ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 10, 2018

என் நினைவில் எப்பொழுதும் நீ வர வேண்டும் ஈஸ்வரா…! குருதேவா...!

ஆதி சக்தி என்பதே கடும் விஷம்.

ஆனால் அந்த விஷத்தால் தாக்கப்பட்டு விஷத்தின் தன்மையால் இயங்கிக் கொண்டு அந்த இயக்கத்தால் மற்றதை உருவாக்கிக் கொண்டு இயங்கும் அந்த ஆற்றலைப் பெற்றது தான் நம் உயிர். உயிரை ஈஸ்வரன் என்று ஞானிகள் காட்டினார்கள்.

1.நெகட்டிவ் பாசிட்டிவ் (-ve, +ve) என்ற நிலைகள்
2.எதிர் நிலை ஆகும் போது தான் “வெளிச்சம்…:
3.அந்த எதிர் நிலைக்கொப்பத் தான் ஒரு மோட்டாரின் “சுழற்சி…”

இதைப் போன்று தான் உயிருக்குள் எதிர் நிலை ஆகும் போது விஷத்தின் தாக்குதலால் அது சீராக இயங்கி இயக்கச் சக்தியாக மாறுகின்றது. அதைத் தான் "ஆதி சக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா…" என்று சொல்வது.

ஆதி சக்தியால் இயக்கப்பட்டு அது சீராக இயங்கி உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் நீ இயக்குகின்றாய்.
1.உருவான அனைத்திற்கும் குருவாக இருக்கும் குருதேவா… ஈஸ்வரா….!
1.எனக்குள் ஈசனாக இருந்து
3.அனைத்தையும் உருவாக்கிக் கொண்டு இருக்கின்றாய் என்று பொருள்.

என் இசையில் நீ இசைப்பாய்… என் நினைவில் நீ வருவாய்… ஈஸ்வரா…!

நான் எதை எல்லாம் எண்ணுகின்றேனோ அதை எல்லாம்  இயக்குகின்றாய். ஆகவே என் நினைவில் நீ வருவாய்

1.நான் எதைச் செய்ய வேண்டும் என்றாலும்
2.உன் நினைவு எனக்குள் முதலில் வரவேண்டும் ஈஸ்வரா…!
3.தீமை என்ற நிலைகள் வரப்போகும் போது அதை மறக்க வேண்டும்.

தீமைகள் என்று வரும் போது “உன் நினைவு தான்…” எனக்கு வர வேண்டும் ஈஸ்வரா. அப்பொழுது அந்தத் தீமைகளை நான் நுகராது நல்ல வினைகளை நற்சக்திகளை நான் நுகரும் சக்தியாக வர வேண்டும் ஈஸ்வரா…!

என் இசையில் நீ இசைப்பாய்… என் நினைவில் நீ வருவாய்… உன் அருளைப் பெற்றிடவே என் நினைவைத் தந்து விட்டேன் உன்னிடம்… ஈஸ்வரா… குருதேவா…!

1.இருளை அகற்றி ஒளியாக இருக்கும் அந்த அருளைப் பெற
2.என் நினைவுகள் அனைத்தையும்
3.உயிரான உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் ஈஸ்வரா…!

“புருவ மத்தியிலிருக்கும்… நம் உயிரை” எந்த அளவிற்கு அதிகமாக எண்ணுகின்றோமோ அந்த அளவிற்கு
1.இயக்கச் சக்தியின் ஆற்றலைப் பெற்று
2.எண்ணிய சக்தியைப் பெற முடியும்.

ஞானிகள் அவ்வாறு பெற்றுத்தான் இன்றும் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகி துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.