ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 31, 2017

சிதம்பர இரகசியம் – திருமூலர் உணர்ந்த மெய் உணர்வுகள்

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் திருமூலர்.

ஆதியிலே பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த வான இயல் தத்துவத்தைக் பின் வந்த திருமூலர் தெளிவாகத் தெரிந்து கொண்டார்.

“தில்லை..,” என்பது ஒரு எல்லை. எல்லை இல்லாத உலகில் தில்லை என்ற உணர்வு வரப்படும் பொழுதுதான் ஒரு கோள் என்ற நிலைகள் வருகின்றது. பரம் என்ற நிலையும் பரம்பொருள் என்ற நிலைகள் உருவாகின்றது.

“தில்லை நடராஜா..,” என்று நம் பூமியின் செயலுக்குக் காரணப் பெயரை வைத்தார். நம் பூமி “நிற்காமல்.., சுழன்று கொண்டேயிருக்கின்றது” என்பதைத் தில்லை நடராஜா என்று பெயரை வைத்தான்.

அது உருவமில்லாத நிலைகள் கொண்டு அருவம் என்ற நிலைகள் உணர்த்தப்படும் பொழுது “திரு ஆவடையச் சுழலச் செய்து..,” மனித உருவைப் போட்டு இவனே சிவன் என்றும் இயக்கத்தின் நிலைகளில் “நடனமாடுகின்றான்..,” என்றும் காட்டினார் திருமூலர்.

அந்த உணர்வின் தன்மை உராயப்படும் பொழுது உணர்வுக்கொப்ப இங்கே உருமாறுவதும் உணர்ச்சிகள் எவ்வாறு வருகின்றது என்ற நிலையையும் தெளிவாக்குகின்றார்.

திருமூலர் கூறியது.., “நெருப்பிலிருந்து தான் நீர் தோன்றியது”.

ஆதியிலே ஒன்றுடன் ஒன்று தாக்கப்படும் பொழுது அது ஆவியாக மாறி எடையற்றதாக மாறி நாளடைவில் விஷமாக மாறி நெடி கலந்த உணர்வாக மாறி நெடியின் தன்மை வரப்படும் பொழுது புதிதாக உருவாவதை ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது “நெருப்பு” உண்டாகின்றது.

நெருப்பாகும் பொழுது உணர்வின் தன்மை தாக்குண்டு நகர்ந்து ஓடும் பொழுது அங்கே ஈர்க்கும் “காந்தம்” வருகின்றது.

ஓடும் நிலைகளில் தாக்கும் நிலையில் வெப்பமாகும் பொழுது பராசக்தி என்றும் தாக்குதலால் நகர்ந்து ஓடும் பொழுது ஈர்க்கும் காந்தத்தை இலட்சுமி என்றும் தாக்குதலால் இயக்கச் செய்த விஷத்தை ஆதிசக்தி என்றும் கண்டுர்ந்தார் திருமூலர்

“கருமாரி..,” (கருமாரி – உருமாறி) ஒன்றுக்குள் ஒன்று உருவாகி அது மாற்றலான நிலைகளைச் செய்கின்றது என்றும் கருமாரி என்று திருமூலர் பெயர் வைக்கின்றார்.

ஆதி இலட்சுமி பெண்பால் தான். ஆதிபராசக்தி வெப்பம். கருமாரி என்பது ஒரு விஷத்தின் தன்மை ஒன்றுக்குள் சென்றபின் அது “மாற்றமடைந்து.., மாற்றமான” நிலைகளைச் செயல்படுத்தும்.

தாக்குதலால் வெப்பமானது, ஈர்க்கும் காந்தமானது. ஆனால், ஈர்க்கும் காந்தமான பின் அது எதனைக் கவர்கின்றதோ அந்த மணத்தை இந்த “விஷம் இயக்கிக் காட்டும், கருமாரி”.

எதனுள்ளும்.., “ஊடுருவி” அது மாற்றலான உணர்வை அது இயக்கிக் காட்டும் என்பதைக் காரணப் பெயராக வைத்தார் திருமூலர்.

