ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 30, 2019

நமது எல்லை எது...?


கடலுக்குள் ஒடங்களில் செல்லப்படும் போது எதை எல்லையாக வைக்கின்றனரோ எத்தனையோ அலைகள் வந்தாலும் அதிலிருந்து மீட்டு அந்த எல்லையைப் போய் அடைகின்றனர்.

அதைப் போல தான் மனித வாழ்க்கையில் எத்தனையோ விதமான கோபம் சலிப்பு வேதம் குரோதம் வேதனை போன்ற அலைகள் மோதிக் கொண்டே இருக்கிறது.

அப்பொழுது எந்தக் குணத்தைக் கவர்ந்து கொள்கிறோமோ அந்தக் கவர்ந்து கொண்ட சக்தி தான் “வசிஷ்டர்...” என்பது. அது நம் உடலாக ஆகப்போகும் போது “அது நம்முடன் இணைந்து வாழ்கின்றது...!” என்று பொருள்.

1.வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து அதை நாம் நுகர்ந்தால் “வசிஷ்டர்...!”
2.அதாவது வேதனையான சக்தியை நாம் அருந்தப்படும் பொழுது
3.நம்முடன் இணைந்து (அருந்ததியாக) வேதனை என்ற உணர்வைத்தான் உருவாக்கும்.

அதே போல ஒரு குடும்பத்தில் தாயோ தந்தையோ உடலை விட்டுச் சென்றால் விட்டால் நாளை என்ன செய்யப் போகிறோம்..? என்று வேதனையைத் தான் நாம் படுகிறோம்.

இதைப் போன்ற துன்பங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற அருள் ஒளி கொண்டு அதைப் பிளக்க வேண்டும்.
கணவனும் மனைவியும் எந்தக் காரணத்தைக் கொண்டும் தீமைகள் தமக்குள் உருவாகாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என்ற உணர்வைப் பெற்று வசிஷ்டர் அருந்ததி போல வாழவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நளாயினி போன்று கணவன் மனைவியை மதித்து நடப்பதும் மனைவி கணவனை மதித்தும் நடத்தல் வேண்டும். இவ்வாறு நடந்தால் இரு மனமும் ஒன்றுகின்றது.

சாவித்திரி என்ன செய்கின்றாள்? எமனிடம் இருந்து தன் கணவனை மீட்டினாள். ஆக இன்னொரு பிறவிக்குப் போகாதபடி இரு உயிரும் ஒன்றென இணைந்தவர்கள் தான் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

1.இரு மனமும் ஒன்றி...
2.இரு உணர்வும் ஒன்றி...
3.இரு உயிரும் ஒன்றி...
4.அந்தப் பேரருள் என்ற உணர்வை வளர்த்து
5.இல்லற வாழ்கையில் இருள் என்ற நிலையை அகற்றி
6.நஞ்சு என்ற நிலைகளை அகற்றி நஞ்சை அகற்றிடும் பெரும் சக்தி பெற்று
7.இனிப் பிறவி இல்லா நிலைகள் அடையும் அருள் மார்க்கத்தைத்தான் அன்று ஞானிகள் நமக்குக் காட்டினர்.

எங்கள் குடும்பத்தில் மகரிஷியின் அருள் சக்தி படரவேண்டும் எங்கள் குடும்பத்தில் அறியாது தீமைகள் அகல வேண்டும். எங்கள் குழந்தைகள் கல்வியில் ஞானம் பெற வேண்டும். கருத்தறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும். உலக ஞானம் பெற வேண்டும். உலகைக் காத்திடும் அருள் ஞான குழந்தைகளாக வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அந்த அருள் ஒளி கொண்டு வாழ்க்கையில் வரும் தீமைகள் எல்லாவற்றையும் விலக்கி அருள் உணர்வை வளர்த்து பிறவிப் இல்லா நிலை என்ற நிலையை அடைய நாம் பிராத்திப்போம்... தியானிப்போம்...!

இந்த உடலுக்குப் பின் நாம் அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைவதே நமது எல்லை!

“நக்கீரர் அருந்திய...” வலம்புரிச் சங்கின் நீர் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


உயிரணுக்கள் தன் எண்ணச் செயலுக்கொப்ப வீரியம் கொள்ளும் நிலையே நீர் சக்தியில் (கடல் நீரில்) பலவித உயிர் சக்திகள் உருவாகும் செயல் நிலையில் எல்லாம் தனித்துவம் ஒன்று உண்டு.

1.ஆயிரம் ஆண்டுகள் நீர் சக்தியின் தொடரில்
2.சுவாசத்தின் சக்தி கொண்டு பெறப்படும் அந்த அரிய அமில குணங்கள்
3.சூரிய சக்தியின் பலனையே ஈர்க்கும் “சங்காக...!” கடலிலே உருப்பெறுகின்றது.

“சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!” என்பார்கள். அதி உஷ்ணத்திலும் அதி உஷ்ண அக்கினி ஜுவாலையிலும் தன் குணம் மாறாமல் (தன்னையே) தன் அமில குணத்தையே காத்துக் கொள்ளும் திட வீரிய அமில குண அணுக்களின் சேர்க்கை அத்தகைய சங்கிலே உண்டு.

அத்தகைய சங்கின் குணத்தைப் போல் நம்முடய குணம் இருக்க வேண்டும்.

நீரானாலும் சரி நெருப்பானாலும் சரி சங்கின் அமில குணம் மாற்றமடையா சிறப்பு ஒன்று தான்.

