ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 31, 2022

யாம் உபதேசிக்கும் வழியில் செல்வதைக் “கடினம்…” என்று யாரும் எண்ணாதீர்கள்

 

கல்வி கற்றுக் கொண்ட ஒருவர் புதிதாக ஒரு சாதனத்தை உருவாக்குகிறார் என்றால்...
1.எந்தெந்த அளவில் சேர்த்து அந்தப் பொருளை உருவாக்கினால்
2.இயக்கச் சக்தி... இந்த இடம்… “இது வலுவை தாங்கக் கூடியது...” என்று உணர்கின்றார் விஞ்ஞானி
3.அதன் வழியில் தான் புதிய சாதனத்தை உருவாக்குகின்றார்கள்.

இப்படி உருவாக்கிய நிலைகள் கொண்டு அவர் கற்றுணர்ந்ததை யார் அவரிடம் சீடராக வருகின்றாரோ அவருக்கும் கற்றுக் கொடுக்கின்றனர்.

முதலில் கல்வியைக் கற்பிக்கின்றார்கள். அவர் கற்றுணர்ந்த வழியிலேயே சீடருக்கும் காட்டப்படும்போது அதைக் கற்றுணர்ந்து வருகின்றார்.

கற்றுணர்ந்து அதன் வழிகளிலே வந்தாலும்… போதித்தவரின் வழியிலே சீராக அவர் செயல்படுவார்…! என்றால் அவர் அதில் வெற்றி பெறுகின்றார்.

ஆனால் கற்றுக் கொடுக்கப்படும் பொழுதே
1.“கடினம்...” என்று எண்ணி அந்தக் கல்வியை அவர் கற்க நேர்ந்தால்
2.அவர் எண்ணங்களிலும் கடுமை வந்துவிடும்
3.அவருடைய சிந்திக்கும் திறனும் வலு இழக்கப்படும்.

அவர் இன்ஜினியராக வரும் நிலையில்… “எப்படியோ” பாட நிலைகளை எண்ணி உயர்வுக்கு வந்தாலும்… அந்தப் பாட நிலைதான் அவருக்கு மீண்டும் மீண்டும் வரும். “மூலக்கூறுகளை அவர் அறிய முடியாது...”

ஆகவே அவரவர்கள் எடுத்த உணர்வு கொண்டு தான் அது இயக்கும்.

இதைப் போன்று யாம் கொடுக்கும் உபதேசங்கள் வாயிலாக அருள் ஞானத்தைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம். உங்கள் உணர்வுடன் இணைந்து விட்டால் அந்த உணர்வை நீங்கள் நுகரும் போது... அறிவின் ஞானமாக வருகின்றது.

அது ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதற்குத்தான் ஒவ்வொரு குணங்கள் உருவாவதும்... அதனின் சிறப்பின் தன்மையை நினைவு கூறும் பொழுது அதனதன் கருக்களாக உங்களுக்குள் உருவாகின்றது.

1.ஞானிகளைப் பற்றிய நினைவின் தன்மை உங்களுக்குள் வருவதற்கு
2.ஊழ்வினை என்ற வித்தாக உங்கள் உடலுக்குள் இருக்கும் ஊனுக்குள் இதைப் பதிவாக்குகின்றோம்.

அந்தப் பதிவினை நினைவாக்கப்படும்பொழுது அவ்வப்பொழுது இந்த வாழ்க்கையில் வரும் வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் என்ற உணர்வுகளை மாற்றி அமைக்க முடியும்.

யாம் பதிவாக்கியதை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது வாழ்க்கையில் வரும் இருளை மாற்றச் செய்யும் சக்தியாக அது நிச்சயம் வரும்.

1.உங்கள் வாழ்க்கையில் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை எப்போதுமே இணைத்துக் கொண்டு வந்தால்
2.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து நீங்கள் பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.

இல்லை என்றால் இந்த வாழ்க்கையில் நாம் எடுக்கும் மற்ற உணர்வுகள் வளர்ச்சி அடைந்தால் மீண்டும் இதனுடைய நிலைகள் இன்னொரு பிறவியைத் தான் உருவாக்கும்.

மனிதனான பின் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை…!

புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றாலும் பாவத்தைத் தான் இன்று கட்டிக் கொண்டு வருகின்றோம் - ஈஸ்வரபட்டர்

 

நம் பாட நிலையில் உடலில்லாத ஆத்மாவுடன் கூடிய ஆவிகளின் நற்செயல்கள்… தீமைகள்… இவற்றையே பல நிலைகளில் சொல்லி வருகின்றேன்.

1.வாழ்பவரின் நிலையைக் காட்டிலும்... அவர்களின் எண்ண சக்தியை
2.இவ்வாவிகளின் செயல்தான் இவ்வுலக நிலையையே நடத்திச் செல்லும் தன்மை கொண்டதாக உள்ளது.

இன்று புனித கங்கை என்ற நிலையில் காசிக்குச் சென்று நம் பாவங்களைக் கழிக்கப் பல மைல்களுக்கப்பால் இருந்தும் அப்புண்ணிய நதியில் நீராடி வந்தால் பாவங்கள் குறையும் என்ற எண்ணத்தில் பக்தி கொண்டு பல கஷ்டங்களுடன் பாவத்தைப் போக்க காசிக்குச் செல்கிறார்கள். அதே போல் இராமேஸ்வரம் என்று புண்ணிய ஸ்தலத்தையும் நாடி மக்கள் செல்கிறார்கள்.

அக்காசி கோவிலில் உள்ள அத் தபசு ரிஷியான காசி விஸ்வநாதரின் அருளைப் பெற்றிட அப்புண்ணிய ஸ்தலத்திற்குச் செல்கின்றார்கள்.

ஆனால் அங்கும் நடக்கும் நிலை என்ன...?

அப்புண்ணிய ஸ்தலத்தில் வாழும் மக்களின் எண்ணமெல்லாம் புண்ணியாத்மாக்களாக புண்ணிய பூமியாக்கிடவா செயல்கள் நடக்கின்றன...?

பாவத்தைக் கழிக்கும் இடமாக எண்ணிச் சென்று புண்ணியத்தை வாங்கியா வருகின்றார்கள்...? கொலையும் கொள்ளையும் மலிந்து அப்புனித கங்கையில் புனித நீரைக் குருதி நீராக்கிக் கலக்க விட்டுள்ளார்கள்.

பல மைல்களுக்கப்பால் இறந்தோரை எல்லாம் அவ்வுடல்களை இக்கங்கையில் செலுத்தினால் “இறந்தவருக்குப் புண்ணியம்…” என்ற நிலையில் இந்நிலையில் கொண்டு வந்து விடுகின்றார்கள்.

பாவத்தின் பிறப்பிடமாக இன்று உள்ளது புனித கங்கையும் காசியின் திருத்தலமும். அங்கு செயற்கொண்டு இருக்கும் ஆண்டவனின் அஜ்ஜோதி மகான் இன்றும் அங்கு தான் உள்ளார்.

அனைத்துப் பாவங்களையும் அவரும் பார்த்துக் கொண்டே தான் உள்ளார். எண்ணத்திற்குகந்த அருளைத்தான் அவர் அளிக்கின்றார். பாவத்திற்கு அவர் என்ன செய்ய முடியும்...?

1.பாவத்தின் எண்ணம் கொண்டவன் அவன் செய்யும் பாவங்களின் அணுவையே மீண்டும் மீண்டும் தன்னுள் ஏற்றிக்கொண்டு
2.எப்பாவத்திற்கும் துணிந்தவனாகப் பல பாவங்களுக்கு உகந்தவனாகத் தன்னை ஏற்படுத்திக் கொண்டு
3.அப்புண்ணியக் கரையிலேயே பலர் இன்று வாழ்கிறார்கள்.

ஏன் அவ்வாண்டவன் இவர்களுக்கு நல்வழி புகட்டக் கூடாதா...? என்று கேட்பவர் பலர். ஆண்டவன் நிலையையும் ஆவியின் நிலையையும்தான் நாம் பிரித்துப் பிரித்துப் பல நிலைகளில் சொல்லியுள்ளோம்.

1.எண்ணத்தின் பேய்க்கு அடிமைப்பட்டவனை எவ்வாண்டவனும் வந்து நல்வழியில் செலுத்திட முடியாது
2.அவன் உடலைவிட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகு
3.அவ்வாத்மாவின் நிலை அடையும் அதிகாட்டத்திலிருந்துதான் அவன் உணர்ந்திட முடியும்.

அந்நிலையில் வாழ்ந்தவனுக்கு உணரும் தன்மையும் உடலை விட்டு ஆத்மா பிரிந்த பிறகும் அறிந்திட முடியாது. நரகலோகம் என்னும் அதி அவஸ்தை கொண்ட அழுகும் ஆவியாகத்தான் மிகவும் அல்லல்பட்டுச் சுற்றிக் கொண்டே இருக்க முடியும்.

அவ்வாவி பிறப்பெடுத்தாலும் நாயாகவும் அதற்கும் ஈன நிலையில் உள்ள மற்ற ஜெந்துக்களின் நிலைக்குத்தான் வந்திட முடியும்.

வாழும் காலத்தில் வாழ்க்கையின் சுகம் என்ற நிலையில் பல சுமைகளை ஏற்றிக் கொண்டு வஞ்சகம் குரோதம் ஆத்திரம் வெறி காமம் இப்படி பல வெறி கொண்ட நிலையை வாழ்க்கையின் சுகமாக எண்ணி வாழ்ந்து என்ன பயன்...?

வாழும் காலம் ஒரு மனிதனுக்கு 60, 70 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதில்லை. இக் குறுகிய காலத்தின் ஆசைக்குத் தன் ஆத்மாவை அடிபணிய வைத்து வாழ்கின்றான் இன்றைய மனிதன்.

அழிவில்லா இவ்வாத்மா மனித வாழ்க்கையில் வாழும் காலம் மிகவும் குறுகிய காலம். என்றுமே அழியாத ஆத்மாவை இம்மனித உடலில் உள்ள பொழுதினில் மட்டும் தான் கரை சேர்த்து என்றும் அல்லல் இல்லா வாழ்க்கை பெறும் சூட்சுமம் கொண்ட வாழ்க்கைக்குச் செல்லும் பொக்கிஷம் இம்மனித வாழ்க்கையில்தான் உண்டு.

1.அறியாமல் செய்திடும் பிழைதான் இன்று வாழும் வாழ்க்கை நிலை
2.கரை சேர்ந்திடும் நிலைக்கு நம்மைப் பக்குவப்படுத்தி வாழ வேண்டும் என்ற எண்ணம் பல மனிதர்களுக்கு இல்லை.

அன்று நம் முன்னோர் புண்ணிய ஸ்தலமாக்கி ஆண்டவன் சக்தி பெற்றுப் பல கோவில்களை அமைத்து நமக்கு வழிகாட்டிட ஏற்படுத்திய நிலையை எல்லாம் இன்று நாம் நம் வேடிக்கைக்காகவும் உல்லாசப் பயணங்களுக்காகவும் பொழுது போக்கும் நிலைக்காகவும் நமக்கு உகந்த ஆசைப்படி எல்லாம் ஏற்படுத்தி விட்டோம்.

அதனால் இன்று அந்தப் புண்ணிய ஸ்தலங்களும் பல புண்ணிய நதிகளும்
1.ஆவிகளின் அட்டுழியங்கள் நடக்கும் நிலையாக மாறி
2.இன்று புண்ணியம் வாங்கச் செல்பவர்களின் உடல்களில் எல்லாம் பல உடல்களில் ஏறிக்கொள்கின்றன.
3.அடங்கா ஆசையுடன் உள்ள ஆவிகள்தான் உடல்களில் ஏறிக்கொள்கின்றன.
4.தன் ஆசைக்குகந்த செயல்களையும் நடத்துகின்றன.

தன் செயலின் நிலை ஈடுபடுத்தாவிட்டாலும் அவ்வுடலில் இருந்து வெளிவர முடியாத நிலையில் பல உடல்களை இவ்வாவிகளினால் அவ்வாவிகளின் உந்தலுக்கு உட்படுத்திவிட்டன.

1.நாம் செல்வது புண்ணியம் வாங்க...
2.அப்புண்ணிய ஸ்தலத்தில் உள்ள இவ்வெண்ண மூச்சுக்கள் எல்லாம் நாம் சென்றதும் நம் எண்ணத்தில் கலந்து (நம் சுவாசத்தில்)
3.நம்மையே நம் செயலில் செயல்படாத நிலை ஏற்டுத்தி விடுகின்றன.

புண்ணிய ஸ்தலத்திற்குச் சென்று “பாவ மூட்டையைத்தான் சுமந்து வருகின்றோம்...!” இன்றைய நிலை இது தான்...!

March 30, 2022

ஏதிரி என்றும் எதிர்நிலை என்றும் நமக்குள் வளர விடக் கூடாது

 

1.மனிதனின் வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே மறைமுகமாகத் தீங்குகள் எப்படி விளைகிறது…?
2.நம்மை அறியாமல் தீமைகள் எப்படி விளைவிக்கச் செய்கின்றது…?
3.நம்மை அறியாமலே நமக்குள் உணர்ச்சிகள் எப்படித் தூண்டுகின்றது…?
4.நம்மை அறியாமலே நமக்குள் ஏற்படும் இந்த உணர்ச்சிகள் நம் எதிரிகளுக்கும் தூண்டப்பட்டு இந்த உணர்வுகள் என்ன செய்கின்றது…? என்று
5.இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் நமக்கு அடிக்கடி தொந்தரவு செய்கிறார் என்று எண்ணுகின்றோம். அவ்வாறு எண்ணும் பொழுது அந்த உணர்வு
1.நம் உடலுக்குள்ளும் இந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.அதே சமயத்தில் எதிரிகளின் உடல்களிலும் இந்த உணர்ச்சிகளைத் தூண்டுகிறது
3.நாம் வெறுக்கும் உணர்வுகளைத் தூண்டுகின்றோம்… அங்கேயும் வெறுக்கும் உணர்ச்சிகளைத் தான் தோற்றுவிக்கின்றது.

ஆகவே அதனதன் உணர்வுக்கு அது அது போராடும். அங்கேயும் அதனதன் உணர்வுக்காகப் போராடும்.
1.எதிரிகளை நமக்குள்ளும் வளர்க்கின்றோம்
2.அங்கேயும் எதிரிகளை வளர்த்திடும் சக்தியே வருகின்றது.

ஆனால் இதை எல்லாம் வென்றவன் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரமாக உள்ளான். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் சக்தியைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

அதை நாம் நுகர்ந்தால் நமக்குள் நாரதனாக இயக்கத் தொடங்குகிறது. நாரதனாக நமக்குள் வந்தபின்… “நாம் எதைப் பிடிவாதமாக வைத்திருக்கிறோமோ…” அந்த உணர்வைத் தணிக்கச் செய்கிறது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை வலுப்படுத்திக் கொண்டு அங்கே யார் மீது வெறுப்படைந்தோமோ நம் கண்ணின் நினைவலைகளை அவர் பால் செலுத்தப்படும் பொழுது
1.நமது கண்கள்… (அதாவது) கண்ணனும் அந்த நாரதனுக்குண்டான நிலைகளை இங்கே சொல்லி
2.இந்த உணர்வின் தன்மை கண் கொண்டு பாய்ச்சப்படும் பொழுது
3.எதிரியின் உடலுக்குள்ளும் இந்த உணர்வின் தன்மையைப் பாய்ச்சி அந்த “நாரதன் வேலையைச் செய்வான்…”

நம்முடைய உணர்வுகள் அங்கே பகைமையாக்கும் உணர்வாக முதலிலே சென்றது. அடுத்து இந்த அருள் ஞானியின் உணர்வுகள் அங்கே சென்றபின் அங்கே சற்று சிந்திக்கச் செய்யும் சக்தி வருகின்றது.

1.நாரதன் கண்ணனிடம் (கண்கள் வழி) இவ்வாறு செயலாக்கிய பின்
2.இவர்கள் இரண்டு பேருடைய உணர்வுகளுக்கும்
3.கண்களுக்கும் நுகர்ந்த உணர்வுகளுக்கும் எவ்வாறு செய்கிறது…? என்று
4.வியாசகர் எவ்வளவு தெளிவாக எழுதி இருக்கிறார் என்ற நிலையை நாம் தெரிந்து கொண்டால் போதும்

எப்போதுமே “எதிரிகளை…” எதிரிகள் என்று எண்ணாதபடி… அந்த எதிரியின் உணர்வு நமக்குள் வளராதபடி முதலில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அப்படிப் பாதுகாக்க வேண்டுமென்றால் துருவ தியானத்தில் கொடுக்கப்படும் சக்தி கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை இழுத்துச் சுவாசிக்க வேண்டும்.

அந்த உணர்வின் தன்மையை நீங்கள் வளர்க்க வளர்க்க… அதே சமயத்தில் யார் நமக்குத் தீங்கு செய்கின்றார்களோ…
1.என் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும் என்றும்
2.தவறு செய்ததை அவர் சிந்திக்கும் தன்மை வரவேண்டும் என்றும்
3.இந்த உணர்வினை நமக்குள் பதிவாக்கிக் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

அதாவது… “அவர் எனக்குத் தீங்கு செய்தார்…” என்ற அந்த உணர்வை நமக்குள் வளர்த்து நம்மை பலவீனப்படுத்துவதற்குப் பதில்
1.அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்த்து
2.அந்த உணர்வினைக் கண் கொண்டு செலுத்தப்படும் போது நாரதனாக அங்கே செல்லும்.

அங்கே சென்ற பின் அவர் செய்த தீங்கினையும் அங்கே வெளிப்படுத்திக் காட்டும். அப்போது நம் மீது வரக்கூடிய உணர்வுகளைப் பலவீனப்படுத்துகின்றது.

இதைப் போன்று அடிக்கடி அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நம் எண்ணங்கள் கொண்டு நம் இரத்தநாளங்களில் பெருக்கப்படும் போது தீமைகளை அகற்றிடும் சக்தியாக வளர்கின்றது.

இதற்கு முன்னாடி அறியாமல் நாம் எடுத்துக் கொண்ட சலிப்போ சங்கடமோ சஞ்சலமோ வெறுப்போ வேதனை போன்ற உணர்வுகளால்… இரத்த நாளங்களில் உருப்பெற்ற இந்தக் கருக்கள் அனைத்தும் அடைகாத்து அணுவாக ஆன பின் நம் உறுப்புகளில் தீங்கு விளைவிக்கச் செய்கின்றது.

அதைத் தடுக்கத் துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள்ம் இதைக் கருக்களாக உருவாக்கப்படும் போது இரத்த நாளங்களில் இது பெருகுகின்றது.

