
மகரிஷிகளின் சக்தியை எடுத்து வளர்த்தால் தான் எத்தகைய நல்ல மாற்றத்தையும் நாம் கொண்டு வர முடியும்
இன்று “மதப்போர்…” என்ற நிலைகள் உலகம் முழுவதற்குமே இயக்கிக்
கொண்டுள்ளது.
ஒரு நாடு தன்னிடம் இருக்கக்கூடிய விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் “லேசர் கதிரியக்கத்தால்” அடுத்த நாட்டின் ஆழத்தை அறிந்து கொண்டு அவனைத்
தொலைக்க முடியும் என்று எண்ணுகின்றான். ஆனால் அந்த நாடோ
1.நீ கண்டுபிடித்து வைத்திருக்கும் நிலையைக்
காட்டிலும் வலிமையானது எண்னிடம் உண்டு..
2.நான் சாகும் போது நீயும்
சாவாய் என்ற நிலைகள் கொண்டு இறப்பைப் பற்றி சிந்திக்கவில்லை.
3.தன் கௌரவத்தைக் காக்க நான் இறந்தாலும் உன்னைக் கொல்வேன் உன்னை மடியச் செய்வேன்
4.உன்னை மடியச் செய்த
பின்பு தான் நான் இறப்பேன் என்ற மதத்தின் அடிப்படைக்
கோட்பாடுகள் இன்று உலகெங்கிலும் பரவி
5.மனிதன் என்ற சிந்தனை
இழந்து மனிதன் அடைய வேண்டிய உயர்ந்த மார்க்கங்களைத்
தடைப்படுத்தி
6.மனிதனுக்கு மனிதன் கொன்று அதை ரசிக்கும் உணர்வே இன்று வந்துவிட்டது.
இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.
ஆனால் நான் இதைப் பேசுகிறேன் என்று நீங்கள் எண்ண வேண்டாம். இது எனக்குத் தெரியவே தெரியாது…!
மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்… அந்த மகரிஷிகள் கண்டறிந்த மெய் உணர்வுகள் மக்கள்
அனைவருக்கும் அது எட்ட வேண்டும் என்று சொன்னார்.
உலகில் ஏற்படும் அந்தத் தீமைகளிலிருந்து மக்கள் காக்கப்பட வேண்டும் என்ற நிலைகள் கொண்டு இந்த ஸ்தாபனத்தை (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்) யாம் அமைத்த்து அவரின் உணர்வின் செயலே…! என்னால்
அது முடியாது.
அவர்களின் இயக்கத்தால் தான் இது அனைத்துமே உருபெற்றது பொருள்கள் எப்படி வந்தது…? என்று நமக்கும்
தெரியாது. ஒருக்கிணைந்த உணர்வின் செயலாக்கங்கள் கொண்டுதான்
இதை அமைக்கவும் முடிந்தது.
குரு அருள் அதன் வழி தான் வழிபடுகின்றது.
1.நாம் அனைவரும் நம் குருவின் அருள் துணை கொண்டு எந்த மதத்திலும் சிக்காது
2.இன பேதமோ மொழி பேதமோ அரசியல்
பேதமோ இல்லாது உலகைக் காக்கும் உணர்வை நமக்குள் வளர்த்து
3.அந்த மகரிஷிகளின் அருள்
சக்திகளை நாம் பெறுவதே தலையாயக் கடமை
ஆகும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்றால் நம்முடைய மூதாதையர்களின் உடலை விட்டுப்
பிரிந்து சென்ற உயிரான்மாக்களைச் சப்தரிஷி
மண்டலத்துடன் கட்டாயம் இணைக்க வேண்டும்.
தங்கள் வாழ்க்கையில் வந்த
நஞ்சான நிலைகளைச் சேர்த்துக் கொண்ட
அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அந்த
நஞ்சுகளை அந்த ஒளிக் கடலிலே கரைத்து உயிருடன் ஒன்றிய ஒளிச்சரீரமாக அவர்களை நாம் நிலை பெறச் செய்ய வேண்டும்.
1.அவர்கள் முன் சென்றால்
அவர்களின் துணை கொண்டு அந்த மகரிஷிகள் அருள் சக்திகளை நாம்
பெற முடியும்.
2.நமது குரு அருள் இதைத்தான் திரு அருளாக
உபதேசித்தது.
உலகில் உள்ள ஒவ்வொருவரையும் காத்திட வேண்டுமென்றால் “அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதியை…” நாம் முதலில் பெற வேண்டும்.
இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைக் கேட்டறிந்தாலும் அந்தத் தீமை தனக்குள் பதியாது தடுக்க வேண்டும்.
அப்படித் தடுக்க வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள்
சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல்
முழுவதும் படர வேண்டும் என்னை அறியாது சேர்ந்த தீமைகள் மறைய
வேண்டும்… மெய்ப்பொருள் காணும் திறன்
பெற வேண்டும்… என் சொல்லால் கேட்பவர்கள் இருள்கள் நீங்க
வேண்டும்… அவர்களும் பொருள் காணும் நிலை பெற வேண்டும்… அவர் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று நாம்
எண்ண வேண்டும்.
இதை எல்லாம் எண்ண வேண்டும் என்றாலும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும்
தகுதி பெற வேண்டும்.
2.இல்லை என்றால் இது வெறும்
சொல்லாகத்தான் அமையும்.