ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 30, 2017

எதிர்பாராத விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றது? விபத்தைத் தடுக்க ஒவ்வொருவரும் என்ன செய்யவேண்டும்? திண்டுக்கல் இரயில் நிலையத்தில் வைத்து நேரடியாக காட்டினார் குருநாதர் – நடந்த நிகழ்ச்சி

பத்திரிக்கை வாயிலாகவோ டி.வி. மூலமாகவோ ஒருவர் பஸ்ஸிலே சென்று கொண்டிருக்கும்போது இத்தகைய ஆக்சிடன்ட் ஆனார் என்று அதனின் உணர்வினைப் பதிவு செய்து கொள்கின்றோம்.

பதிவு செய்து கொண்ட பின் நாம் பஸ்ஸிலே செல்லும்போது இதனுடைய உணர்வே அதிகரிக்கிறது. அதிகரித்த உணர்வு கொண்டு நாம் டிரைவரை உற்று நோக்குகின்றோம்.

அப்படி உற்று நோக்கினோம் என்றால் அவரின் எண்ணத்தில் அதிகரித்து நாம் டிரைவரை உற்று நோக்க நமக்குத் தக்கவாறு டிரைவரின் உணர்வின் தன்மை “தன்னுடைய ஸ்டியரிங்கைத் திருப்ப வைத்துவிடும்”.

பின் நாம் எதை அஞ்சி இருந்தோமோ நாம் எண்ணியது போல அங்கே நிறைவேற்றி ஆக்சிடண்ட் ஆகும்.

அந்த ஆக்சிடண்ட் ஆகும்போது நாம் எதை எண்ணி வலுப் பெற்றோமோ அதன் நிலை கொண்டு
1.மற்றவர்களுக்கு அடி இருக்காது.
2.நாம் எதைப் படித்து அல்லது பார்த்து இப்படி ஆக்சிடென்ட் ஆனது என்று பயந்தோமோ
3.அப்பொழுது நுகர்நது கொண்ட அந்தப் பய உணர்வு அதற்குத் தக்கவாறு விபத்து ஏற்படுவதும்
4.நமக்குக் காயங்கள் ஏற்படுவதும் இருக்கும்.

குழந்தைகள் ஓன்றும் அறியாத நிலையில் இருக்கும்போது எத்தகைய ஆக்சிடண்ட் நடந்தாலும் “குழந்தைகள் தப்பி விட்டது” என்று சொல்வார்கள் இதைப் பார்க்கலாம்.

ஒரு சமயம் திண்டுக்கலில் இரயில்வே நிலையத்தில் நான் (ஞானகுரு) நின்று கொண்டிருக்கும் போது அங்கே ஒரு அம்மா ஒரு குழந்தையை எடுத்து தண்டவாளத்தைத் தாண்டுகின்றது.

கண்ணிலே பார்க்கிறேன்.

அப்போது குருவும் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) கூட இருக்கின்றார். இரண்டு பேரும் சேர்ந்து நடந்தே தான் அங்கே வருகின்றோம்.

அப்பொழுது குருநாதர் காட்டுகின்றார். இந்தப் பெண்ணின் இயல்பின் வழி இதனின் உடலில்.., “விபத்தால் இறந்த ஆன்மா உண்டு”. அது அழைத்துச் செல்வதைப் “பார்” என்றார். இதைக் கண்ணுற்றுப் பார்… என்று  காண்பிக்கின்றார்.

அதாவது ஒரு அச்சத்தால் ஆக்சிடண்ட் ஆனதைப் பார்த்தபின் இது உடலிலே பட்டபின்
1.இதற்கு இரயில் வருவது தெரிகின்றது.
2.இரயிலைக் கடந்து செல்ல அதே ஈர்ப்பின் தன்மைக்குக் கொண்டு வருகின்றது (அந்த விபத்தால் இறந்த ஆன்மா).
3.கொண்டு வந்த பின் அது எவ்வாறு அடிப்பட்டதோ அதே நிலையில் கொண்டு சுக்கு நூறாக அந்த அம்மாவின் தசைகள் சிதைந்து விட்டது.
4.இது சிதைந்த நிலையில் இது உடலில் இருந்த இது நுகர்ந்த உணர்வுகள் “அதனுடைய சரீரத்தையும்…” காட்டுகின்றார் எமது குருநாதர்.

அதற்கு முன் அடிபட்ட இந்த உணர்வுகள் இதற்குள் பட்டபின் அது எப்படி அஞ்சி உடல் பதறியதோ…, ஏனென்றால் வண்டி வருவதும் தெரிகின்றது. பதட்டத்தின் விபத்தின் ஈர்ப்பு நிலைகள் எப்படி ஊடுருவிச் செல்கின்றது பார் என்றார்.

ஆனாலும் அது கையில் வைத்திருக்கும் அதன் குழந்தை தண்டவாளத்தின் நடுவிலே விழுந்து விடுகின்றது. இதை கண்ணுற்று பார்க்கச் சொன்னார்.

