ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 27, 2018

சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி எப்படிப் பெறுவது...?


கேள்வி:-
சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி பெற எவ்வகையில் தியானிக்கவேண்டும் ஐயா..?

பதில்:-
குருநாதரின் கண்கள் சிந்தித்துச் செயல்படும் தியானத்தில் உள்ளது. அதாவது பார்த்தால் வெளியில் பார்ப்பது போல் தெரியும். ஆனால் அவ்வாறு இல்லை. 

அவர் நெற்றியைச் சுருக்காமல் இரண்டு கண்களின் நினைவும் அகக் கண்களைப் பார்க்கின்றது. அகக் கண் என்றால் புருவ மத்தியிலிருக்கும் உயிர். இரண்டு கண்களும் உயிருடன் ஒன்றி அதன் வழியாக விண்ணுலகில் இருக்கும் எட்டாத தூரத்தில் உள்ள மகரிஷிகளுடன் (தன் குருவிடம் இணைந்த நிலையில்) அதாவது ONLINE AND WITH INLINE அந்தத் தொடர்பு கொண்டு குருவிடம் தொடர்பு கொண்ட அனைவருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இழுத்துக் கவர்ந்து அங்கிருந்து இங்கே நம் எல்லோருக்கும் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றார். 

அதே சமயத்தில் பாய்ச்சினாலும் எதிர் அலையாக ECHO அதாவது எங்கே குறைபாடு உள்ளதாகத் தெரிந்தாலும் அதே உணர்வின் தொடர்பிலேயே மாற்றியமைத்துக் கொண்டே உள்ளார். 

அவரை மாதிரி நீங்களும் உங்கள் கணகளைக் கொண்டு வந்தீர்கள் என்றால் நீங்கள் கேட்ட சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி கண்டிப்பாகக் கிடைக்கும்.