ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 8, 2018

ஆறாவது அறிவை... “டாக்டராகப் பயன்படுத்தி...!” உங்கள் வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்ளுங்கள்


இன்ஜினியருக்காகப்  படிக்க வேண்டும்... டாக்டருக்காகப்  படிக்க வேண்டும்... அதன் வழியில் செல்வத்தைச் சம்பாரித்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற ஆசையில் கல்விச் சாலைகளுக்கு சென்று மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்து வாழ வேண்டும் என்று எல்லோருமே செயல்படுத்துகின்றனர்.

அப்படிப் படித்திருந்தாலும் வாழ்க்கையில் வேதனை என்ற நஞ்சு ஊடுருவி விட்டால் உடனே படித்த நிலைகள் அனைத்தும் செயலிழந்து அந்த வேதனையான உணர்வுகளே மிஞ்சி வாழ்க்கை நலிவடைந்து உயிரான்மா நஞ்சு கொண்டதாக மாறுகின்றது.

ஏனென்றால் உயிரான்மாவில் பட்ட நஞ்சினை நீக்கும் திறன் நாம் கல்விச் சாலையில் படித்த படிப்பில் இல்லை.

உதாரணமாக ஒருவர் நோயினால் அவதிப்படுகிறார் என்றால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றோம். நோயிலிருந்து மீட்கத் தன் ஆறாவது அறிவான அந்த டாக்டரை வைத்துத் தான் அவரை அங்கிருக்கும் மருத்துவர் காக்கின்றார்.
1.அதாவது நம்முடைய ஆறாவது அறிவு... என்ற “டாக்டரின்” துணை கொண்டு
2.நாம் எதை எதையெல்லாம் செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றோமோ
3.அதைத் தான் நமக்குள் செயல்படுத்தும்.

அத்தகைய ஆறாவது அறிவைத் தெளிவாக்கி அந்த உயர்ந்த உணர்வின் தன்மையை அதை வளர்க்கச் செய்யும் நிலைகளுக்குத்தான்
1.நஞ்சினை நீக்கி உணர்வினை ஒளியாக்கிய
2.மெய் ஞானிகளின் உணர்வைப் பெறும் தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

 ஒளியுடன் உயிர் தொடர்பு கொண்ட நிலைகள் கொண்டு நம் உணர்வினை ஒளியாக்குவோம்.

எந்தக் கோள் எதனுடைய நிலைகளில் வந்தாலும் சூரியன் அவைகளை எடுத்து ஒளியின் சிகரமாக மாற்றுகிறது. அதே போல் இருபத்தியேழு நட்சத்திரங்களும் விண்வெளியிலிருந்து வெளி வரும் நஞ்சினை மாற்றி ஒளிக்கதிராக மாற்றி நம் பிரபஞ்சத்திற்குகந்ததாக அனுப்புகிறது.

அதைப் போல் நம் உடல் கோளாக இருந்தாலும் உயிர் சூரியனைப் போன்று தனக்குள் வருவதை இயக்கினாலும் மனிதனுக்குள் எண்ணிய எண்ணங்கள் நட்சத்திரம் போன்று உணர்த்தினாலும்
1.காத்திடும் உணர்வு கொண்ட ஒளியாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் நுகர்ந்து
3.பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்ற சிருஷ்டிக்கும் நிலைகள் கொண்ட
4.நம் ஆறாவது அறிவினைச் செம்மைப்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரம் விண்ணிலே எட்டாத தூரத்தில் இருந்தாலும் அதிலிருந்து வெளிவரும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து  நமது பூமியில் படர செய்து கொண்டிருப்பதை நமக்கு முன்னாடி சுழன்று கொண்டிருப்பதை நாம் பருகிடல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடலுக்குள் விளைய வைத்து வாழ்க்கையில் வரும் இருள் சூழ்ந்த நிலையை நீக்கி மெய்ப் பொருள் காணும் நிலையில் ஒவ்வொருவரும் வளர வேண்டும்.

ஆகவே ஆறாவது அறிவை நீங்கள் டாக்டராகப் பயன்படுத்தி நஞ்சினை நீக்கிடும் ஆற்றலாக ஒளியினைப் பருகும் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் பெருக வேண்டும் என்று உங்களை வேண்டிக் கொள்கிறேன்.