் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் அவன் கருவிலே பெற்றது கருவிலே பெற்ற உணர்வின் துணை கொண்டு தான் அருள் ஞானமே அவன் பெறுகின்றான்.

விஷத்தை முறிக்கும் ஆற்றலைப் பெற்றுப் பிறந்த பின் அவன் உடலில் இருந்து வரக்கூடிய மணத்தைக் கண்டு மற்ற உயிரினங்கள் அஞ்சி ஓடுகின்றது. இவன் தீமையிலிருந்து விடுபடுகின்றான்.

விஷத்தின் தன்மை முறிக்கும் சக்தி இவன் உடலில் இருப்பதனால் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது அந்த விஷங்கள் பிரிகின்றது. விஷங்களைப் பிரிக்கப்படும் பொழுது எப்படி ஒளிக் கற்றைகளை வெள்ளிக்கோள் எடுத்துக் கொள்கிறதோ அது போல்
1.மின்னலில் இருந்து வரக்கூடிய அந்த உணர்வின் ஒளிக் கற்றைகளை அகஸ்தியன் நுகர்கின்றான்
2.தன் உடலுக்குள் இருக்கும் அணுக்களில் அதைச் சேர்த்துக் கொள்கின்றான்.

ஏனென்றால் 27 நட்சத்திரங்களும் கடும் விஷத்தன்மை கொண்டதாக இருந்தாலும் மோதலில் விஷத்தைப் பிரித்து விட்டு ஒளியின் உணர்வாக வரப்படும் பொழுது அதனை அகஸ்தியன் நுகரும் தன்மை வருகிறது.
1.அப்படி நுகர்ந்த உணர்வுகள் தான்
2.அவன் உடலுக்குள் உயிரைப் போன்றே உணர்வின் தன்மை பெறுகிறது.

27 நட்சத்திரங்களும் ஆண் பெண் என்ற துடிப்பின் நிலைகள் வரும் பொழுது தான் உயிரின் தன்மை ஈர்க்கும் தன்மை வருகின்றது.

27 நட்சத்திரங்களின் சக்திகளை ஒன்றாக இணைத்திடும் உணர்வுகளைத் தெரிந்து கொண்ட பின் அதை நாம் எப்படி மாற்ற வேண்டும்…? ஒன்றாக உடலில் இணைக்க வேண்டும்…! என்று அறிந்து கொண்டவன் அகஸ்தியன்.

வியாழன் கோள் 27 நட்சத்திரங்களுடைய சக்திகளை ஒன்றாகச் சேர்த்து குருவாக இருந்து மற்றவைகளுடன் சேர்த்துக் கலவையாக மாற்றுகின்றது என்பதையும் அகஸ்தியன் அறிந்து கொள்கிறான்.

அதே சமயத்தில்
1.நம் உயிரும் வியாழனாக (குருவாக) இருக்கின்றது
2.ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் எல்லாவற்றையும் ஒன்றாக்கிச் சேர்த்துக் கொண்டால் தனுஷ்கோடி
3.தீமைகளை நீக்கும் உணர்வினைச் சேர்த்து பகைமைகள் நமக்குள் வராதபடி உயிருடன் ஒன்றி ஒன்றாக்கப்படும் பொழுது
4.எல்லாம் ஒன்றாகச் சேர்க்கும் பொழுது “கோடி…!”
5.உயிர் ஒன்றாகின்றது… ஒளி என்ற உணர்வு ஆகின்றது.

இராமாயணத்தில் எண்ணத்தைக் கொண்டு (உணர்வுகள்) வாழ்க்கை எப்படி நடத்துகிறோம்…? என்று தான் காட்டப்பட்டுள்ளது. நமக்குள் எண்ணங்கள் எப்பொழுதும் உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றது. குருக்ஷேத்திரப் போராக உயிரிலே வழி நடத்திக் கொண்டுதான் இருக்கின்றது.

