ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 31, 2015

ஞானகுருவின் பொன்மொழிகள் - March 2015

31.03.2015
எவ்வளவு உயர்ந்த சித்துக்களை அறிந்தவராக இருப்பினும் அல்லது செல்வம் கொண்டவராக இருப்பினும் அவர் தம்மைச் சூழும் நஞ்சான தீமைகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியாது.

எவர் ஒருவர் சப்தரிஷிகளின் அருள் துணை கொண்டு தமது உணர்வை ஒளிபெறும் உணர்வாக வளர்க்கின்றனரோ அவரே தம்மைச் சூழும் நஞ்சான தீமையிலிருந்து விடுபட முடியும்.
30.03.2015
பண்படுத்திய நிலத்தில் பயிர் செழித்து வளரும்.
மகரிஷிகளின் அருள் உணர்வு பதித்த மனத்தில் ஞானம் செழித்து வளரும்.
27.03.2015
ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்கும் தன்மை பேரண்டத்தில் இல்லையென்றால் இந்தப் பிரபஞ்சம் இல்லை.

அதே போல் மனிதனின் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் சகோதர உணர்வுடன் வாழவில்லை என்றால் மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை.
26.03.2015
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதைப் போன்று நமது ஆன்மாவில் பதிந்துள்ள உணர்வின் மணம் நமக்கு முன்னே சென்று நம்மைப் பார்க்கின்றவரின் உணர்வில் கலந்து நமது உணர்வின் தன்மையை அவருக்கு உணர்த்துகின்றது.
25.03.2015
நாம் எதை எண்ணுகிறோமோ அந்த உணர்வின் அலைகள் நம் உடலைச் சுற்றிக் கவசமாக இருக்கும். ஆக, அதுதான் முன்னாடி இருந்து நம்மைச் சுவாசிக்கச் செய்து எந்த குணத்தில் நாம் இருந்தோமோ அந்த குணத்தைப் பாதுகாக்க அதன்வழி ஞானத்தைக் கொடுக்கும்.
24.03.2015
லௌகீக வாழ்க்கையில், பாசம் மனிதனைத் துன்பத்துள் ஆழ்த்தும்.

ஆன்மீக வாழ்க்கையில், பாசம் பெருவீடு பெருநிலைக்கு அழைத்துச் செல்லும்.
23.03.2015
ஆற்றல்மிக்க சக்தியான அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நெருப்புக்குச் சமம். அவர்கள் உணர்வின் எண்ணங்கள் எதிலும் ஊடுருவி எதையும் சாதிக்கவல்ல வல்ல்மை பெற்றவை. அந்த வல்லமையான சக்தி அவர்கள் வாழ்ந்த காலத்தில் இட்ட மூச்சலைகளை சிறுகச் சிறுக நாம் பெற்று அந்த உணர்வின் சத்து கொண்டுதான் நமக்குள் வளரவேண்டும்.

இன்றைய விஞ்ஞான உலகில் நாளைக்கு வரக்கூடிய விஷத் தன்மையிலிருந்து இந்தக் குறுகிய காலத்தில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து நம்மைக் காத்து, நம் உயிரான்மாவைக் காத்து நாம் விண்வெளி செல்ல வேண்டும்.
22.03.2015
தன் உடலைக் காக்கும் எண்ணத்தாலே பரிணாம வளர்ச்சியில் மனிதப் பிறப்பைப் பெற்றோம்.

இந்த மனிதப் பிறப்பில் தன் உயிராத்மாவைக் காக்கும் உணர்வை வளர்த்து ரிஷி நிலை பெறுவோம்.
21.03.2015
ஒரு மனிதன் சந்தர்ப்பத்தால் இன்னொரு உடலுக்குள் சென்றால் குழந்தையாகப் பிறப்பதில்லை. அந்த உயிரான்மா மீண்டும் மனிதனாகப் பிறக்காதபடி மற்றொரு உடலை அடைந்துவிடுகிறது. அப்படி மிருக நிலை அடைந்துவிட்டால் அவர்களை நாம் தியானித்தால் கூட விண் செலுத்த முடியாது.
ஆனால், பழிதீர்க்கும் உணர்வுடன் இந்த உயிராத்மா வேறொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் அந்த உயிராத்மா வெளியில் வந்தபின் நாம் அடிக்கடி வாரத்திற்கொருதரம் கூட்டுத் தியானமிருந்து இறந்தவர்களின் உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று தியானித்து உந்தித் தள்ளி விண் செலுத்த முடியும்.

வெளியில் வந்தபின் இன்னொரு உடலுக்குள் சென்றுவிட்டால் ஒன்றும் செய்யமுடியாது. அந்த உடலின் நிலையே அதனுடைய கதி. மீண்டும் அவர்கள் மனிதனான நிலைகளில் அடிபட்டுத்தான் வரவேண்டும்.
20.03.2015
குரு அருள்கின்ற வாக்கு வித்தாக நம்முள் பதியும் என்பதை நாளும் பேணி வளர்க்க அது நலம் தரும் ஒளியின் தன்மையாக நமது உயிரில் விளையும்
19.03.2015
மனிதனாகப் பிறப்பது அரிது. மிக அபூர்வம்.

