ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 31, 2022

உயிருடன் ஒன்றி என்றும் ஒளி என்ற உணர்வுகளை உருவாக்கும் நிலை தான் கல்கி

இந்த உடலில் சிறிது காலமே நாம் வாழ்கிறோம். நமக்கு இந்த உடலும் சொந்தமில்லை. இதிலே தேடிய செல்வமும் சொந்தமில்லை. காரணம்…
1.செல்வத்தைத் தேடிய பின் உடலில் முதுமை அடையப்படும் போது கவலையும் வேதனையும் தான் வருகிறது.
2.தன் பையன் என்ன செய்யப் போகின்றான்..?
3.இவ்வளவு பொருளையும் விட்டுவிட்டுச் செல்கிறேன்… என்ன ஆகப் போகிறதோ…? என்ற
4.இந்த உணர்வின் பற்று தான் வருகிறது… அந்த நினைவுடனே இந்த உயிர் உடலை விட்டுச் செல்கிறது.

பின் யார் மேல் எந்தப் பற்று வருகிறதோ மீண்டும் பிறவிக்கே வருகிறது. இவரின் உடல் கூட வருகிறதா என்றால் இல்லை.
1.இவர் தேடிய ஆசையின் உணர்வே கூடச் செல்கிறது.
2.அந்த உணர்வு கொண்டு தான் அடுத்த உடலாக மாற்றுகிறது
3.மீண்டும் அதிலே வேதனையைத் தான் தேடுகிறது.

ஆகவே நாம் இப்போது ஆசையின் நிமித்தம் கலியில் சிக்கி மீண்டும் உடல் நிலையே பெறுகின்றோம்.

இதிலிருந்து விடுபடும் நிலையாக இந்த உடலில் நல்ல நினைவு இருக்கும் போதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதன் உணர்வின் தன்மை கொண்டு நாம் பிறவி இல்லா நிலை அடைய முடியும்.

நாம் பல கோடி உடல்களில் சேர்த்துக் கொண்ட “கார்த்திகேயா…” எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் அறிவு… தீமை என்ற நிலைகள் புகாதபடி தணித்துக் கொள்ளும் சக்தி தான் ஆறாவது அறிவு.

1.தீமை என்று தெரிந்து கொண்ட பின் “வள்ளி…” அந்த வலிமையான சக்தியின் துணை கொண்டு
2.வலிமை பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து உயிரிலே படும் போது
3.அது தெய்வ ஆணையாகத் தீமைகளை நீக்கும் உணர்ச்சிகளாக உடலுக்குள் வருகிறது.

ஆக… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இச்சைப்பட்டால் நம் உயிரிலே அது கிரியையாகி அந்த ஞானத்தின் வழி நம் வாழ்க்கையை அமைக்கின்றது.

நாம் பெற்ற இச்சைகள் நம் உடலில் கிரியையாகி அந்த ஞானத்தின் வழியாக நம் வாழ்க்கை அமைந்து உயிருடன் ஒன்றிய ஒளியாகப் பிறவி இல்லா நிலை அடைவதே கல்கி… கடைசி நிலை.

உடல் என்ற ஆசை வராதபடி என்றுமே இந்த உயிர் எல்லா உலகையும் காட்டுவதற்கு எல்லா உணர்வையும் ஊட்டியது. ஆகையினால் அந்த உயிரைப் போன்று உணர்வின் ஒளியாக நாம் மாறுதல் வேண்டும்.

1.நாம் உயிருடன் என்றுமே ஒன்றி ஒளியான நிலை பெற வேண்டும்
2.உடலான நிலைகள் மாறி அந்த ஒளியான நிலைகள் பெற வேண்டும் என்பது தான் நம் குரு காட்டிய அருள் வழி.

அதனால் அதை நாம் உருவாக்குவோம் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் (ஞானகுரு).

இதைப் படிப்போர் அனைவரும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெற்று… இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி… மெய்ப் பொருளைக் காணும் அருள் சக்தி பெற்று… கலியை அகற்றிக் கல்கியாக மாறி… ஆனந்த நிலை பெற்று… என்றும் ஏகாந்த நிலை பெற எல்லா மகரிஷிகளையும் வேண்டிக் கொள்கிறேன்.

எதிர்த்து வரும் ஏதிர் நிலைகளுக்கு நம்மை அடிமைப்படுத்தாமல் மெய் ஞானி காட்டிய வழியிலேயே நாம் செயல்பட வேண்டும்

உதாரணமாக சாதம் உண்ணும் பொழுது அதிலே ஒரு கல் பட்டு உடம்பே சிலிர்க்கின்றது.

நாம் நல்ல நிலையில் நல்ல உணர்வும் எண்ணங்களும் கொண்டு வாழ்ந்து வந்து ஞானத்தின் வழித்தொடரைப் பெற்றாலும்
1.அறுசுவையான உணவை உட்கொள்ளும் பொழுது அதனுடன் சேர்ந்து வந்த சிறு கல்லைப் போல
2.அருள் வழியில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது சில இடர்கள் வரத்தான் செய்யும்.
3.அந்த நிலையில் உணவுடன் வரும் கல்லுக்காக நாம் சாப்பாடு சாப்பிடாமல் இருப்பதில்லை.
4.நம்மை எதிர்த்து வரும் அந்த ஏதிர் நிலையான உணர்வுக்கு நம்மையே நாம் அடிமைப்படுத்தாமல்
5.ஞானிகள் காட்டிய மெய் வழியிலேயே நாம் செயல்படுதல் வேண்டும்.

உதாரணமாக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்றால் பலமான அஸ்திவாரம் வேண்டும். அதே போலத்தான் சுவரை எழுப்பவும் அதற்குகந்த கலவைகள் அந்தந்த அளவிலே சேர்த்துக் கட்டினால் தான் அந்தச் சுவர் உறுதியாக நிற்கும்.

சுவர் எழுப்பும் பொழுது அதன் கலவையில் போடும் பொருள்களில் அளவு மாறுபட்டால் அந்தச் சுவருக்குப் பலமில்லை.
1.மணல் அதிகப்பட்டால் உதிரும் நிலையும்
2.சிமெண்ட் அதிகமானால் வெடிக்கும் தன்மையும்
3.நீர் அதிகமானால் அதன் பக்குவ நிலை செயல்படாத நிலையும்
4.மனிதனால் உருவாக்கப்பட்ட சுவருக்கே அதன் கலவை மாறும் பொழுது அது நிற்பதில்லை.

ஆகவே நம் உடலிலுள்ள உணர்வின் எண்ணங்கள் சீராகவும் சமமாகவும் இருந்தால் தான் உடல் நலமாக இருக்கும். உடல் நலமாக இருந்தால் அது எண்ணத்தின் “மையக் கோலாகி (வலுவாகி)” ஆத்ம சக்தியைப் பெற முடியும்.

சலிப்பு சங்கடம் கோபம் ஆத்திரம் வேதனை பேராசை அதிகமான உடல் இச்சைகள் லாகிரி வஸ்துக்களைப் பயன்படுத்துதல் போன்ற நிலைகளில் அடிமைப்பட்டு வாழும் பொழுது
1.நாம் எடுக்கும் சுவாசமானது “கடினமாகி...!”
2.நம் உடலில் சேரும் (உணர்வின் எண்ணங்கள்) அமிலத் தன்மை கூடியும் குறைந்தும் விடுகின்றது

அதனால் உடலில் உள்ள சுரப்பிகளில் சுரக்கக்கூடிய அமிலங்களில் வித்தியாசமாகி (உப்புக்கள் சர்க்கரை கொழுப்பு) நம் உடல் நிலை பாதிக்கப்பட்டு நாம் சோர்வடைந்து விடுகின்றோம். அதனால் பல நோய்களுக்கும் ஆளாகிவிடுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளைச் சமப்படுத்தும் நிலைக்குத்தான் உங்களுக்குச் சரியான ஆயுதமாக ஆத்ம சுத்தியைக் கொடுத்துள்ளோம்.

ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்து உடல் உறுப்புகளுக்குள் பாய்ச்சி அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்களையும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்து கொண்டே வந்தால் நம்முடைய வாழ்க்கை அருள் வாழ்க்கையாக அமையும்.

மகிழ்ந்து வாழும் சக்தி பெறுகின்றோம். மகரிஷிகளின் அருள் வட்டத்திலேலே ஒன்றி வாழும் தகுதி பெறுகின்றோம். 

May 30, 2022

உயிரால் தான் இயக்கப்படுகின்றோம்… உயிர் தான் அனைத்திற்கும் காரணம்

நம்மைத் திட்டியவனை எண்ணும் போது அவனைச் சும்மா விடலாமா…? கொலை செய்யலாமா…? என்று கூட எண்ணம் வந்துவிடுகிறது. நம் பிள்ளைகளாக இருந்தாலும் கூட வெறுக்கும் தன்மையே வருகிறது.

இது எல்லாம் கலி தான்.

1.வெறுக்கும் தன்மை கொண்டு கொலை செய்ய வேண்டும் என்ற உணர்வை எடுக்கும் போது
2.அல்லது அவனுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் வரும் போது
3.நம் உடலுக்குள் அதே உணர்வாகக் கலி ஆகி
4.மனிதனை உருவாக்கிய நல்ல அணுக்களை நமக்குள் நாம் கொலை செய்துவிடுகின்றோம் என்பதனை மறந்துவிடாதீர்கள்.

அந்த வலுவான விஷத் தன்மைகள் மனிதனை உருவாக்கும் அணுக்களை… அதனுடைய செயலாக்கங்களை மாற்றி விட்டால் கலியாக மாறுகின்றது நமக்குள்ளேயே.

மற்ற விஷத்தின் தன்மையைப் பெருக்கி மனிதனல்லாத உருவை உருவாக்கும் நிலைகள் பெற்றுவிடுகின்றது. இதை நாம் மாற்ற வேண்டுமல்லவா.

1.ஒவ்வொரு உடலையும் காக்க… உயிருடன் ஒன்றிய உணர்வுகள் தான் வருகிறது.
2.இந்த உடலைக் காக்கத் தான் இந்த உணர்ச்சிகளைத் தூண்டி இயக்கச் சக்தியாக வருகிறது.

இது யாரால் இயக்கப்படுகிறது…?

நம் உயிரால் தான் இயக்கப்படுகிறது என்பதை மனிதனான பின் தெரிந்து கொண்டவன் அகஸ்தியன். ஆகவே அவன் கூறிய வழிப்படி பார்த்தோம் என்றால் தான் நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத் தான் நம் உயிர் உருவாக்குகிறது.

அவன் நமக்குள் இருக்கப்படும் போது…
1.அவனை எண்ணி உயர்ந்த ஞானியின் உணர்வுகளை எடுக்கப்படும் போது அதனை நம் உடலுக்குள் உருவாக்குவதும் அவனே தான்
2.அந்த ஞானத்தின் வழியில் எண்ணும்போது அந்தச் சுவையின் எண்ணங்கள் வருகிறது
3.அந்த எண்ணத்தின் அடர்த்தியானால் தீமையை நீக்கிடும் வலுவாகிறது.
4.தீமையை நீக்கிடும் வலுவாக்கப்படும் போது அந்த உயிரின் இயக்கத்தால் தீமைகள் நமக்குள் புகாத தன்மை வருகிறது.

எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று மனிதனான பின் நாம் எல்லாவற்றையும் அறிந்திடும் உணர்வு வருகிறது… கார்த்திகேயா. நம் உடலுக்குள் தீமை என்ற உணர்வினை… அந்த நஞ்சினை மலமாக மாற்றிடும் உடலாக மாற்றிவிடுகிறது நம் உயிரே தான்.

அவன் தான் இத்தனை செயலுக்கும் காரணம்…!

எதை இந்த உடலில் ஆசைப்படுகின்றோமோ அதை உருவாக்கிவிடுகின்றான். ஆகவே தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வு பெற்ற பின் நஞ்சை ஒளியாக மாற்றுகின்றான்.

இதைப் பெறக்கூடிய தகுதியாக எல்லோரும் வர வேண்டும் என்பதற்குத் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஒவ்வொரு கால கட்டத்திலும் எனக்கு (ஞானகுரு) எப்படிப் போதித்தாரோ
1.அவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள்ளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைக்கப்படும் போது
2.வசிஷ்டர் அதைப் பெற வேண்டும் என்ற ஆசையின் தன்மையை நீங்கள் அதிகமாக வளர்த்தால் “அது பிரம்மமாகி…”
3.உயிரைப் போன்று அந்த உணர்வின் தன்மை ஒளியாக மாறி நாம் கல்கியாகின்றோம்.

ஒரே நிலையில் ஆண்டவனின் பெயரை மட்டும் உச்சரித்துக் கொண்டு… ஆண்டவன் பால் செல்வதல்ல வாழ்க்கை

மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும்...! ஆண்டவனிடம் சென்று ஐக்கியப்பட வேண்டும்...! என்றால் அப்படிப்பட்ட ஆண்டவன் எங்குள்ளான்...?

1.ஒன்றுடன் ஒன்று இணைந்தது தான் “ஆதி சக்தியின் நிலையே....!”
2.காற்றும் நீரும் மோதுண்டால் “ஒளி..” உருவாகின்றது.
3.ஒலியும் ஒளியும் மோதுண்டால் “ஜீவன்...” உண்டாகிறது.
4.ஒளி நீர் ஒலி எல்லாமே சேர்ந்த பிறகுதான் அந்த ஜீவனுக்குச் “சுவாசத் துடிப்பே...” வருகிறது.
5.சுவாசத் துடிப்பு வந்தவுடன் பல உணர்வின் எண்ணங்களுடன் அந்த ஜீவன் (அணு) மோதி மோதி “ஈர்க்கும் சக்தி பெற்றுச் சுழல்கிறது...”

அந்த ஈர்ப்பின் நிலைக்கொப்ப அது தனக்குள் சேமித்த குணத்தின் தன்மைக்கொப்ப இந்தப் பூமியில் உள்ள பல சத்துகளுடன் மோதி மோதி தன் வளர்ச்சிக்கு அதன் சுவாசத்திற்கொப்ப “வழித் தொடரைப் பெறுகின்றது...”

ஒன்றுடன் ஒன்று மோதாத நிலையில்... "ஜீவனே பெற முடியாது...!"

இரண்டு நிலைகள் கொண்ட நிலையில் மோதலில் மூன்றாகி நான்காகி பலவாகிச் சுழல்வது தான் இந்த அகண்ட அண்டத்திலுள்ள எல்லா ஜீவன்களும்...! (மண்டலங்களாக இருந்தாலும் சரி உயிரினங்களாக இருந்தாலும் சரி அப்படித்தான்...!)

1.தனித்த (சக்தி) ஆண்டவன் என்று எங்கே இருக்கின்றான்...?
2.ஆண்டவனின் பெயரை ஜெபித்துக் கொண்டே நாம் எங்கே செல்லப் போகிறோம்...?
3.முடிவே இல்லாத உண்மையின் ஒளிர் தத்துவ அடக்கமே (பேரருள் பேரொளி) அந்த மோதலின் சுழற்சியில் தான் உள்ளது.

ஆதி சக்தி என்பது விஷம். அந்த விஷம் விஷமற்றதைத் தாக்கும் பொழுது ஏற்படுவது வெப்பம். வெப்பத்தினால் ஈர்க்கும் காந்தமாகி மற்றதைக் கவர்ந்து ஒரு திடப் பொருளாகின்றது... "பரம்பொருள்..."

மோதவில்லை என்றால் எதுவுமே சிருஷ்டியாகாது. ஒன்றுடன் ஒன்று மோதவில்லை என்றால் ஆண்டவன் என்ற சொல்லுக்கே பொருள் இல்லை...! மோதலினால் ஏற்படும் அந்தச் சுழற்சியில் ஜீவன் கொண்ட வளர்ச்சியில் உருவங்களாகி மனிதன் வரை வளர்ச்சி பெற்று வந்துள்ள நாம்

1.எல்லாமில் எல்லாமாக....
2.”ஒளிரக் கூடிய எல்லாமே ஆண்டவன் தான்...!” என்று உணர்தல் வேண்டும்.

May 29, 2022

குரு கொடுத்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் பலன்

எத்தகைய குறைகளைக் கண்டாலும் நமக்குள் உட்சென்று நம்மை வேதனைப்படச் செய்யும் செயல்களைத் தடுத்து நிறுத்த “ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

அதை நீங்கள் பயன்படுத்துவதற்கு யாம் பனிரெண்டு வருட காலம் நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி காடு மேடெல்லாம் அலைந்து அந்த ஆற்றலைப் பெற்றோம்.

