ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 31, 2018

சர்க்கரைச் சத்தும் இதய அடைப்பும் (HEART ATTACK)


நம்முடைய சகஜ வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் ஆத்திரமும் கோபமும் அதிகமாக நமக்குள் எடுத்துக் கொண்டால் நம்மிடம் இருக்கக்கூடிய மகிழ்ச்சி என்ன செய்கின்றது...?

அது கொதிக்க ஆரம்பிக்கின்றது.

அதாவது மகிழ்ச்சி என்ற உணர்வு சிறுகச் சிறுக நம்மிடம் இணையாதபடி அந்த அமிலத்தின் சக்தியைப் பிரித்திடும் நிலையாகிS சர்க்கரைச் சத்து நோயாக வந்து விடுகின்றது.

சர்க்கரை சத்து – அந்த இனிப்பின் (GLUCOSE) தன்மை கொண்டு இருதயத் துடிப்பின் நிலைகள் குறைவாகும்.

ஏனென்றால் மகிழ்ச்சியான உணர்ச்சியை ஊட்டி அந்த இனிமையின் தன்மையை நகர்த்திக் கொடுக்கும் அந்த நுண்ணிய நரம்புகளுக்குள் சர்க்கரைச் சத்து (நோயால்) இயக்கப்படும் போது இதயத் துடிப்பு குறைவாகும். இதை டாக்டரால் கண்டுபிடிக்க முடியாது.

நமக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மை பிரியப் போகும் போது இணையவில்லை என்றால் துடிப்பைக் குறைக்கத்தான் செய்யும். அதாவது
1.மற்றவர்கள் செய்யும் செயலைக் கண்டு
2.தாங்க முடியாதபடி உணர்ச்சிவசப்படும் நிலையில் (TENSION)
3.ஏற்க மறுக்கும் பொழுது அது நமக்குள் இணையாது.  

உதாரணமாகப் பாலைக் காய்ச்சுகிறோம். அதற்குள் தான் வெண்ணெய் இருக்கின்றது.
1.ஆனாலும் புளிப்பின் சத்தை அதனுடன் சேர்த்தவுடனே
2.என்ன தான் கடைந்தாலும் வெண்ணெய் வருமா...?
3.வெண்ணெயைப் பிரித்து எடுக்க முடியுமா...? முடியாது.
4.பால் தயிராக மாறிய பின் தான் அதைக் கடைந்து எடுக்க முடியும்.

இதைப் போன்று தான் நமக்குள் இயக்கச் சக்தியாக இருக்கக்கூடிய நுண்ணிய நரம்புகளுக்குள் (அமிலத்தின் தன்மைகளுக்குள்) நாம் சிந்திக்கும் மாறுபட்ட இந்த உணர்வின் தன்மை இயக்கச் சக்தியாகப் பட்டவுடனே துடிப்பைப் பலவீனமாக்கி விடுகின்றது.

சர்க்கரை சத்து ஒருவருக்கு அதிகமாகி விட்டது என்றால் மயக்க நிலை ஜாஸ்தியாக வரும் - பார்க்கலாம் நீங்கள்.

அதே சமயத்தில் அவர் அதிகமான சந்தோஷமானால் என்ன செய்யும்...? ஏற்றுக் கொள்ளாத நிலைகள் கொண்டு இதயம் பலவீனமாகும். “டக்...!” என்று உயிர் போகும். அதற்கப்புறம் மகிழ்ச்சி எங்கே இருக்கின்றது...?

நாம் என்னமோ நினைக்கின்றோம்...!

ஆனால் ஒவ்வொரு உணர்வின் ஆற்றலும் எவ்வாறு நமக்குள் அமிலங்களின் தன்மையாக வடிக்கப்பட்டு நரம்புகளின் நிலைகளில் அது இயக்கச் சக்தியாக மாறி உடலை எப்படிச் செயல்படுத்துகின்றது என்ற நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதையெல்லாம் உடலுக்குள் ஊடுருவி எம்மை (ஞானகுரு) அறியும்படி செய்தார். அதைச் சமப்படுத்திட எதையெல்லாம் செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.

இதை உங்களிடம் சொல்லக்கூடிய காரணம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
1.உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்.
2.உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கின்றேன்.
3.உங்களுக்குள் இருக்கும் ஆயிரத்தெட்டு நற்சக்திகளைத் தெய்வமாக மதிக்கின்றேன்.

 இவ்வாறு மனிதரை உருவாக்கிய நிலைகளில் சந்தர்ப்பத்தால் உங்களைத் துன்புறுத்தும் நோய்களிலிருந்து மீண்டு மகிழ்ச்சியான நிலைகள் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.

சாமி...! நீங்கள் சொன்ன மாதிரி நாங்கள் செய்தோம்...!
2.மகரிஷிகளின் அருள் சக்திகளை எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் பெறச் செய்தோம்
3.அதனால் எங்களுக்கு உடல் நலமும் மன அமைதியும் கிடைத்தது
4.நாங்கள் சந்தோஷமாக இருக்கின்றோம்...! என்ற இந்த
5.நல்ல வார்த்தையைத்தான் உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கின்றேன்.
6.என்னை புகழ்ந்து பேச வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை...!
7.எனக்குப் புகழ்ச்சி தேவையில்லை.

எண்ணத்தினால் உங்களுக்குள் வந்த நோய்களை உங்கள் எண்ணத்தினாலேயே போக்க முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்...!

இந்த உடலுக்குப் பின் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது - எங்கே செல்ல வேண்டும்...? என்று தெரிந்து கொள்ளுங்கள்...!


