ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 31, 2020

ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்படும் உராய்வினால் “ஆத்ம சக்தியை வலுவாக்கிக் கொள்ளும் முறை” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


ஈரமுள்ள பொருள் எதுவாகிலும்… அதன் மேல் காற்று பட்டவுடன் அதன் மணம் வெளிப்படுகின்றது. மூடி வைத்துள்ள சமைக்கப்பட்ட பொருளைத் திறந்தவுடன் அதன் மேல் காற்று படும் பொழுதும் மணம் வீசுகின்றது.

மண் மரம் போன்றவற்றில் நீர் பட்டவுடன் அதிலிருந்து உஷ்ண ஆவி வெளிப்படும் பொழுது காற்றின் மேல் அந்த ஆவி வெளிப்பட்டு மணம் வெளி வருகின்றது.

எந்தப் பொருளைச் சமைத்தாலும் அச்சமைப்பின் உஷ்ணத்திற்கொப்ப “சமைக்கப்படும் பொருளின் ஆவி நிலையின் மணம்” வெளிப்படுகின்றது. இந்தக் காற்றில் தான் இந்தப் பூமி வளர்த்துப் பக்குவப்படுத்திய அனைத்து அமிலச் சத்துகளும் நிறைந்துள்ளன.

ஒன்றுடன் ஒன்று உராயும் உராய்வில் அதனுடைய மணமும் மாற்று நிலையும் செயல் கொள்கின்றது. இதைப் போன்று தான் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி காந்த மின் அலைகளுடன் பூமியின் ஈர்ப்பு சக்தி மோதலினால் உராய்வாகின்றது.

ஒன்றின் மோதலில் இருந்து வெளிப்படுத்தும் உராய்வைக் கொண்டு அதனதன் மணம் எப்படி வெளிப்படுகின்றதோ… அதைப் போன்று சூரியனின் சமைப்பு அணு காந்த மின் ஒளியை இப்பூமியின் சமைப்பு ஓட்ட உராய்வினால் ஒளியாகக் காண்கின்றோம்.

சூரியனின் ஒளியை நம் பூமி எடுக்கும் உஷ்ண மின் அழுத்தத்திற்கொப்ப சுழலுகின்றது. அதே போல் சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற சுழற்சிக் கோளங்களான சந்திரன் செவ்வாய் வியாழன் புதன் சனி முதலான நாற்பத்தி எட்டுக் கோளங்களும் மற்ற நட்சத்திரக் கோளங்களும் அவை அவை வளர்ந்த விதம் தூர விகித நிலைக்கொப்ப அவை ஒளி மணம் பெறும் நிலை பெற்றுச் சுழன்று கொண்டுள்ளன.

சூரியக் குடும்பத்தின் சுழற்சி மண்டலத் தொடர்பு கொண்டு தான் சூரியனும் ஒளி பெற்று ஒளிர்ந்து கொண்டுள்ளது.

சாதாரணப் பொருளுக்கே காற்றின் மோதலினால் மணம் வெளிப்படுகின்றது. சமைக்கப்படாத பொருளின் மேல் காற்று மோதி வெளிப்படும் மணத்தைக் காட்டிலும்… “அதி உஷ்ணத்தைக் கொண்டு” சமைக்கப்படும் பொருளின் மணம் சமைக்கப்படும் காலத்தில் அதிகமாக வீசுகின்றது.

பூமியின் பொருளின் மணங்கள் சுழன்று கொண்டே… மோதலின் மாற்றம் கொண்டே… ஒளியாகி ஒளிர்வதைப் போன்று…
1.இந்த ஆத்ம ஜீவ சரீரத்தின் அணு வளர்ப்பை ஒளியாக்கும் நிலைக்கு
2.ஒளி கொண்டு வளர்வதற்கு வழி காட்டும் முறை தான் இந்த உபதேசம்.

 பூமியின் சுழற்சியில் ஒலியாகி ஒளியாகி பூமி ஈர்ப்பின் சுவாசம் வெளிப்பட்டு பூமி சத்தெடுத்து ஆவி அலைகளை வெளிக் கக்குகிறது.

நிலத்திற்கு மேல் உள்ள நீர் நிலையான வட துருவம் தென் துருவம் மற்ற ஆறுகள் குளங்கள் கடல் ஆகியவை வெளிப்படுத்தும் ஆவி அலையின் சமைப்பு மணம் கொண்டு பூமி ஒளி பெற்று மணம் பெற்று ஜீவ ஞான செயல் வித்துக்களை உருவாக்கிக் கொண்டே உள்ளது.

ஆறறிவு கொண்ட பகுத்தறியக் கூடிய எண்ணம் செயல் கொண்ட மனித உருவகங்களை உருவாக்கிடும் கோடானு கோடி உயிரணுக்களை வளர்க்கும் சக்தி கொண்டது தான் இந்தப் பூமி.

இத்தகைய உருவாக்கும் சக்திகள் கொண்ட பூமியின் உண்மைகளை உணர்ந்து…
1.மனிதன் உன்னத உயர்வு ஒளி ஞானத்தைப் பெற
2.எண்ணத்தின் சமைப்பாகச் சுவாசம் எடுக்கும் எண்ணத்தின் உணர்வுக்கொப்ப இச்சரீர்த்தை மணமாக்கி
3.மணத்தின் ஒளி காந்த நுண் அணுவை இச் சரீரம் வளர்த்து
4.காந்த மின் அணுவின் வலுவை எலும்புகளின் ஊன் நிலையில் வகு ஏற்றி
5.அந்த வலுவின் ஆவி அமில முலாமினால் ஆத்ம வலு கூடி
6.ஆத்ம வலுவினால் வளரப் பெறும் ஒளித் தன்மைக்கு
7.மகரிஷிகள் வளர்த்துக் கொண்ட ஒளியின் வலுவை… காந்த மின் அலை வளர்ச்சியை…
8.மனிதச் சரீரத்திலே வளர்த்து வலுவாக்கும் வழி முறையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நமது எல்லை எது…?


