ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 21, 2024

நாம் எல்லோரும் நல்லவரே…!

நாம் எல்லோரும் நல்லவரே…!

 

பத்திரிக்கை வாயிலாக இன்று நாம் படிக்கப்படும் போது எங்கெங்கோ நடந்து கொண்டிருக்கும் அதிர்ச்சியான செய்திகளைப் படிக்க நேருகின்றது.

அதில் எண்ணத்தைக் கூர்ந்து செலுத்தி விட்டால்… எங்கேயோ விபத்தானதைப் படித்தறியப்படும் பொழுது அந்த உணர்வு நமக்குள் சேர்த்து… உடனே அதிர்ச்சி… அல்லது பயம்… அல்லது வேதனை… இது போன்ற உணர்வுகள் நமக்குள் விளைந்து விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. உலகத்தை அறிந்து கொள்ள நாம் படித்தாலும் இந்த உணர்வுகள் நமக்குள் இயங்கி விடுகின்றது.

எதை நாம் படித்துத் தெரிந்து கொண்டோமோ அந்தச் செய்திகள் ஊழ்வினையாகப் (வித்துக்களாக) பதிவாகின்றது. அவ்வாறு படித்து நுகர்ந்து
1.எத்தனையோ பேர் வெளியிட்ட உணர்வலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நமக்கு முன் சுழன்று கொண்டே இருக்கின்றது.
2.அதை மீண்டும் எண்ணும் பொழுது நமக்குள் பதிவான அதே நிலைகள் அலைகளாக மீண்டும் குவித்து நம்மை உணரச் செய்கின்றது
3.சாதாரண ஆண்டென்னாவின் இயக்கம் போல (அருகிலிருப்பதை இழுத்து) அந்தந்த உணர்ச்சிகளாக இயக்கி நம்மைச் செயல்படுத்தி விடுகின்றது.
4.ஆக… எந்த வேதனையைப் பட்டோமோ அந்த வேதனைகளை விளைவிக்கும் தன்மையாக வந்து விடுகிறது.

ஆக… உலகை அறிந்து கொள்ள நாம் பத்திரிக்கையைப் படித்த்தாலும் நடந்த சம்பவங்களை அறிந்து நுகரப்படும் பொழுது தீய விளைவுகளாக நமக்குள் வந்து நோயாக உருவாகி விடுகின்றது.

தவறான செயல்கள் எதை எல்லாம் செய்தார்களோ… “அங்கே அடித்தான் இங்கே திருடினான் இங்கே கொலை செய்தான்…” என்று
1.தன்னைக் காத்திட இத்தகைய செயலைச் செய்தார்கள் என்று உணர்வின் நினைவலைகள் நமக்குள் பதிவான பின்
2.அதையே திரும்பத் திரும்பப் படிக்க நமக்குள் அதுவே விளைந்து
3.எந்தத் தவறைச் செய்யக்கூடாது என்று நினைக்கின்றோமோ அதை நம்மையும் செய்யும்படி வைத்து விடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்கு அந்த மகா ஞானிகளின் உணர்வுகளை எடுத்து அதைத் துடைக்க வேண்டும் அல்லது தடுத்து நிறுத்த வேண்டும்.

குருநாதர் எனக்கு எவ்வளவு பெரிய சக்தியை உணர்த்தினாரோ அதனின் உணர்வின் ஆற்றலை நான் பருகி அவரைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது அந்த உணர்வுகள் ஊழ்வினையாக எனக்குள் (ஞானகுரு) பதிவானது.

அவரை நினைவு கொள்ளும் பொழுதெல்லாம்… அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியை நுகர்ந்து அந்த உணர்வை எனக்குள் பெருக்கிக் கொள்ள முடிந்தது.

நீங்கள் துயரத்துடன் எம்மிடம் வரும் போது “உங்கள் துன்பம் நீங்கிப் போகும்…” என்று சொல்லால் சொல்வதை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்து அதை மீண்டும் நீங்கள் நினைவு கூர்வீர்கள் என்றால் அந்தத் துன்பங்கள் நீங்கி மெய் ஞானிகளுடைய உணர்வு உங்களுக்குள் விளையத் தொடங்குகிறது.

ஒவ்வொரு நிமிடத்திலும் துன்புறும் உணர்வுகளை குருநாதர் எனக்குள் பாய்ச்சி அந்தத் துன்பப்படுத்தும் உணர்வுகளை நீக்குவதற்காக “விண்ணின் ஆற்றலை நீ எவ்வாறு பருக வேண்டும்…?” என்று உபதேசித்து அதனின் அனுபவபூர்வமான செயல்களை ஊட்டினார்.

அதனின் பக்குவம் கொண்டு நான் எடுத்துக் கொண்ட நிலையில் தான் 20 வருட காலம் அனுபவ ரீதியாக உலகைச் சுற்றி வந்தேன்.
1.மூன்று லட்சம் பேரைச் சந்திக்கச் செய்து அவருடைய உணர்வுகளை அது எவ்வாறு இயங்குகின்றது…? என்றும்
2.எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அவர்கள் எதன் வழி எப்படி அவதிப்படுகிறார்கள்…? என்ற நிலையினை உணரும்படி செய்தார்.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவால் விஞ்ஞானிகள் எப்படி பிறரை (ஆன்மாக்களை) நஞ்சு கொண்ட நிலைகள் கொண்டு இயக்குகின்றார்கள்…? அந்த ஆன்மாக்கள் எப்படிப் பதை பதைக்கின்றது…!

எதை அழித்திடும் உணர்வாகச் செலுத்தி விஞ்ஞானத்தைக் கண்டு கொண்டானோ அதனால் பாதிக்கப்பட்ட ஆன்மாக்கள் (விஞ்ஞான அறிவு கொண்டு செயல்பட்ட உயிரான்மாக்கள்) இறந்து… அதன் வழியில் விஞ்ஞான அறிவில் இவன் முன்னேறினாலும்
1.துன்புறுத்தப்பட்டு இறந்தவர்கள்… நஞ்சு கொண்ட ஆன்மாக்களாக எவ்வாறு உலகில் படர்ந்து கொண்டிருக்கிறது…? என்பதை
2.அனுபவ ரீதியிலே தெரிந்து கொள்வதற்காக குருநாதர் உலகம் முழுவதும் சுற்றும்படி சொன்னார்.

அதிலே பெற்ற அனுபவங்களைத் தான் உங்களுக்கு இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகின்றேன். இதை நீங்களும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

சுவாச நிலை என்ன…? என்று புரிந்திட்டால் உயிருடன் என்றும் அழியாத நிலையில் வாழலாம்

சுவாச நிலை என்ன…? என்று புரிந்திட்டால் உயிருடன் என்றும் அழியாத நிலையில் வாழலாம்

 

நீ வணங்கும்
1.முருகா என்னும் போகரும்…
2.ஈஸ்வரா என்னும் ஈஸ்வரபட்டரும்…
3.வெங்கடாஜலபதி என்னும் பாலாஜி உருவில் வந்த பல கோடி நாமங்கள் பெற்றிட்ட கொங்கணவரும்…
4.கொங்கண மகாதேவரும்… சித்தர்களும் ஞானிகளும்…
5.உன் அறிவுக்கு எட்டாத இந்த உலகில் எல்லாப் பாகங்களிலும் தோன்றி இந்நிலையில் இருக்கும் சித்தாதி சித்தர்களும் ஞானாதி ஞானியர்களும்
6.ஞான ரிஷிகளும் சப்தரிஷிகளும் அருள் சக்தி பெற்று சூட்சம உலகில் ஒளியாக வாழுபவர்கள் தான்…!

அவர்களின் நல் உபதேசத்தைப் பெற்றவர்கள் மற்றவர்கள் நிலைக்குப் புரிந்திடச் செய்திடாமல் சில உபதேசங்களை மட்டுமே மனிதர்களுக்குப் புகட்டினர்.

1.உண்மையின் உயிர் இரகசியத்தை இந்த உலக மக்களுக்குப் புரிந்திடச் செய்யாமல்
2.ஒருவர் எழுதியதைப் பிறிதொருவர் மாற்றி எழுதி
3.தன் தன் ஜீவ வழிக்குப் பொருள் பெற்றிட
4.உலகத் தன்மையையே மறைத்துவிட்டார்கள்… மாற்றிவிட்டார்கள்.

ஜெப நிலை (தியானம்) என்றாலே பெரும் கடினமானது…! என்றும் எல்லோராலும் அதைப் பெற்றிட முடியாது…! என்ற ஒரு கடினத் தன்மையை மனிதர்களின் மனதிலே ஊன்றச் செய்து விட்டனர்.

சாதாரண வாழ்க்கை வாழும் மனிதனால் அது சாத்தியமில்லை என்ற அளவுக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.

ஆண்டவன் என்றாலே “யார்” என்று புரியாத நிலையில் தெருவின் மூலைக்கும் ஆற்றுப் படுகையின் படிகளில் எல்லாம்
1.அரச மரத்தை நட்டு விநாயகர் என்ற உருவத்தைப் பதித்து
அரச மரத்தைச் சுற்றினால் அருள் பெற்றிடுவாய்…! என்ற வேதத்தை ஊன்றிவிட்டார்கள்.

கடவுள் என்றாலே கல் தான்…! கல் என்ன செய்யும்..? என்ற நிலையில் கடவுள் இல்லை…! என்று ஒரு சாரார் நம்பும்படிச் செய்து விட்டார்கள்.
1.கடவுளைச் சென்று வேண்டுபவர்களும்
2.தன்னுள் தான் கடவுள் உள்ளான்…! என்பதை மறந்து விட்டனர்.

முருகனுக்கு இரண்டு மனைவிகள். மூத்தவள் வெள்ளை இளையவள் கருப்பு. முருகனுக்கே இரண்டு மனைவிகள் உள்ள பொழுது எனக்கு மட்டும் ஏன் தடை…! என்ற வாதங்களைப் பல ரூபத்தில் எழுப்பிக் கொண்டுதான் அந்தக் கடவுளையே வேண்டுகிறார்கள்.

தன்னுள் இருக்கும் கடவுளையே மறந்து அவன் முன்னோர்கள் கதை கட்டிய கடவுளைத் தான் வணங்குகிறார்கள்… தன் வழிக்கு உகந்தபடி…!

புரிகிறதா…?

1.முருகனின் மூவுலக அருளையே மறந்து..
2.அவன் உருவில் உள்ள ஆறு குணங்களையும் மறந்து…
3.முருகனுக்குப் போகரின் வழியில் அளித்திட்ட உருவ அமைப்பையே
4.எந்நிலைக்கு அந்த உருவை அப்போகர் நிறுவினார்…? என்ற நிலையையே மறந்து…
5.தன் வழிக்குப் பல கதைகளைச் சொல்லித் தெருத் தெருவாக முருகன் கதையைப் பெரும் கூத்தாக்கிவிட்டார்கள்.

இக்கலியில் வந்த இக்கலியின் மனிதர்கள்… “இவர்கள் நிலையே இவர்களுக்குப் புரியவில்லை…!” அழியும் உடல்… அழியும் உடல்… என்கிறார்கள். அழியும் உடலல்ல இவ்வாண்டவன் அருளிட்ட இந்த உடல் எல்லாம்.

உலகத் தன்மை அழிவதில்லை. பல நிலைகளைத் தான் இந்த உலகம் பெறுகிறது. உலக நிலையில் மாறுபட்டு மாறுபட்டுச் சுற்றிக் கொண்டே வருகிறது உலகம்.
1.உலகம் என்றென்றும் அழிவதில்லை…
2.காலங்கள் தான் அழிகின்றன... கால நிலைகள் அழிகின்றன.

அழியாத இந்த உலகம் பல அவதாரங்களை மாற்றிக் கொண்டே முதலில் ஆரம்பித்த நிலைக்கே வருகிறது. பிறகும் பல அவதாரங்களை எடுத்துக் கொண்டே சுற்றிக் கொண்டு வருகிறது.

அச்சூரியன் நிலை என்று அஸ்தமிக்கின்றதோ அன்று தான் இந்த உலகம் அழியும்… உயிரணுக்களும் அழியும்… மனிதனும் அழிவான்...!

ஒவ்வொரு மனிதனும் சுவாச நிலை என்ன…? என்று புரிந்திட்டால் இவ்வுயிருடனே என்றுமே அழியாத நிலையில் வாழலாம். அதற்குத்தான் இந்தப் பாட நிலைகள் எல்லாமே…!

May 20, 2024

பெரும்பகுதியானவர்களுக்கு இன்று கிட்னி பழுதடைவதன் காரணம் என்ன…?

பெரும்பகுதியானவர்களுக்கு இன்று கிட்னி பழுதடைவதன் காரணம் என்ன…?

 

நாம் விளைய வைக்கும் தாவர இனங்களில் பூச்சிகள் புழுக்கள் விழுந்தால் அவைகளைக் கொல்ல பூச்சி மருந்துகளைத் தெளிக்கின்றோம். அதே சமயத்தில் அதில் விளைந்த நல்ல தானியங்களை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றோம்.

ஆனாலும் அந்தத் தாவர இனத்திலே விழுந்த பூச்சிகள் நாம் தெளித்த பூச்சிக்கொல்லி மருந்தை ஏற்றுக் கொண்ட நிலையில்
1.அந்த நஞ்சினையே தனக்குள் ஏற்றுக் கொண்டு
2.கடும் நஞ்சு கொண்ட புழுவாக நஞ்சான கிருமிகளாக அடுத்து அது விளைகின்றது.

நாம் தெளித்த பூச்சி மருந்து நாம் விளைய வைக்கும் தாவர இனங்களிலும் கலக்கப்பட்டு… அந்த உணர்வின் சத்து அதுவே நஞ்சாக மாறி… அது கலந்த உணவை உணவாக உட்கொள்ளும் பொழுது “நம் உடலுக்குள் பலவிதமான நோய்களாக உருவாகிறது…”

அந்தப் பூச்சிகளையும் புழுக்களையும் இரக்கமற்றுக் கொன்றது போன்று அந்த நஞ்சின் தன்மை அதிகமாகி கொன்றிடும் உணர்வுகளாக அதிகமாக விளைந்து… அதனால் நம் உடலுக்குள் இருக்கும் “சிறுநீரகங்கள்” பாதிக்கப்படுகின்றது.

காரணம்… அதிலே இந்த நஞ்சு அதிகரிக்கப்படும் பொழுது இரத்தத்தைச் சுத்திகரிக்கும் அதனுடைய செயலாக்கங்கள் செயலற்றதாக ஆக்கி வெறித்தனமான நிலைகள் கொண்டு பல நோய்களை உருவாக்கக் காரணமாகி விடுகின்றது.

1.எந்த நஞ்சினை வடிகட்டும் திறன் கொண்டதோ நம் சிறுநீரகங்கள் அதனின் திறனை இழந்து
2.அதனால் நஞ்சு நம் இரத்தங்களிலே அதிகரித்து உடல் முழுவதும் சுழன்று
3.மனிதனுடைய சிந்தனைத் திறன் குறைந்து சிந்தனையற்றவனாக அந்த வளர்ச்சிகள் அதிகரித்து
4.மனித உடலுக்குள் நஞ்சையே வளர்த்திடும் நிலையாக மாறிவிடுகின்றது.

இதிலிருந்து மீள ஞானிகள் காட்டிய அறவழியில் நாம் செயல்படுதல் நல்லது.

விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்தார்கள். ஆனால் மெய் ஞானிகள்
1.உணர்வுக்குள் இருக்கும் நுண்ணிய நிலைகளைப் பிளந்து அதை ஒளியாக மாற்றினார்கள்
2.அந்த ஞானிகள் உணர்வை நாம் எடுத்தால் விஞ்ஞான அறிவால் ஏற்றுக் கொண்ட அந்த நஞ்சின் தன்மையைப் பிளக்க முடியும்.

அதைப் பிளக்கச் செய்வதற்குத் தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய்ஞானிகள் உணர்வுகள் இங்கே படர்ந்து இருக்கும் வேளையில் அது ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

பதிவாக்கிய பின் அதை தியானிக்கும்படி செய்து அதனின் வலுப்பெறச் செய்து அதையே இப்பொழுது உபதேசமாக கொடுக்கப்படும் பொழுது “எந்த அளவிற்குக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ… அது ஊழ் வினையாக உங்களுக்குள் பதிவாகின்றது…”

அதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் இந்த வாழ்க்கையில் விஞ்ஞான அறிவால் நமக்குள் வரும் தீமைகளிலிருந்து மீட்டிக் கொள்ள உங்களால் முடியும்.

உபதேசித்த உணர்வுகள் அனைத்தையும் உங்களுக்குள் வலுப்பெறச் செய்து கொண்ட பின்… நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த ஞானிகள் உணர்வுகளை நீங்கள் சுவாசித்து… உங்களை அறியாது வந்த தீய வினைகளை நீக்க முடியும்.

விஞ்ஞானி எப்படி அணுவைப் பிளந்தானோ…? அதே விஞ்ஞானக் கல்விக்குச் செல்லப்படும் போது அதனின் ஆற்றலை அவன் பெறுவது போல்
1.மெய்ஞானிகள் உணர்வை நமக்குள் சேர்த்து
2.நம் உணர்வுக்குள் நஞ்சு கலந்ததை நம் உடல் பிரிப்பதை…
3.பிரிந்த நிலைகள் கொண்டு தன் எண்ணத்தால் உணர்வுக்குள் இருக்கும் நஞ்சினைப் பிளந்து
4.அந்த மகரிஷிகள் உணர்வுகளைப் பாட நிலையாக எடுத்து அதனின் நிலைகள் கொண்டு
5.இந்த மனித வாழ்க்கையில் எப்போதெல்லாம் துன்பம் நேர்கின்றதோ அது சேராத வண்ணம் தடுத்து நிறுத்த ஈஸ்வரா என்று
6.எண்ணியதை இயக்கிக் காட்டும் அவனையே ஈஸ்வரா என்று “உயிரை எண்ணி ஏங்கி”
7.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று வானை நோக்கி நினைவினைச் செலுத்த வேண்டும்.