1.ஆயிரம் காலங்களுக்கு மேல் வாழும் பொக்கிஷமாம் அந்த உயிர்ச் சக்தி
2.தன் நிலையில் பரிபூரணத்துவம் பெற்று விட்டு வெளிக் கிளம்பும் சூட்சமத்தில்
3.அந்தச் சங்கு - நீர் மேல் மிதக்கும் முக்கியமான ஈர்ப்பின் செயலை அறிந்துணர வேண்டும்.

நக்கீரனைக் கேட்டால் சொல்வார்! சங்கறுக்கும் குலத்தில் பிறந்து வாழ்ந்து புலமை பெற்ற அவரது திட எண்ணம் வீரியத்தின் குணம் எங்கிருந்து வந்தது..? வலம்புரிச் சங்கின் நீரை அவர் அருந்தினார்.

வலம்புரிச் சங்கில் உள்ள விசேஷ குணம் என்ன...?

வாக்தேவி நட்சத்திரத்தின் அமில குணம் உயரிய நாதமாகி... ஓங்காரமாகச் சக்தியாக உயிர் சக்தியுடன் ஒன்றி... நாபிக் கமலம் தொட்டு ஓங்கி உயர் சக்தியாகப் பிசிரற்று வெளிப்பட... சங்கு நீர் அமிலக் குணம் நாம் விண்ணுலகம் செல்ல வழி காட்டும்...! சூட்சமப் பொருளை மனதில் கொள்க...!
1.நக்கீரனை எண்ணி சங்கின் குணத்தைப் பெற வேண்டும்.
2.அந்தச் சங்கு அமில குணத்துடன் ஒன்ற வேண்டும்.
3.நெற்றிப் பொட்டில் உயிர் இருக்கும் இடத்தில் குறுகுறுப்பை உண்டாக்கும்.

அமாவாசைக்கு முன்னோர்களுக்குச் சாப்பாடு வைத்துக் கூப்பிடலாமா...?


இன்றைய வழக்கில் உள்ளப்படி அமாவாசை அன்று பற்றும் பாசம் கொண்டு... நம் மூதாதையர்கள் சாப்பிடுவதை எல்லாம் வைத்து... அவருடைய துணிமணிகளை எல்லாம் வைத்துப் படைத்துக் கும்பிட்டோம் என்றால் என்ன ஆகும்...?

முன்னோர்களின் உணர்வு நம்மிடம் இருக்கிறது. அமாவாசை அன்று அவரை நினைத்து ஏங்கிக் கூப்பிட்டால் உடனே அந்த ஆன்மா இங்கே வந்துவிடும். 

நம் உடலிலே அந்த ஆன்மா வந்த பின் அவர் என்னென்ன நோய்வாய்ப்பட்டாரோ அவர் என்னவெல்லாம் கவலைப்பட்டாரோ அந்த உணர்வுகள் வீட்டில் சுழன்று கொண்டு தான் இருக்கும். அது நிச்சயம் நமக்குள் வரும்.

அதே போல் அவர்கள் எந்தப் பக்தி கொண்டு இருந்தார்களோ அதன் வழியில் குலதெய்வங்கள் என்று நாமும் பிரசாதம் வைத்து வாத்திய இசைகளை எழுப்பிப் (மேள தாளங்கள்) பூஜைகள் செய்யப்படும் போது நம் குடும்பத்தில் யார் உடலிலேயாவது வந்து அருளாடத் தொடங்கும். 
1.நான் இப்போது தெய்வமாக இருக்கின்றேன்...!
2.எனக்கு வேண்டியதை நீங்கள் செய்யவில்லை...!
3.இந்தக் குடும்பத்தில் இன்னார் எல்லாம் என்னை மறந்துவிட்டனர்.
4.எனக்கு ஏன் உணவு கொடுக்கவில்லை...? என்று இப்படி அருளாடத் தொடங்கும்.

அந்த அருளாடுபவர் உடலில் நீங்கள் பார்க்கலாம். முன்னோர்களுக்கு எந்த நோயின் தன்மை வந்ததோ இந்த உடலிலும் அதே நோய் நிச்சயம் வரும்.

இதைப் போல குலதெய்வங்களின் ஆன்மாக்கள் நம் குடும்பங்களில் சுழன்று வந்து புகுந்த உடல்களை விட்டு நீங்கிய பின் அடுத்து மனிதன் அல்லாத உடலைப் பெறும் தகுதி தான் பெறுகின்றது.

இதைப் போன்ற நிலைகள் இருந்து நாம் ஒவ்வொருவரும் விடுபடுதல் வேண்டும். அப்பொழுது அதற்காக வேண்டி என்ன செய்ய வேண்டும்...? உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களுக்கு நாம் எந்த உணவைக் கொடுக்க வேண்டும்? நாம் எந்த உணவை உட்கொள்ள வேண்டும்?

பௌர்ணமி அன்று வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்று சேர்ந்து
1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
4.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும் நாங்கள் அனைவரும் பெறவேண்டும் ஈஸ்வரா என்று
5.புருவ மத்தியில் எண்ணி விண்ணிலே நினைவைச் செலுத்தித் தியானித்தல் வேண்டும்.

அவ்வாறு தியானித்த அந்த வலுவின் துணை கொண்டு எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று உந்தித் தள்ளினால் அவர்களை அங்கே எளிதில் செலுத்திவிடலாம்.
1.நாம் உடலுடன் உள்ளோம்.
2.அவர்கள் உயிரான்மாக்கள் எடையற்றது.
3.இயந்திரம் போன்று நாம் உந்தித் தள்ள முடியும்.