ஆகவே இந்த உடலுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளைத் தான் காவியங்களாகப் படைத்துச் சாஸ்திரங்களாகக் காட்டினார்கள் ஞானிகள்.
1.நாம் எதை எதைத் தவிர்க்க வேண்டும்…?
2.எதை எதை வளர்க்க வேண்டும்…? என்ற உண்மைகள் உணர்த்தப்பட்டது.

அகஸ்தியன் தாய் கருவில் சிசுவாக இருக்கப்படும் பொழுது பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் அவருடைய தாய் தந்தையர்கள் படுத்திருக்கும் இடங்களில் பரப்பி வைத்திருந்தனர். அந்த மணங்களை எல்லாம் தாய் நுகர்கின்றது… அப்போது விஷத்தை முறிக்கும் தன்மை வருகின்றது.

உதாரணமாக… ஒரு பச்சிலையைக் கையில் வைத்துக் கொண்டால் விஷம் கொண்ட நம்மைக் தேள் கொட்டுவதில்லை கீழே போட்டால் உடனே கொட்டிவிடும்.

ஒரு பச்சிலையைக் கையில வைத்துக் கொண்டால் விஷமான பாம்பும் நம்மைத் தீண்டாது. ஒரு பச்சிலையைக் கையில் வைத்துக் கொண்டால் தேனீக்களும் கொட்டாது.

இது போன்ற உண்மைகளைக் கண்டுணர்ந்த அகஸ்தியனுடைய தாய் தந்தையர் பல விஷ ஜந்துக்களிடமிருந்தும் தங்களைக் காத்துக் கொண்டார்கள்.

மின்னல் தாக்கப்படும் பொழுது அது உடலில் தாக்கப்பட்டால் கருக்கிவிடும். ஆக மொத்தம் அந்த மின்னலின் விஷத்தன்மையை அடக்குவதற்கும் அனுபவரீதியாகப் பச்சிலைகளைக் கண்டறிந்து இரவிலே படுத்துத் தூங்கும் பொழுது அதைப் பரப்பி வைத்துக் கொள்வார்கள்.

அதே சமயத்தில் வெளியிலே செல்லும் போது அந்த மின்னல்களில் இருந்து தப்புவதற்காக
1.பச்சிலைகளைக் குப்பிகளில் போட்டு உடலில் அணிகலன்களாகப் போட்டுக் கொள்வார்கள்.
2.சில கல்லின் (கற்கள்) தன்மை அரைக்கப்பட்டு விஷத்தின் தன்மை நீக்கும் அத்தகைய பாசிகளையும் கழுத்திலே போட்டுக் கொள்வார்கள்.
3.எங்கே சென்றாலும் மின்னல்கள் பாய்ந்தால் தன்னைத் தாக்காதபடி காத்துக் கொள்வதற்கு அக்காலங்களில் இப்படி எல்லாம் செயல்படுத்தினார்கள்.

குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டிற்குள் அழைத்துச் செல்லப்படும் பொழுது அன்று வாழ்ந்த மனிதர்கள் இந்த உபாயங்களை எப்படித் தெரிந்து கொண்டார்கள்…? பச்சிலைகள அனுபவபூர்வமாக எப்படிப் பயன்படுத்தினார்கள் என்று காட்டுகின்றார்.

அகஸ்தியன் தாய் தந்தையர் வாழ்ந்த காலத்தில் அவர்கள் நுகர்ந்த உணர்வுகளும் அவர்கள் உடலில் விளைந்த உணர்வுகள் மணங்களாக வெளிப்பட்டது அனைத்தும் சூரியனால் கவரப்பட்டு இன்றும் இந்தப் பூமியில் உண்டு.
1.அதைப் பெறச் செய்வதற்கு குருநாதர் எனக்கு இப்படிக் கொண்டு வந்தார்
2.உங்களுக்குள்ளும் இதைப் பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதைப் பதிவாக்குகின்றேன்
3.பதிவானதை நினைவு கொண்டால் உங்கள் எண்ணம் இந்தக் காற்றிலிருந்து அந்த உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்யும்

அக்கால ஆச்சாரத்தையும் அனுஷ்டானங்களையும் காட்டுவதைவிட ஆத்ம வலுவைக் கூட்ட “இன்று அனுஷ்டிக்க வேண்டிய முறை முக்கியமானது...”

ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் நாம் எடுக்கும் சுவாசத்தால் ஆத்ம அலையின் தொடர்பு கொண்டுதான் சரீர இயக்கச் செயலினால் ஆத்மாவின் வலுவும் கூடிக் கொண்டே உள்ளது.

இயற்கையின் மாற்றக் குணங்களும்… உருவாகும் ஒவ்வொரு சக்தியுமே…
1.நொடிக்கு நொடி மாற்ற உராய்வு வளர்ப்பு தன்மையில் தான் மாற்றமும் வளர்ப்பும்
2.சுழற்சி ஓட்டத்தில் எல்லா வகை குண வளர்ப்பு முறையிலும் வளர்ந்து கொண்டுள்ளது.

காட்சி:-
அடர்ந்த காட்டுப் பகுதியில் மேடான மலைப் பகுதி தெரிகிறது. அதிலே மலையும் பாறைகளும் தெரிகிறது. மலையும் பாறையும் சேர்ந்து இருந்தாலும் ஓரிடத்தில் “மிகப் பெரிய பாறை ஒன்று” நிற்பதைப் போன்றும் தெரிகின்றது.

பிறிதொரு இடத்தில் அழகான குளமும் அக்குளத்தின் நீர் பாசி படிந்த கிளிப் பச்சையும் நிறம் போலவும் அப்பச்சையின் நிறம் மாறி மாறி கரும் பச்சையைப் போலவும் அதைச் சுற்றிச் சுற்றி மேலும் சில செடி கொடிகள் வளர்வதைப் போன்றும் தெரிகிறது.

பிறிதொரு இடத்தில் ஏற்றம் இறைக்கும் கிணறு இருக்கின்றது அதிலே நீர் உயர்ந்து குறைந்து இருப்பதைப் போன்றும் ஆனால் நீரின் நிறம் தெளிவு கொண்ட நீராகவும் காட்சியில் தெரிகின்றது.

இதன் விளக்கம் என்ன…?

பூமியின் பிடிப்புள்ள பாறைக்கும் அதற்கு மேல் பிடிப்பற்ற… அதாவது
1.பூமியின் வளர்ப்பு நிலையிலிருந்து மாறி
2.ஒரு பாறையின் மேல் ஒரு பாறை நிற்கின்றது என்றால்
3.அப்படி நிற்கும் நிலை எப்படி ஏற்படுகின்றது…?

பூமியின் வளர்ப்புப் பிடியுடன் வளரும் பாறைகள் இப்பூமியில் ஏற்படும் பிரளய காலங்களில்
1.சில மண்டல ஓட்டங்களின் சேர்க்கைக் காலங்களிலும்
2.பூமி ஈர்க்கும் அமில மாற்றத்திலும்
3.பூமி ஈர்த்து வெளிக் கக்கும் உஷ்ண அலையின் அமில வளர்ப்பில் அந்தந்த இடங்களில் வளரும்
4.கனி வளங்களுக்கும் கல் மண் இவற்றின் வளர்ப்பு நிலைகளுக்கும்
5.அதற்குக் கிடைக்கப் பெறும் ஊட்டச் சத்து மாறுபட்டவுடன்
6.பழக்கப்பட்டு எடுத்த வளர்ப்பு நிலை குன்றிய நிலையில் அக்கல்களில் சில வெடிப்பு நிலைகள் ஏற்பட்டு விடுகின்றது.

ஆகவே வளர்ந்த நிலையில் அதனுடைய சக்தி கிடைக்காமல் தடைப்பட்ட பின் அதன் தன்மை அதே நிலையிலேயே வெடிப்புப் பெற்று கீழிருந்து வளரும் பாறையின் மேல்… இப்பாறைகள் கரடு முரடாக… மலைகளில் ஒன்றுக்கு மேல் தனித் தனிப் பாறைகளாக உருண்டு நிற்கின்றன.