சக்தி வாய்ந்த ஆண்டென்னா… விண்ணிலிருந்து வரும் சக்திகள் பூமிக்குள் படர்ந்து கொண்டிருப்பதைக் குவித்து ஈர்த்து… அதனுடன் இணைக்கப்பட்ட டிவியில் தெளிவாக அதைக் காட்டுகின்றது… உணர்த்துகின்றது.

இதை போன்று யாம் கொடுக்கும் உபதேசங்களைக் கூர்ந்து கவனித்தால் உங்கள் கண் கரு விழிகளின் இயக்கத்திற்குள் ஆற்றல் மிக்கதாக இந்த உணர்வின் அலைகள் பாயும்..
1.இதை மனமுவந்து பெற வேண்டும் என்று ஏங்குங்கள்
2.அந்த சக்தி உங்களுக்குள் ஜீவன் பெறுகின்றது

இது உங்கள் கையில் தான் இருக்கிறது.

எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் (ஞானகுரு) செய்தேன் அதன் வழிகளிலே உயர்ந்த சக்திகளைப் பெற முடிந்தது. என் குருநாதர் காட்டிய வழியினைத் தான் உங்களுக்குள்ளும் இப்போது பதிவாக்குகின்றேன்.

பதிவாக்கியதை நினைவு கொண்டு விண்ணை நோக்கி நீங்கள் ஏங்கினால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கிறது. உங்கள் உடலுக்குள் சேர்த்துத் தீய குணங்கள் விளையாது தடுத்துக் கொள்ள இது நிச்சயம் உதவும்.

“விண்டார் கண்டதில்லை… கண்டார் விண்டதில்லை..!”

“விண்டார் கண்டதில்லை… கண்டார் விண்டதில்லை..!”

 

காட்சி:- சிறிய குன்றிலிருந்து பெரிய குன்று, பின் சமமாக இருத்தல்…!

1.உன் ஜெப நிலையில் இப்பொழுது பல நிலைகளைக் கலக்கச் செய்துள்ளாய்.
2.உன் வாழ்க்கையில் நடப்பது தான் உன் நினைவில் வருகிறது.
3.அந்நினைவைத் தியானத்தில் அமரும் பொழுது மறக்க விடுவதில் என்னப்பா பலன்...?

தியான நிலையிலும் அந்நிலையே தான் சுற்றுகிறது. இதற்கும் ஒரு வழி வேண்டும். இனி தியானத்தில் அமரும் பொழுது
1.வாழ்க்கையில் வரும் எல்லாச் சம்பவங்களையும்…!
2.உன் உடலில் உள்ள ஆத்மலிங்கத்திடம் (ஈசனிடம்) சமர்ப்பித்துவிடு…
3.ஆத்ம லிங்கத்தை உன் ஜெபத்தில் கண்டிடுவாய்.

பல சித்தர்களையும் ஞானிகளையும் ரிஷிகள் நிலையையும் செப்பிவிட்டேன். இன்றும் உள்ளார்கள்… அன்றும் இருந்தார்கள்.

பல வாக்குவாதங்களைப் பேசிய மனிதர்கள்… அந்த மனிதர்களின் அவச் சொல்லுக்குப் பயந்துதான் தீட்சண்ய வார்த்தைகளுக்குப் பயந்து தான் “விண்டார் கண்டதில்லை… கண்டார் விண்டதில்லை..!” என்று அந்நிலையில் விட்டுவிட்டார்கள்.

இந்த உலகில் உள்ள சக்தியின் சொரூப நிலையைக் கண்டவர்கள் உண்மை நிலையைச் செப்பிட்டால் எற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லையப்பா…! விதண்டவாதம் பேசிய நாடப்பா இது

தவயோகிகள் முனிவர்கள் பல நாள் தவமிருந்து பெற்ற பலனையே மனிதர்கள் உணர்ந்திடவில்லை. தன்னுள்ளே அமிழ்த்திக் கொண்டு
1.ஜடப் பொருள் உருவில் தான் தியானித்துக் கொண்டுள்ளார்கள்.
2.இதனால் என்னப்பா பயன் இந்த மானிடருக்கு…?

போகரின் நிலையிலிருந்து முருகனின் வழியில் உணர்த்துகின்றார். முருகனின் வழியில் குணாதிசயங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

ஆறுமுகா என்ற ரூபத்தில் அந்நிலையில் அண்டி வருபவர்களுக்கு எல்லாம் ஆறுதலை அளிக்கின்றார். பிறந்த பிறப்பின் பயனை… பிறவி எடுத்த நாள் முதல் கொண்டே இந்தப் பூவுலகுக்கு அருள் மழையாகப் பொழிகின்றார். இந்தப் பூவுலகம் உள்ள வரை பூ மழையாகப் பூரித்தே பொழிவார்.

கொங்கணவரின் வழியில் எடுத்துக் கொண்டால் மனித உடலுக்குச் செல்வச் செழிப்பை அவர் நிலையிலிருந்து அளித்திடுகிறார்.

செல்வத்தின் நாயகனப்பா அந்தக் கொங்கணவர். அவரின் நிலை அவர் தியான முறை எல்லாமே இந்த மனிதர்களுக்குப் பொருள் இருந்தால் பொங்கிச் சிரிப்பர் என்ற நிலைக்குத் தன் தியான நிலையையே அச்சக்தியின் சொரூபத்திலிருந்து தன் வழிக்குப் பல அருள்களை அருளியுள்ளார்.

நமக்குத் தெரியவில்லை என்றாலும் எண்ணிலடங்கா மகரிஷிகள் இன்றும் பூமியின் தொடர்பு கொண்டு மக்களை ஞானத்தின் பாதையில் வழி நடத்தச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
1.வாழும் காலத்தை வீணடிக்காது அவர்கள் அருள் சக்திகளைப் பெற்று
2.அவர்கள் துணையுடன் இந்தப் பிறவிக் கடலை நீந்தி விண்ணுலகம் செல்ல வேண்டும்.
3.இதுவே நம் பிறப்பின் இலட்சியமாக இருத்தல் வேண்டும்.

May 19, 2024

நான் - தான்… நீ - நான்… நான் - நீ…!

நான் - தான்… நீ - நான்… நான் - நீ…!

 

ஓம் ஈஸ்வரா குருதேவா…! கருணைஸ்வரூபா… என்னை ஆட்கொண்டு அருள்வாய் ஈஸ்வரா…! நீ ஒளியாக இருப்பது போன்று என் உணர்வின் நினைவலைகள் அனைத்தும் ஒளியின் சுடராக வரவேண்டும்.

1.அந்த நினைவின் அலையாக நீயாக… நானாக வேண்டும்
2.நான் நீயாக வேண்டும் என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு பாடுவதுதான்
3.கருணைஸ்வரூபா என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா என்பது.

நீ (உயிர்) எப்படி ஒளியாக இருக்கின்றாயோ… உணர்வின் தன்மை உனதாக இருக்க வேண்டும்.
1,எனதின் நிலைகள் உனதாக இருக்க வேண்டும்
2.உனதின் நிலைகள் எனதாக இருக்க வேண்டும்
3.நீ நானாக இருக்க வேண்டும்…! என்ற இந்த நிலையை எண்ணுவதற்குத் தான் “ஓம் ஈஸ்வரா குருதேவா…” என்பது,

ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா…! ஆதியிலே விஷம்… விஷமற்ற நிலைகளில் தாக்கப்படும் பொழுது அது இயக்கமாகி சூடாகி அதனின் உணர்வு கொண்டு அது இயக்கச் சக்தியாக மாறுகின்றது…!

வெப்பம் பராசக்தி ஆகிறது… காந்தம் லட்சுமி ஆக மாறுகின்றது… இந்த விஷம் அதற்குள் “கருமாரியாக நின்று” அது இயக்கச் சக்தியாக அணுவாகின்றது.

இந்த இயக்கத்தைப் போலவே “நம் உயிருக்குள் நஞ்சின் தாக்குதல் தாங்காது இயக்கச் சக்தியாக ஆகி சூடாகி… அந்த உணர்வின் ஈர்ப்பு சக்தியாகி…” தன் உணர்வின் சக்தியை இந்த உடலை உருவாக்கும் உயிராக இருக்கின்றது என்பதைத்தான் ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா உயிர் கருணைஸ்வரூபா என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்பது.

1.நஞ்சின் இயக்கமாக
2.துடிப்பின் இயக்கமாக
3.உயிரின் இயக்கமாகி
4.உயிரின் இயக்கம் வெப்பமாகி
5.நாம் எண்ணிய நிலைகள் காந்தமாகி
6.அதனை இணைத்து நாம் படைக்கும் திறனாக
7.என் உயிராக எனக்குள் இருந்து இயங்கும் நிலை என்பதை உணர்த்தச் செய்வது…
8.நான் யார்…? என்ற நிலையை இந்த உயிரின் இயக்கமாகத்தான் நானாகின்றேன் (இதை இணர வேண்டும்).

“அந்த நானின் தன்மை விளைந்து” (அந்த உணர்வின் தன்மை) அதுவே தானாகின்றது. தானின் நினைவு உணர்வு ஆகும்பொழுது ஒளியாகின்றது
1.நான் தானாக வேண்டும்
2.தான் நானாக வேண்டும் என்ற நிலையில்
3.இதைப் போன்ற ஞானிகள் காட்டிய அருள் வழியினைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைப் பாடுவது “உயிரை நினைத்து…”

என் நினைவை எங்கெங்கோ அலைய விட்டு என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே என்றுமே இருந்துவிடு ஈஸ்வரா.

இந்த உயிரின் தன்மை… உயிர் ஒளியாக இருப்பது போன்று
1.என்றும் நான் ஒளியான நிலைகளாக
2.உன்னுடன் ஒன்றியே நான் ஒளியின் சரீரமாக
3.நான் நீயாக வேண்டும் நீ நானாக வேண்டும்.

ஒளியின் சிகரமாக… நான் தானாகித்தான் நானாகி… அந்த நிலைகள் கொண்டு இந்த உடலின் தன்மை பெற்றாலும்… “என்றும் ஒளியின் சிகரமாக இருக்கும் பொழுது…” நீ நானாகி… நான் நீயாக வேண்டும்…! என்ற இந்த உணர்வின் தன்மை குரு காட்டிய அருள் வழியில் நான் (ஞானகுரு) வேண்டுகின்றேன்.

உணர்வின் தன்மை ஒளியாக மாற வேண்டும் என்ற நினைவு கொண்டு அந்த நிலையான ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்ற இந்த பாடலின் நோக்கத்தை
1.நாம் பரிபூரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் உயிரை வேண்டி
2.அதை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று வேண்டுகின்றேன்.

தியான நிலையையும்… சுவாச நிலையையும்… “ஒன்று தானப்பா…!”

தியான நிலையையும்… சுவாச நிலையையும்… “ஒன்று தானப்பா…!”

 

தியான நிலை சுவாச நிலை வேண்டும் என்று கேட்கின்றாய். இப்பொழுது இங்கே கொடுக்கும் பாடங்கள் எல்லாம் என்னப்பா..?
1.சுவாச நிலையே தான் தியான நிலை.
2.தியான நிலையே தான் சுவாச நிலை.

பூஜையில் அமர்ந்து நீ விடும் சுவாச நிலையில் ஜெபித்திடும் ஜெபங்கள் தான் சுவாச நிலையும் தியான நிலையுமாப்பா…? இல்லையப்பா…!

உன் எண்ணத்திற்குப் பல காலம் பல வழியில் பல வழிகளை நானும் என் சிஷ்யனும் செப்பிவிட்டோம். இன்னும் வேண்டுகிறாய் தியான நிலைக்கும்… சுவாச நிலைக்கும்…!

1.நீ எண்ணும் எண்ணமே தான் தியான நிலையும்… சுவாச நிலையும்… பெரும் ஜெப நிலையும்...!
2.எண்ணும் எண்ணமே தான் உன் வாழ்க்கை நிலையும்… உன் உடல் நிலையும் புரிந்ததா…?

எண்ணும் எண்ணம் போல் வாழ்வு…! என்றிட்டார். எண்ணும் எண்ணமே தான் வாழ்க்கையுடன் கலந்து வருகிறது.

உன் வாய் திறந்து சொல்லும் சொல்கள் தான் காற்றிலே சுற்றுகிறது என்று எண்ணுகிறாய். உன் மனதில் எண்ணும் சிறு எண்ணமும் உன் சுவாச நிலையில் தான் சுற்றுகிறது.

நீ எண்ணும் எண்ணமெல்லாம் உன் சுவாச நிலையில் வெளிப்படுகின்றது. நீ பிறவி எடுத்த நாள் முதல் கொண்டு நீ எண்ணிய எண்ணமும்… நீ சிரித்த… அழுத… பேசிய எல்லா ஓசைகளுமே உன்னைச் சுற்றியே தான் வந்து கொண்டிருக்கின்றது.

உன் கடந்த காலத்தை எண்ணிப் பார்…! உன் நினைவில் நீ ஒன்று நினைத்ததும்… நீ ஒன்று நடத்தியதும் ஞாபகத்தில் வந்திடும்.
1.நீ பேசிய பேச்சுக்கள் மட்டும் தான் சுற்றிக் கொண்டுள்ளது என்று எண்ணுகிறாய்
2.நீ நினைத்ததும் உன்னையே தான் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்தப் பிறவி மட்டுமல்ல…! ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உலகம் தோன்றிய நாள் முதல் அவன் உயிரணுவின் சுவாச நிலை எல்லாமே அவன் உள்ளவரை சுற்றிக் கொண்டே தான் உள்ளது.

இந்த உலகம் சுற்றுவதே இச்சுவாச நிலையில் தான்.
1.மனிதனைச் சுற்றியுள்ள சுவாச நிலையில் மனிதன் வாழ்கின்றான்.
2.உலகைச் சுற்றியுள்ள சுவாச நிலையில் உலகம் உருள்கின்றது.

உன் சுவாச நிலையையும் ஜெப நிலையையும் எந்த நிலைக்கப்பா நான் அருள்வது…? நீ எண்ணும் எண்ணமே தான் சுவாச நிலை… ஜெப நிலை… பெரும் ஜோதி நிலை எல்லாமே…!

காலத்தைக் கடத்திவிட்டாய்…! இனி இருக்கும் காலத்தில் உன் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி சுவாச நிலையையும் ஜெப நிலையையும் எய்திடப்பா…!

எண்ணும் எண்ணத்திலேயே மனிதன் வாழ… எண்ணம்தான் உயிர் ஜீவனப்பா…!
1.உன் உயிருக்கு ஏதப்பா ஆகாரம்…?
2.எண்ணும் எண்ணம் தான் அந்த உயிரின் ஜீவனப்பா…!
3.புரிகிறதா...! மிகவும் விளக்கமாகச் சொல்லியுள்ளேன்.

இந்நிலையைப் புரிந்து கொண்டால் உன் எண்ண நிலையை உயர்த்தி மகரிஷிகளுடனும் சித்தர்களுடனும் கலந்திடலாம்…!

May 18, 2024

“ஈசனின் சக்தியையே” தன் உடல் முழுவதும் ஈர்க்கச் செய்திடலாம்…! புரிந்ததா…?

“ஈசனின் சக்தியையே” தன் உடல் முழுவதும் ஈர்க்கச் செய்திடலாம்…! புரிந்ததா…?

 

சாமியார் ஒருவன்… நானே கடவுள்…! நானே தெய்வம்…! என்கிறான். அவ்விடம் உள்ள கருவின் வேலை வரைக்கும் தான்… அவன் வேலை எல்லாம்…!

ஆண்டவனின் சக்தியை அறிந்திடாமல் “அவனே கடவுள்..” என்கிறான். ஆண்டவன் என்றால் யார் என்றே அவனுக்குத் தெரிந்திடாது. அந்தக் கருவையே ஆண்டவன் என்கிறான்.

பல பூஜைகள் செய்து வருபவர்களின் எண்ணத்தையும் அவர்களின் கடந்த கால நிலையையும் கண்டிடலாம். இதைப் போன்ற நிலையை வைத்துத்தான் பல ஜோசியங்கள் கோவில்களில் உடுக்கை அடித்துச் சாமி கேட்பது எல்லாமே…!

இவ்வாவிகள் அறிந்து வந்து சொல்வது தான் இவை எல்லாம். மை போட்டுக் கேட்கிறார்கள். ஆண்டவனிடம் பூ கேட்கிறார்கள் என்பதெல்லாம் என்னப்பா…? இவ்வாவிகளின் வேலை தான்.

அருளுடன் தெய்வ நம்பிக்கையும் தன் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகள் எல்லாமே இந்நிலைக்கு வருகிறது. இதைப் போல உள்ள ஆவிகள் அனைத்துமே உடலை விட்டுப் பிரிந்தவுடன் மறு ஜென்மம் எடுப்பதில்லை. ஆயிரத்தில் கோடியில் ஒன்று தான் உடனே மறு ஜென்மம் எய்துகிறது.

அவசரத்தினால் எடுக்கும் ஜென்மத்தினால் அங்ககீனமுடன் குறையாகப் பிறப்பது குறைப்பிரசவம் குறையுடன் பிறக்கும் குழந்தைகள் நிலை எல்லாமே இது தான்…!
1.முன் ஜென்மத்தில் விட்ட குறையை
2.ஆவி உலகில் இருந்து அறிந்திட “அவகாசம் இல்லாமல்” வந்து குறையுடன் பிறக்கின்றது.

ஆனால் நல்ல நிலையில் ஆவி உலகில் சுற்றும் மறு ஜென்மம் எடுக்கும் வரை உள்ள ஆவிகள் தன் நிலை உணர்ந்து தன் நிலைக்கு ஏற்ற இடமாகத்தான் பிறக்கும்.

1.குழந்தை பிறப்பதற்கு முதல் ஆவி உலகில் உள்ள வரை அவரவருக்கு முன் ஜென்மம் தெரியும் என்றேன்.
2.ஆவி உலகில் உள்ள பொழுது எந்நிலையில் பிறக்கலாம் என்று தான் தெரியும்.
3.பிறந்த பின் தன் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும் என்பது தெரிந்திடாது.
4.பிறந்த பின் முன் ஜென்மமும் ஆவி உலகமும் அறிந்திட முடியாது. இப்பிறவிக்கு எல்லாமே மறைக்கப்படுகிறது.
5.இந்நிலையில் தான் ஈசனின் சக்தியே விளையாடுகிறது.