நம்முடைய முன்னோர்கள் சப்தரிஷி மண்டலத்தின் ஒளி வட்டத்தில் கலந்து நிலையான ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று நாம் எண்ணி ஏங்குகிற பொழுது நமது முன்னோர்களும் ஒளிச் சரீரம் பெறுகின்றனர். (இது தான் முன்னோர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய உணவு)

பௌர்ணமி அன்று இதைப் போல அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று செய்தால் முன்னோர்களின் ஆன்மாக்கள் ஒளியின் சரீரம் ஆகின்றது.

அவர்கள் ஒளியின் சரீரம் ஆன பின் அந்த ஒளியின் உணர்வை எடுத்து நாம் நமக்குள் அந்த அரும் பெரும் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை எடுக்க வேண்டும். (இதைத்தான் நாம் உணவாக எடுக்க வேண்டும்)

பௌர்ணமி அன்று அவர் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வினை நாம் செலுத்தினோம் என்றால் நம் குடும்பத்தில் உள்ள இருளை நீக்கும்.

இப்படி அந்த அருள் ஒளி எங்கள் குடும்பத்தில் பரவி எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த இருளை நீங்கி மெய் பொருள் காணும் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் பெற வேண்டும் என்று எவரெல்லாம் எண்ணுகின்றனரோ அவர்கள் குடும்பத்தில் வரும் தீமைகளை அகற்றும் வல்லமை பெறுகின்றனர். பிறவி இல்லாத நிலையை அடைய இது உதவும்.

April 29, 2019

பொது நலம் என்பது இன்று எப்படி இருக்கிறது...?


அன்று ஆண்ட அரசர்களின் செயல்களால் தான் இன்று இந்த உலக நிலைகளிலேயே “ஒருவனை ஒருவன் அடக்கி ஆளும் நிலைகள் ஏற்பட்டு விட்டது...!”

மனிதனாக வளர்ந்து வந்த நிலையில் அரவணைக்கும் உணர்வை மறந்து அடக்கி ஆளும் தன்மையே வருகின்றது.

1.எப்படியும் ஒரு வகையில் மற்றவர்களை மிரட்டி வாழ்வது.
2.இல்லை எனறால் பொருளைக் கொடுத்துத் தனக்குக் கீழ் அவர்களை அடிமையாக்குவது.
3.அடிமையாக்கிய நிலைகள் கொண்டு அவர்களிடமிருந்து தான் பெறவேண்டிதைப் பெற்றுத் தன்னுடைய சுகத்திற்கு வருவது.

ஆனால் அப்படிக் கொடுத்துப் பதிலுக்கு உதவவில்லை என்றால்... தான் எண்ணியபடி வரவில்லை என்றால்... உடனே நான் இன்னதைச் செய்தேன்.. நீ எனக்கு எதையும் செய்யவில்லை என்று அவருக்குத் தீங்கிழைக்கும் நிலையே இங்கு வருகின்றது.

ஒருவருக்கு உதவி செய்யப்படும் போது தனக்கு இணைந்தவனாக வரவேண்டும். தனக்கு இணைந்து வரவில்லை என்றால் அவனைக் குற்றவாளியாக ஆக்கும் நிலையே வருகின்றது.

இன்று வாழும் மனிதர்கள் அவரவர்களுக்குத் தகுந்த மாதிரி உதவிகள் செய்வதும் உதவி செய்த பிறகு தன் வழிக்கு வரவில்லை என்றால்
1.நான் அவனுக்கு எல்லா உதவியும் செய்தேன்
2.ஆனால் அவன் எனக்குத் தக்க நேரத்தில் உதவி செய்யவில்லை.
3.ஆகவே அவன் தீங்கு உள்ளவன் ஆகிறான் என்று
4.பகைமை உணர்வுகளைத்தான் நாம் வளர்க்கின்றோம்

ஆக மொத்தம் பகைமை கொண்டு ஒரு பக்கம் பகையை வளர்க்கின்றோம். அல்லது அன்பு கொண்டு தனக்குள் அடிமை ஆக்க வேண்டும் என்ற உணர்வு தான் வருகின்றது. 
1.உண்மையிலேயே நல் உணர்வின் தன்மை கொண்டு அவருடன் ஒன்றி வாழவேண்டும்,
2.இணைந்து வாழவேண்டும்... துயரங்கள் நீங்க வேண்டும்... பேரருளைப் பெற வேண்டும்... என்ற
3.இந்த உண்மையின் நோக்குடன் பிறருக்கு உதவி செய்தால் அங்கு எதிர்பார்க்கும் தன்மை இருக்காது.
4.(ஏனென்றால் உதவி செய்தேன் என்றால் பதிலுக்கு அவரிடம் எதையாவது ஒன்றை எதிர் பார்க்கும் தன்மையே வருகின்றது)

இன்று பல இடங்களில் பார்க்கலாம்...! சில உபகாரங்களைச் செய்வது போல செய்வார்கள். ஆனால் அவர் செய்யும் தவறுக்கெல்லாம் இவர்கள் அடிமை ஆக வேண்டும்.

அப்படி அடிமை ஆகவில்லை என்றால் இவர்களுக்குத் தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். தனக்கு வேண்டியதை எதிர்பார்த்துச் செயல்படும் இந்தத் தன்மைகள் தான் இங்கே வருகின்றது.