காரணம் இதனுடைய பிழையின் நிலைகள் இவ்வாறு இருக்கும். அதன் உணர்வின் செயல்கள் எவ்வாறு இயக்குகிறது என்ற நிலையை உற்றுக் காண்பிக்கின்றார். ஏனென்றால் இது உங்களுக்கு
1.குருநாதர் உற்று நோக்கி
2.உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு? என்று
3.தெளிவாகக் காட்டியதைத்தான் உங்களிடம் அப்படியே நான் சொல்கின்றேன்.

குருநாதர் இதை நான் கண்டுணரவேண்டும் என்பதற்காக… என்னை வேக வேகமாக.., அவசரமாக… அழைத்துக் கொண்டு வருகிறார்.

அதைப் பார்க்கப்படும் போது இதனுடைய உணர்வுகள் எப்படி இயங்குகிறது என்ற காண்பிக்கின்றார். அது எவ்வாறு அந்த உணர்வுகளை இயக்குகிறது என்ற நிலையும் காட்டுகின்றார்.

அப்பொழுது நான் குருநாதரிடம் கேட்டேன். அதே நிலையில் “அந்த அம்மாவைக் காக்க கூடாதா...!” என்று கேட்கிறேன்.

அப்பொழுது குருநாதர் சொல்கிறார்.
1.அதனின் உணர்வின் செயலாக அது செல்கின்றது.
2.இருப்பினும் அது அதனுடைய உயிரான்மா அது வெளிச் செல்கின்றது.
3.எதைச் செய்தாலும் அந்த ஆன்மா இன்னொரு உடலுக்குள் புகத்தான் செய்யும்.
4.அந்த ஆன்மா இந்த உடலில் புகுந்தது போல இன்னொரு உடலில் புகுந்து அதைச் செய்யும்.

ஆனால் அந்த உடலில் இருக்கும்போதே அந்த ஆன்மா அந்த உடலின் தன்மை “எந்த ஆன்மாவத் தனக்குள் மாற்றிக் கொள்கின்றதோ.., அதைத்தான் அது மாற்ற முடியுமே தவிர… நான் மாற்றுவேன்… நீ மாற்றுவாய்…,” என்று இல்லை.

அது தாயின் கருவில் இருக்கும்போது இத்தகைய மாற்றத்தின் நிலைகள் கொண்டு தாய்.., தன் எண்ணத்தால் “காத்திட வேண்டும்..,” என்று உயர்ந்த ஞானியின் தத்துவத்தை அது எடுத்திருந்தால் அதன் உடலிலே இந்த உணர்வின் தன்மை உடலிலே பதிவாகி இருந்தால் “இன்று அதைக் காக்கும்”.

இன்று நீ அதைச் செய்ய முடியாது என்ற இந்த உண்மையையும் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகவே அப்படியே நீ இன்று செய்ய வேண்டும் என்றாலும் அது உனக்கு முன் இது காத்து இந்த உணர்வின் செயலாகப்படும் போது எதிர்மறையாகி இதைக் காத்திடும் நிலையும் வரும்.

1.அது உன்னிடம் கேட்டிருந்தாலோ
2.அல்லது என்னிடம் பேசியிருந்தாலோ
3.உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று ஏங்கியிருந்தாலோ
4.இந்தப் “பதிவின் தன்மை” இருந்தால் தான்… அதைக் காக்க முடியும்.

இதையெல்லாம் தெளிவாக எடுத்துக் காட்டினார்.

இன்று நம்மில் அதிக பேருக்கு நாம் விபத்தில் சிக்குவது ஏன்? ஏன் அதைக் காப்பாற்ற முடியாதா… தடுக்க முடியாதா…! நீங்கள் கேள்விகள் கேட்பது போன்று தான் நானும் குருநாதரிடத்தில் அந்த இடத்தில் கேள்வியைக் கேட்டேன்.

விபத்தாகிறது என்று நீங்கள் அறிந்து கொண்டீர்கள். உணர்வின் தன்மையைக் காட்டுகின்றீர்கள். இதை ஏன் நீங்கள் காக்கக் கூடாது? “காக்க வேண்டும் அல்லவா…” என்று குருநாதரிடம் கேட்டேன்.

1.காப்பது நாம் அல்ல...
2.அறிந்து கொள்ளும் நிலைகள் வரும். தன்னைக் காத்துக் கொள்ள முடியும்.
3.அவர்களைக் காத்துக் கொள்ளவேண்டும் என்றால் அந்த உணர்வின் தன்மை அதற்குள் “அவர்கள்… பதிவாக்கியிருக்க வேண்டும்”.
4.தாயின் நிலையிலே அது பதிவாகியிருக்க வேண்டும்.
5.வாழ்க்கையில் இது போல் ஞானிகளுடன் யாராவது நல்ல வாக்கினை கொடுத்தால் அந்த “வாக்கு” காக்கும்.
இதைத்தான் அங்கே தெளிவாகக் காட்டினார்.

அந்தக் குழந்தை அறியாத தன்மையிலிருப்பதால் இதனுடைய நிலைகளும் அதற்குத் தெரியாது. நடுத் தண்டவாளத்தில் கடந்து சென்ற பின் அந்த உணர்வின் தோற்றமும் மற்ற நிலைகளும் அதற்கு எந்த ஆபத்துமில்லை.

