ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 28, 2014

உடல் வலு பெற்றது மிருகம், எண்ண வலு பெற்றவன் மனிதன் - விநாயகா

விநாயகருடைய தத்துவம் என்னவென்றால் நாம் பலகோடி சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி மனிதனாக உருவாகி இருக்கின்றோம் என்பதனை நம்மை நாம் அறிந்துகொள்வதற்காக விநாயகரை வைக்கின்றார்கள்.

விநாயகருக்கு ஆதிமூலம் என்ற பெயரும் உண்டு. ஆதிமூலம் என்ற உயிர் ஒரு உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டபின் அந்த உணர்வுக்கொப்ப உடலாகின்றது. சிவமாகின்றது.

உடலானபின் எந்த குணத்தை நுகருகின்றதோ அது வினையாகின்றது. வித்தாகின்றது. அந்த வித்தின் உணர்ச்சிக்கொப்ப உடலாகின்றது. அதற்குத் தகுந்த எண்ணமாகின்றது.

இந்த உயிர் எந்த சத்தை நுகர்ந்ததோ
அது சிவனுக்கு முந்தியது.
அந்த உணர்வின் தன்மை உறையும் பொழுது சிவமாகின்றது (உடலாகின்றது).

உறைவதற்கு முன் சக்தியாக இருக்கின்றது. அந்த சக்தியை நுகரப்படும்பொழுது வினையாகின்றது. ஒரு வித்தாக மாறுகின்றது. வித்தாக உடலாக மாறும்பொழுது சிவனின் பிள்ளை விநாயகன்.

வினைக்கு நாயகனாக உணர்வை நுகரப்படும்பொழுது மூசிக வாகனா. நாம் எந்த குணத்தை நுகருகின்றோமோ அந்த உணர்வுகள் இந்த வாழ்க்கையை நடத்துகின்றது.

தன்னைக் காட்டிலும் வேதனையான உணர்வுகளை நுகர்ந்தால் கணங்களுக்கு அதிபதியாகி நல்ல அணுக்களைக் கொல்கின்றது. அதன் வழிக்கு நல்ல குணங்கள் அடிபணிகின்றது.
வேதனைப்படுத்தும் உணர்வுகள் வலுவாகின்றது.
இப்படித்தான் பலகோடி சரீரங்களைப் பெற்றோம்.

பலகோடி சரீரங்களிலும் தீமையை நீக்கிடும் உணர்வை சேர்த்துச் சேர்த்து வலுவான யானையானது என்பதனைக் காட்டுவதற்கு யானையின் தலையைப் போடுகின்றார்கள்.

யானையாக இருக்கும்போது உடல் வலுவால் எது வந்தாலும் அதிலிருந்து தப்பிக்கும் எண்ண வலுவைப் பெறுகின்றது.

இவ்வாறு தப்பிக்கும் எண்ண வலுவை பெறும்பொழுது அந்த உணவின் தன்மை உடலில் விளைகின்றது. இவ்வாறு உடலில் சேர்த்துக்கொண்ட வினைகளுக்கு நாயகனாக மனித உடலைப் பெறுகின்றது.

உடல் வலு பெற்றது யானை. யானை உடலில் வலு இருக்கும் வரையிலும் எதையும் தூக்கும். வலு இழந்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

மனிதன் தன் எண்ண வலுகொண்டு
பத்தாயிரம் டன் வலு கொண்டதையும்
வானவீதியில் தூக்குகின்றான்.
எண்ண வலு பெற்றவன் மனிதன்.

உடல் வலு பெற்றது மிருகம். எண்ண வலு பெற்றவன் மனிதன். இதைத் தெரிந்து கொள்வதற்குத்தான் விநாயகனை வைக்கின்றார்கள்.

November 27, 2014

தாகத்திற்கு தண்ணீர் குடிப்பது போன்று துன்பத்தைப் போக்க துருவ நட்சத்திரத்தை எடுத்துப் பழகுங்கள்.

நான் இதையெல்லாம் என்ன செய்யப்போகின்றேன்.
இந்த வேலை இருக்கிறது.
அந்த வேலை இருக்கிறது என்று இல்லாதபடி
எந்த வேலை இருந்தாலும் சரி
நீங்கள் துருவ நட்சத்திரத்தைப் பத்து நிமிடம் நினைத்தால்போதும்.

அந்தத் துன்பத்தைத் துடைப்பதற்கு “ஓம் ஈஸ்வரா” என்று உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள். மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள். என் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உடலுக்குள் திணியுங்கள்.

எத்தனை நிமிடம் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
எத்தனை நிமிடமானாலும்
தாகத்திற்கு தண்ணீர் குடிப்பது போன்று
உங்கள் துன்பத்தைப் போக்குவதற்கு இதே மாதிரி
துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுத்துப் பழகுங்கள்.

ஐய்யய்யோ..,! எனக்கு இப்படி வேதனையாக இருக்கிறதே. அவன் இப்படிப் பண்ணுகிறானே,  அப்படிப் பண்ணுகிறானே, என்று எண்ணுகிற நேரத்தில், மகரிஷிகளின் அருள் ஒளியை நாங்கள் பெறவேண்டும் என்று சுவாசியுங்கள்.

