ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 30, 2023

“நான் இறந்துவிடுவேன்…!” என்ற பய உணர்ச்சி நமக்கு வரக் காரணம் என்ன…?

பாசத்தால் பண்பால் குடும்பத்திலோ நண்பர்களிடமோ உறவினர்களிடமோ நாம் மற்றவருடன் பிரியமாகப் பழகி இருக்கப்படும் பொழுது… உடலை விட்டு அவர்கள் திடீரென்று பிரிய நேர்ந்தால் அதைக் கேள்விப்பட்ட பின் “போய்விட்டார்களே என்று ஏங்கினால்” நமக்குள் அந்த ஆன்மா வந்து நம்மை அறியாமலே எத்தனையோ பாடுபடுத்துகின்றது (முதலில் எதுவும் தெரியாது).

அப்போது என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும்…
1.எனக்குள் இருந்து அந்த ஆன்மா பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற
2.இந்த உணர்வை நாம் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் அந்த ஆன்மாவினால் முடியாததை நாம் அந்த உயர்ந்த சக்தியை எடுத்து ஊட்டும் பொழுது நம் இரத்தத்திலே கலந்து
1.அந்த ஆன்மாக்களும் நமக்கு ஒத்த நிலையாகி தொல்லை கொடுப்பதை மறந்து
2.உடலை விட்டுப் பிரியும் போது அதுவும் நம்மிலிருந்தே புனித நிலை (பெறும் தகுதி) பெறுகின்றது.

இது நம்முடைய சாஸ்திரங்கள் காட்டிய பேருண்மைகள்.

இதை விடுத்து விட்டு உடலிலே புகுந்த ஆன்மாக்களை உடுக்கை அடித்தோ கோடாங்கி அடித்தோ மந்திரங்களைச் சொல்லியோ “நான் பேய் ஓட்டுகிறேன்…!” என்று அப்படி யாராலும் ஓட்ட முடியாது.

உடலில் இருக்கக்கூடிய அந்த ஆன்மாக்களுக்கு அருள் உணர்வின் சத்தைக் கொடுத்து உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்தால் “அது நமக்குள் இருந்து நன்மை செய்யும்…”

இல்லையென்றால்… இரத்தத்தில் அது சுற்றி வரும் போது
1.உயிரிலே (புருவ மத்தியில்) வந்து மோதப்படும் பொழுது அது பட்ட வேதனை உணர்ச்சிகள் நமக்குள்ளும் வரும்.
2.ட்ரான்சாக்ஷன் என்ற உயிர் அருகிலே சென்றபின் அதே உணர்ச்சிகளைத் தான் ஊட்டும்.

கிராமஃபோன் பெட்டியில் ஒரு இசைத் தட்டைச் சுழலச் செய்து ஊசியை உராயச் செய்தால் அந்தப் பாகம் வந்த பின் அதனதன் இசைகளை வரிசயாக எப்படிக் கொண்டு வருகின்றதோ… அதைப் போன்று நமது உயிர்
1.இரத்தத்தில் கலந்த அனைத்து நிலைகளுக்கும் (ஆன்மாக்கள்) இவ்வாறு செயல்படுத்தப்படும் பொழுது
2.அந்தப் பாகம் சென்ற உடனே அந்த ஆன்மா என்னவெல்லாம் சங்கடப்பட்டதோ அந்த உணர்ச்சிகளைத் தூண்டி
3.கை கால் குடைச்சல் மற்றும் எத்தனையோ உடல் உபாதைகளைக் (தொல்லைகளை) கொடுக்கும்.

அதைக் கடந்து உடலுக்குள் அந்த ஆன்மாக்கள் போகிற பக்கம் எல்லாம்… இரத்தத்தின் வழி எங்கெல்லாம் செல்கின்றதோ
1.இருதயத்திலே சென்றால் இருதய வலி
2.கல்லீரலுக்குள் சென்றால் கல்லீரல் வலி
3.நுரையீரலுக்குள் சென்றால் நுரையீரல் வலி
4.அந்த ஆவியின் நிலைகளால் நம் உடலுக்குள் பல விதமான வலிகளைத் தோற்றுவிக்கின்றது.

இதையெல்லாம் வைத்தியம் செய்து ஒன்றும் சீர்படுத்த முடியாது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து உடலில் இரத்தத்தில் வலுப்பெறச் செய்தால் அதனுடைய வீரியம் தணியும்.

அறியாது வரும் இப்படிப்பட்ட தீமைகளை நீக்க அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் செருகேற்றினால் தீமைகள் புகாது ஞானத்தின் தன்மை பெறலாம்.

அதற்காக வேண்டித் தான்
1.இந்த உபதேச வாயிலாக அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவு செய்கின்றோம்
2.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

தியானித்து அதை வலுப்பெறச் செய்து கொண்ட பின் உடலை விட்டுப் பிரிந்த நம் முன்னோர்களின் ஆன்மாக்களை நாம் விண் செலுத்த வேண்டும்.

எத்தனை பேரை விண் செலுத்துகின்றோமோ அத்தனை பேரின் ஆற்றலும் நமக்குக் கிடைக்கின்றது. அவர்கள் முன் செல்ல பின்னாடி நாமும் அந்த நிலையை அடைய முடியும்.

ஏனென்றால் மீண்டும் இந்த உடல் பெற்றால் அது நரகலோகம் தான் அது போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுவோம். பேயாகவோ நோயாகவோ நாம் உருவா(க்)க வேண்டாம்…!

முருகேஸ்வர போகநாதர்

நம் வழக்கத்திலுள்ள சொல் நாமங்கள் நம்மால் வழக்கத்திற்குப் பேசுவதற்காக நம் முன்னோர்களின் ஒவ்வோர் இன வழிப்படி பல நாமச் சொற்களை இவ்வுலகினிலே பல பாகங்களில் பல நிலைகளில் அவரவர்கள் வந்த வழிப்படி பேசி வருகின்றோம்.

ஆண்டவனின் நாமத்தையே பல நாமங்கள் சூட்டி... அவரவர் வழக்கப்படி வேண்டுகின்றோம்.

“முருகா...” என்ற ஜெபம்
1.போகரினால் இவ் ஆறு வகைக் குணங்களை நாம் போற்றி வணங்கிட
2.இக்குணங்களையே முருகனாக்கி... அம் முருகா என்ற நாமகரணம் சூட்டியவர் போகர் தான்.
3.முருகா என்னும் நாமகரணம் சூட்டிக் கொண்ட தனித்த ஆண்டவன் ஒன்றில்லை.

அழியா ஒளி உடல் கொண்ட ஆத்மா நிலை பெற்ற அப்போகர் தன் சக்தியுடன்... இம் முருகா என்ற ஜெபம் கொண்ட நிலைக்கு... அவர் சக்தியில் அவர் உடலிலேயே... அவர் ஆத்மாவுடன்... அவர் உடலிலுள்ள அவர் ஈர்த்துச் சேமித்த முருகா என்ற சக்தியின் நிலையினை ஒளியாகத் தன்னுள் ஈர்த்துக் கொண்டே இன்றும் உள்ளார்.

அந்த நிலையில்...
1.முருகா...! என்ற சொல் எவ்வுள்ளங்களில் இருந்தெல்லாம் எழுகின்றதோ
2.அந்தச் சக்தி போகரின் சக்தியுடன் நினைத்த மாத்திரத்தில் வந்து மோதி ஒளியாக...
3.ஜெபிப்பவரின் உள்ளத்திற்கெல்லாம் போகரின் நிலையிலிருந்து அச்சக்திதனை வழங்கி வருகின்றார்.

அழியா உடல் பெற்ற ஆத்ம சக்தியுடன் தனக்குகந்த நாமத்தையே ஜெபமாக்கி அஜ்ஜெப நாமத்தை எண்ணுபவரின் சக்தியுடன் இன்றும் இந்நிலையில் கலக்கவிட்டு... எண்ணுபவரின் ஆத்மாவிற்குகந்த அவர்களின் நிலைக்கெல்லாம் “தான் பெற்ற சக்தியைப் பகிர்ந்து அளித்து வருகின்றார்...” அம் முருக நாமம் கொண்ட “முருகேஸ்வர போகநாதர்...!”

போகரின் சக்தி அழியா சக்தி. இன்றும் அச்சக்தியினை பலவாக ஈர்த்து அருளிக் கொண்டே உள்ளார். அவர் எடுத்த சக்திப்படி இன்றும் மனிதருள் மனிதராகச் சில நிலைகளில் வந்து செல்கின்றார்.

எந்நிலையில் என்று உணர்ந்தீரா...?

அப்போகநாதரின் உடல் கூடு எந்நிலைக்கும் அவர் ஜெபம் கொண்டு இன்றுள்ள அப்பழனிக் குகை வாசஸ்தலத்தை விட்டு வெளிப்படுவதில்லை.

ஆனால் முருகராகவும் மற்றும் பல நிலைகளிலும் மக்களுடன் மக்களாக அவர்களின் இன்னலைத் தீர்க்க வந்து செல்கின்றார்.

போகரின் ஆத்மாவுடன் அவர் சேமித்த சக்தி சுற்றிக் கொண்டுள்ள நிலையில் ஆத்மாவுடன் கூடிய அவரின் சக்தி நிலையை... உடல் கூட்டிலிருந்து பிரித்துக் காண்பவருக்கு... அவ்வாவி சக்தியை... இக்காற்றிலிருந்தே பல சக்திகளை ஈர்த்து ஆத்மாவுடன் கூடிய அவரின் சக்தியைப் பிம்பமாக்கி வந்து செல்கின்றார்.

அதாவது ஆவியான அமில சக்தியை எந்நிலையிலும் விரிந்து கூடும் நிலைப்படுத்தும் நிலையைப் பெற்றுள்ளார் முருக நாமம் கொண்ட நம் போகர்.

ஒரே நாளில் பல இடங்களில் அவரின் பிம்பத்தை அவரால் காணச் செய்திடவும் முடிந்திடும். அம் முருக நாமத்துடன் பல செயல்களைச் செயலாக்குகின்றார் நம் போகர்...!

ஆவியான அமில சக்திகள்தான் அனைத்து சக்திகளுமே. இவ்வுடலும் ஆவியான பிம்பம்தான். இப்பிம்பத்திலிருந்து நம் ஆத்மா பிரிந்து சென்றாலும்... நம் ஆத்மாவுடன்... நம் உடலுடன் கூடிய ஆவியான நமக்குகந்த அமில சத்துக்கள் நம்முடனே... நம் ஆத்மாவுடன் ஈர்த்துத்தான் ஆவி உலகில் நாமும் இருந்திட முடியும்.

1.இவ்வுலக சக்தியையே நம் சக்தியாக்கி நாமும் நிலைத்து வாழ்ந்திட முடியும்
2.இன்று நாம் வாழும் வாழ்க்கை நம் வாழ்க்கையல்ல
3.நம் வாழ்க்கை என்பது இவ்வுடலுடன் கூடி வாழ்ந்திடும் வாழ் நாட்கள் மட்டுமல்ல
4.இவ்வுடலுடன் வாழ்ந்திடும் வாழ்க்கை நமது அரும்பெரும் பாக்கியத்தை நாடுவதற்கு நமக்குக் கிடைத்த சந்தர்ப்பம்தான்.

ஒவ்வொருவரும் இவற்றை உணர்ந்து வாழ்ந்திடும் நாளில் பல நிலைகளுக்கு எண்ணத்தைச் செலுத்தி...
1.வாழ் நாளைத் தன்னிச்சைக்கு (தன் இஷ்டம் போல்) வாழாமல்
2.இவ்வுலக இன்பத்தைத் துறந்து வாழ்ந்திடல் வேண்டும் என்ற எண்ணத்தை வளரவிடாமல்
3.இவ்வுடலுடன் நாம் இன்று பெறும் நிலைக்குகந்த சக்தியே அழியா சக்தியாக நம்முடன் வரும் சக்தி என்பதனை உணர்ந்து
4.நம் போகநாதரின் சக்தியின் அருளை நாம் ஈர்த்து நல் வழியில் வாழ்ந்திடலாம்.

September 29, 2023

இந்த மனித உடல் நமக்கு என்றுமே சொந்தமில்லை

நியூட்ரான் ஆயுதம் என்று கண்டுபிடித்து வைத்திருக்கின்றார்கள் கம்ப்யூட்டர் சாதனத்தின் மூலம் சில அதிர்வுகளைக் கொடுத்து அதை அடுத்த நாட்டிலே பரப்பினார்கள் என்றால் எந்தெந்த இயந்திரங்களைச் சேமித்து வைத்திருக்கின்றார்களோ அதை எல்லாம் அது செயலற்றதாக ஆக்கிவிடும்

இராக்கெட்டின் மூலமாக அடுத்த நாட்டில் ஒரு ஊரைத் (ஒரு இலக்கை) தாக்கும்படி வைக்கிறார்கள் (எதிரி நாட்டின் முகப்பு). ஆனால் அது தவறான பாதைகள் போகிறது என்றால் திசைகளை மாற்றி எவன் அனுப்பினானோ அவன் ஊரிலேயே வந்து விழுகும்படி செய்வார்கள். அதாவது
1.எவன் செய்தானோ அவன் ஊரிலேயே விழுந்து அவனை அழிக்கும்படி செய்வான்
2.செய்து வைத்த அனைத்து ஆயுதங்களுமே வெடிக்கும் நிலை ஏற்படலாம்.
3.அப்போது இந்த உலகமே விஷத்தன்மையாக மாற கூடிய வாய்ப்புகள் உண்டு
4.பத்து உலகத்தை அழிக்கக்கூடிய அளவிற்கு இந்த ஆயுதங்களைச் சேமித்து வைத்திருக்கின்றனர்
5.எப்படியும் இது வெடிக்கத்தான் செய்யும்... வெளியிலே வந்துவிடும்.

மின்னல்கள் தாக்கப்படும் பொழுது கடலிலே மணலாக மாறுகின்றது அதைப் பிரித்து யுரேனியமாக எடுக்கின்றார்கள். அணுகுண்டாகத் தயார் செய்து அதை வெடிக்கச் செய்யப்படும் பொழுது பல கட்டடங்களையும் மற்ற இடங்களையும் நொறுக்கித் தள்ளுகின்றது.

ஆனால் நியூட்ரான் என்ற ஆயுதம் என்ன செய்கிறது…?

“வைரஸ் உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது...” என்று அடிக்கடி சொல்கிறோம் அல்லவா. அதைப் போன்று காற்றிலே அதைக் கலக்கி வைத்து விட்டால் மனிதனுடைய சிந்தனைகள் அனைத்துமே இழந்துவிடும்.

என் பிள்ளை எது...? என் வீடு எது...? என்று தெரியாமல் போய்விடும். அந்த அளவிற்கு அதைப் பரப்பி வைத்து இருக்கின்றார்கள்.

இந்த விஷத்தன்மை (நியூட்ரான்) கடலோரத்தில் போனது என்றால்…
1.நட்சத்திரத்தினுடைய கதிரியக்கப் போறிகள் கடலிலே மணலாக இருப்பதுடன்...
2.மின் கதிர்களுடன் மோதிய உடனே வெப்பமாகி... சூறாவளியாக சுழல் காற்றாக மாறுகின்றது.
3.வெகு வேகமாகச் சுற்றி அடர்த்தியாக மாறும்...! கடலோரப் பகுதியில் தான் முதலிலே உற்பத்தியாகும்.

இப்படி உருவான இந்தச் சூறாவளி நகருக்குள் புகுந்து பெரிய பெரிய கட்டிடங்களை எல்லாம் துவம்சம் செய்து கொண்டு போகின்றது

உலகில் எங்கெல்லாம் விஞ்ஞான ஆராய்ச்சி செய்து கதிரியக்கங்களையும் நியூட்ரானின் வெடிப்புகளையும் செயல்படுத்தினார்களோ அங்கெல்லாம் இப்பொழுது இது நடந்து கொண்டே வருகின்றது.

இந்த உடல் நமக்கு என்றுமே சொந்தமில்லை...! இனி நாம் சொந்தமாக்க வேண்டிய அழியாத செல்வம் எது...? என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திதான்.
1.இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் அதை எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்
2.அது தான் நமக்குப் பெரிய சொத்து.

மனிதனாக மீண்டும் பிறவிக்கு வந்தால் அவஸ்தைகளைத் தான் பட வேண்டி இருக்கும் அத்தகைய நிலை இல்லாதபடி அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் சந்தர்ப்பமாக நாம் உருவாக்க வேண்டும்.

சூரியனே அழியும் காலம் உண்டு. அதற்கு முன் அழியாத அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று இணைய வேண்டும். பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் அதனுடன் இணைந்து சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஆனால் இன்று பெரும்பகுதி மகான் (சாமியார்) என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம் ஊரை ஏமாற்றுவதற்கும் உடலைக் காப்பதற்கும் உடலில் சுகங்களை அனுபவிப்பதற்கும் தான் ஞானிகள் ஆகின்றனர்.

தெய்வத்தின் பெயரைச் சொல்லியும் ஆன்மீகத்தைச் சொல்லியும் சொத்து சுகத்தைத் தேடுவதற்கும் தான் பார்க்கின்றனர். அத்தகைய நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

ரிஷித் தன்மை பெற்றவர்கள் தான் சூரியக் குடும்பங்களை உருவாக்குகின்றனர்

இயற்கை சக்தியில்…
1.ஆவியாக இருப்பது அணுவாக உயிர் பெற்று
2.அவ் ஆவியிலே உள்ள சக்தியினை உயிரணுவிற்கு ஊட்டமாக்கி
3.அவ்வாவியின் பிம்பமாய் ஜீவ ஆத்மாவிற்கு வந்து
4.ஜீவனாய் மனித பிம்பம் பெற்று பிம்பமாய் வாழ்ந்திட்டு
5.ஆத்மா பிரிந்து பிறகும் அவ்வாத்மாவுடன் ஆவியான சக்தியை ஈர்த்தே
6.இப்படி மாறி மாறி ஆவி உலகம்… பிம்ப ஜீவன் கொண்ட… ஜீவ ஆத்மா வாழ்க்கை வாழ்ந்திடும் உயிரணுக்கள் யாவற்றுக்குமே
7.அனைத்து சக்திகளும் அடைந்திடும் சக்தி (தகுதி) உண்டு.

எவ்வுயிரணு எவ்வழியில் தன் சக்தியினை வளர்த்துக் கொள்கின்றதுவோ அவ்வழியில் சென்றிடலாம்.

ஆனால் தன் சக்தியைத் தான் உணர்ந்திடாமல் இருந்திடும் மனித ஆத்மாக்களாகத்தான் இன்று வாழ்ந்திடும் வாழ்க்கை நிலைகள். சக்தியினைச் சிதறவிட்டு இப்பேராசை நிலையையே வளர்த்துக் கொண்டு வாழ்வதின் வினையினால் வந்ததது தான் இன்றைய வாழ்க்கையின் நெறி முறைகளாக உள்ளன.