ஒரு மருந்தைத் தயார் செய்து “நோய் போய்விடும்…” என்று வைத்தியர்கள் சொல்கின்றார்கள்.

வைத்தியத்தின் முறைகளில் நோய் நீங்கினால் அவருக்குப் பொருள் கிடைக்கும் என்ற நிலைகளில் வைத்தியர்கள் செய்கின்றார்கள்.

நமது குருநாதர் கொடுத்த நிலைகளோ துன்பங்கள் விளைய வைக்கும் நிலைகளிலிருந்து மீள்வதற்கு என்னைப் பனிரெண்டு வருட காலம் காடு மேடெல்லாம் அலையச் செய்தார்.

அவர் சொன்ன முறைப்படி அங்கே அலைந்தோம்.

1.தாவர இனத்தின் உணர்வின் சத்து எவ்வாறு வேலை செய்கின்றது…? என்ற நிலையும்
2.மனித சஞ்சாரமே இல்லாத நிலைகள் அங்கே அமைதி கொண்டிருக்கப்படும் பொழுது
3..மனித உணர்வின் எண்ணங்கள் எவ்வாறு செயலபடுகின்றது…? என்ற எண்ணத்தை எடுத்து
4.அதைப் மனித உடலில் விளைய வைத்துத் துன்பத்தை நீக்கிடும் ஆற்றலை ஞானியர்கள் எவ்வாறு பெற்றார்கள்…? என்ற நிலையை
5.எம்மைப் பெறச் செய்தார் குருநாதர்.

அதைப் பெறச் செய்தபின் எனக்கு அடிக்கடி துன்பங்களை விளைய வைத்து அந்தத் துன்பத்தை நீக்க… “நீ எப்படி எடுக்க வேண்டும்…” என்றும் உணர்த்தினார்.

அவர் காட்டிய வழிப்படி யாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றலால்தான் எமக்குள் வரக்கூடிய துன்பத்தையும் எமக்குள் வரக்கூடிய வியாதியையும் நிவர்த்தி செய்ய முடிந்தது.

நமது குருநாதர் காட்டிய வழியின் தன்மையை எமக்குள் பதியச் செய்து கொண்டேன். அதை ஒவ்வொரு நேரத்திலும் எடுத்து அதிலே வளர்த்துக் கொண்ட “அந்த உணர்வின் எண்ண அலைகளைத்தான்” உபதேச முறைப்படி
1.ஒவ்வொரு உணர்வின் அலைகளுக்கும் (நன்மை தீமைகளை உருவாக்கும்)
2.நன்மையை உருவாக்கும் உணர்வுடன் கலந்து உபதேசிக்கப்பட்டு
3.இந்த உணர்வுகளை உங்களுக்குள் திணிக்கின்றேன்.
4.உங்கள் துன்பத்தைப் போக்க உங்களுக்குள் அந்த நல்ல உணர்வினைப் பதியச் செய்கின்றேன்.

துன்பத்தை ஊட்டும் உணர்வுகள் உங்களை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளைத் தூண்டச் செய்கின்றது.

நீங்கள் அந்த மனதின் நிலைகளை அடக்கி உங்களைக் காக்கக்கூடிய அந்தச் சக்தியை நீங்கள் பெறுவற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

அந்தப் பனிரெண்டு வருட கால அனுபவத்தின் நிலையை யாம் சொல்லும் பொழுது அந்தத் துன்பத்தினுடைய நிலைகளை மெய்ஞானியின் அருள் ஒளியுடன் கலந்து திரும்ப உபதேசத்தின் வாயிலாக “வாக்கின் நிலைகள் கொண்டு… உங்கள் உடலிலே பதியச் செய்கின்றோம்…”

அவ்வாறு பதியச் செய்த அந்த வித்தின் நிலைகளுக்கு மெய் ஞானிகளின் சக்தியைப் பெறுவதற்கு நீங்கள் எந்த நிமிடமானாலும் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி எடுக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் நினைத்துச் செயல்படுவீர்கள் என்றால் துன்பத்தைப் போக்கக் கூடிய மெய்ஞானியின் அருள் சக்தி உங்களுக்குள் ஊடுருவச் செய்கின்றது.

1.உங்களையறியாமல் ஆட்டிப்படைக்கும் மனக்குழப்பத்தை மனக்குடைச்சலை இது நிவர்த்தி செய்கின்றது
2.உங்கள் எண்ணத்திற்குள் தெளிவாக்கி உங்கள் வாழ்க்கையில் உங்கள் செயலையும் தெளிவுபடச் செய்ய இது உதவுகின்றது.
3.வியாபாரத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
4.குடும்பத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
5.குடும்பத்திலும் ஒற்றுமையாக்கச் செய்கின்றது.

மெய் ஒளியான அக அழகைக் காண முயலுங்கள்… பேரருள் பெற்று பேரொளியாக நிச்சயம் மாறுவீர்கள்

1.கண்ணாடியில் படிந்துள்ள தூசியைத் துடைத்தால் தான் நம் முகம் தெளிவாகத் தெரியும்.
2.இருட்டில் உள்ள பொழுது வெளிச்சத்தைக் காண முயல்கிறோம்.
3.வெயிலில் உள்ள பொழுது தான் நிழலுக்காக ஏங்குகின்றோம்.

ஆனால் இந்த நிலை பெற்ற பிறகு உண்மையின் நிலையிலேயே உள்ளோமா...? தன்னிச்சைப்படி இந்த வழித் தொடரின் வாழ்க்கையிலே தான் சுழன்று கொண்டுள்ளோம். அதே போல் நம் வாழ்க்கையில் பல நிலைகளை நம் உடலுக்குள் கூட்டிக் கொண்டுள்ளோம்.

இந்த நிலையை மாற்றி உண்மையான ஒளியைக் காண முயல்கின்றோமா...? சற்றுச் சிந்தியுங்கள்...!

கண்ணாடியில் உள்ள தூசியை அகற்றிவிட்டுத் தெளிவான உருவைக் காண ஆசைப்படுகின்றோம். ஆனால்
1.நம் உடலிலுள்ள அசுத்த அலைகளையும் தீமையான எண்ணங்களையும் மாற்றிவிட்டு
2.நம்முடைய உண்மையான அழகைக் காண விரும்புவதில்லை...!

நம்மிடம் உள்ள அசுத்த அலைகளை அகற்ற “நாம் ஆசைப்படாமல்...!”
1.கடவுள் வந்து தானாக அகற்றுவான்......! என்று
2.தெய்வத்திடம் வேண்டி அக அழகைக் காண விரும்புகின்றோம்.

ஒரு செம்பில் உள்ள அசுத்த நீரில் அதற்கு மேல் நல்ல நீரை ஊற்ற ஊற்ற நல்ல நீரும் அசுத்த நீரும் சேர்ந்து வெளிப்பட்டுப் பிறகு அனைத்துமே நல்ல நீராக மாறுகின்றது.

இதைப் போன்று தான் நம்மிடம் உள்ள தீய அணுக்களையும் அசுத்த உணர்வுகளையும் அகற்ற
1.நாம் எடுக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியின் ஈர்ப்பினால்
2.மேலும் மேலும் சேமிக்கப்படும் நல் உணர்வின் அலை அதிகப்படும் பொழுது
3.தீய அணுக்கள் எல்லாம் பல ரூபத்தில் நம்மிடமிருந்து வெளிப்பட்டுச் சென்றுவிடும்.

அதே சமயத்தில் நம் உடலில் உள்ள இரத்த நாளங்களில் ஆக்ரோஷமான ஆன்மா ஏறியிருந்தாலும் தீமையான உணர்வுகள் நம்மிடமிருந்து வெளிப்படும் பொழுது அந்த ஆன்மாவிற்குகந்த ஆகாரம் கிடைக்காததால் அதன் பாதிப்பான உணர்ச்சியின் தூண்டுதலும் நம்மை ஒன்றுமே செய்ய முடியாது.

இதை நீங்கள் உணர்ந்து கொண்டால் தான் உங்களுக்குள் வளர்ச்சியின் தன்மை கூடும். ஏனென்றால்
1.இந்தப் பிரம்மாண்டமான அண்டசராசரங்களில் உள்ள
2.அனைத்து சக்திகளையும் அறியும் ஆற்றல் மனித ஆன்மாவிற்குத்தான் உண்டு.
3.மனித ஆன்மாவினால் முடியாத சக்தி எந்தச் சக்திக்குமில்லை.

ஆகவே இந்த உடலில் நாம் வாழும் காலத்தில் உயர் ஞானத்தின் சக்திகளைச் சேமித்து உயிரான்மாவிற்கு அதை ஊட்டமாகக் கொடுத்து மெய் ஞானத்தின் வீரிய சக்தியாக நாம் ஒவ்வொருவரும் வளர வேண்டும்.

உங்களை நீங்கள் நம்புங்கள். மெய் ஒளியான அக அழகைக் காண முயலுங்கள். பேரருள் பெற்று பேரொளியாக நிச்சயம் மாறுவீர்கள்...!

May 28, 2022

அகஸ்தியன் அருளைப் பெற மறந்து விடாதீர்கள்… தவறி விடாதீர்கள்

தென் துருவம் வட துருவம் என்கிற போது
1.தென் துருவம் பூமியின் அச்சிலே இருக்கிறது
2.வட துருவத்தின் வழியாக வரும் போது… மற்றது எது வருகிறதோ ஒதுக்கித் தள்ளும்.
3.தென் துருவம் தனக்குள் இழுத்துக் கொள்ளும்… பிடிப்பாக இருக்கும்.

இதனுடைய காந்தப் புலனறிவுகளை அறிந்து கொண்டு இன்று விஞ்ஞான அறிவுகளில் பல விதமான வித்தைகளைச் செய்கின்றனர்.

துருவப் பகுதியை அறிந்து இன்று விஞ்ஞானி அதைச் செய்கின்றான். அன்று துருவத்தின் எல்லையில் நின்றான் அகஸ்தியன்

அந்தத் துருவத்தின் எல்லையில் அகஸ்தியன் இருக்கும் போது வானுலக ஆற்றலை அறிந்தான். துருவத்தின் எல்லையில் அவன் நின்று
1.துருவத்தில் நீளமாக இந்தப் பூமி மாறும் போது (கோழி முட்டை போல் நீளமாக) அதனின் உணர்வை மாற்றியமைத்து
2.சமமான நிலையில் வைத்தான் அகஸ்தியன்… இன்றும் அவன் வைத்தது தான் ஓடிக் கொண்டுள்ளது.

ஏனென்றால் சர்வத்தையும் தனக்குள் கவர்ந்திடும் சக்தியாக அவன் எல்லை கடந்து தன் எண்ணங்களை விண்ணிலே செலுத்தி… உணர்வின் தன்மை ஆற்றலைப் பெறும் போது “துருவத்தின் வழியாகத் தான்…” இவன் நுகர்ந்தறிய முடிந்தது.

அதன் வழி அறிந்த அகஸ்தியன் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அதிலிருந்து வரக்கூடிய உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. நம் பூமி துருவத்தின் வழியில் அதைக் கவர்கிறது.

அப்படிக் கவரப்படும் போது
1.அவன் எப்படி ஒளியின் தன்மை பெற்றானோ… பூமியைத் திசை மாற்றினானோ…
2.இதைப் போல் அவன் உணர்வின் தன்மையை நாம் அனைவரும் பெற முடியும்.
3.அப்படிப் பெறுவதற்குத் தான் அகஸ்தியன் விநாயகர் தத்துவத்தைக் கொடுத்தான்.

அதாவது முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது என்று மனித உடலில் யானையின் தலையைப் போட்டு
1.வடமேற்காக விநாயகரை வைத்து… வடகிழக்காக விண்ணிலே நம்மை உற்றுப் பார்க்கும்படி செய்து
2.அகஸ்தியன் எப்படி ஒளி உடல் பெற்றானோ துருவ நட்சத்திரமாக ஆகும் பருவம் பெற்றானோ
3.தன் இன மக்கள் அதைப் பெறுவதற்காக… அவன் இருக்கும் போது அத்தகைய நிலையை உருவாக்கி விட்டுச் சென்றான்.

அவன் வழியிலே சென்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாமும் பெற வேண்டும். நம் உடலில் ஆழமாக ஊழ்வினை என்ற வித்தாக அதைப் பதிவாக்கிக் கொண்டால் காற்றுக்குள் மறைந்திருக்கும் அருள் உணர்வை நாம் பெற முடியும்.

ஏனென்றால் அவன் சர்வ சக்தியும் பெற்றவன். தெற்கிலிருந்த அந்த உணர்வுகள் அது வழக்கில் வந்த உணர்வின் தன்மையைக் கவர்ந்து அவன் ஒளியின் உடல் பெற்றான். அந்த உணர்வின் தன்மை வடக்கிலிருந்து பூமிக்குள் பரவிக் கொண்டு தான் உள்ளது.

1.அது வரும் பாதையில் வடகிழக்கினை உற்று நோக்கி - அதிகாலையில் நாம் நுகர்ந்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்போதுமே எடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.

அவன் உணர்வை எடுத்து நமக்குள் உருவாக்கினால் நமது உயிர் அதன் வலுவாகக் கொண்டு செல்கிறது. ஆகவே அந்த அகஸ்தியன் பெற்ற அருளைப் பெற மறந்துவிடாதீர்கள்… தவறி விடாதீர்கள்.

அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமான உணர்வை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சேர்த்துக் கொண்டே வர வேண்டும். அந்த உணர்வுகளை வலு ஏற்றிக் கொள்ளுங்கள். அவன் உணர்வைப் பெற்ற பின் அவன் அடைந்த எல்லையை நாம் அடையலாம்.

இந்தப் பூமியில் உயிரணு தோன்றி உணர்வின் தன்மை ஒளியாகி ஆன பின்
1.சூரியனே அழியலாம்… அத்தகைய சந்தர்ப்பம் வந்து கொண்டுள்ளது
2.இந்தப் பிரபஞ்சமே அழியப் போகிறது… இதிலே சிக்கிய உயிரணுக்கள் எல்லாம் மீண்டும் வேறு பிரபஞ்சத்தில் பரவும்
3.எந்தப் பிரபஞ்சம் கவர்கிறதோ அங்கே சென்று அடுத்த உடல் பெறும் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை வேதனை தான் இருக்கும்.
4.நரகலோகத்தைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஆகவே இன்று இந்த உடலில் நல்ல நினைவு இருக்கும் போதே அந்த அருள் உணர்வைச் சேர்த்துக் கோண்டால் நாம் அங்கே சப்தரிஷி மண்டலம் செல்கிறோம்.

உன்னையும் ரிஷியாக ஆக்கத்தான்.. ஈஸ்வரபட்டனாகிய யான் கடும் தவம் செய்து இந்த உலகில் சுற்றிக் கொண்டுள்ளேன்...!

“ரிஷி நிலை...!” பெற்ற மகரிஷிகளின் நிலையெல்லாம் ஒன்றிரண்டு நாளில் பாட நிலையில் சொல்ல முடியாத நிலையப்பா.

ரிஷி அருள் பெற்றவர்கள் எல்லாம்
1.இவ்வுலகை... இவ்வுலக மக்களுக்காக... இவ்வுலக நன்மைக்காக... தாங்கள் பெற்ற அருளை
2.பல ரூபத்தில்... பல வழிகளில்... பல உடல்களில் வந்து... பல கோயில்களின் சிலைகளின் ரூபத்திலும் வந்து...
3.ஆண்டவனை அடிபணிந்து.. ஆண்டவன் ஒருவன் உள்ளான்... அவன் நம்மைக் கைவிடமாட்டான்... என்ற ஒரே நிலையில் அண்டி வருபவர்களுக்கு
4.ஆண்டனவனாக வந்து அருள் புரிகிறார்கள்...! என்று பல பல தடவை சொல்லிவிட்டேன்.

பல புராதனக் கோயில்களில் சென்றிருந்தால் தெரியும். கோயில் வாசலின் உட்புகும் பொழுதே கோயிலின் மணம் ஒன்று எல்லோருக்குமே தெரியுமப்பா.

பல மூலிகைகள் கலந்த அவ்வாசனையை “என்ன...” என்றே நாம் புரிந்திட முடியாத நிலையில் அம்மணம் வீசிடுமப்பா. அம்மணங்கள் எங்கிருந்து வருகின்றன...?

பல பக்தர்கள் ஒன்றுகூடி பிள்ளையாரப்பா...! முருகா...! ஈஸ்வரா...! கோவிந்தா...! என்ற நாமத்தை ஒரே நிலையில் ஒலித்துக் கொண்டே அக்கோவிலுக்குள் செல்கிறார்கள்.

