ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 22, 2018

கலியுகம் மாறி கல்கியுகம் வரும் நிலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!


இந்தக் கலி மாறி கல்கி வரும் பொழுது இந்த உலகின் தன்மையே விஞ்ஞானிகளால் உருவாக்கிய அணுகுண்டால் விஷத் தன்மை உலகம் முழுவதும் பரவுகின்றது.

அந்த நிலையிலேயே
1.இந்தப் பூமித் தாயின் பொக்கிஷங்களை (உலோகங்கள்) எல்லாம் இன்றைய மனிதன் பாளம் பாளமாக வெட்டி எடுக்கின்றான்.
2.அதே சமயத்தில் உறிஞ்சும் தன்மை கொண்டு பூமிக்குள் இருக்கும் திரவங்களை (OIL) எல்லாம் எடுத்துக் கொண்டேயிருக்கின்றான்.

அதனின் விளைவாகக் கலியின் கடைசியில் அணுகுண்டின் கதிரியக்க அணுக்களும் மனிதன் செய்த பெரும் செயற்கையின் விளைவுகளாலும் ஒரு நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த உலகம் அந்த அணுக்களின் தாக்குதலால் அந்த ஒளி பட்டவுடன் பூமியின் இயற்கைத் தன்மையைச் செயற்கையின் நிலையாக மாற்றியதால் “ஒரு நொடியில் உலகமே அழிகின்றது…!”

“நல் சுவாசம் எடுத்தவனுக்கு…!” அந்த அணுகுண்டின் விஷத் தன்மையும் இந்த உலகத் தன்மையும் வந்து தாக்கிடாது.

இந்த உலகத் தன்மை மாறும் பொழுது இந்தப் பூமியின் நிலை மீண்டும் கல்கிக்கே வருகின்றது. கல்கியில் இருந்த நிலையெல்லாம் பெரும் நீர் நிலை தான்.

ஒரு நொடியில் உலகத் தன்மை மாறுகிறது என்றேன் அல்லவா…! அந்த நிலையில் உலகத் தன்மை மாறும் பொழுது
1.உன் சுவாச நிலையின் தன்மையால்…
2.அவரவர்கள் செய்த பூர்வ புண்ணிய பலனால்…
3.பெரும் சித்தர்களும் ஞானிகளும் மகரிஷிகளும் வந்து கலக்கும் கல்கி என்ற அந்த நிலையில்
4.நல் சுவாசத்தை எடுத்திட்டவர்களை எல்லாம் ஒரு நொடியில் அவர்களைப் பறக்கச் செய்கின்றாள் அந்தச் சக்தி.

பாவ உடல்களில் உள்ளவர்கள் தான் அந்தச் சுவாச நிலையின் தன்மையால் கலியின் கடைசியை முடிக்கின்றார்கள்.

ஆரம்பமாகும் முதல் படியாக கல்கியில் ஒளியாக ஒவ்வொருவரும் வந்திடவே இதை உணர்த்துகின்றேன்…!