மதத்தின் அடிப்படையில் காட்டப்பட்ட சாஸ்திரங்களையும் கோட்பாடுகளையும் அதிலே வடித்துக் கொண்ட வேதங்களையும் மீண்டும் மீண்டும்… படித்துப் படித்துப் படித்து… அதனை உருவாக்கிவிட்டால் அந்த மதத்தின் பிடிப்பிலிருந்து எவரும் விலகுவதில்லை.

மதத்தின் பிடிப்பிலே போகும்போது அதிலே நஞ்சின் தன்மை வரப்படும்போதுதான் அந்த மதத்தை விட்டு விட்டு அடுத்த மதத்திற்குத் தாவி… “எனக்கு இந்தக் கடவுள் செய்வாரா…?” என்ற நிலைகளில் பிரிந்து செல்லும் நிலைகள் வருகின்றது.

ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு வேத சாஸ்திரங்கள் உண்டு. அந்த வேதத்தின் தன்மையைத் தன் மதத்தின் அடிப்படையில் அவர்கள் கொடுக்கப்பட்டு அந்த மதத்திற்கு என்று அரசனாக்கி அந்த அரசனின் வழியிலேயே அந்தந்த நாட்டின் தன்மைகள் உள்ளது.

அதிலே விளைந்த உணார்வின் தன்மைகள் தான் இன்று நமக்குள்ளும் விளையப்பட்டு
1.அவர்கள் செருகிய வித்தின் உணர்வு கொண்டு
2.நாம் அதிலிருந்து மீள முடியாத உணர்வுகளாக இன்றும் இயக்கிக் கொண்டேயுள்ளோம்.

ஒவ்வொரு மதத்திற்கும் மந்திர ஒலிகள் உண்டு. அந்த மந்திர ஒலிகளின் தன்மை பெருகப்பட்ட உணர்வு கொண்டுதான் அதனதன் மதத்தைப் இறுக்கிப் பிடித்து… மற்ற மதத்தைப் பழித்துப் பேசுகின்றது.

ஒரு தாவர இனம் தன் மணத்தின் தன்மை கொண்டு மற்றதைத் தனக்குள் வராதபடி… “தன் சத்தை மட்டும்” காற்றிலிருந்து கவர்ந்து கொள்கின்றது. தன் உணர்வால் கவர்ந்து கொள்கின்றது.

இதைப் போன்று தான் மதத்தால் கொடுக்கப்பட்ட உணர்வுகள் அனைத்தையும் தன் எண்ணத்தால் கவர்ந்து கொண்டாலும் அதிலே ஏற்பட்ட மணம் தான் அது…!
1.மற்றவர்கள் எதைச் சொன்னாலும் அந்த மணம் தடுக்கதான் செய்யும்.
2.மற்ற மதங்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாது.
3.மற்ற இனங்களிலும் இதே போன்றுதான்…!

இனத்தின் தன்மை மந்திரத்தால் உருவாக்கிப் பெற்றால் அந்த உணர்வின் தன்மை மணத்தால் அதிகமாகின்றது. உணர்வின் தன்மை கொண்டு அது உணவாக எடுத்துக் கொண்டு விளைகின்றது.

இதைப் போன்றுதான் மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி
1.மீண்டும் மீண்டும் அந்த விண்வெளி சென்ற அந்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பருகச் செய்து
2.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றும் ஆற்றலை
3.உங்களுக்குள் உரமாக ஊட்டிக் கொண்டிருக்கின்றோம்.
4.வீணான பேச்சு இல்லை…. விரயம் ஆக்கும் தன்மை இல்லை…!

அருள் ஞானிகள் அவர்கள் எவ்வாறு கண்டுணர்ந்தார்களோ… அந்த மகரிஷியின் உணர்வின் சக்திகளை உங்களுக்குள் இணைத்து… இணைத்து… இணைத்து… இந்த இணைப்பின் வலு கொண்டு… உங்களுக்குள் உரமாக்கி விட்டால்… இந்த எண்ணத்தால் நீங்கள் வளரும் பருவம் பெறுகின்றீர்கள்.

அது வந்து விட்டால்…
1.உங்கள் நினைவின் ஆற்றல் மகரிஷிகள் வாழும் இடத்திற்கே வருகின்றது.
2.அந்தப் பேரானந்தச் பெரும் செல்வத்தை உங்களுக்குள் வளர்த்திட இது உதவும்.

அதற்குத் தான் இதைச் சொல்வது.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு விதமாக இருப்பினும் பதிவான மகரிஷிகளின் உணர்வை உந்தச் செய்து அந்த மகரிஷிகளின் சக்திகளை ஏங்கிப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

கடந்த கால வாழ்க்கையில் வந்த தீமைகளையும்… மதத்தால் ஏற்பட்ட உணர்வுகளையும் மாற்றி… நம்மைக் காத்திடும் உணர்வாக மகரிஷிகளின் அருள் உணர்வை அதனுள் இணைக்க வேண்டும்.. அந்த அருள் உணர்வுகளை விளைய வைக்க வேண்டும்.

அதற்குத்தான் யாம் தொடர்ந்து… தொடந்து சொல்வது மகரிஷிகள் காட்டிய உணர்வை இணைத்துக் கொண்ட பின் உங்களுக்குள் சிந்திக்கும் திறன் கிடைக்கின்றது.

அன்றைய அருள் ஞானிகள் மதத்தால் வந்த தீமைகளை எப்படிப் பிளந்தார்களோ… தீமைகளைப் பிளந்திடும் உணர்வை அவர்களுக்குள் எப்படி விளைய வைத்தாரோ… அதை எல்லாம் நுகரும் சக்தியும் கவர்ந்திடும் சக்தியும் உங்களுக்குக் கிடைக்கும்.