நமக்கு இரண்டு கை இருக்கிறது, இரண்டு கால் இருக்கிறது. மற்ற உயிரினங்கள் என்ன செய்கிறது...?

உதாரணமாகத் தூக்கணாங் குருவியைப் பாருங்கள். அதைப் பார்த்தீர்கள் என்றால் பயங்கரமாகப் பின்னி அது தன் வீட்டைக் கட்டுகிறது. அதே போல இன்னொரு குருவி இருக்கிறது. காலையில் இராகமாகப் பாட்டுப் பாடுகிறது. மிக மிகச் சிறியதாகத்  தான் இருக்கும்.

முதலில் எனக்கு (ஞானகுரு) இது என்ன என்று தெரியவில்லை. குருநாதர் காட்டிய வழியில் சில அனுபவங்கள் பெறுவதற்காக நான் கொல்லூரில் இருக்கும் போது அதிகாலையில் பார்த்தால் இராகங்கள் போடுகிறது.

அதைக் கவனிடா…! என்றார் குருநாதர். அப்போது அதைக் கவனித்து பார்க்கும் போது அந்தக் குருவியின் உடல் மிகச் சிறியது. இங்கே இருக்கக்கூடிய சிட்டுக்குருவி வேறு. அதைக் காட்டிலும் உடல் சிறியது.

காலையில் 4.30 மணிக்கு அவை பாட்டு பாடுவதைப் பார்க்க வேண்டும். இந்தப் பக்கம் இது ஒன்று பாடுகிறது, இன்னொன்று அந்தப் பக்கம் பாடுகிறது. அடுத்தடுத்து ஒன்று ஒன்றாகப் பாடுகிறது.

அந்தக் குருவிகளின் பாஷையில் நீ ஒன்றை விடுடா…! என்றார் குருநாதர். ஒன்றொன்றாகத் தொடர்ந்து ஒவ்வொரு பாஷையாக கற்றுக் கொள்ள வைத்தார்.

அப்போது அவர் சொன்ன மாதிரி அதன் பாஷையில் பேசியவுடனே அந்தப் பறவைகள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறது…! என்ன செய்கிறது...! என்று பார்த்தேன்.

அது கூடு கட்டுவதை நீ இன்னும் பார்க்கவே இல்லை. அதைப் போய்ப் பார்... என்று சொன்னார். நீ அந்தக் குருவிகளின் பாஷையில் பேசி “நைஸ்...!” (NICE) பண்ணி விட்டு அது எங்கே கூடு கட்டுகிறதோ அந்த மரத்தடியில் இரு என்றார்.

அது எப்படி எவ்வளவு அழகாகப்  பின்னுகிறது என்று பார். இலைக்கு இலைக்கு வைத்து ரொம்ப அபூர்வமாகத் தங்க் கூட்டைப் பின்னுவதைப் பார்..! என்று குருநாதர் இப்படியெல்லாம் என்னைப் பார்க்கச் சொன்னார்.

இப்படிப் பல பல நிலைகளை நேரடியாகக் காட்டினார். காட்டுக்குள்ளும் மலைக்குள்ளும் நாட்டுக்குள்ளும் சென்று அனுபவம் பெறச் செய்தார் குருநாதர்.

அப்படி அனுபவபூர்வமாகப் பெற்ற நிலைகளை உங்களிடம் அந்த அருள் ஞானிகளைப் பற்றி லேசாகச் சொன்ன உடனே “என்னத்த இவர் சொல்கிறார்,..?” என்று நினைக்கின்றீர்கள்.

தேங்காய் பழம் இரண்டை வாங்கிக் கொண்டு போய் கோவிலில் வைத்து உடைத்து ரெண்டு காசைக் கொடுத்து அர்ச்சனை பண்ணிவிட்டுப் போனால் “எல்லாமே சரியாகப் போகிறது...!” என்று சொல்லிவிட்டுப் போகிறவர்கள் இருக்கிறார்கள்.

விஞ்ஞான நிலைகளால் நடக்கும் எத்தனையோ கொடுமைகளைப் பார்க்கிறோம். அதை மாற்றுவதற்கு என்ன வழி...? என்று அந்த மெய் ஞானிகள் காட்டிய பேருண்மைகளை யாம் சொன்னாலும் கூட அதை ஏற்றுக் கொள்வதில்லை.

நம் குழந்தையாக இருக்கலாம். அதே சமயம் அது அறியாத நிலைகளில் அதற்குள் அசுர உணர்வுகள் இருந்தாலும் நாம் குழந்தைக்குச் செய்ய வேண்டியது என்ன...?

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் எடுத்து வலிமை பெறச் செய்து அவனிடம் உள்ள தீய குணங்கள் போக வேண்டும் என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.

காரணம் நாம் மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம். இதில் நாம் சொந்தமும் பந்தமும் பாசமும் அதிகமான நிலைகளில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால்
1.பாசத்தால் நாம் எடுத்துக் கொண்ட அந்தச் சுவாசத்தின் தன்மை
2.எத்தகைய நினைவுகள் கொண்டு நாம் விரக்தியான உணர்வைச் சுவாசிக்கின்றோமோ
3.சுவாசித்த உணர்வுகளை நம் உயிர் பிரம்மமாக்கியே விடுகின்றது. (நம் உடலாகச் சிருஷ்டித்து விடுகின்றது)
4.அந்த உணர்வின் இயக்கத்திலிருந்து யாரும் தப்ப முடியாது.
5.ஆயிரம் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்தாலும் சரி...
6.பெரும் யாகத்தைச் செய்து பல ஆயிரம் பேருக்குச் சாப்பாடு போட்டு
7.அவர்களை எல்லாம் மகிழ்ச்சி அடையச் செய்தால் நமக்குப் பெரிய புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்துச் செய்தாலும் சரி...
8.சுவாசத்தின் மூலமாக நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை உயிர் எனக்குள் சிருஷ்டித்தே விடுகின்றான்.
9.அவனிடமிருந்து நான் தப்ப முடியாது.

நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ உயிரிலே பட்டவுடன் அதை இயக்கி உணர்ச்சிகளாக உடல் முழுவதற்கும் பரவச் செய்கின்றது. அந்த உணர்வுகள் உமிழ் நீராக வடிக்கப்படுகின்றது.
1.உடலான சிவத்திற்குள் அது ஐக்கியமாகின்றது.
2.சக்தியின் ஸ்வரூபமாக உடலுக்குள் அது வித்தாக விளைய ஆரம்பித்து விடுகிறது.
3.விளைந்த வித்தின் தன்மையை உயிராத்மாவாகத் (உயிரிலே முலாமாக) தனக்குள் சேர்த்துக் கொள்கிறான்.
4.இந்த கூட்டை விட்டுச் சென்ற உடனே “வா என் பின்னாலே...!” என்கிறான்.

துன்பங்கள் படும் பொழுது அல்லது மற்றவரைத் துன்பப்படுத்தும் பொழுது எதையெல்லாம் குறைக்க வேண்டும் என்று நாம் எண்ணினோமோ இந்த உணர்வுகள் அனைத்தும் உடலில் விளைந்து உயிருடன் ஐக்கியமான பின் அடுத்த பிறவியில் அங்கங்கள் குறைந்த உடலுக்கு நம்மை அழைத்துச் சென்று விடுகின்றான் (உயிர்).

அதாவது மற்றவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்து எந்த அளவிற்கு மகிழ்ந்தோமோ அந்த வேதனையின் தன்மை நமக்கு மகிழ்ச்சியாகி அடுத்து வேதனைப்படும் உடலாக உருவாக்கி விடுகின்றது.

இரண்டு பேர் நமக்குப் பிடிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு நல்ல நிலையில் நாம் இருந்தாலும் சரி அவர்களைப் பார்த்தவுடனே
1.திட்டுவதே உங்களுக்குக் குறியாக வந்து விடும்.
2.அந்த வேகமான நிலைகள் நமக்குள் இருந்து கொண்டே இருக்கும்
3.அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டாலே நமக்குள் எரிச்சலை ஊட்டிக் கொண்டே இருக்கும்
4.ஆனால் அந்த எரிச்சல் வருவது நமக்குத் தெரியாது
5.ஆக அந்த எரிச்சல் இருந்தால் தான் நமக்கு மகிழ்ச்சி
6.அதே சமயம் அந்த எரிச்சல் நம் உடலில் இருந்து கொண்டே இருக்கும
7.நமக்கு வேண்டாதவர்கள் துன்பப்பட்டால் அந்த இடத்தில் தான் நமக்கு மகிழ்ச்சி வரும்.

எந்தத் துன்பத்தின் நிலைகளைக் கண்டு அந்த உணர்வை ரசித்துச் சுவாசிக்கும் பொழுது நமக்குள் மகிழ்ச்சியாகின்றதோ அதன் விளைவாக மற்றதை வேதனைப்படுத்தி உணவாக உட்கொள்ளும் விஷ ஜெந்துக்களாகப் பாம்பாக நம்மைப் பிறக்கச் செய்துவிடும் நம் உயிர்.

இதை நன்றாகக் கவனமாகக் கவனிக்க வேண்டும் ஏனென்றால் செத்த பிற்பாடு யாருக்கு என்ன தெரியப் போகிறது என்று நினைப்பீர்கள். இந்த உணர்வினுடைய செயல்கள் இப்படித்தான் ஆகும்.

ஆனால் இந்தத் துன்பத்திற்கெல்லாம் ஆளாக்கித் தான் குருநாதர் எனக்கு அந்தப் படிப்பினையே கொடுத்தார். யாம் நேரடியாகவே உங்களுக்குள் சொல்லாகக் கொடுத்து அந்த மெய் ஞானிகள் கண்ட பேருண்மைகளைச் சொல்லிக் கொண்டு வருகிறோம்.
1.நாம் மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம்.
2.இந்தச் சரீரத்தில் நாம் எவ்வளவு காலம் இருக்கின்றோம்…?
3.வாழும் காலத்தில் எதை நாம் வளர்க்க வேண்டும்...?
4.உடலை விட்டுச் சென்றால் நாம் எங்கே செல்ல வேண்டும்…?

சற்று சிந்தித்துப் பாருங்கள்...! பிறவியில்லா நிலை அடைந்த அந்த மகரிஷிகள் வாழும் இடமே நம் எல்லையாகக் கருத்தில் கொண்டு நாம் வாழ வேண்டும்.

July 30, 2018

பதினெட்டாம் பெருக்கு - பதினெட்டாவது நிலையை அடைய வேண்டும் என்று தான் ஐயப்பன் ஆலயத்தில் காட்டுகின்றார்கள்...!


பதினெட்டாம் படிப் பெருக்கு என்று ஆறுகளில் பதினெட்டுப் படிகளை வைத்திருப்பார்கள்.

பதினெட்டுப் படிகளிலும் நீர் நிலைகள் பெருகி வரப்படும் போது அந்த வருடம் தாவர இனங்களின் சக்தி வெள்ளாமை பெருகி அதன் வளர்ச்சியின் தன்மைகள் முழுமை பெறும்.