1.ஏனென்றால் உடலுக்குள் இரத்தம் போகாத இடமே இல்லை
2.அருள் உணர்வுகளை இப்படி எண்ணி எடுத்துக் கொண்டால்
3.பாதுகாப்பான நிலைகளுக்கு நம்மை அழைத்துச் சென்று பகைமை உருவாகாதபடி தடுக்கும்.

அதைத் தான் காட்டிலே “இராமனுக்குக் குகன் உதவி செய்கிறான்…” என்று இராமாயணத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. (இராமன் – எண்ணங்கள்; குகன் – இரத்தநாளங்கள்)

நம்முள் ஈஸ்வரனே உள்ளான் என்பதை மறந்திடக் கூடாது – ஈஸ்வரபட்டர்

 

நமக்கு வழி காட்டிய நம் முன்னோரும்... நம்மில் கலந்து வாழ்ந்த சப்தரிஷி நிலை பெற்றவர்கள் முதற்கொண்டு இயற்கையின் நிலையைத்தான் போற்றி வழி நடந்து வந்தார்கள்.

இன்றும் அவர்களின் செயல் பல ரூபத்தில் செயல் கொண்டு வழி நடத்தியும் வருகின்றார்கள். எந்நிலையில்...?

இன்று நீங்கள் பல இடங்களில் அகஸ்தியர் நாடி போகர் நாடி பிருகு மகரிஷியின் நாடி இன்னும் இப்படிப் பல நிலை கொண்ட நாடிகள் சில இடங்களில் உள்ளதாக அந்நிலைக்குச் சென்று அதை ஒதுபவர்களின் வாயிலாக அறிந்து வருகிறீர்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய அந்நாடிக்கும் இன்றைய நிலைக்கும் பெயர் நாமம் முதற்கொண்டு ஒத்து வரும் தன்மை என்ன...?

அந்நாடியை ஓதுபவரின் ஜெபமும் எண்ணமும்... எப்பெரியோரின் நாடியைத் தெய்வ நிலை கொண்டு ஜெபம் கொண்டு அவர் ஏற்கும் பக்தி நெறியின் நிலைக்கு... அந்நாடியை எழுதிய பெரியோரை... அதை வணங்கி ஓதுபவரின் சப்த அலையுடன் வந்து கலந்து... ஓதச் செய்வதுதான் அந்நாடியில் உள்ள நிலை.

இன்று படிப்பவரின் அறிவுக்கு எட்டாத இன்றைய கல்வித் திறனும் அதை எழுதி வைத்த காலத்தின் கல்வித் திறனும் மிகவும் வேறுபட்ட நிலையில் இருக்கும் நிலை கொண்டு இன்று ஓதுபவருக்கு அச்சொல்லின் நயமும் அழகும் அவரால் ஈர்த்துப் படித்திடவும் முடியாது.

சில குறிப்புகள் மட்டும் இவரால் அறிந்திட முடியும். அந்நிலையில் வந்து சொல்வதெல்லாம் அந்நாடிகளை எழுதியவர்களே தான் வந்து உணர்த்துகிறார்கள்.

காமாட்சி நாடி மீனாட்சி நாடி என்றெல்லாம் சொல்லும் நிலையிலும் அந்நிலையிலுள்ள சித்து நிலை கொண்ட காமாட்சி அம்மனும் மீனாட்சி அம்மனுமே வந்து இவர்கள் நிலையில் உணர்த்துவதுதான்.

சிலருக்கு நாடியில் வந்ததை அதன் சொல்லிய வாக்குப்படி எந்நிலையில் நம்புகின்றார்களோ அந்நிலையின் பரிபூரண அருளாசி பெறுகின்றார்கள்.

நம்பிக்கையில் நடப்பதுதான் இவ்வுலகமே...!

நாடியில் கேட்டதையே மனச் சஞ்சலத்துடன் வளர விடுபவனுக்கு அனைத்து நிலைகளுமே தவறாகத்தான் நடந்திடும்.

ஆண்டவனே... ஆண்டவனே...! என்பது நாம் ஆண்டவனாக வணங்கும் பெரியோரின் நிலையையே சஞ்சலப்படுத்தும் நிலைதான் இவையெல்லாம்.

நம் பாட நிலையில் தான் ஆண்டவன் என்றால் யார்...? என்பதனைப் பல நிலைதனில் விளக்கியுள்ளோம். ஞான வழியின் பக்குவ நிலைக்கு நாம் பெறும் சொத்து தான் ஆண்டவனின் அருள் சொத்து.

ஆவி உலகின் சூழ்ச்சியினால் இவ்வுலக நிலையே தத்தளித்த நிலையில் உள்ளது. ஆவி உலகில் அல்லல்பட்டு...
1.பல செயல்களை அதி கஷ்டத்துடன் செயலாற்றும் பல நிலை கொண்ட ஆவிகளுடன் நாம் கலந்து வாழ்வதினால்
2.நம்மில் தியான நிலை கொண்ட செயலை வளரவிடுவது ஒன்றுதான் இன்று இவ்வுலகினில் உள்ள நிலையிலிருந்து நாம் தப்பும் வழி.

ஏனென்றால் இப்படர்ந்த உலகினில் நம் எண்ணத்தில் சிறு சலிப்புக்கும் கோபதாப குரோதத்திற்கும் இடம் அளித்திட்டாலும் இவ்வாவியின் நிலையிலிருந்து தப்புவது கடினம்.

நம்முள் உள்ள இறை சக்தியை உணர்ந்தே அவ் ஈஸ்வர ஜெபத்தை எந்நிலையிலும் நம் நினைவில் கொண்டிடல் வேண்டும்.

1.நம்முள் அவ் ஈஸ்வரனே உள்ளான் என்ற சத்தியத்தை மறந்திடாமல்
2.ஒவ்வொருவரும் இதன் வழி பெற்று வாழ்ந்தால்தான்
3.இவ்வாவி உலகிலுள்ள ஜீவ ஆத்மாக்கள் அனைத்தின் செயலிலிருந்தும் நாம் தப்ப முடியும்.

March 29, 2022

பகைமை என்பது நல்லதா... கெட்டதா...!

 

பகைமை இல்லாது எதுவுமே நடப்பதில்லை.
1.ஒரு பகைமை என்று வந்து விட்டால்
2.“உஷார் தன்மை கொண்டு”
3.நல்லதைக் காக்கும் உணர்வை வளர்த்து விட வேண்டும்.

பகைமை உணர்வுகள் வந்தால் எனக்கு இப்படி நடக்கிறதே…! என்று எண்ணத்தை வளர்த்து விட்டால் அந்த உணர்வின் அணுக்கருக்கள் நமக்குள் வளர்ந்து நோயாகவும் மாறுகின்றது… நமது எண்ணங்களும் சீர் கெடுகின்றது.

அதை மாற்ற வேண்டுமென்றால் துருவ தியானத்தில் கொடுத்த ஆற்றலைp பருகி அதை வலுப் பெறச் செய்ய வேண்டும்.

எப்பொழுது நம் மனம் சோர்வடைகிறதோ அந்தச் சோர்வை நமக்குள் விடாதபடி தடைப்படுத்த ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் பெருக வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டுமென்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இதைத் தான் கண்ணன் கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வது.

கர்ப்பமான தாயின் கருவிலே சிசு இருக்கப்படும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று கருவிலே இந்த நினைவைச் செலுத்தினால் அந்த உணர்வின் தன்மை அங்கே குழந்தைக்குள் வளர்ச்சியடைகின்றது.

அதே போலத் தான் நாம் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் அணுக்களாக விளைகின்றது. கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து தான் நமக்குள் அணுவின் தன்மையாக உருவாகின்றது.

அணுவின் தன்மை நமக்குள் உருவாக்கினாலும் அருள் மகரிஷிகளின் அருள் பெற வேண்டும் என்று விண்ணை நோக்கி எண்ணி அந்த உணர்வினை உயிருடன் ஒன்றி மீண்டும் உடலுக்குள் செலுத்தும் போது
1.இரத்த நாளங்களில் அந்தக் கருக்கள் உருவாக வேண்டும் என்றும்
2.அது எங்கள் உடல் முழுவதும் பரவி உடல் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்றும்
3.வெறும் வாயால் சொல்லக் கூடாது.
4.இந்த நினைவினை உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு அது பெற வேண்டுமென்று நினைவினை “உள் பாய்ச்ச வேண்டும்…” (3 & 4 முக்கியம்)

வெளியிலேயே பார்க்கும் பொழுது வேண்டாதவர்கள் யாராவது இருந்தால் அவர் உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருந்தால் “எனக்கு இப்படிச் செய்தார்கள்…” என்று எண்ணினால் போதும்.

இந்த நினைவலைகள்… கண்ணின் நினைவாற்றல்…
1.அவர் உடலில் நம் உணர்வுகள் பதிவாகி இருப்பதால்
2.அங்கே (அதைப்) போய் உடனே தாக்கச் செய்யும் (EARTH).

எப்படி இராக்கெட்டை விண்ணில் செலுத்தி அதனுடன் தொடர்பு கொண்ட நிலையில் இங்கே தரையிலிருந்து இயக்குகின்றனரோ இதைப் போல “வேண்டாதவர்களை எண்ணும் பொழுது...”
1.உடனே அவர்களை அது இயக்குகின்றது.
2.அவர் செயலாக்கங்களை இடைமறிக்கின்றது
3.அவருக்கு இடையூறு வருகின்றது
4.அந்த அணுக்களின் தன்மை அங்கே வளர்ச்சி பெறுகின்றது... அதன் வழி அங்கே தடைப்படுத்துகின்றது.

இதைப் போன்றுதான் அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்ற உணர்வினை நமக்குள் எடுத்து விட்டால் இந்த நினைவு உடனே அங்கே செல்கின்றது. இது நமக்குள் இங்கே வலுப்பெறுகின்றது. வேண்டாதவர் என்ற நிலையில் அவர் உணர்வின் சக்தியைத் தடைபடுத்துகிறது.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

அருள் ஒளியை நமக்குள் பெருக்கப் பெருக்க… நமகு யார் தீமை செய்தாலும் “என் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும்…” என்று எண்ணினால் போதும்.

நாம் வளர்த்துக் கொண்ட இந்த உணர்வுகள்...
1.அவர்கள் நமக்குத் தீமை எண்ணும் பொழுதெல்லாம்
2.சிறுகச் சிறுக சிறுகச் சிறுக அவர்களுக்குள் இது ஊடுருவப்பட்டு
3.அங்கிருக்கும் நமக்குத் தீமை செய்யும் அணுக்களைத் தணியச் செய்யும்.

இது போன்ற நிலைகள் வளர்ந்து விட்டால் தீமையான அணுக்கள் நமக்குள் வளராது... நமக்கு நோய் வராது... நம் காரியங்களைத் தடைத்தும் நிலைகளும் வராது.

உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மனிதன் தனக்குள் இருக்கும் ஆற்றல்களை ஆக்கபூர்வமான காரியங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

அச்சு ஒன்று பதித்து உருவம் ஒன்று ஆவதில்லை. எந்த விதையைப் போடுகின்றோமோ அந்தச் செடிதான் வளரும்.

நம் எண்ணத்தை எந்த நிலையில் செயல்படுத்துகின்றோமோ அந்த நிலையின் தொடரின் வழி நிலையின் வாழ்க்கைதான் வந்தமையும் நமக்கெல்லாம்.
1.எண்ணப்படிதான் வாழ்க்கை...
2.உன் எண்ணம் போல் வாழ்ந்திடு...! என்ற பெரியோரின் வாழ்த்தைத்தான் நாம் பெறுகின்றோம்.

ஒரே தாயின் வயிற்றில் பிறக்கும் பல குழந்தைகளின் குண நிலை ஒன்று போல் இருப்பதில்லை. குண நிலை மட்டுமல்ல மன நிலையும் ஒவ்வோர் உடலுக்கும் ஒவ்வொரு வித மனம் உண்டு.

இப்பூமியில் உதித்த ஜீவன் பெற்ற அனைத்திற்குமே ஒவ்வொரு மணம் உண்டு. மணத்தைப் போலவே ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சக்தி நிலை உண்டு.

ஒவ்வொரு ஜீவ உடலுக்கும் அவரவர்கள் எந்நிலை கொண்ட குண நிலையையும் சக்தி நிலையையும் வளர்த்துக் கொள்கின்றார்களோ அந்நிலையின் வளர்ச்சிக்கு அந்நிலைக்கு ஒத்த குண நிலைகளில் உள்ள ஆவி உலகிலுள்ள ஆத்மாக்களின் தொடர்பு நிலையும் இவர்களுக்கு வந்தடைகின்றது.

இன்று இந்நிலத்தில் நீர் எங்குள்ளது..? எந்நிலையில் ஊற்று நிலை உண்டு...? என்பதனையறிய சிலரின் உடல் நிலையிலேயே அச்சக்தி நிலையுண்டு.

அவர் உடலிலேயே அச்சக்தி நிலையும் அந்நிலைக்கு ஒத்த அவர் நிலையில் உள்ள மற்ற ஆத்மாவின் தொடர்பும் அவர் உடலில் இருந்தால் தான் நீர் உள்ள நிலைகளைக் கண்டறிந்திட முடிந்திடும்.

நம் முன்னோரின் வழியில் வந்தது தான் இந்நிலையின் வழி. இவை போலவே இப்பூமியில் உள்ள உலோக நிலையையும் கண்டறியலாம்.

இவ்வுடலில் இப்பூமி எச்சக்தியெல்லாம் எடுத்து வெளிப்படுத்துகின்றதோ அந்நிலைக்குகந்த சக்தி நம் உடல்களிலும் உள்ளது. இக்காற்றில்தான் அனைத்து சக்திகளும் கலந்துள்ளன.

எப்படி இப்பூமியில் பல நிலை கொண்ட உலோகங்கள் வளர்கின்றனவோ அந்நிலைபோல் ஒவ்வொரு ஜீவ உடலுக்கும் பல நிலைகள் கொண்ட சக்தி நிலைகள் உண்டு.

நமக்குகந்த சக்தி நிலையை வளர விட்டு அவற்றின் நிலையை அறிந்து அதன் வழிக்குச் செல்லும் பக்குவ நிலை புரியாமல் வாழ்கின்றோம்.

இன்று பல இடங்களில் மனோவசிய நிலை (மெஸ்மரிஸம்) என்னும் நிலையைச் சிலர் அறிந்து ஒருவரது நிலை அனைத்தையும் கட்டுப்படுத்தி இவர்கள் எச்சக்தியைப் பாய்ச்சுகின்றார்களோ அச்சக்தியின் நிலை கொண்டெல்லாம் மனோவசியத்திற்கு உட்பட்டவர் நடப்பதாகப் பார்த்தும் கேட்டும் இருப்பீர்.

இவற்றின் நிலையென்ன...?

அறிந்து... கல்வி அறிவில் வந்த நிலை என்பர் பலரும். கல்வி அறிவில் மட்டும் வந்த நிலையல்ல அந்நிலை.

அவர்கள் நிலையும் இன்று பல நிலை கொண்ட சாமியார்கள் மந்திரம் செய்து பல பொருட்களை விபூதி புஷ்பம் இப்படிச் செய்யும் நிலைக்கும் இம்மனோவசியம் செய்யும் நிலைக்கும் ஒத்த நிலைதான்.

ஆவியின் தொடர்பு கொண்டு மனோவசியத்தால் யாரை அந்நிலைக்கு வசியப்படுத்துகிறார்களோ அவர்களின் எண்ணத்துடன் இவ்வாவியின் எண்ண அலையும் சப்த அலையும் கலக்கவிட்டு வசியப்பட்டவரின் நிலையை அடக்கி இவர்கள் ஏவிய ஆவியின் நிலைப்படியெல்லாம் அவ்வசியப்பட்டவர்கள் நடக்கும் நிலைதான் இம்மனோவசிய நிலை.

யார் இம்மனோவசியம் செய்கிறாரோ அவரது சொல்லும் அவரது எண்ணமும் இவ்வசியப்பட்டவரின் நினைவில் கலந்துள்ள ஆவியின் நிலைக்கும் தொடர்பு கொண்டு இவ்வசியப்படுத்தியவர் சொற்படியெல்லாம் அவ்வாவி அவ்வசியப்பட்டவரின் உடலில் இருந்து செயல்படுத்துகிறது.

1.அறிந்தோ அறியாமலோ செய்யும் பிழை இது
2.வசியப்பட்டவரின் சக்தியும் பாதிக்கப்படுகிறது
3.வசியம் செய்தவரின் சக்தியும் இதனால் பாதிக்கப்படுகிறது.

இதன் நிலையில் அடையும் நல் நிலை என்ன..? கால நிலையும் விரயமாகிறது.

ஆண்டவன் அருளிய சக்திதனை அன்பென்னும் பொக்கிஷமாக்கி அச்சக்தியான ஜெபத்தைக் கொண்டு பல உன்னத அறிவுச் செல்வத்தை நாம் பெற்று இவ்வுலகினைச் செழிப்பான உலகமாக்கி செழித்து வாழ்ந்திடும் இயற்கையின் செழிப்பிற்கு நம் சக்திதனை ஒன்றச் செய்தல் வேண்டும்.

அப்படிச் செய்தால் இவ்வுலகமே செழித்து...
1.இன்று இக்காற்றே கடும் விஷமாகச் சுற்றியுள்ள நிலையை மாற்றி
2.ஆனந்தமான மண நிலையைப் பரவச் செய்யத் தாவரங்களின் நிலையைத் துரிதப்படுத்தி… தாவரங்களை வளரச் செய்து
3.நற்கனிகளையும் நல் தானியங்களையும் நாம் பெற்றே
4.நற்சுவையுடன் நாம் உண்டே நல் மணத்துடன் நாம் வாழும் நிலை ஏற்படுத்திட முடியும்.

அதற்கு நாமெல்லாம் ஒன்றுபட்டு நம் சக்தியின் ஜெபத்தால் அந்த இயற்கைக்கே அடிபணிவோம்.

March 28, 2022

நம் உயிர் கொடுக்கும் தீர்ப்பு

 

நம் உயிரை மதித்துப் பழகுதல் வேண்டும். காரணம்... நாம் எதை எண்ணுகின்றோமோ
1.அதைத்தான் இயக்குகின்றது
2.அதைத்தான் உடலாக்குகின்றது
3.அதைத் தான் ஆளுகின்றது.

அதை எண்ணும் பொழுது அதன் வழி வருகின்றது. உடலான மணமே நமக்குள் எண்ணமாகி இந்த எண்ணத்தின் உணர்ச்சியே நம் வாழ்க்கையின் செயலாகவும் மாறிக் கொண்டே இருக்கின்றது.

