ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 30, 2016

நம் உயிரே பிரம்மனாகின்றது...!

நஞ்சென்ற நிலையை அறிந்தபின் அதன் உணர்வு புகாது அதை அடக்கி ஆளும் உணர்வின் எண்ணங்கள் பெற்ற நிலை மனிதன் - நம் உடலிலிருந்து வெளிப்படும் மணம் கார்த்திகேயா.

இந்தப் பூமியில், இந்தப் பிரபஞ்சத்தில், இந்த அகண்ட அண்டத்தில் பல உணர்வுகள் சேர்த்து உணர்வின் தன்மை இயக்கச் சக்தியாக மாற்றி அதற்குத்தக்க உருவை உருவாக்கி அதனின்று வெளிப்படும் மணத்தின் தன்மை மற்ற தீமை என்ற உணர்வான பின் எதிர் நிலை கொண்டு அந்த உணர்வின் அறிவாக அதை நாம் அறிந்து கொள்கின்றோம்.

இதைத்தான் கார்த்திகேயா என்று உணர்த்தப்பட்டது.

அகண்ட அண்டம் எவ்வாறு இருப்பினும் மனித நினைவு கொண்டு உணர்வினை அறிவாக இதன் இயக்கம் எதுவென்று அறிந்து செயல்படும் திறன் பெறுகின்றது.

இவ்வாறு திறன் பெற்ற இந்த ஆறாவது அறிவைத்தான் கார்த்திகேயா என்றார்கள் ஞானியர். எதனையும் அறிந்திடும் உணர்வும் எதனையும் மாற்றிடும் நிலையும் பெறுகின்றது.

ஆகவே, பிரம்மாவைச் சிறைப்பிடித்தான். இது ஆகாதென்றால் மற்றொன்றை நுகர்ந்து தனக்குகந்ததாக மாற்றிக் கொள்ளும் சக்தி செயல் பெற்றது, ஆறாவது அறிவு கார்த்திகேயா.

சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மாறும் நிலைகள் வரும்போது பரப்பிரம்மம் என்றும் ஆனால் ஆறாவது அறிவு கொண்டவன் ஒளி மங்கப்படும் பொழுது ஒளி மங்காமல் செயல்படுத்தும் அருள் உணர்வை இணைத்து ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவன்.

எல்லாவற்றையும் அறிந்துணர்ந்து இதை இணைத்து உருவாக்கும் உணர்வின் தன்மை பெற்றது இந்த ஆறாவது அறிவு என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றது அன்று அகஸ்தியன் காட்டிய அருள் ஞானம்.

ஆகவே, மனிதனான பின் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான். இந்த ஆறாகது அறிவிற்கு அத்தகைய ஆற்றல் உண்டு.

இதில் பல உணர்வுகளைத் தனக்குள் இணைத்து உருவாக்கினான் துருவன். ஒளியின் நிலையாக அன்று உருவாக்கினான். அதனை நாம் நுகர்ந்தால் நமது உயிர் அதே ஒளியாக மாற்றும் பிரம்மமாக மாறுகின்றது. நாம் சேனாதிபதி.

உடலிலிருந்து வெளிப்படுக்ம் ஒளிக்கதிர்களை இருள் என்ற நிலைகள் (தீமையான உணர்வுகள்) அணைத்தால் அந்த இருளை உருவாக்கும் உணர்வினை உட்புகாது தடுக்க அருள் ஒளி என்ற உணர்வின் நஞ்சை வென்றிடும் உணர்வினை இணைத்து அந்த உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் நிலை பெற்றது இந்த ஆறாவது அறிவு பிரம்மா.

இதனை நாம் உருவாக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிவிட்டால் நமது உயிரே பிரம்மனாகின்றது. நான் பிரம்மன் ஆகின்றேன்.

அனைத்து உணர்வின் தன்மையையும் பிரம்மனாக்கும் பரிமாணத்தை, ஒளியின் உணர்வாக உருவாக்கும் உணர்வின் உடலாக நாம் மாறுகின்றோம்.

ஏகாந்த நிலைகள் கொண்டு அகண்ட அண்டத்தில் எதுவுமே நம்மை வென்றிடாது அனைத்தையும் வென்று ஒளியின் உணர்வாக மாற்றிடும் திறன் பெற்றது ஆறாவது அறிவு.

இந்த உயிர் அத்தகைய நிலைகள் பெற்றதுதான் பல நிலைகள்.

நாம் அதன் வழி பெறும் அகஸ்தியன் சென்ற வழியில் செல்வோம்.  அருள் ஒளியினை நமக்குள் சேர்த்து நம்மில் அறியாது சேர்ந்த இருளை அகற்றி ஒளியின் உணர்வாக மாற்றும் நிலை பெறுவோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதன் உணர்வை நாம் நுகர்ந்து அதை நமக்குள் உருவாக்கி இந்த வாழ்க்கையில் வரும் நஞ்சினை அடக்கி அருள் ஒளியைப் பெருக்க இந்த வாழ்க்கையையே தியானமாக்குவோம்.

நம் நல்ல உணர்வுகளை மறைக்கும் தீமையான உணர்வுகளை “சிறு திரையை” நீக்கிப் பழக வேண்டும்

நமது வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை என்ற நிலைகளில் நாம் நல்ல குணம் கொண்டு பார்த்துப் பிறருக்கு உதவி செய்தாலும் வேதனைப்படுபவரை நுகர்ந்தறிந்து அவருக்கு உதவி செய்கிறோம்.

உதவி செய்தாலும் நம் நல்ல குணத்தை விஷம் என்ற அந்த உணர்வுகள் நமக்குத் திரை மறைவாக்கி விடுகின்றது. பின் அந்த வேதனை என்ற உணர்வுதான் நமக்குள் வருகின்றது.

உதாரணமாக, இன்று ஒரு நல்ல பலகாரம் இருக்கிறதென்றால் மேலே மிளகாயைத் தூவிவிட்டால் அந்த வாசனை தான் வரும். விஷத்தைத் தூவிவிட்டால் அந்த நிலை தான் வரும்.

ஆனால், அதற்கு மேலே நல்ல நறுமணத்தை இட்டால் அந்த நறுமணத்தின் தன்மை வரும். உணர்வைச் சுவைத்தால் தான் வித்தியாசமாக இருக்கும்.

ஆகவே, மேலெழும் மணங்கள் நம் உடலின் அணுக்களில் படும்பொழுது மேலெழுந்த உணர்வுகளே நம்மை இயக்குகின்றது. சிறு திரையாக நல்ல உணர்வு இயங்காதபடி தடைப்படுத்துகின்றது.