பிறப்பு இறப்பு ஆவி உலகம் எல்லாம் அறிந்த மனிதனால் அந்த ஈசனின் சக்தியை மட்டும் அறிந்திட முடிவதில்லை. பல கோணங்களில் ஆண்டவன் என்று வணங்குகிறான்.

அந்த ஈசனின் சக்தியை உணர்ந்த மகா தவ முனிவர்களும் இந்த மனிதர்களுக்குப் புகட்டிடவில்லை. அந்தச் சக்தி நிலையைப் பற்றித் தெரிந்திருந்தாலும்
1.இக்கலியில் வந்த மனிதர்கள்
2.அதையும் தன் வழிக்கு உண்ண காசாக்கி இருப்பார்கள்.

அதனால் தான் முனிவர்கள் நிலையில் தன்னையே தன் உடலையே அச்சக்தியின் அருளுக்கு அடிபணிய வைத்து அச்சக்தியின் அருள் எப்படி உள்ளது…? எந்நிலையில் அந்தச் சக்தியின் அருளைப் பெற்று மக்களுக்கு அருளிடலாம் என்று தான் போகரின் நிலை எல்லாம் வந்ததப்பா…!

உன் நிலையில் ஜெபமிருக்கின்றாய். அஜ்ஜெபத்தின் நிலையில் ஈசனின் சக்தியை உன் நிலைக்கு ஈர்த்திடப்பா…!

எப்படி ஈர்ப்பது என்கிறாய்…? கண்ணில் இல்லையப்பா ஒளி எல்லாம்.
1.இவ்வெண்ணத்தில்… உன் உயிரில்.. புருவத்தின் மேல்…
2.நெற்றியில் இந்நிலையில் தான் ஒளியப்பா…!

கனவில் பார்க்கின்றாய் பல நிலைகளை.. கண்களை மூடிக் கொண்டு…! அந்நிலை எப்படித் தெரிகின்றது…? கடும் இருட்டில் பல பிராணிகள் பூனை எலியைப் பிடிக்கின்றது. எலி பூனையைக் கண்டு தப்பி ஓடுகின்றது. நாய்க்கும் நரிக்கும் பாம்புக்கும் எப்படியப்பா இருட்டில் கண் தெரிகின்றது…?

சூரிய ஒளியில் இருந்துதான் கண் தெரிகிறது… கண் பார்வையினால்… என்று எண்ணுகிறாய்…!

தவ யோக முனிவர்கள் எல்லாம் அவர்கள் அமர்ந்த இடத்திலிருந்தே அனைத்தையும் அறிந்திட்டார்களே…! அது எப்படியப்பா…? ஒவ்வொரு மனிதருக்கும் அவ் ஈசனின் சக்தியில் எல்லா அருளும் உண்டப்பா..!
1.அவரவர்கள் எடுத்து அவர்களின் நிலையை அறிந்திட்டால்
2,கண்ணும் வேண்டாம்… உண்ண உணவும் வேண்டாம்…!
3.அவ் ஈசனின் சக்தியையே தன் உடல் முழுவதும் ஈர்க்கச் செய்திடலாம்… புரிந்ததா…?

ஒவ்வொருவரும் அவ் ஈசனின் சக்தியில் இருந்து பெற்றிருப்பதால் அவரவர்கள் வழியிலிருந்தே அருள் புரிகிறார்கள். இந்நிலை தான் கொங்கணவருக்கும் போகருக்கும் அகஸ்தியருக்கும் கோலமாமகரிஷிக்கும் ஐயப்பனுக்கும் இன்னும் பல மகரிஷிகளுக்கும்…!

1.ஆண்டவன் என்றால் இப்பொழுது யார் என்று புரிந்ததா…?
2.பல வழிச் சாமியார்களின் நிலையும் கோவில்களின் நிலையும் புரிகிறதா…?
3.ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் நிலையும் புரிகிறதா..?

இந்தப் பாட நிலையை வைத்து நான் யார்…? நீ யார் என்னும் நிலை புரிந்திருக்கும்.
1.உன்னையே நீ வணங்கு.
2.உன்னுள்ளே ஈசன் உள்ள பொழுது உன்னுள்ளே அவ் ஈசனின் சக்தியை ஈர்த்திடப்பா..!
3.அந்நிலையில் அறிந்திடுவாய் எல்லாமே…!

நம் ஆன்மாவில் நடக்கும் “சில விசித்திரங்கள்”

நம் ஆன்மாவில் நடக்கும் “சில விசித்திரங்கள்”

 

துன்பப்படும் உணர்வுகளை ஒருவர் பேசுகின்றார் என்று கேட்டறிகின்றோம். அப்போது அவர்கள் வேதனைப்படும் சொல் உணர்வுகளாக நமக்குள் படர்ந்துவிடும்.
1.வேடிக்கையாகத் தானே கேட்டோம்… அவர் சொன்னதைக் கேட்டறிந்தோம் என்று நீங்கள் நினைக்கலாம்.
2.ஆனால் அவர்கள் பட்ட வேதனையான உணர்வுகள் நமக்குள் கலந்து
3.அந்த உணர்வின் மணம் ஆன்மாவில் சுழன்று கொண்டு தான் இருக்கும்.

உதாரணமாக அந்த நேரம் ரோட்டிலே நடந்து செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். முன் பார்வையில் வரக்கூடியதை எல்லாம் நம் கண் காட்டும். அதை இழுத்து நமக்குள் நுகர்ந்து அந்த உண்மையான பாதையில் நம்மை வழி நடத்துகின்றது கண்கள்.

இருந்தாலும் துன்பப்டுவோர் சொன்ன அந்தச் சம்பவத்தைக் கேட்டு… நுகர்ந்து எடுத்த அந்த மணமும் நம் உடலில் இருக்கக்கூடிய இந்த மணமும் கலந்து செல்லும்.

முதலில் கேட்டறிந்த வேதனையான உணர்வுகள் கலந்து ரோட்டில் செல்லும் பொழுது…
1.கண்ணுக்கு நேராகத் தெரியக்கூடியதைப் பார்க்க முடியாதபடி
2.அந்த சமயத்தில் சிந்திக்கும் திறன் இழந்து விடுகிறது.

ஒரு பாலிற்குள் அறியாது ஒரு நஞ்சு பட்டால் அதைச் சாப்பிட்டால் எப்படி மயக்கம் வருகின்றதோ அதைப் போல கேட்டறிந்த இந்த உணர்வுகள் நம் உடலில் ஆன்மாவாக… வாசனையாக இருக்கப்படும் பொழுது… கண் முன்னாடி வரக்கூடிய பொருளைக் காண்பித்து இதனுடன் இணைந்து போன உடனே “சிந்திக்கும் திறன் இழந்து விடுவோம்…”

அந்த சமயத்தில் முன்னாடி வண்டி வரும்… சீக்கிரம் விலகி விடலாம் என்ற எண்ணம் வராது. பஸ் வரும்… தெரியாது…!

சில பேரை நீங்கள் பார்க்கலாம் வண்டி வந்து கொண்டிருக்கும்… அது தெரியாது முன்னாடி போய்க் கொண்டே இருப்பார்கள். பஸ்ஸிலையோ காரிலேயே போகும் பொழுது இது போன்று நாம் பார்க்கலாம்.

முன்னாடி பார்ப்பார்கள்… ஆனால் நடந்து கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் முதலில் பார்த்தது வேடிக்கையானதாக… வேதனையான உணர்வுகளைக் கேட்டறிந்தாலும் அந்த மணம் இங்கே வந்துவிடுகிறது.
1.பஸ் மிகவும் அருகிலே வந்த பின் தான் ஆ…! என்று பயந்து துள்ளிக் குதித்து ஓடுவார்கள்… பார்க்கலாம்
2.சில நேரங்களில் கவலை தோய்ந்த நிலையோ வேதனைப்படும் நிலையோ கேட்டறிந்தால் நாமும் இப்படித்தான் நடப்போம்.

நாம் தவறு செய்யவில்லை… அவர்… தான் பட்ட கஷ்டத்தைச் சொன்னார் அதைக் கேட்டோம். நம்மை அறியாமலே ஒரு நொடி ஏமாந்தால் விபத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.

மற்ற கோள்கள் சந்திரனை மறைக்கப்படும் பொழுது அங்கே எப்படி ஒளி மங்குகின்றதோ இதைப் போல
1.நமக்குள் இருக்கும் தெரிந்து கொள்ளும் உணர்வின் தன்மையை
2.ஒவ்வொரு எண்ணத்திலும் “சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்டது” இப்படி மறைத்து விடுகின்றது.

அதனால் தப்பித்துக் கொள்ளும் நிலை இல்லாதபடி இதிலே சிக்கி எத்தனையோ பேர் வேதனைப்படுவரையும் பார்க்கலாம்.

நமக்குள் “1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு” அவை தான் மனிதனை… மனிதனாக உருவாக்கச் செய்தது மனித வாழ்க்கையில் தன்னைக் காத்திடும் நிலையும்… மனிதனாக ஆன பின் இந்த உடலையே ஒளிச் சரீரமாக மாற்றி பிறவா நிலையை உருவாக்கும் “மனித உடல் - கடைசி…”

உதாரணமாக சூரியன் பிரகாசமான நிலையில் ஒளி வீசிக் கொண்டிருந்தாலும் பூமிக்குள் இங்கே மேகங்கள் படர்ந்து விட்டால் அந்த ஒளி மறைந்து விடுகின்றது.

அது போல் நம்முடைய எண்ணங்கள் எவ்வளவு பிரகாசமாக இருந்தாலும்
1.பிற மனிதனுடைய எண்ணங்கள் அதை மறைத்து
2.நம் எண்ணங்களைப் பிறர் கேட்க விடாதபடி குற்றவாளியாக்கச் செய்வதும்
3.துன்ப உணர்வுகளைக் கேட்டுணர்ந்ததால் நம் நல்ல எண்ணங்களை அங்கே பிரதிபலிக்க முடியாதபடியும் செய்து விடுகிறது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

பிறிதொரு மனிதன் வேதனைப்படும் சொல்லோ… அல்லது மற்ற குறைபாடுகளோ… அதை அவர்கள் நமக்குச் செய்ய வேண்டாம்…! அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்… நாம் வேடிக்கை பார்த்தால் போதும்.
1.”அவருடைய செயலை” நம் கண் இழுத்துக் கவர்ந்து நம்மைச் சுவாசிக்கச் செய்கின்றது.
2.சுவாசித்த பின் நம் உயிரிலே படுகின்றது அதை உணர முடிகின்றது தெரிந்து கொள்ள முடிகின்றது.

ஆனால் தெரிந்து கொண்டது… அவன் உடலில் தவறான நிலையில் செய்தது… அதைக் கவர்ந்து நம் உடலுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்யப்படும் பொழுது
1.அன்றைக்கு “ஒரு நான்கு மணி நேரத்திற்காவது”
2.நம் உடல் இழுத்து ஆன்மாவாகப் பெருக்கிக் கொள்ளும்.

அதன் பின் வேறு எந்த எண்ணங்கள் எண்ணினாலும் அதனுடன் கலந்து கலந்து… அன்றைய வாழ்க்கையில் வெறுப்பு சலிப்பு சஞ்சலம்… என்று அடைந்து
1.இது என்ன வாழ்க்கை…? இந்த மாதிரி நடந்து கொண்டிருக்கின்றது…! என்று நாம் சொல்லிக் கொண்டே இருப்போம்.
2.இந்த உணர்வுகள் நமக்குள் ஆழமாக அதனின் வித்தின் தன்மையாக அடைந்து விடுகிறது.

நம் உடலில் 1008 குணங்களாக வளர்ச்சி பெற்று புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் தப்பித்துத் தப்பித்து வந்தோம். இருந்தாலும் இது போன்ற சந்தர்ப்பங்களில் நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தாது விட்டுவிட்டால் தீமையின் விளைவுகளுக்கே நம்மை அழைத்துச் சென்று விடும்.

ஆகையினால் தான் உங்களை "அடிக்கடி... அடிக்கடி" ஆத்ம சுத்தி செய்து கொள்ளும்படி சொல்கிறோம்.

May 17, 2024

உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்ற வேண்டியது மிகவும் முக்கியமானது

உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்ற வேண்டியது மிகவும் முக்கியமானது

 

நோயாளியைப் பார்க்கின்றோம்… அவருடைய நோயைப் பற்றி அறிகின்றோம். அவருக்கு உதவியும் செய்கின்றோம். ஆனாலும் அவரின் நோய்க்குக் காரணமான உணர்வுகள் நமக்குள் வலுவாகிவிட்டால் அதை நாம் துடைப்பதில்லை… துடைக்கத் தெரிவதில்லை.

நோய் வளர்ந்த பின் மருத்துவர்களிடம் சென்று அதற்குத் தக்க மருந்தை உட்கொண்டு மாற்றிக் கொள்கின்றோம்.
1.நோயாளியைப் பார்த்த உணர்வு ஊழ்வினை என்ற வித்தாக நமக்குள் பதிவாகி இருக்கின்றது.
2.அதை நீக்குவதில்லை… நீக்கத் தெரியவில்லை
3.அப்போது மருந்து சாப்பிட்டு நோயை நீக்கினாலும் அந்த நோய் மீண்டும் வந்து கொண்டே தான் இருக்கின்றது.

வயல்களில் களைகளைப் பிடுங்குகின்றோம்… மீண்டும் அந்தக் களைகள் முளைக்கத்தான் செய்கின்றது. அது போல் அன்றாடம் எத்தனையோ தீமைகளைப் பார்க்கின்றோம். உடலில் அந்தத் தீமைகள் அதிகமாகி விட்டால் நோயாகி விடுகிறது.

டாக்டர்களை அணுகி அந்த நோயை நீக்கினாலும் களைகளைப் பிடுங்கிய பின் மீண்டும் அது எப்படி முளைக்கின்றதோ அதைப் போன்று நமக்குள் மீண்டும் நோய் வருகின்றது.

நோயை நீக்க…
1.இன்னொரு விஷம் கொண்ட மருந்துகளைக் கொடுக்கப்படும் பொழுது அதில் உள்ள விஷமும் உடலுக்குள் சேர்ந்து விடுகிறது
2.நோய்களை நீக்க இப்படி.. பல உபாயங்களைச் செய்தாலும்
3.அந்த விஷத்தன்மைகளால் உடல் உறுப்புகள் பாழாகிக் கொண்டுதான் இருக்கின்றது.

சிறிது காலம் வாழ்வதற்கு எத்தனையோ உபாயங்களை நாம் செயல்படுத்துகின்றோம். உடல் உறுப்புகள் பழுதானால் நுரையீரல்… இருதயம் இவ்வாறு மாற்று உறுப்புகளை வைத்து மருத்துவர்கள் வாழ வைக்கின்றார்கள்.

உடலில் எலும்பே இல்லை என்றாலும் இன்னொரு உடலில் இருந்து எலும்பை உருவாக்கும் அணுக்களை வைத்து… “மோல்டு செய்வது போன்று எலும்பை உருவாக்கி…” அதை மனிதனுக்குப் பொருத்துகின்றார்கள்.

ஏனென்றால் எலும்பை உருவாக்கிய அணுக்களை அது பெருக்கப்படும் பொழுது அதனுடைய மலம் எலும்பாக வளர்கின்றது. பண வசதி உள்ளவர்கள் பல லட்சங்கள் ஆனாலும் அதைப் பொருத்திக் கொள்கின்றார்கள்.

ஆனால் அப்படிப் பொருத்திக் கொண்ட நிலையில்… கால்களையோ மற்ற அங்கங்களை இழந்து இருந்தாலும்… மற்றொருவர் எந்தவிதப் பின்னமும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கப்படும் பொழுது
1.அவர்களைப் போன்று நமக்கு இல்லையே… நாம் இப்படி இருக்கின்றோமே…! என்ற வேதனை உணர்வு மீண்டும் வருகின்றது.
2.இப்படித் தொடர்ந்து வரும்போது முழுமையாக நோயிலிருந்து விடுபட முடிவதில்லை.

எத்தனையோ செல்வங்களைச் செலவழித்து உறுப்புகளை மாற்றி அமைத்தாலும் உடலை விட்டுச் செல்லும் பொழுது வேதனை உணர்ச்சிகள் உயிரோடு சேர்ந்தே செல்கின்றது.

நோயை நீக்க மருந்துகளை உட்கொண்டே வந்தாலும்… கடைசியில் இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது அதற்குத்தக்க மாற்று உடலை இந்த உயிர் ஏற்படுத்தி விடுகிறது.

ஆனால்
1.விஷத்தன்மைகளை எல்லாம் நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நுகர்ந்து நம் உடலில் பதிவாக்கி
2.தீமை என்ற உணர்வைக் கண்டால் உடனே அதை மாற்றி அமைத்து
3.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களையும் நாம் நல்லதாக மாற்றி அமைக்க முடியும்.
4.துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஊழ்வினையாக மாற்றிக் கொள்ள முடியும்
ஒரு மனிதனுடைய மேல் தோல் பாழாகி விட்டால் அந்தத் தோலை உருவாக்கும் அணுக்களை வைத்து அழகான தோலையும் பொருத்தி விடுகின்றார்கள்.
1.ஆனாலும் உயிரைப் போன்று உணர்வின் தன்மை
2.ஒளியாக்கும் திறன் அவர்களிடம் இல்லை.

விஞ்ஞான அறிவு கொண்டு இந்த உடலைக் காக்க வேண்டும் என்று முயற்சிகள் எடுத்து எடுத்து வாழ்ந்தாலும் வேதனை உணர்வுகள் உடலில் வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றது இந்த உடலில் சேர்த்துக் கொண்ட நிலைக்கொப்ப அடுத்த மாற்று உடலை இந்த உயிர் உருவாக்கி விடுகிறது.

ஆனால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கி… துருவ நட்சத்திரத்தின் நினைவை அடிக்கடி கொண்டு வந்தால் உயிரான்மாவில் இது வலுவாகிறது.