தீமைகளை நீக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இயக்கி அதை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய உலக நிலைகளில் இருக்கும் விஷத் தன்மைகளை நமக்குள் கவராது ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

பத்திரிக்கையைப் படித்தாலும் டி.வி.யைப் பார்த்தாலும் பிறருடைய குறைகளைக் கேட்டு அறிந்து கொண்டாலும் அந்த அறிந்து கொண்ட தீமைகள் நமக்குள் வளராது ஒவ்வொரு நொடிக்கும் நாம் மனத் தூய்மை செய்து கொண்டே இருத்தல் வேண்டும்.

அப்படிச் செய்தோம் என்றால்... நமது வாழ்க்கையில் இந்தக் கணக்கு கூடினால்...
1.அதற்குத் தக்க நமது உயிர் ஜட்ஜ்மெண்ட் கொடுக்கும்
2.பிறவியில்லா நிலையாக அடுத்த பிறவி இல்லை என்று உயிர் தீர்ப்பளிக்கும்.

அதிலே சிறிது தவறினால் உயிரான்மாவில் விஷத்தின் தன்மையே வலிமையாகும். அந்த உணர்வின் அடிப்படை நமக்குள் வளர்ந்து விட்டால் அதன் தீர்ப்பாக உயிர் மீண்டும் நம்மைப் பிறவிக் கடலில் அமிழ்த்திவிடும்.

மனிதனாக வரக்கூடிய காலம் எப்போது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இப்போது இருக்கக்கூடிய விஞ்ஞான உலகத்தில் மனிதன் இறந்தால் மீண்டும் மனிதனாக வருவதற்குப் பல காலமாகும்.

மனிதனே மிருக உணர்வு கொண்டு மாறும் நிலையாகிக் கொண்டிருக்கிறது.
1.பண்டைய கால மக்களோ தங்கள் அனுபவத்தால் எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு வந்தார்கள்.
2.இன்றோ விஞ்ஞான அறிவால் கடும் விஷத்தின் தன்மையாக மாறி மனிதனல்லாத உருவையே உருவாக்கிடும் நிலை வளர்ந்து விட்டது.

ஆக விஞ்ஞான அறிவு ஒரு பக்கம் கூடிக்கொண்டே வந்தாலும் இந்த உடலை ஆனந்தப்படுத்துவதற்காக “இரவு நேரக் கேளிக்கைகள்” என்ற பேரில் எத்தனையோ தவறான பாதையில் மதுவையும் தன்னை மறந்து... அதிலே ஆனந்த நிலைகள் பெற வேண்டுமென்று நகரங்களில் ஆனந்தக் கூத்தாடும் நிலைகளாக வைத்து விட்டார்கள். அரசும் இதை அனுமதிக்கிறது.
1.இந்த உடலில் இது போன்று இன்று காணும் சொர்க்கம்
2.அடுத்து நம்மை நரகத்திற்கே அழைத்துச் செல்லும் என்பதை மறந்து விட்டார்கள்.

இந்த உலகமே துரித நிலைகள் கொண்டு மனிதன் மிருகமாக மாறும் நிலை வருகிறது. இந்த பூமியே நிலை தடுமாறப் போகின்றது, தடுமாறி விட்டால் அதை உணரப் போவதில்லை.
1.இந்தத் தியானத்தில் வலுப்பெற்றால் அதையும் உணர முடியும்.
2.அதிலிருந்து விடுபடும் ஞானமும் நமக்குக் கிடைக்கும்.

உலகில் அணுகுண்டுகள் வெடிக்கத் தொடங்கினால் கதிர் இயக்கங்கள் மேக மண்டலங்களாக மாறி சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியிலே படாதபடி தடைப்படுத்தினால் பூமி பனிப்பாறையாக மாறிவிடும்.

இப்போது இருக்கும் பூமி தன் திசை மாறும்... நாம் எல்லாம் கடலுக்குள் போகும் நிலை வந்துவிடும்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இப்போது இருந்தே அந்த அருள் உணர்வின் தன்மையை நாம் வளர்த்துக் கொண்டால் தான் தப்ப முடியும்.

அமாவாசை தினத்தின் முக்கியத்துவம் - ஈஸ்வரபட்டர்

நம் முன்னோர்கள் நமக்குக் காட்டிய ஒவ்வொரு வழியிலும் உள்ள உண்மையினை அறியாமல் நாம் அவற்றைக் குடும்பங்களில் வந்த குடும்பச் சடங்கு... சாங்கியம்... என்று வழிப்படுத்தி விட்டோம்.

1.அதன் நிலையில் மாறுபடும் பொழுது மனச் சஞ்சலம் கொண்டு
2.நாம் தெய்வக் குற்றம் செய்து விட்டோம்... பாவத்திற்கு ஆளாகி விடுவோம் என்ற பயந்த நிலையில்
3.இன்றும் பல குடும்பங்களில் பல நிலைகள் நடக்கின்றன.

பக்தி நிலை வளர்வதற்காக நம் முன்னோர்கள் பல வழிகளில் அவர்களின் சந்ததியார் வர வேண்டுமென்பதற்காகக் காட்டிச் சென்ற வழிதான் அந்தப் பல வழிகளும்.

1.அமாவாசை அன்று அவரவர்களின் முன்னோர்களை நினைத்து வணங்குவது…!
2.அமாவாசையில் வைத்தியம் செய்து கொண்டால் நற்பயன் அடையலாம்...!
3.அமாவாசையன்று எந்தக் நற்காரியங்களுக்கும் நல்ல நாள்…!
4.அமாவாசையன்று சேமித்து வைத்த தானியத்தைச் சூரியனின் ஒளி படும்படி வைத்தால் பல நாட்கள் அவற்றில் பூச்சி புழுக்கள் அண்டாது…!
5.அமாவாசையன்று தொழில்களுக்குச் செல்லலாகாது…! என்றெல்லாம்
6.பல நிலைகளை நமக்கு உணர்த்திச் சென்றார்கள் நம் முன்னோர்கள்..

அமாவாசையின் நிலையென்ன...?

அன்று நமக்கு இப்பூமியின் மேல் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்கள் அனைத்தும் அப்படியே வந்து தாக்குகின்றன. தாக்கும் நிலை கொண்டு இப்பூமியும் ஈர்த்து வெளிப்படுத்துகிறது.

அமாவாசையன்று கடல் பொங்குகின்றது என்கின்றோம். கடலும் பொங்குகிறது. அமாவாசையன்று மட்டும் கடல் நீர் அதிகரிப்பதன் நிலையென்ன...?

இப்பூமித்தாய் ஈர்த்து வெளிப்படுத்தும் நிலையில் அதிசக்தி வெளிப்படுத்துகிறது. கடல் நீர் எப்படி பொங்குகிறதோ அதைப் போலத்தான் ஜீவராசிகளின் நிலையும் தாவரங்களின் நிலையும் பனிமலையின் நிலையும் எரிமலையின் நிலையும் மற்றுமுள்ள பல இவ்வுலகில் இப்பூமியிலிருந்து இப்பூமித்தாய் வளர்க்கும் அனைத்து ஜீவ நிலை கொண்ட யாவுமே அமாவாசை அன்று சூரியனிலிருந்து கிடைக்கும் சக்தியின் மாற்றத்தினால் இந்நிலை பெறுகின்றது.

மனிதர்களுக்கு அமாவாசையன்று உடல் கனம் தெரியும். ஒரு வித சோர்வும் என்றும் இல்லாத நிலையில் சிறு தளர்ச்சியும் ஏற்படும்.

நாம் அன்று சுவாசிக்கும் காற்றில் கனமான அணு நிலை கொண்ட சூரியனிலிருந்து வெளிப்படும் சக்தியின் துரிதத்தினால் அக்காற்றை நாம் சுவாசிப்பதினால் நம் உடல் நிலையில் மாற்றம் தெரிந்திடும்.

1.ஆரோக்கியமுடன் வாழ்பவர்க்கே இந்நிலை ஏற்படும் பொழுது
2.நலிவுற்றோரின் நிலைக்கு அவர்கள் எடுக்கும் சுவாசம் கனம் பெறுவதால்
3.அவர்களின் உடல் நிலைக்கு முதலில் இருந்த நிலைக்கும் அவ்வமாவாசை நாளுக்கும் முன்னேற்றத்தை விட நலிவுத் தன்மை கூடிவிடுகின்றது.

நம் முன்னோர்கள் அதிக நலிவுற்றோர்களைக் காணும் பொழுது அமாவாசை தாண்ட வேண்டும் என்று சொல்வதன் நிலையும் இதுதான்.

நலிவுற்ற நிலையில்... இக்கனமான சுவாச நிலையை நலிவுற்றோர் ஈர்த்து சுவாசிப்பது கடினமாவதினால்தான் இந்நிலை நடக்கின்றது. புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கும் இவ்வமாவாசையன்று அவர்கள் மன நிலை அதிகமாக மாறுபடும் நிலைக்கு வருகின்றது.

அமாவாசையன்று சந்திரனில் இருந்து நாம் பெறும் பல நிலைகள் நமக்குக் கிடைக்காமல் போகின்றது. நமக்கு எப்பொழுதும் பாதுகாப்பு போல் உள்ள சந்திரனின் அன்பான அரவணைப்பு இல்லாததினால் இந்நிலை ஏற்படுகின்றது.

விண் சென்ற முன்னோரைப் பக்தி கொண்டு நாம் வணங்கும் பொழுது நம் எண்ணம் அனைத்தும் அவர்களின்பால் பக்தி கொண்டு செல்வதினால் அவர்கள் காக்கும் நிலைக்கு நம்மை நாம் நிலைப்படுத்துகின்றோம்.

அப்பொழுது நமக்கு அமாவாசையன்று கனமான சுவாசத்தை ஈர்த்துச் சுவாசித்தாலும் அந்நிலையில் அவர்களின் ஆசி பெறுவதினால் இந்நிலையில் சோர்வு நமக்குத் தெரிவதில்லை.

அமாவாசையன்று நம் முன்னோர் விரதம் இருக்கும் நிலை ஏற்படுத்தியது எந்த நிலையில்...?

நாம் எடுக்கும் சுவாசத்திலேயே அமாவாசை தினத்தில் பல சக்திகள் அதிகரித்து ஏற்பதினால் இவ்வுடல் நிலைக்கு அன்று பசியின் நிலையும் குறைவு.
1.அதன் நிலையை அறிந்துதான் நம் முன்னோர்கள் “விரதம்” என்னும் பக்தி நிலையை
2.அந்நிலையில் காட்டி நமக்கு வழிப்படுத்தித் தந்தார்கள்.

எந்த ஒரு சிறிய நிலையையும் நம் முன்னோர்கள் நமக்குப் பக்தி நிலையிலேயேதான் உணர்த்திச் சென்றுள்ளார்கள்.

ஆண்டவன் என்ற பக்தி நிலை ஒன்றினால் மட்டும்தான்... என்றும் இவ்வுலக மக்களின் நிலையை நல்வழிப்படுத்திட முடியும் என்ற உண்மை நிலையில் தான்... பல நிலைகள் கொண்ட செயல்களையெல்லாம் நமக்கு உணர்த்திச் சென்றார்கள். பல ஏடு நிலைகளில் எழுதி வைத்தும் சென்றுள்ளார்கள்.

எந்நிலையிலும் நம்பிக்கை என்ற ஆண்டவனை நம்பினால் அனைத்து சக்திகளின் ஆண்டவனையே ஆண்டவனின் அருளையே அந்நம்பிக்கையில் நாம் பெறலாம்.

நல்லோரின் வாயிலிருந்து வரும் சொற்கள் எல்லாமே ஆண்டவனின் நாமச் சொற்கள் என்ற நம்பிக்கையுடன்
1.நாம் நம் முன்னோரையும் நம் பெரியோர்களின் வாழ்த்தையும்
2.நம்பிக்கையுடன் ஆண்டவனின் சொற்களாக நம்பி வரம் பெற்றால் நடப்பவை யாவும் நல் நிலைகளாக நடந்திடும்.

நம் முன்னோரையும்.. நம்மில் பெரியோரையும்... அவர்கள் ஆசி பெற நாம் வணங்குவது ஆண்டவனின் அருள் சொற்களை அவர்களின் நிலையில் இருந்து பெறுகின்றோம் என்ற நம்பிக்கையில் நலம் பெறப் “பெரியோர்களின் ஆசி பெற்று வாழ்ந்திடுங்கள்...!”

March 26, 2022

அகஸ்தியன் சென்ற ஞானப் பாதையிலேயே நாமும் செல்ல வேண்டும்

குருநாதர் காட்டிய வழியில் மெய் ஞானிகளின் ஞான வித்தை உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். அதைக் கூர்ந்து பதிவாக்கினாலே போதுமானது.

ஞானிகளின் அருளாற்றலைப் பெறக்கூடிய தகுதியாக யாம் உபதேசிக்கும் இந்த அருள் உணர்வுகள் உங்கள் இரத்த நாளங்களில் கரு வளர்ச்சியாகி பின் அணுக்களாகப் பெருகும்.

முதலில் கரு என்பது முட்டை. பின் யாம் பதிவு செய்த உணர்வின் தன்மையை நீங்கள் மீண்டும் எண்ண எண்ண அந்த அணுக்கள் வளர்ச்சி அடைந்து விடுகின்றது.

1.கோழி தான் இட்ட முட்டைகளை எப்படி அடைகாக்கின்றதோ
2.அதனின் உணர்வின் தன்மை உடலில் வெப்பம் ஆகின்றதோ
3.அதன்பின் அந்த அணுவின் தன்மை வெப்பத்தின் துடிப்பு கொண்டு
4.கருவின் துணை கொண்டு அது குஞ்சுகளாக விளைகின்றது.

குஞ்சுகள் வெளி வந்த பின் தாய்க் கோழி எந்த உணவினை உட்கொண்டதோ அதே உணவைக் குஞ்சுகளும் உட்கொள்ளத் தொடங்குகிறது.

அதே போன்றுதான் இப்பொழுது இங்கே உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும் உங்கள் இரத்தங்களில் கருவாக உருவாகின்றது.
1.அதனை மீண்டும் நினைவு கூற கூற முட்டையின் வளர்ச்சி பெறுகின்றது
2.சாமி சொன்னார்... என்று அடிக்கடி எண்ணும் பொழுது அதை அடை காத்தது போல் ஆகின்றது.

கோழி எங்கே இரை தேடிச் சென்றாலும் தன் குஞ்சின் நினைவு கொண்டு தன் முட்டைகளை எப்படி அடைகாக்கின்றதோ அதைப் போன்று
1.அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி உங்களுக்குள் விளைய அடிக்கடி இந்த நினைவுகளை எடுத்து
2.நீங்கள் எத்தொழிலைச் செய்தாலும் இவ்வாறு எண்ணிப் பாருங்கள்.

முதலில் நாம் பதிவு செய்து கொண்ட அந்த உணர்வுகளை நினைவுபடுத்த நினைவுபடுத்த அதை அடைகாப்பது போன்று ஆகி ஞானிகளின் அரும் பெரும் சக்திகள் நமக்குள் விளைகின்றது.

கோழி இரை தேடும் பொழுது கூவி... தன் குஞ்சுகளைக் கூப்பிட்டு அதற்கு எப்படி இரை கொடுக்கின்றதோ இதைப் போல
1.யாம் பதிவு செய்த ஞான வித்து உங்களுக்குள் அந்த அணுவின் கருவாகி விட்டால்
2.இந்த உணர்ச்சியின் கிளர்ச்சிகள் இரத்த நாளங்களில் கிளம்பும்போது
3.உங்கள் உயிர் அந்த உணர்வின் ஒலிகளை வெளிப்படுத்தி
4.காற்றில் கலந்துள்ள அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை
5.கண் வழியும்... காது வழியும்... உடல் வழியும்... சுவாசிக்கும் அந்த உணர்வு வழியும் உங்களுக்குள் கொண்டு வந்து
6.சுவாசத்தின் மூலம் உடலுக்குள் பரவச் செய்து அந்தக் கருக்களை உருவாக்குகின்றது.

இந்த வழியில் நடந்து அதனின் வளர்ச்சி பெற்ற பின் நம்முடைய நினைவாற்றல் “அந்த அகஸ்தியன் சென்ற பாதையிலேயே செல்லும்...”

மகரிஷியால் காக்கப்பட்டு வரும் ஞானப் பொக்கிஷம் - ஈஸ்வரபட்டர்

 

இவ்வுலக மக்களின் எண்ணங்களையும் செயல்களையும் அவர்கள் அறியாமலே அவர்களை இப்பேராசை என்னும் செயற்கைப் பேய் ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ளது.

1.அன்றாண்ட அரசர்களின் ஆவேச உணர்ச்சிகள் அன்றைய மக்களின் எண்ணங்களிலெல்லாம் கலக்கவிட்டு
2.இன்றும் அதே வழி வழியாய் வந்த அவ்வாவேச நிலை கொண்ட உணர்ச்சியினால்
3.இவ்வுலக நிலையே செயற்கைக்கு அடிபணிந்து வாழும் நிலையில் உள்ளது.

இன்றுள்ள மனிதர்களில் பெரும்பாலோரின் எண்ணங்கள் பெரும் பேராசை கொண்ட பணத்திற்கு அடிமைப்பட்டு வாழும் நிலை தான்...! செல்வத்தை ஈட்ட எவ்வழியையும் நாடலாம் என்று தான் உள்ளார்கள்.

இவ்வுலகில் வாழப் பணச் செல்வம் ஒன்றைத்தான் பொக்கிஷத்தின் பொக்கிஷமாகக் கருதி… அதற்கே அடிமையாகி… இவ்வுலகத்தையே செயற்கையின் கோளமாக்க இந்நூற்றாண்டில் அறிவு வளர்ச்சி பெற்ற மனிதர்கள் இவ்வுலக நிலையை நடத்திச் செல்கின்றார்கள்.

ஆண்டவனையே பல ஜாதி நிலை கொண்டு பிரித்து வைத்துள்ளார்கள். ஜாதி என்னும் வழியை உண்டு பண்ணியவர்களும் அதன் வெறி நிலையில் இன்று தன்னைத் தானே தன் ஜாதிக்குத்தானே அடிமைப்பட்டு உழன்று வாழ்கின்றார்கள் என்று எண்ணுவதில்லை.

தன் ஜாதிக்குத் தான் மதிப்பளிப்பதாக எண்ணுகிறார்கள் அச் ஜாதிக்கு அடிமைப்பட்டவர்களெல்லாம்...!