ஒன்று அடக்கி ஆள்வது... இரண்டாவது அரவணைத்துப் பார்ப்பது... தன் வழிக்கு வரவில்லை என்றால் அவனைக் குற்றவாளியாக ஆக்குவது...!
1.மக்கள் மத்தியில் இது தான் அதிகமாக வருகின்றது.
2.இது எல்லாம் சுயநலத்தைக் கூட்டுகின்றது... பொது நலம் ஆகாது...!

ஆனால் பொது நலத்தின் தன்மையாக அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்து விட்டால் குற்ற இயல்புகள் இருவர் இடத்திலும் வராது.

பண்பினைக் காக்க பரிவினை ஊட்ட அன்பினைக் கூட்ட அரவணைக்கும் உணர்வாக வந்தால் நாம் செய்த பண்பின் அரவனைப்பு நமக்குள் என்றுமே நிலைத்து இருக்கும்.

ஆகவே அருள் ஒளி எல்லோரும் பெற வேண்டும் இருளை அகற்றிடும் நிலை அனைவரும் பெற வேண்டும். வாழ்வில் எல்லோரும் தெளிந்த நிலைகள் பெற வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

எலும்புக்கூடு(ம்) சூட்சமம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


பெண்கள் அணியும் கால் சிலம்பு ஆடவர் கற்பு நெறி காக்கும் கவசம். பெண்கள் பூப்படையும் பிராயத்தில் கால் சிலம்பை அணிவித்துப் பெண்களின் கற்புக்குப் பாதுகாப்பு வளையமிட்ட செயல் எல்லாம் பண்டைய காலம் முதல் வழி வந்த நற் குண நிலைகள். ஆண்களின் கற்புக்குப் பாதுகாப்பு அரண் அது தான்.

1.பூப்படைந்த பெண்மணிகள் வீதி வழி செல்லும் பொழுது - எதிர்படும் வீரமகன்
2.சிலம்பொலியைக் கேட்டதுமே விலக்கிடுவான் வழிப்பாதை.
3.அங்கே கற்பு நெறி காக்கின்றது.
4.(ஆனால் வீரத்தில் விவேகத்தைக் கலந்து வாழ்ந்த மக்கள் மனம் இன்று அனைத்துமே மாறிவிட்டது)

திருமணம் முடிவுற்று நல்லறத்தின் நல்வழியில் கால் சிலம்பு கழன்றுவிடும். பூப்படைந்த பெண்கள் அணியும் நகை கணவனால் காவலனாகக் காக்கும் நிலை வந்துவிட்டால் விலக்கிடுவான் சிலம்பணிய.

கண்ணகின் வாழ்க்கையில் சிலம்பை அணிவித்தான் மாசாத்துவான். பெண்களுக்கு அணிவிப்பதோ பொன்.. வெள்ளி நகை தானே. காலத்தின் செயல் இன்று போல் இருந்திடுமோ? என்றெல்லாம் எண்ணிட்ட மாசாத்துவான் மாணிக்கமாக அளித்துவிட்டான்.

இல்லறத்தில் இரு மனங்கள் கலக்கும் வைபோகமாக கோவலனும் கண்ணகியும் நறுமணங்கள் கலந்தது போல் வாழ்வாங்கு அங்கே வாழ்ந்து சிறப்பித்தனர்.

ஆனால் அதன் பின் ஊர் விட்டு ஊர் மாறிப் பெயர் மாற்றிச் செல்லும் பொழுது “தலை போகும்...!” என்றெல்லாம் மெய்யறிவு பெற்றிருந்தால் கோவலன் விதி வழி செல்வானா?

உடல் வேறு தலை வேறு ஆன நிலையைக் கண்டதுமே எலும்புக்கூடு மூலிகை அகப்பட்டால் எலும்பின் குணம் கூடிவிடுமே. கண்ணகிதான் அதைப் பெற்றாளா..?
1.கண்ணகியின் கற்பு நிலை கொதித்தெழுந்த செயற்திறத்தால் எலும்புக்கூடு கிடைத்ததா?
2.சூட்சமப் பொருள் பல உண்டு...!

கண்ணகியின் சாபமுண்டு எலும்புக்கூட்டு மூலிகைக்கு...! எலும்புக்கூட்டின் சாறுபட்டவுடன் அறுபட்ட உடல் கூடிவிடும். அந்த மூலிகை கிடைக்குமா...?

பாறை மேல் படர்ந்து வரும். நீரில்லாமல் உயிர் வாழும். தண்டு அதன் நிறம் சிவந்து கணுவிலோர் இலையும் பசுமை காட்டும். அந்த எலும்புக்கூடு கிடைத்து விட்டால் எண்ணிடுவார்கள் பணம் காசை!
1.எலும்புக்கூடு எதற்கு என்ற சூட்சமம் பின் சொல்கிறேன். (ஈஸ்வரபட்டர்)
2.எலும்புக்கூடு கிடைக்க வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொள்ளுங்கள்!

April 28, 2019

பிரதோஷத்தை நீக்கும் வழி முறைகள்


நமது வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்கள்… சாபமிடுதல்… வேதனைப்படுதல்.. இதை எல்லாம் பரிவுடன் கேட்டால் அது எல்லாம் நமக்குள் வலிமையாகி விடுகின்றது.