அதற்காக வேண்டி ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை உங்கள் கையிலே கொடுத்திருக்கின்றேன். உங்களை நீங்கள் நம்புங்கள்.

ஏனென்றால் இன்று கடைசி எல்லையிலே நாம் இருக்கின்றோம். இன்று நாம் உட்கார்ந்த இடத்திலே விஞ்ஞான அறிவாலே எதுவும் எந்த நிமிடமும் நடக்கும்.

ஏனென்றால் அங்கிருந்து லேசர் கதிரியக்கத்தை நாம் ஒளிபரப்பும் ஒளிபரப்புக்குள் மனிதனுடைய உணர்வை ஒத்து, அதைச் செயலாக்கும் திட்டத்திற்கே வந்துவிட்டார்கள்.

அதனால்தான் இப்பொழுது அணுகுண்டையெல்லாம் எங்கே மறைத்து வைப்பது? செய்ததை எல்லாம் எங்கே வைப்பது? என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று காற்று முழுவதும் நச்சுத்தன்மை அடைந்துவிட்டது.
நீர் நிலைகளெல்லாம் கெட்டுவிட்டது.
மனித உணர்வுக்குள்ளும் விஷத்தன்மை வளர்ந்துவிட்டது.
மனித இனத்தை காக்க முடியாத நிலைகள் வந்துவிட்டது.
இக்கட்டான நிலைகளில் இருந்து கொண்டிருக்கின்றோம்.
விண்வெளியின் நிலையும் மோசமாகிவிட்டது.

சூரியனிலிருந்து வரும் காந்த அலைகளிலிம் விஷம் கலந்து வருகின்றது. கோள்களிலும் பல நிலைகள் உருவாக்கக்கூடிய தன்மை வந்துவிட்டது. ஆக பிரபஞ்சமே நச்சுத்தன்மை ஆகின்றது.

இதையும் ஊடுருவி விஞ்ஞானம் மற்ற பிற மண்டலங்களுக்குப் போகும் தன்மை வந்துவிட்டது. பிற மண்டலங்களுக்குச் சென்று விட்டால், மிக துரித நிலைகள் கொண்டு நமது பிரபஞ்சத்தின் தன்மை மாறுபடும்.

பிற மண்டலத்திற்கு போவதற்குமுன் மனிதனுடைய சிந்தனை அனைத்துமே முழுமையாக அழிந்து போகும் நிலை வந்துவிட்டது.

ஆகையினாலே, இதிலிருந்து நாம் அடுத்து கல்கி யுகத்தில் நிற்க வேண்டும். நம்முடைய மூச்சலைகள் அடுத்த சந்ததிகளை வளர்க்க வேண்டும்.

முன்பு வாழ்ந்த ரிஷிகளைப் பற்றி நாம் சொல்லுகின்றோமல்லவா? இதைப்போன்று எதிர்காலத்தில் நாம் அடுத்து வரும் சந்ததிகளைக் காக்கும் வல்லவர்களாக ஆகவேண்டும். நமக்குள் அந்த வல்லமை பெறவேண்டும்.
இந்த உடலைவிட்டுச் சென்றால்
அந்த மெய் ஒளியுடன் நாம் அனைவரும் இணைய வேண்டும்.

November 26, 2014

துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்தியைப் புருவ மத்தியிலிருக்கும் உயிரிலே உராயச் செய்யுங்கள்

சாதாரணமாக உங்கள் புலனறிவு கொண்டு நேரடியாக சப்தரிஷி மண்டலங்களைப் பார்க்க முடியாதென்றாலும், சூரியனுடைய கதிரியக்கங்கள் சந்திரனிலே படுகின்றது.

இதை நீங்கள் ஊடுருவி,
இந்த உணர்வின் தன்மையைக் குறுக்கீடு செய்து
உங்கள் உயிரின் தன்மைகொண்டு அந்த காந்த அலைகளைப் பரப்பி
பௌர்ணமி தியானத்தன்று அந்த மெய்ஞானிகள் கண்ட வழிகளிலே
சப்தரிஷிமண்டல அலைகளினுடைய தன்மையைப் பெறச் செய்வதற்குத்தான் இதைச் செய்கின்றோம்.

ஏனென்றால் விஞ்ஞானிகள் எந்தெந்தப் பருவத்தின் நிலைகளில் அந்தந்த அணுக்களைப் பரப்பச் செய்கின்றார்களோ, அதே போன்று மெய்ஞானிகள், நமது குருநாதர் காட்டிய அருள்வழி கொண்டு நமக்குள் இந்தத் தெளிவைப் பார்க்கும்போது, காந்த அலைகள் தொடர்ந்து வருகின்றது.

அந்த காந்த சக்தியின் தன்மையை நமக்குள் பெற்று, உணர்வின் அலைகள் கொண்டு பௌர்ணமி நாளில் நாம் பார்க்கப்படும்போது, இதே உணர்வின் ஆற்றலின் தன்மைகள் ஊடுருவுகின்றது.