பிறர் கஷ்டப்படுவதோ வேதனைப்படுவதோ துயரப்படுவதோ அல்லது உடலை விட்டு பிரிந்தவர்கள் பற்றிக் கேள்விப்படும் போதோ… அந்த நேரங்களில் எல்லாம் அதைத் தடுக்க…
1.ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் கொண்டு வந்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிர் வழி கவர்ந்து
3.அதே கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உடலை உருவாக்கி அணுக்கள் அனைத்தும்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று உள்முகமாகப் பாய்ச்சி
5.மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலைகளை மாற்றிக் கொள்ள முடியும்.

இயற்கையின் முழு சக்தியை இன்னும் எந்தச் சித்தனாலும் பெற முடியவில்லையப்பா…!

இயற்கையின் முழு சக்தியை இன்னும் எந்தச் சித்தனாலும் பெற முடியவில்லையப்பா…!

 

ஒரு கொசு எப்படித் தனக்குகந்த ஆகாரம் உள்ள இடத்தில் சுற்றிக் கொண்டுள்ளதோ அப்படித்தானப்பா இந்த மனித மனங்களும் எண்ணங்களும் பிறவிப் பயனை வைத்து அடுத்த பிறவிக்கு வர முற்படுகிறது.

ஒரு அரசனின் வயிற்றில் அவதரிக்கின்றான் அரச குமாரன். தன் நிலைக்கு உகந்த இடமாகத்தான் ஆவி நிலையிலிருந்து அவதரிக்கின்றான் அந்தக் குமாரன்.

ஆனால் ஆயிரம் ஆயிரமாக அந்த அரசன் செல்வத்தைத் தேடி வைத்திருந்தாலும் இந்த அரச குமாரன் அந்தச் செல்வத்தை அவன் வழியில் அழித்துவிடுவதில்லையா…? அப்பொழுது அரசனும் ஆண்டியாகிவிடுகின்றான்.

ஆனால் ஏழ்மை நிலையில் பிறக்கும் சில குழந்தைகள் தன் ஏழ்மையை எண்ணிடாமல் எப்படியும் உயர்ந்த நிலை அடைந்திடலாம் என்று எண்ணும் பொழுது தன் எண்ணத்திலேயே செல்வ நிலைக்கும் உயருகிறது.
1.இந்நிலைக்கு அந்நிலையிலிருந்து உயரும் குழந்தையின் நிலைக்கும்
2.பூர்வ புண்ணிய நிலையிருந்தால் தான் உயர முடியும்.
3.எண்ணமே அப்பொழுது தான் தோன்றிட முடியும்.

உங்கள் எண்ணத்தில் சில சந்தேகங்கள் தோன்றியிருக்கும். ஏன் ஆவி நிலையில் இருந்து கொண்டே எல்லோரும் செல்வம் உள்ளவரின் வயிற்றில் அவதரிக்கலாமே….! என்று எண்ணலாம். இந்நிலையில் தானப்பா அந்த ஆண்டவனின் சக்தி உள்ளது.

உடலிலிருந்து ஆவி பிரியும் பொழுது அந்த ஆவியின் ஆசை நிலையை வைத்துத்தான் பிறக்கின்றது… “மறு பிறப்பு” என்றேன் முதலிலேயே.

அந்த ஆசை நிலை என்பது பல ரூபத்தில் உள்ளது. பணம் காசு மட்டுமல்ல…! பந்தபாசம் கோபதாபம் எல்லா நிலைகளிலுமே அந்த ஆசை நிலைகள் உள்ளன. ஆவி நிலையில் இருந்து கொண்டு அவ் ஏழ்மை நிலையை அறிந்து தான் அந்தக் குழந்தை பிறக்கின்றது.

தன் நிலையில் உயர்ந்திடலாம் என்ற எண்ணத்திலும் தன்னால் அந்தக் குடும்பத்தை உயர்த்திடலாம் என்ற நிலையிலும் எண்ணிப் பிறக்கிறது.
1.ஆனால் பிறந்தவுடன் தான் எல்லாமே மறைக்கப்படுகிறதே…!
2.அச்சக்தியின் நிலையிலிருந்து அங்கு தான் இருக்கிறதப்பா ஆண்டவனின் சக்தி.

அந்தச் சக்தி நிலையைப் பெறத்தான் சித்தர்கள் தவமிருந்து பல பேறுகளைப் பெற்றார்கள். ஆனாலும் அந்த ஆதி சக்தியின் அண்ட கோடிகளில் அடங்கி உள்ள அந்த முழுச் சக்தி நிலையை இன்னும் எந்தச் சித்தனாலும் பெற முடியவில்லையப்பா…!

சித்தர்கள் மகரிஷிகள் எல்லோருமே அந்தச் சக்தியின் நிலையைப் பெறத்தான் இன்னும் தவமிருந்து ஜெபமிருந்து கொண்டுள்ளார்கள்.

இப்பொழுது தான் நீங்கள் கடுகளவிலிருந்து மிளகளவு வந்துள்ளீர்கள்.
1.இன்னும் உலக நிலையையே என்ன…? என்று தெரிந்திடாமல் குடும்ப நிலையிலேயே கலங்கியுள்ளீர்கள்.
2.ஜெப நிலையைக் கூடிய விரைவில் உயர்த்திக் கொள்ளுங்கள்.
3.இந்தப் பாட நிலையிலிருந்து பலவும்… பல வழியிலும் புரிய வைக்கின்றேன்.

நான் (ஈஸ்வரபட்டர்) பெற்ற ஜெப அருளிலிருந்து என் வழிக்குத் தெரிந்ததை உங்கள் வழிக்கும் புகட்டுகின்றேன். என் வழிக்கு நீங்களும் மேலும் வந்திடலாம்.

May 16, 2024

உங்கள் கண்களை மிகச் சக்திவாய்ந்ததாக மாற்ற வேண்டும்

உங்கள் கண்களை மிகச் சக்திவாய்ந்ததாக மாற்ற வேண்டும்

 

ஆண்டனாக்களின் பவரைக் கூட்டும் பொழுது வெகு தொலைவில் இருக்கும் விண்ணின் ஆற்றலையும் செயற்கைக்கோள் மூலமாக ஈர்க்க முடிகிறது விஞ்ஞான அறிவால். அங்கிருந்து வரும் அலைகளை நாம் கவர்ந்து வீட்டிலே டிவி பெட்டி மூலமாகப் பார்க்கின்றோம்.

அதைப் போன்று… அந்த மகா ஞானிகளுடைய உணர்வுகளை இப்போது யாம் உபதேசிக்கும்போது நீங்கள் அதைக் கூர்ந்து கவனித்தால்
1.உங்கள் உடலில் ஊழ்வினையாகப் பதிவு செய்வது மட்டுமல்ல.
2.உங்கள் கண்ணுக்குள் இருக்கும் கருவிழிக்குள் நினைவின் ஆற்றல் வளரப்பட்டு
3.அது ஆழமாகப் பதிவான பின் உபதேசித்ததை எண்ணும் பொழுது
4.விஞ்ஞானிகள் சக்தி வாய்ந்த ஆண்டனாக்களைக் கொண்டு வருவது போன்று
5.உங்கள் கண்களை ஆண்டனாவாக… மிக சக்தி வாய்ந்ததாக மாற்ற வேண்டும்.

இப்பொழுது இதைக் கேட்டுணரும் பொழுது கண்ணுக்குள் அந்த வலுவின் தன்மை அடைகின்றது. அதே சமயத்தில் யாம் சொல்வதை
1.உங்கள் கண் ஈர்த்து உங்களுக்குள் முதலிலே ஊழ் வினையாகப் பதிவு செய்கின்றது.
2.அதே சமயம் கண்ணுக்குள் இருக்கக்கூடிய கருவிழிகளுக்கு…
3.திரைகளுக்கு அனுப்பும் அந்த ஒவ்வொரு நுண்ணிய அலைகளிலும் “சக்தி வாய்ந்ததாக” இது சேர்கின்றது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் “ஆண்டனா பவர்” (சக்திவாய்ந்த) போல அதைக் கவர்ந்து… உங்களைச் சுவாசிக்கச் செய்து… உங்கள் உடலுக்குள் சென்று தீமையான நிலைகளை நீக்கிட இது உதவும்.

தீமைகளை நீக்கி… அந்த அருள் சக்திகளை வலுகொண்டதாக மாற்றுவதற்கு… குருநாதர் எனக்கு எவ்வாறு அருள் உணர்வுகளைப் பயன்படுத்தினாரோ அதைப் போன்று தான்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்
2.உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப் பொருளை நீங்கள் காண வேண்டும் என்று அதைப் பெறச் செய்கின்றோம்

அதன் பின்பு… தீமை நீங்கிய உணர்வை நீங்கள் பேசப்படும் போது உங்கள் மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்த அலைகளாகப் பரவச் செய்கிறது.

1.நீங்கள் யாருடன் தொடர்பு கொண்டு பேசினாலும்
2.மற்றவர்கள்… அவரின் உணர்வுகள் அறியாது சென்றாலும்
3.”உங்களுடைய மூச்சலைகள்” அவர்களுடைய தீமைகளை நீக்கக்கூடியதாக… மிகச் சக்தி வாய்ந்ததாக மாறும்.

அதற்கு இது நிச்சயம் உதவும்.

விட்ட குறை

விட்ட குறை

 

எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…! இந்தச் சொல்லைப் பாட நிலையின் முதலிலிருந்தே இன்று வரை சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ
2.அதற்குத் தக்கவாறான சுவாச நிலையில் வருவது தான் எல்லாமே என்று பல முறை செப்பியுள்ளேன்.

பூர்வ ஜென்மப் பயனை வைத்து… முதல் ஜென்மத்தில் விட்ட குறையை முடிக்க… ஆவி நிலையிலிருந்து தன் நிலைக்கு ஒத்த சுவாச நிலையை ஈர்த்துத் தான் “குழந்தைகள் பிறக்கின்றது…” என்று கூறியுள்ளேன்.

ஆண்டவனின் அருளில் பூர்வ ஜென்மத்தின் பலனை அவர்வர்கள் நிலைக்கு எடுத்துக் கொண்டால் தான் அந்தப் பலனையே பெற்றிட முடியுமப்பா…!

போன ஜென்மத்தில் நீ செய்த பயனாக… பூர்வ ஜென்மத்தின் பலனால் பல புண்ணியங்கள் செய்தும்.. அந்நிலைக்கு சூட்சம நிலைக்கு ஆண்டவன் என்னும் நிலையின் ரிஷியின் நிலைக்கே வரும் தன்மையைச் சிறிதளவு தவறவிட்டதனால் தான் “இந்த ஜென்மமே எடுத்துள்ளாய்…!”

இந்த ஜென்மத்திலும் பிறவி நிலையிலேயே உன் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருந்தால் உன் நிலையும் வேறாகத் தான் இருந்திருக்குமப்பா…!

1.போன ஜென்மத்தில் நீ வைத்திருந்த ரிஷியின் தொடர்பினால்
2.இந்த ஜென்மத்திலும் உன்னை… உன் எண்ணத்தை… அவன் ஒரு நிலைப்படுத்தி வழி நடத்திச் செல்கின்றான்.
3.ஆகவே கால நிலையைத் தவற விட்டிடாதே...!

இந்த ஜென்மத்தில் உன் எண்ணமெல்லாம் உயர் நிலையில் செல்வ நிலையில் இருந்ததனால் தான் உன் பூர்வ ஜென்மத்தின் பயனால் இந்த மெய் ஞானத்தைப் பெறும் பேற்றையே பெற்றாயப்பா…!

படிக்கும் ஒவ்வொருவருக்கும் புரிவதற்காக இந்நிலையைப் புகட்டியுள்ளேன். பெற்ற சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள்.
1.மகரிஷிகளுடன் ஐக்கியமாகுங்கள்.
2.அவர்கள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முற்படுங்கள்.

May 15, 2024

என்னுடைய பாதுகாப்புக்காக… குருநாதர் கொடுத்த விண்ணின் ஆற்றல்

என்னுடைய பாதுகாப்புக்காக… குருநாதர் கொடுத்த விண்ணின் ஆற்றல்

 

உங்கள் கஷ்டங்களைச் சொல்லி அதிலிருந்து நிவாரணம் தேட என்னிடம் (ஞானகுரு) கேட்டாலும்… நான் கேட்டறியும் பொழுது அந்த உணர்வை என் செவிப்புலன் ஈர்த்து… அந்த உணர்ச்சிகளைத் தூண்டி சுவாசித்து… பின் என் உயிரிலே பட்டு அறிந்து தான் “நான் பதில் சொல்ல வேண்டி வரும்…”

குருநாதர் கொடுத்த சக்திகள் கொண்டு பல உபகாரங்களைச் செய்தாலும் நீங்கள் சொல்லும் கஷ்டமான உணர்வுகள் என் உடலுக்குள் சென்று விட்டால் அது கடுமையான தீய விளைவுகளை எனக்குள் உண்டாக்கிவிடும்.

அவைகளைச் சமப்படுத்துவதற்கு குருநாதர் அந்த விண்ணின் ஆற்றலை நீ எவ்வாறு பருக வேண்டும்…? என்று தெளிவாக உணர்த்தினார்.
1.விண்ணின் ஆற்றலை எடுத்துச் சுத்தப்படுத்தி… அதை வேக வைத்து
2.அதனைச் சமப்படுத்தி… சுவை ஆக்கி
3.யார் உன்னிடம் சொன்னார்களோ அவருடைய தீமைகளை நீக்க இந்த உணர்வின் வாக்கினை அங்கே பதிவு செய்து
4.தீமையிலிருந்து அவர்கள் விடுபடச் செய்வதற்கு நீ இதைச் செய்…! என்று சொன்னார்.

அருள் ஆற்றல்மிக்க விண்வெளியின் ஆற்றலை எப்படிப் பருக வேண்டும் என்ற உணர்வினை எமது குருநாதர் எனக்குள் உபதேசித்து…
1.அந்த உணர்வின் தன்மையைக் கூர்மையாகக் கவனிக்கச் செய்து… அதை ஊழ்வினையாகப் பதிவு செய்து
2.நீங்கள் துன்பம் என்று எம்மிடம் சொல்லும் போது அதைக் கேட்டுணர்ந்தாலும்
3.அந்தத் துன்பங்கள் எனக்குள் விளையாத வண்ணம் தடுக்க
4.அடுத்து குருநாதர் காட்டிய அருள் வழியில் விண்ணை நோக்கி ஏகி
5.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற ஏக்கத்தைச் செலுத்தி
6.அது என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அன் உணர்வுகள் அனைத்திலும் கலக்கச் செய்கிறேன் (ஞானகுரு)

உதாரணமாக தங்க நகைகள் செய்ய செம்பும் வெள்ளியும் வைத்து… அதைத் தெரிந்தே தான் கலக்கின்றோம். ஆனால் அதை வைத்து அடுத்த நகை செய்யப்படும் பொழுது திரவகத்தை ஊற்றி அந்த செம்பையும் வெள்ளியையும் நீக்கிவிட்டு மீண்டும் சுத்தத் தங்கத்தை வைத்து நகை செய்யச் செல்கின்றோம்.

அது போல் நீங்கள் ஆயிரக்கணக்கான பேர் வந்தாலும்… உங்களுக்கு நான் நன்மை செய்ய வேண்டும் என்று சொன்னாலும்… உங்களுடைய துன்பங்களைச் சொல்லும் போது அதைக் கேட்டுணர்ந்தே நான் உதவி செய்ய முடிகிறது.

கேட்டறிந்த அந்தத் தீமை எனக்குள் சேராத வண்ணம் குருநாதர் காட்டிய வழியில்
1.அவர் எனக்குக் கொடுத்த… எனக்குள் பதிவு செய்த… உயர்ந்த எண்ணத்தின் சக்தியை வலுவூட்டச் செய்து
2.விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன்
3.அதை நுகர்ந்து என் உடலுக்குள் செலுத்துகின்றேன்.

அன்று வாழ்ந்த மெய்ஞானிகள்… தங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக விண்ணிலே வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வரும் சென்ற அந்த அரும் பெரும் சக்திகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நம் பூமியிலே படரச் செய்து கொண்டிருப்பதைத் தான் குரு எனக்குள் பதிவு செய்தார்.

அதை நினைவு கொண்டு நான் எண்ணும் பொழுது அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளைச் சுவாசிக்க நேர்கின்றது.

தங்கத்தில் திரவகத்தைத் விட்ட பின் அதில் இருக்கக்கூடிய அழுக்குகள் பிரிவது போன்று அந்த அருள் ஞானிகளின் உணர்வலைகள் என் உடலுக்குள் சென்று தீமை விளைவிக்கும் உணர்வினை அது தணிக்கச் செய்கின்றது… அதைப் பிரித்து விடுகின்றது.

இதுதான் ஆத்ம சக்தி என்பது…!

அனைவரும் என்னிடம் கஷ்டங்களைச் சொல்லும் போது உடனுக்குடன் நான் அதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால்
1.உங்களுக்கு முன்னாடி எத்தனையோ நிலைகள் எனக்குள் மாறிவிடும்.
2.உங்களுக்கு நான் நன்மை செய்தாலும் நீங்கள் பட்ட சிரமங்கள் எல்லாம் எனக்குள் சுமையாக வந்து என் நல்லதை மூடி மறைத்து விடும்.

ஆகவே தீமைகளை நீக்குவதற்கு குருநாதர் எனக்குக் கொடுத்த “உபாயத்தை” அந்த மகரிஷிகள் உணர்வினை உங்களுக்கும் கொடுக்கின்றோம்.

எந்த அளவிற்கு நீங்கள் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ அந்த அளவுக்கு ஆற்றல்மிக்க சக்தி உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகும்.

அதற்கப்புறம் நீங்கள் தீமையை எப்பொழுது சந்திக்க நேர்ந்தாலும்…
1.உடனே ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும்போது
3.முன்னாடி இருக்கும் மகரிஷிகள் அருள் உணர்வுகளைச் சுவாசிக்க நேர்கிறது.

ஆகவே விண்ணின் ஆற்றலைப் பெற நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும்.

தூக்கத்தில் வரும் கனவுகளின் இயக்கங்கள்

தூக்கத்தில் வரும் கனவுகளின் இயக்கங்கள்

 

நாம் நினைவில் உள்ள பொழுது நடப்பதற்கும்… உறக்கத்தில் காணும் கனவிற்கும்.. என்னப்பா மாற்றம் உள்ளது…?