ஏனென்றால், அந்தக் குழந்தை அடிபட்டு இறந்த இந்தத் தாயின் கருவிலே இருக்கப்படும் போது அந்தக் குழந்தை ஞானிகளுடைய நிலைகளையும் அது கேட்டுணர்ந்த உணர்வுகளில் பதிவானது.

சிறிது யாசகத்திற்காக வேண்டி ஒரு மந்திரவாதி தான் ஆனாலும், (அவர்) நான் மந்திரவாதி என்று சொல்ல முடியாது.

சாது என்ற நிலைகள் அவர் வரப்படும் போது இந்தத் தாயும் அப்படி எண்ணியதால் தக்க தருணத்தில் குழந்தை கருவாக இருக்கப்படும்போது அவர் யாசிக்கும் போது அதைக் கொடுத்தது.

அப்படிக் கொடுத்த உணர்வுகள் அந்தக் கருவில் இருக்கும் குழந்தைக்கு உதவியிருக்கின்றது. ஆக குழந்தை காப்பாற்றப்பட்டது.

ஆனால் அதே சமயத்தில் அந்த மந்திரவாதி எந்தக் கருவின் தன்மை  உருவாக்கினாரோ அந்த உணர்வின் தன்மை “தனக்கு வேண்டிய உணர்வை” அது எடுத்துக்கொண்டது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதா….?

ஒரு உடலின் நஞ்சைப் பிரித்தெடுத்து உணர்வின் தன்மை சக்தி பெற்றதோ அந்தச் சக்தியின் தன்மை கொண்டு இவர் ஆசிர்வாதம் கொடுத்தது தாயிற்கு ஊழ்வினையாகின்றது. ஆனால் அவர் கொடுத்த சக்தி கருவுக்குள் இருந்து குழந்தையைக் காத்தது.

அதே சமயம் இதனை எடுத்துக் கொண்ட நிலைகள் “எதை.., மந்திர ஒலிகள் கொண்டு எடுத்தாரோ… இது மந்திரவாதியைப் போய்ச் சேரும்”.

இது “அலறிய உணர்வுகள்” கொண்டு இங்கே எடுத்துத் தன் வலுவின் தன்மை கொண்டு “எவ்வாறு செய்கிறார்” என்ற நிலையும் இதையும் விவரித்துக் காட்டினார்.

ஒரே செயலில்… “எத்தனை நிலைகள் பொருந்தியுள்ளது” என்பதை  எமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டுதான் சொல்கின்றோம். நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்.

ஏனென்றால் நாம் யாரும் தீங்கு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் பிறரைப் பார்க்கும் உணர்வுகள் நமக்குள் எவ்வாறு பதிவாகின்றது. பதிவான உணர்வின் தன்மை அந்தந்தப் பதிவுக்குத் தக்கவாறு தான் இயக்கம் இருக்கும்.

1.குழம்பில் எவ்வாறு அதிகம் காரமாகிவிட்டால் காரத்தின் சுவையாகவும்,
2.உப்பு அதிகரித்து விட்டால் உப்பின் சுவையாகவும் மாறுவது போன்றுதான் 
3.நமது வாழ்க்கையில் எதனின் உணர்வுகள் (அதனின் பதிவு) “முன்னிலையில்” அதிகரிக்கின்றதோ
4.அதனின் செயலாக நம் உணர்வின் தன்மையை மாற்றி அதனின் இயக்கமாக  நம்மை இயக்கிவிடுன்றது.
5.இதிலிருந்து மனிதர்கள் ஒவ்வொருவரும்… “எவ்வாறு மீள வேண்டும்….” என்றுதான் இதைக் காட்டினார்.

குருநாதர் அவருடனே என்னை அழைத்துச் சென்று ஒவ்வொரு நிலைகளிலும் தெளிவாகக் காட்டியதைத்தான் இங்கே கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

செவ்வாய் தோஷம்

நீங்கள் எங்கே சென்றாலும் ஜோசியமும் ஜாதகமும் கேட்டு அவர்கள் சொல்லும் நிலையைப் பதிவு செய்தால் அந்த உணர்வே அது கடவுள் என்ற நிலைகளில் உங்களுக்குள் இறையாகி அந்த இறையின் செயலாக உங்களை இயக்கிவிடும்.

அத்தகையை நிலைகளுக்கு விட்டுவிடாதீர்கள்.

அருள் ஞானியின் உணர்வை நாங்கள் பெறுவோம். எங்களை அறியாத தீமைகளை அகற்றுவேன் என்ற மன பலம் கொண்டு வாருங்கள்.

ஜோசியம் கேட்டு அவர் சொன்னதை மனதில் வேதனை கொண்டு உங்கள் மன நிலையை மாற்றிக் கொள்ளாதீர்கள்.

நல்ல பெண்ணாக இருக்கும். அழகாக இருக்கும். படித்த நிலைகள் கொண்டிருக்கும். சீரான குணங்கள் இருக்கும். ஆனால் ஜாதகப்படி “செவ்வாய் தோஷம்” என்பார்கள்.

செவ்வாய் தோஷத்தின் நிலைகள் கொண்டு நாம் சென்றால்
1.நம் குடும்பத்தில் கலகம் வரும்.
2.அதனால் தீய விளைவுகள் வரும்
என்ற ஜாதகத்தின் உணர்வு கொண்டு அவர்கள் சொல்வதையெல்லாம் நமக்குள் பதிவு செய்து கொள்கின்றோம்.