பல மகான்கள் இப்பூமியில் அவதரித்து ஆண்டவனாய் இன்றும் அருள் புரிகின்றனர். ஆனால்
1.இன்றைய மனிதர்களோ தன் சக்தியினை வீண் விரயம் செய்து
2.இந்த உடலுடன் கூடிய ஆத்மார்த்த ஆத்மீக நெறி உடைய அன்பு கொண்ட வாழ்க்கைதனை
3.இம்சையிலும் பேராசையிலும்… பல நெறி கெட்ட காமச் சூழ்நிலையிலும்… தன்னடக்கம் இல்லா வாழ்க்கையிலும்
4.குரோதம் விஷமம் இப்படி நமக்குள் பல தீய சக்தியினை வளர விட்டு
5.நல்லொழுக்கம் எற்றிடும் நற்பயன் கொண்ட வாழ்க்கைதனைச் சிதற விட்டு
6.இவ்வாத்மீக நெறி கொண்ட இல்வாழ்க்கைதனை இன்பமுடன் வாழ்ந்திடாமல் வாழ்ந்து என்ன பயன்…?

நம்மைப் போன்ற உயிரணுவாய் உதித்திட்டு உயிர் ஆத்மா கொண்டு ஜீவ ஆத்மாவாகி இஜ்ஜீவ வாழ்க்கைக்கும் வந்து இவ் உலகில் உதித்ததின் உண்மை சக்தியினை உணர்ந்து தன் ஆத்மாவின் சக்தியினால் இவ்வுலக சக்தி அனைத்தையும் எந்நிலையில் பெற்றனர் பல மகான்கள் என்பதனை இப்பாட நிலையில் வெளியிடுகின்றேன்.

பல ரிஷிகள் நம்மைப் போல் வாழ்ந்த வாழ்க்கையில் பல இன்னல்களில் வாழ்ந்துள்ளார்கள். வாழ்க்கைச் சுற்றலில் குடும்பப் பற்றுடன்தான் வாழ்ந்தார்கள்.

அந்நிலையில் இருந்து கொண்டே அவர்கள் எடுத்த ஜெப நிலையால்
1.ஜெப நிலை என்பது… எவ்வெண்ணத்திற்கும் அடிமை ஆகாமல்
2.எவ்வெண்ணத்திற்கு என்பது வாழ்க்கைக்குகந்த நெறிமுறையில் மாற்றம் காணாமல்
3.வரும் இன்னலுக்குச் சோர்வு நிலைப்பட்டோ சந்தோஷ நிலைக்கு அடிமைப்பட்டோ
4.பாசத்திற்குத் தன்னைக் கட்டுபடுத்தியோ வாழ்ந்திடாமல்
5.இவ்வெண்ண சக்தியினை வாழும் காலத்திலேயே அனைத்து சக்திகளையும் தன்னுள் ஈர்க்கும் பக்குவ நிலை பெற்று
6.ஆத்மீக நெறிக்குகந்த ஞான வழிக்கு வித்திட்ட வழியில் வந்தவர்கள் தான் அனைத்து மகான்களும்.

வாழ்க்கை நிலையில் ஞான நிலை பெற்ற முதல் நிலைக்கு வந்தவர்கள்… அந்நிலையின் தொடர் நிலையை வளர்த்தே சித்து நிலை பெற்றிடலாம்.

சித்து நிலை பெற்றவர்கள் மகரிஷியாய் சப்தரிஷியாய் வந்திடலாம்.

இவ்வழியில் வந்தே தன் உயிரணுவாய் உதித்து ஆத்ம நிலைக்கு வந்தவர்கள் பெற்ற சக்தியினால் எவ் உலகில் உதித்தனரோ அவ் உலகில் இருந்து எவ் உலகிற்கும் (மற்ற சூரியக் குடும்பங்களுக்கு) சென்றிடும் நிலை பெற்றுள்ளனர்.

மேலும் மற்ற சூரியக் குடும்ப மண்டலங்களின் நிலையிலிருந்து பல சக்தியினைத் தன் உயிராத்மாவுடன் சேமித்து… தனக்குகந்த பல சக்தியினை ஈர்த்துத் தன்னுள்ளே சுழலச் செய்து… தனி ஒரு மண்டலமாக உருப்பெறச் செய்தும்… அந்நிலையிலிருந்து தனி ஓர் உலகமாகத் தன் மண்டலத்தினுள்ள பல ஜீவன்களின் வளர்ச்சியைத் தானே வளரச் செய்தும் மண்டலங்களாக உருப் பெறுகின்றனர்.

1.இவ்வியற்கையின் சக்தியில் எண்ணில் அடங்காப் பல உண்மைகள் உள்ளன.
2.உயிரணுவாய் நம்மைப் போல் உதித்திட்டவைதான் இன்றுள்ள பல மண்டலங்கள்.

இந்நிலைக்கு வருவதற்கு உயிரணுவாய் இருந்து… உயிர் ஆத்மா கொண்ட செயலாற்றும் நிலைபெற்ற இம் மனித உடலினால் மட்டும்தான் முடிந்திடும்.

இந்நிலையில் இருந்து வந்தவர்கள் தான் நாம் சொல்லும் பல பல ரிஷிகளும்…!

September 28, 2023

மனித உணர்விற்கு எட்டாத பல கோடி நிலைகள்

எறும்பிற்கும் உணர்வுண்டு… சிறு மண் புழுவிற்கும் உணர்வுண்டு…! இஜ் ஜீவத் துடிப்பு நிலையுள்ள அனைத்து ஜீவராசிகளுக்குமே இவ்வுணர்வு நிலையுண்டு.

ஆனால் தாவர வர்க்கங்களுக்கு இஜ் ஜீவத் துடிப்பு நிலை இல்லாததினால் தாவரங்களுக்கு உணரும் தன்மை இல்லை.

சில வகைத் தாவரங்கள் மனிதனின் உடல் உறுப்புகள் பட்டவுடனே சுருங்கும் தன்மை பெறுகின்றன. உணர்வில்லாமல் அவை எப்படிச் சுருங்குகின்றன என்று எண்ணுவீர்...?

இவ்வுணரும் சக்தி பெற்ற ஜீவஜெந்துக்கள் அதற்குகந்த அவை ஈர்த்து வளர்ந்த அமிலத் தன்மைக்குகந்த காந்த சக்தி நிலையுண்டு.

இச்சக்தியினால் அத்தாவரங்களின் மேல் இச்ஜீவஜெந்துவின் சக்தி நிலை பட்டவுடன்… அந்தத் தாவரம் எந்த நிலைகொண்ட சக்தி பெற்று எந்த அமிலத்தை ஈர்த்து வளர்ந்ததோ… அந்நிலைக்கும் இந்நிலைக்கும் எதிருண்ட நிலை அடைவதினால்… “மற்ற ஜீவ ஜெந்துவின் உறுப்புகள் பட்டவுடன் அது சுருங்கும் நிலைக்கு வருகின்றது…”

அஜ் ஜீவ ஜெந்துவின் வெப்ப நிலையும் அத்தாவரத்தின் வெப்ப நிலையும் மாறுபட்ட நிலையில் உள்ளதினாலும் இந்நிலை பெறுகிறது.

சில வகைத் தாவரங்கள் சில நிலை கொண்ட மனிதரின் தீய எண்ணத்தையே ஈர்த்து நச்சு நிலையில் வாழ்பவரின் உஷ்ண நிலை அவர் அந்நிலையில் எடுக்கும் சுவாச நிலை அந்தத் தாவரங்களின் மேல் பட்டாலே அத்தாவரம் கருகும் நிலை பெறுகிறது.

இன்னும் சிலரின் நிலையில் அவர்கள் விதை விதைத்தால் அவ்விதை வளர்ந்திடாது. அவ்விதையே இவர் கையில் ஏந்தி வைத்துள்ள நிலையிலேயே அவர் எடுக்கும் சுவாச நிலை கொண்டு அவர்களின் அங்க சக்தியைக் கொண்டு அவ்விதைக்கு வளரும் சக்தியற்றுப் போகிறது. அந்நிலையில் அவர் விதைக்கும் விதையும் வளர்வதில்லை.

1.சிலரின் சுவாசத்தினால் இவ்வுலக சக்தியையே சக்தியாகக் காணும் நல் நிலை உள்ளது
2.சிலரின் சுவாசத்தினால் அவர்களின் எண்ணத்தின் நிலையினாலேயே
3.எந்த நிலைக்குச் சென்றிட்டாலும் சோர்ந்த நிலை பெறுகின்றனர்.

சக்தி நிலை பொதுவானதே…! இவ்வெண்ண நிலையினால்தான் மாறுபட்ட நிலைகளெல்லாம்…!

தாவரங்களின் நிலைக்கு இவ்வுணரும் நிலையும் எண்ண நிலையுமில்லை. உயிரணுவாய் ஒரே நிலையில் சக்தியை ஈர்த்து எந்நிலை கொண்ட அமில சக்தியை ஈர்த்து வளர்த்தனவோ அந்நிலைக்கொப்பத்தான் அவற்றில் விளையும் பூவும் காயும் கனியும் தானிய வகைகளும் இருக்கும்.

தாவர வர்க்கங்களை நாம் அதில் வளரும் பூவையும் காய்கனியையும் சில கீரைகளின் மேல் நிலையில் உள்ள கொழுந்துகளையும் நாம் பறித்து எடுக்கும் பொழுது அதன் நிலை மென்மேலும் வளரத்தான் செய்கிறது.

அவற்றுக்கு ஜீவத் துடிப்பும் உணரும் தன்மையும் இல்லாமல் ஒரு நிலை கொண்ட சக்தியை ஈர்த்து வளரப் பெற்றதினால் ஒவ்வொன்றும் அதனதன் குறிப்பிட்ட கால நிலைப்படி அதன் பயன் நிலை கொண்டு சக்தியளித்து நமக்குப் பயன் தருகின்றது.

1.இந்த இயற்கையின் சக்தியில் பல நிலை கொண்ட ஒவ்வொன்றிற்கும் மாறுபட்ட நிலையில்
2.நம் எண்ணத்திற்கும் நம் உணர்விற்கும் எட்டாத பல கோடி நிலைகள் உள்ளன.

சில தாவரங்கள் பல நாட்கள் வளர்ந்தாலும் பலன் தராததை வைத்தும் இன்னும் சில வகைத் தாவரங்களுக்கு ஒன்றுக்கெதிரில் அதே நிலைகொண்ட (ஜாதி) அதன் நிலை பெற்ற தாவரம் இருந்திட்டால்தான் இவை இரண்டுமே பலனளிக்கும்.

தாவரங்களில் சில பலன் தராத நிலை பெற்றதை ஆண் தாவரம் என்கின்றனர். தாவரங்களுக்கு இவ் ஆண் பெண் என்ற நிலையில்லை. உயிரணுவாய் இப்பூமியில் தோன்றிடும் எவ்வுயிரணுக்களுக்குமே இவ் ஆண் பெண் நிலையில்லை.

உயிரணுவாய் இருந்து ஜீவ ஆத்மாவிற்கு வந்த பிறகுதான் இவ் ஆண் பெண் நிலையெல்லாம். ஆவி உலகத்திலும் இவ் ஆண் பெண் நிலையில்லை.

இவ்வாவி உலகிலிருந்து ஜெனனத்திற்கு வருபவர்களின் ஆவி ஆத்மாவின் எண்ணப்படிதான் இஜ்ஜீவ ஆத்மாவிற்கு ஆணாகவும் பெண்ணாகவும் வந்து பிறப்பது எல்லாம்.

1.அவரவர்கள் எண்ண நிலைக்கும் உணர்வு நிலைக்கும் தக்கப்படிதான்
2.அவ்வாவி உலக ஆத்மா இஜ் ஜீவ உடலுக்கு வருகின்றது.

எல்லோரையும் தயார் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்… முடியவில்லை… அந்த ஆசையிலே போகிறது

ஆரம்பத்தில் குருநாதர் என் மனைவி உயிரைக் காப்பாற்றினாலும்… என் (ஞானகுரு) மனைவிக்கு நோய் இல்லை என்று தான் நினைக்கின்றேன். சந்தர்ப்பத்திலே அனுபவத்திற்குத் தான் கடைசி நேரத்திலே குருநாதர் ஏதோ உண்டு பண்ணி… எப்படியோ அவர் வழியில் என்னை இழுத்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.

1.என் மனைவியின் சந்தர்ப்பம்… எனக்கு ஞானம் பெறும் ஒரு சந்தர்ப்பமாகக் கிடைத்தது.
2.இந்த உபதேச வாயிலாக இப்பொழுது சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் உங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.
3.இப்படி “எல்லாமே சந்தர்ப்பம் தான் காரணம்” என்கிற வகையிலே குருநாதர் விபரத்தைச் சொல்கிறார்.

ஏனென்றால் பல அவஸ்தைகள் பட்டுத் தான் யாம் மீண்டு வந்தோம். வந்த பிற்பாடு எல்லோரையும் தேடி வந்து நான் இதைச் சொல்லப்படும் போது எத்தனை பேர் இதைப் பின்பற்றுகின்றார்கள்…?

எத்தனையோ பேர்களுக்கு நோய்களையும் துன்பங்களையும் நீக்கிக் கொடுத்தோம். அதை எத்தனை பேர் திரும்பிப் பார்த்திருக்கின்றார்கள்...!

கடுமையான நோய்களைக் கூட நிவர்த்தி செய்ய முடிந்தது. அது எல்லாம் நடந்த பிற்பாடு… நன்றிக்கடனாக…
1.கடைசியில் ஆண்டவனுக்குக் கொண்டு போய்க் காணிக்கை செலுத்தக்கூடிய நிலையில் தான் இருக்கிறார்கள்
2.நம்முடைய பழக்க வழக்கங்கள் அப்படித் தான் இருக்கிறது.

ஆனால் யாம் சொல்வது… நீங்கள் இந்தத் தியானத்தைக் கடைப்பிடித்து அதன் வழி மற்றவர்களுக்கு நன்றாகி விடும் என்று சொன்னாலே போதும். அவர்கள் இதை எடுத்தால் அவர்கள் நோய் விலகுகின்றது… துன்பம் விலகுகிறது.
1.விலகிய பின் அதிலே விளைந்த அந்த நல்ல வாக்கை அவர்கள் அடுத்தவர்களுக்குச் சொன்னால்
2.அவருடைய கஷ்டமும் போகின்றது… இப்படி நாம் கொண்டு வருகின்றோம்.

அதற்காக வேண்டித் தான் ஆரம்பத்தில் யாம் எல்லாவற்றையும் நேரடியாகச் செய்தோம். ஆனால் அது எல்லாம் “தோல்வி அடைந்தது...” காரணம்… அவரவர்கள் இஷ்டத்திற்கு அதை எடுத்து விளையாடுவதற்கு ஆரம்பித்து விட்டார்கள்.

எதை…?

கொஞ்சம் விஷயம் தெரிந்த பின்… தனது வசதிக்குத் தான் கொண்டு செல்கின்றார்களே தவிர மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

1.ஏதோ பெரிய அபூர்வ சக்தி…! நான் தான் கடவுள்…! எனக்குள் எல்லாமே இருக்கின்றது… இதை நான் தான் செய்கின்றேன்
2.ஏதாவது ஒன்றைச் செய்தால் “நான் செய்தேன்…!” என்று நீ போய்ச் சொல்
3.”என்னால் நல்லது ஆனது…” என்று சொல் என்று இப்படி விளம்பரப்படுத்த விரும்புகின்றார்கள்.

பெரும்பகுதி இப்படித்தான் ஆகின்றார்கள்

தனித்தன்மை வைத்து உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் மனமார அதைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். அப்படி வந்ததெல்லாம் “தோல்வி அடைந்த பிற்பாடு” இனி காலம் இல்லை என்ற நிலையில் இப்பொழுது
1.எல்லாமே வெட்ட வெளிச்சமாகக் கொடுத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏற்றிக் கொடுக்கின்றோம்…
2.எல்லோரும் வளரட்டும்…! என்ற இந்த ஆசையிலே நான் இதைச் சொல்கிறேன்.

ஆக… தியானத்தைச் செய்தால் நல்லதாகும் என்ற இந்த முடிவுக்கு யாம் வந்தது. தியானம் செய்யாதபடி நல்லதாகாது. அப்போது அந்த ஆசையிலாவது வரட்டும்…!

யாம் சொன்ன முறைப்படி ஒருவர் தயாரானால்… தொழிலில் எத்தனையோ பேரைச் சந்திக்கின்றீர்கள் என்றால் உங்கள் பார்வையால் அந்த 100 பேருக்கும் நன்மையாகின்றது.

ஆனால் அதே சமயத்தில் நீங்கள் ஒரு ஆள் நல்லவராக இருக்கின்றீர்கள். 100 பேர் கஷ்டம் என்று உங்களிடம் சொல்கின்றார்கள். அந்த நூறு பேரின் கஷ்டம் என்ன செய்யும்…?

நீங்கள் நல்லவராக இருந்தாலும் உங்களுடைய நல்லதை அது மாற்றி விடுகின்றது. இந்த மாதிரிச் சில சூழ்நிலைகளிலிருந்து மாற்றுவதற்குத் தான் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.
1.அதைக் கடைப்பிடித்து எந்த வகையில் அவர் நல்லவராகிறாரோ
2.அவர் மற்றவருக்கு அதைச் சொன்னால் அவர்கள் தீமைகளும் போகிறது.

சாதாராண நிலையில் பிறரைப் பார்க்கும் பொழுது இங்கே நமக்கு நோய் ஆகிறது. ஆனால் அருள் வழியினை எடுத்து நாம் செயல்படுத்தும் பொழுது நம் பார்வையில் மற்றவர்களுக்கு நோய் போகின்றது.

அந்த அளவுக்கு நீங்கள் வளர வேண்டும். உங்களைப் பார்த்தாலே மற்றவர்கள் நோய் போக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால் உங்கள் நோய் அகலும்… துன்பங்கள் அகலும்… உங்கள் தொழில் சீராகும்… என்று
1.இப்படி ஆர்வமாகச் சொல்லிவிட்டால் அதை எடுக்கும் போது
2.எல்லோருமே துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்கு வருகின்றார்கள்.

தனியாக யாரையும் போற்றுவதில்லை. குரு அருள் கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியை எல்லோரும் எடுத்து வளர்க்கும் நிலை வருகின்றது நான் எடுத்த பங்கிற்கு அந்த நல்ல நிலையைப் பெறுகின்றேன்… அதே போல் அவரவர்கள் எடுத்த பங்கிற்கு அந்தப் பலனை அடைய முடியும்.

1.எல்லோரையும் அந்த உயர்ந்த நிலைக்குத் தயார் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்
2.ஆனால் அது முடியவில்லை… அந்த ஆசையிலே போகின்றேன்.