அப்பொழுது அந்த சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளியை நீங்கள் பெறவேண்டும் என்ற ஆசையிலே உங்கள் உணர்ச்சிகளை தூண்டச்செய்து, அந்த உணர்வலைகளை நீங்கள் பெறும் தகுதியை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

உதாரணமாக ஒருவன் உங்களை அடிக்க வருகிறான் என்றால் அடிக்க வருகின்றான்..., ஆ.., என்று சொல்கின்றோம்.

தாக்க வருகின்றான் என்றால் ஆ.., என்று சொல்லும்போது உங்கள் உணர்வலைகள் எப்படித் துடிக்கின்றதோ, இதே போலத்தான் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரும் ஆற்றலை நீங்கள் பெறக்கூடிய அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்குத்தான் இந்த உபதேசம்.

வெறும் வாயிலே படித்து எடுத்துக் கொள்வோமென்றால் ஒன்றும் முடியாது.

யானையைப்  பண்ணுவேன் பூனையைப் பண்ணுவேன் என்றால் அந்த நிமிடத்திற்குச் சரியாக இருக்கும். அதன்பின் ஒன்றும் இருக்காது. இதையெல்லாம்
உங்கள் உடலுக்குள் உணர்ச்சியின் நிலையைத் தூண்டச் செய்து
இந்த உணர்வாலே நீங்கள் சுவாசித்து
இந்த உமிழ்நீரின் சக்தியை உங்கள் உடலுக்குள் சேர்த்து
இந்த உணர்வின் தன்மையை உங்கள் உயிரிலே உராயச் செய்து
இந்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பெருக்கச் செய்தால் ஒழிய
இந்த உணர்வின் ஆற்றலைப் பெறுவது என்பது
அவ்வளவு சாதாரணமானதல்ல.

சாதாரண மக்களாக இருந்தாலும் குழந்தையாக இருந்தாலும், துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் உராயவிடும் பொழுது உங்களுக்குள் அந்த சக்தி பெறுகின்றது.

ஒவ்வொரு சந்தர்ப்பமும் நமக்குள் நாம் சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவர்கள்.

மனிதனானபின், நாம் எதையும் நம் உணர்வாலே எடுத்து சமப்படுத்தும் ஆற்றலின் தன்மையை நாம் எடுத்து உணர்ந்த அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் பெருக்கப்படும் பொழுது
ஆற்றல்மிக்க சக்தியை நமக்குள் பெருக்க முடியும்.
உங்களை நீங்கள் நம்பவேண்டும்.

November 25, 2014

உலக மாற்றத்தின் உண்மைகளை இனிமேல் விஞ்ஞானிகள் நாள்... நேரம்...எல்லாம் குறிப்பிட்டுச் சொல்வார்கள்...!

விஞ்ஞானிகளால் அணுவின் ஆயுதங்களினுடைய தன்மையும், துரித நிலைகள் கொண்டு எலக்ட்ரானிக்கும், துரித வேக நிலைகளில் இந்த உணர்வலைகளையும் கண்டுணர முடிந்தது.

இப்படி அலைவரிசையில் தான் கண்டுணர்ந்தாலும் அநேகமாக குண்டுகளினுடைய நிலைகள் பூமியை நீர்மூலமாக்குவதற்கு,
இன்று இந்த மணலைப் போன்றே உலகம் முழுவதுமே உருகி
அப்படியே கரைந்து ஓடக்கூடிய நிலைகளுக்கு
அணுகுண்டுகள் இந்த பூமியில் இருக்கின்றது.

ஏக காலத்தில் அது வெடித்தால் போதும், ஒவ்வொரு மண்ணுக்குள்ளும் இருக்கக்கூடிய கதிரியக்கங்கள் அது உருகிப் புயலாக மாறி விண்ணிலே இது ஆவியாகப் பறக்கும் நிலைகளுக்கு இன்று ஒவ்வொரு விஞ்ஞானியும் கண்டுபிடித்துவிட்டார்கள்.

இவையெல்லாம் விஞ்ஞானிகள் வெளியிலே சொல்லவில்லை. இன்று யாம் சொல்லியிருக்கின்றோம்.
1.“குறித்து வைத்துக் கொள்ளுங்கள்”,
2.,பூமிக்கடியில் எரிமலைகள் அதிகமாகி நெருப்புக் குழ்ம்பாகிவிட்டது
3.பனிப் பாறைகள் எல்லாம் உருகிக் கடல்கள் பெருகும்
4.கடலோர ஊர்கள் எல்லாம் நீருக்குள் மூழ்கும்
5.பூமியின் அச்சு மாறப் போகின்றது என்று
6.இனி ஒவ்வொன்றாக வரிசையாகச் சொல்லிக் கொண்டு வருவார்கள்
7.இத்தனாவது நாள் இத்தனை மணி என்றே சொல்வார்கள்...! .

அணுக் கதிரியக்கங்களினால் இன்று உலகம் முழுவதற்கும் சிதறுண்டு போகக்கூடிய நிலைகளுக்கு வந்துவிட்டது.

இப்படிச் சொல்கின்றாரே...! என்று நினைப்பதற்குப் பதில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். யாம் இருபது முப்பது வருடங்களுக்கு முன் சொன்னதெல்லாம் இன்றும் வந்து கொண்டே இருக்கின்றது. முதலில் சொன்னது சிறிதளவே.

