
வெள்ளாட்டுப் புழுக்கையின் மருத்துவ குணம்
வெள்ளாடு பல விஷச் செடிகளை உணவாக உட்கொள்கின்றது… அந்த விஷத்தன்மைகளைத் தன் உடலில் சேர்த்துக் கொள்கின்றது.
கருவுற்றிருக்கும் ஒரு வெள்ளாடு
1.அந்தச் சமயத்தில் எந்தெந்தத் தாவர இனங்களை உட்கொண்டதோ அந்தக் குட்டி பிறந்த பின்
என்ன செய்யும்,…?
2.தாய் கருவுற்ற சந்தர்ப்பத்தில் எத்தகைய செடிகளை உணவாக உட்கொண்டதோ அதையே அந்தக் குட்டியும் உணவாக எடுத்துக் கொள்ளும்.
உதாரணமாக இன்ன இடத்தில் இருக்கக்கூடிய விஷச்
செடியை அந்தத் தாய் உட்கொண்டிருந்தது
என்றால் அதிலே கருவுற்று வளர்ந்த இந்தக் குட்டியும்
1.இந்த ஆட்டுக்குட்டியை வேறு இடங்களுக்கு விலைக்கு வாங்கிச் சென்றாலும் கூட
2.அதே விஷச் செடியைத் தேடித்தான்
செல்லும்… அது இல்லை என்றால் வாடும்.
காரணம் கருவிலே இருக்கும் போது அது நுகர்ந்த
உணர்வுக்கொப்ப அதனுடைய உணர்ச்சிகள் அவ்வாறு இயங்குகின்றது.
இத்தகைய விஷச் செடியை உணவாக உட்கொள்ளும் அந்த ஆடு அதில் உள்ள விஷத்தைத் தன் உடலாக மாற்றிக் கொள்கின்றது. ஆனால் அதனுடைய மலம் நல்லதாக வெளி வருகின்றது. அந்த வெள்ளாட்டுப் புழுக்கையை நாம் மருந்தாகப் பயன்படுத்தலாம்.
மூட்டு வலி மூட்டு வாதம் சரவாங்கி நோய் என்றெல்லாம் சிலருக்கு
இருக்கும். காரணம்
1.பிறருடைய துன்பங்களையும் துயரங்களையும் கேட்டு நுகர்ந்த
நிலையில்…
2.வேதனைப்பட்ட மனிதர்களின்
உணர்வுகளையும் நுகர்ந்திருந்தால்
3.அதனால் வேதனையை
உருவாக்கும் அணுக்கள் உடல் உருவாகி
மூட்டுவாதம் முழங்கால் வாதம் போன்ற உபாதைகளும்
3.ஈரக்குலையில் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் போது வேதனைப்படும் நிலைகளும் உருவாகின்றது.
இதை மாற்றி அமைக்க அந்த வெள்ளாட்டுப் புழுக்கையைச் சிறிதளவு எடுத்து அதை லேசாகச் சூடாக்கி “அதிலிருந்து
வெளி வரும் மணத்தை நுகர்ந்தால்…”
1.உடலுக்குள் இருக்கும் விஷத்தன்மையை முறித்து விடுகின்றது.
2.மூட்டு வீக்கத்திற்கு உண்டான அணுக்கள்
மடிகின்றது விஷ நீர்களை அகற்றுகின்றது வாத நோய்கள் குறைகிறது.
இப்படி அந்த வெள்ளாட்டுப் புழுக்கையின் மணம் மருந்தாக மனிதனுக்குப் பயன்படுகிறது.