எத்தனையோ வருடங்கள் சிரமப்பட்டு அதிலிருந்தெல்லாம் மீட்டி “எல்லோருக்கும் அந்த உயர்ந்த நிலை கிடைக்க வேண்டும்…” என்ற அந்த ஆசையில் தான் உங்களிடம் வருகின்றேன்.

1.குரு உணர்வு தான் இங்கே இயக்குகின்றது... அவரால் தான் நாம் வளர்கின்றோம்…
2.அத்தனை பேருக்கும் அந்த சந்தர்ப்பம் தான்… நான் செய்தேன் என்று சொல்வதற்கு இல்லை.

அருளைத்தான் நான் தேடி வைத்திருக்கின்றேன். அந்த அருளால் உங்களுக்கு நன்மை செய்ய முடிகின்றது எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற அந்த ஆசை உங்களிடம் இருந்து தான் நான் பெறுகின்றேன். அந்த வழியைத்தான் உங்களுக்கும் காட்டுகின்றோம்.

உங்களுடைய ஊக்கம் தான் இதை வலுப் பெறச் செய்கின்றது நீங்கள் அந்த குரு அருளைப் பெறும் பொழுது அந்த ஊக்கத்தால் நானும் அதை வலு கொண்டு செயல்படுத்த முடிகின்றது.

நீங்களும் அந்த நிலையை வளர்க்க முடியும்.. அந்தப் பக்குவத்திற்கு நீங்கள் அனைவரும் வரவேண்டும். இந்த உலகை அருள் வழியில் அழைத்துச் செல்லலாம்.

1.நான் சொல்வது லேசாகத் தெரியலாம்
2.ஆனால் மிக மிகச் சக்தி வாய்ந்த அந்த ஆற்றல்களை நீங்கள் வளர்க்க முடியும்.

September 27, 2023

முதல் பாதம் இரண்டாம் பாதம்

கால நிலை எப்பொழுதும் ஒன்று போல் இருப்பதில்லை. காலை பகல் இரவு ஒவ்வொரு தன்மைக்கு உகந்த உஷ்ண நிலையும் காற்று மழை இடி இவற்றைப் போன்ற சில நிலைகளும் மாறி மாறித்தான் இப்பூமிக்கும் அதன் சக்தி நிலை கிடைக்கின்றது.

இப்பூமியில் வாழும் நாமும் மற்ற ஜீவராசிகளும் இக்கால நிலையின் மாற்றத்திலிருந்து நம்மைக் காப்பதற்கு அவரவர்களின் நிலைக்குகந்த காப்பிடம் அமைத்துக் கொள்கின்றோம்.

ஜீவ உடல் பெற்ற ஜீவ பிம்பம் கொண்ட ஆத்மாக்கள் வெயில் மழை காற்று பனி குளிர் இவற்றில் இருந்து ஜீவ உடலைக் காப்பதற்காக இருப்பிடம் அமைத்துக் கொள்கின்றோம்.

ஆனால் ஜீவனுடன் வாழ்ந்து ஜீவன் விட்டுப் பிரிந்த ஆவி நிலையில் வாழ்ந்திடும் ஆத்மாக்களின் நிலைக்கு... அவ்வாவியுடன் ஆவியாகத் தன் சக்தியைத் தனியாக தன் ஆத்மாவுடனே கலந்து படர்ந்து வான மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள இவ்வாத்மாக்களுக்கு அவற்றின் சக்தியுடன் கலந்து விட்டதினால் இந்நிலை தாக்கப்படுவதில்லை.

இவற்றில் சில ஆவி உலக ஆத்மாக்கள் வான மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள நிலையில்...
1.அவ்வாத்மாவுடன் கூடிய ஆவி சக்தியுடன்..
2.இக்காற்றில் கலந்துள்ள அவற்றின் சக்திக்கு ஒத்த சக்தி அவற்றுடன் சேரும் பொழுது அதன் கனம் அதிகரிப்பதனால்
3.அதி மழை வரும் பொழுது இம்மழையின் தன்மையினால் கனமான ஆவி நிலை கொண்ட சக்தியை ஈர்த்த ஆத்மா
4.இப்பூமியின் மேல் மழை வரும் காலங்களில் வந்து படர்கின்றது.
5.அந்த நிலையில் அச்சக்தி நிலை கொண்ட ஆத்மாவே சில புதிய தாவரவர்க்கமாக
6.நச்சுத் தன்மை வாய்ந்த தாவர இனமாக வளர்கின்றன.

இவ்வுடலை விட்டு எந்த எந்த எண்ணம் கொண்ட நிலையில் ஆவி பிரிந்ததோ... அந்த அந்த நிலை கொண்ட எண்ணமுடன்தான் அனைத்து ஆவிகளுமே சுற்றிக் கொண்டுள்ளன.

தன் எண்ண நிலை கொண்டே சுற்றிக் கொண்டுள்ள ஆவிகளின் நிலை... அவரவர்கள் உடலில் வாழ்ந்த நாட்களில் ஈர்த்து வெளியிட்ட சுவாச நிலைப்படி ஆவி உலகிற்குச் சென்றிட்டாலும்... வாழ்ந்த நாட்களில் அவர்களின் குண நிலைப்படி உள்ள எண்ணத்தைக் கொண்டே ஆவி உலகினிலும் அவர்களின் எண்ணம் செயல்படுவதினால்... இந்நிலையை வைத்தே
1.அவர் முதல் பாதத்தில் உள்ளார் இரண்டாம் பாதத்தில் உள்ளார் என்று
2.இப்படிப் பல பாத நிலைகளை வரிசைப்படுத்தி... ஒவ்வொரு பாதமாக மேல் நிலைக்கு சென்று
3.அச்சிவனிடம் ஐக்கியப்படுவதாகச் சொல்கின்றனர்.

இப்பாதம் என்னும் நிலையென்ன...?

வெறியுணர்வுடன் செல்லும் ஆத்மாக்கள் அவ்வெறி உணர்வுடனேதான் ஆவி உலகில் இருந்தும் மற்ற உடல்களில் ஏறியோ மற்ற எண்ணங்களுடன் கலந்தோ இன்று நாம் பேய் பிசாசு என்று செப்பிடும் நிலையில் மிகவும் கீழ் நிலையான எண்ணத்துடனே தான் பெற்ற சக்தியைச் செயலாக்கியும் சுற்றிக் கொண்டுள்ளன.

சலிப்புடன் செல்லும் ஆத்மாக்கள்... அச்சலிப்பு நிலை கொண்டே பெரும் சோர்வுடனே ஆவி உலகிலும் சஞ்சரித்துக் கொண்டுள்ளன சில ஆத்மாக்கள்.

குடும்பப் பற்றுக் கொண்ட குடும்ப ஆசையுடன் செல்லும் ஆத்மாக்கள்... அக்குடும்பத்துடனே அக்குடும்பத்தைக் காக்கும் நிலையிலேயே சுற்றிக் கொண்டுள்ளன.

தெய்வ பக்தியுடன் தன் எண்ணம் அனைத்தையும் பக்தி கொண்ட நிலையிலேயே செல்லும் ஆத்மாக்கள்... கோவில்கள் உள்ள இடத்திற்குச் செல்வோரின் எண்ணத்திற்கெல்லாம் ஆவி நிலையில் இருந்து கொண்டு... அப்பூஜை நிலைக்கே செல்பவரின் எண்ணத்தையும் செயலாக்கித் தானும் பூஜித்தே தன் எண்ணத்தை கலக்கவிட்டு வாழ்கின்றன சில ஆத்மாக்கள்.

இந்நிலையைத்தான்
1.எந்தெந்த எண்ணம் கொண்டு ஆவி பிரிந்து ஆத்மா செல்கின்றதோ அந்தந்த நிலையை
2.முதல் பாதம் இரண்டாம் பாதம் என்று சூட்சுமமாக நம் முன்னோர் வெளியிட்டதை... இன்று பல நிலைப்படுத்திக் காண்கின்றோம்.

ஆனால் இவ்வெண்ணமுடன் எல்லாம் செல்லும் ஆத்மாக்கள் எவ்வளவு காலங்கள் ஆவி உலகில் சுற்றிக் கொண்டிருந்தாலும்... இப்பூமிக்கு எதாவது ஒரு பிறப்பிற்கு மீண்டும் மீண்டும் வரத்தான் செய்கின்றது.

“ஏழு ஜென்மம் எடுக்கின்றன...” என்று உணர்த்தினேன் முன் பாடங்களில். இவ் ஏழு ஜென்மத்தை மட்டிலும் எவ்வாண்டவன் செயல்படுத்தி அனுப்பினான் என்றுரைப்பீர்.

எவ்வாண்டவனும் செயல்படுத்திடவில்லை...!

இப்பூமியில் உயிர் அணுக்களாய் வந்து மோதும் அனைத்து உயிரணுக்களுமே மனிதப் பிறவியாய் வருவதில்லை.

அப்படியும் இம்மனிதப் பிறவியாய் முதல் பிறவிக்கு வருவதற்கு முன்னே பல நிலைகள் பெற்றுப் பல உயிராத்மாக்கள் மாறி மாறி... உயிரணுவாய் இப்பூமியில் தோன்றிய நாள் தொட்டு அவ்வுயிரணு ஈர்த்துச் சேமித்து கொண்ட சக்தியின் நிலை பெற்றுதான்... பல நிலைகள் மாறி மனிதக் கர்ப்பத்திற்கு இம்மனிதன் வருகின்றான்.

மனிதனாய் உருவம் பெற்று வரும் நிலையிலேயே இவ் ஏழு நிலைகளுக்குகந்த சக்திகளை ஈர்த்துதான் மனித நிலைக்கு வருகின்றான்.

தான் ஈர்த்த சக்தியினை என்றும் அழியாச் சக்தியாக்கி “ஒரே பிறவியிலேயே...” ஆண்டவன் நிலைக்குச் சென்ற அரும்பெரும் ஜோதிகள் பல உள்ளனர்.

தான் பெற்ற சக்தியே “இவ் ஏழு ஜென்மத்திலும் தவறவிட்டு” பல ஈன நிலைகளுக்குச் செல்லும் எண்ணத்தையும் பல ஆத்மாக்கள் ஏற்படுத்திக் கொள்கின்றன.

இன்று வாழும் வாழ்க்கை மட்டும் “எண்ணம் போல் வாழ்வு...” என்பதல்ல.

உயிரணுவாய் இவ்வுலகில் தோன்றிய நாள் தொட்டே இவ்வெண்ண சக்தியின் நிலை கொண்ட ஒவ்வொரு உயிரணுவின் சக்தி நிலையும் ஒவ்வொன்றுக்கும் கிட்டுகின்றது.

1.உயிரணுவாக நிலை பெற்ற நாள் கொண்டே... அதன் தொடராக
2.நாம் நம் நிலையதனைச் செயல் கொண்ட வாழ்க்கையாக வாழ்வதுவே
3.இன்றைய நம் வாழ்க்கை நிலையும்...!

குரு வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்துச் சிந்தித்துப் பாருங்கள்... உயர்ந்த ஞானம் கிடைக்கும்

ஒரு கம்ப்யூட்டரில் ரெக்கார்டு செய்கின்றார்கள்... அந்தப் பதிவுக்குத் தகுந்த மாதிரி அது வேலை செய்கின்றது. என்னென்ன ஆணையிடுகின்றார்களோ அனைத்தையும் அது செய்கின்றது.

சந்தர்ப்பத்தில் ஒரு கோபமான உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை நினைக்கும் போதெல்லாம் அந்த உணர்ச்சிகள் வருகின்றது.

யாரால் அது வந்ததோ கோபத்தில் அவன் நம்மை ஏதாவது செய்து விடுவானா...? என்று பதிலுக்கு
1.அவனுக்கு எப்படி இடைஞ்சல் செய்வது...?
2.அவனை எப்படித் துன்புறுத்துவது...?
3.அவனை எப்படி மிரட்டுவது...? என்றெல்லாம் நமக்குச் சிந்தனை வருகின்றது

இந்த மாதிரி ரெக்கார்டு நமக்குள் பதிவான பின் நல்ல குணத்துடன் அது இணைக்கப்படும் பொழுது “எலெக்ட்ரிக் எலக்ட்ரானிக்...” என்று அதனுடைய அழுத்தங்கள் ஆகி... பல சிந்தனைகள் பல செயல்களாக இந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக ஊட்டி... அதன் வழி தான் நாம் செயல்படுகின்றோம்.

உங்களிடம் தொடர்ந்து இப்போது அருள் ஞானிகள் உணர்வுகளை ரெக்கார்ட் செய்கின்றேன் (ஞானகுரு). “கம்ப்யூட்டரில் ரெக்கார்ட் செய்தது” வேலை செய்வது போன்று உங்களுக்குள் இயக்கச் சக்தியாக அதைக் கொடுக்கிறேன்.

குரு காட்டிய அருள் வழியில் வரிசைப்படுத்தி ஒழுங்குபடுத்தி இந்த ரெக்கார்டுகளைக் கொடுக்கின்றோம். “ஈஸ்வரா...” உங்கள் உயிரை எண்ணி
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அதே சமயத்தில் உபதேச வாயிலாக ஒவ்வொன்றாக ரெக்கார்டு செய்கின்றோம். அதை எல்லாம் பதிவு செய்து தியானத்தில் நினைவு கொண்டீர்கள் என்றால் “அந்தந்த உணர்வுக்குத் தக்கவாறு அந்த ஞானமே உங்களுக்கு வரும்...”

தொழிலுக்குச் செல்ல வேண்டுமென்றாலும் அதை எப்படி வழி நடத்த வேண்டும்...? என்று அதற்குண்டான சிந்தனைகள் வரும்.

எப்படிச் செய்ய வேண்டும்...? என்று பிறரிடம் யோசனை கேட்டால் அவர்கள் எதை எதையோ சொல்லிக் கலக்கி விட்டு விடுவார்கள். அவர்கள் உணர்வுக்குத் தக்கவாறு பேசுவார்கள். என்னடா போன இடத்தில் இப்படிச் சொல்கிறார்களே...! என்று நமக்குப் பல சந்தேகங்கள் வந்துவிடும்.

அதற்குப் பதிலாக...
1.நம் குருநாதர் காட்டிய வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்து நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.
2.”இப்படித்தான் செயல்படுத்த வேண்டும்” என்று உங்களுக்குள் அந்த உயர்ந்த ஞானம் வரும்.

உங்கள் சிந்தனை உயர்ந்த ஞானத்திற்கு வழிவகுக்கும்.

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எண்ணிச் செய்ய வேண்டியது:
1.உன் சக்தி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என் செயல் நல்லதாக இருக்க வேண்டும் என்று கணவனும்
2.உங்களுடைய அருள் சக்தி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மனைவியும்
3.இரு மனமும் ஒரு மனமாக வேண்டும்... இரு உயிரும் ஒன்றிட வேண்டும்
4.எங்கள் செயல் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று இப்படி இருவருமே சேர்ந்து எண்ணிப் பழக வேண்டும்.

அவ்வப்பொழுது இதை நீங்கள் செயல்படுத்தினால் “எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று அழுத்தங்கள் ஆகி...” வாழ்க்கையில் எதிர் நிலைகள் வந்தால் எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள் என்ற நிலைக்கொப்ப வலுவான நிலைகள் கொண்டு “கணவனைக் காத்திடும் சக்தியாக... மனைவியைக் காத்திடும் சக்தியாக நிச்சயம் வரும்...”

1.தவறு என்றால் உடனே உணர்த்தி அந்த இடத்திற்குச் செல்ல விடாதபடி தடுக்கும்.
2.அதே சமயத்தில் நல்ல இடங்களுக்கு அழைத்துச் சென்று அங்கே மகிழ்ச்சியாக வாழ வைக்கும்.

இதன் வழி செயல்படுத்துவோர் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக நீங்கள் வரவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

விஞ்ஞானம் இன்று இதையெல்லாம் நிரூபிக்கின்றது. ஆனால் மெய்ஞானிகள் கூறிய வழிப்படி நம்மை எது இயக்குகின்றது...? என்றால் நாம் நுகர்ந்தது தான் நம்மை இயக்குகின்றது... அதற்குத்தான் நாம் அடிமையாகின்றோம்... நல்ல குணங்களின் தரத்தை அது குறைத்து விடுகின்றது.

ஆகவே நாம் அருள் உணர்வினை நமக்குள் பெருக்க வேண்டும். தீமை என்ற உணர்வை மாற்ற வேண்டும்.

ஒரு விறகுக் கட்டை இருக்கிறது என்றால் அதை எரித்தால் நெருப்பு ஜுவாலையைக் கொடுக்கின்றது... ஒளியாக மாறுகின்றது... நன்மை செய்கின்றது.

இது போன்றுதான் தீமை என்று வந்தாலும் அருள் ஒளி என்ற உணர்வை எடுத்து அதனுடன் இணைத்துப் பழக வேண்டும். காரணம்
1.ஒளியாக அந்தத் தொக்கி உள்ளதை இயக்குவது அது தான்.
2.ஆனால் கருகலை நீக்கி இதனுடன் சேர்க்கும் போது ஒளியாக மாறுகிறது.

அதாவது கட்டையை எரித்தால் கருகுகின்றது ஆனால் வெளிச்சம் கொடுக்கின்றது... ஒன்றைச் சமைக்கின்றது.

இதைப் போன்று... வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் அனைத்துமே கதிரியக்கப் பொறியின் உணர்வால் தான் இயக்குகின்றது. ஆனால் அதே சமயத்தில்
1.அருள் ஒளி என்ற உணர்வை இதற்குள் சேர்த்து நல்ல முறையிலே இயக்கப்படும் பொழுது அந்தக் கருகிய உணர்வுகளை நீக்கிவிடும்.
2.நமக்குச் சமைக்கும் பக்குவமும் வரும்... வெப்பமும் வரும்.
3.அதே சமயத்தில் உணர்வைப் பக்குவப்படுத்தும் வலிமையும் கிடைக்கும்.

இதை நாம் செய்து பழகுதல் வேண்டும். குரு வழியில் இதைப் பதிவு செய்கின்றோம்... பயன்படுத்திக் கொள்ளுங்கள்

September 26, 2023

சுழி முனை

உடலுக்கு நம் கண் ஆண்டென்னாவாக இருக்கிறது எப்படி…?

ஒருவர் ஒன்றைச் சொல்லும் பொழுது நாம் அவரை உற்று நோக்குகிறோம்… அவரைப் படமாக்குகின்றோம்… பதிவாக்குகின்றோம்.

அதே சமயம் அவர் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து இழுக்கின்றது. சுவாசித்த பின் அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகிறது.

அது எங்கே…? எப்படிப் பதிவாகின்றது…?

1.உடலில் இருப்பது – காந்தம் “எலும்பு”
2.நாம் எண்ணிய சத்துக்கள் அனைத்தும் நம் உடலில் வடித்து எதையும் கிரகிக்கக் கூடிய சக்தியாக
3.”ஊழ்வினை” - நம் எலும்புக்குள் ஊனாக இருக்கிறது… உடல் அனைத்திலுமே இந்த ஊன் இருக்கும்.