இன்று மனிதர்களாக இருப்பவர்கள் என்னதான் சத்தியத்தைப் பேசினாலும் தர்மத்தைப் பேசினாலும் எனக்குத் தியானம் இருப்பதற்கு நேரமில்லை என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

அப்படியே தியானமிருந்து சக்தி கிடைத்தாலும் கூட அதையும் கொஞ்ச நாளில் விட்டு விட்டுச் செல்வதற்குத்தான் இருப்பார்கள். இப்படித்தான் இருக்கின்றோம்.

எவ்வளவு சிரமப்பட்டுக் கொடுத்தாலும் கூட அதை விட்டுவிட்டுச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

யாம் ஒவ்வொரு நிமிடமும் உங்களைக் காப்பதற்காக வேண்டி நமது குருநாதர் காட்டிய முறை கொண்டு சில உணர்வுகளினுடைய நிலைகளில் தொடர்பு கொண்டே வந்து கொண்டிருக்கின்றோம்.

நம்முடன் இணைந்தவர்களுக்கு 
1.எப்படிக் குருநாதர் எமக்குத் தெரியாமல் எமக்குள் பல சக்திகளைக் கூட்டினாரோ
2.அதே மாதிரிதான் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு 
3.ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குத் தெரியாமலே பல சக்திகளை ஊட்டிக்கொண்டே இருக்கின்றேன்.

யாம் ஒவ்வொரு நிமிடமும் பேசுவது வெறும் பேச்சல்ல. எமது குருநாதர் தொடர்பு கொண்ட அந்த உணர்வின் தொடர்பு கொண்டு அந்த ஒளிகளை உங்களுக்குள் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றோம்.

நீங்கள் பயன்படுத்திக் கொண்டால் இந்தச் சுழற்சியில் இருந்து தப்பலாம். இல்லை. நாளைக்கு நடப்பதை யார் அறிவார் என்று எண்ணிக் கொண்டு வாழ்ந்தால் அடுத்த சுற்று இந்தப் பிரப்ஞ்சத்தில் மனித உருக்கள் எந்தக் கோளில் எப்பொழுது உருவாகுமோ என்று சொல்ல முடியாது...!

அது வரை எடுத்துக் கொண்ட வேதனை உணர்வுடன் ஒரு ஐஸ் பெட்டிக்குள் வைக்கப்பட்ட உயிரணு போல் துடித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். 

November 24, 2014

நுண்ணிய நிலைகளில் உங்களைச் சீர்படுத்தும் மகரிஷிகளின் ஆற்றல்களைப் பெறச்செய்கின்றோம்

குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு, சப்தரிஷி மண்டலங்களின் தன்மையும் அதிலிருந்து வெளிப்படுத்திய நிலைகளும், எந்த ரிஷிகள் உணர்த்தினாரோ அந்த ரிஷிகளின் ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டுதான் யாம் கடும் ஜெபத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

அந்த ஆற்றல்மிக்க தன்மையை நமக்குள் செலுத்தி, நம்மையும் காத்து நாம் இடக்கூடிய மூச்சலைகளின் தன்மைகள் இந்த உலகத்தில் வரக்கூடிய விஞ்ஞான அறிவிலிருந்து நாம் காக்கும் நிலையாக நாம் மாற்ற வேண்டும்.

நம்மால் முடியுமா.,? என்ற சந்தேகத்தில் இருக்க வேண்டாம்.

நாம் எந்த உணர்வின் தன்மையை நாம் எடுத்து நமக்குள் உணர்வைச் செலுத்துகின்றோமோ, இந்த உணர்வின் ஈர்ப்பின் அலையே நமக்குள் செயல்படும்.

இன்று கம்ப்யூட்டர் நிலைகளை எடுத்துக் கொண்டாலும்
கடிகாரங்களில் எடுத்துக் கொண்டாலும்
நுண்ணிய அலையின் தன்மை கொண்டுதான்
ஒரு சீரான நிலைகளில் அதாவது எலக்ட்ரானிக் நிலைகளில்
அது தன்னுடைய உணர்வலைகளை செல்களில் பாய்ச்சியவுடன்
தன் உணர்வலைகளை சீராகச் செயல்படுத்துகின்றது.

அதைப்போன்று நம் எண்ணத்தில் சீராகச் செயல்படுத்திக்கொண்டால், நம் மனிதனுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் ஆற்றல்மிக்க செயல்களை நாம் எதையும் நமக்குள் அறிந்துணரும் செயல் வரும்.

ஆக நாம் இழிநிலையான உணர்வுகள் நம் புலனறிவின் நிலையும் நாம் எண்ணும் எண்ணமும் நம் உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் நிலையைப் பிரிக்க முடியாததை நாம் பிரிக்கச் செய்கின்றோம்.

அதாவது, பாலுக்குள் அந்த புளிப்பின் சத்தின் தன்மைகள் தனக்குள் இயங்காத நிலைகள் கொண்டு, பிரித்துப் போகாத வண்ணம் தனக்குள் ஐக்கியமாகி உறைந்தால்தான் அதற்குள் இருக்கக்கூடிய வெண்ணெயை எடுக்கமுடியும்.