ஒவ்வொரு நாளும் இதை நம் நினைவில் கொண்டு நமது எல்லை எது…? இன்று சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

1.உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை கொண்டு ஒளியான நிலைகள் கொண்டு எந்த எல்லையாக அடைந்தனரோ…
2.ஒளீயான குழுமைக் கூட்டமாக இன்று இயங்கிக் கொண்டிருக்கின்றனரோ…
3.அதைத்தான் நமது எல்லையாக வைக்க வேண்டும்…!

March 30, 2020

பூமியின் பொக்கிஷமான கடல் நீரையும்... மனித உடலின் நரம்போட்ட உப்புச் சத்தைப் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது


“இம்மனிதச் சரீர அமைப்பு” உருவாகும் வளர்ச்சியே... இப்பூமியின் சத்து நிலையின் உயர் குணமாய் இப்பூமி வளர்த்த வலுவின் முற்றல் தான்...!

1.பலவாக மோதுண்டு... பல பல கோடி மாற்றங்களுக்குப் பிறகு
2.உயர்ந்த சத்தாய் உருவகம் பெற்ற நரம்போட்ட உப்பின் சுவை உணர்வில்
4.உரு வளர்ச்சி  தரவல்ல உருவம் இது.

மனிதச் சுவை ஆறு...! பல சுவையை உண்டு உரமாக உடலெடுக்கும் சத்து வளர்ச்சியை... வளர்ச்சியின் ஓட்டத் தொடரில்...
1.நாவின் சுவைக்கொப்ப உணவுண்டு வாழுகின்ற வழித் தொடரில் உள்ள நாம்
2.இந்த வாழ்க்கைக்குப் பிறகு நடக்கும் நிலை என்ன...? என்று நாம் உணரவில்லை.

மனிதச் சுவை இப்பூமியின் ஆறு வண்ணத்தைப் போன்று அறு சுவையை உண்டு உணரும், எண்ண நிலை பெறத்தக்க வளர்ப்பில் நீர், கனி வளங்கள், திரவங்கள், தாவரங்கள், புழு பூச்சிகள் இவற்றிலிருந்தெல்லாம் வார்ப்பு கொண்டு வார்ப்பு கொண்டு ஒவ்வொரு முலாமையும்

இப்பூமியிலுள்ள அனைத்து அமிலத் தொடர்புடனும் இச்சரீரக் கோளம் உராய்வு பெற்று...
1.எண்ணம் சுவை குணம் என்ற வார்ப்பில் வடிவம் கொண்டுள்ள
2.மனித வளர்ச்சியை வளர்க்கும் நிலைக்கு வடிகாலாய் அமைந்துள்ள எண்ணத்தின் உணர்வு வழித் தொடர்பை
3.உயர்வு வழியினால் இவ்வுடல் கோளத்திற்கு ஏற்படுத்திக் கொள்ளும் வலுவை வளர்க்கும் நிலை யாது...?

ஒவ்வொரு செயலிலும் அச்செயலுக்குப் பிறகு “வளரும் நிலை” ஒன்று உண்டு. மாறி மாறி உருவாகும்... உருண்டோடும்... இப்பூமியின் வளர்ச்சிக்கே வலுத் தந்து கொண்டுள்ளவைகள் தான் “வட துருவ தென் துருவங்கள்...”

அதிலே மையம் கொண்டுள்ளது தான் “இப்பூமியின் பொக்கிஷமான கடல் நீர்...!” அந்தக் கடலில் ஏற்படும் உப்பின் சுவையினால் தான் இப்பூமி வளர்க்கும் வளர் செயலின் உயிரணுவின் ஜீவித வளர்ச்சி நிலை உள்ளது.

கடலில் உப்புத் தன்மை இல்லாவிட்டால் ஜீவ சக்திக்கு ஜீவித வாழ்க்கையில்லை. “கடல் நீர் உப்புக் கரிக்கின்றது” என்ற சாதாரண எண்ணத்தில்தான் நம் எண்ணம் செல்கின்றது.

ஆனால் இப்பூமியில் வளர்ச்சி கொள்ளும் வளர்ச்சி வார்ப்பகங்கள் எல்லாவற்றுக்குமே மூலப் பொருளை அளிப்பது நம் கடல்தான்.

1.வட துருவமும் தென் துருவமும் எதிர்கொள்ளும்
2.எதிர் எதிர் செயலினால் உருவாகும் உருவகங்கள்தான்
3.ஜீவ பிம்ப சரீரமும் மற்றெல்லா உயிர் வளர்ப்பின் வளர்ச்சியும்.
4.பாற்கடலில் பள்ளி கொண்டான் “மூலவன்...!” என்று
5.சூட்சமத்தில் மறைக்கப்பட்ட புராண காவியத்தின் உண்மையும் இதுவே...!

 கடலின் உண்மை நிலையை உணர்த்தும் செயலின் பொருள் யாது...? என்ற வினா எழும்பலாம்.

உண்மை நடை முறையை உணர்த்தி... ஆத்ம உயிரை வலுவாக்க வேண்டிய வழியை முறைப்படுத்தி...
1.விளக்கிடும் இந்த உண்மை நிலையிலிருந்து
2.ஒவ்வொருவரும் ஆத்ம வலுவைக் கூட்டிக் கொள்ள
3.இச்சரீர இயக்கத்தின் வலுவை வளர்த்துக் கொள்ள வழி காட்டுகின்றேன் (ஈஸ்வரபட்டர்)

உயிருடன் ஒன்றி ஒளியாக்கிய ஈஸ்வரபட்டரின் உணர்வுகளை உங்களுடன் இணைத்து இணைத்து இணைத்து உரமாக ஏற்றுகின்றோம்


ஆயிரம் தான் சொல்லுங்கள்...! மீண்டும் ஜாதகத்தை தேடி இன்னும் நல்ல நேரம் வருகின்றதா...? கெட்ட நேரம் வருகின்றதா...? என்ற நிலைகளைத்தான் தேடிச் செல்ல முடியும்.