1.அதிகாலை கனவு பலிக்கும்…!
2.நினைவில் நிற்காத கனவினால் பலன் ஒன்றும் இல்லை...! என்றெல்லாம்
3.கனவின் சகுனங்களையும் பலர் பல விதத்தில் கனவின் உருவம் கண்டு சொல்கிறார்கள்.

நாம் உறக்கத்தில் இல்லாத பொழுது செய்யும் வேலைகளும்… நாம் பேசும் சொற்களும்.. நாம் படிப்பது… பார்ப்பது… இப்படிப் பல நிலைகளில் நம் எண்ணத்துடன் அச்சுவாச நிலை நாம் எடுக்கும் பொழுது நாம் நினைவில் வாழும் நிலையாக உள்ளது.

நாம் உறக்கத்தில் உள்ள பொழுது நம் எண்ணங்கள் உறங்கினாலும்
1.நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டு
2.இந்த உலகில் கலந்துள்ள பல அணுக்களின் சுவாச நிலையும் நம் சுவாசத்தில் வந்து கொண்டே உள்ளது.

அந்நிலையில் நம் ஆத்மா அச்சுவாச நிலையுடன் செயல்படும் பொழுது பல நிலைகளில் உள்ள சுவாசங்கள் நம் சுவாசத்துடன் கலப்பதால்
1.பல விபரீதக் கனவுகளும்
2.நாம் எண்ணியே பார்த்திடாத சில நிலை கொண்ட கனவுகளும்
3.சிதறுண்ட நிலையிலும்
4.நம் உணர்வையே நாம் உணர்ந்திடாத சில பயங்கர நிலையில் நம் உடல் சிதையுண்ட நிலையிலும் கனவுகளாக வருவதைக் காணுகின்றோம்.

இப்படிப்பட்ட கனவெல்லாம் எந்த நிலையில் இருந்து வருகின்றது…?

பல சிதறுண்ட கனவுகள் அடிக்கடி நம் கனவில் காண்பதனால் அவை நம் ஆத்மாவிற்குச் சில தீங்குகள் விளைவிக்கின்றன.

கனவில் வருபவை எல்லாமே இந்த உலகில் கலந்துள்ள பல கோடி அணுக்களில் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் இப்படிப் பல உயிரணுக்களின் சுவாச நிலையின் உந்துதலினால்தான்
1.நம் எண்ணத்தை (தூக்கத்தில்) நாம் மறந்திருக்கும் பொழுது
2.நம் சுவாச நிலையிலும் இந்நிலையின் உந்துதலுக்கு நாம் ஆளாகின்றோம்.

இறந்தவர்கள் கனவில் வருவதுவும் நம் சுவாச நிலையைக் கொண்டு தான்…! அவர்கள் ஜீவனுடன் இருந்த காலத்தில் அவர்கள் விட்ட சுவாச நிலையைக் கொண்டு நம் சுவாச நிலைக்கேற்ப ஈர்ப்பு நிலை கொண்டு தான் கனவுகளில் வருகிறார்கள்.

இந்நிலையில் இக்காணும் கனவெல்லாம் நம் ஆத்மாவைப் பாதிக்காமல்… கனவிலேயே பல உண்மை நிலைகளைக் கண்டிடும் வண்ணம் “நம் சுவாச நிலையை நாம் ஒரு நிலைப்படுத்தி…” ஒழுங்குபடுத்த வேண்டும்.

நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கை நிலையிலிருந்தே நம் சுவாச நிலைக்குப் பல உன்னத நிலையை எடுத்துக் கொண்டு வரும் பொழுது
1.எப்படி நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்குத் தியானத்தின் மூலம் உரம் அளிக்கின்றோமோ
2.அதைப் போல் நாம் கனவில் காணும் நிலையில் நல்ல நிலையுடன் கூடிய கனவுகளாக
3.நம் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்கு உரம் தேடி வைக்க முடியும்.

நாம் உறங்கும் பொழுது பல எண்ணங்களை எண்ணிக் கொண்டே இருப்பதால் அப்படிப் பல எண்ணங்களை எண்ணும் பொழுதே நம் சுவாச நிலை கொண்டு அதற்கொத்த நிலைகளும் வந்து மோதத்தான் செய்யும்.

ஆகவே அத்தகைய எண்ணங்களுக்கு நாம் அடிமையாகாமல்
1.ஜெப நிலையிலேயே நாம் உறங்கும் பொழுது
2.நம் சுவாசமும் நம் உயிரணுவும் ஒரே நிலையில் அவ்வாண்டவனின் சக்தியை ஈர்க்கின்றது.

அந்நிலையில் இருக்கும் பொழுது நமக்குப் பல அணுக்களின் நிலைகள் நம் சுவாசத்திற்கு வந்திடாமல் ஒரே அமைதி கொண்ட நிலையில் நாம் உறங்கி எழுந்திடலாம்.

கனவும் நினைவும் கலந்தது தான் இந்த வாழ்க்கையே…! விழிப்பில் உள்ள பொழுது தீய அணுக்கள்.. நல்ல அணுக்கள்… என்று நம் சுவாச நிலைக்கு எப்படி வருகின்றனவோ அந்நிலை கொண்டே தான் கனவிலும் நடக்கின்றது.

நம் ஆத்மாவிற்கு இரண்டு நிலைகளுமே ஒரே நிலை கொண்ட உணர்வுகளைத்தான் ஈர்க்கின்றது. அந்நிலையிலிருந்து…
1.நாம் இதை எல்லாமே கனவான வாழ்க்கையின் – “கனவு…நினைவு…” என்று புரிந்து கொண்டு
2.எல்லாவற்றிலும் ஒரே நிலை கொண்ட அவ்வீசனின் சக்தியை ஒரே நிலையில் ஈர்த்து
3.நம் ஆத்மாவிற்கு நல்ல நிலையைத் தேடிக் கொள்வது ஒன்று தான்
4.நாம் எடுத்திடும் பெரும் முயற்சியாக இருந்திட வேண்டும்.

May 14, 2024

என்னை இப்படிச் சொல்லிவிட்டானே…! என்று “அதையே எண்ணி” நம் வாழ்க்கையையே கெடுத்துக் கொள்கின்றோம்

என்னை இப்படிச் சொல்லிவிட்டானே…! என்று “அதையே எண்ணி” நம் வாழ்க்கையையே கெடுத்துக் கொள்கின்றோம்

 

எனக்கு இடைஞ்சல் செய்தான்… பாவி..! “தொலைந்து போகிறவன்… மோசமானவன்…!” இப்படி எல்லாம் செய்தால் உருப்படுவானா…? என்று “உங்கள் பெயரைச் சொல்லி… அது உங்களில் பதிவானால் போதும்…!”
1.என்னை இப்படிச் சொன்னார்களே… சொன்னார்களே…! என்று அதையே எண்ணி
2.இந்த உணர்வுகளைச் சேர்த்து அவர்கள் சொன்ன நிலைக்கு ஆளாகி விடுவீர்கள்.

அந்தக் கோபமான உணர்வு நமக்குள் சேர்ந்து “இப்படிச் சொன்னான் பார் அவனை என்ன செய்கின்றேன்…? என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதும்.

அவர் எங்கேயோ இருப்பார். கெட்டுப் போக வேண்டும் என்று சொன்ன உணர்வு… நமக்குள் மோதிய பின் கோப உணர்வாகி நம் நல்ல குணங்கள் எல்லாம் கேட்டு அந்த ஆத்திர உணர்வு நமக்குள் வந்து இரத்தக் கொதிப்பாக மாறும்.

1.அவர் ஒரு தடவை தான் சொன்னார்…
2.இருந்தாலும் இந்த உணர்வு நமக்குள் வந்தபின் அவரை நினைக்கும் போதெல்லாம் ஆத்திரமும்
3.அவனை உதைக்கின்றேன்… எங்கே வந்தாலும் விட மாட்டேன் என்று எண்ணும் போது
4.”அந்த எண்ணம்” நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களை எல்லாம் உதைத்துக் கொண்டே இருக்கும்.

அப்போது உடல் எல்லாம் வலிக்கிறது என்று சொல்வோம். இது விளைய விளைய அவர்களை நினைக்க நினைக்க இது உடலுக்குள் விளைந்து கொண்டே வந்து கடைசியில் கழுத்து வலி மேல் வலி வந்து கொண்டே இருக்கும்.

1.யார் சொன்னாலும் சரி…
2.அந்தச் சொல்லைப் பொறுக்க முடியாதபடி “உன்னை உதைத்தால் தான் சரியாகும்…? என்ற ஆத்திரத்தைத் தூண்டும்.

தன்னுடைய பிள்ளையையே பார்த்தாலும் கூட… சொன்னபடி கேட்கவில்லை என்றால் “இங்கே வாடா…” என்று ஆத்திரத்துடன் பேசச் சொல்லும்.

இந்த உணர்வுகள் எல்லாம் சிறுகச் சிறுக இரத்தக் கொதிப்பாக வளர்ந்து கை காலெல்லாம் முடக்கி விடும்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஆனால் அவர்கள் சொன்னதை எடுத்துக் கொண்ட பின் இது கொஞ்சம் கொஞ்சமாக விளைந்து… யார் ஒன்றைச் சொன்னாலும்… அந்த வார்த்தைகளைத் தாங்க முடியாது.

உடனே அவர்களைப் பற்றிக் குறை பேசுவோம். குறையைச் சொன்னவுடன் அவர்களுக்குக் கோபம் வரும். மீண்டும் கோபமாகப் பேச வேண்டி வரும்

இப்படி நம்மை அறியாமல்
1.ஒரு தரம் சொன்னது நமக்குள் கலந்து கலந்து இயக்கி
2.நம்மிடமிருந்து வெளிப்படும் உணர்வுகள் அடுத்தவர்களின் கோபத்தைத் தூண்டச் செய்து
3.கோபமாக நம்மிடம் பேசச் செய்து… இப்படி அந்தக் கோபம் நமக்குள் தொடர்ச்சியாக விளைந்து கொண்டே வரும்.

உடல் ஆரோக்கியம் இழந்து இரத்தக் கொதிப்பாக மாறும்.. இந்தக் கோப உணர்வுகள் விளைய விளைய தொழிலும் வியாபாரத்திலும் இடைஞ்சல் வரும். நண்பரிடத்திலேயும் கோபம் வரும். அதனால் பகையாகிப் பல விளைவுகள் ஆகிவிடும்.

ஆக நம்மை அறியாமலே உடலிலும் தண்டனை… நம் சொல்லைக் கேட்பவர்கள் அனைவரும் நம்மை வெறுப்பார்கள்.

இப்படி நமக்குள் வந்து சேர்ந்து விடுகின்றது. வேதனை அதிகமாகி மனிதனையே செயலிழக்கும்படி ஆகின்றது.

பாவிப்பயல்… மோசம் செய்தான் துரோகம் செய்தான் இடைஞ்சல் செய்தான் என் குடும்பத்திற்குத் தொல்லையாக இருக்கின்றான் என்று ஆன பின் அதறக்க வேண்டி… ஜாதகமோ ஜோதிடமோ பார்க்கச் சென்றால் “உங்களுக்குச் செய்வினை செய்து விட்டான்...!” என்று அவர்கள் சொல்லி விடுவார்கள்.

1.அதைக் கேட்ட பின்... உணர்வின் வேகங்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாகி
2.சண்டாளப் பயல் இப்படிச் செய்து விட்டான்…! என்று மனதைப் பலமாக வைத்து விட்டால் உடலிலே கடுமையான நோயாகி விடுகின்றது.

நோயாக வளர்ந்த பின் எந்த மனிதனைக் குறி வைத்து இந்த எண்ணங்கள் சென்றதோ… இந்த மணங்கள் இங்கே அதிகமாகி உடலை விட்டு ஆன்மா பிரிந்த பின் அந்த உடலுக்குள் சென்று அவனுக்குள் பேயாக ஆட்டிப் படைக்கும்… அவனுக்குத் தொல்லைகள் கொடுக்கும்

எந்த அளவிற்கு இந்த உடலில் தொல்லைகள் அனுபவித்ததோ அந்த நோய் அங்கேயும் உருவாகும். அதே சமயத்தில் வெறுத்துப் பேசிய உணர்வுகளும் அங்கே சென்ற பின் அவர்களை இன்னும் இம்சைப்படுத்தி… அந்த உடலில் நஞ்சினை விளையச் செய்து… இந்த உயிரான்மா தனக்குள் அதிகமாக அதைப் பெருக்கி… இன்னும் கொஞ்சம் தேய்மானம் ஆகும்.

மனித உடலில் முழுமையாகத் தெரிந்து கொள்ளும் (அறிவு) நிலை பெற்றிருந்தாலும்… பிறிதொரு எண்ணங்கள் உடலில் விளைந்த பின்… பௌர்ணமி எப்படித் தேய்கின்றதோ இதைப் போல நல்ல குணங்கள் அனைத்தும் மறைந்து விடுகிறது.

பல கோடிச் சரீரங்களில் பல தீமைகளைக் கடந்து வலிமை பெற்று மனிதனாக வந்த நிலையில்
1.இரு அவனை நான் தொலைத்து விடுகின்றேன் என்று சொன்னால்
2.”உன்னைத் தொலைத்து விடுகிறேன்…” என்று நாம் எடுத்துக் கொண்டது
3.நம் உடலுக்குள் வந்து நம் நல்ல உணர்வைத் தொலைத்துவிடும்… நோயாக மாற்றிவிடும்.

இருக்கட்டும்… நான் பார்க்கின்றேன்…! நாம் லேசாகச் சொல்லிவிடலாம். இப்படிப்பட்ட எண்ணம் வந்தாலே… நாம் எண்ணிய அந்த உணர்வு… முதலில் நமக்குள் தான் பாய்கின்றது.

பாய்ந்த பின் தான்… அந்தக் கெட்ட புத்தி வந்து நம்மைக் கெட்ட செயலைச் செய்ய வைக்கும். ஆக நம் நல்ல குணங்களை. முதலில் நாம் தான் கெடுக்கின்றோம்.

அது நமக்குள் தீய வினையாக விளைந்து விடுகிறது. இப்படி நம்மை அறியாமல் எத்தனையோ வேதனைகள் பட்டுக் கொண்டு இருக்கின்றோம்

1.இதிலிருந்து மீள்வதற்கு நாம் என்ன செய்வது…? என்பதை அன்று மகரிஷிகள் பல முறைகளை நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.
2.அதையெல்லாம் தெரிந்து கொள்வதற்குத் தான் இந்த உபதேசத்தையே உங்களுக்கு கொடுப்பது.

காரணம்… அந்த ரிஷிகள் முழுமை அடைந்தவர்கள். அவர்கள் உணர்வைப் பெற்றால் தான் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

சூரியனைத் தான் கடவுளாக அன்று வணங்கினார்கள்

சூரியனைத் தான் கடவுளாக அன்று வணங்கினார்கள்

 

ஆதியில் ஆண்டவனை எந்த ரூபத்தில் வணங்கினார்கள்..?

உதய காலத்தில் ஆற்றுப் படுகையிலும் குளங்கள் கடல் இப்படி உள்ள இடங்களில் அந்நீரில் நின்று அந்தச் சூரியனின் சக்தியை சூரிய உதய காலத்தில் எண்ணி வணங்கினார்கள்.

அந்த நிலையில் வருண பகவான்… வாயு பகவான்… சூரிய பகவான்… என்று அந்தப் பகவானையே இந்நிலையில் கண்டு வணங்கி ஜெபித்தார்கள்.

1.காற்றும் மழையும் அவ்வொளியும் இல்லாவிட்டால் ஜீவனே இல்லை.
2.ஜீவனைத் தந்த சக்தி இந்த மூன்றுக்கும் தான் உள்ளது என்ற நிலையில்
3.இந்த மூன்றையுமே தெய்வமாக்கி வணங்கினார்கள்.
4.வணங்கினார்கள் என்ன…? அந்த நிலை கொண்டுதான் நாமும் வணங்க வேண்டும்.

அந்த நிலையிலிருந்து தான் நம் உயிர்ணுவிற்கு நம் ஆத்மாவிற்கே உயிர்த் துடிப்பு வந்தது. அந்நிலையில் அருள் பெற்ற நம் ஆத்மா அவற்றைத் தான் “ஆதி முதல் தெய்வமாக” வணங்கிப் போற்ற வேண்டும்.

ஆதியில் வந்த ஆண்டவனையே தன் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்ட மனிதனப்பா இன்றைய மனிதன்.

இன்றைய மனிதன் நம்பும் நிலை எல்லாம்..
1.அவன் போடும் கணக்குப்படி தேதியிலும் கைரேகைகளிலும் ஜாதகத்திலும் பெரும் நம்பிக்கை வைத்து
2.தன்னுள்ளேயே அந்த ஆண்டவனின் சக்தியை மறந்து விட்டு இன்று உலகம் முழுவதுமே இந்த நிலையில் தான் நம்பி வாழ்கிறது.
3.நாளும் நட்சத்திரமும் தேதியும் இவன் வைத்த கணக்கு தான்...!

ஆதியில் வாழ்ந்த மனிதன் அந்தச் சூரியனின் சக்தி கொண்டு ஒளி நம் நிலத்தில் படும் நிலை கொண்டு “நேரமும் காலமும்” அறிந்து செயல்பட்டான்.

அன்று பல பெரியவர்கள் இந்த இந்த நாட்கள் மழை பெய்யும்.. வெயில் அதிகமாக இருக்கும்… என்றெல்லாம் தான் அந்த ஞானத்தை வைத்து மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இன்றைய வளர்ந்த விஞ்ஞான மனிதன் தன் அறிவைக் கொண்டு பல செயல் ரூபங்களையும் பல உபயோக நிலை கொண்ட பல உன்னதப் பொருள்களையும் கண்டிட்டான்.

அவ்வாறு தான் கண்ட நிலையை ஒன்றுடன் ஒன்று பொருத்தி வாழ்ந்து
1.உத்தம நிலையில் வாழ்ந்திடாமல்
2.பேராசை நிலை கொண்டு அழிவு நிலைக்கு ஏனப்பா செல்ல வேண்டும்..?