ஆனால் பூமியின் பிடிப்புடன் வளரும் பாறை மாறு கொண்ட வளர்ப்புடனே வளர்ந்து கொண்டுள்ளது.

நீரின் நிலை பாசி படர்ந்து வண்ணங்கள் மாறி தெரிந்ததன் நிலையும் இதைப் போன்றே ஒவ்வொரு நொடிக்கும் மாறும் உஷ்ண வெக்கையின் ஆவி நிலைக்கொப்ப மாற்றத் தன்மைகள் வருவதால் தான்.

இத்தகைய இயற்கையின் உண்மைகளை எல்லாம் எப்படி இதைப் போன்று அறிகின்றோமோ அதைப் போன்று தான் வளரும் மனித ஆத்ம வளர்ப்பிலும் மாற்றங்கள் உண்டு.

இப்பூமியின் பிடியுடன் வாழும் தன்மையில்… மாறி மாறி வளர்ந்து கொண்டுள்ள இயற்கையின் சுழற்சியில்… ஒன்றை ஒத்த தன்மையில் ஒன்றில்லாத உலகச் சுழற்சி நிலையில்
1.பல கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த மனிதனின் வளர்ப்பு ஞானமும்
2.பத்தாயிரம் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த சித்தர்கள் பெற்ற ஞான சக்திக்கும்
3.இன்றைய வளர்ந்த கலியின் ஆத்ம ஞான சக்திக்கும் மிக மிக மாறுபாடுகள் உண்டு.

இன்றைய விஞ்ஞான காலத்திலும்
1.நம் செயலும் இயற்கையுடன் ஒன்றிச் சென்றுதான் ஞான சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தின் ஈர்ப்பைச் செலுத்தி
2.ஆசார அனுஷ்டானங்களை வலியுறுத்தி வகைப்படுத்தித்தான் எண்ணத்தைச் செலுத்தி வழி பெற வேண்டும் என்று உணராமல்
3.இக்கலியின் காலத்தில் மனித ஈர்ப்புத் துரித அறிவாற்றலின் சக்தியை
4.இக்கால நிலையின் சுழற்சியுடன் கலந்துள்ள தன்மையிலிருந்தே
5.அவரவர்களுக்கு அமைந்த வாழ்க்கையின் வளர்ப்பில் ஒவ்வொரு செயலிலுமே உயர்வின் ஞானத்தைச் செலுத்தி
6.ஆத்மாவின் வலுவுக்கு வலுக் கூட்டும் வழி முறையை வகுத்துக் கொள்ளுங்கள்.

April 16, 2023

குரு வழியில் எத்தகைய மின்னலையும் நமக்குள் ஒளிக் கதிராக மாற்றும் பழக்கம் வர வேண்டும்

சந்தர்ப்பத்தில் தீமையான உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது நமது உயிர் உடலுக்குள் அதைக் கருவாக்கி உருவாக்கி விடுகின்றது… பிரம்மமாக மாறுகின்றது… உடலாக மாற்றுகின்றது.

அதே சமயத்தில்
1.அருள் ஒளியின் உணர்வைப் பெற வேண்டும் என்று ஏங்கி
2.அதை நமக்குள் செலுத்தினால் அது கருவாகி உருவாகின்றது பிரம்மமாக.
3.தீமையை அகற்றிடும் அருள் ஒளியின் உணர்வாக உயிர் நமக்குள் உருவாக்குகின்றது.

மனிதன் ஆறாவது அறிவு கொண்டு தீமையற்ற தீமை அகற்றிய அருள் ஞானியின் உணர்வை நாம் நுகரக் கற்றுக் கொண்டால் நமக்குள் அது கருவாகின்றது… இந்திரீகமாக மாறுகின்றது… அதுவே அணுவாக மாறுகின்றது.