இதைப் போன்று மோதுண்டு மோதுண்டு ஆவியாக மாறி இணைந்து கொண்டு இணைந்து கொண்ட அணுக்களின் உருமாற்றமாகி மோதலில் வெப்பமாகிக் கவர்ந்து கொண்ட உணர்வு ஆவியாகி மேகமாக மாறி மேகக் கூட்டத்திற்குள் அணுக்கள் மோதும் பொழுது நீராகி நீருக்குள் அணுக்கள் சிக்குண்டு ஓர் பரம்பொருளாகி “இப்படித்தான்.., உலகம் பிறந்தது..,” என்று திருமூலர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆனால், திருமூலரின் தத்துவத்தை இன்று அதைத் திருமூல மந்திரம் என்று பறைசாற்றி மாற்றிவிட்டனர்.

திருமூலர் இந்த இயக்கத்தின் உண்மையை உணர்ந்து தில்லை நடராஜா.., தில்லை அம்பலத்தாண்டவா.., என்று பெயர் வைக்கின்றார்.

தில்லை நடராஜா என்பது பூமி. தில்லை அம்பலம் என்பது நம் உடல். ஒரு எல்லையாக வாழ்கின்றது.

இந்த உணர்வின் தன்மை எதுவோ அதற்கொப்ப இந்த உடலின் அமைப்பும் இந்த உடலுக்கொப்ப மனிதனின் இயக்கமும் இந்த உடலுக்கொப்ப அந்தச் செயலும் இந்த உணர்வுக்கொப்ப செயலும் உணர்வுக்கொப்ப உடலும் என்ற நிலையைத் திருமூலர் “தன் இன மக்கள் அறிய வேண்டும்” என்பதற்காகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

இதை யாராவது தெரிந்திருக்கின்றோமா..,? உணர்ந்திருக்கின்றோமா..,?” என்றால் தில்லையம்பதியில் வாழ்பவர்களுக்கே தெரியவில்லை.

தில்லை நடராஜா என்று “சூனியப் பிரதேசம்” ஆனாலும், திருமூலர் சமாதி தான் அதை அடக்கமாக வைத்து அங்கே “சிதம்பர இரகசியம்…,” என்று பொருள் பறிக்கின்றனர். உண்மையைப் பெறச் செய்யவில்லை.

பொருளுக்கு இச்சைப்படுகின்றான். இச்சைப்பட்ட பொருளால் இவன் வாழ்கின்றானா என்றால் இல்லை.

ஆனால், மூலத்தைக் கண்ட அந்த மெய்ஞானியின் உணர்வுகள் இங்கே உண்டு. அதை நீங்கள் நுகர்ந்து திருமூலர் கண்டுணர்ந்த அனைத்து நிலைகளையும் காண வேண்டும். உண்மையை உணரவேண்டும்.

அதற்கே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய இயற்கையின் பேருண்மையின் நிலைகளை “எல்லோரும் அறியவேண்டும்.., அறிய முடியும்” என்ற நோக்கில் தான் இதை உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

ஆகவே, உங்கள் வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழுங்கள்.

விநாயகர் தத்துவம் - 4

1. பிரணவத்திற்குரியவன் விநாயகன்
ஒரு உயிரணு எந்தத் தாவர இனச் சத்தை நுகர்ந்ததோ, அதற்கொப்ப அந்த உயிருக்குள் தாவர இனச் சத்து “ஓ..,” என்று பிரணவமாகின்றது. “ம்..,” என்று பிரம்மம் சிருஷ்டியாகின்றது.

ஆக உடலாகும் பொழுது சிவன் இராத்திரி. இந்த உயிரின் நிலைகள் துடிப்பாகும் பொழுது, “மின்மினிப் பூச்சி போல நம் உயிரின் துடிப்புகள் மின்னிக் கொண்டேயிருக்கும்.

ஆனால், அந்த மின்னலின் ஈர்ப்புக்குள் ஒரு செடியின் சத்தை, உதாரணமாக இந்த உயிரணுவிற்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் தன் அருகிலே இருக்கக்கூடிய கடலைச் செடியின் மணத்தை அது நுகர்ந்து, உயிருக்குள் பட்டவுடனே, அந்த மணத்தை ஜீவன் பெறச் செய்கின்றது. 

இதற்குப் பெயர்தான் “ஓம்..,” பிரணவம்.