அனைத்தும் அறிந்துணர்ந்து செயல்படும் ஆற்றல் தியானவழிகளில் கிடைத்தும் மகரிஷிகளின் அருள் ஒளியை மற்றும் இயற்கையின் பேருண்மைகளை அறிந்துணர்ந்த பின்பும் நாம் இந்தச் ச்ந்தர்ப்பத்தை நழுவவிடாது இநத உடலிலிருந்தே உயிரைப் போன்றே ஒளியின் தன்மை பெற்று ஒளி சரீரம் பெறும் தகுதியைப் பெறவேண்டும்.
18.03.2015
நாம் வீட்டை எவ்வளவுதான் சுத்தப்படுத்தினாலும் குப்பைகள் சேர்ந்துவிடும். அதே போன்று வெள்ளைத் துணியை நாம் போட்டிருந்தாலும் அதில் சேரும் அழுக்கைத் துவைக்கவில்லை என்றால் வெள்ளை வராது. அழுக்கு அதிகாகச் சேர்ந்தபின் அதைத் துவைத்தாலும் துணி கிழிந்துவிடும்.

அது போன்று நம் வாழ்க்கையில் இன்னல்கள், துன்பங்கள் தீமையான உணர்வுகள் வரும்பொழுதெல்லாம் ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்திப் பழகவேண்டும்.
17.03.2015
சொர்க்கபூமியான இந்த உடலில் நாம் ஒவொரு நிமிடமும் நரகலோகமான நிலையை அனுபவிக்க வேண்டியுள்ளது.
நம்மை யாரும் திட்ட வேண்டாம்; இம்சைப்படுத்த வேண்டாம். நாம் எடுக்கும் இந்த உணர்வின் அலைகளே நம் உடலுக்குள் வேதனையை உருவாக்கிவிடுகின்றது.

ஆதலால், முறைப்படி ஆத்மசுத்தியை எடுத்து ஒரு ஆயுதமாகக் கடைப்பிடித்துக் கொள்ளுங்கள்.
16.03.2015
மற்றவர்கள் நம்மை வெறுத்துப் பேசும் உணர்வுகள் அதையே நாம் சுவாசித்துக் கொண்டிருந்தோம் என்றால், நாம் வீட்டில் அமர்ந்திருக்கும் பொழுது நம் உடலிலிருந்து வெளிப்படும் இந்த வெறுப்பின் உணர்வின் சத்தை நம் வீட்டிலிருக்கும் தரை, சுவர் ஈர்த்துக் கொள்கின்றது.

இப்படி வெளிப்படுத்தும் அந்த உணர்வின் சத்தை, வெளிப்படுத்தும் அந்த அலைகள் வீட்டில் படர்ந்து நம்மையறியாமல் சங்கடத்தையும், சோர்வையும் நமக்கு ஏற்படுத்தும்.
15.03.2015
தொடர்ந்து சீராகத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் அனைவரும் தங்களைச் சுற்றிலும் நல்ல நறுமணங்கள் படர்வதை உணரமுடியும்.

அதே போன்று இரவில் தூக்கத்தில் இருக்கும் பொழுது திடீரென்று விழிப்பு வரும் பொழுது உங்களுடைய உடலிலிருந்து “பளீர்” என்று ஒளி வீசுவதைக் காண முடியும்.
14.03.2015
ஒரு செடி பிறிதொரு செடியின் மணத்தைத் தன்னருகில் நெருங்கவிடாது.