அப்போது அதையேல்லாம் நாம் நுகரப்படும் போது அவர்கள் உடலிலே விளைந்த தோஷங்கள் எல்லாம் நமக்குள்ளும் வந்து விளைந்து விடுகின்றது. இதைத்தான் “பிரதோஷம்…!” என்று சொல்வார்கள்.

அந்தப் பிரதோஷத்தை நீக்க நாம் என்ன செய்கின்றோம்…?

சிவனுக்கு முன்னாடி இருக்கிற நந்தீஸ்வரனுக்கு மாலையைப் போட்டு அபிஷேகமும் செய்து அதற்கு வேண்டிய பதார்த்தத்தை எல்லாம் கொடுத்து அந்த நந்தீஸ்வரன் செவியில் போய்ச் சொல்கிறோம்.
1.என் குடும்பத்தில் இப்படிக் கஷ்டமாக இருக்கிறது.
2.என் பிள்ளை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்
3.நான் கொடுத்த கடனைத் திரும்பக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.
4.என் வீட்டில் உள்ளவர்களுக்கு எல்லாம் நோய் வந்து விட்டது.
5.எங்கள் கஷ்டத்தை எல்லாம் நீ ஈசனிடம் சொல்லு. அவன் பார்த்து  ஏதாவது செய்வான்…!
6.இப்படி ஒரு நிலையில் தான் நாம் அபிஷேகம் ஆராதனை செய்து கொண்டு கோவில்களுக்குப் போகிறோம்.

ஆனால் இவைகள் எல்லாம் எவ்வாறு இருக்க வேண்டும்…?

நாம் நல்ல பண்புடன் தான் எல்லோரையும் பார்த்தோம்… கேட்டோம்…! ஆனால் அந்தத் தோஷங்கள் நமக்குள் விளைந்து விட்டது. அதை நாம் நீக்க வேண்டும் அல்லவா…!

எல்லா வகையான பிரதோஷங்களையும் நீக்கிய அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகிக் கணவன் மனைவி இணைந்து துருவ நட்சத்திரமாகப் பேரொளியாக இன்றும் நம் பூமியின் வட துருவப் பகுதியில் விண்ணிலே வாழ்கிறார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது. அதிகாலை நான்கு மணியில் இருந்து துருவப் பகுதியின் வழியாக இழுத்து நம் பூமிக்குள் கொண்டு வருகின்றது.

அப்படிக் கொண்டு வரப்போகும் போது நாம் அந்த நான்கு மணியில் இருந்து ஆறு மணிக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ ஆன்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று பல முறை சொல்லி நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

நான் எனது வாழ்க்கையில் யார் யாரையெல்லாம் பார்த்து அவருடைய கஷ்டங்களையும் துன்பங்களையும், துயரங்களையும் கேட்டுணர்ந்தேனோ… அவர்கள் குடும்பங்களில் எல்லாம் அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி படர்ந்து அவர்கள் குடும்பத்தில் அவர்கள் அறியாது சேர்ந்த சகல தோஷங்களும் நீங்க வேண்டும்.

நாங்கள் பார்த்தவர்கள் அனைவரும் தோஷங்களிலிருந்து விடுபட வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் குடும்பங்கள் அனைத்திலும் படர்ந்து அவர்கள் குடும்பங்கள் நலமாக இருக்க வேண்டும் என்று நாம் சொன்னோம் என்றால் அப்போது என்ன ஆகின்றது…? (இதை எதற்காக நினைக்க வேண்டும்…?)

மற்றவர்களின் கஷ்டங்களையும் துன்பங்களையும் குறைகளையும் நாம் கேட்டோம் அல்லவா…! அப்பொழுது அவருடைய தோஷ உணர்வுகள் நமக்குள் வந்து பதிவாகின்றது.

அந்த உணர்வுகள் நமக்குள் வராதபடி நாம் (மேலே சொன்ன மாதிரி) எண்ணும் போது
1.“அவர்கள் எல்லாம் நலமாக வேண்டும் என்று எண்ணும் போது”
2.நமக்குள் வந்த அந்தத் தோஷங்களை நீக்கி விடுகின்றோம்
3.அந்தப் பேரொளி என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் சேர்கின்றது.
4.நமக்குள் பிறருடைய தோஷங்களைத் துடைக்கும் சந்தர்ப்பத்தை அப்பொழுது உருவாக்குகின்றோம்.
5.காரணம் அன்று நாம் பகைமை உணர்வை எல்லாம் மறக்கின்றோம்
6.அதே சமயத்தில் மகிழ்ச்சியான உணர்வை உணவாக்குகின்றோம்
7.பிரதோஷத்தை முடித்த பின் சுவை மிக்க உணவை உணவாக்கி மகிழ்ச்சி என்ற உணர்வைத் தோற்றுவிக்கின்றோம்.

இப்படி எல்லோரும் இதைப் போல மகிழ்ந்து வாழ வேண்டும். அவர்கள் வாழ்க்கையின் சுவையும் மகிழ்ச்சியும் பெறவேண்டும் என்று பிரதோஷம் அன்றைக்கு இப்படி எண்ண வேண்டும்.

இப்படி யாராவது எண்ணுகிறார்களா என்றால் இல்லை…! சாயங்காலம் 4 ல் இருந்து 6 க்குள் காசைக் கொண்டு செலவு செய்து சாங்கியப்படி அதைச் செய்கிறார்கள்.