ஆக ஜாதகத்தின் பலன் கொண்டு நல்ல பெண்ணாகவும் குணவதியாக இருப்பினும் அதை நாம் “ஏற்க மறுக்கின்றோம்”.

செவ்வாய் தோஷம் இருப்பதனால்
1.தாய் இறந்து விடுவார் தந்தை இறந்து விடுவார்.
2.இங்கு குடும்பம் நலிந்து விடும்
3.இந்தச் செவ்வாய் தோஷத்தால் குடும்பமே சாபமாகிவிடும் என்பார்கள்.

ஆனால் நற்குணவதியும் நல்ல குணங்களும் நல்ல பேணிக் காக்கும் நிலையும் சிறந்த நிலைகள் இருப்பினும் அதை நாம் ஏற்க மறுக்கின்றோம்.

எதனால்…?

“ஜாதகத்தால்”.

இதைப் போன்ற நிலைகளை விடுத்து நாம் நமது வாழ்க்கையில் அருள் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் எடுத்துக் கொண்டால் நமக்கு “எந்தத் தோஷமும்… இல்லை”.

1.நான் எண்ணியது தான் தோஷம்.
2.நமக்குள் பதிவு செய்ததே தோஷம்

இந்தத் தோஷங்களைப் பதிவு செய்யாது அருள் ஞானியின் உணர்வை ஆழமாகப் பதிவு செய்து இத்தகைய தீமைகளிலிருந்து விடுபட்டு நம் எண்ணத்தில் மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவோம் என்று எண்ணுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று இருளைப் போக்குவோம். பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறனைப் பெறுவோம் என்று எண்ணுங்கள்.

ஆலயங்களுக்குள் செல்லும்போது எத்தனையோ பேர் அங்கே வந்தாலும் இந்த ஆலயம் வருவோர் அனைவரும் இத்தகைய தீமைகளிலிருந்து விடுபட்டு அருள் ஞானம் பெற்று அவர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

நமக்குள் இருக்கும் வேற்றுமைகளையும் பகைமைகளையும் நீக்கி  என்றும் ஒற்றுமையுடன் வாழும் உணர்வைத்தான் ஆலயத்தில் காட்டப்பட்டது.


ஆகவே, நாம் நம் மனதைப் பண்படுத்துவோம். அருள் மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு பண்பட்ட வாழ்க்கையாக வாழ்வோம்.

April 29, 2017

பின்னாடி வருவதை முன் கூட்டியே தெரிந்து செயல்படும் அனுபவமாக திருப்பதி பள்ளதாக்கில் நீர் வீழ்ச்சியில் நடந்த நிகழ்ச்சி

நாங்கள் தியானம் செய்கிறோம்!” என்று சொல்லிவிட்டு சிலர் என்ன செய்கின்றார்கள்? என்னை அவன் இப்படிப் பேசினானே.., அப்படிப் பேசினானே நான் எத்தனை நாளைக்குத்தான் அதைப் பொறுத்துக் கொண்டு இருக்கிறது..?

கடன் வாங்கிச் சென்றவன் கொடுக்க மாட்டேன் என்கிறானே, எத்தனை நாள் தான் பொறுத்துக் கொண்டிருப்பது?

ஏனென்றால் நாம் எண்ணியதைத்தான் உயிர் இயக்குகின்றது.., உருவாக்குகின்றது. கண்கள் அதன் வழி காட்டுகின்றது.

தீமைகள் உங்களுக்குள் இயங்காது தடுப்பதற்குத்தான் அரும் பெரும் சக்தியைக் கொடுக்கின்றோம். ஆனால் “தியானம் செய்கின்றோம் என்று ஒரு சொல்லில் நிறுத்துகின்றார்களே தவிர அதைப் “பயன்படுத்தும் நிலை இல்லை.

இப்பொழுது இதையல்லாம் நீங்கள் வசதியாக உட்கார்ந்து கேட்கின்றீர்கள். படிக்கின்றீர்கள்.

என் குருநாதர் என்ன செய்வார் தெரியுமா?

பல தொல்லைகளான இடங்களுக்குப் போகச் சொல்வார். அங்கே போனவுடனே என் உடலில் பதட்டம் வருகின்றது, பயம் வருகின்றது.

1.அப்பொழுது அதை அடக்குவதற்கு உன்னால் முடியவில்லை என்றால்
2.அது தானே உன்னை ஆட்சி புரிகிறது என்பார்.
3.அதையெல்லாம் நீ அடக்க வேண்டும்.
4.உள்ளுக்குள் போய் உன்னைப்  பயப்படச் செய்வது யார்?
5.வெளியில் இருந்துதானப்பா உன் உடலுக்குள்  போகின்றது. அதை நீ தடுத்துப் பழக வேண்டும் அல்லவா.
6.அதைத் தடுப்பதற்கு உனக்கு நான் ஆயுதத்தைக் கொடுத்திருக்கின்றேன். நீ ஏன் அதைத் தடுக்கவில்லை?
7.தடுக்கவில்லை என்றால் “அது அந்த வேலையைத்தான் செய்யும் என்கிறார் குருநாதர்.