நெல்லோ அது சம்பந்தப்பட்ட மற்ற தானிய வகைகளோ மற்ற பயிர்களோ அது பெருகும் என்று இப்படிப் பதினெட்டாம் படி பெருக்கு என்று வைப்பார்கள்.

இதை உணர்த்துவதற்காக நீர் நிலைகள் ஓடும் பக்கங்களில் இந்தப் பதினெட்டுப் படிகளை வைத்துக் காட்டியிருப்பார்கள்.
1.மழை நீர் பெய்து பதினெட்டுப் படிகளும் முழுமையாக அடைந்து செல்லும் போது
2.மக்கள் சுபிட்சமாக வாழ்வதற்குத் தேவையான உணவு கிடைக்கும் அந்தச் சக்தி பெற்ற நாள் என்று எண்ணச் செய்வதற்காகப்
3.பதினெட்டாம் பெருக்கு – ஆடிப் பெருக்கு என்று காட்டினார்கள் ஞானிகள்.

ஆனால் அதே சமயத்தில் மழை நீர் சரியாகப் பெய்யாதபடி பதினெட்டுப் படிகளுக்குக் கீழ் நீர் சென்றால் பயிரினங்களின் வளர்ச்சிகளும் அந்த வருடத்தில் குறைந்தே இருக்கும் என்ற உண்மையைக் காட்டினார்கள் அன்று ஞானிகள்.

இப்போது பல தரப்பட்ட தாவர இனங்களை வளர்க்கின்றோம். அது வளரவதற்குக் தேவையான சத்து சரியாகக் கிடைக்கவில்லை என்றால் தழைச் சத்து மணிச் சத்து என்று பல உணவுகளைச் சத்தாக அதற்குக் கொடுக்கின்றோம்.

அப்பொழுது அந்தத் தாவர இனங்கள் செழித்து வளர்ந்து அது தன் உணர்வின் சத்துகளைப் பெருக்கி முழுமையான மகசூலைக் கொடுக்கின்றது. அதற்கு வேண்டிய சத்தைப் பெருக்கி முழுமை அடையச் செய்கின்றோம்.

அதைப் போன்று தான் தனது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எந்த எண்ணங்களைப் பெருக்க வேண்டும்…? பத்தாவது நிலையான கல்கியை எப்படி ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

ஏனென்றால் உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அதைப் போன்று உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் உணர்வாக மாற்றிப் பத்தாவது நிலையை அடைந்தவர்கள் தான் மகரிஷிகள்.

எட்டுத் திக்கிலும் எது வந்தாலும் அந்த உணர்வினை ஒளியாக மாற்றி  ஒளியின் சரீரமாகப் பெருக்கிக் கொண்டே வாழ்ந்து கொண்டிருப்பவர் துருவ மகரிஷி.

1.அஷ்ட திக்கிலிருந்து (எட்டு) வரும் தீமைகளை அகற்றித்
2.தீமையற்ற உணர்வைத் தன் உடலுக்குள் அணுக்களாகப் பெருக்கி
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெற வேண்டும் (பத்து) என்று அன்று பல நிலைகளில் எடுத்துக் கொண்டவர் தான் ஐயப்பன்.

இளமையிலேயே கூடு விட்டுக் கூடு பாய்ந்து பல சரீரங்களை அவர் எடுத்தாலும் கடைசியில் அஷ்ட திக்கிலிருந்தும் மதங்களாலோ மற்ற இனங்களாலோ வரும்
1.பலருடைய எண்ணங்களிலிருந்து எந்த ருபத்தில் எது வந்தாலும்
2.அதைத் தனக்குள் வராதபடி அடக்கி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகப் பெற்றார்.
3.சப்தரிஷி மண்டலத்தில் இன்றும் பேரொளியாகத் திகழ்ந்து கொண்டுள்ளார்.
4.இந்த உண்மையினைத் தான் அங்கே பதினெட்டுப் படிகளை வைத்துக் காட்டி உணர்த்தப்படுகின்றது.

அதன் வழியில் யார் யார் செல்கின்றாரோ அந்தப் பதினெட்டாவது நிலை அடைந்தால் அங்கே சப்தரிஷி மண்டலத்தை அடைய முடியும் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

மரத்தைத் தூக்கி எறியும் சக்தியைக் கொடுத்து மலைப் பாம்பிடமும் மந்திரவாதிகளிடம் என்னைப் பரிசோதித்தார் குருநாதர் – கேரளாவிலும் குமாரபாளையத்திலும் நடந்த நிகழ்ச்சிகள்


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மிடம் (ஞானகுரு) “உனக்குள் அற்புத சக்தி இருக்கிறது...!” என்று சொல்லிவிட்டு சில நிகழ்ச்சிகளைச் செய்யச் சொல்கிறார். இதிலே நீ ஆசைப்படுவாயோ…! என்று சொல்கிறார்.

குருநாதர் உன் விரலை நீட்டுடா...! என்கிறார். இந்த மாதிரி நீட்டு. இந்த மரம் சாய வேண்டும் என்று சொல்கிறார். அவர் சொன்ன மாதிரிச் செய்தவுடன் ஒரு மரம் அப்படியே சாய்கிறது. கீழே விழுந்து அப்படியே காற்று போலப் பறந்து போகிறது.

உனக்கு யாராவது எதிரி இருந்தால்... “இது போலச் சாய்த்து விடலாம்...!” என்று சொல்கிறார். உனக்குக் கெடுதல் ஏதாவது செய்கிறான் என்றால் நீ விரலை இது போல நீட்டினால் அவனைச் சாய்த்து விடலாம். யாராக இருந்தாலும் இதைச் செய்யலாம்...! என்று சொல்கிறார்.

