ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 28, 2018

இரவில் எருக்கஞ்செடி மின்னுவதைப் பார்த்துப் “பேயைக் கண்டேன்…!” என்று சொன்னாலும் அது மெய்யா…?

ஒரு எருக்கஞ்செடி இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம்.

இரவில் நிலா வெளிச்சம் படப்படும் பொழுது அல்லது நிலா வெளிச்சம் இல்லை என்றாலும் இருட்டிலே கூட அதில் இருக்கக்கூடிய கோடுகள் பளீர் பளீர் என்று மின்னும்.

அதைப் பார்க்கும் ஒருவன் நான் “பேயைப் பார்த்தேன்…!” என்று அடுத்தவனிடம் சொல்லுகின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

அவனும் இதைப் பதிவு செய்கின்றான்.

அது இன்ன உருவமாகக் காட்சி தருகிறதென்றால் அங்கே போனபின் இவன் காண்பித்த கற்பனை இவன் உடலிலே உருவாக்கப்பட்டு
1.அந்த எருக்கஞ் செடி மின்னிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடனே
2.“அதோ பார் பேய் ஆடுகிறது பார்…!” என்று இவனுக்கு
3.முதலாமவன் சொன்ன ரூபமே தெரியும்.

அவனுக்குள் பதிவு செய்த உணர்வுகளை இவன் பார்க்கப்படும் பொழுது “முதலாமவன் பார்த்தது எருக்கஞ் செடி…!” ஆனால் அவனுக்குள் கற்பனை செய்து கொண்டது இந்த நிலை.

அந்த உணர்வுகளைப் பார்க்கப்படும் பொழுது அதை இவன் சொல்லி அஞ்சி வருகின்றான். அவன் வேறு பக்கம் போகின்றான்.

இதையே அஞ்சிய உணர்வுகள் இவனுக்குள் வளர்த்ததை தன் நண்பனிடம் சொல்லும் பொழுது அந்த நண்பன் போகும் பொழுது
1,அவன் சொன்னது உண்மை என்று
2.அந்த உணர்வுகள் அவனுக்குள் பதிந்து
3.அது இயங்கத் தொடங்கி விடுகின்றது.

இதைப் போன்று தான் நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மை அங்கே பதிவாகின்றது. அந்தப் உணர்வின் தன்மை இவனுக்குள் இங்கே ரூபமாகச் சிருஷ்டிக்கின்றது.

அதனால் தான் கீதையிலே “நீ எதை எண்ணுகிறாயோ…, அதுவாகின்றாய்…!” என்று வியாசகர் தெளிவாகக் கூறியுள்ளார்.

நாம் மீண்டும் மீண்டும் அந்த பயந்த உணர்வுகளை எண்ணும் பொழுது பயத்தின் உணர்வுகளையே உருவாக்குகின்றது. அதுவாகவே ஆகின்றோம்.

அன்று அகஸ்தியன் தனது நிலைகளில் அணுவின் ஆற்றலின் தன்மை அவனுக்குள் பெருகினாலும் அவன் பூமியின் துருவப் பகுதியை உற்று நோக்கி துருவத்தின் வழியாகப் புவிக்குள் வருவதை அந்த உண்மையின் உணர்வின் நிலைகளை அறிகின்றான்.

ஏனென்றால் தாய் கருவில் இருக்கும் பொழுது அவன் பெற்ற பூர்வ புண்ணியத்தால் உண்மை எது? அதை அறிய வேண்டும் என்று விண்ணுலக ஆற்றலை அறிகின்றான்.

முதலில் சொன்ன மாதிரி எருக்கஞ்செடியைப் பார்த்துப் பயந்த நிலைகள் வரப்படும் பொழுது அப்படி எண்ணி அறிகின்றோம்.

விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் அவர்கள் கணக்கின் பிரகாரம் நம் பூமி தட்டை என்றார்கள். ஆனால் அக்காலத்தில் உள்ளவர்கள் இது தான் உண்மை என்றார்கள்.

பின்னாடி அதை மறுக்கப்படும் பொழுது அவர்களைப் பைத்தியக்காரர்கள் என்றார்கள். அவர்கள் எல்லாம் பூமி உருண்டை என்றார்கள்.

அவருக்கு பின் வந்தவர்கள் பூமி முட்டை வடிவம் என்றார்கள். அவனின் கணக்கின் பிரகாரம் பதிவு செய்து இவன் கணக்குக்குக் கொண்டு செல்கின்றான்.

ஆனால் இதே ஆராய்ச்சியில் இருக்கப்படும் பொழுது ஒவ்வொன்றாகத் தெளிவாக்கி அவன் கூர்மையாகக் கவனிக்கப்படும் பொழுது பூமியின் இயற்கையை அறிகின்றான்.

அந்த நுண்ணிய அலையின் அறிவின் தன்மை கொண்டு விஞ்ஞான அறிவு வளர்கின்றது. விஞ்ஞான அறிவு வளர்ச்சி அடைந்தது இப்படித்தான்…! இவன் கண்டுணர்ந்த உணர்வின் இயக்கம் மனிதனுக்கு எப்படி இயக்க வேண்டும் என்று விஞ்ஞான அறிவைக் காணுகின்றான்.

ஆனால் மெய் ஞானியான அகஸ்தியனுடைய நிலைகள் இளமைப் பருவத்தில் வளர்ந்தது அந்த மெய் உணர்வைக் காணும் நிலைகளே வருகின்றது. அவன் மெய் ஞான அறிவைக் கொண்டு செல்கின்றான்.

1.எப்படி அணுவானது கோளானது நட்சத்திரமானது சூரியனானது என்றும்
2.பின் சூரியன் ஆனபின் அதன் உணர்வின் இயக்கத்தில் அணுக்களின் தன்மையும்
3.மற்ற கல்லையும் பாறையும் மற்ற தாவர இனங்களையும் உருவாக்க உதவியது என்றும்
4,அணுவின் ஆற்றலைக் கண்டுணர்ந்தான் அகஸ்தியன்.

இதற்குள் மோதுண்டு வரப்படும் பொழுது உயிரணுக்கள் எப்படித் தோன்றுகின்றது என்றும் அறிகின்றான் அகஸ்தியன் அகஸ்தியன் துருவனாகி துருவத்தின் நிலைகளைக் காணுகின்றான்.

அதாவது துருவப் பகுதியில் வருவதையும் வானியலின் தத்துவத்தை அதை அறியப்படும் பொழுது “துருவன்…” என்று காரணப் பெயரைப் பின் வந்த ஞானிகள் வைக்கின்றார்கள்.

உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி அகஸ்தியன் இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான். துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை நுகர்ந்தால் மெய்யைக் காண முடியும்.

இந்த மாய வாழ்விலிருந்து விடுபட்டு நிலைத்த வாழ்க்கையாக என்றுமே விண்ணிலே வாழலாம்.