காந்தம்… உடலில் இப்படி இருக்கும் போது “எதையாவது நாம் உற்றுப் பார்க்கிறோம் என்றால்… அந்த உணர்வை எடுத்து ரெக்கார்ட் செய்து விடுகின்றது….!”
1.மற்றவர்கள் சொல்வது போன்று மூளையில் பதிவாக்குவதில்லை
2.உடலில் தான் பதிவாக்குகின்றது…!

ஒரு மைக்கை வைத்து நாம் பேசுகிறோம் என்றால் ஒரு டேப் (TAPE) அதைப் பதிவாக்குகிறது. அந்த நாடாவிலே தான் அது பதிவாகின்றது.

மைக்கில் பேசுகிறோம்… இருந்தாலும் அதற்கு முன்னாடி ட்ரான்சாக்ஷன் செய்யக்கூடிய வயர் வழியாகப் பிரித்து (AMPLIFIER)… ஒலி பெருக்கிக்குக் கொண்டு செல்கின்றது. அப்பொழுது பேச்சை நாம் கேட்க முடிகின்றது.

உதாரணமாக நீங்கள் என்னைத் திட்டுகின்றீர்கள் என்று வைத்துக் கொண்டால்… “உடனே” நான் உங்களைக் கூர்ந்து கவனிக்கின்றேன்.

அப்பொழுது உங்கள் உடலில் இருந்து வெளிப்படும் அந்த எண்ணங்களை சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது என் கண்ணுக்குள் இருக்கும் கருவிழி ருக்மணி… உங்களுடைய உருவத்தை எனக்குள் படமாக்குகின்றது.

உங்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட எண்ண அலைகளைச் சூரியனின் காந்த அலைகள் கவர்ந்து கொள்கின்றது. அப்பொழுது பார்க்கப்படும் பொழுது எதைக் கண் படம் எடுத்ததோ அதை இழுக்கப்படும் போது சத்தியபாமா…! என்னைத் திட்டுகின்றீர்கள் என்ற உண்மையை உணர்த்துகிறது.

இப்படிப் படம் எடுக்கப்படும் பொழுது உடலில் இருக்கக்கூடிய செல்கள் அதைப் பதிவாக்குகின்றது. அதாவது ஒரு நாடாவிலே பதிவாக்குவது போல்
1.ஊழ்வினை என்று உடலில் உள்ள எலும்புக்குள் பதிவாக்கி விடுகிறது.
2.இப்படி ஆயிரக்கணக்கானவரை நாம் பார்த்துப் பதிவாக்குகின்றோம்.

இதிலே ஒருவர் திட்டுகிறார் என்றால் கூர்மையாக அதை உற்று நோக்கிய பின் “இரு நான் பார்க்கிறேன்…!” என்றால் அதை மறக்க முடியாது.

ஆனால் சாதாரணமாக சந்தர்ப்பத்திலே பேசிக் கொண்டிருக்கும் பொழுது “நாளைக்கு இந்த இடத்திற்கு வாருங்கள்… இன்னதைத் தருகிறேன்…” என்று சொன்னால்
1.அது நமக்குத் தேவைப்பட்ட முக்கியமான பொருளாக இருந்தால்
2.”அவரிடம் போய் வாங்க வேண்டும்” என்ற எண்ணம் இருக்கும்.

அப்படி இல்லாது இருந்தால்… நாளைக்குப் பார்க்கலாம் வாருங்கள் என்று சொன்னாலும் அது நமக்குள் சரியாகப் பதிவாகாது… நினைவும் சரியாக வராது. இரண்டு நாட்கள் கழித்து “நான் வரச் சொன்னேன்… வரவில்லையே…” என்று அவர்கள் கேட்பார்கள்.

ஆனால் இந்தப் பக்கம் வந்தால் உன்னை உதைத்து விடுவேன்…! என்று சொன்னால்
1.அது “சுருக்…” என்று பட்டு விடுகின்றது… ஆழமாகவும் பதிவாகி விடுகிறது
2.இப்படிப் பதிவான பிற்பாடு அவரை நினைத்தவுடனேயே அந்த ஆத்திரம் வருகிறது

இந்த இடத்திற்கு வா பார்க்கலாம்… என்று சொன்ன பிற்பாடு
1.அங்கே போன பின் உணர்ச்சி வேகம் திக்..திக்.. என்று அடிக்கும்.
2.ஆனால் போக்கிரியாக இருக்கிறான் என்றால் நம் மனது பட..பட..பட.. என்று அடிக்கும்.

போக்கிரி இல்லாதபடி நம்மைப் போன்று சமமானவர்களாக இருந்தால் அவர் பேசிய பேச்சுக்கு (அவரின் உணர்வு தாக்கியவுடன்) நம்முடைய வலு கொண்டு “என்ன செய்வான் அவன் பார்க்கலாம்…!” என்ற நினைவு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்… மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்.

1.அவர்களை எண்ணும் பொழுது அந்த எண்ணம் நினைத்த உடனே அதைக் குவிக்கும்
2.டிவி.க்களிலே படம் எப்படித் தெரிகின்றதோ அதே மாதிரி அந்த நினைவலைகளை இழுத்து உருவமாகக் காட்டும்… உடனே அது தெரியும்
3.பரவலாக இருக்கக்கூடிய அலைகளை இழுத்துக் கண்ணுக்கு முன்னாடி புலனறிவுக்குள் “அதைக் காட்டிக் கொண்டே இருக்கும்...”

அதே உணர்வின் செயல் உயிருக்குள் பட்டு அதனுடன் தொடர் கொண்ட சிறு மூளைக்குள் சென்றவுடன்
1.ட்ரான்சாக்ஷன் ஆகி… எந்த உணர்வோ… நமக்குள் பதிவானது அந்த செல்களில் எடுத்து… அது இயங்க ஆரம்பிக்கும்.
2.அதே அலைகளை எடுத்து எடுத்து… நாம் பேசும் பொழுது தொடர்ச்சியாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.

நாம் சுவாசத்தின் வழி எடுக்கக்கூடிய உணர்வுகள் உயிரிலே பட்டு
1.எடுக்கக்கூடிய காற்றை… காந்தத்தைப் பிரித்து… உணர்வின் சத்தைப் பிரித்து
2.அந்த அலைகளை ட்ரான்சாக்சன் செய்து சிறுமூளை உடலுக்குள் உணர்வுகளைச் செயல்படுத்துகின்றது.

ஆனால் அதே சமயத்தில் நாம் எண்ணிய உணர்வுகளை உமிழ் நீராக மாற்றி விடுகின்றது… சாப்பிட்ட ஆகாரத்துடன் அது கலந்து விடுகிறது.
1.நம் கண்ணுக்கு “நாம் எண்ணுவது தெரிவதில்லை…!”
2.நினைவுகள் எடுக்கும் பொழுது அது உமிழ் நீராக அது மாறுகின்றது.

எப்படி…?

வெயில் காலத்தில் மாங்காயையும் உப்பையும் தொட்டுச் சிலர் விரும்பிச் சாப்பிடுவார்கள். அந்தப் புளிப்பு அவர்களுக்கு மிகவும் ரசிப்பாக இருக்கின்றது. மாங்காய் புளிப்பு தான்… ஆனாலும் அதை ரசிக்கின்றார்கள்.

அதைப் பற்றிச் சொன்னாலும்… மாங்காயை இப்பொழுது நீங்கள் பார்க்கவில்லை… ஆனால் உமிழ் நீர் உங்களுக்குள் எப்படிச் சுரக்கின்றது…?

மாங்காய் என்று சொன்னவுடனே கப..கப.. என்று உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா…! அந்தப் புளிப்பின் நிலைகள் கொண்டு உங்களுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… நினைவலைகளைத் தூண்டுகின்றது.

மாங்காயைப் பார்க்கவில்லை ஆனால் அந்த சுவையின் தன்மை கொண்டு உமிழ் நீரைக் குவிக்கின்றது.

இதற்கு முன்னாடி உமிழ் நீர் ஊறவில்லை..! ஆனால் சொன்னவுடனே எப்படி உமிழ் நீர் ஊறுகின்றதோ இதே மாதிரித் தான் எரிச்சலாக ஒருவர் பேசுகிறார் என்றால் அதைப் பார்த்து நுகர்ந்ததும் அதே உணர்வு நமக்குள் வருகிறது. சொல்கிறது அர்த்தமாகிறதல்லவா…!

எரிச்சலான உணர்வு கொண்டு பேசுகிறார்… நாம் உற்றுப் பார்க்கின்றோம் அந்த எரிச்சலான உணர்வு நமக்குள் வருகின்றது
1.”சுழி முனை” என்பதற்கு விளக்கம் சொல்கின்றேன்
2.சுவாசித்த உடனே அதை ட்ரான்சாக்ஷன் செய்கின்றது
3.கண்ணினுடைய நினைவுகள் வரப்படும் பொழுது “மேக்னெட்… அந்த சுவிட்சைக் கிளைத்து விடுகின்றது…”
4.நம் உடல் மொத்தமாக அதை இழுக்க ஆரம்பிக்கும்
5.எந்த குணத்தி(ன்)ல் சுவிட்சைப் போடுகின்றமோ அதை இழுக்கின்றது

ரேடியோ டிவி பெட்டிக்குள் பல ஸ்டேஷன்களைப் பதிவு செய்து வைத்திருக்கின்றனர். எந்த ஸ்டேஷனை… எந்த அலைவரிசயைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலையைக் காற்றிலிருந்து பிரித்து இங்கே எடுத்துக் கொண்டு வருகிறது.

இதே மாதிரி நம் உடலில் ஆயிரக்கணக்கான அலைவரிசை உண்டு. எந்த அலையை இழுத்துப் பேசுகிறோமோ… அந்த அலைவரிசை “தன்னாலே பேசும்…”

எண்ணும்போது அந்த அலைகளை எடுத்து நம்மால் உணர முடிகின்றது… நுகர முடிகின்றது… செயல்படுத்த முடிகின்றது.
1.அந்த உணர்வின் அலைகளைச் சுழி முனை சுழற்றி
2.சிறு மூளை ட்ரான்சாக்ஷன் செய்து பிரித்து அந்த உணர்ச்சிகளை உடல் முழுவதும் சுற்ற வைக்கின்றது.

அப்போது அதே உணர்வு தான் நமக்குள் வேலை செய்யும்…!

தாவரம் போல் “ஒரே நிலை கொண்ட சுவாசத்தை” நாம் பெற வேண்டும்

நாம் எடுக்கும் சுவாசம் ஒரே நிலை கொண்டதாக இருந்திடல் வேண்டும். பல எண்ணங்களின் நிலையுடன் எடுக்கும் சுவாசத்தில் நம் நிலைக்கு நாம் பெறும் சக்தி நிலை தடைப்படுகின்றது.

1.வாழ்க்கையில் பல நிலைகள் மோதுண்டாலும்…
2.நம் எண்ண சக்தி அவ்வீசனின் ஜெபம் கொண்டதாக
3.நம்முள்ளே உள்ள ஈசனை வணங்கிய நல் சக்திக்கு வர வேண்டும்.

காட்சி:
இல்லத்தில் தூசி அண்டிக் கொண்டே இருந்திட்டாலும் அதனை நாம் பெருக்கி தூய்மைப்படுத்திக் கொண்டே உள்ளோம்.

அதே போல் ஒரு தீபத்தை ஏற்றும் பொழுது அத்தீபத்தில் உள்ள எண்ணெய் குறையக் குறைய மீண்டும் அவ்வெண்ணையை ஊற்றித் தீபத்தின் திரியைத் தூண்டுகின்றோம்.

அப்படித் தூண்டினால்தான் அத்தீபம் “ஒளி” அளித்துக் கொண்டே இருக்கும்.

1.அதே போல்… நம் எண்ணத்தை எண்ணெயாக்கி
2.நம் ஆத்மாவின் ஜோதி என்னும் ஒளிரும் சக்தியில்
3.இவ் எண்ணமான எண்ணெயை குறையக் குறைய ஊற்றினால்
4.தீபம் சுடர் விட்டுப் பிரகாசிப்பது போல் நம் சக்தியை நாம் உணர்ந்து உணர்வுகள் ஒளியாகும் நல் சக்தி பெற வேண்டும்.

தாவர வர்க்கங்கள் ஒரே நிலை கொண்ட சக்தியை மட்டும் ஈர்த்து எப்படி அச்சக்தியின் நிலை கொண்ட செயலில் வளர்கின்றனவோ அந்த நிலை போல் நம் நிலையும் இருந்திடல் வேண்டும்.

தாவரங்கள் அதன் இயற்கையின் சக்தியில் ஒரே நிலை கொண்டு அவ்வணு வளர்வதினால் ஒரே சக்தியில் ஈர்த்து வளர்கின்றன.

ஆனால் ஜீவ ஆத்மாக்கள் (நாம்) பல நிலைகளை எண்ணும் நிலையில் உள்ளதினால் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அந்ந்தந்த நிலைக்குகந்த சக்தி நிலையும் நம் உடலுக்குள் செல்கின்றது.

அதிகோப நிலையும் சலிப்பு நிலையும் பயந்த நிலையும் இப்படி ஒவ்வொரு நிலை கொண்ட எண்ணமுடன் நாம் உள்ள நிலையில்
1.நாம் எடுக்கும் சுவாசத்தினால் இக்காற்றில் உள்ள அமிலத்தில் இருந்து அவைகள் நம் உடலில் வந்து குவிந்து
3.நம் உடலின் நிலையை மாறுபடச் செய்கின்றது.

ஆக… நாமாக ஏற்பதுதான் நம் வாழ்க்கை நிலையும் ஆயுள் நிலையும்.

எண்ண சக்தி கொண்டு உயிராத்மாவாய்ப் பிறந்து இவ்வெண்ணமுடனே வளர்ந்து இவ்வெண்ணத்துடனே உடலை விட்டு ஆத்மா பிரிந்தும் இவ்வெண்ணத்துடனே ஆவி உலகில் சஞ்சரித்தும் பிறகு இவ்வெண்ண நிலைகொண்டு தான் இப்பூமிக்கு மறு பிறப்பிற்கும் வருகின்றோம்.

உயிரணுவாய்த் தோன்றிய நாள் தொட்டே அந்த நிலைகொண்டு வளர்ச்சியுற்று எல்லா நிலைகளுமே இந்த எண்ணத்துடன் தான் செயல்படுகின்றன.

எண்ண சக்தியை நாம் பெற்ற மானிடனாக இப்பூமியில் வாழ்ந்திடும் காலத்திலேயே
1.நாம் பிறந்ததின் பயனை உணர்ந்து
2.நம் ஆத்மாதான் நமது தெய்வம்
3.அவ்வாத்மாவிற்கு நாம் ஈர்க்கும் சுவாசம் கொண்டும்… நாம் சேமிக்கும் சக்தி நிலையைக் கொண்டும்…
4.நம் நிலையை நல் நிலை ஆக்கிடும் நிலைக்கு நம்மை நாம் பக்குவப்படுத்தி வாழ்ந்திடும் எண்ணத்தை வழிப்படுத்துதல் வேண்டும்.

உயிரணுவாய் உள்ள தாவரங்களின் நிலையுடன் இயற்கை அன்னை அளித்துள்ள நல்ல கனிகளையும் உண்டிட்டே நம் நிலையில் அவற்றின் சக்தியைக் கொண்டே வளர்த்திடல் வேண்டும்.

உயிரணுவாய் உள்ள இத்தாவரங்களுக்கு மட்டும் ஜீவனில்லையா..? இவ் இயற்கையுடன் பூமியில் உள்ள அனைத்துமே ஜீவனுடன் உள்ள பொழுது மிருகங்கள் பறவைகள் இவற்றின் மாமிசத்தைப் புசித்திடலாகாது. இத்தாவரங்களை நசித்து உண்ணலாமா…? என்றுரைப்பீர்.

தாவரங்கள் இப்பூமியைப் போன்ற நிலை பெற்றவை. உயிர் அணுவாய் ஒரே நிலை கொண்ட சக்தியை ஈர்த்து அச்சக்தியின் நிலையின் தொடர்பு கொண்டு நம்மை வளரச் செய்பவை.
1.இத்தாவரங்கள் உயிரணுவாய் வளரப் பெற்றவைதான்
2.ஆனால் இச்சரீர நிலை கொண்ட ஆத்மாவுடன் கூடிய ஜீவத்துடிப்பு இல்லாதவை.

இஜ்ஜீவனுடன் ஜீவன் பெற்ற அனைத்து ஆத்மாக்களுக்குமே அது ஈர்க்கும் சக்தி கொண்ட உஷ்ண அலைகளின் வெக்கை நிலையும் அதன் உடல் ஆரோக்கிய நிலையைப் பொறுத்துக் கூடிக் குறையும் நிலை அஜ் ஜீவனுடனே அஜ் ஜீவனே ஏற்படுத்திக் கொள்கிறது.

தாவரங்களின் நிலையில் நம் பூமி வெளியிடும் உஷ்ண சக்தியின் நிலைதான் அந்நிலையில் வளர்ந்திடும் தாவரங்களுக்கும் இருந்திடும்.
1.ஜீவத் துடிப்பும் ஜீவ எண்ணமும் தாவரங்களுக்கில்லை
2.தாவரங்களின் சக்தியெல்லாம் ஒரே நிலை கொண்ட சக்தியை ஈர்த்து வளர்ந்திடும் நிலைதான்…!

September 25, 2023

என்னுடைய சேவை

அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ கெட்டதைப் பார்க்கிறோம் சங்கடப்பபடுவோரைப் பார்க்கின்றோம்… அது பற்றிச் சொல்வதையும் கேட்கிறோம்.
1.இது எல்லாம் கண்ணில் உள்ள கருமணியில் பட்டுத் தான் உடலுக்குள் போகும்.
2.வேதனைப்பட்ட உணர்வுகள் கருமணிகளிலே பட்டு இழுத்து அதில் உள்ள வயர் (WIRE) எல்லாவற்றுக்கும் அனுப்புகிறது
3.கருமணிகளில் பட்டுத் தான் அந்த வீரியத் தன்மை போகிறது.

வேதனை வெறுப்பு கோபம் குரோதம் இது போன்ற உணர்வைக் கேட்டோம் என்றால் கூடக் கொஞ்ச நேரம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… அது எங்கள் கருமணிகளிலே படர வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

இப்படி எண்ணியவுடன் அங்கேயும் ரெக்கார்ட் ஆகின்றது கருமணிகளும் சுத்தம் ஆகின்றது கண்ணிலே ஒரு ஒளி அலைகள் வந்து அது தூய்மைப்படுத்துவதைக் காணலாம்.