நல்ல நேரமாக உங்களால் மாற்ற முடியாது...!
1.ஏனென்றால் இந்த உடலுக்கென்று நல்ல நேரத்தைத் தேடி அலைவீர்கள்.
2.பதிந்த உணர்வுகள் உங்களுக்குள் ஆசையைத் தூண்டிக் கொண்டிருக்கும்.
3.அது நிறைவேறவில்லை என்றால் வேதனைகள் கூடிக் கொண்டிருக்கும்
4.தன்னை அழித்திடும் உணர்வே விளைந்து கொண்டிருக்கும்
5.அதனின் நிலைகள் மனித உருவைச் சீர்குலைத்துவிடும் நிலைகளாகத்  தான் வரும்.

மனிதனாகப் பிறந்து அறிந்திடும் அறிவு ஆறாக இருப்பினும் அடுத்து ஏழாவது நிலைகளைப் பெறவில்லை என்றால் மனிதன் தேய்பிறைக்குத் தான் செல்ல நேரும்.

ஆகவே அறிந்திடும் அறிவின் துணை கொண்டு இருளைப் போக்க வேண்டுமே தவிர இருளை சேர்த்திடுதல் கூடாது.

மனிதன் நாம் ஆறாவது அறிவைக் கொண்ட பின் பொருளைக் காணுகின்றோம் பொருளைக் கண்டபின் அதற்குள் மறைந்திருக்கும் இருளை நீக்கிவிட வேண்டும்.

நம் உடல் நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினைப் பிளக்கின்றது. நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது. அந்த நல்ல உணர்வின் தன்மை கொண்டு அறிந்திடும் அறிவு வருகின்றது.

1.அந்த அறிந்திடும் அறிவு கொண்டு நாம் நுகர்ந்திட்ட உணர்வுக்குள் இருக்கும் இருளைப் பிளந்திடல் வேண்டும்.
2.இருளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிடும் நிலைகள் பெறவேண்டும்
3.இது தான் நம் ஞானிகள் காட்டிய அறநெறிகள்.

அதனை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்று தான் இதைச் சொல்கின்றேன்.

செடிகளுக்கு ஒவ்வொரு குணங்கள் உண்டு. ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு உணர்வுகள் உண்டு. அத்தகைய பல கோடித் தாவர இனங்களின் சத்தை உணவாக உட்கொண்டு அந்த உணவின் சத்தே உடலாக ஆனது உயிர் ஜீவ அணுக்களாக உருவாக்கியது. அதனின் மலமே உடலாக உருவானது.

ஆக... இந்த உடலுக்குள் இருக்கும் உணர்வுகளில் வாடிய குணங்கள் எத்தனையோ உண்டு... வாடிய உணர்வுகள் பலவும் உண்டு

அருள் ஞானியின் உணர்வின் நிலைகளை நினைவு கொண்டு... அவருடன் நிலை கொண்டு... அதனை எடுத்து ஒன்றுடன் ஒன்று இணைத்திடும் உணர்வின் தன்மையாகத் தான் இந்த உபதேசமே யாம் (ஞானகுரு) கொடுக்கின்றோம்.

விவசாயத்தில் (AGRICULTURE) வாடிய பயிரை வளமாக வளர்க்க... எவ்வாறு பல அணுக்களின் வீரியச் சத்து கொண்ட உணர்வினை இணைத்துப் புதுப் புது வித்துகளை உருவாக்குகின்றனரோ... இதைப்போலத்தான்
1.அந்த அருள் ஞானியின் உணர்வின் தன்மையை
2.மகரிஷிகள் உணர்த்திக் காட்டிய நிலைகளை
3.மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் கொடுத்த உணர்வின் துணை கொண்டு உரமாகக் கொடுக்கின்றோம்.

நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் பேரண்டத்தின் நிலைகளை அறிந்து... அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து தீமைகளைப் பிளந்து... தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளைத் தன்னுள் விளைய வைத்தார். விளைந்த உணர்வு கொண்டு உயிரோடு ஒன்றி இன்றும் ஒளியாக இருக்கின்றார்.

1.ஒளியாக நிலை கொண்டிருக்கும் ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகளை நினைவு கொண்டு
2.உங்களுடன் இணைத்து... இணைத்து... இணைத்து...
3.அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் உரமாக இணைப்பதே என்னுடைய வேலை...!

March 29, 2020

கலி புருஷனின் உண்மையான வலுவைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நடக்கின்றோம் கேட்கின்றோம் பேசுகின்றோம் சுவைக்கின்றோம் பார்க்கின்றோம் நுகர்கின்றோம்..!

இந்த ஒவ்வொரு செயல் நிலையிலும் “ஞான வளர்ச்சி” காலமுடன் ஒன்றியதாகச் சத்து பெற்றுள்ள இத்தருணத்தை இன்றைய மனிதச் செயலின் அடுத்த நிலையான பறக்கும் நிலைக்கு மனிதனின் உருவக உயர்வு நிலை வந்திருக்க வேண்டும்.

கல்வித் தரத்தில் எப்படி முதல் வகுப்பு… இர்ண்டாம் வகுப்பு… என்று கல்வித் தரத்தை (தேர்ச்சி பெற்றதை) உயர்த்துகின்றார்களோ அதைப் போன்று
ஒலி…
ஒளி…
நீர்…
தாவரம்…
ஜீவ சக்தி… (உயிரினங்கள்)
ஞான சக்தி (தற்போதைய மனிதன்)
இத்தொடரில் அடுத்த நிலையான தெய்வ வளர்ப்பு சக்தியை மனிதன் பெற வேண்டும்.