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து பழகி விட்டால் “அதன் இனத்தை ஒளியின் உணர்வாகப் பெருக்கத் தொடங்குகிறது…!” எப்படி…?

பல நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அது மின்னலாகப் பரவுகின்றது. அதிலே ஒளிக்கதிர்கள் பரவுகின்றது.
1.உயிருடன் ஒன்றி நாம் அதை நுகரப்படும் பொழுது உடலில் இருக்கக்கூடிய அணுக்கள்
2.அந்த ஒளியின் கதிரை உணவாக உட்கொண்டு அந்த அலையாக நமக்குள் மாற்றப்படுகிறது.
3.ஏனென்றால் குரு காட்டிய அருள் வழியில் அந்த மின்னலையும்
4.அதிலிருந்து வரக்கூடிய உணர்வை உணவாக எடுக்க உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

ஒருவன் கடும் வேகமாகப் பாதிக்கும் உணர்வுகளை வெளிப்படுத்திய பின்… சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்த பின்… நாம் கண் கொண்டு உற்றுப் பார்த்தால்… அதை நுகர்ந்தால்… நமக்குள் வேதனைப்படும் உணர்வுகள் மின்னலைப் போன்று மற்ற அணுக்களைத் தாக்கி விடுகின்றது… அது ஒடுங்கி விடுகின்றது… பதறுகின்றது… சிறிது நேரம் சிந்தனை இழந்து விடுகின்றது.

இதைப் போல் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது உற்றுப் பார்த்தால் இந்த ஒளியின் தன்மை மின்னினாலும்… அடுத்த கணம் மின்னல் இல்லையென்றால் நமக்குள் இருண்ட நிலையே வருகின்றது.

இதைப் போன்று மீண்டும் மின்னலின் உணர்வுகள் வரும்போது ஒளியின் கதிராக மாறுகின்றது. ஆகவே உங்களுக்குள் யாம் (ஞானகுரு) பதிவு செய்த உணர்வுகள் கொண்டு
1.எத்தகைய மின்னல் வந்தாலும் நேரடியாக அதைப் பார்க்காதபடி மின் கதிர்கள் வெளி வருவதை… அந்த ஒளியைப் பாருங்கள்.
2.தியானித்த உணர்வு கொண்டு ஒளியின் கதிராக மாற்றும்.
3.நாளடைவில் எத்தகைய மின்னல்கள் வந்தாலும் உங்களுக்குள் இனிமையானதாக மாறும்.
4.அது வலுப்பெறப்படும் பொழுது எங்கிருந்து எதைச் செய்தாலும் மின் கதிரின் ஓட்டங்கள் நமக்குள் வரும்
5.நம்முடைய எண்ணங்களை எதிலே பாய்ச்சினாலும் அதன் உணர்வுகள் தொடரும்.

ஆக… அருள் ஒளி பெற்று அருள் ஞானத்தைப் பெருக்கும் அந்த அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் சக்தியை நாம் பெறுதல் வேண்டும். ஆறாவது அறிவு கொண்டு… அறிந்திடும் அறிவைக் கொண்டு… குருநாதர் காட்டிய வழியில் எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற நிலையை வாழ்ந்து காட்டுதல் வேண்டும்.
1.நஞ்சை வென்றிடும் திறன் பெற வேண்டும்
2.அருள் ஒளி கூட்டும் ஒளியின் சரீரமாக மாற்றும் நிலை பெற வேண்டும்.

இதுவே வாழ்க்கையாகும் பொழுது வாழ்க்கையில் வரக்கூடிய சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ மற்ற தீமைகளைக் கேட்டு உணர்ந்தாலும்… அந்தப் பகைமைகள் நமக்குள் வந்து விடாது… ஒருமைப்பட்ட நிலையில் கொண்டு சுவைமிக்க உணர்வாக இந்த வாழ்க்கையில் உருவாக்கிடல் வேண்டும்… பிறவி இல்லா நிலையை அடைய வேண்டும்.