கடலைச் செடியின் மணம் இந்த உயிருக்குள் ஈர்க்கப்படும் பொழுது, அந்த உயிர் எப்படித் துடிக்கின்றதோ அதைப் போல் கடலைச் செடியின் மணம் இயங்கத் தொடங்கிவிடுகின்றது.

 இதுதான் “ஓ…,” அந்த “உணர்வின் சத்து.., இந்த உயிருடன் இணையும் பொழுது இதற்குப் பெயர் “சிவம்.

ஆக, கடலைச் செடியின் மணத்தை இந்த உயிர் சுவாசிக்கும் பொழுது, அது பிரணவம் – “ஜீவனாகின்றது. 

அதனால்தான் பிரணவத்திற்கு உரியவன் விநாயகன் என்பது.
2. சிவனுக்கு முந்தியவன் விநாயகன்
சிவனுக்கு முந்தியவன் விநாயகன் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. கேட்டால் நமக்கு விளக்கம் சொல்லத் தெரியாது. ஞானிகள் உருவாக்கிய சாஸ்திரப்படி அதன் உட்பொருளைப் பார்ப்போம்.

உடலாக உருவாவதற்கு முன் இந்தக் கடலைச் செடியின் சத்துதான் உயிருக்குள் பட்டு அதனால் ஜீவனாகின்றது, ஒரு புழுவாக உருவாகின்றது.

ஆக, அந்த உணர்வின் சத்து இந்த உடலிலே வினையாகச் சேர்க்கப்படும் பொழுது வினைக்கு நாயகனாக “விநாயகா..,” என்று உடலானபின் அந்தக் கடலைச் செடியின் மணம் இந்த புழுவின் உடலிலே எண்ணமாகின்றது.
3. மூஷிகவாகனா
எண்ணத்தின் தன்மை கொண்டு நினைவு கூறும் பொழுது, இந்த உணர்வுகள் இயங்கி மூஷிகவாகனா. 

எந்தக் கடலைச் செடியை நுகர்ந்து உடலானதோ அதைச் சுவாசித்து அந்தக் கடலைச் செடி இருக்கும் பக்கம் அந்த மணத்தை நுகர்ந்து அந்தக் கடலைச் செடியின் மணமே இந்தப் புழுவை வாகனமாக கடலைச் செடி இருக்கும் பக்கம் அழைத்துச் சுமந்து செல்கின்றது.

இதுதான் மூஷிகவாகனா. அதற்குத்தான் எலியை வாகனமாகப் போட்டுள்ளார்கள்.

கடலைச் செடியின் சத்து உடலாகும் பொழுது சிவம். சிவத்திற்குள் விநாயகன். சிவனுக்கு முந்தியது.., இந்த மணம்.

ஆக, இந்த மணம்தான் “சுவாசிக்கும் பொழுது.., (உயிரிலே மோதுவதால்) பிரணவம். பிரணவத்திற்கு உரியவன் விநாயகன்.

எந்தக் கடலைச் செடியின் மணமோ அது உடலாகும் பொழுது இதுதான் வினை. அந்த வினைக்கு நாயகனாக (புழுவாக) உடலாகின்றது.

அந்த உடலான நாயகன் அந்த கடலைச் செடியின் மணத்தை நுகரும் பொழுது “மூஷிகவாகனா, அதைச் சுமந்து செல்கின்றது. நாம் சுவாசிக்கும் மூச்சே நம்மைச் (உடலை) சுமந்து செல்கிறது என்பதை மிகத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

ஏனென்றால், எல்லாமே “காரண காரியங்களுக்காக.., ஞானிகளால் வைக்கப்பட்ட பெயர்கள்.

அந்த ஞானிகளின் அருள் சக்தியை நாம் சுவாசித்தோம் என்றால் மூஷிகவாகனா. அவர்கள் பெற்ற ஞானமும் அவர்கள் விண் சென்ற நிலையையும் எளிதாக அடையலாம்.

January 30, 2017

ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா.., என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா

இன்று விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம். பக்தி என்ற நிலையிலும் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம். அரசியல் என்ற நிலைகளிலும் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம்.