அதேபோன்று மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நம்முள் வளர்த்துவிட்டால் அது தீய உணர்வுகளை தீய எண்ணங்களை நம் அருகில் நெருங்கவிடாது.
13.03.2015
ஆண்டவனை ஜெபித்துக் கொண்டேயிருந்தால் நமக்குக் கொடுப்பான் என்றால் முடியாது. ஆண்டவன் உயிராக இருந்து நம்மை ஆண்டு கொண்டிருக்கின்றான்.
அவனுக்குள் நாம் எந்த உணர்வின் சக்தியைச் சேர்க்கின்றோமோ அந்தச் சத்துக்கொப்பதான் நம்மை ஆளுகின்றான்.
ஆகவே, இந்த உயிரின் தன்மை இருக்கும்பொழுதே மெய் ஒளியின் தன்மையை வளர்த்து, இந்த உணர்வின் ஒளியை நம் உயிருடன் சேர்த்துத்தான் ஒளியாக மாற்ற முடியும்.
12.03.2015
இந்த வாழ்க்கையில் நாம் பல மந்திர தந்திரங்களைக் கற்கவேண்டும் என்று எண்ணினாலும், அதிலே தன்னைப் பெரிய மனிதனாகக் காட்டவேண்டும் என்று நினைவைச் செலுத்தினாலும் அதன்வழி இட்டுச் செல்லும். 
இந்த உடலுக்குப் புகழ் தேடும். ஆனால், புகழுக்குள் மறைந்து நாம் எடுத்த உணர்வின் தன்மை உடலுக்குள் வேதனையைத் தான் கொடுக்கும்.
11.03.2015
கோவில்களில் காளி மாரி சரஸ்வதி என்று உருவம் அமைத்து கையிலே திரிசூலத்தை வைத்துக் கதைகள் எழுதியிருப்பார்கள். நாம் பார்த்திருப்போம்.
திரிசூலத்திற்குள் இருக்கக்கூடிய சக்தியின் தன்மைகள் ஒன்று ஈர்ப்பு சக்தி. மையத்திலிருக்கக்கூடியது வெப்பசக்தி. இது ஈர்த்துத் தனக்குள் அணைத்து தான் சேர்த்துக் கொண்ட சத்தான நிலைகள் ஞானம் என்று மூன்றும் சேர்த்து இயக்கசக்தி.
முதலில் லட்சுமி, வெப்பம் அதற்கடுத்து நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை ஞானம். இதற்குப் பெயர்தான் திரிசூலம்.
10.03.2015
நமக்குள் நல்ல உணர்வுகளைச் சுதந்திரமாக இயங்கவிட வேண்டும். வெறுப்பு, வேதனை, கோபம், குரோதம் போன்ற நஞ்சான உணர்வுகளுக்கு நமது நல்ல உணர்வுகளை அடிமைப்படுத்திவிடக் கூடாது.
09.03.2015
கொன்றால் பாவம் தின்றால் போகும் என்பார்கள். இது தவறு.

தின்றது எந்த ஜீவனின் மாமிசமோ அதனின் உணர்வின் மணம் தின்றவரின் உடலில் இணைகின்றது. அதனின் உணர்வின் மணத்தை அவர் தனக்குள் அதிகமாக்கியபின் அவருடைய உடலைவிட்டுப் பிரியும் உயிரான்மா நேராக அந்த ஜீவனின் ஈர்ப்பிற்குச் சென்று, அந்த ஜீவனின் ரூபமாக சரீரம் பெறுகின்றது.
08.03.2015
உயிரின் ஈர்ப்பில் பல பல உணர்வுகளே சேர்ந்து உடலாகி உயிரின் இயக்கத்தால் உடலின் உணர்வுகள் ஆத்மாவாக இயங்கி இந்த உணர்வின் ஆற்றலே எண்ணம் சொல் செயல் ஆகின்றது.
07.03.2015
மரண பயத்தை வென்றவர்கள் மரத்தை வென்றவர்கள் ஆவார். அவர்கள் மரணமில்லாப் பெருவாழ்வை மட்டுமே எண்ணியவர்கள்.
06.03.2015
ஆதியில் பேரண்டத்தில் பரவியிருந்த ஆற்றல்கள் சக்தி. ஆற்றல்களின் தொடர் கொண்டு உருவான பொருள் பரமசிவம். சிவமான பொருளிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் மற்றொன்றுடன்  மோதி புதுப் பொருளாக புது ஆற்றலாக உருவாகின்றது.
இப்படிச் சக்தியின் துணை கொண்டு சிவமும், சிவத்தின் துணை கொண்டு சக்தியும் பேரண்டத்தில் வளர்ச்சி நிலை கொண்டு புதுப் புது நிலைகளாக வெளிப்படுகின்றன.
சக்தியும் சிவமும் ஒன்றுக்கொன்று துணை கொண்டு வளர்ச்சி பெறுவதால் ஞானிகள் சக்தியில்லையேல் சிவமில்லை. சிவமில்லையேல் சக்தியில்லை என்று காவியங்களில் உரைத்தார்கள்.
05.03.2015
பேரண்டத்திற்குள் இருப்பதற்கு இல்லாமை கிடையாது. இருப்பவைகள் ஒன்றுடன் ஒன்று மோதி கலந்து இணைந்து புதுப் புது நிலைகளாக மாற்றிக் கொண்டேயிருக்கும்

அனைத்திற்கும் மூலமாக இருப்பது விஷம், வெப்பம், காந்தம், மணம், உணர்வு
04.03.2015
சாபம் என்பது கொடிய விஷம் போன்றது. சாபம் கொடுத்தவரும் கெடுவார். சாபம் பெற்றவரும் கெடுவார்.

