ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 27, 2018

பழனியில் ரசமணிச் சித்தருடன் ஏற்பட்ட சந்திப்பு (சந்தர்ப்பம்) தான் என்னை ஞானம் பெறச் செய்தது...!

குருநாதரைப் பற்றி எவ்வளவோ நாட்கள் அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. இருந்தாலும் அடிக்கடி பல சந்தர்ப்பங்களில் என்னைச் சந்தித்துள்ளார்.

அவரை நான் பித்தன் என்றே தான் எண்ணியிருந்தேன். எதைச் சொன்னாலும் அவரிடம் வெறுப்பு கொண்டு ஒதுங்கிச் செல்வதுதான் எனது வழக்கமாக இருந்தது.

சந்தர்ப்பவசத்தால் என் மனைவி நோய்வாய்ப்பட்டு அதனால் அவர் வைத்தியத்திலேயும் மீள முடியாத நிலை ஏற்பட்ட இந்த சந்தர்ப்ப நிகழ்ச்சியிலேதான் எமது குருநாதர் என்னை அணுகி ரொம்பவும் நெருக்கமாக வந்தார்.

அது சமயம் எனது மனைவி இன்றோ நாளையோ என்ற நிலைகொண்டு இருக்கப்படும்போது என் மனைவியின் தகப்பானாரும் ஒரே பெண் குழந்தையாக இருந்ததனால் தன் பெண்ணின் நிலை மோசமாக இருக்கின்றது என்ற ஏக்கத்தில், அவருடைய உடலைவிட்டு ஜீவன் பிரிந்தது.

அதை அடக்கம் செய்துவிட்டு வந்தபின் என்னை குருநாதர் அணுகி, ரொம்பவும் அசிங்கமான பேச்சுக்களைப் பேசி நீ டீ... குடி...” என்ற மிகவும் நிர்பந்தப்படுத்திக் கொண்டிருந்தார்.

அதை மறுத்தவுடன் அவருடைய பேச்சும், ஏச்சும் மிகவும் கடினமாகவும் செவிக் கொண்டு கேட்க முடியாத வார்த்தைகள் கொண்டே என்னை ஏசிப் பேசினார்,

இருந்தாலும் அவரிடமிருந்து விலகிச் செல்வதற்கு முயற்சி எடுத்தேன் முடியவில்லை,

நீடீகுடித்தால்தான் நீ  இதைவிட்டு நகர முடியும் என்று சொன்னார்.

அதன் அடிப்படையில்தான் நான் டீ கடைக்குச் சென்று டீ குடித்து விட்டால் அவர் விலகிச் சென்று விடுவார் இந்த எண்ணத்தில் அவர் கொடுத்த டீ யை வாங்கிக் குடித்தேன்.

இன்று டீ குடித்தாலும் உன்னை நான் விடமாட்டேன் என்று மிகவும் கடினமான நிலைகளில் மீண்டும் பேசத் தொடங்கினார்.

பின் டீ குடித்தபின் அவரை எப்படியும் ஊரை விட்டு எல்லை கடந்து அனுப்பிவிட்டு வரலாமென்று எண்ணி இருந்தேன்.

ஏனென்றால் மாமனார் அவர் இறந்த காலத்தில் எல்லோரும் வந்து குழுமி இருந்தார்கள். அவர்களும் என்னைப் பார்த்து ஏசிக் கொண்டிருந்தார்கள். ஆகவே இவரை எப்படியும் கடத்தி ஊருக்கு அப்பால் கொண்டு விட்டுவிட்டு வரலாம் என்று நான் அழைத்துச் சென்றேன்.

அங்கே பழனிக்கு பக்கம் பெரிய நாயகி அம்மன் கோவில் ஒன்று உண்டு. அதன் கீழ் தெப்பக்குளம் ஒன்று உண்டு. அந்த தெப்பக்குளத்திற்குள் என்னை அழைத்துச் சென்றார்.

நான் விலகிச் செல்லலாம் என்று எண்ணும்போது அந்த தெப்பகுளத்திற்குள் என்னை அழைத்துச சென்று என் வாழ்க்கைச் சரித்திரங்கள் அனைத்தையும் சொல்லி நான் பிறந்ததில் இருந்து அவரைச் சந்திக்கும் வரையிலும் இருந்த நிலைகளைச் சொல்லிவிட்டு மனைவியினுடைய நிலைகளை அனைத்தையும் சொல்லிக் கொண்டே வந்தார்.

