ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 10, 2017

புறக்கண்ணின் நினைவை “அகக்கண்ணுடன் புருவ மத்தியிலிருக்கும் உயிருடன் இணைத்தால்” விஸ்வ தரிசனம் – தீமைகளை அகற்றும் சரியான மார்க்கம்

இன்று மனிதனாக இருக்கும் நாம் நல்ல செழுமையாக இருந்தாலும் பிறருடைய துயர் துடைக்கக் கேட்டுணர்ந்த அந்தத் துயரமான உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

வந்தபின் அந்த உணர்வுகள் இரண்டறக் கலந்து அது ஓங்கி வளர்ந்து உடலை மகிழ்ச்சியாக வைத்திருந்த இந்த உடலின் சாரத்தை அது செயல்படாது தடுத்துவிடுகின்றது.
1.அதனால் உடல் நலிந்து
2.உணர்வுகள் குறைந்து எண்ணங்கள் நலிந்து
3.நம் வாழ்க்கையில் எதனையுமே வலுவான நிலையில் செய்ய முடியாத நிலைகளுக்குக் கொண்டு செல்கின்றது.

இதிலிருந்து நம்மைக் காத்திட இத்தகைய நஞ்சிலிருந்து நாம் மீள்வதற்கு ஆத்ம சுத்தி செய்வோம் என்றால் நாம் நம்மைக் காத்திட முடியும்.

ஆத்ம சுத்தி என்ற ஆற்றலைப் பெறுவதற்காக அருள் ஞானிகள் கண்டுணர்ந்த மெய் உணர்வின் சாரத்தை
1.உங்களைக் காத்திடும் எண்ண உணர்வுகளுக்குள் இணைத்து
2.அதை வலுப்பெறச் செய்யும் நிலைக்குத்தான் இதை உபதேசிப்பது.

வியாசர் காட்டிய அருள் வழியில் கண்ணன் காட்டிய வழி – “நமது கண்களின் துணை கொண்டு இதை நினைவு கூர்ந்து எண்ணும்போது அந்த வலுவின் தன்மை நீங்கள் பெற முடியும்.

அந்த அருள்ஞானிகளின் உணர்வுகளை நுகர வேண்டும். உங்களை அறியாது வந்த தீமையை ஒடுக்க வேண்டும். அருள்ஞானிகளின் உணர்வுகளை வளர்க்க வேண்டும் என்ற இந்த நிலைக்குத்தான் இதைச் சொல்கிறோம்.

மற்றவர்களுடைய துயரைக் கேட்டறிந்த நிலைகள் உங்கள் நல்ல குணங்களை நலியச் செய்த அந்த உணர்வின் தன்மையை, மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் புகுந்து நலிந்ததை மீட்கச் செய்து நல்ல உணர்வாக வளர்க்கச் செய்யும்.

உயிருடன் ஒன்றும் உணர்வை அனைத்தும் ஒளியாக மாற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் கலந்து உணர்வை ஒளியாக மாற்றும் திறன் நீங்களும் பெற வேண்டும் என்ற ஆசையில் வியாசகர் காட்டிய அந்த உணர்வின் சாரத்தை உங்களுக்குள் பெறச் செய்கின்றோம்.

கண்ணன் (நமது கண்கள்) காட்டிய நிலைகள் கொண்டு “அதோ வருகின்றான் நாரதன்”என்று நாம் எண்ணும்போது புற நிலைகள் கொண்டு நமது ஆன்மாவைச் சுத்தப்படுத்திச் செயல்படுகின்றோம்.

நம் கண்ணின் நினைவலைகளை விண்ணை நோக்கிச் செலுத்தி இப்போது உங்களுக்கு உபதேசித்த உணர்வுகளின் வலுவின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உயிரோடு ஒன்றச் செய்தல் வேண்டும்.

“உயிரான கண் அகக்கண்” “நம்முடய கண் புறக்கண்”

புறக்கண்ணால் அகக் கண்ணின் (உயிரின்) நினைவு கொண்டு அந்த ஆற்றல் மிக்க சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கும் பொழுது ”சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான்” என்பதாகும்.

நம் உடலான சிவத்திற்குள்
1.உயிர் அகக்கண்ணாக இயக்கும் நிலையில்,
2.புறக்கண்ணின் நினைவு கொண்டு நினைவினை உயிருடன் ஒன்றி,
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி
4.அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்
5.எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெறவேண்டும் என்று
6.உள் நினைவில் கண்களை மூடி
7.நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து அணுக்களிலும் படர வேண்டும் என்று செய்வதே
8.கண்ணன் காட்டிய திருட்டு வழி.

கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு மகரிஷிகளின் உணர்வுகளை உள் செலுத்தும்போது அந்த ஞானிகளின் உணர்வுகள் “பிராணாயாமம்” அந்த ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் ஜீவன் ஆகி வளர்ச்சியாகின்றது.

நாம் ஒரு பொருளைப் பாத்திரத்தில் போட்டு வேகவைக்கும் பொழுது அதனின் சத்து கொதித்து அதனின் மணம் வெளி வருகின்றது. அதைப் போன்று
1.அந்த (ஞானிகளின் அருள்சக்தி) மணத்தின் வீரியத் தன்மை
2.உள் நின்று வெளி வருவது
3.நாம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை இது பிளக்கின்றது.

நாம் பிறருடைய துயரமான உணர்வுகளை எண்ணி உடலுக்குள் சேர்க்கும்முன் நம் ஆன்மாவாக மணமாக மாறுகின்றது.

அது மடிமேல் ஆன்மாவாக இருந்தாலும் வரும் மகரிஷிகளின் உணர்வுகளை உயிருடன் ஒன்றி உள் செலுத்தப்படும்போது அது ஜீவன் பெற்று அந்த மணத்தின் வீரியத் தன்மை உள் நின்று வெளி வருவது
1.மடி மீது சுருண்டு கொண்டிருக்கும்
2.வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை இது பிளக்கின்றது.

இவ்வாறு தீமையைப் பிளந்து நம் ஆன்மாவிலிருந்து அகற்றும் நிலையையே “ஆத்ம சுத்தி” என்பது.