காலில் ஏறிய விஷம் தலை வரை பாய்வதைப் போன்று சாபம் பெற்றவர் மட்டுமல்லாது சாபம் பெற்றவரின் வாரிசுகளும் கெட்டழிவர்
03.03.2015
விநாயகர் ஆலயத்தில் அரச மரமும் வேப்ப மரமும் இருக்கும்.
வேப்ப மரம் கசப்பான உணர்வைக் கொண்டது. கசப்பின் தன்மை தன்னுடன் இணைந்த பொருள்களைக் கசப்பாக மாற்றுகின்றது. இதே போன்று வேதனை கொண்ட மனிதந் தன்னைப் பார்த்தோரையும், தன் சொல்லைக் கேட்போரையும் வேதனை கொள்ளச் செய்கிறான்.
அரச மரம் காற்றில் கலந்திருக்கும் சத்தினைத் தன் உணவாக எடுத்து, கடினமான கருங்கல் கட்டிடங்களுக்கு இடையே கூட விளைந்து கட்டிடங்களைப் பிளந்து ஓங்கி வளரும் ஆற்றல் கொண்டது.
இதைப் போன்று, நாம் நம்முள் வேதனைப்படச் செய்யும் உணர்வுகளைச் சிறுக்கச் செய்து அரசைப் போன்று காற்றில் படர்ந்துள்ள மகரிஷிகளின் அருளுணர்வுகளைக் கவர்ந்து நம்முள் ஓங்கி வளரச் செய்யவேண்டும்.
02.03.2015
குரு வழி என்பது உயிர் வழி ஈஸ்வரா என்று நமது உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.
அப்படி எண்ணும்பொழுது இதனின் உணர்வுகள் நமது சுவாசத்தில் கலந்து வரும் தீமைகளை இடைமறித்துத் தடுத்து, தீமைகள் வராது காக்கும் அருளுணர்வுகளை நம்முள் விளையச் செய்யும்.
01.03.2015
நமது உயிர் எலக்ட்ரிக்காக இருக்கின்றது.

நாம் எத்தகைய குணத்தை எண்ணுகின்றோமோ அதனின் உணர்வை நம் உயிர் எலக்ட்ரானிக்காக மாற்றி அதனின் உணர்வின் தன்மை எதுவோ, அதுவாக நமது உடலில் இயக்குகின்றது.

March 30, 2015

பிறர் கஷ்டப்படுவதைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தால் என்ன ஆகும்?

இப்பொழுது நாம் என்ன செய்கிறோம்? வீட்டில் ஒரு கஷ்டம் என்று கேள்விப்பட்டால் என்ன.., ஏது? என்று போய் உட்கார்ந்து கேட்டுக் கொள்கின்றோம்.

அவன் அப்படிச் செய்கிறான்.., இவன் இப்படிச் செய்கிறான்.., என்று சொல்வதைக் காது கொடுத்து நாம் கேட்டால், நம் வீட்டில் உள்ள கஷ்டத்துடன் இதுவும் சேர்ந்து கொள்கின்றது.

அவர் அப்படிக் கஷ்டப்படுகிறார்.
இவர் இப்படிக் கஷ்டப்படுகிறார்.
இந்தப் பாவிகள் இப்படியெல்லாம் தொல்லை கொடுத்திருக்கிறார்கள்.
இப்படித்தான் உலகம் இருக்கிறது என்று இதையே பேசிக்கொண்டு இருப்பார்கள்.

கடைசியில் இரவில் “கண் வலிக்கிறது; கால் வலிக்கிறது; ஏதோ காதிற்குள் குறு..,குறு  என்கிறது என்பார்கள்.

எந்த ஒலியைக் கேட்டார்களோ இந்த உணர்வின் தன்மை இரு நிலை. அடிக்கடி அந்த ஒலிகளை இழுக்கக்கூடிய இந்தக் காது இரட்டிப்பானால் கொய்ங்..,கொய்ங்.., என்று இறையும்.

அடிக்கடி அடுத்தவர்களின் குறைகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தால் அவர்களுக்கு காதில் இரைச்சல் வந்துவிடும். காது மந்தமாக இருக்கிறது என்பார்கள்.

ஏனென்றால் இரண்டு ஒலிகளைக் கவனமாகக் கேட்டதால், ஈர்த்துப் பதிவு செய்திருப்பார்கள். ஒன்றுமே பேசமாட்டார்கள்.  நல்லவர்களாகத்தான் இருப்பார்கள்.
கவலையே பட்டுக்கொண்டிருப்பார்கள்.
இப்படித்தான் இருக்கிறது. அப்படித்தான் இருக்கிறது என்பார்கள்.

ஆனால் காதிலே அந்த உணர்வுகள் ஈர்த்து நாம் பேசக்கூடிய ஒலிகள் இரண்டாகிறது. அதன்பின் காதிலே குயிங்..,குயிங்.., என்று இரண்டு விதமான இரைச்சல் வரும்.

இதற்கு எங்கே போவது? கேட்கப்போனால் அர்த்தமே புரியாது.

ஏனென்றால், இவர்கள் இந்தக் கவலையில் இருக்கிறார்கள். எதையுமே செயல்படுத்த முடியாது. எதைச் சிந்தித்தாலும் செயல்படுத்த முடியாது.