ஆனால் தூய்மைப்படுத்தாதபடி வேதனை அதிகமாகச் சேரப்படும் போது சிறுநீர் கழிக்கும் போது எப்படி உறைகின்றதோ (உப்பு) இது போன்று அந்த மேக நீர்கள் கூடப்பட்டுக் கருமணியின் மேல் தோலில் படர்ந்து விடுகின்றது.

மேல் தோலில் இருந்தாலும் பரவாயில்லை…
1.அதற்குள் கருமணிக்குள் ஒரு சிறிய நிலை இருக்கின்றது
2.அதற்குள் அழுக்கு படிந்து விட்டது என்றால் அதை நோண்டிக் கழுவித்தான் இப்பொழுது வைக்கின்றார்கள்.
3.மேல் படலம் வேறு… கருமணி உள்ளே இருப்பது வேறு…! அதை எடுத்துத் தூய்மைப்படுத்திவிட்டு தான் இப்பொழுது வைக்கின்றார்கள்.

அதாவது கண்களை இரவல் கொடுக்கின்றார்கள் என்றால் ஐஸ் பெட்டியில் வைத்து… கருமணி பழுது இல்லாமல் இருந்தால் அதைத்தான் எடுத்து அடுத்தவர்களுக்கு வைக்கின்றார்கள்.

கண்ணை எடுத்து அப்படியே பொருத்துவதில்லை. சரியாக இருந்தால் கருமணியைத் தான் எடுத்துப் பொருத்துகின்றார்கள் (பேங்கில் இருந்து).

காரணம்… கண்ணின் கருமணியில் விஷத்தின் தன்மை அதிகமாக அங்கே தோய்ந்து விட்டால் அது எதுவும் இழுக்க முடியாதபடி… கிரகிக்க முடியாதபடி… மக்காகி விடுகின்றது…! பார்வை குறைந்து விடுகின்றது… திருத்த முடியவில்லை என்று சொல்வார்கள்.

அப்பேர்ப்பட்ட கண்களுக்கு இந்த கருமணிகளைப் பொருத்தி பார்வை உண்டாக்குகின்றனர்… “அது தனித்தன்மை வாய்ந்தது…”

காரணம் புழுவாக இருக்கும் போது தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைக் கவர்ந்து கண்கள் உருவாகி
1.அதற்குப் பின் ஒவ்வொன்றாகக் கவர்ந்து கவர்ந்து வந்து
2.மனிதனாகும்போது இந்தக் கண்ணின் கருமணிகளிலே வலுவான நிலை வருகிறது.

மனிதர்களால் இருட்டிலே மற்ற பொருளைக் காண முடிவதில்லை. ஆனால் மிருகங்களுக்கோ விஷம் அதிகம்… அதிலே எக்கோ உருவாகி இருளிலே பார்க்கும் சக்தி பெற்றது. காரணம்…
1.ஆதியிலே விஷத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதித் ஒளியாக மாறியது
2.அதே மாதிரி இதில் உள்ள விஷமும் எதிரிலே மற்றதுடன் மோதிய பின் வெளிச்சம் ஆகின்றது.
3.மிருகங்களுக்கு இரவிலே கண் பார்வை தெளிகாகத் தெரிகிறது.

ஆனால் இன்று விஞ்ஞான அறிவு கொண்டு இரவிலே படம் எடுப்பதற்காக “கேமராக்களில் மெர்க்குரியை வைத்த பின் இதற்குள் வெளிச்சமாகி அந்தப் படத்தை எடுக்கின்றது…”

விஞ்ஞானிகள் செய்வது எனக்கென்ன தெரியும்…? குருநாதர் அதையெல்லாம் காண்பிக்கின்றார். இருந்தாலும் விஞ்ஞான அறிவிலே மிகவும் வளர்ச்சியானதை நான் (ஞானகுரு) அதிகமாகத் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.

ஏனென்றால் விஷக் கதிரியக்கங்கள் அது மிகவும் கடினமானது..! அதிலே ஆபத்துகள் வருவதை “எப்படி…?” என்கிற வகையில் கேட்டுத் தெரிந்து ஆபத்தை நீக்குவதற்ண்டான வழியை மட்டும் செய்கிறேன்.

குருநாதர் இட்ட கட்டளைப்படி ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து; ஒவ்வொரு உடலையும் கோயிலாக மதித்து; மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைத் தெய்வங்களாக மதித்து
1.எத்தனை கோடி மக்கள் இதிலே தெளிந்து திருந்தி வாழ்கின்றார்களோ
2.அவர்களுக்கெல்லாம் அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று ஈசனுக்குச் சேவை செய்கிறேன்.

இராமலிங்க அடிகள் சொன்னது போன்று “அருட்பெருஞ்ஜோதி நீ தனிப்பெரும் கருணை…” எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதையெல்லாம் உயிர் நமக்கு அறிவிக்கின்றது.

கோபப்படுவனை உற்றுப் பார்த்தால் நம்மையும் கோபப்படச் செய்கின்றது. தவறு செய்கின்றான் என்று உற்றுப் பார்த்தால் அந்தத் தவறை நமக்குள் தெரியப்படுத்துகிறது.
1.நான் தீயதைப் பார்க்கக் கூடாது… தீயதை நுகரக்கூடாது
2.தீய செயல்களுக்குப் போகக்கூடாது… அதைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பே வரக்கூடாது
3.கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…! என்று இராமலிங்க அடிகள் பாடுகிறார்.

அதாவது கூர்மையாக உணர்வின் தன்மை பிளந்து… எனக்குள் அறிவென்ற உணர்வை ஊட்டுகின்றாய்…! என்று அவருடைய பாடலுக்குள் மூலக்கூறுகள் எத்தனையோ உண்டு. சொல்லுக்குள் எத்தனையோ அர்த்தங்கள் உண்டு.

குருநாதர் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுத்து என்னைத் தெளிவாக்கினார். ஒரு பைத்தியக்காரன் போலத் தான் இருந்தார் ஆனால் பேருண்மைகளை எமக்குத் தெளிவாக்கினார்

அதைத்தான் உங்களிடம் இப்பொழுது யாம் சொல்லிக் கொண்டு வருவது…!

குரு காணிக்கை

புள்ளிகளோ கோடோ மையமாக வைத்துத்தான் கோலம் போடுகின்றோம். அவற்றை அழகு பெறவும் செய்கின்றோம்.

அதே போல் நம் ஆத்மாவை நாம் உணர்ந்து… மையமாக அதை வைத்து நம் எண்ணச் சிதறல்களுக்கு அடிமையாக்கிடாமல் வாழ்ந்திட வேண்டும்.

இவ்வுலகிற்கு எந்தெந்த நிலைகளெல்லாம் உள்ளனவோ அதைப் போலவே நம் உயிர் ஆத்மாவிற்கும் அனைத்து சக்திகளும் உள்ளன என்ற உண்மைகளை உணர்ந்திட வேண்டும்.

1.இப்பூமிக்கு ஒரு ஈர்ப்பு சக்தி உண்டு…
2.பூமிக்கு மேலே எந்த ஒரு பொருளைத் தூக்கிப் போட்டாலும் அதை எந்தக் கால அளவில் பூமி தன்னுள் ஈர்த்துக் கொள்கின்றதோ
3.அந்த நிலை போலவே நம் உயிராத்மாவும் ஈர்க்கும் காந்த சக்தி கொண்டதாகத்தான் உள்ளது.

இன்று நாம் நம் செயற்கையில் ஓடவிடும் அனைத்து இயந்திர நிலை கொண்ட சாதனங்களுக்கும்… அதற்குகந்த சக்தி நிலையை வைத்து மற்ற சக்தியை அதனுடன் மோதலிடும் பொழுதுதான்… நாம் அமைக்கும் இயந்திர நிலைகள் செயல்படுகின்றன. அச்சக்தியே செயல்படுகின்றது.

இந்த நிலை போலவே நம்முள் உள்ள இக்காந்த சக்தி கொண்ட அனைத்து சக்தி நிலையையும் ஈர்க்கும் இவ்வாத்மாவைப் பெற்ற நாமும் பிறந்தோம்… வளர்ந்தோம்… வாழ்ந்தோம்… என்று தானாக இயங்கும் இயந்திரமாக இவ்வுடலை எண்ணிடலாகாது.

இவ்வுலகம் எந்தெந்த அமிலங்களை எல்லாம் ஈர்த்து வளர்ந்து வாழ்கின்றதோ அவற்றின் நிலைப்படுத்திய சக்தியனைத்தும் இவ்வுடலுக்கும் உண்டென்பதை உணர்ந்து
1.நம் ஆத்மாவின் உன்னத சக்தியை விரயம் செய்திடாமல்
2.நம் அறிவாற்றலை மென்மேலும் வளர்த்து
3.நம் உடலில் அண்டவிடும் பிணிகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கிய நிலையில் வாழ்ந்திடவும்
5.கோபம் குரோதம் சலிப்பு இவற்றிலிருந்து விடுபட்டு சாந்தம் அன்பு ஆசை என்ற ஆத்மிக நெறியை அனைவரும் ஈர்த்து
6.நமக்கு வழி காட்டும் ஆண்டவன் நிலைபெற்ற சப்தரிஷிகளின் அருளாசியைப் பெற்றிடல் வேண்டும்.

இந்த வளர்ச்சியில் இவ்வுலக உண்மைகளை மட்டுமல்ல… இவ்வுலகைப் போலுள்ள எல்லா மண்டலங்களின் நிலையையும் அதனதன் ஈர்ப்பு சக்தியையும் அறிந்திடலாம்.

ஒவ்வொரு மண்டலங்களுக்கும் அதற்குகந்த தனித்தன்மை உண்டு ஒன்றை ஒத்த நிலையில் ஒன்றில்லை.

இன்றைய நம் வாழ்க்கை வழி முறைகள் அனைத்துமே பிறர் எழுதிய… பிறர் சொல்லும் நிலையைக் கேட்டு… வாழ்ந்திடும் நிலையில் தான் பெரும்பாலும் உள்ளன.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஆத்மீக நெறிக்கே பிற ஏடுகளையும் பழங்காலக் கல்வெட்டுகளையும் ஆராய்ந்து கொண்டுள்ளனர். வாழ்க்கையின் கால நிலையை அதிலே விரயமாக்கி பிறர் நிலை அறிந்து வாழும் எண்ண வேட்கை கொண்டதாகவே உள்ளது.

1.சக்தியின் சக்தி ஆத்மா தான் நாமும் என்றுணர்ந்து
2.நம்முள்ளேயே நம் சக்தியை வளர்த்து
3.அனைத்து நிலையையும் நாமே அறிந்திடும் ஆற்றலையும்… உணரும் சக்தி நிலையையும் நாம் பெற வேண்டும்.

வழி அறிந்திட குரு வேண்டும்… அக்குருவின் சக்திக்கு மேல் சக்தி பெறும் சக்திவானாகச் செல்வதுதான் குருவாக நாம் ஏற்பவருக்கு நாம் அளிக்கும் காணிக்கை…!

ஒவ்வொருவரும் தனக்குகந்த ஈர்ப்பு சக்தியை உணர்ந்து ஒரு நிலை பெற்று… “உயிரோட்டம் கொண்ட சக்தி ஜெபம் பெற்றிடுங்கள்…!”

September 24, 2023

உயிரணுவாய் மனிதனாகத் தாயின் கர்ப்பத்தில் பிறந்த சிசுக்கள்தான் நாம் ஆண்டவராக வணங்கிடும் பல பல தத்துவ ஞானிகளும்…!

ஞான மார்க்கத்துக்குச் சென்ற அவ்வாத்மீக வழியின் ஞானத் தொடருக்கு வந்தவர்களும் சித்தர்களும் முனிவர்களும் அவர்கள் தியானம் பெறுவதற்கு மலைக் குகையையும் சோலைகள் அடர்ந்த காட்டுப் பகுதிகளையும் இப்பூமியின் மட்டத்திற்கு மேல் உயர்ந்த இடமான மலைச் சிகரங்களுக்கும் சென்று அமர்ந்து தியானம் புரிவதின் உண்மை நிலையென்ன…?

இன்று நாம் வாழ்ந்திடும் ஊர்களிலும் நகரங்களிலும்… இம்மனித ஜீவாத்மாக்கள் நிறைந்து வாழ்ந்திடும் இடத்திலும்… மற்ற ஆலைகள் உள்ள இடங்களிலும்… அங்குள்ள காற்று…
1.அங்கு வாழும் மக்களின் அவர்கள் ஈர்த்து வெளியிட்ட எண்ண நிலை கொண்ட சுவாசமாகவும்
2.ஆலைகளில் இருந்து வெளிப்படும் கழிவுப் புகைகளாகவும்
3.காற்றுடனே அந்நிலை கொண்ட அவ்விடத்திலேயே சுற்றிக் கொண்டுள்ளன.

அந்நிலையில் அமர்ந்து தியானம் பெறும் பொழுது அவர்களின் எண்ணமுடன் இவ்வெண்ணத்தின் அலைகள் மோதும் பொழுது அவர்கள் ஈர்க்கும் சக்தி நிலையில் சில தடங்கல்கள் ஏற்படுகிறது.

ஆகையினால் இக்காற்று மண்டலத்தைச் சுத்தப்படுத்தும் தாவர வர்க்கங்கள் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமர்ந்து தியானம் செய்கின்றனர். அப்பொழுது அத்தியானத்திற்குப் பல நல்லுணர்வுகளும் அவர்களின் ஆத்மாவிற்கு நற்பயனும் கிட்டுகின்றன.

இதைப் போன்றே இப்பூமி மட்டத்திற்கு மேல் ஓர் அளவு கொண்ட உயரத்திற்கு மேல் மலைகளில் அமர்ந்து தியானம் செய்யும் பொழுது அசுத்தமான காற்று அவர்கள் செய்யும் தியானத்திற்கு வந்து அண்டுவதில்லை.

மலைக் குகைகளில் அமர்ந்து தியானம் செய்யும் பொழுதும் இப்பூமிக்கு அடியில் இவ்வசுத்தக் காற்று வந்து தாக்குவதில்லை. இதன் உண்மை நிலை இதுவே. “வாழ்க்கையிலிருந்து மீண்டு துறவறம் கொண்டவர்களினால்” இந்நிலைக்குச் சென்று இத்தியானம் பெறுவது எளிது.

1.ஆனால் வாழ்க்கையுடன் ஒன்றிய நம் நிலைக்கு
2.நம் வாழ்க்கையையே… நாம் வாழும் நிலையையே தியானமாக்கி
3.வாழும் பக்குவ நிலைதான் நமக்குகந்த உன்னத நிலை.

உடல் உபாதை உறும் பொழுது எந்நிலை கொண்ட உபாதை பெற்றோமோ அந்நிலையை அடக்கும் அதற்கு மேல் சக்தி கொண்ட வீரியமுற்ற மருந்தை உண்டால்தான் அந்த உபாதை மறைகிறது.

அதைப் போல்
1.இவ்வாத்மீக வழியில் நல்லுணர்வு கொண்ட ஜெப நிலைக்கு வரும் பொழுது
2.இக்காற்றுடன் கலந்துள்ள நல் சக்திக்கு மேல் தீய சக்திகளின் தாக்குதலில் இருந்து நாம் விடுபட்டுப் பழகுதல் வேண்டும்.

நாம் செல்லும் பாதையில் பல மேடு பள்ளங்கள் வரத்தான் செய்யும்…!

பள்ளம் உள்ள இடத்தையும் கல் தடுக்கும் இடத்தையும் அவற்றில் விழுந்தோ தடுக்கியோ செல்லும் அபாயத்திலிருந்து “எப்பாதை சரியான பாதை…?” என்று நாம் உணர்ந்து செல்கின்றோமோ அதைப் போன்றே
1.வாழ்க்கையில் வரும் இன்னல்களிலிருந்து நாம் மீண்டு சென்று
2.ஆத்மீகப் பாதையை அடையும் ஞான மார்க்கம் தான் உயர்ந்த ஞான மார்க்கம்.

இம்மார்க்கத்தை வெறுப்புடனோ… சலிப்புடனோ… சஞ்சல நிலை கொண்ட நிலையிலோ… நம்மைத் தாக்கிடும் இன்னல்களிலிருந்து பயந்தோ… செல்வது முறையல்ல...!

1.வரும் தடங்கலுக்கு வருந்திடாமல்…
2.அவற்றிலிருந்து அமைதியுடன் மீண்டு ஆத்மீக வழிக்குச் செல்வதுதான்
3.நாம் செல்லும் ஞான மார்க்கத்திற்கு உயர்ந்த நிலை.

இந்த ஞான மார்க்கத்தை நம் முன்னோர் பல நிலைகளில் சூட்சுமம் கொண்டு இவ்வுலகம் முழுவதுமே வெளிப்படுத்தியுள்ளனர். ஏற்று வழி நடந்து வந்திடுபவர் “கோடியில் ஒருவராகத்தான்…!” இன்று இவ்வுலகில் உள்ளனர்.

ஞான வழியையும் இத்தெய்வீக வழியையுமே இம் மனித ஜென்மங்கள் அடைய முடியாத நிலை…! என்று உணர்ந்து அந்த வழிக்குச் செல்வதற்கே பயந்த நிலை கொண்டு வாழ்கின்றனர்.

உயிரணுவாய் மனிதனாகத் தாயின் கர்ப்பத்தில் பிறந்த சிசுக்கள்தான் நாம் ஆண்டவராக வணங்கிடும் பல பல தத்துவ ஞானிகளும்…!

அவர்களைப் போன்றே… நாமும் நம் வாழ்க்கையின் இருளைப் போக்கி அச்சக்தியின் சுடரின் தொடர்பினை நம்முள்ளும் ஏற்றி நற்சக்திகளாய் ஆத்மீக நெறி கொண்ட ஞான வாழ்க்கையின் நெறியை நம் வழியாக ஏற்று வழிப்படுத்தியே சென்றிடுவோம்.

September 23, 2023

ஞானிகள் காட்டிய வழியில் பஞ்சாயத்து செய்ய வேண்டிய முறை

இருளை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.
1.ஒரு கஷ்டமான நிலைகளைப் பார்த்தால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.உடனே இதைத்தான் நான் தியானிக்க வேண்டும்.

நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இரண்டு பேர் ஒருவருக்கொருவர் கோபத்துடன் சண்டையிடுவதைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி… அவர்கள் சண்டையிடும் உணர்வுகள் உடலுக்குள் போகாதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த அருள் சக்தியை உள்ளே செலுத்தி வலுவாக்க வேண்டும்.

சண்டை போட்டார்கள் அல்லவா… அவர்கள் இருவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்; மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் அந்தத் திறன் பெற வேண்டும்; என்று அவருடைய உணர்வுகளை நாம் நமக்குள் மாற்றி விட வேண்டும்.