ஏனென்றால் இந்தப் பூமி பெற்ற எல்லாச் சக்தியுமே இந்த மனிதக் கோளத்தில் தொடர்பு கொண்டுள்ளது.

அத்தகைய வளர்ப்பின் வலு கூடிய பிறகு தான் (மனிதனின்) எண்ணத்தின் பகுத்தறியும் சொல் செயல் ஆற்றல் முதிர்வு நிலை பெறுகின்றது.

பூமியின் வளர்ச்சியில் முதிர்வு கொண்ட வளர்ப்பு தான் மனிதர்கள். மனிதனுக்கு அடுத்த நிலையான…
1.தெய்வ நிலை பெறக்கூடிய பூமியின் சத்து வித்தாக வளர்ச்சிப்படுத்த
2.பூமி சேமிக்கும் தன் வம்சத் தொடரின் தொடர்கள் தானப்பா
3.மனிதன் பெற்ற உயர் ஞான பகுத்தறிவு வித்து நிலை என்பது.

ஆனால் தன் உடல் கோளத்தில் உணரும் உயர் ஞானத்தை இக்கலி தந்த காலத்தில் வளர்க்கத் தெரியாமல்… கலிக்கு அடுத்த கல்கியின் உயர்ந்த சத்தாகப் பெறவல்ல உயர்ந்த சந்தர்ப்பத்தை… கல்கி யுகமாக்கிப் “பறக்கும் சக்தியை…” இந்தப் பூமி வளர்ப்பில் வளர்ந்த வித்துக்கள் (மனிதர்கள்) உயர்வு நிலைப்படுத்த முயற்சிக்கவில்லை.

“கலி” என்றாலே பகுத்தறியும் உயர் ஞான வளர்ச்சி முற்றலின் வலு என்று உணராமல்
1.இக்கலியையே செயற்கைக் கலியாக்கி
2.உன்னத வளர்ச்சியில் சுழன்ற இந்தப் பூமியின் சத்தையே
3.இன்றைய மனித ஞானம் அழிக்கும் நிலைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளது.

ஆக.. கல்கியுகத் தொடர்பை இந்தக் கலியில் இங்கே இந்தப் பூமியில் வளர்க்க முடியா விட்டாலும் நம் சூரியக் குடும்பத் தொடர்பில் (மற்றொரு கோளத்தில்) நாம் எடுக்கும் ஜெபத்தால் கல்கி யுகத்தை வளர்க்க முடியும். 

விஞ்ஞானத்தின் சக்தி மிக மிக வீரியம் கொண்டதாக… நுண்ணிய அறிவாக இருந்தாலும்... தனக்குள் வரும் தீமைகளைப் பிளக்க முடியவில்லை…!

குருநாதர் காட்டிய அருள் வழியில் 2000 சூரியக் குடும்பங்களைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கின்றேன். அதை எல்லாம் இலேசில் சொல்லகின்றேன் (ஞானகுரு) என்று எண்ண வேண்டாம். என்னை அங்கேயே அழைத்துச் சென்றார் குருநாதர்…!

அந்த அண்டங்களிலே எவ்வாறு இயக்குகின்றது….? அங்கேல்லாம் எடுத்துக் கொண்ட உயிரணுக்களின் வளர்ச்சி எப்படி இருக்கின்றது…? அந்த 2000 சூரியக் குடும்பங்களில் உள்ள பூமிகளில் மனிதர்கள் முடி இருப்போரும் உண்டு… கூழையாக இருப்போரும் உண்டு… நம் பூமியைக் காட்டிலும் மிகவும் விஞ்ஞான அறிவில் உயர்ந்தோரும் உண்டு.

விஞ்ஞான அறிவின் நுண்ணிய அலைகள் கொண்டு
1.இங்கே நாம் எப்படி எலக்ட்ரானிக் நிலைகளைச் செயல்படுத்துகின்றோமோ இயந்திரங்களை மாற்றுகின்றோமோ…
2.மந்திர ஒலி கொண்டு மனிதனை உருக்குலையச் செய்து ஆவியாக மாறுகின்றானோ…. கூடு விட்டு கூடு பாய்கின்றானோ… இதைப்போன்று
3.நம் பூமியில் இருப்பது போல 2000 சூரியக் குடும்பங்களில் நான்கு சூரிய குடும்பங்களில் இது உண்டு.

அவர்கள் தன் உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து… உடலையே ஒளியாக மாற்றி… “எங்கு வேண்டுமானாலும் செல்லும் சக்தியாக” மந்திர ஒலியால் உருவாக்கிக் கொண்டவர்கள்.

நம்மைக் காட்டிலும் அங்கே மந்திர ஒலிகளைக் கொண்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி மற்ற இடங்களுக்கு ஊடுருவிச் செயல்படும் தன்மைகள் உண்டு.

இது எல்லாம் குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகள்…!

ஏனென்றால் இதைப் பற்றி முந்தி சாமி (ஞானகுரு) சொல்லவில்லையே…! என்று எண்ணலாம். எதை எதைச் சொல்வது…? எதை மனதில் பதிய வைப்பது…? என்று அந்தந்தக் காலம் வரும்போது தான் இதை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

எலக்ட்ரானிக்….! என்று ஒரு பொருளின் தன்மையை ரூபமாக மாற்றி இன்று எப்படிக் காட்டுகின்றாரோ இதைப் போலத்தான் மற்ற சூரியக் குடும்பத்திலிருந்தும் அவர்கள் விண் விசையின் தன்மையை எலக்ட்ரானிக்காகத் தனக்குள் மாற்றி
1.நம் பூமிக்கும் வந்து செல்கின்றார்கள் (ALIENS)
2.பறக்கும் தட்டு… அந்தத் தட்டு…! என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆக… எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள். தன் உந்து விசையின் தன்மையால் இழுக்கின்றார்கள்… குவிக்கின்றார்கள். தன்னுடைய நிலையை “அடுத்தவர்கள் வருவதற்கு முன் மறைந்து விடுவார்கள்…!”