இதையே சிந்தித்தால் கண்ணிலும் அதே அலைகள் வரும். எதைப் பார்த்தாலும் இரண்டாகத் தெரியும்.
ஒருவர் சொன்னால் உடனே அந்த உணர்வுக்கு வெறுப்பு வரும்.
மகிழ்ச்சியுடன் வந்தால் இந்த உணர்வுக்கு வெறுப்பு வரும்.
எல்லாம் இந்த உணர்வினுடைய வேலைகள்.

அதே மாதிரி எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. எனக்கு வியாபாரம் ஆகவில்லை. எனக்கு வியாபாரம் ஆகவில்லை என்று இந்த உணர்வுடன் ஜெபம் பண்ணுகிறோம்.

அங்கே கடையில் அமர்ந்தவுடன், வீட்டில் அப்படிப் பேசுகிறார்கள். இப்படிப் பேசுகிறார்கள் என்று இதையெல்லாம் எடுத்துக் கொண்டவுடன், இந்த உணர்வுகள் அவர்கள் காதில் கேட்கும்.

அந்த உணர்வு அங்கே போனவுடன்
அந்த உணர்வு அங்கே இயங்கி
நம்மிடம் வாங்கிச் சென்ற சரக்கை மட்டமாக்கிவிடுவார்கள். ருசியில்லாமல் போய்விடும்.

அவர்கள் தப்பு செய்தது தெரியாது

அங்கே போய் வாங்கி வந்தேன். மட்டமான பருப்பைக் கொடுத்துவிட்டார்கள் போல் இருக்கிறது என்பார்கள்.

அதே சமயம் மட்டமான சரக்காக இருக்கும். அவர் ஓரளவு நிம்மதியுடன் கொடுத்தால் பருப்பு நன்றாக இருக்கும். அல்லது இரண்டு கடைகளிலும் ஒரே பருப்பாகத்தான் இருக்கும்.
அங்கிருந்து வாங்கி வந்தது வேகாது.
இந்தக் கடையில் வாங்கியது வேகும்.

இவர்கள் உணர்வுக்கு எடுத்துக் கொண்ட நிலைக்குத் தக்கவாறு, அந்த எண்ணத்திற்கு இவர்கள் அறியாமலேயே, ஒரு பாயிண்ட் மாறிவிட்டால் போதும். இவர் உடலிலுள்ள உணர்வு பட்டாலே உப்புச் சத்தாகிவிடும். பருப்பு வேகாது.

ஏனென்றால், மனிதனுக்குள் இந்த வெறுப்பு, சலிப்பு சலிப்பு என்பது உப்புச் சத்தாகிவிடும்.

இதைப் போன்று உங்களை அறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்தெல்லாம் விடுபடுவதற்கு ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் ஆத்மசுத்தி செய்யுங்கள்.

உங்கள் உயிரான ஈசனை வேண்டி துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி உணர்வுகளைச் சுவாசித்து உங்கள் உடலுக்குள் செலுத்தி, துடைத்துக்கொள்ளுங்கள்.

March 27, 2015

கஷ்டத்தைச் சுவாசிப்பதற்குப் பதில் துருவ நட்சத்திரத்தின் அருளைச் சுவாசியுங்கள்

திருப்பதிக்குச் செல்கின்றோம்.
பணம் கொடுப்பார், என்றுதான் திருப்பதிக்குச் செல்கின்றோம்.
மனசு கொடுப்பார் என்று யாரும் போவதில்லை.

பணத்திற்காக வேண்டித்தான் செல்கிறார்கள். இந்த உண்டியலைக் கொண்டு கொடுத்தால் மொத்தமாக எனக்குக் கொடுப்பார் என்ற இந்த உணர்வைத்தான் வளர்த்துக் கொள்கிறார்கள்.

ஆனால், அதற்குப் பின்னால் வரும் நோயையோ, வினையையோ மாற்றுவதற்கு வழி இல்லை.
சம்பாதித்ததை டாக்டரிடம் கொடுக்க வேண்டும்.
ஏமாற்றுபவனிடம் கொடுக்க வேண்டும்.
மந்திரவாதியிடம் கொடுக்க வேண்டும்.
யாகத்திற்குத்தான் கொடுக்க வேண்டும்.
இங்கே பணம் வரும். இங்கே பகிர்ந்து சாப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

ஆக நமக்குள் விஷம்தான் இருக்கும்.

இந்த விஷத்தை நீக்குவதற்கு நமக்குள் ஆண்டு கொண்டிருக்கக்கூடிய உயிரான ஈசனிடத்தில் கொடுப்பதைச் சமைத்து கொடுப்பவன் அவன் என்று ஆதிசங்கராச்சாரியார் சொன்ன நிலையை நாம் மறந்துவிட்டோம்.

கஷ்டம் கஷ்டம் என்று எண்ணிணீர்கள் என்றால் ஆட்களைப் பார்க்கும் போது கஷ்டத்தைச் சொல்வீர்கள்.

ஆட்களைப் பார்க்காத போது எனக்கு இப்படி இருக்கின்றதே என்று உங்களுக்குள் வேதனையைச் சேர்த்துக் கொள்வீர்கள்.