இவ்வுலக நிலையை இவ்வரசர்கள் ஆண்ட காலம் முதல் இப்பொழுது அரசாட்சி நிலை கொண்டும் ஆட்சியில் உள்ளவர்கள் நடத்திடும் நாடகத்தினால் வந்த வினைச் செயல்தான் இன்று இவ்வுலக நிலையில் உள்ளன.

சூழ்ச்சியான நிலையில் பேராசையின் பேயை வளர விட்டுத்தான் இன்று இவ்வுலக நிலையே உள்ளது.

அனைவரின் எண்ணமும் ஒன்றுபட்டுச் செயல்படும் நிலையாகக் கூடி வரும் நிலையை ஏற்படுத்திட
1.இன்றுள்ள பல மத வழிகளில் உள்ள பெரியோர்கள் எல்லாம் ஒரு நிலைப்பட்டு
2.இவ்வுலக நிலையை இவ்வுலக மக்களின் எண்ண நிலையை ஒன்றுபடுத்திட
3.பக்தி என்னும் நிலையை வளரவிட்டு அன்பு பாசம் என்ற பிணைப்பு நிலையை மக்களின் எண்ணத்தில் சுழல விட்டு
4.இப்பேராசையிலிருந்து விடுபட்டு ஆசையான அமுதை ஊட்டி தெய்வீக நிலையில் ஈர்த்து
5.இன்றுள்ள மக்களின் ஜன நெருக்கத்தை மிகத் துரித நிலையில் பெருகும் நிலையைச் சமப்படுத்தி
6.தாவர வர்க்கங்களை ஓங்கச் செய்து இவ்வுலகை நிலைப்படுத்தும் தன்மைக்கு
7.பல நூறு வருடங்களுக்கு முன் நம்மைப் போல் இவ்வுலகினில் பிறந்து நமக்கெல்லாம் வழிகாட்டியாய் இருந்த
8.இவ்வுலகின் ஞானச்சுடரான மகரிஷி ஒருவர் எழுதி வைத்த பெரும் பொக்கிஷம் ஒன்று
9.அவரால் பாதுகாக்கப்பட்டு அந்நிலையிலேயே ஜெபம் கொண்டும் காத்துள்ளார்.

அவருக்கு ஜாதி மதம் ஒன்றுமில்லை. இன்று இவ்வுலகிலுள்ள சக்தியின் செல்வங்களான சக்தி பெற்ற நம் மக்களில் யாவரும் அறிந்திடலாம் அதை.

அவரவர்களின் நிலையில் நடக்கும் நிலை கொண்டு ஜெபத்தின் அருளைப் பெற்றால் அந்த ஞானச் சுடரின்... அம்மகரிஷியின் அருளைப் பெற்று... அவ்வுலகப் பொக்கிஷத்தை எடுத்து அனைவருக்கும் அதிலுள்ள உண்மையை உணரும் பாக்கியத்தைப் பெற்றுத் தந்திடலாம்.

இம்மதம் என்ற நிலையை மாறுபடுத்தி இன்று இவ்வுலக நிலையைக் காத்து ஆண்டவன் அருள் பெற்று ஆண்டவனின் ஜோதிகளை...
1.பல ஞான நிலைகளை மக்களுக்கு உணர்த்திடும் நல் பெரியோர்கள் அனைவரும் ஒன்றுபட்டால்
2.இவ்வுலகில் உதித்த சக்தியின் செல்வக் குழந்தைகளை
3.இச்செயற்கையின் பேராசைப் பேயிலிருந்து விடுபடும் நிலைக்கு அழைத்திடலாம்.

இஜ்ஜாதி மதப் பேயின் வழி நடந்திடாமல் ஒன்றுபட்டுச் செயல் கொண்டு தன்னைத்தானே அடிமைப்பட்டு வாழும் நிலையிலிருந்து மீண்டு அருள் வழி நடந்திடுங்கள்.

March 25, 2022

“குரு வழியில்” நன்மைகள் செய்ய வேண்டிய முறை

 

கேள்வி:
நண்பர் ஒருவர் வயிற்று வலி என்று என்னிடம் வந்தார். வலி நீங்கிவிடும் என்று சொன்னேன். அவருக்கு நன்றாகி விட்டது... ஆனால் எனக்கு வயிற்று வலி வந்துவிட்டது. இதற்கு என்ன காரணம்...!

பதில்:
தியான வழியில் பொதுவாக என்ன செய்கிறார்கள்...? நமக்கு இந்த உயர்ந்த சக்தி கிடைத்தது என்று எல்லாம் செய்கின்றார்கள். ஆனால் பிறருடைய தீமையான உணர்வுகள் தனக்குள் வராதபடி முதலில் ஆத்ம சுத்தி செய்வதில்லை.

நாம் ஆத்ம சுத்தி செய்து விட்டால் அந்த நோய் நமக்கு வராது தடுக்கப்படும். அதற்குப்பின் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று சொன்னால் அவர்கள் உடலும் நலமாகும்.

அப்படி இல்லாதபடி...
1.எடுத்த உடனே அவர் உடல் எல்லாம் நலமாக வேண்டும் என்று பாசத்தால் எண்ணினால்
2.உடனே ஜிர்ர்ர்ர்ர்... என்று உங்கள் உடலுக்குள் அவர் உணர்வு வந்துவிடும்
3.அவர் நன்றாகி விடுவார் உங்களுக்கு வயிற்று வலி வரத் தான் செய்யும்.

உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆத்ம சுத்தி என்ற வலுவான ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். நாம் எடுக்கக்கூடிய உணர்வுகள் அந்தப் பக்தி மார்க்கத்தின் வழி வந்ததால் அத்தகைய பாச உணர்வின் செயலே வருகின்றது.

குருநாதரின் உடலிலே எல்லாமே உண்டு. அவரும் பக்தியின் நிலைகளில் செயல்பட்டவர் தான். அவர் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் எத்தனையோ இருக்கிறது.

ஆனால் அவர் உடலிலிருந்து
1.அருள் ஞானத்தைப் பெற்ற உணர்வுகளும் உண்டு
2.இருளை அகற்றிய உணர்வுகளும் உண்டு
3.விஷத்தை நீக்கிய உணர்வுகளும் உண்டு
4.ஒளியான உணர்வுகளும் அவரிடம் உண்டு

இப்பொழுது யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது இருளை நீக்கும்... நஞ்சை வெல்லும்... உணர்வுகளைத் தான் உங்களிடம் கொடுக்கின்றோம் இதை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொண்டு மற்ற தீமைகள் வராது தடுக்கலாம்.

நான் தியானம் செய்தேன். பாருங்கள்... எண்ணியபடி நடக்கின்றது என்று சொன்னாலும் உங்களுக்கு வயிற்று வலி ஏன் வருகிறது...?

அதற்குத் தான் இதைச் சொல்வது. எப்போதுமே முதலில் அந்த ஞானத்தின் வழியில் அருள் சக்திகளை எடுத்து நம்மைச் சுத்தப்படுத்திக் கொண்டு அதற்குப் பின் “உங்களுக்கு நோய் நீங்கிவிடும்” என்று சொன்னால் சரியாகும்.

இல்லாமல் போனால் அவர்கள் உடலில் இருப்பதை இழுத்து உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடும். அவர் நன்றாக ஆகிவிடுவார்.

ஆகவே எப்போதுமே ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருந்தால் நன்றாக இருக்கும்.
1.சந்தர்ப்பத்திற்குத் தக்க அந்த உணர்வின் ஞானங்களும் வரும்.
2.அந்த ஞானத்தை அருள் வழியில் பயன்படுத்த வேண்டும்
3.நடக்கின்றது என்ற ஆர்வத்தில் பக்குவமில்லாது செய்தால் அதில் சில தீமைகளும் வந்துவிடும்.

குருநாதர் சொன்ன முறைப்படி காட்டிற்குள் நானும் செல்லப்படும்போது ஒவ்வொரு மிருகங்களுக்குத் தக்கவாறும் சில உணர்வுகளை எடுத்து அந்த ஒலி அலைகளை எழுப்பினால் எனக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும்.

யானைக் கூட்டம் இருந்தால் அதற்கென்று ஒரு ஒலி அலைகளை எடுத்துப் பரவச் செய்தால் யானைகள் அமைதியாக இருக்கும்.

இத்தகைய உபாயங்களைக் காட்டிற்குள் செய்தாலும் நாட்டிற்குள் மோசமான கரடி புலி எல்லாமே இருக்கின்றது. இதில் இருந்து எப்படித் தப்பிப்பது...?

காட்டிலே தப்பித்தாலும் நாட்டிற்குள் மனிதர்களைக் கட்டுப்படுத்த முடியுமா என்றால் முடியாது. உடனே அது நம் மீது பாயும். ஒருவருக்கு நன்மை செய்தால் உடனே பதிலுக்கு எப்படி இடைஞ்சல் செய்ய வேண்டும் என்று திரும்ப வரும்.
1.நீங்கள் ஒருவருக்கு உதவி செய்து பாருங்கள்
2.அவர்கள் அடுத்து நிமிர்ந்த உடனே நீங்கள் தாழ்ந்து விடுவீர்கள்

அதனால் நாம் எந்தச் சந்தர்ப்பமாக இருந்தாலும் ஆத்ம சுத்தி செய்து பழக வேண்டும்.

மற்றவர்களைத் தான் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யத் தூண்ட வேண்டும்.
1.நீங்கள் இதைச் செய்யுங்கள் உடல் நலமாகும் என்று சொல்லி இந்த வாக்கினை பதிவு செய்ய வேண்டும்
2.ஆத்ம சுத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதை எடுக்கச் சொல்ல வேண்டும்.

நானும் (ஞானகுரு) எத்த்னையோ பேருக்கு ஆசீர்வாதம் செய்கிறேன். இந்த உணர்வுகள் அங்கே சென்று வேலை செய்கின்றது... நோய் கீழே இறங்குகிறது. நான் அதை இழுத்துக் கொள்வதில்லை.
1.ஆனால் நீங்கள் இழுத்துக் கொள்கின்றீர்கள்.
2.அப்படி இழுப்பதால் தான் அந்த வயிற்று வலி உங்களுக்கு வந்தது.

என்னிடம் எத்தனையோ மோசமான நிலையில் வருகின்றார்கள். அதை எல்லாம் என் உடலில் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்...? எனக்கு ஒர் பாதுகாப்பு கட்டிக் கொண்டு வரவேண்டும் அல்லவா.

அதைத் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

இவ்வுலக மாற்றத்திலிருந்து அதை மீட்டிடும் வழி உண்டா...! - ஈஸ்வரபட்டர்

 

தாவர வர்க்கங்களை நாம் இன்று அழித்தும்... அதிலிருந்து நாம் பெறும் உன்னத நிலைகளைச் சிதற விட்டும் வாழ்கின்றோம்.

1.இம் மனித வர்க்கத்தின் பெருக்கத்தினாலும்
2.மற்ற ஜெந்துக்களின் பெருக்கத்தினாலும்
3.நம் செயற்கைக்குகந்த நிலைகளைப் பிரித்ததினால் மட்டும் அல்லாமல்
4.இன்று ஆவி உலகத்தின் பெருக்கத்திலுள்ள ஆவிகளும் அச்சத்தை ஈர்த்து வாழ்வதினாலும்
5.இன்று இவ்வனைத்து இனப் பெருக்கத்தினால் அச்சக்தியெல்லாம் இந்நிலையில் ஈர்க்கப்படுவதினால்
6.தாவர வர்க்கங்களுக்குக் கிடைக்கும் சத்து நிலை குறைந்து விட்டது.

எத்தாவரமும் சூரியனின் சக்தி பட்டு மட்டும் வளரவில்லை. இப்பூமித்தாய் சக்தியை ஈர்த்து ஊட்டம் தரும் நிலையிலிருந்தும் தான் அத்தாவரங்களின் செழிப்பு நிலை உள்ளது.

சில தாவரங்களினால் இப்பூமியில் உற்பத்தியாகும் பல அணுக்களை ஈர்த்து வளரும் தன்மை உள்ளது.

உயிரணுக்களையே ஊட்டமாக ஈர்த்து வளரும் தன்மையில் பல தாவரங்கள் உள்ளன. உயிரணுக்களையே என்பது இன்று பல ஜீவன்கள் ஆத்மா பிரிந்த பிறகு நாய் நரி பன்றி இப்படிப் பல ஜீவன்களைத் தாவரங்களின் வேருக்கு அடிப்பாகத்தில் இஜ்ஜீவன்களின் உடலை உரமாக இட்டு... அதையே உரமாக்கித் தன் சக்தியில் ஈர்த்து நற்கனிகளைப் பல தாவரங்கள் நமக்கு அளிக்கின்றன.

அத் தாவரங்களின் சக்திக்கு உரமாக வைத்த அவ்வுடலில் உள்ள தன்மையெல்லாம் அத்தாவரமே சத்தாக ஈர்த்ததினால் அதிலிருந்து பல உயிரணுக்கள் ஜீவன் பெறும் நிலையில்லாமல் அதிலிருந்து சென்ற ஓர் ஆத்மா மட்டும்தான் சுற்றிக் கொண்டிருக்கும்.

மனிதனிலிருந்து மாறுபட்ட மிருக ஜெந்துக்கள் மற்றப் பிராணிகள் யாவையுமே
1.அதை எருவாக வைக்கும் பொழுது
2.தாவர வர்க்கங்கள் உரமாக ஈர்த்துச் செழித்து வளர்ந்திடும்.

ஆனால்... இம்மனித உடலைப் புதைத்தால் இம்மனித உடலைப் புதைத்த இடத்தில் அதன் சக்தி அங்கிருந்தால் இம்மனித உடலில் இருந்து “ஒரு புல் பூண்டும் வளர்ந்திடாது...!”

இம்மனித உடல் தாவர வர்க்கத்திற்கு எருவாக சக்தி தரும் பாக்கியமும் இம்மனித உடலுக்கில்லை...!

மற்ற ஜெந்துக்களும் இம்மனித உடலுக்கும் உள்ள வேறுபாடு இம்மனித உடல் “கடும் உப்பு நிலை” பெற்றது. இம்மனித உடலை உப்புக் கலந்த இரசாயன நிலைப்படுத்தி பல நாட்கள் ஆவி பிரிந்த உடலைப் பாதுகாப்பான நிலையில் வைத்திருக்கலாம்.

ஒன்றை அழித்து ஒன்று சக்தி பெறுகிறது. எதுவுமே அழிவதில்லை... வளரத்தான் செய்கிறது. இச்சூரியனின் சக்தியில் வந்த எவற்றையும் யாராலும் அழித்திட முடியாது.

வளர்ந்து கொண்டே உள்ள இவ்வுலகினில் இன்று நாம் ஆரம்பத்தில் உள்ள நிலையை... ஒரு சக்தியை அழித்ததினால் மற்ற சக்தி வளர்ந்து விட்டது. அந்நிலையை மாற்றி அச்சக்தியை அழித்துத்தான் முன் இருந்த சக்தியை வளரச் செய்ய வேண்டும்.

தாவர வர்க்கங்களை வளர்த்து மற்ற இனப்பெருக்கத்தை நாம் மாற்றி மாற்றி என்னும் பொழுது அழித்து மற்ற மிருக வர்க்கத்தை நாமே அதை உண்டு பல அணுக்களை வளரவிடாமல் மற்றப் பிராணிகள் இறந்த பிறகு அதன் உடலைத் தாவரங்களுக்கு எருவாக்கி தாவர நிலையை வளரச் செய்ய வேண்டும்.

மனித வர்க்கத்தின் பெருக்கத்திற்கும் எவ்வுடலையும் நாம் புதைக்காமல் மனிதன் இறந்த பிறகு அவ்வுடலை எரிக்கும் நிலைப்படுத்திட வேண்டும்.

செயற்கையின் ஆசையை மாற்றி வாழும் நிலையில்லை இன்று மனிதனுக்கு...! ஆகவே இவ்வுலக நிலையையே காத்து அதன் அழிவான மாற்றத்தைத் தாங்கும் சக்தி சித்தர்களாலும் ரிஷிகளாலும் முடியாத நிலையில் இன்றுள்ளது.

1.இச் செயற்கையை மனிதனின் நிலையிலிருந்து மாற்றிடவும் முடியாது...
2.இவ்வுலகத்தின் மாறும் தன்மையிலிருந்து
3.இவ்வுலக நிலையை மீட்டிடவும் முடியாத நிலையில் உள்ளது...!

March 24, 2022

நாம் இயங்கவில்லை... மற்றொன்று தான் நம்மை இயக்குகிறது - விளக்கம்

 

இன்று விஞ்ஞானிகள் எத்தனையோ நிலைகளில் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று உருவாக்குகின்றனர்.

உதாரணமாக நாம் ரோட்டிலே நடந்து செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். போகும் பாதையிலே ஒரு அழுத்தமான மிளகாய் நெடி காற்றிலே கலந்து வந்தால்
1.எவ்வளவு திறமையுள்ளவராக நாம் இருந்தாலும்
2.அதைச் சுவாசிக்கும் போது... அந்த நேரத்தில் நல்ல குணங்களை மாற்றிவிட்டு நம்மைத் தும்ம வைத்து விடுகின்றது
3.சிந்திக்கும் தன்மையை அந்த இடத்தில் இழக்கச் செய்துவிடுகிறது.

அது எலக்ட்ரானிக் ஆக மாறுகின்றது.

அதாவது... எதனுடைய உணர்வைச் சூரியனின் இயக்க அணுக்கள் (வெப்பம் காந்தம்) கவர்கின்றதோ அதை நாம் நுகரப்படும் போது அதனின் உணர்வின் உணர்ச்சியாக நம்மை இயக்கி விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வுதான நம்மை இயக்குகின்றது.

இதைப் போன்று தான் ஒரு மனிதனைப் பார்க்கின்றோம். இருந்தாலும் அவர் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வை நாம் அறிய முடியவில்லை.

ஆனால் சில சந்தர்ப்பங்களில்...
1.ஒருவரைப் பார்த்தபின் இனம் புரியாது அவன் மேல் வெறுப்பு வரும்
2.இனம் புரியாத சோர்வு நமக்குள் வரும்
3.சும்மா பார்த்தாலே... இனம் தெரியாத சிந்தனைகளும் வரும்
4.ஏன்... எதற்கு...? நம் மனம் அப்படி மாறுகிறது...! என்று நிலை கூட வந்துவிடும்.

காரணம்... மனித உடலிலிருந்து வரக்கூடிய அந்த உணர்வின் தன்மை நம்மை அறியாது இயக்குவதை நாம் அறிய முடியவில்லை.