ஆனால் ஞானிகள் காட்டியது அதிகாலை 4 ல் இருந்து 6 க்குள் நாம் இதை எண்ணச் சொன்னார்கள். காலை ஆறு மணிக்கெல்லாம் சூரியன் உதயம் ஆகின்றது. அப்பொழுது  பூமியிலிருப்பதை இழுக்கும் சக்தி வருகிறது.

பிரதோஷம் என்ற நிலையில் மேலே சொன்ன மாதிரி நாம் அந்தத் தீமைகளை எல்லாம் நீக்க வேண்டும் என்று எண்ணினால் நாம் அதை (தீமைகளை) இழுக்கும் சக்தி குறைகிறது.
1.நமது ஆன்மா முன்னால் இருக்கும் அந்தத் தீமைகளை நாம் இழுக்க மறுக்கும் பொழுது
2.அந்தச் சூரியன் அது இழுத்துக் கொண்டு போய்விடும்,
3.சூரியன் தனது அருகிலே கொண்டு போனால் அதற்குள் அருகிலே போகும் போது நெருப்பாக மாறுகின்றது. விஷத்தைக் கருக்கி நீக்கி விடுகின்றது.
4.இப்படித் தான் தோஷங்களை அன்று நீக்கும்படிச் சொன்னார்கள்.

ஆனால் நந்தீஸ்வரன் காதில் ஓதி… “இந்தப்பா…! நான் லட்டு ஜிலேபி வாழைப் பழம் ஆப்பிள் பழம் எல்லாம் கொடுத்திருக்கிறேன். என் கஷ்டத்தை எல்லாம் நீ ஈசனிடம் போய்ச் சொல்லப்பா…!” என்று ஞானிகள் சொல்லச் சொல்லவில்லை.

ஏனென்றால் நந்தீஸ்வரன் என்றால் “நாம் எதைச் சுவாசிக்கிறோமோ… அது தான் நமக்குள் உருவாகிறது. அப்பொழுது நாம் எதைச் சுவாசிக்க வேண்டும்..?

அந்தப் பேரருள் பெற்ற அந்த ஞானிகள் உணர்வின் தன்மையை நுகர்ந்தால் நமக்குள் அது உருவாகி நமக்குள் பிறருடைய தீமைகளை நீக்கிவிடும். தோஷங்கள் வராது தடுக்க இது உதவும். இப்படித் தான் நாம் பழக்கப்படுத்த வேண்டும்.

காசைக் கொடுத்து விட்டுப் பிரதோஷம் அன்றும் சிவன்ராத்திரி அன்றும் விடிய விடிய முழித்துக் கொண்டு நாம் வரம்பு மீறித் தவறுகளைத் தான் செய்கின்றோமே தவிர
1.தவறை நீக்கும் மார்கங்களை ஞானிகள் காட்டி இருந்தாலும்
2.யாரும் இதைச் செயல்படுத்தவில்லை…! (இது தான் இன்றைய நிலை)

மூலத் தத்துவங்களைப் பற்றித் தெளிவாக உணர்த்தும் காவியங்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


மனிதனின் வாழ்க்கையில் வரும் சங்கட குணங்களை விலக்கி மனப் பக்குவம் பெற அறிய வேண்டிய ஞானத்தின் செயல் திறத்தைத் தான் இராமாயணக் காவியத்தின் மூலம் வான்மீகியார் காட்டினார்.

இதைக் கம்பனும் அறிந்தாலும் மூலத்தின் பொருள் விளக்கக் கம்பரசம் (கம்பராமாயணம்) செய்தாலும் அதிலே நவரசத்தின் பொருளைக் காட்டி நர்த்தனமாக விளையாடிய கவிச் சொல்லின் சிறப்பில் இன்றைய மனிதன் சுவைத்திட்ட சுவை என்ன..?
1.வெறும் சிருங்கார ரசத்தைத்தான் சுவைத்தான்…!
2.சிறப்பின் ரசம் அறிந்தானா…?
3.காரணத்தில் காரியத்தை அறிய வைத்த கம்பனும் அறியவொண்ணா மறை பொருள் உண்டு.

அனுபவம் என்ற பாதையிலே வான்மீகி மகரிஷி அறிந்து சொன்ன சொல் ஒளி காந்தம். உருவாக்கிய காவியம் தான் அந்த இராமாயணம்.

எண்ணங்களின் எதிர் மோதல்களிலிருந்து எப்படித் துன்பமுறா மனப்பாங்கு கொண்டு நிகழப் பெற்ற “அனுபவ ஔஷத நெறியின் செயல் விளக்கம் தான் அது…!”
1.மனிதன் பெறும் பெறவேண்டிய உயர் நிலை என்ன…? என்பது பற்றி
2.அவன் மனதில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் சலிக்கும் (அலசி)
3.ஓர் சல்லடையாகச் சலித்துப் பெற வேண்டிய வழி வகைகளை அறிந்திடச் செய்யும் “சூட்சம காவியமே இராமாயணம்…!”
4.எண்ணங்களின் அலை ஈர்ப்புச் சமைப்பில் காந்தமாகிக் காத்திட்ட சக்தியில் வான்மீகி அதைக் கொடுத்ததிலும் ஓர் பக்குவம் உண்டு.
5.அந்த வான்மீகி மாமகரிஷி கண்டுணர்ந்த வான இயல் வான் இயல் சூட்சமத்தின் தெளிவை நாமும் கண்டுணர்ந்து நம் மனம் தெளிதல் வேண்டும்.

