ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 28, 2018

நாம் தியானம் செய்வது வழிகாட்டும் குருவிற்குத் தெரியுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!


நாம் தியானிக்கும் பொழுது நாம் எண்ணும் மகரிஷிகளின் நிலையிலிருந்து “மகரிஷிகள் மட்டுமல்ல…” தியானிக்கும் நிலையில் உள்ள எல்லோருக்குமே நாம் ஒருவரை எண்ணித் தியானிக்கும் பொழுது அவர்கள் நமக்காக எண்ணித் தியானிக்க முடியுமப்பா…!

தியான வழியின் ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுது நமக்கு ஒரு குரு வேண்டுமல்லவா…!
1.அந்தக் குருவின் சக்தியை நாம் எங்கிருந்து தியானம் செய்தாலும்
2.அவரின் அருளாசியை ஒவ்வொருவரும் பெற முடியும்.

வீட்டிலிருக்கும் பொழுது நமக்கு விக்கல் எடுத்தால் யாரோ நம்மை நினைக்கின்றார்கள் என்று எண்ணுகின்றோம். எண்ணுபவர்கள் நினைத்திட்டால் இருவரும் ஒரே நிலையில் எண்ணும் பொழுது அந்த விக்கல் நின்று விடுகின்றது என்றும் சொல்கிறோம்.

அதே போலத்தான் தியான நிலையிலும்
1.நாம் தியானிக்கும் பொழுது
2.நாம் குருவாக ஏற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த நிலை தெரிந்து
3.நாம் செய்யும் தியானத்திற்கு அவரின் அருளாசியைப் பெறுகின்றோம்.

“ஓ…ம் ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று ஒரே நிலையில் சுவாச நிலையை எடுத்துத் தியானிக்கும் பொழுது பல நல்ல நறுமணங்கள் கிடைக்கும்.

உங்கள் தியானத்திற்கு அந்த ஈசனே அருளை அளித்திடுவார். அந்த நல்ல மணங்களை எடுத்து எடுத்துத் தான் நம் உயிரான்மாவிற்கு ஊட்டத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

தியானத்தின் பொருளை உணர்ந்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்…!