சித்திரை, இந்தப் புது வருடம் சிறு திரையை நீக்கி பூரண பௌர்ணமி என்பது போல நம் உடலிலுள்ள ஒவ்வொரு அணுக்களையும் தூய்மையாக்கி எல்லாவற்றையும் அறிந்திடும் ஒளியாக நாம் மாற்றுதல் வேண்டும்.

அந்த நிலையைப் பெறச் செய்வதற்குத்தான் சித்ரா பௌர்ணமி. பூரண நிலவாக வெளிச்சத்தில் பொருள் அறிவது போல நிலாவின் தன்மையில் குளிர்ந்த நிலைகள் பெறுவது போன்று நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் பேரின்பமும் பெருவாழ்வும் பெறும் நிலையும் அழியா ஒளிச் சரீரம் என்ற உருவாக்கும் நாள் சித்ரா பௌர்னமி.

இந்த நாளில் நாம் ஒவ்வொரு நிமிடத்திலும் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று நமக்குள் சலிப்போ, சஞ்சலமோ, வேதனையோ, வெறுப்போ குரோதமோ இதைப் போன்ற உணர்வுகள் தூண்டச் செய்வதை நல்ல உணர்வுகளை மறைத்திடும் உணர்வை (சிறு திரையை) நீக்குதல் வேண்டும்.

ஆகவே, அருள் ஒளிச் சுடராகப் பெருக்கி என்றும் பேரின்ப பெரு வாழ்வு என்ற நிலையைப் பெறும் அந்தத் தகுதியைப் பெறுவோம். இனி பிறவியில்லா நிலை என்ற நிலை அடைவோம்.

April 29, 2016

மாமியார் மருமகளுக்குள் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை அகற்றி குடும்பத்தில் ஒற்றுமையுடன் வாழுங்கள்

ஒரு வேலையின் நிமித்தமாக மருமகள் வெளியே சென்று வீட்டுக்குள் வருகின்றது.

ஏம்மா இவ்வளவு நேரம் ஆகிவிட்டது..,? என்று அப்பொழுது மாமியார் கேட்டால் போதும். .

“மாமியார் இப்படிக் கேட்பார்கள்..,” என்று நினைத்தே மருமகள் வந்தது.  

மாமியார் கேட்ட அந்த உணர்வைச் சுவாசித்தவுடன் “இப்பொழுது நான் வருவதற்கு முன்னாடி என்ன அவசரம் ஆகிவிட்டது?” என்ற இந்த பதில் தான் மருமகளிடமிருந்து வருகின்றது.

அடுத்து, “இப்பொழுது நான் என்னத்தைக் கேட்டுவிட்டேன்.., என்று உனக்கு இந்த மாதிரிக் கோபம் வருகிறது? மாமியார் கேட்கிறது. ஆக, இந்த உணர்வு இப்படி வந்து விடுகின்றது?

இதை மாற்றுவதற்கு என்ன வழி?

வெளியில் காரியம் முடிந்து வரும் போது சிறிது நேரம் ஆகிவிட்டால், திரும்பி வரும்போதே “அத்தைக்கு நல்ல மனது வரவேண்டும், நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளும் நிலை வரவேண்டும் என்று எடுத்துக் கொண்டு செல்லவேண்டும்.

மருமகள் பொறுமையுடன் இந்த மாதிரி வருவதற்குச் சிறிது காலதாமதமாகிவிட்டது என்று சாந்த உணர்வுடன் சொல்லலாம்.

மருமகள் சொன்ன பதில் இங்கே ரிமோட் ஆகாது, வெறுப்பு வராது.

ஆக, எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற மோதல் வரும் பொழுதுதான் உணர்வின் தன்மை அறிய முடிகின்றது. நாம் எண்ணும் உணர்வு நமக்குள் வந்து ஆன்மாவாக மாறுகின்றது.

இதைப் போல நிலையில் எதிர்த்து வரும் போது நமக்குத் தெரியாமலே இயக்குகின்றது. நாம் ஏன் கோபிக்கின்றோம். எதற்காக வேண்டி கோபிக்கின்றோம்? எதற்காக வேதனைப்படுகின்றோம்? நம்மை அறியாமலே இத்தனையும் நடக்கின்றது.

கடைசியில் பிடிக்கவில்லை என்றால் என்ன வாழ்க்கை..? வெறுக்கும் தன்மை வந்துவிடுகின்றது. வெறுப்பாகிவிட்டால் என்ன சொல்வோம்?

அப்புறம் எதைச் சொன்னாலும் “வாழ்க்கையில் எனக்கு எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் ஆகிவிடுகின்றது” என்ற இந்த உணர்வை எடுத்து நாம் வெறுத்துக் கொள்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் இருந்து நாம் ஒவ்வொருவரும் விடுபடுதல் வேண்டும்.

ஏனென்றால், மனிதனாகத் தோன்றியவன் முழு முதல் கடவுள். சந்தர்ப்பத்தால் என்றைக்கு மிருக நிலையிலிருந்து மனித உடல் பெற்றோமோ நாம் முழு முதல் கடவுள்

ஓம் என்ற பிரணவத்தை சிவனுக்கே ஓதினான் முருகன். வாழ்க்கையில் வரும் தீமை என்ற உணர்வை நீக்கி அந்த அருளைப் பெருக்கும் பொழுது இந்தப் பிரணவத்தை மாற்றி (தீமை உருவாகதபடி) இருளை நீக்கி உணர்வின் தன்மை அறிவாகின்றது கார்த்திகேயா.

ஆகவே, இந்த வாழ்க்கையில் வழியறிந்து செயல்படும் சக்தி பெற்றது ஆறாவது அறிவு.

கணவனும் மனைவியும் இணைந்த நிலையில் அருள் மகரிஷிகளின் உணர்வை எடுக்க வேண்டும். பெண்பால் இல்லை என்றால் ஆண் பாலுக்கு ஜீவன் இல்லை, அடுத்து வளராது.

கணவனும் மனைவியும் இதைப் போல அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து பெண் பால் உணர்வுடன் ஒன்றி வாழ்ந்து நமக்குள் நன்மை பயக்கும் உணர்வை விளைய வைத்து இந்த வாழ்க்கையின் பயணத்தை அழியா ஒளி சரீரம் நோக்கிச் செலுத்துங்கள்.