இந்த அஞ்ஞான வாழ்க்கையில் ஒருவன் தவறு செய்யும் உணர்வை நுகர்ந்தறிந்தால் அந்தத் தவறை நமக்குள் உருவாக்காமல் தடுக்க வேண்டுமென்றால் “மெய்ஞானத்தின் உணர்வை” நமக்குள் சேர்க்க வேண்டும்.

அருள் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து நம்மை அறியாமல் அது இயக்கும் நிலைகளைத் தடைப்படுத்த வேண்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் இணைத்து அந்த வீரியத்தின் தன்மையை நமக்குள் புகுத்தி அஞ்ஞானத்தை மாற்றிடும் நிலை பெற முடியும்.

மக்களை மீட்க வேண்டும் என்ற உணர்வுகளை நமக்குள் வளர்த்து அந்த அருள் ஞானிகள் காட்டிய வழியில் மெய்ஞானத்தின் உணர்வு கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே நாம் வாழ முடியும்.

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாம் ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

அத்தகையை ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்று வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி இந்த உடலை விட்டு எந்த நேரம் பிரிந்தாலும் என்றுமே அழியா உடலாக “அகண்ட அண்டத்தில்.., எங்கும் செல்லலாம்”.

 நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும், பிறவியில்லா நிலைகள் அடைந்து அகண்ட அண்டத்திலிருந்து வரும் எத்தகையை நஞ்சினையும் அடக்கி அழியாத நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலத்தை நாம் சென்றடைய வேண்டும்.

எதுவுமே தனித்து இயக்குவதில்லை. “ஒருவனே கடவுள்..,” என்ற நிலை இல்லை.

மூன்று உணர்வுகள் சேர்த்து ஒன்றைக் கவர்ந்து ஒன்றுக்குள் சென்றால் தான் “நான்காவது நிலையாக.., பிரம்மம்..,” என்று அடைய முடியும்.

மூன்று நிலைகள் கொண்டு ஒன்றைக் கவர்ந்து, ஒன்றைக் கவர்ந்த பின் ஒன்றுக்குள் நுழைந்து “உள் நின்று.., அந்த உணர்வை இயக்கச் செய்வது தான் கடவுள்”.

ஒன்றென்ற நிலைகள் இங்கில்லை. “வெப்பம், காந்தம்., விஷம்..,” என்ற மூன்றும் ஒரு பொருளை நுகரப்படும் பொழுது மணம் என்ற நிலையில் ஞானம்.

இதனுடன் சேர்ந்து உருப்பெறும் சக்தியாக உருவாகின்றது. அது தான் “பரப்பிரம்மம்”.

ஆக, அந்த உணர்வின் தன்மை எதை நுகர்ந்து கொண்டதோ ஒரு பொருளுடன் இணைந்து அந்த “உணர்ச்சியை” ஊட்டும் பொழுது பிரம்மவின் மனைவி “சரஸ்வதி”.

அந்த ஞானத்தின் துணை கொண்டு அதனுடன் இயங்கி இதனின் வலிமையை உருவாக்கும். இதைப் போல வலுக் கொண்ட உணர்வுகளை எடுத்துக் கொண்டால் “அது எடுத்துக் கொண்டாலும்.., பரப்பிரம்மம் தான்”.

அந்த உணர்வின் தன்மை மற்றொன்றுடன் இணைந்து தன் வலிமை கொண்டால் இதை அடக்கி அந்த உணர்வின் தன்மை கொண்டு “அதனின் வளர்ச்சியைக் கூட்டும்”.

இதைப் போன்று உலகின் இயக்கம் இவ்வாறு இருக்கும் என்று காட்டிய அருள் ஞானிகளின் உணர்வலைகளை நாம் நுகர்ந்து நமக்குள் அறியாது புகுந்த தீமைகளை நீக்கவேண்டும்.

அருள் ஞானத்தை நமக்குள் வளர்ப்போம். அதை உருவாக்குவோம்.

இவ்வாறு நாம் உருவாக்கும் தன்மை பெற்றால் நம் உடலிலுள்ள அணுக்கள் அனைத்தும் “ஒளியின் கதிராக உருவாக்கும்..,” உணர்வை உயிருடன் ஒன்றி மற்றதை ஒளியின் உணர்வாக உருவாக்கும் அருள் சக்தி பெற்றுவிடும்.