திருப்பதியில் ஒரு இடத்தில் தண்ணீர் (நீர் வீழ்ச்சி) கீழே விழுந்து போகின்றது. பள்ளத்தாக்கு மாதிரி இருக்கின்றது. இடையில் ஒரு குகை இருக்கின்றது. அங்கே போகச் சொன்னார் குருநாதர்.

இந்தக் குகைக்குள் போகவேண்டும் என்றால் ஒரு கயிறு கட்டித்தான் போக முடியும். அதற்கு மாறாக அங்கே மரத்தின் விழுதுகள் இரண்டு மூன்று இருக்கின்றது.

என்னிடம் ஏது கயிறு? அந்த விழுதைப் பிடித்துத்தான் போக வேண்டும். “இந்த விழுதைப் பிடித்துக் கொண்டு இறங்கிப் போடா,” என்கிறார் குருநாதர்.

போகும் பொழுது நான் என்ன செய்துவிட்டேன்! ஒரு பலவீனமான விழுதைப் பிடித்துவிட்டேன். அது என்ன செய்கின்றது? என் காலை அந்தப் பெரு விரலை வைத்தவுடன் அறுந்துவிட்டது.

அறுந்தவுடன் அங்கே விரிசல் விழுகின்றது. அப்பொழுது மனது இங்கே பதறுகின்றது.., “அந்தச் சந்தர்ப்பம். அப்பொழுது பதட்டம் வரும்போது “பிடிப்பை விட வேண்டி வருகின்றது.

அப்புறம் என்ன செய்தேன்?

மன உறுதி கொண்டு…” அடுத்துப் பெரிய விழுதைப் பிடிக்க முயற்சி செய்கிறேன். மற்றொன்றைப் பிடிக்கிறேன். பிடித்து அந்தக் குகைக்குள் போய்விட்டேன்.

அன்று அரசர் காலங்களில் எதிரிகளிடமிருந்து தப்ப வேண்டும் என்று வரக்கூடிய அரசர்கள் அந்தக் குகைக்குள் வந்து மறைந்து கொள்கின்றார்கள். மறுபடியும் இங்கிருந்துதான் திருப்பதிக்குப் போகின்றார்கள். அந்தப் பாதைகள் இருக்கின்றது.

மற்ற அரசர்கள் தேடி வந்தால் இவர்கள் தப்பிப் போகக்கூடிய நிலைகளாக அது இருந்தது. உள்ளுக்குள் நுழைந்து குகைக்குள் போய் மாடியில் தங்கிக் கொள்கின்றார்கள்.

அந்த இடத்தில் வெறும் விழுது தான் தெரிகின்றது. ஒரு கயிறு போட்டால் கூடத் (குகை இருப்பது) தெரிந்துவிடும்.

ஆனால் அதற்குள் இருந்துதான் நீர் வருகின்றது. இப்படிப் போய்விட்டோம் என்றால் மலைக்கு மேலே போயிடலாம். இதற்குள் போய்விட்டோம் என்றால் தண்ணீர் வரக் கூடிய பாதைதான்.

அதனால் தான் முதலில் விழுது அறுந்தவுடன் பயம் வருகின்றது. அப்புறம் அந்த தைரியத்தை வரவழைக்கும் போது அந்த விழுதைப் பிடித்துக் குகைக்குள் போனேன்.

குகைக்குள் போனவுடன் நான் உள்ளே சென்றுவிட்டேன். விழுதை விட்டுவிட்டேன்.

1.விழுதைப் பிடித்து உள்ளுக்குள் போனேன்.
2.திரும்பி வரவேண்டும் என்றால் என்ன செய்வது?
3.விழுதோ வெகு தூரத்தில் இருக்கின்றது. இதை எப்படிப் பிடிப்பது?
4.அப்பொழுது மன உறுதி இழந்து விட்டேன்.
5.விழுது வெகு தூரத்தில் இருந்தால் எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் கீழே அதல பாதாளத்தில் விழுந்து விடுவோம் என்று சிந்தனை வந்துவிட்டது.
5.நொடிக்கு நொடி மனித உணர்வுகளை நாம் சுவாசிக்கும் போது நமக்குள் அந்தச் சந்தோஷம் என்ற நிலைகள் எப்படிப் போகின்றது?
6.பயம்.., என்ற “அரக்க உணர்வுகளுக்குச் சென்றவுடன் அது எப்படி நம்மைப் பலவீனபடுத்துகின்றது?
7.நல்ல சிந்தனைகளை எப்படி இழக்கச் செய்கின்றது..?

இப்படித்தான் எனக்கு அனுபவம் கொடுத்தார் குருநாதர்.

அப்புறம் என்னாகிவிட்டது? வேறு வழியே இல்லை அணிந்திருந்த வேஷ்டியைக் கிழித்தேன். கயிறு மாதிரிச் செய்தேன்.

நான் இருக்கும் இடத்தில் தேடுகின்றேன். அங்கே வேறு ஒரு பொருளும் இல்லை. சிறிய கல் இருந்தது. அந்தக் கல்லை எடுத்து வேஷ்டியில் ஒரு முனையில் முடிஞ்சி கயிறு மாதிரி நல்லா திரித்துக் கொண்டேன். அந்த நேரத்தில் “ஒரு சிந்தனை வந்தது.