April 28, 2016

புறத்திலிருந்து நாம் சுவாசிப்பது நம் உடலுக்குள் விளைந்து உயிருடன் சேர்ந்தால் “காயத்ரி” முழுமை அடைகின்றது

தன்னைத் தற்காத்துக் கொள்ள புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தான் ஒவ்வொரு உணர்வின் சக்தியைத் தன் உடலுக்குள் சேர்க்கப்பட்டு சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப உடலின் அமைப்பாகின்றது.

பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ கோடி இரைகளை தாவர இனங்களை உயிரினங்கள் அதை உட்கொண்டு அந்த உணர்வுக்கொப்ப எண்ணத்தின் நிலையும் அதனதன் உணர்வுக்கொப்ப தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வைச் சுவாசித்துத் தனக்குள் அதை வினையாகச் சேர்த்துக் கொள்கின்றது.

வினையாகச் சேர்த்துக் கொண்ட நிலைகள் அது கலந்து அணுக்களாக உருவாகி வளர்ந்தபின் அந்த உணர்வின் அணுவின் தன்மையை அதற்குள் விளைந்ததை உயிர் தனக்குள் உயிராத்மாவாகச் சேர்த்துக் கொள்கிறது.

ஆக, இது உயிராத்மா புறத்திலே இருப்பது பரமாத்மா. பரமான இந்த எல்லைக்குள் பரந்து கிடக்கும் இந்தச் சக்திதான் பரமாத்மா.

நாம் நினைக்கும் உணர்வின் சக்திகளை பரமாத்மாவிலிருந்து ஈர்க்கும் போது நம் உடலின் அருகில் வரும் போது ஆத்மாவாகி உடலுக்குள் செல்லும் போது ஜீவான்மாவாகின்றது.

ஜீவான்மாக்களாக அது விளைந்து உயிருடன் சேர்க்கப்படும் பொழுது உயிராத்மா ஆகின்றது. அதைத்தான் “காயத்ரி” என்பது.

காயத்ரி என்றால் முழுமையான நிலைகள் பெறுகின்றது. அதாவது சிருஷ்டிக்கும் தன்மை.

ஆகவே, உடலுக்குள் விளைந்த நிலைகள் கொண்டு அடுத்த நிலைக்கு உருப்பெரும் சக்தி பெறுகின்றது – காயத்ரி.

நம் உடலுக்கு உயிர் சூரியன். சூரியன் எப்படி விளைந்து ஒரு பிரபஞ்சமாக விளைந்ததோ அதைப் போன்ற ஆற்றல்மிக்க நிலைகளை நாம் பெறவேண்டும் சொல்வது.

இயற்கையில் மனிதன் நாம் எண்ணும் எண்ணத்திற்குள் எவ்வளவு பெரிய ஆற்றல் உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் எதை நினைவுபடுத்துகின்றோமோ அந்த உணர்வின் சக்தியைக் காற்றிலிருந்து நாம் சுவாசிக்க நேருகின்றது. சுவாசித்த உணர்வுகள் உயிரிலே படும் போது பொறிகளாக இயக்குகின்றது. சொல்லாக செயலாக இயக்குகின்றது.

புறத்தால் நாம் கவர்வது பரமாத்மா, எண்ணி எடுத்தால் ஆத்மா, உடலுக்குள் உருவானால் ஜீவான்மா, ஜீவான்மாவிற்குள் விளைந்தது உயிருடன் இணைந்து முழுமையாகும்போது உயிராத்மா.

ஒரு உணர்வின் தன்மை உயிராத்மாவாகச் சேரும் நிலையை காயத்ரி என்று ஞானிகள் பெயரிட்டுள்ளார்கள். ஏனென்றால் உயிராத்மாவில் எது சேமிக்கப்பட்டுள்ளதோ அதற்கொப்ப அடுத்த உடலை உயிர் உருவாக்கும்.

ஆகவே, இந்த வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளிலிருந்து விடுபட எதை நாம் நம் உயிராத்மாவாக உருவாக்க வேண்டும்?

தீமைகளை வென்ற அருள் மகரிஷிகளின் உணர்வுகளைச் சேர்த்து நமக்குள் முழுமையாக்க (காயத்ரி) வேண்டும்.

துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளை நாம் பரமாத்மாவிலிருந்து கவர்ந்து நம் ஆன்மாவாக்கி, உடலுக்குள் அணுக்களாக விளையச் செய்தால் விளைந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உயிர் உயிராத்மாவாக்கும்.

முழுமையான அதனின் நிலைகள் நம்மை அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்யும். பிறவியில்லா நிலை அடையச் செய்யும். பரிணாம வளர்ச்சியில் மனிதன் முழுமை அடைய வேண்டியது அந்த நிலை தான்.

April 27, 2016

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அணுகுண்டு இங்கே விழுகாதபடி தடுக்க வேண்டும்

நாம் இப்பொழுது தேடி வைத்திருக்கின்றோம். அரசியலில் நாம் தேடி வைத்திருக்கின்றோம். ஓட்டு போட்டுப் போனவுடன் என்ன செய்கிறோம்?

யார் வலிமையோ அவர்கள் சொல்வதைத்தான் நாம் கேட்க வேண்டும். சம்பாதித்து வைத்திருந்தாலும் அவர்கள் கேட்கும் பொழுது கொடுத்துவிட வேண்டும். இந்த மாதிரிச் சூழ்நிலை தான் இப்பொழுது உருவாகியுள்ளது.

அதே சமயத்தில் தர்மத்தையும் நியாயத்தையும் கடைப்பிடித்து நம் நாடு நலமாக இருக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கின்றதா...? என்றால் இல்லை.

எந்தச் சூழ்நிலையிலேயும் நாம் சுகமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். சுகத்தை அனுபவிக்கின்றார்கள்.

ஆனால், இப்பொழுது போர் முறை வந்து ஒரு அணுகுண்டைப் போட்டால் என்ன செய்யும்? எல்லாம் தீர்ந்தது.

நான் சம்பாதித்ததும் போய்விட்டது, மற்ற அனைவரது சம்பாத்தியமும் போய்விடுகின்றது.

ஆகவே, நாம் எடுக்கும் இந்த வலிமையான துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு அந்த அணுகுண்டு இங்கே விழுகாதபடி தடுக்க வேண்டும்.

அருள் உணர்வு கொண்டு எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கப்படும் பொழுது உங்களால் அந்த அணுகுண்டைத் தடுக்கக்கூடிய சக்தி உண்டு. நம் நாட்டு மக்களைக் காக்க முடியும்.