விஞ்ஞானிகள் ரோபோட் என்ற இயந்திரத்தை உருவாக்கி அதிலே காந்தப் புலனையும் கெமிக்கலும் கலந்து எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற பேழைகளை உருவாக்குகின்றனர்.

1.தட்டும் போது மோதலின் அதிர்வின் ஒலி அலைகள் எப்படி வருகின்றதோ
2.அதற்குத்தக்கவாறு அது இயக்கி அந்த உணர்வின் உணர்ச்சிகளுக்கொப்ப
3.எதிர் நிலை வரும்போது எலக்ட்ரானிக் ஆக மாற்றி
4.எவ்வளவு பெரிய இயந்திரமாக இருந்தாலும் அதை இயக்குகின்றது.

இதைப் போன்று தான் பிறிதொரு மனித உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகள் நம் உடலான இந்த இயந்திரத்தை... நம்மை இயக்கிவிடுகின்றது. அதனால் இனம் புரியாது சோர்வடைந்து விடுகின்றோம்.

உதாரணமாக ஜோதிடம் ஜாதகம் பார்ப்போரெல்லாம் தன்னிடம் வருபவர்களைப் பார்த்துப் பார்த்து
1.ஒரு வார்த்தையை விட்டு அதற்கப்புறம் என்ன வருகிறது...? என்று பார்ப்பார்கள்...
2.நம்மிடமிருந்தே தெரிந்து கொள்வார்கள்.

அதை வைத்து... நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்...! என்று சொல்வார்கள் காரணம்... அதே குறிக்கோளாக இருப்பதால் அவர்களால் என்ன... ஏது..? என்று சொல்ல முடிகிறது.

ஆனாலும் மற்றவர்கள் குடும்பத்தில் நடந்த கஷ்டத்தை எல்லாம் கேட்டு வாங்கிக் கொண்ட பின் கடைசியில் அவரால் அவரைக் காக்க முடியாது. அவர் குடும்பத்தில் பார்த்தோமென்றால் பல தரித்திரங்களும் பல சங்கடங்களும் பல வெறுப்புகளும் தான் இருக்கும்.

வயிற்றுப் பிழைப்புக்காக ஜாதகம் பார்த்தாலும்...
1.பிறருடைய உணர்வின் அதிர்வுகளைச் சேர்த்து சேர்த்து
2.பிறருக்கு ஜோதிடம் சொன்னாலும் இவர் வாழ்க்கை பாழாகிவிடும்.

அதே போல் தான் மந்திர ஒலிகளைச் சேர்த்துப் பிறரை இயக்கலாம். பின் இதுவும் பாழாகி உடலுக்குப்பின் பிறருடைய ஈர்ப்புக்கு அவர் ஜெபித்த மந்திரத்தால் ஈர்க்கப்பட்டு முதலிலே இவன் எதைச் செய்தானோ அங்கே போய் அதற்குத் தான் பயன்படும்.

இது எல்லாம் சாகாக்கலையாக... ஒரு உடலில் விளைந்தது மீண்டும் மீண்டும் அடுத்த உடலிலே சுற்றிக் கொண்டிருக்கும். கடைசியில் யானை தேய்ந்து கட்டெறும்பானது போன்று மனிதனல்லாத உடலாகத் தான் போக நேரிடும்.

ஆகவே மனித உடலிலே குறுகிய காலமே வாழுகின்றோம் என்பதை உணர்தல் வேண்டும். சிறிது காலமே வாழ்கின்றோம்... என்பதை
1.“நேரமாகி விட்டது...” என்று இராமன் மனதைக் குவித்தான் (மணலைக் குவித்து சிவலிங்கமாக்கிப் பூஜித்தான்) என்று இராமாயணத்தில் அதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
2.வளர வளர உடலின் தரமும் குறைகின்றது... ஆயுளும் குறைந்து கொண்டே வருகிறது...!
3.இதற்குள் நாம் உயிருடன் ஒன்றி ஒளியின் உடலைப் பெற வேண்டும் என்றால் நம் மனதை ஒன்றாகக் குவித்தல் வேண்டும்.

பகைமைகளை அகற்றி நம் பார்வையால் மற்றவர்களுக்கும் அந்தத் தீமைகள் அகலும் சக்தியாகச் செயல்பட வேண்டும்.

இந்த உலகில் இருளை ஒளியாக மாற்றி... விஷத்தை ஒளியாக மாற்றிய அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக என்றுமே அழியாத நிலைகள் கொண்டு வாழ்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாமும் பெற்று வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக என்றும் நிலையாக ஏகாந்த நிலையாக வாழ முடியும்.

காற்று மண்டலம் நஞ்சாக மாறியதன் காரணம் - ஈஸ்வரபட்டர்

 

செயற்கையின் பாவத்தினால் வந்த வினையான தாவரங்களின் நிலையின் குறைவினால் இன்று இவ்வுலக நிலையே மாறும் தன்மைக்கு வந்துள்ளது.

தாவரங்களின் நற்பயனை அறிந்து சுவையுள்ள காய் கனி வர்க்கங்களும் தானிய வர்க்கங்களும் நாம் பெற்று இயற்கையின் அமுதைப் புசித்திட்ட உன்னத கால நிலை மாறி இன்றைய மனிதனின் உணவில் தன் இனத்திலிருந்து மாறுபட்ட ஜென்மம் சென்ற மற்ற ஜெந்து வர்க்கங்களைச் சமைத்து உண்ணும் நாகரிக நிலைக்குத் தன்னையே அடிமைப்படுத்தி வாழ்கின்றான் இன்றைய மனிதன்.

இவ்வுலகம் ஒன்றின் சக்தியிலிருந்து ஒன்று சக்தி பெற்றுத்தான் வாழ்கிறது. ஒன்றை ஒன்று அழித்து ஒன்றின் சக்தியை ஒன்று பெற்றுத்தான் வாழும் சக்தியையே சக்தி நிலை நமக்கு அளித்துள்ளது.

அந்நிலையில் இதன் நிலையில் மட்டும் என்ன பாவம்...? என்பீர்.

மற்ற ஜெந்து வர்க்கங்கள் எப்படி உருவாகி வந்தன...? என்பதைத்தான் பாட நிலையில் உணர்த்தியுள்ளோம்.

இன்று இருக்கும் இவ்வுலக நிலையில்...
1.இவ்வுலகிலுள்ள பூமியிலுள்ள கனி வர்க்கங்களையும் தாவர வர்க்கங்களையும் நாம் சிதறவிட்டதனால்
2.(நாம் சிதறவிடவில்லை அதை எடுத்துப் பயன்படுத்தித்தான் கொண்டோம் என்பீர்)
3.நம் செயற்கையின் ஆசையினால் இவ்வுலகின் பொக்கிஷங்கள் குறைந்ததின் நிலையில்
4.மற்ற ஜெந்துக்கள் மனித வர்க்கம் முதற்கொண்டு அனைத்து ஜீவராசிகளும் மிகத் துரிதமாகப் பெருகியதன் நிலையில்
5.இம்மனிதனும் மற்ற ஜெந்துக்களும் இப்பூமியின் சக்தியை ஈர்த்து வாழ்வதினால்
6.இப்பூமியிலிருந்து மற்ற கனிவர்க்கங்கள் வளரும் நிலை குறைந்துவிட்டது.

இஜ்ஜீவ ஜெந்துக்கள் பெருகப் பெருக இன்னும் இவ்வுலக நிலையிலுள்ள சத்துத் தன்மை குறையும் நிலையில்தான் உள்ளது.

ஒரு ஜீவனை அழிப்பதினால் பல ஜீவன்கள் உற்பத்தியாகின்றன.

உங்கள் நினைவில் மண்ணில் புதைத்தால்தான் அவ்வுடலிலிருந்து பல உயிரணுக்கள் தோன்றுவதாக எண்ணுவீர். அப்படி அல்ல..!

1.மற்ற ஜீவ ஜெந்துக்களை நாம் சமைத்து உண்டு அதன் சக்தியைப் பெற்று
2.அதைக் கழிவாக வெளிப்படுத்தும் அக்கழிவில் இருந்தும்
3.எந்நிலைகொண்ட ஜீவ ஜெந்துவை உண்டு கழித்தோமோ அதன் நிலையிலிருந்து
4.அந்நரகமான அவ்வாடையிலிருந்து பல ஜீவ ஜெந்துக்கள் உயிர் பெறுகின்றன.

ஒன்றை அழித்துத்தான் ஒன்று சக்தி பெறுகின்றது. இஜ்ஜீவ ஜெந்துவின் பெருக்கத்திற்குக் காரணம்... ஆறறிவு படைத்த இம்மனிதனாலேதான் அனைத்துப் பெருக்கங்களும் வந்துள்ளன.

இன்று இவ்வுலகில் மனித இனத்தைக் (மக்கள் தொகையை) குறைக்கப் பார்க்கின்றான். ஒரு மனிதன் வாழும் காலத்தில் அவன் வாழ்க்கையில் அவன் எத்தனை குழந்தை பெறுகின்றானோ அவை தாம் அவனது பெருக்கம்.

ஆனால் இவ்வுடலை விட்டு அவனது ஆத்மா சென்ற பிறகு அவன் வாழ்ந்ததில் ஆசை வைத்து அவன் வாழ்ந்த காலத்தில் “அவன் பெற்ற இரத்தபந்தத்துடன் உள்ள குழந்தை வாழும் நாள் வரை...” அவனது ஆத்மா மறு ஜென்மத்திற்குச் செல்வதில்லை.

ஆனால் அவனின் உடலை அடக்கம் செய்த இடத்தில் அவன் உடலில் இருந்து பல உயிரணுக்கள் உயிர் பெற்று ஜென்மத்திற்கு வருகின்றன.
1.இம் மனிதனே மனித வர்க்கத்திற்கும் மிருக வர்க்கத்திற்கும்
2.மிருகத்திலிருந்து பல ஜெந்து வர்க்கங்களுக்கும் அடிகோலியாகின்றான்.

தாவர வர்க்கங்களின் உன்னத பொக்கிஷத்தைச் சிதற விட்டவனும் இவ்வாறறிவு என்னும் அறிவைப் பெற்ற ஆண்டவனின் அடிகோலிகள் என்று செப்பிடும் இம்மனிதனேதான்...!

March 23, 2022

உங்கள் ஆர்வத்தை எதிலே காட்ட வேண்டும்...?

 

வெள்ளம் வருவதற்கு முன் அணை போட்டுத் தடுத்துக் கொள்வது போல் தீய சக்திகள் உங்களுக்குள் புகாதபடி தியானத்தின் மூலம் அருள் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.இதற்குக் காசோ... பணமோ... ஒன்றும் தேவையில்லை.
2.அதிகாலையில் ஐந்து மணிக்கு எழுந்து ஒரு அரை மணி நேரம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.அந்தச் சக்தியினை உங்களுக்குள் வலு ஏற்றிக் கொள்ளுங்கள்.

யாம் (ஞானகுரு) ஆரம்பத்தில் கொடுத்த உபதேசங்களை யாரும் எட்டிப் பிடிப்பது என்றால் சிரமம். உபதேசம் கேட்ட பழைய அன்பர்களுக்குத் தெளிவாகத் தெரியும். எக்ஸ்பிரஸ் மாதிரி ஓடிக் கொண்டே இருக்கும். யாரும் அர்த்தம் காண முடியாது.

ஆனால் இப்போது எல்லோருக்கும் அர்த்தம் புரியும் அளவிற்குச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

காரணம் முன்னாடி சில ரகசியங்களை எல்லாம் சொல்வேன். மந்திரவாதிகள் அதைத் திருடிச் சென்று விடுவார்கள் என்பதற்காக... பட்டும் படாமல் அவர்களுக்குப் புரியாமல் இருப்பதற்காக்க் கட...கட...கட... என்று உருட்டிக் கொண்டு செல்வேன்.

இப்பொழுது அது எல்லாம் இல்லை.

உலகம் இன்று மிகவும் மோசமான நிலையில் இருள் சூழும் நிலையாக இருப்பதால் எல்லோருக்கும் அருள் ஞானம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பவரைக் (POWER) உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

1.இதை கேட்டவர்கள் நீங்கள் தயாரானால் போதும்
2.இந்த உலகையும் காக்கலாம்... ஊரையும் காக்கலாம்... உங்கள் வீட்டையும் காக்கலாம்...!

யாம் சொல்லும் உபதேசக் கருத்துக்களை முறைப்படுத்திக் கொண்டு பக்குவப்படுத்தி கொண்டு வந்தாலே போதுமானது. நீங்கள் சிரமப்பட வேண்டியதில்லை. சிரமத்திலிருந்து நீங்கள் விடுபடுவதற்கான வழிகளைத் தான் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

நான் சிரமப்பட்டேன்... தெளிந்தேன்...! அந்தத் தெளிந்த உணர்வுகளை நீங்கள் பெற வேண்டும் என்று குரு வழியில் உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.

1.இதில் நீங்கள் யாராவது தயாரானால் தான் உண்டு
2.அரையும் குறையுமாக விட்டு விட்டுச் செல்ல முடியாது
3.அது போன்ற நிலை இல்லாதபடி நீங்கள் வளர்ந்து காட்ட வேண்டும்.

காற்று மண்டலமே இன்று நச்சுத் தன்மையாக மாறி விட்டது. கடவுளின் அவதாரத்தில் வராகன் எப்படிச் சாக்கடையில் உள்ள நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்ததோ இதைப் போலக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை உங்களுக்குள் பெருக்கி உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை.

இந்தச் சூரியனும் அழியக் கூடியது தான். அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கக்கூடிய பூமி எந்த நேரம் தலை கீழாக ஆகும்...! என்றும் சொல்ல முடியாது. அணு குண்டுகள் வெடித்தால் போதும்.

ஏனென்றால் குறுகிய காலமே இருக்கின்றது. 2004க்கு மேல் உலகம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. எங்கே பார்த்தாலும் தீவிரவாதம்..! அந்தக் கடுமையான உணர்வுகள் காற்றலைகளில் பதிவாகின்றது.

பத்திரிக்கையிலும் டிவியிலும் பார்த்து அதை எண்ணும் போது நமக்குள்ளும் தீவிரவாதம் ஆகிவிடுகின்றது.
1.நம்மை அறியாமலே பகைமைகள் வருகின்றது
2.நம்மை அறியாமலே உடலுக்குள் தீமைகள் வருகின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது.

எப்படியும் நீங்கள் சிறிது பேராவது முந்திக் கொண்டீர்கள் என்றால் அதை வைத்து மற்றவர்களுக்கும் நன்மை செய்ய முடியும்.

நான் ஒருவன் இருந்தால் போதுமா...! நீங்கள் எல்லோரும் தயாராக வேண்டும் என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் இதைச் சொல்கிறேன்.

உயர்ந்த சக்திகளைக் கொடுக்கின்றோம். அதன் மூலம் நன்மைகள் நடக்கிறது என்றால் அதில் இருக்கக்கூடிய உண்மை நிலைகளை
1.இந்த மாதிரித் தெரிகின்றது
2.இதற்கு அடுத்து என்ன செய்ய வேண்டும்...?
3.எப்படிப் பக்குவப்படுத்துவது...? என்று எம்மிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சாமியிடம் (ஞானகுரு) எப்படிக் கேட்டுத் தெரிந்து கொள்வது...? என்று எண்ண வேண்டியதில்லை. தெரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் அதிகாலையிலேயே தினமும் உங்களுக்கு உயர்ந்த சக்தியை ஏற்றிக் கொடுப்பது.

இதை நீங்கள் வளர்த்துக் கொண்டால்...
1.ஆயிரம் பேருக்குப் பல தீமைகளைப் போக்க முடியும்
2.உங்கள் அரவணைப்பில் ஆயிரம் பேரைக் காப்பாற்ற முடியும்.

ஆகவே பழமையையே எண்ணாதபடி எதிர்காலத்தின் உணர்வை நீங்கள் வளர்த்துக் கொள்ள ஆர்வத்தைக் காட்டுங்கள்...!

இயற்கையின் சக்தியைச் செயற்கைக்காகச் செலவழித்த பாவத்தை மனிதர்கள் உணரும் நேரம் வந்து விட்டது - ஈஸ்வரபட்டர்

 

நம் முன்னோர்கள்... ஆத்மா பிரிந்த உடலில் அவ் உடலிலிருந்து உற்பத்தியாகும் உயிரணுக்கள் தோன்றாத நிலைப்படுத்தி அவ்வுடலுடன் அவ்வுடல் கெடாத பக்குவ நிலைப்படுத்தி அடக்கம் செய்து வைத்தார்கள்.

இன்று இக்கலியில் மக்களின் தொகை பெருகுவதினால் அனைத்து ஆக்கச் சக்திகளும் அதிகரிக்கும் நிலைக்காக மக்களின் தொகையையே குறைக்கும் நிலையில் பல வழிகளைச் செய்கிறார்கள்.

மனிதனே மனிதனின் இன வர்க்கத்தை நிறுத்தப் பார்க்கின்றான் இன்று வாழும் மனிதன்.

ஆவி உலகில் பல மனித இன ஆவிகள் தன் எண்ணத்தை ஈடேற்றச் சுற்றிக் கொண்டே உள்ள நிலையில்தான்
1.இன்று பல இடங்களில் ஒரு தாய் ஒரு மகவு பெறும் நிலை மட்டும் இல்லாமல்
2.ஒரு தாய் ஒரே சூலில் பல மகவுகளை ஈனும் நிலையில்
3.மிருக வர்க்கத்தின் நிலைக்கு ஒப்ப வந்து பிறக்கின்றன.

பிறக்கும் மகவுகளைக் குறைக்க வழி காண்கின்றான் இக்கலியின் மனிதன். ஆனால் இறக்கும் உடலை எந்நிலையில் சிதற விடுகின்றான்...? இந்த நிலையைப் புரிந்து கொண்டால் பல நிலைகளில் இந்நிலையை மாற்றிடலாம்.

ஆவி உலகிலுள்ள ஆத்மாக்கள் மட்டும் பிறவி எடுத்தால் இன்றுள்ள மக்கள் தொகையுடன் கூடி வராதா...? என்பீர்..

ஆவி உலகிலுள்ள மனித ஆத்மாக்கள் எவையுமே உடனே பிறவி எடுக்கும் ஜென்ம ஆசையில் வந்து பிறப்பதில்லை. ஆவி உலகில் உள்ள ஆத்மாக்களுக்குத்தான் இவ்வுலகில் உடலுடன் வாழும் மனிதர்களின் நிலை புரிகின்றதே.