அக்காலத்தில் இந்த ரிஷிகள் தவமிருந்து அமைத்த கோவில்களில் எல்லாம் இம்மணங்கள் வீசிடும். அந்த ரிஷிகள் தான் பெற்ற ஈஸ்வர சக்தியில் இருந்து பல மணங்களைத் தன் வழிக்கு ஈர்த்து வரும் மானிடர்களுக்கு எல்லாம் “அம்மணங்களை அளிக்கிறார்கள்...!”

சித்தர்களின் அருளையும் ரிஷிகளின் அருளையும் சிந்தித்துப் பார்க்கவே முடிந்திடாதப்பா. அந்நிலையில் அருள் பெற்றவர்கள் பல கோடிச் சித்தர்களும் ஞானிகளும் தவப்பயன் பெற்ற ரிஷிகளும் இல்லாவிட்டால் இவ்வுலக நிலையே வெறும் குட்டிச்சுவராகி இருக்குமப்பா.

அந்த மகரிஷிகளும் ஞானிகளும் இக்கலியின் கடைசியில் கடும் தவமிருக்கிறார்களப்பா. கல்கிக்கு இம்மானிட மக்களை எப்படியாவது ஈர்த்துச் செல்ல வேண்டும். இக்கலியில் மடியாமல் கல்கிக்கு வந்திட வேண்டும் என்று பேராவல் கொண்டு பெரும் தவமுள்ளார்கள்.
1.கல்கியின் ஆரம்ப நிலைதானப்பா
2.சில இடங்களில் மனித உள்ளங்களில் இந்த மெய் ஞானத்தின் நிலை பரவி வருகின்றதப்பா.

ஏனென்றால் இக்கலியில் உள்ள மனிதர்களின் நிலையை “என்ன...?” என்று எண்ணிப் பார்த்திடவே முடியவில்லையப்பா.
1.ஆசை
2.அதியாசை
3.பேராசை
4.கலியில் கடைசி நிலை இதுதானப்பா. பேராசை நிலை,
5.இந்நிலையில் யாரும் (இங்கே) தனித்து நிலைத்திட முடியாதப்பா.

ஆகவே காலமுடன் கலந்துதான் உயிரான ஈசனை எண்ணித் தியானிக்க வேண்டுமப்பா.

1.ஊர் நிலையில்...
2.உலக நிலையில் ஒத்துப் போய்..
3.உங்கள் எண்ண நிலையில் மட்டும் ஈசனின் அருளை மாற்றிடாமல் தியானித்திடுங்களப்பா... ஜெப அருளைப் பெற்றிடுங்கள்...!

அச் சித்தர்களின் நிலையையெல்லாம் நீங்கள் அறிந்திட மட்டும்தான் இந்த ஜெப அருள் இல்லையப்பா. இந்நிலையில் இருந்து கொண்டே உன்னையும், சித்தராகவும் ஞானியாகவும் ரிஷியாகவும் ஆக்கத்தான்... கல்கியில் கலக்கத்தான்... கடும் தவம் செய்து “ஈஸ்வரபட்டனாகிய யான் இந்த உலகில் சுற்றிக் கொண்டுள்ளேன்...!”

புரிந்த பாடத்தை நல்ல நிலையில் ஏற்றுக் கொள்ளுங்களப்பா. என்றும் என் அருள் உங்கள் எல்லோருக்கும் உறுதுணையாக இருக்கும்.

May 27, 2022

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன…?

ஒவ்வொரு வருடமும் நமக்குள் வெறுப்பு கோபம் குரோதம் எல்லாம் விளைந்திருக்கின்றது. அதிலே கோபமான உணர்வு அதிகமாகியிருந்தால் நம் அனுபவத்தில் போன வருடத்தில் நாம் எப்படிக் கோபித்தோம்…? என்று சிந்தித்து இந்த வருடத்தில் நாம் அதை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ் வருடங்கள் மொத்தம் 60 என்றால் அந்தக் கணக்கின் பிரகாரம் நம் பூமி 2000 சூரியக் குடும்பத்தைச் சுற்றி வருகிறது. இதே நேரத்தில் போன வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் பார்த்தால் வேறு ஒரு சூரியப் பிரபஞ்சத்தில் நிற்கும் (சுழன்று வரும் பகுதிகள்).

1.எந்தச் சூரியக் குடும்பத்தைச் சந்திக்கின்றதோ அதன் உணர்வை நம் பிரபஞ்சம் இழுத்துக் கவரும் போது
2.அது நல்ல பிரபஞ்சமாக இருந்தால் நமக்கும் நல்லதாகும்…
3.இல்லை என்றால் அதனதன் நிலைக்கொப்ப மாற்றங்கள் வரும்.

ஆகவே அதற்கொப்ப இந்த வருடத்தில் எப்படித் திருப்பம் ஏற்படுகிறதோ அது இந்த வருடம் முழுமைக்குமே அப்படித் தான் இருக்கும் (60 வருடத்தில் ஒவ்வொன்றிலும்).

அதிலே கொஞ்சம் கொஞ்சமாக மாறி வேறு இடத்திற்குப் போகும் போது அதன் உணர்வு மாறும்.
1.மாறும் போது அதற்குத் தக்கவாறு நாம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
2.இதை மனிதன் ஒருவனால் மாற்ற முடியும்.

இப்படி இந்த 2000 சூரியக் குடும்பத்தில் நாம் ஒத்து வாழும் போது நமக்குள் மாற்றங்கள் வருகிறது.

இதே மாதிரித் தான் நாம் எத்தனை பேரிடம் பழகுகின்றோமோ அது எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரபஞ்சம் தான். அந்த மனிதரிடத்தில் (பிரபஞ்சத்தில்) கஷ்ட நஷ்டங்களைக் கேட்கப்படும் போது அவருடைய கஷ்டம் எல்லாம் நமக்குள் விளையத் தொடங்குகிறது.

அதை மாற்றிடும் நிலையாக
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
2.நம் இரத்தங்களில் கலக்கச் செய்தால் நம் உடலில் அது அதிகமாகிறது… கல்கியாகிறது.

வேதனை என்ற உணர்வு அதிகமானால் அது கலியாகிறது. கலியும் கல்கியும் நமக்குள் மாறி மாறி வருகின்றது. ஆனாலும்
1.கல்கி என்ற நிலைக்கு வரப்படும் போது
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்றே ஆக வேண்டும்.

அதை நாம் பெற்றோம் என்றால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றியபின் அதில் உள்ள செம்பு பித்தளை வெள்ளி எல்லாம் ஆவியாகித் தங்கம் எப்படிப் பரிசசுத்தமாகிறதோ அதைப் போல் துருவ நட்த்திரத்தின் சக்தியை எடுத்தால் நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த அது உதவும்.

இதை நாம் வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த வருடத்தில் நாம் எதைத் தூய்மைப்படுத்தாமல் விட்டோம்…? இந்தப் புது வருட்த்தில் எதை எதைச் சந்திக்கின்றோம்…? என்பதை உணர்ந்து அந்தத் தீமைகளைத் துடைத்துப் பழக வேண்டும்.

ஒவ்வொரு குணத்திலும் சிறு சிறு திரைகளாக இருக்கும் அதை நீக்கிவிடலாம். பெரும் திரையாக மாறிவிட்டால் அவைகளை மாற்றுவது சிரமம்.

சித்திரை…! நம் உடலில் ஒவ்வொரு குணத்திலும் சிறு சிறு திரைகளாக (தீமைகள்) வருவதை நாம் நீக்கிக் கொண்டே வர வேண்டும். நீக்கிக் கொண்டு வந்தால் நாம் கலி என்ற நிலைக்கு வந்துவிடுகின்றோம்.
1.கலி முழுமை அடையப்படும் போது கல்கிக்கு வந்துவிடுகின்றோம்.
2.தீமைகளை நீக்கும் உணர்வு கலியாகிக் கொண்டே வரும் போது கல்கியாகவே மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
3.ஆக ஒளி என்ற உணர்வு வரும் போது கல்கியாக மாறுகிறது
4.கல்கி என்ற நிலை ஆனால் உயிருடன் ஒன்றி என்றும் நிலையான நிலை பெறுகின்றோம்.

அந்த நிலை பெறச் செய்வதற்குத் தான் ஞானிகள் எத்தனையோ உபாயங்களைக் காட்டுகின்றார்கள். அதை நாம் பின்பற்றுதல் வேண்டும்.

எல்லாம் தந்து அருள் பெறுவது அருளல்ல...! வரும் நிலையிலிருந்தெல்லாம் மீண்டு பெறுவதுதான் ஆண்டவனின் அருள்

ஏழ்மையில் இருப்பவனின் எண்ணத்தில் அவன் எண்ணமேதான் அவனை ஏழ்மையாக்குகின்றது. செல்வந்தனின் நிலையும் அதுதான். செல்வந்தனும் அவன் எண்ணத்தில்தான் செல்வந்தன் ஆகின்றான்.

ஏழ்மையும் செல்வமும் அவனவன் எண்ணத்தில் இருந்து தான் வருகின்றன.
1.பிறப்பில் வருவது அல்ல எதுவுமே...!
2.ஜாதகத்தில் வருவது அல்ல எதுவுமே...!
3.எண்ணத்தில் வரும் “எண்ணத்தையே கொண்டு......!”
4.அவரவர்கள் வழிக்கு வாழ்கிறார்கள் இக்கலியில் பிறந்த பாமர மக்கள் எல்லாருமே...!

ஆகவே
1.வரும் சோதனையைக் கண்டு கலங்கிடாதே.
2.எல்லாம் தந்து அருள் பெறுவது அருளல்ல...!
3.வரும் நிலையிலிருந்தெல்லாம் மீண்டு பெறுவதுதான் ஆண்டவனின் அருள்.

ஏமாற்றி வாழ்பவன் வாழ்கின்றான். தர்மமுடன் வாழ்பவனுக்குப் பல தடைகள் ஏனப்பா என்கிறாய்...! “தடையில் இருந்து மீள்பவன் தான் தர்மவான்...!” சத்திய நியாயத்துடன் வாழ்பவனுக்குச் சத்திய சோதனைதான் வந்துவிடும்.

அச்சோதனையில் இருந்து மீண்டால்தான் சத்தியவனாகலாம். சகலத்தையும் அளித்துவிட்டு... “சத்தியவான் நிலையை எப்படியப்பா எய்த முடியும்...?”

சத்தியத்துக்குச் சோதனை வந்தால்தான் அவன் சத்தியவான் ஆகலாம்...!

முருகா......! என்று கோவிலுக்குச் சென்று வணங்கி விட்டால் உடனே உன் நிலைக்கு முருகன் ஓடி வந்து உன் நிலைக்கு எல்லாமே அவன் அளித்து விட்டால் ஆண்டவன் என்பவன் எதற்கப்பா...?

நீ உண்ணும் உணவையே எடுத்துக் கொண்டால் உழுது பயிர் செய்து... அப்பயிரில் விளையும் தானியத்தைப் பக்குவ நிலை செய்து... அதன் பிறகு சமைத்துத் தான்... நீ உண்ண முடிகிறதப்பா...!

சிறு உதாரணத்திற்கு இதைச் சொல்லுகிறேன்.
1.எந்த நிலையும் வேலை செய்யாமல் எந்தக் கஷ்டமும் படாமல் எதுவுமே வருவதில்லை.
2.அவ்வாண்டவன் அருளைப் பெறவும் பல சோதனைகளில் இருந்து மீண்டுதான் ஒரு நிலையை எய்தி
3.அவன் அருளையே... உன்னுள் இருக்கும் அவனை நீ... உன்னையே நீ கண்டிடலாம்...!
4.வரும் தடங்கலைத் தடங்கலாக எண்ணிடாமல் ஜெயத்துடன் ஜெயித்துக் காட்டிடப்பா.
5.உன் ஜெபத்துக்கு என் அருள் உண்டு...! என்ற ஒரு எண்ணம் மட்டும் உங்களுக்கு இருந்தால் போதும்,
6.உன் ஜெபத்துக்கு நான் வருகிறேன்...!
7.ஜெபிக்க வேண்டியது நீ தானப்பா...
8.புரிகிறதா பாடநிலை...? உழுதால் தான்... சமைத்தால் தான் உண்ண முடியும்.

ஆண்டவனே... என்று எண்ணி வாயைத் திறந்தால் உணவை ஆண்டவனா வந்து உன் உடலுக்கு அளித்திடுவான்.....? புரியாத பாமரர்கள் “பழியைப் போடுவதெல்லாம் அவ்வாண்டவனின் மேல்தான்...!”

ஆண்டவன் என்பது யாரென்று புரிந்து விட்டதா... உங்களுக்கு...!

ஒவ்வொரு மனிதனும் ஆண்டவனாகலாம்...! எல்லாமே அவன் எண்ணத்திலும் சுவாசத்திலும்தான் உள்ளது.

ஆண்டவனாக வாழ்வதும் அழுகும் உடலை அழுகவிட்டு மனச்சோர்வுடன் மடிவதும் எல்லாமே மனித எண்ணத்தில் இருந்து வருவது தான். இந்நிலையைப் புரிந்து கொண்டுதான் சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள் ஒளிச் சரீரம் என்ற அந்த நிலையை எய்தினார்கள்.

அகஸ்தியனின் ஒளியான உணர்வை எடுத்து… அதை வைத்துத் தான் நாம் எதையுமே அறியும் ஆற்றலாகக் கொண்டு வர வேண்டும்

ஒரு மனிதனைப் பார்த்தால் அதனின் உணர்வு நமக்குள் விளைகிறது. எப்படி…?

அந்த மனிதனைப் பற்றி அவர் குணநலன்களைப் பற்றி நம்மிடம் “அவர் மோசமானவர்…” என்று சொல்லி நீங்கள் அதைப் பதிவு செய்தீர்கள் என்றால் அந்த மனிதனைப் பார்த்தவுடனே அன்றைக்கு அவர் சொன்னார் ஆனால் அவருக்கு மோசம் ஆக இருப்பார்.

ஆனால் அவர் சொல்லி விட்டால் என்றால் நாம் பார்த்து மோசமானவர் என்று எண்ணியவுடனே அவர் என்ன பதில் சொன்னாலும் அவரைக் குற்றவாளியாக்கக்கூடிய பதில் தான் வரும்.

1.அன்று மோசம் என்று அவர் சொன்னார்…
2.ஆனால் இன்று வந்து நல்லவன் என்று சொல்கிறார் என்று சொல்லப்படும் போது வித்தியாசம்…!
3.முதலில் சொன்னவரின் உணர்வை நமக்குள் பதிவாக்கி விட்டு அதற்குப் பின்
4.இரண்டாவது அவரைப் பற்றித் தெரியப்படும் போது இதை வைத்துத் தான் அளந்து பார்ப்போம்.

இதை நாம் மாற்றுவதற்கு…
1.மனிதனில் முதலில் ஒளியாகப் பெற்ற அகஸ்தியனின் உணர்வை நமக்குள் பதிவு செய்து கொண்டால்
2.அவன் ஒளியான உணர்வை நமக்குள் வளர்க்கப்படும் போது
3.அவர்கள் ஏன் தவறு செய்தார்கள்…? தவறான கருத்தை ஏன் சொல்கிறார்கள்…? என்ற உண்மைகளை எல்லாம் தெளிவாக உணர முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும். அவர்கள் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்… என்ற எண்ணத்தை நமக்குள் வளர்க்க வேண்டும்.

ஆனால் அவர்களிடம் நாம் நேரடியாகச் சொல்ல வேண்டியதில்லை.
நாம் போய்ச் சொன்னால்
1.இவன் பெரிய யோக்கியன்… என்று நம்மிடம் சண்டைக்கு வருவார்கள்.
2.இன்னும் கொஞ்சம் மனதைக் கெடுக்கும்.

ஆகவே நமக்கு அதிகம் அறிமுகம் ஆகாதவர்களாக இருந்தால்… அவர்களுக்கு உண்மையை உணரும் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

காரணம்… அவர்கள் தவறு செய்யும் போது அவர்கள் செய்த தவறைச் சுட்டிக் காட்டினால் உங்களைக் குற்றவாளியாக்கி விடுவார்கள்.

ஆகையினால் தவறு செய்யும் நேரத்தில்…
1.அவர்கள் செய்யும் தவறான உணர்வு நமக்குள் விளையாதபடி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து அந்தத் தவறை நாம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி… நம்முடைய கடந்த கால வருட அனுபவத்தை வைத்து
1.நம் தொழிலில் எப்படி நஷ்டம் வந்தது…?
2.பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை என்றதால் அவனைப் பற்றி எண்ணும் போது திருப்பித் திருப்பி வேதனைப்படும் போது
3.கை கால் குடைச்சல் எப்படி வந்தது…? என்பதையெல்லாம் நாம் தெரிந்து
4.பிறந்திருக்கும் இந்தப் புதிய வருடத்தில் நமக்குள் தீமைகள் வராது தடுத்துக் கொள்ள முடியும்.