நான் சந்தேகப்பட்டவுடன் “இன்னொரு மரத்தின் தாவு (மரக் கொப்பு) மீது விரலைக் காண்பிடா...!” என்றார். காட்டியதும் தாவு “சடக்...” என்று அப்படியே ஒடிந்து விழுகிறது.

அப்போது குருநாதர் என்ன சொல்கிறார்,
1.உன்னைக் கண்டால் உலகமே அஞ்சும்.
2.நீ எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை...! என்று சொல்கிறார்.

இந்த மாதிரி ஒரு வலுவைக் கொடுத்து என்னைப் பரிசோதிக்கிறார். எதிலே கொண்டு போய் நம்மை மாட்டப் போகிறார் என்று தெரியவில்லை. அப்போதே எனக்குச் சந்தேகமாகி விட்டது.

இப்பொழுது இதைக் காண்பிக்கிறார். இன்னும் வேறு என்னென்னமோ கஷ்டத்தில் கொண்டு போய்த் தள்ளி விடுவார் போலத் தெரிகிறது...!  எத்தனை அடி  கிடைக்கப் போகிறதோ…? அல்லது வேறு என்னமும் கிடைக்கப் போகிறதோ…! என்ற இந்த உணர்வு எனக்கு (ஞானகுரு) வந்துவிட்டது.

ஏனென்றால் இவ்வளவு அற்புதங்களைச் செய்யப் போகும் போது குருநாதருக்குப் பிடிக்காதபடி நாம் ஏதாவது செய்துவிட்டால் “என்ன ஆவோம்...!” என்று இந்தப் பயம் தான்.
1.இந்தப் பயத்திலே எனக்குச் சிந்திக்கக் கூட நேரம் இல்லை.
2.என்ன செய்வது...? இவரிடமிருந்து நாம் எப்படிக் கழன்று கொள்வது...?
3.எல்லாம் காண்பிக்கிறார்… எல்லாம் பெறுகிறோம்… அவரிடமிருந்து ஏதாவது சாப அலைகள் வந்தால்
4.நம்மை எதிலே கொண்டு போய்விடுவாரோ…? எந்த நிலையைச் செய்வாரோ…! என்ற இந்தப் பயம் தான் எனக்கு அதிகமாக வருகிறது.

அப்போது தான் குருநாதர் சொல்கிறார்…! நீ ஒன்றும் ஆக மாட்டாய். உனக்கு இந்தப் பயம் வருகிறதில்லையா…? ஒரு எதிரிக் கூட்டதுக்குள் நீ போகிறாய். நீ ஒரு நல்லதைச் செய்கிறாய்.

ஆனால் ஒரு பொறாமைகாரன் ஏதோ ஒன்று செய்கிறான். அப்படி அந்தப் பொறாமைக்காரன் செய்யப் போகும் போது உன்னிடம் இருக்கக்கூடிய இந்த வலுவை நீ அவர்களிடம் பாய்ச்சுவாய்.

பவரையும் (சக்தியையும்) கொடுத்து மரத்தையும் சாய்க்கச் சொல்லி விட்டால்...  யாராக இருந்தாலும் “உரசிப் பார்க்க வேண்டும்” என்ற தைரியம் நமக்கு வரும் அல்லவா...!

அவன் கெட்டவன் தான். உன் வலுவை அவன் மேல் பாய்ச்சும் போது அவன் வீழ்ச்சி அடையும் போது அவன் எண்ணம் முழுவதும் உன்னிடம் வரும். ஏனென்றால் அந்தச் சமயத்தில் உன்னிடம் இருக்கக்கூடிய சக்தி கொண்டு அவனை எப்படியும் வீழ்த்தி விடுவேன் என்ற அகம் கொள்கிறாய்.
1.வீழ்த்தி விடுவேன்...! என்ற எண்ணம் வரும் போது
2.முதலில் உன் உயிர் உனக்குள் அதைப் படைக்கிறது என்று சொல்கிறார்.
3.வேறு யாரும் இல்லை “நீ எண்ணும் எண்ணமே உனக்கு எதிரியாக மாறுகிறது...!” என்று சொல்கிறார்.

நீ யாரை வீழ்த்த வேண்டுமென்று எண்ணுகிறாயோ... உன்னுடைய அதே உணர்வு... நான் கொடுத்த சக்தி உனக்குள்ளேயே அது விளைந்து உனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை வீழ்த்திய தீரும்...! என்கிறார். அதாவது
1.முதலில் நீ தான்டா கெடுவாய்.
2.இரண்டாவது தான்டா அவன் கெடுவான் என்கிறார்.
3.அவனும் விழுந்து விடுவான். நீயும் விழுந்து விடுவாய்.
4.இதில் நீ எங்கே தப்பப் போகிறாய்...? என்று கேட்கிறார்.

ஏனென்றால் குருநாதர் பல வகைகளில் எம்மைப் பரிசோதித்தார். ஆசையும் ஊட்டுகிறார். அடுத்தாற்போல் அந்த ஆசையினால் எல்லாம்  பெறவும் செய்கிறார். அடுத்த நிமிடம் “தொப்...!” பென்று கீழே விழ வைத்து விடுகின்றார். பயப்படவும் வைக்கிறார்...!

சாதாரண வாழ்க்கையைக் காட்டிலும் இது ஒரு ஏதோ ஒரு நரக லோகத்தில் வாழ்ந்த மாதிரி அல்லவாக இருக்கிறது...?
1.இதையும் செய்ய முடியவில்லை.
2.அதையும் செய்ய முடியவில்லை. என்ன செய்வது...? என்று
3.இப்படி ஒரு திகட்டலை ஊட்டிக் கொண்டே வருகிறார்.