இப்புதிய புதிய உயிரணுக்கள் தோன்றும் நிலையை இம் மனிதன் மாற்றும் வழியை ஏற்படுத்தி வாழ்ந்தாலே...
1.மனிதனிலிருந்து மிருகம் மிருகத்திலிருந்து மற்ற ஜெந்துக்கள் இவற்றின் நிலையும் மாறி
2.சூரியனிலிருந்து வரும் சக்தியினால் தாவர வர்க்கங்கள் செழித்து வளரும் உன்னத நிலை பெறலாம்.

சூரியனிலிருந்து வரும் சக்தியில் குறைந்தோ அதிகப்பட்டோ வருவதில்லை. என்றும் ஒரே நிலைப்படித்தான் வந்து குவிகிறது.

இவ்வுலகினில் தோன்றிடும் உயிரணுக்களின் ஈர்ப்பு சக்தியின் துரிதத்தினால் (ஜீவன் பெற்ற உயிரணுக்களின் பெருக்கத்தினால்) தாவர வர்க்கங்களின் நிலை குறைந்து விட்டன.

இன்று தாவரங்களுக்குப் பல செயற்கை நிலை கொண்ட பக்குவம் (உரங்கள்) ஏற்றினாலும் முன் காலத்தில் உள்ளதின் சுவையும் மணமும் இன்றில்லை.

பூமியிலிருந்து வெளிப்படும் சக்தியையே மற்ற ஜீவன் பெற்ற உயிரணுக்கள் ஈர்த்து வாழ்கின்றன. இனப் பெருக்கம் ஆக ஆக இப்பெருக்கத்திலுள்ள ஜீவன்களுக்குத்தான் இப்பூமித்தாயும் நம் சூரியனும் தரும் சக்திகள் சரிப்படுகின்றன.

தாவர வர்க்கங்களின் நிலைக்கு அதன் ஈர்ப்புத் தன்மைக்கு உகந்த சத்துத் தன்மை குறைந்தே வருகிறது.

ஜீவன் பெற்ற உயிரணுக்களின் பெருக்கத்தின் சுவாசத்தினாலும் இன்று செயற்கையினால் வந்த வினை கொண்டு இக்காற்று மண்டலத்திலுள்ள சக்தியின் தன்மை குறைந்ததினாலும் இக்காற்றே கடும் விஷத்துடன் சுற்றிக் கொண்டுள்ளது. அதனால் தாவர வர்க்கங்கள் செழித்து வளரும் நிலையில்லை.

1.கலியான இம்மனிதன் தன் சக்தியின் சக்தியெல்லாம்
2.செயற்கையின் பேய்க்குப் பலியிட்டதின் பாவத்தை
3.உணரும் தன்மைக்கு வந்து விடுவான்... வந்து விட்டான்...!

March 22, 2022

தியானம் செய்யக்கூடிய அனைவருமே முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

 

1.சில நேரங்களில் கஷ்டங்களோ உடல் உபாதைகளோ வந்தால்
2.நாம் சரியான முறையில் தியானம் எடுத்து வந்தால்
3.அந்தக் கஷ்டத்தை மாற்றுவதற்குண்டான ஞானமும்... அதை எப்படி வழி நடத்த வேண்டும் என்ற உபாயமும்... வரும்.

சங்கடங்கள் வரப்படும் பொழுது ஈஸ்வரா...! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

பின்... துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்... எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அப்போது சலனம் சஞ்சலம் சங்கடம் இதையெல்லாம் நீக்கிவிட்டு
1.எது உண்மையோ அதை உணர்ந்து
2.அதற்குத் தக்க நம்முடைய எண்ணங்களைச் சீராக்குவதும்... நல்ல செயல்களைச் செயல்படுத்தவும் முடியும்.

உடல் உபாதை உற்றவரைப் பார்க்கும் பொழுது முதலிலே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். அது சிறு குழந்தையாக இருந்தாலும்... தன்னால் வெளியிலே சொல்ல முடியவில்லை என்றாலும்
1.எலக்ட்ரிக் எலகட்ரானிக் என்ற உணர்வின் தன்மை கொண்டு
2.நாம் பாய்ச்சும் மகரிஷிகளின் அருள் சக்தி அந்தக் குழந்தை உடலில் ஊடுருவி அங்கே இயக்கச் சக்தியாக மாற்றும்.

“முடியவில்லை...” என்பவர்களுக்கு இருதயத் துடிப்பு நின்றாலும் கூட இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்துவிட்டு அந்த இருதயத்திற்கு மேல்... “கை வைத்தோம்...” என்றால் அந்தத் துடிப்பு மீண்டும் வருவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் மிகவும் பழுதாகி விட்டால் ஒன்றும் செய்ய முடியாது. திடீரென்று எதிர்பாராதபடி சில நிலைகள் வந்திருந்தால் அதை மீண்டும் இயக்க வைக்க முடியும்.

இருதயத்திலிருந்து வரக்கூடிய நிலைகளால் அங்கே துடிப்பிலே ஏதாவது சிறிது பிசகானால் இருதயத்திற்கு மேல் கையை வைத்தவுடனே இயங்கிவிடும்.

ஆனால் இருதயத்தை இயக்கக்கூடிய சிறுமூளையில் உள்ள நுண்ணிய நரம்புகளில் பழுதாகி அதனால் இருதயம் சரியாக இயங்கவில்லை என்றால் அது ஒன்றும் செய்ய முடியாது.

ஆகவே
1.இதைப் போல ஒவ்வொரு சந்தர்ப்பமும்... ஒவ்வொரு நோய்க்கும்... ஒவ்வொரு விதமாக இருக்கும்.
2.இருந்தாலும் நாம் எடுக்க வேண்டியது அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தான்.

அதைப் பெற வேண்டுமென்று வலுவான நிலையில் எண்ணி நமது பார்வையைச் செலுத்தி அதே உணர்வுடன் நம் கையைக் குழந்தையின் உடலில் வைத்தால் அதை எழுப்ப முடியும்.

ஆக... சிறு குழந்தையால் எண்ண முடியாது... அதனால் சொல்ல முடியாது... சொன்னால் கேட்க முடியாது...! என்று இருந்தாலும் கூட உடலில் கையை வைத்தோம் என்றால் அங்கே வேலை செய்யும்.

உதாரணமாக... நாம் வேலை செய்யும் இடத்தில் ஆபீஸர் நம் மீது கோபப்பட்டு... நமமைக் குறை சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்தக் குறை நமக்குள் வராதபடி ஆத்மசுத்தி செய்து விட்டு
2.அவர் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் நம் மீது அவருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்றும் எண்ணினால்
3.இந்த உணர்வு அங்கே ஊடுருவும்.

ஆனால் நாம் தவறு செய்துவிட்டு ஆபீஸர் நமக்குச் சாதகமாக வரவேண்டும் என்று சொன்னால் அது நடக்காத காரியம்.

நமக்குள் தப்பு இல்லாத நிலையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். தவறு செய்துவிட்டு தவறுக்குச் சரியான மார்க் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அது தவறான நிலைகள்.

ஆகவே உண்மை என்று தெரிந்தால் ஆத்ம சுத்தி செய்து விட்டு
1.அவர் என் பால் நல்ல உணர்வை உணர்ந்து
2.அந்த உண்மையின் இயக்கத்திற்கொப்ப எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினால் நிச்சயம் அது நல்லதாகும்.

இதை எல்லாம் ஒரு பழக்கமாக எடுத்துக் கொண்டால் நம்முடைய மன உறுதியும் நாம் எடுக்கும் அருள் உணர்வும் தீமையிலிருந்து விடுபடக் கூடிய சக்தியாக நமக்குள் வருகின்றது...!

ஒவ்வொருவருக்கும் இது போன்ற சந்தர்ப்பங்கள் உண்டு. இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்டவர்கள் மன உறுதி கொண்டு செயல்படுத்தினால் மாற்றி அமைக்க முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

இறந்த உடலைத் தகனம் செய்ய வேண்டும்… புதைக்கக் கூடாது - ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு பிறவியிலும் பல உயிரணுக்களின் நிலையுடன் வாழ்ந்த நாம் அவ்வுடலை விட்டு நம் ஆத்மா பிரிந்து செல்லும் பொழுது நம் ஆத்மாவுடன் கூடிய “சப்த அலையும்… சத்து நிலையும் தான்…” நம் உயிராத்மாவுடன் இஜ்ஜென்மத்திற்கு வரும் பொழுதும் வருகிறது

இக்காற்றினில் பல நிலைகொண்ட ஆவியான உயிரணுக்கள் சுற்றிக் கொண்டேதான் உள்ளன.

1.பிறவி எடுக்கும் ஆசையிலும்
2.தன் எண்ணத்தைச் செயலாக்கும் ஆசையிலும்
3.குடும்பத்தைக் காக்கும் பற்றுக் கொண்ட ஆசையிலும்
4.பழிவாங்கும் வெறி நிலை கொண்ட குரோதத் தன்மையிலும்
5.வாழும் காலத்தில் அகால மரணமடைந்து அவதியுறும் நிலையிலும்
6.பல நிலைகொண்ட ஆவியான உயிரணுக்கள் சுற்றிக் கொண்டே உள்ளன.

இவ்வுலகில் வாழ்ந்திடும் மனிதர்களைக் காட்டிலும் மற்ற ஜீவராசிகளைக் காட்டிலும் அதிக நிலையில் படர்ந்த நிலையில் பல உயிரணுக்கள் சுற்றிக் கொண்டே உள்ளன.

புதிய புதிய மனிதன் பிறக்கிறானா…? அப்படி என்றால் போன ஜென்மம் என்பதின் நிலையென்ன…? ஆதியில் வந்த உயிரணுக்கள்தான் நாம் எல்லாம் என்றால் ஆதி காலத்தில் மனிதர்களின் ஜனத்தொகை குறைவு…! இப்பொழுது அதிகமல்லவா…?

ஆவி உலகிலும் பல உயிரணுக்கள் சுற்றிக் கொண்டே உள்ளனவல்லவா என்று எண்ணுவீர்.

இவ்வுலகம் கல்கியில் தோன்றிக் கலியில் முடியும் காலத்தில் வந்த உயிரணுக்கள் மட்டும் அல்ல… இன்றுள்ள உயிரணுக்கள் மட்டும் இன்றுள்ள உயிரணுக்கள் எல்லாம்.

இவ்வுலகம் தோன்றிய நாள் கொண்டே வந்த உயிரணுக்கள்தான் எல்லாமே. படர்ந்துள்ள உயிரணுக்கள் எல்லாம் உலகம் மாறுபடும் நிலையிலும் இவ்வுலகுடனே சுற்றிக் கொண்டேதான் வருகின்றன.

புதிய புதிய உயிரணுக்கள் வளர்ந்து கொண்டேதான் உள்ளன. இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் உஷ்ண அலைகளைக் கொண்டு பல கோடி உயிரணுக்கள் அன்றன்று வளர்ந்து கொண்டேதான் உள்ளன.

இம்மனித உயிரணுவில் இருந்து பல உயிரணுக்கள் உதித்து வெளிப்படுத்துகின்றன. ஒவ்வோர் உடலிலிருந்தும் அவ்வுடல் அழிந்து ஆத்மா பிரிந்து சென்ற பிறகும் பல உயிரணுக்கள் அவ்வுடலில் இருந்தே வளர்ச்சி பெற்று பல உயிரணுக்கள் உதிக்கின்றன.

ஆதியில் வாழ்ந்த மனித இனம் குறைவாயிருந்தாலும் அம்மனித இனத்தில் ஒவ்வோர் உடலும் அதன் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு அவ்வாத்மாவுக்குச் சொந்தமான ஆவி நிலையான சத்து நிலையும் சப்த அலையும் அதனுடன் சென்ற பிறகு இவ்வுடலை நாம் அடக்கம் செய்யும் நிலையில் இவ் உடலில் இருந்து பூமியில் இருந்து வெளிப்படும் உஷ்ண அலையின் ஈர்ப்பினால் அவ்வுடலில் இருந்து பல உயிரணுக்கள் உயிர் பெற்று புழுவான நிலையில் படர்ந்துள்ளன.

மனித உடலில் இருந்து உயிர் பெற்ற உயிரணுக்கள் அந்நிலைகொண்ட சக்தியையே தன்னுள் ஈர்த்து அதே நிலை கொண்ட சுவாசங்களைப் பெற்று மனிதக் கர்ப்பத்திற்கு வந்து மனிதனுடன் வந்து விடுகிறது.

ஒரு மனிதன் இறந்து விட்டால் அவ் ஒரே மனிதன் மட்டும் பிறவி எடுத்து வந்த நிலையல்ல இப்பொழுது உள்ள நிலை.

1.ஒவ்வொரு மனிதனும் அவன் இறந்த பிறகு
2.அவனிலிருந்து பல உயிரணுக்கள் மனிதனாகப் பிறவி எடுத்து
3.மனித இனமும் வளர்ந்து கொண்டே வருகிறது.

அதைப்போலத்தான் மற்ற ஜெந்துக்களின் உயிரணுவின் நிலையும்.

நம் முன்னோர்கள் இதன் நிலை அறிந்து தான் உடலை அடக்கம் செய்யும் நிலையிலிருந்து எரிக்கும் நிலையை ஏற்படுத்தினார்கள்.
1.உடலை எரிக்கும் பொழுது அவ்வுடலில் உள்ள ஆத்மா மட்டும்தான்
2.அதன் ஆவி நிலையான சத்து நிலையைத் தன்னுள் ஈர்த்துக் கொள்கிறது
3.உடலில் உள்ள நீர்ச் சத்துக்கள் அதை எரிக்கும் நிலையில் ஆவியாகி நீருடன் நீர் கலந்து விடுகிறது
4.தகனம் செய்த உடலிலிருந்து புதிதாக உயிரணுக்கள் தோன்றுவதில்லை.

இதன் உண்மையை அறிந்துதான் நம் முன்னோர்கள் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும் அவ்வுடலைப் பல நிலையில் பக்குவப்படுத்தும் வழி காட்டினார்கள்.

உயிரணுக்கள் பெருகும் நிலை புரிந்ததா...?

March 21, 2022

விபத்து நடந்த இடத்திலேயே மீண்டும் விபத்து நடக்கக் காரணம் “அந்த இடமா...? அல்லது பதிவு செய்து கொண்ட நம் எண்ணமா...?”

 

கேள்வி:-
வாகனத்தில் செல்லும் போது ஒரே இடத்தில் இரண்டு தடவை விபத்தாகி விட்டது. கேட்டால் சாப அலைகள் அங்கே இயக்குகிறது என்று சொல்கிறார்கள்.

நானும் தியானம் செய்துவிட்டுத் தான் அந்த வழியாகச் செல்கிறேன். அந்தப் பாதையை நான் மாற்றிக் கொள்ள வேண்டுமா...? எதனால் அங்கே விபத்தானது...?

பதில்:-
1.இந்த இடத்தில் சாப அலைகள் உள்ளது... வாகனத்தில் சென்றால் அடிபடும்... என்று
2.மற்றவர்கள் சொன்ன உணர்வுகள் உங்களுக்குள் பதிந்திருக்கின்றது.
3.அந்த இடம் வந்தவுடன் சரியாக அவர்கள் சொன்ன நினைவு வருகின்றது... விபத்தாகிறது.

இது தான் அங்கே நடந்தது...!

காரணம்... அந்த அலைகள் உங்களுக்குள் இருக்கிறது. நினைவு வந்ததும் அதை இழுத்துக் கொண்டு வருகின்றது... விபத்தாகிறது.

ஆனால் மற்றவர்கள் சொன்ன உடனே ஆத்ம சுத்தி செய்து நீங்கள் மறைத்து விட்டால் அத்தகைய விபத்து நேராது.
1.பிறர் சொல்லும் உணர்வுகள் நமக்குள் ஆழமாகப் பதியும் போது அந்த இடத்தில் போகும் போது டக்... என்று அந்த எண்ணம் வரும்.
2.அந்த சமயத்திலே பிரேக் இடாதபடி மற்ற வண்டிக்கு முன்னாடி உங்களை அழைத்துச் செல்கிறது
3.வண்டிக்காரன் வந்து அடிக்கவில்லை... நீங்கள் தான் சென்று விழுகிறீர்கள்.

காரணம் அதைப் போன்ற சந்தர்ப்பங்களில் நம்முடைய நினைவாற்றல் தான் அந்த வேலையைச் செய்கின்றது. ஒரு மனிதனுடைய உணர்வுகள் இப்படி எல்லாம் இயக்குகிறது... சந்தர்ப்பம் தான் இதெல்லாம்.

உதாரணமாக வீட்டில் கஷ்டம் என்றால் வாஸ்து சாஸ்திரம் என்று சொல்லிக் கொண்டு என்ன தான் வீட்டுச் சுவரை இடித்து மாற்றி வைத்தாலும் மீண்டும் அவன் சொன்ன “இடி...” தான் அங்கே வரும். குடும்பத்தில் மீண்டும் சங்கடங்களும் தொல்லைகளும் தான் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம் நாம் பதிவு செய்த உணர்வு மீண்டும் அந்த இடம் வந்ததும் ஞாபகம் வரும்

ஒரு பனை மரத்தில் பெரிய பூதம் இருந்தது. அதைப் பார்த்தேன்...! என்று வேண்டுமென்றே ஒருவர் வந்து சொல்லட்டும்.

எங்கப்பா...?

அங்கே அந்த ஒற்றைப் பனை மரம் இருக்கிறதல்லவா.. அது தான்...! என்று சொன்னால் போதும்.

அப்படீங்களா...! என்று பதிவாகி விட்டால் போதும்.

ஆனால் அங்கே பேயும் இல்லை பூதம் இல்லை.

இங்கிருந்து நடந்து போகும் போது... பூதம் இருக்கிறது என்று அவர் சொன்னாரே... “இந்த இடம்தான் தானே...!” என்று எண்ணினால் போதும். உடனே அந்த இடத்தில் பேயாகக் காட்சி கொடுக்கும்.

பார்க்கலாம்...
1.மனிதனுடைய உணர்வலைகள் அவன் பரப்பியது
2.அங்கே நாம் செல்லும் பொழுது அந்த இடத்தில் அதைக் குவித்துக் கொடுக்கும்
3.ரேடியோ டி.வி. அலைகள் மாதிரி தான் மனிதனுடைய உணர்வின் இயக்கங்கள்.

அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை கொடுத்திருக்கின்றோம். அதை எடுத்துப் பயன்படுத்தி விட்டு “நாளை நடப்பது அனைத்தும் நல்லவையாக இருக்க வேண்டும்...!” என்று எண்ணி அதை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆக மொத்தம் வாஸ்து சாஸ்திரம் நியுமராலஜி ஜாதகம் ஜோதிடம் என்று
1.கஷ்டம் வருகிறது... கஷ்டம் வருகிறது... எல்லோருமே கஷ்ட நஷ்டங்களைச் சொன்னால்
2.முதலில் கஷ்டத்தைத் தான் ஏற்றுக் கொள்கின்றோம்... அப்புறம் நன்மை எங்கே கிடைக்கும்...?