அதை வெடிக்கமால் செய்யவும் முடியலாம். அந்த அளவிற்கு நீங்கள் வலிமை பெறவேண்டும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று அன்று அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலைப் பெற்றான். தென்னாட்டில் தோன்றிய அவன் தான் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

எந்நாட்டவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருளைப் பெற்றால் இருளை நீக்கி மெய்ப்பொருள் என்ற நிலையைப் பெறமுடியும். அவன் அருளைப் பெற்றால் நம் உடலில் என்றும் இருள் சூழா நிலைகளை உருவாக்க முடியும்.

நாம் யுத்த மேகத்தில் நம் அறிவுகள் வந்தால் மீண்டும் பிறவிக்கே வருகின்றோம். இந்த உலகம் இனிமேல் எப்படி மாறும் என்று சொல்ல முடியாது.

யுத்தத்தில் விஷத் தன்மைகள் அதிகமாகி நம்மை விஷப் பூச்சிகளாக மாற்றிவிடும் உயிர். மடிந்தால் நாம் நுகர்ந்த உணர்வை உயிர் அவ்வாறு தான் மாற்றிவிடும்.

ஆகவே, எந்த யோகங்கள் செய்தாலும், எந்தப் பாவங்களும் செய்தாலும் இந்த உடலில் வரும் நோய்களை எதுவாக இருந்தாலும் அந்த அருள் ஒளியைப் பெறவேண்டும் என்ற உணர்வைக் கலந்தே நாம் வாழ்க்கையில் வழி நடத்தினோம் என்றால் இருளை அகற்றும் சக்தி நமக்குள் பெருகிக் கொண்டே வரும்.

இந்த உடலை விட்டு நாம் எப்பொழுது சென்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குச் செல்கின்றோம். வேகா நிலை அடைந்துவிடுகின்றோம். இந்தச் சூரியனே அழிந்தாலும் நாம் அங்கே செல்கின்றோம்.

ஆனால், இந்த உடலின் இச்சைக்கு வரப்படும் பொழுது நாளைக்கு குண்டு வீசினான் என்றால் உங்கள் வீடு, காடு, சொத்து, பிள்ளை எல்லாம் என்ன ஆகும்? எல்லாமே போய்விடும்.

வரப் போகின்றது, கூடிய சீக்கிரம். பிறகு இதிலே எதைத் தேடப் போகின்றீர்கள்?

எத்தனை விபத்துக்கள்.., அசம்பாவிதங்கள்.., இயற்கையின் சீற்றங்கள், அழிவுகளை எத்தனையோ பார்க்கின்றோம். அங்கே வாழ்ந்தவர்கள்  எவ்வளவோ சொத்துக்களைத் தேடி வைத்திருந்தார்கள். எல்லாம் என்ன ஆனது?

ஆகையினால், நமக்கு அழியாச் சொத்து பேரின்பச் சொத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இந்த வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதை எடுத்து வேதனை, சலிப்பு, கோபம் ஆத்திரம் எந்தத் தீமையாக இருந்தாலும் உங்களுக்குள் புகாது தடுத்துப் பழகுதல் வேண்டும். அந்த அருள் ஒளியை உங்களுக்குள் வளர்த்துப் பழகிக் கொள்ளுங்கள்.

எந்த அளவிற்கு இதை வளர்க்கின்றோமோ அங்கே துருவ நட்சத்திரத்திற்குச் செல்கிறோம்.

April 26, 2016

செவி வழி உணர்ச்சியைத் தூண்டி, கண் வழி ஈர்க்கச் செய்து, மூக்கு வழி சுவாசிக்கச் செய்து, உடலில் பரவச் செய்து, இரத்தத்தில் கலக்கச் செய்யவே இந்த உபதேசம்

இன்று உதாரணமாக இன்னொரு மனிதனை மந்திரத்தால் சில நிலைகளை எடுத்து நமக்குள் நுகர்ந்து கொண்டால் இன்னொரு மனிதனின் உடலிலிருந்து வரக்கூடியதுடன் மோதி அந்த உணர்வின் நுண்ணிய அறிவுகளைக் காட்டுகின்றது. இதை ஜோதிடமாகச் சொல்வார்கள்.

ஒரு மனிதன் தனக்குள் நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொண்டால் ஒருவன் தவறு செய்கின்றான் என்று நுகர்ந்தபின் “இவன் தவறு செய்பவன்” என்று உணரும் அறிவு வருகின்றது.

ஆனால், தவறு செய்தான் என்ற உணர்வை இவர் நுகர்ந்து விட்டால் அந்த நுகர்ந்த உணர்வு இவருக்குள்ளும் விளையத் தொடங்கிவிடுகின்றது.

ஆனால், அறியும் அறிவு வந்தாலும் இதைத் துடைக்கவில்லை என்றால் இந்த உணர்வின் அறிவுகளை மாற்றிவிடுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து மனிதன் விடுபடுதல் வேண்டும்.

தவறு செய்கிறான் என்று நாம் நுகர்ந்த உணர்வு கொண்டு அறிந்தாலும் அறிந்த உணர்வை நம் உயிர் “ஓ” என்று பிரணவமாக்கி “ம்” என்று நம் உடலாக மாற்றிவிடுகின்றது.

ஆனால், நாம் தவறு செய்யவில்லை. இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும்.

இதற்குத்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் காலை துருவ தியானத்தில் மனிதனின் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து துருவ நட்சத்திரமாக இருக்கும் அதனின்று வெளிப்படும் உணர்வைக் கவரும் பழக்கத்தை ஏற்படுத்துகின்றோம்.

கணவனுக்கு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும், மனைவிக்கு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று இரு உணர்வும் ஒன்றாக்கிடல் வேண்டும்.

அந்த உணர்வின் துணை கொண்டு எதை உற்று நோக்கி உணர்வை இங்கே விளைவிக்கின்றனரோ கணவன் மனைவி உங்கள் இரு உயிரும் ஒன்றாகின்றது. ஒளியின் உணர்வாக ஆகின்றது.

இப்படி அடைந்தவர்கள் தான் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து பிறவியில்லா நிலை என்றும் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றி சப்தரிஷி மண்டலமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்த வாழ்க்கையில் அதன் வழி அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை மாய்த்து அருள் ஞானிகளின் உணர்வைச் சேர்த்து உங்கள் நல்ல மனதைத் தெளிவாக்குதல் வேண்டும்.