அடுத்து குருநாதர் என்ன சொல்கிறார்...? நீ இரக்கத்துடன் ஒருவருக்கு  நல்லது செய்கிறாய் என்றால் அவனுடைய வேதனையான உணர்வுகள் உனக்குள் வந்துவிடுகிறது.

அவன் உடலில் வேதனைகள் அதிகமாகும் போது நீ இரக்கத்துடன் அணுகும் பொழுது “ஈகை....! இது வலு குறைந்தது. ஆனால் அவனிடம் இருக்கக்கூடிய வேதனை என்பது வலு அதிகமானது. அதை நீ நுகர்கிறாய். உனக்குள் அது அணுவாக விளைகிறது. நீ காப்பாற்றிவிடுகிறாய் முதல் தடவை.

ஆனால் நீ நுகர்ந்த வேதனைகள் உன் உடலுக்குள் விளையத் தொடங்கியதும் அவனை காப்பாற்றிய உன்னுடைய நல்ல குணத்தை முழுவதையும் அழிக்கிறதே. இதற்கு நீ என்ன செய்யப் போகிறாய்...? என்று கேட்கிறார். இப்படி அனுபவரீதியாகக் காட்டுகின்றார்.

அடுத்தாற்போல வேறொரு இடத்தில் நான் இருக்கின்றேன். அங்கே ஒரு மலைப் பாம்பு வருகிறது. நான் படுத்திருக்கின்றேன். அது சுருண்டு... சுருண்டு... சுருண்டு... சுருண்டு... அப்படியே பூஸ்..புஸ்ஸ்... புஸ்ஸ்...! என்று வருகிறது.

இதை இவர் (குரு) ஏவி விட்டாரா அல்லது அது நிஜமாக வருகிறதா என்று எனக்கு ஒரு சந்தேகம். அது இவ்வளவு சீறி வருகிறதே... இதை நிஜமாகவே இவர் உருவாக்கிக் கொடுக்கிறாரா...? என்று என்னுடைய எண்ணம்.

ஆனால் என்னை இங்கே விட்டுவிட்டு அவர் எங்கேயோ போய் விட்டார். காட்டுக்குள் பக்கம் போய் விட்டார். அவர் என்ன செய்கிறார்  என்று எனக்கும் தெரியவில்லை. “நிஜமா... பொய்யா...!” என்று தெரியவில்லை.

அதி பயங்கரமான நிலையில் அந்த மலைப் பாம்பு சீறிப் பாய்ந்து வரப்படும் போது அப்பொழுது நான் ஒரு யோசனை செய்தேன். என் மேலே இருக்கும் துண்டில் ஒரு கல்லை முடித்து அந்தப் பாம்பு மீது போட்டேன்.

அதைத் தூக்கிப் போட்டதும் அதன் வாயில் போய்ச் சிக்கிக் கொண்டது. அந்தத் துண்டிலிருந்து வரும் மனித வாசனை காரணமாக அந்த மலைப்பாம்பு அந்தத் துண்டோடு சேர்த்துக் கல்லையும் விழுங்குகிறது. ஆனால் அது கல்லென்று பாம்பிற்குத் தெரியாது.

பலவிதமான உணர்வுகளை எடுத்தபின் எனக்கு அப்பொழுது ஒரு தைரியமும் வருகிறது. சில நேரங்களில் அதிலிருந்து தப்பவும் முடியவில்லை.

அப்புறம் தான் “இதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும்...!” என்று சிந்திக்க ஆரம்பித்தேன். அப்படிச் சிந்திக்க ஆரம்பிக்கும் போது நம்மிடம் குருநாதர் மிகப் பெரிய சக்தியைக் (மரத்தைச் சாய்க்கும் சக்தி) கொடுத்திருக்கிறார் இல்லையா...!

அந்தச் சக்தியை வைத்து இந்தப் பாம்பை நான் ஏதாவது செய்கிறேனா...! என்று பார்க்கிறார் போலிருக்கிறது... என்று எனக்கு அப்படி ஒரு சிந்தனை வந்தது.
1அப்பா...…! எது ஆனாலும் சரி... நீயே பார்த்துக் கொள்…!
2.எனக்கு ஒன்றும் தெரியாது.
3.அது என்னை விழுங்கினாலும் சரி… என்னைக் கடித்தாலும் சரி.. நீயே பார்த்துக் கொள்…! என்று சொல்லி விட்டேன்.

ஏனென்றால் இது குருநாதர் ஏவி விட்ட பாம்பு தான். அப்புறம் அந்தப் பாம்பு அப்படியே மறைகிறது. குருநாதர் கெக்கே…கெக்கே... என்று சிரிக்கிறார்…! “என் பரீட்சையில் நீ தப்பி விட்டாயடா…!” என்று.

இப்படி அவர் கொடுத்த சக்தியை வைத்து நான் என்ன செய்கின்றேன் என்று சோதிக்கிறார். இதற்கு அடுத்து கேரளாவில் ஒரு மலைப் பக்கம் போகச் சொல்கிறார்.

அங்கே மந்திரவாதிகள் சில வேலைகளைச் செய்கிறார்கள். என்னுடைய வாசனையை நுகர்கிறார்கள். பரீட்சை செய்து பார்க்கிறார்கள். அதாவது “ஒடியர்கள்” இருக்கக்கூடிய பகுதிக்குக் குருநாதர் அனுப்புகிறார்.

