ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 25, 2018

மற்ற நாட்டை அடிமைப்படுத்தும் அமெரிக்காவின் ராஜ தந்திரச் செயல்கள்


விஞ்ஞான உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கும் அமெரிக்கா “நான்...!” என்று அகந்தை கொண்டு நமது நாட்டையே பழித்திடும் நிலையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

உலக அரங்கிலே இருக்கும் அந்தந்த நாட்டில் உள்ளோர் நன்மைகள் பல செய்ய வேண்டும் என்று எத்தனித்தாலும் அவர்களை எல்லாம் இழி நிலைப்படுத்தி “ஏமாற்றுபவர்கள்...!” என்று பறை சாற்றும் நிலையாக உள்ளது.

1.ஒரு திருடன் பொருளைத் திருடிச் செல்கிறான்,
2.ஆனால் “அதோ திருடன் ஓடுகிறான்...!” என்று
3.திருடாதவனைப் பார்த்து “திருடன்...! என்று சுட்டிக் காட்டும் நிலையே வருகின்றது.

அதாவது திருடாத நிலைகள் கொண்டு
1.திருடனைப் பிடிக்கச் செல்பவனைத் திருடன் என்று சொல்வது போன்றே
2.இன்றைய அரசியல் அரங்கில் உலக அரசுகள் அனைத்தும் இருக்கின்றது.

அதிலே அமெரிக்கா தன்னுடைய விஞ்ஞான அறிவிலே அதிகமாக வளர்ந்திருப்பதால் அவன் செய்யும் தவறை மறைக்க மற்ற நாட்டில் உள்ள அரசியலுக்குள் புகுந்து போலீஸ்காரனைப் போன்று மிரட்டி வருகின்றான்.

நாட்டை ஆள்பவர்களையும் மற்றவர்களையும் அந்நாட்டு மக்களை இரக்கமற்றுக் கொல்வதாகப் பறை சாற்றிக்கொண்டு வருகின்றான்.

மனிதர்கள் ஒருக்கிணைந்து ஞானத்தின் அடிப்படையில் இயங்க வேண்டும் என்று நமது நாடு இயங்கத் தொடங்கினாலும்
1.தவறு செய்வோரைத் தண்டிக்க முற்பட்டால்
2.தவறு செய்பவர்களுக்கு நல்ல அறிவினை ஊட்ட எண்ணினாலும்
3.இரக்கமற்ற நிலைகள் கொண்டு அரக்கத்தனமாக மனிதனுடைய உரிமைகளை அழிக்கிறான் என்று
4.நம் நாட்டையும் குறை கூறும் நிலைக்கே வந்துவிட்டார்கள்.

ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலை இங்கே இருப்பினும் மதத்திற்குள் போராக்கி மதத்திற்குள் இருக்கும் இனத்திற்குள்ளும் போராக ஆக்கி அவன் மதத்தை ஊடுருவச் செய்து நமக்குள் இருக்கும் நல் வினைகளை நல்ல உணர்வுகளை அழித்திடும் நிலையாக இன்று உருகொடுத்துக் கொண்டிருக்கின்றான் அமெரிக்கா...!

விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சியால் அசுர உணர்வு கொண்டு பிஞ்சு உள்ளங்களிலும் மிகக் கடுமையான விஷத்தைக் கொண்டு உலகையே அழித்துக் கொண்டுள்ளார்கள்.

மனிதனைக் காக்கும் நிலை என்பது அறவே இல்லை. இது தான் இன்றைய உலக நிலை...!