இங்கே நம் பூமியில் இவர்கள் செய்யும் (எலக்ட்ரானிக்) விஞ்ஞான அறிவைப் போல அவர்கள் மேன்மை கொண்டவர்கள். நம் பூமியில் வந்து செல்கின்றார்கள் அந்த உணர்வலைகளை நம் பூமி கவர்கின்றது.

1.உணர்வின் தன்மை எலக்ட்ரானிக்கில் இணைத்த பின் அலைகளாக மாற்றி
2.மீண்டும் எங்கேயும் ஊடுருவி… இந்த உணர்வின் தன்மை எங்கு வேண்டுமானாலும் செலுத்தப்பட்டு
3.எலக்ட்ரானிக்கின் கருவி கொண்ட மற்ற இயந்திரங்களையோ சாதனங்களையோ இயக்கி விட்டு
4.இனம் புரியாத நிலைகள் செல்லும் நிலைகளும் உண்டு.

இந்த எலக்ட்ரானிக் நிலைகளை அலைகளாக பிரிக்கப்படும் நிலைகள் நம் பூமியிலும் இது நடக்கின்றது. நம் பூமியில் லேசர் (LASER) கதிரியக்கப் பொறிகளைக் கொண்டு மற்றொரு நாட்டிற்குள் ஊடுருவச் செய்கின்றார்கள்.
1.அந்த எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற கதிரியக்கங்களைப் பாய்ச்சியபின்
2.அது மின்னணுவாக அதனுடைய அதிர்வின் நிலைகளைக் கொண்டு
3.அந்த நாட்டில் இருக்கக்கூடிய நுண்ணிய அறிவுகளையும்
4.இயந்திரத்தின் மூலமாக (அவர்களுக்குத் தெரியாமல்) காண்கின்றார்.

மிக மிகச் சிறிய நிலைகளை நாம் கண்ணால் பார்க்க முடியவில்லை என்றாலும்
1.அதற்கென்று ஒரு சாதனத்தை… ஊசி முனை (PROBE) என்ற அளவுகோலை வைத்து
2.விமானத்தின் மூலம் விண்ணிலே பறந்து கொண்டே பார்க்கும் நிலைகளுக்கு
3.விஞ்ஞான அறிவு நம் நாட்டிலேயே வந்துவிட்டது.

காரணம்… இதனுடைய நுண்ணிய அறிவினைக் காட்டப்பட்டு அதனைக் கொண்டு வளர்க்கின்றார்கள். இப்போது சாதாரண கருவிகளின் உணர்வின் தன்மையைப் பிளக்கப்பட்டு… “கதிரியக்கத்தால் அ8லைகளாகப் பிரிக்கப்பட்டு…” அதனுடைய அளவுகோலை எல்லாம் அளந்து அறிகின்றார்கள்.

ஒரு அலையின் தன்மை எந்த அளவு இருக்கின்றதோ… அதனின் நுண்ணிய உணர்வின் அதிர்வுகளைக் கண்டுணர்ந்து… அதனின் செயலாக்கங்கள் இன்னது தான்…! என்று அவன் காணுகின்றான்.

அதைப் போலத்தான் பூமிக்குள்ளும் கதிரியக்கச் சக்திகளை ஊடுருவச் செய்து அதனை நுண்ணிய அளவுகோல் கொண்டு அளந்தறிந்து… பூமிக்குள் இன்னென்ன பாகங்களில் இன்னென்ன உலோகங்கள்… நீர் வளங்கள்… எண்ணெய் வகைகள்… மற்ற பொருள்கள் அங்கே விளைகின்றது..! என்ற கண்டுபிடிக்கும் உணர்வுகள் விஞ்ஞான அறிவால் வந்து விட்டது.

ஆனால் மெய் ஞானிகளோ…
1.அவர்கள் கண்ணின் நினைவை எதன் பக்கம் பாய்ச்சுகின்றனரோ… அதற்குள் ஊடுருவி..
2.அதன் உணர்வின் தன்மையை அறிந்து… தனக்குள் அதை நுகர்ந்து
3.தான் யார்…? என்று தன்னை அறிந்து கொண்டவர்கள்…!

விண்ணுலக ஆற்றலையும் பேரண்ட உணர்வுகளையும் தனக்குள் அவர்கள் கவர்ந்து
1.மனிதனுக்குள் வந்த தீமைகளைப் பிளந்து…
2.தீமைகளைப் பிளந்த உணர்வுகளைக் கதிரியக்கங்களாக மாற்றிக் கொண்டார்கள்
3.தன் உணர்வின் செயல் அனைத்தையும் அவ்வாறு மாற்றிக் கொண்டார்கள்.

தன் எண்ணங்கள் கொண்டு எல்லாவற்றிலும் ஊடுருவி ஒவ்வொன்றையும் தனக்குள் கவர்ந்து அந்த உணர்வின் செயலாக்கங்களைத் தனக்குள் பிளந்திடும் சக்தியாக… அணுக்களாக வளர்ச்சி செய்யப்பட்டு தன் உடலில் வந்த தீமையான நிலைகளை எல்லாம் சுட்டுப் பொசுக்கினார்கள் அந்த மெய் ஞானிகள்.