ஒடியர்கள் முன்னாடி வருவதை நுகர்ந்து சில விஷயங்களைச் செய்வார்கள். என்னுடைய வாசனையை நுகர்ந்து பின் உனக்கா… எனக்கா…? என்று வலுவான நிலைகளைக் காட்டுகின்றார்கள்.

அவர்கள் செய்வதைப் பார்த்தபின் இவர்களை வீழ்த்தினால் என்ன…? என்ற அந்த எண்ணம் மறுபடியும் வருகிறது. சரி பார்க்கலாம்.. என்ன தான் செய்கிறது என்று பார்ப்போம்...! என்று தோன்றுகிறது.

மலைப் பாம்பிடமிருந்து தப்பினோம். ஆனால் இந்த மந்திரவாதிகளிடமிருந்து எப்படித் தப்புவது…? அவன் ஏவல் செய்யும் போது நாம் சும்மா இருந்தால் நம்முடைய கை கால் போய் விடுமே...! கை கால் போய்விட்டால் என்ன செய்வது…?  இப்படி ஒரு சிந்தனை வருகிறது.

முதலில் விரலை நீட்டி மரத்தை எப்படிச் சாய்த்தோமோ அதே போல இவர்கள் கை கால்களையும் விழ வைக்கலாம் என்று இந்த எண்ணம் போகிறது.

அப்பொழுது தான் குருநாதர் ஏற்கனவே சொன்னது நினைவிற்கு வருகிறது. முதலில் நீ இதை எண்ணினால் உன் கை கால்கள் விளங்காமல் போகக் கூடிய உணர்வு உனக்குள் விளைந்து விடும்.
1.அவனும் போகிறான்.
2.அதே போல நோயாக மாறி உன் கை கால் அங்கங்கள் இயங்காமல் போய்விடும் என்று சொல்கிறார்.

அப்புறம் இதற்கு என்ன செய்வது...! என்கிற போது தான் குருநாதர் விளக்கம் கொடுக்கின்றார். அவர்களின் ஏவலின் தன்மை உன்னைத் தாக்காத நிலைகளில்
1.”நான் கொடுத்த சக்தியை” உன் பாதுகாப்புக்காக வைத்துக் கொள்.
2.உன் பாதுகாப்புக்காக இந்தச் சக்தியை நீ பயன்படுத்தினாய் என்றால் உனக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

ஏனென்றால் ஒரு நெல்லிற்கு உமி தேவை தான். அந்த உமி இல்லை என்றால் அதில் பால் பிடித்து அரிசி வராது. இதைப் போன்று தான் உயர்ந்த குணங்களைக் காக்க வேண்டுமென்றால் இந்தச் சக்தியைப் பயன்படுத்த வேண்டிய முறைகள் இது என்று உபதேசிக்கின்றார்.
1.வலுவான சக்தியைக் கூட்டி
2.இதை அரணாக அமைக்கச் சொல்கிறார்.
3.இந்த அரணைத் தாண்டி அது வராது.
4.நீ அவனை அழிக்க வேண்டியதில்லை... அவன் உன்னை அழிக்க முடியாது.
5.அவன் எண்ணம் அவனுக்குள்ளேயே அவனை மாய்க்கும்.
6.அவனில் அவனே போகட்டும்...! என்று சொல்கிறார்.

மிகச் சக்தி வாய்ந்த நிலைகளைக் கொடுத்தாலும் அது மனிதன் கைக்கு வரும்போது எப்படி..? என்ற நிலை அனுபவமாக இவ்வாறு காட்டுகின்றார் குருநாதர்.

இப்படி ஒரு அனுபவம் இல்லை. பல முறைகளிலும் பல சந்தர்ப்பங்களிலும் இதே போல ஏற்படுத்திக் கொடுத்தார்.

ஒரு சமயம் குமாரபாளயத்தில் நான் இருக்கும் பொழுது என்னை அங்கிருக்கும் மந்திரவாதியும் அவனைச் சார்ந்தவர்களும் உதைப்பதற்கே வந்தார்கள்.

விடிவதற்கு முன் நீ ஊரை விட்டுப் போகவில்லையென்றால் உன்னை என்ன செய்கிறேன் பார்...! என்கிறார்கள். என்னைப் பார்த்துக் கத்தியை எடுத்து ஓங்கி விட்டார்கள்.

அப்பொழுது வலுவை இப்படிப் பாய்ச்சுவதா... அப்படிப் பாய்ச்சுவதா...? என்ற நிலையில் அந்த உணர்வின் தன்மையை “நான் அரண் கட்டப்படும் போது” கத்தியை ஓங்கியவனின் கைகள் இறங்கவில்லை. அந்தக் கை பாட்டுக்கு அப்படியே நிற்கிறது.

அதே சமயம் கூட்டம் கூடி விட்டது. அப்படிக் கூட்டம் கூடியதும்
1.நான் தெரியாமல் செய்துவிட்டேன் என்றேன்
2.அப்புறம் அவன் கை கீழே இறங்கியது...!
3.சில சந்தர்ப்பங்கள் இப்படி வரப்படும் போது நானாக அதைச் செய்யவில்லை.

எதிர்பாராமல் வரும் போது இந்த உணர்வின் தன்மை கொண்டு தடுப்புச் சுவர் போல அமைத்துத்
1.தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று தான் எண்ண வேண்டுமே தவிர
2.கை நிற்க வேண்டும் என்று எண்ணக் கூடாது...!
3.நான் கொடுத்த உணர்வின் சக்தியை நீ எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று இப்படித்தான் எனக்கு அனுபவத்தைக் கொடுத்தார் குருநாதர்.