இன்று மனித மனங்களில் சுவாச நிலையே ஒருவரைப் போற்றியும்… ஒருவரைத் தூற்றியுமே… வாழ்வதாக உள்ளது. நம் மனித ஜென்மத்தில் தான் இந்தப் போற்றலும் தூற்றலும்.

போற்றலுக்கும் தூற்றலுக்குமா நாம் பிறவி எடுத்தோம்…!

ஆண்டவன் சக்தியிலிருந்து மகத்தான உன்னத நிலையில் ஆறறிவு படைத்து மனிதனாகப் பிறவி எடுத்துள்ளோம். அந்த நிலைக்கு அந்த ஆண்டவனின் சக்தியை நாம் உபயோகப்படுத்தாமல் அவன் தந்த சக்தி கொண்டு நம்மை நாம் அழித்து வாழ்கின்றோம்.

அதற்காகத்தான் இச்சக்தியை ஆண்டவன் நமக்கு அளித்தானா…?

மிருக ஜெந்துக்கு ஐந்தறிவு படைத்தான் ஆண்டவன் என்கிறோம். அந்த மிருக ஜெந்து போற்றலுக்கும் தூற்றலுக்கும் ஏங்குவதில்லை. பொருளுக்கும் ஆடை ஆபரணங்களுக்கும் அவைகளிடம் ஆசை இல்லை.

அவைகளின் நிலை தான் மனிதன் சொல்வது போல் ஐந்து அறிவு ஆயிற்றே..! அவைகளின் நிலைக்கு எப்படியப்பா இந்த நிலைகளைக் கண்டிட முடியும்…?

அம்மிருகத்தின் நிலையில் உள்ள உயர்ந்த குணம் ஒற்றுமையான குணம் அதன் அறிவுத் தன்மை இன்றைய ஆறறிவு படைத்த மனிதனுக்கு எங்கப்பா உள்ளது…?

மிருகங்களும் பறவைகளும் எந்தக் கடிகாரத்தை வைத்து எந்தத் தேதியை வைத்து நாளும் மணியும் கணக்கிட்டன…?

நாம் நினைக்கின்றோம்… மனிதனுக்குத் தான் எல்லா நிலையும் தெரியும் என்று…! பறவைகள் வாழும் பரிபக்குவமான வாழ்க்கை நிலையை மனிதர்கள் பார்த்து வாழ வேண்டுமப்பா…!

மிருகங்கள் நிலைக்கு என்ன தெரியும்…! நம்மைப் போல் அதற்குத்தான் ஆறறிவு இல்லையே…! என்கின்றான் மனிதன். அனால் இவன் பெற்ற பொக்கிஷத்தைத்தான் இவன் சிதற விடுகின்றான் என்பதை அறியவில்லை.

இது தான் இன்றைய உலக நிலை…!

May 13, 2024

முழுமுச்சாக நாம் செய்ய வேண்டியது…!

முழுமுச்சாக நாம் செய்ய வேண்டியது…!

 

வாழ்க்கையிலே வரக்கூடிய குறைபாடுகளையோ மற்ற தீமைகளையோ வேதனைகளையோ கேட்க நேர்ந்தால் நுகர நேர்ந்தால் அது நம் உடலுக்குள் வராதபடி தடுக்க… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் என்று நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.

அதற்குப் பின்
1.”எது நல்லவையோ அது நடக்க வேண்டும்…” என்று எண்ணத்தை நாம் செலுத்த வேண்டும்
2.அது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

இந்த வழியில் நாம் வாழ்ந்தோம் என்றால் இந்த உடலுக்குப் பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்கின்றோம்.

உலகெங்கிலும் எத்தனையோ கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்… நம் பூமி மட்டுமல்ல இந்தப் பிரபஞ்சமே உருமாறும் நிலை இருக்கின்றது… கடும் விஷத் தன்மைகள் பரவிக் கொண்டுள்ளது.

இதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் நாம் தப்ப வேண்டும் என்றால் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தை மேற்கொண்டு
1.அவர் கொடுக்கும் உபாயங்களை நாம் கடைப்பிடித்து
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லை என்ற நிலை அடைய
3.அதை முழுமூச்சாக நாம் செயல்படுத்த வேண்டும்.

கடலில் படகை ஓட்டிச் சென்றோம் என்றால் அதிலே அலைகள் எதிர்த்து வரும் பொழுது அதைப் பிளந்து நாம் செல்ல வேண்டிய எல்லையை அடைகின்றோம்.

அதைப் போன்று அந்தத் துருவ நட்சத்திரம் தான் நமது எல்லை என்று முடிவுகட்டி இந்த வாழ்க்கையில் எத்தனை விதமான சங்கடமோ சலிப்போ வெறுப்போ அல்லது பாசத்தால் வரக்கூடிய உணர்வுகளோ வந்தால் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று வரும் அலைகளைப் பிளந்திடல் வேண்டும்.

நமது எல்லையான துருவ நட்சத்திரத்தை அடையக்கூடிய சக்தியாக… வாழ்க்கை என்ற ஓடத்தைச் சீர்படுத்தி வாழ வேண்டும்.

காட்டிற்குள் சென்று தவம் இருந்து அந்தச் சக்தியைப் பெறுவதல்ல. இந்த நாட்டுக்குள் வாழும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெற வேண்டும். “இது தான் உண்மையான தவம்…”

அந்த தவத்தை நாம் எடுத்துக் கொண்டால் துருவ நட்சத்திரத்தின் சக்தி நமக்குள் வலுப்பெறுகின்றது. தீமைகள் புகாது தடுக்கும் வல்லமையும் பெறுகின்றோம்.

இன்று வாழ்வது கனவு தான்…! நிலைத்தது அல்ல…!

இன்று வாழ்வது கனவு தான்…! நிலைத்தது அல்ல…!

நாம் வாழும் வாழ்க்கை கனவான வாழ்க்கை…!

நாம் உறங்கும் பொழுது வருவது தான் கனவு… நாம் விழித்திருக்கும் பொழுது வாழ்வது “நினைவு..!” என்கின்றோம். கனவும் நினைவும் எல்லாமே ஒன்று தான்…!
1.இன்று நடப்பது நாளை கனவு தான்.
2.நாம் உறக்கத்தில் உள்ள பொழுதும் கனவு தான்.
3.சில நாட்கள் பொறுத்து எண்ணிப் பார்ப்பது எல்லாமே கனவு தான்,
4.முன் ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
5.இந்த ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
6.இனி நமக்கு நடப்பதுவும் கனவு தான்,

அவ் ஈஸ்வரனின் நினைவு ஒன்றே… அவ் ஈசனின் சக்தி ஒன்றே தான்…! ஒரே நிலை கொண்ட “என்றும் நிலைத்து நிற்கும் நினைவு…!”

கனவுக்கும் நினைவுக்கும் நாம் மாறுபட்டு எண்ணுகின்றோம்.

நடப்பது எல்லாமே கனவு தான் என்ற நினைவு எல்லோருக்கும் வந்தால் இன்றைய உலகில் பகவானைப் பல ரூபமாக்கி… பல ஜாதியாக்கி இருக்க மாட்டார்கள்.

இன்று பல மதங்களின் நாமத்தைச் சூட்டி வட கலை… தென் கலை.. என்றெல்லாம் சொல்லி தன்னையே தான் தாழ்த்தி வாழ்கின்றான் மனிதன்.

இதிலிருந்து விடுபட வேண்டும்.

May 12, 2024

கோடீஸ்வரன்

கோடீஸ்வரன்

 

நாம் எத்தனையோ கோடித் தவறுகளைப் பார்த்தாலும் அந்தந்த சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று உடலுக்குள் உள் செலுத்தித் தூய்மைப்படுத்தி இந்த உணர்வினை வலு சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

அதற்குத்தான் இராமேஸ்வரத்தைக் காட்டினார்கள். நாம் பல கோடி உடல்களில் மற்றொன்றைக் கொன்று தின்று இன்று மனிதனாக வளர்ச்சி பெற்று வந்திருந்தாலும் கோடிக்கரையாக வந்திருக்கின்றோம்… தனுசு கோடி.

தீமை என்று தெரிந்த பின்…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதைத் தாக்கி அதனின் வலுவை இழக்கச் செய்ய வேண்டும். அதுதான் விஷ்ணு தனுசு.
2.உயிரைப் போன்றே உணர்வின் அணுக்களை ஒளியாக உருவாக்குதல் வேண்டும்.
3.எத்தனை கோடி விதமான உணவுகளை நாம் சந்திக்க நேர்ந்தாலும் அத்தனையும் மாற்றி அமைக்க வேண்டும்.

ஏனென்றால் கோடிக்கணக்கான (எண்ணிலடங்காத) உணர்வுகளையும் ஒளியாக மாற்றி அமைத்தது அந்தத் துருவ நட்சத்திரம். அதன் உணர்வை அவ்வப்பொழுது நமக்குள் எடுத்துத் தீமைகளை நீக்குதல் வேண்டும்.

உதாரணமாக ரோட்டிலே நாம் செல்லும் பொழுது ஒருவன் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம். அந்த நிமிடமே ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இரத்தங்களில் கலக்கச் செய்ய வேண்டும்
1.உள்முகமாக இந்த உணர்வின் வலுவை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2.வேதனைப்படும் உணர்வு நமக்குள் வலுவாகச் சேர்வதற்கு முன் அதைத் தடுத்து நிறுத்திவிட்டு
2.வேதனைப்படுபவனுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கிடைக்க வேண்டும்
3.அவன் அவன் நலமாக வேண்டும் என்று எண்ணிச் சொல்லிவிட வேண்டும்.

அவன் உணர்வு நமக்குள் வராது…!

அதே போன்று இரண்டு பேர் கொடூரமாகத் தவறு செய்கின்றார்கள். சண்டையிடுகின்றார்கள். அதைப் பார்த்த பின் அந்த உணர்வுகள் நமக்குள் புகாதபடி தடுக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கி புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் வேண்ட வேண்டும். அவர்களுடைய தவறுகள் நமக்குள் புகாதபடி தடுத்துக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்து விட்டால்… அந்த உணர்வுகள் உள் புகுவதில்லை.

1.பின் அந்த உணர்வை ஈர்க்காது ஒதுக்கிவிட்டு
2.அவர்கள் இருவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மையும் பண்புடன் வாழும் தன்மையும் பெற வேண்டும் என்று
3.நாம் விலகி விட வேண்டும்… அந்தத் தீமை நமக்குள் விளையாது.

ஏனென்றால் தவறு செய்கின்றார்கள் என்றால் அதனைப் பார்க்காமல் இருக்க முடியாது கேட்காமல் இருக்க முடியாது.

ரோட்டிலே செல்லும் போது ஒரு வாகனம் வேகமாக வருகிறது என்றால் பார்த்தவுடனே “பயம்” என்ற நிலை வந்து விலகுகின்றோம்.

பார்க்கின்றோம்… பஸ் திடீரென்று நம் பக்கமாகத் திரும்புகின்றது. அந்த அதிர்ச்சியின் வேகத்தில் நாம் ஒதுங்கி விடுகின்றோம்.
1.அப்படி அதிர்ச்சி கொடுக்கவில்லை என்றால்
2.நாம் அங்கிருந்து விலக முடியாது.

அதிர்ச்சியை ஊட்டுவது எது…?

அதன் வேகத் தொடரை நம் கண் நுகர்ந்து உயிரிலே மோதப்படும் போது உணர்ச்சிகள் தெரிய வருகின்றது. ஆனாலும் அடுத்து அதிர்ச்சியின் தன்மை கூட்டி உடலில் பதட்டமாகி வேகமாக விலகிச் செல்ல வைக்கின்றது.

விலகிச் சென்றாலும் அதிர்ச்சியின் உணர்வு நம் இரத்தத்தில் கலந்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் சேர்ந்து விட்டால் அடிக்கடி பய உணர்வும் மற்ற நிலைகளும் ஏற்பட நேர்கின்றது.

பயம் அதிகமானால் சிந்திக்கும் தன்மை கூட சில நேரங்களில் முடியாது போய் விடுகின்றது. இப்படி…
1.நம் சந்தர்ப்பம் நாம் நுகர்ந்த நிலைகள் நம் இரத்தங்களிலே மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே உள்ளது.
2.சந்தர்ப்பத்தில் தப்பினாலும் அடுத்த கணமே… ஈஸ்வரா என்று
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அந்த அதிர்ச்சியின் உணர்வைத் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

இப்படி வாழ்க்கையில் எத்தனையோ விதமான உணர்வுகள் நமக்குள் வரும்…! அதை அதை அவ்வப்பொழுது தடுத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து மாற்றிக் கொண்டே வந்தோம் என்றால் அதுதான் “தனுசு கோடி…”

ஆகவே… உயிரின் தன்மை ஒளியாக்கிய அந்த உணர்வை… அந்தந்த நேரத்தில் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குத் தீமை சேராதபடி தடுத்து நிறுத்துகின்றோம்.

உடலில் விளைந்த அந்த உணர்வுகள் கொண்டு
1.“இந்த உயிர்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலு கொண்டதால் நேராக நம்மை அங்கேயே அழைத்துச் செல்கின்றது.
2.தொக்கிய உணர்வின் அணுக்களை அங்கே தூய்மைப்படுத்தி விடுகிறது

அப்போது ஏகாந்தமாக… எத்தகைய எதிர்ப்பும் இல்லாது என்றும் மகிழ்ந்து வாழ்ந்திட முடியும்…!

நம்முடைய வைராக்கியம் எதிலே இருக்க வேண்டும்…?

நம்முடைய வைராக்கியம் எதிலே இருக்க வேண்டும்…?

 

நமக்கு முன்னே பல கோடிச் சித்தர்கள் வாழ்ந்தார்கள் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். திருவள்ளுவர் தோன்றி திகட்டாத பொக்கிஷத்தை நமக்களித்தார்…! என்றெல்லாம் இன்றும் சொல்லி வருகின்றார்கள்.

திருவள்ளுவரும் போகரும் கொங்கணவரும் ஏனைய எத்தனையோ சித்தர்களும் ஞானிகளும் நம்மைப் பொல் மனிதனாகத்தான் பிறந்தார்கள்.
1.அவர்கள் எல்லாம் இன்றும் உலகம் போற்றும் நிலையில் தன் ஞானத்தை வளர்த்து
2.தன் நினைவில் அவ் ஈஸ்வரனையே ஈசனாக்கி வாழ்ந்து காட்டினார்கள்.

அந்த நிலைகளை எல்லாம் இன்றையக் கலியில் நாம் விஞ்ஞானம் என்னும் ரூபத்தில் நமக்கு ஆண்டவன் அளித்த சக்தியைக் கொண்டுவந்து வீண் விரயமாக்கி விட்டோம்.
1.அன்றிலிருந்து இன்று வரை மனிதப் பிறவியில் மாற்றமில்லை.
2.ஆனால் மனித எண்ணத்தில் தான் பல கோடி மாற்றங்கள் வந்துள்ளன.

இன்றுள்ள நிலையில் ஆண்டவனை ஜெபிக்கும் நிலையிலும் உண்மை நிலைகளைச் சொல்பவர்களை எள்ளி நகையாடும் நிலையில் தான் உள்ளார்கள்.

அந்நிலை கொண்டு தான் இந்தக் கலியில் கண்ட பல மேதைகள் இராமகிருஷ்ண பரமகம்சர்… விவேகாநந்தர்…! அவர்கள் நமக்களித்த உண்மை நிலைகளைக் கொண்டு நாம் அதைக் காசாக்கிக் “கருத்தில் ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றி வாழ்கின்றோம்…!”

இன்று பிறவி எடுத்த நாமும் ஆசையின் உந்தலுக்கு அடிபணியாமல் வாழ்ந்திட்டால் அன்றையக் கால சித்தர்களைப் போல் வாழ்ந்து காட்டிவும் முடியும்.

வளரும் முறையிலிருந்து தான் இந்நிலை எல்லாமே வருகின்றது. வளர்ந்த பின் நாம் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் “தியான நிலை ஒன்று தான் உண்டப்பா…!”

ஒவ்வொருவருவரும் தன் நிலையிலேயே ஏற்றுக் கொள்வதையும் இப்பொழுது வெளியிடும் நிலையில் இல்லாமல் தனக்குத் தெரிந்த உண்மை நிலைகளையும் வெளியிடும் பொழுது அதில் தவறுகள் உள்ளனவா…! என்ற பயத்தில் மறைத்து வாழ்கிறார்கள்.

இந்நிலையைப் போக்க நம் நிலைக்கு நாம் இந்த வழிக்கு வந்தமைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு குருவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தக் குருவின் சக்தியிலிருந்து பல உண்மை நிலைகளைப் பெற்றிட முடியுமப்பா…! நீங்கள் இப்பொழுது போற்றிடும் திருவள்ளுவரின் நிலைக்கும் ஒரு மாபெரும் ரிஷி இருந்தார்.

இப்படி ஒவ்வொருவரின் நிலைக்கும் ஒவ்வொரு குருவின் நிலை கொண்டு தான் ஆரம்பப் பாடநிலை அறிந்திட முடியுமப்பா…!

அந்தக் குருவின் நிலை நாம் தியானத்தில் அமர்ந்து அந்தக் குருவை எண்ணி வணங்கிடும் காலத்தில் அவர் பெற்ற சக்தி நிலை கொண்டு நமக்குப் பல உன்னத நிலைகளை ஈர்த்து அளித்திட முடியும்.
1.இந்தக் கலி காலத்தில் ஒரு போகராகவோ திருவள்ளுவராகவோ…
2.நாம் ஏன் வாழ்ந்து காட்டிட முடியாது…?

அவர்களுக்கும் மேல் உயர்ந்த நிலையை அவர்களை எண்ணி ஜெபமிருக்கும் பொழுதே அவர்கள் நமக்களிக்கும் உன்னத நிலை பெற்று வாழ்ந்திடலாம்.

நம்மிடமுள்ள பயத்தைப் போக்கி “நாம் பிறவி எடுத்த பயனைப் பெற்றுக் காட்டிட வேண்டும்…!” என்ற வைராக்கிய எண்ணம் கொண்டு வாழ்ந்திட வேண்டும்.