அந்தத் தெளிவாக்கும் நிலைகளை நீங்கள் பெறச் செய்வதற்குத்தான் நம் குருநாதர் காட்டிய அருள் உணர்வை உங்களுக்குள் தெளிவாக்குவது.

இன்று பாட நூல்களில் விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்தால் அதன் வழிப்படி இன்னென்ன காரியங்கள் இன்னென்ன வழியில் செய்தார்கள் என்ற பதிவின் படிப்பில் நாம் நினைவு கொண்டால் மீண்டும் படித்ததைப் பதிவாக்கி அதை நினைவுகொள்ளும் போது அதன் வழி கொண்டு விஞ்ஞான அறிவைப் பயன்படுத்துகின்றோம்.

வாழ நமக்குள் வழியும் வகுக்கின்றது. பாட நிலைகள் கொண்டு அறிந்து கொள்கின்றோம்.

இதைப் போலத்தான் நம் குருநாதர் காட்டிய அருள் உணர்வை உங்கள் செவி மூலம் உணர்வை உந்தச் செய்து கண் வழி ஈர்க்கச் செய்து மூக்கு வழி நுகரச் செய்து உணர்வின் அறிவை உடலுக்குள் பரவச் செய்து உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்ய இந்த உபாயத்தைக் கையாள்கின்றோம்.

இந்த வாழ்க்கையில் வரும் பகைமை உணர்வுகளை நாம் மாற்றவேண்டும் என்றால் பகைமை உணர்வு என்று தெரிந்தபின் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்று இரண்டையும் இணைத்துவிட வேண்டும்.

இணைத்து விட்டால் பகைமை உணர்வைத் தணிக்க முடியும். பகைமை உணர்ச்சியை அடக்கும் வல்லமையும் பெறமுடியும். பகைமையற்ற உணர்வின் தன்மையும் நம் உடலுக்குள் விளையும். ஏகாந்த நிலை பெறலாம்.

ஆகவே, ஞானிகள் கண்ட இயற்கையின் உண்மை நிலைகளை நீங்களும் நுகர்ந்தறிய முடியும். அருள் ஒளியின் உணர்வைக் கூட்டி இந்த உடலை விட்டு அகன்றால் நாம் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடைய இது உதவும்.

April 25, 2016

வாடி வரும் மனிதருக்குள் நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கவே அன்று கோபுரக் கலசங்களில் வரகைப் போட்டு வைத்தார்கள் ஞானிகள்

மழையே இல்லை என்றாலும் நீரைத் தேக்கிவைக்க அன்று அணைகள் இல்லை. ஆனால், குளங்கள் உண்டு. மழை இருந்தால் அதில் சேமிக்கும் நிலை உண்டு.

அரச காலங்களில் வரகு என்று ஏழு அடுக்கு நிலை உண்டு. இந்தக் காற்றிலிருந்து தனக்குள் சேமித்துத் தனக்கு உணவுக்காக வேண்டும் என்ற நிலையில் வரகு என்ற தானியம் உண்டு.

இன்றும் கோபுரக் கலசங்களில் பார்க்கலாம். என்று தரித்திரமாகிறதோ அந்தக் கலசத்தை எடுத்து அதை நாம் விதைத்தால் அந்த உணர்வின் வித்துக்களைப் பெருக்கி இந்தப் பஞ்சத்தைப் போக்கிக் கொள்ளலாம்.

ஆலயங்களில் சேமித்து வரப்படும் பொழுது நம்மைக் காக்கும் அதை உணவாக உபயோகப்படுத்தும் நிலைகள் கொண்டு இன்றும் உண்டு. நீங்கள் எந்தக் கோபுரத்தில் பார்த்தாலும் இந்த நிலை உண்டு.

நாம் இங்கே தபோவனத்தில் கலசம் வைத்திருப்பதில் கூட வரகை இட்டு வைத்திருக்கின்றோம். ஏனென்றால், வறட்சியான நிலைகளிலும் அது தாக்குப்பிடிக்கும் உணர்வு கொண்டு உணவாக உட்கொள்ளும் நிலை வரும்.

இங்கே தபோவனத்தின் வாசல் மேல் உள்ள கலசங்களில் இந்த வரகைப் போட்டு வைத்துள்ளோம். காரணம் இனி ஒரு காலம் வறட்சி என்ற நிலை வந்தாலும் வறட்சியை நீக்கும் அந்த உணர்வு அதற்குள் உண்டு.

நாம் மனிதரில் வாடித் திரியும் இந்த நேரங்களில் அந்த வரகு என்ற நிலை வரும் பொழுது அந்தப் பொருள் வைத்திருக்கும் உலோகங்களில் இதனின் காந்தப்புலனறிவு கவரப்படும் பொழுது நமக்குள் இந்த வாயிலில் வறட்சி என்ற நிலையை மாற்றி நமக்கு ஒரு நல்ல நிலையைக் கொடுக்கும் தன்மை வருகின்றது.

விஞ்ஞான அறிவைப் போன்றுதான் அன்று மெய்ஞானிகள் இத்தகைய நிலைகளை ஆலயங்களில் வடிவமைத்துள்ளார்கள்.

ஆக, கோபுரத்தை உற்று நோக்கும் போது மனிதனுக்கு வேண்டிய நல்ல எண்ணங்களைத் தோன்றும்படி அந்தக் கலசங்களில் உள்ள வரகும் அந்த உணர்வின் தன்மை நமக்குள் வறட்சியைத் தாங்கும் பல நல்ல நிலைகளும் வருகின்றது.

இவையெல்லாம் அன்று மெய்ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வுகள். இன்று ஆலயங்களில் அதைக் காணலாம். 

April 24, 2016

நமக்கு எதிரி ஏங்கிருக்கின்றான்...?

ஒருவன் வேதனைப்படுத்துகின்றான் என்பதைப் பதிவாக்கிக் கொண்டால் அவனை எண்ணும் போது வேதனை உணர்ச்சிகள் தூண்டி அடுத்து அன்று நீங்கள் செயல்படுத்தும் காரியங்களுக்கு நீங்களே தடையாக ஆகிவிடுகின்றீர்கள்.

இதைப் போல நாம் நுகர்ந்த உணர்வு நம் உடலுக்குள் இருந்து செயல்படுகின்றது. நமக்கு எதிரி எங்கிருக்கின்றான் என்றால் நமக்குள்ளே உண்டு. நல்லவர்களும் உண்டு, நல்ல குணங்களும் உண்டு.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

அதற்குத்தான் காலை துருவ தியானத்தில் உங்களுக்குள் அருள் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்தி நான் உபதேசிக்கும் உணர்வை கூர்மையாக உற்று நோக்கிப் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் இதை எவர் அதைப் பெறுகின்றனரோ அவர் உடல்களில் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகும்.