எந்த சாமியிடம் பக்தியாக இருந்தீர்களோ அந்தச் சாமியின் பெயரைச் சொல்லி அதைத்தான் எண்ணுவீர்கள். இப்படிப் பண்ணுகின்றானே.., அவன் எதிர்காலம் எப்படி இருக்குமோ? என்று மனதிற்குள் தியானம் செய்வோம்.

இப்படிப் பண்ணுகிறாயே.., இப்படிப் பண்ணுகிறாயே..,
இதே தியானத்தை இந்த மூச்சை உடலுக்குள்ளே கொண்டு சென்று
கை கால் குடைச்சல் வருகிறது. என்னங்க.., செய்வது?
மனதே வீட்டில் இருக்க முடியவில்லையே என்பார்கள்.

வீட்டில் வசதியிருக்கும், T.V. இருக்கும், காசு இருக்கும், எல்லாம் இருக்கும். எல்லாம் இருந்தால்கூட மனதே வீட்டில் இருக்க விடமாட்டேன் என்கிறது.

எங்கேயாவது காசைக்கொண்டு கொடுத்துவிட்டு சுற்றிவிட்டு வர வேண்டும். அப்பொழுதுதான் மனது நிம்மதியாகும். இப்படித்தான் நமது காலங்கள் இருக்கின்றது.

எல்லா சிரமத்திலிருந்து நிவர்த்தியாகி நல்லதாக ஆக வேண்டுமென்று இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு உபதேசத்தைக் கொடுக்கின்றோம்.

இந்த உபதேசத்தின் நிலைகள் கொண்டு ஈஸ்வரா என்று உயிரை எண்ணுங்கள். அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று ஒரு பத்து நிமிடம் தியானியுங்கள்.

இது ஒரு சந்தர்ப்பம். இது உங்களுக்கு ஒரு தெளிவு.

எமது குருநாதர் நீ எல்லோரிடமும், உடல் நலமாகும் என்று சொல், அவர்களிடம் நல்ல வாக்கு வாங்கு என்றார்.

யாமும் உங்களிடம், நீங்கள் இதே சந்தர்ப்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேட்கின்றோம். படிக்கும் குழந்தையிடம் ஆத்மசுத்தி செய் நன்றாகப் படிப்பாய் என்று சொல்கின்றோம்.

நீங்கள் எதை எண்ணி வேதனைப்படுகிறீர்களோ அதை இப்படி மாற்றுங்கள். அதைப் போக்குவதற்கு ஒவ்வொரு நிமிடத்திலும் நீங்கள் ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

கொஞ்ச நாட்கள் செய்து பழகிவிட்டீர்கள் என்றால் பின்பு அது தன்னாலே அந்த உணர்வுகள் இயக்கும். தீமையை நீக்கும் சகதியாக உங்களுக்குள் வளரும்.

ஆக, உங்களூக்கு நல்லதாக ஆகும் என்று யாம் சொல்கிறோம்.

இதே மாதிரி உங்களுக்குச் சந்தர்ப்பம் வரும்போது ஆத்மசுத்தி செய்யுங்கள் உங்களுக்கு நல்லதாகிப்போகும் என்று மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

தீமையிலிருந்து விடுபடும் சக்தியை எடுப்பது ஒரு கஷ்டமா...? - ஆதிசங்கரர்

உங்களுக்குத் தோஷம் பிடித்திருக்கிறது என்று சொன்னால்;
தோஷம் நீங்கவேண்டும் என்றால்
நீங்கள் 48 நாட்கள் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
மிளகாயைச் சாப்பிடக் கூடாது
இப்படியேதான் இருக்க வேண்டும் என்று சொன்னால்
நீங்கள் 48 நாட்களுக்கு வேறு வழியில்லாமல் இருப்பீர்கள்.

உங்களுக்காக வேண்டி யாகம் செய்கிறோம் அதற்காக வேண்டி ரூ.1000/- தட்சணை கொடுக்க வேண்டும்.

அப்படிச் செய்துவிட்டு அதற்கு 2 பட்டுச்சேலை அது, இது என்றும் இன்னும் நூறு பேருக்குத் தர்மம் செய்ய வேண்டும். அப்போதுதான் உங்கள் பாவமெல்லாம் போகும் என்று சொல்வார்கள்

இது அனைத்தும் துவைதவாதிகள் செய்த வேலை.

அன்று அத்வைதவாதியான ஆதிசங்கரர் சொன்ன தத்துவமோ நீ எதை நினைக்கின்றாயோ அதை எந்தெந்த உணர்வுடன் எடுக்க வேண்டும் என்ற தத்துவத்தைச் சொன்னார்.

தியானம் செய்பவர்கள் ஒவ்வொரு நிமிடமும் ஆத்மசுத்தி செய்துவிட்டு, மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

யாராவது ஒருவர் கஷ்டமென்று சொன்னாலும்,
குழந்தைகள் சொன்னபடி கேட்கவில்லை என்றாலும்
உடனே இருந்த இடத்தில் இருந்து நீங்கள் ஆத்மசுத்தி செய்யுங்கள்.