1.இருளைப் போக்கும் உணர்வைத் தனக்குள் விளைய வைத்தான்.
2.உயிருடன் ஒன்றினான்… துருவ நட்சத்திரமானான்…
3.அவனைப் பின்பற்றி சென்றவர்கள் அனைத்தும் தீமையை விலக்கிடும் சக்தி பெற்று
4.அவன் ஈர்ப்பிலே சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்

விஞ்ஞானிகளோ அணுவைப் பிளந்து… அணுவின் தன்மை கொண்டு கதிரியக்கங்களாக மாற்றி… அந்தக் கதிரியக்கப் பொறிகளை ஒன்றுடன் பாய்ச்சப்படும்போது ஒளி அலைகளைக் கண்டுணர்ந்து (லேசராக)
1.அதனுடைய இயக்கம் எவ்வாறு…?
2.அதனுடன் கலந்த நிலைகள் எது..? என்று
3.தனக்குள் விரிவுப்படுத்தி அறிகின்றார்கள்

இதைப் பற்றிய விஞ்ஞான அறிவு கொண்டோர் யார் இருந்தாலும் சரி.. நான் (ஞானகுரு) சொல்லும் பொறிகளின் நிலைகளைச் சிந்தித்துப் பாருங்கள். அந்தப் பொறியின் அளவுகோலைப் பற்றிச் சொன்னதை எல்லாம் விஞ்ஞானிகள் வெளிப்படுத்துவார்கள்.

ஏனென்றால்... நம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) விஞ்ஞானிகள் எவ்வாறு செயல்படுத்துகின்றார்கள்…? என்ற நிலைகளை உணர்த்தினார்.

அதனுடன் தொடர்பு கொண்டு விண் அணுக்களின் நிலைகளையும் அதே சமயத்தில் கதிரியக்கப் பொறிகளின் நிலைகளையும்…
1.உணர்வுகள் எதனுடன் ஊடுருவுகின்றது…?
2.அது எவ்வாறு பிளக்கின்றது…?
3.பிளந்த நிலைகளைள எவ்வாறு அதிர்வுகளால் அறிகின்றான்..?
4.அதை இணைத்துக் கொண்டபின் எவ்வாறு இயக்குகின்றான்…? என்ற நிலையை எல்லாம் தெளிவாக எடுத்துரைத்தார் குருநாதர்.

இவ்வளவையும் படிக்காதவன் நான் சொல்லி விட்டால்.. அப்புறம்   படித்தவர்கள் விஷயத்தை நிறைய எடுத்துக் கொள்ளுவார்கள். எடுத்து அவருடைய ஆராய்ச்சிக்குத் தான் கொண்டு போவார்கள். விஞ்ஞான அறிவுக்குத் தான் பயன்படும்… தீமைகளைப் பிளக்க முடியாது…!

1.ஆனால் அந்த மெய் ஞானியின் உணர்வின் அதிர்வுகளை நமக்குள் செலுத்தினால்
2.இந்த உணர்வின் எண்ணத்தோடு பாய்ச்சப்படும்போது எத்தகைய தீமைகளையும் பிளக்க முடியும். 
3.விஞ்ஞானத்தால் வரும் கடுமையான விஷங்களையும் ஒடுக்க முடியும்
4.மெய் ஞானிகளுடன் ஒன்றி என்றுமே ஏகாந்தமாக வாழ முடியும்.           

March 28, 2020

நம்மிடம் செல்வம் இருக்கின்றது…! என்று ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க முடிகின்றதா…?


தொழில் செய்கின்றோம்… செல்வத்தைச் சம்பாரிக்கின்றோம். செல்வம் வந்தால் மகிழ்ச்சி பெற முடியும்…! என்கின்றோம். ஆனால் அந்த செல்வத்தின் தன்மை வளர்ந்ந்து வந்தாலும் கடைசியில் என்ன ஆகின்றது…?

என் பையன் இப்படிச் செய்கின்றானே… நம் சொத்தைக் காப்பானா…? எல்லோருக்கும் தாராளமாகக் கொடுத்து உதவி செய்தேன்… வாங்கிச் சென்றவர்கள் திரும்பக் கொடுக்கவில்லையே…! என்று இப்படி எத்தனையோ எண்ணங்களை எண்ணி அதனால் வேதனைப்படுகின்றோம்.

1.இவ்வாறு வேதனைப்படும் பொழுது அது நோயாக வருகின்றது.
2.நோயாக வரும்போது செல்வம் அதிகமாக இருப்பினும் வேதனைதான் அதிகமாகின்றது.

வேதனையோடு நாம் இருக்கும் நேரத்தில் நாம் எண்ணியபடி நம் பிள்ளையோ… மனைவியோ… மக்களோ… அல்லது உற்றார் உறவினரோ.. எண்ணவில்லை என்றால் அவர்களைப் பற்றிய வேதனையைத்தான் நாம் அதிகமாக எண்ணுகின்றோம்.
1.செல்வத்தைச் சம்பாதித்தோம்…
2.நாம் எந்த மகிழ்ச்சியைக் கொண்டோம்…?

செல்வத்தைச் சம்பாதித்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று வளர்ந்து வந்த நிலையில் மற்றவருக்கு உதவி செய்தாலும்… அந்த உதவியால் அவர்கள் நல்லவராக ஆகவில்லை என்றால் அவர்களைக் கண்டு நாம் வேதனையைத்தான் படுகின்றோம்.

இப்படித்தான் செல்வம் ஒரு பக்கம் இருப்பினும்
1.செல்வத்தால் வேதனை என்ற நிலை அதிகரித்துக் கடைசியில்
2.பூமியின் பற்றை அதிகமாக வளர்த்து கொள்கின்றோம்.

அது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை… தெளிந்த குணங்களை… நாளுக்கு நாள் மறையச் செய்கின்றது. இதைப் போன்று வரும் நிலைகளில் இருந்து நாம் எப்படி மீளுவது…? எந்த வகையில் மீளுவது…?