இது மனிதனால் நிச்சயம் முடியும்.

ஆகவே… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெறச் செய்வதற்குத் தான் இத்தனை தரம் திருப்பித் திருப்பி உங்களிடம் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு). இந்தப் பதிவை நீங்கள் நினைவாக்கினால் உங்களுக்குள் வரும் தீமைகளை நீங்களே நீக்கும் திறன் பெறுகின்றீர்கள்.

அது இல்லை என்றால் மாற்ற முடியாது.

உதாரணமாக… சமைக்கும் போது குழம்பில் தெரியாமல் மிளகாயை அதிகமாகப் போட்டுவிட்டால் “காரம்” என்ற உணர்ச்சி தான் உந்தும். மற்ற பொருளைப் பற்றிச் சொல்ல மாட்டோம்.

அதே போல் உப்பு அதிகமாகி விட்டால் குழம்பு கையிக்கத் தான் செய்யும். “உப்பாக இருக்கிறது” என்று தான் சொல்வோம். குழம்பில் போடப்பட்டுள்ள மற்ற சுவையான பொருளைச் சொல்ல மாட்டோம்.

அது எப்படி எல்லாவற்றையும் மாற்றுகிறதோ அதே மாதிரி நம் உணர்வுக்குள் மாற்றி அமைக்கும் திறன் பெற வேண்டும்.

ஆகவே… மாற்றி அமைக்கும் திறன் பெற வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்… கஷ்டப்படுவோர் உடலில் படர வேண்டும்… அவர்கள் தெளிந்த மனம் கொண்டு தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்… என்ற எண்ணத்தை நமக்குள் வளர்க்க வேண்டியம் (இது முக்கியம்).

1.மிகவும் கஷ்டப்படுவோராக இருந்தாலும் கூட… சொன்னால் சிலர் கேட்க மாட்டார்கள்.
2.அதே சமயத்தில் தெரிந்தவர்களாக இருந்து அவர்களுக்குச் சொன்னாலும்… இவருக்கு எதற்கு இந்த அக்கறை…? என்று நினைப்பார்கள்.
3.இது இப்படியும் வரும்… அப்படியும் வரும்.

அப்போது மனதால் நாம்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
1.மீண்டும் மீண்டும் இரத்தத்தில் கலந்து
2.அந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளப் பழக வேண்டும்.

இப்படிப் பழகிக் கொண்டால் பிறருடைய நோயைப் பற்றியோ வேதனையைப் பற்றியோ கேட்டறிந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தாலும் அந்த நோயோ துன்பமோ நமக்குள் வராமல் தடுத்துக் கொள்ள முடியும்.

அதற்குத் தான் இதைப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

May 26, 2022

உயிரான்மாவிற்குச் சேமிக்கும் சொத்தே என்றும் அழியாததாகும்… அதை யாரும் அழிக்கவோ திருடவோ முடியாது

எண்ணத்திலும் செயலிலும் வார்த்தையிலும் உயர்வு தாழ்வு என்ற எண்ணம் தான் மனிதர்கள் மனதிலே ஊன்றியுள்ளது.

1.உயர்வு எனும் பொழுது அல்லது உன்னத நிலை எனும் பொழுது
2.நம் உடலுக்கு நம் உயிருக்கு அழியாச் செல்வம் என்ற உயர்ந்த நிலையைப் பெறவேண்டும் என்ற
3.அந்த உயர்ந்த எண்ணம் தான் நம் எண்ணத்தில் எல்லாம் ஊன்றி நிலைத்திட வேண்டுமப்பா…!

வாழ்க்கையில் சேர்த்திடும் சொத்து சுகத்தைத்தான் நாம் எண்ணி வாழ்கின்றோம். அழியாச் சொத்தை யாரும் எண்ணுவதில்லை. மனித உடல் பெற்ற இந்தப் பாக்கியத்தை உடலில் உள்ள பொழுதே அதைச் சீராகப் பயன்படுத்துவதில்லை.

இந்தத் தூல சரீரத்தைத்தான் எண்ணுகின்றார்கள். ஞானச் சரீரத்தை எண்ணிப் பார்ப்பதில்லை.

ஞானச் சரீரத்திற்கு… அந்த ஞான நிலை பெற… நம் உயிராத்மாவிற்கு அழியா நிலை பெற…
1.எண்ணத்திலும் செயலிலும் நல்ல உணர்வுகளையே நம் சுவாசத்தில் என்றுமே எடுத்துக் கொண்டால்
2.நம் உயிர் நிலை ஊட்டம் பெறுகின்றது.

மனிதர்களின் எண்ணமும் செயலும் இன்னும் ஒரு நிலைப்படாமல் இந்தச் சரீர நிலையை (உடலை) எண்ணிக் கொண்டே தான் வாழ்ந்திடுகின்றார்கள்.

வாழும் நாள் எல்லாம் மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களுக்கு நாம் மனதைத் தந்து விட்டால்….!
1.நம் மன நிலையில் பல சோர்வுகளை அடைந்து
2.பல தீய அணுக்களின் செயல்களுக்கு நாம் உட்பட்டு
3.நம்மையே… நம் சுவாச நிலையையே… கெடுத்துக் கொள்கின்றோம்.

தீய எண்ணத்தை வளரவிட்டு அந்த நிலையையே எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் தீய அணுக்களின் வேலை துரிதப்படுகின்றது. அந்த நிலையில் நம் உயிருக்குப் பெரும் சோர்வின் தன்மையைத் தான் அளிக்கின்றோம்.

அதையே வளரவிட்டால் நம் சுவாச நிலையும் மாறுபட்டு இன்னும் பல தீய அணுக்களைத் தான் மேலும் மேலும் பெறுகின்றோம். இதை எல்லாம் அறிந்திடல் வேண்டும்.

ஆகவே
1.நம் உயிரணுவிற்கு நாம் பெறும் ஊட்ட நிலையை
2.அழியாச் செல்வமான ஆத்ம ஜோதி என்ற ஒளி நிலையைப் பெற
3.ஈஸ்வர தியானங்கள் பெற்று அந்த நிலையில் நமக்குக் கிடைத்திடும் அரிய பொக்கிஷங்களை
4.நம் உயிரணுவிற்குச் சேமித்திடல் வேண்டும்.
5.விண்ணிலே ஒளிரும் நட்சத்திரமாகலாம்…!

நம் உயிரான்மாவிற்குச் சேமிக்கும் அந்தச் சொத்தே என்றும் அழியாத சொத்தாகும். அதை யாரும் அழிக்கவோ திருடவோ முடியாது.

May 25, 2022

சுக்ரீவனும்… அவனுடைய மந்திரியான ஆஞ்சநேயனும்…

இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்...! தீமையை நீக்கியவன் சீதாராமன்…! சந்தோஷப்படும் உணர்வின் தன்மையைச் சுக்ரீவன்…! என்று காவியங்கள் கூறுகிறது. ஆனால் இவ்வாறு காரணப் பெயர்களாக வைத்ததை நாம் புரிந்து விடக்கூடாது என்பதற்காகத் திரித்து விட்டார்கள்... மாற்றி விட்டார்கள்.

ஒரு நோயாளியிடம் இருந்து வேதனையான உணர்வுகள் வெளி வரும் பொழுது அது வாலி. அதனுடைய வலிமை மற்றவர்களையும் வேதனைப்படச் செய்யும்.

ஆனால் சீதாராமன் என்ற நிலையில்
1.அவர் உடல் நலமாக வேண்டும் என்ற எண்ணத்தை எடுத்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து உயிரிலே சேர்க்கப்படும் பொழுது “அஞ்சனை...”

அதாவது... தீமையை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் (சுக்ரீவன்) உணர்வை எடுத்து நமக்குள் விளைய வைத்து அதைச் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது
1.அந்தச் சொல் அடுத்தவர் (துன்பப்படுவோர்) செவிகளில் படுகின்றது
2.உணர்ச்சியைத் தூண்டும் பொழுது அவரின் கண்கள் நாம் சொன்ன சொல்லைக் கவர்கின்றது.
3.உற்று நோக்கிப் பதிவாக்கப்படும் போது அவர் உயிருக்குள் சேருகின்றது.
4.உயிரில் பட்டபின் வாயுவாக மாறுகின்றது.
5.அது இரத்தங்களில் கலந்தபின் உடல் முழுவதும் பரவி உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
6.இராமனின் பக்தன் ஆஞ்சநேயன் வாயு புத்திரன்... அவன் சுக்ரீவனின் மந்திரி
7.துருவ நட்சத்திரம் எதைச் செய்யுமோ அந்த உடலுக்குள் அதைச் செய்யும்…! என்று தெளிவாகக் காட்டுகிறார்கள்.

இராமாயணத்தில் உணர்வின் மனம் எதுவோ அதற்குத் தக்க எண்ணங்கள் எப்படி வருகின்றது…? என்று இப்படித் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

நாராயணன் திரேதாயுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான் என்று சொல்கிற பொழுது மனிதன் தன்னையும் பாதுகாத்துக் கொள்கின்றான்.
1.அவனால் முடியாமல் இருக்கும் பொழுது உணர்ச்சியைத் தூண்டி அவன் உயிரிலே மோதச் செய்கின்றான்
2.இந்த உணர்ச்சிகள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் பரப்பப்படும் போது வேதனையை நீக்கிச் சிந்திக்கும் தன்மை வருகின்றது.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடலுக்குள் புகும் போது கலியை மாற்றிக் கல்கியாக மாறுகின்றது.

உயிரைப் போன்ற உணர்வின் தன்மையைச் சிறுகச் சிறுக எண்ணப்படும் போது அந்த உடலில் ஒளியின் உணர்வாக மாறுகிறது. உயிரின் நிலைகளில் இது ஏற்படும் பொழுது “முழுமையான கனியாக மாறி…” அதனின் இனத்தின் வித்தை உருவாக்கிக் கல்கி… கடைசி நிலை.

மனிதனான பின் தான் ஒளியின் உணர்வாக உருவாக்கும் தன்மை பெறுகின்றான்.

கஷ்டமோ நஷ்டமோ மற்ற உணர்வின் தன்மை வலிமையாக்கப்படும் போது அது வாலியாகி விடுகிறது.

அதை மாற்ற… கொடுத்த சக்தியைச் சீராகப் பயன்படுத்தி நன்மை செய்யக் கூடிய சக்தியாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஆகவே ஒவ்வொரு நொடியிலும் ஆத்ம சுத்தி செய்ய மறந்து விடாதீர்கள்…!

ஆண்டவனின் சக்தியைப் புரிந்து ஆத்ம ஜோதியாக நீங்கள் கலந்திட வேண்டும் என்பது தான் ஈஸ்வரபட்டன் அளித்திடும் பொக்கிஷம்

ஒவ்வொரு மனிதனும் “தன்னுள் ஆண்டவன் இருக்கின்றான்…!” என்ற எண்ணமுடன் வாழ்ந்திட்டால் இன்றைய கலியில் நடக்கும் கூத்துக்கள் எல்லாம் இருக்காதப்பா…!

ஆண்டவனின் சக்தியைக் கல்லிலும் மண்ணிலும் தான் பார்த்து வணங்குகின்றார்கள். இவர்கள் வேண்டுவது எல்லாம் அக்கல்லின் ரூபத்தில் இவர்களுக்கு வந்து அருள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் இன்றும் உள்ளது.

நம் ஆத்மாவில் உள்ள அருளை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமப்பா…! நம் உயிராத்மாவின் மூலமாக நாம் ஜெபம் இருக்கும் பொழுது எல்லா நிலையையும் அறிந்து கொள்ளலாம்.
1.நாம் யார்…?
2.நம் உயிராத்மாவின் நிலை என்ன…?
3.நம்முள் இருக்கும் ஈசனின் சக்தி என்ன…? என்ற எல்லா உண்மைகளையுமே அறிந்து கொள்ளலாம்.

நாம் பாவம் செய்தோம். நமக்கு இனி இந்த ஜென்மத்தில் என்ன பேறு கிடைக்கப் போகிறது என்று எண்ணிடலாகாதப்பா..!

தவறை எண்ணி வருந்தும் பொழுதே நம் உயிராத்மா நம் தவறுக்கு மன்னிப்பு அளிக்கின்றதப்பா…! நம் உயிராத்மாவின் நிலையேதான் ஆண்டவன் என்ற ஒரே எண்ணம் மக்களுக்கு வந்து தன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டுமப்பா…!

அழியும் யுகத்தில்… அழியாச் செல்வம்… ஒரே செல்வம்… “இந்த உயிராத்மா தானப்பா…!”

கலியின் கடைசியில் கல்கி ஆரம்பமான நிலையில் இந்தக் கடைசி சந்தர்ப்பத்தை ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்திக் கொண்டு நம் ஆத்ம ஜோதியை அவ்வாண்டவனிடம் கலக்கவிட்டு ஆண்டவனுடன் ஆண்டவனாக சூட்சம உலகிற்கு அழைத்துச் செல்லத்தான் இதை உரைக்கின்றேனப்பா…!

1.இந்த உயிராத்மா என்னும் ஆண்டவனின் சக்தியைப் புரிந்து கொண்டு
2.ஆத்ம ஜோதியாகக் கலந்திட வேண்டும் என்பது தான்
3.ஈஸ்வரபட்டனாகிய நான் அளித்திடும் பொக்கிஷம்…!

May 24, 2022

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அடுத்தவர்களுக்குப் பாய்ச்சும் முறை

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி அனுதினமும் துருவ தியானம் எடுக்கின்றோம்.

நாம் எடுத்து வளர்த்த பின் உடல் நலம் இல்லாதவர்களுக்கு அல்லது வேதனைப்படுவோருக்கு எப்படிச் செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா… என்று சொல்லி உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று வளர்த்து விளைய வைத்த ஞான வித்தை அவர்களுக்குள் சொல்லாகச் சொல்லப்படும் போது
1.கேட்டவுடனே அவர்கள் உடலுக்குள் இந்த உணர்வுகள் விளைகின்றது.
2.அவர்கள் உடலுக்குள் இந்த உணர்ச்சிகள் ஓடுவதைப் பார்க்கலாம்.
3.இதன் வலிமையான பின் நோயின் தன்மையான அந்த உடல்களில் நடுக்கமாவதையும் பார்க்கலாம்.
4.இது இரத்தத்தில் கலந்து துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவர்களுக்குள் ஊட்டும்.
5.உடலுக்குள் சென்று அந்த நோயின் வீரியத்தைத் தணிக்கும்… வேதனைகளை அடக்கும்.

உதாரணமாக நீங்கள் ஒரு நோயாளியையோ ஒரு தரக்குறைவாகப் பேசக்கூடியவர்கள் உணர்வையோ நுகர்ந்தால் உங்களுக்குள் பதட்டமாகிறது அல்லவா…! நுகர்ந்த பின் உடலுக்குள் எத்தனை வேகத்தை உண்டாக்குகிறது…?

அதே போல் தான் தீமையைக் கண்ட பின் ஈஸ்வரா… என்று சொல்லி உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் நாம் செலுத்த வேண்டும்.

இது வலுவான பிற்பாடு…
1.அந்தத் தீமைகளைத் தள்ளி விட்டுவிடுகிறது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வு முன்னணியில் வந்துவிடுகிறது.

ஆகவே… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர்ந்து எங்கள் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும் எங்கள் உடல் நலமாக வேண்டும் என்று சொல்லி இதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

இப்படி வளர்த்துக் கொண்ட ஞான வித்தை இதே உணர்ச்சி கொண்டு அடுத்தவர்களுக்குச் சொல்லும் போது செவிகளில் பட்டபின் இந்த உணர்வுகள் அங்கே உந்தப்பட்டு அவர்கள் தீமைகளை நீக்க உதவும்.

1.நாமும் உடல் நலம் பெறுகின்றோம்… மற்றவர்களுக்கும் அந்த அருள் சக்தியைப் பெறச் செய்து
2.அவர்களையும் உடல் நலம் பெறச் செய்கிறோம்.

சப்தரிஷி மண்டலங்களிலிருந்து தான் மக்கள் வாழும் உலகிற்கு ஞானிகளும் ரிஷிகளும் பல நன்மைகளைச் செய்திட முடிகிறதப்பா..!