இதை மீண்டும் நினைவுபடுத்தினால் அருள் ஒளியை நீங்கள் பெற்று உங்களுக்குள் இருள் சூழச் செய்யும் நிலைகளை நீக்கி உங்கள் மனதைத் தெளிவாக்கி உங்கள் உடலில் உள்ள அணுக்களைத் தெளிவாக்கி இந்த உடலை விட்டு நாம் சென்றபின் பிறவியில்லா நிலை என்ற நிலை அடைய முடியும்.

அந்தத் தன்னம்பிக்கை இருப்போர் இதை உற்று நோக்குங்கள்.

ஒருவர் ஏசிப் பேசிக் கொண்டிருக்கின்றான், பழி தீர்க்கின்றான் என்ற உணர்வை நாம் பதிவாக்கிக் கொண்டால் ஊழ்வினை என்ற வித்தாக நம் எலும்புக்குள் அது பதிவாகின்றது.

நிலத்திற்குள் மண்ணுக்குள் எப்படிப் பதிவாகின்றதோ இவை அனைத்திற்கும் பாதுகாப்பான நிலைகளில் எலும்புக்குள் பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அது ஊனாகி ஊனின் நிலைகள் கொண்டு அதற்குள் பதிவாகும் பதிவின் வித்தாக அது வைத்துள்ளது.

ஆக, மீண்டும் அந்த உணர்வின் தன்மையை நாம் நுகர்ந்தறியப்படும் பொழுது இந்த உணர்வினை எண்ணினால் கருவிழியால் பதிவாகிவிடுகின்றது. மீண்டும் கருவிழியால் எண்ணப்படும் பொழுது உணர்ச்சிகள் உந்துகின்றது.

அதன் உணர்வு கொண்டு கருவிழியுடன் சேர்ந்த காந்தப்புலனறிவு அதைக் கவர்ந்து நுகரச் செய்கின்றது உணர்ச்சியின் தன்மை கொண்டு நம்மை இயங்கச் செய்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.

ஆகவே, அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்கி இதை எவர் நினைவு கொள்கின்றனரோ தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் அருள் ஞானத்தின் உணர்வைத் தனக்குள் பெருக்க வேண்டும் என்று இந்த வாழ்க்கையில் எவர் ஒருவர் நுகர்கின்றனரோ வாழ்க்கையே தியானமாக்குதல் வேண்டும்.

இப்பொழுது உங்கள் வாழ்க்கையில் பதிவு செய்யும் நிலைகள் தீமைகளைக் கண்டுணர்ந்தால் அஞ்சும் நிலையை மாற்றிவிட்டு அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஓங்கி வளர்த்துக் கொள்தல் வேண்டும்.

பின், எங்கள் பார்வை மற்றவர்களை நல்லவராக்க வேண்டும் அவர்களை நல்ல நிலையில் செயல்படுத்த வேண்டும் என்று இந்த உணர்வினைக் கலந்துவிட்டால் நமக்குள் அந்த உணர்ச்சிள் வலுவாகி அவ்வப்பொழுது வரும் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

அதே சமயத்தில் உங்கள் நினைவாற்றல் துருவ மகரிஷிகளின் அருள் வட்டத்தில் .இணையச் செய்யும். நீங்கள் எண்ணும் போதெல்லாம் அந்த அருள் ஞானத்தைக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களையும் கஷ்டங்களையும் போக்கிவிடலாம்.

உங்களால் முடியும், உங்களை நீங்கள் நம்புங்கள்.

April 23, 2016

தவறு செய்தவர் குற்றத்தை ஏற்றுக் கொள்வதில்லை - எதை எப்படிச் செய்தாலும் உயிரிடமிருந்து மட்டும் யாரும் தப்ப முடியாது

நாம் அனைவரும் குரு காட்டிய அருள் வழியில் செல்ல வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றோம்.

இப்பொழுது யாராவது திட்டுகிறார்கள் அல்லது சண்டை போடுகிறார்கள். அவன் மோசம் செய்தான். அவன் அங்கே சென்று திருடினான் என்று இதைக் கேட்டுப் பதிவு செய்து கொண்டீர்கள் என்றால் அந்த நினைவு வரும் பொழுது என்ன செய்யும்? அந்த உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

அதற்குத் தகுந்தவாறு அவரைக் குறை கூறுவோம். குறை கூறும் பொழுது குறையான உணர்வுகளை நுகர்கின்றோம். 

குறையின் உணர்வுகள் அணுக்களாகி அதனின் உணர்வின் தன்மை நம் உடலுக்குள் பெருகுகின்றது. நமக்குள் உள்ள நல்ல குணங்களின் தன்மையை இது அழிக்கின்றது. இதுவே நமக்குள் கடைசியில் நோயாக வருகின்றது. 

நம் சிந்திக்கும் திறனையும் இழக்கச் செய்கின்றது. சிந்தனையற்ற செயல்களையும் செயல்படுத்தச் செய்கின்றது. 

பின் சிந்தனையற்ற செயல்கள் செயல்படும் பொழுது நாம் சிந்தனையற்ற செயல்கள் செய்தாலும் "நாம் செய்வதுதான் நியாயம்..," என்று வாதிப்போம்.

தவறு செய்தோம் என்பதைச் சிந்திக்கும் நிலையே இல்லாது போய்விடுகின்றது. ஒருவர் திருடுகிறார் என்றால் அவரிடம் கேட்டால் "நான் திருடவே இல்லை...," என்பார்.

ஏனய்யா.., நீ தப்பு செய்தாயா? என்று கேட்டால், நான் பார்த்தேன் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன் "நான் ஒன்றுமே செய்யவில்லை..," என்பார்கள்.

தவறு செய்தவர் தன் தவறை தன் குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் நிலைகள் இல்லை. தவறு செய்வதே தன்னை அறியாது செயல்படுத்துகின்றது. ஆனால், தவறு செய்தாலும் அதற்குண்டான நியாத்தைக் கற்பிக்கும் நிலையே இன்று உருவாகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் எதை எதை எப்படிச் செய்தாலும் நம் உயிரிடமிருந்து மட்டும் யாரும் தப்பவே முடியாது.

நாம் எண்ணியது எதுவோ அதை ஒவ்வொரு நிமிடமும் “ஓம் நமசிவாய ஓம் நமசிவாய” என்று உடலாக மாற்றிக் கொண்டே இருக்கும்.