அதை இலாவகமாக அப்படியே வீசினேன். தூரத்தில் இருந்த விழுதில் அந்தக் கல் அடித்தவுடன் அப்படியே சுற்றிக் கொண்டது.

அப்படியே மெதுவாக இழுத்துக் கையில் பிடித்துக் கொண்டேன். அதைப் பிடித்து இந்தப் பக்கம் வந்து சேர்ந்தேன்.

முதலில் உள்ளே போகத் தெரிந்தது ஆனால் வரத் தெரியவில்லை. ஆனாலும் இந்த வேஷ்டி இல்லாமல் வெறும் ஜட்டி போட்டுக் கொண்டு போனால் என்னாகும்? ஆபத்து தான்.

இதையெல்லாம் ஒவ்வொரு இடங்களிலும் மனிதனின் உணர்வுகளின் இயக்கங்கள் எப்படி இருக்கின்றது என்பதற்குத்தான் இந்த அனுபவம்.

ஏனென்றால் குருநாதர் அங்கே அரசர்கள் தங்கும் குகை இருக்கின்றது. நீ இதைப் பார்க்க வேண்டும் என்று ஆசையை ஊட்டுகின்றார். அந்தக் குகைக்குள் “என்னென்னெமோ இருக்கின்றது! என்று  காட்டுகிறார்.

அதன் வழியில் நான் போகின்றேன்.

முதலில் பிடித்த விழுது பலவீனமானது என்று சிறிது கவனமாகப் பார்த்திருந்தால் அது அறுந்திருக்காது.

அடுத்த விழுதை மறுபடியும் பிடித்து உள்ளுக்குள் போகத் தெரிந்தது. ஆனால் உள்ளே சென்றவுடன் அந்த விழுதை முதலில் எங்கேயாவது ஓரத்தில்  நிறுத்தி வைத்திருக்க வேண்டும் அல்லவா.

விட்டு விட்டால் போய்விடுகிறது. அப்பொழுது என்ன செய்வது? அதற்குண்டான உபாயம் “முன் சிந்தனை இல்லாது போகின்றது.

இதைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

1.அப்படி இல்லாது என் குருநாதர் உள்ளுக்குள் போகச் சொன்னார்.
2.போகச் சொல்லி வசமாகப் இப்படி சிக்க வைத்து விட்டார் என்று எண்ணினால் எப்படி இருக்கும்?
3.குருவையே நிந்திக்கக்கூடிய நிலை தான் வரும். அப்புறம் “வலு…” எங்கிருந்து கிடைக்கும்?
4.குரு வழி காட்டுகிறார். அப்பொழுது அந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற நிலையில் அவரை எண்ணி இதிலிருந்து மீட்டிடும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணினால் அந்தத் தெளிவு அனுபவமாகக் கிடைக்கும்.

இது தான் என்னுடைய அனுபவம்.

அவர் சொன்ன நிலையில் அந்த குகையிலே தியானித்தேன். உள்ளே அரசர்கள் ஒளித்து வைத்த விலை உயர்ந்த எத்தனையோ பொருள்கள் நிறைய இருக்கின்றது.

பல விதமான சுரங்கங்கள் போகின்றது. ஒரு இடத்திற்கு மேல் போகப்படும்போது அதற்கு மேலே “நீ போக வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

இதே தண்ணீர் மாதிரி தான் இருக்கும். அந்தத் தண்ணீருக்குள் முக்குளித்துப் போக வேண்டும். கிணறு மாதிரி இருக்கும். கிணற்றுக்குள் முக்குளித்துப் போனால் அங்கே ஒரு குகை இருக்கும்.

அதற்கு மேலே போனால் மேடாக இருக்கும். தெரிந்தவன்தான் அங்கே போக முடியும். தெரியாதவர்கள் போக முடியாது. இனிமேல் நீ போக வேண்டாம் என்றார் குருநாதர்.

ஆனால் அன்று அந்த அரசர்கள் தன் எதிரியிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக எந்தெந்த வகை எல்லாம் செய்து வைத்திருக்கின்றார்கள் என்று “பார் என்று காட்டுகின்றார்.

ஒவ்வொரு அரண்மனையிலையும் வாய்க்காலை வெட்டி வைத்துத் தண்ணீரை விடுகிறார்கள். அதிலே முதலைகளைப் போட்டு விடுவார்கள்.

நீர் ஓடை இருக்கும் இடத்தில் தான் ஒவ்வொரு அரண்மனையும் கட்டியிருப்பார்கள். அங்கே இருக்கும் அத்தனை பேருக்கும் தண்ணீர் வேண்டுமல்லவா.

ஆறு பக்கத்திலிருந்தால் நீர் எளிதில் கிடைக்கும் அல்லவா.

அதே சமயத்தில் மலைப்பாங்குகளில் செயல்படுத்தப்படும் போது மலையிலேயும் சில குகைகளில் அந்த நீர் ஊற்று இருக்கும்.

ஒரு மழை பெய்தது என்றால் ஒரு வருடத்திற்கு வேண்டிய  தண்ணீரை அங்கே எடுக்கலாம். ஏனென்றால் இவ்வாறு அரசனுக்கு ஆலோசனை சொல்லக்கூடியவர்கள் உண்டு.