இந்தக் காற்றில் கலந்துள்ள பல வகை மூலிகைத் தன்மைதான் நம் சுவாசத்தில் வந்து தான் நம் சுவாசத்திலும் வந்து கலக்கின்றது. நாம் ஆண்டவனை நினைத்துச் சில நிலைகளில் நம் உடல் நலக் குறைவுக்காக நம்பி எண்ணும் பொழுது
1.அந்தச் சித்தர்கள் உருவில் உள்ளவர்கள்
2.நலிவுற்ற உடலுக்கு அந்த உடலுக்கேற்ற மூலிகையின் மணத்தை
3.அந்த நலிவுற்றோருக்குச் சுவாச நிலையிலேயே அளிக்கின்றார்கள்.

மறைந்துள்ள சித்தர்களின் நிலையெல்லாம் பல கோடி இரகசியங்களைத் தனக்குள்ளே மறைத்து வைத்திருந்தாலும்
1.ஏங்கிடும் இதயத்திற்கு அவர்கள் பெற்ற சக்தியை
2.எந்த வழியிலாவது புகட்டி ஆசீர்வதிக்கின்றார்கள்.

தானறிந்த பல சக்தியின் இரகசியங்களை மக்களின் நிலைக்கு உகந்தபடி அந்த இரகசியங்களை வெளியிடாமல் “பல வகைகளில்…!” இன்றும் புகட்டிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

பல கோடிச் சித்தர்கள் இன்றும் உடலுடன் இந்த உலகிலே உலாவிக் கொண்டு தான் உள்ளார்கள். பல சித்தர்கள் பல வகைக் குகைகளை அமைத்தும் சமாதி நிலை எய்தியும் இன்றும் உள்ளார்கள்.

எப்படி இந்த உலகிலே வாழும் மனிதர்கள் குடும்பம் குடும்பமாக ஒன்றாகக் கலந்து வாழ்கிறார்களோ இந்த உலகிலே அதே போல் தான்
1.பல ஞானிகளும் சித்தர்களும் ரிஷிகளும் ஒன்று கலந்து ஒரு நிலைப்பட்டு
2.இந்த மக்களுக்காக அவர்கள் ஒரு உலகில் “சப்தரிஷி மண்டலங்களாக…” வாழ்கிறார்கள்.
3.அந்த உலகில் இருந்து தானப்பா மனித உடலுடன் வாழும் மக்களின் உலகிற்கு பல நிலைகளைச் செய்திட முடிகிறதப்பா..!

அன்று இருந்த சித்தர்கள் கோவில் அமைத்து
1.மனிதர்களின் எண்ணங்களை எல்லாம் ஒன்றுபடுத்திடத்தான்
2.அந்த ஆண்டவன் அந்தக் கோவிலிலே அமர்ந்துள்ளான்…! என்ற எண்ணத்தை
3.மக்களின் மனதினிலே ஆழமாகப் பதிய வைத்தார்களப்பா…!

மனித எண்ணத்தில் தான் பல தவறுகள் செய்தாலும் அந்த ஆண்டவனிடம் “மன்னிப்புக் கேட்கும் எண்ணமாவது… … இன்றும் உள்ளதப்பா…!”

May 23, 2022

தாவர இனச் சத்திற்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியை முகப்பில் வைத்துத் தான் அன்று சித்தர்கள் செயல்பட்டார்கள்

தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைப் பெற்ற பின் நஞ்சினை மாற்றும் உடலின் அமைப்பு வருகிறது.

பன்றியின் உடலாக இருக்கும் போது நஞ்சை நீக்கும் உணர்வுகள் பெற்று… நல்ல மணத்தை நுகர வேண்டும் என்று பட்டது. அதன் உணர்வின் தன்மை வரும் போது கலியாகி மனிதனாக மாற்றியுள்ளது.

எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட பின் தீமையை நீக்கும் உணர்வு பெற்று மனிதனாக ஆன வலிமை கொண்டு
1.இன்று விஞ்ஞானியோ அல்லது வைத்தியரோ
2.இதைக் காட்டிலும் வலுவான உணர்வு கொண்டு விஷத்தை மாற்றுகின்றனர்.

“சாம வேதம்…” என்று சொன்னாலும் வேப்ப மரத்தின் உணர்வை எடுத்துக் கொண்டால் சாம. அதாவது…
1.வேம்பின் மணத்தை நாம் நுகரப்படும் போது ஓ…ய்… என்ற சப்தத்துடன் உமட்டல் வருகிறது.
2.கசப்பின் தன்மை அதிகரிக்கப்படும் போது மற்றதை விடாதபடி வாந்தி வருகிறது - இது சாம.
3.அந்த வாசனை வரப்படும் போது அந்த உணர்ச்சிகள் உந்தி வெளியே தள்ளுகிறது.

உணர்வின் தன்மை கவரப்பட்டு உறையும் நிலை வரும் போது கிரேதா. அதைக் கடந்து அதிலிருந்து வரக்கூடிய மணம் தான் சாம… இசை. அதை உயிரணு நுகரப்படும் போது “உணர்ச்சியின் எண்ணங்கள்…” வருகிறது.

ஆனால் தாவர இனங்களாக இருக்கும் போது அந்த மணத்தின் வலிமை கொண்டு மற்றதைத் தன் அருகில் விடாது பாதுகாத்துக் கொள்கிறது.

ஆகவே அதைப் போன்று மனிதனான பின் தீமைகள் நமக்குள் வராது தன்னைப் பாதுகாக்கும் நிலையாக அருள் உணர்வை எடுத்துச் சேர்த்தல் வேண்டும்.

சாம வேதத்தை முழுமையாகத் தெரிந்து கொண்டவர்கள்
1.இந்தச் செடி இதைச் செய்யும்… இந்தச் செடி இன்னதைச் செய்யும்… என்று மணத்தால் நுகர்ந்து
2.எந்தச் செடியின் மணத்தை அதிகரித்து மனித உடலில் தீமையை நீக்கியதோ
3.அதன் உணர்வின் குணத்திற்கொப்பத் தாவர இனத்தின் மணத்தைக் கூட்டி
4.மனிதனுக்கு வரும் நோய்களை நீக்கக் கற்றுக் கொண்டார்கள் கடந்த கால மனிதர்கள்.

நோய்களை நீக்கக் கற்றுக் கொண்டாலும் இதன் வலுவின் தன்மை கொண்டு மாற்றும் போது அன்றைய காலத்தில் இந்தச் சாம வேதம் என்று வரும் போது இதைக் கொடுப்பதற்கு முன்
1.அந்தத் தாவர இனச் சத்தைக் கையில் ஏந்தி
2.அதற்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துச் சேர்த்து
3.விஷத்தினை வென்றிடும் வலுவைக் கூட்டும் போது கலியை மாற்றிக் கல்கியாகக் கொண்டு வந்தனர்.

இப்படி அந்த ஞானிகள் கூட்டிய சாம வேதத்தின்படி அந்த அருள் மணத்தின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும். கலியாக மாறாமல் கல்கிக்குச் செல்ல வேண்டும்.

உங்கள் தியானத்திற்கு அந்த ஈசனே அருளை அளித்திடுவார்

நாம் தியானிக்கும் பொழுது நாம் எண்ணும் மகரிஷிகளின் நிலையிலிருந்து “மகரிஷிகள் மட்டுமல்ல…” தியானிக்கும் நிலையில் உள்ள எல்லோருக்குமே நாம் ஒருவரை எண்ணித் தியானிக்கும் பொழுது அவர்கள் நமக்காக எண்ணித் தியானிக்க முடியுமப்பா…!

தியான வழியின் ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுது நமக்கு ஒரு குரு வேண்டுமல்லவா…!
1.அந்தக் குருவின் சக்தியை நாம் எங்கிருந்து தியானம் செய்தாலும்
2.அவரின் அருளாசியை ஒவ்வொருவரும் பெற முடியும்.

வீட்டிலிருக்கும் பொழுது நமக்கு விக்கல் எடுத்தால் யாரோ நம்மை நினைக்கின்றார்கள் என்று எண்ணுகின்றோம். எண்ணுபவர்கள் நினைத்திட்டால் இருவரும் ஒரே நிலையில் எண்ணும் பொழுது அந்த விக்கல் நின்று விடுகின்றது என்றும் சொல்கிறோம்.

அதே போலத்தான் தியான நிலையிலும்
1.நாம் தியானிக்கும் பொழுது
2.நாம் குருவாக ஏற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த நிலை தெரிந்து
3.நாம் செய்யும் தியானத்திற்கு அவரின் அருளாசியைப் பெறுகின்றோம்.

“ஓ…ம் ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று ஒரே நிலையில் சுவாச நிலையை எடுத்துத் தியானிக்கும் பொழுது பல நல்ல நறுமணங்கள் கிடைக்கும்.

உங்கள் தியானத்திற்கு அந்த ஈசனே அருளை அளித்திடுவார். அந்த நல்ல மணங்களை எடுத்து எடுத்துத் தான் நம் உயிரான்மாவிற்கு ஊட்டத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

தியானத்தின் பொருளை உணர்ந்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்…!

May 22, 2022

கலி எது..! கல்கி எது…?

வீட்டிற்குள் பாம்பு வந்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஐயோ பாம்பு வந்து விட்டதே…! கடித்து விடுமே… கடித்து விடுமே… சொல்லிக் கொண்டு இந்த உணர்வு அதிகமானால் பாம்பின் நினைவே வருகிறது.

“கலி” என்ற இந்த உணர்வுகள் அதிகமானபின் அதன் உணர்வை எடுத்து மனிதனாக இருக்கும் நாம் அந்த உடலுக்குள் சென்று விடுகிறோம். பாம்பின் ஈர்ப்பிற்குள் சென்று அடுத்துப் பாம்பாகத் தான் பிறக்க நேரும்.

ஒரு மாட்டினை வளர்க்கின்றோம். மனிதனுடைய உணர்வைக் கூர்மையாகப் பார்க்கின்றது. அது தனக்குள் இதை எடுத்துக் கொண்டால் கலி தான்.

மனிதனுடைய உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டபின் நம்மை ஏங்கியே அந்த மாடு இறக்கப்படும் பொழுது யார் மேல் பிரியமாக இருந்ததோ இறந்த பின்… வளர்த்த அந்த உடலுக்குள் செல்ல நேர்கிறது.

எனேன்றால் வளர்த்த ஆர்வத்தில் “நான் செல்லமாக வளர்த்தேனே… நான் சொன்னபடி எல்லாம் கேட்டதே…!” என்ற மனிதனின் உணர்வு வரும் போது அதனின் அறிவாக மாறுகின்றது. மாடு இறந்த பின் நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது. அது மாட்டிற்குப் பரிணாம வளர்ச்சி.

நாயோ கோழியோ ஆட்டையோ வீட்டில் நாம் செல்லப் பிராணிகளாக வளர்த்தாலும் மனிதனின் உணர்வு அதற்குள் வளரப்படும் பொழுது இறந்தால் மனிதனுக்குள் வருகின்றது. இதுவும் கலி தான். ஆனாலும் அவைகள் எல்லாம் பரிணாம வளர்ச்சி அடைகிறது.

உதாரணமாக… மனிதனாக இருக்கும் நாம் ஒரு நோயாளியைப் பார்க்கிறோம் என்றால் அந்த உணர்வை இரக்கத்துடன் நுகர்ந்தால் நமக்குள் அதே நோய் வரத் தொடங்குகிறது. நாம் தேய் பிறையாகின்றோம். இதுவும் கலியாகத் தான் ஆகிறது.

ஆனால் அந்த நேரத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டுமென்று துவாரகா யுகத்தில் சேர்க்கப்படும் பொழுது
2.நாம் எந்த நல்ல குணத்தால் நோயாளியை உற்றுப் பார்தோமோ அவரின் வேதனை நமக்குள் சேராதபடி
3.அவரைப் பற்றித் தெரிந்து கொண்டபின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது
5.எந்தக் குணத்தின் மணத்தை உருவாக்கி அந்த எண்ணங்கள் வந்ததோ
6.அதில் அந்த அருள் ஞானத்தின் உணர்வினைச் செலுத்தப்படும் பொழுது இது “கல்கி” ஆக மாறுகிறது.
7.இருளை நீக்கும் அணுவின் தன்மையாக ஒளியாகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்

ஏனென்றால் திரேதாயுகம் (உடல்) என்று இருந்தாலும் துவாரகா யுகத்தில் “வேதனை” நமக்குள் வலுவானால் கலியாக மாற்றி நல்ல உடலின் ரூபத்தையே மாற்றி விடுகின்றது.

1.ஆனால் அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தோமென்றால் கல்கி ஆகின்றது
2.உயிர் கல்கி… நாம் நுகரும் உணர்வுகள் ஒவ்வொன்றையும் உயிரைப் போன்றே ஒளியாக மாற்றிக் கொண்டு வருதல் வேண்டும்.

மனிதன் கனியாக ஆன… துருவ நட்சத்திரமான அந்தக் கல்கியை நாம் பெற வேண்டும் என்று தான் இதை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டு வருவது (ஞானகுரு).

சிறு சிறு திரைகள் நமக்குள் ஒவ்வொன்றிலும் உண்டு. நல்லதை மறைக்கும் அந்தத் திரைகளை நீக்கித் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நாம் கனியாக்குதல் வேண்டும்.
1.ஒவ்வொரு நாளும் இந்த உணர்வின் தன்மையை நாம் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.
2.நாம் நுகரும் ஒவ்வொரு உணர்வையும் ஒளியாக மாற்றிக் கொண்டு வரவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொன்றிலும் நாம் இணைத்தால் தான் கல்கி. அதைச் சேர்க்கவில்லை என்றால் கலி தான்.

நீ என்னிடம் நம்பி வேண்டும் பொழுது… உன்னுடன் நான் (ஈஸ்வரபட்டர்) வருவேன்

நம்பிக்கையிலிருந்து பெறுவது தான் ஜெப அருள்…! எப்படி…?

உன் எண்ணத்தில் உன் செயலில் ஒன்றை நினைத்து ஆண்டவனை எண்ணுகிறாய்.

ஞானிகள் கொடுத்த உருவ அமைப்பில் முருகன் விநாயகர் சரஸ்வதி இலட்சுமி வெங்கடாஜலபதி பராசக்தி என்று இப்படிப் பல நாமங்கள் உடைய ஆண்டவனை எண்ணும் பொழுது நம்பிக்கையின் மூலமாக ஜெப அருளைப் பெற்ற ஞானிகளூம் மகரிஷிகளும் நீ வணங்கும் நிலையில் உன் எண்ணத்தை அறிகின்றார்கள்.

அந்த நிலையில் அவர்கள்
1.உன் சொல்லுக்கு அவர்களாகவே பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திப்
2.பல நிலைகளை உண்டு பண்ணி
3.உன் எண்ணத்திற்கு உன் செயலுக்கு வெற்றியை அளிக்கின்றார்கள்.

சூட்சம உலகில் இருந்து கொண்டே நடக்கும் செயல்கள் தான் இவை எல்லாம். அந்த நிலையில் அவர்களின் பரிபூரண அருளை நீ பெறுகின்றாய்.

ஒரு செயலைச் செய்யும் பொழுதும் வெளியில் எங்காவது செல்லும் பொழுதும் “ஈஸ்வரா…!: என்று உன் உயிரை நினைத்து வணங்கிச் செல். தடைகளையும் வரும் வினையையும் அவர் பார்த்து உனக்கு நல்வழி புகட்டிடுவார்.

நம்பிக்கையுடன் செல்லும் எந்த நிலையும் தோல்வி அடைவதில்லை...!

ஞானிகளாகவோ மகரிஷிகளாகவோ ஆவது எதற்காக…? என்று எண்ணுகிறார்கள் புரியாத பாமரர்கள். எண்ணத்திற்கு செயலுக்கும் இந்த உலக வாழ்க்கையில் இருந்து கொண்டு இவர்களை நல் வழி நடத்திடத்தான்
1.அந்த மகரிஷிகள் பல ஜெப வழிகளைப் பெற்று சூட்சம உலகில் இருந்து கொண்டே
2.நம்பிக்கை வைத்தவனுக்கு நடுக் கடலுமில்லை…! என்னும் வெற்றியை அளிக்கின்றார்கள்.

நடுக்கடல் எனும் பொழுது நடுக்கடலிலிருந்து மீள்வதற்கும் அவர்கள் அவர்களை எண்ணும் பொழுது மீட்கிறார்கள் ஆண்டவனின் ரூபத்தில்…! நம்பிக்கையின் எண்ணம் புரிந்ததா…?

ஆகவே இனிமேல் நீ ஒரு இடத்திற்குச் செல்லும் பொழுது எந்தக் காரணத்தைக் கொண்டும் மனக் கலக்கப்படாமல் பூஜை அறையில் வந்து நீயே நில்.
1.அந்த நிலையில் நீ என்னிடம் வணங்கி வேண்டும் பொழுது
2.நம்பி வேண்டும் பொழுது உன்னுடன் நான் (ஈஸ்வரபட்டர்) வருவேன்…!