அவர்களுக்கு இது கிடைக்க வேண்டும் என்று “நாம் எண்ணுகின்றோம்…” அவர்கள் அப்படி எண்ணினால் அவருக்கும் நல்லதாகும். ஆனால்
1.அவர்களிடம் போய்ப் புத்தி சொன்னால் கேட்பார்களா…? இல்லை
2.இரண்டு பேர் சண்டையிடுகின்றார்கள் என்றாலும் ஒருவரைப் பார்த்து “நீ கொஞ்சம் பொறுத்துப் போ…!” என்று நாம் சொன்னால்
3.நீ அவனுக்குச் சாதகமாகப் பேசுகின்றாய்… எனக்கு நீ உதவியாக இல்லை…! என்று சண்டைக்கு வருவார்கள்
4.இருவரில் யாரிடம் சொன்னாலும் இருவருமே இப்படித்தான் சொல்வார்கள்… சமாதானப்படுத்த முடியுமா…!
5.அவர்கள் உணர்வுக்குத் தக்க நாம் வரவில்லை என்றால் நம்மைக் குற்றவாளியாக்கி விடுவார்கள்.

ஆகையினால் அதை நாம் நுகர வேண்டியதில்லை. யாம் சொல்லிக் கொடுத்த முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

அதைஸ் செய்து… சண்டையிட்ட அந்த இருவருமே மகரிஷிகளின் அருள் சக்தியால் சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும்; ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற இந்த உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டே வந்தால் நமக்குள் அது தீமையைத் தடுக்கும் சக்தியாக மாறுகின்றது.

அடுத்து சாந்தமான பிற்பாடு நாம் என்ன செய்ய வேண்டும்…? அவர்களிடமிருந்து சமைத்த உணர்வு நம்மிடம் இருக்கிறது
1.நீங்கள் இந்த மாதிரிச் செய்தீர்கள் அதனால் தான் உங்களுக்குக் கஷ்டம் வந்தது
2.அதற்குப் பதிலாக மகரிஷிகளின் அருள் சக்திகளை இப்படி எண்ணி எடுத்துப் பாருங்கள் நன்றாகிவிடும்…! என்று சொல்லலாம்.

அவர்கள் அமைதியாக இருக்கும் போது நாம் சொல்வதைக் கேட்க வைத்து உண்மைகளைச் சொன்னால் அவர்கள் நல்லதை எடுப்பதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றது.

அட என்ன…? நீதானப்பா முதலில் அவனிடம் சண்டை போட்டாய்…! என்று சொல்லக் கூடாது. சந்தர்ப்பத்தினால் உணர்ச்சி வசப்பட்டீர்கள்… சண்டையிட்டுக் கொண்டீர்கள்.. அதனால் அன்பை இப்படிக் கெடுத்துக் கொண்டீர்கள்…! சற்று சிந்தியுங்கள் என்று இந்த ஞானத்தோடு சொன்னால் ஏற்றுக் கொள்ளும் பருவம் அங்கே வருகின்றது.

ஈர்க்கும் சக்தி அங்கு இல்லை என்றால்…
1.என்னப்பா இப்படி எல்லாம் செய்கின்றாய் என்று புத்திமதி சொல்வது போல் சொன்னால்
2.எல்லாம் தெரிந்த மாதிரி… இவர் பெரிதாகச் சொல்ல வந்து விட்டார் என்பார்கள்.
3.சொன்னாலும் கேட்க மாட்டார்கள்… நமக்கு எதிர்ப்பதமாக வரும்.

ஆகவே அருள் உணர்வுகளை நாம் வளர்த்து அந்தப் பண்போடு சொல்லிப் பழகுதல் வேண்டும். எப்படி…? இருவரும் சண்டை இட்டீர்கள். அதனால் உடலில் நோயாக மாறியது… சிந்திக்கும் தன்மையும் இழக்கிறது. அதனால் இது போன்ற சந்தர்ப்பங்களில் பொறுப்பாக இருந்து இரண்டு பேரும் ஒன்று சேர்த்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்.

அதற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இருவருமே பெறுங்கள் உங்கள் உடலில் அதை வளர்த்துக் கொள்ளுங்கள் இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் அந்த தெளிந்த மனம் பெற வேண்டும் என்று இப்படிச் சொல்லிப் பழகுதல் வேண்டும்.

இது அவர்களுக்குள் ஏற்றுக் கொள்ளும் பருவமாக மாறுகின்றது… கொஞ்சமாவது கேட்பார்கள்… “கேட்டால் தானே உள்ளே செல்லும்…” சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.

இப்படிப்பட்ட உணர்வை நாம் சேர்த்துக் கொண்டால் அவர் சண்டையிட்ட உணர்வோ வெறுப்படைந்த உணர்வோ நமக்குள் வருவதில்லை. அவர்களும் ஒன்றுபட்டு வாழும் நிலைக்கு வருகின்றார்கள்… பகைமைகளை அகற்ற முடிகிறது.

இப்படித்தான் நாம் மாற்றிக் கொண்டு வர வேண்டும்… இதைச் செயல்படுத்த வேண்டும்

தியானம் என்பது…
1.அந்த ஞானிகளின் அருள் சக்தியை எடுத்துச் சமைத்து ஞானத்தின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது
2.தீமை நமக்குள் வராதபடி எல்லாம் தெளிந்த மனமாக வளர்கின்றது
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது.

கோடிக்கரையில் (கடைசி மனித உடல்) இருக்கும் நாம் இதையே செய்து கொண்டு வந்தால் தனுசு கோடி எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து ஒளியாக மாறுகின்றோம். இது தான் இராமேஸ்வரத்தின் தத்துவம்

இராமன் என்றால் எண்ணம்... நாம் நுகர்ந்தது எண்ணத்தால் உருவா(க்கு)கின்றது. எதை உருவாக்கினோமோ அதுவே ஈசனாக இயக்குகிறது. அது தான் இராமேஸ்வரம்.
1.எண்ணத்தால் உருவாக்கப்பட்டது இராமலிங்கம்…
2.உயிருடன் ஒன்றி ஒவ்வொருவரும் நாம் ஒளியாக மாற வேண்டும்…!

“சத்ரு மித்ரு…”

பால்வெளி மண்டலம் சூனிய மண்டலம் என்கின்றனர். பால்வெளி மண்டலமும் பல மண்டலங்களில் இருந்து வெளிப்படும் சக்தியினைத் தன்னுள் வைத்துக் கொண்டேதான் சுற்றிக் கொண்டுள்ளது.

இப்பால்வெளி மண்டலத்தில் இருந்து மழை வரும்போது இடியும் மின்னலும் எந்நிலையில் வருகின்றன…?

பால்வெளி மண்டலத்தில் பல சக்திகள் சுற்றிக் கொண்டுள்ள நிலையில் மேகம் அடர்ந்து மழை பெய்யும் பொழுது பல அமில சக்திகள் சுற்றிக் கொண்டுள்ள நிலையில் மழைத் துளிகள் அதன் மேல் பட்டவுடன் இரண்டு வெவ்வேறு நிலை அமிலங்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதும் பொழுது ஏற்படும் நிலைதான் இடியும் மின்னலும்… மழை வரும் காலங்களில் ஏற்படுவதெல்லாம்.

இரண்டு தன்மை கொண்ட சக்திகள் மோதுண்ட நிலையில் ஒன்றை ஒன்று ஏற்காத நிலையில் பூமி எப்படிப் பூகம்பத்தை நிலநடுக்கத்தை வெளிப்படுத்துகின்றதோ அந்நிலை போலத்தான் இப்பால்வெளி மண்டலத்தில் இந்தச் “சத்ரு… மித்ரு” நிலை மோதுண்ட நிலையில் இடியும் மின்னலும் வருவதெல்லாம்.

இடியும் மின்னலும் வரும்போது பூமியில் உள்ள எவ்வமிலத்தன்மை கொண்ட சக்தி இப்பூமியில் அது தாக்கும் இடத்தில் உள்ளதுவோ அதனுடன்தான் இம்மின்னலுடன் வெளிவரும் அமில சக்தி வந்து கலக்கின்றது.

சில வகை மரங்கள் இவ்வமிலத்தன்மை கொண்டதாக உள்ளன. அவற்றின் மேல் இந்த மின்னல் தாக்கும் பொழுது அம்மரம் இதனைத் தன்னுள் ஈர்த்துக் கொள்கின்றது. தன் சக்திக்குகந்த அணு சக்தியைத் தான் அச்சக்தியின் நிலை கொண்ட மரங்கள் ஈர்க்கும்.

எப்படிப் பூமியில் பல நிலை கொண்ட தாவரங்களும் கனி வர்க்கங்களும் திரவங்களும் இக்காற்றினில் உள்ள அணுக்களைத் தனக்கு வேண்டியதைத் தன் நிலைக்கு ஒத்த அணுவை… தான் ஈர்த்து வளர்ந்து கொண்டே உள்ளனவோ அவை போல் தான் இப்பால்வெளி மண்டலத்திலும் சுற்றிக் கொண்டுள்ள அமில சக்திகளும் அதனதன் இனத்துடன் சுற்றிக் கொண்டே உள்ளன.

அதன் மேல் நீர்நிலை படும்போது ஒன்றுடன் ஒன்று மோதுண்ட நிலையில் வெளிப்படுகின்றது இடியுடன் கூடிய மின்னல்.

இம்மின்னல் வரும் பொழுது…
1.ஓர் இடத்தில் அப்படரும் ஒளி ஆரம்பித்தவுடன்
2.ஒரே நேர் கோடுபோல் நீண்டு அப்பட படக்கும் ஒலி ஒலித்துக் கொண்டே
3.அச்சக்திகள் உள்ள தூரம் வரை அப்படப்படக்கும் ஒலியுடன் கூடிய ஒளியின் மின் காற்றும் ஒலித்து வருகின்றது.

அம்மாறுண்ட சக்திகள் மோதுண்டு வரும் வரைதான் இடியின் ஒலியும் மின்னலின் ஒளியும். இடி இடிக்கும் பொழுது அதிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் இப்பூமிக்குள் வந்து… “அதன் சக்திகுகந்த தாவரங்களின் நிலையுடன் வந்து கலந்து விடுகின்றது…”

அதிகமான மேகங்கள் கூடி மழை பெய்யும் காலங்களில் நம் முன்னோர்கள் மரங்களின் கீழ் நிற்கக் கூடாது என்று சொல்லி வந்ததன் உண்மை இது.

இன்றைய விஞ்ஞானத்தில் மின்னலைத் தாங்கும் கருவிகளைக் கண்டுணர்ந்து மின்னலில் இருந்து மனிதரைக் காக்கும் நிலையில் அச்சக்தியை ஈர்க்கும் கருவிகளைப் பதித்து வைத்துள்ளார்கள்.

சில வகைத் தாவரங்களுக்கு இம்மின்னலை ஈர்க்கும் சக்தி நிலையுண்டு. மனிதரின் மேலும் மற்ற ஜீவராசிகளின் மேலும் மாடு மனை இவற்றின் மேலும் விழுந்தால் அந்நிலையில் தாங்கும் சக்தி இருப்பதில்லை.

ஆனால் இந்நிலையில் சக்தி கொண்ட தாவரத்தின் மேல் அம்மின்னலின் ஒளிக்கதிர்கள் தாக்கினாலும் அவை ஈர்த்தே வளர்கின்றன. சில தாவரங்கள் மரங்கள் இந்த இடி மின்னல் பட்டவுடன் கருகும் நிலையும் பெற்றுள்ளன.

இடியும் மின்னலும் எந்த நிலை பெற்று வருகின்றதோ அந்த நிலை போலத்தான் இவ்வான மண்டலங்களில் பல பல சக்தி நிலைகள் மாறு கொண்டு சுற்றிக் கொண்டுள்ளன.

September 22, 2023

அர்த்தம் புரியாத மந்திரத்தைச் சிரமப்பட்டுச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை

வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பமாக இருந்தாலும்… எத்தகைய தீமைகள் வந்தாலும் அதை மாற்றுவதற்கு முதலில் நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். அந்தத் தீமைகளை நாம் தூக்கி எறிந்து விட வேண்டும்.

காரணம்… நாம் (எதையுமே) கண்களிலே பார்க்கின்றோம்… நினைக்கின்றோம்… இழுத்து மூக்கின் வழி சுவாசிக்கப்பட்டு உயிரிலே படுகின்றது… அதனின் உணர்வாக நம்மை இயக்குகிறது.

ஆகவே…
1.அதே கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்கின்றோம்.
2.இழுத்தவுடனே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உயிரிலே இணைகின்றது
3.இணைத்தவுடன் துருவ நட்சத்திரத்தின் சக்தி அங்கே வலுப்பெறுகின்றது.

நாம் சங்கடப்பட்டது வெறுப்புபட்டது அது எல்லாம் ஏற்கனவே உடலுக்குள் பதிவாகி இருந்தாலும்… அதற்கு உணவு கிடைக்காதபடி இங்கே தடையாகிறது.

இப்படித் தான் தீமைகளை நிறுத்திப் பழக வேண்டும். ஏனென்றால் பிறிதொரு தீமை நம்மை இயக்கி விடக்கூடாது… சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் நிறுத்த வேண்டும். அடுத்து கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் பெற வேண்டும் என்று “இப்படிப் பழக்கப்படுத்தி வைத்துவிட வேண்டும்…”

நம் உடல் உறுப்புகளை இப்படி வலுப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.
1.சந்தர்ப்பத்தில் தீமைகள் வந்தால் உடனே எச்சரிக்கை செய்து ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி
2.துருவ நட்சத்திர்த்தின் வலுவை ஏற்றித் தீமை உள்ளே போகாதபடி தடைப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் துருவ நட்சத்திரம் சர்வ தீமைகளையும் வென்றது அதை வைத்து நாம் தூய்மைப்படுத்துகிறோம். உடல் உறுப்புகள் இரத்தத்திலிருந்து தோல் மண்டலம் வரை இப்படி வலு ஏற்றும் பொழுது “காற்றிலிருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பிரித்து இழுத்து” நமது ஆன்மாவாக மாற்றி விடுகின்றது.

இது பழக்கத்திற்கு வந்தால் மிகவும் அற்புதமாக இருக்கும்…!
1.சிரமப்பட்டு (அர்த்தம் புரியாத) மந்திரத்தைச் சொல்ல வேண்டும்
2.ஆயிரம் தடவை இரண்டாயிரம் தடவை இலட்சம் தடவை என்று சொல்ல வேண்டும்
3.மந்திரத்தை மறந்து விட்டாலோ… தப்பாகச் சொல்லி விட்டாலோ எல்லாமே போய்விடும் என்ற நிலை இல்லை.

உடனுக்குடன் நம்முடைய நினைவைச் செலுத்தி
1.“எது நல்லதாக வேண்டுமோ அதை எண்ணி” அந்த ரெக்கார்டை (பதிவை)
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை வைத்து நாம் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

“துருவ நட்சத்திரத்தின் கணக்குகளை” இப்படி கூட்டிக் கொண்டே வர வேண்டும். உடலில் இருக்கும் அணு செல்களிலும் இந்த பதிவுகள் கூடிக் கொண்டே வருகின்றது… எல்லா அணுக்களிலும் இந்தச் சக்தி கூடி கூடுகின்றது.

இப்படிக் கூடும் பொழுது உயிரைப் போன்றே உடலில் இருக்கும் ஜீவ அணுக்களை ஒளியாக மாறிக் கொண்டே வருகிறது.

வயலிலே விதைக்கின்றோம் என்றால் முளைத்த பின் அந்தந்தக் காலகட்டத்திற்கு உரத்தையோ மற்ற மருந்துகளையோ இட்டோம் என்றால் நல்ல தரமான மகசூல் கொடுக்கும்.

இது போன்று நம் உடலில் இருக்கக்கூடிய உணர்வுகளுக்கு துருவ நட்சத்திரத்தின் சக்தியை உரமாக… சத்தாக… நாம் ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

இப்போது… சொல்லாக யாம் சொல்லப்படும் பொழுது இது சாதாரணமாகத் தெரியலாம் ஆனால் இந்த உண்மைகளை நான் அனுபவித்து உங்களிடம் சொல்கிறேன்..

சொல்கிறேன் என்றால் என்னிலே அது விளைந்தது… சொல்லும் போது நீங்கள் அதைக் கேட்கின்றீர்கள்… உங்களுக்குள் பதிவாகிறது. நினைவு மீண்டும் அதை இழுக்கும் சக்தியாக வருகின்றது
1.இவ்வளவு தான்… இதில் வேறு சிரமம் ஒன்றுமில்லை
2.பெரிய அதிசயமும் இல்லை.

திட்டியவனைப் பதிவு செய்தால் அவனை நினைக்கும் போதெல்லாம் குழப்பம் வருகிறது. வியாபாரத்தில் ஒருவன் நம்மை ஏமாற்றி விட்டான் என்றால் உடனே நமக்கு ஆத்திரமும் கோபமும் வருகிறது.

இது போன்று தான்… எல்லாமே அந்தப் பதிவின் தொடர் வைத்துத் தான் நினைவாகி இயங்குகிறது.

ஆகையினால்…
1.மிக மிக சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தினுடைய ஆற்றலை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்
2.மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்… இதை எண்ணி நீங்கள் எடுத்துக் கொண்டு வந்தாலே போதுமானது…!

இன்றைய உலகில் நம்மை நாம் காத்துக் கொள்வதற்கு “ஆத்மீகம் ஒன்றுதான் வழி”

இன்று நாம் வாழும் வாழ்க்கையில் நாம் உண்ணும் உணவும் நாம் எடுக்கும் சுவாசமும் விஷம் கலந்ததாக உள்ளது. அதனால் பல புதிய வியாதிகளை நாம் ஏற்க வேண்டிய நிலையும்… அது நம்மைத் தாக்கும் நிலையும் உள்ளது.

இவை தவிர இன்றைய இக்கலியில் வாழ்ந்த நம்மில் வாழ்ந்த உடலில்லா ஆத்மாக்களின் எண்ணத்தில் செயலில் இருந்து நம்முடன் வாழும் மனிதர்களின் எண்ணத்தில் செயலில் இருந்தும் தப்ப வேண்டியுள்ளது.

இவைகளின் தாக்குதலில் இருந்தெல்லாம்…
1.நம்மையும் நம் மனோநிலையையும் நம் உடலையும் காத்திட வேண்டும் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து
2.ஆத்மீக வழியைப் பின்பற்றி வாழும் நிலைக்குப் பக்குவம் பெற்று வந்திடல் வேண்டும்.
3.நம்மை நாம் காத்து வாழ்வதற்கே இவ்வாத்மீகம் ஒன்றுதான் வழி.

ஓங்கி நிற்கும் “தனியான தெய்வம் ஒன்றில்லை…” என்பதனை உணர்ந்து… நாமும் நம்மைப் போல்தான் இவ்வுலகமும் மற்ற அனைத்து உலகங்களுமே என்றுணர்ந்திடல் வேண்டும்.

ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் அதனதன் உடல் தன்மை எந்தெந்த நிலை கொண்டெல்லாம் ஒவ்வொரு நாளும் செயல்படுகின்றதோ அந்நிலை கொண்டே இப்பூமித்தாயும் உயிருடன் உணர்வுடன் வாழ்கின்றாள்.

இப்பூமியில் வளர்ந்து வாழும் நாம் ஜீவன் கொண்டு எப்படி வாழ்கின்றோமோ அப்படியே தான் இவ்வுலகத் தாயும் வாழ்கின்றாள்… வளர்க்கின்றாள்… காக்கின்றாள்… அனைத்துச் சக்தியையும் வளர விடுகின்றாள்…!

உயிரணுக்கள் ஒவ்வொன்றுக்கும் எந்நிலை கொண்ட உணர்வுத் தன்மை உள்ளதோ அந்நிலையின் உணர்வுடனே இவ்வுலகத் தாயும் வாழ்கின்றாள்.

இவ்வுலகத் தாயின் உணவாக இவ்வுலகத் தாய்க்குச் சூரியனிலிருந்தும் மற்ற மண்டலங்களிலிருந்தும் கிடைக்கப் பெறும் அமுது தான் பல சக்திகள் கொண்ட இக்காற்றினில் வந்து சேரும் இப்பூமித்தாய் ஈர்க்கும் பல அணுக்களும் நீருமே.

இப்பூமித்தாய் உண்ணும் நீரும் அணுவும்தான் அவள் உண்டு அந்த அமுதை நமக்கும் அளிக்கின்றாள். அவள் பெற்ற செல்வங்களுக்கு இந்நீர் இல்லாவிட்டால் இவ்வுலகுக்கே ஜீவனில்லை.

இவ்வுலகிலுள்ள உலோகங்கள் தங்கம், தாமிரம், வைரம், நிலக்கரி இன்னும் பல நிலை கொண்ட உலோகங்களும் கல்லும் மண்ணும் மரமும் செடியும் எவையுமே
1.இப்பூமியிலிருந்து வளரும் எவையுமே நீர் இல்லாவிட்டால் வளர்ந்திடாது.
2.இப்பூமியும் நீர் இல்லாவிட்டால் வாழ்ந்திட முடியாது
3.நீரையே ஜீவனாகப் பெறும் இவ்வுலகிற்கு உணரும் தன்மை அனைத்தும் உண்டு.

இவ்வுலகில் பல இடங்களில் எரிமலையும் வெளிப்படுகின்றது பனி மலையும் வளர்கிறது பாலைவனங்களும் உள்ளன. “பாலைவனங்களுக்குச் சக்தி இல்லை…” என்று எண்ண வேண்டாம்.

பாலைவனங்கள் தான் மற்ற நிலையில் உள்ள சோலைகளுக்கு உயிர் நாடி. சோலைவனங்களும் மலைகளும் கடலும் சில பள்ளத்தாக்குகளும் இப்படி இவ்வுலகிலேயே ஒன்றுபோல் இல்லாமல் ஒவ்வொர் இடத்திற்கும் ஒவ்வொரு மாறுபட்ட தன்மைகளை இப்பூமித்தாய் தான் ஈர்த்து வெளிக்காட்டிடும் நிலையில் வளரச் செய்கின்றாள்.

பல சக்திகள் இக்காற்றில் சுற்றிக் கொண்டே உள்ளன.

அனைத்துச் சக்திகளுமே மனிதனுக்கெப்படி துடிப்பு நிலை சுவாச நிலை ஈர்த்து வெளிப்படுத்திக் கொண்டே உள்ளனவோ அந்நிலை போல்தான் இப்பூமியும் ஈர்த்துத் துடிப்புடனே வெளிப்படுத்திக் கொண்டே உள்ளது.

இவ்வுடலுக்கு நாம் உண்ணும் ஆகாரங்கள் அமிலமாகி அவை ஜீரணித்து நமக்கு வேண்டிய சக்தியைப் பெற்று நமக்கு வேண்டாத நிலையை வெளிப்படுத்துகின்றது.

நாம் எடுத்துக் உண்ட உணவையே இவ்வுடல் ஏற்று உதிரமாகவும் சிறுநீராகவும் மலமாகவும் காற்றாகவும் வியர்வையாகவும் ஆக்குகின்றது. இவற்றில் உதிர சக்தியை மட்டும் உடல் ஏற்று மற்றவைகளை வெளிப்படுத்துகின்றது.

அந்நிலை கொண்டுதான் இப்பூமித்தாய் ஈர்க்கும் நீரையும் அணுவையும் எந்தெந்த நிலைகளில் எச்சக்தி கொண்ட அணுவான அமிலத்தை ஈர்த்தனளோ அவ் ஈர்த்த சக்தியின் நிலை கொண்டே அச்சக்தியின் நிலை பெற்று அந்நிலையில் வளர்ச்சி பெறுகிறது.

அப்படி வளரும் நிலைகேற்ப சக்தியை அளிக்கும் (கொடுக்கும்) நிலையில் இப்பூமியின் உள் நிலையில் பல நிலை கொண்ட அமிலச் சக்திகள் தங்கி ஈர்க்குங்கால் அந்நிலையில் அவை சுற்றிக் கொண்டுள்ள தன்மையில் ஒரு சக்தியுடன் ஒரு சக்தி என்பது ஒரு நிலை கொண்ட அமிலத்துடன் மற்றொரு சக்தி நிலை கொண்ட அமிலம் மோதும் பொழுது (சத்ரு மித்ரு நிலை) ஒன்றுக்கொன்று ஏற்காத நிலையில் அவை வெடிக்கும் தன்மையில் தான் பூமி அதிர்வு ஏற்படுவதெல்லாம்.

நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு முதலிலேயே இன்றைய விஞ்ஞானத்தில் கண்டுபிடிக்கும் நிலையை உணர்ந்துள்ளார்கள்.

ஆனால் இந்நிலை அதிர்வு பூகம்பம் இவை எல்லாம் எந்நிலையில் ஏற்படுகின்றன…? என்பதனை உணர்த்தி விட்டால் இனி விஞ்ஞானத்திற்கு இன்னும் பல வழிகள் புலப்பட்டிடும்.

1.பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் அனைத்து சக்திகளையும்
2.இக்காற்றிலிருந்து இழுத்துத் தன் சுவாசத்திற்கு ஈர்த்திடும் ஆற்றல்
3.இந்த உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உண்டு.

ஆனால் அவையவை எடுத்த சக்தியின் நிலை கொண்டு குறைந்தும் அதிகரித்தும் மாறுபட்ட தன்மையுண்டு. உலோகங்களில் மாறுபட்ட தன்மை உள்ளது போல் ஜீவராசிகள் ஈர்த்து வெளிபடுத்திடும் சக்தியிலும் மாறுபட்ட சக்தி நிலையுள்ளது.

ஒன்று போல் ஒன்றில் சக்தி நிலை ஒன்றுபட்டு எவற்றுக்குமே இருந்திடாது. கனி வர்க்கங்களிலும் ஒரே மரத்தில் காய்க்கும் கனிக்கும் மாறுபட்ட சுவையும் மாறுபட்ட சக்தியும் மாறுபட்ட அளவு நிலையும் இருந்திடும் சிறிதளவேனும்.

ஒரே செடியில் பூக்கும் புஷ்பங்களின் நிலையும் இவை போன்றே. இவ்வுலக நிலையும் இவை போன்றே.

சுற்றிக் கொண்டே உள்ள உலகில் அவை ஈர்த்து வெளிப்படுத்திய சக்தியில்தான் எத்தனை மாற்றங்கள்…? எத்தனை நிலை கொண்ட தன்மைகள்…?

இவை போல்தான் ஒவ்வொரு மண்டலத்தின் நிலையுமே.

இவ்வான மண்டலத்தின் நிலையும் ஜீவன் கொண்டேதான் சுற்றிக் கொண்டு உள்ளது. பால்வெளி மண்டலம் சூனிய மண்டலம் என்றெல்லாம் செப்புகின்றோம். எவை சூனிய மண்டலம்…?

1.சூனிய மண்டலம் என்ற தனித்த மண்டலம் ஒன்றில்லை.
2.இப்பால்வெளி மண்டலம் என்ற மண்டலத்திற்கே ஜீவன் உண்டு.

September 21, 2023

தியானம் செய்யச் செய்ய “ஒவ்வொரு நிமிடமும்… நம்மை எது இயக்குகிறது…?” என்று அறிந்து கொள்ள முடியும்

மனிதனின் வாழ்க்கையில் தொழிலில் முன்னேற்றம் அடைந்தால் “அது சந்தர்ப்பம் தான்…”

ஆனால் வளர்ச்சி அடையும் பொழுது நான்கு பேர் வந்து ஏதாவது ஆசையைக் காட்டியோ அல்லது நம் மீது வெறுப்பாகிக் கேவலமாகப் பேசும் நிலையோ வந்தால் அந்தச் சந்தர்ப்பம் நம் நினைவுகள் அனைத்தும் அவன் மீது சென்றுவிடுகிறது.

அந்தச் சந்தர்ப்பம் என்ன செய்கிறது…?
1.அவன் மீது கோபம் வெறுப்பு உண்டாக்குகிறது.
2.நம் தொழிலைச் சீராகப் பார்க்க முடியாது போய் விடுகிறது
3.நல்ல குணங்களையும் பாதுகாக்க முடியாது போய் விடுகிறது.

வேதனை என்ற உணர்வுகளை உடலில் அதிகமாகச் சேர்த்த பின் நல்ல அணுக்கள் மயக்கப்பட்டு விடுகின்றது சிந்திக்கும் வலிமை இழந்து விடுகின்றது

இந்த உணர்வுகள் அதிகமாகி இருதயம் பலவீனம் ஆகிறது. இருதயம் பலவீனமான பின் அடுத்து எதையுமே வலுவாக எண்ண முடியாது போய் விடுகிறது.

இப்படி வரக்கூடிய நிலைகளை மாற்றுவதற்குத் தான் உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலு ஏற்றும்படி சொல்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.முதலில் கண்ணின் நினைவை உயிரான ஈசனிடம் செலுத்த வேண்டும்.
2.உயிரான ஈசனிடம் வேண்டி… துருவ நட்சத்திரத்தின் சக்தியை அதன் வழி ஈர்க்கும் தன்மையாகக் கொண்டு வர வேண்டும்.

பின் கண்ணின் நினைவை உடலில் உள்ள இரத்தங்களிலே செலுத்தி இரத்தம் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்தத்தில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும்… உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று எண்ணிப் பழக வேண்டும்.

அதற்குப் பின் சிறு குடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.கொஞ்சம் கொஞ்சமாக உறுப்புகளுக்கு அந்தச் சக்தியை வலு சேர்க்கும் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.
2.ஏனென்றால் எல்லா உறுப்புகளுக்கும் உடனடியாக அதை எடுக்கக்கூடிய பவர் கொடுக்கின்றோம்.

உணவாக உட்கொள்ளும் சாப்பாட்டுடன் சேர்த்த கொழுப்புச் சத்து சக்கரைச் சத்து உப்புச் சேர்த்து அதை பிரிக்கும் தன்னை பெற்றது நம்ம்ய்டைய கணையங்கள்.

ஆனால் அது சரியாகப் பிரிக்கவில்லை என்றால் கொழுப்புச் சத்து இரத்தத்துடன் கலந்து… இரத்தக் குழாய்கள் எல்லாம் அடைத்து விடுகின்றது.

சர்க்கரையும் உப்பையும் சீராகப் பிரிக்கவில்லை என்றால் உறுப்புகள் பலவீனம் அடைந்து விடுகிறது வலுவான அணுக்களாக இருந்தால் அதையெல்லாம் சீராகப் பிரிக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணையங்கள் முழுவதும் படர்ந்து அது சீராகப் பிரிக்கும் சக்தி பெற வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.

குளத்தில் இருந்து எடுக்கக்கூடிய தண்ணீரை பெரிய கற்கள் அப்புறம் சிறிய கற்கள் அப்புறம் குறு மணலைப் போட்டு வடிகட்டிச் சுத்தமான நீராகக் கொண்டு வருவது போல் தான் நம் கல்லீரலின் இயக்கமும்.

நாம் சாப்பிடும் ஆகாரம் கணையங்களில் இருந்து வடிகட்டி வரும் ரசத்தைக் கல்லீரல் மண்ணீரல் பிழிந்து வடிகட்டி நல்ல இரத்தமாக மாற்றுகின்றது. அது சீராக வடிகட்ட துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலு ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

1.சுவாசித்தது… நுரையீரலில் எது படுகின்றதோ
2.”அந்த மூச்சு” அதற்குத் தகுந்த மாதிரித் தான் வெளியில் இருந்து இழுக்கும்.

வேதனை வெறுப்பு எல்லாம் சுவாசத்தின் வழி வந்தது என்றால் கல்லீரல் மண்ணீரலைத் தாண்டி நுரையீரலுக்கு வந்தால் “படக்..படக்…” என்று அடிக்கும்.

அப்பொழுது மூச்சுத் திணறலாகும்…! காரணம் நாம் “சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம்” ஒரு நண்பர் வந்து… என் பையன் சொன்னபடி கேட்காமல் சேட்டை செய்கின்றான்… தொழிலில் என்னை ஏமாற்றுகிறார்கள்… உடம்பு சரியில்லை… என்று அவர்கள் கஷ்டத்தை எல்லாம் சொல்லட்டும்.

அதை எல்லாம் உ..ம் கொடுத்துக் கேளுங்கள். அடுத்த உங்கள் மனதில் என்னென்னவெல்லாம் ஓடுகிறது…? என்று பாருங்கள்.
1.தியானத்திற்கு முன்னாடி இதெல்லாம் தெரியாது
2.தியானத்தில் இப்பொழுது உணர முடியும்… நம்மை எது இயக்குகின்றது…? என்று அறிந்து கொள்ளலாம்.

நண்பர் தன் கஷ்டத்தைச் சொல்கிறார்கள் என்றால் உடனே சுதாரித்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

இந்தப் பழக்கம் அவசியம் நமக்கு வரவேண்டும்.

1.மேலே அழுக்குப் பட்டபின் குளித்துச் சுத்தமாக்குவது போன்று…
2.துணியில் உள்ள அழுக்கைச் சோப்பை போட்டு நீக்குவது போன்று
3.ஆன்மாவில் உள்ள அழுக்கை நாம் தூய்மைப்படுத்தி ஆக வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் உடல் உறுப்புகள் எல்லாவற்றிலும் வலு ஏற்றி நம்மை அறியாது உட்புகும் அசுத்தங்களை வடிகட்ட வேண்டும்.

நம் எண்ணம் சொல் செயல் தூய்மை பெறும்… வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையும் அடைய முடியும்.

September 20, 2023

உணவைப் போலவே “மருந்தை உட்கொண்டு வாழ்கிறார்கள்” இன்று வாழும் மனிதர்கள்…!

நல் உணர்வுடைய நற்செல்வங்களை (குழந்தைகளை) நாம் பெற்றே சமமான நிலையில் வாழ்ந்திட்டாலும்… வாழும் நிலையில் சூழ்ந்துள்ள அசுத்தத் தன்மை வாய்ந்த மூச்சுக் காற்றுகளும் நல் நிலையில் வாழ்பவரையும் வந்து தாக்குகின்றது. ஆரோக்கிய நிலையும் மாறுபடுகின்றது.

1.இக்காற்றில் கலந்துள்ள சக்தியில் நச்சுத்தன்மையின் வீரியம் தான் இப்பொழுதுள்ள நிலையில் ஓங்கி நிற்கின்றது
2.இதிலிருந்து மீண்டு ஜெப நிலை பெற்றே வாழ்ந்திட வேண்டும்.

சில உபாதைகள் இக்காற்றிலிருந்து நாம் ஈர்க்கும் சுவாசத்துடன் நம்மை வந்து அணுகத்தான் செய்கின்றன. அந்நிலையிலிருந்து நாம் மீள… சில வைத்திய முறைகளை ஏற்க வேண்டியுள்ளது.

இக்காலநிலை மாறும் தன்மையிலும் இவ்வுடல் நிலை மாறும் தன்மையிலும் சில நிலை கொண்ட மாற்றங்கள் உடல் நிலைக்கும் வரத்தான் செய்கின்றன.

இந்நிலையில் இருந்தெல்லாம் நம் உடல் ஆரோக்கியம் பெறச் சாதாரண வாழ்க்கை நிலையிலுள்ள நாம் சில மருந்துகளை உட்கொள்ள வேண்டியுள்ளது.

சித்தர்களும் முனிவர்களும்… ஞானிகளும் ரிஷிகளும் போல் இக்காற்றிலிருந்தே உடலில் ஏற்படும் பிணிகளை மாற்றும் சக்தி கொண்ட காற்றினை ஈர்த்து வாழும் பக்குவ நிலை பெற்றவர்கள். அத்தகைய நிலையை நாமும் பெறப் பழகிக் கொள்ள வேண்டும்.

சிறு குழந்தைகளுக்கும் சரி… பிறந்த சிசுவுக்கும் சரி.. தாயின் கர்ப்பத்திலிருந்து இவ்வுலகில் வாழ வந்த நாட்களில் அதைப் பேணிப் பாதுகாக்க…
1.பிறந்த நாளிலிருந்தே சில மருந்துகளை நம் முன்னோர்கள் அதற்கு ஊட்டித்தான்
2.வளரும் பக்குவத்தை நமக்கும் வழிகாட்டித் தந்தார்கள்.

ஆனால் இன்று வாழும் மனிதர்களோ… “உணவைப் போலவே மருந்தையும்” உட்கொண்டே வாழும் நிலையில் உள்ளார்கள்.

ஏனென்றால் இக்காற்றின் அசுத்தத் தன்மையினால் வளரும் பயிரின் செழிப்பும் குறைந்து விட்டது. மக்கள் தொகையும் பெருகி விட்டது.

நாம் உண்ணும் உணவுத் தானியங்களைப் பெருக்கிட வேண்டும் என்றால்… இன்றைய விஞ்ஞான உலகத்தில் பல இரசாயன நிலை கொண்ட உரங்களைச் செலுத்தியே உணவுத் தானியங்களின் உற்பத்தியை வளரச் செய்து நாம் அதை உண்ண முடிகின்றது.

1.இயற்கையின் உரங்கள் செலுத்தி வளரச் செய்த காலங்கள் மாறி
2.செயற்கையான உரங்கள் செலுத்தித்தான் இன்றைய உணவு உற்பத்தி நிலையை நாம் பெற முடிகின்றது.

இந்த இரசாயன உரங்களை ஈர்த்து வளர்ந்த பயிர்களில் இருந்து நாம் பெற்று உண்ணும் தானியங்களின் மூலம் நம்மையும் அந்நிலை கொண்ட சத்து நிலை (இரசாயணங்கள்) வந்து தாக்குகின்றது.