May 11, 2024

அறியாது வரும் தீமைகளை நீக்குவதற்கு “ஒரு பழக்கத்தை” ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

அறியாது வரும் தீமைகளை நீக்குவதற்கு “ஒரு பழக்கத்தை” ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

 

துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளி அலைகள் வரும் நேரத்தில் அதனுடன் இணைத்து உங்கள் நினைவாற்றலைச் செலுத்தப்படும் பொழுது… சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் கலந்து…
1.மீண்டும் எண்ணும் பொழுது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் பதிவாகின்றது.
2.கம்ப்யூட்டரில் எப்படி ரெக்கார்ட் செய்கின்றனரோ அதைப் போன்று பதிவினை உங்களுக்குள் கூட்டப்படும் பொழுது
3.அடுத்து… தீமை வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் உடனடியாக அந்த துருவ நட்சத்திரத்தினைப் பற்றிய சிந்தனைகள் வரும்
4.தீமைகளை அகற்றி ஒளியாக மாற்றும் சக்தியாக வளரும்.

உதாரணமாக கராத்தே விளையாடுகின்றார்கள். அந்த விளையாட்டிலே அதற்குத்தக்க தன் அங்கங்களை அசைப்பதும்… எதிராளியைக் கண்டால் தடுப்பதும்… இயக்கங்களை மாற்றுவதும்… விலகிச் செல்வதும்… இது எல்லாமே பழக்கத்தால் வருவது தான்.

அதே போன்று தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவதற்குச் சந்தர்ப்பத்தினை உருவாக்கி அதனைப் பதிவாக்குகின்றோம்.
1.அந்த உணர்ச்சிகள் அவ்வப்பொழுது தூண்டப்பட்டு
2.அந்தந்த நிமிடம் தீமையிலிருந்து விடுபடச் செய்யும் சக்தியாக உங்களுக்குள் பெறச் செய்கின்றது.

அதற்குத் தான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் யாம் உபதேசிப்பது. அதன் வாயிலாக உபாயங்களையும் உங்களுக்குக் கொடுக்கின்றோம்… அதைப் பதிவாக்கவும் செய்கின்றோம்.

உதாரணமாக பூப்பந்து ஆடுகின்றார்கள் என்றால் அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் இணைத்துப் பதிவாக்கப்படும் பொழுது
1.அந்தப் பந்து வீச்சின் தன்மையை நாம் உற்றுப் பார்க்கும் பொழுது
2.அதற்குத் தக்க அங்கங்களை அசைத்து இந்த விளையாட்டை நாம் சீராக விளையாடுகின்றோம்
3.அதில் கெட்டிக்காரராகவும் ஆகின்றார்கள்.

அதைப் போன்று அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வை உங்களுக்குள் இணைத்து பதிவாக்கிக் கொண்டால்
1.சந்தர்ப்பத்தில் உங்களுக்கு எத்தகைய விபத்தோ மற்ற நிலைகளோ மாறுபடும் பல தீமைகளையோ நுகர நேர்ந்தால்
2.அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் நுகர்ந்து அதை மாற்றி அமைக்கும் திறனைக் கொண்டு வர வேண்டும்.

அதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போன்று தான் உங்களுக்குள் ரெக்கார்ட் செய்கின்றேன். “இந்தப் பதிவு” உங்களைக் காக்க வேண்டும்..

பள்ளிகளில் ஆசிரியர் கற்றுக் கொடுக்கப்படும் பொழுது முதலில் ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு என்று கொண்டு செல்கின்றார்கள். ஆனாலும் அடுத்தடுத்து அவர்கள் கற்பித்த நிலைகளை… அவரவர்கள் பதிவாக்கிய நிலைகளுக்குத் தக்க வளர்ச்சியில்… டாக்டருக்கோ இன்ஜினியருக்கோ மற்ற துறைகளுக்கோ அவருடைய உணர்வுக்கொப்ப தான் அவருடைய முன்னேற்றம் அமைகின்றது.

இப்படித்தான் மனிதனின் வாழ்க்கையில் இந்த உடலை வளர்க்க பல உபாயங்களைத் தேடி… செல்வங்களைத் தேடுவதற்குத் தான் மனிதன் இன்று செயல்படுகிறான்.

ஆனால் நமது குருநாதர் காட்டிய வழியில்
1.அருள் உணர்வுகளைப் பெருக்கி அருள் செல்வத்தை நமக்குள் பெருக்கி
2.அருள் ஞானம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்து
3.தீமைகளை நீக்கி ஒளியாக மாற்றி வாழ்ந்து கொண்டுள்ள மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து
4.என்றும் மகிழ்ந்து வாழும் நிலைகளை நாம் பெறுதல் வேண்டும்

அதற்குண்டான வழி முறைகளைத் தான் பதிவு செய்ய வேண்டும்.

வீணாகவும் உபயோகமற்றதாகவும் எதுவுமே இயற்கையில் இல்லை…!

வீணாகவும் உபயோகமற்றதாகவும் எதுவுமே இயற்கையில் இல்லை…!

 

இன்று உலகினிலே பல வகையான ஜீவராசிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தன் நிலைக்கு ஏற்பச் சுவாச நிலையை எடுக்கின்றது.
1.மனிதரின் சுவாச நிலை தான்
2.எல்லாத் தன்மையையுமே தன் சுவாசத்தில் ஈர்க்கும் நிலையில் உள்ளது.

மனிதனின் சுவாச நிலை அவன் ஒவ்வொரு எண்ணம் கொண்டும் எண்ணிடும் பொழுது அந்நிலையில் அவன் எடுக்கும் சுவாச நிலையைப் பொறுத்து அவன் வாழ்கின்றான்.

இவ்வுலகினிலே நாகப்பாம்பைப் போல்
1.நச்சுத் தன்மையுள்ள கொடிய விஷத்தைத் தன்னுள் ஈர்த்து எடுத்திடும் ஜீவராசிகள் இல்லாவிட்டால்
2.இந்தக் காற்றில் கலந்துள்ள கொடிய விஷங்கள் எல்லாம் பெரும் தீங்கைத் தான் விளைவித்திருக்கும்.

அவ் ஈசனின் சக்தியிலிருந்து நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் தெரிந்திடாமல் பல வகை உண்மை நிலைகள் உள்ளன. எல்லாமே அவ்வீசனின் சக்தியில் வந்தவை தான்.

ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு நிலையில் உற்பத்தியாகி வளர்ந்திருக்கின்றன. தாவரங்கள் எல்லாம் அதனதன் சுவாச நிலை மேல் நோக்கி அந்தச் சூரியனின் சக்தியை நேராக ஈர்க்கும் நிலையில் உள்ளன.

பல வகைத் தாவரங்களிலும் பல வகை நல்ல உணவாகவும் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் அமையப் பெற்றுள்ளன.

நாம் எண்ணுகின்றோம். உபயோகமில்லாமல் இப்படி ஏன் பல வகைத் தாவரங்கள் உள்ளன என்று…? அச்சக்தியின் அருள் பெற்றுத் தான் அவையும் வளர்கின்றன… நல்ல கனி கொடுக்கும் தாவரங்களும் வளர்கின்றன.

அந்தக் கொடிய விஷமுள்ள தாவரங்கள் எல்லாம் இல்லாவிட்டால் இந்தக் காற்றிலிருந்து இன்னும் பல தீய நஞ்சு கலந்த அணுக்கள் தான் சுற்றிக் கொண்டிருக்கும்.
1.அந்த விஷ அணுக்களையே உண்டு உயிர் வாழும் தாவரங்கள் இருப்பதால் தான்
2.நம்மைச் சுற்றியுள்ள இந்தக் காற்றையே சுத்தமாக்கி நாம் சுவாச நிலைக்கு ஈர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த உலகில் தோன்றியவை எதுவுமே வீணாகவும் உபயோகமற்றதாகவும் தோன்றவில்லை.
1.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தன் சுவாச நிலையைக் கொண்டு தோன்றி
2.இந்த உன்னதமான உலகத்தைப் பல கோடி ஆண்டுகள் காத்து வருகின்றது.

இன்றைய உலகத்தில் விஞ்ஞானம் என்ற பெயரால் பல வினைகளைச் செய்து… தன்னையே தான் அழித்துக் கொள்ளும் இந்த மனிதரின் நிலைகாள் எல்லாம்… இன்னும் ஜீவனுடன் உயிர் வாழ்கிறதென்றால் எந்நிலையில்…?

நச்சுத் தன்மையைத் தானே உண்டு வாழும் நாகப் பாம்புகளும்… நச்சுடன் நச்சாக வளர்ந்து பெரும் விஷத் தன்மையுள்ள நாம் சொல்லும் செடி கொடிகளும் இல்லாவிட்டால்…! இன்று வீசும் காற்றே பெரும் விஷமுள்ளதாக வீசி எந்த ஜீவராசிகளுமே உடலுடன் வாழ்ந்திட முடிந்திருக்காதப்பா…!

இந்த நச்சுத் தன்மை பாம்பிலும் தாவரங்களிலும் தான் உண்டு என்று இம்மனிதர்கள் எண்ணுகின்றார்கள். இவை எல்லாம் நமக்கு நன்மையைத்தான் அளிக்கின்றன.

இம்மனிதனாக வாழ்வதற்கு மாபெரும் தவமிருந்து நமக்கு அந்தச் சூரியனிலிருந்து பல ஜென்மங்கள் எடுத்து பெரும் வாழ்க்கையை வாழும் பாக்கியம் பெற்ற நாம் “நம் மனைதையே விஷமாக்கி வாழ்கின்றோம்…!”

இந்த மனித உடலைப் பெற்று வாழ்வதுவே நாம் செய்த பாக்கியம் தான். இந்தப் பாக்கியம் பெற்ற நாம் இந்த மனித உடல் உள்ள பொழுதே நாம் பிறவி எடுத்த பயனைப் புரிந்து “நம் மனதையே நல் மனதாக்கி வாழ்ந்திட வேண்டும்…!”

பிறவி எடுத்த புனிதத் தன்மையைப் போற்றிக் காத்து எவன் ஒருவன் வாழ்கின்றானோ… அவனெல்லாம் அச்சக்தியின் சக்தி பெற்ற… நம்முள் கலந்துள்ள பல தேவர்களின் தேவர்களைக் கண்டிடலாம்.

1.அந்தத் தேவர்களின் தேவர்களாகவும் நாம் ஐக்கியப்பட்டு
2.நம் உடலை விட்டு நம் ஆத்மா செல்லும் நிலைக்குள் சகல நிலையையும் பெற்றிடும் பாக்கியம் பெறத்தான்
3.இந்தப் பாட நிலையெல்லாம் அளிக்கின்றேன்.

May 10, 2024

குருநாதரை ஒரு பைத்தியக்காரர் என்று தான் நானும் ஆரம்பத்தில் எண்ணினேன்

குருநாதரை ஒரு பைத்தியக்காரர் என்று தான் நானும் ஆரம்பத்தில் எண்ணினேன்

 

நம் மீது அழுக்குப்பட்டாலோ தூசி பட்டாலோ மற்றது பட்டாலோ அதை உடனே தூய்மைப்படுத்துகின்றோம். அதைப் போன்று அந்தந்த நிமிடம் நம் ஆன்மாவில் அறியாது புகும் தீமையான உணர்வுகளைத் துடைத்துப் பழக வேண்டும். நம் இரத்த நாளங்களையும்த் தூய்மைப் படுத்த வேண்டும்.
1.அப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு நல்ல சக்தி வேண்டும்.
2.நல்ல சக்தி வேண்டுமென்றால் நல்ல சக்தி பெற்ற குரு தேவை.
3.குரு வழியில் அருளை நமக்குள் பதிவு செய்து கொண்டு… குரு காட்டிய வழியினை நினைக்கப்படும்போது நாம் அதைப் பெற முடியும்.

வான்மீகி வியாசக பகவான் போன்ற மகரிஷிகள் கண்டுணர்ந்தது போல நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரும்… அவருடைய சந்தர்ப்பம் அகஸ்தியன் பெற்ற அருளையும் அவன் துருவ நட்சத்திரமான உண்மையும் அறிந்தவர்.

அவர் வழியில்… அறிந்த உணர்வு கொண்டு மற்றவர்களுக்கு அவர் எடுத்துச் சொல்லச் சென்றாலும் கூட அவரை அலட்சியப்படுத்திய மக்கள்தான் உண்டு.
1.சில உண்மைகளை அவர் சொல்லும் பொழுது பித்தன்… என்றும் பைத்தியக்காரன்…! என்றும் அவரை எண்ணினார்கள்.
2.என்னிடம் அவர் பழகும் பொழுதும் நானும் (ஞானகுரு) அவ்வாறு தான் எண்ணினேன்… பைத்தியம் பிடித்தவர் என்று.

ஆனால் எம்மை அடிக்கடி அணுகி இந்த வித்தைகளை எல்லாம் நீ கற்றுக் கொள் உனக்கு நல்லதாக இருக்கும் என்பார்.

வித்தை என்றால் “மந்திரவாதிகள் செய்வது போல்” ஏதோ செய்து கோளாறாகி அதனால் இப்படிப் பைத்தியமாக இருக்கின்றார்…! என்று தான் என்னுடைய எண்ணங்கள் இருந்தது முதலில்.

இருந்தாலும் அடிக்கடி ஆவர் எம்மைச் சந்திப்பதும் டீ வாங்கிக் கொடுப்பதும் நான் குடிக்கவில்லை என்றால் திட்டுவதும்… குடித்தால் நான் சொல்வதை நீ கேட்க வேண்டும் என்பதும்… இந்த நிலை தான் நடந்து கொண்டிருந்தது. குருவை ஆரம்பத்தில் சந்தித்த பின் நடந்தது இது தான்.

அவருக்குத் தெரியாதபடி நான் ரோட்டுக்கு அந்தப் பக்கம் சென்றாலும் அங்கே வந்து பிடித்து விடுவார், எங்கே ஒளிந்து செல்கின்றாய்…? நான் பார்க்கிறேன்…! என்பார்.

எப்படி விலகிச் சென்றாலும் கூட அவர் என்னை விட்ட பாடு இல்லை…!

அந்தச் சந்தர்ப்பத்தில் என் மனைவிக்கு உடல் நலம் குறைவானது. ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்… டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்கள்…! கடைசியில் “தேறாது…” என்று கூறி விட்டார்கள்.

வீட்டிற்கு அழைத்து வந்த பின்… அதைக் கண்டு மாமனார் இறந்து விட்டார் காரணம் ஒரே பெண். அந்த சமயத்தில் குருநாதர் வந்து “நீ வா…“ என்று என்னைக் கூப்பிடுகின்றார்.

குருநாதர் கூட்டத்தில் சத்தம் போடுகின்றார் இதற்குப் பயந்து அவர் பின்னாடி சென்றேன்.

அப்பொழுதுதான் எனது வாழ்க்கை முழுவதையும் சிறு குழந்தையாக நான் இருந்ததிலிருந்து விவரம் தெரிந்த காலம் வரை நடந்த நிகழ்ச்சிகளை அப்படியே வெளிப்படுத்துகின்றார்… அத்தனையும் அப்படியே சொல்கின்றார்.

அப்பொழுதுதான்… “அவர் பைத்தியம் இல்லை” என்று நான் தெரிந்து கொள்கின்றேன்.

ஆஸ்பத்திரியில் என் மனைவிக்கு ஆபரேஷன் செய்யலாம் என்று டாக்டர்கள் முயற்சித்தாலும் மயக்க மருந்து கொடுக்கும் பொழுது மனைவிக்கு எடுக்கவில்லை. அதனால் ஆபரேஷன் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள் குருநாதர் அதையும் என்னிடம் சொல்கின்றார்

உண்மைகளை அறிந்து கொண்ட பின் பைத்தியம் இல்லை…! என்று உணர்கின்றேன்.

பின்… ஒரு எலுமிச்சம் பழத்தையும் விபூதியும் என்னிடம் கொடுக்கின்றார் உன் மனைவிக்கு இதைக் கொடு… நன்றாக ஆகிவிடுவார் …!என்று சொல்கின்றார்.

இங்கே மாமனார் இறந்து விட்டார்… நான் குருவுடன் சென்று விட்டேன். ஆனால் வீட்டிற்கு மாமனார் இறந்ததைக் கேட்க வந்தவர்கள் எல்லாம்
1.மனைவி இப்படி இருக்கின்றது
2.மாமனாரோ இறந்து விட்டார்
3.அவருடைய மருமகன் பைத்தியம் போல சுற்றிக் கொண்டிருக்கின்றான் என்று என்னைப் பேசுகின்றார்கள்.

ஏனென்றல் என் மனைவி இடுப்புக்குக் கீழ் சுத்தமாகக் கால் வரவில்லை படுக்கையில் இருந்ததால் புண்ணும் வந்துவிட்டது.. ஒரு விரல் கூட காலிலே அசையாது.

குருநாதர் சொன்னபடி எலுமிச்சையையும் விபூதியையும் கொடுத்தேன்…! மறுநாள் பார்த்தால் விரல்கள் மற்ற எல்லாம் அசைய ஆரம்பிக்கின்றது.

மனைவி ஆஸ்பத்திரியில் இருந்த போது உடலில் பேண்டேஜ் ஒன்று போட்டிருந்தார்கள். உள்ளுக்குள் பார்த்தால் மூட்டைப் பூச்சிகள் ஏராளம் உடலிலே சொரணை இல்லை இரத்தத்தைக் குடிக்கின்றது. என் மனைவி எழுந்த பின்… பேண்டேஜ் கழட்டும் போது தான் மூட்டைப்பூச்சிகள் உள்ளே இருப்பது தெரிந்தது.

குருநாதர் சக்தி வாய்ந்தவர் என்ற நிலைகளை நான் நம்புகின்றேன். அதற்கப்புறம் குருநாதர் என்னைக் கூப்பிட்டு
1.என்னை நம்புகின்றாய் அல்லவா என்று கேட்கின்றார்
2.கேட்கின்றேன்… நம்புகிறேன் என்று சொன்னேன்.

உன் உயிர் எத்தனையோ கோடி உடல்களை உருவாக்கிய நிலையில் இப்பொழுது நீ மனிதனாக வந்திருக்கிறாய் என்பதை குரு உபதேசிக்கின்றார். பல கோயில்களுக்கு அழைத்துச் சென்றார்.