அவர் அவ்வாறு சொல்லும்போது தான்பைத்தியம் இல்லைஎன்ற நிலையை நான் உணர முடிந்ததது.

அதன் பின் பெரும் உண்மைகளைப் பல சொன்னபின் விபூதியையும் எலுமிச்சம் பழத்தையும்...” கொடுத்து இதைக் கொண்டு சென்று உன் மனைவிக்குக் கொடு எழுந்து நடப்பார்…! என்று சொன்னார்.

ஏனென்றால் இடுப்பிற்கு கீழ் ஒரு விரலும் அசையவில்லை ஆஸ்பத்திரியிலேயே முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

இன்றோ நாளையோ என்று மிகவும் கடினமாக நிலைகளில் என் மனைவி இருக்கப்படும்போது குருநாதர் சொன்ன மாதிரிச் செய்தேன்.

என் மனைவி எழுந்து ஒரு மாதத்திற்குள் நடக்க ஆரம்பித்துவிட்டார்.

அவரிடம் இந்த நற்செய்தியைச் சொல்லலாம் என்று தேடிச் சென்றபோது அவரை எங்கேயும் காண முடியவில்லை. ஏனென்றால் பழனியிலேயே தான் அவர் சுற்றிக் கொண்டிருப்பார்.

பின் எப்படியும் இன்றைக்கு அவரிடம் சொல்லியாக வேண்டும் என்ற ஏக்கத்துடன் நாலாபுறமும் பார்த்து நடந்து கொண்டிருந்தேன்.

அப்படி இருக்கப்படும்போது திடீர் என்றுஎன்னை நீ தேடினாயா...?என்று முதுகு பக்கமாக இருந்து தட்டினார். எப்படி வந்தார்? என்ன செய்தார்? என்றே எனக்குத் தெரியாது.

அவர் தட்டி எழுப்பியபின் நான் திடீர் என்று உணர்ச்சிவசப்பட்டு, “உங்ககிட்ட சொல்லலாம் என்று இருந்தேன்தேடினேன் காணவில்லை...!என்று சொன்னேன்.

உன் மனைவிநலமுடன் இருக்கிறாளா...?” என்று கேட்டார்.

நலமாக இருக்கிறார்என்று சொன்னேன். “ஆனால் வீட்டிற்கு வரவேயில்லைவெளீயில் இருந்துதான் இது நடக்கின்றது.

இப்பொழுது நான் சொல்வதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார். “என்னை நீ நம்புகிறாயாநான் சொல்வதைக் கேட்கின்றாயா?“ என்று கேட்டார்.

நம்புகிறேன்கேட்கின்றேன்...என்று சொன்னேன்.

இதில் நீ மாற மாட்டாய் இல்லையா...? என்று கேட்டார்.

மாற மாட்டேன்என்று சொன்னேன். அதன்பின் அவர் என்னைப் பெரிய நாயகி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அழைத்துச் சென்ற பின் அந்த பெரிய நாயகி அம்மனை வணங்கச் செய்தார்.

அதன்பின்கிரிவலம்வந்தோம்.

அங்கேதட்சிணாமூர்த்திசிலை இருக்கின்றது. இந்தச் சிலை எதற்காக வைத்ததிருக்கிறார்கள் என்று கேட்டார்.

எனக்குத் தெரியவில்லை என்று சொன்னேன். இப்படி ஒவ்வொரு சிலையையும் காட்டி இந்தச் சிலையின் உட்பொருள் என்ன...? என்று எல்லாவற்றையும் காட்டிவிட்டு… “துர்க்கைஎன்ற சிலை சிலைக்குப் பக்கம் அழைத்து வந்தார். “இதனுடைய பொருள் என்ன?” என்று கேட்டார்.

தெரியவில்லைஎன்று சொன்னேன்.

எதைக் கேட்டாலும் தெரியவில்லை என்று சொல்லுகின்றாய் என்று கேட்டுவிட்டு அதன்பின் வெளிய வந்தபின் இங்கே என் பெயரை வைத்து வேணு கோபால விநாயகர்என்று ஒன்று உண்டு. உனக்குத் தெரியுமா...? என்றார்.

