ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 15, 2026

ஞானிகள் அமர்ந்த இடத்தில் அனுபவம்

ஞானிகள் அமர்ந்த இடத்தில் அனுபவம்


குருநாதர் காட்டுக்குள் சில இடங்களுக்குக் கூட்டிக் கொண்டு போவார். இங்கே படுடா…!என்பார்.
 
இந்தப் பக்கம் படுத்தால் கொசுக் கடிக்கின்றது. இன்னொரு பக்கம் படுத்தால் கொசுக் கடிக்கிறதில்லை. இந்த மண்ணிலேகாட்டிலே இருந்து தவம் செய்து தன்னைப் பெரிய சித்தனாக்கிக் கொள்ள வேண்டும் என்று தவத்திற்கு வந்தவர்கள் இந்த இடத்தில் பச்சிலை மூலிகைளை வைத்திருப்பார்கள்.
1.அவர்கள் ந்தப் பச்சிலை மூலிகைகளை எடுத்துத் தன் உடலிலே பூசிக் கொள்வார்கள்.
2.தவம் என்ற நிலைகளில் இருக்கப்படும் பொழுது அந்த எல்லை வரையிலும் கொசுக்கள் பாம்புகள் மற்றவை வருவதில்லை.
 
அங்கே சுத்தமான மனிதன் போனால் தான் போக முடியும். தவறான ஆசையுடன் போனால் அவனைத் தூக்கி எறிந்துவிடும் என்றார்.
 
நான் போனேன்.
 
அங்கே உட்காருடா…! என்றார்.
 
தூக்கி எறியப்பட்டேன்… என்ன சாமி…? பேயோ பிசாசோ இருக்கு போலிருக்கு…! என்றேன்.
 
பேயுமில்லை பிசாசுமில்லை…! அந்தக் காலத்தில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று இந்தக் குறிப்பிட்ட இடத்திலே செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
 
தவறான ஆட்கள் உட்கார்ந்தார்கள் என்றால் விஷத்தன்மை பரவிவிடும் என்று இந்த உணர்வுகள் உன்னைத் தூக்கி எறிகிறது என்று சொன்னார்.
 
நான் சொன்ன மாதிரி இப்படிச் செய்…! என்றார். இப்போது போய் உட்கார் என்றார்.
 
போய் உட்கார்ந்தால் கொசுவும் வரவில்லை ஒன்றும் வரவில்லை. ஆனந்தமாகத் தூக்கம் வந்ததது.
1.அவர் எப்படித் தியானம் பண்ணினாரோ அதே மாதிரி எனக்கும் சக்தி கிடைத்தது.
2.இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தபோவனத்தில் பாய்ச்சப்படும் பொழுது இங்கே பதிவாகின்றது.
3.அதே போல நீங்களும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உங்கள் வீட்டில் பதிவு செய்து விட்டீர்கள் என்றால்
4.விஷத்தன்மைகளை ல்லாம் போக்கும் நிலைகள் வரும்.