புராதன ஆலயங்களின் சுவர்களிலும் சிலைகளிலும் பூசப்பட்டிருக்கும் “வர்ணங்களின் இரகசியம்…”

விஞ்ஞான உலகில் “நாகரீகம்…” என்ற போர்வையில் நாம் உடுத்தும் ஆடைகளிலும் சாயங்கள் என்ற பெயரில் விஷத் தன்மைகள் கலக்கப்பட்டு விட்டது. இன்று அத்தகைய ஆடைகளைத் தான் நாம் அணிகின்றோம்.

நாம் அணிந்திருக்கும் ஆடைகளில் உள்ள விஷத் தன்மைகள்… அதே இனமான தன் சக்தியைக் காற்றிலிருந்து கவர்ந்து நம் ஆன்மாவில் கலக்கச் செய்துவிடுகிறது.

அதன் வழி ஆன்மாவிலிருந்து சுவாசிக்கும் போது நுகர்ந்த உணர்வு உயிரிலே பட்டு நம் இரத்தநாளங்களில் விஷத் தன்மைகள் கூடிவிடுகின்றது.

ஜெர்மனி போன்ற நாடுகள் எல்லாம் இத்தகைய சாயங்கள் கலக்குவதனால் அதிலுள்ள விஷத்தினால்
1.கேன்சர் என்ற நோய் வருகிறது.
2.ஆஸ்த்மா என்ற நோய்கள் வருகிறது.
3.மனிதன் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகிறது என்று கண்டு கொண்டனர்.

ஆகவே தீமையை உருவாக்கும் இத்தகைய சாயங்களை நீக்க வேண்டும்… எங்கள் நாட்டிலே இறக்குமதி செய்யக்கூடாது என்று தடுத்து நிறுத்தினான்.

நம் நாட்டின் பண்பின் பிரகாரம் இன்றும் பழைய ஆலயங்களில் எல்லாம் சாயங்கள் (வர்ணம்) என்று பூசியிருப்பார்கள்.
1.இயற்கையில் உருவான பச்சிலைகளை எடுத்து
2.பல பல தீமைகளை அகற்றக்கூடிய அத்தகைய மூலிகைகளை
3.மற்றவைகளுடன் கலந்து மற்ற கலருடன் இணைக்கச் செய்யப்படும் போது
4.அந்த ஒன்றுபட்ட நிலைகள் கொண்டு… அதனின் உணர்வுகளை
5.ஆலயத்தில் உள்ள சுவர்களில் உள்ள காந்தப் புலன்கள் இதைக் கவர்ந்த பின்
6.அதிலிருந்து மகிழ்ச்சி ஊட்டும் உணர்வாக வெளி வரும்.

அந்த உணர்வுகள் காற்றிலே பட்ட பின் நீங்கள் அந்த ஆலயத்திற்குள் சென்ற பின் இருளை நீக்கும் அரும் பெரும் சக்தியைப் பெறச் செய்யும் தகுதிக்குத் தான் “இயற்கையில் விளைந்த தாவர இனங்களைச் சேர்த்தான் அன்றைய ஞானி…”

அன்று பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் கருவிலே இருக்கப்படும் போது தாய் தந்தையர்கள் பல விஷத் தன்மை கொண்ட விஷத்தை முறித்திடும் தாவர இனங்களை தாங்கள் படுத்திருக்கும் குகைப் பக்கம் போட்டு வைத்திருந்தனர்.

அந்த மணத்தை நுகர்ந்த பின் விஷப் பூச்சிகளோ மற்றவைகளோ அச்சத்தால் நகர்ந்து ஓடுகிறது. அகஸ்தியனின் தாய் தந்தையருக்கு ஒரு பாதுகாப்பாக அது அமைகிறது.

அவர்கள் தங்களைக் காத்திடும் நிலையாகச் செயல்படுத்திய தாவர இனத்தின் மணங்களை அந்தத் தாயின் கருவிலே வளர்ந்த அகஸ்தியனுக்குள்ளும் இது பெறப்படுகின்றது.

இதைப் போன்று தான் இயற்கையில் விளைந்த அத்தகைய தாவர இனங்களில் உள்ள
1.தீமைகளை அகற்றிடும் இப்படிப்பட்ட பச்சிலைகளை எடுத்துத் தான்
2.அன்று ஆலயங்களிலே வர்ணங்களாகக் கலந்து பூசுவதும்
3.அந்த வண்ணங்களை எடுத்து நமக்குள் நுகரப்படும் போது
4.தீமைகளை அகற்றிடும் ஒளிக்கதிர்களை தனக்குள் பாய்ச்சும் தன்மையாகக் கொண்டு வந்தனர் அகஸ்தியனுக்குப் பின் வந்த ஞானிகள்.

எப்படி ஒரு தாவர இனம் தன் தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து அந்த வித்துக்கள் விளைகின்றதோ… அதைப் போன்று தீமைகளை வென்றிடும் தாவர இனத்தின் சத்தை இங்கே நம்மை நுகர வைக்க சுவர்களிலும் சிலைகளிலும் வர்ணங்களாகத் தீட்டுகின்றனர்.
1.அந்த அலைகளைக் கவரும் தன்மையால்
2.இந்த ஆலயத்திற்குள் தீமை வராதபடி ரொம்பவும் நாசூக்காக அன்றைய ஞானிகள் செய்தனர்
3.அகஸ்தியன் பெற்ற பேருண்மையின் தன்மைகளை மக்களுக்குக் கிடைக்க ஆலயங்களில் இப்படிச் செய்தனர்.

ஆலயங்களில் பார்த்தோமென்றால் வர்ணங்கள் எத்தனையோ இருக்கின்றது. நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!

May 21, 2022

உன் தியான நிலையைக் கூட்டிக் கொண்டால் நீ செய்யும் தொண்டுடன் வந்திடுவேன் நானும் அங்கே…!

 

தியான நிலையின் பொருள் என்னப்பா…? தியானம் செய்வது எதற்காக…?

உணவிற்கோ உடைக்கோ உலக ஆசாபாசத்திற்கோ செய்வது தியானம் அல்ல…! என்று பலர் சொல்வார்கள். மனிதனாகப் பிறந்தவனுக்கு உண்ணும் உணவும் உடுக்க உடையும் ஆசாபாசங்களும் உள்ளது தானப்பா. இந்த உலகில். இந்த உடலையும் பாதுகாக்க வேண்டுமப்பா…!

தியானத்தின் பொருள்
1.இந்த உடலில் நாம் உள்ளவரை “ஒ…ம் ஈஸ்வரா… குருதேவா…!” என்ற ஜெபத்தை
2.உயிரைப் புருவ மத்தியில் எண்ணித் தியானிக்க வேண்டுமப்பா.
3.அப்படித் தியானித்தால் உன் சுவாச நிலை நல்லதாக மாறிவிடும்.

அந்த நிலையில் உன் எண்ணமெல்லாம் சிதறிவிடாமல் பரிபக்குவமான நிலையில் உயிரான ஈசனை எண்ணும் பொழுது “சுவாச நிலை ஒரு நிலைப்படுகின்றது….!”

சுவாச நிலை ஒரு நிலைப்பட்டவுடன் உன் உயிர் நிலைக்குப் பெரும் உன்னதத் தன்மை வருகின்றது. அந்த நிலையை எய்திவிட்டால் பிறரின் துவேஷமும் எந்தத் தொழிலுக்கும் வேறு எந்த நிலை வந்தாலும் உன் நிலை மாறாது.

உன் நினைவெல்லாம் “ஈஸ்வரா…!” என்று உயிருடனே ஒன்றி இருக்க வேண்டும். எந்தத் தீமையான உணர்வும் உன்னை அண்டாது. துன்பங்களும் உன்னை அண்டாது. உன் எண்ணத்தில் உள்ள கோபதாபங்களைக் குறைத்துவிடும்.

1.பிறரின் புகழுக்கு மயங்கிடாதே…!
2.பிறரைப் போற்றுவதையும் விட்டிடப்பா…!
3.விஷமான தன்மை தான் இந்த இரண்டும்.

ஜெப நிலையில் இருந்திட்டால் தோல்வி நிலை எந்த நிலையிலும் அண்டிடாதப்பா…! உன் நிலைக்கு உதயத்தை (தக்க உபாயத்தை) அளித்திடுவான் அந்த ஈஸ்வரனே…! நீ எடுக்கும் ஈஸ்வர தியானத்தினால் ஜெயித்திடலாம் உன் வழிக்கே…! எல்லாமே…!

உன் தியான நிலையைக் கூட்டிக் கொண்டால்
1.நீ செய்யும் தொண்டுடன் வந்திடுவேன் நானும் அங்கே…!
2.உன் நிலையில் வருபவர்களுக்கெல்லாம் வாழ்த்திடப்பா “நலமாக வாழ்வாய்…!” என்ற சொல்லை.
3.வாழ்வாங்கு வாழ்த்துவார்கள் அவர்கள் உன்னை.
4.அவர்கள் வாழ்த்திடும் வாழ்த்து தானப்பா ஈஸ்வரனின் வாழ்த்து…!

ஈசனின் வாழ்த்தையே நீ பெற்றிடுவாய்…!

May 20, 2022

ஆடல் கலைகளை ஞானிகள் நமக்கு வகுத்துக் கொடுத்ததன் உண்மையான நோக்கம் என்ன…?

பண்புகளை இழந்து நாகரீகம் என்ற நிலைகள் கொண்டு ஆட்டங்கள் ஆடிக் கொண்டிருக்கும் போது தையா…தக்கா… என்று ஆடுவதும் ஆணும் பெண்ணும் மோதுவது போல் செயல்படுத்துவதும்… இது தான் இன்றைக்கு இருக்கும் ஆடல் பாடல் கொண்டாட்டம் எல்லாமே.

கழுதை கத்துகிற மாதிரியும்… குதிரை கத்துகிற மாதிரி ஊளையிடுவதும்… அதாவது மிருகங்களுக்குச் சமமான நிலைகள் கொண்டு ஆடுவது தான் இன்றைய டான்ஸ் (DANCE).

ஆடுவதைப் பார்த்தால் ஏய்….ஊய்… என்று அவனையே பைத்தியக்காரனாக ஆக்கும் நிலையில் இது தான் கலாச்சாரமாகப் போய்விட்டது.

ஆனால் ஞானிகள் காட்டிய நிலைகள் என்ன…?

மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் எதிர்படும் உணர்வுகளால் மனது சோர்வடைகிறது. அதனால் உள் உறுப்புகள் சோர்வடைந்து பல நோய்களுக்குக் காரணமாகின்றது. அதைச் சீராக்குவதற்காக வேண்டி…
1.இனிமையான இசை கொண்டு அங்கங்களை அசைத்து அதற்குத் தக்க அபிநயங்களைக் காட்டப்படும் போது
2.உள் உறுப்புகள் இயக்கமாகி உடலில்… சிக்கல் உள்ள நீர்களை மாற்றுவதும்
3.தும்மல் வரும் போது ஒரு பக்கம் சிக்கலானால்… இங்கே அபிநயமாகும் போது அந்தச் சிக்கலை மாற்றி
4.உடல் நலம் பெறுவதற்கும் மகிழ்ந்து வாழும் உணர்வுகளை நுகரச் செய்வதற்கும் நாட்டியங்களாக (ஆடல் கலைகள்) உருவாக்கினார்கள்.

ஏனென்றால் மனிதன் வேகமாக இருக்கும் போது உள் உறுப்புகளில் குறிப்பாக நுரையீரலில் சிக்கலாகி விட்டால் அதனால் இருமல்கள் வரும்.
1.அடிக்கடி விரிவடையவில்லை என்றால் அழுத்தங்கள் அதிகமாகும்
2.அப்போது நுரையீரலில் எதிர்ப்பாகிவிடும்.
3.நாளடைவில் அந்த உறுப்பே பாழடைந்து விடுகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்குத் தான் கலை அபிநயம் கொண்டு உணர்வின் தன்மை கொண்டு அங்கங்களை அசைத்து மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தனக்குள் தோற்றுவிக்கும்படி செய்தார்கள்.

1.தன்னை அறியாது உடலில் உண்டாகும் நரம்புப் பிடித்தங்களையோ
2.உறுப்புகளில் ஏற்படும் சிக்கல்கலையோ நீக்குவதற்கு அதைச் செயல்படுத்தினார்கள்.

ஆனால் இன்று நாகரீகம் என்ற பெயரில் தையா… தக்கா… என்று குதித்து தவறான உணர்வுகளைத் தூண்டி… கருத்தை இழக்கச் செய்து அநாகரீக நிலைகளை வளர்க்கச் செய்து… மாடுகளைப் போல் நம்மை ஆடும்படி வைத்துவிட்டார்கள்.

குழந்தைக்குப் பிறந்த நாள் கொண்டாடுகிறோம் என்றால் ஞானிகள் காட்டிய நிலைகள் என்ன…?

விளக்கை (ஜோதியை) ஏற்றி வைத்துச் சொந்தமோ பந்தமோ நண்பர்களோ எல்லோரும் சேர்ந்து அந்தக் குழந்தையைப் பார்த்து…
1. அவன் உலக ஞானம் பெற வேண்டும்
2.உலகைக் காக்கும் அருள் ஞானம் பெற வேண்டும்
3.குடும்பத்தைக் காக்கும் அருள் ஞானியாக வேண்டும்
4.இருளை அகற்றும் அருள் ஞானம் பெற வேண்டும்
5.பண்புள்ளவனாக வளர வேண்டும் பரிவுள்ளவனாக வளர வேண்டும் என்று வாழ்த்துக்களைச் சொல்லி
6.பாடலைப் பாடி அவனை மகிழச் செய்து… உன்னுடைய வழி எப்படி இருக்க வேண்டும்…?
7.அன்னை தந்தையரால் நீ வளர்க்கப்பட்ட நிலைகள் என்ன…? கல்வியின் தரங்கள் என்ன…? கருத்தின் தன்மை என்ன…? என்ற
8.இந்த உணர்வுகளின் தன்மை எடுத்துப் பாடலின் ரூபமாக அவனுக்கு எடுத்துக் கூறியது தான் அக்கால வழக்கங்கள் – ஆடல் பாடல்கள்.

அதை யாராவது நாம் இப்போது செய்கிறோமா என்றால் இல்லை. இதைச் சொன்னால் அநாகரீகம் என்ற நிலையில் விட்டுவிடுகிறார்கள்.

எரியும் வெளிச்சத்தை ஊதி அணைத்து இருள் சூழச் செய்து… எல்லோரும் சப்தமிட்டு… அதன் பின் கேக்கைக் கத்தியால் அறுத்துக் கொடுப்பது தான் நம்முடைய கலாச்சாரமா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

“அறிவிப்பு” - நல் சுவாசத்தை எடுத்தவர்களை எல்லாம் ஒரு நொடியில் பறக்கச் செய்கின்றாள் ஆதிசக்தி

இந்தக் கலி மாறி கல்கி வரும் பொழுது இந்த உலகின் தன்மையே விஞ்ஞானிகளால் உருவாக்கிய அணுகுண்டால் விஷத் தன்மை உலகம் முழுவதும் பரவுகின்றது.

அந்த நிலையிலேயே
1.இந்தப் பூமித் தாயின் பொக்கிஷங்களை (உலோகங்கள்) எல்லாம் இன்றைய மனிதன் பாளம் பாளமாக வெட்டி எடுக்கின்றான்.
2.அதே சமயத்தில் உறிஞ்சும் தன்மை கொண்டு பூமிக்குள் இருக்கும் திரவங்களை (OIL) எல்லாம் எடுத்துக் கொண்டேயிருக்கின்றான்.

அதனின் விளைவாகக் கலியின் கடைசியில் அணுகுண்டின் கதிரியக்க அணுக்களும் மனிதன் செய்த பெரும் செயற்கையின் விளைவுகளாலும் ஒரு நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த உலகம் அந்த அணுக்களின் தாக்குதலால் அந்த ஒளி பட்டவுடன் பூமியின் இயற்கைத் தன்மையைச் செயற்கையின் நிலையாக மாற்றியதால் “ஒரு நொடியில் உலகமே அழிகின்றது…!”

“நல் சுவாசம் எடுத்தவனுக்கு…!” அந்த அணுகுண்டின் விஷத் தன்மையும் இந்த உலகத் தன்மையும் வந்து தாக்கிடாது.

