ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 28, 2018

குருநாதரை விண் செலுத்தினேன்…! விண் செலுத்தும் ஆற்றலைக் கற்றுக் கொண்டேன்…! விண்ணின் ஆற்றலை நேரடியாகப் பெறும் தகுதியைப் பெற்றேன்…!

“மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்” அவர் உடலிலே இருக்கப்படும் போது தனக்குள் கற்றுணர்ந்த உயர்ந்த உணர்வை எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்தார். அதை நினைவு கொண்டு என்னை எடுக்கும்படிச் சொன்னார்.

ஆகவே அதனின் துணை கொண்டு அதை எடுக்கும் வளர்ச்சியின் தன்மை பெற்றேன். இந்த உடலை விட்டு நான் அகன்ற பின் எனக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் இதுதான்…! என்று சொன்னார்.

அந்த அருள் ஞானத்தின் உணர்வை எனக்குள் வளர்த்து கொண்டாலும் இந்த உடலை விட்டுச் சென்ற பின்
1.புவியின் ஈர்ப்புக்குள் வராது விண்ணிலே செலுத்த ஒரு “உந்து விசை” தேவை
2.அதனின் உணர்வின் தன்மை கொண்டு என்னை விண்ணிலே வீசு…!
3.புவியின் ஈர்ப்பை விட்டு அகன்று சென்றால்தான் உடல் பெறும் நிலை கருக முடியும்.
4.அந்த ஒளியின் சுடருடன் நான் சுழல முடியும்.

ஞானத்தின் உணர்வின் தன்மை எனக்குள் வளர்த்தாலும் அந்த உணர்வின் தன்மை கொண்டு இங்கே பிரிவடைந்து பேசலாம். “தன்னிச்சையாக விண் செல்லும் நிலை எவருக்குமே இல்லை…!” உறு துணை கொண்ட உணர்வின் தன்மை கொண்டு தான் விண் செல்ல முடியும்.

ஒரு நூலைக் கயிறாக வைத்துக் கொண்டு எந்தப் பொருளையும் தூக்க வேண்டும் என்றால் அது கடினம். ஆனால் அதைப் பல நூலாகத் திரிக்கப்படும் போதுதான் பொருள்களை எளிதாகத் தூக்கும் சக்தி வருகின்றது.

இதைப் போலத் தான் அந்த மெய் ஞானத்தின் உணர்வின் ஒன்றிய நிலைகள் எங்கே வருகின்றதோ அந்த வலுக் கொண்ட உணர்வால் என்னை உந்து விசையால் உந்தித் தள்ள வேண்டும் என்றார் குருநாதர்.

உடல் பெறும் உணர்வுகளைக் கருக்கும் இடம் அந்தச் சப்தரிஷி மண்டல எல்லை தான். அதற்குள் சென்ற பின் நுகர்ந்த உணர்வுகளை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக என்றும் நிலை கொண்டு இருக்கும்.

நஞ்சினை வென்ற அந்த உணர்வின் ஒளி அலைகளுக்குள் செல்லும் போது நஞ்சை வென்றிடும் உணர்வை நான் பெற முடியும். ஏனென்றால்
1.இந்த மனித வாழ்க்கையில் நஞ்சை வென்றிடும் உணர்வு பெற்றாலும்
2.இதைக் கடந்து செல்லும் ஈர்ப்பு எனக்கில்லை.

ஆகவே கடந்து செல்லும் நிலைகள் வேண்டும் என்றால் அதை ஒத்த நிலைகள் கொண்டு இங்கே இயக்கப்படும் போது தான் “விண் செல்ல முடியும்…!” என்ற நிலைகளை எனக்குத் (ஞானகுரு) தெளிவாக உணர்த்தினார் ஈஸ்வரபட்டர்.

இப்படித்தான் அவர் உயிரான்மா வெளியே செல்லும் போது அவர் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு விண் செலுத்தும் உணர்வை எனக்குள் பக்குவப்படுத்திக் கொடுத்தார்.

பின் அவர் சொன்ன வழியில் குருநாதரை விண் செலுத்திய பின் தான் அந்த விண்ணின் ஆற்றலை நான் நேரடியாகப் பெற முடிந்தது.

ஆனால் அவர் விண்ணின் ஆற்றலை எனக்குள் பதிவு செய்திருந்தாலும் நினைவு கொண்டு எடுக்கும் திறன் இல்லை. பதிவு செய்த உணர்வின் தன்மை கொண்டாலும் அது எடுப்பதற்குண்டான தகுதி இல்லை.

அந்தத் தகுதி பெறும் நிலைக்குத்தான் குருவின் இயல்பான நிலைகள் கொண்டு அவர் காட்டிய வழிகளில் விண் செலுத்தினேன். பின் அதனின் உணர்வின் துணை கொண்டுதான் அங்கே அவருடைய தொடர்பும் வருகின்றது.

1.அந்த விண் வழித் தொடர்பு கொண்டு நான் வரப்படும் போதுதான்
2.இந்தப் புவிக்குள் வரக்கூடிய தீமைகளை என்னால் அகற்ற முடிகின்றது.
3.உங்களுக்குள்ளும் அந்த விண்ணின் ஆற்றலைப் பதிவு செய்ய முடிகின்றது.

அதே சமயத்தில் உங்களுக்குள் விளைந்த தீமைகள் என்னை இயக்காத நிலைகள் கொண்டு நான் தப்பித்து கொள்ளவும் முடிகின்றது. இல்லை என்றால் முடியவே முடியாது.
1.அந்த மெய் வழி இல்லாதபடி
2.யாரும் எதையும் செய்ய முடியாது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு உணர்த்தியதை அப்படியே தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.