ஆனால், பால் சூடாக இருக்கப்படும்போது பிரிக்கும் தன்மை வந்து விட்டால், பிரிப்பதற்குள் அந்த வெண்ணெயின் தன்மை கலந்துவிட்டால் வெண்ணெயைப் பிரிக்க முடியாது.

இதை ஒவ்வொருவரும் கவனமாகக் கவனிக்க வேண்டியது. யாம் எடுக்கும் இந்த உணர்வின் நிலைகள் உங்களுக்குள் பெறுவதற்கு, யாம் கடும் ஜெபத்தால் இந்த உணர்வின் அலையைப் பதியச்செய்கின்றோம்.

எண்ணத்தை வேறு பக்கம் கவனத்தைத் திருப்பிவிட்டு இந்த உணர்வின் உங்களுக்குள் அது தடைபடுத்தும் நிலைகளுக்கு இல்லாதபடி, உங்கள் புலனறிவிற்குள் மறைந்திருக்கக்கூடிய ஆற்றல்மிக்க நிலைகளை தட்டி எழுப்புகின்றோம்.

அதே சமயத்தில், உங்கள் உணர்வின் எண்ணங்களை மெய்ஞானியின் உணர்வுடன் தெம்பு கொள்ளச் செய்து இந்த உணர்வின் அலையை நீங்கள் பெருகச் செய்வதற்குத்தான் இதைச் செயல்படுத்துகின்றோம்.

ஆகவே, சரியான, சமமான தன்மையை நமக்குள் இணைக்கப்படும் போதுதான் ஆற்றல்மிக்க மெய்ஞானியின் அருளை நாம் பெறமுடியும்.

November 21, 2014

மூதாதையர்களை சப்தரிஷி மண்டலத்திற்கு நம்முடைய தூதுவர்களாக அனுப்ப வேண்டும்

ஒரு பொருளுக்குள் நல்ல சத்து இருந்தாலும் நீருக்குப் பதில் சீமை எண்ணெயைப் (KEROSENE) போட்டு விட்டால் என்ன செய்யும்? அதன் மணத்தை ஊடுருவும்.

அதைப்போல நமக்குள்ளே நல்ல சத்து இருந்தாலும் மேலே வாசனை மாறுப்பட்ட நிலைகளில் முலாம் பூசிவிட்டால் அது செயல்படுத்துவது போன்று நம்மையறியாமலே நமக்குள் தடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

இதைபோன்ற நிலைகளை நாம் மாற்றுவதற்கு அந்த மெய்ஞானியின் அருள் சக்தியைப் பெறுவதற்கு, நம் மூதாதையர்களை நாம் அவசியம் விண் செலுத்தியே ஆகவேண்டும்.

கூட்டு அமைப்புடன் இருக்கும் நாம்,
சப்தரிஷி மண்டலங்களுடன் நம் மூதாதையர்களை,
கடுமையான நிலைகளில் தியானமெடுத்து,
அவர்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும்.
அவர்கள் ஒளிசரீரம் பெற வேண்டும் என்ற உணர்வை,
உந்தி உந்தித் தள்ளிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஆக இந்த உணர்வின் நிலைகள் கொண்டு, அவர்கள் அதை ஜீரணிக்கும் ஆற்றல் பெறுகின்றனர்.

யாம் எதற்குச் சொல்கின்றோமென்றால்
முதலில் நாம் அவர்களை சுலபமாகச் செலுத்த வேண்டும்.
நம்முடைய தூதுவர்களாக எடுக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் உணர்வுகளை அவர்கள் சுவாசித்து அந்த உணர்வலைகளைப் பெருக்கியபின், நாம் சப்தரிஷி மண்டலங்களை எண்ணும்போது வலுவான நிலைகளிலே அந்த அலைகளை நாம் சுவாசிக்க முடியும்.

அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் எடுக்க எடுக்க இந்த உணர்வின் தன்மைகள் நமக்குள் சிறுகச் சிறுக வளர்ந்து கொண்டே வரும்.

அப்பொழுது, நாம் நல்லதைச் சிந்திக்க முடியாத நிலைகள் தடைப்படுத்தும் இந்த புவியின் ஈர்ப்புக்குள் இருக்கும் விருப்பு, வெறுப்பு காரமான விஷத்தின் தன்மைகள் நமக்குள் வந்து நம்மைப் பாதிக்காது.  

November 20, 2014

ரிஷியின் தன்மை – சிருஷ்டிக்கும் தன்மை

வாரத்தில் ஒருநாள் கூட்டுக் குடும்ப தியானம் நீங்கள் அவசியம் இருந்து பழகவேண்டும்.

அதற்குப்பின் கணவன், மனைவியும் அவர்கள் எத்தகைய நிலைகள் இருந்தாலும், சரீரம் இரண்டாக இருந்தாலும் இந்த முறைப்படி தியானம் செய்ய வேண்டும்.

“ஓம் ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி ஏங்கி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் ஜீவாத்மா  ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று தியானித்து உடலுக்குள் செலுத்த வேண்டும்.