இந்த உலகத் தன்மை மாறும் பொழுது இந்தப் பூமியின் நிலை மீண்டும் கல்கிக்கே வருகின்றது. கல்கியில் இருந்த நிலையெல்லாம் பெரும் நீர் நிலை தான்.

ஒரு நொடியில் உலகத் தன்மை மாறுகிறது என்றேன் அல்லவா…! அந்த நிலையில் உலகத் தன்மை மாறும் பொழுது
1.உன் சுவாச நிலையின் தன்மையால்…
2.அவரவர்கள் செய்த பூர்வ புண்ணிய பலனால்…
3.பெரும் சித்தர்களும் ஞானிகளும் மகரிஷிகளும் வந்து கலக்கும் கல்கி என்ற அந்த நிலையில்
4.நல் சுவாசத்தை எடுத்திட்டவர்களை எல்லாம் ஒரு நொடியில் அவர்களைப் பறக்கச் செய்கின்றாள் அந்தச் சக்தி.

பாவ உடல்களில் உள்ளவர்கள் தான் அந்தச் சுவாச நிலையின் தன்மையால் கலியின் கடைசியை முடிக்கின்றார்கள்.

ஆரம்பமாகும் முதல் படியாக கல்கியில் ஒளியாக ஒவ்வொருவரும் வந்திடவே இதை உணர்த்துகின்றேன்…! 

May 19, 2022

மூச்சுத் திணறல் வருவதற்கு மூல காரணம் என்ன…?

குழந்தைகள் மீது அன்பிருந்தாலும் சரி… மனைவி மீது கணவனுக்கு அன்பிருந்தாலும் சரி… அந்த அன்பு கொண்ட நிலையில் சிறிது குறைகள் வந்துவிட்டால் தொழில் நிமித்தம் வெளியில் வெறுப்படைந்து வீட்டிற்குள் வரும் சமயங்களில் மனைவி மீது கணவன் வெறுப்படையும் தன்மை வருகின்றது.

வெறுப்படையும் உணர்வுடன் வரப்படும் போது சாப்பிடும் போது மனைவி ஆகாரத்தைச் சுவையாகச் செய்திருந்தாலும் அந்தச் சுவையை ரசித்துச் சாப்பிடும் நிலையை அது இழக்கச் செய்து விடுகின்றது.

அப்போது சோர்வடைந்து… என்ன சாப்பாடு இப்படி இருக்கிறது என்ற வேகங்கள் வருகிறது.

நாம் உழைத்துச் சம்பாரித்துப் போட்டாலும் கூட “இங்கே சாப்பாடு மோசமாக இருக்கின்றதே…” என்று இந்தக் குறையான உணர்வுகளைச் சுவாசித்து நம்மை அறியாமலே அன்பு கொண்ட மனைவியையும் வெறுக்கும் தன்மை வந்துவிடுகின்றது.

ஏனென்றால் நாம் அல்ல.

காரணம்…
1.நாம் எடுத்துக் கொண்ட பிற உணர்வுகள் நம் நல்ல குணங்கள் கொண்ட உணர்வுகளை மறைத்து விடும் போது
2.உணவைப் பார்க்கும் போது சுவைமிக்க உணர்வின் அமிலங்கள் ஊறினாலும்
3.அதிலே… சந்தர்ப்பத்தால் எடுத்த விஷம் கலந்த அமிலங்கள் கலக்கப்படும் போது
4.சுவையான அந்த உணவின் ருசியையே மாற்றிவிடுகிறது.

அதனால் பித்தம் அதிகமாகின்றது. பித்தம் கூடி விட்டால் அடுத்து எதைச் சாப்பிட்டாலும் வாந்தியாக வருகிறது. சுவையான உணவை நீங்கள் உட்கொண்டாலும் உடல் அதை ஏற்க மறுக்கின்றது. இதை எல்லாம் உங்கள் அனுபவத்தில் பார்த்திருப்பீர்கள்.

ஆக பித்தத்தின் தன்மை கொண்டு நாம் உடல் வலுப் பெற வேண்டும் என்றாலும் முடியாத நிலை செய்கின்றது. இது எல்லாம் நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் அது அமிலங்களாக எச்சிலாக மாறுகின்றது.

உணவாக உட்கொள்ளும் நிலையில் அந்தந்த உணர்வுக்கொப்பத் தான் உடல் ஜீரணிப்பதும் ஆஜீரணமாவதும்.
1.நீங்கள் அதிகமான சலிப்பும் சஞ்சலத்துடன் இருந்துவிட்டு அந்த உணர்வுடன்
2.நல்ல சுவையான உணவை உட்கொண்டால் அதை ஜீரணிக்கும் சக்தியும் குறைகின்றது.

கஷ்டப்பட்டு உழைத்து அப்பொழுது நல்ல சுவையான உணவை உட்கொண்டு உடல் வலுப் பெற வேண்டும் என்று எண்ணினாலும் சலிப்பு சஞ்சலம் என்ற உணர்வுகள் உமிழ் நீராக மாறும் போது ஜீரணிக்கும் சக்தி இழந்து புளித்த ஏப்பமாக வரும்.

1.புளித்த ஏப்பம் வந்த பின் அந்த வாயு என்ற நிலைகளால் வயிறு உப்புசமாகும்
2.வயிறு உப்புசமானாலும் வாயுத் தன்மை நுரையீரலில் அதிகமானால் அங்கே மூச்சுத் திணறல் போன்று வரும்… ஆயாசமாக வரும்.

ஆனால் நாம் தவறு செய்தோமா என்றால் இல்லை.

இதைப் போன்று நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் எப்படி எல்லாம் இயக்குகிறது…? என்ற நிலையை நம் குருநாதர் அருள் வழியில் எமக்குக் காட்டினார்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் காலை துருவ தியானத்தில் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

ஒவ்வொரு நிமிடத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து இந்த உணர்வின் தன்மை வலுவாகச் சேர்த்துக் கொண்டால் எத்தகைய குறைகள் வந்தாலும் அதை நீக்க முடியும்.

ஆகவே மன உறுதி கொண்டு…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அடிக்கடி உடலில் சேர்த்துக் கொண்டால்
2.சோர்வு சலிப்பு சங்கடம் சஞ்சலம் போன்ற உணர்வுகளை மாற்றி அமைக்க முடியும்.
3.மற்றவர்கள் செயலைப் பார்த்து நுகரும் தீமையான உணர்வுகள் நமக்குள் உருப்பெறாதபடி தடுக்கவும் முடியும்... நோயாகவும் மாறாது.

நாடியைப் பார்த்தால் தெரிந்துவிடும் மூன்று ஜென்மக் கதையும்

ஒரு குழந்தை வீட்டில் பிறந்தவுடன் அந்த வீட்டில் உள்ள பெரியவரும் தன் வாயால் சொல்வதில்லை. பிறந்த நேரம் எப்படி உள்ளதோ…?!
1.ஜாதகக்காரனிடம் கேட்டால் பகர்ந்திடுவான்.. என்ற எண்ணத்துடன்
2.ஓடுகின்றார்கள்…… ஜாதகத்தைப் பார்க்க.

அந்த ஜாதகக்காரனின் தன்மையிலே சொல்கின்றதாம்…! குருவும் கேதுவும் சனியும் சந்திரனும் சூரியனும் புதனும் வியாழனும்…! இதை எல்லாம் பகர்ந்தவன் யாரப்பா…?

ஒன்பது கட்டம் போடுகின்றான். புதனின் பார்வையிலே சந்திரன் படுகின்றானாம். கேதுவின் நிலை பார்க்கின்றதாம்…! சனி உச்சத்தில் உள்ளதாம்.. சுக்கிரன் நடக்கின்றானாம்…! எப்படி இருக்கிறது பார்த்தாயா…?

குழந்தை பிறந்தவுடன் இப்படிப் பகர்கின்றான் பாவக்காரன். அந்தக் குழந்தையின் ஜாதகத்தையே வளரும் காலமெல்லாம்
1.அக்குழந்தையை வளர்ப்பவனுக்கும்
2.அக்குழந்தை விபரம் வந்த பிறகும்
3.ஜாதகக்காரன் சொல்வது தான் மனதினுள்ளே பதிகின்றது.

அதை வைத்து வளர்த்திட்டால் அந்த எண்ணத்தில் வைத்து வளரும் வளர்ப்புத்தான் வந்திடும். ஜாதகத்தில் வந்ததனால் எண்ணத்தின் ஊன்றிவிடுகின்றது.

அந்த “எண்ணமே தான் மனிதன்…!” என்று பல முறை பகர்ந்திட்டேன்,

எண்ண வடிவில் வருவதெல்லாம் கால நிலையில் வந்திடுமப்பா. ஜாதகத்தில் வந்ததல்ல அந்நிலை. ஜாதகம் ஜோதிடம் என்பதெல்லாம் பொய்யுமல்ல… நடப்புமல்ல…!

முன் ஜென்மத்தின் நிலையையும் கண்டிடலாம். இந்த ஜென்மத்தின் நிலையையும் கண்டிடலாம் என்னும் நிலையில் தான் ஆதிகாலத் தவசிகள் பெரும் தவமிருந்து பெற்றிட்டார்கள்.

1.ஓலைச் சுவடி முறையின் முறையிலே
2.நாடி நரம்பு என்ற வழியினிலே
3.ஒருவன் ஜாதகத்தைத் தெரிந்திட அவனின் நாடியைப் பார்த்தால் தெரிந்துவிடும்
4.அவன் மூன்று ஜென்மக் கதையும் - முன் ஜென்மக் கதையும் நடக்கும் ஜென்மமும் அடுத்த ஜென்மமும்.

எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்கள் பெரும் ஆத்திரக்காரர்கள்… அழித்துவிட்டார்கள் தான் பிழைக்கும் வழிக்காக. போகர் எழுதிய நாடியெல்லாம் நடு ஆற்றில் விட்டுவிட்டார்கள்.

எழுதுகிறார்கள் ஜாதகத்தை… புதனைச் சனி பார்ப்பதாக…!

ஜாதகம் என்பது முன் ஜென்மத்தில் நடந்தவற்றைத் தெரிந்து இந்த ஜென்மத்தில் நடப்பதைச் சொல்வது தான். திரித்துவிட்டார்கள் ஜாதகத்தின் உண்மை நிலையை.

இன்று ஜாதகம் பார்ப்பதெல்லாம் பேராசையின் ஆவலால் தான்.

ஆகவே ஜாதகத்தைப் பார்க்க எங்கும் சென்றிட வேண்டாம்…
1.உன் நிலையிலேயே உன் உள்ளத்திலேயே உன் ஜெப நிலையைக் கூட்டிக் கொண்டால்
2.தெரிந்துவிடும் “ஏழு ஜென்மப் பலனும்…!”

May 18, 2022

நல்லது நடக்காது… என்று எண்ணுவதற்குப் பதிலாக நல்லது நடக்கட்டும்… நல்லது வரட்டும்… என்று மாற்றி யோசிக்க வேண்டும்

குடும்பத்தில் அன்புடன் தான் வாழ்கின்றோம். பிள்ளை அமெரிக்காவில் இருந்தாலும் “என் பிள்ளை ஒரு மாதமாகத் தபால் போடவில்லையே…” என்று தாய்க்குள் வேதனையின் உணர்வின் தன்மை வரும் போது அது வலுவான உணர்வுகளாக வருகின்றது… பாச உணர்வு இயக்குகிறது.

அந்த வேதனையின் உணர்வுகளைப் பாசத்தால் தாய் பதிவு செய்கிறது. பாசத்தின் உணர்வு கொண்டு குழந்தையை எண்ணி வேதனைகளைப் பாய்ச்சப்படும் போது அங்கே என்ன நடக்கிறது…?

தாய் வெளிப்படுத்திய வேதனை உணர்வு
1.அங்கே (அமெரிக்காவில்) அந்தக் குழந்தையின் உணர்வுகளில் அது நுகரப்பட்டு… சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டு
2.மேடு பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து காயமாகின்றான்.

அப்போது… நான் நினைத்தேனே… அது போல் ஆகிவிட்டதே…! என்று தாய் மீண்டும் வேதனைப்படுகிறது. ஆனால் தபால் வரவில்லையே என்ற வேதனையுடன் எண்ணப்படும் போது… “என்ன ஆனதோ…? ஏது ஆனதோ…? என்ற பதட்ட உணர்வின் இயக்கம் தான்…” அங்கே குழந்தையை அவ்வாறு இயக்குகிறது.

இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தை தபால் போடவில்லை… சரி…!
1.இருந்தாலும் மன வலு கொண்டு உறுதியான நிலைகள் கொண்டு
2.தபால் வருவதில் ஏதோ மாற்றங்கள் இருக்கலாம்… என்று இதை மாற்றி விட்டால்
3.தபாலின் மாற்றங்களாகத் தான் நாம் அறிந்து கொள்ளக் கூடிய தன்மை வரும்.
4.பின்னாடி பார்த்தோம் என்றால் ஓ… தபால் தேங்கி வந்தது…! என்ற நிலை வரும்.

ஆனால் தபால் வரவில்லையே என்ற வேதனை உணர்வு கலக்கப்படும் போது எந்தக் குழந்தை மேல் பாசமாக இருந்தோமோ… அங்கே இயக்கப்பட்டுச் சிந்தனை இழக்கச் செய்து குழந்தை தடுமாறிக் கீழே விழுந்து விடுகிறது.

அதே மாதிரி நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் நல்ல சந்தோஷமாக இருக்கின்றோம் என்று பதிவாக்கிக் கொள்கிறோம். கூட்டாகத் தொழிலும் செய்கிறோம்.

ஆனால் சந்தர்ப்ப பேதத்தால் வியாபாரத்தில் ஏதோ மந்தமாகி விட்டால் இவன் எனக்குத் துரோகம் செய்கிறான்… இல்லை நீ தான் எனக்குத் துரோகம் செய்தாய்…! என்ற கோப உணர்வுகள் பதிவாகத் தொடங்கிவிடுகிறது.

இருவரும் சேர்த்து தொழில் செய்யும் போது பொருள் நஷ்டமான பின்… இரண்டு பேருமே துரோகம் செய்தான் பாவி…” என்று ஒருவருக்கொருவர் சாபமிடும் நிலை வருகிறது.

உன்னை நம்பி வந்தேன் எனக்கு நஷ்டமாகிவிட்டது… உன்னை நம்பி வந்தேன் எனக்கு நஷ்டமாகிவிட்டது…! என்று இருவருமே அடிக்கடி சொல்லத் தொடங்குவார்கள்.

1.இப்படி இரண்டு பேருக்குள்ளும் ஆகிப் பிரிவு ஏற்பட்ட பிற்பாடு
2.அடுத்து அவர்கள் எங்கே போய் எந்தத் தொழில் செய்தாலும் சரி…
3.இந்த உணர்வுகள் இயக்கப்பட்டு நல்லதை அவர்கள் பெறவே முடியாது.
4.இவரும் சரி… அவரும் சரி… இரண்டு பேரும் தான் கெடுகின்றனர்.

இதைப் போல் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டிருக்கும் போது இது எல்லாம் எதைக் காட்டுகின்றது…?

சிறு திரைகளாக அமைந்து நம் நல்ல குணங்களை அது மறைத்துச் சிந்தனை என்ற நிலை நமக்குள் வருவதில்லை. ஆகவே தெளிந்த மனதுடன் நாம் எப்படி வாழ வேண்டும் என்று நினைவுபடுத்துவதற்குத் தான் சித்திரை… புது வருடப் பிறப்பைக் கொண்டாடுகின்றோம்.

எப்படி..?

நம் வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ வரக்கூடிய நிலைகளில் இருந்து
1.என் நண்பன் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
2.என் குழந்தை கல்வியில் உயர்ந்த ஞானம் பெற வேண்டும்… சிந்திக்கும் தன்மை பெற வேண்டும்
3.கணவன் மனைவி நாங்கள் ஒன்று சேர்ந்து வாழ்தல் வேண்டும்.
4.யாருடன் பகைமையாக இருந்தாலும் ஒன்று சேர்த்து வாழும் தன்மை வர வேண்டும்
5.அருள் உணர்வு பெற வேண்டும் என்று எல்லோரும் சொல்ல வேண்டும்.

இப்படி எண்ணும் போது குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பகைமையை மறந்து விடுகின்றோம். சிறு திரைகளை நீக்கிவிடுகின்றோம். பேரருளை நமக்குள் பெருக்கிக் கொள்கின்றோம்.

நாம் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற நிலைக்கு வரும் போது நம்மை அறியாது ஒருவருக்கொருவர் இயக்கும் தீமையான உணர்வின் இயக்கத்திலிருந்து முழுமையாக விடுபட முடியும்.

அதற்குண்டான பயிற்சி தான் இது.