அணுவை வைத்து அணுகுண்டாகச் செய்து அதை வெடிக்கச் செய்தால் உலகை அழிக்கின்றது. ஆனால் அந்த அணுவையே அடக்கும் போது அது நமக்குப் பல நன்மைகளைச் செய்கின்றது.

அதாவது மரத்தைச் சாய்ப்பது அடுத்தவரைச் செயலிழக்கச் செய்வது இதெல்லாம் மனிதனுக்குள் விளைந்த சக்தி. மந்திர ஒலியால் ஒரு உடலுக்குள் பாய்ச்சப்பட்டு அந்த உணர்வின் தன்மை வலுவாக்கப்பட்டு அதன் நிலைகள் கொண்டு தான் இப்போது உன்னில் இயக்கப்பட்டது. சாதாரண மனிதனின் செயலாக்கங்கள் தான் இது..! என்று விளக்கம் கொடுக்கின்றார் குருநாதர்.

தன் வாழ்க்கையில் வந்த இத்தகைய தீமைகள் அனைத்தையும் நசுக்கிப் பொசுக்கியவன் அகஸ்தியன். அகஸ்தியன் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான். அதை நீ நுகர்ந்தாய் என்றால் இதை நீ அழிக்கலாம் என்ற நிலையில் இராமாயணக் காவியத்தைச் சொல்கின்றார்.

வாலி மிக வல்லமை பெற்றவன். ஒரு தீமையான உணர்வை மற்ற எதனுடன் கலக்கச் செய்தாலும் அதனின் வலிமையை அது இழக்கச் செய்துவிடும். ஆனால் அதைப் போன்ற வலிமைகளையும் வென்றவன் துருவ மகரிஷி.

தன்னுடைய எண்ணத்தால் மற்றவைகள் அனைத்தையும் அரவணைத்து ஒளியின் சிகரமாக வாழுகின்றான் அந்தத் துருவ மகரிஷி.

1.நீ இங்கே மந்திரத்தைச் சொல்லிச் சொல்லித்தான் எடுக்க வேண்டும்.
2.நீ மந்திரத்தைச் சொல்லி அந்த உணர்வின் தன்மை வலிமை பெற்ற பின்தான்
3.இந்த உணர்வின்  நினைவாற்றலை அடுத்தவனுக்குள் நீ பாய்ச்ச முடியும்.
4.இதில் ஏற்றி மந்திர உருக்களை நீ ஏற்படுத்துவதற்கு முன்
5.நீ ஜெபிக்கும் இந்த அலைகள் குவிவதற்கு முன் அவன் உன்னைத் தாக்கவும் செய்யலாம்.

ஆனால் நீ எண்ணும் போது “நினைத்த மாத்திரத்தில்” அந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடியதை நீ பெற முடியும். அது எங்கும் எப்போதும் பரவிக் கொண்டே உள்ளது. அது வந்து கொண்டே உள்ளது

மனித வாழ்க்கையில் வரும் தீமை எதுவானாலும் அந்தத் தீமை தனக்குள் விளையாதபடியும் ஒருவன் தீமை செய்கிறான் என்றால் “தீமை செய்தான்...!” என்ற எண்ணத்தை எடுக்காதபடியும் உயர்ந்த ஞானத்தின் உணர்வை இப்படி நமக்குள் சேர்க்க வேண்டும்.

அன்று அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலைத் தன் எண்ணத்தால் எடுத்துக் கொண்ட பின் வரும் விஷத்தை எல்லாம் அடக்கி ஒளியாக மாற்றிக் கொண்டான்.

வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றும் சூரியனிலிருந்து வெளிப்படுகிறது. அதிலே காந்தம் ஒரு பொருளைத் தனக்குள் அரவணைத்துக் கொண்டால் சீதா லட்சுமியாக மாறுகின்றது. துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரக் கூடியதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டால் சீதா லட்சுமியாக மாறுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று  இந்த எண்ணத்தை எண்ணும் போது அதை நீ பெறுகின்றாய். அந்த உணர்வை நீ நுகரும்போது அந்த எண்ணங்கள் பிரதிபலிக்கின்றது. அதாவது உடலான இந்தத் திரேதா யுகத்தில் சீதா ராமனாகத் தோன்றுகிறான் (எண்ணங்களாகத் தோன்றுகின்றது).

கடும் வேதனைப்படும் நிலையாக விஷத் தன்மை கொண்ட  உணர்வின் இயக்கமாக ஒருவன் செய்தான் என்றால் அது வாலி. ஏனென்றால் விஷம் முதலில் தோன்றியது – வாலி. பின் மனிதனாகி ஒளியின் சிகரமாக மாறி ஒளியின் சரீரம் பெற்றவன் துருவ நட்சத்திரம் – சுக்ரீவன்.

வாலியின் சகோதரன் சுக்ரீவன் என்றும் “அவனுடைய துணையைத் தான்... இராமன் நாடுகின்றான்...!” என்று காட்டுகின்றார்கள். விஷத் தன்மையான உணர்வுகளை நுகர்ந்தால் அதிலிருந்து விடுபட
1.நம்முடைய எண்ணத்தால் (இராமன்)
2.அந்தத்  துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் (சுக்ரீவன்) பெற வேண்டும்  என்று ஏங்கிப் பெறும் போது
3.அது நம் உடலுக்குள் வலிமை பெற்று
4.இந்த நஞ்சினை (வாலி) நமக்குள் வராதபடி பாதுகாக்கின்றது என்ற நிலையை அங்கு தெளிவாகக் காட்டுகின்றார்.