பின் கண்களைத் திறந்து,
கணவன் மனைவியை எண்ணி
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
என் மனைவி உடல் முழுவதும் படரவேண்டும்
அவர் பேச்சும் மூச்சும் உலக மக்கள் நலம் பெற உதவ வேண்டும்,
அவர் சொல்லில் இனிமையும், அவர் செயல் அனைத்தும் நலம் பெறவேண்டும் என்று எண்ணி அந்த உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.

அதே போன்று மனைவியும் கணவனை எண்ணி தியானித்து, மகரிஷிகளின் உணர்வைக் கணவனுக்குப் பாய்ச்ச வேண்டும்.

ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது கண்டிப்பாக இவ்வாறு ஒருவருக்கொருவர் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பாய்ச்சிப் பழக வேண்டும். வெகு தூரத்தில் இருந்தாலும் இதை எண்ணி தியானிக்கலாம்.

காரணம் நண்பருக்குள் நாம் நல்லதைச் செய்யும்போது, எண்ணியவுடன் விக்கலாகின்றது. எனக்கு துரோகம் செய்தான் பாவி என்று பேசும்போது புரை ஓடுகின்றது.

இதைப்போல நம் குழந்தை மேலே பாசமாக இருந்து வளர்க்கப்படும் பொழுது, இங்கு ஒரு குழந்தை தவறி விழுந்து விட்டால் அதைப் பார்த்தவுடன் தன் குழந்தைக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என்று எண்ணத்தைச் செலுத்தினால் போதும், நம் குழந்தையும் தவறி விழும்.

ஆக பாசத்தின் பிணைப்பின் இந்த உணர்வின் இயக்கங்கள் இவ்வாறு இயக்கும் தன்மைக்கு இந்த உணர்வின் அலைகளே காரணமாகின்றது.

இதைப்போல கணவன் மனைவியினுடைய நிலைகள் உயிர் வாழும் நிலைகள் கொண்டு இரு சரீரம் ஆனாலும்,
இந்த முறைப்படி தியானித்து
உணர்வலைகளைப் பதிவு செய்து கொண்டால்
உடலைவிட்டுச் சென்றபின்
இரு சரீரங்கள் ஒரு சரீரமாக இயங்கும்.
இதுதான் சிவசக்தியின் ஸ்வரூபம்,
ரிஷியின் தன்மை - சிருஷ்டிக்கும் தன்மை

கணவன், மனைவியும் சேர்ந்து எண்ணத்தால் கருவாகி ஒரு உணர்வின் சக்தியை ஒரு உருவை உருவாக்குவது போன்று, இரு சரீரமும் இந்த சரீரத்தைவிட்டுச் சென்றபின் ரிஷியின் தன்மையைப் பெறுகின்றனர்.

ஒரு சுழற்சியின் கூட்டின் அமைப்புக்குள் இன்று ஒரு குடும்பமாக இருந்து செயல்படுவது போன்று, ரிஷியின் தன்மை கொண்ட ஒளியின் சரீரம் பெறுவது திண்ணம்.

அத்தகைய தன்மையில் சென்றவர்கள் தான் விண் செல்ல முடியும். தனித்து எவரும் விண் செல்ல முடியாது.

எனவே கணவன் மனைவியும் தைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்தால், யார் முன் சென்றாலும் பின் இரண்டுமே இணையச் செய்கின்றது.

இந்த உணர்வின் தன்மை யாம் சொல்லும் வழிப்படி செயல்படுத்திக் கொண்டால்
மனிதனுடைய கடைசி நிலைகளை
நீங்கள் எல்லோரும் நிறைவுபடுத்த முடியும். எமது அருளாசிகள்.

November 19, 2014

நாடி சாஸ்திரத்தின் உண்மை நிலைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

அன்று ஆண்ட அரசர்கள் யாக வேள்விகளைக் கூட்டி பல பொருள்களை இட்டு இந்த உணர்வின் தன்மையை ஒரு உடலுக்குள் சேர்த்து, மனிதனின் ஆசையை அங்கு கூட்டச் செய்கின்றனர்.

அந்த ஆசையின் மறைவிலே பல பொருள்களை இட்டு, நீ இறைவனைக் காண்பாய் என்று இப்படி சில மந்திர ஒலிகளையும் காட்டி
அந்த உணர்வை ஏற்றுக் கொள்ளும்படி செய்து
அந்த உடலில் உள்ள உணர்வைக் கரையச் செய்து,
தனக்குள் கரையும் சக்தியாக உணர்வைக் கூட்டி
அந்த மனிதன் இறந்தபின் அந்த ஆன்மாவைக் கைவல்யப்படுத்தி
சில வினைகளைச் செய்தார்கள் அன்றைய அரசர்கள்.

இது காளி, இது சாமுண்டீஸ்வரி என்ற நிலையில் இது கருப்பணச்சாமி, இது முனுசாமி என்ற கொடூர உணர்வின் தன்மைகளைப் பெற வைத்தாலும் இவர்கள் அத்தகைய நிலைகள் கொண்டு தீமையை விளைவிக்கும் உணர்வாகத்தான் மனித உடலில் இருந்து பிரித்துச் செயல்படும் தன்மை வந்துவிடுகிறது.