இயற்கையில் வளரும் தன்மை இன்றுள்ள இக்கால நிலையில் முடியாததினால் இச்செயற்கையின் வளர்ச்சியில் வந்த செயற்கையான தானியத்தையே உட்கொள்ள வேண்டியுள்ளது.

ஆகவே செயற்கையுடன் ஒன்றி நாம் வாழ்வதால் இவ்வுடல் மாற்றத்திற்கு இன்று புதிய புதிய மருத்துவத்தைச் செயல்படுத்தி நமக்கு ஏற்கத்தான் வேண்டியுள்ளது.

1.நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டிய பல மூலிகைகளை இன்று இக்கால நிலையில் தவற விட்டுவிட்டோம்
2.மூலிகையில் உள்ள மகத்துவத்தை நாம் எடுக்கும் நிலையில் இல்லை
3.அதை ஏற்கும் மனோ நிலையும் நம்மிடம் இல்லை.

சித்தர்கள் நமக்கு உணர்த்திய பல மூலிகைகளை நாம் பெறுவதற்கும்… இன்றைய மனிதனின் மன வளர்ச்சியில் எதையும் துரித நிலை கொண்டு செயலாக்கும் மன வளர்ச்சியில்… “இன்றைய மனிதனுக்குப் பொறுமை நிலையும் இல்லை…!”

இதில் வந்த வினைச் செயலால் தான் இன்று இத்தேசத்தில் அன்று உணர்த்திய பல உன்னத மூலிகைகளின் பொக்கிஷமெல்லாம் மறைந்து சிதைந்து விட்டதின் நிலை.

ஞானத்தையும் தியானத்தையும் தெய்வீகத்தையுமே மிஞ்சும் “விஞ்ஞானம்…” என்னும் துரித நிலையில் சென்று கொண்டுள்ளான் இன்றைய மனிதன்.

அன்றன்று தேவையை மட்டும் உணர்ந்து வாழும் மனிதன் தன் ஆத்மா என்ற ஆண்டவனை எண்ணி வாழ்வதில்லை.

துரிதமுடன் செயற்கைக்கு அடிமைப்பட்ட இன்றைய மனிதனால்
1.இவ்வாத்மீக வழியும் ஜெப வழியும் அறிந்து வாழ்ந்திட்டால்
2.தன் வாழ்க்கையின் முழுமை எங்குள்ளது…? என்பதனையே அறிந்திடலாம்
3.காற்று மண்டல நஞ்சிலிருந்து விடுபடவும் செய்யலாம்…!

குரு இல்லாத வித்தை வித்தையாகாது… ஏன்…?

குருநாதர் அன்று சூரியனைப் பார்க்கும்படி சொல்லியிருந்தார். அதைத் தான் நானும் சொல்லியிருந்தேன். காரணம் அன்று கதிரியக்கங்கள் ஜாஸ்தியாக வெளிப்படவில்லை.

ஆனால் மனிதன் செயற்கைக்காக வேண்டி அதை அதிகமாகப் பயன்படுத்தி அதனின் கசிவுகள் வெளிப்பட்ட பின்
1.அது எல்லாமே சூரியன் ஈர்ப்புக்குள் சென்றுவிட்டது… அதனால் அது கரும்புகைகளைக் கக்க (SUN SPOTS – SUN FLARES) ஆரம்பித்தது.
2.அப்படிக் கக்கும் நேரத்தில் அதைப் பார்த்தோம் என்றால் நம் உடலில் அதனின் விஷத் தன்மைகள் புகுந்துவிடும்
3.அதனால் தான் யாரும் சூரியனைப் பார்க்கக்கூடாது என்று யாம் பின்னாடி சொன்னது.

அதே சமயத்தில் அன்று ஆரம்பத்தில் 27 நட்சத்திரங்களையும் பார்க்கும்படி சொல்லி இருந்தேன்.
1.முதலில் நான் (ஞானகுரு) நேரடியாக அதை எடுத்துக் கொள்வது… அதற்குப் பின் உங்களுக்குள் அதைப் பாய்ச்சுவது
2.நான் எடுத்து அலைகளாக அனுப்பியதை… நீங்கள் எண்ணி எடுக்கப்படும் பொழுது உங்களுக்கு ஒரு தொந்தரவும் செய்யாது.

ஆனால் விட்டுவிட்டு… நேரடியாக நட்சத்திரங்களின் சக்தியை நாங்கள் எடுக்கிறோம் என்றால் உடம்பெல்லாம் அரிப்பு ஆகிவிடும்… எதிர் நிலையாகிவிடும்.

ஆரம்பத்தில் நட்சத்திரங்களைப் பார்க்க வேண்டுமென்று சொன்னவுடனே “எம்மை விட்டுவிட்டு…” பவானியில் சில பேர் அதை எடுக்கப்படும் பொழுது அவர்களுக்கு உடல் எல்லாம் அரிப்பு ஆகிவிட்டது.

பவானியிலிருந்து நான் வெளியே சென்றவுடன் நிறையப் பேருக்கு அது உண்டானது. ஏனென்றால் “நாம் சொன்னோம்” என்று சொல்லிக்கொண்டு எடுக்க ஆரம்பிக்கின்றார்கள்.

1.ஆனால் நட்சத்திரங்களின் சக்தியை நான் எடுத்து அதனுடைய வீரியத்தைத் தணித்து
2.உங்களிடம் அதை வாக்காகச் சொல்லிப் பதிவு செய்து… அந்த உணர்வை எடுக்கும்படிதான் சொல்லிக் கொடுக்கின்றோம்.
3.அதாவது என்னிடம் விளைந்ததை நீங்கள் எடுத்தால் அது உங்களைப் பாதிக்காது
4.அந்தச் சக்தியைப் பெருக்க ஏதுவாக இருக்கும்… தொல்லை கொடுக்காது.

இப்படி எல்லா வகைகளிலும் உங்களுக்கு ஒத்தாசையாக அந்த உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்குத் தொடர்ந்து இந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றோம்.

நோயினால் அவதிப்பபடுபவர்களைப் பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த சமயத்தில் நோய்களை மாற்றிடும் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து… முறைப்படி சொல்லுங்கள்… உங்கள் நோய் நீங்கிவிடும்..! என்று இதன் வழி செயல்படுத்தினால் உங்களை அந்த நோய் பாதிக்காது.

சாமி தான் சொல்லிவிட்டார் அல்லவா…! ஈஸ்வரா குருதேவா என்று எண்ணிவிட்டு
1.அடுத்தவர் உடலில் இருக்கக்கூடிய நோயெல்லாம் போக வேண்டும் என்று சொன்னால் அல்லது பிரார்த்தனை செய்தால்
2.அவர்களின் நோய் உங்களுக்கு வந்துவிடும்… தெரியாமல் அதிலே போய் நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது
3.அதற்குத்தான் ஆயிரம் தடவை உங்களுக்கு ஞாபகப்படுத்துவது.

எதைக் கேட்டாலும் அடுத்த கணம் “அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்…” என்று யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சக்தி செய்து தூய்மையாக்க வேண்டும்.

அதற்குப் பின் நோயாளியைப் பார்த்து துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி நீ பெறுவாய்…! அந்தச் சக்தியால் உனக்குள் இருக்கக்கூடிய நோயை உன்னால் நீக்க முடியும்…! என்று இப்படித்தான் அவர்களுக்குத் தெளிவாக்க வேண்டும்.

ஆனால்
1.வேதனைப்படுகின்றார் மிகவும் சிரமப்படுகின்றார் ஈஸ்வரா…! என்று நீங்கள் எண்ணி
2.அவர் நோயெல்லாம் குறைய வேண்டும் என்று “ஏங்கினால்” அவர் நோய் உடனடியாக உங்களைத் தாக்கும்.

இப்படிச் செய்யக்கூடாது…!

சில பேர் இது போன்று தெரியாமல் உள்ளே சென்று சிக்கிக் கொள்கின்றார்… அவசரத்தில் இப்படிச் செய்து விடுகின்றனர். இப்படி வரக்கூடாது என்பதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.

பாசமாக இருக்கும் நண்பரோ உறவினரோ குழந்தைகளோ திடீரென்று அவர்களுக்கு எதிர்பாராது ஒரு விபத்தாகி விட்டது என்றால் உடனே
1.“நேற்றெல்லாம் நன்றாக இருந்தாரே… நல்ல மனிதருக்கு இப்படி ஆகிவிட்டதே…” என்று தான் எண்ணுகிறார்கள்.
2.ஆத்ம சுத்தி செய்வதை மறந்து விடுகின்றார்கள்;
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுவதை மறந்து விடுகின்றார்கள்.
4.அவர் அடிபட்டு விட்டாரே என்று எண்ணி அந்த உணர்வைத் தான் “நேரடியாக” எடுத்துக் கொள்கின்றார்கள்.

ஆனால் அது நமக்குள் வராதபடி முதலில் தடுத்து நிறுத்திப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் அது படர வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விபத்தில் அடிபட்டவரின் உணர்வு முதலில் நம்மை இயக்கி விடாதபடி இப்படித் தடைப்படுத்தியே ஆக வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அடிபட்டவர் உடல் முழுவதும் படர வேண்டும். வேதனையிலிருந்து அவர் மீண்டு நல்ல உணர்வு பெறக்கூடிய தகுதி பெற வேண்டும். அவருக்குப் பூரண குணம் கிடைக்க வேண்டும் என்று நம்மைத் தூய்மைப்படுத்திய பின் இப்படிச் சொல்ல வேண்டும்.

1.இது சாதாரணமானது இல்லை…
2.உயர்ந்த சக்தியாக அவர் நுகர ஆரம்பிக்கும் பொழுது இது அவருக்குள் இயக்கச் சக்தியாக மாறும்.
3.அடிபட்டதிலிருந்து சீக்கிரமே விடுபடக்கூடிய சக்தியும் அந்த நம்பிக்கையும் அவருக்கு வரும்.

இதை நீங்கள் செய்து பார்க்க வேண்டும்.

கடினமானதாக இருந்தால்… கூட இரண்டு தடவை செய்தால் அவருடைய நோய்களையோ குறைகளையோ வேதனைகளையோ நீக்குவதற்கு நிச்சயம் இது உதவும்.

“உங்களுக்கு இந்தச் சக்தி உண்டு” என்று சொல்கின்றோம்…!

ஆனால் தவறிப் போய் அவருடைய வேதனையையும் துன்பத்தையும் நீங்கள் எண்ணி எடுத்து விடக்கூடாது ஆத்ம சக்தி செய்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்; இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்; இந்தச் சக்தி அவருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணி விட்டு
1.இதே மாதிரி நீங்கள் செய்யுங்கள்
2.உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்கும்… உடல் நலமாகும் என்று
3.இப்படித்தான் நாம் நோயுற்றவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இது போன்ற ஒரு பழக்கத்திற்குக் கட்டாயம் நாம் வந்தே ஆக வேண்டும்.

ஏனென்றால் இந்த மனித வாழ்க்கையுல் பிறரின் கஷ்டங்களை எல்லாம் நாம் கேட்டுத்தான் ஆக வேண்டி இருக்கின்றது. அப்போது உடனே சோர்வடைந்து விடுகின்றோம்.

ஆனால் இதை மாற்றி உங்களுக்குள் திருத்தி அந்தச் சோர்வை நீக்க வேண்டும். “அந்தச் சக்தியைத் தான் யாம் இப்போது கொடுக்கின்றோம்...”

நல்லதாகக் கூடிய சக்தியை நீங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதற்குத் தான் இவ்வளவு பெரிய சக்தியை உங்களுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி அதைப் பெறக்கூடிய தகுதியாக ஏற்படுத்துகின்றோம்.

இந்தப் பழக்கத்தை நீங்கள் சீர்படுத்திக் கொண்டு வருதல் வேண்டும்..

பிறக்கும் குழந்தைகள் எல்லாம் “அறிவின் சுடராகப் பிறக்க வேண்டும்…” என்று ஆசைப்பட வேண்டும்

"கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்…" என்ற பொருள்படி கம்பராமாயணத்தை கம்பர் எழுதும்கால் அவரின் எண்ணம் நினைவு எல்லாமே அவர் எவ்வெண்ணத்தை ஈர்த்துச் செயல்படுத்துகிறாரோ அவ்வெண்ணத்தின் சுவாசக் காற்றுத்தான் அவர் உள்ள இடம் தனில் சுற்றிக் கொண்டிருக்கும்.

எவ்வில்லத்தில் எவ்வெண்ணத்தின் செயலுடன் துரிதமாகச் சுற்றிக் கொண்டுள்ளதோ அந்த நிலைக்கொப்பத்தான் அந்தந்த இடத்தில் உள்ள எல்லா நிலைகளும் நடந்திடும்.

அவ்வில்லத்தில் வாழ்பவரின் எண்ணமும் இவ்வெண்ணத்தின் சுவாசக் கலப்பினால் ஒவ்வோர் இல்லத்திலும் எச்சக்தியின் எண்ண நிலை ஓங்கி நிற்கின்றதோ அந்நிலை கொண்ட செயல்தான் நடந்திடும்.

கவி பாடும் கவிஞரின் இல்லம் மட்டுமல்ல…!
1.ஒவ்வொரு குடும்ப நிலையிலும் அக்குடும்பத்தில் உள்ள தனித்தன்மையின் நிலை
2.அக்குடும்பத்தில் உள்ளோரின் நிலையும் ஒன்றுபட்டதாகவே இருந்திடும்.

பிறக்கும் குழந்தைகளில் நல்லறிவு கொண்ட குழந்தைகளும்… சில குழந்தைகள் நல்லறிவு வளர்ச்சி பெறாமல் பிறப்பதுவும் கண்டிருப்பீர்.

முன் ஜென்மத்தில் செய்த வினைப்பயன் மட்டும் கொண்டு அனைத்து குழந்தைகளும் பிறப்பதில்லை. பிறக்கும் ஒவ்வொரு சிசுவுக்கும் முன் ஜென்மத் தொடர் தொடர்வதில்லை.

ஆதியில்… ஆதியில் என்பது இவ்வுலகம் கல்கியில் பிறந்த நாளில் இருந்த உயிர் அணுவிற்கும் இப்பொழுதுள்ள உயிரணுவிற்கும் பல கோடி கோடி நிலைகள் அதிகரித்துள்ளன.

அந்நிலையில் இப்பொழுது வாழும் அனைவருக்குமே முன் ஜென்மத்தில் வாழ்ந்ததின் தொடர் நிலைகள் எந்நிலையில் வந்திடும்…?

புதிய புதிய உயிரணுக்கள் தோன்றிக் கொண்டே உள்ளன. முன் பாடத்தில் சொல்லியபடி ஒரு மனிதன் இறந்த பிறகு அவன் உடலை அடக்கம் செய்த நிலையில் அவ்வுடலில் இருந்து பல உயிரணுக்கள் தோன்றி சுற்றிக் கொண்டு உள்ளன என்றேனல்லவா…?

1.அந்நிலை கொண்ட உயிரணுக்களெல்லாம் தாயின் கர்ப்பத்திற்கு ஜீவன் பெற வந்திடும் பொழுது
2.அவ்வுயிரணுக்களுக்கு எண்ண நிலைகளும் செயல் திறமையும் முழுமை பெறாததால்
3.அத்தகைய உயிரணுக்கள் தாயின் கர்ப்பத்திற்கு வரும் பொழுது தான்
4.சில குறைப் பிரசவங்களும் கருச்சிதைவுகளும் உண்டாவதெல்லாம்.

இவ்வுயிர் அணுக்கள் தன் ஜீவன் பெறும் துடிப்பில் எத்தாயின் கர்ப்பத்திற்கும் வந்து பிறக்கும் நிலையில் பிறப்பிற்கு வருகின்றது.

மனித உடலிலிருந்து உண்டான உயிரணுக்கள் எல்லாமே மனித சுவாசம் நிலை கொண்ட மனித கர்ப்பத்திற்குத்தான் வருகின்றது. மிருக நிலையும் இதைப் போன்ற நிலை கொண்டதுவே.

இப்புதிய உயிரணுக்கள் ஜீவன் பெற தாயின் வயிற்றில் உதித்து வளரும் பொழுது… எக்கரு எத்தாயின் வயிற்றில் வளர்கின்றதோ…
1.அத்தாயின் நிலை சமமான நிலை கொண்ட சஞ்சலம் கொள்ளாத நிலையிலிருந்தால்
2.அத்தாயின் ஆரோக்கிய நிலையும் நல் நிலையிலிருந்தால்
3.அத்தாயின் வயிற்றில் உள்ள கருவும் அத்தாயெடுக்கும் சுவாச நிலை கொண்ட புத்தியின் வளர்ச்சி நிலைக்கும்
4.அத்தாயின் வாழ்க்கையுடன் கலந்துள்ளவரின் சுவாச நிலைக்கும் அக்கருவையும் தன்னுள் வளர்த்துக் கொண்டு
5.நல் நிலை கொண்ட சிசுவாக வந்து பிறக்கின்றது.

இன்னும் பல சிசுக்கள் தாயின் கர்ப்பத்தில் உள்ள பொழுதே அத்தாயின் எண்ண நிலை கொண்டு அந்நிலையின் தாக்குதலினால் இச்சிசுக்கள் பிறந்தவுடன் பிறவியிலேயே பல நிலை கொண்ட வியாதியின் அணுவைத் தாங்கியே பிறக்கின்றது.

இவ்வுலகத்தாய் பெற்றெடுத்த தாயானவள் “தான் பெற்றெடுக்கும் சிசுக்களை…” நல்ல அறிவுள்ள பொக்கிஷமாகப் பெற்றெடுக்க சூலுண்ட நிலையில் உள்ள ஒவ்வொரு தாயும் தன் எண்ணத்தை அன்புடனும் ஆசையுடனும் பண்பாக்கிச் சம நிலையில் கொண்ட நிலையில் வாழ்ந்தே “அறிவுடன் கூடிய அன்புச் செல்வங்களை பெற்றெடுத்து மகிழ்ந்திடுங்கள்…”

சூலுண்ட நிலையில் அன்பு ஆசை பண்பு என்ற ஆண்டவன் ஜெபம் கொண்ட அமுதுண்டே அழகுடனே பெற்றிடுங்கள் அரும் செல்வங்களை.

1.ஆண்டவன் வந்து அளிப்பதல்ல நாம் பெறும் செல்வங்களை…!
2.நம்மை நாம் பக்குவம் கொண்டு வாழ்ந்திட்டாலே அவ்வாண்டவனின் செல்வம் நம்முள் வந்து பிறந்து
3.நாம் பெற்றெடுக்கும் செல்வமும் அவ்வாண்டவனின் சக்தி கொண்டு நமக்கு வந்து பிறக்கும்.
4.நமக்குப் பிறக்கும் செல்வங்கள் எல்லாம் “அறிவின் சுடராய் வந்து பிறந்திட வேண்டும்…” என்ற ஜெப நிலை கொண்டே பெற்றெடுங்கள்.