காற்றோட்டத்திற்காக வேண்டி நாம் வீடுகளில் ஜன்னல் வைத்திருக்கின்றோம். ஜன்னல் வழியாக நேரடியாகப் பார்க்கலாம்.

ஆனால், அந்தக் குகைகளில் பார்த்தால் வெளியில் இருக்கும் மனிதரை நாம் பார்க்க முடியாது. குகைக்குள் இருப்பவரை வெளியில் உள்ளவர்கள் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு அதில் சந்து விட்டிருக்கின்றார்கள்.

சந்து வழியாக வெளிச்சம் வந்தவுடன் அதிலே பாதை தெரிகின்றது. அதே சமயத்தில் அந்த வெளிச்சம் எதிரிக்குத் தெரியாத மாதிரி இங்கேயே ஒரு பட்டன் மாதிரி வைத்திருக்கின்றார்கள்.

தெரியாதவர்கள் உள்ளுக்குள் வர முடியாதபடி வெளிச்சத்தை அடைத்து விடுகின்றார்கள். பாதை தெரியாது. இந்த மாதிரி எல்லாம் அரசர்கள் செய்து வைத்துள்ளார்கள்.

காற்று “ஜம் என்று ஜிலு ஜிலு என்று வருகிறது. ஆனால் அடுத்தவர்கள் பேசுவதை நாம் அறிந்து கொள்ளலாம்.


இந்த மாதிரி அரசர்கள் இராஜதந்திரமான நிலைகளை அரசு ஆட்சி புரிந்தாலும் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்கு “எத்தனை அவஸ்தைப்பட்டு வாழ்ந்தார்கள் என்பதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.

April 28, 2017

பராசக்தி குளிக்கும் குளத்தில் வேறு ஆண்கள் குளித்தால் “பெண்ணாக மாறுவார்கள்” என்ற சாபம் உள்ளது – காவியத்தின் கருத்தின் விளக்கம்

ஆனால் அவர் குளித்த அந்தக் குளத்தில் வேறு யாராவது ஆண்கள் குளித்தால் அது பெண்களாக மாறிவிடுவார்கள் என்று சாபமிட்டதனால் “அந்தக் குளத்தில் யாரும் ஆண்கள் குளிப்பதில்லை.

இப்படிக் காவியப் படைப்பைப் படைத்து அந்தக் கருத்தினை நாம் தெரிந்து கொள்வதற்காகத் தெளிவாக்குகின்றனர்.

குரங்கு அது தாவிச் செல்லும் நிலையானாலும் அந்தக் குளத்தில் விழுந்து விட்டது. இது ஆண் குரங்காக இருப்பதனால் அந்தக் குளத்தின் உணர்வுகள் இதன் மேல் பட்டுப் பெண்ணாக மாறி விடுகின்றது.

ஏனென்றால் நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் இது ஒரு பெரிய குளம்.

அதிலே நாம் பிறர் படும் கஷ்டங்களையோ வேதனைகளையோ நுகரப்படும் போது நாம் அதிலே விழுந்து விடுகின்றோம் என்பதனை உணர்த்துவதற்காக காவியத் தொகுப்புகளைத் தெளிவாக் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.

இப்படி விழுந்த குரங்கு பெண்ணாக மாறிவிடுகின்றது. பெண் என்றால் சக்தி என்று பொருள். ஆகவே அது தனக்குள் கருவாக்கும் தன்மை பெற்றது என்பதனை உணர்த்துகின்றனர்.

நமது பிரபஞ்சத்தில் நமது பூமிக்குள் இத்தகைய விஷத்தன்மை பெரும் குளமாக இருக்கின்றது. அந்த உண்மைக்கு மாறான நிலைகள் நடப்பவைகளைப் பார்த்து நாம் விழுந்து விட்டால் எப்படி மாற்றம் அடைகின்றது என்பதனைத் தெளிவாக்குவதற்காக ஒரு காவியமாகப் படைத்தனர் ஞானியர்கள்.

நம்மை அறியாமலே பிறருடைய நிலைகளைப் பார்த்து அந்த உணர்வுகள் நமக்குள் பட்டபின் “இப்படி வேதனைப்படுகின்றானே..,” என்று (குளத்தில் பட்டால்) அவன் உணர்வை நாம் எடுத்தால் இந்த உடலுக்குள் என்ன ஆகின்றது?

நாம் பல வேதனைகள் படுகின்றோம் என்பதனைக் காட்டுகின்றனர்.

இப்படிப் பெண்ணாக மாறியபின் அதைக் கண்டு ரசிக்கின்றனர். யார்? வாயு. அதைக் கண்ட பின் எப்படியும் அதனின் அழகைக் கண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் அதனை அணைத்துக் கொள்ள வேணடும் எனறு விரும்புகின்றது.

வாயு என்பது நாம் நுகர்வது வாயு (சுவாசக் காற்று), அதன் உணர்வின் தன்மை இங்கே நம் உடலுக்குள் சென்றபின் உமிழ் நீராக மாறுகின்றது.

வாயுவுனுடைய நிலைகள் எந்த குணத்தின் உணர்வோ அதனை எண்ணும்போது “அதிலே உருவான கரு தான் என்ற நிலைகளைக் காட்டுகின்றனர்.