உங்கள் வாக்கு கெட்டவர்களிடமிருந்து தப்பவும் செய்கின்றது. இந்த உணர்வை நீங்கள் சேர்த்துப் பழகுங்கள்.

இது ஒரு கஷ்டமா?

உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குள் இருக்கும் ஆற்றல் மிக மிக சக்தி வாய்ந்தது.

உங்கள் உயிரை ஈசனாக மதித்து
உங்களுக்குள் தீமையான உணர்வு உட்புகாது,
அவைகளைத் தடுக்கவேண்டுமென்ற எண்ணத்தை
எப்போது நீங்கள் முன்னிலைப் படுத்துகின்றீர்களோ
நிச்சயம் நல் ஒளியின் தன்மையை நீங்கள் சுவாசிக்க முடிகின்றது.
மெய்ஞானியின் அருளையும் நீங்கள் பெற முடிகின்றது.

ஆகவே, இதைப்போன்று அந்த நல்ல உணர்வின் தன்மைகளை உங்களுக்குள் பாதுகாப்பாகக் கொண்டு வருவதற்குத்தான் யாம் திரும்பத் திரும்ப அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பதிவு செய்கின்றோம். 

March 25, 2015

ஒளிசரீரம் பெறுவதற்குத்தான் இந்த முயற்சி - ஞானகுரு

இப்பொழுது நாம் எதையெல்லாம் தியானம் செய்கின்றோம்?

நமது வாழ்க்கையில் ஒருவர் நமக்குத் துன்பத்தைச் செய்துவிட்டால் துன்பம் செய்துவிட்டார் என்று அந்த நினைவைத்தான் தியானிக்கின்றோம்.

அந்தத் துன்பம் செய்தவருடைய உடலை நமக்குள் ஜெபித்த பின் இந்த உடலைவிட்டுச் சென்றால், நமக்குத் துன்பத்தைக் கொடுத்தவருடைய உடலுக்குள் செல்லும். அவ்வாறு சென்றவுடன் வெளியிலிருந்து எந்த இம்சைகளைச் செய்தோ அதைப்போன்று அந்த உடலுக்குள் செய்யும்.

அவரின் குடும்பத்தையும் கஷ்ட நிலைகளுக்கு ஆளாக்கி,
அந்த உடலையும் இழிநிலைப்படுத்தும்.
இப்பொழுது நாம் எப்படிப் பேசுகின்றோமோ, அதுபோன்று அந்த உடலுக்குள் நின்று பேசும்.

அப்படிப் பேசச் செய்து அங்கும் பல துன்பங்களை உண்டாக்கி, பல வியாதிகளை உண்டாக்கி அதில் ஏற்படக்கூடிய விஷமான சத்தை இந்த உயிராத்மாவும் பெறும். இரண்டு உயிராத்மாவும் இறந்தபின் மிருகங்களாகப் பிறக்கும்.

ஆகவே அப்படிச் செய்யும் தியானங்கள் மீண்டும் ஒரு மனித உடலுக்குள் புகுந்து மனித உடலையும் சீரழிக்கச் செய்து அங்கும் குழந்தையாகப் பிறக்க முடியாமல் பல நிலைகள் கொண்டுதான் போகும்.

துர் மரணம் அடைந்தது ஒரு உடலுக்குள் வந்து அது எந்தெந்த வேதனைகளைப்பட்டதோ அந்த உடலுக்குள்ளும் காட்டுகின்றது. இதை நாம் இப்பொழுது பார்க்கின்றோம்.

பக்தியின் நிலைகளில் வாழ்ந்த உயிராத்மாக்கள் வேதனையை உருவாக்கி குடும்பத்தில் எனக்குத் தொல்லைகள் கொடுத்தான் என்ற நிலைகள் வருகின்றதோ அதைப்போன்று பல உயிராத்மாக்கள் பல உடல்களில் சேர்ந்து அருளாடுவது போன்று செயல்படுகின்றது.

இதைப்போன்று நாம் எந்த உடலைச் சிருஷ்டிக்கின்றோமென்றால், மனித உடலுக்குள் சென்று மீண்டும் மனிதனாகப் பிறக்க முடியாத நிலைகளைத்தான் உருவாக்குகின்றோம்.

இரு உன்னை நான் அழித்து விடுகின்றேன் என்று எண்ணுகின்றோம். அந்த உணர்வைப் பதிவு செய்து கொண்டபின் அதே உணர்வுடன் இறந்து அந்த உடலுக்குள் சென்று, அந்த உடலையும் அழித்து நம்மையும் நாம் அழித்துக் கொள்கின்றோம்.

மனிதன் சிந்தனை கொண்ட நிலைகளில் வந்தாலும், சிந்தனையற்ற நிலைகளைப் பதிவாக்கி நாம் இறந்துவிடுகின்றோம்.