ஒவ்வொன்றாக்க் காண்பித்து இது எந்த தெய்வம்…? இது என்ன தெய்வம்…? என்று கேள்வி கேட்கின்றார். பின் விளக்கம் கொடுக்கின்றார்.

அதே போல் எறும்பு பூச்சிகள் இவைகளுக்கெல்லாம் சாப்பாடு யார் போடுவது…? என்று கேட்கின்றார். மரம் செடி கொடிகளுக்கு யார் சாப்பாடு கொடுப்பது…? அது எப்படி…? என்று கேட்கின்றார். பின் அதற்கு விளக்கங்களைச் சொல்லிக் கொண்டு வருகின்றார்.

இப்படி அவருடன் நான் சேர்ந்து சுற்றி வரும் பொழுது எல்லோருமே “என்னைப் பைத்தியக்காரன்…” என்று சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்.

அதே போன்று இரவிலே நகரங்களிலே சுற்றச் சொல்வதும் “சில மோசமான பகுதிகளுக்கு” எல்லாம் கூட குருநாதர் கூப்பிட்டுச் செல்வார்.

துர்மரணம் அடையும் மனிதன் அவன் இறந்தபின் (அவன் இறக்கும் தருணத்தில்) மண்ணிற்குள் பதிந்த இரத்தம் அந்த உணர்வலைகள் பதிவாகியது என்ன செய்கிறது…? என்று காட்டுகின்றார்.
1.துர்மரணம் அடைந்த அந்த இடத்தில் மீண்டும் அவன் வெளிப்படுத்தும் ஓசைகள் எப்படி இருக்கின்றது…?
2.அந்த ஆன்மாக்கள் எந்த நிலையில் இருக்கின்றது…?
3.இன்னொரு உடலுக்குள் எப்படி வருகிறது…? என்று உணர்த்துகின்றார்.

அதே சமயத்தில் மனிதன் மற்ற உயிரினங்களைக் கொல்லும் பொழுது அந்த உயிர்கள் மனிதனின் ஈர்ப்புக்குள் எப்படி வருகிறது…? வந்த பின் மனிதனாகப் பிறக்கும் தகுதி எப்படி வருகின்றது…? என்று காட்டுகின்றார்.

மனிதன் ஒருவனைக் கொலை செய்கின்றான்… துன்புறுத்துகின்றான் என்றால்… அதன் வழியில் அந்த ஆன்மா எவன் துன்புறுத்துகின்றானோ அவன் உடலுக்குள் சென்று… அதே உணர்ச்சிகளை மீண்டும் இங்கே எப்படி இயக்குகின்றது…?

துன்புறுத்தாதபடி நோய்வாய்ப்பட்டு ஒருவன் இறந்தால் அவனிடத்தில் பாசமாக இருக்கும் பொழுது அந்த ஆன்மா பாசம் கொண்டவருடைய உடலில் எப்படிச் சேர்கின்றது…? என்று இதையெல்லாம் எனக்குள் தெரியப்படுத்துகின்றார்.
1.எத்தனையோ கோடி உடல்களை மாற்றி மாற்றி மனிதனாக வந்தபின் நாம் எந்த நிலை பெறுகின்றோம்…?
2.ஆனால் ஞானிகள் காட்டிய வழியில் எந்த நிலை பெற வேண்டும்…? என்பதை
3.இப்படித்தான் ஒவ்வொன்றாகப் பல அனுபவங்களை எனக்குக் கொடுத்து உண்மைகளை எல்லாம் தெரியும்படி செய்தார் குருநாதர்.

முன் ஜென்மத்தின் தொடர்

முன் ஜென்மத்தின் தொடர்

 

பிறவி எடுத்து நம் பிறவியில் நமக்கு வரும் குணாதிசயங்கள் எல்லாம் ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் சொல்வதைப் போல்
1.நாம் பிறக்கும் நாளைக் கொண்டோ
2.பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டோ வருவதல்ல அந்தக் குண நிலைகள் எல்லாம்…!

இந்தக் குண நிலைகளின் உண்மை நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் வருவது அவன் முதல் பிறவியில் செய்ததின் தொடர்ச்சி தான்… இந்தப் பிறப்பில் நாம் சாந்தமாக உள்ளதும் கோப நிலையில் உள்ளதும் மற்ற எல்லாமே.

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குண நிலையில் வாழ்கின்றோம். எல்லோரும் ஒன்றாக நினைப்பது அவ்வாண்டவனின் சக்தி ஒன்றைத்தான்.

குண நிலையில் பல மாற்றங்கள் இருந்தாலும் அவ்வாண்டவனின் சக்தியை ஒரே நிலையில் எப்படி வணங்குகின்றோமோ அந்நிலையிலேயே எல்லோரும் வாழ்ந்திடலாம்.

1.ஒருவர் கோபக்காரராக இருந்தால் அந்தக் கோப நிலை முதல் ஜென்மத்தின் தொடர்ச்சி தான்.
2.சாந்தமுள்ளவராக இருப்பதும் முன் ஜென்மத்தின் எண்ணத்தை வைத்துத்தான் அமைகிறது.

முன் ஜென்மத்தின் தொடரிலேயே இப்பொழுது பிறவிக்கு வந்தாலும் இந்த ஜென்மத்தில் நாம் வாழும் வாழ் நாட்களை வீண் விரயமாக்கிடாமல் வாழ வேண்டும்.

அந்த வினைப்பயன்கள் எல்லாம்
1.நாம் பிறந்த நேரம்…
2.நாம் செய்த பாவ புண்ணியங்கள்… என்று தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

இப்பொழுது வாழ்ந்திடும் வாழ் நாட்களில் நம் எண்ணத்திலும்… நம் சுவாசத்திலும் அந்த மகரிஷிகள் ஞானிகளின் அருள் சக்திகளை எடுத்து வாழ்ந்து சுவாசத்தைச் சீராக்கி அருள் மணங்களை நம் சுவாச நிலைக்குக் கொண்டு வந்து வாழ்ந்திட வேண்டும்.

இந்தப் பிறவியில் இதை அதிகமாக வளர்க்கும் பொழுது நம்முடைய நாளைய சரீரம் அது ஒளியின் சரீரமாக அமையும்.

May 9, 2024

நுகர்ந்த உணர்வின் வழியில் உயிர் நம்மை இயக்கிவிடக் கூடாது

நுகர்ந்த உணர்வின் வழியில் உயிர் நம்மை இயக்கிவிடக் கூடாது

 

இந்த உலகம் இருள் சூழ்ந்த நிலையினை நோக்கி ரொம்பவும் நெருங்கிச் சென்று கொண்டுள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் இதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள்.

அணுகுண்டுகளுக்கு மனிதர்கள் தப்பித்தாலும் அதில் வெளி வரும் அணுக் கதிரியக்கங்களும் அதிலே கருகிய விஷத் தன்மைகளும் பூமியின் நடுமையும் அடைந்து பூராவுமே கொதிகலனாக ஆகி…
1.மேலே இருக்கக்கூடிய நிலப்பகுதிகளில் எல்லாம் வெப்பங்கள் அதிகமாகி
2.தீயில் வேக வைத்தது போன்று நம்மைப் பூமிக்குள் கொண்டு சென்று வேக வைத்துவிடும்
3.குண்டுகளுக்குத் தப்பினாலும் கூட… இதிலிருந்து யாரும் தப்ப முடியாது

ஏற்கனவே 30 40 வருடங்களுக்கு முன் சொல்லி உள்ளேன் இத்தகைய கதிரியக்கங்கள் நம் பூமிக்குள் என்ன செய்யும்…? என்று…!

இந்த பூமி மட்டுமல்ல பிரபஞ்சத்தில் மற்ற கோள்களிலும் அணுக் கதிரியக்கங்கள் வளர்ந்து விட்டது. அதை துருவத்தின் வழி கவரும் பொழுது நம் பூமி வேகமாக உருகும் தன்மை வருகின்றது. பூகம்பங்கள் ஏற்படுகின்றது நில நடுக்கங்கள் வருகின்றது.

இதிலிருந்து தப்புவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

எந்த நிமிடம் எதுவாக இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்றடைதல் வேண்டும்… பிறவி இல்லாத நிலையை நாம் அடைய வேண்டும்.

தீமைகள் புகாது தடுக்கும் சேனாதிபதி நமது ஆறாவது அறிவு கார்த்திகேயா… பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்.

உதாரணமாக வேதனை என்ற உணர்வை எடுத்தால் நமது உயிர் அதை நமக்குள் பிரம்மமாக உருவாக்கி அடிக்கடி வேதனைப்படும்படி வைத்து விடுகின்றது.

ஆனால் நாம் சொன்னபடி இந்த உயிரை இயக்க வேண்டும்…!

நாம் எண்ணியதைத்தான் உயிர் இயக்குகின்றது… அப்போது அந்த அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று முன்னிலைப்படுத்தி… தீமையை நீக்கும் உணர்வாக பிரம்மமாக்கி நமக்குள் அதை உருவாக்க வேண்டும்.

நம்முடைய எண்ணம் தீமைகளை நீக்கும் உணர்வாக வளர்ச்சி பெறும்…
1.ஆகவே பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்
2.அதாவது நான் சொன்னபடி இந்த உயிர் கேட்க வேண்டும்
3.அதன் வழி இந்த உடலை இயக்க வேண்டும்
4.நுகர்ந்த உணர்வுகள் வழி… உயிர் நம்மை இயக்கக் கூடாது.

தீமை நமக்குள் சிருஷ்டியாகக் கூடாது…! என்பதைத் தான் “பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்… ஆறாவது அறிவு…” என்ற நிலை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது

இதை மனதில் வைத்து அருள் வழி வாழ்ந்து இருளைப் போக்கி பேரருளைப் பெற தியானித்து அந்த அரும் பெரும் சக்திகளை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ளுங்கள்.

பல பல எண்ணங்களை எண்ணியே… நம் சுவாச நிலையைக் கெடுத்துக் கொள்கின்றோம்

பல பல எண்ணங்களை எண்ணியே… நம் சுவாச நிலையைக் கெடுத்துக் கொள்கின்றோம்

 

1.நம் எண்ணத்தில் பல நினைவுகளைச் சிதறடித்துக் கொண்டு நாம் சுவாசம் எடுக்கும் பொழுது
2.அந்நிலை தான் நம் எண்ணத்தையும் சுவாசத்தையும் ஒருநிலைப்படுத்தி
3.பல அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகி
4.மீண்டும் மீண்டும் பல பல எண்ணங்களை எண்ணியே
5.நம் சுவாச நிலையைக் கெடுத்துக் கொள்கின்றோம்.

நாம் எந்த நிலையில்… எந்த நினைவில் இருக்கின்றோமோ… அந்நிலையில் எண்ணும் எண்ணத்தை வைத்து நாம் சுவாசம் எடுக்கும் பொழுது “அந்நிலையேதான்…” வாழ் நாட்களில் நம்முடன் கூடவே வருகின்றது.

1.அவ்வாண்டவனை நினைத்துச் சுவாசம் விடும் பொழுது
2.அந்தச் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்குப் பெரும் உன்னத நிலை கிட்டுகின்றது.

ஆனால் அந்நிலையை நாம் புரிந்திடாமல்…
1.நம் வாழ்க்கையையே…
2.நாம் நம்மையையே நாம் அடிமையாக்கிக் கொள்கின்றோம்.
3.அசுத்த சுவாச நிலை என்பதன் பொருளும் இது தான்.

நம் எண்ணத்தைக் கொண்டு தான் நம் சுவாச நிலையில் பலவித நறுமணங்கள் பெற முடிகிறது. நல்ல மணமுடைய சுவாச நிலையில் உள்ள பொழுது நம் உயிர் நிலைக்குப் பெரும் ஊட்டம் கிடைக்கின்றது.

நாம் வாழ்வதுவும் மடிவதுவும் நம் எண்ணத்தைக் கொண்டு தான்…!

இந்நிலையைப் புரிந்து கொண்டு இந்நிலையில் இருந்து தான் பல கோடிச் சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள்.

1.வாழும் வாழ்க்கையில் நிறைவு பெற்று வாழும் பொழுது
2.அச்சித்தர்களின் நிலையைப் போல இந்த மனித உடலைப் பெற்ற நாம் எல்லோருமே பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்.
3.உயிர் என்னும் ஆத்மாவிற்குப் பெரும் நிலையைத் தேடிடலாம்.

May 8, 2024

“ஆலய வழிபாடு” என்பதே இன்றைய காலத்தில் எப்படி எப்படியோ மாறிவிட்டது…!

“ஆலய வழிபாடு” என்பதே இன்றைய காலத்தில் எப்படி எப்படியோ மாறிவிட்டது…!


சூட்சமத்தில் நடப்பதை நாம் எப்படி அறிந்து செயல்பட வேண்டும்…? என்று
1.அன்று அகஸ்தியன் உருவ வழிக்கு (தெய்வ) உணர்வுகளை ஊட்டி அருவ நிலைகளை நீ எப்படி நுகர்வது…?
2.அந்த அருவத்தை உனக்குள் சேர்க்கப்படும் பொழுது அந்த ஞானத்தின் வழி உன்னை எப்படிக் காக்க வேண்டும்…? என்று
3.ஆலயங்களிலே சிலைகளை வடிவமைத்தான்.

ஆனால்… சிலையை வைத்து இன்று பூஜை செய்பவரும் சரி ஆலயத்திற்குப் பக்தி கொண்டு செல்வோரும் சரி… துயரத்தைத் தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றோமே தவிர “துயரத்தை நீக்கும்… ஒரு சொல் கூட வருவதில்லை…”

கேட்டால் நான் அப்படியெல்லாம் கும்பிடுவதில்லை என்று சொல்வார்கள் பெரும்பகுதியானவர்கள். நான் அப்படிக் கும்பிடுவதில்லை இப்படித்தான் கும்பிடுகிறேன் என்பார்கள் சொல்லுக்குப் பதில் வரும் அவ்வளவு தான்…!

ஆனால் உண்மையின் இயக்கங்கள் நமக்குள் அது வளரும் முறைகளை நாம் கையாள்வது எப்படி…? என்பதைச் சூட்சுமத்தில் நடப்பதைத் தான் உருவத்தை அமைத்துக் கொடுத்தனர் ஞானிகள்.
1.உருவத்தை அமைத்துக் கொடுத்த அந்த ஞானிகளை
2.சிறிதளவாவது நாம் மதிக்கின்றோமா என்றால் இல்லை

அன்று கல்வி அறிவு இல்லை என்றாலும் தெய்வ நிலைகளை எளிதாக எடுத்துக் கொண்டார்கள் அது எல்லாம் படிப்படியாக மாறி இன்று அனைத்துமே வேறு வழிகளில் திரும்பி விட்டது.

அன்றைய பக்தியின் நிலைகள் ஆலயத்திற்குச் சென்றால் அந்தத் தெய்வீக குணத்தைப் பெற வேண்டும் என்று “தெய்வத்திற்கு முன் நின்று… தவறு செய்யக் கூடாது…!” என்ற எண்ணம் இருந்தது.

இன்று தெய்வத்திற்கு முன் நின்று தவறைச் சொல்லிவிட்டு “பார் என்னை என்னைஸ் சோதிக்கின்றாய்…” என்ற நிலை தான் வருகின்றது. கல்வி அறிவு கொண்டு இன்று வளர்ந்து கொண்டவர்கள்
1.தவறையும் செய்துவிட்டு… தெய்வத்திடம் சென்று தன்னை நியாயப்படுத்தி
2.அந்த உணர்வுகளை வளர்த்துக் கொள்பவர் தான் பலர் உண்டு.

ஞானிகள் காட்டிய உணர்வுகளை இதுவரை நாம் பெறவில்லை…! கொலை செய்பவனும் தன்னை நியாயப்படுத்திக் கொள்கின்றான்
1.என்னை இப்படியே தொல்லை படுத்திக் கொண்டிருக்கின்றான்… நீ கேட்க மாட்டேன் என்கிறாய்.
2.அதனால் அவனைத் தொலைத்து விட்டு உனக்கு வந்து நான் காணிக்கை செலுத்துகிறேன் என்று போடுகின்றார்கள்… இப்படியும் உண்டு.

நான் காளியாக மாறுவேன் பேயாக மாறுவேன் அதன் வழியில் நான் செயல்படுத்துவேன் ஏனென்றால் காளி கோவிலில் ஆட்டையும் கோழியையும் கொடுத்துவிட்டு… பார்…! எனக்கு அவன் இடைஞ்சல் செய்தான்…! அதற்காக வேண்டி ஆட்டைப் பலியிட்டு அவன் நாசமாகப் போக வேண்டும் என்று இப்படித்தான் கும்பிடுகின்றார்கள்.

“ஒன்றுமறியாத ஜீவன்களை அங்கே கொல்கின்றோம்…” என்பதை மறந்து விடுகின்றார்கள்

இதைப் போன்று எத்தனை துயரின் நிலைகளைத் தான் தெய்வம் என்ற நிலையில் வளர்க்க முடிகின்றதே தவிர அருள் ஞானிகளின் உணர்வை நாம் பெற முடியவில்லை.

சாதாரண பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தான் ஆலயத்திலே சிலைகளை வைத்தார்கள் ஞானிகள். இது இந்த குணம் கொண்டது என்று ஸ்தல புராணங்களை வடித்து நீ முதலில் எதை எடுக்க வேண்டும்…? என்ற நிலையில் அதைக் காட்டுகின்றார்கள்.

அது மட்டுமல்லாமல்…
1.அங்கிருக்கும் சிலைக்கு எத்தனையோ அபிஷேகங்களைக் காட்டி
2.உயிரான ஈசனுக்கு நாம் ஊட்ட வேண்டிய நல் உணர்வுகளை… அருள் மணங்களை… அங்கே உணர்த்துகின்றார்கள்.

ஞானிகள் காட்டிய வழியில் உயிரான ஈசனுக்கு நல் மணங்களை ஊட்டினால் மகிழ்ந்து வாழும் சக்தி பெற முடியும்… தெய்வீகப் பண்புகளை வளர்க்க முடியும். மனிதன் என்ற முழுமை அடைய முடியும்.