ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 7, 2018

குழந்தைகளையும் மனிதர்களையும் கடத்தி (அபேஷ் செய்து) உடல் உறுப்புகளை வியாபாரம் செய்கிறார்கள்..! தன்னைக் காத்திட “எது வேண்டும் என்றாலும் செய்யலாம்…” என்ற எண்ணத்திற்கு மனிதன் வந்து விட்டான்…!


மனிதனின் உணர்வுக்குள் நஞ்சு கலந்து அழித்திடும் உணர்வுகள் பூமி  முழுவதும் ஊடுருவிச் சென்ற நிலையில் நம் பூமியே முதுமையடைந்து மனிதனை மனிதன் கொன்று புசிக்கும் நிலைகளுக்கு வந்து விட்டது .

இன்று மனிதனைக் கொன்று பொருள்களைத் திருடுகின்றனர். ஒரு மனிதனுக்கு மனிதன் சிக்கினால் தன் பசிக்காக அவனையே ரோஸ்ட் (ROAST) ஆக்கிச் சாப்பிடக்கூடிய நிலைகள் வந்து விட்டது.

விஞ்ஞான அறிவு வளர்ந்த நிலைகளில் தான் மகிழ்ச்சியாக  வாழ்வதற்காக ஒன்றுமறியதாத குழந்தைகளைத் திருடிச் செல்கின்றான். திருடர்களுக்கு வேறு பொருள் இல்லையென்றால் அந்தக் குழந்தைகளின் கணகளை எடுத்து வியாபாரமாக்குகின்றான்.

அந்தக் குழந்தைகளின் மூளைகளை எடுத்து அதை முதுமையடைந்தவர்களுக்கு ஊசி மூலமாகவும் மற்ற வழிகளிலும் ஏற்றி முதுமையை இளமையாக்கும் நிலைகளுக்கு விஞ்ஞானிகள் கொண்டு வந்து விட்டனர்.
1.பொருள் (பணம் சொத்து சுகம்) இருந்தால் போதும்…!
2.இந்தப் பூமியில் வாழ்ந்தால் போதும்…!
3.இன்றைக்கு… எனக்கு மகிழ்ச்சி தேவை..! அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்…! என்ற
4.இப்படிப்பட்ட இச்சைகளில் தான் மனிதர்களுடைய எண்ணங்கள் இருக்கின்றது.

ஒவ்வொரு மிருகமும் ஒன்று மற்றொன்றை அடித்து வீழ்த்தி அதை உணவாகப் புசித்து வந்தாலும் அதெல்லாம் பரிணாம வளர்ச்சி வளர்ச்சி பெற்று வருகிறது. ஆனால் அந்தப் பரிணாம வளர்ச்சியில் எலாவற்றையும் வென்று வந்த நாம்
1.மீண்டும் பரிணாம வளர்ச்சியின் நிலைகளில் மனிதனுக்கு அடுத்த நிலைக்குப் போக முயற்சிக்காதபடி
2.கீழ் நிலைகளுக்குண்டான தீமையின் நிலைகளுக்குத் தான் வருகின்றோம்.

ஆனால் நிலவு எப்படித் தேய்ந்து இருள் சூழ்ந்த நிலைகள் கொண்டு மீண்டும் சிறிது ஒளி பெற்று பின் மற்ற கோள்களின் நிலைகளில் தடை நீங்கி முழு நிலவாகப் பௌர்ணமியாக பூரண நிலைகள் பெறுகின்றதோ அதைப் போல் மனிதன் முழமையாக ஒளி நிலை பெறவேண்டும்.

அந்த நிலைக்குச் செல்லாமல் மனிதன் மற்ற உணர்வின் எண்ணங்களுக்கு அடிமையாகி இன்று படித்துணர்ந்தவர்களும் மிகவும் பிழையான செயலைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

 உயர்ந்த விஞ்ஞான தத்துவத்தைக் கொண்டு பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு வரும் நோயினை அறிந்துணர்ந்து உறுப்புகளை மாற்றி அமைக்கும் “டாக்டர்களாக இருந்தாலும்…!”
1.அவருடைய தொழில் அடிப்படையில் வரும்போது
2.பொருள் (பணம்) கிடைத்தால் போதும் என்ற இந்த நிலையே அங்கு வளர்கிறது.
3.”பொருளற்றவன்…” ஒருவன் சிக்கினால் அவன் நோயைத் தீர்க்க அங்கு நோயே இல்லையென்றாலும்…
4,பணத்திற்காக வேண்டி அந்தப் பொருளற்றவனுடைய உறுப்புகளை மாற்றி அல்லது எடுத்து அதை விற்று இவனின் உயிரை வைத்துப் பொருளைச் சம்பாரிக்கின்றனர்.
5.(டாக்டர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம்…!) ஏனென்றால் இந்த அளவுக்கு விஞ்ஞான உலகம் சென்று ஒருவனை வாழ வைக்க
6.வாழ வேண்டிய இந்த குழந்தையின் உறுப்புகளைத் திருடி விற்கும் நிலைக்கு வந்துவிட்டது…! (கொடுக்கும் பணத்தை ஏற்றுக் கொள்கிறான்)
7.மனிதனைக் காக்க வேண்டும் என்று படித்த  நிலைகள் கொண்டு சிந்தித்த நிலைகள் கொண்டு வளர்ந்த இந்த டாக்டர்கள் இதைச் செய்கின்றனர்
8அதைப் பின் தொடர்ந்து நாட்டைக் காக்க வேண்டிய அரசியல்வாதிகளும் இதற்கு உறுதுணையாகச் செல்லுகின்றனர்.
9.இந்த மனிதனுடைய உடல் வாழ்க்கையே சிறந்தது என்று எண்ணுகின்றனர்.
10.ஆனால் இந்த உடலுக்குப் பின் எங்கே போகிறோம்…? என்ற நிலைகளை சுத்தமாகவே மறந்து விட்டனர்.