வேதனைப்படுபர்களைப் பார்த்து அந்த வேதனையான உணர்வை நாம் சுவாசிக்கும் போது நுகர்ந்த உணர்வுகள் வேதனை என்ற உணர்வைக் “கருவாக்கும் உமிழ் நீராக மாறுகின்றது.

இதை மாற்றி அமைப்பதற்காக “இந்திரன்..,” இரண்டாவது வருகின்றான். இந்த அழகைக் கண்டு தானும் ஆசைப்பட்டு அதை அடைய விரும்புகின்றான்.

1.“இந்திரன் என்றால் உருவாகும் உணர்வுகள்.
2.உமிழ் நீராக மாறி அது இந்திரீகமாக மாறுகின்றது.
3.இந்திரீகமாக மாறப்படும் போது அந்த வேதனை என்ற உணர்வுகள் உடலுக்குள் அணுக்களாக எப்படி உருவாகின்றது?
என்ற நிலையைக் காட்டுகின்றனர்.

இதையெல்லாம் நாம் புரிந்து கொள்வதற்காகக் காவியத் தொகுப்புகளில் தெளிவாக்கியுள்ளார்கள்.

இதையெல்லாம் எதற்காகச் சொல்கின்றேன்? நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களை எல்லாம் நேராக துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்லுகின்றேன்.

இந்த உணர்வை எடுத்து எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம் உடலில் எளிதில் சேர்த்துக் கொள்ள இது உதவும்.

உமிழ் நீராக ஆனதால் இந்திரன் என்றால் அவனுக்கும் இரண்டு பேருக்கும் (வாயு, இந்திரன்) சேர்த்துப் பிறந்தது தான்.

ஆகவே வேதனைப்பட்ட உணர்வுகள் வாய்வு. நமக்குள் நுகர்ந்த பின் அது உமிழ் நீராக மாறுகின்றது.

பின் இந்திரன் என்ன செய்தான்? அதன் உணர்வு கொண்டு அதன் ஆசையிலேயே தான் (உடலாக) உருவாக்கும் தன்மை வந்து விடுகின்றது என்பதனைக் காட்டுகின்றனர்.

ஏனென்றால் வேதனைப்படுவதை நாம் உற்றுப் பார்த்து விரும்பித்தான் எடுக்கின்றோம். ஆகவே.., அப்பொழுது நாம் ஆசைப்படுவது எதுவாக இருக்க வேண்டும்?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் பெறவேண்டும் என்று அதை ஆசைப்படுதல் வேண்டும்.

ஏனென்றால் வேதனையை நுகருகின்றோம். வாயுவாகின்றது. நம் உடலுக்குள் வரும்போது வாலியாகிவிடுன்றது. அந்த வலுவின் தன்மை உமிழ் நீராக மாறுகின்றது.

அந்த வலிமையான நிலைகளை மாற்றியமைப்பதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்.

இதைப் போல் அந்தத் தீமைகளை நீக்கிய உணர்வை ஒளியாக மாற்றிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அது பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வை நாம் சுவாசிக்க வேண்டும். அது நமக்குள் கலந்து நம் உயிரிலே படுகின்றது.

நாம் குழம்பு வைக்கும் போது உப்பு புளி காரம் என்று பல பொருள்களைச் சேர்த்துச் சுவையாக மாற்றுவது போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று இப்படி அதை இணைத்துக் கொள்ள வேண்டும்.

இணைத்தால் அந்த வேதனைகளைத் தடுத்து விடுகின்றது. வேதனைப்படும் உணர்வுகள் அணுவாக உருவாகாதபடி தடைப்படுத்துகின்றது.

இப்படி நம் உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேருளைப் பெறவேண்டும் என்று செலுத்தப்படும் போது
1.இங்கே புருவ மத்தியில் அந்த உயிரின் நிலைகளில் உள்ளே செல்லாது தடுப்பதும்
2.நம் உடலுக்குள் இரத்தத்தில் கலந்தபின் அந்த விஷத்தின் தன்மை நுகராது தடுப்பது தான் இந்த உண்மையான நிலைகள்.
3.தியானம் என்பது முறைப்படி இது தான்.

நம்முடைய சகஜ வாழ்க்கையில் பிறர் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம். பார்த்தபின் அவர்களை நல்லதாக்க வேண்டும் என்ற ஆசையில் அவர்களுக்குப் பொருளால் உடலால் வேண்டிய உதவிகளைச் செய்து நல்லதாக்கி விடுகின்றோம்.

ஆனால் நாம் நுகர்ந்த தீய உணர்வுகள் அதனுடைய வலிமையான நிலைகள் நமக்குள் நோயாக வந்து விடுகின்றது. அந்தத் தீமைகளை நுகர நேர்ந்தாலும் தீமையின் உணர்வுகள் நமக்குள் பெருகாது தடைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதைப் போன்ற நிலைகளில் நம் வாழ்க்கையில் நம்மை அறியாமல் சேரும் தீமைகளை “நாம் தடைப்படுத்துவதற்குத் தான் ஞானிகள் இப்படி காவியங்களைக் கொடுத்துள்ளார்.


இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.