April 27, 2019

காமதேனுவிடமிருந்து சக்தி பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


மகரிஷிகளின் ஒளி காந்த சக்தியைப் பெற்றுத் தன் உயிராத்ம சக்தியை வலுக் கொள்ள அந்த வீரிய எண்ணச் செயல் மூலம் வளர்வதற்கே வளர்ப்பின் வளர்ச்சியின் ஆகார அமில குணம் தேவை என்று ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளோம்.

ஒருமித்த எண்ணம் கொண்டு நம் உயிராத்ம சக்தியுடன் அதை ஒன்றச் செய்து இந்தத் தியான முறை வலுவினால் வளர்ச்சிப்படுத்தப் பெற்றுக் கொள்ள வேண்டிய ஆகாரம்
1.அதாவது காமதேனு என்று சூட்சமமாக மகரிஷிகள் உணர்த்திய
2.அந்த “ஆகார நியமனம்” பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

சூரிய மண்டலத்தின் சமைப்பின் ஒளிக் கதிர்களை வானுலகில் வரும் ஆகாய உயிரணுக்கள் எடுத்து அந்தப் பரவெளி சூட்சமத்தில் தங்களை வளர்த்துக் கொள்ளும் நிலையில் அந்த வீரிய உயிரணுக்களின் சக்தியை நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் ஈர்த்துப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நம் உயிரான்மாவின் சக்தியை மேன்மேலும் வளர்ச்சி கொண்டிட வேண்டும் என்றால் பரவெளியில் உலவிடும் இந்த உயிரணுவாகிய காமதேனுவின் பாலை (ஆகாரமாகப்) பெற்றிட வேண்டும் என்று சூட்சமப்படுத்தினார்கள் அன்றைய ரிஷிகள்.
1.அந்த அமில ஆகாரத்தைப் பரிபூரணமாகப் பெற்று விட்டால்
2.சிருஷ்டியின் இரகசியம் தெரிந்துவிடும் என்றும் காட்டினார்கள்.

இதையே தான் “உலக வழக்கப்படி” நாம் நினைத்த மாத்திரத்தில் இந்தச் சரீர வளர்ப்பிற்குக் காமதேனு திட ஆகாரத்தைப் படைத்து அளித்தது…! என்ற சித்தின் செயல்பாட்டினுள் சித்தனே மறைந்துள்ளான்.

விசுவாத்திர மாமகரிஷிக்கு “
1.இரசமணி சக்தியின் மூல முலாமையும்
2.காமதேனு சக்தியையும் உணர்த்தி
3.அதை அவர் பெறும் பக்குவத்திற்கு உருவாக்கித் தந்தவர் வசிஷ்ட மாமகரிஷி.

தான் பெற்றது காமதேனுவின் குழந்தை நந்தினியின் சக்தி தான் என்றும் உணர்த்துகின்றார் வசிஷ்டர். ஆக இதெல்லாம் சூட்சமப்படுத்திக் காட்டப்பட்ட பேருண்மைகள்.

1.பரவெளியில் உலவிக் கொண்டிருக்கும் காமதேனு என்றிட்ட
2.(உயிரணுக்களின்) பசுக்களின் வீரிய ஆகாரத்தை ஒவ்வொருவரும் பெற்று விட்டால்
3.மண்டலங்களையே உருவாக்கிடும் சிருஷ்டியின் பரிபூரணத்துவத்தைப் பெற்றிடலாம் என்ற
4.ஞானிகளால் கொடுக்கப்பட்ட போதனை காட்டிய வழி முறையை அறிந்து கொள்ள வேண்டும்.

பரவெளியில் தோன்றிப் பல்கிப் பெருகி அந்தக் காமதேனு – நந்தினி என்ற உயிரணுக்கள் சிவ சக்தியின் கலப்பாகப் பிறிதொன்றைத் தன் சக்தியை உள் நிறைத்து உருவாக்கிடும் ஓர் பொருளே அந்த உயிரணுக்களின் முட்டைகள் என சித்தர்களால் காட்டப்பட்டது.

சூரிய வெப்ப ஒளியில் அந்த முட்டைகள் உடைந்து பரவெளியில் சுழன்று ஓடும் பூமியின் ஈர்ப்பின் அருகாமையில் அந்த உயிரணுக்கள் வந்தாலும் பூமியின் ஈர்ப்பில் சிக்கிடாமல் உந்து விசையால் புறப்படும் பாணம் போல் அந்த உயிரணுக்கள் பரவெளியில் உலவிடும் சூட்சமத்தைச் செப்பிடத்தான் முடியுமோ…?

1.பூமியின் வட திசையில் விழிப்பார்வையை விண்ணிலே செலுத்தி
2.ஈஸ்வரா என்று புருவ மத்தியில் ஏக்கத்துடன் அந்தப் பேரொளியை ஈர்த்திடும் தொடர்பில்
3.காமதேனு தன் ஆகாரத்தை நமக்கு ஊட்டிடுவாள்.
4.அறிவாய்… உணர்வாய்… தெளிவாய்…!

கணவனை இழந்தவர்கள் மாங்கல்யத்தைக் கழட்டக் கூடாது...! ஏன்...?


மதங்கள் குலங்கள் என்ற நிலையில் இருந்தாலும் அதற்குள் அனுஷ்டானம் ஆச்சாரம் என்ற நிலைகளில் தான் நாம் இன்று வாழ்ந்து வளர்கின்றோம்.