மறு ஜென்மம் என்பது உள்ளதப்பா…! ஒவ்வொரு மனிதனையும்… அவனைப் பார்த்துக் கொள்ள…!

ஆவி உலகில் ஊடுருவி (நமக்கு முன் இருக்கும் இந்தக் காற்று மண்டலம்) அதன் தன்மையில் பார்த்தால் உலக நிலைமை எல்லாமே தெரிந்துவிடும்.
1.மனித உடலில் உள்ள வரை தான் அமைதியையும் சாந்தத்தையும் சந்தோஷத்தையும் காண முடியும்.
2.ஆவி நிலை எல்லாம் பெரும் அல்லல்படும் நிலை தான்.
3.(ஆவி என்றாலும் ஆன்மா – உயிரான்மா என்றாலும் இங்கே பொருள் ஒன்று தான்)

மனித உடலின் நிலையிலே மூன்றில் ஒரு பாகம் அமைதியான ஆனந்தமான நித்திரையை இந்த இயற்கையே நமக்குக் கொடுத்துள்ளது. ஆவிகளுக்கு எந்த நிலையிலும் இந்த ஆனந்தமான நித்திரை இல்லையப்பா.

மனித உடலில் பெற்ற பேற்றை வழி வழியாக உங்களுக்குச் சொல்கின்றேன். இந்தப் பேறு பெற்றதற்குப் பல கோடித் தவம் வேண்டும்.
1.தவமிருந்து பெற்ற உடலைத்
2.தன்னிச்சையாக அழிக்கின்றார்கள் மானிடர்கள்.

மனித உடலின் தன்மையெல்லாம் பெரும் பேரின்ப நிலையப்பா. மனித உடலில் இருந்து கொண்டே வாழும் வாழ்க்கை அழகுடனும் அர்த்தமுடனும் ஆனந்தத்திலும் களித்திட வேண்டுமப்பா.

மனித உடலை எய்தியவன் எல்லாம் தன் நிலையை உணர்ந்திடாமல் பிறந்தவுடனே ஆத்திரத்துடனும் பேராசையுடனும் பழி வாங்கும் நிலையிலும் கோபதாபத்துடனும் வளர்க்கப்படுகின்றான்.

எப்படியப்பா இருக்கும் வாழ்க்கை நிலை…?

பிறந்தவுடனே நல்லறிவை ஊட்டும் குடும்பத்தில் வளரும் குழந்தை நல்ல நிலைக்கு வந்திடுவான். வளரும் தன்மையிலே தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அமைகின்றது.

May 17, 2022

காலமறிந்து கருத்தறிந்து செயல்பட நாம் பழகிக் கொள்ள வேண்டும்

கணவன் மனைவிக்குள் அன்பு கலந்ததாக இருப்பினும் சில நேரங்களில் கணவர் தொழில் நிமித்தம் கடினமான வேலைகள் செய்துவிட்டு வீட்டிற்குள் வரப்படும் பொழுது என்ன நடக்கிறது...?

தொழிலில் சோர்வடைந்த நேரத்தில் மனைவி சிரித்துக் கொண்டு (இதற்கு முன் அன்பாகப் பேசியது போல்) கணவரிடம் பேசினால் ஆது கணவனுக்கு எதிர்மறை ஆகின்றது.

1.நேரம் காலம் தெரியாதபடி சிரிக்கும் நேரம் இது தானா...? என்று
2.இந்தச் சந்தர்ப்பம் அந்த நல்ல குணங்களை வேதனை என்ற உணர்வால் அது மறைக்கப்படுகிறது
3.வேதனை என்ற உணர்வுகள் மறைப்பதால் மனைவி மீது இருக்கக்கூடிய பாசங்கள் அது மறைந்து விடுகின்றது.

ஏனென்றால் கணவனின் சந்தர்ப்பம்... வெளியிலே கஷ்டமான நிலைகளில் வேலை செய்துவிட்டோ… அல்லது மற்றொருவரிடம் தகராறு செய்துவிட்டோ… மிக வருத்தத்துடன் வீட்டுக்கு வரும் பொழுது
1.மனைவி அதற்கு முன் கணவனிடம் சந்தோஷமாக இருந்தாலும்
2.கணவன் வருத்தம் அடைந்த நேரத்தில் அதே சந்தோஷத்தை ஊட்டும் பொழுது
3.அங்கே சந்தோஷத்தை வெளிப்படுத்தினால் எதிர்மறை ஆகின்றது.

எதிர்மறையாகும் போது மனைவி மீது வெறுப்பு வருகின்றது. நல்ல குணத்தில் இந்த விஷத்தின் தன்மை திரையாக மூடி விடுகின்றது. அவர் மீது இருக்கக்கூடிய அன்பை அது மறைத்து விடுகின்றது.

அன்பை மறைத்து விட்டால் மீண்டும் அதிலிருந்து பகைமை தான் வளர்கின்றது. அதை மாற்ற வேண்டும் என்றால் அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்.

கணவன் அங்கே வருத்தத்துடன் இருக்கப்படும் பொழுது அவரை மனைவி உற்றுப் பார்க்கப்படும் பொழுது கண்கள் வழி அதை நுகர நேருகின்றது.

இதை... மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து கருத்தறிந்து செயல்பட வேண்டும் என்று விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

வெளியில் கணவனுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை...! அவர் சோகத்துடன் இருக்கின்றார்... வருத்தத்துடன் இருக்கின்றார்... என்ற உணர்வை அறிந்து அவரை மனைவி பார்த்த பின் நுகர நேர்கின்றது... உயிரிலே மோதுகின்றது மூலாதாரத்தில்...!

மூலத்தில் (உயிரிலே) மோதும் பொழுது வேதனை உணர்வுகள் தெரிய வருகின்றது. தெரிந்து கொண்ட பின் என்ன செய்ய வேண்டும்...?

ஈஸ்வரா...! என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
1.கணவருக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும்
2.சாந்தமும் ஞானமும் அவர் பெற வேண்டும்
3.அவரைப் பார்ப்போருக்கு நல்ல மனம் பெற வேண்டும் என்று
4.மனதால் அந்த உணர்வின் தன்மையை தனக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்
5.மனைவியும் அந்தச் சமயத்தில் அமைதியாக (பொறுமையாக) இருந்து
6.அவர் பார்த்துச் சொல்லப்படும் பொழுது என்ன விவரத்தை சொல்கிறார் என்று “எதிர்பார்த்து…”
7.நாம் அந்த உயர்ந்த நிலையை அவருக்கு எப்படிக் கொடுப்பது...? என்று மனைவி சிந்தித்து அதைச் சொன்னால்
8.கணவர் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருகின்றது.

ஆனால் காலம் தெரியாதபடி அவர் வருத்தமாக இருக்கும் பொழுது சிரித்து... “ஏன் இப்படி வேதனைப்பட்டு கொண்டே இருக்கின்றீர்கள்...?” என்று சொன்னால்... இந்த வேதனை உணர்வுகள் அங்கே சோர்வாக இருக்கும் பொழுது எதிர்மறையாகி… நல்ல செயல்கள் அங்கே செயல்படுவதில்லை

இதைப் போன்று மனிதனின் வாழ்க்கையில் சித்திரையாக... சிறு சிறு திரைகள் நம்மை மறைத்து விடுகின்றது… உண்மையின் உணர்வை அறிய முடியாது போகின்றது.

மறைத்து விட்டால் அது என்ன பொருள் என்று தெரியவில்லை. அப்போது அந்தப் பொருளின் தரத்தை நாம் அறிந்து கொள்ள முடியுமா...?

1.நமது வாழ்க்கையில் நல்ல குணங்கள் இப்படித்தான் மறைக்கப்படுகின்றது
2.நல்ல குணங்களை அந்த நேரத்தில் செயல்படுத்த முடியாதபடி பகைமை உணர்வு வந்து விடுகிறது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்குத் தான் பயிற்சியாக இத்தகைய உபதேசங்களைக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

தன்னைத் தானே உணரும் விழிப்பு நிலை பெறுங்கள்

ஒரு மத யானையை மாவுத்தன் அடக்குவது “தன் மதி கொண்டு தான்…”

மனித உணர்வின் எண்ணம் (நம்முடைய எண்ணம்)
1.தன் ஞானத்தைக் கொண்டு தன் ஆத்மா விழிப்புறும் மதி அறிந்தாலும்
2.தன் உணர்வின் எண்ணத்தை நியாயப்படுத்தும் செயல் கொண்டு
3.பிறரின் உணர்வுகள் செயல்படும் எண்ணத்தை – “தன் எண்ணம் கொண்டு பார்க்கும் பொழுது..!”
4.பிறிதொருவரின் செயலைக் குற்றமாகக் குறையாக எண்ணி
5.தன்னையே நியாயப்படுத்தும் பொழுது
6.இப்பிரபஞ்சத்தில் பரவியுள்ள பகுத்தறிவின் ஞானம் நமக்குள் வளர்ச்சி பெற்றதாக வந்த நிலையில்
7.அந்த ஞானத்தை நாம் விரயப்படுத்துவதால் ஆத்மாவின் விழிப்பு (தன்னை அறியும் நிலை) உறங்கி விடுகின்றது.

பிறிதொருவரின் உணர்வு மோதும் பொழுது தன்னை உயர்த்தி பிறிதொருவரைக் குறைக்கும் எண்ணத்தை எடுத்தோமானால் தன் உணர்வில் முதலில் மோதுவது குறை கொண்ட ஒலித் தன்மைதான்,

ஞானத்தின் செயலானது ஒவ்வொரு அணுவுமே மூச்சலையிலிருந்து வெளிப்படும் சுவாசக் காற்றானது
1.சாதாரண மனிதனுக்கு உள் இழுப்பது நல்ல காற்றும் வெளிப்படுவது தீய காற்றாகவும் இருக்கின்றது. – இது இயல்பு
2.ஆனால் தன்னை உணரும் மெய் ஞானியின் மூச்சுக் காற்றோ உள் இழுக்கும் காற்றுக்கு மேல் அவன் வெளிப்படுத்தும் சுவாசக் காற்று பரிசுத்த ஒளியாகப் பரவக்கூடிய தன்மை உண்டு.

தீமையை நன்மையாக்கும் சூட்சும உயிர் தான் மனித உயிராத்மா (மனித உயிரும் + ஆத்மாவும்). ஆதிசக்தியின் படைப்பால் பலன் கொண்ட நிலையில் படைக்கப்பட்ட உயர்ந்த படைப்பு தான் அந்த மனித உயிராத்மா. அண்டத்தையே ஆளுகின்ற சக்தி அந்தப் படைப்புக்குத் தான் உண்டு.

அந்தப் படைப்பின் பலனைப் பெற வேண்டும் என்றால் மாமகரிஷிகளின் அருள் ஒளி சக்தி கொண்டு ஆத்மாவும் உயிரும் இணையும் வலுக் கொண்ட விழிப்பு நிலையாக
1.மெய் ஞானத்தில் பெறும் தியானத்தின் முறையால்
2.தன்னைத் தானே உணரும் விழிப்பு ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

May 16, 2022

எந்தக் கவலை வந்தாலும்… எந்தத் தொல்லை வந்தாலும்… எந்தச் சங்கடம் வந்தாலும்… கண்களைத் திறந்து தியானிக்க வேண்டும்

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கையே தியானமாக்க வேண்டும்.

1.உட்கார்ந்து தியானம் செய்து கொண்டே இருப்பது தியானமல்ல.
2.அது தியானம் ஆகாது.

காரணம்… தியானத்தை எடுத்துக் கொண்டு செல்கிறீர்கள். அடுத்தாற்போல் திடீரென்று ஒரு விபத்து ஆகிறது என்றோ உங்களை நோக்கி ஒரு மாடு மிரண்டு ஓடி வந்தால் ஆ…! என்று அலறினால் போதும். இது வந்து உள்ளே உருவாகிவிடும்.

இந்த உணர்வு அதிகமானால் தியானத்தில் அடுத்து உட்கார முடியாது.
1.அதிர்ச்சியான செய்தியைக் கேட்டால் அது தான் முன்னாடி நிற்கும்.
2.அப்புறம் நீங்கள் எப்படித் தியானம் எடுப்பது…?

ஆகவே அப்போதைக்கப்போதே துடைத்துப் பழகினால் தான் அடுத்து உங்களைத் தியானத்திற்கே விடும். அப்படிப் பழகவில்லை என்றால் தியானத்திற்கே வர முடியாது.

மனதை ஒரு நிலைப்படுத்துவது (CONCENTRATION) என்றெல்லாம் சொல்வார்கள். அதெல்லாம் முடியாது.
1.நீங்கள் எவ்வளவு செய்தாலும்… பல காலம் நான் தியானமிருந்தேன் என்று சொன்னாலும்
2.முதலில் நன்றாக இருந்தது… இப்போது தியானம் செய்ய முடியவே இல்லை என்று தான் சொல்ல முடியும்.

காரணம் எதிர்பாராதபடி அதிர்ச்சியோ மற்றதோ வந்த பின் அது நமக்குள் வலுப் பெற்று விடுகிறது. நம் ஆன்மாவில் கலந்து விடுகிறது. அது வலிமை பெறுகிறது… அதனால் முடியாது போகிறது.

அந்தச் சமயத்தில்… நன்றாகத் தியானம் செய்தேனே… போய்விட்டதே…! தியானம் செய்தேனே… போய்விட்டதே…! என்று வேதனைப்பட்டு அந்த விஷத்தைத் தான் உங்களால் வளர்க்க முடியுமே தவிர அதைப் போக்க முடியாது.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் கையில் அழுக்குப்பட்டதைத் துடைப்பது போல் யாம் (ஞானகுரு) கொடுத்த அருளை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்.

1.எப்போது தீமையைக் காணுகின்றீர்களோ அப்போதெல்லாம் ஈஸ்வரா… என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று
3.புருவ மத்தியில் இணைத்து உள்ளே புகாது தடுத்துவிடுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி நமக்குள் அது வளர வளர…
1.எந்தத் தீமையை நுகர்ந்தோமோ அதை உங்கள் ஆன்மாவிலிருந்து தள்ளிக் கொண்டே போகும்
2.நம் ஈர்ப்பு வட்டத்தை விட்டுக் கடந்து சென்றால் சூரியன் அதைக் கவர்ந்து சென்றுவிடும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கூடக் கொஞ்ச நேரம் சேர்த்து எடுத்தீர்கள் என்றால் யாம் சொல்வதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

எந்தக் கவலை வந்தாலும்… எந்தத் தொல்லை வந்தாலும்… எந்தச் சங்கடம் வந்தாலும்…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கண்களைத் திறந்தே எடுங்கள்... அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
2.கண்களை மூடுங்கள்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உடலில் இருக்கும் எல்லா அணுக்களும் பெற வேண்டும் என்று உள்ளே செலுத்துங்கள்.
3.இப்படி எண்ணி உங்கள் நினைவைக் கூட்டிப் பாருங்கள்.

உங்களால் சாத்தியமாகிறதா இல்லையா என்று பாருங்கள். ஆகவே… வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.

அப்போதைக்கப்போது துடைக்கவில்லை என்றால் உள்ளுக்குள் சென்று அது வலுவாகிவிடும். உங்கள் ஆன்மாவில் அது வலுவாகிவிடும்.

அடுத்து… தியானத்தில் உட்கார்ந்தவுடனே அவன் அப்படிச் சொன்னான்… அதிர்ச்சியாகிவிட்டது என்று அந்த நிலை தான் வரும். அந்த மாதிரி அதிர்ச்சி வந்தாலும் மீண்டும் மேலே சொன்ன முறைப்படி எண்ணி எடுத்து அதைத் தடுத்துக் கொள்ளுங்கள்.

இது தான் உண்மையான தியானம். ஒவ்வொரு நொடியிலும் உங்கள் ஆன்மாவைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.

எதை எதையோ ஒவ்வொரு நிமிடமும் நம் வாழ்க்கையில் பதிவு செய்கின்றோம். திருப்பி எண்ணும் போது அதனின் உணர்வே நம்மை இயக்குகிறது… நம்மைத் திசை திருப்புகிறது.

ரேடியோ டி.வி.யில் எந்த அலைவரிசையைத் திருப்பி வைக்கின்றோமோ காற்றிலிருந்து இழுத்து அதைப் பேசுகின்றது. அது போல் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த அரும்பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.

அதை நினைவுக்குக் கொண்டு வரும் போது
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் உடனடியாகப் பெற முடியும்.
2.மன பலம் பெற முடியும்… மகிழ்ந்து வாழும் சக்தி நிச்சயம் பெற முடியும்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளைப் பெறுவோம். துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே நாம் வாழ்வோம்.