அதைக் கழிக்கச் சாங்கியம் செய்வதற்காகக் காசை செலவழித்து காசும் போனது தான் மிச்சம். இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி:-
சூரியனுக்கும் துருவ நட்சத்திரத்திற்கும் உண்டான ஒற்றுமை என்ன..? வேற்றுமை என்ன...?

பதில்:-
நம் உடலுக்குள் உயிர் சூரியன் தான். இதிலே (உடலிலே) ஒற்றுமையாக வரக்கூடிய உணர்வுகளை ஒளியாக்கப்படும் பொழுது ஒளி ஒன்றாகின்றது. ஆறாவது அறிவைத் தெளிவாக்குகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகிய உணர்வின் தன்மை ஒளியானபின் உயிரைப் போன்றே உடலில் உள்ள ஜீவ அணுக்களை மாற்றுவது தான் ஒளி... பிறவியில்லா நிலை... துருவ நட்சத்திரத்துடன் இணைகின்றது

சூரியன் நம்முடைய உடலைப் போன்றது தான்... அழியும் தன்மை பெற்றது... நிரந்தரமானதல்ல...! நம் உடல் எப்படி நிரந்தரமற்றதோ சூரியன் உடலும் நிரந்தரமற்றது தான்.

அதிலே விளைந்து உயிரணு தோன்றி எத்தனையோ உணர்வுகள் கடந்து உணர்வை ஒளியாக மாற்றியது நிரந்தரமானது. அது அழியாப் பேரருள் கொண்டது.
1.பிரபஞ்சத்தில் உருவானதுதான் அந்தத் துருவ நட்சத்திரம் (அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானது) ஆனால் அது அழிவதில்லை.. சூரியன் அழியும்.
2.ஆறாவது அறிவினை அகஸ்தியனைப் போன்று நாமும் சீராகப் பயன்படுத்தினால்... ஏழாவது நிலையாக ஒளியாகின்றோம்.

அது தான் பிறவியில்லா நிலை என்று சொல்வது.

நம்முள் உள்ள பல உயிரணுக்களின் இயக்கத்திற்கு நாம் அடிமை ஆகிவிடக்கூடாது - ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு உடலும் மாறுபட்டாலும் நாம் எடுக்கும் ஒவ்வொரு பிறப்பிலும் குழந்தை பருவம் முதல் தன்னைத்தானே உணர்ந்து வாழும் காலம் வரை நம்மை ஒருவர் வழிநடத்தித்தான் நாம் வாழும் காலம் வருகிறது.

1.அன்னை அன்னத்தை ஊட்டத்தான் செய்வாள்… அதை ஏற்று உண்ணுவது நாம் தான்
2.பள்ளியில் பாடத்தை உபாத்தியாயர் போதித்தாலும் அதை ஏற்று மதிப்பெண் பெறுவதும் நாம் தான்
3.நம்மை நாமே உணரும் காலம் வரும்வரை வழியைத்தான் நமக்குணர்த்துவர் பெரியோர்
4.ஏற்றுச் செயல்படுவது நம் செயலில்தான் உள்ளது.

ஒவ்வொரு ஜென்மத்திலும் மாறி நாம் வந்தாலும் முன் ஜென்மத்தின் நினைவு இஜ்ஜென்மத்தில் இருப்பதில்லை. முன் ஜென்மத்தின் தொடரின் அறிவுடன் தான் இஜ்ஜென்மத்தில் பிறக்கின்றோம்.

அவ்வறிவுடன் இஜ்ஜென்மத்தில் நாம் பிறந்ததின் பயனைக்கூட்டி வாழும் பக்குவத்தில் தன்னைத்தானே உணர்ந்து செயல்படும் நிலைக்கு நம்முள் உள்ள சக்தியை நாமேதான் செயல்படுத்தி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வாண்டவனும் வந்து நமக்கு அனைத்தையும் அருள்வதல்ல…!

தீய வழிக்குச் செல்பவனுக்கும் அவன் செல்லும் வழியிலேயே அவன் சக்தியை வளர்ப்பதனால் அத்தீய சக்தியே அவன் வழியில் கூடி மென்மேலும் அந்நிலையிலேயே செல்கின்றான்.

நல் உணர்வை வளரச் செய்தால் அந்நிலைதான் வளரும். ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலை அமைவதுவும் அவரவர்கள் அமைத்துக் கொண்ட நிலைதான்.

எவ்வெண்ணத்தில் நாம் உள்ளோமோ அவ்வெண்ணத்தின் வழித் தொடர்தான் நம்முடன் வளரும். வியாதியில் உள்ளவன் அவ்வெண்ணத்தையே வளர விட்டால் அவ்வெண்ணத்திற்கேப வளரும் நிலைதான் தொடர்ந்து வரும்.

ஒவ்வொரு வழி நிலையும் இதைப் போல்தான் வருகின்றது.

விஞ்ஞானத்தில் பல நிலைகளை அறிபவனும் அவன் எண்ணத்தின் வளர்ச்சிப்படிதான் அவன் வழி நடக்கிறது. ஆக எந்த ஒரு நிலையிலும் அவரவர்களின் எண்ண நிலையை வளரும் நிலைப்படுத்தி வளர விடுகின்றோமோ அந்நிலையில்தான் வாழ்க்கை நிலை அமைகிறது.

நம் எண்ணமுடன் இக்காற்றினில் கலந்துள்ள பல உயிரணுக்கள் நம் உயிரணுக்களுடனும் கலந்து விடுகின்றன. நாம் ஏற்ற ஒரே வழியில் செல்லும் பொழுது நம்முள் கலந்துள்ள அவ்வுயிரணுவும் நம்முடன் செயல்பட வருகிறது.

1.நம் எண்ண நிலையில் மாற்றம் வரும் பொழுது
2.நம் எண்ணத்தை மாற்றிக் கொள்ளாத வழியில்
3.நம்முள் வந்து குடி கொண்டுள்ள மற்ற உயிரணுவின் எண்ணத்தை
4.நாம் வேறு எண்ணத்திற்குச் சென்றாலும்
5.நம்மைத் தடைப்படுத்துகிறது நம்முள் வந்து குடி கொண்டுள்ள மற்ற உயிரணு.

ஒவ்வொரு மனிதனின் உடலிலும் பல உயிரணுக்கள் ஏறித்தான் உள்ளன. நம் ஆத்மாவை நாமே ஆண்டு… நம்மை நாம் உணர்வது என்பதன் பொருள்…
1.நம்முள் உள்ள பல உயிரணுக்களின் எண்ணத்திற்கு நம்மை அடிமை ஆக்காமல்
2.நம் ஆத்மாவின் வழியில் நமக்குகந்த சக்தி நிலையில் நாம் வாழும் நிலைப்படுத்தி
3.சீராக வாழும் பக்குவத்தை நாம் பெற வேண்டும்.

March 20, 2022

மனிதனுடைய ஆணிவேர் அவன் எடுக்கும் சுவாசம் தான்…! – ஈஸ்வரபட்டர்

 

இவ்வுடல் பசிக்கு நாம் எப்படி உண்ணுகின்றோம்…?

பசித்ததும் புசிக்கின்றோம். புசித்த பிறகு அதன் நிலையை இவ்வுடல் ஏற்றதும் மறுபடியும் பசி வந்து புசிக்கும் பொழுது நாம் தான் புசித்து விட்டோமே இப்பொழுது எதற்காக…? என்று எண்ணுவதில்லை.

மறுபடியும் மறுபடியும் பசி வந்தால் புசித்துக் கொண்டே உள்ளோம்.
1.இவ்வுடல் பசிக்கு நாம் எடுக்கும் உணவு
2.நம் எண்ணப் பசியில் இருந்து வருவதுதான்
3.இவ்வெண்ணப்பசியே நாம் எடுக்கும் சுவாசநிலை கொண்டுதான் வருகின்றது.

இவ்வுடல் நாம் புசிக்கும் ஆகாரத்தை எந்நிலையில் ஏற்று வளர்கிறது…? நாம் உண்ணும் ஆகாரம் இவ்வுடலில் எத்தன்மையில் செயல்படுகின்றது…?

நாம் எண்ணுகின்றோம்…! நாம் உண்ணும் உணவெல்லாம் இவ்வுடலுக்குள் சென்று இரைப்பை ஏற்று அந்நிலையிலிருந்து சிறு குடல் பெருங்குடலுக்குச் சென்று ஜீரணித்து அந்நிலையிலிருந்து அவை இரத்தமாகவும் சிறு நீராகவும் மலமாகவும் பிரித்து இவ்வுடல் நிலை உள்ளதென்று…!

இவ்வுடலின் நிலை எந்நிலையில் உள்ளதென்று உணர்த்துகின்றோம் இப்பாட நிலையில். இதைப் படிப்பவரின் எண்ணத்தில் இதன் உண்மையினை அறிய வேண்டுமென்றால் (வினா எழுப்பினால்) இந்நிலையில் வந்து அவர்கள் கேட்டிடலாம். நாம் ஏற்கும் உணவு இவ்வுடல் எந்நிலையில் ஏற்கிறது…?

நாம் எந்த ஆகாரத்தை உண்ணும் பொழுதும்…
1.இக் கையான காந்த சக்தி கொண்ட ஈர்ப்பு நிலை கொண்ட இக்கையினால் நாம் எடுத்துப் புசிக்கும் பொழுதே
2.அவ்வாகாரம் நம் வாய்க்குச் செலுத்துவதற்கு முன் நம் சுவாசத்திற்கு அதன் மணம் ஈர்க்கின்றது.

ஈர்க்கும் நிலையில்… நம் உடலுக்குள் சென்ற அவ்வாகரமும் நம் வாயில் உள்ள பொழுதே… நம் சுவாசம் ஈர்த்த நிலையில் “நம் வாயிலிருந்து உமிழ் நீர் சுரக்கிறது…!”

அவ்வுமிழ்நீர் அவ்வாகாரத்தில் பட்டு…
1.அவ்வாகரத்திலுள்ள சத்தையும் சேர்த்து ஆவியாகி
2.அவ்வாவியே அமிலமாகி நம் உடலில் எல்லாப் பாகங்களுக்கும் சென்று
3.அவ்வாகாரத்திலுள்ள ஆவியான சத்துள்ள அமிலம் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.

நாம் உண்ணும் உணவு எல்லாமே நம் சுவாசம் ஏற்றுத்தான் அவ்வுமிழ்நீர் என்னும் நீர் சுரந்து அதிலிருந்து செயல்படுவதுதான் இவ்வுடலமைப்பே…!

மரம்… செடி… கொடி… இவ்வுலகம்… இவ்வுலகைப்போல் பல உலகங்கள் எல்லாவற்றுக்குமே “ஆணிவேர்…” உண்டு. அதைப்போல் இம் மனிதனுக்கு எது ஆணிவேர்…? இம்மனிதனுக்கு மட்டுமல்ல மற்ற ஜெந்துகளுக்கும் எது ஆணிவேர்…?

1.இம்மனிதனின் ஆணிவேர் அவன் ஆத்மாவுமல்ல… அவன் உடலுமல்ல.
2.அவன் எடுக்கும் சுவாசம் தான்... இந்நாசி தான் மனிதனுக்கு ஆணிவேர்
3.இவ்வாணிவேரில் மாற்றம் வந்தால்… அனைத்து நிலையுமே மனிதனுக்கு மாற்றம்தான்.

எடுக்கும் சுவாச நிலைகொண்டு அவ்வெண்ணத்தில் எண்ணுவதின் நிலை கொண்டுதான் அவன் உடல் நிலையே உள்ளது.., வாழ்க்கை நிலையும்தான்…!

உடல் பசிக்கு உண்டதை நினைத்திடாமல் “பசி வரும் பொழுதெல்லாம் எப்படி உண்ணுகின்றோமோ…” அதைப்போல்
1.இவ்வெண்ணத்தை நடத்தவற்றை நினைவு கூர்ந்தே பின் நோக்கிச் செலுத்திடாமல்
2.இவ்வெண்ணப் பசியை நடப்பவற்றைச் செயலாக்கும் நிலையிலேயே நல் நிலைப்படுத்தி வாழுங்கள்.

பசிக்கும் பொழுது புசிக்கும் நிறைவைப் போல் எப்படிப் பசிக்கும் பொழுது அந்த நேரத்தில் நாம் புசிக்கும் நிலை மட்டும்தான் அந்நிலையில் செயலாக்குகின்றோம்.

அதாவது இப்பொழுது பசிக்கும் பொழுது அந்த நேரத்தில் நாம் புசிக்கும் நிலையை மட்டும்தான் அந்நிலையில் செயலாக்குகின்றோம்.
1.இப்பொழுது பசிக்கும் பொழுது இப்பொழுதே சாப்பிடாமல்...
2.பிறகு வரும் பசிக்கு என்ன செய்வது…? என்று இவ்வுடல் எண்ணுவதில்லை.

அதைப்போல் நடந்தவற்றையும் நடக்கப் போவதையும் கனவான கற்பனைப்படுத்தி கால நிலையை விரயம் செய்திடாமல்… ஆண்டவன் தந்த கால நிலையில் இவ்வுடல் என்னும் பொக்கிஷத்தை உயர்ந்த தெய்வமான இவ்வாத்மாவின் செயலினால் இக்காலத்தை விரயமாக்கிடாமல்…
1.ஒவ்வொரு நொடியையும் அத்தெய்வத்தின் சேவகனாய் நம் எண்ணத்தைச் செயல்படுத்தி
2.தெய்வமுடன் தெய்வமாக… தெய்வீக வாழ்க்கையில் தேவனாய் வாழ்கின்றோம்…! என்ற நிலைப்படுத்தி ஒவ்வொருவரும் வாழ்ந்திடுங்கள்.

இக்காற்றினில்தான் அனைத்து சக்தியும் கலந்துள்ளன. அனைத்து சக்திகளின் கலவைதான் நம் உடலும்.

இவ்வுடலின் உண்மை மகத்துவத்தை உணர்ந்து… நாமும் தெய்வத்துடன் தெய்வமாக சூட்சுமம் கொண்டு வாழ்பவர்களுடன் “இவ்வுடலில் நாம் உள்ள நிலையிலேயே கலந்து வாழ்வதற்குத்தான்…” இப்பாட நிலையின் உண்மை நிலை.

March 19, 2022

“தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள்...” தெரிந்தும் நாம் தவறு செய்யக்கூடாது

 

யாராக இருந்தாலும் மற்றவருடன் நாம் ஒத்துழைத்து... “நம்முடைய தத்துவத்தை” இணைந்து அவரிடத்தில் சொல்லும் போதுதான் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அங்கே வரும்.

1.இல்லை... இல்லை... நாங்கள் இந்தத் தியானத்தின் வழியில் மிகப் பெரிய சக்தி பெற்றிருக்கின்றோம்
2.இப்படிச் செய்தால் மட்டும் தான் நன்றாக இருக்கும்...! என்று சொன்னால்
3.நம் காரியங்கள் அத்தனையுமே அது தடைப்படுத்தும்
4.நீங்கள் நல்லதை எடுத்து யாருக்கும் சொல்லவும் முடியாது... அதை வளர்க்கவும் முடியாது.

எது எதிலே பழக்கத்தில் இருக்கின்றோமோ அந்தப் பழக்க உணர்வு தான் ஒவ்வொருவருக்கும் இருக்கும். அதைத் தெரிய வைக்க வேண்டியது... தெளிவாக்க வேண்டியது... நம்முடைய கடமைகளாக இருக்க வேண்டும்.

ஏனென்றால்
1.நமது தான் உயர்ந்தது என்று நாம் சொல்லப்படும்போது
2.அடுத்தவர்கள் “அவர்களது உயர்ந்தது என்று என்று தான் சொல்வார்கள்...!”

இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் தியானத்தைக் கடைப்பிடிக்கும் நம்மிடம் இந்தப் பிடிவாதம் இருக்கக்கூடாது.

மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு... நம்முடைய தத்துவத்தை அவர் உடலில் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவ நிலைக்கு அதை உருவாக்க வேண்டுமே தவிர...
1.நாம் பிடிவாதமாக இருந்து வெறுக்கும் தன்மைக்குக் கொண்டு வந்து விடக்கூடாது.
2.எப்பொழுது பார்த்தாலும்... “என்னமோ சாமியார் என்கிறார்கள்...
3.அதைப் பண்ணுகிறேன்... இதைச் செய்கிறேன்... என்று என்னென்னமோ வேலை செய்கின்றார்கள்...! என்ற நிலைக்குச் செல்ல விடக்கூடாது.

வீட்டில் நடக்கும் சில நிலைகளுக்குச் சாங்கியங்களும் சடங்குகளையும் செய்வார்கள். உதாரணமாக உடலை விட்டு ஒரு ஆன்மா பிரிந்த பிற்பாடு என்ன செய்வார்கள்...?

காக்காய்க்கு நாங்கள் சோறு வைக்கின்றோம்... பித்ருக்களுக்குச் சாப்பாடு கொடுத்துக் கூப்பிடுகிறோம்... என்று சொன்னாலும் “அவர்கள் இஷ்டத்திற்கு” விட்டு விட வேண்டும்.

நாம் முறைப்படி தியானம் இருந்து அந்த உடலை விட்டு பிரிந்த அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று செயல்படுத்த வேண்டும்.

நாம் கூட்டுத் தியானமிருந்து அந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துப் பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.

இதை... அவர்களிடம் சொல்லப்படும்போது...
1.இந்த ஆன்மா எப்படி விண்ணுக்குப் போகிறது என்று பாருங்கள்...! என்று சொல்லிக் கொஞ்சம் தூண்டி விட்டால்
2.அந்த ஆர்வம் அவர்களுக்குள் வரும்... ஏற்றுக் கொள்ளும் பருவங்களும் வரும்.
3.அப்போது அந்த ஆன்மா விண்ணுக்குச் செல்வதை அவர்களும் பார்க்க நேரும்.

ஆக... ஒரு பழக்கத்தில் இருக்கிறோம் என்றால் அதைப் புதுப்பித்துக் கொண்டு வர வேண்டும் என்றால்
1.எவ்வளவு நல்லதாக இருந்தாலும்...
2.அந்தப் பழக்கத்தை மாற்றுவது எளிதானது அல்ல.

கேரளாவில் மொக்கை அரிசி சாப்பிடுகிறார்கள். இந்த அரிசியைப் பார்த்து இதை யார் சாப்பிடுவார்கள்...? என்று நாம் சொல்கின்றோம்.