இன்று உதாரணமாக எடுத்துக் கொண்டால் கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தாலும் கணவர் உடலை விட்டுப் பிரிந்து சென்று விட்டால்
1.உன் கணவனே போய்விட்டார்
2.உனக்கு எதற்கு மாங்கல்யம்...? என்று அதைக் கழட்டிவிடும்படிச் சொல்கின்றனர்.

ஆனால் கணவனுடன் வாழ்ந்த காலத்தில் அவருடைய உணர்வுகள் அனைத்தும் மனைவியின் உடலிலே உண்டு.
1.மாங்கல்யத்தைக் கழட்டினால் பார்க்கும் பொழுதெல்லாம் “கணவரை இழந்தவர்...! என்று தான்
2.அடுத்தவர்கள் எண்ணுகிறார்களே தவிர அங்கே பரிதாபப்படும் நிலை இல்லை...!

ஆகவே கணவர் இறந்த பின் அவர் இட்ட அந்த மாங்கல்யத்தைக் கழட்டவே கூடாது.
1.அவர் என்னுடன் வாழ்கின்றார்... என்னுடனே இருக்கின்றார்...
2.அவர் உணர்வுகள் என்னுடனே வலு பெற்று உள்ளது...! என்று தான் எண்ணிப் பழகுதல் வேண்டும்

கணவன் உடலை விட்டுச் சென்றால் உடனே மனைவி என்ன செய்ய வேண்டும்..?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா... அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் உயிரை வேண்டி அந்த வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

கணவனின் உணர்வு மனைவிக்குள் இருப்பதனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்ற வலுவின் துணை கொண்டு கணவனின் அந்தச் சூட்சம சரீரத்தைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து அங்கே அனுப்பிடல் வேண்டும். ஆகவே அங்கே அனுப்பி விட்டால்
1.கணவன் உடலில் பெற்ற நோயின் தன்மைகள் அனைத்தையும் அங்கே கரைத்து விடுகின்றது. 
2.சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்த கணவரின் உயிரான்மா
3.ஒளி உடலாக அங்கே வாழத் தொடங்கும்.

மனைவி இங்கே இருக்கப்படும் போது எப்போதுமே கணவரின் ஆன்மா அந்த சப்தரிஷி மண்டலத்துடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைந்து அழியாச் ஒளி சரீரம் பெற்றுப் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற நினைவினை ஒவ்வொரு நாளும் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

கணவர் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பேரொளி என்ற நிலை அடைந்த நிலையில்
1.எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த இருளை நீக்கி  
2.மெய் வழியில் அழைத்துச் செல்லும் அருள் உணர்வுகள் எங்களுக்குள் படர்ந்து
3.சாபவினைகளோ தீயவினைகளோ வராது எங்களைக் காத்து அருள வேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும்.
4.இவ்வாறு எண்ணினோம் என்றால் அந்த அருள் என்றுமே நமக்கு உறுதுணையாக இருக்கும்.

ஆனால் இங்கே சாதாரண வாழ்க்கையின் நிலையில் இருப்பது என்ன...? என்றால் கணவர் பட்ட துயரத்தை எல்லாம் மனைவி தனக்குள் எடுத்து வைத்துள்ளது.

அதே சமயத்தில் குடும்பத்தில் உள்ள குழந்தைகளும் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் நிலைகளிளும் இது பதிவாகி உள்ளது. நுகர்ந்தது இவர்கள் உடலிலே அணுவாகவும் உள்ளது.

இறந்த கணவர் அவர் வாழ்ந்த காலத்தில் உடலிலே விளைந்த உணர்வுகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.

அப்பொழுது மனைவியோ குடும்பத்திலுள்ளவர்களோ அவருடன் நெருங்கிப் பழகியவர்களோ அவருடைய நினைவுகளை மீண்டும் மீண்டும் எண்ணி எடுத்துக் கொண்டால்
1.அவர் உடலிலே விளைந்த நோய்க்கு காரணம் எதுவோ
2.அதெல்லாம் நமக்குள் அதே நோயை உருவாக்கும் தன்மையாக இங்கே உருவாகி
3.நம்மை அறியாது சஞ்சலப்படும் நிலையை உருவாக்கி அடிக்கடி வேதனைப்படும் நிலையே வரும்.
4.அவ்வாறு வேதனைப்பட்டால் பிறிதொரு ஆன்மா நம் உடலுக்குள் வந்து சேரும். அது உடலில் வந்த தீமைகளே இங்கே வளரும்.

அத்தகையை தீமைகள் வராதபடி நாம் செயல்படுத்த வேண்டும் என்றால் அதிகாலையில் எழுந்தவுடன் உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அவரைச் சப்தரிஷியாக ஆக்க வேண்டும்.

அவர் அந்தப் பேரருள் பேரொளி பெற்றுச் சப்தரிஷியாக ஆனது போல் நாங்களும் இருளை நீக்கிப் பேரொளியாக மாறும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும். எங்கள் வீடு முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும். இருளை நீக்கும் அந்த அருள் சக்தி எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்குதல் வேண்டும்.

இப்படி முறைபடுத்திக் கொண்டால் நமக்குள் தீமைகள் வராது தடுக்கவும் முடிகின்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் வளர்க்கவும் முடிகின்றது.

நாம் சேர்த்துக் கொண்ட இந்த வலுவுக்கொப்ப நம் உயிர் நம்மை அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நேரடியாக அழைத்துச் செல்லும்...!