இன்று யாகங்கள் வளர்க்கப்படும்போது இந்த தெய்வம் செய்யும் என்ற ஆசையின் நிலைகளில் நாம் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் அதிலே நாம் சிக்கிக் கொள்கின்றோம்.

ஏனென்றால், இந்த உணர்வுகள் ஆரம்பத்தில் அரசர்களால் செய்யப்பட்ட இந்த கரையான் மந்திரம். அது எவ்வாறு உருவானதோ விளைந்த இந்த வித்து அந்த வழியில் வந்துவிடும்.

அந்த யாக வேள்விகளில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அங்கே ஜெபிக்கும் உணர்வுகளைப் பதிவு செய்தபின் அடுத்து ந்த உடலைவிட்டுப் பிரிந்தால், மந்திரவாதிகள் அந்த ஆன்மாக்களை எப்படி அழைத்துச் செல்கின்றனர் என்பதை நமது குருநாதர் காட்டுகின்றார்.
இதைப்போலத் தீமைகள்
நம்மையறியாமல் எத்தனையோ வருகின்றது.

இதைத்தான் ஒரு அரசன் தனக்குக் குலதெய்வமாக வைத்து
இத்தகைய சட்டங்களை வகுத்து
குணத்தின் சட்டமாக வகுத்து,
அது மதமாக வகுக்கப்பட்டு
அவன் இட்ட நிலைகளில் அந்த குடிமக்கள் கேட்டறிந்தால்
அவர்கள் இறந்தபின் இதே மந்திரத்தால்
ந்த ஆன்மாக்களைத் தன் சக்தியாக எடுத்துக் கொள்கின்றான்.

அப்பொழுது, அந்த உணர்வின் தன்மைகளைக் கவர்ந்தவர்கள் எத்தனை ஆயிரம் பேர் அதில் இருந்தனரோ அந்த உணர்வின் அலைகளை இவன் கவர்ந்திடும் நிலையும், ஞானமாக அறிந்திடும் நிலை வருகின்றது.

பின்,ந்த அரசன் பல மனித உடலில் விளைவித்த இந்த உணர்வுகளைத் தனக்குள் அதிகரித்து இந்த உடலைவிட்டுச் சென்றபின் இன்னொரு உடலுக்குள் இருந்து ஆட்சிபுரியும் நிலையில் செயல்படத் தொடங்குகின்றான்.

அதாவது, பிறவியில்லாது சாகாக்கலையாக மனித உடலுக்குள் தாவி தாவிச் சென்று தன் சுகத்தை அந்த உடல்களிலே அனுபவித்துக் கொள்ளலாம் என்ற நிலையில் தான் அன்று அரசர்கள் செய்தார்கள்
அரசர்கள் செய்த நிலைகள் தான்
இன்று நாடி சாஸ்திரங்களாக இருக்கின்றது.

இந்த நாடி சாஸ்திரத்திலே அவன் எந்தெந்த நட்சத்திரத்தின் நிலைகளை அவன் அமைத்து வந்தானோ அதன் அடிப்படையில் இவன் இறந்தபின் சாஸ்திரத்தை நீ எடுத்து தொடுவாய் என்றால் அதிலே உனக்கு மகா சக்தி கிடைக்கும், உலகை அறியும் நிலைகள் வரும் என்று காட்டப்பட்டிருக்கும்.

அதன்படி அவர்கள் இதைப் படித்தார்கள் என்றால் எந்த அரசன் தன் குடிமக்களை மந்திர ஒலியில் சிக்க வைத்திருந்தானோ அந்த குடிமக்கள் இறந்தபின் அந்த உணர்வின் தன்மை தனக்குள் வலுவாக்கிக் கொண்டபின்,
அடுத்த உடல் தாவுவதற்காக
அவன் எழுதி வைத்ததுதான் நாடி சாஸ்திரம்.

அந்த நாடி சாஸ்திர பிரகாரம் நாடி வாசிப்பவர்கள் மீண்டும் அந்த உடலுக்குள் வரவேண்டும் என்றால் இன்னென்ன முறைப்படி நீ செய்தாய் என்றால் அதிலே இத்தனை ஒலிகளை நீ எழுப்பப்படும்போது அதிலே நீ மிகப்பெரும் சக்தியைப் பெறுவாய் என்று அதிலே குறிப்பிட்டிருக்கும்.

முதல் நாடியிலே அதை வாசிக்கப்படும்போது உடலை விட்டுப் பிரிந்த அந்த அரசனின் ஆன்மா, இந்த நாடியை வாசித்தபின் இவர்கள் உடலிலே வந்துவிடும்.

அவர் அரச காலங்களிலே எதை எல்லாம் செய்தார்களோ அந்த முன்பிறவி, பின்பிறவி என்று இன்று நாடிகளிலே சொல்வார்கள். ஒவ்வொரு பிறவியிலேயும் அந்த மனிதன் எடுத்துக்கொண்ட உணர்வலைகளை அது படித்து இவருக்குள் சொல்லும்.