எனக்குத் தெரியாது என்றேன்.

அங்கே அழைத்துச் சென்றார்.

அழைத்துச் சென்ற பின் அந்தச் சிலை மீது ஏறி உட்கார்ந்து கொண்டு இதனுடையஉட்பொருள்...என்ன என்று கேட்டார்.

தெரியாது...! என்று சொன்னேன் இதை மீறிப் பேசினால் பேசுவார் என்றே விலகி இருந்தேன்.

அப்புறம் தொடர்ந்து வரப்படும்போது ஒவ்வொரு சிலையையும் காட்டியதை காட்டியபின் எறும்புக்கு யார் சோறு போடுவது...? புழுவிற்கு யார் சோறு போடுவது...? குருவிக்கு யார் சோறு போடுவது...? இங்கே இவர்களுக்கு எல்லாம் யார் சோறு போடுகிறார்கள்...? எப்படி என்கிற நிலைகளிலே கேட்டுக் கொண்டே வந்தார்.

எல்லாம் கடவுள் தான் போடுகிறார் என்றே சொல்லிக் கொண்டுக இருந்தேன்.

கடவுள் யார்?” என்று கேள்வி கேட்டார்.

எனக்குத் தெரியாது என்றேன். “நான் பார்க்கவில்லை...!என்றேன்.

நீ பார்க்காதபடி கடவுள்” என்று எப்படி நீ சொல்லலாம்என்று கேள்வி கேட்டார். இப்படி விதண்டவாதங்கள் நடந்து ஓரளவிற்கு எல்லாம் சுற்றி வந்தபின் அந்த மனிதருடய எண்ணங்கள் எவ்வாறு செல்லுகின்றது என்ற நிலையை காட்டினார்.

இந்தப் பிரபஞ்சம் எப்படி தோன்றியது...? பிரபஞ்சத்திற்குள் பூமி எப்படித் தோன்றியது...? பூமிக்குள் உயிரணு எப்படித் தோன்றியது...? பூமிக்குள் தாவர இனங்கள் எப்படித் தோன்றியது...? என்று வினாக்களை எழுப்பிக் கொண்டே வந்தார்.

தெரியாது... தெரியாது...என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். தெரியாது என்று சொல்கிறபோதெல்லாம் ஒவ்வொரு அடி கிடைக்கும். அடி கொடுத்துக் கொண்டே இருந்தார்.

தெரியாது என்றால் நீ எதற்காகக் கேட்கிறாய்...? என்பார்.

நான் தெரிந்து கொள்வதற்காகத்தான் கேட்கிறேன் என்று சொன்னேன்.

தெரிந்து கொண்ட பின் அடுத்து நீ என்ன சொல்லப் போகின்றாய்...? என்ன செய்யப்போகின்றாய்...? இப்படியே கேட்டுக் கொண்டு என்னைப் பைத்தியக்காரத்தனமாக அடித்துக் கொண்டே இருந்தார்.

சூரியன் எப்படி அது உண்டானது...?” பிரபஞ்சத்திற்குள் எப்படி ஒரு உயிரணு உண்டானது...? உயிரணு உண்டான பின் என்ன செய்தது...? அன்றைய அரசர்கள் நான் தான் என்ற நிலைகளில் எப்படி இருந்தார்கள்?” அரசர்கள் பல மந்திரங்களை ஏன் செய்தார்கள்..? அரசர்கள் ஏன் கோவில்களைக் கட்டினார்கள்...? ஞானிகள் எப்படி உண்மையினுடைய நிலைகளை உணர்ந்தாரகள்...? அந்த ஞானிகள் சொன்னதை அரசர்கள் எப்படி தன்வசப்படுத்திக் கொண்டார்கள்...? என்றெல்லாம் வினாக்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்.

எனக்கு ஒன்றும் தெரியாது சாமி. நான் படிக்கவில்லையே என்று சொன்னேன்.