இந்த வாழ்க்கையில் யாரை இம்சித்து அவரின் உறுப்புகளைத் திருடுகின்றோமோ…
1.இத்தகைய நிலைகளில் திருடுபவர்கள் “யாராக…!” இருந்தாலும்
2.எவன் இம்சைப்பட்டானோ அவன் நினக்கும் பொழுது அவன் கண்ணிலிருந்து வெளிப்படும் கூர்மையான எண்ணங்களும் உணர்வலைகளும் ஊடுருவி
3.திருடியவனின் உடலுக்குள் இருக்கும் உயிர் அதைப் பதிவு செய்து
4.இம்சித்த அந்த உணர்வை மீண்டும் இயக்கி “உங்களை இம்சிக்கச் செய்யும்…!” என்ற நிலைகளை உணர்ந்து கொள்ளுங்கள்.
5.அதனின்று தப்ப முடியாது.

நாம் பிறரை இம்சிக்கும் நிலைகள் கொண்டு இம்சிக்கப்படுவோரை ரசித்துக் கொண்டிருக்கும் இந்த உணர்வுகள் உடலுக்குள் விளைந்து உயிருடன் ஒன்றச் செய்து
1.நீ இதை அனுபவி…! என்று
2.அதைப் பல காலம் வேதனைப்படும் நிலைகள் வரும்.

அதே போல இன்று பக்தி என்ற நிலைகளில் அசுர நம்பிக்கை கொண்டு மூட நம்பிக்கை கொண்டு தெய்வத்திற்கு ஒரு குழந்தையைப் பலி கொடுத்தால் அது என்னைக் காக்கும்…! என்ற நிலையும் ஒரு தெய்வத்திற்குப் பத்து உயிரினங்களைப் பலி கொடுத்தால் என்னைக் காக்கும்…! என்றும் தவறான நிலைகளைச் செயல்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

மதத்தின் அடிப்படையில் கடவுள் என்ற நிலைகள் வரப்படும் போது “கல்வியில் சிறந்தவர்கள்… மனிதனைக் காத்திடும் பண்பு கொண்டவர்கள்…”
1.தன்னைக் காத்திட “எதை வேண்டுமானாலும் செய்யலாம்…!” என்ற எண்ணத்தில்
2.பிறருடைய துன்பத்தை அறியாது துன்பத்தை உருவாக்கி கொண்டிருக்கும் இந்த நிலை தான் இன்று உருவாகிக் கொண்டிருக்கின்றது.
3.இதைப் போன்ற சம்பவம் இன்று நடக்கவில்லை என்று இன்று யாரும் மறுக்க முடியாது…!

அந்த நிலைகளிலிருந்து மனிதன் தன்னை மீட்டுக் கொள்ள அன்று மெய் ஞானிகள் தெளிவுற உணர்த்திய நிலையை மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி பார்த்தால் நீங்கள் எங்கே சென்றாலும்
1.தெரு முச்சந்தியில் விநாயகரை வைத்திருக்கிறார்கள்.
2.ஒவ்வொரு தெரு மூலையிலும் மாரியம்மன் என்ற தெய்வத்தை வைத்துள்ளார்கள்.
3.திரும்பும் பக்கம்… எண்ணும் பக்கம்… பார்க்கும் பக்கம்… எல்லாம் இத்தகைய நிலைகளை உருவாக்கினார்கள் ஞானிகள்.

ஒவ்வொரு நிலைகளிலும் நாம் சிந்தித்துப் பார்க்கும் போது தன்னை அறியாது தவறுகள் வருகின்றது…? நாம் நல்லது செய்தாலும் இன்னொரு தீய விளைவுகள் நமக்குள் எப்படி மாறி வந்து விடுகிறது…? அதை நாம் எப்படி மீட்க வேண்டும் என்பதற்காகத்தான் அத்தகைய ஆலயங்களை நாம் வாழும் இடத்திற்கு அருகிலே அமைத்து அந்த உயர்ந்த சக்திகளை நாம் பெறுவதற்காக அமைத்தார்கள்.

ஆனால் பின் வந்தவர்கள் அனைவரும் என்ன செய்தார்கள்…?

தன்னைக் காத்திட பூத கணங்களாக உருவாக்கி அந்தப் பூதமே நம்மைக் காக்கும் என்று உயிர் பலியிடச் செய்து இத்தகைய அசுர உணர்வுகளைத்தான்  இன்றும் வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.

இதைப் படித்துணரும் நீங்கள் இனிமேலாவது அந்த மெய் ஞானிகள் காட்டிய வழியில் செல்ல முற்படுங்கள். மனிதன் அடைய வேண்டிய மெய் ஒளியைப் பெற்றுப் பழகுங்கள். அது தான் நமக்கு அழியாத சொத்து…!