
தியானமிருப்பதைக் காட்டிலும் உபதேசத்தில் ஞான வித்துக்களை ஊன்றுகிறேன்
வீட்டில் உள்ள கஷ்டம் நீங்க வேண்டும்
என்றால் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று எண்ணி அந்த மூச்சலைகளை
நீங்கள் எடுக்க வேண்டும்
ஆனால் எம்மிடம் (குருவிடம்) கேட்கும் பொழுது, என் வீட்டில் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேங்கிறது…! என்று தான் கேட்பார்கள். ஏனென்றால் இந்த
உணர்வின் தன்மை அதைப் பேச வைக்கும்.
யாம் இதை நீக்குவதற்குத்தான்… அதாவது இந்த உணர்வின் எண்ணத்தை
1.உங்கள் உடலில்
இருந்து “கஷ்டம்” என்ற சொல்லை
நீக்குவதற்குத்தான் இத்தனை உபதேசங்களையும் கொடுக்கின்றோம்.
2.நீங்கள் சுவாசிக்கும்
அந்த விஷமான உணர்வை நீக்குவதற்குத்தான்
உபதேசமே கொடுக்கின்றோம்.
நாம் இனி என்ன செய்ய வேண்டும்…?
அந்தத் துருவ
நட்சத்திரத்தின் சக்தியை எடுக்க வேண்டும் என்ற இந்த உணர்வுக்கு ஊக்கம் கொடுக்கும்போது உங்களுக்குள் இருக்கக்கூடிய துன்பங்களை
அது நீக்குகின்றது.
அருள் உணர்வின் தன்மையைச்
சுவாசிக்கும் போது இருண்ட நிலைகளில் இருந்து அந்த
உணர்வின் தன்மையை மாய்த்து நஞ்சை மாய்க்கச் செய்கிறது.
கருணைக்கிழங்கை வேக வைத்து
அதில் உள்ள நஞ்சினை நீக்கிப் போசாக்கான
நிலைகள் சத்தாக நமக்குள் எப்படி உட்கொள்ளுகிறோமோ அதைப் போன்று
ஒவ்வொரு நிலைகளிலும் நன்மை பெறும் சத்தாக நமக்குள் உருவாக்குவதற்கே இந்த நிலைகளைச்
செய்கின்றோம்.
ஏனென்றால்
1.நீங்கள்
தியானமிருப்பதைக் காட்டிலும்
2.இந்த
உபதேசத்திற்குள் உங்களுக்குள் நல்ல வித்துக்களை ஊன்றுகின்றேன்.
மறவாது அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை
எடுத்து அடுத்து வாரத்தில் ஒரு நாள் கூட்டுக் குடும்ப தியானங்கள் இருந்து கணவன்
மனைவி இம்முறைப்படி செய்தால் இந்த வாழ்க்கையிலே மனிதனுடைய கடமையைப் பூரணமாக நீங்கள் ஏற்றுக் கொண்டவர்கள் ஆகிறீர்கள்.
விஞ்ஞான உலகத்தில் வரக்கூடிய எத்தகைய
நச்சுத்தன்மை இருந்தாலும் அதை மாய்த்துவிட்டு உங்களுக்குள் ஒளியின் சுடராக நீங்கள்
பெற முடியும்.
1.உங்களை நீங்கள்
நம்ப வேண்டும்…
2.உங்களுக்குள்
இருக்கக்கூடிய உயிரை ஈசனாக மதிக்க வேண்டும்.
3.எதை எண்ணி
நீங்கள் வலுக் கொண்டு கொடுக்கின்றீர்களோ அதை நிச்சயம் அவன் (நமது உயிர்)
சமைத்துவிடுவான்.
4.அதுவாக நம்மை உருவாக்குவான்…!