பின் நாம் எந்தப் பிறவியுமே இல்லாத நிலைகளை அடையலாம். ஆகவே, நம் குரு காட்டிய அருள் வழியில் அந்த அருள் ஞானிகள் சென்ற பாதையில் நாம் இதைப் பெறுவோம்.

விநாயகர் தத்துவம் – 3

பிள்ளையார் சுழி ஏன் போட்டுக் காண்பித்துள்ளார்கள் ஞானிகள்?
நான் என்ற நிலைகளுக்கு வரப்படும் பொழுது “தான் யார்..? நான் யார்..?” என்று விநாயகனைப் போட்டுப் “பிள்ளையார் சுழி..,” போட்டு வைத்திருக்கிறோம்.

பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனிதனாக நாம் வந்தோம். யானைத் தலையைப் போட்டு மனிதனுடைய உடலைப் போட்டு முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாகக் காட்டினார்கள்.

இந்தப் பிள்ளை” யார்..,? என்று விநாயகனைப் போட்டு நான் யார்? தான் யார்? என்று தெரிந்து கொள்வதற்காகச் செய்தார்கள்.

“இப்பொழுது.., நாம் எதை எண்ணுகிறோமோ அதைச் சுவாசிக்கும் பொழுது நான்” ஆகின்றது.

அது நம் உடலுக்குள் சென்றவுடன்.., தான்” ஆகின்றது. 

இந்தத் தான் ஆகி இந்த உடலில் அது செயல்படுகின்றது. இந்தத் தான், உடலுக்குள் “உணர்வாக விளையப்படும் பொழுது.., நான்” ஆகின்றது. 

ஆக, தான் யார்?  நான் யார்?
உயிருடன் ஒன்றி அவனுடன் சேர்ந்து அவனாகி “அவனாகவே..,” உருபெறுவோம்
நாம் கோபப்படுகிறோம், ஆத்திரப்படுகிறோம், சஞ்சலப்படுகிறோம், சங்கடப்படுகிறோம் இவை அனைத்தும் தானாகின்றது. நாம் எண்ணுவது அனைத்துமே தானாகின்றது.

நான் இதைச் செய்தேன், “நல்லதைச் செய்தேன்.., ஆனால், எனக்கு இப்படிச் செய்கிறார்களே என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த உணர்வெல்லாம் உயிருடன் ஒன்றி உயிருடன் சேர்க்கும் போது நானாகின்றது.

இப்பொழுது நாம் எடுத்துக் கொண்ட உணர்வெல்லாம் தானாகி, நானாகி விடுகின்றது. இந்தத் தான் என்ற உணர்வின் நிலையாக உயிருடன் சேரும் பொழுது நானாகின்றது.

இன்றைக்கு மனிதனாக வந்திருக்கின்றோம்.

தான் யார், நான் யார் என்ற நிலைகளை இந்த விநாயக தத்துவத்தை அகஸ்தியன் தெளிவாக்கினான்.

நம்மை அறியாது இயக்கும் இருளான உணர்வுகளிலிருந்து விடுபடுவோம். அந்த அகஸ்தியன் அறிந்த வழியில் “நம்மை.., நாம் அறிவோம்.

அகஸ்தியன் அருளைப் பெற்று அழியா ஒளி உடல் பெறுவோம். அகஸ்தியன் உணர்வை.., நான் ஆக்குவோம். 

அதை நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களையும் அதைப் பெறச்செய்து, அந்த அருள் ஒளியைத்.., தான் ஆக்கிடுவோம். 

இந்தப் பிள்ளை, “உயிரால் வளர்க்கப்பட்ட பிள்ளை என்று உணர்ந்து நாம் அனைவரும் உயிருடன் ஒன்றி, அவனுடன் சேர்ந்து அவனாக ஆகி அவனாகவே உருப்பெறுவோம்.

அந்த மகரிஷிகள் சென்ற எல்லையை அடைவோம். 

January 29, 2017

நம்மை உருவாக்கியவனை மறந்து” வாழ்ந்தால் என்ன ஆவோம்...?

இன்று சகஜ வாழ்க்கையில் தனக்குள் ஒரு அச்சுறுத்தும் உணர்வையோ, அல்லது கடுமையான பகைமைகளாகி அதனால் ஆத்திரம் வேதனைகளை நுகர நுகர உடலிலே தீராத நோயாகிவிடுகின்றது.