நம் வாழ்க்கையில் சந்திக்கும் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாது பல பல தீய வினைகள் நமக்குள் சேர்ந்திருந்தாலும் அந்தத் தீய வினைகளைத் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் எவ்வளவு உயர்ந்தவராக இருப்பினும்
1.வேதனைப்படுவோரைப் பார்க்காமல் இருக்க முடியாது…
2.வேதனைப்படுவோரின் சொல்லை கேட்காமல் இருக்க முடியாது.
3.ஒருவர் குற்றம் செய்கின்றார் என்றால் குற்றம் செய்வதைப் பார்க்காமல் இருக்க முடியாது.

குற்றத்தைப் பார்த்தாலும் குற்றத்தைச் செய்தபின் அதிலே நேர்முகமாகப் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்தால் தெரியும்.
1.அறிவால் அதை எல்லாம் அறிகின்றோம்…
2.அறிந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.

ஆகவே நாம் எத்தகைய நிலைகள் பட்டாலும்… பார்த்தாலும்,,, அறியும்  உணர்வுகள் கொண்டு அறிந்து கொண்டாலும்…
1.எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் அறிவு நமக்கு இருந்தாலும் (கார்த்திகேயா)
2.தீமை என்று அறிந்ததை நீக்கிடும் “அந்த அறிவு வேண்டும்…” (இது தான் மிக முக்கியமானது..!)

பறக்கும் யுகம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


காட்சி:
நீரே பெரும் கடலாகத் தெரிந்தது. அதைப் பார்த்ததும் கடல் தான் பூமிக்கு முதல் நிலையா…? என்ற எண்ணம் தோன்றியது.

அந்த எண்ணத்திற்கு “இல்லை…!” என்ற சொல் ஒலித்தது. பிறகு வரிசையாக ஒலி ஒளி நீர் செடி கொடி புழு பூச்சிகள் தெரிந்து கடைசியில் மனித உருவமும் தெரிந்தது.

பிறகு இது எதுவும் நம் பூமிக்கு முதல் நிலையல்ல…! என்ற சொல் ஒலித்தது.

வானத்தில் கறுத்த மண் போன்ற… மண் என்பது கரியை இடித்த சாம்பல் போன்ற கறுப்பான சில மணங்கள் உருள்வதைப் போன்றும்… அதுவே கட்டியாகிச் சிறு சிறு வெண்மையான மின்னும் மணல்களைப் போன்றும்… கறுப்பு மணலிலிருந்து வெள்ளை மணல் தெரிந்தது.

அதன் பிறகு பல வண்ணங்கள் கொண்ட மண்கள் மண் வடிவம் போன்றும்… வெள்ளி தங்கம் போன்ற பல உலோக வண்ணங்கள் மாறி மாறித் தெரிந்தது.

அதன் பின் பச்சையான படிவக் கற்களும் அதற்கு உள் ஊடுருவலில் ஒளியான வைரப் படிமனின் ஒளியும் அப்படித் தெரிந்த படிவங்களிலிருந்து – அந்தந்தப் படிமன் வண்ண உலோகத்திலிருந்து ஆவியாக மேலே செல்வது போன்றும்… அந்தந்த ஆவி சுழல் ஒலியும்… அதிலிருந்து ஒளியும்… பிறகு அந்த ஒளி கடல் நீரின் மேல் மோதுவதைப் போன்றும்… அந்த நீரிலிருந்து பல திரவ வண்ண நீர்கள் தனித் தனியாக அந்தந்த இடங்களில் தெரிகின்றன.

பின்… பாதரசத் திரவமும் சில இடங்களில் பழுப்பு வண்ணம் போன்ற ஒரே திடமாக பூமியின் ஈர்ப்பில் கொதிப்பதைப் போன்றும் மாறி மாறித் தெரிகின்றது.

மனித எண்ண உணர்வு… (சரீரத்தின் சுவை) அறு சுவையை உணர்ந்து இச்சரீரச் சமைப்பின் சுவை ஏழாகி ஆத்ம வளர்ச்சிக்கு உரம் தருகின்றது.

“சூரியனின் சத்தை…” மற்றக் கோளங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி வெளிப்படுத்துவதை இந்தப் பூமி எடுத்து வளரும் வழிக்கு சூரியனின் அமிலச் சத்தை பூமி தனக்குகந்த சத்தாகப் பெறத் தன்னைத் தானே ஒலி கொண்டு ஒளி பெற்று எடுத்துக் கொள்கிறது.

பூமி வளர்த்த ஜீவ வளர்ப்புகளான உலோகங்களாகி… அத்திடத்திலிருந்து ஆவி மீண்டும் வெளிப்பட்டு…
ஆவி…
திடம்…
உராய்வு… என்று
மீண்டும் மீண்டும் ஆகித் தான் எல்லாமே வளர்ந்தது.

இப்படி… பூமி தான் பெற்ற வழித் தொடரிலிருந்தே வளர் தொடர் கொண்ட கனி வளங்களை (உலோகங்கள்) வளர்த்து
1.பல உன்னத உலோகங்களின் திரவக வளர்ப்பில் உயர் நிலை வளர்ப்பாகப் பல கோடி கோடி ஆண்டுகளாக வளர்த்து
2.அத்தொடரின் சத்தில் சத்தாக… உயர்ந்த சத்து குணம் கொண்ட மனித உருவங்கள் வளர்ந்து
3.எண்ணம் உணர்வு சுவை ஞானம் என்ற சக்தி பெறப் பெற்ற இந்த மனிதச் சரீரம் ஒவ்வொன்றிலுமே
4.ஆறாவது அறிவு கொண்ட மனித சக்தியின் உன்னதச் செயலை
5.ஏழாவது உயர் ஞான வளர்ச்சிக்கு வலுக் கூட்டினால்
6.கல்கி யுகம் என்ற பறக்கும் யுகத்தை நாம் உருவாக்க முடியும்.