நீ புத்தகத்தைப் படிக்காததனால் தான் உன்னிடம் கேட்கிறேன். படித்திருந்தால் நீ என்னிடம் விதண்டவாதம் பேசுவாய் என்றார். எனக்கு ஒன்றும் புலப்படவில்லை. இல்லையென்றால் கொச்சையான வார்த்தைகளால் பேசிக் கொண்டே இருந்தார்.

பேரண்டம் இருண்ட நிலைகளில் இருந்தது. விஷமான சக்தி கொண்டது. விஷமான சக்தியால் அணுக்கள் உண்டானது. அணுக்கள் ஒன்றாகச் சேர்த்து ஒரு கோளாக ஒரு பரம்பொருளாக உண்டானது. அதற்கு பெயர்பரம்பொருள்என்றார்.

கோளாக மாறி நட்சத்திரமாக மாறி பின் சூரியனாக மாறியது என்றார். அந்த சூரியனாக மாறியபின், அதனின்று வெளிப்படும் அணுக்கள் ஒரு பிரபஞ்ச நிலைகளாகி அதற்குள் கோள்கள் மீண்டும் உருவாகி பூமிக்குள் உயிரணு தோன்றியது என்றார்.

பூமிக்குள் தாவர இனங்கள் உற்பத்தியாகி தாவர இன மணத்தை ஒரு உயிரணுதான் சுவாசித்து அது உடல் பெற்று அதன் நிலைகள் கொண்டு இந்த உயிரணு பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வளர்ந்து மனிதனானது என்று விளக்கினார்.

மனிதனான பின் இந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றித் துருவத்தை அடைந்து துருவ மாகரிஷியாகி துருவ நட்சத்திரமானார் அகஸ்தியர் என்றார் குருநாதர்.

அதனின்று வெளிப்பட்ட சக்தியினைக் கவர்ந்தவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக அமைந்து சுழன்று கொண்டு இருக்கிறார்கள் என்று  உணர்த்தினார்.

இதையெல்லாம் நீ காணுவது எப்போது...! நீ எப்போது காணப்போகின்றாய்...? எதை நீ எப்பொழுது அடைய போகின்றாய் என்று இப்படி வினாக்களை எழுப்பிக் கொண்டே வந்தார்.

இதையெல்லாம் நான் என்றைக்குப் பார்க்கப் போகின்றேன்? நான் கடும் தவம் இருக்க முடியாதே…! குழந்தை குட்டியோடு இருக்கின்றேன். மனைவி இப்பொழுது தான் எழுந்து வந்திருக்கிறது. தொழில் செய்து சாப்பாட்டுக்குக் கொடுக்க வேண்டும்.

ஆகையினால் இதையெல்லாம் நான் பார்க்கும் திறன் இல்லை. இந்த ஆயுள் பத்தாது என்று சொன்னேன்.

ஆயுள் பத்தாது என்று நீ சொல்ல வேண்டியதில்லை, நான் அல்ல சொல்ல வேண்டும் என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டு வந்தார்.

ஒருவன் திட்டினால் நீ கூர்ந்து கவனித்து இருடா. நான் பார்க்கிறேன் என்று சண்டைக்குப் போகிறாய். அவனை நினைக்கும்போதெல்லாம் உன் உடல் பதறுகின்றது

அதே மாதிரி நான் சொல்வதை நீ கேட்டுக் கொண்டே வா, அதைப் பெற வேண்டும் என்று எண்ணிக்கொண்டே வா. அந்த சக்தி உனக்குள் ஆழமாகப் பதியும். அதை நீ திரும்பி எண்ணும்போது உனக்குள் எப்படி சக்தி கிடைக்கிறது என்பதை மட்டும், நீ தட்டாது கேட்டுக் கொண்டே வா என்று சொன்னார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

இதைத்தான் அன்றுகடவுளின் அவதாரம் பத்துஎன்றார்கள் ஞானிகள். கடவுளின் அவதாரம் என்றால் கடவுள் எத்தனையோ அவதாரங்கள் எடுத்தார் என்று சொல்வதற்கு பதில் உயிரைக் கடவுளாக வைத்துப் புழுவிலிருந்து அவதார நிலைகள் பெற்று இந்த உயிர் தான் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிகல்கியாகஎப்படிச் சென்றடைந்தது என்று தெளிவாகச் சொன்னார் குருநாதர்.