நோயாகி விட்டால் இந்தப் பொருள் எதற்கு? இந்த உடை எதற்கு? இந்த நிலம் எதற்கு? என்று ஒதுக்கும் தன்மை வரும்.

“ஆண்டவன்..,” எப்பொழுது என்னை இந்த உடலை விட்டு அழைத்துக் கொள்வான்? என்று கேட்பார்கள். இதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

இன்று பார்க்கலாம். பெரும் செல்வந்தர்களாகக்கூட இருப்பார்கள்.

ஆனால், கடும் வேதனையால் வாடிக் கொண்டிருப்பவர்கள் தன் இம்சை தாளாது தன் செல்வத்தைப் பார்க்கின்றனரா..,? உடலைப் பார்க்கின்றனரா..,?

இந்த உடலை விட்டு “எப்பொழுது.., இந்த உயிர் வெளியேறும்..,” என்று நினைக்கின்றார்கள்.

இருப்பினும் இவர்கள் தப்ப முடியாது.

“எந்த வேதனை.., இந்த உடலில் உருவாகியதோ..,” இந்த உடலை விட்டு உயிர் சென்ற பின் வேதனை உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டிருக்கும். அதை உயிர் உணர்த்திக் கொண்டேயிருக்கும்.

“உடல் இல்லை.. என்றாலும்..,” வேதனையை உணர்ந்து கொண்டே தான் இருக்க வேண்டும். அதிலிருந்து தப்ப முடியாது.

வேதனைகள் தாளாது இந்த உடலை விட்டுச் சீக்கிரம் செல்வதற்காகத் “தற்கொலை செய்து கொள்வேன்” என்று செய்வார்கள். தன்னை எரித்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

ஆனால், அப்படித் தற்கொலை செய்தாலும் எதன் உணர்வு கொண்டு தற்கொலை செய்தார்களோ இந்த உடலை விட்டு வெளியில் வந்தபின் யார் மேலாவது இவர் பற்று கொண்டிருந்தார் என்றால் என்ன ஆகும்?

“நல்ல மனிதர் இவர்.., இப்படித் தற்கொலை செய்து கொண்டாரே..,” என்று இந்த உணர்வை நுகர்ந்து விட்டால் அந்த உடலுக்குள் சென்று இவர் பட்ட வேதனையை வெளிப்படுவதைக் காணலாம்.

இதைப் பேய் மணம் என்று உடலுக்குள் சென்றபின் “ஆவி பிடித்துவிட்டது..,” என்றெல்லாம் நாம் பார்க்கின்றோம்.

இது தனித்து ஒரு உடலுக்குள் புகவில்லை என்றாலும் “எரித்த உணர்வு” கொண்டு எரிந்து கொண்டேயிருக்கும். நரக வேதனையிலிருந்து தப்பவே முடியாது.

“ஈசனாக இருந்து உருவாக்கிய அவனை மறந்து” மனிதனான பின் தவறு செய்வோம் என்றால் நரக வேதனையும் நரகலோகத்தையும் தான் சந்திக்க முடியும்.

1.உள் நின்று உணரும் அந்த உணர்வின் தன்மையை உடலாக்குவதும் “கடவுளே”.
2.  அதை இயக்கிக் கொண்டிருக்கும் “உயிர் கடவுளே”.
3.  தான் நுகர்ந்த உணர்வை உள் நின்று இயக்கும் செயலாக மாற்றுவது உயிரே.
4. எண்ணத்தால் கவர்ந்த உணர்வினைத் தன் ஆன்மாவாக மாற்றிக் கொள்வதும் “உயிரே”.
5. ஆன்மாவின் நிலைகள் அது உறையும்போது கடவுளாக உள் நின்று அதை உறையச் செய்யும் செயலாகச் செயல்படும் நிலைகளும் “உயிரே”. 