நம்மை அணுகி வளரும் ஆடு மாடு, மற்றும் எந்தெந்தப் பிராணிகளை வளர்க்கின்றோமோ, அவைகளுக்கு ஆகாரத்தைக் கொடுக்கும் பொழுது, ஆகாரத்தைப் புசித்த உயிரனங்கள் நம்மைப் பார்த்து ஏங்கிக்கொண்டே இருக்கும்.

மனிதராக இருக்கும் நாம் வெளியிட்ட ஒலி அலைகள் அந்த மிருகங்களுக்குள் பதிவாகி, அந்த சொல்லைச் சொன்னவுடனே அந்த மிருகங்கள் நம் மேல் பாசமாக இருக்கின்றது. அந்தப் பாசத்தின் அடிப்படையில் அது நாம் கூப்பிடுவதற்குள் ஓடி வரும்.

நாம் எந்தெந்த குணங்கள் கொண்டிருந்தோமோ அதற்குத்தக்க அது ஆடும். ஆனால் அதனிடம் பழகாதவர் வந்தால் உடனே சீறும். நாம் எப்படிச் சீறுகின்றோமோ அதுபோன்று சீறும். பாசமுடன் வளர்த்தவர்களிடம் அணுகி வரும்.

அது மரணம் அடையும் பொழுது இவர்கள் மேல் ஏக்கமாக எண்ணும். நாம் வளர்ந்தவர்களும் நம்மேல் பாசமாக இருந்தது என்று அதன் மேல் எண்ணத்தை செலுத்தியவுடன் அந்த உயிராத்மா நாயோ, பூனையோ, புறாவோ, கோழியோ, ஆடோ, மாடோ,

அது இறந்தபின், நமக்குள் வந்து நம் சத்தை எடுத்து மனிதனாக, நம் குழந்தையாகப் பிறக்கின்றது.

நாம் ஒருவர் மேல் பாசமாக இருக்கும் பொழுது, அவர் நோயாலோ அல்லது வேறு எதனினாலோ வேதனைப்பட்டுக் கொண்டிருப்பதைப் பாசத்தால் துடித்து பார்த்தால், அந்த உணர்வுகள் பார்த்தவரின் உடலில் பதிவாகிவிடுகிறது.

அந்த நோய்வாய்பட்டவர் இறந்தபின், அந்த உயிரான்மா பாசமாக எண்ணியவர் உடலில் வந்துவிடும். இங்கு வந்தபின் சதா அவரை எண்ணி ஏங்கி அழுது இவருக்குள்ளும் நோயாகி, அந்த விஷத்தின் நிலைகள் கொண்டு இவரையும் மடியச் செய்துவிடும்.

மனிதனுக்குள் மனிதன் பாசத்தின் நிலைகள் கொண்டு பாசத்தைச் செலுத்தும் பொழுது அந்த உணர்வின் அலைகள் நம் உடலில் இயக்கிவிடுகின்றது.

ஆனால் மிருகங்களோ அந்த பாசத்தின்பால் வரும் பொழுது அதற்குள் எண்ணத்தை இயக்கும் நிலைகள் இல்லை.

நாம் கொடுக்கும் உணவைச் சாப்பிட்டு அந்தச் சாப்பிட்ட உணவிற்காக நாம் சொல்வதைக் கேட்டு,
பாசத்தின் நிலைகள் நம்மிடம் அணுகி வந்து,
இறந்தபின் பாசத்தால் நமக்குள் வந்தாலும்
நம் சத்தான நிலைகள் அதற்குள் பட்டு,
மனிதனாக உருபெறும் நிலைகள் பெறுகின்றது.

இதைப்போன்றுதான் இயற்கையின் நிலைகள் மாறுபட்டு வருகின்றது.

மனிதனின் இந்தப் பாச உணர்வுகள் எவ்வாறு செயல்படுகின்றது? ஒரு உயிராத்மா அணுவிற்குள் அணு சென்று எவ்வாறு செயல்படுகிறது என்று நேரடியாக குருநாதர் உணர்த்தி என் கண்களால் பார்க்கச் செய்தார்.

இதைப்போன்ற நிலைகள், கண்டறிந்த உண்மைகளின் நிலைகளில் மனித வாழ்க்கையில் எப்படி இருக்கின்றோம் என்பதை உங்களுக்குப் படம் பிடித்தது போன்று
குருநாதர் காட்டிய அருள்வழிப்படியே
உங்களுக்கு உணர்த்தி வருகிறோம்.

உங்களை அறியாமல் ஆட்டிப் படைக்கும் தீய உணர்வுகளில் இருந்து மீட்டு, மெய் ஒளியான ஞானியின் அருள் ஒளியைப் பெறுவதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

மனிதர்களாக பிறந்த நாம் இந்த உடலைவிட்டுச் சென்றால் அடுத்த இருள் உடலான நிலைகள் பெறாதபடி ஒளிசரீரம் பெறுவதற்குத்தான் இந்த முயற்சி. எமது அருளாசிகள்.