ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 28, 2026

மின்னலுக்குள் இருக்கும் வீரிய சக்தியும்... நம் உயிரின் இயக்கச் சக்தியும்

மின்னலுக்குள் இருக்கும் வீரிய சக்தியும்... நம் உயிரின் இயக்கச் சக்தியும்

 

எதிர்நிலையான நட்சத்திரங்கள் மோதலாகும் பொழுது மின்னலாகிறது. அந்த மின்னல் மரத்திலே பட்டால் அதற்குள் ஊடுருவித் தன் இனத்தை எடுத்துக் கருக்கி விடுகின்றது.

நிலத்தில் பட்டால் பூமியின் நடுமையம் சென்று அடைகின்றது. இப்படி அதீதமான நிலைகளில் உள் சென்று எதிர்மறையான நிலைகள் கொண்டு பூமியின் நடு மையத்திற்குள் சென்றால் எந்தப் பகுதியில் ஆகின்றதோ அங்கே கொதிகலாகி அங்கே பாறைகள் உருகுகின்றது.

மேல் பகுதி உருகி ஆவியாக மாறும் போது பூமி வெடிக்கின்றது. மேல் பாறைகள் கீழே வருகின்றது. நிலநடுக்கம் என்று அடிப்பாகத்தில் செல்கின்றது. இதற்குள் அடக்கி விடுகின்றது.

1.இந்த மின் அணுக்களின் கதிர்கள் கடலிலே பதியப் படும் பொழுது மணலாக மாறுகின்றது.
2.கடல் நீருக்குள் இருக்கும் ஹைட்ரஜன்... உப்பின் சத்து அதனுடைய வீரியத்தைத் தணிக்கிறது.
3.கடல்களில் பாயும் நிலைகள் மணலாக மாறி வருவது... மின் அணுக்களின் துகள்கள் வரப்படும் பொழுது யுரேனியம் என்று எடுக்கிறர்கள்.
4.எந்தெந்த நட்சத்திரத்தின் கலவையாகி எதிர்நிலையாக ஆனதோ அந்த மணலில் உருவாக்கப்படுகின்றது.

அந்த மணலை எடுத்து அணுவைப் பிளக்கின்றான் விஞ்ஞானி. அது மற்றொன்றை அடக்கப்படும் பொழுது அதிலே வருவதைப் பிளந்து எடுக்கின்றான். அதிலே சிதைந்த உணர்வின் தன்மையைத்தான்
1.கம்ப்யூட்டரில் இந்த உணர்வைப் பாய்ச்சி ஒலி அதிர்வுகளைக் கண்டு உணர்வின் செயலாக்கங்களுக்கு
2.அந்த நுண்ணிய கதிரியக்கப் பொறிகளை மாற்றும் போது தான் கம்ப்யூட்டர் என்று வருகின்றது.

அது அவரவர்கள் கண்டறிந்த உணர்வின் தன்மையை இயற்கையின் நிலைகள் எப்படி வருகிறது...? என்பதை
1.மின் அணுவின் கதிரியக்கங்களின் நிலைகளை ஒரு காந்தப் புலன் அறிவால் கவரப்பட்டு
2.அதையே கம்ப்யூட்டர் காந்தத்தால் கவரும் உணர்வின் தன்மையைப் பதியச் செய்து உணர்வின் அறிவான பின் எதிரொலி
3.மின் அணுவைப் போன்று தோன்றும்... அந்த உணர்வுக்கு ஒப்ப எது ஆகின்றதோ அந்த ஒவ்வொரு உணர்வுக்கொப்ப உருவத்தையும் காட்ட முடியும்.

100 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் இங்கே வாழ்ந்தார்கள் என்றால் அந்த வம்ச வழிகளிலே இருந்தால் "அந்த உருவங்கள் எப்படி இருக்கின்றது...?" என்பதைக் காணலாம்.

இந்த உணர்வின் தன்மை பதிவாக்கிக் கம்ப்யுட்டரில் எதிர் அலைகளை எடுத்துக் கொண்டால் ஒலியின் அதிர்வுகளை எடுத்துக் கொள்கின்றது. ஆயிரம் மடங்கு அதைக் கூட்டுகின்றான்.

மீண்டும் அந்த உணர்வின் எதிரொலிகள் வரப்படும் பொழுது அவர்கள் வாழ்ந்த உணர்வுகள் அங்கே பதிந்ததை எடுத்து மனித ரூபத்தையே கொடுக்கின்றது... விஞ்ஞானி அதைக் காட்டுகின்றான்.

இதைப்போன்று அன்றைய மெய் ஞானிகள் உணர்வையும் நாம் காண முடியும்.
1.அவனில் விளைந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
2.அந்த உணர்வைத் தொடர்ந்து எடுத்தால் அவன் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை இங்கே வந்து
3.அவன் ஒளியான உணர்வைப் பெற்று நீங்களும் ஒளியாக முடியும்.

விஞ்ஞான அறிவு எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது... சாமி எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறார்...! என்று சிலர் நினைப்பார்கள்.

விஞ்ஞான அறிவு எப்படி இருக்கின்றது...? மெய்ஞான அறிவு எப்படி இருக்கின்றது...? குருநாதர் இந்த இயற்கையின் நிலைகளை அதனுடைய இயக்கத்தை எப்படி...? என்று எமக்கு உணர்த்தியதைத் தான் உபதேசிக்கின்றோம்.

1.காலம் வரும்போதெல்லாம் உங்கள் உணர்வுக்கொப்ப... காலத்தின் மாற்றத்திற்கொப்ப அதை நுகர்ந்து வரும் போது
2.அந்தந்தக் காலத்தின் உணர்ச்சிகள் அதைக் கவர்ந்து உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

முந்திச் சொன்னதெல்லாம் வேறு விதமாக இருக்கும். இந்த உணர்வின் வளர்ச்சி வரப்படும் பொழுது இயற்கையின் நிலைகள் உங்களை நீங்கள் அறியும் நிலைக்கு வர வேண்டும் என்பதற்குத்தான் இப்போது இதை உணர்த்துகின்றோம்.

என்றைக்கும் நிலையானது இந்த உயிர்.
1.அந்த உயிருடன் ஒன்றிய ஒளியான உணர்வின் தன்மை ஆக்கப்பட வேண்டும்.
2.பிறவியில்லா நிலை அடைந்த அருள் ஞானிகள் உணர்வைச் சேர்ப்பிக்கத்தான் இதை உபதேசிக்கின்றோம்.