மகரிஷிகள் காட்டிய இந்த உணர்வின் தன்மையை நாம் உணர்ந்து கொண்டால் போதும். நாம் வாழ்க்கையில் வரும் தீமைகளைக் குறைத்துப் பழக வேண்டும்; மனதைத் தூய்மைப்படுத்திப் பழகுதல் வேண்டும்; மனத் தூய்மை நமக்கு அவசியம் தேவை

மனத் தூய்மை தேவை என்றால் அகஸ்தியர் காட்டிய விநாயக தத்துவப் பிரகாரம் காலையில் நீங்கள் எழுந்தவுடன் அந்த துருவ நட்சத்திரத்தை எண்ணுங்கள். அந்த உணர்வை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

அந்த அருள் சக்தி உலகில் உள்ள அனைவரும் பெறவேண்டும் என்று தவமிருங்கள். பிறருடைய தீமைகளோ பகைமைகளோ உங்களுக்குள் வராது. இதைத் தான் ஏகாதசி விரதம் என்பது.

விநாயகர் தத்துவம் -2

வினைக்கு நாயகன் - விநாயகன்
பலகோடி சரீரங்களில் வலுவான நிலைகளை நுகர்ந்து யானையாக உருவாக்குகின்றது உயிர்.

யானை உடல் வலு பெற்றது.
யானையானபின் ஞானங்கள் அதற்குள் தோன்றி
எண்ண வலு பெற வேண்டும் என்ற உணர்வுகள்
யானையின் உடலுக்குள் தோன்றி
உடல் சிறுத்துப் பன்றியாக,
நல் உணர்வுகளைப் பன்றியின் உடலில் நுகர்ந்து
பின், மனிதனாக உருவாக்குகின்றது உயிர்.

முன் ஜென்மங்களில் நாம் மிருக நிலைகளில் இருந்தோம் என்பதைக் காட்ட யானையின் தலையை, மனித உடலில் பொருத்திக் காட்டினார்கள்.

உயிர், தான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடலைத் தந்தது என்பதை நாமெல்லாம் புரிந்து கொள்ள, கோவில்களில் விநாயகரைச் சிலையாக வைத்துக் காட்டினார்கள்.

விநாயகரை ஆதிமுதல்வன், சிவனின் பிள்ளை, முழுமுதற் கடவுள் என்று சொல்லுவார்கள்.

மனிதனான பின் எதையும் உருவாக்கி இருளை நீக்கி ஒளி என்ற உருவை உருவாக்குபவன் மனிதன்.  அதுதான் முழுமுதற் கடவுள். 

நாம் மிருக நிலையிலிருந்து மனிதனாக வந்தபின், நாம் எதைச் சேர்க்க வேண்டும்? என்பதற்குத்தான் விநாயகரை வைத்திருக்கின்றார்கள்.
பிள்ளையார் - இந்தப் பிள்ளை யார்? நீ சிந்தித்துப் பார்
அனைத்தையும் வேக வைத்தவன் துருவ நட்சத்திரம். நாம் புல்லைத் தின்றோம். தழைத்தாம்புகளைத் தின்றோம். சுவை மிக்க நிலைகளில் கொழுக்கட்டையைப் படைத்துச் சாப்பிடும் இந்த மனித உடலைப் பெற்றோம்.

இந்தப் பிள்ளை யார்? நீ சிந்தித்துப் பார். உயிரால் வளர்க்கப்பட்டது இந்த மனித உடல்நீ சிந்தித்துப் பார்.., என்று சொல்கின்றார்கள்.
வினையெல்லாம் தீர்ப்பவன் - விக்னேஸ்வரன்
வேதனை என்ற உணர்வை நுகரும்பொழுது, உடல் நலிவடைகின்றது. நம் உடலை உருவாக்கிய உயிரான ஈசனுக்குத் துரோகம் செய்கின்றோம். மனிதனாக உருவாக்கிய ஈசனை மதிக்கவில்லை என்று அர்த்தம்.

ஈஸ்வரன் கோவிலில் அபிஷேகம் செய்வதால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை.

உயிரான ஈசனிடம், வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் கையில் அழுக்குப் பட்டால் நல்ல தண்ணீரை விட்டுச் சுத்தப்படுத்துகின்ற மாதிரி, ஈஸ்வரா, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று இதை விட்டுச் சுத்தப்படுத்த வேண்டும்.

நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் நம் உடலில் எல்லா அணுக்களிலும் படும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும்.

இது தான், நம் ஞானிகள் காட்டிய அருள் வழி.