நாம் எண்ணிய குணங்கள் இணைந்து ஒரு வித்தாகின்றது. எந்தக் குணத்தின் தன்மையை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதன் நிலைக்கொப்பத்தான் இந்த உடலுக்குப் பின் நாம் அடுத்த உடல் பெறுவோம்.

இதை நினைவுபடுத்துவதற்குத்தான் சிவன் ஆலயங்களில் நந்தீஸ்வரன் "சிவனுக்குக் கணக்குப்பிள்ளை" என்று உணர்த்தியுள்ளார்கள் ஞானிகள். நாம் எதையெல்லாம் நுகர்கின்றோமோ அது நமக்குள் சென்று உருவாகின்றது.

இதில் எந்தக் குணத்தை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் அடுத்த உடலை உருவாக்கிவிடும் உயிர்.

ஆகவே, பல கோடிச் சரீரங்கள் பெற்று மனிதனான பின் நாம் எந்த நிலைகளில் இன்று வாழவேண்டும் என்று சற்றுச் சிந்திக்க வேண்டும்?

தீமைகளை வென்றவன், ஒளியின் சரீரம் பெற்றவன் துருவன். அவனைப் பின்பற்றிச் சென்றோர் ஆறாவது அறிவை ஏழாவது நிலை ஒளியாக பெற்றவர்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து கொண்டுள்ளார்கள், சப்தரிஷி மண்டலம்.

ஆகவே, நாம் மனிதனான பின் இப்பொழுது எங்கே செல்ல வேண்டும்? துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அழியாச் செல்வம் என்ற நிலையில்  ஒளி உணர்வை எடுத்து வளர்த்திடல் வேண்டும்.

April 22, 2016

சாப விமோசனம் கொடுக்கும் ஸ்தலங்களின் வரலாறு

ஸ்தல புராணங்களை எடுத்துக் கொண்டால் ஸ்தல வரலாறுகளை எடுத்துச் சொல்வார்கள். இன்று காசி, இமயமலை போன்ற இந்தப் பகுதிகளில் இதைப் போல உருவாக்கியுள்ளார்கள்.

அதாவது இரு பட்சிகள் வந்தது. அங்கே விஷ்ணு ஆலயம் ஒன்று உண்டு. தவ முனிவர் ஒருவர் இருந்தார். விஷ்ணுவின் பக்தனாக இருந்து பல சாபங்களிலிருந்து மீட்டிட அவனை அடைய மரத்தடியில் அவர் கடும் தவமிருந்தார்.

ஒரு காலத்தில் சாபமிட்ட நிலைகள் கொண்டு அது பறவைகளாக வரப்படும் பொழுது தவமிருக்கும் முனிவரிடம் அந்த இரு பட்சிகள் வருகின்றது.

ஏனென்றால், முந்தி சாபமிட்ட நிலைகள் கொண்டு அந்த முனிவர் தவமிருப்பதைக் கண்டு அவரிடம் ஆசி பெற்றால் மீண்டும் மனிதனாகப் பிறக்கலாம் என்ற நிலைகள் கொண்டு வருகின்றது.

முனிவர் கண் விழித்துப் பார்த்தபின் சாப நிலைகள் நீங்கி மனிதனாகின்றான். ஆகவே, அந்த ஸ்தலத்தில் போய் நாம் குளித்தால் நம் சாப அலைகள் எல்லாம் நீங்கும் என்று அதற்கு ஒரு ஏஜென்ட் இருப்பான்.

அங்கே காசையும் கொடுத்து குளத்தில் முழுக்கைப் போட்டு காசைப் போட்டு வந்தால் நாம் செய்த பாவம் எல்லாம் போய்விடும் என்றும் இப்படிக் கற்பனைக் காவியங்களை உருவாக்கிவிட்டனர்.

ஆக, மனிதன் தான் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த தீமைகளிலிருந்து விடுபட மெய் ஞானிகள் வெளிப்படுத்தியுள்ள மெய் உணர்வுகளைப் பெற முடியாத நிலைகளையே செயல்படுத்துகின்றனர்.

இதைப் போன்று அரசர்கள் வகுத்த வழிதான் இன்று உலக நிலைகளில் ஆலயங்களை அமைத்து அரசனுக்குக் கீழ் நல்ல ஒழுக்கங்களைக் கற்பித்தான் என்று பறைசாற்றுகின்றனர்.

அரசர் காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆலயப் பண்புகளைப் புகழ் பாடினர். அவர்கள் புகழ் பாடிய இந்த ஸ்தலம், இது முக்கியமான ஸ்தலம் என்றும் இன்று நாம் அங்கேயெல்லாம் வரிசைப்படுத்திச் செல்கின்றோம்.

அரசன் செயல்களைப் புகழ் பாடி அவர்கள் பொருளீட்டி அவருடைய நிலைகள் எதுவென்று தெரியாது அரசனைப் புகழ் பாடத்தான் தெரிந்ததே தவிர அருள் ஞானத்தைப் பெறும் தகுதியையும் இழந்தவர்.

இன்று பெரும்பகுதி எடுத்துக் கொண்டால் அரசனைப் புகழ் பாடிய நிலைகளைத்தான் நீங்கள் பார்க்கலாம். கடும் தவமிருந்தாலும் அரசனை அன்று புகழ்ந்து பாடவில்லை என்றால் அவர்கள் வாழ முடியாது.

ஸ்தல புராணத்தை அவர்கள் பாடும் பொழுது அதை ஒவ்வொரு நிலையும் இப்படித்தான் வெளிப்படுத்தினர்.

இப்படி இன்று மக்கள் விஞ்ஞான உலகில் வாழ்கின்றோம். ஆனால், அஞ்ஞான வாழ்க்கையே வாழ்கின்றோம். உடல் இச்சைக்கும், அழியக்கூடிய நிலைகளுக்கும்தான் மனிதன் வாழ்கின்றானே தவிர, “அழியாத நிலைகள் எது?” என்ற நிலையை எண்ணிப் பார்க்கவே இல்லை.

ஆனால், மனிதனுக்குப் பின் என்ன? மனிதன் எவ்வாறு விண் செல்ல வேண்டும் என்று மெய்ஞானிகள் காட்டிய அருள் நெறிகள் நம் காவியத் தொகுப்புக்குள் உண்டு.

அவைகளெல்லாம் காலத்தால் மறைந்தே போய்விட்டது. மீண்டும் அதை நினைவுபடுத்தினால் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாது போய்விடுகின்றது.