இங்கே சன்ன ரகமான பொன்னி அரிசியை நாம் சாப்பிடுவதைப் பார்த்து இந்த அரிசியை யார் சாப்பிடுவது...? என்று அவர்கள் சொல்கிறார்கள். அவரவர்கள் ருசி தான் அவரவர்களுக்கு வரும்

ஆகவே எப்போதுமே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மற்றவர்களை நாம் மதித்துப் பழக வேண்டும்.
1.அவர்களை உயர்த்தினால் தான் நமது சொற்களை அங்கு ஏற்கும் பருவம் கிடைக்கும்.
2.இல்லை என்னுடையது தான் உயர்ந்தது..! என்று சொன்னால் நமது உணர்வை அவர்கள் தாழ்த்தித் காட்டுவார்கள்.

நமது தத்துவங்களை அவர்களை அணுகிப் போய்த்தான் சொல்ல முடியுமே தவிர
1.கட்டாயப்படுத்தி யாருக்கும் திணிக்க முடியாது
2.கட்டாயப்படுத்திச் சொல்வதோ... இது தான் மிகவும் நல்லது என்று வலியுறுத்தினாலோ
4.நம் மீது வெறுப்பு தான் வரும்.

அந்த வெறுப்பை எடுக்க விடாதபடி... நாம் அவர்களைப் பக்குவப்படுத்தி நம்முடைய நிலைகளைப் படிப்படியாக அங்கு சொல்லி மாற்றி... “அவர்களை உணரும்படி செய்வது தான்...” நம்முடைய கடமையாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் உடலில் இயக்குவது எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்...! அவரின் எதிர் நிலையான அழுத்தங்கள் நாம் எவ்வளவு தான் உண்மையைச் சொன்னாலும் வெறுக்கும் தன்மை தான் வரும்.

ஆகையினால் இதைப் போன்ற பழக்கத்தை எல்லாம் நாம் மாற்றி
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழிகளை உலக மக்கள் ஏற்றுக் கொள்ளும் பருவ நிலைக்கு
2.அந்தப் பக்குவ நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

சூரிய (வெப்ப) சக்தியை அபரிதமாகப் பிரித்தெடுப்பதால் காற்றிலே விஷத் தன்மைகள் அதிகரிக்கிறது - ஈஸ்வரபட்டர்

 

சூரியனின் அணு சக்தியில்லாமல் இவ்வுலகில் உள்ள எந்தச் சக்தியும் இயங்கிட முடியாது. சூரியனிலிருந்து இப்பூமிக்கு வந்து படரும் சக்தியைக் கொண்டுதான் அனைத்து சக்தியுமே இன்று இயங்குகின்றன.

அதன் தொடரில் இருந்துதான் இன்றைய மனிதனால் செயலாக்கிய பல மின் அணுக்கதிர்களின் செயல் எல்லாமே.

1.இக்காற்றுடன் கலந்துள்ள சூரியனின் அணு சக்தியை
2.இன்று மனிதன் தன் செயற்கையின் நிலைக்காகப் பல அணுக்கதிர்களைப் பிரித்து எடுப்பதினால்
3.இக்காற்று மண்டலமே கடும் விஷமாகச் சுற்றிக் கொண்டுள்ளது.

மின்சாரம் எடுப்பதற்காக இக்காற்றில் கலந்துள்ள காந்த சக்திகளை ஈர்த்து எடுக்கின்றான். அதைப் போல் பல நிலைகளுக்காக இவ்வணு சக்திகளை காற்றிலிருந்து ஈர்த்து எடுக்கின்றார்கள்.

இன்றைய மனிதன் வாழ்வதற்குத் தானாகச் சூரியனில் இருந்து வரும் அணுப் பிளம்புகளைத் தன்னுள்ளேயே அச்சக்திதனைப் பெறும் வாய்ப்பினை இன்று வாழும் மனிதனே அதனைச் செயற்கை நிலைப்படுத்தி வாழப் பழகிக் கொண்டான்.

இனியும் அச்சூரியனின் சக்தியிலிருந்து மேன்மேலும் பல செயற்கை நிலைக்காக ஈர்த்தெடுத்து விஞ்ஞானம் கண்டே வாழ்ந்திட்டால் விஞ்ஞானத்தைத் தாங்கும் நிலை மெய் ஞானம் கொண்ட இப்பூமியினால் முடிந்திடாதப்பா.

காற்றையே கடும் விஷமாக்கி விட்டான் சக்தியின் சக்தி பெற்ற இன்று வாழும் இம்மனிதன்.

1.இவன் செய்த இவ்வினையினால் வருவதுதான் புதிய புதிய வியாதிகள்
2.இப்புதிய புதிய வியாதிகளுக்கு அதன் சக்திக்கும் மேம்பட்ட சக்தியைக் கொண்ட மருந்தையும்
3.இவன் சக்தி கொண்டு புதிய புதிய நிலைப்படுத்தித்தான் இவன் மருத்துவத்தில் இவனே கொண்டுவர வேண்டும்.

இன்று நாம் பெறும் சுவாசமே விஷ நிலைக்கொண்ட காற்றாக உள்ள பொழுது புதிய புதிய வியாதிகள் நம்மை வந்து தாக்கத்தான் செய்யும்.

மனிதனை மனிதனே அழித்து வாழும் நிலையில்தான் இன்றுள்ளார்கள் மனிதர்கள் எல்லாருமே.

ஆனால் இயற்கையுடன் கலந்து இயற்கையையே தெய்வமாகப் போற்றி இயற்கை அன்னைக்குச் சக்தி தந்த அச்சூரியனை தேவனாக்கி தெய்வமாக வாழ்ந்தார்கள் அன்று பல மக்கள்.

இன்று வாழும் நிலை எல்லாமே எப்படி இருக்கிறது என்றால்...
1.செயற்கைக்கு ஏங்கும்...
2.செயற்கையான மனமுடைய...
3.செயற்கையுடன் ஒன்றிய
4.செல்வந்த வாழ்க்கைதான் செழித்த வாழ்க்கை என்ற மன நிலையிலேயே
5.இவ்வுலகமே தன்னைத்தானே விஷமாக்கி
6.இவ்வுலகையும் விஷமாக்கிச் சுழன்று கொண்டே உள்ளார்கள்

இச்சுழற்சியிலிருந்து தப்புவதற்கு எந்நிலையும் யாரும் நாடவில்லை. காலத்துடன் வழிப்படுத்தி வந்த வினை இன்றுள்ள வினை.

இதிலிருந்து மீளும் நிலையை ஏற்க வருபவர்க்கு நம் தியான நிலையின் மகத்துவ நிலை புரியும். இவ்வுலகில் படர்ந்துள்ள பல உண்மை சக்தியினையும் புரிந்துணர்ந்து வாழ்ந்திட முடியும்.

1.நல்லுணர்வைப் புகட்டுகின்றோம்
2.புகட்டத்தான் நம் சக்தியில் சக்தியுண்டு.

அவரவர்கள் ஏற்கும் நிலைகொண்டு தான் அவரவர்களுக்கும் அச்சக்தி நிலை பெறும் பாக்கியமும் உண்டு.

1.அச்சக்தியினை ஏற்போர்க்கும் வழி நடத்தி வந்திடுவோம்
2.எண்ண நிலையை மாற்றுவோருக்கு நல்நிலை பெற்றிட நமக்குச் சக்தி தந்த அச்சக்தி தேவனையே வணங்கி
3.அவர்கள் நிலையை நல் சக்தியாக்கிட நாமும் வணங்கிடுவோம்.

March 18, 2022

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் குருபீடம்

 

உங்கள் உயிரைத்தான் எண்ண வேண்டுமே தவிர சாமியின் (ஞானகுரு) உயிரை எண்ணுவதால் பலனில்லை.

சாமி உயிரால் உருவாக்கப்பட்ட அருள் ஞானிகளின் உணர்வின் தன்மை இங்கே பரவியிருக்கப் படும்போது நீங்கள் நுகர்ந்தால் அது உங்கள் உடலிலே அது பதிவாகின்றது.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உணர்வைத் தான்
2.அவர் வழியில் எல்லோரும் ஏகமாக எண்ணி
3.அவரின் அருள் உணர்வுகளை இங்கே தபோவனத்தில் பரப்பச் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தால் சில சிக்கல்கள் வந்தால் அதை நிவர்த்திக்க உங்களுக்கு வழிகாட்டியான முதல் குருவாகவும் நான் (ஞானகுரு) இருக்கின்றேன்.

ஞானகுரு அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற நிலையில் தபோவனத்தை எண்ண வேண்டும்.

காரணம்...
1.நாம் எல்லோரும் தவம் இருந்த அந்த உணர்வலைகள் அங்கே உண்டு...!
2.அது மிகவும் வலிமை மிக்கது... சக்தி வாய்ந்தது.

தபோவனத்தை எண்ணி குரு அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கினால் அதை எளிதில் பெற முடியும். அதைப் பெற்று வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க முடியும்.

ஆனால் நமது ஆசை...
1.நல்ல உணர்வைக் கொண்ட ஆசையாக இருக்க வேண்டும்
2.நல்லது செயல்படுத்தக்கூடிய அந்த இச்சையை நாம் பெற வேண்டும்.

அதன் வழியில் நாம் பெற்று இயங்கினோம் என்றால் உங்களுக்குக் கிடைக்கும்.

எந்தத் திசையில் நீங்கள் எங்கே இருந்தாலும் தபோவனத்தை எண்ணி...
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கினால்
2.மிகவும் எளிதாகக் கிடைக்கும்... வலிமை மிக்க சக்தியாகவும் இருக்கும்.

அனுபவத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஆனால் நம்முடைய எண்ணங்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவதாக இருக்க வேண்டும்.

தபோவனத்தில் எல்லோருடைய அருள் உணர்வுகளும் பரப்பப்பட்டுள்ளது. குரு அருள் துணை கொண்டு தான் எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வலைகளைப் பரப்பப்படும் பொழுது பூமி முழுவதும் அந்தச் சக்தி பரவுகின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை எங்கிருந்து நீங்கள் எண்ணினாலும் அந்த அருள் உணர்வுகளைப் பெற முடியும்
1.ஏனென்றால் அவர் உணர்வைப் பெற்றுத் தான் நான் (ஞானகுரு) ஆனது.
2.அவர் உணர்வை எடுத்துத்தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்குகின்றோம்.
3.ஒளியின் உடலாக இருக்கும் குருவின் உணர்வை எளிதில் பெற முடியும்.

ஆகவே அவர் காட்டிய அருள் வழியில் குரு பெயரை வைத்துத்தான் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்...” என்று வைத்தது. அவர் உணர்வுகளை எனக்குள் விளைய வைத்து விளைந்த அந்த ஞான வித்தைத் தான் உங்களுக்குள் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

1.ஞானகுரு கூறிய உணர்வுப்படி குரு அருளைப் பெறுவேன்
2.குரு அருளால் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவேன் என்றால்
3.அந்த முறைப்படி... அந்த நெறிப்படி... அந்தச் சக்திகளை நாம் பெறுகின்றோம்.

குருநாதர் சப்தரிஷி மண்டலத்தில் ஒளியாக இருக்கின்றார். அவர் உடலோடு இருக்கக்கூடிய காலங்களில் எனக்கு உபதேசித்த உணர்வுகள் பதிவானதால்... அதை உங்கள் எல்லோர் உணர்வுகளிலும் பதியச் செய்து... ஒருக்கிணைந்த அந்த உணர்வின் தன்மைகளை அலைகளாக இங்கே தபோவனத்தில் பரப்பி வைத்திருப்பதால் எளிதில் பெற முடியும்.

சாமி செய்து கொடுப்பார் என்றால்...
1.அந்தக் குருவின் (ஈஸ்வராய குருதேவர்) அருளை நமக்கு வழிகாட்டினார் என்று
2.இந்த ஞானத்தின் வழியில் உங்களுக்குள் பதிவாக்கப்படும்போது
3.இதுவே உங்களுக்குள் அந்தக் குருவாக இருந்து
4.ஞான வழியாக அந்த உணர்வின் தன்மை உங்களை வழிநடத்தும்.
5.குரு ஒளியான உணர்வைப் பெறக்கூடிய தகுதியையும் ஊட்டும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா...!

மெய் ஞானிகளையும் மகரிஷிகளையும் பற்றிய சூட்சமங்களைக் கலிக்கு முன் வெளிப்படுத்தும் சித்தன் - ஈஸ்வரபட்டர்

 

இப்பூமி சுற்றுவதைக் காட்டிலும் சூரியன் சுழலும் வேகம் அதிகப்படுகிறது. இன்று இப்பூமியின் ஈர்ப்புத் தன்மைக்கு மேல் சூரியனின் ஈர்ப்புத் தன்மை பல மடங்கு அதிகமாக உள்ளது. அது ஈர்த்து வெளியிடும் நிலையும் அதே நிலைக்குகந்த துரித நிலையில் உள்ளது.

பல சூரியன்களின் தொடர்பு கொண்ட நம் சூரியன் நாம் காணும் சூரியனின் சக்தி மிகவும் வலுப்பெற்ற சக்தி. சூரியனின் பூமி நிலை குளிர்ந்த நிலை. இப்பூமியில் பிறவி எடுத்து இப்பூமியிலிருந்து சூட்சும நிலைக்கு சென்ற பலர் இருந்து செயல்படுத்தும் கோயில்தான் நம் சூரியன்.

இப்பூமியில் உதித்த உயிரணுக்கள் மற்ற மண்டலங்களில் வாழ்ந்திட முடியாது. சுவாச நிலை மாறுபடும் பொழுது அம்மண்டலத்தின் உந்தலினால் இம்மண்டலத்திற்கே உந்தப்பட்டு வருவார்கள் என்று உணர்த்தினேன்.

சூட்சும நிலைக்குச் செல்பவர்கள் பல மண்டலங்களிலும் இருந்து செயல்படுத்துகிறார்கள். இப்பூமியிலும் பிற மண்டலத்தில் உதித்து வாழ்ந்தவர்கள் சூட்சும நிலை பெற்றே இம்மண்டலத்திலும் (பூமி) சில நிலைகளைச் செய்கிறார்கள்.

வான சாஸ்திரம் என்று அறியப் பல நிலைகளைச் செய்கிறார்கள்.
1.அன்றே இப்பூமியும் மற்ற பூமிகளின் நிலையையும் என்றாவது ஒரு நாள் வெளிப்படுத்தும் நிலையில்
2.பல சித்தர்கள் ஒன்றுபட்டு இப்பூமியிலேயே அக்காலப் பெட்டகத்தைப் பதித்து வைத்துள்ளார்கள்.
3.இக்கலி மாறுவதற்குள் அந்நிலை வெளிப்படும்.
4.அந்நிலையை வெளிப்படுத்திட இக்கலியில் வந்து பல சித்தர்களினால் உருவப்படுத்தி ஜீவன் தந்த ஓர் உயிரணு
4.ஒரு தாயின் வயிற்றியிலேயே பிறந்து வந்துள்ளது
5.அவன் வெளிப்படுத்துவான் சூட்சும நிலையில் உள்ள பல சித்தர்களை என்றேன்...
6.சூட்சும நிலைக்குச் சென்ற பெரியோர்கள் என்றும் உணர்த்துகிறேன்.

அச் சூட்சும நிலைக்குச் சென்றவர்கள் தனித்த நிலையில் யாரும் இயங்குவதில்லை. அவர்களின் சக்தியை எல்லாம் ஒன்றாக்கி அச்சப்தரிஷிகளின் நிலையிலிருந்து செயல்படும் தன்மைக்கு வருகிறார்கள்.

மனிதர்களின் குண நிலை மாறுபட்ட குண நிலைகள். சூட்சுமத்தில் உள்ளோரின் குண நிலைகளோ ஒன்றுப்பட்ட நிலை.

இன்று சிறு தேவதைகள்... பெரும் தேவதைகள் என்று மாறுபட்டுப் பிரித்துச் சொல்கிறார்கள் புராணக் கதைகள் மூலமாக. இச்சிறு தேவதைகளின் நிலை துர் ஆவிகளின் நிலையில் இருந்து மாறுபட்ட அன்பு கொண்ட ஆத்மாக்கள்.

இவ்வுலகின் ஆசையுடன் இவ்வுலகில் உள்ளோரின் எண்ணமுடன் கலந்து தன்னையே ஆண்டவனாக ஏற்கும் நிலைப்படுத்திச் செய்து வரும் நிலை.

சூட்சுமத்திற்குச் சென்று அச்சகல தேவர்களின் தேவனாக இயங்கும் அச்சூரிய தேவனிடம் செல்லும் நிலைக்குப் பக்குவப்படாத நிலையிலேயே உள்ள நிலைதான் சித்து நிலையுடன் கலந்து உறவாடும் நிலை.

சூரிய தேவன் என்றேனல்லவா...? அனைத்துச் சித்தர்களும் முனிவர்கள் ரிஷிகள் சப்தரிஷிகள் அனைவரும் ஒன்றுபட்டு அச்சக்தியின் சக்தியான அச்சூரியனில் ஒன்று கலந்து அச்சூரியனின் நிலையிலிருந்துதான் எல்லாச் செயல்களுமே இன்று செயல்படுத்துகின்றனர்.

இன்று அச்சூரிய தேவன் இல்லா விட்டால் எவ்வுலகமும் இல்லை. நம் சூரியனைப்போல் சக்தி கொண்ட பல சூரியன்கள் இருந்தாலும் அனைத்து சூட்சும சக்தியிலுள்ள தேவர்கள் கலக்கும் நிலை நம் சூரியன் தான்.

1.இவ்வுடலில் உள்ள போதே அனைத்து நிலையையும் அறியும் பக்குவத்திற்கு உங்களைச் செயல்படுத்திடத்தான்
2.பல சக்திகளைக் கொண்ட சூட்சும நிலையில் உள்ளவர்களின் நிலையை ஒன்றுபடுத்தியே
3.இந்நிலையை இங்கு வெளிப்படுத்துகின்றோம்

சக்தியின் சக்தி பெற்ற இம் மனித ஜென்மத்தில் வாழும் பாக்கியத்தைப் பெற்ற சக்திகளே...!
1.உங்களின் சக்தியை அனைத்து சக்திகளுடன் ஒன்றுபட்டு
2.அனைத்து மண்டலங்களின் நிலையையும் உம் சக்திகளில் இருந்தே ஈர்த்து அறியும் பக்குவத்திற்கு
3.உம் சக்தியின் செல்வத்தைச் சக்தியாக்கி வாழுங்கள்.