இருந்தாலும் அந்த உணர்வைத் தனக்குள் எதை எதை எல்லாம் சேர்க்கவேண்டுமோ இந்த உடலில் இருந்து, இந்த உடலுக்குள் இருக்கும் மற்ற குணங்களை இவன் அரசாட்சி செய்து இந்த உடலையே தன் கைவல்யப்படுத்திக் கொள்கின்றான்.

ஆனால், இந்த உடலிலே தான் எடுத்துக்கொண்ட நிலைகள் அந்த உடலின் உணர்வுடன் கலந்து வரப்படும்போது முதல் அரசனாக இருந்து ஆட்சிபுரியும் நிலைகள் கொண்டு ஒவ்வொரு புறத்திலும் தன் உடலிலும் சுகபோகங்கள் அனுபவித்து வந்தாலும் மற்றவர்களுக்குச் சில நிலைகளைச் சொல்லும்.

அதாவது, நாடி சாஸ்திரத்தின்படி நீ இன்ன இடத்திலே பிறந்தாய், இன்ன இடத்தில் இருந்தாய், அதிலே இன்ன கல்லை நீ பார். அதிலே நீ உற்றுப்பார்த்தால் உன்னுடைய முன்பிறவி தெரியும், உன் வீடு தெரியும் என்றெல்லாம் அந்த நாடியிலே சொல்லியிருக்கும்.

அதன்படி சென்று பார்த்தோம் என்றால் அதெல்லாம் நிஜமாகவே இருக்கும். ஆனால், இந்தப் பிறவியைக் கடந்தபின் அடுத்து நாம் என்ன ஆவோம் என்று சொல்லாது.

பின், நீ இந்த ஆலயத்திற்கு போய் அதை நீ வழி மொழிந்து இந்த யாகத்தைச் செய்தால் அதன் வழிகளில் உன்னுடைய தீமைகள் அகலும் என்று சொல்வார்கள்.

ஆகவே அந்தத் தீமைகளும் அது கடத்திச் சென்றவுடன் போகும்போது இடைமறித்து இன்னின்னார் உன்னைச் சந்தித்ததனால் இது தடைப்பட்டுவிட்டது என்று சொல்லும்.

இந்த நாடி சாஸ்திரம் பார்க்கும்போது. இந்த வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் தெளிவாகச் சொல்லும். இப்படியே போகப் போக அடுத்தடுத்து குறைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு நாடி பார்ப்பதற்கு
நாம் காசு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

ஆகவே அதிலே எடுத்துக்கொண்ட உணர்வின் சுவாச நிலை அந்த அரசன் பற்றிக் கொண்டாலும் இந்த உணர்வின் தன்மை குறைந்து குறைந்து யானை தேய்ந்து கட்டெறும்பு ஆன மாதிரி ஆகும்.

இந்த நாடியை இன்னொரு இடத்திலே இத்தனை காலம் வரும்போது இன்ன இடத்திற்குப் போனால் இன்னார் வருவான். அவன் கல்வியறிவு இல்லாதவனாகக்கூட இருப்பான். அந்த நாடியை இங்கே கொடுத்து விட்டால் அதனின் உணர்வு கொண்டு உனக்கு நற்காலம் வரும் என்பர்.

ஆனால் இந்த நாடி ஏடுகளை இப்பொழுது ஒருவன் கையிலே கிடைத்துவிட்டால் அதிலே சில மந்திர ஒலி எல்லாம் காட்டி இருக்கும். இதை எல்லாம் வைத்து இவர்கள் வயிற்றுப் பிழைப்பாகக் காண்கின்றார்கள்.

அவன் சொன்ன முறைப்படி இல்லாதபடி இவன் கையிலே சிக்கி, நீ இருடா.., நான் பார்க்கிறேன் என்பர். எல்லா மக்களையும் இவன் ஏமாற்றுகின்றான். ஆனால் அதே சமயத்தில் இவன் கையிலே சிக்கிய இந்த நாடி நீ இரு, நான் பார்க்கிறேன் என்று ஒரு குடும்பச் சொத்தாக வைத்து நாடி சாஸ்திரம் என்று ஓட்டிக்கொண்டுள்ளனர்.

அப்படி நாடி சாஸ்திரங்கள் பார்க்கும் அந்தக் குடும்பமும் சின்னா பின்னமாகிக் கொண்டே தான் இருக்கும்.

இன்று உடலினுடைய நிலைகள் இருக்கும். அவன் எடுத்துக் கொண்ட ஆசையின் அலைகள் கொண்டு இந்த ஆன்மா மிகவும் சிரமப்படும்.

அதைக் கேட்டுணர்ந்து நம் வாழ்க்கைக்கு எடுத்தாலும்
நமக்குள் அந்த தீமையேதான் விளையும்,
தீமையேதான் நமக்குக் கிடைக்கும் என்ற நிலையை அங்கே தெளிவாக உணர்த்துகின்றார் நமது குருநாதர் ஈஸ்வராய குருதேவர்.

நீங்கள் எல்லோரும் இந்த உண்மைகளைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு இதைப்போன்ற தீமையான நிலைகளில் இருந்து மீள வேண்டும் என்பதற்காகத் தான் இதை உணர்த்துகின்றோம்.