ஆக, மறைந்த நிலைகளைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உணர்த்தி வருகின்றோம். இதைச் சீராகக் கடைப்பிடித்தோர் மகரிஷிகள் கண்ட பேருண்மைகளை நிச்சயம் அறிய முடியும், உணரவும் முடியும். 

April 21, 2016

அபிராமிப்பட்டர் அன்று சொன்னது மனிதனுக்குத் “திதி” கிடையாது, ஒளி கொண்டு அறிவாக்க வேண்டும்

அன்று அபிராமிப் பட்டர் அரசர்கள் செய்யும் அநீதிகளிலிருந்து இந்த நாடு எப்படி இருக்கின்றது என்ற நிலையையும் ஒவ்வொரு அரசனும் இங்கே எவ்வாறு எவ்வழியில் வழிபடுகின்றான் என்ற நிலைகளையும் உணர்த்தியவர்.

அவர் நல்ல ஒழுக்கங்களையும், உயிரை எப்படி நேசிக்க வேண்டும் என்றும் உடலில் உணர்வை எப்படி இயக்குகிறது என்ற நிலையும் உண்மையை உணர்த்தும் விதமாக நல்ல பாடல்களைப் பாடியுள்ளார். ஆனால், அவரைப் பித்தர் என்றே தான் கூறினார்கள்.

சரபோஜி அரசன் அபிராமி ஆலயத்திற்குள் வழிபட வரும் பொழுது அந்த ஆலயத்திற்குள் அமர்ந்திருந்த அபிராமி அவனை மதிக்கவில்லை.

ஆகவே, இவன் யார்..,? ஏன் எழுந்து எனக்கு மரியாதை செலுத்தவில்லை என்று கேட்கின்றான் அரசன்.

இவனுக்கு மரியாதை செலுத்த வேண்டியதில்லை. அருள் ஞானத்திற்கே அந்த அறிவின் தன்மை செலுத்த வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார் அபிராமி.

அரசன் கேட்கப்படும் பொழுது இப்படிச் சொன்னால் நீ அவ்வளவு பெரிய ஞானி என்றால் இன்று திதி என்ன? என்று கேட்கின்றான். அன்றைய தினம் அமாவாசை.

அமாவாசை அன்று பௌர்ணமி என்று அபிராமிபட்டர் சொல்லிவிட்டார்.

நீ பௌர்ணமி என்று எப்படிச் சொல்லலாம்? இன்று இருளான நாள் தானே என்று சரபோஜி கேட்கின்றான்.

ஆனால், அதே சமயத்தில் மனதிற்குள் தான் இருள் இருக்கின்றதே தவிர மனிதனுக்குள் அந்த அருள் ஒளி இல்லை என்பதைத் தெளிவாக்குவதற்காக நீ வரும் அரச போகத்தின் நிலைகள் கொண்டு வழிபடுகின்றாய்.

அதன் வழி வழிபட்டாலும் உன் வழி மக்களை நீ திசை திருப்பும் நிலைதான் வருகின்றதே தவிர நீ மக்களுக்கு நல்லொழுக்கத்தைக் கொடுக்கவில்லை. ஒருவனை இருள் சூழச் செய்யும் நிலைகளிலேயே இருக்கின்றாய்.

ஆகவே, “ஒளி கொண்டு” அறிவாக்க வேண்டும் என்ற நிலையை அன்று பித்தரைப் போன்று இருந்த அபிராமி இன்று “இது (பௌர்ணமி) தான்” என்று காட்டினான்.

நீ அதைக் காட்டவில்லை என்றால் உன் சிரசை வாங்கிவிடுவேன் என்கின்றனர்.

உண்மையைக் காட்டும் வரையிலும் விடமாட்டேன் என்பதற்காக விறகுக் கட்டைகளை ஏற்றி நெருப்பை ஏற்றினார்கள் என்றும் கற்பனைக் காவியமாக அன்று அபிராமி அந்தாதி பாடினார் என்று சொல்லிவிட்டார்கள்.

பாடியவுடன் அந்தத் தேவி எழுந்து வந்து அபிராமிப்பட்டரைக் காப்பாற்றினார்கள் என்றும் ஸ்தல புராணங்களை மாற்றி அந்த ஞானியின் தத்துவத்தையே அரசனுக்குகந்ததாக மாற்றிவிட்டார்கள்.

அவர் சொன்ன நிலைகள் மனிதனுக்குத் “திதி” கிடையாது. மனிதன் உருவாக்கும் ஆற்றல் பெற்றவன்.

ஏனென்றால், மிருகங்களோ மற்ற உயிரினங்களோ தன் உணவுக்காகவோ பாதுகாப்பிற்காவோ சென்றாலும் கிடைக்கவில்லை முடியவில்லை என்றால் மடிந்துவிடும்.

மனிதனோ நீர் இல்லை என்றால் இன்று 1000 அடி அல்லது 1500 வடி போர் செய்து நீரைக் கொண்டு வருகின்றான்.

அதே போன்று வெளிச்சம் இல்லை என்றால் மின்சாரத்தைக் கொண்டு உருவாக்குகின்றான். அது இல்லை என்றால் டார்ச் லைட் கொண்டு வெளிச்சத்தைக் கொண்டு வருகின்றான். அதுவும் இல்லை என்றால் ஒரு மெழுகுவர்த்தியாவது வைத்து வெளிச்சத்தைக் கொண்டு வருகின்றான்.

ஆகவே, மனிதனின் ஆறாவது அறிவு பிரம்மாவைச் சிறைபிடித்தான் முருகன் என்ற நிலையில் அறிவின் ஒளியின் சுடராக (பௌர்ணமி என்ற நிலையில்) சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவன் என்ற தத்துவத்தைத்தான் அங்கே செயல்படுத்திக் காட்டினார் பித்தரைப் போன்ற அபிராமிபட்டர்.

ஆனால், அவர் சொன்ன தத்துவத்தை மறைத்துவிட்டு மூலத்தைக் காட்டாமல் பக்தி என்ற நிலையில் உடலின் இச்சைக்குத்தான் வழி காட்டுகின்றார்களே தவிர மனிதன் அடைய வேண்டிய எல்லையைக் காட்டவில்லை.

உயிருடன் ஒன்றி அழியா ஒளிச் சரீரம் அடைவதே மனிதனின் கடைசி நிலை. ஒளியின் தன்மை பெறுவதைத்தான் அபிராமிபட்டர் அங்கே காட்டினார்.